மகாத்மாவுக்கு அஞ்சலி!
-மேகலா இராமமூர்த்தி
வெள்ளைப் பரங்கியன் ஆட்சிகூட உம்மைப்
பத்திரமாய்ப் பாதுகாத்த தையா!
கொள்ளை போனதே உந்தனுயிர் இங்கே
இந்துச் சோதரன் கையாலே அந்தோ!
பாழ்பட்டு நின்றதேசம் தன்னை
வாழ்விக்க நீயிருந்தாய் அன்று
தாழ்வுற்று நிற்கின்றோம் இன்று – எமைக்
காத்திடவோர் உத்தமனும் இல்லை!
இங்கே,
சாதியின் பெயராலே சண்டை – நிதம்
சாமியின் பெயராலே சண்டை
வீதிகள் தோறும்தினம் சண்டை
நாதியற்றுப் போனோமே நாங்கள்!
வாராது வந்தமா மணியே உம்மைத்
தொலைத்துவிட்டு நிற்கின்றோம் தனியே
தீராத எங்கள்துயர் தீர்க்க நீர்
வாரீரோ பிறப்பெடுத்து மீண்டும்!
#ஆத்மாக்களுக்குத்தான் அழிவு..
மகாத்மாவுக்கு இல்லை சாவு!!!
அழித்ததது பூதவுடம்பு தான்..
மரிக்காதுமண்ணிலவர் புகழ்தான்!!
#உலக உருண்டைக்கு பாடம் காந்தி!
உயிரைஎடுத்ததால் பாவம் ஏந்தி..
உண்மையிலிழந்தது பாரதம் சாந்தி!!
உரைத்த அகிம்சையை நிதமும்சிந்தி!!!
(அன்புடன்..ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி)