மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++
இன்று ஒரு முகம் கண்டேன்
கண்ட பொழுதை மறக்க முடியமா ?
இருவரும் சந்தித்த இடத்தை
மறக்க இயலுமா ?
எனக்குத் தகுதி யானவள் அவளே;
எமது சந்திப்பை
இந்த உலகம் அறிய வேண்டுமென
விழைபவன் நான்.
வேறோர் நாளெனின் நினைவில் கொள்ளேன்.
தெரியாமல் போகும்.
இன்றென் கனவில் தோன்றுவாள் !
வீழ்வேன் காதலில் ! ஆம் நான்
வீழ்வேன் காதலில் !
மீண்டும் என்னை அழைக்கிறாள்
மறுபடி !
இதுபோல் வேதனை இதுவரை
எனக்கில்லை !
தனித்துக் கிடந்தேன் !
சிலவற்றை நான் இழந்தேன் !
மற்ற பெண்டிரை நானினி நோக்கேன் !
உன்னைப் போல் இல்லை
அப்பெண்டிர்;
மீண்டும் என்னை விளிக்கிறாள்
மறுபடி !
வீழ்ந்தேன் காதலில் ! ஆம் நான்
வீழ்ந்தேன் காதலில் !
++++++++++++++++++


Leave a Reply