கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கீதைக் கடமையைக் கண்ணன் மறந்துகாதல்
ராதைப் பலனை எதிர்ப்பார்த்து -போதை
படபடப்பில் பார்க்கின்றான் பாவையோ பாதம்!
அடகடவு ளேயென்ன திது….!
” காலில் கனத்தராதை, தோளிங்க நர்த்தனத்தால்
காளிங்கக் காட்சி கவனத்தில் – மாலிங்கு
மாதைக் கால்சுமந்து காதல்கூத் தாடுகிறான்
கீதை வரிகள் மறந்து”….!
” அவலுக்கு செல்வம், அழகுமயில் ராதை
அவளுக்குக் காதல், விஜயன் -கவலைக்கு
கீதை, ஆவின்தன் கரணா கதிக்கு
தாதை அளித்திடுவார் தாள்”….!
கனிச்சுவை ராதை கமலஇதழ் கவ்வி
துணிச்சலுடன் முத்தம் திணித்து -அனிச்ச
மலராள் அலறும்முன் மன்னிப்பு கேட்பான்
தளரான் எதற்கும் துணிந்து….கிரேசி மோகன்….!