மயங்கொலிச் சொற்கள்

ஆ. செந்தில் குமார்.

அனையின் அணைப்பு பிள்ளைக்கு இனிமை!
கனலின் அண்மை பஞ்சிற்கு அன்மை!

ஊன் கலந்த ஊண் தவிர்த்தல் நலம்!
கனி உணவே அதனினும் நலமென கணிப்பாய்!

தண்மதி தண்னென தன்னொளி பாய்ச்சினாலும்
கனல் கணை தைத்தால் கனைக்கும் பரி!

காணத்திற்காக கானம் அழித்தால்
கானலை நாம் காணலாம் என உணர்வாய்!

சேணையும் சேனையும் கொண்டு வென்றாலும்
கோன் இல்லா அரசு கோண் ஆகிப்போகும்!

பொருள் :-
அனை – அன்னை
அணை – தழுவுதல்
கனல் – நெருப்பு
அண்மை – அருகில்
அன்மை – தீமை
ஊன் – மாமிசம்
ஊண் – உணவு
கனி – பழம்
கணி – கணிப்பு
தண் – குளிர்ந்த
தன் – தன்னுடைய
கணை – அம்பு
கனை – கனைத்தல்
பரி – குதிரை.
காணம் – பொன்
கானம் – காடு
கானல் – பாலை நிலம்
காணல் – பார்த்தல்
சேணை – அறிவு
சேனை – படை
கோன் – அரசன்
கோண் – கோணல்

குறிப்பு :-
°°°°°°°°°°

மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில்கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.

நன்றி : விக்கிபீடியா.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *