Blog

  • தாயுமானவன் திருப்புகழ்

     
    பூஜ்யஸ்ரீ ஸ்வாமிஜி ஓங்காரநந்தர் ப்ரவசனம் கேட்ட பின்….!
    ——————————

     

     

    மகப்பேறு காண மருத்துவச்சி ஆக
    அகம்புறம் தாயுமான அன்பே -மிகப்பசியாய்
    பிள்ளைக் கறியுண்ட பித்தா உனதுலீலைக்(கு)
    எல்லைதனை யாரறிவா ரே….(1)

    நோயுமாவான் சாய்ந்திடும் பாயுமாவான் மாற்றிடும்
    மாயமாவான் புத்தொளிர் காயமாவான் -நாயன்மார்
    நேயமாவான் வெவ்வினையால் காயமானால் காப்பாற்ற
    தாயுமாவான் தந்தை தவித்து….(2)
    வேதங்கள் அர்ச்சிக்கும் பாதாம் புயம்பற்ற
    போதா உனக்கில்லை பாழ்மனமே -தீதில்
    இராப்பகல் தோறும் இருந்தென்ன கண்டாய்
    சிராப்பள்ளி ஈசனைச் சேரு….(3)
    ————————————————————————-

    சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ

    சாதாரணன் போல வந்தான் -ஏதும்
    ஓதாமல் சில நேரம் சும்மா இருந்தான்
    வேதா ரண்யம் ஊர் என்றான் -இதில்
    சூதில்லை அம்மகாதேவன் தான் என்றான்….(1)

    உண்டென்று ஒன்றுண்டு கேளாய் -அதை
    உண்டு நான் உமிழ்கிறேன் ஒவ்வொரு நாளாய்
    விண்டவர் கண்டிலர் கண்டாய் -அதைக்
    கண்டு நீ கொண்டாட காட்சிகள் உண்டாய்….(2)

    பதி பசு பாசங்கள் மூன்றும் -முறையே
    விதி மதி வினை என்ற விவகாரமாகும்
    நிதி உந்தன் நெஞ்சிலே காண்பாய் -அது
    புதிதல்ல மணம்வீசும் பூத்த மலரான்மா….(3)

    புதிரான பூலோகக் கல்லை -நீ
    பொய்யென்றும் மெய்யென்றும் பேரிடத் தொல்லை
    அதுவென்றும் இதுவென்றும் இல்லை -சுத்த
    அதுவே இதுவாக ஆனந்த எல்லை….(4)

    பண்டைநாள் வந்ததோர் பூச்சி -அது
    பலவாய்ப் பெருகிடப் பாரென்று ஆச்சி
    கொண்டதோர் கோலமே காட்சி -அதை
    உண்டில்லை கண்டிடும் உறுதி ஆராய்ச்சி….(5)

    செத்ததோர் பாம்பிந்த தேகம் -சுக
    துக்கமிதில் காண்பது செல்லாத லாபம்
    அத்தைக்கு மீசைமேல் மோகம் -அத்தை
    சித்தப்பன் பார்த்திட சிரைத்திடும் யோகம்….(6)

    வேடனார் வேடத்தில் இறைவன் -அவனே
    விருந்தாகி நீயுண்ண வலைவீசும் இரைவன்
    பாடெல்லாம் அவனென்று பறைவாய் -ஜீவ
    பாவத்தில் பசுபாசம் மெழுகாகக் கரைவாய்….(7)

    பார்முதல் பூதம்நீ அல்ல -பஞ்ச
    புலன்களை ஆண்டிட முயலாதே வெல்ல
    யாரந்த நானென்று உள்ளே -உன்னிப்
    பாரவன் ஆன்மனாய் ஆகுவான் மெல்ல….(8)

    அன்பே சிவமென்ற ஜோதி -அதன்
    ஆதார சக்தியே அருளென்ற பாதி
    பண்பான பக்தர்கள் மீதி -இந்தப்
    பாங்குணர்ந் தோற்க்கில்லை பூலோக வ்யாதி….(9)
    போக்கத்த சொப்பனம் நனவு -ஆழ்ந்த
    தூக்கத்தில் நிற்பவன் யாரென்று வினவு
    சாக்கிதால் சஞ்சலம் தீரும் -ரமண
    வாக்கிதை மேற்கொள்ள வழிவந்து சேரும்….(10)

    இறப்பதும் பிறப்பதும் யாரு -இங்கு
    இருக்கையில் ஆராய்ந்து யோசித்துப் பாரு
    உறக்கமே இறப்பென்ற மாயை -உணர
    உறங்காமல் உறங்கிடப் போடான்மப் பாயை….(11)

    நம்பிக்கை அறிவாக நீளும் -அவ
    நம்பிக்கை அறியாமை அதுகுப்பைக் கூளம்
    எம்பிக்கை போடட்டும் தாளம் -ஆன்ம
    ஏகாந்த வாசியின் ஏற்றமே மூலம்….(12)

    இல்லாத இகம்சொப்ப னங்கள் -அதில்
    இன்பத்தைத் துய்ப்போர்கள் இருள்பெற்ற மாக்கள்
    உள்ளது ஓராயி ரங்கள் -உதறி
    உணர்ந்திடு உணர்வென்னும் உச்சிப் பனங்கள்….(13)

    சும்மா இருந்திடல் சுகமே -என்று
    சொன்னார்கள் முன்னோர்கள் சிவமாகு அகமே
    நம்மால் இயன்றது நகமே -அது
    நாளாக நாளாக நம்பிக்கை முகமே….(14)

    துன்மார்கப் பாதையில் துன்பம் -அந்த
    சன்மார்கமே சச்சிதா னந்த இன்பம்
    தென்மார்கம் பார்த்திடும் அன்பன் -மவுன
    தத்துவம் தோள்கொடுத் தேவுதவும் நண்பன்….(15)

    ஓயாது துழைத்திடும் பெண்மை -சக்தி
    ஓங்கார நாதத்தின் ரீங்காரத் தன்மை
    தாயாகி அன்பர்க்கு நன்மை -நல்கும்
    தத்துவம் அவளந்த பித்தர்க்கும் அம்மை….(16)

    போகாத ஊருக்கு போக -இங்கு
    சாகாது சாகிறோம் ஜனனித்து நோக
    தேகான்ம பாவம் முடிக்க -சிவ
    தேசிகன் சரணார விந்தம் பிடிக்க….(17)

    செல்லாதா காசிந்த மேனி -இது
    இல்லாத போதுமி ருப்பவன் ஞானி
    கல்லாலின் கீழுற்ற கோலம் -அது
    சொல்லாமல் காட்டிடும் சித்தாந்த ஜாலம்….(18)

    பல்லாண்டு பல்லாண்டு வாழி -அந்த
    பரசிவம் ஒன்றுதான் பவுருஷம் தோழி
    உள்ளாண்ட போதவன் போதம் -வெளி
    உலகத்தில் விளையாட வேடிக்கை பூதம்….(19)

    சூலாயுதம் கொண்ட கையை -சக்தி
    வேலாயுதன் வந்த விழிகர்ப்பப் பையை
    ஆலால கண்டத்து மெய்யை -எண்ண
    அதுநெஞ்சில் ஊற்றிடும் ஆனந்த நெய்யை….(20)

    பொன்னார் மேனியன் இடையில் -வரிப்
    புலித்தோல் பூண்டவன் ஏறுவான் விடையில்
    உன்னார்வம் அவனெதிர் பார்ப்பான் -கொள்ள
    உண்ணா முலையோடு வந்தருள் சேர்ப்பான்….(21)

    சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ….
    ——————————————————————————-

    Share
  • உலக மிருகங்கள் தினம்

    க. பாலசுப்பிரமணியன்

     

    இன்று ..
    உலக மிருகங்கள் தினம்.
    ஐந்து நட்சத்திர விடுதிகளில் ..
    பட்டயங்கள் ..
    தோரணங்கள் ..
    பாடல்கள் ..
    பேச்சுக்கள் …
    விருதுகள் ..
    பல்சுவையில் சமைக்கப்பட்ட
    மிருகங்களின்
    உணவுகளுடன்….

    நடுத்தெருவில்
    சில காகங்கள் மட்டும்
    பயந்துகொண்டே அமர்கின்றன.
    அவைகளுக்கு கூட
    சத்தம்போட்டுக் கரைந்தால்
    சுட்டுவிடுவார்கள் என்ற பயம் ..
    சில நாய்கள் மட்டும்
    சங்கிலியின் சுதந்திரத்தோடு ..
    சத்தம்போட்டுக் குரைத்தால்
    சட்டம் மீறிடுமோ என்ற அச்சத்தில் ..

    “என்று தணியும் எங்கள்
    சுதந்திரத் தாகம்?”
    மிருகசாலையில் ஒரு கூண்டுக்குள்ளிருந்து
    ஒரு இனம் தெரியாத பாரதி ..
    ஆனால் ..
    அவன் மொழிதான்
    எனக்குப் புரியவில்லை !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171004 - RasamAlayam -Tvameva series LR

    எதுரா எதுராவென எங்கெங்கோ தேடும்
    புதிராம் புவிவாழ்வு போதும் – மதுரா
    நகரொளிந்த தெய்வம் நவனீதக் கண்ணன்
    சுகமளிக்கும் செல்வச் செழிப்பு….

    ”அதிகாலைப் போதினில் ஆவுக்(கு) அளிப்பு
    குதிகாலை கோவிந்தக் கண்ணன் : -சதிகார
    மாமன் அனுப்பிட மல்லாண்ட போதிலும்
    காமம்(பிரியம்) இவருக்குக் கன்று’’….!

    ’’சகாதேவன் கட்டினான்,ய சோதை பிணைத்தாள்,
    சுகதேவர் சொல்லுற்ற(பாகவத) சேயோ, -அகமில்லா
    அன்பால் அடைபடும் ஆனந்தக் கண்ணன்,ஆ
    வின்பால் ய,சகா,தே வர்’’….கிரேசி மோகன்….!

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 5

    -மேகலா இராமமூர்த்தி

    இரவுநேரத்தில், வீட்டிலுள்ளோர் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத் தலைவி தன் காதற்தலைவனைச் சந்திக்க வெகுதொலைவு வருவதென்பது தினமும் ஏலாத காரியமாகையால் பெரும்பாலும் இரவுக்குறி வீட்டினர் அறியாவகையில் தலைவியின் இல்லத்துக்குள்ளேயோ, அல்லாதவிடத்து வீட்டுக்கு மிக அணித்தே வீட்டிலுள்ளோர் குரல் கேட்கும் தொலைவிலோதான் நிகழ்வது வழக்கம்.

    அத்தோடு இரவுக்குறி பகற்குறிபோல் எளிதானதும் அன்று. இரவென்பதால் தலைவன் பல்வேறு இடையூறுகளைக் கடந்தே தலைவியைச் சந்திக்க இயலும்.

    அவ்விடையூறுகள் யாவை?

    துஞ்சாக் கண்ணரும் அஞ்சாக் கொள்கையருமாய் ஊர்க்காவலர்கள் தலைவன் வரும் வேளைபார்த்து ஒருநாளிரவு சுற்றிக்கொண்டிருப்பர். அதனால் தலைவியைச் சந்திக்காமலே அவன் ஊர் திரும்பநேரும். மற்றொருநாள் கதநாய்கள் விடாதுகுரைத்து தலைவன் ஊருக்குப் புதியவன் என்பதை ஊரார்க்குப் பறைசாற்ற முற்பட, அதுகண்டு அஞ்சி அவன் திரும்பவேண்டியிருக்கும்.

    நாய்தரும் தொல்லை போதாதென்று சில இரவுகளில் தலைவியின் தாய் கண்துஞ்சாது விழித்திருந்து காதலர் சந்திப்புக்கு ஏதம் விளைவிப்பாள். நிறைமதி (பௌர்ணமி) நாளாயிருந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம்; நிலவுவிரிக்கும் கிளரொளியில் இரவுவேளை பகலாகும்; அது காதலர் சந்திப்புக்கு இகலாகும்.

    இவ்வளவு தடைகளையும் தாண்டியே தலைவன் வருகின்றான் தலைவியைத் தேடி; அவள் இல்லம் நாடி!

    அன்றிரவும் அப்படித்தான் தலைவியைச் சந்திக்க வந்துகொண்டிருந்தான் தலைவன். தலைவியின் வீட்டருகே சற்றே மறைவாய் நின்றுகொண்டிருந்த தோழி வானூர் மதியம் வஞ்சனையின்றித் தன் தண்ணொளியை எங்கும் வாரியிறைப்பதைக் கண்டு கவலைகொண்டவளாய் நிலவைப் பார்த்துப் பே(ஏ)சலானாள்…

    ”நெடுநேரம் எறிக்கும் வெண்ணிலவே! கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்த பெரிய பாறையானது, வேங்கைப் புலியின் குருளையைப்போல் தோன்றும் காட்டுவழியே வரும் தலைவனுக்கு நீ நன்மைதருவாய் அல்லை!” என்றாள் சினந்து. அப்போதுதான் அங்குவந்து சேர்ந்திருந்த தலைவனின் காதுகளிலும் தோழியின் மொழிகள் விழவே செய்தன!

    நிலவு தனக்குரிய நேரத்தில் மட்டுமே எறிக்கும் இயல்புடைத்தாயினும், அது விரைவில் மறையவேண்டும் எனும் தோழியின் உட்கிடக்கையே அது நெடுநேரம் எறிப்பதாய் ஒரு மாயத்தோற்றத்தை அவளுள் ஏற்படுத்தியது எனலாம். அதனால்தான், ’நெடுவெண்ணிலவே’ என்று அதனை விளித்தாள். 

    பொன்போலும் நிறங்கொண்ட வேங்கை மலர்கள் பாறைகளில் குவிந்துகிடப்பது அப்பாறையை வேங்கைப் புலியின் குருளையைப்போல் (உரு)மாற்றி, அவ்வழி வருவோரை ஆங்கே ஒரு வேங்கையே படுத்துக்கிடக்கின்றதோ என்று கிலிகொள்ள வைக்கும் தன்மையுடையது. ஆதலால், இரவுக்குறி வருதலும் தவிர்த்தலுக்குரியதே என்பதைத் தலைவனுக்குணர்த்தும் உள்ளுறையும் தோழியின் இக்கூற்றில் ஒளிந்துகிடப்பதை உணரலாம்.

    கருங்கால் வேங்கை  வீயுகு  துறுகல்
    இரும்புலிக்  குருளையின்  தோன்றுங்  காட்டிடை
    எல்லி  வருநர்  களவிற்கு
    நல்லை  யல்லை  நெடுவெண்  ணிலவே.  (குறுந்: 47நெடுவெண்ணிலவினார்)

    full-moonஇப்பாடலைப் பாடிய புலவர்பெருந்தகையின் பெயர் இன்னதென்று அறியக்கூடாததால், இதன்கண் பயின்றுவரும் சிறந்த தொடரான ’நெடுவெண்ணிலவு’ என்பதை வைத்தே அவருக்கு ‘நெடுவெண்ணிலவினார்’ என்று பொருத்தமாய்ப் பெயர் சூட்டிவிட்டனர் நம் தமிழ்ச் சான்றோர்!

    மற்றொருநாள் தலைவியைச் சந்திக்க இரவில் தலைவன் வந்துகொண்டிருந்த வேளையில் பெருமழை பிடித்துக்கொண்டது. கடும் மழையையும் பொருட்படுத்தாது, காதலி வீட்டின் கொல்லைப்புறத்தில் நடுயாமத்தில் வந்து நின்ற அவ்விளைஞனைக் கண்ட தோழி உண்மையில் நொந்தேபோனாள்.

    ”உயர்ந்த  மலையையுடைய தலைவ! பெய்யும் கடுமழை எல்லாவிடத்தையும் மறைத்ததனால் வானம் தென்படவில்லை; அம்மழைநீர் எங்கும் பரந்து ஓடுதலினால்  நிலமும் தென்படவில்லை; சூரியன் மறைந்துவிட்டதால் எங்கும் இருள் பரந்துவிட்டது. இந்நிலையில், பலரும் துயில்கின்ற நள்ளிரவில் இந்தக் கொட்டும் மழையில் நீ எப்படித்தான் இங்கு வந்தனையோ? வேங்கை மலர்ந்து மணம் வீசுகின்ற எம் சிற்றூரை எப்படித்தான் அறிந்தனையோ? உன் மெய்வருத்தம் கண்டு என்னுளம் நோகின்றது ஐய!” என்றாள்.

    பெயல்கண்  மறைத்தலின்  விசும்புகா ணலரே
    நீர்பரந்து
     ஒழுகலின்  நிலம்கா ணலரே
    எல்லை
    சேறலின்  இருள்பெரிது  பட்டன்று
    பல்லோர்
     துஞ்சும்  பானாட்  கங்குல்
    யாங்குவந் தனையோ ஓங்கல்
     வெற்ப
    வேங்கை
     கமழும்எம் சிறுகுடி
    யாங்கறிந் தனையோ
    நோகோ  யானே.  ( குறுந்: 355 – கபிலர்)

    காதற் பெருமழையில் நனைவதில் இன்பங்கண்டுவிட்ட தலைவன் வான்மழைக்கும் காற்றுக்குமா அஞ்சுவான்?

    தன்னூரைக் கடந்துவரும் வழியில் நீண்டுகிடக்கும் கானகத்தில் புலியும், ஆளியும், களிறும், கரடியும், தீண்டிவருத்தும் அணங்கும், இரவில் இரைதேடித் திரியும் பாம்பும், ஆழமான நீர்நிலைகளில் வதியும் முதலையும் இடங்கரும் கராமும், வழுக்குப் பாறைகளும் இன்னபிற ஏதங்களும் இருப்பதையறிந்தும் அவற்றுக்கே அஞ்சாத அரிமா அவன்!

    தலைவியின் இல்லத்தார்க்குத் தெரியாமலே அதுவரைத் தலைவியொடு காதல் வளர்த்துவந்த தலைவன், ஒருநாளிரவு விருந்தினன்போல் அவள் இல்லத்துக்குள் நுழைந்துவிட்டான். என்ன துணிச்சல்! (இல்லத்துக்கு வரும் அறிமுகமில்லாப் புதியவரையே விருந்தினர் என்று அந்நாளில் அழைப்பர்; உறவினரை அல்ல!)

    ’அல்லில்லாயினும் விருந்துவரின் உவக்கும்’ அரும்பண்பு தமிழரிடம் தழைத்திருந்த காலமது! ஆதலால் இரவில் இல்லம்வந்த தலைவனை ’வழிப்போக்கன்’ என்றெண்ணித் தன் இல்லில் தங்க அனுமதித்தாள் தலைவியின் தாய். எனினும் அவ்விளைஞனின் செய்கைகள், தன் மகளுக்கு அவன் முன்பே அறிமுகமானவனோ எனும் ஐயத்தை அவளுள் விதைக்காமலில்லை. அதுமுதலே தன்மகளை முன்னினும் அதிகமாய்க் கவனிக்கவும், பாதுகாக்கவும் தலைப்பட்டாள் அந்தத் தாய்.

    இரவிலும் கண்துஞ்சாது தாய் தம்மைக் கண்காணிப்பது தலைவிக்கும் தோழிக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.

    ”ஒருநாள் தலைவன் சிரித்தமுகத்தோடு வீட்டுக்கு விருந்தினனாக வந்தாலும் வந்தான்…ஏதோ போர் நடக்கின்ற ஊரின் மக்கள் அச்சத்தால் துஞ்சமாலிருப்பதுபோல் இந்த அன்னையும் துயிலாது உன்னையும் என்னையும் கண்காணிக்கத் தொடங்கிவிட்டாளே! நீராடும் பொருட்டு ஆற்றுக்குச் சென்ற சிறுபெண்ணொருத்தி தன் தோட்டத்திலிருந்து ஆற்றில் விழுந்த மாவின் பசுங்காயைத் தின்றுவிட்டாள் என்ற குற்றத்திற்காக, அவள் தந்தை 81 (ஒன்பதிற்றொன்பது = 9 x 9) களிறுகளையும், அப்பெண்ணின் நிறைக்கு நிகராகப் பொன்னாற்செய்த பாவையையும் தருகின்றேன் என்று மன்றாடியபோதும் மனமிரங்காது, அந்த அப்பாவிப் பெண்ணைக் கொலைபுரிந்த பாவியான நன்னன் எனும் மன்னனைப்போல நம் அன்னையும் நரகத்துக்கு செல்லட்டும்” என்று கோபத்தோடு சாபமிட்டாள்!

    மண்ணிய  சென்ற  ஒண்ணுத  லரிவை
    புனல்தரு  பசுங்காய்  தின்றதன்  தப்பற்கு
    ஒன்பதிற்  றொன்பது  களிற்றொடு  அவள்நிறை
    பொன்செய்  பாவை  கொடுப்பவுங்  கொள்ளான்
    பெண்கொலை  புரிந்த  நன்னன்  போல
    வரையா  நிரையத்துச்  செலீஇயரோ  அன்னை
    ஒருநாள்  நகைமுக  விருந்தினன்  வந்தெனப்
    பகைமுக  ஊரின்  துஞ்சலோ  இலளே.  (குறுந்: 292 – பரணர்)

    காதலெனும் பித்து இளையோரின் சித்தத்தில் புகுந்துவிட்டால் அன்னையென்ன அத்தனென்ன…அனைவரையும் ஏசவும், வரம்புகடந்து பேசவும் அவ்விளையோர் தலைப்படுவர் என்பதற்கு இப்பாடலே சாட்சி!

    அப்பப்பா…! பெற்ற அன்னையையே அளற்றுக்கு (நரகம்) அனுப்பவிரும்பும் காதலின் மாட்சி அளத்தற்கு அரியதுதான்!

    [தொடரும்]

     

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 99

    செக்போயிண்ட் சார்லி அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி

    முனைவர் சுபாஷிணி

    ஜெர்மனியின் வரலாற்றில் பல முக்கிய தேதிகள் நீண்ட பட்டியலாகவே உள்ளன. மிகப் பல அரசியல் மாற்றங்களைச் சந்தித்த நாடு ஜெர்மனி என்பது உண்மையே. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏனைய உலக நாடுகளின் மத்தியில் கிடைத்த பிரபலம் போல ஜெர்மனிக்குக் கிடைக்கவில்லை என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும். அப்படி மிக முக்கியமான தேதிகளில் ஒன்றாகத் திகழ்வது ஆகஸ்டு 13, 1961ம் ஆண்டு. சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் ஜெர்மனியைப் பாதுகாப்பதில், குறிப்பாக அதன் அரசியல் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மோதலின் விளைவாக உருவானதுதான் 1961ம் ஆண்டு பெர்லின் பிரச்சனை. இதுவே ஜெர்மனியின் கிழக்கு ஜெர்மனிக்கும் மேற்கு ஜெர்மனிக்கும் இடையே பெர்லின் மக்களைச் சுவர் அமைத்துப் பிரித்து வைத்த அரசியல் நிகழ்வினைக் குறிப்பிடும் ஒரு நாளாக அமைகின்றது.

    as1

    2ம் உலகப்போருக்குப் பின்னர் கூட்டு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்சு, சோவியத் யூனியன் ஆகிய நான்கு நாடுகளும் ஜெர்மனியைத் தங்கள் ஆளுமைக்குள் அடக்கி வைக்கும் வகையில் அதன் மையமாகிய பெர்லின் நகரை நான்கு பகுதிகளாகப் பிரித்து ஆட்சி செய்யும் முறையை உருவாக்கின. 1948ம் ஆண்டில் சோவியத் பகுதிக்குள் அமெரிக்கா செல்வதற்குத் தடைகளை சோவியத் யூனியன் ஏற்படுத்தியது. அந்த நிலையில் கிழக்கு பெர்லின் மக்களுக்கு உதவும் வகையில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தரை வழி செல்ல இயலாததால், விமானங்களின் வழி கிழக்கு பெர்லின் மக்களுக்கு உணவும் அடிப்படைத் தேவைக்கான பொருட்களையும் வழங்கத் தொடங்கின. பின் 1949ம் ஆண்டு சோவியத் யூனியன் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு உதவிப் பொருட்களைத் தரை வழியே கிழக்கு பெர்லின் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் பாதையைத் திறந்தது.

    as2

    1950 வாக்கில் சோவியத் யூனியன் மேற்கிலிருந்து கிழக்கு ஜெர்மனிக்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் பொருட்டு தடைகளை அறிமுகப்படுத்த ஆரம்பித்தது. அரசியல் நிலைமைகளின் காரணமாக பெர்லின் மக்கள் பட்ட இன்னல்களுக்கு அளவே இல்ல எனலாம். 1949க்கும் 1961க்கும் இடையில் கிழக்கு பெர்லினிலிருந்து தப்பித்து மேற்கு ஜெர்மனிக்குச் சென்றோரின் எண்ணிக்கை இரண்டரை மில்லியன் மக்கள் தொகை ஆகும்.

    அகஸ்டு 13ம் நாள், 1961ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனி தன்னை மேற்கு ஜெர்மனியிலிருந்து பிரித்துக் கொள்ளும் வகையில் பெர்லின் சுவரை எழுப்பியது. 155 கி.மீ. நீளம் கொண்ட சுவர் இது. கிழக்கையும் மேற்கையும் அரசியல் ரீதியாகப் பிரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சுவர் இது. கருங்கல்லால் மட்டுமன்றி இரும்புக் கம்பிகளும் முள் வேலிகளும் பொருத்தப்பட்ட மிக உறுதியான சுவராக இந்த பெர்லின் சுவரை சோவியத் யூனியன் கையில் இருந்த கிழக்கு பெர்லின் அரசு உருவாக்கியது.

    சுவர் கொண்டு எழுப்பினாலும் ஒரு நுழைவுப் பாதை இந்தச் சுவற்றுப் பகுதியில் உருவாக்கப்பட்டது. அந்த வகை எல்லைக்காவல் நிலயம் தான் செக்போயிண்ட் சார்லி (Checkpoint Charlie). இந்தப் பாதை வழியாக ஒருவர் கால்நடையாகவும், வாகனத்தின் வழியாகவும் கிழக்கிலிருந்து மேற்கிற்கும் மேற்கிலிருந்து கிழக்கிற்கும் வந்து செல்லலாம். சார்லி (Charlie) என்பது ஒரு மறைமுகக் குறியீடு (code word). நாட்டோவினால் பயன்படுத்தப்பட்ட ஒரு ரகசியக் குறியீட்டுச் சொல்லை பிரதிபலிப்பது இச்சொல்.

    as3

    செக்போயிண்ட் சார்லி குறிப்பிடத்தக்க சில ஆங்கில, ஜெர்மானிய திரைப்படங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஜேம்ஸ் போண்ட் படமான ஆக்டபஸி திரைப்படமும் அதில் ஒன்று. Cafe Adler (Eagle Café) என்ற திரைப்படமும் இந்தப் பகுதிக்கு எதிராக உள்ள ஒரு உணவகத்தில் அமர்ந்தவாறு நிகழும் சில செய்திகளைச் சொல்லும் படம். இந்த உணவகம் இன்றும் இருக்கின்றது. 2013ம் ஆண்டு நான் பெர்லினுக்குச் சென்றிருந்தபோது இந்த உணவகத்தில் அமர்ந்தவாறு செக்போயிண்ட் சார்லியைப் பார்த்துக் கொண்டிருந்த நிமிடங்கள் மனதில் பசுமையாக இருக்கின்றன.

    இந்த பெர்லின் சுவர் பல மரணங்களைப் பார்த்துள்ளது. மக்களின் சோக வாழ்க்கையை பெர்லின் சுவர் தன்னுள்ளே உறிஞ்சிக்கொண்டது என்று தான் குறிப்பிட வேண்டும்.

    as4

    1990ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் நாள் செக்போயிண்ட் சார்லியின் கதவுகள் முழுமையாகத் திறக்கப்பட்டன. இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது தொடர்ச்சியாக இரு தரப்பிலிருந்தும் ஜெர்மானிய மக்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்த மனித உரிமைக்கு எதிரான இந்த நடவைக்கைகளுக்கான எதிர்குரலே. ஜூன் மாதம் இக்கதவுகள் திறக்கப்பட்டாலும் எல்லைச் சோதனைகள் அக்டோபர் 2ம் தேதி வரை தொடர்ந்து கொண்டிருந்தன. 2ம் தேதி இரவு பெர்லின் சுவர்கள் ஜெர்மானிய மக்களால் தகர்த்து உடைக்கப்பட்டது. மக்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்துச் சுவர்களைத் தகர்த்து உடைத்தனர். கிழக்கும் மேற்கும் ஜெர்மானிய மக்களின் உறுதியால் ஒன்றிணைந்தது.

    ​1990ம் ஆண்டில் பெர்லின் சுவற்றை உடைப்பதற்கு முன்னரே இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு விட்டது. ​முதலில் Dr. Rainer Hildebrandt என்பவர் அக்டோபர் 19ம் தேதி 1962ம் ஆண்டு உடைபட்டுக் கிடந்த பெர்லின் சுவரின் கற்களின் மேல் சில வாசகங்களை எழுதி வைத்தார். இது அப்பகுதியில் மக்களின் வலியைப் பதிவாக்கும் ஒரு அருங்காட்சியகம் தேவை என்ற சிந்தனையை எழுப்பியது. தற்சமயம் இந்த செக்பாயிண்ட் சார்லி அமைந்திருக்கும் அருங்காட்சியகமானது1963ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 13 August Consortium என்ற அமைப்பு இந்த அருங்காட்சியகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ளது. 13ம் தேதி என்பது பெர்லின் சுவர் எழுப்பப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் அமைந்த ஒரு அமைப்பாகும். இதன் முக்கிய பொறுப்பாளராக இருந்தவர் Alexandra Hildebrandt அதாவது முதலில் கண்காட்சியை உருவாக்கிய Dr. Rainer Hildebrandt அவர்களின் மனைவியாவார். பெர்லினின் நகரிலுள்ள 100க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களும் மிக அதிகமான வருகையாளர்களால் வந்து பார்த்துச் செல்லும் அருங்காட்சியகங்களில் ஒன்று என்ற சிறப்பு கொண்டது இந்த அருங்காட்சியகம்.

    இந்த அருங்காட்சியகத்தின் கண்காட்சியில் பெர்லின் சுவர் எழுப்பப்படுவதற்குக் காரணமாக இருந்த அரசியல் நிகழ்வுகளைக் குறிப்பிடும் ஆவணங்களும், அதில் ஈடுபட்ட மனிதர்களைப் பற்றிய செய்திகளும், நாட்டோ கூட்டு நாடுகளைப் பற்றிய செய்திகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 13, 1961ம் ஆண்டு பெர்லின் சுவர் அமைக்கப்பட்ட நிகழ்வு, அதன் தொடர்ச்சியாக அமுலுக்கு வந்த சட்டங்கள், நடைபெற்ற துர்சம்பவங்கள் ஆகியன பற்றிய ஆவணங்களும் கண்காட்சியில் உள்ளன. 2007ம் ஆண்டு நிரந்தர கண்காட்சிப்பகுதியை இந்த அருங்காட்சியகம் உருவாக்கியது. அதில் நாட்டோவின் (NATO) வரலாற்றைச் சொல்லும் ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்ட்டுள்ளன. உலக அளவில் நாட்டோவின் (NATO) ஆரம்பக்கால வரலாற்றைக் குறிப்பிடும் மிக முக்கிய அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது எனலாம்.

    as5

    பெர்லின் நிகழ்வுகள் மட்டுமன்றி உலகின் பல பகுதிகளில் அரசியல் அடக்குமுறைகளை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட முக்கிய நிகழ்வுகளின் குறிப்புக்களும் ஆவணங்களும் இங்கு உள்ளன. இந்தியாவிலிருந்து காந்தியின் குடும்பத்தார் வழங்கிய 14 ஆவணங்களும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறுகின்றன என்பதும் ஒரு சிறப்பே.

    இந்த அருங்காட்சியகத்தின் முகவரி Friedrichstraße 43-45, 10969 Berlin.

    பெர்லின் செல்பவர்கள் தவறாமல் பார்த்து வரவேண்டிய ஒரு வரலாற்று மையம் இது என்பதால் கண்டிப்பாக தங்கள் சுற்றுப்பயணப் பட்டியலில் இதனை இணைத்துக் கொள்ள வேண்டும்.

    நிகழ்கால நிகழ்வுகள் வரலாறாக மாற்றம் பெறுகின்றன. வன்முறையை இல்லாதாக்கி அன்பை மேம்படுத்தி மனிதக் குலம் வாழ்வதே நல்வாழ்க்கையாக அமையும்.

    சரி.. அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தைக் காண அழைத்துச் செல்கிறேன். இப்போது செக்போயிண்ட் சார்லி நினைவில் மூழ்கியிருங்கள் !
    .

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (29)

    க.பாலசுப்பிரமணியன்

    பார்வை எப்படியோ பரம்பொருள் அப்படியே

    திருமூலர்-1-3

    .ஒரு நாள் ஒரு வழிப்போக்கன் காட்டின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான். அங்கே ஒரு முனிவரின் குடில் இருப்பதைக்கண்டு அவரிடம் சென்று “அய்யா. நான் கிழக்கே இருக்கும் கிராமத்திலிருந்து மேற்கே இருக்கும் கிராமத்தை நோக்கி வாழ்வாதரம் வேண்டி சென்றுண்டிருக்கின்றேன். அந்த கிராமத்திலிருக்கும் மக்கள் எப்படிப் பட்டவர்கள் என்று தங்களால் சொல்ல முடியுமா? தங்கள் அறிவுரை எனக்கு உதவியாக இருக்கும்.” என்றான். அதைக்கேட்ட முனிவர் ஒரு புன்முறுவலுடன் “நீ வருகின்ற கிராமத்து மக்கள் எப்படிப் பட்டவர்கள்?” எனக் கேட்டார்.

    “அவர்கள் மிகவும் மோசமானவர்கள். நல்ல எண்ணங்களே இல்லாதவர்கள். அங்கே ஒருவர் கூட நல்லவர் கிடையாது” என்று சொல்ல, “அப்படியா? நான் மிகவும் வருந்துகின்றேன். ஆனால் நீ செல்லக்கூடிய இந்தக் கிராமத்தைச் சார்ந்தவர்களும் அப்படித்தான். நீயே சென்று பாரேன்”  என்று பதிலளித்தார்.

    சில நாட்களுக்குப் பின் மற்றொரு வழிப்போக்கன் அதே கிராமத்திலிருந்து வரும்பொழுது முனிவரை அணுகி அதே கேள்வியைக்கட்டான். இப்பொழுதும் முனிவர் அவனை நோக்கி “நீ வருகின்ற கிராமத்து மக்கள் எப்படிப்பட்டவர்கள்? ” எனக் கேட்க “அவர்களா? மிகவும் நல்லவர்கள். நல்ல  உதவும் சிந்தனை உடையவர்கள். அவர்களில் ஒருவர் கூட கெட்டவரில்லை. உண்மையிலேயே அந்த கிராமத்தை விட்டு வர நான் வருந்துகின்றேன்.” என்றான். முனிவரும் புன்முறுவலுடன் “அப்படியா. மிக்க மகிழ்ச்சி.நீ செல்லும் இந்த கிராமத்தைச் சார்ந்தவர்களும் மிக நல்லவர்கள் .மிகவும் பரோபகாரிகள். நீயே சென்று பாரேன்.” என்று சொன்னார்.

    இதைக் கேட்டுக்கொண்டிருந்த அவருடைய சீடர்கள் முனிவரின் இந்தச்  செயல் கண்டு மிகவும் ஆச்சரியமும் வேதனையும் அடைந்து அவரிடம் சென்று “குருவே. நீங்கள் செய்வது உங்களுக்கே சரியாகப் படுகின்றதா ?

    இரண்டுபேருக்கும் முரணான பதில்களை சொல்லி அவர்களை ஏமாற்றலாமா ? உண்மைக்குப் புறம்பான வழியில் தாங்களே செல்லலாமா? ” எனக் கேட்டனர்.

    அவர் சிரித்தபடியே சொன்னார் “நான் பொய் பேசவில்லையே. முதலாமவனுக்கு அந்த கிராமத்தில் ஒருவர்கூட நல்லவராகத் தெரியவில்லை. குற்றம் அவன் பார்வையிலிருந்தது இரண்டாமவனுக்கோ ஒருவர் கூடக் கெட்டவராகத் தெரியவில்லை. அவன் பார்வையில் தெளிவு இருந்தது. நாம் எவ்வாறு உலகைப் பார்க்கின்றோமோ அவ்வாறே உலகம் நமக்குத் தென்படும். அதனால்தான் அவர்கள் பார்வையில் கிடைத்த பதில்களை அவர்களுக்கு கூறினேன் : என்று விளக்கம் அளித்தார்.

    “நீ எவ்வாறு பார்க்கின்றாயோ அவ்வாறே ஆகின்றாய்” என்பது முதுமொழி. அதேபோல் நாம் எவ்வாறு இறைவனைப் பார்க்கின்றோமோ அவ்வாறே நமக்குத் தென்படுகின்றான், அணுவிலிருந்து அண்டம் வரை எங்கும் அவன் ஆட்சி தான். அதை உணர்ந்தவருக்கு அவன் தரிசனம் எல்லா இடத்திலும் கிடைக்கும். இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்

    எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி

    எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம்

    எங்குஞ் சிவமா யிருந்தலால் எங்கெங்குந்

    தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே.”

    திருமூலருக்கோ எங்கும் சிவனின் ஒளியும் அருளும் புலப்பட்டது.

    இதேபோல் கபீர்தாசர் கூறுகின்றார் :

    “நான் வெளியிலே இறைவனின் வண்ணத்தைக் காணச் சென்றேன். பார்க்குமிடமெல்லாம் அவன் வண்ணமாகவே இருந்தது. கடைசியில் நானும் அவன் வண்ணத்தில் ஒரு பகுதியாகத்தான் தென்பட்டேன்”

    திருநாவுக்கரசருக்கோ இந்த வண்ணம் எங்கெங்கெல்லாம் தென்படுகின்றது?

    விண் ஆகி, நிலன் ஆகி, விசும்பும் ஆகி

    வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற

    எண் ஆகி, எழுத்து ஆகி. இயல்பும் ஆகி

    ஏழ் உலகும் தொழுது ஏத்திக் காண நின்ற

    கண் ஆகி, மணி ஆகி, காட்சி ஆகி

    காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற

    பண் ஆகி, இன்அமுதுஆம் பாசூர் மேய

    பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உயந்தஆறே !

    ”வெளியில் இருக்கின்ற ஒளி உள்ளே பிரதிபலிக்கின்றதா? இல்லை உள்ளே இருக்கின்ற ஒளி வெளியே பார்க்கும் இடங்களிலெல்லாம் வெளிப்படுகின்றதா ?  “ -என்ற ஐயம் எழுத்தான் செய்கின்றது

    அவனை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? ஏதாவது ஒரு இடத்தில் அவனை கட்டியோ அல்லது அடைத்தோ க்க முடியுமா ?

    பட்டினத்தார் என்ன கூறுகின்றார் ?

    பத்துத் திசைக்கு மடங்காப் பருவமடி

    எத்திசைக்கு பொங்கு மிடைவிடா தேகமடி.

    அது மட்டுமா ?

    தித்திக்க வூறுமடி சித்த முடையார்க்குப்

    பத்திக் கடலுட் பதித்தபரஞ் சோதியடி “

    இந்த அனுபவ பூர்வமான உணர்வுகளை நம்மால் புரிந்துகொள்ள என்ன ஆழ்ந்த அறிவு தேவைப்படுகின்றது?

    இந்த அறிவித்த தேடும் பொழுதுதான் நமக்கு வாழ்க்கையில் எவ்விதமான மாயையில் பிடிபட்டு உண்மையை அறிய மறுக்கிறோம் என்ற துயரம் வருகின்றது. இந்த நிலையில் தான் மாணிக்கவாசகரும் பாடுகின்றார் :

    யானேபொய் என் நெஞ்சும்

    பொய் என் அன்பும் பொய்

    ஆனால் வினையேன் அழுதால்

    உன்னைப்   பெறலாமே

    தேனே அமுதே கரும்பின்

    தெளிவே தித்திக்கும்

    மானே அருள்வாய் அடியேன்

    உனைவந்து உருமாறே !

    இறைவனின் அருளை பெறுவதற்கு அடியார்கள் எவ்விதமெல்லாம் தவித்திருக்கின்றார்கள் என்பதை உணரும் பொழுது நமது மெய்  சிலிர்க்கின்றது !

    தொடருவோம்

    (தொடரும் )

    Share
  • உலகம் என்னும் பந்தினை உருட்டுவது யார்?

    -கவியோகி வேதம்

    ஓம் சக்தி!

    உலகமெனும் பந்தினை உருட்டுபவன் நானய்யா!கலகம்செய்(து) உருட்டுவது நீயன்றோ கலி-
    மனிதா?

    ஜீவனையும், சடத்தினையும் ஜிவ்வென்று காணும் (உ)ன்கண்
    ஜீவனுள்ளே மறைந்தஎன்னைக் காணாது செல்லுதய்யா!

    மனம்தந்தேன் நானுனக்கு! மதியையும் தந்துநின்றேன்!மனமிழந்தே என்னையேநீ  வசவாகப் பொழிவதுஏன்?

    மனமென்னும் பெட்டகத்தில் மங்காத சுக-துக்கம்
    இனம்காணா வகையினிலே கலந்து இனிதளித்தேன்!

    சுகம்காணில் துள்ளுகின்றாய்! சோகத்தில்
    சுருள்கின்றாய்!

    முகம்பார்க்கும் ஆடியைப்போல் முறைத்தேனோ
    எனைப்பார்ப்பாய்?

    வாழ்வின் வகையறியா வனவிலங்காய்த் திரியும்நீதாழ்வு
    வருகையிலோ, தலைபிடித்தேன் கதறுகின்றாய்?

    “நல்லதுவும் கெட்டதுவும் கலந்ததுவே நம்வாழ்வாம்”-
    நல்லோர் சொல்லியதை நாளும்நீ கேட்டதில்லை?

    நல்லதையே மனத்துள்வை! அல்லதுவை மறந்துவிடு!நல்லோரின் இச்சொல்லை நாயகனே! ஏன்மறந்தாய்?

    நல்லது வருகையிலே  ‘நான்நான்’ எனக்குதிப்பாய்!அல்லது வரின்என்னை  அரக்கன்போல்  சாடுகிறாய்!

    “நல்லதுவும் கெட்டதுவும் கண்ணனுக்கே அர்ப்பித்தேன்!”-சொல்வதிது எப்போதும் பிறருக்கே சொல்லுவையோ?

    மன-நிலத்துள் உறைகின்ற மகாதேவன் எனை-
    உணரஇனியவனே! பிறவிகளும் எத்தனைதான்
    வேண்டுமடா!?

    கர்மபலன் கழிக்கஅன்றோ கனிவான பிறவிதந்தேன்!
    தர்மமிது புரியாமல் சாடுவதேன் என்கண்ணா!

     

     

     

    Share
  • உசிருக்குள் விரிந்திருக்கும் புழுதிப் பூ! 

    ஈடில்லை
    கூடை கூடையாய்
    மலர்கள் பறித்து வந்து தூவினாலும்
    மேடை அமைத்துக் கவிதைச் சொற்களால்
    மாலைகள் போட்டாலும்
    பாட்டு ஆட்டமென வாழ்த்திசை பொழிந்தாலும்
    நீண்டு கிடக்கின்ற புழுதி வீடது
    கூரையில்லாத அது எனது இரண்டாம் மடி!

    கூரை வீடு
    உறங்கி விழிக்கவும்
    சோறு சாப்பிடவும்

    மிக அதிகம்
    நான் அசையாத ஆற்றில் நீந்தி விளையாடி
    புழுதித் தண்ணீர் குடித்தது!

    அப்பா தூங்கும் நேரங்கள் பார்த்துத்
    திருட்டுத்தனமாய்
    சைக்கிளோட்டப் பழகி
    விழுந்து எழுந்து
    கால் கைகள் காயங்களால் வலித்ததுவும்

    பின்
    நான் சைக்கிளோட்டும் அழகு இரசித்தபடி
    என் கூடவே வந்ததுவும்
    கல்வெட்டுக்களாய் எப்போதும் என் உசிரில்!

    மார்கழி மழை நாட்களில்
    ஓர் ஆறாய் ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளம்
    ஒரு மீன்போல்
    முதல் நீச்சல் பழகியது இன்னும் குளிர்கிறது ஈரமாய்!

    நீண்ட மைதானமாய்ப்
    பல விளையாட்டுக்கள் கற்றுத் தந்து
    இரவு எட்டுமணிக்கப்புறம் பேய்போல பயங்காட்டியதும்
    மனப் பைக்குள் பத்திரமான முத்துக்களாய்…

    அது
    இப்போதும் இருக்கிறது
    விளையாட்டுக்கள் இல்லாத ஓர் அனாதைத் தெருவாய்!

     

     

     

    Share
  • சித்ரா – 4

                 (காதலின் புதியதொரு பரிமாணம்)

                மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்;

    ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்

                                 *****************

                               தொடர்ச்சி: காட்சி- 5

                வசந்தன்: உன் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை, நண்பா! எனக்குக் களைப்பாக இருக்கிறது. உன்னால் மூட்டப்பட்ட இந்த நெருப்பினைத் தொடர்ந்து எரிய வைப்பதென்பது பெரும் சோதனையாக உள்ளது. உறக்கம் என் கண்களைத் தழுவுகிறது, கையிலுள்ள விசிறி தவறி விழுகின்றது, ஆறிப்போன சாம்பல் தீயின் ஒளியை மழுங்கவைக்கின்றது. நான் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு அணைந்துகொண்டிருக்கும் தீயை மறுபடியும் காப்பாற்ற முயல்கிறேன். நீண்ட நேரம் இதை என்னால் இனிச் செய்ய முடியாது!

             மதனன்: நீ குழந்தையைப்போல் சலனபுத்தியுடையவன் என்று எனக்குத்தெரியுமே! சொர்க்கத்திலும் பூமியிலும் உன்னுடைய விளையாட்டில் பொறுமை இழந்து விடுபவன் நீ! மிகுந்த நாட்களைச் செலவிட்டுப் பொறுமையாக எல்லா விஷயங்களையும் பார்த்துப்பார்த்து நீ செய்வனவற்றை, ஒரே நாழிகையில் சிறிதும் வருத்தமின்றி உடைத்தெறிகிறாய். இந்த நம்முடைய வேலை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. களிப்பின் சிறகுகளைக்கொண்ட நாட்கள் விரைந்தோடும்; ஆண்டும் அதன் முடிவினை எட்டும்போது எல்லையற்ற ஆனந்தத்தில் மயங்கிக்கிடக்கும்.

                காட்சி- 6

                அர்ஜுனன்: நான் காலையில் எழுந்ததும் எனது கனவுகள் உருவாக்கி வடித்தெடுத்த ஒரு மாணிக்கத்தைக் கண்டேன். அதனைப் பாதுகாக்க என்னிடம் ஒரு பேழையுமில்லை, அதனைப் பதித்து வைக்க ஒரு மணிமகுடமுமில்லை, அதனைத் தொங்கவிட ஒரு சங்கிலியுமில்லை, அதனைத் தூக்கியெறிய மனமுமில்லை. க்ஷத்திரியனான எனது வலதுகரம் வேலையின்றி அதனைப் பிடித்துக்கொண்டு தனது கடமைகளை மறந்திருக்கிறது.

                [சித்ரா உள்ளே நுழைகிறாள்]

                சித்ரா: தங்கள் எண்ணங்களைக் கூறுங்கள் ஐயா!
    ர்ஜுனன்: இன்று என் சிந்தனை வேட்டையாடப்போவதில் ஈடுபட்டுள்ளது. எப்படி இந்த மழை தாரையாகப் பெய்து ஆக்ரோஷமாக மலைப்பிரதேசத்தை அடித்துத் துவைக்கின்றதெனப்பார்! மேகங்களின் கருநிழல் கானகத்தின் மீது கவிந்திருக்கிறது; பெருகிவரும் வெள்ளம், பொறுப்பற்ற இளைஞனைப்போல் எல்லாத் தடைகளையும் உடைத்துக்கொண்டு பரிகசித்துச் சிரிப்பதனைக் காண்பாய்! இத்தகைய மழைநாட்களில் நாங்கள் ஐந்து சகோதரர்களும் ‘சித்ரகா’ கானகத்திற்குச் சென்று வனவிலங்குகளைத் துரத்துவோம். அவை இன்பமான நாட்கள்; எங்கள் உள்ளங்கள் மேகங்கள் முழக்கும் மத்தள ஒலிக்கேற்ப நடனமாடும். கானகம் முழுதிலும் மயில்களின் கூச்சல் எதிரொலிக்கும். மழைவிழும் சப்தத்திலும், அருவிநீரின் ஓசையிலும், தைரியமில்லாத மான்கள் நாங்கள் அவற்றினை நெருங்கிவரும் காலடி ஓசையைக் கேட்க முடியாது. சிறுத்தைகளின் கால்தடங்கள் ஈரமான மண்ணில் பதிந்து அவைகளின் இருப்பிடத்தை வெளிக்காட்டிக் கொடுத்துவிடும். எங்கள் வேட்டையாடும் கேளிக்கைகள் முடிந்தபின், கட்டவிழ்ந்து கரைபுரண்டோடும் புனல்களில் நீந்திச்சென்று வீட்டை அடைய நாங்கள் ஒருவருக்கொருவர் சவால் விட்டுக்கொள்வோம். அந்த அமைதியற்ற தன்மை என்னை ஆட்கொண்டுள்ளது. நான் வேட்டையாடச் செல்ல ஏங்குகிறேன்.

                சித்ரா: முதலில் தாங்கள் இப்போது தொடரும்Chitrangadha-1 இரையை வீழ்த்துங்கள். தாங்கள் தேடும் மாயமானை வீழ்த்த வேண்டியது அவசியம் தான் என எண்ணுகிறீர்களா? இல்லை, இன்னும் இல்லை. ஒரு கனவுபோன்ற அதனைத் தாங்கள் மிக நெருங்கும்போது அது தங்களை விட்டோடுகின்றது. இந்த பயித்தியக்கார மழை, காற்றினைத் துரத்தி, அதனின்றும் ஓர் ஆயிரம் அம்புகளை எய்வதனைப் பாருங்கள். இருப்பினும் அதனை யாராலும் பிடிக்க முடியாமலும் வெல்லமுடியாமலும் இருக்கிறது. நமது விளையாட்டும் அத்தகையதே, அன்பே! விரையும் அதனை நீங்கள் உங்கள் கரத்திலுள்ள எல்லா அம்புகளையும் எய்து, விடாது துரத்துகிறீர்கள்! இருப்பினும் அந்த மாயமான் எப்போதும் யாராலும் தொடமுடியாமல் ஓடிக்கொண்டுள்ளது.

                அர்ஜுனன்: என் அன்பே, அன்பான உள்ளங்கள் உனது வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வீடு உனக்கு இல்லையா? உனது மென்மையான பணிவிடைகளால் இனிமை நிரம்பச் செய்த அந்த வீடு, நீ அதனை விட்டு வெளியேறியதும் களையிழந்து போயிருக்குமே?

                சித்ரா: எதற்காக இந்தக் கேள்விகள்? நமது எல்லையற்ற இன்பத் தருணங்கள் முடிவுற்று விட்டனவா? தற்போது தங்கள் கண்முன் காணும் என்னைத்தவிர நான் வேறொன்றுமில்லை என்பது தங்களுக்குத் தெரியுமா? எனக்கு இதனைத்தவிர வேறொரு கற்பனைத் தோற்றம் கிடையாது. கிம்சுகா மலரின் இதழ் நுனியில் தொங்கும் பனிநீருக்கு பெயரும் இடமும் கிடையாது. அது எந்தக் கேள்விக்கும் விடையளிப்பதில்லை. நீர் காதலிக்கும் மங்கையும் அந்தப் பனிநீர்த்துளி போன்றவளே!

                அர்ஜுனன்: அவளுக்கு இந்த உலகுடன் தொடர்பு ஏதும் கிடையாதா? ஒரு விளையாட்டுத்தனமான கடவுளின் பொறுப்பற்ற செய்கையினால் சுவர்க்கத்திலிருந்து விழுந்துவிட்ட ஒரு துகள்தானா அவள்?

                சித்ரா: ஆமாம்.

                அர்ஜுனன்: ஆ! அதனால்தான் நான் எப்போதும் உன்னை இழந்துவிடக் கூடிய நிலையில் இருக்கிறேன். எனது உள்ளம் நிறைவு அடையவில்லை, என் சிந்தையில் நிம்மதி இல்லை. அடைய இயலாதவளே, என்னருகே நெருங்கி வா! பெயர், வீடு, பெற்றோர் எனும் தளைகளுக்குள் உன்னை அர்ப்பணிப்பாயாக. எனது இதயம் உன்னை எல்லாப் பக்கங்களிலிருந்தும் உணர்ந்து, உன்னுடன் அமைதியான, அன்பின் பாதுகாப்பு நிறைந்த வாழ்க்கையை வாழட்டும்.

                சித்ரா: மேகங்களின் நிறங்களையும், அலைகளின் நடனத்தையும், மலர்களின் வாசனையையும் பிடித்து நிறுத்தும் இந்த வீண்முயற்சி எதற்காக?

                அர்ஜுனன்: எனது தலைவியே! காதலை உனது வெற்றுமொழிகளால் அமைதிப்படுத்த முயலாதே! எனக்குப் பற்றிக்கொள்ள எதையாவது கொடு; இன்பத்தைவிட நீடிப்பதாகவும், துயரத்திலும் பொறுத்துக்கொள்ளக் கூடியதாகவும் அது இருக்கட்டும்.

              சித்ரா: எனது வீரத்தலைவரே, ஆண்டு முடியவில்லை, ஆயினும் அதற்குள் நீங்கள் சலித்து விட்டீர்களா? ஒரு மலரின் ஆயுளைக் குறைவாக வைத்த ஆண்டவனின் செய்கையை நான் இப்போது புரிந்து கொண்டேன். எனது இந்த உடல் வசந்தகாலத்து மலர்களுடன் உலர்ந்து இறந்து போயிருந்தால் அது கட்டாயம் மரியாதையுடன் இறந்திருக்கும். இருப்பினும் அதன் நாட்கள் எண்ணப்பட்டு உள்ளன, அன்பே! அதனை விடாது, தேன் வறண்டுபோகும்வரை சுவையுங்கள். வேனிற்காலத்து மலர்கள் வாடி மண்ணில்வீழ்ந்து இறந்தபின் அதனைத் தேடிவரும் வண்டினைப்போலாகாமல் உங்களுடய யாசகனின் இதயம் திரும்பத்திரும்ப தணியாத ஆசையுடன் வேண்டும்வரை விடாது எடுத்து அனுபவியுங்கள்.

                காட்சி- 7

                மதனன்: இந்த இரவே உந்தன் கடைசி இரவு.

                வசந்தன்: நாளை உனது உடலின் வனப்பு வசந்தகாலத்துக் குறைவற்ற பொக்கிஷத்தினுள் சென்றடையும்; அர்ஜுனனின் முத்தங்களின் நினைவிலிருந்து அழிக்கப்பட்ட உனது இதழ்களின் அழகான சிவப்புநிறம் புதியதான ஒரு ஜோடி அசோக இலைத்தளிர்களாக முகிழ்க்கும்; மின்னலைப்போலும் உன் மேனிவண்ணம் திரும்பவும் ஓராயிரம் மல்லிகை மலர்களாகப் பிறவியெடுக்கும்.

                சித்ரா: கடவுள்களே! எனக்கு இந்த வரத்தை மட்டும் அளியுங்கள்! அணையப்போகும் தீச்சுடரின் கடைசிச் சுடரொளி போல இன்றிரவு மட்டும் எனது அழகு அதன் கடைசி நேரத்தில் மிகுதியாக ஒளிரட்டும்.

                மதனன்: உனது விருப்பம் நிறைவேறும்.

                காட்சி- 8

                கிராம மக்கள்: யார் நம்மை இப்போது காப்பாற்றுவார்கள்?

                அர்ஜுனன்: ஏன், என்ன தீங்கு உங்களை இப்போது அச்சுறுத்துகின்றது?

                கிராம மக்கள்: மலையிலிருந்து பெருகிவரும் வெள்ளம்போல, கொள்ளைக்காரர்கள் வடதிசையிலுள்ள மலைகளிலிருந்து நமது கிராமத்தை நோக்கி அதனை கொள்ளையிட்டு அழிக்க வந்துகொண்டிருக்கிறார்கள்.

                அர்ஜுனன்: இந்த நாட்டில் உங்களைக் காக்க யாருமில்லையா?

                கிராம மக்கள்: கொடுமைக்காரர்கள் அனைவருக்கும் இளவரசி சித்ரா ஒரு அச்சுறுத்தலாக இருந்தாள். அவள் இந்த நாட்டில் இருந்தபோது நாங்கள் வேறொன்றைப்பற்றிய பயமும் இல்லாமல், இயற்கையாக நிகழும் மரணமொன்றையே பயந்திருந்தோம். அவள் இப்போது தீர்த்தயாத்திரை சென்றிருப்பதால், யாருக்கும் அவளை எங்குபோய்த் தேடுவதெனத் தெரியவில்லை.

                அர்ஜுனன்: உங்கள் நாட்டின் காவலன் ஒரு பெண்ணா?

                கிராம மக்கள்: ஆம்; எங்களுக்குத் தாயும் தந்தையும் அவள் ஒருவளே!

                [அனைவரும் அங்கிருந்து வெளியேறுகிறார்கள்]

                [சித்ரா நுழைகிறாள்]

                சித்ரா: ஏன் தனியாக அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள்?

                அர்ஜுனன்: இளவரசி சித்ரா எப்படிப்பட்ட பெண்ணாக இருப்பாள் எனக் கற்பனை செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அவளைப்பற்றிய பலவிதமான கதைகளை பல மனிதர்கள் கூறக் கேட்கிறேன்.

                சித்ரா: ஆ! ஆனால் அவள் ஒன்றும் அழகியல்ல. எனது கருமையான கொல்லும் விழிகளைப்போல் அவள் கண்கள் ஒன்றும் அழகானதல்ல. அவளால் எந்தக் குறியையும் நோக்கி அம்பெய்ய முடியும்; ஆனால் தனது காதலனின் இதயத்தை விழியெனும் அம்பால் துளைக்க இயலாது.

                அர்ஜுனன்: அவள் வீரத்தில் ஆண்மகனாகவும், இளகிய மனம்கொண்ட பெண்ணாகவும் உள்ளவள் என்கின்றனர்.

                சித்ரா: அது உண்மையிலும் ஒரு துரதிர்ஷ்டமே! ஒருபெண், பெண்ணாக மட்டுமே இருக்கும்போது தனது புன்சிரிப்பாலும், அழுகையாலும், பணிவிடைகளாலும் இன்னும் அன்புப்பிணைப்பான தழுவல்களாலும் தன்னை ஆண்மகனின் இதயத்தைச்சுற்றி பின்னிப் பிணைத்துக் கொள்கிறாள்: அப்போதுதான் அவள் மகிழ்ச்சியடைகிறாள். கல்வியாலும் தனது மற்ற சாதனைகளாலும் அவளுக்கு என்ன பிரயோசனம்?

                நேற்று மட்டும் நீர் அவளை காட்டுப்பாதையிலுள்ள சிவன்கோவிலின் முற்றத்தில் பார்த்திருந்தால் இன்னொருமுறை அவளைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றிருப்பீர்கள். ஒரு பெண்ணிடம் ஆண்மையின் வலிமையைத் தேடும் உங்களுக்கு, பெண்மையின் அழகில் சலிப்பு ஏற்பட்டு விட்டதா என்ன? அருவிநீரால் நனைந்த பசிய இலைகளால் குகையிலுள்ள நமது மதியப் படுக்கையை நான் இரவுபோல இருளாகச் செய்துவைத்திருக்கிறேன். அங்கு கருநிற ஈரக்கற்களில் படர்ந்திருக்கும் மென்மையான பச்சைநிறப் பாசிகள் உமது இமைகளை முத்தமிட்டு உறங்கவைக்கும். நான் உங்களை அங்கே அழைத்துச் செல்கிறேன்.

                அர்ஜுனன்: இன்று வேண்டாம், அன்பே!

                சித்ரா: ஏன் இன்று வேண்டாம்?

    [தொடரும்]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171003 Vatsalya -lr

    ”கழுத்தினைச் சுற்றிடும் கன்றுக்(கு) உவமை
    எழுத்தினைச் சுற்றும் எதுகை: -பழுத்த
    பலாமர வேரில் பிறந்தது மோனை:
    கலாரசிகன் கேசவ் கிளாஸ்’’….கிரேசி மோகன்….!

    Share
  • இறங்குமுக பொருளாதாரம்?

    பவள சங்கரி

    புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்புகள், உயர் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து மூன்று மாதங்கள் நிறைவடைந்த நிலையில் எஸ்&பி ரேட்டிங் நிறுவனம் இந்திய பொருளாதாரத்திற்கு இறங்குமுக (downgrade ratings) மதிப்பீடு அளித்துள்ளது. இதன் உடனடி விளைவுகளாக ரூபாயின் மதிப்பு குறைதலும், அன்னிய செலாவணி கையிருப்பு குறைதலுமே பயனாகிறது. இதற்கான தீர்வாக நம் நிதியமைச்சகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்?

    இன்றைய ஜிஎஸ்டி பற்றிய அரசு விளம்பரங்களின்படி உணவுப் பொருட்களுக்கு வரியிலிருந்ந்து விலக்கோ அல்லது முந்தைய மறைமுக வரியைவிட குறைவாக இருந்தாலும் இப்பொழுது உணவு விடுதி நிறுவனங்கள் ஏன் அதிகப்படியாக விலைவிதிப்பை செய்ய வேண்டும்?

    Share
  • சிவபிரதோஷம் “வெண்பனித் தீயினன்”

     

    மீ.விசுவநாதன்

    10426154_905210982836868_8431022936108084725_n

    மேனியின் ஆசையை மெள்ளநான் விட்டிட
    மிகஆழ பக்தி வேண்டும்
    ஊனிலே ஓடுற உதிரமா சக்தியில்
    உமைபாகன் உறைய வேண்டும்
    மானிடன் என்னுரு மாதொரு பாகனாய்
    மனம்நன்கு காண வேண்டும்
    ஞானியர் பக்கமே நான்தின மிருந்திட
    நல்லசிவ னருள வேண்டும்
    தீநிற வண்ணனே நீரணி அழகனே
    தீரட்டும் பிறவிப் பிணியே
    நீயொரு தத்துவ தெய்வீக ஒளியெனத்
    தெளியட்டும் எந்தன் மனமே !

    meaning-of-deer-shiva-hand

    கந்தனும், முந்திய கணபதிப் பிள்ளையும்
    கைலாய பதியி னுறவே
    அந்தமும் ஆதியும் அற்புத வானமும்
    அனைத்துமாய் ஆன அமுதே
    விந்தைகள் செய்குவாய் வெண்பனித் தீயினை
    வேண்டித்தான் சூடு கின்றாய்
    சொந்தமும் நட்புமே நோய்நொடி வென்றிட
    சுந்தரனே கண்கள் திறவாய்
    தீநிற வண்ணனே நீரணி அழகனே
    தீரட்டும் பிறவிப் பிணியே
    நீயொரு தத்துவ தெய்வீக ஒளியெனத்
    தெளியட்டும் எந்தன் மனமே !

    (இன்று 03.10.2017 பிரதோஷம்)

    Share
  • ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ உலகளாவிய பெருநூல் வெளியீட்டு விழா.

    21.10.2017, சனிக்கிழமை, காலை 09.30 மணி வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம், இலங்கை

    final rapper 1

    final rapper2

    கவிதைகள் சார்ந்து தமிழ் மொழியிலும், பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் தொடராக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை கவிதைகளாக, கவிதை பற்றிய ஆய்வுகளாக, கவிஞர்கள் சேர்ந்த தொகுப்புகளாக, கவிஞரின் தனி நூலாக என பல்வகைத் தளங்களில் உலாவருகின்றன.

    இந்தச் சூழ்நிலையில்தான் தமிழ்மொழிக்கு இன்னொரு புதிய வரவாக ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூல் கிடைக்கின்றது. பல்வேறு நாடுகளினைச் சேர்ந்த‌ ஆயிரத்திற்கும் அதிகமான கவிஞர்களின் கவிதைகளினை ஒரே நூலில் காணும் வாய்ப்பினை வழங்கும் நூலே ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூலாகும்.

    2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த நூலுக்கான கவிதைகள் பெறுவது தொடர்பான செய்திகள் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணைய ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என்பவற்றில் வெளிப்படுத்தப்பட்டன. உலக அளவில் ஆகக்குறைந்தது 25 நாடுகளின் கவிஞர்களையாயினும் இணைப்பதே இப்பணியின் முதல் இலக்கு எனினும் பணி தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே பாரிய வரவேற்பு உலகெங்கிலும் இருந்து கிடைத்தது. ஒவ்வொரு தேசங்களில் இருந்தும் கவிதைகளினை பெறும்பொருட்டு அந்தந்த தேசங்களுக்கு ‘செயலாற்றுநர்’ எனும் பணியில் பலர் ஈடுபட்டனர். இலங்கை, இந்தியா போன்ற தேசங்களுக்கு மாவட்ட ரீதியாகவும், மாநில ரீதியாகவும் செயலாற்றுநர்கள் இயங்கினர். செயலாற்றுநர்களின் தீவிரமான முயற்சியினால் விரைவாகவே கவிஞர்கள் நூலுடன் இணைந்துகொள்ளத் தொடங்கினர். குறிப்பாகச் சொல்வதென்றால் இந்தியா தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களின் கவிஞர்களும் இப்பெருநூலில் இடம்பெறுகின்றனர். இலங்கையின் அனைத்துப் பிரதேச கவிஞர்களும் பெருநூலுக்கு கவிதை அளித்துள்ளனர்.

    ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூலில் 32 நாடுகளின் 1098 கவிஞர்கள் இடம்பெறுகின்றனர். நூலின் மொத்தப் பக்கங்கள் 1861 ஆகும். இப்பக்கங்கள் ஏ4 தாள் அளவு கொண்டவை. நூலொன்றின் மொத்த நிறை 04.415 கிலோகிராம் ஆகும். நூலினை வள்ளுவர்புரம் செல்லமுத்து வெளியீட்டகம் வெளியிடுகின்றது.

    இலங்கையின் மூத்த கவிஞர்கள் என சொல்லத்தக்கவர்கள் பலரும் பெருநூலினை அலங்கரிக்கின்றனர். சேரன், சோ.பத்மநாதன், எம்.ஏ.நுகுமான், அனார் என இப்பட்டியல் நீள்கின்றது. இந்திய அளவில் மூத்த, இளைய, சினிமாசார் கவிஞர்கள் என பலரும் நூலில் உள்வாங்கப்பட்டனர். அப்துல் ரகுமான், வைரமுத்து, கலைஞர் கருணாநிதி, கமல்ஹாசன், அறிவுமதி, பா.விஜய், தாமரை என யாவரும் இப்பெருநூலில் உள்வாங்கப்பட்டுள்ளனர். நூலின் பின் அட்டைக்குறிப்பினை தமிழுலகு அறிந்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வரைந்திருக்கின்றார்.

    நூலில் 12 வயதுடைய பிள்ளைக்கவி முதல் தொன்னூறு வயது கடந்த கவிஞர்கள் வரையும் இடம்பெற்றுகின்றனர். இந்தியா தமிழ்நாட்டின் மாவட்டங்கள் தவிர புதுடில்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களின் கவிஞர்களும் நூலில் இடம்பெறுகின்றமை சிறப்பு.

    புலம்பெயர் தேசத்தின் மூத்த, இளைய கவிஞர்களும் நூலில் பங்கேற்கின்றமை நூலுக்கு இன்னும் மெருகூட்டுகின்றது. உதாரணமாக சுவிட்சர்லாந்து தேசத்தின் 45 கவிஞர்கள் நூலிற்கு கவிதை அளித்துள்ளனர். இப்படியாக புலம்பெயர் தேசத்தினரின் ஒத்துழைப்பு நூலுக்கு பலம் சேர்க்கின்றது.

    ஆசியாவின் பிற நாடுகளின் கவிஞர்களையும் பெருநூலில் காணலாம். மலேசியக் கவிஞர்கள் 15 பேர்கள், சிங்கப்பூர்க் கவிஞர்கள் 11 பேர்களும் நூலில் இடம்பெறுகின்றனர்.

    ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூலின் சிந்தனை இவ்விதமாகவே தோன்றியது. 2015ஆம் ஆண்டில் ஈழத்தின் வன்னியில் காட்டுக்குள் வைத்து ‘ஆஷா நாயும் அவளும்’ சிறுகதை நூலினை யோ.புரட்சி அவர்கள் வெளியீடு செய்த பின்னர், அவ்வனத்திலிருந்து நடந்த சிறு கலந்துரையாடலின்போது ஏற்பட்ட சிந்தனையே ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூல். யோ.புரட்சி அவர்கள் இப்பெருநூலின் செயலியக்குநர் ஆவார். கனடா யமுனா நித்தியானந்தன் நூலில் பதிப்புரிமையாளராக உள்ளார். சர்வதேச தொடர்பாற்றுநராக பரீட்சன் இயங்கினார். ஆலோசனை, மற்றும் தேசங்கள், மாவட்டங்களுக்கான செயலாற்றுநர்களும் பணிகளோடு இணைந்து நூலினை வளமாக்கினர்.

    இப்பெருநூலுக்கு கவிதை தந்த சில கவிஞர்கள் நூலினைக்காணுமுன்னெ மரணித்தமை துயரானது. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் நூலுக்கான கவிதை மற்றும் உரையினை தனது மரணத்திற்கு முன்னேயே தந்துவிட்டார். அத்துடன் ஆலோசகராகவும் இயங்கினார். அவர் நூலின் வெளியீட்டு விழாவிற்கு முன்னதாகவே மரணித்துவிட்டார். இந்தியா தமிழ்நாட்டின் பொதுச்செயலாற்றுநராக நூலுக்காக பணியாற்றி அநேகரின் கவிதைகளினை சேகரித்துத்தந்த மனோபாரதி அவர்கள் செப்டெம்பர் மாதம் மரணித்து விட்டார். கவிஞர்கள் இன்குலாப், நா.காமராசன், கல்வயல் வே.குமாரசுவாமி, அண்ணாமலை, எஸ்,ஏ.மத்தியூ, நா.ஜெயபாலன், அண்ணாமலை, நா.முத்துக்குமார், க.கிருஸ்ணராஜன் என மரணித்தோரின் பட்டியலும் உண்டு.

    இப்பெருநூலில் இலகுவாக கவிஞர்களை தேடும் பொருட்டு அகரவரிசைப்படியான பொருளடக்கம் உண்டு. உதாரணமாக சிநேகன் என்பவரின் கவிதை தேடுவதெனில் பொருளடக்கத்தில் ‘சி’ எழுத்தில் அவரது தேச அடையாளப்படுத்தலுடன் பக்கம் இடப்பட்டிருக்கும். குறித்த பக்கத்தில் முகவரி, குறிப்பு, என்பவற்றுடன் கவிதை இடம்பெற்றிருக்கும்.

    ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூலானது அழகிய‌ பாதுகாப்புப்பெட்டி ஒன்றில் இடப்பட்டுள்ளது.

    ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’
    பங்கேற்கும் கவிஞர்களது 32 நாடுகளின் விரிப்பு

    01. அமெரிக்கா
    02. அவுஸ்திரேலியா
    03. அயர்லாந்து
    04. பஹ்ரைன்
    05. பர்மா(மியன்மார்)
    06. கனடா
    07. சீனா
    08. டென்மார்க்
    09. துபாய்
    10. ஈரான்
    11. இங்கிலாந்து
    12. பிரான்ஸ்
    13. ஜேர்மனி
    14. ஹொங்காங்
    15. இந்தியா
    16. இந்தோனேசியா
    17. இத்தாலி
    18. குவைத்
    19. மலேசியா
    20. நெதர்லாந்து
    21. நியூசிலாந்து
    22. நோர்வே
    23. போர்த்துக்கல்
    24. கட்டார்
    25. ரஷ்யா
    26. சிங்கப்பூர்
    27. சவூதி அரேபியா
    28. இலங்கை
    29. சுவிட்சர்லாந்து
    30. தாய்லாந்து
    31. தைவான்
    32. தென் ஆபிரிக்கா

    (இந்தியா, தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் மற்றும் இந்திய பிற மாநிலங்கள், இலங்கையின் அனைத்து பிரதேசங்கள் என்பவற்றின் கவிஞர்களும் பெருநூலில் உள்ளடங்குகின்றனர்.)

    பெருநூலின் வெளியீட்டு விழாவானது கீழ்வரும் திகதியில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
    காலம்: 21.10.2017, சனிக்கிழமை.
    இடம்: வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம், இலங்கை.
    நேரம்: காலை 09.30 மணி. (காலை 09.30 மணிக்கு ஆயத்தமாதல்)

    நிகழ்விற்கு தமிழுலகு அறிந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் தலைமை வகிப்பார். அத்துடன் பத்து பேராசிரியர்கள் நூல் வெளியீட்டிற்கு முன்னிலை வகிக்கவுள்ளனர்.
    நூலின் நோக்குரையினை அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தரும் பன்முகப் படைப்பாளி, முன்னாள் இந்து கலாச்சார விரிவுரையாளர் எம்.ஜெயராமசர்மா நிகழ்த்துவார்.

    இலங்கை, இந்தியா, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என பல தேசங்களின் படைப்பாளர்களும் நூல் வெளியீட்டில் பங்கேற்கவுள்ளனர்.

    வெளியீட்டிற்கு முன்னதாக பல்வேறு கலாச்சார நிகழ்வுகளை உள்ளடக்கிய கலாச்சார பவனியும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

    செயலியக்குநர்: யோ.புரட்சி
    பதிப்புரிமை: யமுனா நித்தியானந்தன், கனடா.

    வெளியீடு:செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம்.
    பொதுத்தொடர்பு: (0094) 775892351
    tamilkavithaikal1000@gmail.com

    எழுத்து: ரசிகா

    Share
  • அதிகமான ஜிஎஸ்டி வரிவிதிப்பால் அரசிற்கு அதிக வருமானமா அல்லது மக்களுக்கு அதிக நெருக்கடியா?

    பவள சங்கரி

    தலையங்கம்

    பல்வேறு பொருட்களுக்கு குறைந்தபட்சமாக 5%, அதிகபட்சமாக 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வந்த இந்த வரிவிதிப்பால் அரசிற்கு கிடைத்த வருமானம் சுமாராக 95,000 கோடி ரூபாய். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாத வருவாய் 90,000 கோடியாகக் குறைந்துள்ளது என்று அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஒரு மாதத்தில் 5,000 கோடி ரூபாய் வரி வருவாய் குறைந்துள்ளது. அதாவது தொழில்துறையில் ஒரு மாதத்தில் சுமாராக 50,000 கோடி ரூபாய்க்கு உற்பத்தி அல்லது தொழில் நலிவடைந்துள்ளது என்பதையே இது உணர்த்துகிறது. அதிக வரிவிதிப்பால் தொழில்கள் முடங்குமேயொழிய அதிக வருவாய் கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்றே கொள்ள முடிகிறது. விழாக்காலமான இந்த சமயத்தில் வரி வருமானமும், தொழில் துறையும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைய வேண்டிய காலகட்டம். மாறாக வரி வருவாய் குறைந்துள்ளது என்பது சிந்திக்க வேண்டிய விசயம். இன்று உணவு விடுதித் தொழில் நலிவுறும் நிலையில் உள்ளதைக் காணமுடிகிறது. பெரும்பாலும் உயர்மட்ட வகுப்பினர் வரி விதிப்பைப் பற்றி கவலை கொள்வதில்லை. ஆனால் பெருவாரியாக உள்ள மத்திய தர வகுப்பினர் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாரத்திற்கு ஒரு நாளோ அல்லது மாதத்திற்கு இரண்டு நாட்களோ குடும்பத்துடன் உணவு விடுதிக்குச் செல்லக்கூடியவர்கள், குளிர் சாதன வசதியுள்ள விடுதிகளைத் தவிர்த்து சாதாரண விடுதிக்குச் செல்கின்றனர். அங்கும் கார வகைகளுக்கு அதிகமான வரியும், இனிப்பு வகைகளுக்கு குறைவான வரி விதிப்பும் செய்துள்ளது வருத்தம் அளிக்கக்கூடியது. இதில் சில உணவு விடுதிகள் இந்த வரி விதிப்பை பயன்படுத்தி மேலும் அதிக விலையில் விற்கின்றனர். அவர்கள் கொடுக்கும் இரசீதுகளில் இந்த வரிவிதிப்பு குறித்த எந்த விதமான தகவல்களும் இருப்பதில்லை. இதனால் பெரும்பாலான உணவு விடுதிகள் பெரும் சரிவைச் சந்திக்கின்றன. இப்படித்தான் அதிக வரிவிதிப்பால் அனைத்துத் தொழில்களும் நலிவுறும் அபாயமும் உள்ளது. அமெரிக்க அதிபர் பெரிய நிறுவனங்களுக்கான வரியை 30 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாகக் குறைத்து, இதன் மூலம் பொருளாதாரமும் தொழிலும் வளர்ச்சியடைந்து வேலை வாய்ப்புகளும் பெருகும் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நமது அரசும் பெட்ரோலியப் பொருட்களுக்கான விலை உயர்வை கட்டுக்குள் வைப்பதற்கும், ரூபாயின் மதிப்பை அதிகரிப்பதற்கும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயச் சூழலில் உள்ளது. அனைத்துப் பொருட்களையும் ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குள் கொண்டுவந்த நடுவண் அரசு, பெட்ரோலியப் பொருட்களை மட்டும் இதற்குள் கொண்டுவராமல் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டிருப்பது நியாயமாகுமா? பெட்ரோலியத் துறை அமைச்சர் பல முறை அறிவித்தும் இதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது பொது மக்களை மேலும் வேதனைக்குள்ளாக்குகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ள இந்த குளறுபடிகள் நீங்கி ஒரு இந்தியா ஒரு வரிவிதிப்பு என்ற நிலை வந்தால் நாடு நலம் பெறும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே உள்ளது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171002 - Krishna Leela -Ulukalabandanam -lr

    ’’கண்ணிநுண் தாம்பினால், கட்டுண்ட காரணம்,
    அன்னையின் அன்பினாலா!, அல்லது -கண்ணனே,
    ஓயாத லீலையின் மாயா வசப்பட்டு,
    ஆயாசம் ஆனதா லா!’’….

    ”மண்ணுண்டு , மாதா மயங்கிட, மாம்பழக்
    கன்னங்கள் உப்பக் கதவுவாய்க்குள், -அன்னன்டை,
    உள்ள மகோன்னத உன்னதங்கள் காட்டிய,
    புள்ளேபுள் ளூறும் பரம்’’….கிரேசி மோகன்….

    Share