Blog

  • கைகோர்த்து நிற்போமே !

     

     

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா 

    gandhi_delhi_500_22_05278

     

    பசித்திருந்தார் தனித்திருந்தார்
    விழித்திருந்து செயற்பட்டார்
    பழிபாவம் தனைவெறுத்துப்
    பக்குவமாய் வாழ்ந்திருந்தார்!

    தனக்கெனவே பலகொள்கை
    இறுக்கமாய்க் கடைப்பிடித்தார்
    தளர்ந்துவிடும் வகையிலவர்
    தனைமாற்ற விரும்பவில்லை!

    பொறுப்புகளைப் பொறுமையுடன்
    பொறுப்பேற்றே ஆற்றிநின்றார்
    வெறுத்தாலும் பலவற்றை
    விருப்பமுடன் அவர்செய்தார்!

    மற்றவரை மனம்நோக
    வைக்காமல் இருந்துவிட
    மனத்தளவில் வேதனையை
    வைத்துவிட்டார் மாமனிதர்!

    தன்வீட்டை நினையாமல்
    தாய்நாட்டை நினைத்துநின்றார்
    தாய்சொல்லைத் தட்டாத
    தனயனாம் காந்திமகான்!

    தாய்சொல்லே வேதமாய்
    தான்மனத்தில் கொண்டதனால்
    தாய்நாட்டின் விடுதலைக்காய்
    தனையிழக்கத் துணிந்துநின்றார்!

    உடையை மாற்றினார் உணவை மாற்றினார்
    படையை மாற்றினார் பாதைகூட மாற்றினார்
    ஆயுதத்தை மாற்றினார் அஹிம்சைதனை ஏற்றினார்
    அகிலம்பார்த்து வியந்துநிற்க அரக்கத்தையும் ஓட்டினார்!

    நீதிபார்த்து நின்றுநின்று நிமிர்ந்து செயலாற்றினார்
    சாதிபேதம் தனையுடைத்துச் சமத்துவத்தைப் போற்றினார்
    பாதியாடை தானுடுத்திப் பார்வியக்கச் செய்திட்டார்
    பாரதத்தை மீட்டெடுத்த பாரதத்தின் பொக்கிஷம்!

    பண்புகாத்து பலரும்போற்ற பாரதத்தை உருவாக்க
    பட்டபாடு கொஞ்சமல்ல காந்திமகான் வாழ்வினிலே
    காந்திபட்ட பாடெல்லாம் கடுகளவு நினையாமல்
    காற்றிலே பறக்கவிட்டுக் கவலையின்றித் திரிகின்றார்!

    நீதியொரு பக்கம் நிட்டூரம் மறுபக்கம்
    சாதியொரு பக்கம் சதிகாரர் நாற்பக்கம்
    கள்ளமின்றிச் சிரிக்கின்ற காந்திபடம் காசுதனில்
    கள்ளப்பண முதலைகளோ நல்லவராய் உலவுகிறார்!

    காசுபற்றி நினையாத காந்திமகான் இப்போது
    காசுதனில் இருந்தாலும் கவலையுடன் தானிருப்பார்
    காந்திதனைக் காசில்வைத்துக் கலப்படங்கள் செய்வாரைக்
    காந்தி ஜயந்திதனில் கல்லெறிந்து கொல்லல் வேண்டும்!

    மதுவெறுத்த காந்திமகான் மனம்மகிழ வைப்பதற்கு
    மதுக்கடையை ஒழித்துவிட மனத்திலெண்ணம் வருமாயின்
    புதிதான பாரதத்தைப் பூமியிலே கண்டிடலாம்
    அதுதானே காந்திமகான் ஜயந்திக்கே அர்த்தமாகும்!

    கொடியேற்றம் மலர்வளையம் கொண்டாட்டம் பேச்சரங்கம்
    வெளிவேஷம் எல்லாமே காந்திக்குப் பொருத்தமல்ல
    பழிபாவம் தருகின்ற பாதகங்கள் தனையொழித்துப்
    பாரதத்தை மீட்டுவிட்டால் காந்திக்குப் பெருமைவரும்!

    காந்தி ஜயந்திதனைக் கருத்துடனே மனத்திருத்திக்
    காந்தி மனம்விரும்பும் காரியங்கள் செய்துநிற்போம்
    காந்தி மகான் கண்டெடுத்த கண்ணான சுதந்திரத்தைக்
    காந்தி மகான் வாழ்த்திநிற்கக் கைகோத்துக் காத்துநிற்போம்!

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (242)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக திரு. இரா.பானுகுமார் அவர்களை அறிவிப்பதில் வல்லமை பெருமகிழ்ச்சி அடைகிறது.

    இன்று தமிழ்மரபில் சமணத்துக்கு இருக்கும் உயர்ந்த இடத்தை உலகுக்கு அறிவிக்கும் “தமிழ் சமண மரபு விக்கி” பக்கம் தமிழ்மரபு அறக்கட்டளையால் வெளியிடப்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணமாக அதன் தலைவி முனைவர் சுபாஷினி அவர்களையும், திரு பானுகுமார் அவர்களையும், செல்வமுரளி அவர்களையும் தமிழ் மரபு அறக்கட்டளை அறிவித்திருக்கிறது. இந்த பக்கம் வெளியாவது தமிழ் சமணத்தின் வரலாற்று சுவடுகளை தமிழர் அறியமிக உதவி செய்யும் என வல்லமை நம்புகிறது.

    சமணத்துக்கும் தமிழருக்கும் உள்ள உறவு மிக தொன்மையானது. ஆயிரமாயிரம் ஆண்டு பழமையானது. ஆனால் கால ஓட்டத்தில் சமணமதம் தமிழகத்தில் இருந்த சுவடே தெரியாது இருந்த நிலையில் அதன் தொன்மையை வலையுலகில் பரப்பியவர்களில் பானுகுமார் அவர்கள் மிக முக்கியமானவர். 15 ஆண்டுகளுக்கு முன்பே அவர் வலைப்பதிவில் தமிழ்சமணம் குறித்து எழுதிய கட்டுரைகளை படித்து வியந்துகொண்டிருந்தேன். அவரும் பொள்ளாச்சி நாசா. கணேசன் அவர்களும் சமணர் குறித்த பல கட்டுரைகளை எழுதினார்கள். தமிழ் மரபு அறக்கட்டளை அதற்கு பேருதவி செய்துள்ளது.

    சமணம் பற்றி மக்களுக்கு இருக்கும் பல குழப்பங்களை தெளிவிக்கிறார் பானுகுமார். உதாரணமாக சமணம் இல்லறவியலையும், இன்பத்தையும் மறுக்கிறது எனும் மாயையை கீழ்கண்டவாறு உடைக்கிறார்

    “உலகியல் ஒழுக்கங்களை அல்லது உலக இயல்பை இரண்டு அறங்களாகப் பிரித்துப் பார்க்கிறது சமணம். இந்திய சமயங்களில், முதன் முதல் “இல்லறம்”, “துறவறம்” என்றும் தனி தனியே ஒழுக்கங்களை எடுத்தோம்பிய சமயம் சமணமாகத்தான் இருக்கும்!

    மக்களை நன்வழிப் படுத்தி அவர்களை பாங்குற வழிநடாத்தி செல்ல “சிராவக தர்மம்” என்னும் இல்லற தர்மத்தை வகுத்துக் கொடுத்து, உலக இன்னல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உலகப்பற்றைத் துறந்து வீடுபேறடைய “யதி தர்மம்” என்னும் துறவற தர்மத்தை வகுத்துக் கொடுத்து வழங்கியது சமணம் என்றால் அது மிகையல்ல!

    “இல்லறம் ஏனைத் துறவறம் என்றிவற்றைப்
    புல்ல உரைப்பது நூல் – அருங்கலச் செப்பு (60)

    வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும் – அஃதாவது, உலக முதல் முனைவனான “ஆதிபகவனால்” அருளப்பட்டது முதல் நூலாகும். மேலே காட்டியப் பாடல் சொல்வதுப் போல் அவ்வாறு அருளப்பட்ட நூல் இல்லறமும், துறவறமும் ஆகிய இரண்டு அறங்களையும் கொண்டு விளங்கும் என்றும் அறிவுறுத்துகிறது. “

    ஸ்வஸ்திகாவுக்கும் சமணத்துக்குள் உள்ள தொடர்பு என்ன என்பதை கீழ்கண்டவாறு விளக்குகிறார்

    “பாரத சமயங்களில் மிகப் புனித சின்னங்களுள் இந்த ஸ்வஸ்திகமும் ஒன்று.
    இச்சின்னத்தை எல்லா பாரத சமயங்களும் மங்கல சின்னமாக கருதினாலும்,
    சமணத்தில் இதற்கு ஒரு தனியிடம் உண்டு. நிகழ்க் கால ஏழாவது
    தீர்த்தங்கரரின் (சுபார்ச்வநாதர்1)இலாஞ்சணமும் (சின்னம்) ஸ்வஸ்திக்
    தான். சமணர்களுக்கு இது அடையாளச் சின்னமுமாகப் பயன்படுகிறது.
    சமணர்கள் தங்கள் வீட்டுக் கதவுகளில் இவற்றை பொறித்து வைப்பர்.
    வெளி ஊர்களில் இருந்து புலம் பெயரும் சமணக் குடும்பங்களை இந்த
    சின்னத்தை வைத்தே, சமணர்கள் வாழும் வீட்டை அடையாளம் கண்டுக்
    கொள்வார்கள்.”

    சமணத்தின் சிறப்பையும், தமிழ் மரபில் அதற்குள்ள சிறப்பையும் தமிழர் உணர இத்தேர்வு உதவும் என வல்லமை நம்புகிறது. வல்லமையாளர் பானுகுமார் அவர்களுக்கு வல்லமையின் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • படக்கவிதைப் போட்டி (129)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    22016179_1439541572766704_1378290575_n

    யெஸ்ஸெம்கே எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.10.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (75)

    நிர்மலா ராகவன்

    ஞாபகம் வருதே!

    நலம்-2-1

    ` ஆனாலும் எனக்கு ரொம்ப மறதி!’ என்று அலுத்துக்கொள்கிறார் ஒருவர்.

    இன்னொருவரோ, `நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு மறக்கத் தெரியாதா!’ என்று கெஞ்சுகிறார். (அனேகமாக, காதலராகத்தான் இருக்கும்).

    வாழ்வில் மிக இனிமையானவை கடந்துபோன தருணங்கள். அக்காலத்தில் பொறுக்க முடியாத சில சந்தர்ப்பங்களும் இருந்திருக்கும். அவைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஆடையின்கீழ் இருக்கும் பால்போல், மறக்கமுடியாதவை, மறக்கக்கூடாதவை, தெளிவாகத் தெரியும். அதற்காகத்தான் திருமணம், பிறந்தநாள் போன்ற மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளை புகைப்படங்களில் பத்திரப்படுத்திக் கொள்கிறோம்.

    ஒரு பள்ளிக்கூடத்திலோ, அல்லது கல்லூரியிலோ ஒன்றாகப் படித்தவர்கள் இருபத்தைந்து வருடங்களுக்குப்பின் ஏன் கூடுகிறார்கள்? அக்காலத்தில் தாம் அனுபவித்தவை, தண்டித்த ஆசிரியை, செய்த விஷமங்கள் என்று எல்லாவற்றையும் அசைபோடும்போதே ஒரு மகிழ்ச்சி.

    நாம் எங்கு சென்றாலும் நம்முடன் தொடர்ந்து வருவது கல்வி மட்டுமல்ல, நினைவுகளும்தான்.

    கதை

    அப்போது நான் இடைநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். அடுத்த பாடத்தை எடுக்க வரும் ஆசிரியை வகுப்பிற்குள் நுழைவதற்குள் எங்களில் சிலர் பலரது வேண்டுகோளுக்கு இணங்க திரைப்படப் பாடல்களைப் பாட ஆரம்பித்தோம்.

    எப்போதும் இடைவேளையின்போதுதான் பின்னணி இசையை எல்லாம் வாயாலேயே அளித்து நான் பாடுவேன். அன்று என்னவோ, புத்தி கெட்டுப்போயிற்று. (ஒரு வேளை, மறக்கமுடியாத தருணம் ஒன்று அமைய வேண்டியிருந்தோ?)

    குழுவாகப் பாடப் பாட உற்சாகம் பீறிட்டது. இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். `இன்னிக்கு மிஸ் வரலே!’ என்று மகிழ்ச்சியுடன், எங்கள் கச்சேரியைத் தொடர்ந்தோம். வகுப்பில் ஒரே ஆரவாரம். கைதட்டி எங்களை ஊக்குவிக்க தோழிகள் இருந்தபோது, ஆசிரியை உள்ளே நுழைந்தது கண்ணில் படுமா?

    மணி அடிக்கும் சமயம் ஆசிரியை மீண்டும் வந்தார். அவர் முகத்தில் தெரிந்த கோபம் எங்களை அச்சுறுத்தியது.

    முதலிலேயே வகுப்புக்கு வந்தாரா!

    அது எப்படி கவனிக்காமல் போனோம்?

    “கிளாஸ் மானிட்டரே இப்படி இருந்தால் என்ன சொல்வது?” என்று என்னை ஒரு பார்வை பார்த்தார். குறித்த நேரத்தில் ஆசிரியை ஒருவர் வராவிட்டால், போய் விசாரிக்க வேண்டியது என் கடமையாக இருந்தது. பொங்கிய சிரிப்பை அடக்கிக்கொண்டு தலையைக் குனிந்தேன்.

    என்னுடன் சேர்ந்து பாடிய (அமர்க்களம் செய்த என்று புரிந்துகொள்ளவும்) பெண்ணின் பெயர் டி.ஸ்.வசந்தகுமாரி.

    அவளைப் பார்த்து, “உன் பெயர் M.L. வசந்தகுமாரி இல்லை. நினைவு வைத்துக்கொள்!” என்று சீறினார்.

    எங்களுக்கெல்லாம் சிரிப்பு வந்தது. நிலைமையை இன்னும் மோசமாக்க வேண்டாம் என்று அடக்கிக்கொண்டோம்.

    “உன் பெயர் M.L. வசந்தகுமாரி இல்லை. நினைவு வைத்துக்கொள்!” என்று சொல்லிச் சொல்லி, அந்த ஆண்டு பூராவும் அவளைக் கேலி செய்தோம்.

    இதைப்போன்று எவ்வளவோ! அதெல்லாம் பசுமையாக மனதில் படிந்துவிட்டதால், `இந்த வயதில் இதெல்லாம் சகஜம்!’ என்று `பெரிய மனதுடன்’ பிற்காலத்தில் மாணவர்கள் செய்யும் சிறு குறும்புகளை என்னால் ரசிக்க முடிந்தது.

    ஒலி தூண்டும் நினைவுகள்

    ஏதாவது பழைய பாட்டைக் கேட்டால், அதை நாம் ரசித்த காலம், அப்போது நம்முடன் இருந்தவர்கள் என்ற ஏதேதோ நினைவில் இனிமையாக எழும்.

    கதை

    என் பேத்திக்கு ஒரு வயதாக இருந்தபோது, நான் மருத்துவ மனையில் இருந்தேன். “பொண் குழந்தைக்கு பொட்டு இடவேண்டாம்?” என்று மகளைக் கடிந்துகொண்டு, கன்னத்தைத் தொட்டபோது குழந்தை பயந்தாள். ஒரே நாள்தான். இருந்தாலும், என்னை அடையாளம் தெரியவில்லை.

    உடனே நான் என்னுடன் கொண்டு வந்திருந்த சாந்தை எடுத்து, நாக்கு நுனியால் கீழுதட்டின் உள்பாகத்தில் ஓசை எழுப்பினேன். சிறு குழந்தைகள் அசங்காமலிருக்க, பொட்டோ, கண் மையோ இடும்போது இந்த யுக்தியைக் கையாள்வது வழக்கம்.

    `பாட்டிதானே இப்படிப் பண்ணி பொட்டு இடுவாள்!’ என்ற நினைவு எழ, சிரித்தபடி என்னிடம் தாவினாள்.

    இதை அவளிடம் இப்போது கூற, சிரிக்கிறாள். குழந்தைகளிடம் அவர்கள் பால்யப்பருவத்தைப்பற்றிக் கூறி வளர்த்தால், அவர்களுடைய ஞாபகசக்தி பெருகுமாம்.

    வாசனையும் நினைவுகளும்

    சமையல் செய்யும்போதோ அல்லது ஏதாவது உணவுவகையை நெடுநாளைக்குமுன் உண்ண நேரிட்டாலோ, நம் நினைவு எங்கோ பறக்கும்.

    கதை

    நான் முதன்முதலில் தோசை வார்க்கும்போது non-stick (ஒட்டாமல் இருப்பது) தோசைக்கல் கிடையாது.

    என்னை நம்பி என் குடும்பத்தினரை விட்டுவிட்டு என் தாய் வெளியூர் போய்விடுவாள், தன் தாயைப் பார்க்க.

    நான் தோசை வார்த்தால், சரியான பதம் புரியாமல் அதை நூறு கிழிசல்களாக எடுத்துவிடுவேன்.

    சிலாகிப்பதுபோல் “கிழிச்சு திங்கற வேலை வைக்காம, எவ்வளவு ஜோரா பண்ணறா!” என்று கேலி செய்வார்கள்.

    “இப்படியெல்லாம் கேலி பண்ணினா, இனிமே நான் சமைக்கவே மாட்டேன்!” என்று சண்டை பிடிப்பேன்.

    இப்போது பத்து வயதுக் குழந்தைகள்கூட கிழியாமல் தோசையைத் திருப்பும்போது, அவர்களிடம் அந்த தருணங்களை நினைவுகூர்வேன். பெரியவர்களைப் பார்த்துச் சிரிப்பது மரியாதையாக இருக்குமா என்று யோசித்துச் சிரிப்பார்கள்!

    நல்லதை நினைவில் வை

    `அம்மா என்னை எப்பவும் திட்டுவாள்!’ என்று ஒரு பெண்மணி சிறு வயதில் தன்னைக் கண்டித்த தாய்மீது வன்மம் கொள்கிறாள். (தந்தையும் திட்டியிருப்பார். அது மனதில் நிலைப்பதில்லை சிலருக்கு).

    `அம்மா என்னை கண்டிப்பாக வளர்த்ததால்தான் நான் இன்று நல்ல நிலைக்கு வந்திருக்கிறேன்!’ என்று கூறுவார் இன்னொருவர்.

    ஒரேவித வளர்ப்புதான். ஆனால் ஞாபகசக்தி நல்லவைகளை மறந்துவிட்டது. எப்போதோ நடந்த சோகக்கதைகளைச் சொல்லி, தன்மேல் பிறரைப் பரிதாபம் கொள்ளச்செய்வதுதான் பாசம் என்று தவறாக எண்ணுகிறார்கள் சிலர்.

    பழைய நினைவுகளிலேயே காலத்தைக் கழிக்க நினைப்பது நிகழ்காலத்திற்கு நல்லதல்ல. நாம் களைத்துப்போய், அல்லது வருத்தமாக இருக்கும்போது தம் மனதிற்கு மகிழ்ச்சியூட்டிய தருணங்களை நினைவுகூர்ந்தால் உற்சாகமாக உணரமுடியும்.

    உணர்வுகளும் நினைவுகளும்

    நாம் என்றோ செய்த தவறுகளை நினைக்கவே அஞ்சுகிறோம். அவைகளை அசைபோட்டால், மீண்டும் அதே தவற்றைச் செய்யாதிருக்கலாம். ஏன், பிறர் செய்த தவறுகளிலிருந்தும் பாடம் கற்கலாமே!

    விவாகரத்து செய்துகொண்ட பல பெண்களைச் சந்தித்திருக்கிறேன். முதலில், அவர்களுடைய கசப்பு கணவர்மேல் எழும். காலப்போக்கில், தன்மீதே பரிதாபமும், வெறுப்பும் எழும்.

    ஒரே ஒரு பெண் மட்டும் தான் எந்த சூழ்நிலையில் கணவனை விவாகரத்து செய்ய நேர்ந்தது என்று கூறிவிட்டு, `நாங்கள் ஒன்றாக இருந்தபோது, சில இனிமையான தருணங்களும் இருந்தன,’ என்று ஒத்துக்கொண்டாள்.

    வேண்டாத நினைவுகளையே விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்காததால் அவளால் எதிர்காலத்தைத் தைரியமாக நோக்க முடிந்தது. கடந்த காலத்திலேயே வாழ்க்கை தேங்கிவிடவில்லை.

    ஞாபகசக்தி வளர

    ஒரு கையின் விரல்களின் நுனியை இன்னொரு கையிலுள்ள அதே விரல்களுடன் (கட்டை விரல்- கட்டை விரல், ஆள்காட்டி- ஆள்காட்டி, இப்படி) சேர்த்து, கோபுரம்போல் பிடித்துக்கொண்டால், மறந்தது சிறிது நேரத்தில் நினைவு வந்துவிடுகிறது.

    வகுப்பறையில் ஆசிரியர்கள் போதிக்கையில் மாணவர்கள் இப்படிச் செய்தால், பாடம் மனதில் நன்கு படியும். `நீங்கள் சொன்னபடி செய்து பார்த்தேன். வீட்டுப்பாடங்களை சிறிது நேரத்திலேயே செய்து முடித்துவிட்டேன்!’ என்று பெருமகிழ்வுடன் தெரிவித்தாள் என் மாணவி ஒருத்தி.

    நான் சமீபத்தில், `ஒரு நடிகையின் தாய் சிறு, சிறு வேடங்களில் நடிப்பாளே, அவள் பெயர் என்ன?` என்று நினைவுகூர இம்முறையைக் கையாண்டேன். அது தெரிந்து எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. எனினும், எனக்குப் பதில் கிடைத்தது!

    `வேண்டாத விஷயம்!’ என்று மூளை சிலவற்றை மறந்துவிடுவது இயற்கை. அவை மறந்ததுபோலவே இருக்கட்டுமே! எதற்கு அநாவசியமான பரீட்சை?

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(186)

    -செண்பக ஜெகதீசன் 

    கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉம் இன்றிக் கெடும். (திருக்குறள் -166: அழுக்காறாமை)

    புதுக் கவிதையில்…

    பொருள் கொடுத்துப்
    பிறருக்குதவுதல்
    பெருங்குணம்…

    கொடுப்பவனைப் பார்த்து
    பொறாமைப்படுபவனின் குடும்பம்
    உண்ணவும் உடுக்கவும் ஏதுமின்றிக்
    கெட்டழியும்…! 

    குறும்பாவில்…

    அடுத்தவர்க்குக் கொடுத்துதவுவோன் மீது
    அழுக்காறு கொள்வோன் குடும்பம் கெட்டழியும்,
    உண்ண உடுக்க ஏதுமின்றி…! 

    மரபுக் கவிதையில்…

    தன்னிட முள்ள பொருளதனைத்
         -தானே தந்து பிறர்க்குதவும்
    உன்னத குணமது உடையோரை
         -உரிய முறையில் போற்றாமல்,
    அன்னார் மீதே பொறாமைகொளும்
         -அசுர குணமது கொண்டார்தம்
    அன்புடைச் சுற்றம் அழிந்துகெடும்
         -அன்னம் ஆடை கிடைக்காமலே…! 

    லிமரைக்கூ..

    பொறாமை கொள்வான் பொருள்கொடுப்போன் மீதே,
    போயழிவான் சுற்றமொடு ஊணுடையின்றி யென்பதால்
    பொறாமை கொள்ளுதலென்பது மாபெருந் தீதே…! 

    கிராமிய பாணியில்…

    கொள்ளாத கொள்ளாத பொறாமகொள்ளாத
    குடியழிக்கும் கொணமான பொறாமகொள்ளாத…

    அடுத்தவனுக்குக் குடுத்தொதவுற
    அன்பான மனுசன்மேல பொறாமகொள்ளுறவன்
    அழிஞ்சிபோவான்,

    அன்னந்தண்ணி யில்லாம உடுக்கத்துணி யில்லாம
    அவந்தான் குடும்பத்தோட அழிஞ்சிபோவான்…

    அதால,

    கொள்ளாத கொள்ளாத பொறாமகொள்ளாத
    குடியழிக்கும் கொணமான பொறாமகொள்ளாத…!

     

     

     

    Share
  • இறைஞ்சுகிறேன் இறைவனிடம்!

    (எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா) 

    தலைவைத்து மடிமீது
    நானுந்தன் முகம்பார்த்து
    நிலைதளரும் வேளைதனில்
    நீயென்னைத் தலைதடவி
    உளம்நிறைய ஆவலுடன்
    உணர்வுகொண்டு உருக்கமுடன்
    இருக்கின்ற நிலைகாண
    ஏங்கிநான் இருக்கின்றேன்!

    ஓடிநீ   விழுந்துவிட்டால்
    என்னுதிரம் கொட்டிவிடும்
    உன்கண்ணில் நீர்வழிந்தால்
    என்னுள்ளம் பதறிவிடும்
    வாடிவிடும் முகம்காணின்
    வந்துவிடும் பெருங்கவலை
    வையகத்தில் என்னுயிரே
    வடிவழகே நீதானே!

    நடுச்சாமம் முழித்துவிட்டால்
    நடுக்கமுடன் எனையணைப்பாய்
    படுக்கையிலே என்னருகே
    படுத்துவிட அடம்பிடிப்பாய்
    பிடித்தபடி படுத்திடுவாய்
    பெருவிருப்போ டிருப்பாய்
    உடுத்திருக்கும் உடுப்பையெல்லாம்
    உதறிநீ எறிந்திடுவாய்!

    என்மார்பில் முகம்புதைத்து
    என்கழுத்தை இறுக்கிடவே
    உன்கைகள் தனைக்கொண்டு
    உணர்வுடனே பற்றிடுவாய்
    எப்போதும் அதைநினைத்து
    இன்றுமே பார்க்கின்றேன்
    எனையிறுக அணைப்பதற்கு
    எவருமின்றித் தவிக்கின்றேன்!

    இல்லத்தில் விட்டுவிட்டு
    ஏன்மகளே சென்றுவிட்டாய்
    நல்லபடி உனைவளர்த்து
    நான்மகிழ்ந்து இருந்தேனே
    தொல்லையென நீநினைத்து
    என்னையிங்கு விட்டுவிட்டாய்
    நல்லபடி நீவாழ
    நானிறையை வேண்டுகிறேன்!

    உன்கையின் அணைப்பாலே
    உலகினையே மறந்தேனே
    உன்பேச்சைக் கேட்டவுடன்
    உளம்நிறைவு பெற்றேனே
    உன்சிரிப்பு என்னாளும்
    உயர்மருந்து ஆனதடி
    என்தவிப்பை உன்மனது
    ஏனின்னும் உணரலையோ!

    எப்படிநீ இருந்தாலும்
    என்னிதயம் உன்வசமே
    தப்புநீ செய்தாலும்
    தாங்குவது என்னியல்பே
    எப்பவுமே என்மகளே
    இடரின்றி நீயிருக்க
    இறைவனிடம் என்னாளும்
    இறைஞ்சுகிறேன் என்னுயிரே!

     

     

    Share
  • மிட்டாய் மலை இழுத்துச் செல்கின்ற எறும்பு!

    -ராஜகவி ராகில்

    கூந்தல் விரித்துத் தரையில்
    நீ நடந்துகொண்டிருந்த ஒரு தருணத்தில்
    பச்சைப் புல்வெளி ஆனதாம் கறுப்பாய்

    நான் அறிந்திருந்தேன்
    உன் நிழல் பார்த்து மயங்கி விழுந்தபோது
    உன் அழகு நிஜத் தண்ணீர் தெளித்து என்னை எழுப்பிவிட்டதாய்!

    பலநிறப் பூக்கள் வாழும் வாசப் பிரதேசம்
    மலர்களெல்லாம் வெண்மையான
    ஒரு திடீர்ப் பொழுது
    நீ வந்து கொண்டிருந்தாய் புன்னகை வெயிலெறித்தபடி!

    ஈர்ப்பு பூமிக்கு இருப்பதாக
    நியூட்டன் சொன்ன கருத்து மறுத்து
    இதுவரைப் பேசிக்கொண்டிருக்கின்றன உனது கண்கள்!

    புல்லாங்குழல் கூறியது…
    ‘என் துளைகளுக்கு உன் பார்வை மட்டும் ஊட்டினால் போதும் ‘ என!

    உப்பு மணற்காடு
    நீ சிப்பிகள் சேர்த்துக் கொண்டிருந்த ஓர் அந்தி
    என்னைப் போல ஒரு புலவன் கண்டு சொன்னான்
    ‘முத்து,
    சிப்பிகள் பொறுக்கிக் கொண்டிருக்கின்றது’ என!

    தென்றல் விசாரணை நடத்தியது
    ‘எந்தச் செடியில்
    எந்தக் கிளையில்
    நீ மலர்ந்து உதிர்ந்து நடந்து வந்தாய்’ என்று!

    எறும்புக் கூட்டம் உன்னை இழுத்துச் செல்லலாம்
    அல்லது
    கடத்திவிடலாம்
    எவரும் எவையும்
    இதுவரை ஏறாத இனிப்பு மலையென்று! 

    நிலா
    ஓய்வு தேவையெனக் கேட்ட வேளை
    உன்னைக் காட்டியதாம் பதிலீடாய்! 

    காக்கையொன்று
    உன்னைக் கடந்து சென்ற நேரம் மயிலானதும்
    நீ ஆற்றில் கால்கள் நனைத்தபோது பொங்கிச் சூடானதும்
    எப்போதோ அறிந்திருந்தேன்
    நான் என் காதலுடன்!

     

     

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 97

    க. பாலசுப்பிரமணியன்

    உள்ளுணர்வு சார்ந்த நுண்ணறிவு (Intra-personal intelligence)

    education-1-1

    ஒரு முறை மக்களின் தொழில் திறனையும் உற்பத்தித் திறனையும் மேம்படுத்த உதவும் வண்ணம் ஒரு மேலாண்மை பற்றிய கல்வியில் பட்டம் பெற்ற இளைஞன் கடற்கரை ஓரமாக நடந்து கொண்டிருந்தான். அங்கே ஒரு படகிற்குப் பின் சாய்ந்து புகை பிடித்துக்கொண்டிருந்த ஒரு முப்பது வயது உள்ள மற்றொருவரைக் கண்டு அவரிடம் வினவினான் “இந்த நேரத்தில் இங்கே உட்கார்ந்து என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள்?”

    அதற்குப் பதிலளித்த இரண்டாவது இளைஞன் “இன்று என்னுடைய வேலை முடிந்து விட்டது. நான் ஒய்வெடுத்துக்கொண்டிருக்கின்றேன்.”

    “இப்பொழுதுதான் பகல் 12 மணி ஆகின்றது அதற்குள்ளே ஓய்வா?”

    “:ஆம். இன்றைய வேலை முடிந்துவிட்டது. இன்றைக்கான மீன்களை பிடித்து விற்று காசு சம்பாதிப்பட்டுவிட்டேன்.”

    அப்படியானால் மீண்டும் ஒரு முறை சென்று மீன் பிடித்து வந்திருக்கலாமே?

    “எதற்கு?”

    “:இன்னும் கொஞ்சம் பணம் கிடைத்திருக்கும்?

    “அப்புறம்?”

    “நிறையப் பணம் இருந்தால் நீங்கள் ஒரு புதிய மாதிரி வேகமாகச் செல்லக்கூடிய படகை வாங்கியிருக்கலாம்

    ‘பிறகு?’

    :இன்னும் நிறைய மீன்களை பிடித்திருக்கலாம். அதனால் இன்னும் கொஞ்சம் பணம் கிடைத்திருக்கும் ?

    “பிறகு?”

    “நான்கு ஐந்து படகுகளை வாங்கித் தொழிலை மேம்படுத்தியிருக்கலாம்

    “பிறகு?””

    “ஒரு அழகான வீடு கட்டிக்கொண்டு பணக்காரனாக வாழலாம் ?

    “பிறகு?”

    “எல்லாக் கவலைகளையும் மறந்து கடலோரமாக அமர்ந்து புகை பிடித்துக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கலாம்”

    “நண்பா,  அதைத்தானே நான் இப்பொழுது செய்துகொண்டிருக்கின்றேன்.. இதற்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்?”   என்று பதில் சொன்னான்.

    நாம் யார்? நமக்கு என்ன தேவை? வாழ்க்கையில் நம்முடைய குறிக்கோள் என்ன? நம்முடைய இலக்கு என்ன? இந்த இலக்கை நோக்கிச் செல்ல நாம் என்னென்ன செய்ய வேண்டும்?

    நம்முடைய மகிழ்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பாதை எங்கே உள்ளது? எப்படிப்பட்ட பாதை? அதில் உள்ள கரடு முரடுகளைக் கடக்க என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடும் உள்ள நிலையை மேம்படுத்துவதே உள்ளுணர்வு சார்ந்த நுண்ணறிவு.

    இந்த நுண்ணறிவு ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்டதாகவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் அமைகின்றது. பல நேரங்களில் இந்த நுண்ணறிவின் அடிப்படையில் அவர்கள் பிறந்த, வாழ்ந்த சமுதாய பொருளாதார மற்றும் கலாச்சார சூழ்நிலைகள் காரணமாக அமைந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.

    இந்த உள்ளுணர்வு சார்ந்த நுண்ணறிவில் சிறந்தவர்களாக இருக்கின்றவர்களுடைய பொதுவான குணங்கள் ழ்க்கண்டவையென அறியப்பட்டுள்ளது

    1.  தனிமை
    2.  சுய சிந்தனை
    3. இலக்குகளை நோக்கி செல்லும் தன்மை
    4. சுய விழிப்புணர்வு
    5. ஆழ் சிந்தனை, தியானம்
    6. மௌனம்
    7. தன்னிச்சையாகச் செய்தல்
    8. புதிய நோக்கு, புதிய பாதைகள் வகுத்தல்
    9. மற்றவர்களோடு ஒட்டாமல் தனிவழி வகுத்தல்
    10. உள்நோக்கு மனப்பான்மை

    இந்த நுண்ணறிவில் சிறந்தவர்கள் பிற்காலத்தில மேற்கொள்ளக்கூடிய  தொழில்கள்

    1. தத்துவ சிந்தனையாளர்கள்
    2. ஆராய்ச்சியாளர்கள்
    3. திட்ட வரைவாளர்கள்
    4. கருத்து கணிப்பாளர்கள்
    5. கவிஞர்கள், எழுத்தாளர்கள்
    6. மன நல மருத்துவர்கள்

    பொதுவாக பள்ளிகளில் சில மாணவர்கள் தனியாக இருப்பதும், யாரோடும் அதிகமாகப் பழகாமல் இருப்பதும், படிப்பில் மட்டும் தங்கள் இலக்கையும் குறியையும் வைத்துக்கொண்டு மற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதும், அதிகமாகப் பேசாமல், சிரிக்காமல் தன்னிச்சையாக இருப்பதும் இந்த நுண்ணறிவைச் சார்ந்தவர்களுக்கான அறிகுறிகள். இந்த நுண்ணறிவு ஒரு மனிதனுக்கு மிகவும் தேவையானது. இந்த உள்ளுணர்வு சார்ந்த நுண்ணறிவே தனது திறன்களையும் தனது எழுச்சிக்கான பாதைகளை வழிப்பதற்கும் உதவி செய்கின்றது. அதே நேரத்தில் இந்த நுண்ணறிவின் மேலாதிக்கம் ஏற்பட்டு மற்ற நுண்ணறிவுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் கவனித்துக்கொள்ளுதல் அவசியம்.

    ஓவியம் வரைதல், கவிதைகள் எழுதுதல். புத்தகங்கள் படித்தல் திட்டங்கள் தீட்டுதல,ஆராய்ச்சிக் கட்டுரைகள் படித்தல், சுயசரிதைகள் படித்தல் போன்ற பல ஆக்க பூர்வமான வேலைகள் மூலம் இந்த நுண்ணறிவை வளப்படுத்த முடியும்.  சமூகப் பிரச்சனைகளை பற்றி பேசுதல், கருத்துக் பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சிகள் மூலமும் இந்த அறிவை வளப்படுத்த முடியும்.

    தொடரும்

    Share
  • புதிய ஓட்டம்..!

    பெருவை பார்த்தசாரதி

     

    puthiya ottam

    புதியபழைய ஓட்டமெலாம் மனிதருக்கே உண்டு
    புவிக்கது உண்டென்றால் பூலோகம் நிலைக்காது!
    போதிய ஊதியம் கிட்டாமல் பூவுலகிலுழல்பவர்
    புதிய ஓட்டமெடுக்க நினைப்பது இயற்கைவிதியே.!
    விதிவழியே செல்கின்ற வாழ்க்கையில் எதுவுமே
    விளங்காமல் ஓடுமானுடக் கூட்டம்தான் அதிகம்!
    நாதியற்ற ஏழைக்கிது நன்றாகவே பொருந்தும்..
    நாட்டில் பாதியிதுவென கணக்கிலிது விளங்கும்!

    சின்னஞ்சிறிய எறும்பும் கரையானும் தரையினில்
    சீராகப்பரவி ஓடிக்கொண்டே இருப்பது எதற்காக?
    பின்னங் கழுத்தில் முகத்தடிசுமந்து நாளுமிங்கே
    பளுயிழுக்கும் மாட்டையும் ஒட்டகத்தையும் பார்!
    தன்னந்தனியே மண்ணிலுள ஐந்தறிவு ஜீவியெலாம்..
    தானாக ஓடுதிங்கே ஆர்தூண்டுதலும் இல்லாமல்!
    பொன்னான எதிர்காலம் புலரநீ தொடங்குமொரு
    புதிய ஓட்டம்தான் உருப்படியாய் உயரவழிசெயும்.!

    பொற்காலம் வருமென்று பொன்னான நேரத்தை
    பூராவும் வீணடிக்கும் வெட்டியிளைஞராய் இராமல்!
    கற்காமல் பலர்வாழும் சீர்கெட்ட சமுதாயமெனும்
    கட்சிகளின் சிந்தனைமழுங்கும் செயலில் புகாமல்!
    கற்காலத்தின் நிலைமை பேசிப்பேசி நேரத்தையும்
    காலத்தையும் வீணடிக்கும் மேடையில் ஏறாமல்!
    தற்கால உலகத்தில் தலைதூக்க வேண்டுமெனில்
    தகுங்கல்விபயில தகுந்த ஓட்டத்தைநீ தேர்ந்தெடு!

    ============================================

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::01-10-2017

    நன்றி படம்:: கூகிள் இமேஜ்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171001 - Aprameya

    ”சுப்ரபாதம் சொல்லுங்கோ செங்கல்நில் விட்டலர்க்கு
    அப்புறம்மால் ஆவுக்கு அளித்திடுவார்: -அப்ரமேயர்
    வாமத்தில் மத்து வலத்தில் கயிறுடன்,
    ஜாமத்து வண்ணன் ஜனிப்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • What gets Tamil audiences rolling in the aisles? Crazy Mohan knows

    Sruthi Ganapathy Raman

    ‘Return of Crazy Thieves’ is the latest sidesplitter from the Tamil playwright and movie dialogue writer

    69622-jceksteoyk-1506599554

    On April 11, 1976, Rangachari Mohan’s play Crazy Thieves in Palavakkam was premiered in Chennai through fellow playwright SV Shekar’s drama troupe Nataka Priya. The heist-gone-wrong comedy became an instant hit and gave Rangachari a new name, one he has been known by ever since: Crazy Mohan.

    Over four decades later, Crazy Mohan is still going strong, nearing almost 1,000 productions of the immensely popular Chocolate Krishna apart from headlining Return of Crazy Thieves, a sequel to the play where it all began. This apart from writing a new script based on his novella KPT Sirippu Rajan.

    “I would call writing an accident,” Mohan said, sitting beside a figurine of Krishna, a character he frequently plays in his skits, at his home in Chennai. “Usually you lose your life in an accident, but I got my life in this accident.”

    Chocolate Krishna

    Mohan’s troupe Crazy Creations, created along with his brother R Balaji in 1979, has staged numerous plays as well as tapped into the Crazy Mohan brand of comedy for television through the serials Here is Crazy and Siri Siri Crazy. Movies were the next logical step. Introduced by Kamal Haasan to the big screen, the engineering graduate has written dialogue and screenplays for numerous films, including Apoorva Sagodhargal (1989), Michael Madana Kama Rajan (1990), Sathi Leelavathi (1995), Avvai Shanmughi (1996), Kaathala Kaathala (1998) and Vasool Raja MBBS (2004). His dialogue provides wisecracking commentary on daily life. In an interview, he reveals some of his trade secrets.

    In February 1972, you wrote your first skit ‘Great Bank Robbery’ for an inter-collegiate contest.
    I was not a writer back then. My first nature is not writing. My first nature is painting. Writer Sujatha Ranganathan used to say that every writer has an inclination for painting. Probably it was that. There was no big writer in my family as well.

    Your play ‘Crazy Thieves at Palavakkam’ became an overnight sensation. Is that where it all began?
    Yes. After Crazy Thieves in Palavakkam, I had written a lot of other scripts. Katchatheevu, Cleopatra Swayamvaram are some of them. Kamal Haasan subsequently performed in my drama Yamane Nee Vazhga in Singapore, with Nagesh.

    Once that came out, Kumudam magazine featured my name and my brother Balaji’s name under “Valarndhu Varum Kalaignargal” (Budding artists). At that point of time, I never thought I would become a writer. I wanted to pursue engineering. But it became such a hit that I ultimately became a writer.

    What is the story behind your stage name?

    I wrote Crazy Thieves in Palavakkam under my name Rangachari Mohan. To my surprise, a short story that I had given to Ananda Vikatan titled Karigala Karigala was printed under the name Crazy Mohan. The name was very unfamiliar, so I asked the editor V Srinivasan as to why he had printed it that way. He told me, from now on, you are going to be Crazy Mohan. My thatha [grandfather] gave me my name and the Vikatan thata gave me my screen name.

    Here’s Crazy.

    Your first film was K Balachander’s ‘Poikkal Kuthirai’, which was based on your drama ‘Marriage Made in Saloon’. How did you become part of that project?

    Balachander at that time wanted to make a film based on a drama. He watched Marriage Made in Saloon and really liked it. You can actually consider Balachander as Columbus. He only invented the great America like Rajinikanth and Kamal. And he also invented a small island like Crazy Mohan. He had the touch of Midas.

    The young generation enjoys your comedy with the same enthusiasm as they did in the ’80s. How do you manage that?
    For every man’s success, there is a saying that there is a woman behind it. For my success, it is my joint family. I used to live with my grandparents, and I still live with my 93-year old dad, maternal and paternal aunts and uncles. If you write for your family, you will know how to write for the audience.

    Has your process changed over the years?

    Since I have written for a lot of films, I would say that it has become only easier. The screenplay quickly forms in my head. In those days when I used to write scripts, I wouldn’t know the ending. When I wrote Crazy Thieves In Palavakkam, I did not know the ending and I kept writing. I wrote Marriage Made in Saloon for over 1,500 pages. It was subsequently edited.

    The scripts I write nowadays are much shorter and my editor’s job is that much simpler. I am able to mentally form screenplays in my mind, so I can write quicker.

    But I have to say that I have lost the innocence that I had during Crazy Thieves. People think you become more intelligent as you grow up. But you actually become an idiot as you grow up. I do not have the sharpness and alertness of a young person. Kilaroli ilamai keduvadhan munnam: before the bubbling youth fades, you must acquire knowledge, said Tamil poet Nammalvar.

    What is your relationship like with Kamal Haasan?
    We used to be friendly relatives and now we are relatively friends. Coming back to the woman behind a man’s success saying, I too have a woman behind my success and it is Avvai Shanmughi (starring Haasan). If I do a drama in Chennai, he will definitely be there. The common umbilical chord between us is humour.

    https://youtu.be/uoyjLReqH70

    Avvai Shanmughi (1996).

    What gets Tamil audiences rolling in the aisles?

    We have a snobbish attitude. If Goundamani and Senthil do a comedy bit about smashing a cake on each other’s faces, we disregard it as rustic and tasteless. But if the same bit is done by Laurel and Hardy, we enjoy it. Goundamani and Senthil are a very important part of Tamil comedy.

    Which comedians inspire you?

    PG Wodehouse. It is there right in his name. He has done a PG in humour. The others are Kalki, Devan and Bhagyam Ramasamy.

    You have written comedy for television, cinema and drama. How different is each medium?

    A drama is written, whereas cinema is seen. In dramas, you cannot even see your audience after the first two rows. There is no close-up or mid-shot. The acting is only in the dialogue.

    The problem with cinema is that it is like wedding food. A lot of people come to a wedding – a BP patient, sugar patient, a Bengali. You have to think about all audiences and write the script. In cinema, you also have to think about the image of the actors while writing dialogue. But in drama, there are no such problems. But that doesn’t mean drama is easy. Drama is like home food.

    Nowadays the stand-up comedy is also evolving. When I go to the US, I myself do a bit of stand-up. I usually write about my experiences in the US.

    Do you have a favourite between the two mediums?

    I prefer drama. Drama is live. No matter how how many channels telecast a cricket match, there is nothing like watching it live from Chepauk stadium. You can also see people react live when you perform on stage.

    Michael Madana Kama Rajan (1990).

    Nearly all your female leads go by the name Janaki, whether in plays or films.

    Everybody thinks Janaki is my former lover’s name or my wife’s name. But actually, Janaki is the name of my drama teacher in school. At the age of six, she taught me the nuances of dramatics. She made me play the role of the leader Veerapandiya Kattabomman in a school play. She was probably one of the reasons I got suddenly interested in dramatics. So naming the female character Janaki was my way of giving her guru dakshinai – a token of respect.

    What is the idea behind the characters Maadhu and Cheenu in your plays?

    Humour is definitely the most effective in a pair. There is left and right in the brain and there is the yin and yang. The joining of both these things are very effective. Sujatha has written about the pair Ganesh and Vasanth in his novels and in the same way I created Maadhu and Cheenu.

    https://youtu.be/BrGGXpIRC78

    Maadhu and Cheenu in Sirithidu Seasame

    Have you ever gotten into trouble for writing comedy?

    Unless you write about politics or vulgarity, your freedom of speech will not be restricted. So I do not write politics or vulgarity. Even if I do so by mistake, Balaji will cut it out. If we have almost completed over 1,000 dramas this year with Chocolate Krishna, that is what I will call the success of Crazy Creations.

    What is your upcoming drama ‘KPT Sirippu Rajan’ about?

    It is about the past lives of kings and queens. The lives of kings and queens are not just filled with stories about the battlefield. Even they have family members and plenty of feuds. The play revolves around the personal lives of these kings and queens. In the Tamil magazine Junior Vikatan, I wrote a serial by the same name. KPT are the initials of the king.

    Thanks for the courtesy.

    https://thereel.scroll.in/852081/what-gets-tamil-audiences-rolling-in-the-aisles-crazy-mohan-knows

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (11)

     
    மீ.விசுவநாதன்
    பகுதி: பதினொன்று

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2

    விஸ்வாமித்திரர் தயரதனிடம் விடுத்த கோரிக்கை

     

    சொன்னசொலை மீறாத குலத்தினிலே வந்த
    கோவே! நற் குணக்குன்றே உன்வார்த்தை கேட்டு
    இன்னமுதைப் பெற்றுவிட்ட இன்பத்தைக் கொண்டேன் !
    என்னுள்ள எண்ணத்தைச் சொல்கின்றேன் ! எந்தன்
    இன்னலைநீ போக்கிடுவாய் என்றுன்னை நம்பி
    இப்போதே உரைக்கின்றேன் கேட்பாய்நீ ! வேள்வி
    முன்னிலையில் காவலுகுன் மூத்தமகன் தன்னை
    முகமலர்ந்து அனுப்பிடநீ முடிவெடுப்பாய் மன்னா ! (1)

    காரணத்தைச் சொல்கின்றேன் கவனித்துக் கேட்டால்
    கட்டாயம் என்சொல்லின் கருத்தினைநீ ஏற்பாய் !
    வாரணத்தை விழுங்கிவிடும் வலிமையைக் கொண்ட
    “மாரீசன், சுபாகு”வெனும் வல்லசுரர் வந்து
    காரணமே இல்லாமல் கணக்கில்லாத் துன்பம்
    காட்டிலுள முனிகளுக்கே செய்கின்றார் நித்தம் !
    பூரணமாய் ஒருயாகம் முடிப்பதற்கு மேலோர்
    பொழுதெல்லாம் தவிகின்றா(ர்) என்போலே என்றார் ! (2)

    அசுரரைநான் சாபமிட்டே அழித்திடலாம் ! ஆனால்
    அப்படியோர் கோபத்தால் தவவலிமை போகும்,
    நசுங்கிப் போய்விடுமே நாம்பெற்ற ஞான
    நலமெல்லாம் ஓர்நொடியில் என்றெண்ணி வந்தேன்
    விசும்புவரை ஓங்குபுகழ் வேந்தனுனைத் தேடி !
    வேதத்தைக் காப்பவரை வேந்தந்தான் காப்பான் !
    பசுக்களுக்கும் அந்தணர்க்கும் பார்மன்னன் தானே
    பக்கபலம்! அதனால்தான் வந்தேன்நான் என்றார். (3)

    தயரதன் மகன் இராமனை அனுப்ப மறுத்தல்

    தயரதனோ இதுகேட்டுத் தண்ணீரை விட்டுத்
    தரையினிலே தாவிவிட்ட மீன்போல வீழ்ந்தான்!
    வியர்த்தவுடல் நடுக்கமுற, “வேதவழி நிற்கும்
    விண்புகழ்சூழ் யோகியரே வேண்டாமென் பிள்ளை,
    தயவுசெய்வீர் நானேநேர் வந்துமக்கு யாகக்
    காவலாக இருக்கின்றேன், கண்மணியாம் ராமன்
    செயலறியாச் சிறுவனென்பேன்! சிந்தனையை மாற்றிச்
    செவிமடுப்பீர் என்வார்த்தை ! சேர்த்திடுவீர் என்னை !” (4)

    தயரதன் மறுப்பும் வீரமுனியின் கோபமும்

    என்றமொழி கேட்டவுடன் எரிதழலைக் கக்கும்
    இருவிழியால் தயரதனை ஏறிட்டுப் பார்த்து ,
    “கொன்றுவிட்டாய் உன்முன்னோர் குலத்தினது வாக்கின்
    குடிப்பெருமை ! குருவசிட்டன் பெருமைமிகு சீட(ன்)
    இன்றுமுதல் அப்பெருமை விட்டுவிட்டா(ன்)” என்றார் !
    இதுகேட்டு வசிட்டருடன் எழுதுவந்து, “மன்னா
    நன்றுசொல்வேன் இராமனைநீ நல்முனியின் யாக
    நலம்காக அனுப்பிடுதல் வேண்டுமெனச் சொன்னார் ! (5)

    குலகுரு வசிட்டரின் நல்லுபதேசம்

    மேலுமிவர் அஸ்திரங்கள் மேன்மையெலாம் நன்கு
    சேர்த்திருக்கும் வீரமுனி ! செய்தவத்தால் தேவர்
    மேலாக ஆனவர்தான் ! திடமாகச் சொல்வேன்
    இராமனுக்கு ஏற்றகுரு இவரென்பேன் !”என்று
    நூலறிந்த வசிட்டருமே நோய்தீர்க்கும் நல்ல
    மூலிகையின் குணம்போலக் குறிப்பறிந்து சொல்ல
    நாலுதிசை வென்றிட்ட தயரதனும் அங்கே
    ஞாயிறுவின் ஒளிவிஞ்சும் நல்மகனை இங்கே (6)

    தயரதன் ஆணைப்படி இராம, இலக்குவர்கள் சென்றனர்

    அழைத்துவர ஆளனுப்ப ஆணையும் தந்தார் !
    அப்பாவின் வார்த்தைக்கு அடிபிசகாப் பிள்ளை
    பிழையில்லா இராமனுடன் இலக்குவனும் வந்தான் !
    பெரியமுனி முன்செல்ல இருவருமே அந்த
    மழைக்கால மேகத்தின் வழியொற்றிக் கொண்டு
    மகத்தான அம்பு,வில் தோளுடனே சென்றார் !
    தழைத்துவரும் பூச்செடிக்குத் தண்ணீரைப் பாய்ச்சும்
    தகைமையெனத் தவமுனியும் இருவரையும் காத்தார் ! (7)

    பலா – அதிபலா மந்திர உபதேசம்

    மாலைவேளை சரையூவின் வடகரைக்கு வந்து
    மனத்தூய்மை கொள்வதற்கு மந்திரங்கள் சொல்ல
    சோலையின் இளங்காற்று பூக்கொய்து போட
    சுகமான வேளையிலே “பலாதிபலா” என்னும்
    மேலான மந்திரத்தை இராமனுக்குத் தந்து
    மிகையில்லை மேதினியில் இனியென்றும் மிக்க
    சீலமுடன் திகழ்வாய்நீ சத்தியமென் வாக்கு
    எப்பகையும் உன்முன்னே எரிந்துவிடு மென்றார் !

    (தர்ம சரிதம் வளரும்)

    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 19, 20, 21, 22 பகுதிகள் நிறைந்தது)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170930 Ashtabhuja Lakshmi

    கத்தி , உடுக்கை,கபாலம், திரிசூலம்
    சக்தி கரமுற்ற ஆயுதங்கள் -பக்தி
    இலாதோர் இதயச் சிலாவைப் பிளந்து
    பலாவின் சுளையைப் புதைப்பு….!
    அபிராமி அந்தாதி படித்த பாதிப்பில்….!

    “நீலி மகிடன்மேல் நின்றவள், கொன்றவள், –
    காளி சிவந்து கருத்தவள்கா -பாலியாய் –
    நான்முகன கந்தை நமச்சிவாயர் கொய்திட –
    தான்உகந்துஏற் றாள்கைத் தலம்”….கிரேசி மோகன் ….!

    Share
  • மெக்சிக்கோவில் இரண்டு வாரத்தில் அடுத்தடுத்து நேர்ந்த இருபெரும் பூகம்பங்கள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    +++++++++++++++++

    Image result for mexico earthquake damage

    பூமகள் சற்று தோளசைத்தாள் !
    தாமாக வீழ்ந்தன
    மாளிகைகள் !
    மாந்தர் மரித்தார்
    சிதைவு களில்
    சிக்கினர் ! செத்தனர் ! புதைந்தனர் !
    கடற்தட்டு
    தடம்மாறிக் கால் உதைத்தால்
    உடனே சுனாமி எழும் !
    பூகம்ப நர்த்தனம் நகர்த்திடும்
    பூகோள அச்சை !
    காலம் மாறும் ! பருவம் மாறும் !
    நாளின் நீட்சி குன்றும் !
    கனல் திரவம் அழுத்தமாகிக்
    குப்பெனப் பொங்கும் எரிமலைகள் !
    சூழ்வெளி
    பாழாய்ப் போக
    ஆழ்ந்த பூமிக் குள்ளும்
    ஊழல் போர்தான்
    சூழ்ந்துள்ள தப்பா !
    எங்கெங்கு வாழினும்
    இன்ன லப்பா !
    ஏழு பிறப்பிலும் மனிதருக்குத்
    தொல்லை யப்பா !
    ஊழிக் கூத்தின்
    பிரளயக் கூத்து அடுத்தடுத்து
    அரங்கே றுதப்பா !
    முடுக்கி விட்ட  பூகோளம்
    உடுக்கடிக்கும்
    ஊழியின் மேளம் !

    +++++++++++++++++++

    2017 Central Mexico earthquake in México City.webm

     https://youtu.be/Z8JF2PthRkg

    https://youtu.be/kG3H5mQ5kwc

    https://youtu.be/AlrVYd6RPdw

    https://www.msn.com/en-ca/news/other/dogs-used-in-quake-search-in-mexico-city/vp-AAsmEfJ

    2017 செப்டம்பர் மாதத்தில் மெக்சிக்கோ நாட்டில் அடுத்தடுத்து இருபெரும் பூகம்பங்கள் நேர்ந்து, மெக்சிக்கோ நகரிலும், சுற்றியுள்ள மற்ற நகரங்களில் உயிர்ச் சேதங்களும், பொருட் சேதங்களும் பேரளவில் விளைந்துள்ளன.  முதலில் செப்டம்பர் 7 ஆம் தேதியில் 8.1 M அளவு அசுரப் பூகம்பம் சியாபாஸ் கடற் பகுதியைத் தாக்கியுள்ளது.  100 பேர் மாண்டனர்.  பன்மாடி அடுக்கு மாளிகைகள், வீடுகள் பற்பல நொறுங்கித் துண்டாக்கப் பட்டன. அது நேர்ந்து இரண்டு வாரத்திற்குள் [செப்டம்பர் 19 இல்] 400 மைல்  தூரத்தில் [650 கி.மீ.] 7.1 M அளவில் அடுத்த பூகம்பம் தாக்கி 342 பேர் மாண்டனர். 6000 பேர் காயமுற்றனர்.

    1985 ஆண்டில் மெக்சிக்கோவில் முன்பு நேர்ந்த பூதப்பெரும் பூகம்பத்தில் 10,000 பேர் உயிரிழந்தார்.  அது முதல் மெக்சிக்கோ அரசாங்கம் பூகம்ப எச்சரிக்கைப் பயிற்சி பொது மக்களுக்கு அளித்து வருகிறது. 2017 செப்டம்பர் 19 தேதிப் பூகம்ப எழுச்சிக்கு 2 மணிநேரத்துக்கு முன்னர்தான் விந்தையாக எச்சரிக்கைப் பயிற்சி அளிக்கப் பட்டிருக்கிறது.

    தீக்கனல் வளையத்தில் [Ring of Fire] சிக்கியுள்ள உலக நாடுகளில், ஜப்பான், பெரு, மெக்சிக்கோ, இந்தோனேஷியா ஆகிய நான்கு நாடுகளிலே அடிக்கடி பூகம்ப நடுக்கங்கள் நேர்ந்து, உயிர்ச் சேதமும், பொருட் சேதங்களும் பேரளவு விளைந்து வருகின்றன. இவற்றில் மெக்சிக்கோ நாடு மட்டும் குறுக்கிடும்  மிகவும் சிக்கலான பல்வேறு பிறழ்ச்சித் தட்டுகள் [Tectonic Plates] மீது அடிக்கடி நடுங்கிக் கொண்டிருக்கிறது.

    Earthquake 5 km ENE of Raboso, Mexico, 2017.jpg

    Image result for North American and Pacific Tectonic Plates

    பசிபிக் தட்டு, கோகோஸ் தட்டு, ரிவேரா தட்டு, கரீபியன் தட்டு, வட அமெரிக்கன் தட்டு ஆகிய ஐந்து பிறழ்ச்சித் தட்டுகள் அடிக்கடித் தாலாட்டும் மிதப்புப் பகுதியாக மெக்சிக்கோ நாடு பள்ளி கொண்டுள்ளது.  இந்த ஐந்து கரத் தட்டுகள், வெவ்வேறு திசைகளில் இயங்கி, நில நடுக்கம் உண்டாக்கி நாள் ஒன்றுக்குச் சராசரி 40 பூகம்பங்கள் நேர்கின்றன !

    மெக்சிக்கோ நகரம் மெதுமணல் [Soft Soil with Sand] கொண்ட காய்ந்த ஏரிப்படுகை மீது  வீடுகள் நிறுவப்பட்டுள்ளது.  ஆதலால் நில நடுக்க சமயங்களில் சேதாரம் பேரளவு உண்டாகிறது.   பூகம்பம் ஏற்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு [செப்டம்பர் 28 இல்] குறைந்தது 333 பேர் உயிர் இழந்ததாகத் தெரிகிறது.  சுமார் 5400  பேர் காயப் பட்டனர்.  ஆயினும் 38 நபர் இன்னும் காணப்பட வில்லை.

    Image result for mexico tectonic plates

    Image result for mexico earthquake damage

    ++++++++++++++++++++++++++++++

    2014 இல் சில்லியில் பூகம்பம்

    Location

    உலுக்கிச் செல்லும் ஊழியின் கை
    உலுக்கி உலுக்கி மேற் செல்லும் !
    அழுதாலும், தொழுதாலும் ஓயாதவன் கை !
    குலுக்கிய பின் மீண்டும் குலுக்க வரும் !

    புதிய உமர் கையாம்

    unnamed

     

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2tjIczIHkkA

    http://www.youtube.com/watch?v=_YENHB0Im2I&feature=player_embedded

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=qAqubO0R4Z0

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kg67JKzoXmY

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ERVa7MZP87Y

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E426goB47kE

    http://www.bbc.com/news/world-latin-america-26862237

    Earthquake damage -5

     

    Image result for mexico earthquake damage

    Location of Warning

     

    தென் அமெரிக்காவை அருகிய பசிபிக் கடற்தள அடித்தட்டு “மாஸ்கா”  [Mazca Tectonic Plate]  ஆண்டு ஒன்றுக்குச் சராசரி 3 அங்குல நகர்ச்சியில் பிறழ்ச்சி அடைகிறது.   முதல் நடுக்கத்திற்குப் பிறகு  அடுத்த ஓரிரு வாரங்கள் தொடரப் போகும் “பின்னதிர்ச்சியே”  [Aftershocks] மிக்கச் சேதாரம் அளிக்க வல்லது.    அதுபோல் ஓரிரு வாரங்களுக்கு முன்பே பூகம்பம், அதே தளத்தில் நேர்ந்த முதல் நடுக்கத்துக்கு முன்னதிர்ச்சியாய் [Beforeshocks]  வந்துள்ளதையும் குறிப்பிட வேண்டும்.

    பீட்டர் ஸ்பாட்ஸ்  [கிறிஸ்டியன் விஞ்ஞானக் கண்காணிப்பு வெளியீடு]

    “உலகில் நிகழும் மாபெரும் நில நடுக்கங்கள் பல்நூறு கி.மீடர் பாறைகளைப் பூமிக்குள் நகட்டிப் பூகோளத்தின் பளுச் சமன்பாட்டை வேறிடத்துக்குத் தள்ளிவிடும்.  அதன் விளைவால் பூமியின் சுழற்சி பாதிக்கப்படும்.  (சில்லியின் 8.8 ரிக்டர் அளவுப் பூகம்பத்தில்) ஒரு நாளின் நீட்சி 1.26 மைக்ரோ விநாடி குன்றி விட்டது.  பூகோள அச்சு பளுவைச் சமப்படுத்த 2.7 மில்லியார்க் விநாடி ( 8 செ.மீடர்)  (3 அங்குலம்) சரிந்து விட்டது.”

    ரிச்சர்டி கிராஸ் (Richard Gross, Geophysicist NASA Jet Propulsion Lab, California)

    “இந்து மாக்கடலில் 2004 ஆண்டில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு இந்தோனேசியப் பூகம்பத்தில் மாபெரும் சுனாமி எழுந்து ஒரு நாளின் நீட்சியை 6.8 மைக்ரோ விநாடிகள் குன்ற வைத்துப் பூகோள அச்சும் 2.3 மில்லியார்க் விநாடி (milliarc-sec)  (7 செ.மீ) (2.5″) மாற்றம் அடைந்தது.”

    நாசா விஞ்ஞானிகள் அறிக்கை

    Ring of Earthquake Fire

     

    தென்னமெரிக்காவின் சில்லி நாட்டில் மீண்டும், மீண்டும் பேரிடர்ப் பூகம்பங்கள் ! 

    2014 ஏப்ரல் முதல் தேதியன்று 8.2 ரிக்டர் அளவுப் பூகம்பம் இரவில் ஏற்பட்டு, 7 அடி [2 மீடர்]  உயரச் சுனாமியும் எழுந்து, அரசாங்கம் எச்சரிக்கை விடுத்து, கடற்கரை நகரான லிகுயிக் [[Lquique] பகுதியில் 900,000 மக்கள்  இடப் பெயர்ச்சி செய்ய நேர்ந்தது.   அடுத்து 24 மணி நேரத்தில் அதே பகுதியில் 7.6 ரிக்டர் அளவு பின்னதிர்ச்சியாய் [Aftershocks] 14 மைல் கடல் ஆழத்தில் தாக்கியது !   8.2 அளவு முதல் பூகம்பம் 12.5 மைல் கடல் ஆழத்தில் நேர்ந்தது.  லிகுயிக் நகரின் ஜனத்தொகை : 200,000.   விபத்தில் ஆறு பேர் உயிழந்தார்.  நிலநடுக்கத்தில் 2600 இல்லங்களுக்கு மேலாகச் சேதாரம் ஏற்பட்டது.   40,000 பேருக்கு மின்சாரப் பரிமாற்றம்  தடைப்பட்டது.  வட கரைப் பகுதிகளில் மீனவர் படகுகள் பல  தகர்க்கப் பட்டன.

    அந்த நிகழ்ச்சி நேர்வதற்கு முன்பு அதே தொடர் முறிவுப் பகுதியில் உள்ள பனாமா, காலிஃபோனியா பூதளங்களில் நிலநடுக்கம் உண்டானது.  பனாமா கால்வாய் போக்குவரத்து இயங்கும் பகுதியில் 6.2 ரிக்டர் அளவும், லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலும் பூகம்பம் உண்டாகி யுள்ளது.  2010 ஆண்டு சில்லியில் நேர்ந்த 8.8 ரிக்டர் பூகம்பத்தில் சுமார் 700 பேர் மாண்டனர்.   அப்போதைய கோர நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட பண விரையம் : 30 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப் படுகிறது !  இப்போதைய சேதாரத்தால்  நிதியிழப்பு இத்தனை அளவு பெருந் தொகை இல்லை என்று  தெரிகிறது.

     

    Panama Canal on the Fault Line

    சில்லி பெரு நடுக்கத்துக்கு இரண்டு வாரங்களுக்கு  முன்பே 7.6 அளவில் ஒரு முன்னதிர்ச்சியும் [Beforeshocks], நேர்ந்த 24 மணி நேரத்துக்குள்  6.1 அளவில் பின்னதிர்ச்சியும் [Aftershocks] நிகழ்ந்ததும் குறிப்பிடத் தக்கவை.  பின்னதிர்ச்சி பசிபிக் கடலில் கரையிலிருந்து 14 மைல் தூரத்தில், 12 மைல் கடல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாய்க் கணிக்கப் படுகிறது.  1960 இல் சில்லியில் நேர்ந்த 9.5 அளவு மிகப்பெரும் பூகம்பத்தில் 1655 பேர் மாண்டனர் !

    நிலநடுக்கம் நேர்ந்த இம்மூன்று பகுதிகளும் [காலிஃபோர்னியா, பனாமா, சில்லி நகர்ப் புறங்கள்]  பூகம்ப அரங்குகள் கொண்ட “தீக்கனல் வளையத்தில்” [Ring of Fire]  படிந்துள்ளன.  உலகில் ஏற்பட்ட 90% நில நடுக்கங்கள் [எண்ணிக்கை : 81] இந்த தீக்கனல் வளையத்தில்தான்  நேர்ந்துள்ளன என்று அமெரிக்கன் பூதளவியல் அளப்பகம் [United States Geological Survey] கூறுகிறது !  சில்லியில் நேர்ந்த நிலநடுக்கம் பசிபிக் கடற்தள அடியில் உள்ள  7000 மைல் நீளமுள்ள  நாஸ்கா அடித்தட்டு முறிவில் [Nazca Tectonic Fault Plate] ஏற்பட்டுள்ளது.

    உலகில் மிகப்பெரும் பூகம்பப் பேரிடர்கள்  கடல் சூழ்ந்த அடித்தட்டுப் பெயர்ச்சித் தளங்களிலேதான் நிகழ்கின்றன !   அந்த அடித்தட்டுப் பிறழ்ச்சிகளின் இடையே நசுக்கப்படும் நீர் மண்டலம் அழுத்தமாகிப் பிளவுச் சேதாரங்களில் பன்மடங்கு அதிகமாகின்றன.  2010 பிப்ரவரி 27 இல் நேர்ந்த சில்லி மாபெரும் பூகம்பத்தைப், பூதளவியல் ஆராய்ச்சி மைய ஜெர்மன் விஞ்ஞானிகள் ஆய்ந்து,  அடித்தட்டுகளுக்கு இடையே நிரம்பி  நேரும் நீரழுத்தம் சிதைவுகளில் பெரும்பங்கு ஏற்றுள்ளதாகக் கண்டுள்ளார்கள்.

     

    Earthquake damage -2

     

    Earthquake damage -3

    “பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது !  பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் பிளவுபட்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை பெயர்ச்சி ஆகியுள்ளன!  பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crusts] பூமியின் உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மிதந்து மெதுவாக நிலப் பெயர்ச்சி அடைகின்றன!  கண்டங்களின் நிலப் பெயர்ச்சிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்சிக்கும் [Continental Drift & Plate Tectonics] பூர்வப் படிவப் பதிவுகள் [Fossil Records] சான்றுகள் காட்டி நிரூபணமும் அளிக்கின்றன”.

    டாக்டர் ஆல்ஃபிரெட் வெஜினர், ஜெர்மன் பூதளவாதி [Dr. Alfred Wegener (1880-1930)]

    சில்லியின் பூகம்பத்தால் பூகோளத்தின் அச்சு நகர்ந்திருக்கலாம் !

    தென்னமெரிக்காவின் சில்லியில் பிப்ரவரி 27 இல் நேர்ந்த 8.8 ரிக்டர் அளவு அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்து ஒரு நாளின் மணிக்கணக்கைக் குறைத்திருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கணினிப் போலி மாடலின் (Computer Simulation) மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். “உலகில் நிகழும் மாபெரும் நில நடுக்கங்கள் பல்நூறு கி.மீடர் பாறைகளைப் பூமிக்குள் நகட்டிப் பூகோளத்தின் பளுச் சமன்பாட்டை வேறிடத்துக்குத் தள்ளிவிடும்.  அதன் விளைவால் பூமியின் சுழற்சி பாதிக்கப்படும்.  (சில்லியின் 8.8 ரிக்டர் அளவுப் பூகம்பத்தில்) ஒரு நாளின் நீட்சி 1.26 மைக்ரோ-செகண்டு குன்றி விட்டது.  பூகோள அச்சு பளுவைச் சமப்படுத்த 2.7 மில்லியார்க் விநாடி (milliarc-sec) ( 8 செ.மீடர்) (3 அங்குலம்) சாய்ந்து விட்டது.” என்று நாசா ஜெட் உந்துக்கணை பூதளவியல் விஞ்ஞானி, ரிச்சர்டி கிராஸ் கூறுகிறார்.

     

    இம்மாதிரிப் பூகம்ப மாடல்களைக் கணினிப் போலி மாடல் மூலம் காணலாம்.  ஆனால் அந்த மிகச் சிறிய பூகோள விளைவுகளை கருவிகள் மூலம் உளவி அளப்பது மிகச் சிரமமானது.  சில மாறுதல்கள் மட்டும் வெளிப்படையாகத் தெரிபவை.  “அருகில் உள்ள சில தீவுகள் நகட்டப் படலாம்,” என்று பாதிக்கப் பட்ட தளங்களை உளவு செய்த பிரிட்டன் லிவர்பூல் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆன்டிரியாஸ் ரியட்பிராக் (Andreas Rietbrock) கூறுகிறார்.  சில்லியின் மிகப் பெரிய நகரம் கன்செப்ஷன் (Concepcion) கரைக்கு அப்பால் உள்ள ஸான்டா மரியா தீவு (Santa Maria) பூகம்பத்தால் 2 மீடர் (6 அடி) உயர்ந்திருக்கும் என்றும் கூறுகிறார்.  தீவில் காணப்படும் பாறைகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட பூகம்பங்களால் நேர்ந்த மேல்மட்ட நகர்ச்சியை நோக்கிக் காட்டின என்றும் கூறுகிறார்.

    பூகம்பத்தின் பனிவழுக்கு விளைவு என்றால் என்ன ?

    பிரிட்டிஷ் புவியியல் தள ஆய்வு நிபுணர் டேவிட் கெர்ரிட்ஜ் (David Kerridge) இதைப் ‘பனி வழுக்கு விளைவு’ (Ice Skater Effect) என்று குறிப்பிடுகிறார்.  அதாவது பனி வழுக்குத் தளத்தில் வட்டமிடும் ஒரு பெண் தன் கரங்களை உள்ளே இழுத்துக் கொள்ளும் போது அவளது சுற்று வேகம் மென்மேலும் மிகையாகிறது.  அதுபோல் பூகோளம் சுற்றும் போது அதன் உட்பளு நகர்வதால் அதன் சுழற்சி வேகம் மாறுகிறது என்று டேவிட் கெர்ரிட்ஜ் கூறுகிறார்.

    Earthquake damage -4

    “பூகம்ப மானது ஐயமின்றிப் (பளுவை நகர்த்தி) பூகோளத்தை ஒரு வளையமாக்கி ஓர் ஆலய மணி போல் ஆக்கி விட்டது,” என்று உதாரணம் கொடுக்கிறார். ஆலய மணியின் நடுத் தண்டு இங்குமங்கும் நகரும் போது மணிச் சிமிழும் அதற்கேற்பச் சாய்கிறது.  மணிச் சிமிழின் அச்சும் சரிகிறது. “இந்து மாக்கடலில் 2004 இல் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு இந்தனேசியப் பூகம்பத்தில் மாபெரும் சுனாமி எழுந்து ஒரு நாளின் நீட்சியை 6.8 மைக்ரோ விநாடிகள் குன்ற வைத்துப் பூகோள அச்சும் 2.3 மில்லி வளைவி விநாடி (7 செ.மீ) (2.5″) மாற்றம் அடைந்தது.” என்று நாசா அறிக்கை ஒன்று கூறுகிறது.  இம்மாதிரி மாற்றங்கள் பூமியில் விளைந்து அடுத்து மாறுவது வரை அப்படியே தொடர்கின்றன !  மேலும் பூமியில் அத்தகைய சிறு மாறுபாடுகள் சூழ்வெளி வாயு மண்டலத்தில் நேரும் பெரும் மாறுபாடுடன் இணைந்து கொள்கின்றன என்று அறியப் படுகின்றது.

    History of Chile Earthquakes

    சில்லியின் நில நடுக்கம் எவ்விதம் புவி அச்சை மாற்றியது ?

    சமீபத்தில் சில்லியில் நேர்ந்த 8.8 ரிக்டர் அளவுப் பூகம்பம், உட்தளப் பளுவை உள்ளே தள்ளி இருந்தால் அம்மாற்றம் புவி அச்சை நகர்த்தி இருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்.  ஆலய மணி அடிக்கும் போது மணித் தண்டு மையத்தை நோக்கி வரும்போது மணிச் சிமிழும் சாய்கிறதல்லவா ?  அதை மூட்டி விடுவது பூமியின் ‘அடித்தட்டு நகர்ச்சி இயக்கமே’ (Plate Tectonics Interactions).  வெவ்வே றான அடித்தட்டுப் பளுக்களின் தனித்துவ நகர்ச்சியே  நில நடுக்கத்தை உண்டாக்குகிறது.  மெதுவாகப் புவி அச்சு பம்பரம் போல் வட்டமிடுவதே ‘அச்சு நகர்ச்சி’ என்று கூறப்படுகிறது. (The Shift of the Earth’s Axis is called “Precession”). பூமி தன்னைத் தானே சுற்ற 24 மணி நேரம் ஆகிறது.  பூமியின் சாய்ந்த அச்சு நகர்ச்சியால் மெதுவாக ஒரு வட்டமிட சுமார் 25800 ஆண்டுகள் ஆகின்றன.  அச்சு நகர்ச்சி புவிச் சுற்றில் அடித்தட்டு ஆட்டப் பளுத் தள்ளுதலால் நிகழும் ‘நெம்பு மாறுபாட்டால்’ (Change in Torque) உண்டாகிறது.  அதனால் புவி அச்சுக் கோண வேகமும் (Angular Velocity) மாறுகிறது.

    உதாரணமாக இரண்டு மெல்லட்டைப் புத்தகங்களை எதிர் எதிரே வைத்து ஒன்றை ஒன்று நெருங்கச் செய்வோம்.  சில சமயம் புத்தகத் தாள்கள் ஒன்றுக்கு அடியில் ஒன்றாய்ச் சுமுகமாகச் சொருகிக் கொள்ளலாம்.  அல்லது ஒன்றுக்குள் ஒன்று நுழைய முடியாது கட்டுத் தாள்கள் சுருட்டிக் கொண்டு புத்தக இடத்தை மாற்றலாம்.  இந்தப் புத்தகங்களே புவிக்குப் பளுவாய் அமைந்துள்ள அடித்தட்டுகள் (Tectonic Plates) என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  அவ்விதம் அடித்தட்டுகள் நெருங்கும் போது பூமியின் உட்பளு இடம் மாறுகிறது.

    சில்லி நாட்டின் பல மைல்களுக்குக் கீழே நாஷ்கா அடித்தட்டு, தென் அமெரிக்க அடித்தட்டு   (Nazca Plate & South American Plate) என்று இரண்டு அடித்தட்டுகள் ஆண்டுக்கு 7 செ.மீடர் வேகத்தில் ஒன்றை ஒன்று நெருங்கி வருபவை.  அவை ஒன்றின் மேல் ஒன்று குதிரை ஏறும் போது நில நடுக்கம் உண்டாகிறது.  அப்படி ஏறும் போது மேலும் கீழும் ஆடும் ஸ்பிரிங் போல் (Spring Wire) அடித்தட்டுகள் குதிக்கின்றன.  அந்த அதிர்வலைகளே நில நடுக்கமாக பூமியின் தளப்பகுதியில் மேலும் கீழும் தாவி அல்லது பக்க வாட்டில் எதிர் எதிராய் நகர்ந்து வீடுகளை இடிக்கிறது, பாலங்களை உடைக்கிறது, வீதிகளைப் பிளக்கிறது !

    Locaton of Chile Earthquake

    பூகோள அதிர்ச்சிகளில் என்ன நிகழ்கின்றன ?

    பூகம்பத்தின் போது பொதுவாக நேரும் விளைவுகள் :

    1.  புவி அடித்தட்டுகள் நகர்ச்சி :  நாஷ்கா தென் அமெரிக்க அடித்தட்டுகள் மோதி ஒன்றின் மேல் ஒன்று ஏறுதல் அல்லது, அடித்தட்டுகள் எதிர் எதிர் உராய்வு.  அல்லது அடித்தட்டுகள் மேல் கீழ்ச் சரிவு.

    2.  அசுரப் பூகம்பம் ஏற்படுதல் : உதாரணம் சில்லியின் 8.8 ரிக்டர் அளவுத் தீவிரம். (பிப்ரவரி 27, 2010)

    3.  பூமியின் உட்பளு தள்ளப்படுதல் :  பளுக் கடத்தல் நில நடுக்கத் தீவிரத்தைச் சார்ந்தது.

    4.  புவி அச்சு சாய்வு :  பளுவைப் பொருத்தும், இட நகர்ச்சியைப் பொருத்தும் அச்சின் சரிவு மாறுபடும்.

    5.  புவி அச்சுக் கோணத்தின் வேகம் மாறுபடுதல் (Angular Velocity Changes).

    சுருங்கச் சொன்னால் பூகம்பத்தின் போது நேரும் பளுத் தள்ளல், இடமாறுபாடு, வேகம் ஆகியவை ஈடுபாடு கொண்டு புவி அச்சைத் திரிபு செய்கின்றன.  பூகம்பங்கள் ஏற்படும் போது இவ்விதம் பன்முறைப் பூமியின் வரலாற்றில் புவி அச்சின் சரிவு மாறுபட்டுள்ளது.

    ++++++++++++++++++++++++++++

    இமாலய மலைச் சரிவுகளை ஆட்டிய நில அதிர்ச்சிகள்

    விடுதலை அடைந்த பிறகு 2005 அக்டோபர் 8 ஆம் தேதி முதன்முதல் வரலாற்றில் மிகக் கோரமான ஓர் அசுரப் பூகம்பம் பாகிஸ்தான் வடகிழக்குப் பகுதியை 7.6 ரிக்டர் உச்ச அளவில் குறைந்தது 140 தடவைகள் குலுக்கி ஆட்டி பெரும் காங்கிரீட் கட்டிடங்களைக் கூட கீழே தள்ளிச் சிதைத்து விட்டது!  பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20, 2005] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது.  குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவித்தார்கள்!  இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது.  2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது!  2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர்!  அரை மில்லியனுக்கு மேற்பட்டவர் தமது இல்லங்களை இழந்தனர். 1991 ஆம் ஆண்டு அடித்த சூறாவளிப் பேய்மழையில் பங்களா தேசப் பகுதிகளில் மட்டும் சுமார் 140,000 மக்கள் மடிந்தனர் என்று அறியப்படுகிறது.

    நிலையற்று நடுங்கும் இமய மலைத் தொடர்ச்சிகள்

    பூகோளத்தில் உள்ள நீர்ப் பரப்பில் அட்லாண்டிக் கடலின் அகற்சி நீளமாகி வருகிறது!  பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது!  நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆ·ப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது!  ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன!  வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன!  அமெரிக்காவில் காலி·போர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டி ருக்கிறது!  இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன!  தென்புறத்தில் உள்ள இந்தியக் கடற்தட்டும், வடக்கில் இருக்கும் யுரேசியத் தட்டுடன் முட்டி மோதிக் குதிரை ஏறி, நிலநடுக்கம் உண்டாவது அடிக்கடி நேர்ந்து வரும் இயற்கையின் அபாயத் திருவிளை யாடல்கள்!

     

    அந்த நகர்ச்சி நியதியில் இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 1.6 அங்குலம் [40 மில்லி மீடர்] வடபுறம் நோக்கித் தள்ளப்படுகிறது!  இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிருக்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது!  அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன.  இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத் தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது!  இந்த நியதிதான் “தட்டுக் கீழ்நுழைவு” [Plate Subduction] என்று சொல்லப்படுகிறது. இரண்டு தட்டுகளுக்கு இடையே நிகழும் இந்த குவியழுத்த நகர்ச்சியால் [Compressive Motion] இடை நழுவல் [Slip] ஏற்பட்டுப் பூகம்பங்கள் உண்டாக்கும் புவித்தட்டு உந்துப் பழுதுகள் [Thrust Faults] அமைகின்றன. அவற்றில் நமக்கு நன்கு அறிமுகமான முப்பெரும் பழுதுகள்: 2004 இல் சுனாமி உண்டாக்கிய இந்தோனேசியா கடற்தட்டுப் பழுது, கலி·போர்னியாவின் ஆண்டிரியா பழுது,  இமயமலைத் தொடரின் இமயப் பழுது ஆகியவை முக்கியமானவை.

     

    உலகத்தில் நேர்ந்த பேரிடர் நிலநடுக்கங்கள்

    உலகத்தில் நேர்ந்த பேரிடர் நிலநடுக்கங்கள்

    2010 ஆண்டில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் குடிமக்கள் வசிக்கும் உலகப் பகுதிகளில் பல நில நடுக்கங்கள் நேர்ந்துள்ளன.  நமக்கு வரலாறு அறிந்த காலம் முதல் உலகில் ஏற்பட்ட எரிமலைகள், நில நடுக்கங்கள் செய்த கோர விளைவுகளைப் பதிவு செய்து வந்திருக்கிறோம்.  சைனா கிங்கை மாநிலத்தில் (Qinghai) ஏப்ரல் 14 இல் 6.9 ரிக்டர் அளவில் ஒன்று, எப்ரல் 5 இல் மேற்கு மெக்ஸிகோவில் 7.2 ரிக்டர் அளவில் ஒன்று, ஜனவரி 13 இல் ஹெய்தியில் 7.0 ரிக்டர் அளவில் ஒன்றும், பிப்ரவரி 17 இல் சில்லியில் 8.8 ரிக்டர் அளவில் ஒன்றும் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவை.  சில்லியின் கடற்கரைப் பகுதியில் மட்டும் 1973 முதல் 7 ரிக்டர் அளவை மிஞ்சிய 13 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன !  இவை அனைத்தும் பூமியின் உட்பளுவை அங்குமிங்கும் நகர்த்திப் புவி அச்சில் திரிபுகளை உண்டாக்கி வந்துள்ளன !  இவற்றால் நாளின் நீட்சி குன்றியும் மிஞ்சியும் போகலாம் !  அதைத் தவிர பூமிக்கு வேறென்ன சூழ்வெளி மாற்றங்கள் நேரும் என்று இன்னும் நாசா விஞ்ஞானிகள் விளக்கமாய் அறிவிக்கவில்லை !

    அசுரப் பூகம்பம் ஒன்று வரப் போகிறது என்று சில மணிநேரங்களுக்கு முன்பாக மக்களுக்கு அபாய முன்னறிவிப்பு செய்யும் சாதனம் ஒன்று இன்னும் கண்டு பிடிக்கப்பட வில்லை !   இப்போது உள்ள கருவிகள் சில விநாடிகளுக்கு முன் (20 -30 sec) மட்டும் அறிவிக்கக் கூடியவை.   அவை மக்களுக்குப் பாதுகாப்பளிக்கப் போதா !    எரிமலை வெடிப்பு எழுவதற்கு முன்பு எரிமலை வாயிலில் புகை மண்டலம் எழுகிறது !  சுனாமி ஊர்ந்து கடற்கரை நோக்கி வருவதற்குள் பூதள ஆட்டத்தையோ அல்லது அலைகள் பொங்கி எழுவதையோ உளவுக் கருவிகள் மூலம் ஒருவாறு உணர்ந்து இப்போது முன்னெச்சரிக்கை செய்ய முடிகிறது ! ஆனால் பூகம்பம் ஏற்படுவதற்குச் சில மணிநேரம் முன்னால் குடிமக்களுக்கு முன்னறிப்பு செய்யும் அபாய அறிவிப்புச் சாதனம் ஒன்று 21 ஆம் நூற்றாண்டில் இன்னும் உருவாக்கப் படவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஞ்ஞானக் குறைபாடாகும் !

     

    (தொடரும்)

    தகவல்:

    1. Time Magazine Article, “Nightmare in the Mountains,” By: Tim McGrik (Oct 24, 2005)

    2. The Kashmir Earthquake By Washington Post (Oct 12, 2005)
    3. Himalayan Tectonic Setting Earthquake Program.
    4. Earthquake History & Seismicity in the Northwest Region of Indian Sub-continent. [http://asc-india.org/seismic/pakistan.htm]
    5. New York Times -As Pakistan Reels, Musharraf Pleads for International Aid By: Somini Sengupta
    (Oct 8, 2005)
    6. Quake Homeless in Urgent Need of Tents By: Martin Regg Cohn, Asia Bureau (Oct 17, 2005)
    7. (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401222&format=html (Earthquake in Gujarat)
    7 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401292&format=html (Earthquake in Mexico City)
    7 (d) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401082&format=html (Major Earthquake in Iran
    7 (e) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40510211&format=html (Earthquake in Himalayan Zone) (October 21, 2005)
    7 (f) https://jayabarathan.wordpress.com/2009/04/09/earthquake-in-italy/ (Italian Earthquake 2009)
    8. Techtonics in Italian Earthquake By Chris Rowan Geologist (April 6 2009)
    9. Italian Earthquake Death Toll Rises to 260 & 28,000 Homeless By Reuters Alertnet (Apr 8, 2009)
    10. BBC News Aftershock Hits Italy Quake Zone (April 7, 2009)
    11. Rescue Workers Preparing for Surgical Operation on Buildings (April 7, 2009)
    12 News Desk – Italy Earthquake 2009 -Worst Quake Since 1980 (April 7 2009)
    13 Guardian UK : Italy Earthquake : Stricken L’Quila Suffers Again as Aftershocks Hit By John Hooper (April 7, 2009)
    14. Precession of the Earth’s Axis Coming to Light
    15. BBC News : Chile Counts Costs as Tsunami Ebs (Feb 28, 2010)
    16. Business Week : Chilean Quake Likely Shifted Earth’s Axis, NASA Scientist Says By : Alex Morales (March 1, 2010)
    17 BBC News : Hundreds Die in West China Quake (April 14, 2010)
    18. How the Chile Earthquake Changed the Earth’s Axis By : A.W. Berry (Mar/April 2010)
    19. http://www.bbc.com/news/world-latin-america-26862237 [April 3, 2014]
    20. http://www.cnn.com/2014/04/01/world/americas/chile-earthquake/ [April 2, 2014]
    21. http://en.wikipedia.org/wiki/2010_Chile_earthquake [April 2, 2014]
    22.http://rt.com/news/chile-earthquake-aftershock-evacuated-025/ [April 3, 2014]
    23.http://www.livescience.com/39110-japan-2011-earthquake-tsunami-facts.html [August 22, 2013]
    24.http://www.eurasiareview.com/04042014-ring-of-fire-fears-following-earthquakes-in-california-chile-and-panama/ [April 4, 2014]
    25. http://rt.com/usa/eathquakes-ring-fire-pacific-145/

    26.  https://www.livescience.com/60489-were-strong-mexico-earthquakes-related.html  [September 21, 2017]

    27. https://www.yahoo.com/news/air-force-academy-head-cadets-cant-treat-someone-dignity-respect-get-133117337.html [September 22, 2017]

    28. https://sg.news.yahoo.com/were-mexico-apos-recent-earthquakes-154700205.html [September 22, 2017]

    29. http://sanmigueltimes.com/2017/09/were-mexicos-recent-earthquakes-related/ [September 23, 2017]

    30.  https://en.wikipedia.org/wiki/2017_Central_Mexico_earthquake [September 28, 2017]

    31.https://en.wikipedia.org/wiki/2017_Central_Mexico_earthquake  [September 29, 2017]

    ********************

    [S. Jayabarathan] [ jayabarathans@gmail.com ]  (September 29, 2017) [R-2]

    Attachments area

    Preview YouTube video ‘People just ran’: deadly 7.1 magnitude earthquake hits Mexico

    ‘People just ran’: deadly 7.1 magnitude earthquake hits Mexico

    Preview YouTube video BIG ONE COMING: 9.3 M quake Possible as California Rrumbles.

    BIG ONE COMING: 9.3 M quake Possible as California Rrumbles.

    Preview YouTube video LIVE COVERAGE: 8.1 Earthquake Hits Mexico – Breaking News

    LIVE COVERAGE: 8.1 Earthquake Hits Mexico – Breaking News

    Preview YouTube video 3/30/2014 — Urgent Earthquake Watch — Yellowstone, California, New Madrid, East Coast, PNW

    3/30/2014 — Urgent Earthquake Watch — Yellowstone, California, New Madrid, East Coast, PNW

    Preview YouTube video Tsunami alert after 8.2 earthquake strikes off the coast of Chile

    Tsunami alert after 8.2 earthquake strikes off the coast of Chile

    Preview YouTube video S0 News March 31, 2014: West Coast Earthquakes

    S0 News March 31, 2014: West Coast Earthquakes

    Preview YouTube video 4/01/2014 — 8.2M Earthquake Strikes Chile — Tsunami warnings were issued

    4/01/2014 — 8.2M Earthquake Strikes Chile — Tsunami warnings were issued
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170926 -Friday Page -The Hindu -Saraswati

     

    தாழ்ச்சி உயர்ச்சி தவிர்த்தல் தகவென்று,
    வாழ்த்தும்முத் தேவி விஜயதசமி -நாழ்பொழுதில்:
    தேவீ, மகாகவி தேசமுத்து மாரியம்மா,
    சாவியா பூட்டாநீ சொல்’’…..!

    படைத்திடும் வாணி, துடைத்திடும் துர்க்கா
    அடைக்கலம் தந்த அலமேலு, -சடைப்பின்னல்
    ஆக இணைந்து அலகிலா ஆட்டத்தை
    பாகப் பிரிவினையில் பார்ப்பு”….

    அழுதாலும் பிள்ளைக்(கு) அவள்தான் பொறுப்பு
    பழுதான பின்பும் பரிவை -விழுதாய்ப்
    பொழிவாள் எமது பராசக்தி, நெஞ்சே
    தொழுவாய் அவளைத் தொடர்ந்து….கிரேசி மோகன்….!

    Share