170926 -Friday Page -The Hindu -Saraswati

 

தாழ்ச்சி உயர்ச்சி தவிர்த்தல் தகவென்று,
வாழ்த்தும்முத் தேவி விஜயதசமி -நாழ்பொழுதில்:
தேவீ, மகாகவி தேசமுத்து மாரியம்மா,
சாவியா பூட்டாநீ சொல்’’…..!

படைத்திடும் வாணி, துடைத்திடும் துர்க்கா
அடைக்கலம் தந்த அலமேலு, -சடைப்பின்னல்
ஆக இணைந்து அலகிலா ஆட்டத்தை
பாகப் பிரிவினையில் பார்ப்பு”….

அழுதாலும் பிள்ளைக்(கு) அவள்தான் பொறுப்பு
பழுதான பின்பும் பரிவை -விழுதாய்ப்
பொழிவாள் எமது பராசக்தி, நெஞ்சே
தொழுவாய் அவளைத் தொடர்ந்து….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.