சிவபிரதோஷம் “வெண்பனித் தீயினன்”

 

மீ.விசுவநாதன்

10426154_905210982836868_8431022936108084725_n

மேனியின் ஆசையை மெள்ளநான் விட்டிட
மிகஆழ பக்தி வேண்டும்
ஊனிலே ஓடுற உதிரமா சக்தியில்
உமைபாகன் உறைய வேண்டும்
மானிடன் என்னுரு மாதொரு பாகனாய்
மனம்நன்கு காண வேண்டும்
ஞானியர் பக்கமே நான்தின மிருந்திட
நல்லசிவ னருள வேண்டும்
தீநிற வண்ணனே நீரணி அழகனே
தீரட்டும் பிறவிப் பிணியே
நீயொரு தத்துவ தெய்வீக ஒளியெனத்
தெளியட்டும் எந்தன் மனமே !

meaning-of-deer-shiva-hand

கந்தனும், முந்திய கணபதிப் பிள்ளையும்
கைலாய பதியி னுறவே
அந்தமும் ஆதியும் அற்புத வானமும்
அனைத்துமாய் ஆன அமுதே
விந்தைகள் செய்குவாய் வெண்பனித் தீயினை
வேண்டித்தான் சூடு கின்றாய்
சொந்தமும் நட்புமே நோய்நொடி வென்றிட
சுந்தரனே கண்கள் திறவாய்
தீநிற வண்ணனே நீரணி அழகனே
தீரட்டும் பிறவிப் பிணியே
நீயொரு தத்துவ தெய்வீக ஒளியெனத்
தெளியட்டும் எந்தன் மனமே !

(இன்று 03.10.2017 பிரதோஷம்)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *