கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
எதுரா எதுராவென எங்கெங்கோ தேடும்
புதிராம் புவிவாழ்வு போதும் – மதுரா
நகரொளிந்த தெய்வம் நவனீதக் கண்ணன்
சுகமளிக்கும் செல்வச் செழிப்பு….
”அதிகாலைப் போதினில் ஆவுக்(கு) அளிப்பு
குதிகாலை கோவிந்தக் கண்ணன் : -சதிகார
மாமன் அனுப்பிட மல்லாண்ட போதிலும்
காமம்(பிரியம்) இவருக்குக் கன்று’’….!
’’சகாதேவன் கட்டினான்,ய சோதை பிணைத்தாள்,
சுகதேவர் சொல்லுற்ற(பாகவத) சேயோ, -அகமில்லா
அன்பால் அடைபடும் ஆனந்தக் கண்ணன்,ஆ
வின்பால் ய,சகா,தே வர்’’….கிரேசி மோகன்….!