Blog

  • திருமால் திருப்புகழ் (36)

    திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள்….மூலவர் வராகர்(ஏன வடிவுற்று பூமாதேவியை ஏந்திக் காத்தவர்)….
    ————————————————————————————————————–

     

    கிரேசி மோகன்

    Tamil-Daily-News-Paper_25310480595
    தனனதந்த தான தனனதந்த தான
    தனனதந்த தான -தனதான
    —————————————————————-perumal
    ”புரமெறிந்த நேரம் தொழமறந்த ஈசன்
    ரதமழுந்து மாறு -புரிவேழன்
    வரமிரண்டு ஓடும் குறமடந்தை மேனி
    தழுவுகந்த வேலன் -முறைமாம

    கரமிரண்டு பானை தனிலுகந்த ஈகை
    உணவருந்தி சோணை -அடிவார
    வெளியுகந்து ஆமை வடிவிருந்த பாறை
    அணையமர்ந்து வானம் -குடையாக

    அரையிலொன்று பூண அறையிலொன்று காய
    முழமிரண்டு ஆடை -கவுபீன
    அணியணிந்து நாடும் எளியஅன்பர் தேற
    உரைபுகன்ற ‘’நானார்’(ஞான)-ரமணேசர்

    பறையுமந்த மூல உறையில்தங்கும் வாளாய்
    உடல்மறந்து வாழ -அருள்வாயே
    திருமணந்து நாளும் திருமணங்கள் காணும்
    திருவிடந்தை ஏன -பெருமாளே….கிரேசி மோகன்….

    —————————————————————————————————————-

    Share
  • பிரியமான மணிமொழிக்கு

    தி. சுபாஷிணி 

    பிரியமான மகளுக்கு!

    மணியின் மொழி அதன் நாதம்!
    “ஓம் ” எனும் அந்நாதத்தின் பிறப்பு மணியின் நா அசைவினிலே!
    மொழி பிறத்தலும் மனிதரின் நா அசைவில்தான்!
    அண்டத்தின் ஆதாரம் ஓங்கார நாதமென்பார்.
    ஒளியும், ஒலியும் வாழ்வின் ஆதாரங்கள்!
    இரண்டுள்ளும் ஒலியின் சிறப்பு ஒளியைவிட மேலானது!
    ஒலியுடன் இணைந்திடாது ஒளிமட்டுமே ஏற்படுத்தும் உணர்வு
    பாதிப்புகள் ஒரு பிரம்மாண்டத்தை உண்டாக்குவதில்லை!
    “இடி ” தொடரா மின்னல்வெட்டுகள் தங்களின் மிரட்டும் தன்மையை
    வெகுவாகவே இழக்கின்றன!

    உணர்ச்சிகளின் முழுமையான வெளிப்பாடு ஒலியின்றி சாத்தியமாவதில்லை!
    ஆதலால்தான் ஒலியின் பெருமை, ஆதாரத்தன்மை ஒளியினும் விஞ்சுகிறது!!
    ஒலிகளே இல்லாத சூழல் வாழ்வினையே சூன்யமாக்கிவிடும்!
    தன்னைத்தான் அறிதலே ஒலிவழிதான் நிகழ்கிறது.
    தனது பெயர் பிறர் கூறக்கேட்டு, அழைக்கப்படுவது தானேயென அறிந்து,
    ஒரு குழந்தை திரும்பிப்பார்ப்பதே ஒலி புரிதலால்தான்!
    ஏன்? அதற்கும் முன்பாகவே கர்ப்பத்திலேயே ஒலியறிதல் நிகழ்கிறது!
    அபிமன்யு தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே சில போர் உக்திகளைக்
    கற்றதாக மகாபாரதத்தில் வருகிறதே!

    ஒவ்வொரு நிலையிலும் நம்மிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்துவது ஒலியே!
    வாழ்வின் தரமும், நாம் உணரும் வாழ்வின் வண்ணங்களும் ஒலிகளால்
    உயர்த்தப்படுகின்றன!

    ஒளி, ஒலியைவிட அதிவேகத்தில் சலனிப்பதே;
    அதன் காரணமாக, அது அதிசக்தி, பரவல்தன்மை, ஆக்கிரமிப்பு உடையதாய்
    காட்சிதந்தாலும், நடைமுறையில் ஒளியின் நிலைவேறு!
    ஒளியை முடக்கும், ஒடுக்கும் தடைகள் கணக்கிலாதன; எதிர்ப்புகளால்
    எளிதாக முடங்குவது அது; ஆதலால், அதிவேகமிருந்தும் அதன் பரவல்,
    வியாபிப்பு கேள்விக்குறியாகிவிடுகிறது! ஆதவனின் கூர்க் கிரணங்களை
    பஞ்சு மேகங்கள் முயற்சியின்றி முடக்கிவிடுகின்றனவே!!
    ஆனால், ஒலியோ குறைவேகத்தில் ஆமைபோல் ஊர்ந்தாலும், நிதானமாய்,
    ஓர்முனைப்பாய் பயணித்துத் தடைகள் தாண்டி, ஊடுருவி, வளைந்து தாவி,
    பரவல் செய்கிறது. அதை முற்றிலுமாக முடக்கவல்லது காற்றுமில்லா
    வெற்றிடம் ஒன்றே என்று அறிவியல் கூறும்! காற்றே இல்லா இடத்தில்
    உயிரினங்கள் வாழ்தல் சாத்தியமில்லையே; எனவே உயிரினங்கள் உள்ள
    இடங்களிலெல்லாம் ஒலி இருப்பது சாத்தியமே.

    மொழி அதிர்வுகளால் ஜனிப்பது; அதிர்வுகளை ஜனிக்கவும் வைப்பது.
    மொழியெனும் கருவியின் வன்மை எத்தகையது என்பதை ” நலனும்
    கேடும் நவில்வோர் கையில்” எனும் ஆன்றோர் கூற்று விளக்கும்.
    ” உதவாதன பேசுபவனை விட ஊமையே தேவலை ” என்பர்.
    நலம்பட உரைக்காதோர் தானும் கேடுற்று, பிறர்க்கும் கேடு தருவர்.
    நாவினால் ஏற்பட்ட வடுக்கள் என்றும் உள்ளாறுவதில்லை.

    இரு எதிர்மறைப் பயன்களைத் தரவல்லது மொழி..கையாளுதளைப்
    பொறுத்து ! இதையே வள்ளுவர்
    “ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
    காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு ” என்பார்.
    மலர்களினும் மென்மையானது ..கூர்முனை வாளினும் கூர்மையானது!
    நஞ்சினும் கசப்பானது ..தேனினும் இனிக்கவும் செய்வது!
    வாடைக்காற்றினும் குளிர்ந்தது…தீயினும் சுட்டெரிப்பது!
    உறவுகளை வளர்ப்பது …பகைமையையும் வளர்ப்பது!
    உசுப்பிவிடுவது …தாலாட்டாகி உறங்கவும் வைப்பது!
    தீராத் துயர்களைத் தீர்க்கவல்லது ..மனவடுக்களை அளிக்கவும் வல்லது!
    மொழியறிந்து மட்டும் பயனில்லை; தேர்ந்து சொலல் வன்மை தேவை.
    “சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது ” எனும் குறள் சொல்வன்மையின்
    தேவை, பெருமைகளைக் கூறும்.

    இருவகை மாற்றுவிளைவுகளைக் கொணரக்கூடியதெனினும், நல்
    விளைவுகளைத் தரும் ஒலிகளும் ,மொழிகளும் மட்டுமே காலம்
    கடந்து நிற்கும் திறனுடையன. நல்விளைநிலத்திலிட்ட நல்வித்தாய்
    முளைவிட்டு வேரூன்றிப் படர்ந்து வியாபித்து நிற்பன! ஆன்றோர்
    வாக்குகள் போல்!

    மகளே! எத்தனையோ பெயர்களை அலசித்தேடி மணிமொழிஎனும்
    பெயர் சூட்ட முடிவுசெய்தேன்!

    மேற்கூறிய ஒலியின் தன்மைகளுடன், எச்சூழலிலும் முடங்கிவிடாது,
    நீயும் ஆக்கம் பெற்று, சமூகத்திற்கும் ஆக்கமளித்து, மணி ஓசையாய்,
    மணி மொழியாய், விளங்கவேண்டும் நீ! அதற்கான சாத்தியங்கள்
    உன்னிடம் இருப்பதைக் காண்கிறேன்; மகிழ்ச்சியே!
    மணிகள் அணியாய் கோர்க்கப்பட்ட சரம்போல் உன்மொழி இருத்தல்
    வேண்டும்.

    தமிழில் உன்பெயர் நான்கு அட்சரங்களைக் கொண்டது . அந்நான்கு
    நாற்திசைகளைக் குறிக்கட்டும் . உன் புலமை நான்கு திசைகளிலும்
    பரவட்டும்!
    பெயர்சொல்லப் பிள்ளைவேண்டும் என்பார்கள்!
    நீ உன்பெயர் விளங்கும் பிள்ளையாய் இரு!
    சகமனிதர்களின் வாழ்வின் அடிநாதமாய் இரு!!

    வாழ்த்துக்களுடன்…
    உன் தந்தை.

     

    Share
  • அன்புள்ள தோழி மணிமொழி

    சித்திரை சிங்கர்

    அன்புள்ள தோழி மணிமொழி

    வாழ்த்துக்கள்!

    உனது திருமண வாழக்கை எப்படி உள்ளது. உனது திருமணத்தை இயந்திர நகரமான சென்னையில் வைக்காமல் உங்க ஊரில் வைத்தது மிகவும் நல்லதே.  உனது திருமணத்துக்கு வந்த இரண்டு நாட்களும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. இருந்தபோதும்  அந்த இரண்டு நாட்களில் உங்க ஊரில் பரபரப்பு  இல்லாமல் சில நேரங்களில் அசுமந்தமாக இருந்தது…! திருமண வீடு என்பதால் உங்க உறவினர்களின் நடவடிக்கைகள் நெஞ்சை கவர்ந்தது. அங்கு அனைவரும்  மாமா… சித்தப்பா…. மாப்பிளே… இது எங்க மாமா  பைய்யன்…  இவங்க எங்க….. வோட பேரன் என்றதுடன் என்னையும் விட்டுவிடாமல்  இவங்க மணிமொழியுடன் கல்லூரியில் படித்த அன்பு தோழி… இப்போ சென்னையில் இருக்காங்க; படிக்கும்போது மணிமொழிக்கு ரொம்ப உதவிகள் செய்திருக்காங்க…என்ற அறிமுகங்கள்…. இது மனதுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் உங்க வீட்டுக்காரரையும் ஏன் கூட்டிட்டு வரல… மாப்பிளையையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே… என்ற அன்பான எனது தவறுகளை சுட்டிக்காட்டும் அளவலாவுகளும் இனிமையாகவே இருந்தது.

    இங்குள்ளது மாதிரி வேகமாக செயல்பட அங்கு முடியவில்லை. ஒரு நிதானமான செயல்பாடுகளே….  இருந்தாலும் அதுவம் ஒருவிதமான இனிமையையே தந்தது . இருப்பினும் உனது திருமணம் கோவிலில் அம்மன் சந்நிதானத்தில் வைத்து திருமணம் நடைபெற்றதை காரணம் காட்டி மற்றைய சம்பிரதாயங்கள் சடங்குகள் இல்லை என்பது கொஞ்சம் மனதுக்கு நெருடலாகவே இருந்தது. அம்மன் சந்நிதானத்தில் திருமணம்  என்றாலும்  மண்டபம் பிரமாண்டமாக  இரண்டு நாட்களுக்கு எடுத்த விதத்தில் சாஸ்திர சடங்குகளை முறைபடுத்தி  இருக்கலாம். இன்றைய இளைய தலைமுறைகளுக்கு விஷயங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும். விருந்து உபசரிப்புக்கள என்னதான் இருந்தாலும் தெற்கு மாவட்டத்தில் உள்ளவர்களை மிஞ்ச முடியாது என்பதை இந்த திருமணம் எனக்கு உணர்த்தியது. சரியாக சாப்பாட்டு நேரங்களில் கைபேசியில் அழைத்து சாப்பிடும் இடத்துக்கு வரவழைத்த அன்பு மொழிகள் மறக்க முடியுமா…? சென்னையில் கோவிலில் திருமணம் என்றால் உணவுக்காக டோக்கன் கொடுத்து அனுப்பும் முறையை பார்க்கும் போதுனையின் பரபரப்பில் எவ்வளவு வாழ்க்கையில் இனிமைகளை இழந்து இருக்கிறோம் என்பதை உணர்கையில்… சுயநல அரசியல்வாதிகளின் மீது மிகுந்த கோபம் வருகிறது….  அரசியல்வாதிகள் தங்களின் சுயநலம் கருதி புதிய வேலை வாய்ப்புக்களை பெரு நகரங்களை சுற்றி மட்டும் விருத்தி செய்தி விட்டு கிராமங்களை ஒதுக்கியதன் விளைவுதான் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் வேலைக்காக நகரத்தை நாடி வருவதால்…

    இது போன்ற சொந்தங்களின் சுகமான பழக்க வழக்கங்களை…  இனிமையான  அன்பு மொழிகளை இழந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக இயந்திர வாழ்க்கையில் உழன்று கொண்டு இருக்கிறோம். மாற்றங்கள் தேவை. நமது பிள்ளைகளும் உறவினர்களின் முக்கியத்துவத்தை இழந்து வளருகிறார்கள். மனதுக்கு வருத்தமாகவே உள்ளது

    நகர் புறங்களை சுற்றி உருவாகும் புதிய வேலை வாய்ப்புக்கள் கிராமப்புரங்களையும் சென்றடைய வேண்டும். அதுக்கு அரசியல்வாதிகள் தங்களின் பணியிடங்களை நகரத்தில் வைத்து இயக்காமல் எங்கு வெற்றி பெற்றாரோ அந்த பகுதியில் தங்கி அவரது அமைச்சகம் இயங்க வேண்டும். விஞ்ஞான வளர்ச்சியினால் அங்கிருந்தபடி அனைத்து அமைச்சர்களுடனும் முதல்வருடனும் அல்லது பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் வீடியோ கான்ப்ரசிங் மூலம் தொடர்பு கொள்ளலாம்..மிகவும் முக்கியமானது, அவசியமெனில், நேரில் சென்று மந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். இது போன்ற மாற்றங்களை கொண்டுவரும் அரசியல் கட்சிகளை நாம் ஊக்குவிக்கலாம்.

    நம்ம என்னதான் திட்டமிட்டாலும்  அரசியல்வாதிகளின் மனம் மாறினால்தான் இது போன்ற நமது எண்ணங்கள் பயன்பாட்டுக்கு வரும். சரி.. சரி…பெட்டை கோழி கூவி விடியவா போகிறது…  எதோ எனது மன ஆதங்கம் என் உயிர்தோழியான உன்னிடந்தானே சொல்ல முடியும். ஆதங்கத்தை கொட்டிவிட்டேன்.  நடப்பது நடக்கட்டும்.

    உனது அன்பு கணவர் எப்படி இருக்கிறார். வழக்கம் போல நீ வளவளன்னு பேசி கொண்டிருக்காதே. உனது பேச்சை குறைத்து அவரை பேச விடு. அப்போதுதான் உன்மீது அவருக்கு அக்கறையும் அன்பும் அதிகமாகும் என்ற ஆலோசனையை மீண்டும் உனக்கு நினைவூட்டி அடுத்த கடிதத்தில் தொடர்கிறேன்.

    என்றும் உன்  அன்புத்தோழி

    கீதா பாலசுப்ரமணியன்.

    Share
  • அன்புக்குரிய மணிமொழி

    நிர்மலா ராகவன்

    எனது அன்புக்குரிய மணிமொழி,

    நினைத்தாலே எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.

    ஓ! உன் நலத்தைப்பற்றி விசாரிக்க மறந்துவிட்டேனோ? சரி. சரி. நீ நலமாக இருப்பதால்தானே இதைப் படிக்க முடிகிறது! நமக்குள் என்ன formalities!

    எதற்கு இவ்வளவு கோபம் என்கிறாயா? பின்னே என்ன?

    என் பாடல்களைப் பதிவு செய்ய, நாடு விட்டு நாடு போயிருந்தது உனக்குத் தெரியுமல்லவா? அங்கே ஒரு — அவர் மொழியில் சொல்லப்போனால், ஒரு வாத்தியக்காரர். (`பக்கவாத்தியம்’ என்று தன்னைப் போன்றவர்களைக் குறிப்பிடுவது மரியாதைக்குறைவு என்று விவாதம் செய்வார். எதற்கு வம்பு!)

    அவரைப்பற்றி கொஞ்சம்.

    நாடளாவிய போட்டிகளில் பரிசு பெற்றதுகூட அவருக்குப் போதவில்லை. சகட்டுமேனிக்கு (அப்படியென்றால் என்ன?) எல்லாரையும் பழித்து, அதில் ஒரு ஆனந்தம் காண்பவர்.

    வாய் ஓயாது, தன் அசாத்திய திறமைகளைப் பற்றியும், பிற கலைஞர்களின் புளுகு, சவடால் இவற்றைப் பற்றியும் பேசுவதால், தான் உயர்ந்த நிலையிலிருக்கிறோம் என்று நம்புபவர். அவர் எத்தனை முறை சொன்னதையே சொன்னாலும், சிரிக்கத் தயாராக இருந்த மாணவர்கள் வாய்த்திருந்தது அவரது அதிர்ஷ்டமா, அல்லது மாணவர்களின் குருபக்தியா, முட்டாள்தனமா? நீயே மண்டையை உடைத்துக்கொள்.

    நான் இசையைத் தொழிலாகக் கொள்ளவில்லை, அதாவது, நான் கற்றதை பிறருக்குச் சொல்லிக்கொடுத்து நாலு காசு பார்க்கவில்லை என்பதால் மாற்றுக்குறைவு என்பதுபோல் நடத்துவார். காரியம் நடக்க வேண்டுமே என்று நான் வாயைத் திறக்கவே இல்லை. `பின்னே எப்படி பாடினாய்?’என்று அசட்டுப்பிசட்டென்று கேட்காதே! அடி விழும்!

    ஒரு பாட்டைப் பாடி முடித்தவுடன், அதே தாளத்தில் அடுத்த பாட்டுக்குப் போக அவசரப்படுத்துவார். உயிரே போய்விட்டது.

    ஒரு வழியாக ரெக்கார்டிங் முடிந்தது. நான் அந்த ஊரைவிட்டு வந்துவிட்டேன். என்னை அழைத்து என்ன கூறினார், தெரியுமா?

    மணிமொழி, நீ ஒரு நல்ல பேராசிரியை. மாணவிகளின் உள்ளம் கவர்ந்தவள். சொன்னால் நம்பமாட்டாய். தன் சிஷ்யன் தன்னைவிட நன்றாக வாசித்துவிட்டான் என்று அதிர்ச்சியுடன் கூறி, அவனைத் திரும்ப ஒரு முறை, சற்று சுமாராக எல்லா பாட்டுக்கும் வாசிக்கவைத்ததாக அவர் சொன்னார். நான்தான் நிலக்கரி ஆயிற்றே! அதாவது, மெதுவாகத்தான் பற்றிக்கொள்வேன். உனக்குத் தெரியும். அவர் சொன்னதன் முழு அர்த்தம் உடனே புரியவில்லை. சும்மா கேட்டுக்கொண்டேன். அதோடு, என்னை எங்கே பேசவிட்டார்!

    பதிவு செய்யப்பட்ட பாடல்களைக் கேட்டபிறகுதான் விளங்கியது. அவ்வப்போது நான் மூச்சு விட்டுக்கொள்ளும்போது, சாதாரணமாக வயலினோ, புல்லாங்குழலோ அந்த இடைவெளியில் நுழைந்துவிடும். அவர்கள் வாசித்தது கேட்கவில்லை.

    மூச்சு சப்தத்தை வெகு சுலபமாக கணினியில் அழித்துவிட முடியும். அதையும் செய்யவில்லை. வாய்ப்பாட்டோ, பிற வாத்தியக்காரர்களின் உழைப்போ எதுவுமே சரியாகக் கேட்கவில்லை — நான் குறிப்பிட்டவரது வாத்தியத்தைத் தவிர. விட்டு விட்டுப் பாடுவதுபோல், பரிதாபமாகக் கேட்டது.

    ஏழு பாடல்களுக்கு பத்து மணி நேரம் எடிட் செய்யவேண்டியிருக்கும் என்று கதை அளந்து, முன்னதாகவே பணத்தைப் பெற்றுக்கொண்டார்கள். அந்தக் கால அவகாசத்தில் தன்னைத்தவிர பிற கலைஞர்களின் வாசிப்பு எடுபட்டு விடக்கூடாது என்று பெருமுயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்! இவர் வாடிக்கை பிடித்துத் தருவதால், ஸ்டூடியோக்காரரும் ஒத்துழைத்திருக்கிறார். இருவர் செய்ததுமே அவர்கள் தொழிலுக்குத் துரோகம்.

    பாடல் பதிவு செய்வது, அல்லது மேடையில் பாடுவது ஒரு கூட்டு முயற்சி. தான் மட்டும் சிறக்க வேண்டும் என்று ஒரு `அரை சமர்த்து’ எண்ணி, வேலை மெனக்கெட்டு பிறரைத் தாழ்த்த கடும் முயற்சிகள் எடுத்துக்கொண்டால் என்ன ஆகும்?

    இப்போது, அந்தப் பதிவுகளை நான் பயன்படுத்த முடியவில்லை என்பது என் வருத்தம். நவராத்திரிக்கு என்னை அழைத்துவிட்டு, காது சரியாகக் கேட்காத மாமிகள், “நன்னாப் பாடிண்டு இருந்தியேடி! இப்போ என்ன ஆச்சு!” என்று போலியாக வருத்தப்பட்டு, என்னை மட்டம் தட்டி விட்டதில் அடைந்த அல்ப சந்தோஷத்தை நான் பிறருக்குக் கொடுக்க விரும்பவில்லை.

    அநியாயமான வழியில் காசைக் கறந்துவிட்டார்களே என்ற ஆத்திரத்தைவிட, இவ்வளவு திறமையைக் கொடுத்த கலைவாணி இவர்களைப் போன்றவர்களுக்கு கொஞ்சூண்டு நல்ல குணத்தையும் ஏன் கொடுக்காமல் போனாள் என்றுதான் வருத்தமாக இருக்கிறது. ஒரு வேளை, அது அவளுடைய டிபார்ட்மெண்ட் இல்லையோ?

    ரொம்ப போரடித்துவிட்டேனா?

    எனக்கும்தான் உன்னைவிட்டால் யார் இருக்கிறார்கள், சொல்லி அழ? நீ சகித்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

    நிர்மலா

    Share
  • அன்பு மிக்க மணிமொழிக்கு

    நந்திதா

    அன்பு மிக்க மணிமொழிக்கு,

    உன் அன்பு தோழி கயல்விழி எழுதும் அன்பு மடல்.  உன் கடிதத்திற்கு உடனே பதில் எழுத இயலவில்லை. நாட்கள் பல ஆனாலும் நினைவில் தினம் ஒரு கடிதம் எழுதிக்கொண்டே இருந்தேன். ஊரிலிருந்து என் அத்தை குடும்பம் வந்திருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. நேற்றுதான் அவர்கள் தங்கள் ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இங்கு நான், என் கணவர் குழந்தைகள் அனைவரும் நலமாக இருக்கிறோம். இது போல் அங்கும் யாவரும் நலமென நினைக்கிறேன்.

    விஞ்னானத்தின் வளர்ச்சியில் நமக்கு எத்தனையோ சாதனங்கள் கிடைத்து உள்ளது. அதில் ஒன்று தொலை பேசி, கை பேசி, இணைய தளம். இவற்றின் மூலம நாம் எப்பொழுது வேண்டுமானாலும் எங்கிருந்தும் தொடர்பு கொள்ளலாம். முக்கியமான செய்திகளை பகிர்ந்து கொள்ளலாமே அன்றி கடிதம் போல் விரிவாகவும் நிதானமாகவும் செய்திகளை பகிர்ந்து கொள்ள இயலுவதில்லை. கைபேசியில் தொடர்ந்து பேசினால் நமது மூளைக்குச் செல்லும் திசுக்கள் செயல் இழந்து பல வித மான நோய்கள் வ்ருவதாக இப்பொழுது கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.

    எது எப்படியோ நானும் நீயும் இந்த 21-வது நூற்றாண்டில் மாதத்திற்கு ஒரு முறையாவது கடிதம் எழுதி எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறோம். பகலில் நேரம் இல்லை என்றால் இரவில் தலையணையில் தலை புதைத்தபின் உன் சொல் வளம், கற்பனை வளத்தில் நீ வடிக்கும் வரிகளைப் படித்தபின் நான் நானாக இருக்க மாட்டேன். நாள் முழுவதும் வேலை செய்த அலுப்பு பஞ்சு போல் பறந்து தேவதை வந்து தாலாட்டுவது போல் இருக்க ஒரு இனிய துயிலுக்கு இட்டுச் செல்லும் உன் கடிதம். எனக்கு உன்னைப் போல் இனிய நடையில் கடிதம் வடிக்கத்தெரியாது எனினும் ரசிக்கத் தெரியும்.

    அவ்வப்போது எனக்கு வரும் பிரச்சனைகளை உன்னிடம் பகிரும் பொழுது நீ எனக்குத் தரும் நல் யோசனைகள் எனக்கு மருந்தாக அமைகிறது. வள்ளுவரின் வாக்குப் போல் “உடுக்கை இழந்தவன் கை போல் இடுக்கண் களைவதையே இலட்சியமாக கொண்டு இருக்கிறாய். இப்படிப் பட்ட தோழி கிடைத்தமைக்கு நான் அந்த இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.  என்னைப் போல் நீ குடும்ப தலைவி மட்டும் இன்றி அலுவலகத்தில் ஒரு அதிகாரியாகவும் இருக்கிறாய். எப்படி இரண்டு துறையிலும் நீ சிறந்து விளங்குகிறாய் என்னும் கேள்வி என்னுள் எழும். திறமை இருக்கிறது, அதை சரியாக பயன்படுத்தி செயல்படுகிறாய், இதனால் வெற்றி உன்னைத் தேடி வருகிறது. நீ அலுவலகத்தில் வேலை செய்யும் பொழுது தொலை பேசியின் மூலம் தொந்தரவு செய்வது சரியில்லை என்ற காரணத்தினால் கடிதம் எழுதுகிறேன். என் கடிதத்திற்கு உடனே பதில் எழுத முடியாவிட்டாலும் நேரம் கிடைக்கும் பொழுது, நான் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரியாக தீர்வு கொடுத்து விடுகிறாய். இதனாலேயே நான் கடிதம் எழுத விரும்புகிறேன். தொலை பேசியில் நான் பேச ஆரம்பித்தால் வேறு எவரும் உன்னையோ என்னையோ தொடர்பு கொள்ள முடிவதில்லை. அப்படி ஒரு தரம் பேசினோம் உனக்கு ஞாபகம் இருக்குமென நினைக்கிறேன். அப்பொழுது என் கணவர் என்ன சொன்னார் தெரியுமா; பி.எஸ்.என்.எல் நம் இருவரால் மட்டும்தான் ஓடுகிறதாம்…  நாம் இருவரும் அரசியல் முதல் அவியல் வரை அலுசுகிறோம். அதற்கு கடிதம் தான் சரி. இல்லையா.

    சரி இப்பொழுது எனது விஷயங்களுக்கு வருகிறேன். குழந்தைகளுக்கு தேர்வு நேரம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இப்பொழுது முதலே எனக்கு பரபரப்பு, மன அழுத்தம் வருகிறது. குழந்தைகளைப் பார்க்கும் பொழுது மனம் மிகவும் வேதனை அடைகிறது. காரணம் உனக்கும் தெரிந்து இருக்கும். படிக்க வேண்டிய புத்தகங்களின் சுமையினால் முதுகில் கூன் விழுகிறது. என் மகன் ராகுல் பள்ளிக்கு காலையில் பள்ளி தொடங்க 1.1/2 மணி நேரம் முன்னால் தயாராகி விடவேண்டும். ஏன் என்றால் எங்கள் வீட்டைத்தாண்டிதான் மற்ற பிள்ளைகளின் வீடு உள்ளது. வேன் காரர் வீடு என் வீட்டுப் பக்கம் உள்ளதால் வண்டி எடுத்ததும் முதலில் ராகுல் தான் ஏறுவான். மாலையில் வீடு திரும்பும் போது எல்லா பிள்ளைகளும் வீட்டுக்குப் போய்விட்டபின்னர் தான் இவன் வீட்டுக்குள் நுழைவான். அதன் பிறகு மறுபடியும் டியூஷன் என்று போய்விடுகிறான். ஒரு விளையாட்டு இல்லை. நாம் படித்த காலத்தில் இவ்வளவு பாடங்களின் சுமைகள் இல்லை. அன்று பள்ளிப் படிப்பை விளையாட்டாக படித்தோம். அதே நேரம் விளையாடி மகிழ்ந்தோம். காலையில் பள்ளிக்குப் போகும் பொழுது தெருவில் போட்ட கோலங்களை ரசித்த படி, சுத்தமான காற்றை சுவாசித்துக்கொண்டு, வழியில் பால்காரன், மாடு, அவனது கன்று எப்படி ஓடுகிறது என்று பார்த்தபடி சென்றோம். இன்றைய நிலை…சிறு குழந்தைகள் தூக்க முடியாத புத்தக மூட்டையுடன் ஏதோ சர்க்கஸ் கம்பெனி வண்டியில் அடைத்துச் செல்லும் பிராணிகளைப் போல் பள்ளி வேன் கூட்டிச் செல்கிறது. இது என் பிள்ளைகளுக்கு மட்டும் நடக்கும் பிரச்சனை இல்லை. இன்றைய கால கட்டத்தில் நகரத்தில் நடக்கும் சர்வ சாதாரண நிகழ்ச்சியாகி விட்டது.

    காலையில் தூக்கம் போதாமல், சரியாக சாப்பிடாமல், பெட்ரோல் புகையில் சுவாசித்து, புத்தகத்தின் தூக்கு தூக்கிகளாக செல்கிறது இவர்களின் மழலை வயது. கொஞ்சம் வயதாகி பள்ளி சென்றால் நல்ல பள்ளியில் இடம் கிடைப்பதில்லை. எங்கும் பணம் தான் பேசுகிறது. நாம் உயர் நிலைப் பள்ளியில் கூட இவ்வளவு பள்ளிக்கட்டணம் செலுத்தியதில்லை.

    அடுத்த பிரச்சனை… குழந்தைகளின் உண்வு. முக்கியமாக உன் யோசனைகள் எனக்கு தேவை. என் குழந்தை சரியாக சாப்பிடுவதில்லை. காலையில் மென்று சாப்பிட நேரம் இல்லை. மதிய உணவைக் கட்டிக் கொடுத்தால் பாதியை அப்படியே திருப்பிக் கொண்டு வருகிறான். நாம் அந்த நாளில் பழைய சாதம், தயிர், ஊறுகாய் வைத்து சாப்பிட்டோம். இப்பொழுது குழந்தைகளுக்கு பழைய சாதம் என்றால் என்ன என்பதே தெரியாது. தொலைக்காட்சி, செய்திதாள், பத்திரிகையில் வரும் விளம்பரங்களைக் கண்டு அதில் வரும் பொருள்களைத்தான் கேட்கிறார்கள். காலை எழந்தவுடன் நாம் எந்த பற்பசை உபயோகிக்க வேண்டும்,  காலை உணவு, பானம் எதை எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற விளம்பரம் செய்கிறார்கள். அதைப் பார்த்து குழந்தைகள் அதையே கேட்கிறார்கள். நம் அவசரத்திற்கு ஒரு நாள் செய்து கொடுக்க அதுவே பழக்கமாகி விடுகிறது அவர்கள். நம்மைபோல் கீரை, சிறுதானியம், பனை வெல்லம், நமது பாரம்பரிய சிற்றுண்டியை விரும்புவதில்லை.மேலும் அவைகள் கிராமம் போல் நகரங்களில் கிடைப்பதும் மில்லை. மைதா, சக்கரை, வனஸ்பதி மூன்றும் உடலுக்கு மிக கெடுதி என்று என் பாட்டி சொன்னது எல்லாம் எங்கோ தொலைந்து விட்டது. நம் வயதுக்காரர்கள் இருக்கும் ஆரோக்கியம் இக் குழந்தைகளுக்கு இருக்குமா என்பது சந்தேகமே. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது பிட்சா, நூடுல்ஸ், சைனீஸ் உப்பு போட்ட உணவு, குளிர் பானகம். இதெல்லாம் வயிற்றில் எரிச்சலுடன் வாயுவை கொடுத்து மறுநாள் நான் டாக்டரிடம் போக வேண்டும். எனக்கு மிக அச்சமாக இருக்கிறது இவன் எதிர் காலத்தை எண்ணி. மேனாட்டு உணவு முறை, உடைகள் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி நாம் நமது பண்பாடு, கலாச்சாரத்தின் வேரையே கொஞ்சம் கொஞ்சமாக தோண்டி எறிகிறோமோ என்று தோன்றுகிறது. நீ என்ன நினைக்கிறாய். மேலும் வீட்டிற்கு கிராமத்திலிருந்து உறவினர் வந்தால் பிடிப்பதில்லை ராகுலுக்கு. வந்தால் பேசுவது இல்லை. விடுமுறை நாளில் எப்பொழுது பார்த்தாலும் வீடியோ கேம், மியூசிக் என்று காதில் வயரை சொருகிக் கொண்டு விடுகிறான். நாம் அக்காலத்தில் யாராவது வீட்டிற்கு வந்தால் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு பேசுவதும், அவர்களிடம் கதை கேட்பதும் எப்படி மகிழ்ந்திருப்போம். இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. என் அத்தை நம் ஊருக்கு வந்தால், பக்கத்து தெருவிலிருந்து நீ உடனே எங்கள் வீட்டுக்கு வந்து விடுவாய். முற்றத்தில் என் அத்தை நமக்கு கதை சொல்லிக் கொண்டே சாதத்தை பிசைந்து கையில் போடுவாள். முதலில் சாதம் வேண்டாம் என்போம். பிறகு அத்தை “வாங்க கதை சொல்கிறேன்” என்றதும் வட்டமாக உட்கார்ந்து கதை கேட்டுக் கொண்டே அவ்வளவு சாதம் சாப்பிடுவோம். நமக்கே தெரியாது. இப்பொழுது குழநதைகள் தொலைக் காட்சியின் பெட்டியில் கார்டூன் பார்க்கவே விரும்புகிறார்களே தவிர யார் வருகிறார்கள் என்ன கேட்கிறார்கள் என்றே அக்கறை காட்டுவதில்லை. வர வர உறவு என்ற சங்கிலி கூட அறுந்து விடும் என அச்சமாக இருக்கிறது. என் கணவர் தன் அலுவலக வேலையிலேயே மூழ்கி இருப்பதால் இந்த விஷயங்கள் மிகவும் துச்சமாக அவருக்குப் படுகிறது.

    நீ கூட நினைக்கலாம் நான் என் பையனைப் பற்றி மிகவும் குறை சொல்கிறேன் என்று. ஒருநாள் ராகுலுடன் கடைக்குப் போயிருந்தேன் கடையில் இருந்த மிக விலை உயர்ந்த விளையாட்டுச் சாமான் கேட்டான். நான் வேறு ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். அவன் அதை வாங்கிக் கொள்ளவே இல்லை. அவன் நண்பர்கள் இதைப் போலவே வைத்துள்ளார்களாம்.. அது கூட ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டே விளையாடும் மின்விளையாட்டுப் பொருளே.  அவன் வயதில் நாம் இருக்கும் பொழுது ஆண் பிள்ளைகள் கிட்டிப் புள், பம்பரம், ஓடி பிடித்து விளையாடுதல். கபடி என்று எப்படி விளையாடுவார்கள். பெண்கள் நாமும் சொப்பு, சொக்கட்டான், பல்லாங்குழி, ஆடு புலி கும்மி, கோலாட்டம், நடனம் என்று ஆடுவோம். இப்படி ஆயிரம் ரூபாய் என்று விளையாட்டுச் சாமான் வாங்கியதே இல்லை.

    தூங்கும் நேரத்தில் பாட்டி, தாத்தா கதை கேட்போம். அவர்கள் புராண இதிகாச கதைகள் சொன்னார்கள். அதில் உள்ள நீதிகள் அந்த பிஞ்சு வயதில் ஆழமாக நமக்குப் பதிந்தது. ஆனால் இப்பொழுதோ நிறைய காமிக் புத்தகங்கள் படிக்கிறார்கள் அதில் ஒரு நீதியும் இல்லை. அந்நாளில் பெற்றோர் எதை வாங்கிக் கொடுக்கிறார்களோ அதை வாங்கி திருப்தி அடைந்தோம் இப்பொழுது, குழந்தைகளை கடைக்கு அழைத்துக் கொண்டு போய் எல்லார் முன்னிலையில் அவர்கள் என்ன கேட்கிறார்களோ அதையே வாங்கி கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவர்களுக்கு நமது பர்ஸ்ஸின் நிலைமை எப்படித் தெரியும்.

    ராகுல் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கிறான். நாம் படிக்கும் பொழுது திருக்குறள், நாலடியார், ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் எனப் படித்து வாழ்க்கைக்கு வேண்டிய அறவுரையை நன்றாக மனத்தில் பதிய வைத்துக் கொண்டோம். தமிழில் படித்ததால் இப்பொக்கிஷங்களால் நம் வாழ்கை சிறப்பாக அமைத்துக் கொண்டோம். இதனால் நமது இருவரின் திருமண வாழ்வில் வரும் பொருளாதாரம், குடும்ப பிரச்சனையால் பாதிக்கப் படுவதில்லை. என் அம்மா சொல்வாள். விரலுக்கு தகுந்தபடி வீக்கம் இருக்க வேண்டும் என்று. ஆனால் தற்பொழுது உள்ள சமூகத்தைக் கண்டால் பயமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் ஒரு போட்டா போட்டி, எல்லாருக்கும் எல்லாம் உடனடியாக கிடைக்க வேண்டும். காத்திருக்க ஒருவருக்கும் பொறுமையில்லை. பிறர் பொருளை பெருமையுடன் பார்க்க தவறி, பொறாமையுடன் பார்க்கின்றனர். இந்தப் போட்டியால் இன்னும் பணம் வேண்டும் என்று உழைக்க, அது உடலைப் பாதித்து மன அழுத்தம், ரத்த அழுத்தம் வருகிறது. இப்பொழுதே என் கணவர் கூறுகிறார்… பையனை டாக்டருக்குப் படிக்க வைக்க வேண்டுமாம். நான் கூறினேன்… முதலில் குழந்தை உடல் ஆரோக்கியத்துடனும், உள்ளத்தில் அன்புடனும் வளரட்டும் என… என் பதில் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. எனக்கு பாஸிட்டிவாக நினைக்கவே தெரியவில்லை என்றார். வீண் வாக்கு வாதம் வரும் என ஒரு புன்னகையுடன் உரையாடலை முடித்துக் கொண்டேன்.. நாளுக்கு நாள் விலைவாசியின் உயர்வு, நம்மைப் போன்ற நடுத்தர குடும்பத்தினர் என்ன கனவு காண முடியும். நமக்கே புரியாமல் இருக்கும் பொழுது குழந்தைகளுக்கு எப்படி புரிய வைப்பது நமது பொருளாதாரத்தைப் பற்றி.  எல்லாரும் என்னைப் போல் சிந்திக்கிறார்களா, அல்லது என் கணவர் சொல்வது போல் என்னிடம் தான் பாஸிடிவ் எண்ணங்கள் உதயம் ஆவது இல்லையா..

    இம்முறை கடிதம் கொஞ்சம் நீண்டு விட்டது. மெதுவாகப் படி. எனக்கு என்ன வென்றால் நாம் ஒரு வகையில் நல்ல சூழ்நிலையில் மாசற்ற சுற்றுப்புறச் சூழலில், பெற்றோர், ஆசிரியர் அரவணைப்பில், அவசர இயந்திர வாழ்க்கை இல்லாமல் வாழ்ந்து விட்டோம். இன்று குடிக்கும் தண்ணீரிலிருந்து காற்றுவரை காசு கொடுத்து செயற்கைப் பொருளை வாங்கி வாழும் இக் கால கட்டத்திற்கு கட்டாயமாக தள்ளப்பட்டு உள்ள நம்மைப் போன்ற தாய்மார்கள் எப்படி குழந்தைகளை வளர்ப்பது. என்ன சொல்லி வளர்ப்பது. முளைத்து மூன்று இலை விட வில்லை, மூன்றாம் வகுப்பில் படிக்கும் என் பிள்ளை சொல்கிறான். ” அம்மா நான் ரொம்ப டென்ஷனாக இருக்கிறேன்” என்றும், “எனக்கு டயம் இல்லை” என்றும், “எல்லாமே போர் அடிக்கிறது” என்றும் சொல்வதைக் கேட்கும் பொழுது ஒரு பக்கம் சிரிப்பும் மறு பக்கம் பயமாகவும் இருக்கிறது.

    மனதில் இத்தனை நாளாக உறுத்திக் கொண்டு இருந்தது. அம்மா, அப்பா கிராமத்தில் இருப்பதால் அவர்களுக்குப் புரியாது. நம் குழந்தைகள் போல் நாம் வளரவில்லை. இப்படிப்பட்ட நிலையை அவர்கள் எதிர் கொள்ளவுமில்லை. எனவேதான் உன்னிடம் மனம் திறந்து கொட்டிவிட்டேன். மேலும் நீயும் இதே சமூகத்தில் இதே பிரச்சனைகளுடன் எதிர் நீச்சல் போடுகிறாய்.  குழந்தைகளுக்கு எப்படி புரிய வைத்து வளர்ப்பது என்பதை எனக்கு எழுது. உன் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கும்

    உன் அருமைத் தோழி

    கயல்

    Share
  • திருமால் திருப்புகழ் (35)

     

     

    கிரேசி மோகன்

    Mylapore-Sri-Adhikesava-Perumal-Theppotsavam-day-2-2014-00
    தனத்த தனத்தன தனத்த தனத்தன
    தனத்த தனத்தன -தனதான….

    ————————————————————————sri-ramar-sabari

    “வனத்தில் குறத்தியை துரத்தும் விருத்தனின்
    கருத்த நிறத்தொளிர் -முறைமாம,
    வலத்தில் சுடர்ப்பொறி, இடத்தில் உரத்தொலி
    எழுப்பு வலச்சுழி -கடலாழி,
    வனத்து தளத்தினை பருத்த புயத்தினில்
    பரத்தி, இலக்குமி -மணிமார்பில்
    இருத்தி, பறப்பன விரட்டி முகட்டினில்
    உதித்து, வரத்தினை -உனைநாடும்
    மனத்து குணத்தவர் துதிக்க இறைத்திட,
    இமைக்கும் கணத்தினில்-வருவோயே
    கடித்த பழத்தினை கொடுத்த கிழத்தினை
    பரத்தில் இணைத்திடும் -ரகுநாத
    சினத்தில் ,இருப்பினை பழித்த அரக்கனை
    இடுப்பு இருப்பினில் -இரையாக
    கிடத்தி நகத்தினை புதைத்(து)உ திரத்தினை
    குடிக்க குதித்திடும் -பெருமாளே”
    ———————————————————————————————

     

     

     

     

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (2)

    பவள சங்கரி

    தலையங்கம்

    உயர்திரு மோதி மற்றும் உயர்திரு ராகுல் காந்தி அவர்களே,

    எவ்வளவு உயரிய பதவிகளில் இருந்தாலும் அவர்கள் தவறு செய்யும் போது பொது மக்கள் தட்டிக் கேட்கக் கூடிய லோக்பால் மசோதாவைக் கொண்டுவந்த ஆளும் கட்சியும் , அதற்கு ஆதரவு தெரிவித்து உறுதுணையாக இருந்த எதிர்கட்சிகளும் இன்று போட்டி போட்டுக்கொண்டு ஊழல் அரசியல்வாதிகளையே தங்களுடைய கட்சி வேட்பாளர்களாக அறிவித்துள்ளீர்களே இது சரியா. உங்கள் பதில் என்ன?

    திரு மோதி அவர்களே,

    நேற்றைய உங்கள் விளம்பரம் ஆச்சரியப்படுத்தியது. “டாலர் கொடுத்தாலும் வாங்க மாட்டேன், ரூபாயாகக் கொடுத்தாலும் வாங்க மாட்டேன். நியாயமாகத்தான் நடந்து கொள்ளுவேன், ஆகவே எனக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று எடியூரப்பாவையும், ஸ்ரீராமுலு அவர்களையும் தங்களுடைய கட்சி வேட்பாளராக அறிவித்துவிட்டு எவ்வாறு நீங்கள் சொன்ன வகையில் செயல்படப்போகிறீர்கள்?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • பயணத்தின் அடுத்த கட்டம

    வெங்கட் சாமிநாதன்

    இது நினைவுகளின் சுவட்டில் இரண்டாம் பாகம். ஹிராகுட் அணைக்கட்டில் கழிந்த ஆறுவருட வாழ்க்கை. 1950 மார்ச்சிலிருந்து 1956 டிஸம்பர் வரை. எப்படியோ இது எழுதப்பட்டுக்கொண்டு வருகிறது. இரண்டு அன்பர்களின் தூண்டுதல் என் சிந்தையில் விதைத்தது. எழுதி வருகிறேன். இருப்பினும், என் வாழ்க்கை அப்படி ஒன்றும் வீர தீரச் செயல்கள் நிறைந்ததல்ல. பின்  நிறைந்தது தான்  என்ன? ஒன்றுமில்லை தான்.  எந்த பெரிய வரலாற்றினதும் ஒரு சின்ன அங்கமாகக் கூட இருக்கும் தகுதி பெற்றதல்ல இந்த என் வாழ்க்கை எவரது சுய சரிதமும் பதிவு பெறும் தகுதி தான் என்ன? அவரவரே தீர்மானித்துக் கொள்ள வேண்டியதுதான்.

    உதாரணமாகச் சொல்லப் போனால், ராஜாஜி இந்த தேசத்தின் வரலாற்றில் கணிசமான பங்காற்றியவர். அவர் அது பற்றி எழுதியவரில்லை. தமிழ் சமூகத்தின் வரலாற்றையே கிளறி வைத்துவிட்டவர்கள் பெரியாரும் அண்ணாவும். இவர்களும் கூட தம் சுயசரிதத்தை எழுதியவர்கள் இல்லை. காந்தியும் நேருவும் எழுதத் தொடங்கி பாதியில் நிறுத்தி தேசத்தின்  வரலாறு ஆகி மறைந்துவிட்டார்கள். இப்படி இருக்க,  தமிழ் எழுத்துலகில் கூட ஒரு பொருட்டாக இல்லாத நான் என் வாழ்க்கையை எழுதப் புகுந்தது ஏதோ சுயபிரமையில் ஆழ்ந்து செறுக்கு மிகுந்த காரியமாகப் படும். அது ஒரு பார்வை. அத்தகைய செறுக்கு மிகுந்த எழுத்துக்கள்தாம் பெரும்பாலும் இங்கு தமிழ் சமூகத்தில் உண்டு. அவர்கள் தமக்கு உகந்த ஒரு சித்திரத்தை தாமே உருவாக்கித் தமிழ் சமூகத்துக்குத் தந்து செல்கிறார்கள். எது தன்னைப் பற்றி அறியப்பட வேண்டும் என்று தானே எழுதிக் குவித்துவிடும் காரியங்கள் நடக்கின்றன. பெரிய பெரிய காரியங்கள் படைத்தவர்கள், தேசத்தின் போக்கையே நிர்ணயித்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அது பற்றி எழுதாவிட்டாலும் எழுதுபவர்கள் ஒரு மாதிரியான பக்தி நிறைந்தவர்கள். அவர்கள் எழுத்தில் வெட்டலும் கூட்டலும் நிறைந்திருக்கும். அவர்கள் வரம் வேண்டி நிற்பவர்கள். அல்லது வரங்கள் பல பெற்றதன் நன்றிக்கடன் செலுத்துபவர்கள். இன்றைய மாறிய சமூக அரசியல் சூழலில் இம்மாதிரி நிறைய நடந்தேறி வருகின்றன. பக்தியின் பிறழ்ச்சி.

    பக்தி இயக்கம் தோன்றியதே தமிழ் நாட்டில் தானே. உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெத்திலையும் எல்லாம் கண்ணனாகவே கண்ட ஒரு ஆழ்வார், “சிக்கென உன்னைப் பிடித்தேன், இனி எங்கு எழுந்தருளுவதே”  என்று பரவசப்படும் சமயக்குரவர், “அப்பன் நீ, அம்மை நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீ” என்று இன்னும் ஒரு சமயக் குரவர், இவர்கள் எல்லாம் காட்டிய வழிதான். அது தான் இன்றும் தொடர்கிறது ஆனாலும் அது இத்தகைய அகோர ரூபத்தில் குணம் மாறி தாண்டவமாடமாடுவது எல்லாம் அர்த்தமிழந்து போனதையே சாட்சியப்படுத்துகின்றன. இந்த நூற்றாண்டு பக்தியின் சொரூபம் இது. அன்றைய பக்தியைச் சாடும் இன்றைய பக்தர்கள். இது ஒரு பக்கம்.

    நான் சொல்லவந்தது இன்னொரு பக்கம். அது ஒரு துருவ கோடி என்றால், இது மற்றொரு துருவ கோடி. க.நா.சு. சொல்வார்,  ”யாரும் சிறு கதை எழுத அவர்கள் வாழ்க்கையில் சில அனுபவங்கள் கட்டாயம் இருக்கும்,” என்று அவர் எழுதியிருக்கிறார். எங்கோ நினைவில்லை. இப்படி அவர் நிறைய ஆங்காங்கே உதிர்த்துச் செல்வார், வெகு சாதாரணமாக, அவையெல்லாம் பொருள் பொதிந்தவை.

    அதையே கொஞ்சம் நீட்டிச் சொல்வதென்றால், எல்லோருடைய வாழ்க்கையிலும், எந்த சாதாரணனுடைய வாழ்க்கையிலும் தான், சொல்வதற்கு, என்று நிறையவே இருக்கும். அது மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்வம் மிக்கதாகவும் இருக்கும். பிரபலங்களின் அரசியல் வாழ்க்கையை விட ஒரு சாதாரணனின் வாழ்கையில் காணும் மனித உறவுகள், அதன் நெகிழ்ச்சிகள் உண்மையானவை, உன்னதமானவை. வாழ்க்கையை இனிமையாக்குபவை.

    இது எழுதத் தொடங்கிய பின் தான் கடந்த வாழ்க்கையை ஒவ்வொன்றாக நினைவு கொள்ளத் தொடங்கிய பின் தான் தெரியத் தொடங்கியது.  என்ன தான் இருக்கிறது எழுத?, அப்படி என்ன ஒரு அவதார வாழ்க்கை வாழ்ந்து விட்டோம்?, என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் தம்மை அவதார புருஷர்களாக எண்ணி தாமே எழுதியும், எழுதுவித்தும் நடமாடுபவர் களிடையே வாழும் காலத்தில், அகல் பதிப்பக பஷீரும், தமிழ் சிஃபி அண்ணா கண்ணனும் போயும் போயும் என்னை எழுதத் தூண்டியதும் சரி, மேடை கிடைக்கிறது, கேட்கிறார்கள் எழுதுவோமே, என்னதான் சாதாரணமான வாழ்க்கையே ஆன போதிலும், க.நா.சு. சொன்னது போல, யாருடைய வாழ்க்கையில் எழுதுவதற்கு விஷயங்கள், மனிதர்கள், சம்பவங்கள் இருக்கத் தான் செய்கின்றன என்று தெரிந்தது. ஏதோ எந்த முனைப்பும் இன்றி எழுதிச் சென்றேன். நடந்ததை நினைவில் கொண்டு நினைவில் வந்தவாறே. இயல்பாக எழுதிச் சென்றதில் சொல்ல கொஞ்சம் இருந்திருக்கிறது. அதிலிருந்து தனித்து பின் அட்டையில் பிரதானப்படுத்திச் சொல்ல என்று பஷீரை எடுக்கத் தூண்டியிருக்கிறது. அதுவே ஒரு விதத்தில் இந்த சுய வரலாற்றீன் ஆதார சுருதி என்றும் சொல்லலாம்..

    ”என் வாழ்க்கையில் அப்படி எழுத ஒன்றுமே இல்லை. எழுத்துலகிலும் வெளியிலும் சின உன்னதமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களது சில குறைகளையும் பலவீனங்களையும் மீறி. அவர்கள் உன்னதமான மனிதர்கள் தான். சில கடைத்தரமான இழிதகைகளையும் சந்தித்திருக்கிறேன். எழுத்துலகிலும் வெளியிலும், அவர்களது சில பலங்களையும் மீறி, அவர்கள் இழிந்த மனிதர்கள் தான்.

    எவ்வளவோ மாற்றங்கள், வாழ்க்கை நியதிகளில், கலாசாரத்தில், வாழ்க்கை மதிப்புகளில், அவற்றை நினைத்துப் பார்த்தால் திகைப்பாக இருக்கும்.”

    முதல் பாகம் எழுதத் தொடங்கும் போதே இதெல்லாம் தானாகவே எழுதிச் சென்றது என்று தான் சொல்ல வேண்டும். முதல் சில பக்கங்களிலேயே இது திட்டமிடாமலேயே தன் இயல்பில் தானாகவே எழுதிக்கொண்டுவிட்டது என்று சொல்லத் தோன்றுகிறது. நினைவில் வந்ததையெல்லாம் எழுதுகிறோம். நினைவுக்கு வந்த ஒழுங்கில், வரிசையில். முதல் பாகம் அச்சிட்டு வெளிவந்ததைப் பார்த்தால், அட்டையின் பின் பக்கத்தில் இந்த வாசகங்கள். தன்னையே எழுதிக்கொண்டது என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

    “உங்கள் சுய சரிதையை எழுதுங்கள்” என்று முதலில் அண்ணாகண்ணனும் பஷீரும் சொன்ன போது கொஞ்சம் அலட்சியமாகவே, என்ன இருக்கு எழுத? என்று நினைத்த போதிலும், பின்னர் எழுத தொடங்கியதும், அவ்வப்போது நினைவில் எழுந்ததை எழுதி வரும்போது, எந்த கட்டத்திலும் எந்த வயதிலும், எந்த இடத்திலும் வாழ்க்கை எனக்கு  வாழத் தகுதியான ஒன்றாகவே இருந்ததாகதான் எண்ணுகிறேன்.. அந்த அனுபவங்கள் எதாக இருந்தாலும் ஏமாற்றமோ, ஆச்சரியமோ, துன்பமோ சந்தோஷமோ எல்லாமே, அததற்குரிய மன நெகிழ்வைத் தருவனவாகவே இருந்தன. பாட்டியின் அன்பும், மாமாவின் கரிசனமும், உடலையும் மனத்தையும் வாட்டி வருத்தும் வறுமையையும் மீறி. எந்த பிரதி பலனையும் எதிர்பாராது, உறவுகளுடன் கொண்ட தன் சக்திக்கு மீறிய பாசம்

    இந்த பாசமும், உறவுகளின் நெருக்கமும், தான் இன்னமும் தொடர்கின்றன. அது பாட்டியோ மாமாவோ இல்லாமல் இருக்கலாம் அது 1935 தொடக்கம். அன்று தொடங்கிய மனதுக்கு இதமும் இனிமையுமான நினைவுகள் ஹிராகுட் என்று, ராஜா, மிருணால் காந்தி சக்கரவர்த்தி, அவன் தாயும் தங்கைகளும், ரோத்தக்கிலிருந்து வீட்டை விட்டும் அண்ணனைப் பார்க்க ரயிலேறி நாலைந்து இடங்களில் வண்டி மாறி, கிடைத்ததைச் சாப்பிட்டு புர்லா வந்து கதவைத் தட்டிய அந்தச் சிறுமி, சோப்ராவின் தங்கை, சீனிவாசன், என்று நீளும். எத்தனை சம்பவங்கள், விஜயலட்சுமி, அபிஜீத் சாக்ஸேனா, நீனா, வையெல்லாம் கடந்து தஞ்சை பிரகாஷ் வரை நீளும். ஜெயந்தன் வரைக்கும் கூடத்தான்.எனக்குத் தெரிந்தவரை எந்த கழகத்துடனும் அனுதாபம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால்,. பெரியாரிடம் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டை பக்தி என்றே சொல்லவேண்டும். . ஆனால் என்னுடனான அவரது சினேக பந்தத்திற்கு அதெல்லாம் ஒரு தடையாக இருந்ததில்லை. மறந்து விடுவார். அது பாட்டுக்கு அது. இது பாட்டுக்கு இது என்கிறமாதிரி. .இவ்வளவும் ஒருவனை வெறுப்பதற்கு பாப்பான் என்ற விவரம் போதும் என்னும் இரண்டு தலைமுறை தமிழகச் சமூகச் சூழலில்.அவர் சிக்கியதில்லை. ஜெயந்தனின் இந்த சினேகம் மிகப் பெரிய விஷயம் . அந்த வரலாறு பூராவும் சொல்லியாக வேண்டும். அந்த சினேகங்கள், நெகிழ்ச்சி தரும் அனுபவங்கள் எல்லாம் திரும்ப என் நினைவுகளில் ஓடும். அது ஒரு சுகமான அனுபவம். சாதாரண என் வாழ்க்கைக்கு இனிமை தந்தவர்கள்.  என்னால் ஆவதென்ன? இவர்கள் என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. பம்பாயிலிருந்து தில்லி வரும் ஃப்ராண்டியர் மெயிலில குளிரில் படுத்து உறக்கத்திலிருக்கும் எனக்கு எதிர் சீட்டில் இருக்கும் யாரோ அன்னிய பெண்மணி தன்னிடமிருந்த ஒரு போர்வையை தூக்கத்திலிருந்த எனக்குப் போர்த்தியது என்ன எதிர்பார்த்து?  ராஜஸ்தானிலிருந்து வந்து ஆக்ராவில் வண்டியேறிய சென்னைக்குப் போகும் ஒரு குடும்பம், அவர்களில் ஒரு மூத்த ஸ்திரீ, ஆச்சரியத்தில்  என்னைப் பார்த்து  சந்தோஷத்துடன் முகம் மலர்ந்து ”அட நீங்களா?” என்று தான் கூச்சலே இட்டாள். அவளை பத்து நாட்களுக்கு முன் அதே வண்டியில் சென்னையிலிருந்து தில்லி செல்லும் பயணத்தில் பார்த்தேன். அப்போது நட்பு பாராட்டி, என்னோடு தம் உணவைப் பகிர்ந்து கொண்ட குடும்பத்தினள் அவள். என்னிடமிருந்து அவள் பெற்றது எதுவும் இல்லை. மீண்டும் சந்தித்த சந்தோஷத்தில் அவள் முகம் மலர்ந்தது, எதை எதிர்பார்த்து?

    இதெல்லாம் தான் என் வாழ்க்கை. அதற்கு அர்த்தம் தரும் கணங்கள். இந்த பழைய நினைவுகள் அவ்வப்போது மனதை வருடிச் செல்லும் போது மனத்திரையில் காட்சி தரும்போது ஒரு மெல்லிய இசை, மந்திர ஸ்தாயியில்,விளம்ப காலத்தில் இழையோடும்.  இந்த நினைவுகளை காற்றோடு கரைந்து விடாது நான் பதிவு செய்வது  இந்த இதமான வருடல்களை இந்த எழுத்து இருக்கும் வரையாவது வாழ வைக்கும் என்  ஆசையில் தான்.

    வைத்திய நாத சிவனும், தீக்ஷிதரும், தியாகய்யரும் பாடிக் கேட்கும் அனுபவம் எப்படி இருந்திருக்கும்? யாருக்குத் தெரியும்? மைலாப்பூர்  கௌரி அம்மாள் தன் யௌவன காலத்தில் கோயில் உற்சவத்தில்  நடனமாடும் காட்சி எப்படி இருந்திருக்கும்? என்று நினைத்துப் பார்ப்பதுண்டு காற்றில் கரைந்தது கரைந்தது தானே. என் நினைவுகளின் இனிமையை, என் அனுபவங்களின் சிலிர்ப்பை எழுதியாவது வைக்கலாமே. எனக்கு இவற்றை அளித்தவர்களுக்கு நான் காட்டும் நன்றி உணர்வு தான் இது.

    அன்போடு பழகிய மூத்த உறவினர்களின் புகைப்படங்களைப் பார்ப்பது போல. 1947 மதுரை கிழக்குச் சித்திரை வீதியின் மனித நடமாட்டத்தை புகைப்படத்தில் பார்ப்பது போல. அதைப் பார்த்ததும் மனதில் ஒரு கிளர்ச்சி. ஒரு சோக உணர்வின் இழையோடுமில்லையா? கிட்டப்பாவின் “எவரனி” டேப்பில் கேட்பது போல.

    எழுத்தில் நான் சொல்ல முடியும். ஆனால் அந்த எழுத்து அந்த நினைவுகளின் போது என் மனத்திரையில் ஓடும் காட்சிகளையும் உணர்வுகளையும் கொண்டு வருமா? அவை எனக்குள் சிறை பட்டது. அந்த புகைப்படங்கள் இருந்தால் அந்தப் பழைய வண்டியூர் தெப்பக்குளத்தைப் பார்ப்பது போல. இன்று அது உயிர் இழந்த, இழக்க வைக்கப்பட்ட ஒன்று. நினைவுகளின் சுவட்டில் முதல் பாகம் வெளியிடப்பட்ட போதாவது, உடையாளூரின் கோவில் தெருக்கள், என் மாமா, பெற்றோர் புகைப் படங்கள் கிடைத்தன. ஆனால் ஹிராகுட் வாழ்க்கையைக் காட்சிப் படுத்த,, உறவாடிய நண்பர்கள் யாருடைய புகைப்படங்களும் இல்லை. அந்நாட்களில் இப்போது போல, புகைப் படம் என்பது எல்லோருக்கும் எப்போதும் சுலபமாக கைவசப்படும் ஒன்றலல. 1952-53 ல் புர்லா நண்பர்கள் வெளியூரில் சுற்றிய போது எடுத்த படங்கள் இருந்தன. எங்கள் அலுவலக அதிகாரி லாமெக் பிலாய்க்கு மாற்றலாகிச் சென்ற போது எடுத்த க்ரூப் போட்டோ எனக்கு நினைவிலிருக்கிறது. அதில் மிருணால் இருப்பான். அது எதுவும் எங்கே போயிற்றோ. எனக்கு இவையெல்லாம் மிகப் பெரிய இழப்புக்கள். எண்ணும் போதே ஒரு சோகம் கப்பும் இழப்புக்கள்.

    இருப்பது மெல்ல மெல்ல மங்கி மறைந்து வரும் நினைவுகள். அந்நினைவுகள் தரும் இப்பதிவுகள். இவை ஓரளவுக்கு அந்நாளைய வாழ்க்கையை, மனிதர்களை, பேணிய வாழ்க்கை மதிப்புகளை, ஒரு வேளை சொல்லலாம். ஆனால் வாழ்ந்த உணர்வுகள். மனத்திலோடும் காட்சிகள்…..? அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. இருப்பினும் இந்த நினைவுகள் வல்லமை இணையத்தில் அவ்வப்போது எழுதப்பட்டு வரும் போது, நான் பேசும் ஹிராகுட், புர்லா பற்றியும் அந்நாளில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றியும் அறிந்த அன்பர் எங்கிருந்தோ வந்து அவ்வப்போது தன் மனப்பதிவுகளையும் சொல்லி வந்தார். அவை எனக்கு அளித்த சந்தோஷங்கள், எதிர்பாராது வந்தவை தான். இதோ அதில் ஒன்று.

    இன்னம்பூரான்
    08 10 2011

    இன்னம்பூரான் wrote on 8 October, 2011, 19:54

    கிட்டத்தட்ட 16 மாதங்களுக்கு முன் இது விஷயமாக, நான் கட்டுரை ஆசிரியருக்கு, வேறு ஒரு தளத்தில் எழுதியது:
    *
    அன்புள்ள திரு.வெ.சா. அவர்களுக்கு,
    அன்றொரு நாள் ஒரிஸ்ஸா பாலசுப்ரமண்யம் வந்திருந்தார். மகிழ்ச்சியுடன் இருவரும் ஒரிஸ்ஸாவின் புகழ் பாடிக்கொண்டிருந்தோம். இயற்கையின் மடியில் தூங்கி வடியும் அழகிய  பெண்குழந்தையல்லவா, அவள் ?  நான் 80-களில் ஒரிஸ்ஸாவில் பணி புரிந்தேன். ஸீதாகாந்த் மஹோபாத்ரா  அண்டைவீடு.  நினைத்தால் வரத்து போக்கு.  திரு.வெங்கட் ராமன்,  திருமதி .லீலா  வெங்கட் ராமன் ( அவர் தந்தை திரு கிருஷ்ணசாமியும்   நண்பர், ஆசான்), சுந்தரராஜன் (ஐஏஎஸ்), ஹபீப்அஹ்மத்   மீனாட்டி மிஸ்ரா [கலை உணர்வு: என்னுடன்  தமிழில் பேசினார், பந்தநல்லூரில்  குருகுலவாசம் பற்றி சொன்னார்.  கண்வெட்டு எப்படி என்று கலைஉணர்வுடன் அடித்துக் காண்பித்து என்னையும் என் மனைவியையும் அசத்தினார்.] ஆகியோர்  நட்பு.  கொரபேட் குக்கிராமத்திலிருந்து மயூர்பஞ்ச் இடிந்த அரண்மனைவரை அத்துபடி. சிமிலிபால் கோர் ஏரியாவில் அசந்தர்ப்பமான களிறு நேர்காணல், கைரி புலிக்குட்டியுடன் ஓடி விளையாட்டு, பீத்தர் கணிகா ராஜநாகம், முதலை.சம்பல்பூர் கரடி, பூரி ஜெகன்னாத் நபகளேபரில் குஷி, சாக்ஷிகோபாலில்தாருப்ரம்மன் தரிசனம். ஃபூல்பானி முதுகுடி விருந்து. சொல்லி மாளாது .போங்கள். சொல்வதில்  எனக்கு சந்தோஷம்.  ஒரு காசு கொடுத்து பாடச்சொன்னா, பத்துக்காசு கொடுத்து நிறுத்தச் சொல்லணும். நாடோடி சொன்னமாதிரி, ‘இதுவும்ஒரு ப்ருகிருதி’. கேட்பதில் மகிழ்ச்சி என்றீர்கள். அதான்.
    நீங்கள் ஒரிஸ்ஸாவில் இருந்தது 50களில்? அப்போது நான் சென்னைக்கேணியில் தவளை.


    இன்னம்பூர் பாடல் பெற்ற ஸ்தலம்; கஜப்ரிஷ்ட விமானம்    பெருமாள்  ஶ்ரீனிவாசர் நாவல்பாக்கத்தில் புலன் பெயர்ந்து  இருந்தாராம், சிலகாலம். கும்பகோணத்திலிருந்து  ஸ்வாமி மலை ரோட்டில் 3 மைல்கல், தள்ளி. நம்மூர்  இல்லை. நான் அந்த ஊர்   என்  இயர்பெயர்: ஸெளந்தரராஜன்.  ஒரு வார்த்தைகேட்டா, பத்து எழுதறேன்   சுருக்கி எழுதறான் ன்னு பேரு வேறே.
    நான் கேள்வி  கேட்கவே  இல்லையே. ‘உருப்படவைப்பது சாத்தியமேஎன்று  காமன்பாட்டு பாடினேன்.  தமிழ் நாடு அந்த வகையில் இயங்காததால், பொருள் வளம், கல்வி,  திறன்,  ஆகியவற்றில்  குறைந்த அளவே  உருப்பட்டிருக்கிறது.  மற்றவர்கள் எழுதிய  கருத்துக்களையும் படித்தேன்   உங்கள் கருத்துக்கள்  தெளிவாக இருந்தன, எனக்கு. என் ஆதங்கம் என்ன எனில், கலை உணர்வு அனிச்சமலர் போல.தொட்டாச்சிணுங்கி. சொரணை என்று ஒரு வார்த்தை சொன்னீர்கள். It is morethan aesthetics. It is more than sensitivity. It carries within itselfthe Saraswathi of ப்ரஞ்ஞை. நானும் மற்ற நாடுகளிலும், ஏன் மும்பை, டில்லி, கொல்கத்தாவில் காணப்படும் கலை ப்ரஞ்ஞையை  சென்னையில்  பார்க்க இயலவில்லை.  குறிப்பாக,  இங்கிலாந்து  கலைத்துறை விஷயங்கள்  பற்றி, குடும்ப ஈடுபாட்டினால்  தெரியும்.  நமது  பிரச்னை  இது தான். கலையும்,  அரசியலுக்கும், வணிகத்துக்கும் கைப்பொம்மையாக  இயங்கத் தொடங்கிவிட்டது.  ஒரு சின்ன உதாரணம்:  சாலியமங்கலத்தில் பாகவதமேளா நடக்கிறது.  உலகளவில்  ஒரளவு புகழப்படுகிறது.  அரசு இனி பார்க்காதது போல் பாசாங்கு  செய்யமுடியாதுவிருது  கொடுத்தார்கள்.  யாருக்கு?  நாதஸ்வர  வித்வானுக்கு மட்டும்!  அவர் கம்பீர நாட்டை ஜோராத்தான் வாசித்தார். அதுவா பாயிண்ட்?  ஏதோ பாகவத மேளா நிழலாட்டம் போல. இங்கு  சிலப்பதிகாரம்  எப்படி தழைக்கும்?

    இதுவே ஜாஸ்தி, மன்னிக்கணும்.


    அன்புடன்,
    *
    இன்னம்பூரான்
    08 10 2011

    எங்காவது ஒரு ஸஹ்ருதயர் எனக்குக் கிடைக்கமாட்டாரா என்ன? இதோ ஒருவர் இன்னம்பூரார்/

    வெங்கட் சாமிநாதன்/14.2.2014

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    images (4)இந்த வார வல்லமையாளராக டாக்டர் நா. கணேசனை விருது வாங்க அழைத்திருப்பதற்கு இரண்டு விசேஷ காரணங்கள் உண்டு. ஒன்று எனக்கு இதயத்துக்கு நெருக்கமான மகாகவி பாரதி, இரண்டு ஆந்திரத்தில் நான் மிகவும் மதித்துப் போற்றும் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு. இருவருமே சமகாலத்தவர், அதிலும் வீரேசலிங்கம் பந்துலு பாரதியை விட வயதில் மிக மூத்தவர் கூட (முப்பது வருடங்களுக்கும் மேலாக)

    ராஜமுந்திரியைச் சேர்ந்த வீரேசலிங்கம் பந்துலு வாழ்ந்த காலத்தில் ஆந்திராவின் நிலையைப் பார்க்கவேண்டும். எங்கும் ஏற்றத் தாழ்வுகள் ஏராளமாக மலிந்த காலம், அதை அப்படியே வளர்த்து தமக்குச் சாதகமாக்கிக்கொண்ட ஜமீன்கள், அவர்களுக்குத் துணை நின்ற ஆங்கிலேயர், முரட்டுத்தனமான மூட நம்பிக்கைகள், ஒரு பெண் விதவையென்றால் அதிலும் நோய்கள் மலிந்த அக்காலத்தில் இளவயதில் மரணம் காணும் ஆண்களின் மனைவிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், விதவைப்பெண்கள் தாசி குலங்களில் தள்ளப்பட்டு இழிநிலைக்கு ஆளான காலகட்டம், கல்வியறிவே தெலுங்கு மாநிலத்தைத் தாண்டினால்தான் கிடைக்கும் என்ற நிலைமை, மேல்தட்டு வர்க்க அராஜகம் என்பது கட்டவிழ்ந்து கிடந்த நிலை, இவையெல்லாம் இந்த ஆந்திரத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவைகளா என்பதை இப்போது நினைத்தாலும் பிரமிப்பாகவும், பரிதாபமாகவும் இருக்கிறதுதான்.

    வீரேசலிங்கம் பந்துலு இந்த அநியாயங்களை தைரியமாக எதிர்த்தவர். பெண்கள் முன்னேற வழி வகுத்தவர். தாய்க்குலம் முன்னேறவில்லையென்றால் இந்த உலகமே தேவையில்லை என்று தைரியமாக எழுதியவர். இவர்தாம் தெலுங்கில் முதன்முதலாக நாவல் எழுதியவர். நூறு புத்தகங்களுக்கும் மேலாக எழுதியவர். அத்தனை புத்தகங்களுமே சீர்திருத்தக் கருத்தைத்தான் சொல்லும். விதவா விவாகத்தில் முன் நின்றவர். வீதிநாடகங்கள் மூலமாக விதவைப்பெண்களை தைரியப்படுத்தி மறுவிவாகத்துக்கு அவர்களைத் தயார்படுத்திய அதிசயத்தை இப்போதும் கூட ஆந்திர இலக்கிய உலகம் இவரைப் போற்றிக் கொண்டே இருக்கிறது.

    வீரேசலிங்கம் பந்துலு நம் மகாகவியின் இனிய நண்பர். வீரேசலிங்கம் பந்துலுவின் இந்த ஆந்திர புரட்சியும் சமூக சீர்திருத்தமும் உலகம் அறிய வேண்டுமென்ற கருத்தில் அவரைக் கதாநாயகனாகக் கொண்டு தமிழில் ‘சந்திரிகையின் கதை’ என்ற கதையை எழுதினார் பாரதி. கதையில் வீரேசலிங்கம் பந்துலுவைத் தவிர ஏனைய பாத்திரங்கள் கற்பனை என்றாலும் பாரதிக்கு மிகவும் பிடித்த ‘பெண் விடுதலை; என்ற நோக்கம் இங்கு மிக நன்றாகக் கையாளப்படுத்தப்பட்டுள்ளது.

    திரு நா. கணேசன் இந்த வாரம் மறைந்த ரா. பத்மநாபனின் எழுத்துக்களிலிருந்து சில வரிகள் வீரேசலிங்கம் பந்துலுவைப் பற்றி எடுத்துப் பதித்துள்ளார். திரு கணேசனுக்கு ஒரு நன்றியுடன் அந்த வரிகளை சற்று ஒரு முறை பார்ப்போம்.

    Bharati strongly believed in social reform, and therefore he had great admiration for Kandukuri Veeresalingam Pantulu (1848-1919). Veeresalingam was 34 years senior to Bharati, and he was a close friend and co-worker of Bharati’s first editor, G. Subramania Iyer Veeresalingam was a great social reformer of the times, and Bharati has brought in both Veeresalingam and G. Subramania Iyer as real life characters in his social novel (incomplete) titled “Chandrikaiyin Kathai” (The Story of Chandrika).

    The nove1 starts with the widowing of Visalakshi, paternal aunt of Chandrika, left helpless. Visalakshi goes to Madras with the orphaned Chandrika, to seek the help of G. Subramania Iyer to get her a husband. Iyer sends her to Veeresalingam with a letter.

    Visalakshi goes to Rajahmundry to be disappointed. She learns that Veeresalingam has gone to Madras and is staying at a house in Egmore. She comes to Madras and meets Pantulu, says Bharati:

    “… Inside, he was alone, seated in a deck chair and writing a book.

    “Visalakshi saluted him and gave him the letter from G. Subramania Iyer. Veeresalingam asked her to sit in the chair opposite him. She sat there with Chandrika in her lap, Veeresalingam Pantulu read the letter in full, and then asked her in Tamil, ‘What day is today?’ She replied in Telugu, ‘It is Budhavaaramu.’

    “Meeku Telugu vachchunaa?’ (Do you know Te1ugu?) Pantulu asked.

    “Avunu, chaala baaga vachchunu’ (Yes, I know it very well.) said Visahkshi.”

    Husband-Wife Team

    Bharati then goes on to narrate how Pantulu’s wife came in while he was querying Visalakshi about her attainments. All this is portrayed very naturally and the picture is effective.

    When Mrs. Pantulu learns of the reason for Visalakshi’s visit, she recalls that Gopala Iyengar, Deputy Collector in Tanjore, who had expressed an interest in marrying a widow, had called, and she thought this girl would suit him. There is a discussion between husband and wife on the matter. Visalakshi assures Veeresalingam Pantulu that she is willing to wed Gopala Iyengar, although he drinks, hoping to reform him after marriage.

    At this juncture Gopala Iyengar himself comes form downstairs. As he is fond of a good dinner, Pantulu asks his wife and Visalakshi to go down and prepare a sumptuous feast. After the feast, Pantulubroaches the subject with Iyengar and he readily agrees under the impression that the servant-maid, who was having the child Chandrika while Mrs. Pantulu and Visalakshi were inside the kitchen, was the prospective girl mentioned by Pantulu. Later when he sees Visalakshi, he says no and insists on his original choice. Despite, difficulties, Pantulu is able to arrange the inter-caste marriage of Gopala Iyengar and the Naidu servant-maid.

    As for Visalakshi, requesting Pantulu to arrange a husband for her somewhere else, she goes to stay with some relatives of hers. After some painful incidents she meets a youthful Sannyasi. They fall in love mutually. The young man renounces Sannyasa and marries the widow according to Brahmo rites, with the blessings of Veeresalingam Pantulu.

    சரித்திரத்தின் பொன்னேடுகளிலிருந்து சில தங்கங்களை நமக்கு அளித்த டாக்டர் . திரு நா. கணேசன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு நம் நன்றிகளுடன் வாழ்த்துகளும்..

    கடைசி பாரா: திரு கிரேஸி மோகனின் திருமால் திருப்புகழ்

    “அகந்தை வேரறுத்தவ் விழந்த வான்கிடைத்திங்

    கிருந்த வாறிருக்க -ரமணேசர் 
    புகன்ற வாசகத்தை உணர்ந்து மாதவத்தை 
    நெருங்க ஞானவித்தை -அருள்வாயே 
    அகன்ற சாகரத்தில் அனந்தன் மேலிருக்கை
    அமைந்த யோகநித்ரை, -வனமாலி 
    சுகந்தம் வீசலக்மி பதங்கள் மேவநித்ய 
    இனங்கள் சூரிநிற்க -பயில்வோனே 
    தகுந்த வாறளிப்பு ,சினந்த மாமனுக்கு 
    இகழ்ந்த பாலனுக்கு -முறைவாசல்,
    தினங்கள் போயெமர்க்கை விழுந்து சாவதற்குள் 
    முகுந்த வாவகத்துள் -குடியேற 
    புகுந்த ஆழிவிட்டு பருந்து வாகனத்தில் 
    பறந்து வாயெனக்கு -துணையாக 
    உயர்ந்த கோபுரத்துள் கிடந்து வாழவைக்கும் 
    குடந்தை மாநிலத்து -பெருமாளே”

    அன்பு  நண்பர்களே,

    வணக்கம். கடந்த 23 – 29 ஏப்ரல், 2011 முதல் வல்லமையாளர் விருது  வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த வாரம்  நூறாவது வாரம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த 100 வாரங்களில் சுமார் 90 வாரங்கள் திரு திவாகர் அவர்கள் அந்த வார வல்லமையாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் தனித்த ஆற்றலை பலரும் அறியும் வகையிலும், மற்றவர்களுக்கும் அது ஊக்கம் கொடுக்கும் வகையிலும் விருது வழங்கி இப்பணியை சிறப்பாக நிறைவேற்றியுள்ளார். அவருக்கு நம் வல்லமையின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம். இடையில் அவருக்கு முடியாத சில தருணங்களில் திரு இன்னம்பூரன், பேரா. திரு நாகராசன் மற்றும் திரு. பெண்ணேஸ்வரன் ஆகியோரும் இப்பணியை  மேற்கொண்டனர். வல்லமையின் வளர்ச்சியில் பங்குபெறும் அனைவருக்கும் நம் பாராட்டுகளும், நன்றியும் உரித்தாகுக.  வருகின்ற வாரங்களில் திருமதி தேமொழி இப்பணியின்  பொறுப்பேற்றுள்ளார் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கும் நம் வாழ்த்துகள். அனைவரும் அந்தந்த வார வல்லமையாளர்களுக்கான தங்கள் பரிந்துரைகளை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு வழங்கவும் வேண்டுகிறோம்.  நன்றி.

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 113 (24.03.14)

    மலர் சபா

    மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை

    உறையூரில் தங்கிய கவுந்தி முதலிய மூவரும் வைகறையில் புறப்பட்டுத் தென் திசை நோக்கிச் செல்லுகின்ற வழியில் உதயகாலத்தில் ஓர் இள மரக் காவில் புகுதல்

    rose-garden-3-bo-li

    மூன்று திங்களை அடுக்கி வைத்தது போல் விளங்கிய
    முப்பெரும் குடையின் கீழ்
    மாலையாக மலர்ந்து தொங்கும்
    அசோக மரத்தின் அடர்ந்த நிழலின்கண்
    சிவந்த கதிர்களையுடைய
    கதிரவனின் ஒளி போல் விளங்கும்
    அருகதேவன் எழுந்திருளியிருக்கிறான்.
    அவன் தனக்கென்று ஓர் ஆதி இல்லாதவன்.

    அவனை அம்மூவரும் வணங்கித் தொழுதனர்.
    பின் அங்கே தவப்பள்ளியில் தங்கியிருந்த
    முனிவர் அனைவர்க்கும்
    முன்னர் ஆற்றிடைக் குறையாகிய
    திருவரங்கத்துச் சோலையில்
    சாரணர் தமக்கு அருளி உரைத்த
    அற மொழிகளைக் கவுந்தியடிகள் எடுத்துரைத்தார்.

    அன்றிரவு அருகதேவன் தங்கியிருந்த
    அந்த இடத்தில் தங்கியிருந்து,
    பின் வைகைறையில் தென் திசை செல்ல விரும்பி
    உறையூரை விட்டு நீங்கி நடக்கலாயினர்.

    ஞாயிறு கிழக்குத்திசையில் இருந்து
    ஒளி பர்ப்பி எழுகின்ற வேளை;
    நீர்நிறைந்த வளம் பொருந்திய
    வயல்களும் குளங்களும்
    பொலிவுற்று விளங்கும்
    அழகு பெற்ற பூஞ்சோலை வழியே சென்றனர்.
    வழிப்போக்கர்கள் தங்கும் மண்டபத்தை அடைந்தனர்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  01 – 14

     
    படத்திற்கு நன்றி:
    http://www.mumsema.com/misafir-sorulari/154161-bahar-mevsimi-gul-bahcesi.html
    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 12

    இவள் பாரதி

    அறையெனும் பூமிப்பந்தில் உறங்கும்

    குட்டிச் சூரியனே

    நீ விழித்ததும்

    விடிகிறதெனக்கு

    ————————–

    குழந்தைக்கு

    ஊர்கண் பட்டிருக்கும்

    சுத்திப் போடு என்கிறார்கள்

    உன்னை அணுஅணுவாய் ரசிக்கும்

    என் கண்ணும்பட்டிருக்கும்

    என் காலடிமண்ணை

    எடுத்துத்தர சம்மதம்தான்

     

    இந்த சிமென்ட் பூச்சுத் தரைகளில்

    எப்படி எடுப்பது நகத்தளவு மண்ணை

    தெருமுனைக்குச் சென்று

    தானே வளர்ந்திருந்த செடிக்கருகிலிருந்து

    சிறிதுமண்ணை எடுத்து வந்து

    அதன்மீது நடந்து தந்துவிட்டேன் உன் பாட்டியிடம்

    இனி உனக்குக் காய்ச்சல் அடிக்காது கண்ணே..

     

    ————-

     

    Share
  • சிராய்ப்பு

    (குறுங்கதை)

    அது ஒரு குறுகிய தெரு. அந்தத் தெருவில் வசிக்கும் மழலைகள் சில அந்த இளம்பச்சை நிற வண்ணம் தீட்டப்பட்ட வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தன.

    அந்த வீட்டிற்குள் எப்போதும் போல் இணையவெளியில் உலவிக் கொண்டிருந்தான் கார்த்திகேயன் – வாசலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளில் ஒன்றின் தகப்பன். அந்தக் குழந்தைக்குக் கூட ஏதோ ‘ஷா’வில் முடியும் பெயர். சரியாக நினைவுக்கு வரவில்லை.

    வாசலில் வாகனசத்தம் கேட்கும்போதெல்லாம் வெளியே வந்து அவனது காரை அந்த வாகனங்கள் எப்படிக் கடந்து போகின்றன என்பதை பார்த்துவிட்டு, மீண்டும் உள்ளே சென்று வலைமேயத் தொடங்கிவிடுவான்.

    சமையலறையிலிருந்து திடீரென்று அவன் மனைவி சித்ரா பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடுவதை சலனமில்லாமல் திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் கணிப்பொறியில் மூழ்கினான்.

    வெளியே சென்ற மனைவி, குழந்தையைக் கொண்டுவந்து நாற்காலியில் கிடத்திவிட்டு, உள்ளே ஓடினாள்.

    அப்போதுதான் குழந்தை அழுதுகொண்டிருப்பதை கவனித்தான் கார்த்திக்.

    “என்ன ஆச்சுடி குட்டி” என்று கேட்டுக்கொண்டே குழந்தையிடம் சென்றான்.

    “இடி விழுந்தாகூட உங்க அப்பாவுக்கு அது கேக்காதுடீ குட்டி!” என்று உரக்கக் கத்திக்கொண்டே வந்து அடிபட்ட இடத்தில் மருந்திட்டாள் சித்ரா.

    “சின்ன ஸ்க்ராட்ச் தானே? அதுக்கு ஏன் இவ்வளவு பதைபதைப்பு? குழந்தைய நீதான் கெடுக்கற. நானெல்லாம் சின்ன வயசில்ல அடிபட்டா, மண்ணை எடுத்து அடிபட்ட எடத்துல போட்டுப்பேன். தானா சரியாயிடும். கூல்!” என்றவனை முறைத்துவிட்டு உள்ளே குழந்தையை அழைத்துச் சென்றுவிட்டாள். அவனும் வெளியே சென்று காரை ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் வலைமேயச் சென்றுவிட்டான்.

    அன்று மாலை ஏழு மணி இருக்கும்.

    “குழந்தைக்கு லேசா உடம்பு சுடுது. டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்” என்று கூறிவிட்டு டிரைவரை அழைத்துக் கொண்டு காரில் சென்று அமர்ந்தாள் சித்ரா.

    அதைக் கேட்ட அடுத்தகணம், பதைபதைத்துக்கொண்டு வெளியே வந்த கார்த்திக், “டாக்டர் வீடு இருக்கற தெருவுல ரெண்டு பக்கம் முள்ளுச்செடிங்க நிறைய இருக்கு. தெருமுனையிலேயே காரை விட்டுட்டு நடந்து போய்டுங்க, மகேந்திரன்” என்று டிரைவருக்கு அறிவுரை கூறி அனுப்பிவிட்டு, வாட்டத்துடன் அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தான் கார்த்திக்.

    கார் மருத்துவமனைக்குச் செல்வதற்குள் மகேந்திரனின் கைபேசிக்கு கார்த்திக்கிடமிருந்து மூன்றுமுறை அழைப்புகள் வந்தது.

    மருத்துவமனை இருந்த தெருமுனையில் காரை நிறுத்தினான் மகேந்திரன்.

    சித்ரா காரிலிருந்து இறங்கிவிட்டு, “இன்னொருமுறை அவர்கிட்டர்ந்து கால் வந்தா, கார் மேல ஸ்க்ராட்ச் ஆயிடும்னு கவலைபடாம இன்டர்நெட்ல எதையாச்சும் பண்ண சொல்லுங்க. ஸ்க்ராட்ச் தானே! மண்ணை அள்ளிப் பூசி  சரி பண்ணிக்கலாம்! ” என்று கூறிவிட்டு, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அந்த இருட்டில் தனியாக மருத்துவமனைக்கு நடந்து சென்றாள்.

    Share
  • நாளை நமதே… இந்த நாளும் நமதே

    கவிஞர் காவிரி மைந்தன்

    மக்கள் திலகம் என்னும் அடைமொழி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கல்கண்டு தமிழ்வாணன் அவர்களால் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அவர்களின் மாபெரும் வெற்றிப்படங்களுக்குப் பாடல்கள் இயற்றிப் பெரும்புகழ் ஈட்டியவர் கவிஞர் வாலி அவர்கள் என்பதை வரலாறு சொல்கிறது.

    திரைப்படப் பாடலாசிரியர்கள் பல நூறு பேர்கள் வந்தாலும் தங்கள் தடங்களைப் பதித்துவிட்டுப் போனாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை மட்டுமே காலம் இன்று கணக்கில் வைத்திருக்கிறது. ஏன்.. எப்படி.. எண்ணிப்பார்த்தால், திரைப்பாடல்கள் என்கிற வரையறைகளை வகுத்துக்கொள்ளாமல், வாழ்க்கையின் எல்லைகளை.. இன்ப துன்பங்களை பல்வேறு கூறுகளை.. அப்பாடல்களில் இலகுவாக பக்குவமாய் பதித்து வைத்திருப்பதே அடிப்படைக் காரணம் ஆகும் என்பது புலனாகும்.

    குறிப்பாக, புரட்சித் நடிகர் பொன்மனச் செம்மல் என்கிற அடைமொழிகளைத் தாங்கிநின்ற சாதனை சரித்திரமம் எம்.ஜி.ஆர். என்கிற கதாநாயகனின் பாத்திரப் படைப்புகள் எல்லாம் மக்கள் மனதில் நிச்சயமாக, சத்தியமாக, பலமாக பெரியதோர் தாக்கத்தை உண்டாக்கும் வல்லமை – வசனங்களைத் தாண்டி.. இது போன்ற பாடல்களின் மூலமே சாத்தியமாகும் என்பதை கவிஞர் வாலி அவர்கள் எம்.ஜி.ஆருக்காக எழுதிய பல்வேறு பாடல்கள் சாட்சியம் கூறும். இதோ இவ்வரிசையில் நாளை நமதே திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் .. திரையில் இருமுறை மலரும் அன்பு மலர்களே.. நம்பி இருங்களேன். நாளை நமதே..

    அன்பு மலர்களே நம்பி இருங்களே
    நாளை நமதே இந்த நாளும் நமதே
    தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
    நாளை நமதே எந்த நாளும் நமதே

    தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
    நாளை நமதே…

    காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
    நமக்கென வளர்ந்து

    நாளை நமதே நாளை நமதே நாளை நமதே
    நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

    பாசம் என்னும் ஊர் வழி வந்து பாசமலர் கூட்டம்
    ஆடும் மழையில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம்

    மூன்று தமிழும் ஓர் இடம் நின்று
    பாடவேண்டும் காவியச் சிந்து

    அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
    அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

    நாளை நமதே, நாளை நமதே

    வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே
    நல்ல குடும்பம் ஓளிமயமாக வெளிச்சம் தாருங்களே

    நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி
    எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது

    நாளை நமதே நாளை நமதே

    தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
    நாளை நமதே…

    காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
    நமக்கென வளர்ந்து

    நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

    படம் : நாளை நமதே (1974)
    இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், டி.எம். சௌந்தரராஜன்

    http://www.youtube.com/watch?v=pY-kqvZr070

    இத் திரைப்படம் பார்த்தபோது.. குறிப்பாக இந்தப் பாடலில் இந்த வரிகள் தந்த உற்சாகம், வைராக்கியம் .. இன்று நான் பெற்றுள்ள வெற்றிகளுக்கெல்லாம் முதற்படி என்றால் அது மிகையன்று.

    திரு. தர்மேந்திரா அவர்கள் இந்தியில் நடித்த யாதோங்கி பாரத் என்னும் இந்திப்படத்தின் தழுவல் இந்தப் படம் எனினும் பாடல்கள் மெல்லிசை மன்னரால் அதீதமானதவையாகவும் அற்புதமாகவும் மலர.. கவிதை இதழ்கள் விரிவது போல் பாடல் வரிகள் அமைத்தவர் கவிஞர் வாலி என்பதில் இருவேறு கருத்தில்லை.

    நாளை நமதே இந்த நாளும் நமதே…

    Share
  • வார ராசி பலன் 24.03.14-30.03.14

    காயத்ரி பாலசுப்ரமணியன்
    மேஷம்: வியாபாரிகள் உங்கள் சேவையை விமர்சனம் செய்யும் வாடிக் கையாளர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். மாணவர்கள் புதிய இடங்களில், உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்தால், உடல்நலம் நன்றாகத் திகழும். புதிய வீடுகள் மற்றும் மனைகளை வாங்கும் முன் பத்திரங்களைச் சரிபார்ப்பது அவசியம். வீண் ஜம்பம், வேண்டாத பெருமை இரண்டையும் விலக்கிவிட்டால், கலைஞர்கள் நிம்மதியாய் வேலை செய்யலாம். பணியில் இருப்பவர்கள் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்பட்டால், உயரதிகாரிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக முடியும். பெண்களுக்கு வேலை பளு கூடலாம்.
    ரிஷபம்: கடன் தொல்லைகளினால் சிறிது மன சஞ்சலம் ஏற்பட்டாலும், சிக்கல் வராமல் இந்த வாரம் சமாளித்து விடுவீர்கள். பங்குதாரார்களின் ஆதரவால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கலைஞர்கள் அதிக புகழ்ச்சி எனும் வலை விரிப்பவரிடம் மாட்டிக் கொள்ளாமல் விலகியே இருங்கள். பணியிடத்தில் பிறர் கூறும் குற்றம், குறைகளுக்காக அவர்களிடம் வாக்கு வாதத்தில் இறங்குவதை தவிர்த்துவிடவும். சில சந்தர்ப் பங்களில்,நண்பர்களே உங்களை எதிரியாய் கருதி உங்களோடு மோதும் நிலை உருவாகும். தேவையில்லாமல் பெண்கள் தங்கள் அலுவலக ரகசியங்களை பிறரிடம் கொட்ட வேண்டாம் .

    மிதுனம்: பெண்கள் அடிக்கடி வரும் கோபத்தை குறைத்து கொண்டால், இல்லத்தில் சச்சரவு எழாது. மாணவர்கள் தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் தராமல், படிப்பில் கவனம் செலுத்தி வாருங்கள். அதிக நேரம் பணியில் ஈடுபடுபவர்கள் உடல் நலனில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டிய வாரமிது. நீங்கள் எங்கு பணி புரிந்தாலும், சொல்,செயல் ஆகிய இரண்டிலும் நிதானத்தைக் காட்டி வந்தால், எந்த நிலைமையும் சமாளித்து விடலாம். வியாபாரிகள் வாக்குறுதிகளை வழங்குவதைக் காட்டிலும் அதை நிறைவேற்றி வைப்பதில் கவனமாய் இருந்தால், சிக்கல்கள் ஏதும் வராது. அனைவரை யும் அனுசரித்துச் செல்வதன் மூலம் கலைஞர்களுக்கு ஆதாயம் இரட்டிப்பாகும்.

    கடகம்: உங்களின் நிதி நிலைமைக்கேற்றவாறு காசோலைகளை பயன்படுத்துவது நல்லது. புதிய நபர்களிடம் வியாபார ஒப்பந்தம் செய்யும் முன்பு, அவர்களின் பொருளாதாரம், முன் அனுபவம் ஆகியவற்றை அறிந்து செயல்படவும். பணியில் பொறுமையை சோதிக்கும் சந்தர்ப்பங்களையும், லாவகமாக கையாண்டால், மன அமைதிக்கு பங்கம் வராது. சுய தொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெறுவதற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்.மாணவர்கள் நாவடக்கம் நன்மையைத் தரும் என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால், நற்பெயரை எளிதில் தக்க வைத்துக் கொள்ள இயலும்.

    சிம்மம்: சிலருக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று மகிழும் வாய்ப்பு கிட்டும். கர்ப்பிணிப் பெண்கள் உடலில் சில அசௌகரியங்கள் தோன்றி மறையலாம். தகுந்த மருந்து களை உட்கொண்டால், ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணியில் இருப்பவர் களை கவனத் தடுமாற்றம், மறதி ஆகியவை அலைக்கழிக்கும். மாணவர்கள் வெளி வட்டாரப் பழக்கங்களில் தராதரமறிந்து பழகிவந்தால், வீண் சங்கடங்கள் உங்களை அண்டாது. கலைஞர்கள் அபவாதங்களுக்கு இடமளிக்காதவாறு உறுதியாய் செயல் படுங்கள். வியாபாரிகள் ஏனோதானோவென்று பணிகளைச் செய்யாமல், தகுந்த திட்டப்படி செய்தால், குழப்பங்களைத் தவிர்த்து விடலாம்.

    கன்னி: உயர்ந்த பதவியில் இருப்போர்கள், பிறரின் குற்றம் குறைகளை இதமாக சுட்டிக் காட்டினால், வேலைகள் தேங்காமல் முடிந்து விடும். இந்த வாரம் பெண்கள் உறவுகளி டமிருந்து அதிக சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. பொது சேவையில் ஈடுபட்டுள்ள வர்கள் பொதுப்பிரச்னைகளைத் தீர்க்க, புத்திசாலித்தனமும், பொறுமையுமே உதவும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் தகுதிக்கேற்ற நட்பைத் தேடிக் கொண்டால், வீண் தலைவலியை தவிர்த்து விடலாம். வியாபாரிகள் புதிய முயற்சிகளுக்குத் தேவையான பக்கபலத்துடன் களம் இறங்கினால், நினைத்ததை சாதிக்க இயலும்.

    துலாம்: பணி புரிபவர்கள் உடனிருந்தே காலை வாருபவர்களிடம் உஷாராக இருந்தால், உங்கள் உழைப்பு வீணாகாமலிருக்கும். பெண்கள் உபத்திரவம் தரும் அண்டை அயலா ரை அருகில் சேர்க்காதீர்கள். உங்களின் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப் பாக வைத்தால், வீண் கலக்கத்தை தவிர்த்து விடலாம். உங்களின் பழைய அனுபவம், தொடர்புகள் ஆகியவற்றின் உதவி கொண்டு வியாபார சிக்கலைத் தீர்க்க இது ஏற்ற வாரம். கலைஞர்கள் சுற்றியிருப்பவர்களால் வீண் செலவுகள் செய்ய வேண்டிய சுழலுக் குத் தள்ளப்படுவர். மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில் அதிக கவனம் தேவை.

    விருச்சிகம்: நெருக்கடியான சூழலிலும் பெண்கள் புன்னகையே பதிலாக தந்து வாருங்கள். குடும்ப ஒற்றுமை குலையாமல் இருக்கும். பணி புரியும் இடங்களில் அவசரமாய் செயல்படுவதை தவிர்த்து, தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டால், எவரும் உங்களை குறை கூற மாட்டார்கள். பண விஷயங்களில் எவருக்கும் அவசரப்பட்டு வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். மாணவார்கள் மாதத் தேர்வுகளை அலட்சிய மாக எண்ணாமல் கவனத்துடன் எழுதுவது அவசியம். வியாபாரிகளுக்கு, நம்பிக்கை க்குரிய பணியாளர்கள் நிறுவனத்திலிருந்து விலகிச் செல்லும் சூழல் உண்டாகும். வாகனப் பராமரிப்பிற்கென்று சில்லறை செலவுகளை செய்வீர்கள்.

    தனுசு: கலைஞர்கள் வெளி இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பொருட்களில் கவனமாக இருந்தால், கலை நிகழ்ச்சிகள் வெற்றிகரமாய் அமையும். பெண்கள் மின்சாதனப் பொருட்களை கவனமாய் கையாளுங்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, சேமிப் பை அதிகப்படுத்தினால், கடன் தொல்லைகளை குறைத்து விடலாம். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு சற்றே பொறுப்புக்கள் அதிகரிக்கும். மாணவர்கள் சிறிய காரியத்தை யும் சிரத்தையுடனும் செய்தால் சிறப்பான பலனைப் பெறலாம்,அடிக்கடி வெளியூர்ப் பயணம் செல்பவர்கள் சளித் தொந்தரவுக்கு ஆளாக வேண்டி வரும். வியாபாரிகள் ஒப்பந்தங்களைப் பெற அங்கும், இங்கும் அலைந்து திரிவர்.

    மகரம்: எதிரும் புதிரும் இருந்த உறவுகள், நெருங்கி வருவதால், பெண்கள் மகிழ்ச்சி யுடன் திகழ்வார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவது அவசியம். மாணவர்கள் சின்னசின்ன விஷயங்களுக்கு உணர்ச்சி வசப் படுவதைத் தவிர்த்தல் நலம். தம்பதிகளுக்குள் அனுசரணையும், புரிதலும் இருந் தால், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தங்கும். பணியில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு களை விருப்பமுடன் ஏற்றுக் கொள்வவதால், நல்ல பெயரோடு பதவி உயர்வும் வந்து சேரும். தொழிலாளர்கள் இடையே தோன்றும் மன வேறுபாடுகள் பெரிதாகாமல் இருக்க அவர்களை தட்டிக் கொடுத்து செல்லுங்கள். வியாபாரம் சீராக இருக்கும்.

    கும்பம்:வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ளும் முன், அதில் உள்ள நிறைகுறைகளை உணர்ந்து செயல்படுவது நலம். பெண்கள் பிள்ளைகளின் கூடாத நட்பினால் தோன்றும் பிரச்னைகளை முளையிலேயே கிள்ளுவது புத்திசாலித்தனமான செயலாகும். நீங்கள் எதிர்பார்த்தவகைகளில் வரும் அதிக வரவால் பழைய கடன்களை தீர்க்க தேவையான பணம் கிடைக்கும். சுய தொழிலில் தோன்றும் கஷ்டங்களைக் கடக்க உங்கள் உழைப் பும், சாமர்த்தியமும் கை கொடுக்கும். கலைஞர்கள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல தகவல்கள் கிடைக்கும் வரை பொறுமையாய் இருப்பது அவசியம்.

    மீனம்: எதிலும் முனைப்புடன் ஈடுபடும் மனப்பாங்கால், வியாபாரிகள் எடுக்கும் முயற்சியெல்லாம் லாபமாய் மாறும். மாணவர்கள் புதிய இடங்களில் எவரை நம்பியும் உங்கள் உடைமைகளை ஒப்படைக்க வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னை களை நிதானமாகக் கையாள்வது நல்லது. பெண்கள் முன் கோபத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு செயலில் இறங்கினால், குடும்ப முன்னேற்றமான நிலைக்கு செல்வது உறுதி. கலைஞர்கள் பெரிய மனிதர்களின் சந்திப்பினால் பெரிய செலவுகளைச் சந்திக்க நேரிடும் . கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் அவ்வப்போது தோன்றும் சிறிய சச்சரவுகளைப் பெரிது படுத்தவேண்டாம்.

    Share
  • மணிமொழிக்கு அம்மா எழுதும் கடிதம்

    விசாலம்

    என் அன்புள்ள மணி ..நீ அங்க சௌக்கியமா? மாப்பிள்ளை எப்படி இருக்கார்?உங்க இரண்டு பேருக்கும் என் ஆசீர்வாதங்கள்..நீ எங்கிட்ட கோச்சுண்டு போனதிலிருந்து எனக்கு மனசே சரியா இல்லை.குட்டி சூடாமணி அதாண்டி நீ ஆசை ஆசையா சூடின்னு கூப்பிடுவாயே அந்த செல்லக்குட்டி எப்போதும் போல் எங்கிட்ட சமத்தாய் இருக்கிறாள். லோவர் கேஜி போய்ட்டு வராள். .உங்குழந்தைய விட்டுட்டு இருப்பது உனக்கு சிரமம் தான் .மனசு கஷ்டந்தான் .ஆனா என்ன செய்ய ?நீ கூப்பிட்டா அவ உங்கூட வர மாட்டேங்கறாளே. நான் என்ன செய்ய? யானை தன் தலை மேல தானே மண்ணை வாரிப்போட்டுண்ட மாதிரி நீயே தான் இந்த நிலைமைக்கு காரணமாயிட்டே.இன்னிக்கு இந்தக்கடிதாசுலே என் மனச கொட்டிடப்போறேன். ஏன்னா எனக்கும் வயசாச்சு.ஒரு நாள் இருப்பது போல் உடம்பு ஒரு நாள் இல்லை. அப்பா இல்லாத பொண்ணாச்சே ன்னு உன்னை நன்னா படிக்க வச்சேன். படிப்பு வேஸ்ட் ஆக்காமல் வேலைக்கு போகப்போறேன்னு நீ. சொன்னே. எனக்கு என்ன தெரியும் நீ மாடலாகவும் இருக்க போறேன்னு . எனக்கு பிடிக்காத ஒரு பேஷன் கம்பெனில சேர்ந்தே. அங்க சேர்ந்தப்பறம் என்னிடம் வந்து ‘சேரட்டுமா” ன்னு கேட்டே. உன் பிடிவாதம் தான் ஜயிச்சுது. அங்க தான் போனேயே .எப்போதும் பணம் பிசின்ஸ் ன்னு மெஷினப்போல் வேலை செய்யற ஒத்தனை காதலிச்சே. அவன் உன்னை மாடலிங் ல நன்னா யூஸ் பண்ணிண்டான் .உன்னால அவனுக்கு வந்த லாபம் கொஞ்சமா நஞ்சமா! இப்படியே விடப்பிடாதுன்னு நினைத்து உங்க இருவருக்கும் கல்யாணமும் செஞ்சு வச்சேன் .அப்பறந்தான் எனக்கு நிம்மதி .கிடைச்சுது .போதுண்டி இனி இந்த வேலை வேண்டாம் ன்னுசொன்னேனே உனக்கு ஞாபகம் இருக்கா? ஆனா நீ என்ன சொன்னே ‘ அம்மா நான் ஒரு குழந்த பெத்துண்டப்பறம் வேலையை விட்டுடறேன்”ன்னு சொன்னே. ஆனா உன் அழகு குலஞ்சுபோய்டும்ன்னு நாளைக்கடத்திண்டே வந்தே. ஆனாலும் கடவுள் என் பிரார்த்தனையைக்கேட்டுட்டார்.

    அன்னிக்கு எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு . காலைல பூஜை பண்ணி முடிச்சேன் .உம் போன் கால் வந்தது .”அம்மா நான் கன்ஸீவ் ஆயிருக்கேன்.” “ஆஹா மணி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு .மும்பையில் மழை ரொம்ப ஜாஸ்தி. மழைல எல்லாம் நினையாதே “

    “நிறுத்தும்மா .நானே வருத்தமா இருக்.கேன் சனியன் பிடித்தது இப்போவே வந்திடுத்து . இன்னும் ஒரு வருஷத்துக்கு மாடலிங் எல்லாம் குளோஸ்” ன்னு சொன்னாயேஞாபகம் வரதா? அப்பறம் அழகு பிம்பமாக உனக்கு சூடாமணி பொறந்தா.. எதோ கடமையே ன்னு பெத்துப்போட்டாப்போல் அந்தக்குழந்தைய எங்கிட்ட கொடுத்துட்டே. ஏதோ ஒரு இரண்டு மாசம் பால் கொடுத்தே.அப்பறம் உன் அழகு குலைஞ்சுடுமேன்னு அதையும் நிறுத்திட்டே. எப்போ பாத்தாலும் ஆபீஸ் .புகழ் பணம்ன்னு நீங்க இரண்டு பேரும் அலஞ்சீங்க.போறதத்துக்கு

    மாப்பிள்ளைக்கு சிங்கப்பூரில் வேலை கிடைச்சு போனார்.நீயும் அங்க அவரோட போவேன் ன்னு அடம் பிடிச்சே அது சரிதா. புருஷன் இருக்கற இடத்தில தான் நீயும் இருக்கணும் ஆனா உன் குழந்தையும் அழச்சிண்டு போணுமா வேண்டாமா? “சூடி உங்கிட்ட இருக்கட்டும் அவ உங்கிட் வளரட்டும்.ஏன்னா எனக்கும் வேலைல பிரமோஷன் கிடச்சிருக்கு எனக்கு குழந்தையோட நிம்மதியா வேலை செய்ய முடியாது. அது வேற ஙொய் ஙொய்ன்னு அழும் . அந்த ஊசி இந்த ஊசின்னு அதெல்லாம் வேற பாத்துக்கணும் என்னால முடியாதம்மா. “ன்னு கட் அன்ட் ரைட்டா எங்க்கிட்ட சொன்னாயே அது ஞாபகம் இருக்கா?

    அன்னிலேந்து இந்த எட்டு வருஷமா சூடி எங்கிட்டதான் இருக்கா. வருஷத்தல ஒரு மாசம் வந்து இவளோட இருந்தா எப்படி ஒட்டிப்பா? சொல்லு.ஆபீசில யாரோ குழந்த உங்கிட்ட ஒட்டாம போயிடும் அதனாலே உங்கிட்ட அழைச்சுண்டு வந்திடுன்னு சொன்னதாக நீ சொன்னே.அதனாலே போன மாசம் நீ வந்தவுடனே ஆசையா சிங்கப்பூர்ல வாங்கிய கவுனை காட்டி நீ கூப்பிட்டே .அது என்ன வெறும் பொம்மையா ?அதுக்கும் உணர்ச்சிகள் இருக்கே. ” உங்கம்மா உன்னை விட்டுட்டு சிங்கப்பூரில இருக்காடின்னு அவ பிரண்டு அவளிடம் சொல்றாளாம் அதான் அன்னிக்கு சூடி தன்

    மூஞ்சியைத்திருப்பிண்டு இது யாரம்மா இந்த ஆன்டி .னு சொன்னா. நீயோ விடாமே ‘அட சூடிக்குட்டி என் செல்லமே நான் தான் உன் மம்மி ன்னு சொன்னே. உன் கையை நீட்டி வான்னு சொன்னே .அதுவோ .போ ஆன்டி .நீ என் மம்மி இல்லை .இவதான் என் மம்மி ன்னு என் கழுத்தை கட்டிண்டா.நீ கூப்பிட கூப்பிட மூஞ்சியை திருப்பிண்டா? அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? இதுக்காக கோச்சுண்டு ஊருக்குப்போனால் என்ன செய்யறது? உனக்கு குழந்தையா இருக்கச்ச பாத்துக்க முடிலை. இப்ப அழகா எட்டு வயசு சிறுமியா இருக்கச்ச உனக்கு கூட வச்சுக்கணும் போல இருக்கு .எனக்கும் இனிமே இந்தக்குழந்தையை விட்டுட்டு இருப்பது கஷ்டம் தான் நீ என்னையும் அங்கு கூப்பட தயங்கறாய். உன் பிரஸ்டிஜ் என்ன ஆகும்ன்னு உனக்கு தோன்றது !ரொம்ப நாளா என் மனசில இருக்கறத உங்கிட்ட கொட்டிடணும் இருந்தேன் . நீ கோபத்தல போன்ல கூட சரியா பேசல .அதனால இந்த லெட்டர் எழுதறேன். குழந்த வளர்ப்பு என்பது சும்மா இல்லை அது ஒரு வரப்பிரசாதம். கொடுத்து வச்சிருக்கணும் .அங்கு பணம் பெரிசில்லை. புகழ் பெரிசில்லை . அந்தஸ்து பெரிசில்லை .இனியாவது புரிஞ்சுக்கோ . நம்மிட்ட நமக்கு வேணுங்கற சொத்து இருக்கு. அதனாலே வேலையை விட்டுட்டு சூடியோட ஒரு இரண்டு வருஷமாவது இரு .அவ உன்னோட ஒட்டிண்டுடுவா. என்ன இருந்தாலும் ரத்த பாசம் ஆச்சே . மேலே எனக்கு என்ன எழுதறதுன்னு தெரிலை. கோபத்தை தூக்கிப்போட்டுட்டு அமைதியாக யோசி . .. உடம்ப பாத்துக்கோ. ராத்திரி வேலைன்னு அலையாதே. சரியான சமயத்ல சாப்பிடு. நேரம் கெட்ட நேரத்ல சாப்பிட்டா அல்சர் வந்துடும் .இந்த லெட்டர் வந்தவுடனே எங்கிட்ட பேசு .எல்லாம் ஒரு நாள் இல்லாட்டா ஒரு நாள் சரியாய்டும் இப்படிக்கு உன் அம்மா . .

    Share