Blog

  • சூரியனை நெருங்கிச் சுற்றும் முதற்கோள் புதன் மெதுவாய்ச் சுருங்கிக் கொண்டு வருகிறது

     
     
     

    The Shrinking Planet -1

    (NASA’s Messenger Space Probe Orbiting Planet Mercury)  

    [March 16, 2014] 

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-wZ-67otBQw

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=VMN7R4d5JX0

    http://www.dailymotion.com/video/x1hsxnj_why-planet-mercury-is-shrinking_travel

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=AdbVizaV9C4

     

     

    பரிதியை நெருங்கிச் சுற்றுவது
    முதற்கோள் புதன் !
    நாசா அனுப்பிய மாரினர்
    முதல் விண்ணுளவி
    புதன் கோளைச் சுற்றி
    விரைந்து சென்று
    பாதிக் கோளை உளவியது !
    நாசாவின் இரண்டாம்
    விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர்
    புதன் கோளை
    இரு புறமும் சுற்றி
    முழுத் தகவல் அனுப்புகிறது
    இப்போது.
    பரிதிக் கதிர் சுட்டுப் பொசுக்கிடும்
    கரிக்கோள் புதக்கோள் !
    தளப் பரப்பில் மேடு,  பள்ளம்,
    முறிவுகள் நிரம்பியது !
    உருகிய உட்கரு குளிர்ந்து, உடல்
    சுருங்கிப் போகும்
    உலோகக் கோளம் அது !
    வெப்பமும் குளிரும் மாறி,
    பரிதி வீசிப் பந்தாடும்
    சிறிய கோள் !

    ++++++++++++++++

    unnamed

    புதிய தகவல் கண்டுபிடிப்பு பல்லாண்டுகள் வெப்ப நிலை வரலாற்று மாடல்களுக்கும், புதக்கோள் சுருக்க மதிப்பீடுக்கும் [Paradox between Thermal History Models & Estimates of Mercury Contraction]  இடையில் நிலவிய முரண்பாடுகளைத் தீர்த்தது.  இப்போது வெப்ப உற்பத்தி, வெப்ப இழப்பு, கோள் சுருக்க வரலாறு முரண்பாடு இல்லாது சீராக ஒருமித்து  உள்ளது.

    பால் பைர்ன் [Paul Byrne, Planetary Geologist, Messenger Spacecraft Scientist] [March 16, 2014]

    1974- 1975 ஆண்டுகளில் மாரினர் -10 விண்ணுளவி தகவல் அனுப்பிய போது புதன் கோளின் உட்கரு வெப்ப பரிணாமத்தில் [Thermal Evolution of Mercury Interior] எனக்கு வேட்கை மிகுந்து அதில் ஈடுபாடு கொண்டேன்.  ஆனால்  வெப்ப நிலை மாடல் மூலம் கண்ட அளவு, பூதளவியல் விஞ்ஞானிகள் முன்னறிவித்த புதன் கோள் சுருக்க அளவை விட மிகையாக இருந்தது.   மேலும் அப்போதைய முன்னறிவிப்பு மாரினர் -10 விண்ணுளவி புதன் கோளில் பாதிக்கும் குறைந்த அளவு கோளத்தை உளவி அனுப்பிய தகவல் மட்டுமே.  நாற்பது ஆண்டுகளாக  எங்கள் கோட்பாடுக்கும், ஆய்வு விளைவுக்கும் இடையே  ஒரு மர்மமாக இருந்த இந்த முரண்பாடு  இப்போது முடிவாகத் தீர்வானது.

    ஷான் ஸாலமன் [Sean Solomon, Principal Investigator, Mariner -10 Space Probe]  

     

    Earth Mercury Comparision

    “பரிதிக்கு மிக நெருங்கிய புதன் கோளை நோக்கிச் சென்ற நாசா விண்ணுளவி சிறிய பாறை அண்டத்தை அண்டிச் சுற்றும் முன்பே முக்கியத் தகவல் பலவற்றை அனுப்பி யுள்ளது.  இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் நினைத்திருந்தது போல் இப்போது இல்லை புதன் கோள்.  மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவி பெருங்குழிப் பீடங்களையும், கடந்த கால எரிமலைத் தடங்களையும் வியப்பூட்டும் காட்சிகளாய்க் காட்டியுள்ளது.”

    ஷான் சாலமன் (பிரதம ஆய்வாளர், நாசா மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவிக் குறிப்பணி) (ஆகஸ்டு 15, 2010)

    “பரிதிக் கோளின் மிக நெருங்கிய அகக் கோளை ஆராயும் முயற்சியில் அப்பாலுள்ள மற்ற கனத்த கோள்களோடு மாறுபடும் வேறுபாடுகளை நாங்கள் அறிந்து கொள்வோம்.  குறிப்பாக அகக் கோள் புதனைத் தேடும் ஆராய்ச்சியில் நமது புவிக்கோளைப் பற்றிப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.”

    ஷான் சாலமன் (பிரதம ஆய்வாளர், நாசா மெஸ்ஸெஞ்சர்)

    “நாசாவின் முதல் விண்கப்பல் மாரினர் -10 போல் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் புதன் கோளை நாங்கள் விரைவில் நெருங்கிச் சுற்றியிருக்க முடியும்.  ஆனால் மாரினர் சென்ற அத்துணை வேகத்தில் நாங்கள் புதன் கோள் ஈர்ப்பு விசையில் மெஸ்ஸெஞ்சரை இறங்க வைத்துச் சுற்றி வர இயலாது.  புதன் கோளை நெருங்கும் போது மிக மெதுவாகச் சென்றால்தான் விண்ணுளவி புதன் ஈர்ப்பு விசையில் இறங்க (Spacecraft Orbital Insertion) ஏதுவாகும்.”

    ஷான் சாலமன் (பிரதம ஆய்வாளர், நாசா மெஸ்ஸெஞ்சர்)

     

    The Shrinking Planet -3

    முன்பு எண்ணியதை விட மிகையாகச் சுருங்கி வருகிறது புதன் கோள்  

    2014 மார்ச்சு 16 “இயற்கை பூதளவியல் விஞ்ஞான இதழ்” [Nature Geoscience] வெளியீட்டில், நாசாவின் விண்ணுளவி மெஸ்ஸஞ்சர் அனுப்பியுள்ள புதிய கோளத் தளவியல் படப்பிடிப்புப் பதிவின்படி,  புதக்கோளின் பெரிதான உட்கருக் கனல் திரவம் குளிர்ந்து, விஞ்ஞானிகள் முன்பு செய்த மதிப்பீட்டுக்கும் மிகையாகச் சுருங்கி வருகிறது என்று அறியப் படுகிறது.   புதக்கோள் உட்கரு குளிர்ந்து, சுருங்கி வரும் போது முறிந்த, திரிந்த 5900 பூதள வடிவமைப்புகளை ஆய்ந்து, கணக்கிடப் பட்டுத் தீர்வான முடிவே அது.   அந்தக் கண்டுபிடிப்பில் புதக்கோளின் வெப்ப நிலைப் பரிணாமம் , அடித்தட்டுப் பெயர்ச்சி, எரிமலை வரலாறு, மிகப் பெரிய உலோக உட்கரு அமைப்பு ஆகியவற்றைத் [Thermal, Tectonic, Volcanic History, Structure of the Large Metallic Core] தெளிவாய்ப் புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

    பூமியைப் போல் அடுக்கடுக்கான பல்வேறு அடித்தட்டுகளின்றி, புதக்கோள் ஒற்றை அடித்தட்டு கொண்டது.   நாசா புதன் கோளைச் சுற்ற முதலில் அனுப்பிய விண்ணுளவி மாரினர் -10 [Mariner -10] புதன் மேற்தளத்தை 45% அளவே ஆய்வு செய்ய முடிந்தது.   முழுப் பரப்பைத் தழுவாது, கணித்த பழைய மதிப்பீடுகள் 3.8 பில்லியன்  ஆண்டுகளில் புதனின் ஆரம் 0.5 – 2 மைல் [0.8 -3 கி. மீடர்] குன்றியது என்று குறிப்பிட்டன.   ஆனால் வெப்ப நிலை வரலாற்றின்படி 3 – 6 மைல் [5-10 கி. மீடர்] ஆரம் குறைந்தது என்பது முன்னுரைக்கப் பட்டது.  இப்புதிய விளைவுகள் புதக்கோள் பழைய அளவை விட 4.4 மைல் [7  கி.மீடர்] அளவு மேலாகச் சுருங்கியது என்று காட்டு கின்றன. அதாவது வெப்ப நிலை மாடலை ஒப்ப, தற்போதைய ஆரத்தின் நீளம் : 1516 மைல் [2440 கி. மீடர்].  பால் பைர்ன் குழுவினர் [Paul Byrne & Coauthors] 5934 மேடு, பள்ளங்களை ஆய்ந்து, புதக்கோள் 5 முதல் 560 மைல் சுருங்கி விட்டதாகக் கூறுகின்றார்.  இப்படிச் சுருங்கிப் போகும் புதக்கோளின் திரவ உட்கரு முழுவதும் ஒரு காலத்தில் உறைந்து போய்ச் சுருக்க இயக்கம் முற்றிலும் நிறுத்தமாகும் !

    சுமார் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, புதக்கோளின் உட்கரு மெதுவாய்ச் சுருங்கத் துவங்கி, இதுவரை 8.8 மைல் [14 கி.மீடர்] குறைந்து, புதக் கோளின் ஆரம் தற்போது சராசரி 3030 மைல் [4800 கி.மீடர்] என்று கணிக்கப் படுகிறது.  பூமியைப் போல் புதக்கோளின் உட்கருவும் கடுமைக் கனல் உலோகக் கருவாய் [Super Hot Metallic Core] உள்ளது.  புதக்கோளின் அடித்தட்டு பூமியின் அடித்தட்டுகள் போல் ஒன்றின் மேல் ஒன்று ஏறி நில அதிர்ச்சிகள் உண்டாக்குவ தில்லை.

    முதன்முதல் புதன் கோளை இருபுறமும் சுற்றிய நாசா விண்ணுளவி

    2011 மார்ச் 17 ஆம் தேதி நாசாவின் விண்ணுளவி ‘மெஸ்ஸெஞ்சர்’ ஆறரை ஆண்டுகள் பயணம் செய்து பரிதியை மிக நெருங்கிச் சுற்றி வரும் புதனை நீள்வட்டத்தில் வட்டமிட ஆரம்பித்தது.  பரிதிக் குடும்பத்திலே மிகச் சிறிய புதக்கோள் பரிதிக்கு மிக நெருங்கிச் சுற்றுவதால் தள உஷ்ணம் சூடேறி ஈயத்தைக் கூட உருக்கிவிடத் தீவிரம் உள்ளது. பரிதியின் அத்தகையக் கடும் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவிக்குப் போதிய வெப்பக் கவசம் இணைக்கப் பட்டுள்ளது.  மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவிதான் முதன்முதல் புதன் கோளை இருபுறமும் ஆராயச் சுற்றி வருகிறது.  1974-1975 இல் நாசா அனுப்பிய மாரினர் -10 (Mariner -10) விண்கப்பல் வெள்ளிக் கோளைச் சுற்றிப் பிறகு புதக் கோளையும் ஒருபுறம் சுற்றிப் படம் எடுத்து விபரங்களையும் பூமிக்கு அனுப்பியது.  தற்போது இருபுறமும் சுற்றி வரும் மெஸ்ஸெஞ்சர் ஏழாண்டுக்கு முன்பு 2004 ஆகஸ்டு 3 ஆம் தேதி அமெரிக்காவின் பிளாரிடா கெனாவரல் ஏவு முனையிலிருந்து ஏவப்பட்டது.  மெஸ்ஸெஞ்சர் புதனை மிகவும் நெருங்கி 200 கி.மீ (124 மைல்) உயரத்தில் சுற்றப் போவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.  விண்ணுளவியின் சுற்று நீள்வட்டக் குற்றாரம் : 200 கி.மீடர் (124 மைல்), நீளாரம் : 15,000 கி.மீடர் (9000 மைல்).

    மெஸ்ஸெஞ்சர் (MESSENGER) என்பதின் விரிவான விளக்கம் புதக்கோள் மேற்தளம், சூழ்வெளி, பூதளவியல் தொகுப்பு (MErcury Surface Space ENvironment GEochemistry & Ranging) என்ப தாகும்.  விண்ணுளவியின் நிறை : 485 கி.கிராம் (1070 பவுண்டு).  446 மில்லியன் டாலர் மதிப்புள்ள விண்ணுளவியின் பரிமாணம் : (1.85 மீடர் உயரம், 1.42 மீடர் அகலம், 1.27 மீடர் ஆழம்) (6 அடி உயரம், 4.5 அடி அகலம், 4 அடி ஆழம்).  விண்ணுளவி 608 கி.கிராம் (1340 பவுண்டு) எரிசக்தி திரவம், அழுத்தம் உண்டாகப் போதிய ஹீலியம் ஆகியவற்றைத் தூக்கிச் செல்லும் திறமுள்ளது.  திசை நோக்கி விண்ணுளவியைத் திருப்புவதற்கு நான்கு பெரிய உந்து ராக்கெட்டு களும், நான்கு சிறிய உந்து ராக்கெட்டுகளும் இணைக்கப் பட்டுள்ளன.  புதக் கோளின் இராசாயனக் கலவைகள், பூதளவியல், காந்தவியல் பண்பாடு களைத் துல்லியமாகப் பதிவு செய்ய மெஸ்ஸெஞ்சர் அனுப்பப் பட்டுள்ளது.  ஏவப்பட்ட பிறகு மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவி மூன்று முறை ஈர்ப்பு விசை வீச்சில் (ஜனவரி 2008 இல் பூமிச் சுற்று வீச்சு, அக்டோபர் 2008 இல் வெள்ளிக் கோள் சுற்று வீச்சு, செப்டம்பர் 2009 இல் புதக் கோள் சுற்று வீச்சு) உந்தப் பட்டு இறுதியில் வேகம் மிதமாக்கப் பட்டு 2011 மார்ச் 18 இல் புதக்கோள் ஈர்ப்பு விசையில் இழுக்கப் பட்டு அதை நீள்வட்டத்தில் சுற்ற ஆரம்பித்தது.  புதன் கோளை மெஸ்ஸெஞ்சர் குறைந்தது ஓராண்டுக்கு 730 முறை சுற்றிவந்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.  எரிசக்தி திரவம் விண்ணுளவி ஓராண்டுக்கு மேல் பணி புரிய போதிய அளவு உள்ளது.

    மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவி ஏவியதின் முக்கியக் குறிப்பணிகள்

    புதன் கோள் நமது நிலவை விடச் சிறிது பெரியது.  அதன் விட்டம் : 4800 கி.மீடர் (2980 மைல்).  அதன் உட்கரு உருகி உறைந்து போன ஒரு பெரும் இரும்புக் குண்டு.  பூமியைப் போல் வாயு மண்டலம் இல்லாத புதக் கோளில் புலப்படாத ஒரு மெல்லிய வாயுச் சூழ்வெளி (Exosphere) சுற்றியுள்ளது.  அந்த அரங்கில் பரிதியிலிருந்து வெளியேறும் அணுக்களும், அயான்களும் உலவி வருகின்றன.  புதன் தளத்திலிருந்தும் இராசாயன மூலகங்களும் உதறப் பட்டு எழுகின்றன.  சோடியம், பொட்டாசியம் போன்ற கன மூலகங்கள் புதன் மேற்தளத்தின் அருகே தவழ்கின்றன.  அவற்றைப் பரிதியின் ஒளித்துகள்கள் (Solar Photons) விண்வெளிக்குத் தள்ளுகின்றன.

    1.  புதக் கோளின் தளப் பொருட்களைத் (Surface Composition) துல்லியமாக அறிவது.

    2.  புதக் கோளின் பூதளவியல் வரலாற்றை (Geological History) வரையறை செய்வது.

    3.  புதக் கோளின் காந்தக் களத்தின் துல்லிய பலத்தையும் (Precise Strength of the Magnetic Field) அது தள உயரத்தின் ஏற்ற இறக்கத்தினால் மாறுவதையும் அறிவது.

    4.  புதக் கோளின் திசைப் பிறழ்ச்சியை (Mercury’s Libration) அளந்து உட்கருவின் திரவ வெளிக்கரு இருப்பை அறிவதற்கு ஆராய்ச்சி செய்வது.

    5.  புதக் கோள் துருவங்களில் உள்ள வானலை எதிரொலிப்பு பொருட்களின் (Radar Reflective Materials) பண்பாடுகளைத் தீர்மானிப்பது.

    6.  ஆவியாகும் முக்கிய கனிமங்களையும் (Volatile Species) அவற்றின் மூலச் சுரப்பிகளையும், படிவுகளையும் புதக்கோள் வாயுச் சூழ்வெளியில் (Exosphere) இருப்பதை ஆராய்வது.

    பரிதிக்கு அருகில் கடும் வெப்ப விண்வெளியில் சுற்றி வரும் புதன் கோள்!

    ரோமானியக் கடவுளின் தூதர் மெர்குரி [Mercury, Messenger of God] பெயரைக் கொண்டு முதற்கோள் புதனின் பெயர் மெர்குரி [Mercury] என்று வைக்கப் பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் பிறை வெள்ளியை [Venus] முதலில் கண்ட இத்தாலிய வானியல் மேதை காலிலியோ, புதனும் அவ்வாறே பிறை வடிவில் இருப்பதைத் தொலை நோக்கியில் பார்த்து, இரண்டும் பரிதியைச் சுற்றி வருகின்றனவா என்று ஆராய்ந்தார். அதை உறுதிப் படுத்த புதன், வெள்ளி ஆகியவற்றின் பிறைகளைத் தொடர்ந்து பதிவு செய்து, பூமியின் நிலவைப் போல் பாதி நகர்ச்சியில் பிறை பெரிதாவதையும், அடுத்த பாதி நகர்ச்சியில் பிறை சிறிதாவதையும் கண்டு பிடித்து, புதன் வெள்ளி இரண்டும் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்று நிரூபித்துக் காட்டினார். சூரியனும் மற்ற கோள்களும் பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்று கூறிய, கிரேக்க ஞானிகள் அரிஸ்டாடில் [Aristotle] டாலமி [Ptolemy] ஆகியோரின் கொள்கை பிழையான தென்று எடுத்துக் காட்ட, காலிலியோவுக்கு வெள்ளி புதன் ஆகிய கோள்களின் பிறை வளர்ச்சியும், பிறைத் தளர்ச்சியும் சான்றாய் அமைந்தன!

    பூமியிலிருந்து தொலை நோக்கி மூலம் பார்த்தால், சூரிய உதயத்திற்கு ஒன்றை மணி நேரத்திற்குப் முன்பு எழுந்து, சூரிய மறைவுக்கு ஒன்றை மணி நேரத்திற்குப் பின்பு புதன் தெரியாமல் போகிறது. சுக்கிரனும் காலையில் அதுபோல் விடி வெள்ளியாகவும், மாலையில் அந்தி வெள்ளியாகவும் ஒளி வீசுகிறது! காலை நேரத்தில் பரிதிக்குக் கிழக்குக் கோடித் திசையில் [Greatest Eastern Elongation], அடுத்து மாலை நேரத்தில் மேற்குக் கோடித் திசையில் [Greatest Western Elongation] மட்டுமே புதனைக் காண முடியும். அதாவது, புதன் கோளைப் பூமியி லிருந்து 28 டிகிரி கோணத்தில் பரிதிக்கு இருபுறமும் காண முடியுமே தவிர, மற்ற வீதி நகர்ச்சியில் அது சூரியனின் பேரொளி வெள்ளத்தில் மூழ்கிப் போகிறது.

     

     

    சுக்கிரனைப் [Venus] போல், புதனுக்கும் துணைக் கோள் எதுவும் இல்லை. சூரிய மண்டலத்தில் மற்ற எல்லாக் கோள்களுக்கும் [பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுடோ] ஒன்று அல்லது மேற்பட்ட துணைக் கோள்கள் உள்ளன! கரடு முரடான துளைகள் நிறைந்த கரும் பாறை களைப் புதன் கொண்டிருப்பதால், அது பரிதியின் ஒளியை எதிரொ ளிக்கும் திறம் [Albedo = 0.06] மிகவும் குறைந்தது. பூமியைப் போல் பாதுகாப்பு வாயு மண்டலம் எதுவும் புதனில் இல்லாததால், சூரியனின் உக்கிர வெப்பம் முழுவதும் அதன் வரண்ட குழிகளையும், உச்சி மலைகளையும் சுட்டுக் கரிய வைக்கிறது.

     

     

    பரிதி குடும்பத்தின் முதற்கோள் புதனின் தனிச்சிறப்புப் பண்பாடுகள்

    உருவத்தில் பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட ஓர் வடிவைப் பெற்றது புதன். அதன் விட்டம் 3030 மைல். சந்திரனைப் போல் புதனும் கரடு முரடான குழிகள் [Craters] நிறைந்து, வாயு மண்டலம் எதுவும் இல்லாத ஏறக் குறைய சூன்யமான [Vacuum] சூழ்நிலையைக் கொண்டது.  புதன் சுக்கிரனைப் [Venus] போல் மித மிஞ்சிய சூடான [480 டிகிரி C] கோளாக இல்லா விட்டாலும், உஷ்ணம் அதிக அளவில் -180 டிகிரி C முதல் +430 டிகிரி C வரை ஏறி இறங்கி, கடும் வெப்பமும் குளிரும் ஊஞ்சல் ஆடும் ஒரு கோள். அதன் ஈர்ப்புச் சக்தி மிகவும் வலிமை அற்றது! பூமியின் ஈர்ப்பு விசை 1 என்று வைத்துக் கொண்டால், புதனின் ஈர்ப்பு விசை 0.38 தசம அளவு! அதாவது பூமியில் 100 பவுண்டு எடையுள்ள ஒரு பண்டம், புதனில் 38 பவுண்டு எடைதான் காட்டும்!  சூரிய ஒளிமயத்தில் பரிதியை மிகவும் நெருங்கிச் சுற்றி வருவதால், புதனைத் தொலை நோக்கி மூலம் காண்பது, மிகவும் கடினம். பரிதிக்குச் சுமார் 28 மில்லியன் மைல் தூரத்தில் நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit] 88 நாட்களுக்கு ஒரு முறைப் பரிதியைச் சுற்றி வருகிறது.

     

    நாம் வாழும் பூமி பரிதிக்கு அப்பால் 93 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது! எல்லாக் கோள்களையும் விடப் பரிதியை வெகு விரைவில், மணிக்கு 100,000 மைல் வேகத்தில் சுற்றி வருகிறது, புதன்! வானலைத் தட்டு [Radar] மூலம் புதனின் கதிரலைகளை ஆராய்ந்ததில், அது தன்னைத் தானே 59 நாட்களில் சுற்றிக் கொள்வது அறியப் பட்டது. பூமிக்கும் பரிதிக்கும் இடையே சுற்றி வரும் சுக்கிரன், சந்திரனைப் போன்று, புதனும் அதனுடைய 88 நாள் பயணத்தில், சூரிய ஒளியில் பிறை வடிவைக் [Crescent Phases] காட்டி, பிறை வளர்ச்சியும், பிறைத் தளர்ச்சியும் பெற்று வருகிறது.  ஒளிநிறப் பட்டை ஆய்வில் [Spectroscopic Analysis] புதன் கோளத்தில் மிகவும் நலிந்த சூழக [Atmosphere] மண்டலமும், அதில் சோடியம், பொட்டாசியம் இருப்பதாக அறியப் பட்டது. அவற்றின் அணுக்கள் தரைப் பரப்பிலிருந்துதான் கிளம்பி யிருக்க வேண்டும்.

     

     

    ஒரு நூற்றாண்டில் 15 தடவை புதன், பூமிக்கும் பரிதிக்கும் இடையே குறுக்கீடு [Transit] செய்கிறது.  அப்பொது பூமி, புதன், பரிதி மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமையும்!  அந்தச் சமயத்தில் புதன் கோள் ஒரு கரும் புள்ளியாக, பிரம்மாண்டமான பரிதியின் வட்ட முகத்தில் பொட்டு போல் தெரிகிறது. 1677 இல் முதல் புதன் குறுக்கீடு காணப்பட்டுப் பதிவாகி யுள்ளது. அதற்குப் பின்பு இதுவரை 44 புதன் குறுக்கீடுகள் தொடர்ந்து காணப்பட்டுப் பதிவாகி ஆராயப் பட்டுள்ளன.

    நாசா புதனுக்கு முதலில் ஏவிய விண்கப்பல் மாரினர்-10

    நாசா 1973 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி ஏவிய, விண்வெளிக் கப்பல் மாரினர்-10 [Mariner-10] சுக்கிரனை [Venus] முதலில் ஆராய்ந்து படமெடுத்து, அடுத்து 1974 பிப்ரவரி 5 ஆம் தேதி புதன் கோளை நெருங்கி 197 மைல் அருகே பறந்து ஒரு புறத்தை மட்டும் படமெடுத்தது.  நாசா சுக்கிரனின் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி, விண் கப்பலின் போக்கைக் கட்டுப் படுத்தி, புதனைக் குறிவைத்தது.

     

     

    அம்முயற்சி வெற்றி அடைந்து, ஆறு மாத இடை வெளிகளில் அடுத்து, அடுத்து மாரினர்-10 மூன்று முறைப் புதனைக் கடந்து, தொடர்ந்து புதுப் புது விபரங்களைப் பூமிக்கு அனுப்பியது. மாரினர்-10 புதனின் தளப் பகுதிகளை முதன் முதல் படமெடுத்து அனுப்பவும், எதிர்பாராதவாறு ஒரு பெரும் காந்தக் களத்தைக் கண்டு பிடிக்கவும் ஏதுவானது.

    புத மண்டலம் காந்த சக்தி கொண்டுள்ளதற்கு, அதன் உட்கருவில் இரும்புக் கோளம் இருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது. பூமியின் சந்திரனைப் போல் மேல் தளத்தில் பாறைக் குழிகள் நிரம்பி இருந்தாலும், புதன் கோள் தனித்துவம் பெற்றுச் சிறிதளவு காந்த சக்தி கொண்டுள்ளது.  சந்திரனில் காந்த மண்டலமும் இல்லை! இரும்புள்ள உட்கருவும் இல்லை! புதன் தளத்தில் கோபுரம் போன்ற செங்குத்தான மலைகள், தாழ்ந்த பள்ளங்கள் ஏராளமாய் இருக்கின்றன. ஆனால் பூமியின் சந்திரனில் புதனைப் போல் செங்குத்தான மலைகள் இல்லை. புதன் கோளில் வாயு அழுத்தம் இல்லை! பிராணவாயு, நைடிரஜன் எதுவும் கிடையாது! நீரில்லை ! புதனும் பூமியின் நிலவைப் போலவே எந்த வித உயிரினமும் வாழ வழி இல்லாத ஓர் செத்த அண்டமே [Dead Planet]!

     

    செவ்வாய், சுக்கிரன் கோள்களைப் போல், புதனும் கடும் வெப்பம், குளிர்ச் சூழ்நிலை கொண்டு யாரையும் வரவேற்காத வரண்ட பாறை நிலமே! வாயு மண்டலத்தில் இம்மி யளவு ஆர்கான் [Argon], நியான் [Neon], ஹீலியம் [Helium] மிகச் சிறிய அழுத்தத்தில் சூழ்ந்துள்ளது! அப்பாறை நிலம் எங்கும் விண்கற்கள் விழுந்து விழுந்து பெருங் குழிகள் ஏற்பட்டுள்ளதை மாரினர்-10 எடுத்துக் காட்டியது.  மாரினர்-10 ஆய்வுச்சிமிழ் புதனின் காந்த சக்தி பூமியின் காந்த சக்தியில் நூற்றில் ஒரு பங்களவு இருப்பதாகக் கண்டது. புதன் பரிதியை இருமுறைச் சுற்றிவரும் காலத்திற்குள் [88 நாட்கள்], அது தன்னைத் தானே தன்னச்சில் மூன்று முறைச் சுழல்கிறது.

    1991 இல் பூமியிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த வானலைத் தொலைநோக்கி [Radio Telescope] மூலம் பார்த்ததில் புதன் கோளின் துருவக் களங்களில் பனிக்கட்டி அடுக்குகள் மேவி இருப்பதைக் காட்டியது.  ஆனால் அந்தப் பகுதிகளில் மாரினர்-10 ஆய்வுச்சிமிழ், 1974 இல் பயணம் செய்ய முடிய வில்லை!

     

    பூமியின் வட துருவத்திற்கு மேல் உயரத்திலிருந்து பார்த்தால், சூரிய குடும்பத்தில் புளுடோவைத் தவிர, மற்ற எல்லாக் கோள்களும் [புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்] ஏறக் குறைய ஒரே மட்ட வீதிகளில் எதிர்க்-கடிகார [Counter-Clockwise] சுழற்சியில் சூரியனைச் சீராய்ச் சுற்றி வருகின்றன. கடவுளின் மகத்தான படைப்புக்கு, பிரம்மாண்டமான பிரபஞ்ச அண்டங்களின் ஒழுங்கு இயக்க நியதி ஓர் அரிய எடுத்துக் காட்டு!

    1973 இல் வெள்ளி, புதன் இரண்டு கோள்களை ஒரே பயணத்தில் ஆய்வு செய்த மாரினர்-10 இன் பொறி நுணுக்கப் போக்கைப் பயன்படுத்தி, நாசா [NASA] விஞ்ஞானிகள் அடுத்து ஒரே விண்வெளிப் பயணத்தில், பரிதியின் புற வெளியில் சுற்றி வரும் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கு கோள்களை ஆராயும் திறமுடைய வாயேஜர்-2 [Voyager-2] ஆய்வுச் சிமிழைத் தயாரித்து 1977 ஆகஸ்டு 20 இல் அனுப்பி வெற்றி பெற்றது, ஒரு மாபெரும் விஞ்ஞானப் பொறியியல் சாதனை!  2014 ஆண்டில் ஈசாவும், ஜாக்ஸாவும் இணைந்து (ESA & JAXA) (European Space Agensy & Japanese Space Agency) புதன் கோளுக்கு விண்ணுளவி அனுப்பப் போவதாக அறியப் படுகிறது.

     

     

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++

    தகவல் :

    Picture Credit : NASA,

    1.  National Geographic Picture Atlas of Our Universe (1986)

    2.  Astronomy Today Chaisson & McMillan (1999)

    3.  Reader’s Digest – The Universe & How We See It  By : Giles Sparrow (2001)

    4.  Universe By : Roger Freedman & William Kaifmann III (6th Edition) (2002)

    5.  BBC News :  Messenger Spacecraft to Go Back to Mercury (June 11, 2001)

    6.  BBC News : NASA Set to Revisit Mercury (July 16, 2004)

    7.  NASA’s Messenger to Fly By Mercury During Retrograde (September 15, 2009)

    8.   Spacecom- Whole New Mercury Promised By NASA Spacecraft (Messenger) (August 15, 2010)

    9.   BBC News – Messenger Probe Enters Mercury Orbit By Jonathan Amos (March 17, 2011)

    10.  Daily Galaxy : The Extreme Planet : Messenger Spacecraft Swings into Orbit Around (Planet) Mercury Today.  March 11, 2011

    11. CU-Boulder Space Scientists Ready for Orbital Insertion 0f (Messenger), Mercury Spacecraft. (March 17, 2011)

    12.  Wikipedia “Messenger” Spacecraft (August 9, 2011)

    13. http://www.spacedaily.com/reports/Mercury_contracted_more_than_prior_estimates_999.html  [March 18, 2014]

    14.  http://news.nationalgeographic.com/news/2014/03/140316-mercury-shrinking-planets-nasa-messenger-spacecraft/ [March 16, 2014]

    15.  http://www.nst.com.my/latest/mercury-the-incredible-shrinking-planet-1.517249 [March 17, 2014]

    16.  http://www.spacedaily.com/reports/Mercurys_contraction_much_greater_than_thought_999.html  [March 18, 2014]

    17.  http://blog.education.nationalgeographic.com/2014/03/18/the-incredible-shrinking-planet/ [March 18, 2014]

    ++++++++++++++++++

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (March 22, 2011)
    http://jayabarathan.wordpress.com/

    Tiny Planet Mercury Is Shrinking Fast

    Nasa says Mercury is shrinking

     

    Share
  • திருமால் திருப்புகழ் (34)

    கிரேசி மோகன்

     
    தனந்த தானனத்த தனந்த தானனத்த
    தனந்த தானனத்த-தனதான….

     

    100_8808

     மாசி மகத் திருவிழா - குடந்தை மகாமகக் குளம்
    மாசி மகத் திருவிழா – குடந்தை மகாமகக் குளம்

    “அகந்தை வேரறுத்தவ் விழந்த வான்கிடைத்திங்

    கும்பகோணம் தெப்ப உற்சவர்
    கும்பகோணம் தெப்ப உற்சவர்

    கிருந்த வாறிருக்க -ரமணேசர்
    புகன்ற வாசகத்தை உணர்ந்து மாதவத்தை
    நெருங்க ஞானவித்தை -அருள்வாயே
    அகன்ற சாகரத்தில் அனந்தன் மேலிருக்கை
    அமைந்த யோகநித்ரை, -வனமாலி
    சுகந்தம் வீசலக்மி பதங்கள் மேவநித்ய
    இனங்கள் சூரிநிற்க -பயில்வோனே
    தகுந்த வாறளிப்பு ,சினந்த மாமனுக்கு
    இகழ்ந்த பாலனுக்கு -முறைவாசல்,
    தினங்கள் போயெமர்க்கை விழுந்து சாவதற்குள்
    முகுந்த வாவகத்துள் -குடியேற
    புகுந்த ஆழிவிட்டு பருந்து வாகனத்தில்
    பறந்து வாயெனக்கு -துணையாக
    உயர்ந்த கோபுரத்துள் கிடந்து வாழவைக்கும்
    குடந்தை மாநிலத்து -பெருமாளே”

    பின்-குறிப்பு… அல்ல அல்ல எனது பின்-கோட்-குறிப்பு ‘’குடந்தை’’ எனப்படும் கும்பகோணம்…. என் சொந்த ஊர்….

     

    படங்களுக்கு நன்றி

    http://enthamizh.blogspot.in/2013/03/blog-post_5203.html

    http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2137&Cat=3

     

    Share
  • தி.க.சியின் நாட்குறிப்புகள்

    வாசிப்புகளின் வாசலிலே – தி.சுபாஷிணி

    தொகுப்பு: வே.முத்துக்குமார்

    tkc

    இந்நூலின் தொகுப்பாசிரியரான வே.முத்துக்குமார் சிறந்த இலக்கியவாதியும் படைப்பாளியும் ஆவார். பிரபல நாளிதழ்களில் கவிதைகளும் கதைகளும் எழுதிவருபவர். இவர் தி.க.சி.யின் ஆத்மார்த்த சீடர். வெளிஉலகத்திற்குத் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளாது, தி.க.சி. அவர்கள்பால் அன்பு கொண்டு, அவருக்குத் தொண்டு புரியும் நெல்லைப் பண்பாளர். தி.க.சியின் இலக்கியப் பொக்கிஷங்களைத் தூசிதட்டி அடுக்கு ம்போது கிடைத்த நல்முத்து இந்நாட்குறிப்புகள்.  1948 ஆம் ஆண்டு டைரியில் முதல் நாள் தொடங்கி, நவம்பர் மாதம் பாதி நாட்கள் அய்யா குறிப்பு எழுதியிருக்கிறார்கள்.  முத்துக்குமார் இதைப்படித்த உடன் ‘இது ஒரு கால ஆவணம்’, எனக்கருதி நூலாக வடித்தார். அய்யாவின் இளம் வயது புகைப்படம் அட்டைப்படமாக அமைந்தது. பின்னட்டையில் இன்றைய தி.க.சி. அத்தோடு கி.ரா.வின் அழகான குறிப்பு!

    எனக்குக் கிடைத்த நண்பர்களில் தி.க.சி. வித்தியாசமானவர். என்னிடமுள்ள நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டவர். சுமார் அறுபது ஆண்டுகளாக எங்கள் நட்பு நீடித்து வருகிறது. நான் மாறிக்கொண்டே வந்திருக்கிறேன் பலபல விசயங்களில். அவர் மட்டும் அச்சு அசல் தி.க.சி.யாகவே இருந்து வருகிறார். ‘மூத்த பிள்ளை’ என்று எங்களுக்குள் நாங்கள் தி.க.சியை குறிப்பிட்டுக்கொள்வோம். தி.க.சியை எதோடு ஒப்பிட்டுச் சொல்லுவது என்று நினைக்கிறபோது எனக்கு அவரை சுக்குக்கு ஒப்பிட்டுச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ரசிகமணி சொல்லுவார்: “நாக்குக்குத்தான் -சுக்கு காரம்; குடலுக்கு ரொம்ப இதம்”. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் உண்டா?

    இந்நூலைப் பதிப்பிக்க சந்தியா பதிப்பகம் முன் வந்து, இம்மாதம் 15 ஆம் நாள் அய்யாவின் கைகளில் அமரும் படி செய்துவிட்டனர். இதைவிட தி.க.சி. அவர்களுக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும். நிச்சயமாக இந்நூல் கிடைத்ததும், ஒரு குழந்தையைப்போல் மகிழ்ந்திருப்பார். அந்த மகிழ்ச்சியின் நீட்சியிலேயே எனக்கொரு பிரதியும் அவர் கையால் கிடைக்கப்பெற்ற பாக்கியசாலியானேன். அப்பாக்கியத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் பேறும் உடனே கிடைக்கப்பெற்றுவிட்டேன்.

    ஆம். இது ஒரு கால ஆவணம்தான். 1925 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் நாள் தொடங்கிய வாழ்க்கையின் நீட்சியில் ஒரு கூறின் செயல்பாடு. அச்செயல்பாட்டு நாட்களின் சில குறிப்புகளை உங்களுக்கு அந்நூலிலிருந்து அளிக்க விழைகின்றேன்.  இதோ:&

    Friday, 30th January 1948

    சர்வஜித்து தைமீ 17 வெள்ளி

    இன்று மாலை 5.30 மணிக்கு உலகம் போற்றும் உத்தமர், அகிலமெங்கும் அஹிம்சை ஒளிபரப்பி அண்ணல், மகாத்மா காந்தி பிர்லா மாளிகையின் முன்பு, பிரார்த்தனைக் கூட்டத்தில், காக்கிச் சட்டையணிந்த ஒரு இந்துவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  மார்பிலே ஒரு குண்டும், வயிற்றிலே 2 குண்டுகளும் பாய்ந்தன.  காந்திஜியின் மரணச் செய்தி உலகையே கண்ணீர் விடச் செய்து விட்டது.  இந்தியா முழுவதும் சொல்ல முடியாத சோகத்தில் ஆழ்ந்தது.  ‘நல்லவனுக்கு இது காலமில்லை’ என்றார் ஷா. 8.30 மணிக்கு நேருவும், பட்டேலும் ஒலிபரப்பினர்.  நாளை காலை 11 மணிக்கு பிர்லா மாளிகையிலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு யமுனை நதிக்கரையில் அடக்கம் நடைபெறுமாம்.

    Friday, 30th January 1948

    சர்வஜித்து தைமி 18 உ சனி

    இன்று நகரெங்கும் பரிபூரண ஹர்த்தால் கார், வண்டிகள், ரயில்கள் ஒன்றும் ஓடவில்லை.  கடைகள் மூடப்பட்டன.  விட்டு விட்டு லேசாக மழை பெய்து கொண்டிருந்தது.

    காலையிலே 10 முதல் 2 வரை ஆபீசிலே வேலை நடந்தது!  ‘Petty cash, Postage வவுச்சர்கள் போட்டு supplementary day book  எழுதினார்கள். Cash bookகிலும் நான் கை வைத்தேன்.

    நேற்றைய General Ledger விஷயமாக, posting விஷயமாக Accountantக்கும் எனக்கும் சிறு சண்டை வந்தது.  அவர் அதைச் செய்கிறேன் என்று சொல்லி என்னை ஏமாற்றிவிட்டார்!

    மாலையிலே ரேடியோக் கேட்டு விட்டு நகர்சுற்றி, நயினார்குளம் வரை போய்த் திரும்பினோம். இரவு சபாபதி வீட்டில்  ரேடியோ கேட்டோம்.  5 மணிக்கு காந்திஜியைத் தகனம் செய்தார்கள் யமுனை நதிக்கரையில்.

    Thursday, 12th February 1948

    சர்வஜித்து தைமீ 30உ வியாழன்

    காலையில் குமரகுருபரன் வீட்டிற்கு வந்தார்.  இன்று காந்திஜியின் சாம்பல் கரைக்கும் நாள்.  காலையிலே ஊர்வலம் சென்றது.  மாலையில் லாலா சத்திரமுக்கில் பந்தல் அமைத்து பாவையர் நூல் நூற்றனர்.  சாயங்காலம் சர்வகட்சிகளும் அடங்கிய மாபெரும் ஊர்வலம் ஒன்றும் ஆற்றங்கரையை நோக்கிக் கிளம்பியது.  ‘சுப்பரம், தீச்சட்டி, மொட்டைத் தலை’ ஆகியவைகளுடன் ஊழியர்கள் துக்கம் கொண்டாடினார்.

    நானும் சோமுவும் 10.30 மணிக்கு ரகுநாதன் வீடு சென்றோம்.  பேச்சு, திருக்குறள், காமத்துப்பால் ஆராய்ச்சி, ராஜரத்தினத்தின் கதையைத் திருத்துதல் ஆகியலை நடந்தது.  இரவு அண்ணாச்சி வீட்டில் ‘Oil’ முகவுரையை வாசித்து விட்டு பார்க்கிலே People’s Age  படித்தோம்.  இரவு 12 வரைக்கும் மீண்டும் People’s Age வாசித்தேன்.

    (Oil -அமெரிக்க எழுத்தாளர் அப்டன் சிங்லர் எழுதிய நாவல்)

    Monday, 23rd February 1948

    சர்வஜித்து மாசி மீ 1உ திங்கள்

    Letter to  கலியபெருமாள்

    படிப்பு : People’s Age – Illustrated weekly

    அரசியல் : காந்திஜியின் கொலையைப் பற்றி கிமிசிசி யில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் குற்றச் சாட்டும் படேலின் பதிலும்.

    பொருளாதாரம் : பாங்கில் நிறைய தங்க நகைகள் அடகுக்கு வருகின்றன, மக்கள் தனது கடைசி உடைமைகளையும் அடகு வைக்கின்றனர்.

    சமூகம் : சபாபதி வீட்டிலே இரவு ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.  கட்சி அபேட்சகர்கள் 8 இல் 4 பேர் திருச்சி கவுன்சிலர்கள் ஆயிருக்கின்றனர்.

    இலக்கியம் : ‘தேனீயின் விளம்பரம் பார்த்தேன்.  மற்ற மறுமலர்ச்சிப் பத்திரிகைகளின் கதி தான் இதற்கும் என்றார் சபாபதி.  ஆம், உண்மை.

    நண்பர்கள் : தி.ப.தி.க்கு ஜலதோஷம் எனக்கு அஜீரணம்.  மோரீஸ் பழத்தினால் புளிச்சேப்பம் உண்டாகிறது.

    தேனீ & எம்.வி. வெங்கட்ராமை ஆசிரியராக கொண்டு கும்பகோணத்திலிருந்து வெளிவந்த இலக்கிய மாத இதழ்

    Friday, 27th February 1948

    சர்வஜித்து மாசி மீ 15 உ வெள்ளி

    Letter to Chidambaram; Salary Day

    அரசியல் : Draft Const. ஐ புகழ்ந்து பத்திரிகைகள் பிதற்றுகின்றன.  1951 வரை எலெக்ஷன் கிடையாது என்றுவிட்டார் படேல்.

    பொருளாதாரம் : தையல்காரன் கூலியை 8 அணா லாபப்படுத்திக் கொடுத்ததற்காக சங்கரனுக்கு ரூ.0-1-3 லஞ்சம் காப்பிச் செலவு! இது தொழிலாளி வயிற்றில் அடிப்பது தான்.  8 உருப்படிக்கு ஒன்னரை ரூபாய்!

    இலக்கியம் : ஜகன்நாதன் எனக்கு தன்னம்பிக்கை இல்லை என்றார் ‘கலைஞர் கழக’ விஷயமாக.  நீங்கள் தான் அதற்கு வெட்கப்பட வேண்டும் என்றேன் நான்.  Typical  திருநெல்வேலிப் பண்பாடு ஜகன்நாதன் பேசியது என்றார் தி.ப.தி.

    நண்பர்கள் : நடராஜன் நேற்று முழுவதும் தூக்கமில்லை, அண்ணாச்சி வருந்தும் படி ரேடியோவை நிறுத்திவிட்டதால் & எனறு தனது முன்கோபத்தைப் பற்றிச் சொன்னார்.  இரவு 10 மணிக்கு கொஞ்ச நேரம் அவர் பாணியில் பேசிக் கொண்டிருந்தேன்.  சென்னைப் பயணத்தைப் பற்றிய கனவுகளால் இன்று தூக்கமில்லை.

    Wednesday,  21st April 1948

    சர்வஜித்து சித்திரை மீ 9 உ புதன்

    Letter to Sailappan; Letter from Va.Ka

    அரசியல் : காஷ்மீரைப் பற்றிய ஐ.நா தீர்மானத்தை ஜயங்கார் மறுத்து விட்டார்.  லாகூரில் பஞ்சாப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரொமேஷ் சந்திரா கைது செய்யப்பட்டார்.

    ஆபீஸ் : டவுன் ஆபீசை மூடும்படி உத்தரவு வந்துவிட்டது.  தந்தியில் விளம்பரம் வருகிறது.  அதற்கு 2 * 2 காலத்திற்கு ரூ. 16 கூலி!

    மாலையில் நேற்றைப் போல் இன்றும் ஆற்றிலே குளிக்கச் சென்றோம்.  பேச்சு sex விஷயத்தை சுற்றிச் சுற்றி வந்தது.  இன்று சற்று முன்னே எட்டிப் போய்க் குளித்தோம்.

    நேற்று குளித்ததினால் இன்று கால்வலி வந்துவிட்டது.  வலதுகால் மட்டும் அதிகமாய் வலித்தது.  இரவு பாலகணபதி விலாசில் சாப்பாடு, நடராஜன் பற்று ரூ. 2-8-0!

    Wednesday, 5th May 1948

    சர்வதாரி சித்திரை மீ 23உ புதன்

    Letter to Va.Ka & Chidambaram; Letter from Chidambaram

    அரசியல் : ராஜாஜி, கவர்னர் ஜெனரல் ஆகிவிட்டார்.  தென்னிந்தியாவில் குதூகலம்.  ஜவஹர் அடுத்த மாதம் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம்.

    இலக்கியம் : ‘தேனீ விமர்சனம் வ.க.வுக்கு.

    சமூகம் : ராஜாஜியின் நியமனத்தைக் கண்டு அய்யங்கார்கள் துள்ளுவார்களாம்!

    பொருளாதாரம் : பல்புரூசு ரூ. 1-1-0, பல்பசை ரூ.0-14-0, பல்பொடி ரூ.0-1-0, கேசவர்த்தினி ரூ.0-12-0, பூட்ஸ் ரூ.3-5-0, இப்படியாக பல சாமான்கள் வாங்கினேன். தையல் கூலி ரூ.0-1-2-0.

    குளிப்பு : இன்று சபாபதி வராவிட்டாலும், நேற்று குளிக்காததை ஈடு செய்ய இன்று 9 மணிக்குப் போய் குளித்தோம்.

    Friday, 28th May 1948

    சர்வதாரி சித்திரை மீ 15உ வெள்ளி

    ‘ஷாப் சட்டப்படி வேலை முடிந்தாலும் நீங்கள் 7 மணி வரை ஆபீசிலேயே இருக்க வேண்டும். S.I.Bankல் அப்படித் தான் சட்டம்!  என்றார் ஏஜண்டு. வேலையில்லாமல் சும்மா இங்கே உட்கார்ந்திருப்பானேன்? Indian Bank இல் எப்படி நடக்கிறது பார்த்தீர்களா? என்றேன் நான்.

    ‘சிவாஜி’யிலே என் பெயரையும் சேர்த்து எழுத்தாளர் மகாநாட்டுப் பிரதிநிதிகளில் ‘பிரபலஸ்தர்கள்’ என்று திலோகம் குறிப்பிட்டிருக்கிறார்!

    தலைமறைவாயுள்ள கம்யூனிஸ்டுகளுக்கு தங்க இடமோ, குடிக்கத் தண்ணீரோ, பணமோ கொடுத்தால் 3 மாதக் கடுங்காவலும், 1000ரூ அபராதமும் விதிக்கப்படும் என்ற பாசிஸ அவசரகச் சட்டம் நேற்றைய பத்திரிகைகளில் வந்துள்ளது.

    திருலோகம் & திருலோக தீதாராம்: சிவாஜி இதழாசிரியர்

    Fridaay, 23rd July1948

    சர்வதாரி ஆடி மீ 8உ வெள்ளி

    படிப்பு : ‘லெனின் பிறந்தார்’

    அண்ணாச்சியிடம் ரகுநாதன் கடிதத்தைக் காட்டினேன்.  அமப்பித்தனின் ‘செல்லம்மாளை’ ரொம்பவும் பாராட்டினார் நடராஜன்.  சபாபதி ஆபீசுக்கு வந்தார் சம்பத்துக்கு மணியார்டர் செய்ய.

    இன்று Junior சிவசங்கரனுக்கு 6 மாதப் பிறந்த தின விசேடம்.  எனக்கு பாயாசச் சாப்பாடு! இரவு சபாபதி வீட்டிலே சீட்டாட்டம்.  ராத்திரி சாப்பிடாததால் உறக்கமில்லை.  Weeklyல்  C.R.Mandyயின் கதைப் படித்தேன்.

    கே. வேலாயுதம் ரொம்ப பெரிய மனுஷன் ஆய்விட்டான், நண்பர்களை மறந்துவிட்டான்’ என்று கூறினார் தி.ப.தி.

    Friday, 24th September 1948

    சர்வதாரி புரட்டாசிமீ 9உ வெள்ளி

    Office safety ordinance issued!.

    1. பியூன்களை சொந்த வேலைக்கு ஏவக் கூடாது.

    2. ஆபீஸ் நேரத்தில் வெளிச் செல்லக் கூடாது.

    3. ஆபீசில் பத்திரிகைகள் படிக்கக் கூடாது.

    4. இடைவேளியில் அரசியல் பேசக் கூடாது.

    ஏஜண்டு மட்டும் இத்தனையும் இதற்கு மேலும் செய்யலாம்.  அநீதி!  ஆபீசில் கருங்காலி C.V.R. பண்ணிய வேலை இது! கருங்காலிகளைக் கருவருப்போம்!

    இரவு 8 முதல் 9, மாணிக்கம், தி.ப.தி. நான் ஆகியோர் இலக்கியம், சினிமா, கலைகள்’ பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.

    இரவு ஆகாரம் கஞ்சி. இரவு 12 மணிக்கு தம்பியை ஏசினேன்.

    Wednesday, 6th October 1948

    சர்வதாரி புரட்டாசி மீ 21உ புதன்

    Book Post from A.I.R

    இன்று ஆபீசில் விரோதம் ரொம்ப வளர்ந்து விட்டது.  மேஜையில் தான் உட்கார்ந்து மதுசூதனனுடன் பேசிக் கொண்டிருப்பது பற்றி ஒவ்வொருவரையும் explanation கேட்டார் ஏஜண்டு.  பிறகு இன்னொரு explanation.

    Cashier-க்கும் Accountant க்கும் எவ்வித சம்பந்தமுமில்லையா? Fixed deposit இருக்கிறதே?  என்று கேட்டு ஏஜண்டை எதிர்த்து விட்டேன்.  இதை ராமகிருஷ்ணய்யர் சபாபதியிடம் சொல்லி ரொம்ப கண்டித்தாராம்.

    முத்தையா என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டான்.  இதை நான் எதிர்பார்க்கவில்லை, C.V.R ம் பாதி துரோகம் பண்ணி விட்டான்.  ராமகிருஷ்ணய்யர் நடுநிலைமை.  இரவு மதுசூதனன் வீட்டிற்குச் சென்று 2 மணி நேரம் மந்திராலோசனை செய்தோம்.  வழக்கம் போல் சபாபதி வீட்டிற்குச் சென்று ஸோமாசுடன் பேசிவிட்டு 10.30க்கு வீடு.

    Monday, 15th November 1948

    சர்வதாரி ஐப்பசி மீ 30உ திங்கள்

    Post from People’s Age; Card to Chidambaram

    காலையில் வ.க. சகோதரர்க்ள 9.30 மணிக்கு வந்தனர்.  பாளையங்கோட்டை பைண்டிங் ஆபீஸ் போய் விட்டு மீண்டும் மத்தியானம் வந்தனர்.  ஆபீஸ் ஜோலியை முடித்து விட்டு, பொன்னு கடைக்குச் சென்றோம்.  பின் ஸோமாஸைப் பார்க்கச் சென்றோம்.  போகும் போது, ‘அதிர்ஷ்டம், விதி, தர்மம், கடவுள்’ இவைகளில் அசோகனுக்கு அதிக நம்பிக்கை வந்துவிட்டதென்றும் அவைகளைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்னவென்றும் கேட்டார் வ.க.

    முயற்சி, திட்டமிட்ட உழைப்பு, தன்னம்பிக்கை, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துதல்’ ஆகியவற்றில் தான் எனக்கு நம்பிக்கை என்றேன்.

    பிறகு பார்க்கில் உட்கார்ந்து, ‘சிந்தனை, இலக்கிய விமர்சனம், கிராம ஊழியன், சல்லியர் கோன் கதைகள்’ இவைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.  உண்மையான விமர்சனத்தைப் பாராட்டும் பண்பை தமிழ்நாடு பெறவில்லை என்றார் வ.க.

    Tuesday, 16th November 1948

    சர்வதாரி கார்த்திகை மீ 1உ செவ்வாய்

    Letter to  தி.ப.தி; Letter from Raghunathan

    இன்று மனைவி வீடு தொடும் விசேடம் நடந்தேறியது.  பாயாசத்துடன் சாப்பாடு.  குழந்தையின் பெயர் ஜெயலெட்சுமி.  வாழ்க அவள்!

    “1948ல் நானெழுதிய நாட்குறிப்புகள் ஒரு முதிரா இளைஞனின் இலட்சியத் தேடல்களையும் பல்வேறு உளநிலைகளையும் பலவீனங்களையும் ஓரளவிற்குப் பிரதிபலிக்கின்றது” என்று தி.க.சி. அவர்கள் கூறுகிறார்.

    இந்நூலை மகாகவி வழிவந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் தோழர். இரா. நல்ல கண்ணு, தோழர் என்.சங்கரய்யா, தோழர் பழ.நெடுமாறன் ஆகியோருக்கு மனமுவந்து காணிக்கையாக அளித்திருக்கிறார்.

    ஒரு நூற்றாண்டின் இயக்க, இலக்கிய, திறனாய்தலின், நடுநிலை விமர்சனத்தின், இளம் படைப்பாளிகளின் ஊக்கமாய், இலக்கியத் தோட்டக்காரனாய் அனைத்துக்கும் மேலாக மனுசத்தனம் வற்றா ஊற்றாக ஒளிர்ந்து கொண்டிருக்கின்றார்  தி.க.சி.

    நூல்: தி.க.சி.யின் நாட்குறிப்புகள்

    தொகுப்பாசிரியர்: வே.முத்துக்குமார்

    பக்கம் & 176

    விலை & 125 ரூபாய்

    பதிப்பகம் & சந்தியா பதிப்பகம், அசோக் நகர், சென்னை & 83

    & கி.ரா.

    Share
  • அன்புள்ள (மணிமொழி) அம்மாவுக்கு!

    அன்புள்ள அம்மாவிற்கு,

           தங்கள் வயிற்றில் உதிக்கும் பெரும்பேறு பெற்ற அன்பு மகன் சண்முகம் எழுதும் கடிதம். இந்தக் கடிதத்தை நானோ இல்லை என்னுடன் பிறந்த மற்ற எழுவரில் ஒருவரோ, தங்களுக்குப் படித்துக்காட்டத் தாங்கள் இவுலகில் இல்லை என்ற எண்ணம், இலந்தை முள்ளில் சிக்கிக் கொண்ட வெளவாலைப் போல என் மனத்தைக் கிழித்தாலும், அரூபமாக நின்று எங்களைக் காக்கத் தொடங்கி இருக்கும் தாங்கள் நிச்சயம் இம்மடலுக்குச் செவிமடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

          பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், பெரும் செல்வம் சேர்க்கவில்லை எனினும், வாழ்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு, பொருளாதாரச்சுமை வாழ்க்கையை நெருக்கடிக்கு ஆளாக்காத வகையில் இன்று உன் மக்களாகிய நாங்கள் வாழுகிறோம் என்றால், அதற்காக வாழ்க்கை முழுவதும், நீங்களும் அப்பாவும் எதிர்கொண்ட இன்னல்களும், வறுமையை எதிர்த்துப் போரிட்டு, வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் எங்களைக் கரையேற்ற வேண்டும் என்ற எண்ண வெள்ளத்தில் நீங்கள் இருவரும் நீந்தியதே காரணம் என்பதை நாங்கள் அனைவரும் மனப்பூர்வமாக உணர்கிறோம்!

          பெரும் தமிழ்ப்புலமையும், கணித அறிவும் பெற்றிருந்த அப்பாவால், எட்டுப் பிள்ளைகளையும் காப்பாற்றுவதற்குத் தேவையான பொருளீட்ட முடியாமல் போக, எப்பாடுபட்டாவது பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற உந்துதலால், அவர் பொருள் தேடி பல ஊர்களுக்குச் சென்றுவிட்ட சமயங்களில் தனி ஆளாக நின்று சிறுவர், சிறுமிகளாகவும், மழலைகளாகவும் இருந்த எங்களைக் காத்த தங்களின் துணிவை எண்ணினால் இன்றும் மெய்சிலிர்க்கிறது.

          பொருள் தேடிப் பிரிந்து சென்ற அப்பா, மாதக் கணக்கில் திரும்பி வராத நிலையில், வயிற்றிற்கான உணவைக் கூடப் பெறமுடியாமல், வயல்வெளி ஓரங்களில் வளர்ந்திருந்த கீரைகளைப் பறித்து, உப்பை மட்டும் இட்டு வேகவைத்து எங்கள் பசியாற்றிய ஒரு இரவு வேளையில், நாற்பது வயதைக் கடந்திருந்த  உங்களிடம் தவறாக நடந்து கொள்ளும் கீழ்த்தரமான எண்ணம் கொண்ட சில ஆணாதிக்க வல்லூறுகள், நம் வீட்டுக் கதவின் மீது கற்களை எரிந்து நம்மை அச்சுறுத்த முயல, ஓரிரு நிமிடம் அச்சத்தில் உறைந்த நீங்கள், எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் தீயாக எரிந்து கொண்டிருந்ததாலோ என்னவோ, வீட்டில் இருந்த அரிவாளைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு,

    “டேய், எவன்டா அது பொட்டப் பசங்களா, தைரியமான ஆம்பளையா இருந்த உள்ள வந்து பாருங்கடா”

    என்று பேருருவம் எடுத்து நின்று, பெருங்குரலெடுத்துக் கத்திய, ஒரு சில நொடிகளில், கதவின் மீது மோதிய கற்களின் ஓசை நின்று போக, எங்களைக் கட்டியணைத்துக் கொண்டு கண்ணீர் விட்ட உன் வயிற்றில் உதிக்க நாங்கள் பெருந்தவம் செய்திருக்க வேண்டும் அம்மா!

    வாழையடி வாழையாய் வறுமையைக் கண்டும்,

    வாய்மைமதி தூய்மையுடன் வாழ்வியல் கொண்டு,

    வானுயரச் சிந்தனையை வழுவாமல்  கொண்டு,

    வாழ்க்கையைக் கற்பித்த தேவதை நீயே!

           அப்பா பெருள் தேடிப் பிரிந்து சென்றிருந்த மற்றொரு தருணத்தில், வறுமையின் கோர முகத்தைப் பார்த்துப் பார்த்து சலிப்படைந்திருந்த நீ, புலியிடம் சிக்கிக் கொண்ட கலைமான், முதலில் உயிரைப் பிடித்துக் கொண்டு தப்பித்து ஓட முயன்று, பின்னர் தப்பிச் செல்ல வாய்ப்பில்லை என்று உணர்ந்தவுடன், மரணத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை அடைவதுபோல, வறுமைப் புலியிடமிருந்து வாழ்க்கைக் கலைமானைக் காத்துக் கொள்ள இயலாமல், மரணத்தை தழுவிடும் மனநிலையை அடைந்து, உணவில் நஞ்சினைக் கலந்து, எங்கள் அனைவருக்கும் கொடுத்து, நீயும் உட்கொண்டு, வாழ்க்கையை முடித்துக் கொள்ள இருந்த தருணத்தில், எங்கிருந்தோ திடீரென்று இறைவன் போலத் தோன்றி, நம் அனைவரையும் தடுத்துக் காப்பாற்றி, தன் குடும்பம் வறுமையில் இருந்த நிலையிலும் நமது பசியை ஆற்றிய, உன் சகோதரியும் என் சிற்றன்னையுமான “சின்னக்காள்” அம்மாளை, இன்றும் ஒவ்வொரு வேளை உணவு உண்ணும் முன்னும் நான் வணங்கத் தவறுவது இல்லை. அந்த நிகழ்வுகளை இன்று நினைத்தாலும் என் கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீரின் வெப்பத்தில் என் கன்னங்கள் இரண்டும் வெந்துவிடுவது போல உணர்கிறேன்.

                வறுமையின் உச்சக் கட்டத்தில் நம் வாழ்க்கை இருந்த காலகட்டத்தில், நம்மை அரவணைத்து வாழ வைத்த தெய்வங்களான பொன்னம்மா அத்தை, தங்களது மற்றொரு சகோதரியும் என் சிற்றன்னையுமான காமாட்சியம்மாள், இன்னும் பலரையும் என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு இணையான இடத்தில் வைத்துப் போற்றி வருகிறேன் அம்மா!.

     இளமையினில் வறுமையறு புதல்வரொடு மடிவதென,

    ஈன்றோர் விதித்த கெடுவில்,

    நளசுவையி லுணவுவகை கனிவொடுறு பசியகல,

    பாங்காய் அளித்த தெய்வம்,

    பண்புநிறை சின்னக்காள் பாரிலொரு தெய்வமன்றோ!

    அன்புபெரு கிடுமன்னை காமாட்சி, பொன்னத்தை,

    வளமான வாழ்வுக்கு வழிகோல வித்திட்ட,

    மகிழ்வான தெய்வங்களே!

    ஏழ்மையிலு மேழைக்கு இன்முகத் தோடுதவி,

    செய்தவர்கள் தெய்வமன்றோ!

    வாழ்வில்நெறி பிறழாது எனைவகுத் துய்விக்க,

    வள்ளலென வந்த பேரும்,

    காலத்தி லிவரன்றி ஞாலத்தி லொருதெய்வம்,

    என்னுள்ளம் கண்ட திலையே!

    ஆலயம் சென்றாலு மங்குந் தினம்தொழும்,

    தெய்வங்கள் இவர்களன்றோ!

          இதுபோல வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தாலும், எங்களைக் காப்பாற்றி வெற்றிப் படிகளில் ஏற்றிவிட வேண்டும் என்ற உங்களின் நெஞ்சுரத்திற்கு முன்னால் புலியைக் கண்டு அஞ்சி ஓடும் யானையைப் போல, வறுமை உங்கள் உழைப்பிற்கும், தாய்மை உணர்வுக்கும் பணிந்து மெல்ல மெல்லப் பின்வாங்கத்தொடங்க, நம்பிக்கையுடன் எங்களைக் கல்வி கற்கத் தூண்டி, கிடைத்த சின்னச்சின்ன வாய்ப்புகளையும் முறையாகப் பயன்படுத்தி, எட்டுப் பிள்ளைகளையும் ஒருவர் பின் ஒருவராகக் கரையேற்றிய உங்களின் அசாத்தியத் திறமையை இன்றும் நாங்கள் வியந்து போற்றி, உங்களின்  பெயரன் மற்றும் பெயர்த்திகளுக்குத் தொடர்ந்து, அவர்களது மழலைப் பருவத்தில் இருந்து எடுத்துச் சொல்லி வந்தோம்.

    இன்று அவர்களும் கல்வியை முடித்து, தங்களுக்கென ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து, அதில் வேரூன்றி வெற்றிபெற்று உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கலியாணம் முடிந்து, தத்தம் குடும்ப வாழ்க்கையில், மகிழ்வாக ஈடுபட்டு வருவதைக் கண்டு, உங்கள் மக்களாகிய நாங்கள் எட்டுப் பேரும் ஆனந்தம் அடைந்து நிற்கிறோம்.

          இந்நிலையில் உங்கள் பெயரன் மற்றும் பெயர்த்திகள், நம் குடும்பம் இந்த அளவிற்கு சிறப்பாக மேம்பட்டு வருவதற்கு ஆணிவேராக நின்ற தங்களின் பாட்டியையும், தாத்தாவையும் மகிழ்ச்சி நிறைந்த அன்புடனும், நன்றியுடனும் நினைவு கூர்ந்து போற்றுவதற்காக ஒருவிழா எடுக்க  முடிவு செய்தனர்.

          மூன்று நாட்கள், உங்களின் மக்கள் மற்றும் பெயரன் பெயர்த்திக்ள என மொத்தம் 83 பேர் ஒன்றுகூடி உங்கள் இருவரின் பெருமையையும், தியாகத்தையும் மட்டுமே பேசிப் பேசி மகிழ்ந்தோம்.

    தாத்தா, பாட்டியின் நினைவாக “ஒன்றுகூடி மகிழும் விழா” என்று இதற்குப் பெயரிட்டு, உங்களைப் பெருமைப் படுத்தினர்.

          திருச்செங்கோடு அருகிலுள்ள மோர்ப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்த நீங்களும், பெருந்துறை அருகிலுள்ள தச்சம்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்த அப்பாவும்,  சிறுவர், சிறுமியராக இருந்த பொழுது உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்வுகளையும், (உங்கள் வாயிலாக நாங்கள் அறிந்து கொண்டது) நாங்கள் எட்டுப் பேரும் சிறுவர் சிறுமிகளாக இருந்த பொழுது நம் வாழ்க்கையில் நடந்த சுவையான, கசப்பான நிகழ்வுகளையும், உங்கள் பெயரன் பெயர்த்திகளுடன் பகிர்ந்து கொண்டோம்.

          அந்த நிகழ்வுகளைக் கேட்டு சில நேரங்களில் கண்ணீரோடும், சில நேரங்களில்  மனம் நிறைந்த சிரிப்புடனும் அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியது மறக்க முடியாததாக அமைந்துவிட்டது.

          மூன்று நாட்கள் நடந்த விழாவின் முத்தாய்ப்பாக, சிலர் நம் வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளையும் ஓவியங்களாக வரைந்து எங்களுக்கு அளித்தனர்.

          “விழுதுகளின் விழா” என்னும் தலைப்பில் ஒரு கவிதையை எங்களுக்குப் பரிசாக வழங்கி எங்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்தினர். அந்தக் கவிதையையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

    விழுதுகளின் விழா

    போற்றும் புகழ்மோர்ப் பாளையம் பிறந்து,

    பாவளத் தச்சம் பாளையம் புகுந்து,

    போர்க்குணம் நிறைந்த சின்னம் மாள்நற்,

    பாத்திறம் நிறைந்த மாரிமுத்துவுடன்,

    பூக்கும் இல்லற வாழ்வில் இணைந்தார்!

    வாமன வடிவில் இருந்த வறுமை,

    வான்வரை வளர்ந்து வெறுமை காட்ட,

    வறுமையை வீழ்த்தும் வேகம் கொண்டு,

    வெற்றிப் படிகளில் மக்களை ஏற்றினர்!

    நுட்பமதி சின்னம்மாள் நோன் பிருந்து,

    வித்தகஞ்செய் முத்துமாரி தோள் இணைந்து,

    வெப்பமுமிழ் வாழ்வுதனை வெற்றி கொண்டு,

    இப்புவியில் வாழ்வாங்கு வாழுகின்றார்!

     

    அட்ட மா சித்தி களைப்,

    பெற் றெடுத்த ஆலமரம்,

    சுட்ட மா வறுமை யிலும்,

    சிற்பமென வாழ்ந்து நின்று,

    தொட்டு வானை எட்டிவிடும்,

    வித்தை களைக் கற்பித்து,

    விழுதுகளை வளர்த் தெடுக்க,

    விழுதுகளின் விழுதுகளும்,

    பழுதின்றிப் படர்ந்து நின்று,

    பணிவுடனே வணங்கு கின்றோம்!

    அன்புடன்,

    விழுதுகளின் விழுதுகள்.

    குறிப்பு:

          மாரிமுத்து-சின்னம்மாள் தம்பதியரின் மக்களுக்காக, அம்மக்களின் பிள்ளைகள் இணைந்து நடத்திய “ஒன்றுகூடி மகிழும் விழாவில்” வழங்கப்பட்ட கவிதை.

    தாத்தா பெயர்                                                           :               மாரிமுத்து.

    தாத்தாவின் ஊர்                                                      :               தச்சம்பாளையம்

    பாட்டி பெயர்                                                             :               சின்னம்மாள்

    பாட்டியின் ஊர்                                                        :               மோர்ப்பாளையம்

    மக்கட் செல்வங்களின் எண்ணிக்கை             :               எட்டு (8)

    பெயரன், பெயர்த்திகளின் எண்ணிக்கை         :              இருபத்து இரண்டு (22)

    கொள்ளு/எள்ளுப் பெயரன் பெயர்த்திகள்      :              இருபத்து ஏழு(27)

          இந்தக் கடிதத்தை எழுதியதன் மூலம் உங்களுடனும் அப்பாவுடனும் நேரடியாகப் பேசிய மனநிறைவை அடைகிறேன் அம்மா!

    இப்படிக்கு,

    உங்கள் அன்பு மகன்,

    சண்முகம்.

    Share
  • சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014

     

    சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014
    ————————————————————————————————————-

    film1

    தென் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான சர்வதேச திரைப்பட விழா, முதல்முறையாக சென்னையில் மே 20, 2014 முதல் 25, 2014 வரை நடைபெறவுள்ளது. இத்திரைப்பட விழாவில் மிக முக்கியமாக பெண்களால் இயக்கப்பட்ட திரைப்படங்களுக்கும், பெண்கள் குறித்த பல்வேறு வகைத் திரைப்படங்களுக்கும், முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் ஊடகத்துறையை சார்ந்த பல பயிற்சி பட்டறைகளும் நடைபெறவுள்ளன. இதற்கான பத்திரிகைச் சந்திப்பு மார்ச் 8, 2014 அன்று வாணிமஹாலில் நடைபெற்றது.
    · விளம்பர படங்கள் (Ad film)

    · குறும்படங்கள் (Short film)

    · முழு நீளத்திரைப்படம் (Featurefilm)

    · விளக்கத்திரைப்படம் ((Documentary film)

    film2

    (CWIFF) பெண்களை மையமாக கொண்ட திரைப்படங்கள் மட்டுமல்லாமல் அனைத்து வகையான படங்களையும் வரவேற்கிறது. இவ்விழாவில் ஆண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். மாணவர்கள் அனுப்பும் திரைப்படங்களுக்கு பதிவுத் தொகையில் சிறப்பு சலுகை உண்டு. மேலும் மாணவர்கள் தரும் திரைப்படங்களுக்கு தனி முன்னுரிமை அளிக்கப்படுவதோடு அவர்கள் திரைப்படங்களை ஒரு நாள் முழுவதும் திரையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகள் நீதிபதிகள் குழுவினரால் தேர்வுசெய்யப்படும். இத்திரைப்பட விழாவுக்கான திரைப்படங்கள் பிவிஆர் திரையரங்கிலும்ஆர்.கே.வி ,ரிவ்யு அரங்கிலும் திரையிடப்படும்.

    film3

    திரைப்படங்களை பதிவு அஞ்சல் மற்றும் www.cwiff.com என்ற இணையத்தளம் மூலமாக அனுப்பலாம். படங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஏப்ரல் 15, 2014.இத்திரைப்பட விழாவில் வெற்றி பெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசு தொகையும், விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

    இலங்கையை சேர்ந்த படைப்பாளிகள் மேலதிக விபரங்களுக்கு இந்த நிகழ்வின் ஆலோசனை சபை உறுப்பினராகவும் சர்வதேச ஊடக இணைப்பாளராகவும் இருக்கும் கவிஞர் பொத்துவில் அஸ்மினுடன் தொடர்புகொள்ளலாம் (0094 771600795,vtvasmin@gmail.com)

    Ø விபரங்களுக்கு

    P.G.Udhayakumar,

    Festival Director

    Chennai Women’s International Film Festival,

    O/o Eventaa SouthIndia Productions,

    A division of M/s Dollphin Interactive Sciences pvt. ltd.,

    Ph: +91 98844 28927
    URL : www.cwiff.com,

    E-mail: info@cwiff.com

    Facebook: https://www.facebook.com/CWIFF2014

    twitter: https://twitter.com/CWIFF2014

     

    Share
  • திருமால் திருப்புகழ் (33)

     

    கிரேசி மோகன்

    Tamil-daily-news-paper_31147402525
    ‘’ஏறு மயிலேறு விளையாடும் முகமொன்று’’ அருணகிரியார் சந்தத்தில்….
    ———————————————————————————————————–blogger-image-1144768691

    இராமன் திருப்புகழ்….

    “கோசலைகு மாரனென கொஞ்சுமுகம் ஒன்று
    தேசுமுனி வாசிஷ்ட யோகமுகம் ஒன்று
    கோசிகனின் சீடனென கண்டமுகம் ஒன்று
    கோரமகள் தாடகையை கொன்றமுகம் ஒன்று
    ஈசன்சிலை யாகசிலை இற்றமுகம் ஒன்று
    வாசமகள் ஜானகியின் ஆசைமுகம் ஒன்று
    ஆசுகவி மாருதியின் நட்புமுகம் ஒன்று
    ஆதிகவி ஓதுமிதி காசபெரு மாளே”
    ———————————————————————————————————-

     

     

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (1)

    பவள சங்கரி

    தலையங்கம்

    உயர்திரு அன்னா ஹசாரே அவர்களே,

    ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் பொழுது அவர்களுக்கு எதிராக அதாவது அவர்களின் ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறி சமீபத்தில் தலைநகரில் நீங்கள் போராட்டம் நடத்தினீர்கள். ஊழலுக்கு எதிரான சட்ட முன் வடிவம் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதை நிறைவேற்றிய ஆளும் கட்சியினரும் இதற்குத் துணை நின்ற எதிர் கட்சியினரும் ஊழலை ஒழிப்பதில் உண்மையாக அக்கறை உடையவராக இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? தேர்தல் சமயமான இந்த நேரத்தில் அனைத்துக் கட்சியினரும் ஊழலில் திளைத்தவர்களை தங்களுடைய வேட்பாளராக அறிவித்துள்ளனரே, நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் அண்ணல் காந்தியடிகள் போல் போராடாமல் அமைதி காப்பதற்கு என்ன காரணம். நீங்கள் போராட வேண்டிய இத்தகைய நேரத்தில் அலட்சியப் போக்குக் காட்டுவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?

    இன்னும் கேட்க வேண்டிய கேள்விகளும், பதில் சொல்ல வேண்டிய தலைவர்களும் நிறையவே இருக்கிறார்கள்?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • திருமால் திருப்புகழ் (32)

     

     

    கிரேசி மோகன்

    Sri-Krishna-is-seen-as-the-searing-fire-of-destruction-by-the-demons-the-supreme-object-of-filial-love-by-His-parents-and-the-dark-worshipable-Lord-of-Srimati-Radharanis-heart
    தனத்தன தனத்தன
    தனத்தன தனத்தன-தனதான….

    ———————————————————————————————————————–
    “மரத்தடி குளக்கரை இந்திரன்
    படித்துறை தவத்தினில் -கழியாது
    வலப்புற மனத்திரு
    விரற்கடை புறத்தினில் -நிலையான

    இருப்பினை நெருக்கிட
    மலைப்புற சிவக்கனி -ரமணேசன்
    உரைத்ததை தினப்படி
    உளத்தினில் உறைத்திட -அருள்வாயே

    விரற்கடை பொருப்பினை
    உயர்த்திட இடைக்குடி -மழையாலே
    தவிப்பினை விரட்டிவ
    யிரத்தினை மிரட்டிய -கருநீல

    நிறத்தவ ,விடத்தலை
    நிருத்தியம் நிகழ்த்திய -முலையேறி
    அரக்கியை அழித்தவ
    இடைக்குடி ஜனித்திடும் -பெருமாளே”

    ——————————————————————————————————————

    பின்குறிப்பு-ஆன்மீக இதயம் இரண்டு விரற்கடை தள்ளி வலதுபுறம் இருப்பதாக பகவான் ரமணர் அனுபவம்….’’விரட்டி வயிரத்தினை’’-வஜ்ஜிராயுதம் ஏந்தும் இந்திரனைக் குறிப்பது….

     

    படங்களுக்கு நன்றி:

    http://sdgonline.org/viraha/satsvarupa_goswami/poem-for-february-12-2

    Share
  • அன்புத் தோழி மணிமொழிக்கு

    சுலோச்சனா

    அன்புள்ள மணிமொழிக்கு நட்பிற்கும், நம்பிக்கைக்கும் உரிய தோழி,

    தொலைபேசி வாயிலாக உன்னைத் தொல்லை செய்யாமல் விஷயத்தை ஓரிரண்டு வரிகளில் சொல்லிவிடாமல் – “இதென்ன வள வளவென்று கடிதம் எழுதிக்கொண்டு” என்று நினைக்கின்றாயா?

    மணிமொழி வளவள கடிதமல்ல வளமான கடிதம் எழுதுதல் ஒரு கனவு என்பதை நினைவூட்டும் நெகிழ்வான கடிதமாக்கும்.

    நேற்று ஓவியக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அங்குள்ள படங்களை பார்த்துக்கொண்டே வந்தபொழுது ஒரு அழகிய படத்தைப் பார்த்தேன். அது என்ன படம் எனில் “சாகுந்தலம் கதையின் நாயகி சகுந்தலை தன் அன்பிற்குரிய துஷ்யந்தனுக்கு கடிதம் எழுதும் காட்சி அழகிய ஓவியமாக வரையப்பட்டிருந்தது. தன் எண்ணங்களை கடிதத்தில்தான் எளிதாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்த முடியும் என்ற உண்மை சகுந்தலைக்கும் தெரிந்துள்ளது பார்த்தாயா? அரசர்கள்கூட தங்கள் எண்ணத்தை லிகிதமாக எழுதி புறாவின் மூலம் அனுப்பினார்கள். அதுமட்டுமன்றி கடிதம் கொண்டுவரும் தூதுவருக்கு தனி மரியாதை. பகைவனுக்கும் கூட கடிதம் அனுப்பலாம் கொண்டு செல்பவர் எந்த ஆபத்தும் இன்றி திரும்பி வந்துவிடுவர். கடிதத்திற்கும், தூது வருபவருக்கும் அவ்வளவு மரியாதை. ‘புவன சுந்தர’ என கிருஷ்ணனை அழைத்து ருக்மணி எழுதிய காதல் மடல் ருக்மணி தன் சரணாகதியை கடித்தத்தில் அன்றி வேறு எந்த வழியில் கிருஷ்ணன் பகவானிடம் சமர்ப்பிக்க இயலும்?

    மனித மனத்தின் பாகங்களை நேசங்களை அறிஞர் பெருமக்களின் அறிவுரைகளை வெளியிட கடிதம் எத்தனை பெரிய, அரிய ஒரு மொழி. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் சிறையில் இருந்தபொழுது தன்னுடைய ஒரே அன்பு மகள் “இந்திராவிற்கு கடிதங்கள் மூலமே தன் அன்பை தெரியப்படுத்தினார். அதில் தந்தையின் ‘பாச’ வெளிப்பாடு மட்டுமன்றி உலக வரலாறும் மகளுக்கு போதிக்கப்பட்டது அல்லவா? மகாத்மா காந்தியும் வினோபாபாவேயும் எழுதிக்கொண்ட கடிதங்களில் ஆன்மீகமும் அரசியலும் எவ்வளவு நகைச்சுவை உணர்வோடு வெளிப்பட்டது எவ்வளவு தூய இலக்கியம்.

    தமிழ் அறிஞர் மு. வரதராசனார் அவர்கள் அண்ணனுக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்களுக்கு என்று பல தலைப்பில் எழுதிய கடிதங்களில் அறிவுரைகள் மட்டுமா வெளிப்பட்டன. தமிழ் பண்பாடும் பழக்க வழக்கங்களும் எவ்வளவு துல்லியமாக அறியக் கிடைத்தன.

    அன்பு மணிமொழி,

    தொலைபேசியில் உன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கலாம் ஆனாலும் ஏனோ ஓரிரு நிமிட அளவளாவளில் திருப்தி இலை. மனதோடு மனம் பேச ஆவலாக இருக்கிறது. அந்த ஆவலைத் தணிப்பதற்கு கடிதம் எழுதுவது ஒரு கருவியாக உள்ளது. உன் வயதில் ஒன்று கூடும்போது அறிவும், அன்பும் பல மடங்கு கூடட்டும். உடல் வளர்ச்சியோடு உயரிய எண்ணங்களும் வளரட்டும்.

    புதுமைப் பெண்ணிவள் சொல்லும் செய்கையும் பொய்மை கொண்ட கலிக்கும் புதிது என்ற பாரதியார் வாக்கிற்கேற்ப நீ வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். வீட்டில் அனைவருக்கும் என் அன்பு, உன் அன்பான பதில் கடிதத்தையே ஆவலோடு எதிர்நோக்கும் அன்புத் தோழி,

    உன் தேன்மொழி.

    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – 2​5​ ​​

     

    ​நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

    jay1

     

    jay2

    தகவல் :
    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma

    3. Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]

    6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]

    7. http://jayabarathan.wordpress.com/seethayanam/ [நெஞ்சின் அலைகள்]​

    8. ​http://www.vallamai.com/?p=21424 [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013) [R-2]

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • வல்லமையாளர் விருது!

    வல்லமையாளர்களுக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய
    ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    1. ராமலக்ஷ்மி
    2. மறவன்புலவு சச்சிதானந்தம்
    3. அவ்வை மகள்
    4. ஷைலஜா
    5. வெ. சா
    6. நித்தி ஆனந்த்
    7. நாகேஸ்வரி அண்ணாமலை
    8. கவிநயா
    9. சு. கோதண்டராமன்
    10. ராமஸ்வாமி ஸம்பத்
    11. சாந்தி மாரியப்பன்
    12. பெருவை பார்த்தசாரதி
    13. மலர்சபா
    14. தமிழ்த்தேனீ
    15. பாகம் பிரியாள்
    16. ஜெயஸ்ரீ சங்கர்
    17. இரவி வேணு
    18. விசாலம்
    19. சக்தி சக்திதாசன்
    20. சிலம்பொலி அருண்
    21. சி. ஜெயபாரதன்
    22. சிங்கப்பூர் விஜயகுமார்
    23. சிரிப்பானந்தா
    24. ஸ்ரீஜா வெங்கடேஷ்
    25. பழமைபேசி
    26. செல்வன்
    27. நூ.த.லோகசுந்தரம்
    28. கீதா சாம்பசிவம்
    29. அரவிந்த் சச்சிதானந்தம்
    30. பர்வதவர்தினி
    31. உதயன்
    32. வித்யாசாகர்
    33. சுபாஷினி
    34. பெருவை பார்த்தசாரதி
    35. தமிழ்முகில் நீலமேகம்
    36. தோழர் ஜோ
    37. தேமொழி
    38. துரை
    39. ரிஷி ரவீந்திரன்
    40. மாதவன் இளங்கோ
    41. கோபி சரபோஜி
    42. கலிங்கா பாலு
    43. மேகலா இராமமூர்த்தி
    44. டி. சச்சிதானந்தன்
    45. சத்தியமணி
    46. பேராசிரியர் நாகராஜன்
    47. ஈரோடு கதிர்
    48. டாக்டர் செம்மல்
    49. சங்கர ராமசாமி
    50. பொன் இராம்
    51. காயத்ரி பாலசுப்பிரமணியம்
    52. கல்பட்டு நடராஜன்
    53. ஹரிகி
    54. லோகநாதன்
    55. சாந்தினி பீ
    56. சு. ரவி
    57. வேணுகோபாலன்
    58. நரசய்யா
    59. அப்பாதுரை
    60. சுந்தர்ஜி
    61. திவாஜி
    62. வே. ம. அருச்சுணன்
    63. சி.டி. சனத் குமார்
    64. காளைராஜன்
    65. திருவள்ளுவன் இலக்குவனார்
    66. பானுமதி/ஆதிரா முல்லை
    67. தமிழ்ச்செல்வி
    68. சு. கோபாலன்
    69. பசுபதி
    70. கிருஷ்ணன்
    71. வெ.கோபாலன்
    72. எஸ். ஜெயபாரதி
    73. கமலாதேவி
    74. குரு பிரசாத்
    75. செங்கை பொதுவன்
    76. தீனா வேணு/காப்பியக் கவிஞர்
    77. இராஜ ராஜேஸ்வரி
    78. பார்வதி ராமச்சந்திரன்
    79. காப்பியக் கவிஞர் மீனவன்
    80. பாண்டியராஜா
    81. தேவ்
    82. நிர்மலா ராகவன்
    83. ஒய்.ஜி. மகேந்திரா
    84. டி. சச்சிதானந்தன்
    85. கிருஷ்ணமூர்த்தி
    86. வனிலா பாலாஜி
    87. சத்யா
    88. காவிரி மைந்தன்
    89. வை.கோபாலகிருஷ்ணன்
    90. இப்னு ஹம்துன்
    91. திண்டுக்கல் தனபாலன்
    92. மாலன்
    93. சதீஷ்குமார் டோக்ரா
    94. ஸ்ரீனிவாசன்
    95. சி. ராஜேந்திரன்
    96. முத்துசாமி
    97. விப்ரநாராயணன் திருமலை
    98. நந்திதா
    99. தி.சுபாஷிணி
    100. நா. கணேசன்
    101. முனைவர். ராஜம் ராமமூர்த்தி
    102. எம்.ரிஷான் ஷெரீப்
    103. சொ. வினைதீர்த்தான் 
    104. எம்.மணிகண்டன்
    105. பிச்சினிக்காடு இளங்கோ
    106. ராஜா கார்த்திக் கண்ட்டா
    107. கே.எஸ்.சுதாகர்
    108. ‘ரீச்’ சந்திரா
    109. பூவை. பி. தயாபரன்
    110. கேசவ் வெங்கட்ராகவன்
    111. கீதா மதிவாணன்
    112. பெனோ செபீன்
    113. வாசு ரெங்கநாதன்
    114. எல். கனக சுப்பிரமணி
    115. செண்பக ஜெகதீசன்
    116. கிரேசி மோகன்
    117. சீதா நடராஜன்
    118. கவிஞர் குட்டி ரேவதி
    119. காமாட்சி மகாலிங்கம்
    120. “வழிகாட்டும் ஒளி” குழுவினர் பிரேமா, ரேவதி, சுஜாதா, வைதேகி
    121. ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
    122. ஹீடி எப்ஸ்டீன்
    123. வைதேகி ஹெர்பர்ட்
    124. திரு. பாலமுருகன்
    125. எம்.ஜெயராமசர்மா
    126. செ. இரா. செல்வக்குமார்
    127. இஸ்ரோ அறிவியலாளர்கள்
    128. இந்திராணி
    129. பிரியம்வதா நடராஜன்
    130. மருத்துவர் சிதம்பரம் வீரப்பன்
    131. திவாகர்
    132. இன்னம்பூரான்
    133. டாக்டர் ஆர்த்தி பிரபாகர்
    134. சீதாலட்சுமி
    135. கீதா இளங்கோவன்
    136. எஸ்.கணேசன்
    137. அனுராதா கொய்ராலா
    138. கே. ரவி
    139. வையவன்
    140. ஜாதவ் பயேங்
    141. ஏற்காடு இளங்கோ
    142. கவிஞர் ருத்ரா
    143. இல. சுந்தரம்
    144. முனைவர் மு.பழனியப்பன்
    145. கவிஞர் கலைமகள் ஹிதாயா
    146. மு​னைவர் சி.​சேதுராமன்
    147. ரா. பார்த்தசாரதி
    148. வைதேகி
    149. முனைவர் எல்மார் நிப்ரத்
    150. அனிதா சத்யம்
    151. முனைவர் ந. சுந்தரம்
    152. “பாடம்” நாராயணன்
    153. முனைவர் கு.கல்யாணசுந்தரம்
    154. ஜோதிர்லதா கிரிஜா
    155. கவிஞர் வைகைச்செல்வி
    156. கவிஞர் றியாஸ்முஹமட்
    157. “குறள் வெப்பவளிக்கூடு” திட்டப் பொறுப்பாளர்கள் – செல்வா சரவணா, பெனிடிக்ட் சேவியோ
    158. பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்
    159. நீதிபதி ராஜ ராஜேஸ்வரி
    160. இளம் அறிவாளி விசாலினி
    161. சட்டக்கல்லூரி மாணவி நந்தினி
    162. மருத்துவர் இரா. கலைக்கோவன்
    163. ராதிகா கண்ணன்
    164. மல்ட்டி ஃபன் மாணவர் குழுவினர்
    165. சூப்பர் 30 – ஆனந்த் குமார்
    166. கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம்
    167. விளையாட்டு வீரர் திரு. வருண் ராம்
    168. தாஷி – நான்சி மாலிக் சகோதரிகள்
    169. இசைக்கவி இரமணன்
    170. எம். ஆர். ஹப்பர்ட்
    171. ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினர்
    172. மீனாட்சி பாலகணேஷ்
    173. டாக்டர் டெஸ்ஸி தாமஸ்
    174. இயக்குநர் நந்தினி
    175. அன்பு ஜெயா
    176. பி.சங்கர் மகாதேவன்
    177. மணற்கேணி திரு. ரவிக்குமார்
    178. தொல்லியல் ஆய்வாளர் பத்மாவதி
    179. கிரண் சேத்தி
    180. அரவிந்த் திருவேங்கடம் பத்மாவதி
    181. லட்சுமி
    182. சேசாத்திரி சிறீதரன்
    183. லெ. சொக்கலிங்கம்
    184. பேராசிரியர் டி. நாகராஜன்
    185. முனைவர் நா. கண்ணன்
    186. நீச்சல்காரன் ராஜாராமன்
    187. கே. பிரித்திகா யாசினி, எஸ். ஐ.
    188. ஆர். பி. ரமேஷ்
    189. மாணவி நிகிதா ஆசாத்
    190. அமுதா ஐ.ஏ.எஸ், கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ்
    191. மாணவர் ஆக்சாத் பிரகாஷ்
    192. மாணவர்கள் தனய் டாண்டன், தீபிகா போடபட்டி
    193. மாணவர் மகிஷன் ஞானசேகரன்
    194. மாணவர் ரிஃபாத் ஷாருக்
    195. இ. மயூரநாதன்
    196. கோட்டலாங்கோ லியோன்
    197. மாணவர் ஆண்டனி எடிசன்
    198. மாணவர் உதயகீர்த்திகா
    199. மு. இளங்கோவன்
    200. ரூபாதேவி
    201. கம்சாயினி குணரத்தினம் 
    202. க. பாசுக்கரன் 
    203. சா. அர. சீனிவாச வரதன் 
    204. வினோது கண்ணப்பன் 
    205. ஃகெப்சிபா 
    206. ந. இரவிக்கிரண் 
    207. மீனா செகதீசன் 
    208. பேராசிரியர் இராசு செட்டி 
    209. பிரீத்தி சீனிவாசன் 
    210. ப. அருளி 
    211. இல. பாலசுந்தரராமன் 
    212. ஆ.க. இராமகிருட்டிணன் 
    213. அலெக்சாந்தர் துபியன்சுக்கி 
    214. சோ. ந. கந்தசாமியார் 
    215. கே. சிவக்குமார் 
    216. ஃபெட்னா 
    217. செயபாண்டியன் கோட்டாளம் 
    218. அரி சீனிவாசன் 
    219. பு. வே. சிந்து 
    220. நித்தியா துரைசாமி 
    221. எஸ்.எஸ். ராஜமவுலி
    222. பெட்ஸி டிவோஸ்
    223. சுந்தர் ஐயர்
    224.  கே.வி. மாமா 
    225. உம்முல் கர்
    226. பேட்டி ஜென்கின்ஸ் (Patty Jenkins)
    227. வீர வாஞ்சிநாதன்
    228. விஷ்வேச தீர்த்த ஸ்வாமி
    229. கிம் யாங் – ஷிக்
    230. சஹா நாதன்
    231. இந்திய விஞ்ஞானிகள் (IUCAA)
    232. கலைஞானி கமலஹாசன்
    233. என்.சொக்கன்
    234. எவிடென்ஸ் கதிர்
    235. பெஜவாடா வில்சன்
    236. நடிகர் அல்வா வாசு
    237. எழுத்தாளர் பாலகுமாரன் 
    238. அரிசோனன் மகாதேவன்
    239. வேந்தன் அரசு
    240. திலகவதி மதனகோபால்
    241. மலேசியா கமலநாதன்
    242. இரா. பானுகுமார்
    243. சவுமியா சாமிநாதன்
    244. யது கிருஷ்ணா
    245. குமார் துரைசாமி
    246. பா. ராகவன்
    247. மலாலா யூசுப்சையி
    248. முனாப் கபாடியா
    249. அஜீத் பாய் (Ajith pai)
    250. நூஃப் மர்வாய் 
    251. தாரிகா பானு
    252. பாக்கியம் ராமசாமி
    253. சமுத்திரகனி
    254.  சிற்பி இராசன்
    255. கவுதம சன்னா
    256. திருத்தம் சரவணன்
    257. விஞ்ஞானி சிவன்
    258. பைக் ரைடர் சைபி
    259. தகடூர் கோபி
    260. பேராசிரியர் கண்மணி
    261. டிராபிக் ராமசாமி
    262. சுமிதா மித்ரா
    263. ஸ்ரீதேவி
    264. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 
    265. தென்னிந்திய திரைத்துறை மையம் 
    266. கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் 
    267. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்
    268. சற்குணா பாக்கியராஜ்
    269. அ.முத்துலிங்கம்
    270. டொனால்ட் டிரம்ப் 
    271. சிவசிவா’ வி. சுப்பிரமணியன்
    272. திரு. கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப
    273. பேரா.  அக்‌ஷய் வெங்கடேஷ்
    274. கலைஞர் மு. கருணாநிதி
    275. அடல் பிகாரி வாய்பாய்
    276. கவிஞர் சுகதகுமாரி
    277. கவிஞர் வைரமுத்து
    278. பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகள்
    279. விஞ்ஞானி ஜாசிலின் பர்னல்
    280. கி. ராஜநாராயணன்
    281. விஞ்ஞானி குசலா ராஜேந்திரன்
    282. ஐராவதம் மகாதேவன்
    283. சமூகப் போராளி ‘தரனா பர்க்
    284. மெங் ஃபான்சாவ்
    285. ராம் சுதார்
    286. சு. தியடோர் பாஸ்கரன்
    287. ரா  முத்துசாமி
    288. பாவலர் மா வரதராசன்
    289. விட்டல் நாராயணன்
    290. சேவாலயா முரளி
    291. சுகந்தி நாடார்
    Share
  • பரம்பொருள் பாமாலை-5

    நெல்வி ளையும் தென்னாட்டில் பூத்தவனை,

    வில்வ இலை வடிநீரால் பூசித்து,

    செல்வ நிலை கல்விபுகழ் பெற்று,

    வல்ல மையும் நல்வாழ்வும் பெறுவோம்!                                                                      25

     

    நாட்டிய வேதத்தில் தோன்றிய நாயகனே,

    நீட்டிய பாதத்தால் தேவியை வென்றவனே,

    ஆட்டிய அரவத்தின் நஞ்சினை உண்டவனே,

    வாட்டிடும் துன்பத்தைப் போக்கிடும் ஆண்டவனே!                                                        26

     

    நீருக்குள் ஊடுருவும் சூரிய ஒளியாய்,

    உயிருக்குள் ஊடுருவும் வீரிய ஒளியே,

    பாருக்குள் நீயுலவிக் காப்பதை உணர்ந்தால்,

    யாருக்கும் துன்பங்கள் தோன்றுதல் அரிது!                                                                     27

     

    செவ்வேளின் வடிவத்தில் சிகரத்தில் நின்றாய்,

    வெவ்வேறு வடிவத்தில் அகிலத்தில் வந்தாய்,

    ஒவ்வாத மனதிலும் ஒளியாக மலர்ந்தாய்,

    இவ்வேழை உள்ளத்தில் இசையாக நிறைந்தாய்!                                                          28

     

    குற்றாலக் குறவஞ்சி வழியாக வந்தாய்,

    கற்றாடக் கவின்மிகு தமிழாக வந்தாய்,

    பொற்பாதம் தனைத்தூக்கிப் புயலாக வந்தாய்,

    உற்றாடும் அடியவருள் தென்றலாய் நின்றாய்!                                                              29

     

    இல்லாமல் இருக்கும் நாதனின் பேரருள்,

    இல்லாமல் இல்லை ஈரேழு உலகம்,

    புல்லாகப் பிறக்கும் பிறவி என்றாலும்,

    தில்லையின் நாதனே நீர்தந்து காப்பான்!                                                             30

     

     

    நிலைத்து நிற்கும் நாதனை வணங்கி,

    மலைத்து நிற்கும் மனதின் மாயையைத்,

    தொலைத்து நிற்கும் தூயவர் அடிகளை,

    நினைத்து வாழ்ந்தால் வீடுபேறடைய லாம்!                                                                   31

     

    மானைக் கையில் ஏந்திய நாதனே,

    கூனை நிமிர்த்திய பாண்டியன் தேவனே,

    தூணைப் பிளந்த சிம்மந் தன்னிலும்,

    வானைப் போல விரிந்த ராசனே!                                           32

    Share
  • மணிமொழிக்கு ஒரு மடல்!

    திருச்சிராப்பள்ளி

    19/03/2014

    அன்புக்குரிய மணிமொழிக்கு,

    உன்னுடைய  அம்மான்* எழுதிக்கொண்டது. நலம்.

    நேற்று தொலைபேசியில், உனக்கு உங்கள் நகரத்தின் சிறந்த பள்ளியில் அனுமதி கிடைத்திருப்பதை, உன் அம்மா மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டாள்.

    மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    இதனை அடைவதற்காக உந்தன் பெற்றோரும் நீயும் செய்த முயற்சியையும், அயர்ச்சியையும் நன்கு அறிந்துகொண்டேன்.

    விண்ணப்பம் பெறுவதற்கு அதிகாலையிலிருந்தே கால்கடுக்க வரிசையில் நின்றதில் ஆரம்பித்து, நீ நுழைவுத்தேர்வில் சிறப்பான முறையில் தேறியது வரை உன் அம்மா விவரித்தாள்.

    கல்விக்கட்டணம் அதிகம் என்று கருதினாலும், அது உன்னுடைய புத்தகப்பையின் சுமையைவிட தங்களுக்கு அதிக சுமையில்லை எனவும், தங்களின் வாழ்வே உனக்காகத்தான் என்ற கருத்தில் உறுதியாகவும் உவகையாகவும் இருக்கிறாள்.

    ஆனால், அவளுக்கு ஒரு முக்கியமான கவலை; நியாயமான கவலை; கவனத்தில் கொள்ளவேண்டிய கவலை. அது என்னவென்றால், உன் பள்ளியின் தூரம்.

    விபத்துகள் மலிந்த இந்த காலக்கட்டத்தில், நாளிதழ்களில் நாளும் தென்படும் செய்தி,  பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படும் விபத்துகள் பற்றித்தான். அதனைப்பற்றி கலந்துரையாடும்பொழுது, அதிகாரபூர்வமாகவும், என் சொந்த அனுபவத்திலும் சாலை  விபத்துகளுக்கான முக்கிய காரணமாக அமைவது 77% தனிமனித தவறுகளால்தான் என்பதனை தெரிவித்தேன்.

    அவள் என்னிடம், அந்தத் தவறுகளை களைவதற்கான வழிமுறைகளையும், வருமுன் காக்கும் நடைமுறைகளையும் உனக்கு அறிவுறுத்துமாறு வேண்டிகொண்டதன் விளைவுதான் இந்த கடிதம்.

    நீ மிகுந்த பொறுப்பானவள், பணிவானவள் என்பதில் எங்களுக்கு எந்தவித ஐயமும் இல்லை. அதே வேளையில், நீ செவிமடுத்து மேன்மைப்படுத்திக்கொள்ளும் இயல்பினள் என்ற காரணத்தினால் சில ஆலோசனைகளை பகிர்ந்துகொள்கிறேன்

    உன் பள்ளிப்போக்குவரத்திற்கு மூன்றுவித வாகன வசதிகள் இருப்பதாகவும் – ஆட்டோ, தனியார் வேன் மற்றும் பள்ளிப்பேருந்து- அதனதன் சாதகபாதகங்களையும் தெரிவித்தாள்.

    எந்தவித வாகனங்களாக இருந்தாலும், சாலைவிதிகள் பொதுவானவை தானே. அடிப்படை சாலைவிதிகள் பற்றி நீ முற்றிலும் அறிந்திருப்பாய் என்று நம்புகிறேன்.

    *அம்மான் – தாய்மாமன்

    விதிகள் மீறும்பொழுதும் மீறப்படும்பொழுதும் நாம் பெரும்பாலும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிவிட்டு கலைந்துவிடுகிறோம். செயல் மாற்றம் என்பது நம் ஒவ்வொரிடம் இருந்து தொடங்கவேண்டும். அதன் நல் விளைவுகளையும் நோக்கங்களையும், நம் சக மனிதர்கள் கண்டுணர்ந்து செயல்படுத்த தொடங்கிவிட்டால், சமூக நல் மாற்றம் விளைந்துவிடும். அடுத்த சக மனிதருடைய பாதுகாப்பு என்பது நம் கடமை என்று நாம் ஒவ்வொருவரும் எண்ணமிட்டாலே போதும், நம் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுவிடும். அன்றாட மன சஞ்சலங்களும், பாதுகாப்பற்ற உணர்வுகளுக்கும் தீர்வு ஏற்படும்.

    இந்த தீர்வு என்பது ஒரே நாளிலோ ஒரு நபராலோ ஏற்பட்டுவிடமுடியாது; நம் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இன்றியமையாதன. வந்தபின் பார்த்துக்கொள்வதைவிட, வருமுன் காப்பதே சாலச் சிறந்தது.

    பள்ளி வாகனங்களின் அதிக குழந்தைகளை ஏற்றிச்செல்கிறார்கள் என்ற  குற்றச்சாட்டிற்கு, பள்ளி வாகன ஓட்டுநரின் தவறைவிட அதில் ஏறும் நம் மனப்பான்மை தவறுக்குதான் அதிக இடம் இருக்கிறது. முக்கியமாக பெற்றோர்களையே குறிப்பிடுவேன். இதனைப் பற்றி உன் அம்மாவிடம் விரிவாக எடுத்துரைத்தாலும், உன்னிடமும் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

    இந்த அவல நிலைக்கு முக்கிய காரணம் எங்களைப்போன்ற பெற்றோர்கள்  என்பதனை முதலில் உணரவேண்டும். வாகன ஒட்டுநர்க்கோ பல குழந்தைகளில் நீங்கள் ஒரு  குழந்தை. பெற்றோருக்கோ அந்த  ஒரு குழந்தைதான் எல்லாம். அதிகமான எண்ணிக்கையில் பயணப்படும் வாகனங்களில் நம் குழந்தைகளை அனுப்புவதில்லை என்ற தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும். அனுமதித்த அளவு குழந்தைகளை ஏற்றும் வாகன அமைப்பாளர்களுக்கு, அவர்களுக்கும் கட்டுபடியாகும் அளவிற்கு சற்று கூடுதல் கட்டணத்தை, நம் குழந்தைகளின் பாதுகாப்பு பொருட்டு செலுத்துவதில் நாம் குறைந்துபோய்விடமட்டோம்.

    மற்றபடி உன் தந்தையாரிடம் இரண்டு குறிப்பான பாதுகாப்பு சரிபார்த்தலை வலியுறுத்தி இருக்கிறேன். ஒன்று, வாகன ஓட்டுநரின் கண் பார்வை உள்ளிட்ட மருத்துவ சான்றிதழ். இரண்டு, வாகனத்தின் சக்கரத்தின் (டயர்) அமைப்புத்தன்மையை உறுதிப்படுத்துதல். (என் அனுபவத்தில், மேற்கூறிய இரண்டு அம்சங்களின் பழுதினால் நிறைய விபத்துகள் ஏற்பட்டு இருக்கிறது. இதனை  யாரும் குறிப்பாக கவனிப்பதில்லை; வலியுறுத்துவது இல்லை.)

    பல வாகனங்களில் டயர்களை பார்த்தால், வழவழப்பாக (சாலைகள் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்க வைக்கும் அளவுக்கு) இருப்பதை அறியமுடியும். இவை மிகுந்த ஆபத்தானது என்பதை ஓட்டுனரும், பயணிகளும் கவனத்தில் கொள்வதே இல்லை. டயர்களின் சீரான பயன்பாட்டிற்கு குறிப்பாக மூன்று அளவுகோல்களை அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – டயர் பிரஷர் (அழுத்தம்), ட்ரட் (Tread), சமசீர்த்தன்மை (alignment).

    என்னைபோன்ற ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர், தான் அறுவை சிகிச்சை செய்யும் ஒரு குறிப்பிட்ட நோயாளிகளின் உயிர்நலனுக்கு பொறுப்பாகிறார். ஆனால் ஒரு ஒட்டுநரோ, அது எந்தவித வாகனமாக இருந்தாலும் ஒரு நடைக்கு குறைந்தப்பட்சம் 4 முதல் 60 பயணிக்கும் குழந்தைகளின் உயிர்நலனுக்கு பொறுப்பேற்கிறார்.

    அவருடைய பொறுப்புணர்ச்சியை உணரச்செய்தால், முறையாக அங்கீகரித்தால் கண்டிப்பாக அவருடைய மனப்பான்மையில் பெரிய மாற்றத்தை உருவாக்கலாம். ஒரு பயணம் முடிந்தவுடன், நாம் ஒவ்வொருவரும் அவரை அணுகி, பாதுகாப்பான பயணத்திற்கு  தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொண்டால் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் அடுத்தக்கட்ட நகர்வுக்கு செல்லலாம் என்பது திண்ணம்.

     இந்த பழக்கத்தை நீ உடனடியாக கடைபிடிக்கவேண்டும். உன் சக மாணாக்கர்களுக்கும் இதனை நயம்பட எடுத்துரைக்கவேண்டும்.

    மற்றபடி, வரிசையில் ஏறுவது இறங்குவது, நின்றவுடன் இறங்குவது போன்ற அடிப்படை பாதுகாப்பு கோட்பாடுகளை நீ நன்றாக அறிவாய். அதனை செயல் படுத்துவதில்தான் பாதுகாப்பு உறுதியாகும்.

    எப்படியாகினும், சொல்லுதல் யார்க்கும் எளியஅரியவாம்,

         சொல்லிய வண்ணம் செயல்.” (திருக்குறள் –664 – வினைத்திட்பம்)

    என்ற குறளை மனதில் நிறுத்தவும்.

    மேற்கூறிய அனைத்தும் தற்காலிக நடைமுறைக்கான வழிகாடுதல்கள்தான்.

    இதற்குரிய  நிரந்தர எளிய தீர்வுகளை பற்றி சிந்தித்தபொழுது எழுந்த என் எண்ணவோட்டங்களை  உன்னிடம் பகிர்ந்துக்கொள்ள விளைகிறேன்.

    நான் என்னதான் எவ்வளவுதான் எடுத்துரைத்து பட்டியலிட்டாலும், என் தலைமுறையினரின் சார்பாக ஒரு உறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக தற்கால வளரும் தலைமுறையினர் ஆகிய உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

    எதற்காகவென்றால், எங்களுக்கு முன் தலைமுறையினர், எங்களிடம் தாங்கள் கல்வி கற்ற சிரமங்களை விவரிப்பதுண்டு. குறிப்பாக அந்த காலத்தில் பள்ளிகள் அவர்களின் இருப்பிடத்தை விட்டு தூரமாக இருந்ததையும், அதற்காக அவர்களின் தினந்தோற பயண சிரமப்பாடுகள் பற்றியும்தான் இருக்கும். அவற்றில் அவர்கள் ஒருமுறையேனும் பாதுகாப்பு குறைபாடு அல்லது அச்சம் பற்றியும் தெரிவித்ததே இல்லை.

    அந்த நடைமுறை சிரமங்களை குறைப்பதற்காகத்தான் கிட்டத்தட்ட ஊர்தோரும் பள்ளிகள் அமையவும், பள்ளிகள் மேனிலைப்படுத்தவும் அந்தக்கால கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் சீரிய முயற்சிகள் மேற்கொண்டு ஓரளவு வெற்றியும் கண்டனர்.

    அதனை மேம்படுத்தவும் விரிவுப்படுத்தவும் தவறிவிட்ட தலைமுறையாய் நாங்கள் தலைகுனிகிறோம்.

    உலகளாவிய போக்கிலும், வளர்ந்த நாடுகளும் ஒருமித்து செயல்படுத்தும் “அருகமை பள்ளிகள்” என்ற உயர்ந்த கல்விக்கோட்பாட்டை நிலைநிறுத்தத் தவறிவிட்டோம். எங்களுக்கு முந்தைய தலைமுறையினருக்கு தூரம்தான் தடையாக இருந்தது. ஆனால் உங்களுக்கு, தூரம் போக பாதுகாப்பின்மையையும், விளையாட்டின்மையையும், நேரமின்மையையும், சோர்வையும், மனவழுத்ததையும் கூடுதலாக திணித்துவிட்டோம். ஊருக்கு வெளியே இருந்த மதுக்கடைகளை ஊருக்குள் வைத்துவிட்டு, ஊருக்குள் இருந்த பள்ளிகளை வெளியற்றிவிட்டோம். முன்பு சமூகச்சூழலால் கிட்டாத கல்வியை, இன்று புறச்சூழலால் கிட்டாமலே வைத்துள்ளோம்.

    பாதுகாப்பான உன்னதமான கல்விச்சூழல் அருகமை பள்ளிகளில்தான் அமையக்கூடும். அதுதான் நிரந்தர தீர்வாக அமையும். அன்றாட பாதுகாப்புகள் பற்றிய கவலை இல்லாமல் நீங்கள் கல்வியிலும், விளையாட்டுகளிலும் கவனம் செலுத்துவீர்கள். பெற்றோர்களாகிய நாங்களும் நிம்மதியாக எங்கள் அலுவல்களை மேற்கொள்ளமுடியும்.

    நாங்கள் தெரிந்தே செய்த தவறு. மன்னித்துக்கொள்ளுங்கள்.

    தவறிழைத்தவர்தான் தவறைக் களைய முனையவேண்டும். ஒரு பக்கம் குறைகள் மிகுந்து காணப்பட்டாலும், ஒவ்வொரு தனிமனிதனின் மனப்பான்மை, தவறுகளைத்  திருத்திக்கொள்ளும் பக்குவம், சரியான புரிதல்கள் மூலம், நம் அன்றாட நல்வாழ்வையும், ஒளிமயமான எதிர்காலத்தையும் அமைத்துகொள்ளலாம் . அதற்கான முயற்சிகளை வல்லமை படைத்த அனைவரும் மேற்கொள்வோம்.

    இதற்கிடையில் உன்னைப் போன்றோர் நன்கு தூய கல்வி கற்று, எங்களின் முனைதலையும், முயற்சிகளையும் முன்னெடுத்து செல்வீர்கள், உங்களுக்கு  பின்வரும் தலைமுறையினருக்கு பாதுகாப்பான ஒரு உலகத்தை அமைத்துகொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதில்தான் அறிவுசார் மனிதகுல வளர்ச்சியின் வெற்றி இருக்கிறது.

    என்றும் அன்புடன்

    உன் அம்மான்

    Dr. சுப. திருப்பதி

    Share
  • மணிமொழிக் கொரு மடல்

    நடராஜன் கல்பட்டு

    சென்னை – 64

    19-03-2013

     

    எனது அன்பு மணிமொழி,

    உன்னிடம் இருந்து கடைசியாய் வந்த கடிதத்தில் நீ கேள்வி ஒன்று கேட்டிருந்தாய், “உனது கையெழுத்து ஏன் இப்படி ஆகி விட்டது?  வகுப்பிலேயே அழகான கையெழுத்து கொண்டவள் நீ தானே.  உன் கை விரல்களிலே நடுக்கம் இருக்கிறதா?  உடனே நீ வைத்தியரைப் பார்” என்று.

    உண்மைதான்.  அப்போதெல்லாம் எட்டாம் வகுப்புக்கு வரும் வரை நமக்கு காப்பீ ரைடிங் என ஒரு வேலை இருக்கும்.  பள்ளிப் புத்தகங்கள் வாங்கும்போதே அவற்றில் காப்பீ ரைடிங் என்ற ஒரு நோட்டுப் புத்தகமும் இருக்கும். அதில் எல்லாப் பக்கங்களிலும் நான்கு நான்கு வரிகளாக அச்சடிக்கப் பட்டு இருக்கும்.  ஒவ்வொரு பக்கத்திலும் முதல் வரியில் அழகாக ஆங்கிலத்திலோ தமிழிலோ வார்த்தைகளோ அல்லது ஒரு வாசகமோ அச்சடிக்கப்பட்டு இருக்கும்.  அந்த முதல் வரியில் உள்ளது போலவே நாம் கீழ் வரிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

    உனக்கு நினைவு இருக்கும்.  எனது காப்பீ நோட்டில் டீச்சர் போடும் “குட்”டைப் பார்த்து, “டீ நீ பெரிய ஆளா வருவேடீ” ன்னு சொல்லுவே.  ஆனா கையெழுத்துக்கும் தலெ எழுத்துக்கும் இருக்கற பொருத்தம் ‘அஷ்டாஷ்டக’ பொருத்தம்னு சொல்லணுமோன்னு தோணுறது எனக்கு.

    கையெழுத்து நன்னா இருக்கறவாளுக்கு தலெ எழுத்து நன்னா இருக்காதோ?

    கல்யாணம் ஆன புதுசுலெ என் மாமியார், “என்ன சீரு செஞ்சிருக்கார் ஒங்க அப்பா?  இது சரியா இல்லே.  அது சரியா இல்லே” ன்னு சொல்லி என்னையும் என்னோட அப்பாவையும் திட்டுவா..  மாமியார் போய்ச் சேந்தா புண்ணியவதி.  மழெ நின்னாலும் தூரல் உடலேன்னு சொல்லுவாளே அது போல மாமியார் செஞ்சிண்டு இருந்த வேலெயெ நாத்தனார் எடுத்துண்டா.

    வீட்டோடு நாத்தனாரான்னு கேக்கறயா?  இல்லே.  அப்பொப்ப வருவா பெரிய லிஸ்ட்டெ எடுத்துண்டு.  அண்ணாதான் இருக்காரே ஆபத் பாந்தவன், கையிலெ அக்ஷய பாத்திரத்தோட.

    நான் எதாவது வேணும்னு கேட்டா, “அதுக்கென்ன இப்பொ அவசரம்.  நமக்கு வேணுங்கெறதெ எப்பொ வாணா வாங்கிக்கலாம்” னு சொல்லி என் வாயெ அடெச்சுடுவார்.  என்னோட ஆசெயெல்லாம் அடக்கி வெச்சு அடக்கி வெச்சே அழிஞ்சு போச்சு.

    இப்போ பையனும் பொண்ணும் வளந்தூட்டா.  நான் எதாவது சொன்னா, “அம்மா நீ சும்ம இரு.  ஒனக்கு ஒண்ணும் தெரியாது” ன்னு சொல்லி என்னெ அடக்கறா.

    மணிமொழீ எனக்கு சில சமயம் தோணறதுடீ ரெஃப்ரீஜிரேட்டர்லெ ஃப்ரீஸர்னு ஒண்ணு இருக்கே அது போல நம்மெ சின்னவாளாவே ஃப்ரீஸ் பண்ணி வைக்க ஒண்ண விஞ்ஞானிங்க கண்டு புடிச்சிருக்க மாட்டாங்களான்னு தோணறதுடீ.

    இத்தோடு நிறுத்திக்கறேன் என் கதெயெ.  நீ எப்படி இருக்கெ?  அதெ சொல்லு.

    இப்படிக்கு,

    கழிந்த இன்ப நாட்களை எண்ணி துன்ப நாட்களைக் கழித்திடும்

    உன் அன்புத் தோழி,

    அனுசுயா

    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 11

    இவள் பாரதி

    ஓங்கியடித்துவிடுகிறாள்

    அம்மாகுட்டி

    அடிப்பதா அழுவதா

    என சுதாரிப்பதற்குள்

    சிரித்துவிடுகிறாள்

    (more…)

    Share