நாளை நமதே… இந்த நாளும் நமதே
கவிஞர் காவிரி மைந்தன்
மக்கள் திலகம் என்னும் அடைமொழி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கல்கண்டு தமிழ்வாணன் அவர்களால் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அவர்களின் மாபெரும் வெற்றிப்படங்களுக்குப் பாடல்கள் இயற்றிப் பெரும்புகழ் ஈட்டியவர் கவிஞர் வாலி அவர்கள் என்பதை வரலாறு சொல்கிறது.
திரைப்படப் பாடலாசிரியர்கள் பல நூறு பேர்கள் வந்தாலும் தங்கள் தடங்களைப் பதித்துவிட்டுப் போனாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை மட்டுமே காலம் இன்று கணக்கில் வைத்திருக்கிறது. ஏன்.. எப்படி.. எண்ணிப்பார்த்தால், திரைப்பாடல்கள் என்கிற வரையறைகளை வகுத்துக்கொள்ளாமல், வாழ்க்கையின் எல்லைகளை.. இன்ப துன்பங்களை பல்வேறு கூறுகளை.. அப்பாடல்களில் இலகுவாக பக்குவமாய் பதித்து வைத்திருப்பதே அடிப்படைக் காரணம் ஆகும் என்பது புலனாகும்.
குறிப்பாக, புரட்சித் நடிகர் பொன்மனச் செம்மல் என்கிற அடைமொழிகளைத் தாங்கிநின்ற சாதனை சரித்திரமம் எம்.ஜி.ஆர். என்கிற கதாநாயகனின் பாத்திரப் படைப்புகள் எல்லாம் மக்கள் மனதில் நிச்சயமாக, சத்தியமாக, பலமாக பெரியதோர் தாக்கத்தை உண்டாக்கும் வல்லமை – வசனங்களைத் தாண்டி.. இது போன்ற பாடல்களின் மூலமே சாத்தியமாகும் என்பதை கவிஞர் வாலி அவர்கள் எம்.ஜி.ஆருக்காக எழுதிய பல்வேறு பாடல்கள் சாட்சியம் கூறும். இதோ இவ்வரிசையில் நாளை நமதே திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் .. திரையில் இருமுறை மலரும் அன்பு மலர்களே.. நம்பி இருங்களேன். நாளை நமதே..
அன்பு மலர்களே நம்பி இருங்களே
நாளை நமதே இந்த நாளும் நமதே
தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே எந்த நாளும் நமதே
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே…
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வளர்ந்து
நாளை நமதே நாளை நமதே நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே
பாசம் என்னும் ஊர் வழி வந்து பாசமலர் கூட்டம்
ஆடும் மழையில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம்
மூன்று தமிழும் ஓர் இடம் நின்று
பாடவேண்டும் காவியச் சிந்து
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
நாளை நமதே, நாளை நமதே
வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஓளிமயமாக வெளிச்சம் தாருங்களே
நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது
நாளை நமதே நாளை நமதே
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே…
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வளர்ந்து
நாளை நமதே நாளை நமதே நாளை நமதே
படம் : நாளை நமதே (1974)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், டி.எம். சௌந்தரராஜன்
http://www.youtube.com/watch?v=pY-kqvZr070
இத் திரைப்படம் பார்த்தபோது.. குறிப்பாக இந்தப் பாடலில் இந்த வரிகள் தந்த உற்சாகம், வைராக்கியம் .. இன்று நான் பெற்றுள்ள வெற்றிகளுக்கெல்லாம் முதற்படி என்றால் அது மிகையன்று.
திரு. தர்மேந்திரா அவர்கள் இந்தியில் நடித்த யாதோங்கி பாரத் என்னும் இந்திப்படத்தின் தழுவல் இந்தப் படம் எனினும் பாடல்கள் மெல்லிசை மன்னரால் அதீதமானதவையாகவும் அற்புதமாகவும் மலர.. கவிதை இதழ்கள் விரிவது போல் பாடல் வரிகள் அமைத்தவர் கவிஞர் வாலி என்பதில் இருவேறு கருத்தில்லை.
நாளை நமதே இந்த நாளும் நமதே…
நல்லதொரு பாடலை வழங்கி உள்ளீர்கள்
தன்னம்பிக்கைக்கு சிறந்த எடுத்துகாட்டு இந்த பாடல்