Blog

  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – தகவல் தொடர்பு முறைகள்

    சுரேஜமீ.

    முகங்கள் பார்த்து கதைகள் பேசிக் களித்த காலங்கள் கடந்து, நாம் வெகுதூரம் வந்ததற்கான சாட்சியே, நாம் இன்றைக்கு இணையத்தை, உற்ற தோழனாகவும்; தொடர்பாகவும் கொண்டுள்ள காட்சி எனலாம்!   காலம் தன் வேகத்தைக் கூட்டவுமில்லை; குறைக்கவுமில்லை! ஏனோ நாம் மட்டும் இன்னமும், காலம் ஓடுகிறது என்ற சொல்லை; நம் இயல்புக்குத் தகுந்தவாறு பயன்படுத்தத் தவறுவதில்லை.  மனிதத் தொடர்புகள்  தூரமாகும்போது, அதனை நம் அருகே கொணரத் துணை புரியும் இணையத் தொடர்பு சாதனங்களையும், அதைக் கையாளும் முறைகளையும், சற்று உங்கள் மனதில் பதிய வைப்பதுதான், இந்தக் கட்டுரையின் நோக்கம்!

     

    இந்தக் கட்டுரையில் மூன்று முக்கியத் தகவல் தொடர்பு முறைகளைப் பற்றியும்; அதனைக் கையாளும் வழிகள் பற்றியும் குறிப்பிட முனைகிறேன்;

    1. முகநூல் (Facebook)
    2. ஏகிநிற்பது என்ன? (Whatsapp – இதற்குத் தமிழாக்கம் என் சொந்த முயற்சி; இணையான வார்த்தைகள் வரவேற்கப் படுகின்றன; அதே சமயம் இச்சொல்லே பழக்கத்திற்கு வந்தால் அதன் பெருமை என் தமிழ்த்தாய் தந்த எண்ணத்திற்கு)
    3. குறியீட்டுச் செய்தி (Twitter) – இத் தமிழாக்கமும் என் சொத்த முயற்சியே! குறியீடுகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால், ‘குறியீட்டுச் செய்தி’ எனப் பெயரிட்டுள்ளேன்.

     

    முகநூல் (Facebook):

    ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களுள் ஒருவரான மார்க் சுக்கெர்பெர்க் என்பவரால், தன் சக மாணவர்களோடு ஒரு தொடர்பினை ஏற்படுத்த செய்யப்பட்ட ஒரு முயற்சி, இன்று உலகத்தையே தன் தொடர்பில் வைத்திருப்பதோடு, உலக அளவில் ஒரு ஒப்பற்ற தகவல் தொடர்பு ஊடகமாகவும், மொத்த இந்தியாவின் மக்கள் தொகையை விஞ்சும் அளவிற்கு, சற்றேறக் குறைய 130 கோடிக்கும் மேலான பயனாளிகளைக் கொண்டதாகவும், சுமார் 21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டுவதாகவும் வளர்ந்திருக்கிறதென்று சொன்னால், அதன் வளர்ச்சியை உங்களின் மனக்கண் முன் கொண்டு வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு!

    முகநூலின் பயன்

    இற்றைக் காலங்களில், உலகம் ஒரு சின்ன உள்ளங்கைக்குள் அடங்குவது போன்று சுருங்கிவிட்டது.  சிறுவனாக இருந்த பொழுது, முகவையிலிருந்து சென்னை பெருந்தூரமாகத் தெரிந்தது என் போன்றோர்க்கு; ஆனால், இன்று படித்த குடும்பங்களில், வீட்டுக்கு ஒரு பிள்ளை வெளிநாட்டில் பணி செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது என்று சொன்னால், ஆச்சரியம் ஏதுமில்லை.  இத்தகைய சூழலில், தொலைவில் இருப்பவர்களோடு, அடிக்கடித் தொடர்பில் இருப்பதற்கு, நாம் தொலைபேசியையோ, அலை பேசியையோ உபயோகப் படுத்தினால், மிகவும் அதிகமான செலவு பிடிக்கும்.  அதே வேளையில், நமக்கு ஒரு முகநூல் கணக்கு இருந்தால், நம்மால், சுலபமாக நம் உறவுகளை அவர்களின் முகநூல் கணக்கோடு இணைத்து, தினமும் செய்திகளப் பகிர்ந்துகொள்ள ஏதுவாக இருக்கும்!  சரிதானே?

     எப்படித் துவங்குவது?

    படித்தவர்களே சில நேரங்களில், முதன் முதலாக ஒரு செயலைச் செய்யும்போது, ஒரு தயக்கம்; ஒரு சிறிய அச்சம் அல்லது ஏன்? எதற்கு என்னும் கேள்வியால், அச் செயலைக் காலம் தாழ்த்துவதோ அல்லது தவிர்ப்பதோ உண்டு! அவர்களுக்கான ஐயப்பாடுகளை நீக்குவதும், என்ன செய்யவேண்டும் எனப் பகர்வதும்தான், இணைத்துள்ள நிழற்படமும் அதற்கான விளக்கமும்!

    சுரேஜமீ

    இணைத்துள்ள படத்தில் எண் வரிசைப் படி, நாம் கொடுக்கவேண்டிய தகவல்களைப் பார்க்கலாம்;

    1. தாங்கள் பெயர்.  இங்கே உங்களின் பயன்பாட்டுக்கேற்றவாறு, நீங்கள் தகவல்களைப் பகிரலாம்.  பயன்பாடு என்று சொல்லும்போது, கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றுக்கு ஏற்ப, உங்களின் சுய தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும்;
    • குடும்ப உறவுகள் மற்றும் துறை சார்ந்த நண்பர்கள் மட்டும்
    • நட்பு வளைய மேம்பாடு மற்றும் பொழுது போக்கு
    • திறன் வெளிப்படுத்தல்
    • இன்ன பிற

    இங்கு நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியக் காரணியே, உண்மைத் தகவல் பகிர்வதா? அல்லது புனைப் பெயர் மற்றும் வெற்றுத் தகவல் பகிர்வதா என்பதே!

    1. இது தங்களின்  முதல் தகவலைத் தழுவியது.
    2. உங்களின் உண்மையான மின்னஞ்சல் கணக்கு ஒன்றைப் பகிர்தல் அவசியம். முகநூல் கணக்கு துவங்கிய பின், துவங்கிய நபரைச் சரி பார்க்கும் அஞ்சல், இந்த முகவரிக்கு அனுப்பப்படும் என்பதை நினைவில் கொள்க!

    இதே தகவலை, இதற்கு அடுத்த தகவல் நிலையிலும் திரும்பப் பதிவிடுங்கள்

    1. உள் நுழை பாதுகாப்பு சொல்.
      1. தாங்கள் எளிதில் நினைவில் வைக்கத் தக்க ஒரு சொல்லைப் பயன்படுத்துதலும்;
      2. அச்சொல்லில்
        1. ஒரு தலைச் சொல்லும்(Capital Letter);
        2. ஒரு எண்ணும் (Number);
    • ஒரு அனுமதிக்கப்பட்ட சிறப்புக் குறியீட்டுச் சொல்லும் (Special Character) இருந்தால் நல்லது!
    1. இது தங்களின் முதல் தகவலைத் தழுவியது.  ஆனால், கண்டிப்பாக ஒரு தகவலைப் பதிதல் அவசியம்!
    2. இதுவும் தங்களின் முதல் தகவலைத் தழுவியது.  ஆனால், கண்டிப்பாக ஒரு தகவலைப் பதிதல் அவசியம்!

    மேற்கூறிய தகவல்கள் நிலையிட்ட பின், “Sign Up” அழுத்த, உங்களின் முகநூல் கணக்கு துவங்கப்பட்டு, கணக்கு உங்களுடையதுதானா எனச் சரி பார்க்கும் மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும்.  மின்னஞ்லில் குறிப்பிட்டுள்ள தொடர்பானைச் சொடுக்க, உங்கள் முகநூல் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்!

    என்ன முகநூல் கணக்குத் துவங்கலாமா?  இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கும், அதிகமானவர்கள், முகநூல் கணக்கு வைத்திருப்பதாக ஒரு செய்தி சொல்கிறது  கணக்குத் துவங்குவது சம்பந்தமாக, மேலதிகத் தகவலுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள, இணைப்பானைச் சொடுக்கவும்!

    http://www.wikihow.com/Set-up-a-Facebook-Account

    குறைந்த பட்ச பாதுகாப்பு

    முகநூல் கணக்கு வைத்திருப்பதன் நோக்கமே, நாம் நினைக்கும் செய்திகளைத் தன் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதுதான்.  அத்தகைய சூழலில், நாம் பகிரும் தகவல்களில், பெரும்பாலும், நம்முடைய அல்லது குடும்பத்தாருடைய நிழற்படங்கள்; காணொளிக் காட்சிகள், பிற ஆவணங்கள் என நிரம்பி இருக்கலாம்!  ஆனால், மேற்கூறிய அனைத்தும், ஏதோ ஒரு வகையில், இன்றைக்கு இருக்கக் கூடிய விஞ்ஞான வளர்ச்சியில், திரித்துப் பகிரக் கூடிய வாய்ப்பு இருப்பதை நாம் அறிந்திருத்தல் அவசியம்!

    அதற்கான சில பாதுகாப்பு குறித்த தகவலைப் பார்ப்போமா?

    1. உங்கள் சுய குறிப்புகளின் பாதுகாப்பு குறித்து, நீங்கள் முடிவு எடுக்க ஏதுவாக, எது மற்றவர்களுக்குத் தெரியவேண்டும்? எது தெரிய வேண்டுவது இல்லை என்பதைத் தீர்மானித்து, அதற்கேற்றார் போல, உங்கள் சுயதகவல் பரிமாற்றம் செய்யலாம். இதோ அதற்கான புரிதல் படம்;

    சுரேஜமீ1

    1. நிழற்படங்களை யாருடன் நாம் பகிரவேண்டும் என்பதையும்; அதன் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவது என்பதையும் விளங்கிக் கொள்ள, கீழுள்ள படத்தைப் பார்க்க;

    சுரேஜமீ2

    பெரும்பாலும், நிழற்படத்தின் வலதுமுனையில், பூமிப் பந்து போன்ற உருண்டைச் சின்னத்தில், சொடுக்க, அது மேற்காணும் தகவல்களைப் பகிரும்!  அதற்கேற்றவாறு, உங்களின் நிழற்படம், யார் பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.  குறிப்பாக, சில படங்களை நாம் சேமிப்பில் வைக்கவும் முகநூலை உபயோகிக்கலாம்.  அத்தகைய சூழலில், நிழற்படங்களை நாம் மட்டுமே பார்க்கக் கூடிய வகையில், பூட்டு சின்னம் (Only Me) அமைப்பில் சொடுக்க, அப்படம் மிகுந்த பாதுகாப்போடு, நாம் மட்டும் பார்க்க ஏதுவாக அமையும்.

    என்ன உபயோகமான தகவல்தானே?

    1. அடுத்து, நம்மை யார் தொடுப்புச் செய்வது; நம் நிலைத்தகவலில் அடுத்தவரை தகவல் பதிய அனுமதிப்பதா? வேண்டாமா?

    சுரேஜமீ3

    1. நமக்கு யார் நட்பு விண்ணப்பம் அனுப்புவது என, ஒவ்வொன்றையும், நேர்த்தியாக, நாமே தீர்மானிக்க முடியும்; அதற்கான விளக்கப் படம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது!

     

    சுரேஜமீ4

     

    1. சிலவேளைகளில், நாம் நல்லவர் என நட்பு விண்ணப்பங்கள் வரவேற்கும்போது, போகப் போக, அவர் பகிரும் தகவல்கள், நமக்கு சில சங்கடங்களையோ, அல்லது கருத்து ஒவ்வாமையையோ ஏற்படுத்தலாம். அத்தகைய வேளையில், நீங்கள் அவருடனான தொடர்பைத் துண்டிக்க நினைக்கலாம்.  அதை எவ்வாறு செய்வது என்பதை விளக்கும் சுட்டி, இதோ உங்களின் பார்வைக்கு;

    சுரேஜமீ5

    மேற்கூறிய இந்த ஐந்து தகவல்களும், உங்கள் முகநூல் கணக்கை நிச்சயம் ஒரு பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான மிக முக்கியக் கூறுகளாக இருக்கும் என நம்புகிறேன்!  மேலும் அதிகத் தகவல்களுக்கு, முகநூல் பக்கத்தில் உள்ள பாதுகாப்பு குறித்த விளக்கங்களைப் பார்க்கவும்!

     

    ஏகிநிற்பது என்ன? (Whatsapp):

    அடுத்து நாம் காண இருப்பது ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்ற தகவல் தொடர்பு முறை

    இன்றைய அலைபேசி உலகில், அவரவர் கைகளை அலங்கரிப்பதில், நவீன கைப்பேசிகளின் பங்கை யாராலும் மறுக்க முடியாது.  அவற்றுள் இரு முக்கிய மென்பொருள்கள் உலகளாவி இருக்கின்றன.  அவை முறையே ஆன்ராய்டு மற்றும் ஆப்பிள் இயக்கிகள்!  இவற்றுள் ஆன்ராய்டு இயக்கி மிக எளிமையாக, அனைத்து பயன்பாட்டுக்கும் சாதகமாக இருப்பதாக எண்ணுகிறேன்.  சமீப காலமாக, “ஏகிநிற்பது என்ன” எனும் பயன்பாட்டில், ஆன்ராய்டு இயக்கி மூலமாக, ஒருவருக்கொருவர் பேசவும் முடிவதாக அறிகிறேன்.

    மிகக் குறுகிய காலத்தில், மிகப் பரவலாக்கப் பட்ட மகத்தான ஒரு தகவல் தொடர்பு முறை ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்று சொன்னால் மிகையாகாது.  இது முதன் முதலில் புழக்கத்திற்கு வந்தது 2009ம் ஆண்டு.  கடந்த ஐந்து ஆண்டுகளில், இதன் அபரிமித வளர்ச்சி கண்டு, முகநூல் நிறுவனத்தார், இந்த தொடர்பு முறையை, அதன் உரிமையாளர்களிடமிருந்து, சற்றேறக்குறைய ரூபாய் இரண்டாயிரம் கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள், என்றால், இதன் வளர்ச்சி, எத்தகையது என்பதை வாசகர்களாகிய நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்!

    கடந்த ஜனவரி 2015 வரை, சுமார் 70 கோடி உபயோகிப்பாளர்கள் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது! அதில், சுமார் 7 கோடி உபயோகிப்பாளர்கள் இருப்பதாகவும் சொல்கின்றனர். (http://en.wikipedia.org/wiki/WhatsApp)

    இன்று ஒவ்வொரு அமைப்பு சார்ந்த குழுமங்களும் பெரும்பாலும், தன் அங்கத்தினர்களுடனானத் தொடர்புக்கு, ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்ற முறையைத் தான் பயன்படுத்துகின்றன.

    அவை பற்றிச் சில குறிப்புகள்!

    1. இதில் கணக்குத் துவங்குவதற்கு அடிப்படைத் தேவை ஒரு நவீன கைப்பேசி.
    2. ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்ற பயன்பாட்டுத் தளத்தின் மூலம், நாம் செய்திகள், நிழற்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியும்.

    குறைந்த பட்ச பாதுகாப்பு முறைகள்

    1. பல நேரங்களில், நம்முடைய கவனக் குறைவின் காரணங்களால், மிகுந்த கன அளவுடைய காணொளிக் காட்சிகள் மற்றும் நிழற்படங்கள், தானியங்கிப் பதிவிறக்கம் (Auto download) செய்யப்படுகின்றன. அதனால் நமக்கு ஏற்படும் பொருட்செலவு மிகுதியாகும். இதைத் தடுப்பதற்கு, கீழ்காணும் சுட்டியைக் கவனிக்கவும்.

    சுரேஜமீ6

    2. நம்முடைய பயனீட்டு அளவுகளை அவ்வப்போது கண்காணிப்பது எப்படி என்பதை விளக்கும் சுட்டி

    சுரேஜமீ7

    3. சில வேளைகளில், விரும்பத்தகாத செய்திகளும், காணொளிப் படங்களும் வரும்போது, அத்தகைய செய்தி அனுப்பும் நபர்களைத் தடை செய்வது எப்படி என்பதை விளக்கும் படம்.

    சுரேஜமீ8

     

    4. பலருடைய அனுபவமே, நாம் விரும்பும்பொழுது, நம்முடைய கைப்பேசியில், தேவையான நிழற்படமோ, காணொளியோ எடுக்கப் போதுமான இடவசதி இல்லாமல் இருக்கும்.  இதற்குக் காரணம், நாம் அவ்வப்பொழுது அழிக்காமல் வைத்திருக்கும் சேமிப்புச் செய்திகளும்; படங்களுமே!  அதனை எவ்வாறு சுத்தப்படுத்தி கைப்பேசிக்கான சேமிப்புப் பகுதியை தகுதிப்படுத்துவது என்பதை விளக்கும் படம்.

    சுரேஜமீ9

    பெரும்பாலும் நாம் அறிந்த செய்திகளாகவே இருந்தாலும், சில வேளைகளில் அனைத்தும் ஒருங்கிணைத்து ஒரு தொகுப்பாகப் பார்க்கும்போது அது நம் மனதில் எளிதில் தங்கிவிட ஏதுவாக இருப்பதால், நிச்சயம் உங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

     

    குறியீட்டுச் செய்தி  (Twitter):

    தகவல் பரப்பும் களமாக ஒரு குறுகிய காலத்தில் அசுர வேகத்தில் வளர்ந்ததுதான் இந்தக் குறியீட்டுச் செய்தி(Twitter) என்று சொன்னால் மிகையாகாது.  2006ம் ஆண்டில் நான்கு நபர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய இந்தத் தகவல் பரிமாற்ற முறை, இன்று உலகில் ஏறக்குறைய 28 கோடி பயனீட்டாளர்களைக் கொண்டதாக உள்ளதாக ஒரு இணையச் செய்தி கூறுகிறது. (http://en.wikipedia.org/wiki/Twitter)

    அவை பற்றிச் சில குறிப்புகள்!

    • இது பெரும்பாலும் செய்தியைத் துரிதமாக அனுப்புவதற்கு உதவுகிறது.
    • மிக அதிக பட்சமாக 140 எழுத்துக்கள் மட்டுமே உபயோகிக்க முடியும்.
    • மிக அதிகபட்ச வாசகர்களைச் சென்றடையும் வல்லமை பெற்றது.
    • வணிக உபயோகத்திற்கு ஏற்ற உன்னதமான தகவல் பரிமாற்ற முறை!

     

    முடிவுரை

    இதுவரை நாம் பார்த்த இந்த மூன்று விதமான தகவல் பரிமாற்றக் களங்களையும், அதற்கேற்ற செயல் வடிவத்தில் பயன்படுத்த கீழ்க்காணும் விதத்தில் பிரிக்க முற்படுகிறேன்.

    1. உறவுகளோடு ஒட்டி இருக்க ‘முகநூல்’ (Facebook)
    2. குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிப் பரிமாற்றத்திற்கு ‘ஏகி நிற்பது என்ன? (Whatsapp)
    3. வணிக மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கு ‘குறியீட்டுச் செய்திகள்’ (Twitter)

    ஆக, நம் வாழ்வில் அன்றாடம் பயன்பாட்டில் உள்ள மிக முக்கிய மூன்று தகவல் பரிமாற்று வழிமுறைகளைப் பற்றி எனக்குத் தெரிந்த வகையில், உங்களின் சிந்தனைக்குப் பகிர்ந்த இந்த விடயங்கள், உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    Share
  • அண்ணல் அம்பேத்கார் சொல்பற்றி வாரீர்!

    -சுரேஜமீ

    அரசியல் சாசன
    ஆசான்!
    அடித்தட்டு மக்களின்
    நேசன்
    அனைவரும் சமமேயென்ற                           ambetkar
    தாசன்!

    சட்டத்தின் சமத்துவம்
    சரிநிகர் சென்று
    சாமானியனை அடையச்
    சரித்திரம் படைத்தோன்!

    நாட்டிற்கு ஒரு சட்டம்
    வீட்டிற்கும் அது பொருந்தும்
    வீணில் எதற்கு ஒரு பிரிவு
    விழிப்புடன் இருந்தால் என்றோன்!

    ஒடுக்குதல் என்றும் தீதே
    ஒற்றுமை நல்க வாழ்வே
    ஏற்றுதல் வேண்டும் நாமே
    வேற்றுதல் என்று ஒதுக்கா!

    தாழ்ந்தவர் மேலே வந்தால்
    தாழ்வே இல்லை வாழ்வில்
    உயர்த்திட வேண்டிச் சட்டம்
    செய்திட்ட அண்ணல் காரே!

    சமூக நீதி வேண்டிச்
    சாசனத் திருத்தம்
    செய்த சாதனையாளர்
    சாகேப் பிறந்த நாளிது!

    நாளும் அவர்புகழ் பாடி
    நாடும் போற்ற நாடி
    நானிலத்தில் இனி
    நசுக்கப்பட்ட இனமில்லை
    என வாழ்ந்து காட்டுவோம் வாரீர்!
    அண்ணல் அம்பேத்கார் சொல்பற்றி வாரீர்!!

     

    Share
  • உளம்நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் !!

    ak

    akk

     

    வண்ணம் சிதறாமல் வானில் வரும் கதிரோன்
    தன்னில் வருகின்ற கதிரொளியே நம் செல்வம்..
    எண்ணம் சிறக்கின்ற ஏற்றம் புரிகின்ற – நாம்
    எல்லோரும் இணைந்திங்கே வாழ்வதுவே வாழ்க்கை
    ஆண்டு கணக்கிலொரு பக்கம் புரள்கிறது
    அடுத்தப் பக்கத்தில் நன்மை பல வருகிறது
    அன்னைத் தமிழுக்கு என்றும் இளமையென்று
    மன்மத வருடம் இங்கே வாழ்த்துப் பாடுகிறது

    அகிலம் முழுவதுமே உலகம் செழித்திடவும்
    அமைதிப் பூங்காவில் உயிர்கள் வாழ்ந்திடவும்
    வறுமைப் பசிப்பினிகள் பாரில் அகன்றிடவும்
    சிகரம் வைத்தாற்போல் பாரதம் உயர்ந்திடவும்

    வருகை தரும் நமது சித்திரைத் திருமகளை
    இருகரம் நீட்டி இனிதே வரவேற்போம்
    திறமை முழுவதையும் இன்னும் செலுத்தியே
    உயரும் எண்ணத்தை இதயத்தில் விதைப்போம்!

    அனைவருக்கும் உளம்நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் !!

    என்றும் அன்புடன்…

    கவிஞர் காவிரிமைந்தன்
    நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
    பம்மல், சென்னை 600 075
    தற்போது – அபுதாபி – அமீரகம்
    00971 50 2519693
    00971 50 4497052
    kaviri2015@gmail.com
    www.thamizhnadhi.com a

    Share
  • இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    -சுரேஜமீ

    இளமை பொங்க
    மனங்கள் இனிக்க
    உறவுகள் தழைக்க
    உன்னதமாய் வரும்
    மன்மத ஆண்டே!                                         chittirai

    மாற்றங்கள் நிகழ்ந்து
    ஏற்றங்கள் பெற்று
    தோற்றங்கள் மாறிச்
    சாற்றிட எங்கணும்!

    அன்னைதந்தை போற்றி
    அவர் நலம் காத்து
    அகிலத்தில் எவரும்
    அவர்நிகர் இல்லையென!

    வீடுகள் தோறும்
    வீணில் செல்நீரால்
    பேணியே வளர்ப்போம்
    பண்புடன் மரங்களென!

    தேவைக்கு ஏற்பச்
    செலவுகள் செய்துச்
    சேவைக்கும் வாய்ப்பாய்ச்
    சேமிப்பை வளர்ப்போமென!

    மானுடம் போற்றும்
    மரபுகள் காத்து
    வான்மழை நிகராய்
    வையகம் அணைப்போமென!

    சாதிகள் தொலைந்தன
    வீதிகள் கலைந்தன
    நீதிகள் போற்றிநற்
    சேதிகள் சொல்வோமென!

    வரம்பல தந்திடும்
    நலம்பல வந்திடும்
    வளம்பல பெற்றுநல்
    வாழ்வே சிறந்திடும்

    இனிய தமிழின்
    ஈராறு மாதங்களில்
    முதலாய் வந்து
    முத்தாய்த் தொடங்கும்

    சித்திரை மலராள்
    செங்கதிர் அணிந்தாள்
    முத்திரை பதித்தே
    எத்திசை முழங்க!

    மன்மதன் தாங்கி
    மானுடம் செழிக்க
    மங்களமாய் வரும்
    மங்கையும் அவளே!

    புத்தாண்டு மகளே!!
    இருகரம் கூப்பித் தமிழர்கள் அழைக்கின்றோம்
    இனிய தமிழ்ப் புத்தாண்டே வா  என!! 

     

    Share
  • சித்திரை வாழ்த்து!

    -செண்பக ஜெகதீசன்

    சீர்மிகு மன்மதப் புத்தாண்டாய்
         சித்திரை வந்தது சிறப்புடனே,
    பேர்பெற நன்றாய் உழைத்திருந்தால்
         பெருமை சேர்க்கும் இறையருளும்,
    தேர்ந்திடு நல்ல வழியினையே
         தோல்வி என்பதைப் புறந்தள்ள,
    சேர்ந்திடும் வெற்றி நிலைபெறவே
         சித்திரை நாளில் வாழ்த்துவமே!

    Share
  • இறைவன் சிரிக்கின்றான்!

    -சுரேஜமீ

    அன்பிற்குத் தாய் தந்தேன்
    ஆற்றலுக்கு மனம் தந்தேன்
    இயல்பிற்கு மொழி தந்தேன்
    ஈகைக்குக் குணம் தந்தேன்
    உறவுக்குக் கொடி தந்தேன்
    ஊக்கத்திற்குக் கை தந்தேன்
    எப்போதும் மகிழ்விற்கும்
    ஏற்றதொரு வாழ்விற்கும்
    ஐவகை நிலம் தந்தேன்
    ஒற்றுமையாய் இருக்கவேண்டி
    ஓதும் நெறிகள் பலதந்தேன்
    ஒளவைத் தமிழும் தந்தேன்
    அஃதெல்லாம் மறந்தாய்!

    அணிசேர்த்தாய்
    ஆற்றாது;
    இன்சொல் பேச மறுத்தாய்;
    ஈன்ற தாய்கூடப் புறக்கணித்தாய்;
    உண்மையை
    ஊமையாக்கினாய்;
    எல்லாம் ‘நான்’
    ஏகி நின்றாய்;
    ‘ஐயோ பாவம்’ அடியோடு மறந்து நின்றாய்;
    ஒன்றும் புரியாமல்;
    ஓடும் வாழ்க்கையில்
    நிற்கும்
    உனைப் பார்த்துச்
    சிரிக்கின்றேன் நான்!

    படைப்பில் குறையில்லை;
    பார்த்தும் தெளிவில்லை!
    புவியில் நீ ஆடும்
    ஆட்டம் நிற்கும் வேளையிலே…
    என்னை அழைக்கின்றாய்
    குறையே சொல்கின்றாய்
    நிறையை மறுக்கின்றாய்
    பேதம் அறுக்கின்றாய்
    வேதம் பேசுகிறாய்
    வாழ்க்கை நீடிக்க
    வேண்டுதல் செய்கின்றாய்!

    வாழும் காலத்தில்
    அத்தனை நான் செய்தும்
    வழித் துணையாயிருந்தும் பேதையாயிருந்து
    போதை தெளிந்ததுபோல்
    நிற்கும் உனைப்பார்த்துச் சிரிக்கின்றேன் நான்!!

    இருப்பே
    இறப்பை மறந்துவிட்டு
    இருப்பைக் கேலியாக்கும்
    இதுவா வாழ்க்கை?
    சிந்தி!

    இறைவன் நானிருக்க;
    எவனும் இல்லையெனும்
    இறுமாப்பை விட்டொழித்து
    இனிமையாய் வாழ்ந்து பார்!!
    இருவரும் சிரிக்கலாம்
    இனிமையாய் இருக்கலாம்!!

    இங்கே சற்று உயிரோடு மெய் விளையாடியிருக்கிறேன்…
    உன் பொய்யை
    எடுத்துரைக்க!
    எண்ணிப் பார்த்து
    ஏற்றம் காண்!
    சேர்ந்து சிரிப்போம்
    அதுவரை
    நான் சிரிக்கின்றேன்!!

     

    Share
  • மறுபடிநீ வரவேண்டும் !

      -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

        மிடுக்கான பார்வையுடன்
        மீசைவைத்த பாரதியாய்த்
        துடுக்காக எழுதிநின்ற
        துணிவான எழுத்துமன்னா!                               Jeyakantan_Tamil_Author

        அடுக்கடுக்காய்ப் பலதந்தாய்
        அனைவரையும் இழுத்துவைத்தாய்
        வெடுக்கென்று பேசிடினும்
        விதம்விதமாய்ச் சொன்னாயே!

        உன்னெழுத்தை விஞ்சுதற்கு
        உள்ளாரோ எழுத்தாளர்?
        மண்ணுலகில் உயிர்பெற்று
        மறுபடிநீ வரவேண்டும்!

        தமிழெழுதி தமிழெழுதி
        தலைநிமிர்ந்து நின்றாயே
        தமிழுலகம் இப்போது
        தலைவணங்கி நிற்கிறது !

       ஜெயகாந்தா மறைந்தாயா?
       நினைக்கவே முடியவில்லை
       ஜெயம்தந்த ஜெயகாந்தா
       நீஎன்றும் வாழுகிறாய் !
       

    Share
  • இறைவனையே எண்ணவைத்தார் !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    இசைபாடி எமையெல்லாம்
    இறைவனையே எண்ணவைத்தார்
    அசையாத மனத்தையெல்லாம்
    அவர்பாடி அசையவைத்தார்!

    தனியான குரல்வளத்தால்                         NagoorHaniffa
    தரணியிலே உயரநின்றார்
    தரமாகத் தமிழ்பாடி
    உரமானார் தமிழிசையில்!

    நாகூரில் பிறந்தகுரல்
    நாடெங்கும் ஒலித்ததுவே
    கூவுகின்ற குயில்கூட
    நாகூரை நினைக்கிறதே!

    நாகூரின் நாயகனே
    நீயெங்கே போய்விட்டாய்?
    நாடுள்ளோர் உன்பாட்டால்
    நாளுமுனைத் தேடுகிறார்!

    காசுக்காய்ப் பாடாது
    கடவுளுக்காய்ப் பாடிநின்றாய்
    தேசமெலாம் இப்போது
    தேடுதையா உன்முகத்தை!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (8)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11129746_819039241483610_1321350885_n

    திரு. பிலால். எச்  எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (18.04.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • புறநானூற்றில் தொழில்

    முனைவர் போ. சத்தியமூர்த்தி.

     

    sanga time

     

     

    ‘‘பண்டைத் தமிழரின்; வரலாற்றுக்களஞ்சியமாக, பழந்தமிழ் வேந்தர்கள், குறுநில மன்னர்களின் வரலாற்றை அறிவிக்கும் ஆவணமாக விளங்குவது புறநானூறாகும்” புறநானூற்றில் பண்டைத் தமிழரின் பழக்க வழக்கங்கள், தெய்வ வழிபாட்டு முறை, மன்னர்களின் கொடைத்திறன், அவர்தம் போர்த்திறன், பண்டைத் தமிழ்ப் புலவர்களின் மாண்பு ஆகியவை இடம் பெற்றிருக்கும் , அதே நேரத்தில் பண்டைத் தமிழரின் தொழில் திறமும், வளமும் புலவர் பெருமக்களால் சுட்டிக் காட்டப் பெற்றுள்ளன.

    புறநானூற்றில் மக்களின் வாழ்க்கை முறைக்கு அடித்தளமாக விளங்கும் பொருளியல் வளம் பெருகப் பலவிதத் தொழில்களைப் பண்டை மக்கள் செய்துள்ளனர். அவற்றைப் புறநானூற்றுப் புலவர்கள் தங்கட்குக் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சுட்டிச் செல்கின்றனர். புறநானூற்றில் இடம் பெற்ற தொழில் முறைகளைச் சுட்டிக் காட்டுவது இக் கட்டுரையின் நோக்கமாகும்.

    உழவுத் தொழில்:
    தமிழகத்தின் நிலப்பரப்பை ஐந்து திணைகளாகப் பண்டைத் தமிழர் பிரித்தனர். இயற்கை வளத்தை மலை வளமாகவும், கானகத்து வளமாகவும், வயல் வளமாகவும், கடல் வளமாகவும் கண்டனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று அவற்றிற்குப் பெயரும் சூட்டினர். பெருமணல் உலகமாகிய பாலை நிலம் என்று ஒரு அமைப்பு தமிழகத்தில் இல்லாத காரணத்தால் ‘‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும் ” என்ற நிலையில் ஐவகை நில அமைப்பைக் கொண்டனர். இந்த ஐவகை நில அமைப்பில்தான் பண்டைத் தமிழர் வாழ்வியல் அமைந்தது. இயற்கைச் சூழலில் பெரிதும் போற்றப் பட்ட தொழில் உழவுத் தொழிலாகும். திருவள்ளுவரும் பொருட்பாலில் நாட்டு வளத்தைக் கூறும் பொழுது, உழவுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தனி ஒரு அதிகாரத்தை அமைத்துள்ளார்.

    ‘‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி “என்றும் ‘‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்று உழவுத் தொழிலை முதன்மைப் படுத்துவார். உழவுத் தொழிலின் சிறப்பை வள்ளுவர் வழியில் தமிழிலக்கியங்களும் மேன்மைப் படுத்துகின்றன. உழவுத் தொழில் பற்றிய செய்திகள் புறநானூற்றில் பல பாடல்களில் காணக் கிடைக்கின்றன.

    ‘‘வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவற்
    கார்ப்பெயற் கலித்த பெரும்பாட்டு ஈரத்துப்
    பூமி மயங்கப் பலவுழுது வித்திப்
    பல்லி யாடிய பல்கிளைச் செவ்விக்
    களைகால் கழாலின்” (புறம், பா. 120)

    என்ற கபிலர் பாட்டு பாரியின் பறம்பு நாட்டு வளத்தைக் கூறும் பொழுது உழவுத் தொழிலைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. வெம்மை முதிர்ந்த வேங்கை மரத்தினுடைய மேட்டு நிலத்துக் கார் காலத்து மழையால் மிகுந்த பெரிய , செவ்வியை உடைய ஈரத்தின் கண் புழுதி கலக்கப் பல சால்பட உழுது , விதைத்து, விளைந்த பயிரில் களையை எடுப்பார்கள் என்ற செய்தியை இப்பாட்டின் பகுதி தருகிறது. உழவுத் தொழிலின் முதல் நிலையை இப்பகுதி குறிப்பிடுகிறது. உழவு ஒருமுறை அல்லாது பல சால்பட உழுவதால் எரு வேண்டாத நிலையில் நிலம் பயன் தரும் என்பதை இப்பகுதி குறிப்பிடுகிறது. இதனையே திருவள்ளுவரும்,

    ‘‘தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
    வேண்டாது சாலப் படும். “

    என்று குறிப்பிடுவார். எனவே வள்ளுவத்தின்வழி புறநானூறு பலமுறை உழுது நிலம் பண்படுத்தப்பட வேண்டும் என்றும், அப்படிப் பண்படுத்தினால் உரமாகிய எரு இட வேண்டிய தேவை இல்லை என்றும் குறிப்பிட்டு, உழவுத் தொழிலுக்குரிய பயிற்சியை வெளிப்படுத்துகிறது.

    சோழன் குளமுற்றுத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் வெள்ளைக்குடி நாகனார் உழவின் சிறப்பை எடுத்துக் கூறும் பகுதியும் நினைவு கூரத் தக்கதாகும்.

    ….ஞாலம்
    ஆதுநன்கு அறிந்தனை ஆயின் நீயும்
    நொதுமலா ளாளர் பொதுமொழி கொள்ளாது
    பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிப்
    குடிபுறந் தருகுவை ஆயின் நின்
    அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே” (புறம் , பா. 35)

    என்ற பகுதியில் உழவுத் தொழில் மூலம் தான் குடிமக்கள் வாழ முடியும் என்பது வலியுறுத்தப் பெறுகிறது. அதாவது அகன்ற உலகவாழ்வை நன்கு அறிந்தவர் ஆனால் மற்றவர் மொழியைக் கேட்காது, ஏரைப் பாதுகாப்பவருடைய குடியைப் பாதுகாத்து அதாவது உழவரைப் பாதுகாத்து, அககாவலால் மற்ற குடிகளையும் பாதுகாத்தால் பகைவர்கள் அரசனின் திருவடியைப் போற்றுவர் என்று கூறப்பெற்று இப்பகுதியில் ஏர்ப்பின்னது உலகம் என்ற கருத்து வலியுறுத்தப் பெறுகிறது.

    இவ்வாறு உழவுத் தொழிலைப் பற்றிய செய்திகள் பலவாறாகப் பல பாடல்களில் கூறப்பெற்றுள்ளது. கட்டுரையின் விரிவு அஞ்சி சில எடுத்துக் காட்டுகளே இடம் பெறுகின்றன.

    ஆ காத்து ஓம்பல்:
    உழவுத் தொழிலுக்குப் பண்டைக் காலத்தில் எருதுகளை அதாவது மாடுகளைப் பயன்படுத்தி வந்தனர். எனவே நிலத்தைப் பாதுகாப்பது போல ஆநிரைகளைப் பாதுகாத்தல் தொழில் முறையாகக் கொள்ளப் பட்டது. இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால் பண்டைத் தமிழரின் போர்முறை கூட ஆநிரைகளைக் கவர்தலும், அவற்றை மீட்டலும் ஆகிய வெட்சி, கரந்தைப் போர்களாக அமைந்திருந்தன என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

    புறநானூற்றில் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடிய பாடல் மிகச் சிறப்புடையதாகும். போரினைத் தொடங்குகின்ற பொழுது பாதுகாவலாகிய இடத்திற்குச் செல்ல வேண்டிய பொருள்களைப் பட்டியல் இடும் பொழுது முதற் பொருளாக ஆநிரை இடம் பெறுகிறது.
    ‘‘ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
    பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
    தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
    எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென” (புறம், பா. 9)

    இப்பட்டியலில் ஆவினைக் காத்து ஓம்புகின்ற தொழிலின் சிறப்புக் கருதி காக்க வேண்டிய பொருளில் முதற் பொருளாக ஆவாகிய ஆநிரைகள் குறிக்கப் பெற்றுள்ளது நினைவு கூரத் தக்கதாகும். இதனையே பிறிதோரிடத்தில் ஆவினைக் காத்து ஓம்புகின்ற ஆயர்களை,

    ‘‘அறவை நெஞ்சத்து ஆயர் வளரும்
    மறவை நெஞ்சத்து ஆய் இலாளர்
    அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்கமழ்
    விழவணி வியன்களம் அன்ன” (புறம் – பா. 390)
    என்ற பகுதியில் ஆநிரை காத்து ஓம்பும் ஆயர்களை அறம் பொலியும் நெஞ்சினை உடைய ஆயர்கள் என்று குறிப்பிடுவது புறநானூற்றின் சிறப்பாகும்.

    ‘‘ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும்
    கோவலர் வாழ்க்கை கொடும்பாடு இல்லை”
    என்று ஆநிரை காக்கும் தொழிலன் சிறப்பு பிற இலக்கியத்திலும் இடம் பெற்றிருப்பது அத் தொழிலின் பெருமையைக் கூறுவதாகும்.

    ஆவினைக் காக்கும் தொழிலினைச் செய்பவர்களைக் கோவலர் என்றும் ஆடுகளை மேய்ப்பவர்களை இடையர் என்றும் குறிப்பிடுவதும் உண்டு. இடையரின் செய்திகளையும் . அவர்தம் தொழில் தன்மைகளையும் புறநானூற்றில் காண முடிகிறது. இதனை
    ‘‘ மாசுஉண் உடுக்கை மடிவாய் இடையன்
    சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லா”( புறம் – பா.; 54)
    இப்பகுதியில் பசிய இலையால் தொடுக்கப்பட்ட தழைக் கண்ணியையும், மாசுண்ட உடையையும், மடித்த வாயையும் உடைய இடையன், சிறிய தலையை உடைய ஆடுகளை மேய்த்துச் செல்லுகின்ற இடம் குறிக்கப் பெற்றுள்ளது. மேலும்,
    ‘‘புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
    கல்லா இடையன் போல” (புறம், பா. 339)
    என்ற பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலை உடைய இடையர்கள் மாலை நேரத்தில் சிறிய தீயினை எழுப்புவர் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. எனவே ஆநிரைகளையும், ஆடுகளையும் மேய்க்கக் கூடிய தொழில் புறநானூற்றில் குறிக்கப் பெற்று, எளிய மக்களின் தொழில் பேசப் பெறுகிறது.

    கொல்லர் தம் தொழில்:
    உழுதலும் ஆகாத்தலும் ஆகிய இயல்புத் தொழிலோடு பண்டைத் தமிழரிடம் மிகுந்திருந்த போர்த் தொழிலுக்கு உரிய வேல் வடிக்கும் தொழில் புறநானூற்றில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றது.

    ‘‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
    சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
    வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே” (புறம்,பா.312)

    என்ற இப்பகுதியில் வேல் வடித்துக் கொடுக்கின்ற கொல்லர் தொழில் குறிக்கப் படுகிறது. படைக் கலத்தைத் திருத்தமாகச் செய்யக் கூடிய கொல்லர் தொழில் குறிக்கப் படுவது மேலும் பல பாடல்களில் காணப்படுகிறது.
    ‘‘கருங்கைக் கொல்லன் அரம்செய் அவ்வாய்
    நெடுங்கை நவியம் பாய்தலின் நிலை அழிந்து (புறம், பா.36)
    வீகமழ் நெடுஞ்சிலை புலம்ப”
    என்ற இப்பகுதியில் வேல் வடித்துக் கொடுத்தல் மட்டும் கொல்லர் தொழில் அல்ல, அவர்கள் மரம் வெட்டும் கோடரியும் செய்து கொடுப்பார்கள் என்பதும் உணர்த்தப் பெறுகிறது. அதாவது வலிய கையை உடைய கொல்லன் அரத்தால் கூர்மை செய்யப்பட்ட அழகிய வாயினை உடைத்தாகிய நெடிய கையை உடைய கோடாரி வெட்டுதலால் ப10மணம் கமழும் மரத்தின் கிளைகள் புலம்பின என்ற செய்தி இப்பகுதியில் அமைந்துள்ளது. கொல்லன் உலைக் களத்தில் தொழிலைச் செய்வான் என்பதையும் புறநானூறு குறிப்பிடுகிறது.
    ‘‘இரும்பு பயன்படுக்கும் கருங்கைக் கொல்லன்
    விசைத்து எறி கூடமொடு ஒரூஉம்
    உலைக்கல் என்ன வல்லா ளன்னே” (புறம், பா. 170)

    இப்பகுதியின் பொருள் – இரும்பைப் பயன் படுத்துகின்ற வலிய கையை உடைய கொல்லன், விசைத்து அடிக்கப் பட்ட கூடத்தோடு ஏற்று மாறுபடும் உலையிடத்து உள்ள கல் போலும் பிட்டன் கொற்றன் வலிய ஆண்மை உடையவன் ஆவான் என்ற குறிப்பிடுகிறது. இப்பகுதியில் கொல்லர்கள் இரும்புத் தொழில் செய்வர் என்பது பெறப் படுவதோடு, உலைக் களத்த்pல் தொழில் புரிவோர் என்பதும் , இரும்பைக் காய்ச்சிச் செம்மைப் படுத்துவதற்கு உலைக்கல் இருந்தமையும் புலனாகின்றது. கொல்லரைப் பற்றிய செய்திகளைத் தருகின்ற பிற பாடல்களும் புறநானூற்றில் உள்ளன. இரும்பு அடிக்கும் கொல்லரைப் போன்று பொன் செய் கொல்லரும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளனர்.

    ‘‘ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
    பொலஞ்சை பல்காசணிந்த அல்குல்” (புறம், பா. 353)

    என்ற இப்பாடற் பகுதியில் குற்றமற்ற பொற்கொல்லன் பழுதறச் செய்த பொன்னால் ஆகிய பலமணி அணிந்த மேகலை என்று பொருள் அமைந்து , பொன்செய் கொல்லரின் தொழில் கூறப் பெற்றிருப்பது நினைவிற்கு உரியதாம்.

    வேட்டுவத் தொழில்:
    புறநானூறு காட்டும் தொழில் முறைமைகளில் வேடுவர் என்ற தொழிலாளரின் செயல் முறைகள் பல பாடல்களில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. முல்லை நிலத்துத் தலைமக்களாக வேடர்கள் காட்டப் பெறுகின்றனர். அவர்கள் வேட்டைத் தொழிலோடு தினைப் பயிர் விளைவிப்பவர்களாகவும், மரங்களை வெட்டி மக்கள் பயன்பாட்டிற்குத் தருபவர்களாகவும் புறநானூற்றில் படைக்கப் பெற்றுள்ளார்கள். கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் சிறப்பும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. அவ்வள்ளலின் வேட்டுவத் தொழிலைப் பற்றிக் கீழ்வரும் பாடல் சிறப்புடன் குறிப்பிடுகிறது.

    ‘‘வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
    பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உற்Pஇப்
    புழல்தலைப் புகர்க்கலை உருட்டி உரல்தலைக்
    கேழற் பன்றி வீழ அயலது
    ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்
    வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்” (புறம்,பா. 152)

    இப்பகுதியில் வல்வில் ஓரியின் வில்தொழிலின் பெருமை பேசப் பெற்றுள்ளது. வேடர்களுக்கு உரிய விற்பயிற்சியை ஒரு அரசனே பெற்றிருந்தான் என்று எண்ணும் பொழுது வேட்டுவத் தொழிலின் பெருமை தெரிய வருகிறது. அவன் விடுத்த அம்பு முதலில் யானையைக் கொன்று வீழ்த்தியது. அதன்பின் புலியைக் கொன்றது. பிறகு புள்ளிமானை உருட்டியது. அதன்பின் பன்றியை விழச் செய்தது. இறுதியாப் புற்றின்கண் கிடந்த உடும்பில் சென்று தைத்தது. இப்படிப் பட்ட வலிய வில்லால் உண்டாகிய வேட்டைத் தொழிலை வெற்றியோடு உடையவன் என்று இப் பாடற் பகுதி குறிப்பிடுகிறது. எனவே பண்டைத் தமிழரில் வேடுவர்கள் தனிஒரு இடம் பெற்றிருந்தமையை உணர முடிகின்றது. அறம் சொல்லுகின்ற பொழுது கூட அரசனுக்கு ஒப்ப வேடுவர்கள் எண்ணப் பெற்றிருந்தமையைப் புறநானூற்றுக் கீழ்வரும் பகுதி மெய்ப்பித்துக் காட்டுகிறது.

    ‘‘தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
    வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
    நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
    கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
    உண்பது நாழி உடுப்பவை இரண்டே” (புறம், பா. 189)

    இப்பகுதியில் நக்கீரனார் செல்வத்தின் பயனைச் சொல்லுகின்ற பகுதியில் கடல்நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் தனி ஒருவனாக இருந்து ஆளுகின்ற அரசர்க்கும், இடையாமத்தும் , நண்பகலும், தூங்காதவனாய் விரைந்து ஓடுகின்ற மிருகங்களைக் கொல்லுவதற்குக் கருதுகின்ற, கல்வியில்லாத வேடர்க்கும் உண்ணப்படும் பொருள் நாழியாகும், உடுக்கப்படுவது இரண்டே என்று கூறுகின்றார். இதில் அரசரையும் வேட்டுவரையும் ஒத்தநிலையில் காணுகின்ற புலவரின் பண்பு போற்றத் தக்கதாகும். மேலும் இப்பகுதியில் வேட்டைத் தொழிலைச் செய்கின்றவர்கள் நடு இரவிலும் , நடுப்பகலிலும் துயிலாது விலங்குகளை வேட்டையாடுவர் என்று குறிக்கப் பெறுவதால் அந்த இரு பொழுதுகளில் மிருகங்கள் சுயேச்சையாகத் திரியும் என்ற வழக்கமும் பெறப்படுகிறது.

    ‘‘கான் உறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
    மான்தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்
    தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
    ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
    குளக்கீழ் வளைந்த களக்கொள் வெண்ணெல்
    முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்” (புறம், பா. 33)
    என்ற இப்பகுதியில் வேடர்களின் வாழ்க்கை குறிக்கப் பெற்றுள்ளது. அதாவது வேடர்கள் காட்டில் வாழ்வார்கள். தங்களுக்குத் துணையாக நாயைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் விரும்பி வேட்டையாடுகின்ற மிருகம் மான் ஆகும். அதனைப் பிறரிடத்தில் அதாவது உழவுத் தொழில் செய்வோரிடத்தில் தொழில் நிலையில் விற்பனை செய்துள்ளனர் என்பதும், பெறப்படுகிறது. அந்த மான் தசைகளையும் அவர்கள் பனைஓலையால் செய்யப்பட்ட கடகப் பெட்டியில் வைத்து, விற்பனை செய்தனர் என்பதும் பாடலால் புலப்படுகிறது.

    வேட்டுவத் தொழிலில் வெற்றி பெறுவதும் உண்டு. தோல்வி அடைவதும் உண்டு. அவ்வாறு வெற்றி தோல்வி அடைவதற்கு வினைப்பயன் காரணம் என்று கூறும் அளவிற்கு வேட்டுவத் தொழில் புறநானூற்றில் சிறப்பிடம் பெறுகிறது.

    ‘‘யானை வேட்டுவன் யானையும் பெறுமே
    குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
    அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்குச்
    செய்வினை மருங்கின் எய்தல் உண்டு” (புறம், பா. 214)

    இப்பகுதியில் யானை வேட்டைக்குச் செல்பவன் யானையை எளிதாகப் பெறுவான். அதே நேரத்தில் காடை போன்ற சிறு பறவைகளை வேட்டையாடச் செல்கின்றவர்கள் அப்பறவை கூடக் கிடைக்காது வீணே திரும்புதலும் உண்டு. அதற்குக் காரணம் அவர்கள் செய்த வினைதான் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. இப்பகுதியில் யானை போன்ற பெரிய மிருகங்களையும், காடை போன்ற சிறிய பறவைகளையும் வேட்டையாடுவது வேடுவர்களின் மரபாகத் தெரிய வருகிறது. இவ்வேட்டுவத் தொழிலோடு விறகு வெட்டும் தொழிலையும் புறநானூறு குறிப்பிடுகிறது.

    ‘‘விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்
    தலைப்பாடு அன்றுஅவன் ஈகை
    நினைக்க வேண்டா வாழ்க,அவன் தாளே” (புறம், பா. 70)

    என்ற பகுதியில் விறகு வெட்டுகின்றவர்கள் காட்டில் விறகை வெட்டி , ஊர்ப்பகுதியில் கொண்டு போய் விற்கின்ற தொழிலைச் செய்கின்றவர் ஆவர். அதனால் வாழ்வதற்கு உரிய பொருளைப் பெறுவர். அவ்வாறு இல்லாது காட்டிலேயே விறகு விற்கப்பட்டுப் பொருள் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று விறகு வெட்டுபவர் தொழில் உவமையாக இடம் பெற்றுள்ளது.

    விறகு வெட்டி யானையின் மூலம் ஊருக்குள்ளே கொண்டு வந்து விற்பார்கள் என்ற செய்தியும் புறநானூற்றில் காணப்படுகிறது.

    ‘‘கான யானை தந்த விறகின்
    கடுந்தெறல் செந்தீ வேட்டுப்
    புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே” (புறம், பா. 251)

    என்ற இப்பகுதியில் காட்டில் வெட்டப் பட்ட விறகு யானையில் ஏற்றி, ஊருக்குக் கொண்டு வரப் பட்டு மக்களிடம் விற்பனை செய்யப் பெற்றிருக்கிறது. அது நன்கு எறிகின்ற விறகாகவும் இருந்திருக்கிறது என்பதும் இப்பாடற் பகுதியால் தெரிய வருகிறது.
    மரக்கலத் தொழில் புறநானூறு குறிப்பிடும் தொழில் நிலைகளில் மற்றும் ஒரு தொழில் கடலில் மரக் கலத்தைச் செலுத்தி, பிற நாடுகளில் சென்று பொருளைக் கொண்டு வந்து, தன் நாட்டில் விற்கின்ற தொழில் முனைவோர் இடம் பெற்றுள்ளனர்.

    ‘‘மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
    புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
    இடைப்பலப் பெருவழிச் சொரியும்
    கடல்பல் தாரத்த நாடுகிழ வோயோ” (புறம், பா. 30)

    என்ற இப்பகுதியில் மரக்கலத்தின் நடுவே அமைக்கப் பட்ட கூம்பில் விரிக்கப் பெற்ற பாயை மாற்றாமல், மரக்கலத்தில் உள்ள சுமையையும் குறைக்காமல், ஆற்றின் முகத்தே செலுத்துகின்ற பெரிய மரக்கலத்தை உடையவர் பரதவர். அவர்கள் மரக்கலத்தைக் கொண்டு செல்லும் பொழுது பல பொருள்கள் கீழே சொரியும். அப்பண்டங்கள் கடற்கரையில் ஒதுங்கும். அவை பெருஞ் செல்வமாக விளங்கும் என்று இப்பகுதியில் கூறப் பெற்றுள்ளது. மேலும் மரக்கலம் ஓட்டும் பரதவர் நுழையர் என்றும் அழைக்கப் பெற்றனர். அவர்கள் கடலில் செல்லாத பொழுது மதுவுண்டு மகிழ்ந்து கூத்தாடுவர் என்ற செய்தியும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

    ‘‘செஞ்ஞாயிற்று வெயில் முனையின்
    தெண்கடல்திரை மிசைப் பாயுந்து
    திண்திமில் வன்பரதவர்
    வெப்புடைய மட்டுண்டு
    தண்குரவை சீர்தூங்கும்” (புறம், பா. 24)

    என்ற பகுதியால் மரக்கலம் ஓட்டும் தொழில் கொண்டோர் ஓயு;வக் காலத்தில் கள்ளுண்டு மகிழ்வர் என்ற செய்தி பெறப்படுகிறது. மற்றொரு பக்கம் மரக்கலத் தொழில் செய்பவர் மரக்கலம் கவிழ்ந்து துன்பப் படுவதும் உண்டு என்ற செய்தியும் புறநானூற்றில் கிடைக்கின்றது.

    ‘‘மாறி இரவின் மரங்கவிழ் பொழுதின்
    ஆரஞர் உற்ற பெஞ்சமொடு ஓராங்குக்
    கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு” (புறம், பா. 236)

    என்ற இப்பகுதியில் மழைக்காலத்து இரவில் மரக்கலம் கவிழ்வதும் உண்டு. அதனால் பெரும் துன்பம் ஏற்படும் என்பதும் இப்பகுதியால் பெறப்படுகிறது. மரக்கலம் வைத்திருப்போர் பொருள்களை ஏற்றித் தொழில் செய்வதோடு, போர் வீரர்களை ஏற்றிக் கொண்டு போர்;த்தொழில் செய்வதும் உண்டு என்ற செய்தியும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

    ‘‘வளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
    வளிதொழில் ஆண்;ட உரவோன் மருக” (புறம், பா. 66)
    என்ற பகுதியால் காற்றின் உதவியால் மரக்கலம் செலுத்தப்படும் என்பதும், காற்றில்லாத பொழுது வருணனை வேண்டி அருள் பெறுவர் என்பதும் தெரிய வருகிறது. ‘‘களிறே முந்நீர் வழங்கும் நாவாய் போலும்” (புறம், பா.13) என்ற புறநானூற்று வரி பண்டைக் காலத்து மரக்கலங்கள் யானை போன்ற பெருந் தோற்றத்தைப் பெற்றிருந்தன எனத் தெரிய வருகிறது. பிறிதோரிடத்தில் ,

    ‘‘நளிகடல் இருங் குட்டத்து
    வளிபுடைத்த கலம்போலக்
    களிறு சென்று” (புறம், பா. 26)

    இப்பகுதியில் நாவாய் எனப்பட்ட மரக்கலம் பெரிய கடலின்கண் ஆழத்தில் காற்றால் செலுத்தப் படும் என்ற செய்தி குறிக்கப் பெற்றுள்ளது.

    கைத்தொழில்கள்:
    புறநானூற்றில் குலத்தொழில் கொண்ட தொழிலாளர்களால் செய்யப் பெறும் பெருந் தொழில்களைப் போலச் சிறு கைத்தொழில்கள் சிலவும் பதிவாகி உள்ளன. மண் பாண்டம் தயாரிக்கின்ற தொழில் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

    ‘‘தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி
    வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
    பசுமண் குரூஉத்திரள் போலஅவன்
    கொண்ட குடுமித்து இத்தண்பணை நாடே”:(புறம், பா. 32)

    என்ற இப்பகுதியில் தேர்ச் சக்கரம் போன்ற திகிரியில் பச்சைமண்ணை வைத்து மண்பானை செய்யப் படும் என்ற செய்தி இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். மண்பானை செய்யும் தொழிலாளி சிறப்பிக்கப் படுகின்ற காட்சியும் புறநானூற்றில் உண்டு.

    ‘‘கலம்செய் கோவே கலம்செய் கோவே
    ——————————- —————————
    ———————————– ————————–
    வியன்மலர் அகன்பொழில் ஈமத்தாழி
    அகலிது ஆக வனைமோ” (புறம், பா. 256)

    இப்பகுதியில் குயவராகிய மண்பாண்டத் தொழிலைச் செய்கின்றவர்கள் இறந்தவர்களைப் புதைக்கும் முதுமக்கள் தாழியையும் செய்யக் கூடியவர்கள் என்ற செய்தி குறிக்கப் பெற்றுள்ளது. பாடியவர் பெயர் தெரியாத இப்பாடலில் இறந்துவிட்ட கணவனோடு தானும் புதைக்கப் படுவதற்கு முதுமக்கள் தாழியை ஒருபெண் குயவனிடம் வேண்டுவது படிப்போர் உள்ளத்தை இரங்கச் செய்வதாகும். மற்றொரு கைத்தொழிலான ஆடை தயாரித்தல் தொழிலும் இடம் பெற்றுள்ளது.

    ‘‘அளிய தாமே சிறுவெள்ளாம்பல்
    இளையம் ஆகத் தழையா யினவே”” (புறம், பா. 248)
    இப்பகுதியில் ஆம்பல் இலையை ஆடையாகத் தைக்கின்ற தொழில் கூறப்பட்டுள்ளது.
    ‘‘பாம்புஉரி அன்ன வடிவின காம்பின்
    கழைபடு சொலியின் இழைஅணி வாரா
    ஒண்ப10ங் கலிங்கம் உடீஇ நுண்ப10ண்” (புறம், பா. 383)

    என்ற இப்பகுதியில் ஒரு பெண்ணினுடைய ஆடையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, பாம்புத் தோல் போன்ற வடிவை உடையதாய், மூங்கிலின் உட்புறத்தில் உள்ள தோல் போன்று நெய்யப் பட்ட இழைகளை உடையதாய், வடிவமைக்கப் பட்ட ஆடையை உடுத்தினாள் என்ற செய்தி குறிக்கப் பெற்றுள்ளது. எனவே புறநானூற்றுக் காலத்தில் இலைகளைக் கொண்டு தைத்த பழம் ஆடையும் மென்மையான நூல் இழைகளைக் கொண்டு தைக்கப்பட்ட ஆடையும் கூறப் பெற்றிருப்பதால் ஆடை தயாரிக்கும் தொழிலையும் அறிய முடிகிறது.

    புறநானூற்றுக் காலத்தில் சுவைபட உணவு படைக்கும் தொழிலும் சிறப்பாக இருந்தது என்பதைச் சில பாடல்களின் மூலம் அறிய முடிகிறது.

    ‘‘குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில்
    மதிசேர் நாண்மீன் போல நவின்ற
    சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇ” (புறம், பா. 160)
    இப்பகுதியில் தாளிப்புச் சேர்க்கப் பட்ட துவையலும், நெய்யுடன் கூடிய அடிசிலும் இடம் பெற்றுள்ளது. மற்றொரு பாடலில், ‘‘கமழ் குய் அடிசில் “( புறம் , பா. 10) என்று குறிக்கப் பெற்று மணம் கமழும் தாளிப்புடைய உணவு இடம் பெற்றுள்ளது.

    ‘‘அமிழ்தென மரபின் ஊன்துவை அடிசில்
    வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி” (புறம்,பா.390)
    என்ற இப்பகுதியின் மூலம் அமிழ்தத்தை ஒத்துச் சுவையுடன் கூடிய துவையல் உருவாக்கப் பெற்றிருக்கிறது என்ற செய்தியும் கிடைக்கின்றது. இவ்வாறு அடிசிலைப் பற்றிய செய்திகள் பல பாடல்களில் இடம் பெற்றிருக்கின்றன. அதே நேரத்தில் அடுதல் தொழிலில் ஏற்பட்ட வறுமைக் காட்சியும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. பெருஞ்சித்திரனார் தன் குடும்பத்தின் அவலத்தை எடுத்துக் கூறும் பாடலில்,

    ‘‘குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த
    முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு உப்பின்று
    நீர்உலை யாக ஏற்றி மோரின்று
    அவிழ்ப்பதம் மறந்து” (புறம், பா. 159)

    என்ற இப்பகுதியில் குப்பைக் கீரைக்கு உப்பைச் சேர்ப்பதற்குக் கூடப் புலவர் வீட்டில் உப்பு இல்லை. மோரில்லாக் கூழ் பாழ் என்பதற்கு ஏற்ப மோரில்லாத உணவும் சமைக்கப் பெற்ற வறுமைச் சூழலும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு கைத்தொழில்கள் சிலவும் புறநானூற்றில் இடம் பெற்று அக்காலத் தொழில் வளத்தைப் புலப்படுத்துகின்றன.

    பிணம் சுடுதல்:
    வாழ்வின் தொடக்கம் முதல் வாழ்வின் இறுதிவரை மனித வாழ்க்கை உருண்டு ஓடிடப் பல தொழில் வளம் தேவை. உயிர வாழ இன்றியமையாத உழவத் தொழிலைப் போலப் புறநானூற்றில் மனித வாழ்வின் இறுதியான உடலைச் சுடுகின்ற பிணம் சுடுதல் தொழிலும் பதிவாகி உள்ளது.

    ‘‘எரிபுனக் குறவன் குறையல் அன்ன
    கரிபுற விறகின் ஈம ஒள்ளலல்
    குறுகினும் குறுகுக” (புறம், பா. 231)

    என்றும்,
    ‘‘பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு; ஈமம்
    உமக்கு அரிது ஆகுக தில்ல எமக்கு” (புறம், பா. 246)
    என்றும்,

    ஈமத் தீயானது விறகுகளால் அடுக்கப் பெற்று உண்டாக்கப் பெறுவதாகப் பதிவு செய்யப் பெற்றிருப்பதால் விறகு அடுக்கும் தொழிலைச் செய்தவர் உண்டு என்பதும் பெறப்படுகிறது.

    முடிவு:
    தமிழக வரலாற்றின் கலங்கரை விளக்கமாக விளங்கும் புறநானூற்றில் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நால்வகையோர்க்கு உரிய தொழில்கள் இல்லாது , உழவுத் தொழில் முதலாக ஈமத்தீ மூட்டல் ஈறாகப் பலவிதத் தொழில் முறைகள் பதிவாகியுள்ளன. அவற்றை முன்னோட்டமாக ஒருசில எடுத்துக் காட்டுகளால் காட்டப் பெற்ற் இக்கட்டுரை மேலும் ஆய்வதற்கு வழிவகை செய்யும் என்பதில் ஐயமில்லை.

     

     

     

     

    DR.B.SATHIYAMOORTHY

    முனைவர் போ. சத்தியமூர்த்தி
    உதவிப்பேராசிரியர்
    தமிழியல்துறை
    தமிழியற்புலம்
    மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
    மதுரை – 625 021.
    email: tamilkanikani@gmail.com
    https://in.linkedin.com/pub/dr-b-sathiyamoorthy-bose/62/873/23
    கைபேசி: 9488616100

     

     

    படம் உதவி: http://www.garuda-sangatamil.com/tamil_drawings.php

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஏப்ரல் 13, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு கவிஞர்  வைகைச்செல்வி அவர்கள்

    வைகைச்செல்வி

     

    “சுற்றுச் சூழல் சீர்கெட்டால், அற்றுப் போகும் மனித இனம்!” என்று முழங்கும் கவிஞர் வைகைச்செல்வியை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர்  மகிழ்ச்சி அடைகிறோம். இவர் தொகுத்த “நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பில் இடம் பெறும் வரியிது. “ஜி. ஆனி ஜோஸ்பின்” என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் வைகைச்செல்வி வல்லமை இதழிலும் எழுதியுள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் மேலதிகாரியாகப் பணியாற்றிய வைகைச்செல்வி ஆங்கில இலக்கியம், வணிகவியல், வணிக மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்கள் (M.A.(Eng.Literature), M.Com., M.B.A.) பெற்றதுடன், மேலும் தனது தொழில் சார்ந்த பட்டயப் படிப்புகள் (Post Graduate Diplomas in Environmental Laws, Industrial Pollution Control, Labour Laws & Computer Applications) பலவற்றையும் படித்தவர். சுற்றுச் சூழல் பயிற்சிக்காக டென்மார்க், வங்காளதேசம் நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். தற்சமயம் கல்வியாளராக பொறியியல் கல்லுாரி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

    மதுரையை பூர்வீகமாகவும், சென்னையை வாழுமிடமாகவும் கொண்ட வைகைச்செல்வி 1980 முதல் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் பல வழங்கி எழுத்துலகில் தடம் பதித்தவர். பெண்ணியம் மற்றும் பெண்மை போற்றுதலும், அவர்தம் பணியின் பின்புலமான இயற்கை சுற்றச்சூழல் பாதுகாப்பு கண்காணிப்புத் துறையின் பணியின் கொள்கைகளுமே இவரது படைப்புகளின் களங்களாக விளங்கி வருகின்றன. கவிஞர் வைகைச்செல்வியின் “இன்னொரு உலகில்… இன்னொரு மாலையில்…”, “அம்மி”, “நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே” போன்ற கவிதைத் தொகுதிகள் அவர்தம் கவித் திறனையும், கருத்துச் செறிவினையும் பறை சாற்றுவன. கவிதைகள் தவிர்த்து “கறிவேப்பிலை செடியும் நெட்டிலிங்க மரங்களும்” என்ற சிறுகதைத் தொகுப்பு, “பணிச்சூழலில் பெண்களுக்கான பாதுகாப்பு” போன்ற படைப்புகள் இவரது பெண்ணியம், சுற்றச்சூழல் பாதுகாப்பு கருத்துகளின் வெளிப்பாடுகள்.

    “கருவில் பெண்ணை அழிப்போர்க்குக் காட்டை அழித்தல் பெரிதாமோ?” என்ற முத்துரை பதிக்கும் கவிதை வரி பெண்களுக்காகவும் இயற்கை பாதுகாப்பிற்கும் இவர் ஒருங்கே கொடுக்கும் குரல்.

    இவரது முதல் கவிதைத் தொகுப்பான “அம்மி” பாராட்டுகள் பலவற்றை இவருக்குப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து சுற்றுச்சூழல் தூய்மையை வலியுறுத்தி, தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களின் 70 கவிதைகளைத் தொகுத்து 2003 டிசம்பரில் இவர் வெளியிட்ட “நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே” என்னும் தலைப்பில் வெளியிட்ட கவிதைத் தொகுப்பு தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் பாட நூலாகத் தேர்வு செய்யப்பட்டது.

    “கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று ஆரம்பம்” என்ற இவரது கவிதை, தொழில்மயமான தற்கால உலகம் சுற்றுச்சூழலை சீர்குலைப்பதைச்  சுட்டிக்காட்டி இந்நிலையை மாற்ற வலியுறுத்துகிறது.

    நான்கு திசைகளிலும்
    புகை போக்கிகள்!
    நச்சுக் காற்று நெளிந்து ஊடுறுவி
    மனித நாற்றுகளை
    மௌனமாய்த் தலைசாய்க்க
    கத்தியின்றி…ரத்தமின்றி
    யுத்த மொன்று ஆரம்பம்!
    காடும் மலையும் இல்லை யென்றால்
    வீடும் நாடும் இனி யேது?
    சுற்றுச் சூழல் சீர்கெட்டால்
    அற்றுப் போகும் மனித இனம்!

    பணியிடங்களில் பெண்களின் திறமைகள் மதிக்கப்படாது அவர்கள் உயர்பதவிகள் வழங்கப்படுவதில் புறக்கணிக்கப்படும் “கண்ணாடிக் கூரை” (glass ceiling) சூழ்நிலை இவரது பெண்ணியக் குரல் வழியே கீழ்கண்டவாறு ஒலிக்கிறது.

    ஆண்டுகள் பலவாய் ஓடி…ஓடி
    இறுதியில்
    (பதவி உயர்வென்னும்)
    அந்த ஏணியை அடைந்தேன்!
    கூரிய கற்களும்… கொடிய முட்களும்
    குத்திக் கிழித்தும்
    (உயர்ச்சி நோக்கி ஆவலாய்)
    ஓடிய கால்கள் …..!
    ஏணியின் உயரம்
    அயர்ச்சியை அளிக்க ….
    புத்துயிர் பெற்றுக்
    கண்களைத் திறந்தேன்!

    காலை எடுத்து
    முதற்படி வைப்பதற்குள் ….
    என்னைத் தாண்டிச்
    (சென்றன) சில காகங்கள் ….
    கழுத்தில் சலங்கையுடன்,
    காலில் எலியுடன்,
    ஏணியைத் தள்ளி
    (என்னையும் மிதித்துக் கொண்டு)
    இடத்தை நிரப்பின!

    இக்கவிதையினைப் படிக்கும்பொழுது “தனிப்பட்ட மன முறிவுகளைத் தாண்டி பொது இழப்புகளைப் பெண்கள் ஆராயத் தலைப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மிகச் சிலரே. எனினும் அவர்கள் ஒரு புதிய பாதையின் முன்னோடிகள். வைகைச் செல்வி அவர்களில் ஒருவர்” என மாலன் கூறியதை நாம் இங்கு நினைவுகூர்தல் பொருத்தமாகவும் இருக்கும்.

    “பெண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்ற வைகைச்செல்வியின் கட்டுரையும் பலவகையிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட அன்றைய காலத்து பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் இருந்த வலிமையும், வீரியமும், உயிர்ப்பும், காலத்தை வென்று நிற்கும் தன்மையும் இன்றைய பெண்படைப்பாளிகளின் படைப்புக்களில் இல்லையோ! என்ற ஐயத்தை எழுப்புகிறது.

    “வானகமே, வையகமே”, என்னும் சூழ்மண்டலக் கண்காணிப்பு இதழில் “இது நம்ம பூமி” என்னும் தலையங்கக் கட்டுரையைத் தொடர்ந்து எழுதி அதன் கௌரவ ஆசிரியராக சிறப்பாகச் செயலாற்றி வரும் வைகைச்செல்வி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பெண்ணுரிமை என இருதுறைகளிலும் மேலும் மற்றொரு எல்லைக்கோட்டை முனைவர் பட்டம் மூலம் சமீபத்தில் எட்டினார்.   இவரது  தொடர் முயற்சியை பாராட்டும் நோக்கில் வல்லமைக் குழவினருக்கு வைகைச்செல்வியைப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான திரு. ஜெயபாரதன் அவர்கள்.

    வைகைச்செல்வி1வைகைச்செல்வி2

    சுற்றச்சூழல் கவிஞர், பெண் சாதனையாளர் போன்ற பட்டங்களையும் பெற்றவர் வைகைச்செல்வி. இவரது படைப்புகளில் பல்கலைக்கழக ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெய்வேலி நிறுவன புத்தகக் கண்காட்சியின் 2002 ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர் விருது, திருப்பூர் அரிமா சங்கம் வழங்கிய “சக்தி 2002” பெண் எழுத்தாளர் விருது போன்ற விருதுகளைப் பெற்ற கவிஞர் வைகைச்செல்வி, இப்பொழுது தான் பெற்ற வெற்றிகளின் வரிசையில் முனைவர் பட்டத்தையும்  [Ph D. in Occupational Health Hazards of Women in Textile Industries & Environmental Management] பெற்றுள்ளார். “பணிபுரியும் பெண்களின் (ஜவுளியாலைகள் மற்றும் தீப்பெட்டித் தொழில்) பிரச்சனைகளும் அதற்கான ஒருங்கிணைந்த சுற்றுச் சூழல் மேலாண்மையும்” (Thesis: Occupational Health Problems of Women employees in Textile and Match industries and Integrated Management of Environment) என்ற தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு பெற்ற முனைவர் பட்டம் இது. இவரது ஆராய்ச்சிக் கோணமும் பெண்களையும் இயற்கையையும் இணைத்த ஒரு கோணத்திலேயே அமைந்தது பாராட்டிற்குரியது.

    பெண்கள் நலனும், சுற்றுச்சூழலின் நலனும் தொடர்ந்து உலகில் கவலைக்குரிய நிலையிலேயே இருப்பதை உணரும்பொழுது இவரது ஆய்வு இவரது கருத்துகளுக்கு வலிமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதைப் பாராட்டி கவிஞர் வைகைச்செல்வியை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பேருவுவகை கொள்கிறோம். வைகைச்செல்வி தனது சமுதாய மற்றும் இலக்கியப்பணியில் வெற்றிகள் பலபெற வாழ்த்துகள்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

     

    தகவல் பெற்ற தளங்கள்:
    http://www.geotamil.com/pathivukal/jayabarathan_vaikaschelvi_3.html
    http://annakannan-katturaigal.blogspot.in/2004/04/blog-post_01.html
    https://jayabarathan.wordpress.com/vaigaiselvi/

    Share
  • வாழ நினைத்தால் வாழலாம் …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    balae paandiyaa

    எண்ணம் போல் வாழ்வு – எத்தனை எத்தனை உண்மை?

    எத்தனை எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா? என்கிற குரல் ஒரு பக்கம் கேட்டாலும் …

    என்ன செய்வதென்றே புரியவில்லை… எப்படி வாழ்வதென்றே தெரியவில்லை… ஒரு ஜாண் ஏறினால் முழம் வழுக்குகிறது…
    தோல்விக்கு மேல் தோல்வி… சாவதைத் தவிர வேறு வழியில்லை.. தற்கொலை ஒன்றுதான் பிரச்சினைகளுக்கு முடிவு …
    என்று முடிவுக்கு வரும் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது!

    வாழத்தான் முடிவில்லை… சாகவும் முடியாதா? என்கிற இவர்களின் கேள்வி அலட்சியம் செய்வதற்கில்லை!

    தேர்தல் தோல்வி… காதல் தோல்வி… வாழ்வில் தோல்வி… என்கிற தோல்வி வட்டத்திற்குள் துவண்டுபோகின்றவர்களின் விலாசம் தேடி வெற்றி தேவதை வருவதே இல்லை…

    துன்பம்… துன்பம் என்று துவண்டுபோவதைவிட அதிலிருந்து மீளுகின்ற வழியென்ன? என்ன செய்யலாம் என்பதை விடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து அடுத்த அடி எடுத்து முன்னேறுபவனை வெற்றித்திருமகள் கட்டித்தழுவக் காத்திருக்கிறாள் என்பதைக் கவனிக்கத் தவறவேண்டாம்!

    சோதனையும் வேதனையும் தாங்கிக் கொண்டு சாதனையைப் படைத்திடும் போராட்டமேவாழ்க்கை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்! அலைகள் எதிரே வருகிறதே என்று படகுகள் கரையிலேயே நின்றுவிடுவதில்லை. அலைகளை எதிர்த்து அவற்றையும் தாண்டிச்சென்று அமைதியான நீர்ப்பரப்பில் பயணிப்பதை நாம் அறிவோம் அல்லவா? கடனும் சுமையும் எவனுக்குத்தான் இல்லை? துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் என்று பாடல் தந்த கண்ணதாசன் வாழ்வதற்கு காட்டும் வழிகள் நேர்மறை நோக்கு கொண்டவை…POSITIVE THOUGHTS!!!

    ஆ…ஆ…ஆஹஹா ஓஹொஹோ…
    ஆ…ஆ…ஆஹஹா ஓஹொஹோ…

    வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
    ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா

    பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
    பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
    பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
    கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
    காட்சி கிடைத்தால் கவலை தீரும்
    கவலை தீர்ந்தால் வாழலாம்
    [வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்]

    கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
    கையில் கிடைத்தால் வாழலாம்
    கருத்தில் வளரும் காதல் எண்ணம்
    கனிந்து வந்தால் வாழலாம்
    கன்னி இளமை என்னை அணைத்தால்
    தன்னை மறந்தே வாழலாம்
    வாழச் சொன்னால் வாழ்கிறேன் மனமா இல்லை வாழ்வினில்
    ஆழக்கடலில் தோணியாக அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்

    ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
    ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
    துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி
    துடித்து நிற்கும் இளமை சாட்சி
    இருவர் வாழும் காலம் முழுதும்
    ஒருவராக வாழலாம்
    வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
    காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்

    வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
    காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்

    ________________________________________

    பாடல்: வாழ நினைத்தால் வாழலாம்
    திரைப்படம்: பலே பாண்டியா (1962)
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
    காணொளி: https://youtu.be/d8te6nIUMk0

    https://youtu.be/d8te6nIUMk0

    எத்தனை அழகான பாட்டுவரி என்பதை மட்டும் ரசிக்காமல்… பாட்டுவரி மட்டுமல்ல… வாழ்க்கையில் நாம் கற்க வேண்டிய பாட வரி!! நம்பிக்கையின் நங்கூர வரிகளை நாம் கேட்டு உச்சரிக்கவும்… உணர்ந்துகொள்ளவுமே…

    நெஞ்சமே… இந்த வரிகளை மனனம் செய்! மரணம் கூட மரித்துப்போகும்… உணர்ந்து சொல்… உன்னைப்போல் ஒருவருமில்லை என்கிற அளவு உயர்வாய்!

    வாழ நினைத்தால் வாழலாம்!!!- பல்லவி சொல்கிற வார்த்தைகளில் – மனிதனே உனக்கு வேண்டிய அளவு பலமிருக்கிறது. கேட்டுப்பார்… ஆசை இருந்தால் நீந்தி வா… ஆம்… ஆசைதான் மனித நோய்களுக்கான மூலக்காரணம் என்பது தெரிந்த விஷயம்தான்… ஆனால் அதே ஆசைதான் … லட்சியமாக… கடமையாக… கோட்பாடாக… என்று நம்மை நெறிப்படுத்தி வெற்றியை… சாதனையை.. எட்டவும் ஏற்றம்பெறவும் வைக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவேதான் ஆசையெனும் நெருப்பு மனதுக்குள் கனன்றுகொண்டேயிருக்கும் வரைதான் வாழ்க்கை இனிக்கும் என்பதையும் சூசமாகக் குறிப்பிடுகிறார்!

    Share
  • சகலருமே வேண்டிநிற்போம் !

            -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

            மன்மத வருடமதை மனமகிழ வரவேற்று
            துன்மதி போயிடவே துதித்துமே கடவுளைநாம்
            பன்முறை வணங்கிநின்றால் பலநன்மை வந்துவிடும்
            என்னினிய நண்பர்காள் இவ்வண்ணம் செய்திடுவீர் !

            புதுவருடம் எமக்கெல்லாம் புத்துணர்வு தந்திடட்டும்
            எமதுளத்தில் என்றென்றும் எழுந்திடட்டும் நல்லெண்ணம்
            தமதுயிரால் எமைவாழ வைத்துநிற்கும் பெரியோரைத்
            தானினைத்து அவர்பாதம் தனைவணங்கி நிற்போமே !

            நல்லவைகள் ஆற்றவெண்ணி நாமென்றும் நினைத்திடுவோம்
            அல்லவைகள் புறந்தள்ளி உள்ளமதைத் திருத்திடுவோம்
            உள்நுழையும் கள்ளமெலாம் உருக்குலையச் செய்துநிற்போம்
            நல்லவரின் அறிவுரையை நாம்கேட்டு நடந்திடுவோம் !

            கோவில்சென்று கும்பிடுவோம் குறையகல வேண்டிடுவோம்
            கோபமெனும் கொடுநெருப்பைக் குளிர்விக்க முயன்றிடுவோம்
            சாபமிடும் பேய்க்குணத்தை சம்காரம் செய்திடுவோம்
            சன்மார்க்கம் மனத்திலெழ சகலருமே வேண்டிநிற்போம் !

    Share