-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    மிடுக்கான பார்வையுடன்
    மீசைவைத்த பாரதியாய்த்
    துடுக்காக எழுதிநின்ற
    துணிவான எழுத்துமன்னா!                               Jeyakantan_Tamil_Author

    அடுக்கடுக்காய்ப் பலதந்தாய்
    அனைவரையும் இழுத்துவைத்தாய்
    வெடுக்கென்று பேசிடினும்
    விதம்விதமாய்ச் சொன்னாயே!

    உன்னெழுத்தை விஞ்சுதற்கு
    உள்ளாரோ எழுத்தாளர்?
    மண்ணுலகில் உயிர்பெற்று
    மறுபடிநீ வரவேண்டும்!

    தமிழெழுதி தமிழெழுதி
    தலைநிமிர்ந்து நின்றாயே
    தமிழுலகம் இப்போது
    தலைவணங்கி நிற்கிறது !

   ஜெயகாந்தா மறைந்தாயா?
   நினைக்கவே முடியவில்லை
   ஜெயம்தந்த ஜெயகாந்தா
   நீஎன்றும் வாழுகிறாய் !
   

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *