-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

இசைபாடி எமையெல்லாம்
இறைவனையே எண்ணவைத்தார்
அசையாத மனத்தையெல்லாம்
அவர்பாடி அசையவைத்தார்!

தனியான குரல்வளத்தால்                         NagoorHaniffa
தரணியிலே உயரநின்றார்
தரமாகத் தமிழ்பாடி
உரமானார் தமிழிசையில்!

நாகூரில் பிறந்தகுரல்
நாடெங்கும் ஒலித்ததுவே
கூவுகின்ற குயில்கூட
நாகூரை நினைக்கிறதே!

நாகூரின் நாயகனே
நீயெங்கே போய்விட்டாய்?
நாடுள்ளோர் உன்பாட்டால்
நாளுமுனைத் தேடுகிறார்!

காசுக்காய்ப் பாடாது
கடவுளுக்காய்ப் பாடிநின்றாய்
தேசமெலாம் இப்போது
தேடுதையா உன்முகத்தை!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *