-செண்பக ஜெகதீசன்
சீர்மிகு மன்மதப் புத்தாண்டாய்
சித்திரை வந்தது சிறப்புடனே,
பேர்பெற நன்றாய் உழைத்திருந்தால்
பெருமை சேர்க்கும் இறையருளும்,
தேர்ந்திடு நல்ல வழியினையே
தோல்வி என்பதைப் புறந்தள்ள,
சேர்ந்திடும் வெற்றி நிலைபெறவே
சித்திரை நாளில் வாழ்த்துவமே!

Leave a Reply