Blog

  • படக்கவிதைப் போட்டி – 6-இன் முடிவுகள்

    மேகலா இராமமூர்த்தி

     

    11096973_812600832127451_1724852484_n

    திருமிகு. ஆர். லக்ஷ்மி அவர்களின் கைவண்ணத்தில் மிளிரும் ’மாடும், மாதும் ஒற்றையடிப் பாதையில் நடைபயிலும்’ இப்புகைப்படம், கவிதை வடிப்பதற்கு அழகானதோர் களத்தைக் கவிஞர்கட்குத் தந்திருக்கின்றது.

    முன்னே மாட்டை நடக்கவிட்டுப் பின்தொடரும் அம்மங்கை, தன் கையிலுள்ள கோலை மாட்டை அடிப்பதற்காக உயர்த்திப் பின்பு அதன்மீது அடிவிழா வகையில் இறக்கியிருப்பதைக் காண்கையில் ‘கடிதோச்சி மெல்ல எறிக!’ எனும் வள்ளுவம் என் நினைவில் நிழலாடக் காண்கிறேன்.

    முன்பு, நம் மக்களின் செல்வமாகத் திகழ்ந்தவை இம்மாடுகளே அல்லவா? வீட்டிலிருக்கும் மாடுகளின் எண்ணிக்கையை வைத்துத்தான் முல்லைநில மக்களின் செல்வச்செழிப்பு அக்காலத்தில் அளவீடு செய்யப்பட்டிருக்கின்றது. அதனாலன்றோ ’மாடு’ எனும் சொல்லே அன்று ’செல்வம்’ எனும் பொருளைத் தந்தது. வான்புகழ் வள்ளுவரும்,

    கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
    மாடல்ல மற்றை யவை. (குறள்: 400) எனும் குறளில் மாட்டை, ’செல்வம்’ எனும் பொருளில் பயன்படுத்தியிருப்பதைக் காண்க.

    இனி, கவிஞர்களின் படைப்புக்களுக்கு வருவோம். கிட்டத்தட்ட 25 கவிதைகள் இவ்வாரப் படக்கவிதைப்போட்டிக்கு வந்திருப்பது வல்லமை வாசகர்கள் இப்போட்டிக்குத் தரும் பேராதரவைத் தெளிவாய்ப் புலப்படுத்துகின்றது.

    கவிதைகளைக் கவனித்ததில், ஒரு சில கவிதைகள் தவிர்த்துப் பெரும்பாலானவை பசுமையற்ற வறட்சி, அவ்வறட்சியால் உயிர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவலநிலை, அதிவேக நகரமயமாதலால் விரைந்து அழிந்துவரும் உழவுத் தொழில் இவற்றைப் பற்றியே கவல்கின்றன. சமூக அக்கறையோடு கூடிய இச்சிந்தனைகள் வரவேற்பிற்குரியவையே என்றபோதிலும் அளவுக்கதிகமான அவலச் சுவையை இவை கவிதைகட்கு ஊட்டிவிடுகின்றன என்பதையும் நாம் சிந்திக்கவேண்டும்.

    இவ்வுத்தியை விடுத்து, ஒருசிலரேனும் வேறுவகையில் சிந்தித்து, மங்கையும் மாடும் தத்தம் பணிகளைச் செவ்வனே முடித்துவிட்டு மகிழ்ச்சியாக வீடு திரும்புவதாகவோ, அல்லது மாடு தன் கன்றுக்குப் பாலூட்ட வேண்டுமென்ற வேட்கையில் மங்கையை முந்திக்கொண்டு விரைந்து செல்லுகின்றது என்ற வகையிலோ தங்கள் கவிதைகட்கு உவகைச் சுவை ஊட்டியிருக்கலாம், கவிதையின் போக்கை மாற்றியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. எனினும் உங்கள் முயற்சிகட்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து, என் கருத்தைக் கவர்ந்த கவிதை வரிகள் உங்கள் பார்வைக்கு…

    கொடுவெயில் எரித்து என் பாதம் கருக்கியே
    கடுக்கின்ற கால்கள் இரண்டும் – வெந்தாலும்
    பாடுபட்டு உழைக்கும் பாமரப் பெண் நான்
    விடுபடாதென் நெஞ்சுரம் என்றும்! என்று பாமரப் பெண்ணின் நெஞ்சுரம் பேசும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

    *********************

    களிறைக் கட்டி
    கலநெல் அடித்து
    களிப்பாய்க் கூடி
    வாழ்ந்த காலமெங்கே?
    கையால் அடித்து
    வரும்நெல் சேர்த்து
    வயிறு வளர்க்க
    வாழும் காலமிங்கே! எனும் திரு. சுரேஜமீயின் அக்கால இக்கால ஒப்பீட்டு வரிகள்…

    ********************

    வான் பொய்ப்பினும், தான் பொய்யா
    மலைத்தலைய கடற்காவிரி
    கானல் நீரெனப் பொய்ப்ப…….
    ….
    பசுந்துளிர் தேடும் நீள்பயணம்,
    மங்கைக்கும் மாட்டுக்கும்
    விடியலில் முடியட்டும்! எனும் திருமிகு. ஞா. கலையரசியின் நம்பிக்கை வரிகள்…

    *********************

    மாடு கண்ணு காடு கழனியில
    புல்லு தின்ன காலம் மாறி
    நெகிழி பையை தின்னுற
    நிலைமை தான் ஆச்சுது! என்று மாட்டின் இன்றைய அவலம் கூறும் திருமிகு. தமிழ்முகிலின் வரிகள்…

    *********************

    தாகமான மாட்டுக்கு
    தண்ணிதேடி போறியா- இல்லை 
    பசியெடுத்த மாட்டுக்குப் 
    புல்லுதேடிப் போறியா- இல்லை 
    மாமனுக்கு சீதனமாய்
    மாட்டைத்தரப் போறியா? என்று கேள்விக்கணைகளை மங்கையிடம் தொடுக்கும் திரு. எஸ். பழனிச்சாமியின் வரிகள்…

    **********************

    அறுப்புக்குப் போடாமல் அன்போடு மேய்க்கும் 
    பொறுப்பில் இருக்கும் கருணை வடிவமே  
    ஆண்டவன் வாழும் அமைப்பு… என்று மாட்டிடம் அன்பு பாராட்டும் மங்கையைப் பாராட்டுகின்ற திரு. மெய்யன் நடராஜின் வரிகள்…

    ***********************

    இல்லாமை வெள்ளாமை
    ஆகும் போது 
    வேளாண்மைத் தொழில்
    பொல்லாமை ஆகுது !…
    வறுமை நீக்கா உரிமை நாடு
    வாழ்வை அரிக்கும்
    நரகக் காடு! என்று மக்களைக் காவாத நாட்டை இடித்துரைக்கும் திரு. ஜெயபாரதனின் வரிகள்…

    ***********************

    என்ஜோட்டு 
    பொண்ணுங்கள்ளாம் 
    கல்யாணம் கட்டிக்கிட்டு 
    ஓடிப் போக 
    நான் மட்டும் 
    உன் வாலைப் 
    பிடிச்சிக்கிட்டு  
    ஊரு மேயறேன்! என்று படிப்பு வராததால் மாடுமேய்ப்பதாக மங்கையவள் புலம்பும் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கரின் வரிகள்…

    ************************

    வரலாறு பதிந்து கொண்டிருக்கா 
    இந்த ஒற்றையடிப் 
    பிரபஞ்சங்கள்… அழுகவுமில்லை..
    இடிந்துவிட்டிருக்கவும் இல்லை…என்று நம்பிக்கைக் கீற்றைக் கவிதையில் நட்டிருக்கும் திரு. நல்லை. சரவணாவின் வரிகள்…

    *************************

    கால் நடையா போற எனக்கு
    இந்த கால்நடையை தவிர
    வழித்துணையா யாரும் இல்லை…என்று சோகத்தினூடும் வார்த்தை விளையாட்டு நிகழ்த்தியிருக்கும் திரு.திருமலைசோமுவின் வரிகள்…

    *************************

    இப்படி, நல்ல ஓட்டமும் சொற்செட்டும் கொண்ட கவிதைகள் பல நம் இரசனைக்கு விருந்து படைத்தாலும், சுருக்கமும், கருத்தாழமும் கொண்ட நம்பியவள் நடக்கின்றாள்’ எனும் கவிதையை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகவும், சொல்லவந்ததை ’நச்’சென்று சொல்லி விளங்க வைத்திருக்கும் திரு. ஜெயராம சர்மாவை இவ்வாரப் போட்டியின் சிறந்த கவிஞராகவும் தேர்ந்தெடுக்கிறேன்.

    நம்பியவள் நடக்கின்றாள்
    ———————————————

    நீரற்ற நெடுந்தரை நெஞ்சமெலாம் பெருங்கனவு
    காரற்ற நெடுவானம் கற்றரையில் நடைப்பயணம்
    வேரற்ற வாழ்வினிலே விடிவுதனை எதிர்பார்த்து
    நார்போன்ற பெண்ணவளும் நரம்புதெரி எருதோட்டி
    நம்பிக்கை மனமேற்றி நம்பியவள் நடக்கின்றாள்!

    பாராட்டுப்பெற்ற, பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்கட்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து படக்கவிதைப் போட்டிகளில் ஊக்கத்தோடு பங்குபெறுக! சிறந்த கவிஞராய்த் தேர்வு பெறுக! என வல்லமை வாசகர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 160

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    கவுந்திக்கு மதுரையின் காட்சியையும் அரசனின் கொற்றத்தையும் கோவலன் உரைத்தல்

    நிலத்திற்குப் பலவகைச் செல்வங்களும் தரும்
    அருள்மிக்க ஆணையையும் முறைமையும்
    மேற்கொண்டு செலுத்தும்
    பாண்டியர்களின் சிறப்புவாய்ந்த செங்கோலும்   man
    குடையின் குளிர்ச்சியும்
    வேலின் வெற்றிச்சிறப்பும்
    இவையெல்லாம் விளங்கிநிற்கும்
    சிறப்பான நகரம் இந்த மதுரை.

    இந்த நகரில் வாழ்வதில் மகிழ்ந்து
    வேறு எந்த இடத்துக்கும் சென்று
    தங்க விரும்பாத
    சிறப்பான நகரம் இந்த மதுரை,
    மூதூரான மதுரை நகர்
    கண்டுகளித்த கோவலன்
    அங்கே
    அறத்தினைப் பலருக்கும் அறிவுறுத்தும்
    உள்ளமுடைய அறவோர்கள் வாழும்
    புறமதிலின் இடத்து உள்ள
    மூதூர்ச் சோலையுள் புகுந்து
    தீமைகள் நீங்கிய
    மதுரை நகரின் சிறப்பையும்
    பாண்டியனது அரசாட்சியின் சிறப்பையும்
    கவுந்தியடிகளுக்குக் கூறினான்.

    மாடல மறையவன் வர, கோவலன் அவனை வணங்குதல்

    தாழ்ந்த நீரை வேலியாகக் கொண்ட
    தலைச்செங்காடு எனும் ஊரில் உள்ள
    நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்து
    நன்மையை விரும்பும் கொள்கையுடைய
    மறையோர்களின் தலைவனாகிய
    மாடலன் என்பவன்
    தவத்தில் சிறந்த அகத்திய முனிவரின்
    பொதிய மலையை வலம் வந்து
    குமரியின் பெரிய துறையில்
    முறையான கொள்கைப்படி நீராடி
    அங்கிருந்து,
    தன் சுற்றத்தார் இருக்கும் இடத்துக்குச் சென்று
    திரும்பி வந்தான்.
    திரும்பி வரும் வழியில்
    நடந்து வந்ததால் உண்டான
    களைப்பு நீங்கும்வண்ணம்
    நல்ல நிழல் படிந்த சோலையில்
    கவுந்தியடிகள் இருந்த தவப்பள்ளிக்கு
    வந்து சேர்ந்தான்.
    கோவலன் அவனிடம் சென்று
    அவன் தாள் பணிந்தான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 201 – 218
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • துணிவோடு எடுத்துரை!

    -ஆர். எஸ். கலா

    வெள்ளைக் காகிதத்தையும்
    கருமை எழுது கோலையும்
    என் கரங்களில் கொடுத்து
    விட்டு ஒதுங்கி நின்று பார்…                          kr

    புனைந்து விடுவேன் நான்
    கவிதை ஒன்று, மறுத்துப் பேச
    துணிவு இன்றி வெடவெடத்துப்
    போகும் சில கால்களும்  நின்று!

    நான் உருட்டி விடும்  வார்த்தை
    ஒவ்வொன்றும் சிலரின் நாக்குப்
    போட்ட படிகள் அதைக் கண்டும்
    தயங்காது நடக்கும் என் எழுது
    கோலின் வரிகள்  எனப் புரிய
    வைப்பேன்  நான்  நின்று!

    தொடர்வண்டிகளாய்த் தொடரும்
    உள்பூசல்களை, கதிர்வீச்சை
    விட விரட்டி அடிப்பதில் வல்லமை
    பெற்றது  மனத் துணிச்சல்
    என்பது புரியும்  இன்று!

    இறக்கை இன்றிப் பறக்க
    விடும் எழுத்துக்கள் கொடுக்கும்
    எத்தனையோ முகவரிகளை
    நிறுத்தி விடு, உன் அடக்கு
    முறைகளைக் கடக்க விடு பல
    பாதைகளை, குவிக்கட்டும் எழுதும்
    கரங்கள் சாதனைகளைத்
    துணையாகக் கொடு உன் கரம்
    கொண்டு நீயும் என்றும்!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(66)

    -செண்பக ஜெகதீசன்

    நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
    நச்சு மரம்பழுத் தற்று.   (திருக்குறள்-1008: நன்றியில் செல்வம்)

    புதுக் கவிதையில்…

    செல்வம் சென்றுசேரவேண்டும்
    இல்லாதவர்க்கு…
    எளியவர்க்குக் கொடுக்காத
    எவரும் விரும்பாத
    ஈரமில்லாதவன் செல்வம்,
    நடு ஊரில்
    நஞ்சுமரம் பழுத்ததுபோல்
    பயனில்லாதது, ஆபத்தானது…!

    குறும்பாவில்…

    ஊர்நடுவே பழுத்த நஞ்சுமரம் போன்றதுதான்,
    வறியவர்க்கு உதவாத, யாரும்
    விரும்பாதவன் கைப்பணமும்…!

    மரபுக் கவிதையில்…

    ஊரின் நடுவே மரமதிலே
    உயர்ந்த கிளையெலாம் பழமிருந்தும்,
    யாரும் அதனை நெருங்காமல்
    எட்டியே செல்வர் நஞ்சென்றால்,
    பாரில் இதுதான் கதையாகும்
    பயனபெற ஏழைக் குதவாமல்
    சேரும் செல்வமும் பயனிலையே
    சந்தியில் நஞ்சு மரமெனவே…!

    லிமரைக்கூ…

    செல்வமது இருக்கவேண்டும் உதவிடும் கரமாய்,
    ஏழையர்க்கு உதவாதவன் செல்வமும்
    உதவாததாகும் ஊர்நடுவே பழுத்தநஞ்சு மரமாய்…!

    கிராமிய பாணியில்…

    நஞ்சிமரம் நஞ்சிமரம்
    ஊருக்குள்ள நஞ்சிமரம்,
    ஒதவாத நஞ்சிமரம்
    ஒதுக்கிவச்ச நஞ்சிமரம்..

    ஒதவாத பணக்காரன்
    பணத்துக்கும் கதயிதுதான்,
    ஏழக்கி ஒதவல்லண்ணா
    அவுன
    எட்டிப்பாக்க ஆருமில்ல…

    அவம்பணமும்
    நஞ்சிமரம் நஞ்சிமரம்
    ஊருக்குள்ள நஞ்சிமரம்…!

     

    Share
  • தூக்கணாங்குருவி கூடு தூங்கக் கண்டான் மரத்திலே

    –கவிஞர் காவிரிமைந்தன்.

     

    vanambadi

    வானம்பாடி திரைப்படம் என்பது என்னைப்பொறுத்தவரை கண்ணதாசன் நடத்திய பாட்டுக் கோலாகலம்! படத்திலும் கதையின் நாயகன் நாயகி இருவருக்கும் கவிதை மீது பற்று உண்டு என்று கதையைக் கொண்டு சென்று தன் மனத்தில் இருக்கும் அத்தனை உணர்வுகளையும் பாட்டுவரிகளாய் மாற்றிய திறம் கவிஞருக்கே உரியதாகும்!

    கதையின் களம், நாயக நாயகியர் தேர்வுகள் என்று எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் இந்தக் கதைக்கு இதைவிட பொருத்தம் யாராக இருக்க முடியும் என்று தோன்றுமளவிற்கு கனகச்சிதமாக, திரையில் தேவிகாவும் எஸ்.எஸ்.இராஜேந்திரன் அவர்களும்…

    இசை என்பது பின்னணிதான் ஆனால் இந்தத்திரைப்படத்தில் அது முன்னணியில் ஜொலிக்கிறது! ஆம் … திரையிசைத்திலகம் என்றழைக்கப்படும் மாமா அவர்களின் முத்திரைகள் பளிச்… பளிச் ரகம்! கேமரா மேன் விட்டல்ராவ் ஒளிப்பதிவில், வானம்பாடி இன்னும் நம் மனத்திரைகளில்!!

    கதாநாயகி இரட்டைவேடமேற்று சுவாரஸ்யத்தைக் கூட்டிச் செல்லும் திரைக்கதையில், ஒரு முக்கியக் கட்டத்தில் … பாடகியாய் பரிணமிக்கும் தேவிகா அவர்கள் பாடும் ஒரு பாடலாய் ஒளிப்பதிவுக்கூடமதில் இடம்பெறும் பாட்டு! சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் மெல்லிசை மன்னர் தன் குழுவினருடன் தோன்றி நடித்த பாடல்கள் நம் மனதில் நிலைபெற்றிருப்பதைப் போல கே.வி.மகாதேவன் தன் குழுவினருடன் தோன்றிய அபூர்வமான பாடல்!

    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து என்கிற பல்லவியுடன் துவங்கும் பாடலுக்கு அர்த்தங்களை அறிந்தபோது வியந்துபோனது எப்படியோ… அப்படித்தான்… இதோஇந்தப் பாடலுக்கும் அர்த்தங்கள் நிச்சயமாக இருக்கும்… அது என்ன… என்ன? என்கிற வினாவிற்கு விடை இன்றுவரை கிடைக்கவில்லை..

    அன்புநண்பர் ராகப்ரவாகம் சுந்தர் அவர்கள் தந்த செய்திகளைப் பாருங்கள்…

    Bird...In HINDU Metroplus today, there is an article on Thookkanangkuruvi called Baya weaving bird in English. I was indeed amazed to learn the bird’s nesting methods. The male bird weaves the hanging nests which come with heat-shield mechanisms and security checks. The female bird inspects these nests midway during the construction of the nests and the female bird accepts the male bird’s love or advances only if she is satisfied with the nest and its location. Once this romantic bond is struck, the male bird goes on to complete the nest and the couple lives and breeds happily thereafter. When female birds reject the nests, some male birds sometimes even tear up the nest in frustration, say birdwatchers.

    I was reminded of our Thookkanaangkuruvi song and does Kannadasan somewhere in the song touches this point in the song? If it is so, my admiration for the kavignar will multiply manifold.

    Just go thro the song and if possible you can include the song in PPPK covering this point.

    K Sundar.

    எத்தனை சாதுர்யமாக இத்தனை கருத்துக்களைச் சுமந்து ஒரு பாடல் பிறக்கிறது என்பதை எண்ணிப்பார்த்தால்… யுகக்கவிஞர்களின் கற்பனைவளத்தில் மட்டும்தான் வார்த்தைகளுக்கு ஆழமிருப்பதையும்… அவை பிற்காலத் தலைமுறைகளால் கண்டெடுக்கப்படுவதும் சாத்தியமாகத் தோன்றுகிறது.

    தூக்கணாங்குருவி என்னும் ரகக் குருவி தான் கட்டும் கூட்டில் வெப்பத்தைத் தாங்கக்கூடிய வண்ணமும் பாதுகாப்பான குடிலாகவும் உருவாக்கிவரும் கட்டத்தில் பெண்குருவி அங்கே வந்து பார்வையிடுமாம். அவ்வகையில் பெண்குருவி திருப்தியுற்றால்மட்டுமே கூடு கட்டும் பணி தொடருமாம். அது நிறைவுற்றபின் கூடிவாழும் குருவிகள் அக்கூட்டில் இன்பமாக வாழுமாம். மாறாக பெண்குருவி அந்தக் கூட்டை ஏற்கவில்லையென்றால் ஆண்குருவியே அக்கூட்டைக் கோபமாக கலைத்துவிடுமாம்.

    தூக்கணாங்குருவி கூடு உருவாக்கம், அதில் உள்ள அர்த்த புஷ்பங்கள், இவற்றையெல்லாம் கவிஞர் எங்கோ படித்திருக்க… அதை இப்பாடலில் இசையோடு இணைந்த கவிதையாக, திரைக்கதையோடு பவனி வரச் செய்திருக்கிறார். நான் இப்போதும் சொல்கிறேன் இப்பாடலுக்கு இன்னும் இன்னும் அர்த்தங்கள் இருக்கிறது என்று தோன்றுகிறது. அறிந்தவர் எவரேனும் அறியத் தருவீராக என்கிற வேண்டுகோளுடன் விடைபெறுகிறேன்…


    காணொளி : https://youtu.be/fF_P01DOlbI

     

    தூக்கணாங்குருவி கூடு
    தூங்கக் கண்டான் மரத்திலே
    சும்மாப் போன மச்சானுக்கு
    என்ன நினைப்போ மனசிலே

    பாக்கிறான் பூமுகத்தைப்
    பைய பைய கண்ணிலே
    பரிசம் போட்ட மச்சானுக்கு
    என்ன நினைப்போ தெரியல
    [தூக்கணாங்குருவி கூடு]

    அம்மான் வீட்டு பெண்ணானாலும்
    சும்மா சும்மா கிடைக்குமா
    அரிசி பருப்பு சீரு செனத்தி
    அள்ளி கொடுக்க வேண்டாமா..
    கம்மான் கையில் பொன்னை வாங்கிக்
    கட்டிக் கொள்ள வேண்டாமா
    கட்டிலும் மெத்தையும் வாங்கிப்போட்டு
    காத்துக்கிடக்க வேண்டாமா
    [தூக்கணாங்குருவி கூடு]

    கூரைக் குடிசை நடுவிலே
    அந்தப் படுக்கையைப் போட்டு
    ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சி
    கோலத்தைப்போட்டு
    ஆற அமர மச்சானோடு படிக்கணும் பாட்டு
    ஆனாப்பட்ட ராஜா கூட மயங்கணும் கேட்டு
    அத விட்டு …
    தூக்கணாங்குருவி கூடு
    தூங்கக் கண்டான் மரத்திலே
    சும்மாப் போன மச்சானுக்கு
    என்ன நினைப்போ மனசிலே

    ______________________

    படம்: வானம்பாடி
    பாடல்: கண்ணதாசன்
    இசை: கே. வி. மகாதேவன்
    குரல்: பி. சுசீலா

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ‘’முதலை, யானையின் விஷ்ணு -மாயையாம் சண்டைக்கு மோட்சம்தான் சமாதானம்….
    crazy
     

    ”VICEஸாம் முதலைவாயில்  THIGHSயானை  திண்டாட,

     WISEமகா  விஷ்ணு  வரவுகண்டு, -NICEஸாய்,

     வடிவத்தைப் பெற்(று)அவர்கள்  வானகம்  ஏக,

     பிடிசாபத் தால்மோட்சப் பேறு’’….கிரேசி மோகன்….

    Share
  • சூட்டு யுகப் பிரளயம் ! மாந்தர் பிழைப்ப தெப்படி ?

    ajay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    பூகோளம் நோயில் .. !

    நோய் பீடித்துள்ளது
    பூகோளத்தை !
    குணமாக்க
    மருத்துவம் தேவை !
    காலநிலை மாறுதலுக்குக்
    காரணங்கள் பல்வேறு !
    கரங் கோத்துக் காப்பாற்ற
    வர வேண்டும்
    பல்லறிஞர் !
    சிந்தனை யாளர் பங்கெடுப்பு,
    எரிசக்தி நிபுணர் ஒத்துழைப்பு,
    செல்வந்தர் நிதி அளிப்பு,
    புவிமாந்தர்
    கூட்டு ழைப்பு யாவும்
    தேவை ! தேவை ! தேவை !

    ஜெஃப்ரி குளூகர், 
    டைம் வார இதழ் மூத்த எழுத்தாளர்
    [Jeffrey Kluger, Senior Writer Time Magazine]

    +++++++++++++

    சூட்டு யுகம் 

    சூடு காலம் வருகுது !
    புவிக்குக்
    கேடு காலம் வருகுது !
    நாடு, நகரம், வீடு, மக்கள்
    நாச மாக்கப் போகுது !
    புயல் எழுப்ப வருகுது !
    பூத மழை பொழியப் போகுது !
    நீரை, நிலத்தை, குளத்தை,
    பயிரை, உயிரை, வயிறை
    முடக்கிப் போட வருகுது !
    கடல் வெப்பம்,
    நீர் மட்டம் ஏறி
    கரை நகர் மூழ்கப் போகுது !
    மெல்ல மெல்ல ஏறி
    வெப்பம்,
    மேலே மீறிப் போகுது !
    சூட்டு யுகப் பிரளயம்,
    வீட்டை நோக்கித் தாக்குது !
    உன்னை, என்னை, உலகின்
    கண்ணை ஒன்றாய்ப்
    பிதுக்கப் போகுது !

    +++++++++++++


    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

    “ஒரு திடுக்கிடும் முடிவாண்டு விஞ்ஞானப் புள்ளி விவர அறிக்கையில் உலகக் காலநிலை நிறுவகம் (WMO) சமீபத்திய உச்ச அதம உஷ்ண மாறுதல்கள் [ஸ்விட்ஜர்லாந்தில் மிகச் சூடான ஜூன் மாத வேனில், அமெரிக்காவில் எண்ணிக்கை மிக்க சூறாவளி அடிப்புகள்] யாவும் காலநிலையைச் சார்ந்தவை என்று கூறுகிறது.  உலக நாடுகளின் உச்சக் காலநிலை ஏற்றம், இறக்கம், மழைப் பொழிவுகள், புயல் வீச்சுகள் ஆகியவை யாவும் பூகோள சூடேற்ற முன்னறிப்புக் கூற்றுகளை ஒத்திருக்கின்றன.  உன்னத கம்பியூட்டர் மாதிரிக் கணிப்புகள் [Super Computer Models], சூழ்வெளி சூடாகும் போது, வெப்பம் மிகையாகிக் காலநிலைப் போக்கில் சீர்குலைவும், நிலையில்லா ஆட்டமும் ஏற்படும் என்று காட்டுகின்றன.  சமீபத்தைய ஆராய்ச்சிகள் காலநிலை மாறாட்டத்தால் பூகோள உஷ்ணம் தொடர்ந்து சூடேற்றும் போது இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகி, அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாவதாய்க் காட்டுகின்றன.”

    உலகக் காலநிலை நிறுவகம் [World Meteorological Organization (WMO)]

    “2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள்.  அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங்களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது!  வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதியாக்கப் பட்டது!  அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”

    உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001]

    “வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை!  மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

    ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]

    பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகிறது!  கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது!  கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

    அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]

    “கணினி யுகத்தில் காலநிலை மாடல்கள் பேரளவு முன்னேற்ற விளைவுகளைக் காட்டியுள்ளன. முக்கியமாக பூகோள சூடேற்றத்தால் ஏற்படும் கால நிலை வேறுபாடுகளுக்கு ஆர்க்டிக் துருவ வட்டார மாறுதல்கள் 25%-30% அளவில் பங்கேற்றுள்ளன.

    பூகோளச் சூடேற்றப் போக்கைப் பற்றி:

    1. பூகோள உஷ்ணம் 1900 ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது.

    2. 20 ஆம் நூற்றாண்டின் பத்தில் ஏழு வெப்பம் மிகையான காலங்கள் 1990 ஆண்டுகளில் பதிவாகி யுள்ளன.  அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் எழுந்த வருடமாகக் கருதப் படுகிறது.

    3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு வேகத்தில் மிகையாகி யிருக்கிறது!

    4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன!  வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

    5. (1986-1995) ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் தென் ஆ·பிரிக்க நாடுகளுக்கு மிக்க உச்சமான வெப்ப காலமாகக் கருதப்படுகிறது.

    டாக்டர் ஸிசிலியா பிட்ஸ், [Dr. Cecilia Bitz, Physicist, University of Washington, Polar Science Center]

    சூடேறும் பூகோளம் பற்றி முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி அல் கோர்

    பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

    பூகோளக் காலநிலை யந்திரத்தை இயக்கும் பரிதி

    பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்டமான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது!  வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது!  அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகையாகிறது!  வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன்ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடி மாளிகை விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது.  அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது!  அந்த வெப்ப எழுச்சியால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும்.  அல்லது சி.எ·ப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கின்றன.

    பூகோளத்தின் வாயு மண்டலம் பரிதியின் வெப்பச் சக்தியாலும், பூமியின் சுழற்சியாலும் தொடர்ந்து குலுக்கப் பட்டு மாறி வருகிறது!  பரிதியின் வெப்பம் வேனிற் பரப்பு அரங்குகளில் ஏறித் துருவப் பகுதிகளை நோக்கித் தணிந்து செல்கிறது.  அப்போது குளிர்ந்த துருவக் காற்று கீழ்ப்படிந்து பூமத்திய ரேகை நோக்கி அடிக்கிறது.  பூதளப் பரப்பின் நீர்மயம் ஆவியாகி மேலே பரவிப் பல மைல் தூரம் பயணம் செய்து, உஷ்ணம் குன்றும் போது மழையாகப் பெய்கிறது அல்லது பனிக்கட்டியாக உறைகிறது.  நாளுக்கு நாள் ஒரே விதியில் மாறிவரும் சீரான காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொண்டாலும், மெல்ல மெல்ல மிகையாகும் காலநிலை வேறுபாடுகள் விந்தையான புதிராய் உள்ளன. 1940 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் உஷ்ணம் தணிந்து பனிக்குன்றுகள் 1972 ஆண்டு வரை பெருகிக் கொண்டு விரிந்தன!  பிரிட்டனில் அதே காலங்களில் சில வருடங்கள் சூடாக ஆரம்பித்தாலும் உஷ்ணக் குறைவால், பயிர் வளர்ச்சிக் கால நீடிப்பில் இரண்டு வாரங்கள் குன்றி விட்டன!  அவ்விதமாக காலநிலை யந்திரமானது விந்தையாகப் பூகோளத்தில் விளையாடிக் கொண்டிருந்தது!

    கிரீன்ஹௌஸ் விளைவுகளால் பூகோள வெப்பம் ஏறும் போது, கொந்தளிக்கும் கடல் நீர் உஷ்ணம் அதிகமாகி கடல் வெள்ளத்தின் கொள்ளளவு மிகையாகிறது [Volumetric Thermal Expansion].  அடுத்து துருவப் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தின் உயரத்தை மேலும் உயரச் செய்கிறது!  பொதுவாகக் கடல் மட்ட வேறுபாடுகளை அளப்பது சற்று கடினமானது.  அலைமானித் தகவல் [Tide Gauge Data] மூலமாகத்தான் கடல் மட்ட உயர்வுகளைப் பதிவு செய்ய முடியும்.  கடந்த 100 ஆண்டுகளாக வெப்ப ஏற்றத்தால் பூகோளக் கடல் மட்டம் 10-25 செ.மீ. உயர்ந்திருப்பதாக அறியப்படுகிறது!  பூகோளச் சூடேற்றத்தால் மட்டும் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 100 ஆண்டுகளில் 2-7 செ.மீ. உயர்ந்திருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது! பனிமண்டலமும் துருவப் பனிப்பாறைகளும் உருகிக் கடல் மட்டம் 2-5 செ.மீ. மிகையானதாக அறியப் படுகிறது!  மீதமான 4-13 செ.மீ. கடல் வெள்ளக் கொள்ளளவு நீட்சியாக எடுத்துக் கொள்ளலாம். 21 ஆம் நூற்றாண்டில் மானிடரியக்கும் தொழிற் துறைகளில் உண்டாகும் கிரீஹௌஸ் வாயுக்கள் வெளியாக்கம் பூகோளக் காலநிலைப் பாதிப்புகளைப் பேரளவில் விளைவிக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கப் படுகிறது!

    சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

    கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக்களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

    2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது!  பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது.  அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது!

    (தொடரும்)

    தகவல்:

    1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]
    (April 9, 2007)

    2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

    3.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

    4.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

    5.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

    ++++++++++++++++++++

    Share
  • பிரபஞ்ச உருவாக்கத்தில் பேபி ஒளிமந்தைக் கொத்துக்கள் வடிப்பில் கரும்பிண்டத்தின் பங்கு

    ajay
     

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    http://www.dailymail.co.uk/sciencetech/article-2622616/Virtual-world-tops-cosmic-charts-scale-rigor.html#v-3546173097001

    http://phys.org/news/2012-03-astronomers-distant-galaxy-cluster-early.html

    http://www.dailymail.co.uk/sciencetech/article-2871298/The-best-sign-dark-matter-X-ray-signals-neighbouring-galaxies-emitted-one-universe-s-greatest-mysteries.html#v-3938513637001

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=eUA5sgAfY7g

    http://covertress.blogspot.ca/2009/06/stephen-hawking-asks-big-questions.html

    ++++++++++++++++

    Herschel Telescope

    பிரபஞ்சப் பெரு வெடிப்பில்
    பிறந்து வளர்ந்த
    பேபி ஒளிமந்தைக் கொத்துகளை
    வடித்தது கரும்பிண்டம்.
    ஒளிமந்தை
    மையக் கருந்துளை சுற்றி
    வட்டமிடும்
    விண்மீன்கள் கோடான கோடி !
    கண்ணுக்குப் புலப்படா
    கரும்பிண்டம் வடித்த
    ஒளிமந்தை விண்மீன்கள்
    ஒருமைப்பட்டு
    ஐக்கியமாகி உள்ளன !
    கரும்பிண்டம், வெப்ப முகில்
    உருவாக்கிய
    ஒளிமந்தைக் கொத்துகள்
    ஈர்ப்பு விசையால்
    கை கோர்த்துக் கொள்ளும் !
    கண்ணுக்குப் புலப்படாத
    கருஞ்சக்தி
    பிரபஞ்ச வேலியை விரைவாய்
    விரிய வைக்கும் !

    ++++++++++++++++++

    Proto clusters

    ஆதி காலத்துக்கு முன்பானவற்றை நாங்கள் நோக்குவதாலும், பிரபஞ்சம் எல்லாத் திக்கிலும் சீரமைப்பில் இருப்பதாய் அனுமானிப்பதாலும், பேபி ஒளிமந்தைக் கொத்தை [Baby Galaxy Clusters]  ஒய்த்தவையும் அவ்வித அமைப்பில் இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.  ஒதுக்கபட வேண்டிய ஒன்றிரண்டு பேபி ஒளிமந்தைக் கொத்துகளில் கண்ட முந்தைய நோக்கு ஆய்வுகளுக்கு முரணாகத் தற்போது 200 பேபி ஒளிமந்தைக் கொத்துக்கள் பற்றிச் சான்றுகள் கிடைத்துள்ளன.

    பிரண்டா ஃபிரியே [துணை வானியல் விஞ்ஞானி, அரிசோனா பல்கலைக் கழகம்]

    இளைய காலக்ஸி ஒளிமந்தைகள் படிப்படியாக விண்மீன்களை உற்பத்தி செய்கின்றனவா, அல்லது விரைவாய் உண்டாக்குகின்றனவா என்பது தெரிய வில்லை.   ஆனால் அவை மெதுவாக உருவாக்கப்படாமல், வான வேடிக்கை போல் ஒளியாகி, அடங்கிக் கொந்தளிப்பு நிலையில் வடிக்கப் படுகின்றன.  எங்கள் தொலைநோக்குக் கருவியின் தனித்திறமை ஒரே சமயத்தில் 300 ஒளி அண்டங்களின் ஒளிப்பட்டைகளைக் காண முடியும்.

    பிரண்டா ஃபிரியே [துணை வானியல் விஞ்ஞானி, அரிசோனா பல்கலைக் கழகம்]

    பூர்வீக ஒளிமந்தைக் கொத்துக்கள் தோற்றத்துக்கு மூலாதார வாயுப் பிண்டங்கள்

    ஈசா [ESA, European Space Agency] ஐரோப்பிய விண்வெளி ஆணையகத்தின் ஹெர்ச்செல் விண்ணோக்கி ஆய்வகம், [Herschel Space Observatory] மற்றும் பிளான்க் விண்ணோக்கி ஆய்வகம் [Planck Satellite] இரண்டும் சேமித்த தகவல் மூலம் வானியல் நிபுணர்கள் நாம் காணும் பரந்த ஒளிமந்தைக் கொத்துக்களுக்கு முன்னோடிகள் உள்ளதாகக் கண்டுபிடித்துள்ளார்.  நமது பால்வீதி போன்ற காலக்ஸி ஒளிமந்தைகள் 100 பில்லியன் பரிதிகளோடு தனித்த நிலையில் இருப்பதில்லை.  தற்போதிய பிரபஞ்சத்தில் பெரு வெடிப்புக்குப் பிறகு 13.8 பில்லியன் வருடம் கடந்து, பல்வேறு வகைக் காலக்ஸிகள் சேர்ந்து 10 ஏன் 100 எண்ணிக்கையில் முந்திரிக் கொத்துகள் போல் விண்வெளியில் ஒளி வீசி வருகின்றன.

    ஆயினும்  இந்தக் கொத்துக்கள் எப்போதும் இருந்த தில்லை.  நவீன விஞ்ஞானத்தின் கேள்வி, பூர்வீகப் பிரபஞ்சத்தில் இத்தகையப் பேரளவு நிறையுள்ள ஒளிக் கொத்துகள் எப்படி, எப்போது உருவாயின என்பதே ! அந்த முறைப்பாட்டில் கரும்பிண்டத்தின் [Dark Matter] பங்களவு என்ன என்பது அடுத்த கேள்வி.

     

    ஆதி காலத்துக்கு முன்பானவற்றை நாங்கள் நோக்குவதாலும், பிரபஞ்சம் எல்லாத் திக்கிலும் சீரமைப்பில் இருப்பதாய் அனுமானிப்பதாலும், பேபி ஒளிமந்தைக் கொத்தை [Baby Clusters]  ஒத்தவையும் அவ்வித அமைப்பில் இருக்க வேண்டும் என வானியல் விஞ்ஞானிகள் நினைக்கிறார்.  ஒதுக்க பட வேண்டிய ஒன்றிரண்டு பேபி ஒளிமந்தைக் கொத்துகளில் கண்ட முந்தைய நோக்காய்வுகளுக்கு முரணாகத் தற்போது 200 பேபி ஒளி மந்தைக் கொத்துக்கள் பற்றிச் சான்றுகள் கிடைத்துள்ளன.

    இளைய காலக்ஸி ஒளிமந்தைகள் படிப்படியாக விண்மீன்களை உற்பத்தி செய்கின்றனவா, அல்லது விரைவாய் உண்டாக்குகின்றனவா என்பது தெரியவில்லை.   ஆனால் அவை மெதுவாக உருவாக்கப்படாமல், வான வேடிக்கை போல் ஒளியாகி, அடங்கி கொந்தளிப்பு நிலையில் வடிக்கப் படுகின்றன.  நவீனத் தொலைநோக்குக் கருவியின் தனித்திறமை ஒரே சமயத்தில் 300  ஒளி அண்டங்களின் ஒளிப்பட்டைகளைக் காண முடியும்.  பிளான்க் நோக்காய்வு மூலம் தூரத்தில் உள்ள பூர்வீகப் பிரபஞ்சத்தின் ஒளி வீசும் 234 அண்டங்களைக் கண்டுள்ளார்.  ஒவ்வோர் ஒளிமந்தை யிலும் வாயு முகில், விண்தூசிகளும் சேர்ந்து, ஆண்டுக்கு 100 முதல் 1500 நம் பரிதி அளவு விண்மீன்களாக உருவாகி வருவது காணப் பட்டது.

     

     

    “M-87 காலக்ஸியிலிருந்து 130,000 ஒளியாண்டு தூரத்திற்குள் நாங்கள் கோளச் சந்தைகளைக் (Globular Clusters) காணவில்லை.  பூதக் காலக்ஸி சிறிய காலக்ஸிகளிலிருந்து விண்மீன் கொத்துக்களை (Star Clusters) நீக்கியதை இது காட்டுகிறது.  இந்தச் சிறிய காலக்ஸிகளே M-87 உருவாகப் பங்கெடுத்துள்ளன.  நமது பால்வீதி காலக்ஸியில் விண்மீன்களைத் தவிர்த்து மங்கலாக உள்ள கோளச் சந்தைகளைப் படம் பிடித்துக் காட்டிய ஹப்பிள் தொலைநோக்கியின் விழிகள் மிக நுட்பமானவை.”

    எரிக் பெங்க் (Eric Peng, Peking University, Beijing, China)

    இந்த பௌதீக உலகத்திலே மர்மத்தைத் தாண்டிச் சென்று குறிப்பிடாத ஒரு மர்மம் இல்லை ! அனைத்து அறிவு வீதிகளும், நியதிகளின் தனி வழிகளும், சிந்தனை யூகிப்புகளும் முடிவிலே, மனித மகத்துவம் தொட முடியாத ஒரு பிரதமக் கொந்தளிப்பை (Primal Chaos) நோக்கிச் செல்கின்றன.”

    லிங்கன் பார்னெட் (பிரபஞ்சம் & டாக்டர் ஐன்ஸ்டைன்)

    விண்வெளி வானியல் தொலைநோக்குகள் எப்போதும் நியதிகளை ஈடுபடுத்துபவை. பிரபஞ்சம் உப்பி விரியும் போது, காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன! அதை வேறு விதமாகக் கூறினால், காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது! அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது! அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு பெருங்கோளம் !

    வானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள்

    ஒளிமந்தைக் (காலாக்ஸி) கொத்துகள் எப்படித் தோன்றின ?

    பிரபஞ்சத் தோற்றத்தின் கட்டமைப்பு விளைவுகளில் காலக்ஸித் தீவுகளின் கூட்டங்கள்தான் (Galaxy Groups, Clusters) ஈர்ப்பு விசைக்குள் அடங்கிய மிகப் பெரும் வடிவம் கொண்ட விண்வெளிக் கண்டங்கள் (Gravitationally Bound Largest Space Objects) !  அவைதான் பிரபஞ்சத்திலே மிக்க திணிவு அடர்ந்த (Densest Part of the Universe) தளம் அகண்ட கண்டங்கள் !  குளிர்ந்த கரும்பிண்டம் சேர்ந்து ஈர்ப்பு விசைக்குள் அடங்கும் கட்டமைப்புகள் (Gravitational Bound Structures) உருவாகும் போது, சிறிய கட்டமைப்புகள் முதலில் சிதைந்து படிப்படியாக முடிவில் மாபெரும் வடிவாகி காலக்ஸி சந்தைகள் (Galaxy Clusters) தோன்றியுள்ளன !

    ஒளிமந்தைச் சந்தைகள் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றத் துவங்கியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் யூகிக்கிறார்.  சாதாரணமாக ஒளிமந்தைச் சந்தையில் சுமார் 10 முதல் 1000 கணக்கான காலக்ஸிகள் இருக்கலாம் !  சந்தைகள் பொதுவாக மிகப் பெரும் குழுக்களோடு (Superclusters) நெருங்கியே இருக்கும்.

    ஒளிமந்தைக் குழுக்கள் (Groups of Galaxies) என்பவை மிகச் சிறிய காலாக்ஸிகளைக் கொண்டவை.  அந்தக் குழுக்கள் ஒவ்வொன்றிலும் 50 குன்றிய எண்ணிக்கைக் காலாக்ஸிகள் இருக்கும்.  அவற்றின் அகலம் (விட்டம்) 1 முதல் 2 மெகா பார்செக் (Mega-Parsec) (1 parsec = 3.26 Light Year = 10^22 meter Distance).  குழு ஒன்றின் நிறை சுமார் 10^13 மடங்கு பரிதி நிறை .!  குழுக்களில் இயங்கும் காலக்ஸியின் நகர்ச்சி வேகம் சுமார் 150 km/sec (90 mps).  நமது பரிதி மண்டலம் நகரும் பால்வீதி காலக்ஸியானது 40 ஒளிமந்தைகள் உள்ள “உள்ளகக் குழுவில்” (Local Group) ஒன்றாக இயங்கி வருகிறது.

    ஒளிமந்தைக் கொத்துகள் உள்ள பெரும் பகுதிக் கரும்பிண்டம்

    வகுப்பு வரைக் கோடு இரண்டுக்கும் துல்லியமாய் இல்லா விட்டாலும் “காலக்ஸி குழுக்களை” விடப் பெரியவை “ஒளிமந்தைச் சந்தைகள்”.  விண்ணோக்கிகள் மூலம் காணும் போது பல்வேறு காலக்ஸிகளை கவர்ச்சி விசையால் பிணைத்துக் கொண்ட கொத்துக்கள் தென்படு கின்றன.  ஆயினும் அவற்றில் வேகம் (150 km/sec) (324,000 mph) மிகையானதால் ஈர்ப்பு விசையைப் பிணைப்பை தகர்த்து மீறும் வேறோர் கவர்ச்சி ஆற்றல் அருகில் காணப்படாமல் இருப்பது அறியப் படுகிறது.  எக்ஸ்-ரே மூலம் ஆராயப் பட்டதில் “உட்புறக் கொத்து வெளிப்பாடு” (Intra-cluster Medium) என்னும் பேரளவு வெப்பம் மிகுந்த “அகில ஒளிமந்தை வாயு” (Hot Inter-galatic Gas) இருப்பது தெரிந்தது. பிழம்பு வாயுவான (Plasma) அந்த வாயுவின் உஷ்ணம் (10^7 – 10^8) கெல்வின் (K).  அதனால்தான் “பிரம்ஸ்-ஸ்டிராலுங், அணுக்கோடு வீச்சு” (Brems-strahlung & Atomic Line Emission) மூலமாக எக்ஸ்-ரே கதிர்கள் அவற்றில் எழுகின்றன.

    விந்தையாகச் சந்தையில் உள்ள ஒளிபிழம்பு வாயுவின் நிறை காலக்ஸிகளின் நிறையை விடச் சுமார் இரண்டு மடங்கு !  ஆயினும் இந்த நிறை கூட காலக்ஸிகளை சந்தைக்குள் வைத்திடப் போதுமானதாக இருப்பதில்லை !  அத்துடன் அந்த வாயு முழுமையாக சந்தையின் ஈர்ப்பு விசைக்கு “திரவ-நிலைப்புச் சமநிலையில்” (Hydro-static Equilibrium) இருப்பதால், மொத்தம் நிறைப் பரிமாற்றத்தைக் கணிக்க முடிகிறது.  அந்த நிறையானது காலக்ஸிகளின் நிறையைப் போல் அல்லது ஒளிப்பிழம்பு வாயுவின் நிறையைப் போல் சுமார் 6 மடங்கு என்று தெரிகிறது.  அவ்விதம் காணத் தவறிய பகுதிதான் கரும்பிண்டம்.  குறிப்பிட்ட ஒரு சந்தையில் உள்ள காலக்ஸிகள் நிறை : 5%, ஒளிப் பிழம்பு வாயு : 10%, மீதம் 85% கரும்பிண்டம் என்று கருதப்படுகின்றன.

    ஒளிமந்தைக் கொத்துகளின் வானியல் பண்பாடுகள்

    1.  காலக்ஸி சந்தைகளில் 50 முதல் 1000 ஒளிமந்தைகள் இருக்கலாம்.  மேலும் அவற்றின் எக்ஸ்-ரே கதிர்கள் உமிழும் மிக்க உஷ்ணமான வாயுப் பிழம்பும், பேரளவு கரும்பிண்டமும் கொண்டவை.

    2.  சந்தைகளின் மேற்கூறிய மூன்று உட்பகுப்புகளும் (Components) சம நிலையில் பரவியுள்ளதாக அறியப்படுகிறது.

    3.  ஒளிமந்தைச் சந்தைகளின் மொத்த நிறை : (10^14 – 10^15) அல்லது (100 பில்லியன்–1000 பில்லியன்) மடங்கு பரிதியின் நிறை.

    4.  சந்தைகளின் அகலம் அல்லது விட்டம் (2 –10 Mpc) (Mega-Parsec) (1 parsec = 3.26 Light Year = 10^22 meter Distance).

    5.  சந்தைகளில் நகரும் காலக்ஸி ஒவ்வொன்றின் வேகம் சுமார் : (800 –1000) km/sec. (480 — 600) miles/sec.

    பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட சில ஒளிமந்தைக் கொத்துகள்

    அருகில் தெரியும் பிரபஞ்ச காலக்ஸி சந்தைகள் :  விர்கோ சந்தை (Virgo Cluster), ஹெர்குலிஸ் சந்தை (Hercules Cluster), கோமா சந்தை (Coma Cluster),  நார்மா சந்தை (Norma Cluster) தலை தூக்கிய “மாபெரும் கவர்ச்சியாளி” (Great Attractor) எனப்படும் காலக்ஸிகளின் கூட்டம்.  மாபெரும் கவர்ச்சியாளி பிரபஞ்ச விரிவையே பாதிக்கச் செய்வது !

    ஒளிமந்தைச் சந்தைகளை விண்மீன் கொத்துக்களோடு (Star Clusters) குழப்பிக் கொள்ளக் கூடாது.  அதுபோல் காலக்ஸிக் கொத்துக்கள், திறந்த கொத்துக்கள், கோளக் கொத்துக்களோடும்  (Galactic Clusters, Open Clusters, Gobular Clusters) குழப்பம் அடைவதும் சரியல்ல.  விண்மீன் கொத்துக்கள், காலக்ஸிக் கொத்துக்கள், திறந்த கொத்துக்கள், கோளக் கொத்துக்கள் ஆகிய நான்கும் காலக்ஸியின் உள்ளே காலக்ஸிகளைச் சுற்றி வருபவை !

    காலக்ஸி சந்தைகளைக் காணும் முறைகள்

    1.  தொலைநோக்கு அல்லது உட்சிவப்பு முறை (Optical or Infrared Method) :

    தனிப்பட்டிருக்கும் காலக்ஸி மந்தைகளை தொலைநோக்கு, உட்சிவப்பு, ஒளிப்பட்டை (Spectroscopy) முறைகள் மூலம் உளவி அறியலாம்.  பிரபஞ்ச விண்வெளியில் திணிவு மிகைப்பாடுகளைத் (Over-densities) தேடிக் கண்டு ஒரே உட்சிவப்பு நகர்ச்சியில் (Redshift) உள்ள பற்பல காலக்ஸிகளைப் பார்த்து உறுதிப் படுத்தலாம்.

    2.  எக்ஸ்-ரே தொலைநோக்கி முறை (X-Ray Telescope Method) :

    வெப்பம் மிகையான ஒளிப்பிழம்பு வாயு (Hot Plasma Gas) உமிழும் எக்ஸ்-ரே கதிர்களை எக்ஸ்-ரே தொலைநோக்கி அல்லது எக்ஸ்-ரே ஒளிப்பட்டை மூலம் கண்டு விடலாம்.

    3.  ரேடியோ வானலை முறை (Radio Wave Method) :

    ஒளிமந்தைச் சந்தைகளில் பல்வேறு கட்டமைப்புச் சிதறல்கள் (Diffuse Structures) ரேடியோ வானலை அதிர்வுகளை (Radio Frequencies) வெளி வீசுகின்றன.  அந்தக் கதிரலை வீச்சுகளை உளவித் தேடி உருவாகும் பிள்ளைப் பிராய காலக்ஸி சந்தைகளை (Proto-clusters) அறிய முடியும்.

    4.  சன்னியாவ்-ஸெல்டோவிச் விளைவு முறை (Sunyaev-Zel’dovich Effect) :

    வெப்பசக்தி மிகுதியான எலெக்டிரான்கள் “உட்புறக் கொத்து வெளிப்பாடு” (Intra-cluster Medium) அகிலவெளி நுண்ணலைப் பின்புலத்தில் (Cosmic Microwave Background) (CMB) சிதறிய
    கதிர்வீச்சு CMB இல் ஒருசில ரேடியோ அதிர்வுகளில் ஒரு நிழலை உண்டாக்குகிறது.  அந்த விளவுகளை உளவி ஒளிமந்தைச் சந்தையைக் காண முடியும்.

    5.  ஈர்ப்பு விசை குவியாடி முறை (Gravitational Lesing Method) :

    ஈர்ப்பு விசை குவியாடி முறைப்பாட்டில் பின்னால் இருக்கும் காலக்ஸிகளின் இடத்தைத் திரித்துக் காட்ட ஒளிமந்தை சந்தைகளில் போதிய அளவுப் பிண்டம் உள்ளது.  அந்தத் திரிபுகள் மூலமாக சந்தைகளில் கரும்பிண்டம் பரவியிருப்பதையும் தெரிந்து கொள்ள இயலும்.

    பிரபஞ்ச காலாக்ஸிகள் எப்படித் தோன்றின ?

    அகிலவியல் தத்துவங்களின் (Cosmology) விளக்கங்கள் வானியல் தொலைநோக்குகளின் தேடல் மூலமாக விரைவாக விருத்தியாகும் போது, பிள்ளைப் பிராந்தியத்தில் பிரபஞ்சத்தின் (Infant Universe) பிண்டமானது எவ்வித யந்திரவியல் நியதியில் ஒன்றாய்ச் சேர்ந்தன என்பதை விஞ்ஞானிகள் இப்போது கூர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.  நமக்கு எழும் கேள்வி இதுதான் : எவை முதன்முதலில் தோன்றியன ?  காலாக்ஸிகளா ?  விண்மீன்களா ?  அல்லது கருந்துளைகளா ?  பிள்ளைப் பிரபஞ்சம் ஆதியில் பல்லாயிரக் கணக்கான டிகிரி உஷ்ணமுள்ள வாயுக்களும், கருமைப் பிண்டமும் (Dark Matter) சீராகக் கலந்திருந்த கடலாக இருந்துள்ளது.

    கண்ணுக்குப் புலப்படாத, மர்மான, பிரதானமான பெரும்பிண்டம் இருந்ததற்குக் காலாக்ஸிகளின் மீது உண்டான பூத ஈர்ப்பியல் பாதிப்பே மறைமுக நிரூபணங்களாய் எடுத்துக் கொள்ளப் பட்டன.  ஆயினும் காலாக்ஸிகள், விண்மீன்கள், கருந்துளைகள் எப்படி ஒருங்கே சேர்ந்திருந்தன என்பதுதான் விஞ்ஞானிகளைச் சிந்திக்க வைக்கும் பிரபஞ்சத்தின் புதிர்களாகவும், மர்மமாகவும் இருக்கின்றன !

    பிரபஞ்சத்தின் நுண்ணலைப் பின்புலத்து விளைவுகளின் (Microwave Background Effects) மூலம் ஆராய்ந்ததில், பிரபஞ்சம் குளிர்ந்திருந்த போது, பிண்டம் ஒன்றாய்த் திரண்டு, பெரு வெடிப்புக்குப் பிறகு 380,000 ஆண்டுகள் கழிந்து “பளிங்குபோல்” (Transparent) இருந்தது என்று கருதுகிறார்கள் !  பெரு வெடிப்புக்குப் பின் 1 பில்லியன் ஆண்டுகள் கடந்து, பிரபஞ்சத்தின் கட்டமைப்புகளான விண்மீன்களும், காலாக்ஸிகளும் உருவாயின என்று கருதப்படுகிறது.

    1950 ஆண்டுகளில் கலி·போர்னியா மௌண்ட் வில்ஸன் வானேக்ககத்தில் பணிபுரிந்த முன்னோடிகளில் ஒருவரான, ஜெர்மென் வானியல் வல்லுநர் வில்ஹெம் வால்டர் பாடே (Wilhem Walter Baade) காலாக்ஸிகளில் உள்ள விண்மீன்களை ஆராய்ந்து, காலாக்ஸிகள் எப்படித் தோன்றின என்று அறிந்தார்.  நமது பால்மய வீதியைச் சுற்றியுள்ள ஒரு குழு விண்மீன்களில் ஹைடிரஜன், ஹீலியத்தை விடக் கனமான உலோகங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார் ! 11 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியவை, அந்தப் பூர்வீக விண்மீன்கள் !  சூப்பர்நோவா வெடிப்பு அல்லது மற்ற விண்மீன் சிதைவு இயக்கங்களால் விண்வெளியில் வீசி எறியப்பட்ட உலோகங்கள், நமது காலாக்ஸியின் இளைய தலைமுறை விண்மீன்களில் விழுந்துள்ளன !

    ஹப்பிள் கண்டு பிடித்த அகில வெளி மெய்ப்பாடுகள்

    அமெரிக்க வானியல் நிபுணர், எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] 1929 ஆம் ஆண்டில் கண்டு பிடித்த விண்வெளி விந்தை பெரு வெடிப்பு நியதிக்கு ஆணித்தரமான சான்றாக ஆனது! வெகு தொலைவு காலக்ஸிகள் [Galaxies] விடும் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum], சக்தி வாய்ந்த பூதத் தொலை நோக்கி மூலம் ஆராய்ந்த போது, அது செந்நிற விளிம்பை நோக்கிப் பெயர்வதைக் [Redshift, செந்நிறப் பெயர்ச்சி] கண்டார்! ‘டாப்பிளர் விளைவு’ [Doppler Effect] கூற்றுப்படி செந்நிறப் பெயர்ச்சிக் காலக்ஸிகள் ஒன்றை விட்டு ஒன்று விலகி அப்பால் போகின்றன என்று தெளிவாக நிரூபிக்கிறது! மேலும் காலக்ஸிகளின் தூரம் அதிகமாக அதிகமாக, அவற்றின் வேகமும் மிகையாகிறது, என்றும் எட்வின் ஹப்பிள் கண்டுபிடித்தார்.

    1920 ஆண்டுகளின் துவக்கத்தில் ஹப்பிள் காலக்ஸிகள் யாவை என்று ஆய்வுகள் செய்தார். சில சுருள் நிபுளாக்கள் [Spiral Nepulae] தமக்குள்ளே தனித்தனி விண்மீன்களைக் கொண்டதாக எண்ணிய கருத்து, உறுதிப்படுத்தப் படாமலே இருந்தது! அவ்விண்மீன் கூட்டம் நமது காலக்ஸியைச் சேர்ந்ததா அல்லது தனிப் பட்ட ‘பிரபஞ்சத் தீவைச்’ [Island of Universe] சார்ந்ததா வென்று ஐயம் எழுந்தது!

    1924 இல் ஹப்பிள் 100 அங்குல தொலைநோக்கி மூலம் ‘ஆன்ரோமேடா நிபுளாவின் ‘ [Andromeda Nebula] தூரத்தை அளந்து, அது நமக்கு அருகில் உள்ள விண்மீன் கூட்டத்திற்கும் அப்பால் நூறாயிரம் மடங்கு தொலைவில் இருப்பதாகக் காட்டினார்! நமது பால்மய வீதிக்கு [Milky Way] ஒப்பான வடிவில், ஆனால் அப்பால் வெகு தூரத்தில் உள்ள ஓர் தனிக் காலக்ஸி [Separate Galaxy] என்றும் கூறினார்!

    ஹப்பிள் காலக்ஸிகளின் தூரத்தைக் மட்ட அச்சிலும் [X axis], அவற்றின் செந்நிறப் பெயர்ச்சிகளை நேர் அச்சிலும் [Y axis] குறித்து வரைந்த போது, எதிர்பாராத விதமாக ஒரு நேர் கோடு உருவாகியது! அதாவது காலக்ஸிகளின் தூரங்கள், அவை அப்பால் விலகிச் செல்லும் வேகங்களுக்கு நேர் விகிதத்தில் உள்ளன [Redshifts or speeds of the Galaxies are directly proportional to their distances] என்ற விந்தையான ஓர் உடன்பாட்டைக் கண்டு பிடித்தார்! காலக்ஸியின் தூரத்துக்கும், செல்லும் வேகத்துக்கும் உள்ள இந்த அரிய உடன்பாடே, ‘ஹப்பிளின் விதி’ [Hubble ‘s Law] என்று கூறப்படுகிறது. காலக்ஸிகளின் செந்நிறப் பெயர்ச்சியைக் [Red-Shift] கண்டால், அவை நம்மை விட்டு அப்பால் ஏகுகின்றன என்பது அர்த்தம்!

    (தொடரும்)

    *********************

    தகவல் :

    Picture Credit : 1. Astronomy (August 21, 2007) & (January 2010) 2.  Universe 6th Edition (2002)  3. National Geographic Encyclopedia of Space (2005) 5. 50 Years of Space (2004) & Hubble Site Nes Center

    1.  Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)

    2.  Universe By Roger Freedman & William Kaufmann III (2002)

    3.  National Geographic Encyclopedia of Space By Linda Glover.

    4.  The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)

    5.  Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)

    6.  BBC News – Hubble Obtains Deepest Space View By Dr. David Whitehouse, Science Editor (Jan 16, 2004)

    7.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301192&format=html(பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள்)
    8.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310231&format=html(ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நெபுளாக்கள்!
    9.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40211102&format=html(பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் [George Gamow (1904-1968)]
    10. Cosmic Collision Sheds Light on Mystery on Dark Matter [www.dailygalaxy.com/my_weblog/2007/05/dark_matter_hub.html  (May 16, 2007)
    11. “Beyond Einstein” Search for Dark Energy of the Universe
    [www.dailygalaxy.com/my_weblog/2007/07/beyond-einstein.html  (July 10, 2007)
    12.  Dark Matter & Dark Energy: Are they one & the Same ? Senior Science Writer [www.space.com/scienceastronomy/mystery_monday_040712.html  (April 12, 2007)
    13 Dark Energy By LSST Observatory – The New Sky (www.lsst.org/Science/darkenergy.shtml)
    14. Stephen Hawking’s Universe By John Boslough (1985)
    15. The Hyperspace By: Michio Kaku (1994)
    16. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40712131&format=html
    17. The New York Public Library S (cience Desk Reference (1995)
    18. Scientific American “The Cosmic Grip of Dark Energy” By Christopher Conselice (Feb 2007)
    19. Astronomy “The Secret Lives of Black Holes” (Nov 2007)
    20. The Handy Space Answer Book By Phillis Engelbert & Diane Dupuis (1998)
    21. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210223&format=html (பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீ·பென் ஹாக்கிங்)
    22. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301192&format=html [பிரபஞ்ச விரிவை நோக்கிய வானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] (1889-1953)]
    23 Globular Clusters Tell Tale of Star Formation in Nearby Galaxy Metropolis [August 5, 2008]
    24 Wikipedia – Galaxy Clusters (November 7, 2009)
    25 Astronomy Magazine -Galaxy Superclusters -What They Reveal about Cosmic Expansion By :Bruce Dorminey (January 2010)

    26.  http://regator.com/p/267420814/infant_galaxy_clusters_–may_reveal_role_of_dark/  [April 1, 2015]

    27.  http://www.scienceworldreport.com/articles/23998/20150402/astronomers-discover-baby-clusters-reveal-more-galaxy-evolution.htm [April 2, 2015]

    28.  http://www.demanjo.com/news/science/1062892/astronomers-discover-baby-clusters-that-reveal-more-about-galaxy-evolution.html  [April 2, 2015]

    29.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/04/infant-galaxy-clusters-may-reveal-role-of-dark-matter-in-shaping-the-universe.html  [April 1, 2015]

    30.  http://www.dailymail.co.uk/sciencetech/article-2622616/Virtual-world-tops-cosmic-charts-scale-rigor.html  [April 2, 2015]

    31.  http://en.wikipedia.org/wiki/Planck_(spacecraft)  [ESA Website]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@tnt21.com) April 4, 2015

    Attachments area
    Preview YouTube video NASA | Herschel Opens Up the Cool Universe

    NASA | Herschel Opens Up the Cool Universe
    Share
  • “மகிழ்ந்து திரிந்து வாழ்”

    மீ.விசுவநாதன்

    images (1)

    “உள்ளும் புறமும் உயர்ந்த ஒழுக்கத்தைக்
    கொள்ளும் மனிதன் குணவா னெனவே

    உலகம் அழைக்கும் ; உதடும் மனமும்
    கலக மிலாமலே காதலில் தோய்ந்து

    குருவியைப் போலக் குறுக்கும் நெடுக்கும்
    துறுதுறு வென்றே துணிந்து திரியணும் ;

    மானம், மரியாதை, வாக்கிலே இன்னமுதம் ,
    தானம், தவமென தர்மத்தின் பாதையிலே

    நாளும் நடந்திட ஞானம் வரவேண்டும் ;
    வாளைச் சுழற்றியே வாய்ச்சண்டை போட்டென்றும்

    ஊரும் உலகமும் ஒட்டாமல் போகின்ற
    பேரை எடுக்காத பிள்ளையாய் வாழணும் ;

    சாதி மதமென சத்தில்லா எண்ணத்தில்
    மோதி அழியாமல் மோனத்தின் உச்சத்தில்

    அன்பும் அறிவும் அழகாகக் கைகோர்த்து
    இன்பமாய் எந்நாளும் ஏற்றமுடன் நன்றாய்

    ஒளிரணும் ; கல்வியில் ஒங்கணும் ; நட்பு
    துளிரணும் ; மக்கள் தொகையினை பண்பு

    நெறியினால் ஆளனும் ; தீய கனவைக்
    குறியாய்ப் பொசுக்கணும் ; கொள்ளை அடிக்கிற

    கூட்டம் திருந்தணும் ; கோடி சனங்களும்
    நாட்டை மதிக்கணும் ; சாத்திரம் என்பதே

    சத்திய வாழ்வென சந்ததி கொள்ளணும் ;
    கத்தியும் ரத்தமும் காணாமற் போகணும் ;

    நாம்போன பின்னாலே நம்மை நினைக்கவே
    ஆம்புள பொம்புள அத்தனை பேருமே

    உத்தம சாதியாய் ஊரெல்லாம் ரொம்பணும்;
    புத்தியே நன்மை புரி. (05.04.2015)

    Share
  • சந்திர கிரகணம்….

    கிரேசி மோகன்
    ”சிவன்தலை சூடிய சந்திரனை பாம்பு
    கவர்ந்திடு மோவாயால் கவ்வி!, -சிவந்ததுமூன்(BLOOD MOON)
    போக்கில் தடம்மாற, பூமி புகுந்ததால்
    காக்காஊஷ் ஆச்சு கலை’’….

    (அல்லது)

    ‘சிவன்தலை சூடிய சந்திரனை பாம்பு
    கவர்ந்திடு மோவாயால் கவ்வி!,-உவந்திடும்,
    அஞ்ஞானக் கேள்விக்(கு) அட!பதில் என்னவோ!,
    விஞ்ஞானம் விட்ட வழி’’….
    ’’அகந்தை கிரகணம் ஆன்ம நிலவுள்
    புகுந்து பிடிக்கும் பளிச்சை, -உகந்துன்னுள்,
    நானார் விசாரிக்க நம்மைவிட்(டு) ஓடும்:
    சோணா சலரமணன் சொல்’’….கிரேசி மோகன்….

    Share
  • திருமயிலை திருக்கல்யாண அழைப்பிதழ்

     

    images

    “செல்வன் கபாலியை செல்வியுமை கற்பகம்
    கல்யாணம் செய்தவன் கைத்தலம்-செல்லும்
    தினம்நாளை சேர்வீர் திருமயிலாப் பூர்க்கு
    இனம்ஜாதி இல்லை இதற்கு”….

    “கைத்தலம் பற்றி கபாலியும் கற்பகமும்
    நெய்த்தலம் சுற்றி நடந்தனர் -மெய்த்தவ
    வேதியர் ,மாலயன் ,வானோர் குழுமிட
    ஆதியின் பாதி அளிப்பு”….

    “அன்னைக்கும் தந்தைக்கும் ,அர்த்தமதன் சொல்லுக்கும் images (1)
    புன்னைக்கும் பூங்கொடி பெண்ணுக்கும் -இன்னைக்கு
    கையோடு கைகோர்க்கும் கல்யாண உற்ச்சவம்
    மொய்யெழுதும் நேரமிது மெய்க்கு”….

    “குங்குமமும் வெண்ணீறும் கூடிக் கலந்தின்று
    சங்கமம் ஆகுது சன்னிதியில் -தங்களை
    வாயாரக் கேட்கிறேன் வந்திதைக் காணவினை
    நோயாறிப் போகும் நொடித்து”….

    “பங்குனி உத்திரத்தில் சங்க ரனுமையாள்
    பங்குநீ என்றுதன் பாகத்தை -மங்களமாய்
    தந்த மணநாளாம் இன்று மயிலையில்
    வந்து வடுக்களை வாழ்த்து”….

    பலன்….
    ————–
    “கைத்தலம் பற்றிய கற்பகத்தின் காதலால்
    மெய்தலப் பாதி மகிந்தளித்த -வைத்திய
    பாகனின் பாதம் பணிய சனிபகவான்
    நோகான்நம் பாகம் நளன்”….

    crazy110

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    ”மாடோடு ஆடி மகிழ்கின்ற கண்ணனின்,
    கோடோ வியம்கேசவ், காண்டீப, -னோடன்று
    சாமதான பேததண்டம், செய்தவன் சோர்வகற்றும்,
    காமதேனு கீதைப்பால் கிக்’’….கிரேசி மோகன்….

    Share
  • “ஸ்ரீ ஐயப்பன்”

     

    மீ.விசுவநாதன்
    sabarimalai

    உத்திரம் செய்ததோர் புண்யம் – ஐயன்10419378_396306307190612_4365051035092147120_n
    உதிக்கிற நாளினைக் கொண்டது !
    அத்தனை கோளுமே அன்று -எங்கள்
    ஐயனைப் போற்றிட வந்தது ! (1)

    பந்தள நாட்டிலே பசுக்கள் – தங்கள்
    பாலினைத் தந்திட வந்தது !
    சந்திர சூரிய சிசுக்கள் – அவன்
    சக்தியைப் போற்றிடச் சொன்னது ! (2)

    பம்பையைக் கொட்டிய பக்தர்கள் – நதி
    பம்பைநீ ராடியே வந்தனர் !
    தும்பையைப் போன்றதோர் நித்தர்கள் – உள்ளம்
    தோண்டியே துரியனைக் கண்டனர் ! (3)

    சபரியைத் தேடிய ராமனாய் – நாங்கள்
    தவசியைக் கூடிடச் சேர்கிறோம் !
    உபரியாய் அன்பினைக் கொட்டுவான் – அந்த
    ஒருவனை ஐயனே என்கிறோம் ! (4)

    (இன்று பங்குனி உத்திரம் – ஸ்ரீ ஐயப்பனின் பிறந்ததினம்)
    (03.04.2015)

     

     

    Share
  • அரபகத்தின் பாலையில் மணற்புயல்!!!!

     

    arab
    புழுதிக் காற்றே என்று
    புலம்பிடவில்லை நாங்கள்
    அழுதுச் சாற்றவுமில்லை
    அவனே அறிவான்

    ஆற்றல்மிக்க எங்களின்
    அயராத உழைப்புக்கு
    காற்றே நீ தானே
    தோற்றுப்போனாய்!

    கரைகாணா எங்களின்
    கடின உழைப்பைக் கண்டு
    அரைநாளுக் குள்ளாக
    அடங்கிப் போய் ஒளிந்துவிட்டாய்!

    நெருப்பின் ஆற்றலை
    நேசரின் நம்பிக்கை வென்றது
    விருப்பமுடன் குளிர்ந்தே
    வியப்பினைச் சொன்னது

    கத்திக்கு ஆற்றலில்லை
    கலீலுல்லாஹ்வின்
    பக்திக்கு முன்னால்
    பணிந்து விட்டது!

    கடலுக்கு ஆற்றலில்லை
    கலீமுல்லாஹ்வின் கைத்தடியால்
    திடலாக மாறியதும்
    திகைப்புக்கு ஆளானோர்

    அத்தனை ஆற்றலும்
    அல்லாஹ் ஒருவனுக்கே!
    இத்தரையில் நிகழும்
    இவைகளே சான்றுகள்

    இறைதூதர்களின் நம்பிக்கைக்கு
    இத்தனை ஆற்றலும்
    குறையேதும் செய்யாது போலவே
    கூவி வந்த புயற்காற்றே

    எதிர்நீச்சல் போட்டோம்
    எதிர்வந்த வேகத்தை
    எதிர்த்தே போராடினோம்
    என்னவாயிற்று உனக்கு?

    மண்ணுக்குள் சென்றதும்
    மண்ணே எங்களை உண்பாய்
    மண்ணையும் உண்டோமின்று
    மண்ணுக்குள் செல்லும் முன்பாய்!

    உன்னாற்றலுக்கு முன்னெங்கள்
    உழைப்பாற்றல் வென்றதை
    உன்னையும் எங்களையும்
    உருவாக்கியவனிடம் சொன்னாயோ?

    “கவியன்பன்” கலாம், அபுதபி

    Share