திருமயிலை திருக்கல்யாண அழைப்பிதழ்

0

 

images

“செல்வன் கபாலியை செல்வியுமை கற்பகம்
கல்யாணம் செய்தவன் கைத்தலம்-செல்லும்
தினம்நாளை சேர்வீர் திருமயிலாப் பூர்க்கு
இனம்ஜாதி இல்லை இதற்கு”….

“கைத்தலம் பற்றி கபாலியும் கற்பகமும்
நெய்த்தலம் சுற்றி நடந்தனர் -மெய்த்தவ
வேதியர் ,மாலயன் ,வானோர் குழுமிட
ஆதியின் பாதி அளிப்பு”….

“அன்னைக்கும் தந்தைக்கும் ,அர்த்தமதன் சொல்லுக்கும் images (1)
புன்னைக்கும் பூங்கொடி பெண்ணுக்கும் -இன்னைக்கு
கையோடு கைகோர்க்கும் கல்யாண உற்ச்சவம்
மொய்யெழுதும் நேரமிது மெய்க்கு”….

“குங்குமமும் வெண்ணீறும் கூடிக் கலந்தின்று
சங்கமம் ஆகுது சன்னிதியில் -தங்களை
வாயாரக் கேட்கிறேன் வந்திதைக் காணவினை
நோயாறிப் போகும் நொடித்து”….

“பங்குனி உத்திரத்தில் சங்க ரனுமையாள்
பங்குநீ என்றுதன் பாகத்தை -மங்களமாய்
தந்த மணநாளாம் இன்று மயிலையில்
வந்து வடுக்களை வாழ்த்து”….

பலன்….
————–
“கைத்தலம் பற்றிய கற்பகத்தின் காதலால்
மெய்தலப் பாதி மகிந்தளித்த -வைத்திய
பாகனின் பாதம் பணிய சனிபகவான்
நோகான்நம் பாகம் நளன்”….

crazy110

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.