மீ.விசுவநாதன்
sabarimalai

உத்திரம் செய்ததோர் புண்யம் – ஐயன்10419378_396306307190612_4365051035092147120_n
உதிக்கிற நாளினைக் கொண்டது !
அத்தனை கோளுமே அன்று -எங்கள்
ஐயனைப் போற்றிட வந்தது ! (1)

பந்தள நாட்டிலே பசுக்கள் – தங்கள்
பாலினைத் தந்திட வந்தது !
சந்திர சூரிய சிசுக்கள் – அவன்
சக்தியைப் போற்றிடச் சொன்னது ! (2)

பம்பையைக் கொட்டிய பக்தர்கள் – நதி
பம்பைநீ ராடியே வந்தனர் !
தும்பையைப் போன்றதோர் நித்தர்கள் – உள்ளம்
தோண்டியே துரியனைக் கண்டனர் ! (3)

சபரியைத் தேடிய ராமனாய் – நாங்கள்
தவசியைக் கூடிடச் சேர்கிறோம் !
உபரியாய் அன்பினைக் கொட்டுவான் – அந்த
ஒருவனை ஐயனே என்கிறோம் ! (4)

(இன்று பங்குனி உத்திரம் – ஸ்ரீ ஐயப்பனின் பிறந்ததினம்)
(03.04.2015)

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *