Blog

  • பொறி

    -கே.எஸ்.சுதாகர்

    என்னுடைய வீட்டிற்கு ஒவ்வொரு வருடமும் யூன் மாதமளவில் ஒரு எலி தவறாமல் வந்து போகும். யூன் மாதம் இங்கே குளிர் காலம்.

    எலியைப் பற்றி பல எழுத்தாளர்கள் கவிதை கதைகளைப் படைத்திருந்தாலும், சிறுவயதில் படித்த ‘The Pied Piper’ என்ற கதைதான் ஞாபகத்திற்கு வருகின்றது. சங்ககால இலக்கியங்களில் எலியைப்பற்றி யாரும் எழுதியிருக்கின்றார்களோ தெரியவில்லை.

    குட்டி எலி. அதன் உடம்பு நடுவிரல் நீளம் இருக்கும். அவருக்கு எங்கள் வீடு மிகவும் பிடித்திருக்கவேண்டும். நாங்கள் அமைதியாக இருக்கும் தருணங்களில் அவர் சுறுசுறுப்பாகிவிடுவார். வீடு முழுவதும் ஓடித் திரிந்து இம்சை செய்வதுடன் குறுணிக்குறுனிப் புளுக்கைகளை எங்குமே வீசிவிடுவார். அதன் தொல்லையோ தாங்க முடிவதில்லை.

    குளிர் காலம் அதன் இனப்பெருக்க காலம் என்றாலும்கூட – ’ஒரு’ எலி என்ற கணக்கு எனக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. கடந்த மூன்று வருடங்களாக வந்து போகும் எலி, போன வருஷத்துடன் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அதுதான் நடக்கவில்லை. இந்த வருடமும் வந்துவிட்டது.

    நேற்று நள்ளிரவு ஒரு சத்தம். மெதுவாக நித்திரையில் இருந்து எழுந்து பார்த்தபோது, ஹோலிற்குள் ஒரு ‘சிப்ஸ் பைக்கற்’ நகர்ந்து கொண்டிருந்தது. ஆளரவம் கேட்டு பாய்ந்து ஓடினார் எலிப்பிள்ளையார்.

    |உங்களுக்கு எப்படித் தெரியும் ஒரு எலிதான் வந்து போகின்றது?| என்று நீங்கள் கேட்கக்கூடும்.

    நான் ஒருபோதும் ஒன்றுக்கு மேற்பட்ட எலிகளை ஒன்றாகக் காணவில்லை என்பதைத் தவிர வேறெந்தச் சான்றுகளையும் என்னால் தரமுடியாது.

    எப்ப கலைத்தாலும் அங்கு இங்கு என்று எங்களைச் சூக்காட்டி கடைசியில் ஹோலிற்குள் இருக்கும் காஸ் ஹீற்றருக்குள் (Heater) போய் ஒளிந்து கொள்ளும். பின்பு அந்தப் பாதையினூடாகத் திரும்பி வருவதில்லை. ஹீற்றருக்குள்ளால் ஏதாவது கள்ளப்பாதை வைத்திருக்க வேண்டும்.

    போன வருடம் ஒருநாள் – தொல்லை தாளாமல் ’அது’ வருவதற்கு சற்று முன்னதாக ஹீற்றரைப் போட்டு நன்றாகச் சூடாக்கிவிட்டுக் காத்திருந்தேன். வெளியே வந்தது. சொல்லி வைத்தால் போல நாங்கள் எல்லாரும் சத்தமிட்டபடியே கதகளி குச்சுப்புடி ஆடினோம். அவர் எமது நிகழ்ச்சியைப் பார்த்து மிரண்டு போகாமல், தான் வகுத்த வழியே ஓடி ஹீற்றருக்குள் நுழைந்தார். பின்னர் தன்னுடைய பாஷையில் ‘ஐயோ’ எனக் கத்தியபடி அங்கேயே சங்கமமாகினார். ஹீற்றர் எலியைச் சரிவர உள்வாங்கியிருந்தால் இந்தமுறை அது வந்திருக்க முடியாது. ஆனால் கரட்டாக யூன் மாதம் வந்து காட்சி தந்தது எமக்கு ஆச்சரியமாக இருந்தது.

    இந்தத் தடவை எலி வந்தால் அயலவருடன் கதைப்பது என்று முடிவு செய்திருந்தேன். வெள்ளை இனத்தவரான டேவிட் வீடு சென்று எனது எலி பற்றிய சந்தேகத்தைக் கேட்டேன். அவர் நாடியில் கை வைத்து, எலி ஒன்று பதுங்கி நிற்பதுபோல நின்றார். தீவிர தேடுதலின் பின்னர், “யெஸ்… கரெக்ட்…. என்னுடைய வீட்டிற்கும் ஒவ்வொரு வருஷமும் எலி ஒன்று தவறாது வந்து போகின்றது” என்ற தனது கண்டுபிடிப்பையும் வெளியிட்டார்.

    அடுத்து வந்த சனி ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லா வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு இரண்டு விஷயங்கள் செய்யவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

    ஒன்று : ஒரு எலியைப் பிடிப்பதற்காக நிறைய எலிப்பொறிகள் வாங்கி வீடு முழுவதும் வைத்துவிட வேண்டும்.

    இரண்டு : செக்யூரிட்டிக் கமராவைப் பார்ப்பது.

    எலிப்பொறி வாங்க பணிங்ஸ் (Bunnings) என்ற கடைக்குச் சென்றேன். குட்டிக் குட்டி எலிப்பொறிகளாக பத்துப்பொறிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது என் கைகளிற்கு மேலால் எலி ஒன்று பறந்தோடியது.

    வீட்டிற்கு வந்து பொறிகளில் சீஸ் வைத்து வரிசையாக அடுக்கி வைத்தேன். செக்யூரிட்டிக் கமராவை ஒருவாரம் பின்னோக்கி நகர்த்திவிட்டு ஒவ்வொரு நிமிடமாகப் பார்க்கத் தொடங்கினேன். வெள்ளிக்கிழமை இரவு மூன்று மணி இருக்கும். ஒரு மனிதர் கையில் ஒரு தூக்குப்பெட்டியுடன் வருகின்றார். வீட்டிற்கு முன்னால் நின்று பெட்டியைத் திறப்பதும் மூடுவதுமாக இருக்கின்றார். அப்படியே ஒவ்வொரு வீடாகச் சென்று எலி விநியோகம் செய்கின்றார். எனது கமராவில் மூன்று வீடுகள் பதிவாகி இருந்தன.

    அப்போது ஏதோவொன்று என் மூளைக்குள் மின்னலென அடித்தது. கடந்த வாரம் என் தபால்பெட்டிக்கு வந்த துண்டுப்பிரசுரங்களை எடுத்து அலசி ஆராய்ந்தேன். ஒரு கவர்ச்சிகரமான விளம்பரம் என் கண்ணில் பட்டது.

    || Be “SPIDER FREE” this winter, 23 areas of your property treated, be 100% delighted or the job is FREE.

         As s “SPECIAL BONUS” we will treat a second pest at a heavily reduced price and a third pest (Mice &

           Rodents) for “FREE”

       Call now Mark (Your Local Pest Control Experts ||

    விளம்பரம் சொன்னது இதுதான். மேலும் விளம்பரதாரரின் ரெலிபோன், முகவரியும் அதில் அடங்கியிருந்தது. அவர்களின் முகவரி எமது வீட்டிற்கு அடுத்த தெருவில் இருந்தது.

    எலி இலவசமா? அதற்கான மருந்து இலவசமா?

    விளம்பரத்தை எடுத்துக் கொண்டு டேவிட் வீடு சென்றேன். வீட்டை விட்டுப் புறம்படும்போதுதான் ஒன்றைக் கவனித்தேன். அடுக்கி வைத்த பத்துப் பொறிகளில் ஒன்றினைக் காணவில்லை. இருவரும் அந்த முகவரி தேடிப் போனோம். அவரின் வீடு பொலிசாரினால் ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தது.

    வீட்டின் முன்னால் ‘Mark – Pest Control Expert’ என்று ஒரு பலகையில் எழுதி இருந்தது. அதற்குக் கீழே ‘யாரும் உள்ளே போக வேண்டாம்’ என்று ஒரு பேப்பரில் எழுதி ஒட்டி இருந்தது. நாங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு மனிதர் எங்களை நோக்கி வந்தார்.

    Iஇந்த வீட்டு மனிதர் சில பிராணிகளை தந்திரமாக றெயினிங் எல்லாம் குடுத்து வளர்த்து வருகின்றார். இரவில் அவற்றைக் கொண்டு போய் வீடுகளில் விட்டு விடுகின்றார். பகலில் அவற்றிற்கான மருந்துகளை விற்கின்றார். இப்ப சரியான றிச்சன் பீரியட் (Recession period) எண்டதாலை இந்த வேலைகளைச் செய்கின்றார்| என்றார் அந்த மனிதர்.

    Share
  • காதல் நாற்பது (23)

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    Elizabeth Browing

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    சொர்க்கத்தைப் புறக்கணிப்பேன் !

    அப்படி ஆகி விடுமா அது ?
    நானிங்கு செத்துக் கிடந்தால்,
    உயிர் இழப்பாகுமா உனக்கு
    என்னுயிர் போய் விடுவதில் ?
    புதைக் குழியின் ஈரம் என்னுடைய
    சிரத்தைச் சுற்றி இறங்குவதால்,
    பரிதி வெளிச்சமும்
    குளிர்ச்சியாய்ப் போகுமா உனக்கு ?

    என்னினிய நேசனே! நான்
    உன்னத மடைந்தேன் உன்மடல் படித்து,
    உனக்குரியவள் நான்,
    உனக்கு அப்படியோர் பெருமையே !

    உன் ஒயினை ஊற்றி
    உனக்கே நான் கொடுக்கவா
    என் நடுங்கும் கரங்களில் ?

    மரணக் கனவுகளுக்குப் பதிலாய்
    மறுபடி என் ஆத்மா
    வாழ்வின் கீழ்ப்படிகளில் ஏறும் !
    நோக்கிடு என்னை, மூச்செடு என் மேல்,
    நேசிப்பாய் என்னை, அன்பனே !
    அறிவுச்சுடர் மாதர்
    அவற்றை
    விந்தையாய்க் கருத மாட்டார்,
    காதலுக் கிழப்பேன் எனது
    நில புலங்களை !
    பட்டப் படிப்பை !
    உனக்காக நான் விட்டு விடுவேன்
    எனது மரண எதிர்பார்ப்பை !
    மாற்றிக் கொள்வேன்
    சுவையான
    சொர்க்கபுரிக் காட்சிக்குப் பதிலாய்
    உன்னோடு வாழும்
    மண்ணுலகுக்கு !

    ********************

    Poem -23

    Sonnets from the Portuguese
    By: Elizabeth Browning

    Is it indeed so? If I lay here dead,
    Wouldst thou miss any life in losing mine?
    And would the sun for thee more coldly shine
    Because of grave-damps falling round my head?
    I marvelled, my Beloved, when I read
    Thy thought so in the letter. I am thine–
    But . . . so much to thee? Can I pour thy wine
    While my hands tremble? Then my soul, instead
    Of dreams of death, resumes life’s lower range.
    Then, love me, Love! Look on me–breathe on me!
    As brighter ladies do not count it strange,
    For love, to give up acres and degree,
    I yield the grave for thy sake, and exchange
    My near sweet view of Heaven, for earth with thee!

    **********

    Share
  • அதிர்ச்சியூட்டும் தீர்ப்பும் திடுக்கிட வைக்கும் கருத்துக்களும்

    எஸ் வி வேணுகோபாலன்

    ஒரே மாதத்தில் இரண்டு வழக்குகளில் எதிரெதிர் தீர்ப்புகளை வழங்கியுள்ளது தில்லி உயர்நீதி மன்றம். இரண்டுமே மேல் முறையீட்டு வழக்குகள். இரண்டுமே பாலியல் வன்முறை தொடர்பானவை. ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண், மூன்று வயது சிறுமி. மற்றொன்றில், 65 வயது பெண்மணி. இரண்டிலுமே விசாரணை நீதிமன்றத் தீர்ப்புகளை நிராகரித்து அதற்கு நேர்மாறாக வழங்கப்பட்ட தீர்ப்புகள் இவை. ஒன்றில் குற்றவாளியை விடுவித்திருந்தது விசாரணை நீதிமன்றம். அவனைத் தண்டித்திருக்கிறது உயர் நீதி மன்றம். மற்றதில் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளியை இப்போது குற்றச் சாட்டுக்களில் இருந்து முழுமையாக விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டு விட்டது உயர்நீதி மன்றம்.

    மூன்று வயது குழந்தை விஷயத்தில் விசாரணை நீதிமன்றம் அந்தச் சிறுமியை குறுக்கு விசாரணை செய்வதில் கேட்கப்பட்ட கேள்விகளையும், அவளால் கோவையாக பதில் சொல்ல முடியவில்லை என்பதை வைத்துத் தீர்மானித்த விதத்தையும் உயர்நீதி மன்றம் கடுமையாகச் சாடி இருக்கிறது. தற்போது 5 வயதாகி, இன்னமும் தனக்கு நேர்ந்த குரூர பாலியல் தாக்குதலுக்குப் பின்னான அறுவை சிகிச்சைகள் மேலும் தொடர வேண்டிய நிலையில் இருக்கும் அந்தக் குழந்தையை உயர்நீதி மன்றம் நேரில் வரக் கூட தேவையில்லை என்று நியாயமாகச் சொல்லியிருக்கிறது. கணவனால் புறக்கணிக்கப் பட்ட 25 வயது பெண்ணின் மகளுக்குத் தான் இந்த பாலியல் கொடுமை நேர்ந்திருக்கிறது. அன்றாடம் ரூ 200 ஈட்டி எப்படியாவது குழந்தையை வளர்த்தெடுக்கக் கடுமையாக உழைக்கும் அந்த இளம் தாய்க்கு இப்போது கிடைத்திருக்கும் நீதி ஆறுதல் வழங்கி இருக்கிறது.

    தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கயவனை இந்தக் குழந்தை அடையாளம் காட்டியது, காட்டுப் புதரிலிருந்து அவன் துணிமணிகளை அடையாள படுத்தியது எல்லாம் நடந்தும், விசாரணை நீதிமன்றம், “நீ பொய்தானே சொல்கிறாய்?” என்ற குறுக்கு விசாரணை கேள்வியை அனுமதித்திருக்கிறது. அப்போது தாய், சான்றாதாரங்களைப் பாருங்களேன் என்று சொன்னபோது, நீ குறுக்கே பேசாதே என்று அவரை எச்சரித்திருக்கிறது. இதை மேல்முறையீட்டுக்கு எடுத்துக் கொண்ட தில்லி உயர்நீதி மன்றம் குற்றவாளியை இப்போது தண்டித்திருக்கிறது. விசாரணை நீதிமன்றத்தின் தலையில் குட்டியிருக்கிறது.

    ஆனால், இதே உயர்நீதி மன்றத்தில் அக்டோபர் 31ம் தேதி வழங்கப் பட்டிருக்கும் தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

    65 வயது பெண்மணிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் அவரைக் கொலை செய்ததான வழக்கில், குற்றவாளி அச்சே லால் என்பவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதித்து விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உயர்நீதி மன்றம் புரட்டிப் போட்டு விட்டது.

    2010ம் ஆண்டு தனது இல்லத்தில் இறந்து கிடந்த இந்தப் பெண்மணியை நேரடியாகப் பார்த்த ஒரு சாட்சி காவல்துறைக்கு தகவல் கொடுத்தபோது வீட்டினுள் இருந்த குற்றவாளி அச்சே லால் பிடிபட்டான். பிரேத பரிசோதனையில் அந்தப் பெண்மணி பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப் பட்டிருந்தது தெரியவந்தது. இந்த அடிப்படையில் இரண்டு குற்றங்களுக்குமான தண்டனையை விசாரணை நீதிமன்றம் வழங்கி இருந்தது.

    அச்சே லால் தரப்பில் மேல்முறையீடு செய்து வாதாடியவர்கள் முன்வைத்த வாதங்கள் மிகவும் வீச்சாக இருந்ததாகச் சொன்ன உயர்நீதி மன்ற நீதிபதிகள் பிரதீப் நந்திரஜோக் மற்றும் முக்தா குப்தா இருவரும் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பவை மிகவும் அதிர்ச்சி தரத் தக்கவை.

    ‘இறந்த பெண்மணியின் பிறப்புறுப்பில் ஏற்பட்டிருக்கும் காயங்கள், மூர்க்கமான முறையில் பாலுறவு நடந்ததை உறுதி செய்தாலும், அந்தப் பெண் அதை எதிர்த்துப் போராடியதற்கான சான்றாக வேறு எந்தக் காயங்களும் அவர் உடலில் காணப்படவில்லை. மறைந்த பெண்மணி, மாதவிடாய் சுழற்சி முற்றுப் பெற்றுவிட்ட வயதைக் கடந்துவிட்டவர். எனவே, அவர் இந்தச் செய்கையை எதிர்த்ததாகச் சொன்னாலும் அதைப் பாலியல் வல்லுறவு (‘ரேப்’) என்று கருத முடியாது. அதனால் அச்சே லால் பாலியல் பலாத்காரம் செய்ததான குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரிக்கிறது.

    பாலுறவு நிகழ்கையில் அச்சே லால் மட்டுமின்றி, அந்தப் பெண்மணியும் மது அருந்தி இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.

    மேலும் மூர்க்கமான பாலுறவில் அச்சே லால் ஈடுபட்டதன் காரணமாக, அந்தப் பெண்மணி உட்கொண்டிருந்த உணவு (புரைக்கேறி) மூச்சுக் குழலில் அடைப்பு ஏற்படுத்தியதன் காரணமாக அவர் மரணமடைந்திருக்கலாம் என்று மருத்துவ பரிசோதனை அறிக்கை சொல்கிறது. என்றாலும், தனது பாலியல் செய்கையால் மரணம் நேரக்கூடும் என்ற உடலியல் அறிவு அச்சே லாலுக்கு இருந்திருக்கவில்லை. கொலை செய்வது அவரது நோக்கமும் இல்லை. எனவே கொலைக் குற்றச் சாட்டையும் நீதிமன்றம் நிராகரிக்கிறது.’

    உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் ஏற்கெனவே விசாரணை நீதிமன்றம் வழங்கி இருந்த நியாயமான தீர்ப்பை இப்படி மாற்றி இருப்பது மிகப் பெரிய நெருடுதலை ஏற்படுத்துகிறது.

    மறைந்த பெண்மணி, அண்டை அயலில் வீட்டு வேலை செய்து வாழ்ந்து வந்தவர். கீழ்த்தட்டு மக்களது வாழ்க்கை முறை, நடத்தை குறித்து மேல்தட்டு சிந்தனைகள் எப்போதும் எதிர்மறையாகவே சிந்திக்கும். பெரிய அநியாயம் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை, அவள் முடிவை அவளே தேடிக் கொண்டாள் என்பது மாதிரியான சிந்தனையைத் தான் இந்தத் தீர்ப்பின் வாசகங்கள் பிரதிபலிக்கிறதோ என்று அச்சம் ஏற்படுகிறது.

    பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் இருக்கிறதா இல்லையா என்பதை வைத்து பாலியல் பலாத்காரத்தை முடிவு செய்யக் கூடாது என்பது ஏற்கெனவே திருத்தம் செய்யப்பட விஷயம். மீண்டும் அதன்மீது சார்ந்து பார்க்கப்படுவது துரதிருஷ்டமானது. மாதவிடாய் சுழற்சி முற்றுப் பெற்றது (மெனோபாஸ்) என்கிற அம்சம் எதற்காக பேசப்படுகிறது என்பது கேள்வியை எழுப்புகிறது. அப்படியானால், பூப்பெய்தாத பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் செய்தவர்கள் தாங்களும் குற்றவாளிகள் அல்ல என்று வாதாட இடம் கொடுப்பதாகாதா அந்த விவாதம்?

    தனது தரப்பில் நடந்து என்ன என்று பேச முடியாமல் மரித்துப் போய்விட்ட அந்தப் பெண்மணிக்கு இறப்பின் பிறகும் நிகழும் அவமதிப்பு ஆகிவிடாதா இந்தக் கண்ணோட்டம்?

    குற்றமற்றவர் எவரையும் விடுவிப்பதை யாரும் குறை சொல்ல முடியாது. ஆனால் குற்றம் செய்தவர் அந்த இடத்திலேயே பிடிபட்டபின்னும், அவர் இழைத்த கொடுமைகள் உறுதி செய்யப்பட பின்னும், அவர் செய்தவை குற்றங்களாகாது என்று சொல்லப்பட்டிருக்கும் தீர்ப்பு ஏராளமான கேள்விகளையும், கவலையையும் எழுப்புகிறது.

    பெண் குழந்தைகளது பாதுகாப்பு சம காலத்தில் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்து நிற்கும் நிலையில், இந்த வழக்கைத் தனிப்பட்ட ஒன்றாகப் பார்க்க முடியாது. இதன் முடிவிலிருந்து சமூகத்திற்கு என்ன செய்தி சென்று சேர்க்கிறது என்பது மிகவும் முக்கியமானது. பள்ளிகளில், பொதுவிடத்தில் பெண் குழந்தைகள் குறித்த பதட்டம் கூடியுள்ள காலம் இது. வீடுகளில் வயதான பெண்மணிகள் தனியே காலம் கழிக்க நேரும் காலமும் இது. குற்றங்களைக் குறைக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் எத்தனை முக்கியமோ, அதே அளவு முக்கியம், குற்றம் இழைத்தவருக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்வது.

    அந்த நோக்கில் சிந்திக்கையில், இந்தத் தீர்ப்பு மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. பெண்ணுடல் குறித்த பார்வை சமூகத்தில் என்னவாயிருக்கிறது என்பதை வலிக்க வலிக்க மீண்டும் அறியவைக்கிறது.

    ****************
    நன்றி: தீக்கதிர்: 07 11 2014

    Share
  • காதலின் தினம்

    நாகினி

     

    இல்லத்தின் மணமகளாய்
    வர தட்சணை வேண்டாம் என
    ஓசை படாமல் ஓங்கி குரல் கொடுத்து
    மனைவி எனும் புனிதம் தந்தாய்!

    நீரலை கடல் ஆழமென
    நீங்காத அன்பு தந்து
    நித்திரையில் இருந்த என் அறிவை
    நித்தமும் ஒளிரச் செய்தாய் செய்தி
    நிறை கணினி இயக்கும் மேதையாய்!

    பக்குவமாய் சமைத்தேனோ என்னவோ
    பண்புடன் விரும்பி உண்டு
    பாங்குடன் நிறை குறை சொல்லி
    பாசமுடன் உருவாக்கினாய் உலகின்
    புது மழலை மெச்சும் சமையல் கலைஞியாய்!

    அறிவு தெளிவாகி நான் எனும்
    ஆணவம் அடங்கி நாம் என
    ஆதரவுடன் திகழ்ந்து அன்பாய்
    அளவுடன் மழலைச் செல்வம் பெற்று
    ஆண்டாண்டு தோறும் ஊர் உலகம் சுற்றி
    ஆயிரம் அலுவல் துயரில் வீட்டின் கடமையையும்
    அக்கறையாய் அரவணைக்கும் தலைவனே!

    நாம் இருவரும் இணைந்தே பக்குவமாய்
    உண்மை ஒளியாய் உலகிற்குச் சொல்வோம்….
    தினம் தினம் சண்டையிட்டாலும்
    விலகா மனம் கொண்ட
    இருமன இணைவு எனும் இல்லறமே
    நாள்தோறும் காணும் உண்மைக்
    காதலின் தினம் என்று!!!

    — நாகினி

    Share
  • கமல்ஜி 60 – வாழ்த்துகள்!

    உலக நாயகர், பிரபல நடிகர், எழுத்தாளர், இயக்குநர், கவிஞர் என பன் முகங்கள் கொண்ட திரு.கமலஹாசன் அவர்களின் 60ம் அகவை விழாவிற்காகப் படைத்த வெண்பா. 

    கிரேசி மோகன்

    kamal

    பத்தாறு ஆனாலும் , பார்க்கப் பதினாறே,
    பித்தேற வைக்கும் பவுருஷமே, -சொத்தாய்,
    சினிமாக்கள் சேர்த்துவைத்த சாகா வரமே,
    இனிமேலும் நூற்றாண்(டு) இரும் ….

    உத்தம வில்லா !, உலகளந்த நாயகா!,
    சித்தமொரு மித்தாய் சினிமாவில், -இத்தரையில்,
    வண்ணமுற வாழ்வும் வளமுமுற வாழ்த்துகிறோம்
    இன்னுமொரு நூற்றாண்(டு) இரும் ….கிரேசி கிரியேஷன்ஸ் சார்பாக கிரேசி மோகன்….

     

    crazy

    திரு.கமலஹாசன் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். 

    அன்புடன்

    ஆசிரியர்

     

    Share
  • அணுமின்சக்தி நிலைய இயக்க ஏற்பாடுகளின் அனுதினக் கண்காணிப்பும் பாதுகாப்பும்

    சி. ஜெயபாரதன்

     

     

     

     

     

    40709131b

     

     

    அணுமின்சக்தி நிலைய இயக்க ஏற்பாடுகளின் 
    அனுதினக் கண்காணிப்பும் பாதுகாப்பும்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    பரிதியின் ஒளிக்கதிர் மின்சக்தி
    பயன்படும் பகலில்
    பல்லாண்டுகள் !
    ஓயாத கடல் அலைகளின்
    அசுர அடிப்பில்
    அளவற்ற மின்சக்தி !
    காற்றுள்ள போது விசிறிகள் சுழன்று
    மேட்டில் கிடைக்கும் மின்சக்தி !
    மாட்டுச் சாணி வாயு
    வீட்டு மின்சக்தி ஆக்கும் !
    நிலக்கரி மூலம்
    நிரம்ப மின்சக்தி பெறலாம்,
    கரியமில வாயு வோடு !
    அந்த முறைகள் அனைத்தும் ஓர்
    அளவுக் குட்பட்டவை !
    சிக்கன மானவை சில !
    செலவு மிக்கவை சில !
    சிறியவை சில !
    பேரளவு மின்சக்தி பரிமாற
    நுணுக்கமான
    அணுப்பிளவுச் சக்தி தேவை.
    கதிரியக்கம் இல்லா
    அணுப்பிணைவுச் சக்தி தேவை.
    அவற்றுக்கு
    எல்லை இல்லை !
    வரையறை ஏதுவு மில்லை !
    மின்சக்தி
    பற்றாக் குறையைத்
    தீர்க்க
    அனைத்து ஆற்றலும் தேவை
    அகில உலகுக்கு !

    ++++++++++++++

    “அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் மட்ட அலைகளின் ஏற்ற இறக்கத்தில் உண்டாக்கும் சக்தியைக் கையாண்டு, பரிதிக் கதிரொளி வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி ஆக்குவோம்.”

    ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிஸன் (ஆகஸ்டு 22, 1921)

    “மின்சக்தி உற்பத்தி இல்லாமை போன்று செலவு மிக்க மின்சக்தி எதுவுமில்லை.”  [No Power is so costly as no Power]

    டாக்டர் ஹோமி பாபா (1955 ஐக்கிய நாடுகளின் ஆக்கப்பயன்களின் அணுசக்திப் பேரவை ஜெனிவா)

    “அடுத்து வரும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியா வைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும்.  இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

    முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம். (2003)

    முன்னுரை:    இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழ்மக்கள் உள்பட உலக மாந்தர் அனைவருக்கும் நாகரீகமாக அனுதினமும் உயிர்வாழக் குடிநீரும், மின்சக்தியும் மிக மிகத் தேவை.  1950 ஆம் ஆண்டு முதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள், ஜப்பானில் புகுஷிமா அணுமின் நிலையங்கள் ஆகிய மூன்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன.  அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன.  ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன. இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 2.6%  இயங்கி வருபவை 20 அணு மின்சக்தி நிலையங்கள்.  2012 இல்  இயங்கத் தயாராக இருக்கும் 1000 மெகா வாட் கூடங்குள இரட்டை அணுமின் நிலையம் சீக்கிரம் மின்சாரம் அனுப்பும்.   தற்போது இந்தியாவிடம் 5 அணு ஆய்வு உலைகளும்  அணுசக்தியில் ஓடும் கடலடிக் கப்பல்  (Nuclear Submarine) ஒன்றும் உள்ளன.   இந்தியாவில் அனைத்து அணுசக்தி உலை நிலையங் களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.

    இந்திய அணுசக்தி நிலையங்களின் மின்சார உற்பத்தித் திறனையும், இயக்க விபரங்களையும், புதிய நிலையங்களின் கட்டுமான வேலைகளையும், இந்திய அணுசக்திக் கார்ப்பொரேஷன் வலைத் தளத்தில் << www.npcil.nic.in >> விளக்கமாகக் காணலாம். 1957 ஆம் ஆண்டு முதல் கடந்த 50 வருடங்களாக ஆண்டுக்கு 250 விஞ்ஞானப் பொறியியற் துறைப் பட்டதாரிகள் வீதம் சுமார் 12,000 பேருக்கு மிகையாகப் பயிற்சிக் காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக் கிறார்கள்.  தற்போது அணுசக்தி நிலையங்களை டிசைன் செய்யவும், கட்டி முடிக்கவும், இயக்கி வரவும், அவற்றில் ஆராய்ச்சி செய்யவும் பட்டதாரிகள் பலர் இருக்கிறார்கள்,  இந்தியாவிலே விஞ்ஞானப் பொறியியற் பட்டதாரிகள் ஆயிரக் கணக்கில் பணிசெய்யும் ஓர் உயர்ந்த தொழில் நுட்பத் துறையாக அணுசக்தி நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  பாரத நாட்டுப் பாதுகாப்புக்காக அணு ஆயுத உற்பத்தி, அணு ஆயுதச் சோதனை, அணு ஆயுத எரி உலோகச் சேமிப்பு [Nuclear Weapon Grade Materials] ஆகியவற்றை ரகசியமாக இந்திய அரசாங்கம் தன் நேரடிப் பார்வையில் கையாண்டு வருகிறது.  ஆனால் மின்சாரம் பரிமாறி இயங்கி வரும் 20 அணுமின்சக்தி நிலையங்களின் அமைப்பிலோ, நிர்வாகத்திலோ இயக்கத்திலோ, மின்சாரப் பரிமாற்றத்திலோ எதிலும் அரசாங்க அதிகாரிகளின் குறுக்கீடு கிடையாது.

    இந்தக் கட்டுரையில் அணுமின்சக்தி நிலைய இயக்குநர்கள் எப்படி அனுதினமும் அணுமின் உலைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு, கண்காணிப்பு முறைகளைப் பின்பற்றி வருகிறார் என்பது விளக்கப் படுகிறது.

    அணு மின்சக்தி உலை இயக்கத்துக்குத் தேவையான ஏற்பாடுகள்

    அணுமின்சக்தி நிலையத்தில் எத்தனை இயக்க ஏற்பாடுகள் உள்ளன ? 500 மெகா வாட் ஆற்றல் உற்பத்தி செய்வதற்கு நிலையத்தில் குறைந்தது 50 முதல் 80 வரையான அமைப்புகள் கொண்டதாக இருக்கும்.  அவற்றின் விபரங்களைக் காண்போம்:  கீழ்க்காணும் ஏற்பாடுகள் யாவும் 500 மெகா வாட் அழுத்த நீர் அணுமின் நிலையம் [Pressurized Water Reactor (PWR)] ஒன்றின் உதாரண அமைப்புகள் ஆகும்.

    1.  அணு உலை, அழுத்த அணு உலைக் கலம் (Atomic Reactor & Reactor Pressure Vessel)

    அணு உலைக் கலன் நேராகவோ அல்லது மட்டத்திலோ (Vertical or Horizontal Vessel) அமைக்கப் படலாம்.  நம் விளக்கத்துக்கு செங்குத்து உலைக்கலனை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அணு உலையில் உள்ள 300 மேற்பட்ட துளைகளில் யுரேனியம் டையாக்ஸைடு வில்லைகள் அடங்கிய எரிக்கோல்கள் [Fuel Rods with Uranium Dioxide Pellets] புகுத்தப் பட்டுள்ளன.  உலைக்கலனில் எப்போதும் மிதவாக்கி நீர் மட்டம் (Moderator Water Level) எரிக்கோல்களை மூழ்க்கியிருக்கும்.  யுரேனியத்தில் (U-235) நேரும் சுயப்பிளவுகளால் எழும் நியூட்ரான்கள், மேலும், மேலும் யுரேனியம் அணுக்கருவைப் பிளந்து, பிளவு ஒன்றுக்கு 200 மில்லியன் எலெக்டிரான்-வோல்ட் வெப்பசக்தி நீரில் தொடர்ந்து எழுகிறது.  [200 Mev Energy per Fission].  அணு உலை இயங்கினாலும், இயங்கா விட்டாலும் எப்போதும் பிளவுத் துணுக்குகள் தேய்வதாலும் [Fission Product Decay Heat], சுயப்பிளவுக் கனலாலும் தொடர்ந்து வெப்பம் உண்டாகிய வண்ணமிருக்கும்.  உலைக்கலனில் அந்த வெப்பம் தணிக்கப்பட்டு நீரின் உஷ்ணம் ஒரே அளவில் சுயமாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

    1. “நிறுத்த அணு உலை வெப்பத்தணிப்பு ஏற்பாடு” [Shutdown Cooling Water System] : அணு உலை நிறுத்த மான தருணத்தில் எழும் நீரின் வெப்பத்தை நீக்கிச் சீரான கனப்பில் வைத்திருக்கும் ஏற்பாடு இது,  இந்த நீரோட்டச் சுற்றில் பம்புகளும், வெப்பக் கடத்தியும் [Pumps & Heat Exchangers] முக்கியமாக உள்ளன. இந்தச் சுற்றில் நீரோட்டத்தின் வேகமும், அழுத்தமும் மிதமானவை. [Low Flow & Low Pressure System].  இது தானாக இயங்குவது.  இந்தச் சுற்று நீரோட்டத்தை முற்றிலும் இயக்குநர் நிறுத்த முடியாது.

    2..  அணு உலைக்குள்ளே உலைக்கலன் வெல்டிங் இணைப்புகளை உளவு செய்யும் போது “பராமரிப்பு தணிப்பு நீரோட்டச் சுற்று” [Maintenance Cooling Water System] இயக்கத்தில் கொண்டு வரப்படும்.  இந்த நீரோட்டம் நிறுத்தமான அணு உலை பலநாட்கள் குளிர்ந்த பின்பு இயக்கப்படும்.  பராமரிப்பு வேலைகள் முடிந்த பிறகு, இந்த நீரோட்டம் நிறுத்தப்பட்டு மேலே கூறப்பட்டுள்ள முதல் தணிப்பு நீரோட்டம் இயங்கி விளையும் வெப்பத்தைச் சீராக வைக்கும்.

    3.  அணு உலைப் பணிகள் யாவும் முடிந்து மின்சக்தி உற்பத்திக்குத் தயாராக உள்ள போது “பிரதம வெப்பத் தணிப்பு நீரோட்டம்” [Main or Primary Coolant System] அழுத்தமாக்கப் பட்டு மிக்க வேகமாக நீரை எரிக்கோல்கள் ஊடே செலுத்தும்.  அணு உலையில் கீழே இறக்கப்பட்டுள்ள நியூட்ரான் விழுங்கி களை மெதுவாக மேலே தூக்கும் போது மிதவேக நியூட்ரான்களின் எண்ணிக்கை பில்லியன் கணக்கில் பெருகி வெப்பசக்தி பன்மடங்கு ஏறுகிறது.  பிரதம நீரோட்டத்தில் நான்கு அல்லது எட்டு பிரதம வெப்பக் கடத்திகளும் [Primary Heat Exchangers], நான்கு அல்லது எட்டு பூதப் பம்புகளும் [Primary Heat Transport Pumps], நீராவி உண்டாக்க இரண்டு கொதிகலன்களும் [Steam Boilers] இணைக்கப் பட்டுள்ளன.

    கூடங்குளம் ரஷ்ய அணுமின் நிலையம்

    4.  நிலையம் முழு ஆற்றலில் இயங்கி வரும் சமயத்தில் திடீரென அணு உலைச் சாதனங்களுக்கும், வெப்பத் தணிப்புப் பம்புகளுக்கும் மின்சாரப் பரிமாற்றம் நின்று போனால் நிலைய ஏற்பாடுகளில் கொந்தளிப்பு ஏற்பட்டு, ஆட்சி அரங்கில் [Control Room] சிவப்பு விளக்குகள் பல மின்னி எச்சரிக்கை மணிகள் அடிக்கும்.  அவ்விதம் ஏற்பாடுகள் தடுமாறும் போது, முதலில் மேலே காத்திருக்கும் நியூட்ரான் விழுங்கிகள் தானாக் கீழே இறங்கி அணு உலைச் சுயமாக நிறுத்தம் அடையும்.  பிரதம வெப்பத் தணிப்பு நீரோட்டத்தின் அழுத்தம் குறைந்து வேகமும் விரைவாகக் குன்றுகிறது.  அப்போது அணுப்பிளவுகள் ஏற்பட்டு சூடான அணுப்பிளவுத் துணுக்குகளின் வெப்பம் தணிக்கப் படாவிட்டால் யுரேனியக் கோல்கள் கனல் எழுச்சியால் உருகிவிடும் !  இதுவே “நீரிழப்பு விபத்து” [Loss of Coolant Accident (LOCA)] என்று அஞ்சப்படுவது.  1979 இல் அமெரிக்காவின் திரிமைல் அணுமின் நிலையத்தில் அந்த “நீரிழப்பு விபத்து” நேர்ந்துதான் அணு உலையில் எரிக்கோல்கள் பெரும்பான்மையாக உருகி [Fuel Core Melting], மாபெரும் சுத்தீகரிப்பு, மீட்சி வேலைகள் மேற்கொள்ளப் பட்டன !

    அவ்வித “நீரிழப்பு விபத்தைத்” தவிர்க்க, நிறுத்தமடையும் அணு உலை எரிகோல்களின் வெப்பத்தைத் தணிக்க, “அபாய தணிப்பு நீர் பாய்ச்சல் ஏற்பாடு” [Emergency Coolant Injection System] அமைக்கப் பட்டிருக்கிறது.

    5.  அணு உலையில் நியூட்ரான் பெருக்கம் விழுங்கிகளால் தடைபெற்று மீறும் தொடரியம் நிகழாதவாறு பாதுகாப்பு உண்டாக “அபாய நஞ்சுப் பாய்ச்சல் ஏற்பாடு” [Emergency Poison Injection System] இணைக்கப்படுகிறது.  நியூட்ரான்களை விரைவாக விழுங்கும் கடோலினியம் அந்த திரவ நீரில் கலக்கப்பட்டிருக்கிறது.  கனநீர் அணுமின் உலைகளில் [Indian Heavy Water Reactors] அது தேவையாகும் போது மிதவாக்கி நீரில் பாய்ச்சப் படுகிறது.

    அணு உலையை முற்றிலும் நிறுத்த “இரட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகள்” இருக்கின்றன.

    a)  நியூட்ரான்களை விழுங்கும் தடைக்கோல்கள் சட்டென அணு உலைக்குள் இறங்கும் ஏற்பாடு

    b)  நியூட்ரான்களை விரைவாக விழுங்கும் “அபாய நஞ்சுப் பாய்ச்சல் ஏற்பாடு”

    6.  தனித்தனியாக ஆட்சிக் கோல்களும், நிறுத்தக் கோல்களும் சுயமாக இயங்கும் மின்சாரக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் [Control Rods & Shut-off Rods Drive Systems].  உதாரணமாக ஆட்சிக் கோல்கள் அணு உலையில் 12 அல்லது 18 இருக்கலாம்.  நிறுத்தக் கோல்கள் 20 அல்லது 30 இருக்கலாம். நிறுத்தமான அணு உலையில் ஆட்சிக் கோல்களும், நிறுத்தக் கோல்களும் முழுவதும் கீழே இறக்கப் பட்டிருக்கும்.  அணு உலை இயங்க ஆரம்பிக்க முதலில் அனைத்து நிறுத்தக் கோல்களும் அணு உலைக்கு மேலே தூக்கப் படவேண்டும்.  ஆனால் மின்சக்தி ஆற்றலை மிகைப்படுத்த ஆட்சிக் கோல்கள் சீராக, முறையாக, மெதுவாக ஒவ்வொன்றாக மேலே தூக்கப் படவேண்டும்.

    Pressurized Light Water Reactor Systems

    7.  அணு உலைக்குள்ளே பல வெப்பக் கடத்திகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.  வெப்பத்தை நீக்க முக்கியப் பிரதம வெப்பக் கடத்திகளில் “தனிமங்கள் அகற்றப்பட்ட தூய நீர்” அல்லது கடல் நீர் சில நிலையங்களில் பயன்படுகிறது. [Demineralised Water System or Sea Water Cooling System for Hear Exchangers]

    8.  துவித நீரோட்ட ஏற்பாடு [Secondary Coolant Water System] என்பது கொதிகலனில் வெந்நீர் நீராவியாக மாறி டர்பைன் சுழலிகளைச் சுழற்றி, மின்சார ஜனனியில் மின்சாரம் உற்பத்தி செய்ய வசதி உண்டாக்குகிறது.

    9.  டர்பைன் குளிர்ப்புக் கலனைத் தணிப்பு செய்யும் நீரோட்டம் [Condensor Cooling water System or Sea Water Cooling System for the Steam Condensor].

    10.  அணு உலையில் எதிர்பாராது மனிதத் தவறோ அல்லது யந்திர சாதனப் பிசகோ நேர்ந்து எல்லா வித நீரோட்டமும் எரிக்கோல் வெப்பத் தணிப்புக்குத் தடைப்பட்டால், இறுதியாகத் “தீயணைப்பு நீரோட்ட ஏற்பாடு” [Emergency Fire Water System] அணு உலை எரிக்கோல்களை உருக விடாமல் செய்ய கடைசி முயற்சியாகக் கையாளப்படுகிறது.

    அபாய வேளை மின்சாரத் தயாரிப்பு தணிப்பு நீர் அனுப்பு ஏற்பாடுகள்

    அபாய வேளைத் தருணங்களில் முதலில் அணுமின் உலை தானாக நிறுத்தம் அடைகிறது.   இந்திய அணு மின் உலைகள் 22 இல் 20 அணுமின் உலைகள் அழுத்தநீர்ச் சுற்று தணிப்பு மாடல்கள்.    அதாவது வெப்ப நீர் தானாகவே சுழற்சியில் இயங்கும் தெர்மல் ஸைஃபன ஏற்பாட்டு முறையில் நீராவி ஜனனி மூலமாய் வெப்பம் நீங்குகிறது.   அனைத்து நீராவி ஜனனிக்கும் உயரத்தில் உள்ள தூயநீர் தொட்டிகள் (Demin Water Storage Tanks) இரண்டு அல்லது மூன்று எப்போதும் ஈர்ப்பு முறையில் நிரப்பி வரும்.  நீராவி வெளியேறி வெப்பம் தணியும்.

    பொது நிலையத்துக்குப் பயன்படும் மின்சாரம் தடைப்படுமானால், அபாய நிலைத் தேவைக்குப் பயன்பட டீசன் எஞ்சின் இயக்கும் இரட்டை மின்சார ஜனனிகள் [Emergency Diesel Power System]    அமைக்கப் பட்டிருக்கின்றன.  அவற்றில் ஒன்று எப்போதும் மிதப்பு நிலையில் ஓடிக் கொண்டிருக்கும். முதல் யூனிட் நின்றால் மற்றொன்று ஓடத் தயாராய் இருக்கும்.  மின்னல் இடி மழைச் சமயங்களில் நிலைய மின்சார ஆற்றல் தடைப்பட்டுப் போனால், ஓடிக் கொண்டிருக்கும் டீசல் ஜெனரேட்டர் மின்சாரம் நிறுத்தமான அணு உலைச் சாதனங்களுக்கும், கட்டுப்பாடு புரியும் சுற்றுக்களுக்கும் பரிமாறப்படும்.

    டீசல் எஞ்சின் சாதனம் எதுவும் இயங்காது போயின் வெப்பத் தணிப்பு செய்ய  ஓய்வு நிலை நீரனுப்பு ஏற்பாடு ஈர்ப்பாற்றலில் இயங்கும்.   அதுவும் பயன் தராவிட்டால் தீ யணைப்பு எஞ்சின் நீர் அனுப்ப உதவும்.  அபாயப்  பாதுகாப்பு நீர்த் தொட்டியில் ஏராளமான கொள்ளளவு நீர் சேமித்து வைக்கப் பட்டுள்ளது.

    (தொடரும்)

    ***********************

    தகவல்:
    1.  http://www.npcil.nic.in/index.asp  [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

    2. http://pib.nic.in/release/release.asp?relid=20878  [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

    3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
    [Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

    4.  World Nuclear Association – WNA
    Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)
    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

    5. World Nuclear Association – WNA
    Waste Management and Decommissioning Working Group – WM&DWG (Official List – July 25, 2006)    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

    6. http://www.candu.org/npcil.html  [Indian Heavywater Nuclear Power Plants]

    7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

    8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

    9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html  Letter By R. Bala (August 9, 2007)

    10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp  [World Association of Nuclear Operation Website]

    11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)

    12.  http://www.world-nuclear.org/info/inf53.html  (World Nuclear Association Report on Indian Nuclear Power)  (February 2012)

    ******************

    S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 7, 2012  (R-2)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy
    நீயே மதுரம் நகைச்சுவை(NS) க்ருஷ்ணனே
    டீயே(TA) மதுர டிகாக்‌ஷனன்ன, -காயோன்(மேனியன்),
    பகைச்சுவை போக்கும் நகைச்சுவை ஜாதி,
    ரகச்சுவை நீமது ரம் ….கிரேசி மோகன்….

    Share
  • குறளின் கதிர்களாய்…(45)

    -செண்பக ஜெகதீசன்

    அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங்
    கடுத்தது காட்டும் முகம். (திருக்குறள் -706: குறிப்பறிதல்)

    புதுக் கவிதையில்…

    அருகில் செல்வோர் உருவத்தை
    அப்படியே காட்டிவிடும்
    கண்ணாடி…

    அகத்திலுள்ள உணர்வுகளை
    அப்படியே காட்டிவிடும்
    முகம்…!

    குறும்பாவில்…

    அருகிலுள்ளதைக் காட்டும் கண்ணாடி,
    அதுபோல் காட்டும்
    அகத்திலுள்ளதை முகம்…!

    மரபுக் கவிதையில்…

    மருங்கி லுள்ள பொருளையெல்லாம்
    மாற்றம் ஏது மில்லாமல்
    உருவி லதுவாய் உள்ளபடி
    உள்ளதைக் காட்டும் கண்ணாடியாய்,
    இருப்பது வெளியே தெரியாதென
    எதனை மனதில் மறைத்தாலும்,
    இருப்பை எடுத்துக் காட்டிவிடும்
    எதையும் மறைக்கா முகமதுவே…!

    லிமரைக்கூ…

    கண்ணாடி காட்டிவிடும் அப்படியே முகத்தை,
    எப்படித்தான் மறைத்தாலும்
    எப்படியும் முகம்காட்டும் முழுதாய் அகத்தை…!

    கிராமிய பாணியில்…

    கண்ணாடி கண்ணாடி
    மொகம்பாக்குங் கண்ணாடி,
    முன்னவுள்ள எல்லாத்தயும்
    முழுசாக்காட்டுங் கண்ணாடி…

    இதப்போல,
    மொகமும் ஒரு கண்ணாடி
    முழுசாக்காட்டுங் கண்ணாடி,
    மனசிலுள்ள எல்லாத்தயும்
    தெளிவாக்காட்டுங் கண்ணாடி..

    கண்ணாடி கண்ணாடி
    மொகம்பாக்குங் கண்ணாடி…!

     

    Share
  • இறைவன்..

    [download id=”4g5ZPGf4Pdc7″]இறைவன்…

    அன்பு எனும் மனம்
    கொண்ட கண்களே
    இறைவன்!

    ஆக்கம் எனும் மனவலி(மை)
    கொண்ட கண்களே
    இறைவன்!

    இரக்கம் எனும் இதயம்
    கொண்ட கண்களே
    இறைவன்!

    ஈரம் எனும் உள்ஈர்ப்பு
    கொண்ட கண்களே
    இறைவன்!

    உண்மை எனும் ஊக்கப்பண்பு
    கொண்ட கண்களே
    இறைவன்!

    எளிமை எனும் ஏற்றம்
    கொண்ட கண்களே
    இறைவன்!

    ஐயம் (சந்தேகம்) தவிர்ந்த உயர்அன்பு
    கொண்ட கண்களே
    இறைவன்!

    ஒற்றுமை ஓங்கிய ஒ(பெ)ருமை
    கொண்ட கண்களே
    இறைவன்!!

    — நாகினி

    Share
  • இந்திய ஆண்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    gilleswife5

    சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்த செய்தி உலகில் எந்தெந்த நாடுகளில் உள்ள கணவன்மார்கள் எத்தனை மணி நேரம் மனைவிக்கு வீட்டுவேலைகளில் உதவுகிறார்கள் என்ற புள்ளிவிபரத்தைக் குறிப்பிட்டிருந்தது. அமெரிக்க ஆண்கள்தான் அதிக நேரம் (ஒரு நாளைக்கு இரண்டு மணி நாற்பத்தியொரு நிமிடங்கள்) மனைவிமார்களுக்கு வீட்டுவேலைகளில் உதவிசெய்கிறார்களாம். ‘இந்திய ஆண்களின் இடம் என்ன என்று கேட்கிறீர்களா?’ அது எங்கோ இருக்கிறது’ என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டிருக்கிறது அந்தப் பத்திரிக்கை. இந்திய ஆண்கள் 19 நிமிடங்கள்தான் மனைவிமார்களுக்கு உதவுகிறார்களாம்.

    இந்திய ஆண்கள் ஏன் மனைவிமார்களுக்கு வீட்டுவேலைகளில் உதவுவதில்லை என்று பார்ப்போம். ஜாதிகளில் உயர் ஜாதி, கீழ் ஜாதி என்று இருப்பதுபோல் ஆண்கள் பெண்களைவிட உயர்ந்தவர்கள் என்ற நிலைப்பாட்டையும் நாம் பல நூற்றாண்டுகளாக நமது சமூகத்தின் கொள்கையாக ஏற்றுக்கொண்டுவிட்டோம். உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் எப்படி மற்ற ஜாதிகள் தங்களுக்குச் சமம் என்று இன்றும் ஒப்புக்கொள்வதில்லையோ அதுபோல் ஆண்களும் பெண்கள் தங்களுக்குச் சமமானவர்கள் என்று கருதுவதில்லை. ஒரு முறை பள்ளியில் எங்களுக்கு இந்தி சொல்லிக் கொடுத்த ஆசிரியரைப் பார்க்கச் சென்றிருந்தோம். அவருடைய மனைவி எங்களுக்கு அருந்துவதற்குப் பால் கொண்டுவந்து கொடுத்தார். நாங்கள் அதைக் குடித்து முடித்த பின் அந்தத் தம்ளர்களை உள்ளிருந்து ஒரு கோல் கொண்டுவந்து எங்கள் முன்னாலேயே அந்தக் கோல் மூலம் அவற்றை ஒரு ஓரத்திற்குத் தள்ளினார். நாங்களே அவரைப் போல் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டார். இது நடந்தது பதினைந்து வருஷங்களுக்கு முன்னால்தான். என் கணவரின் கீழ் வேலைபார்த்த ஒரு பிராமணர் நாங்கள் அவர் வீட்டிற்குச் சென்றபோது அவர் தந்தை இறந்து அவருக்குரிய ஈமச்சடங்குகள் முடிந்திருக்கவில்லையாதலால் எங்களை வீட்டிற்கு வெளியேயே வைத்துப் பேசி அனுப்பிவிட்டார். அவருடைய தந்தை மிகவும் ஆசார அனுஷ்டானங்கள் உடையவராம். அதனால் அவருக்கான ஈமச்சடங்குகள் முடியும்வரை இவர் மடியாக இருக்க வேண்டுமாம். பிராமணரல்லாத எங்களை வீட்டிற்கு உள்ளே விட்டால் அவர் தந்தை சொர்க்கத்திற்குப் போய்ச் சேர மாட்டார் என்று நினைத்துவிட்டார் போலும். இவர்களைப் போன்றவர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு மாறப் போவதில்லை.

    இந்தியப் பெண்களையும் எல்லாக் காலங்களிலும் ஆண்களைவிடக் குறைந்த நிலையிலேயே வைத்துவந்திருக்கிறது இந்தியச் சமூகம். அதனால் இந்திய ஆண்களின் மனதிலும் தாங்கள் தங்கள் மனைவிமார்களை விட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் நன்றாகவே ஊறிப் போயிருக்கிறது. வயலில் வேலைபார்க்கும் குடும்பங்களில் கணவனும் மனைவியும் வேலைக்குப் போகிறார்கள். ஆனால் வீட்டு வேலைகள் எல்லாம் மனைவிதான் செய்கிறாள். வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த எங்கள் பாட்டனார், தந்தை காலத்தில் மனைவிமார்கள் வெளியே எங்கும் வேலைக்குச் செல்லவில்லை. கணவன்மார்கள்தான் வெளியில் சென்று உழைத்துக் குடும்பத்திற்கு வேண்டிய வருமானத்தை ஈட்டி வந்தார்கள். மனைவிக்கு வீட்டு வேலைகளைச் செய்ய நிறைய நேரம் இருந்தது. இப்போது காலம் மாறிவிட்டது. பல பெண்கள் வெளியே வேலைக்குப் போகிறார்கள். அவர்களுக்கும் கணவன்மார்கள் எந்த உதவியும் செய்வதில்லை. வேலைக்காரர்கள் என்ற ஒரு இனம் இந்தியாவில் இருக்கிறது. அவர்கள் பெண்களுக்கு வீட்டு வேலைகளில் உதவுகிறார்கள். அதற்கு மேல் நவீன சமையல் உபகரணங்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன. அவை ஓரளவு பெண்களுக்குக் கைகொடுக்கின்றன. இந்திய ஆண்கள் தங்கள் மனைவிமார்களை தங்கள் வாழ்க்கைத் துணை என்றும் அவர்கள் தங்களுக்குச் சமமானவர்கள் என்றும் ஒரு போதும் நினைப்பதில்லை.

    மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல் இருக்கும்போதுகூட கணவன்மார்கள் சமையலறைக்குள் நுழைவதில்லை. ஒரு முறை ஒரு கணவனிடம் அவருடைய மனைவிக்கு அடிக்கடி உடல்நலம் கெடுவதால் மனைவிக்குச் சமையலில் உதவுமாறு நான் கூறினேன். என் அறிவுரைக்குச் செவிமடுத்த அவர் ஒரு நாள் தன் மனைவிக்கு பட்டாணி உரித்துக் கொடுத்திருக்கிறார்! இதைப் பார்த்துவிட்ட பக்கத்து வீட்டுக்காரன் ஒருவன் (இந்தச் சிறிய கிராமத்தில் யாரும் யார் வீட்டிற்குள்ளும் எப்போதும் செல்வார்கள். ‘பிரைவசி’ எல்லாம் கிடையாது.) ‘இப்படி ஆண்கள் வீட்டுவேலை செய்வதால்தான் மழை பெய்யவில்லை’ என்றானாம்! இதுதான் இந்தியப் பண்பாடு.

    நாம் பலவாறாகப் போற்றும் நம் இதிகாசங்களும் காலம் காலமாக பெண்ணுக்கு ஒரு நீதி, ஆணுக்கு ஒரு நீதி என்றுதான் வகுத்திருக்கின்றன. கண்ணகியைக் கற்பிற்கு அரசியாகச் சித்தரித்த இளங்கோ அடிகள் கோவலனை கற்புக்கரசனாகச் சித்தரிக்கவில்லையே. கணவனைத் தாசி வீட்டிற்கு நளாயினி கூட்டிச் சென்றாள். எந்த இதிகாசக் கணவனும் மனைவியை அவள் விரும்பியவனிடம் அழைத்துச் சென்றதாகக் கதை இல்லை. இப்படி ஆண்களை உயர்த்திவைத்தே பெண்களைப் பழக்கப்படுத்திவிட்ட இந்திய சமூகத்தில் கணவன்மார்கள் மனைவிமார்களை மதிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஏன் மனைவிமார்களே கூட கணவன்மார்களிடமிருந்து இதை எதிர்பார்ப்பதில்லை.

    அமெரிக்கா போன்ற வளர்ந்துவிட்ட மேலைநாடுகளில் இப்போது நிறையப் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். இவர்களுக்கு உதவுவதற்கு சந்தையில் நிறைய ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் வந்துவிட்டாலும் வீட்டைச் சுத்தப்படுத்துவது, துணிகளைத் துவைப்பது போன்ற வேலைகளை கணவன், மனைவி இருவரில் ஒருவர் செய்தாக வேண்டும். இந்தியாவில்போல் சொற்ப சம்பளத்தில் வேலைக்காரர்கள் கிடைப்பதில்லை. இந்தக் காரணங்களால் ஆண்களும் வீட்டு வேலைகளில் பங்கெடுக்க வேண்டியிருக்கிறது. மேலும் இந்தியாவில் போல் பெண்களைவிட ஆண்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் இந்தச் சமூகங்களில் ஒரு காலத்தில் இருந்ததோ என்னவோ இப்போது இல்லை. எந்தக் கணவனும் தான் தன் மனைவியைவிட உயர்ந்தவன் என்று நினைப்பதில்லை. இந்தியாவில் தன்னைவிடப் பணக்காரக் குடும்பத்துப் பெண்களை மணந்துகொள்ள எந்த ஆணும் தயங்குவதில்லை. ஆனால் தன்னைவிட அதிகம் சம்பாதிக்கும் பெண்ணை, அதிகம் படித்திருக்கும் பெண்ணை மணந்துகொள்ள நிறைய ஆண்கள் முன்வருவதில்லை. எங்கே தன்னை மதிக்க மாட்டாளோ என்று பயப்படுவதே இதற்குக் காரணம். மேலைநாடுகளில் இப்படிப் பயப்படுவது இல்லை. சில கணவன்மார்கள் தேவை ஏற்பட்டால் சில வருஷங்களாவது குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு, வீட்டை நிர்வகித்துக்கொண்டு இருப்பதை தாழ்வாக நினைப்பதில்லை.

    ஒரு முறை ஒரு அமெரிக்கர் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றிருந்தோம். நிறைய சமைத்திருந்தார்கள். விருந்து முடிந்து கிளம்பும்போது ஏதோ வேலையாக நான் சமையலறைக்குள் சென்றபோது சமைக்க உதவிய பாத்திரங்கள், விருந்தினர் உபயோகித்த பாத்திரங்கள் என்று அத்தனை சாமான்கள் சமையலறை முழுவதும் சிதறிக் கிடந்தன. இவற்றை எல்லாம் எப்போது சுத்தப்படுத்துவார்கள் என்று எனக்கே மலைப்பாக இதுந்தது. ‘இவற்றை எல்லாம் இனி நீங்கள் சுத்தப்படுத்த வேண்டுமே’ என்று மனைவியிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘என் கணவர் எல்லாவற்றையும் முடித்துவிடுவார்’ என்றார். எந்த ஒரு இந்தியக் குடும்பத்திலாவது இப்படி நடக்குமா? இதுதான் இந்தியக் குடும்பங்களுக்கும் அமெரிக்கக் குடும்பங்களுக்கும் உள்ள வித்தியாசம். இதனால்தான் அமெரிக்காவில் கணவன் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ இரண்டு மணி நேரம் நாற்பத்தியோரு நிமிடங்கள் செலவழிக்கிறான். இந்தியாவில் பத்தொன்பது நிமிடங்களே செலவழிக்கிறான்.

    Share
  • சேக்கிழார் சிறப்பும் உயர்வும்!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    chekkizhar“பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட”ப் பாடியதால் சேக்கிழார் சிறப்புப் பெறுகிறாரா? புதிய உத்தியைக் கையாண்டதால் சேக்கிழார் உயர்ச்சி பெறுகின்றாரா? முதலமைச்சர் ஆகவிருந்தமையால் சிறப்புப் பெறுகின்றாரா? புரட்சிகரமான கருத்துக்களை முன் வைத்தமையால் சிறப்பும் உயர்வும் பெறுகின்றாரா? அல்லது பெரியபுராணத்தைத் தந்தமையால் சிறப்பும் உயர்வும் பெறுகின்றாரா? என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா?

    பேரரசு உருவாகி அந்தப்பேரரசுக்கு புகழ்மாலைகள் பெருகும் பொழுது ஆட்சியாள ர்கள் தம்மை மறப்பது இயல்புதான். ஆனால் இந்த நிலையைத் தொடரவிட்டால் குறிக்கோள்கள் இல்லாமலே கெட்டழிந்தும் போய்விடலாம். போர் வெற்றியாலும், அதனால் ஏற்படும் பேராசையினாலும் அந்தப்பேரரசு தன்னை ஒருநாளும் தளர்வடையச் செய்யும்படி நடந்து கொள்ளவும் கூடாது. ஆனால் இதனை எந்தவொரு அரசும் நோக்கியதாகத் தெரியவில்லை. தளர்வுறும் வேளை அந்த நாட்டுமக்களையும் அப்போது உள்ள அரசர்களையும் நல்வழிப்படுத்துதல் மிகவும் முக்கியமானதாகும். இதனை முதலமைச்சராக இருந்த அனுபவம் மிக்க சேக்கிழார் தம்வசம் எடுத்துக்கொண்டார். இதனால் பெரியபுராணம் பிறந்தது எனலாம்.

    பிற்காலச் சோழ மன்னரது போக்கைச் சேக்கிழார் விரும்பவில்லை. அவர்களின் மனோபாபம் வேறுவிதமாகப் போவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு நல்ல வழியைக் காட்டினால்தான் மக்களும் நாடும் மீண்டும் பழைய நிலைய அடையமுடியும் என்று கருதினார். எனவே மன்னர் மனம் மாற, மக்கள் விழிப்புப் பெற, அவர் கையாண்டவழிதான்—ஆண்டவன் அடியாரை அறிமுகப் படுத்தும் அதி உன்னதப் பணியான பெரிய புராணமாக அமைந்தது. “குடிஉயரக் கோனுயர்வான்” இதை நன்கு அறிந்தவராகச் சேக்கிழார் இருந்தபடியால் குடிகள் உயர்வுபெற வேண்டுமானால், கோன் — அதாவது அரசர்களை உயிர்ப்பூட்டவேண்டும் என எண்ணினார். அதனால் மன்னர் மனத்தில் இறையுணர்வை ஊட்டுவதே மிகச் சிறந்தவழி என்று அதனை மையமாகக் கொண்டு சுவைபட ஒருகாவியத்தை ஆக்கினார்.

    மந்திரிகள் என்றாலே ஊழலும், பித்தலாட்டமும், நேர்மையீனமும், ஏமாற்றுதலும்தான் எங்களுக்கெல்லாம் தற்போது ஞாபகத்துக்கு வரும். அந்த அளவுக்கு மந்திரிகள் நிலை இருக்கிறது. ஆனால் சேக்கிழாரோ மன்னனையும் மக்களையும் நல்வழிப்படுத்துவதற்காக அந்தஸ்தும் அதிகாரமும் மிக்க முதலமைச்சர் பதவியினையே துறந்து விடுகின்றார். அதிகாரத்தில் இருந்து ஆண்டவன் புகழ் பாட அவர் விரும்பவில்லை. இதனால்தான் அவர் வாயினினின்றும் “கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் – ஓடும் செம்பொனும் ஒக்க நோக்குவார்” என்று வரிகள் வந்தனபோலும்.

    சேக்கிழாரின் புலமை சாதாரணமானதல்ல. கம்பரைப் போல கவிபாடும் ஆற்றல் மிக்கவர். அவர்மட்டும் வேறு துறையில் காவியம் பாடியிருந்திருந்தால் சில வேளைக் கம்பராமாயணத்தைக் கூட விஞ்சியும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அவர் நோக்கம் அதுவல்ல. அதனால்தான் அடியார்கள் வரலாற்றைத்தேடிப் பிடித்து அதனை எப்படிக் கொடுக்க வேண்டுமோ அப்படிக் கொடுத்து நின்றார்.

    சேக்கிழார் காவியம் பாடுவதற்கு எடுத்துக்கொண்ட பொருள் வித்தியாசமான தாகும். சிலம்பு மட்டுமே உயர்திணை அல்லா ஒன்றைப் பாடுபொருளாகக் கொண்டிருந்தது. அதனை மனத்திற்கொண்ட காரணத்தால் சேக்கிழாரும் “தொண்டை” கருப்பொருளாக வைத்துத் தனது காவியத்தை படைத்து விடுகின்றார். அறுபத்துமூன்று அடியவர் கதைகளை வைத்துக்கொண்டு ஒரு காவியத்தைப் புனைவது என்பது இலகுவான காரியமல்ல.   இதனை நன்கு மனத்திற்கொண்ட காரணத்தால் எப்படியும் இந்த அடியார்களை இணை ப்பதற்கு ஒரு மார்க்கம் கிடைக்காதா என்று சிந்தித்த பொழுதுதான்…அடியார்கள் எவ்வாறு இருப்பினும் அவர்கள் யாவரிடமும் தொண்டு மனப்பாங்கு இருப்பதை அவரால் புரிந்து கொள்ளமுடிந்தது எனலாம். எனவே இப்பொழுது அடியார்கள் தொகை அவருக்குப் பெரிதாகப்படவில்லை. அங்கே தொண்டுதான் தலைமை வகித்தது. எனவே தொண்டை மையமாக வைத்துத் தொண்டர் பெருமையைப் பறைசாற்றும் காவியத்தை எளிதாகப் புனைந்து எமக்கு அளித்துவிட்டார். இது சேக்கிழாரின் பெருமைதானே!

    சுந்தரமூர்த்தி சுவாமிகளும், நம்பியும், பெரியபுராணம் பாடச் சேக்கிழாருக்குப் பெரிதும் உதவிய போதும்….சேக்கிழார் அவற்றோடு மட்டும் நின்றுவிடாமல், அடியார்கள் பற்றிய விஷயங்களையெல்லாம் ஆதாரத்துடன் எடுக்க வேண்டும் என்னும் எண்ணத்தால் ஊர்கள் தோறும் சென்று பல தகவல்களையும் எடுத்துக்கொள்கின்றார். அமைச்சராக இருந்த காரணத்தால் அவர் ஊர்கள்தோறும் சென்று பல வரலாற்றுத் தகவல்களையும், கல்வெட்டுப் போன்றவற்றையும் ஆராயும் நுண்மாண் நுழைபுலத்தைத் தன்னகத்தே கொண்டவராக விளங்கினார். இதனால் அவரின் காவியமான பெரியபுராணம் தலை நிமிர்ந்து நிற்கின்றது. இது அவருக்கு உயர்வையும் சிறப்பையும் தராமல் இருக்கத்தான் முடியுமா?

    பக்தியை ஊட்டுவதற்குப் பெரிய புராணத்தைச் சேக்கிழார் பயன்படுத்தினாலும் அதன் ஊடாகப் பல சமூக சீர்திருத்தங்களையும் துணிந்து செய்ய நினைக்கின்றார். இது அவரின் சமூக அக்கறையினையே காட்டுகிறது எனலாம். பல விஷயங்களையும் கற்றுத் தேர்ந்தவர் என்ற காரணத்தால்தான் சோழ மன்னனே அவருக்கு முதல் அமைச்சர் பதவி வழங்கிப் பெருமைப்படுத்துகின்றான். ஆட்சியில் அதிகாரத்தில் இருந்து வேலை பார்த்தவருக்கு நாட்டின் நிலை, அங்கு வாழும் மக்களின் நிலை பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பிருந்தது. தனக்குக் கிடைத்ததை அனுபவங்களின் வெளிப்பாடாகப் பெரிய புராணத்தில்…அவரின் சமூக அக்கறையாக வந்து நிற்கிறது எனலாம்.

    பெரிய புராணத்தில் இடம்பெறுகின்ற அடியவர்கள் யாவரும் வெவ்வேறு சமூக நிலையில் இருந்து வந்தவர்கள். அந்தணர், அரசர், புலையர், வேட்டுவர், மீன்பிடிகாரர், வண்ணார், குயவர், மரமேறுபவர்கள், செக்கார், ஆதிசைவர், வேளாளர் இப்படிப் பல சாதிப் பிரிவினரையும் தமது ஒப்பற்ற காவியமான பெரியபுராணத்தில் காட்டி அவர்களை வணங்கத்தக்க நிலைக்குக் கொண்டுவந்தமை சேக்கிழாரின் துணிவுதானே!

    ஆண், பெண், பொருளாதார ஏற்றத்தாழ்வு, கல்வியறிவு, சாதி எதையுமே கருத்தில் கொள்ளாமல் சமயம் என்பதற்குள் இவர்கள் அனைவரையும் கொண்டுவந்து…இவர்கள் அனைவரும் இறைவனுக்குத் தொண்டு செய்கின்ற நிலையில் போற்றப்பட வேண்டியவர்கள் என்று காட்டிய துணிச்சலால் சேக்கிழார் சிறப்பும் உயர்வும் பெற்றே நிற்கிறார் எனலாம்.

    சேக்கிழார் காலத்தில் சாதிக் கட்டுப்பாடு மிக இறுக்கமாக இருந்திருக்கிறது என்பதற்கு அவரின் காவியத்தில் வருகின்ற அடியார்களே சான்றாகும். தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் சென்று வணங்கமுடியாத நிலை காணப்பட்ட காலம். இதனைச் சேக்கிழார் மனித தர்மம் அற்றது எனக் கருதியதால்தான் அறுபத்து மூவரையும் இறைவன் அடியார்களாக்கி விடுகின்றார். பெரிய புராணத்தில் வருகின்ற அடியார்கள் பல சாதிகளைச் சேர்ந்த்திருந்த போதிலும் யாவரும் சிவமயமாக நின்று தொண்டையே தம் மன த்தில் இருத்திய காரணத்தால் சாதி அடிபட்டுப் போவதையே நாம் இதன் மூலம் கண்டுகொள்ள முடிகிறது. “ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் சமம்” என்னும் அரிய கருத்தை அகில உலகமும் அறியச் செய்த காரணத்தால் சேக்கிழார் சிறப்புக்கும் உயர்வுக்கும் உரியவர் ஆகிறார் அல்லவா?

    ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை இன்று கோவில்கள்தோறும் சிலை வடிவில் உள்ளே வைத்துப் பூசனைகள் செய்தும், பெருவிழா எடுத்தும், குருபூசை என்று குறித்துக் கொண்டாடியும் வருகின்றோம் என்றால்…அந்தப் பெருமைக்கும் சிறப்புக்கும் சேக்கிழார்தான் காரணம் என்பதை எவருமே மறந்து விடமுடியாது.

    எமது சமயத்தின் தொண்டர் பற்றிக் கூறவந்தாலும்… ஆயிரம் ஆண்டுகால தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றினையும், மொழி பற்றிய நிலையும், சமயங்களின் நிலையையும் முதன்முதலாகப் பதிவு செய்து எமக்கெல்லாம் தந்து நிற்கின்றார் சேக்கிழார்.

    வீரம் என்றால் பொதுவாக …. புஜபல பராக்கிரமம் கொண்டவர்களையும், பல போர்களில் வெற்றி கண்டவர்களையுமே சொல்லுவது வழக்கம். ஆனால் சேக்கிழாரோ வீரத்துக்கும் வீரர்களுக்கும் வித்தியாசமான விளக்கத்தை அளித்து வியக்கவைகின்றார். முதலமைச்சராகவிருந்தவர். பல போர்களைக் கண்டவர். ஆனாலும் அவற்றில் ஈடுபட்டவர்களை ’வீரர்’ என்றோ அவர்கள் பெற்றது ’வெற்றி’ என்றோ அவர் மனம் ஏற்கவில்லை. அதாவது புறத்தே நடக்கும் போரைவிட அகத்தே நடக்கும் போரும் அதனை வெற்றி கொள்ளுதலுமே வீரமும் வெற்றியும் எனக் கருதினார். இதற்கு எடுத்துக்காட்டாகத் திருநீலகண்டரைக் காட்டுகின்றார். புலனடக்கம் பெற்றவர்தான் உண்மையான வீரர் என்பதைச் சேக்கிழார் காட்டுவது எத்துணை அரிய பெரிய தத்துவமாக இருக்கிறது! இந்திரியங்களை வென்றவர்களால்தான் பகையின்றி வாழமுடியும். பகையை ஒழித்தவர்களால் தான் தொண்டுள்ளத்தோடு செயற்படமுடியும். இதுதான் வீரமும் அதற்கான வெற்றியும் என்று புதிய விளக்கத்தைச் சேக்கிழார் தந்து சிறப்பு மிக்கவராகி விடுகின்றார். பற்றை நீக்கிக் குறிக்கோளுடன் துறவு மனப்பான்மை கொண்டு வாழும் தொண்டர்களின் “வீரம் என்னால் விளம்பும் தகையதோ ?” என்ற சேக்கிழார் வாக்கை நோக்கவேண்டும்.

    அதேவேளை “ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் — வீரம் என்னால் விளம்பும் தகையதோ “சிறுத்தொண்டர், எறிபத்தர், வீரம் படைத்தவரானாலும் ஈரமும் கொண்டவர்கள். நாவுக்கரசர், குங்கிலியக்கலையர், கண்ணப்பர், வீரத்தையெல்லாம் எளிதில் சொல்லிவிடமுடியாது என்று சேக்கிழார் காட்டுவது அவரின் புதுச் சிந்தனையை வெளிப்படுத்துவதாக இருக்கிறதல்லவா? வீரத்துக்கு இவ்வளவு விளக்கமா என எண்ணத் தோன்றுகிறதல்லவா? வீரம் மிக்கவர்கள் ஆனாலும் ஈரமும் மிக்கவர் என்பதுதான் முக்கியம். இதனை ” ஈர அன்பினர் யாதும் குறையிலார் ” என்று சேக்கிழார் சுட்டுவது நோக்கத் தக்கது.

    பெண்களைப் பெருமைப்படுத்துவதில் அக்கறை காட்டுகின்றார் சேக்கிழார். அவள் வந்தாள் என்று பெண்களைச் சமகால இலக்கியங்களால் பெண்கள் விளிக்கப்பட்ட வேளை…பெண்களுக்கு மரியாதை கொடுத்து “அவர்” என்றும் “வந்தார் ” என்றும் தமது காப்பியத்தில் அழைப்பதும் ஒருவித புதுமைதானே!

    “சிவலிங்கத்துக்கு” அருமையான விளக்கத்தைச் சேக்கிழார் தந்து நிற்கின்றார். காணாத “அருவனுக்கும்” “உருவனுக்கும்” காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்” அதாவது கண்ணால் காணும் நிலை— உருவம். காணாநிலை — அருவம். இதனை ’அருவுருவம்’ என்று சேக்கிழார் காட்டுகின்றார். ஒரு உருவத்தில் இறைவனைக் காண்பது தொடக்க நிலை. உருவமே இல்லாத சிவனை மனதுக்குள் கொண்டுவருவது ஞானநிலை. இரண்டுக்கும் இடைப்பட்ட “அருவுருவ நிலை” சைவத்தின் உயர்தத்துவ நிலையாகும். இதனையே மிக நுட்பமாகச் சேக்கிழார் காட்டுவது அவரின் திறத்தை வெளிப்படுத்தி நிற்கிறதல்லவா?

    ஆலயத்தில் ஆண்கள் எப்படி வணங்க வேண்டும் , பெண்கள் எப்படி வணங்க வேண்டும் என்பதையும் சேக்கிழார் காட்டுவது நோக்கத்தக்கது. “அட்டாங்க பஞ்சாங்கமாக முன்பு முறையினால் வணங்கி “எட்டினொடு ஐந்தாகும் உறுப்பினால் பீடு நிலத்தின் மேல் பெருக்கப் பணிந்து”
    இவை எல்லாம் சேக்கிழாரின் அறிவுறுத்தல்கள்தானே!

    ” உலகெலாம் ” என்று இறைவன் அடி எடுத்துக் கொடுக்கும்வரை பல காலம் காத்திருந்தார் சேக்கிழார். பெரிய புராணம் வந்தால் உலகுக்கு நன்மை பயக்கும் என்று சேக்கிழார் நினைத்தார் என்றே எண்ணமுடிகிறது. சமயத்தை, தொண்டை, பக்தியை, கலாசாரத்தைப் பாடவந்தாலும் அவரிடம் உலகம் தழுவிய உயர்ந்தநோக்கு இருந்திருக்கிறது என்பதையே பெரிய புராணம் மூலமாக நிலைநாட்ட முயன்றுள்ளார்.

    பக்தர்கள், தொண்டர்கள், அடியார்கள் என எப்படி அழைத்தாலும் அவர்கள் யாவரும் உலகில் பொதுமையானவர்களே!

    அகில காரணர் தாள் பணிபவர், கைத்திருத்தொண்டு செய்கடப்பாடினர், உள்ளும் புனிதர்கள், கோதிலாக் குணப் பெருங்குன்றனார், கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார், ஓடும் செம்பொனும் ஒக்க நோக்குவார், கும்பிடலேயன்றி வீடும் வேண்டாதவர், பாரம் ஈசன் பணி அலது ஒன்றிலார், ஈர அன்பினர் யாதும் குறைவிலார், வீரர்.

    மேலே கூறிய அடைமொழிகளை உற்று நோக்கும் பொழுது இவை யாவும் உலகந் தழுவிய ஒரு நிலையையே உணர்த்தி நிற்கிறது அல்லவா? “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் குரலும் இதனுடன் ஒத்துவருவதையும் பார்க்க முடிகிறதல்லவா? “தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! ” என்பதைச் சேக்கிழார் தெளிவாக அறிந்தவர் என்பதும் புலனாகிறதல்லவா?

    அன்பின் உயர்வுக்கு முன்னால் வேறு எதுவுமே இருக்கமுடியாது என்பது சேக்கிழார் எண்ணமாகும். இதனை விளக்க வரும்பொழுதுதான் கண்ணப்பரையும் சிவகோசரியாரையும் எமக்குக் காட்ட வருகின்றார். சிவகோசரியார் விதி மார்க்கத்தில் நிற்க– கண்ணப்பரோ பக்தி மார்க்கத்தில் நிற்கின்றார். விதி மார்க்கத்தோர் அறிவின் துணைகொண்டு இறைவனை அறியமுயல்பவர்கள். பக்தியில் நிற்பவர்கள் உணர்வு மய மானவர்கள். அவர்கள் அறிவை நாடுவதில்லை. இதனையே கண்ணப்பனிடம் காண்கின் றோம். விதி மார்க்கத்தில் செல்பவர்கள் இறைவனைக் கனவில்தான் காணமுடியும். ஆனால் பக்தி அப்படியன்று. கண்ணப்பனுக்கு ஆறாவது நாளே இறைவன் காட்சிகொடுத்து அருள்புரிகின்றான். இங்குதான் அன்பு எவ்வளவு உச்சமானது எனச் சேக்கிழார் காட்டுகின்றார். இதனால்தான் ” கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் — என்னப்பன் என் ஒப்பில் என்னையும் ஆட்கொண்டருளி” என்று மணிவாசகப் பெருமானே வியந்து நிற்பதைக் காண்கின்றோம். சேக்கிழார் வழிபாடுகளைப்பற்றி காணும் பாங்கு வியந்து நிற்க வைக்கிறதல்லவா?

    அன்பு என்பதில்” நான்” இருக்கக்கூடாது. நான் இல்லாத அன்புதான் கண்ணப் பனது அன்பாகும். கண்ணப்பன் அன்பு பயன் கருதாததாகும். இதைத்தான் ” கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா நிலை” என்பதாகும். அன்பின் உயர்வை – இறைவனை அடைவதற்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை எடுத்துச்சொல்லும் விதத்தால் சேக்கிழார் ஈடிணையற்றவராக நிற்கிறார் எனலாம்.

    இப்படிப் பல்வேறுவிதமான நிலைகளில் நின்று சிந்தித்துப் பெரிய புராணம் என்னும் பொக்கிஷத்தை எமக்குத் தந்தமையால் சேக்கிழார் என்றுமே சிறப்புக்கும் உயர்வுக்கும் உரியவர் ஆகி நிற்கின்றார். அவர் பக்திச்சுவையோடு தமிழ்ச்சுவையினையும் தரத் தவறவில்லை.” சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்” என இறைவனே தமிழில்தான் பாடவேண்டும் என்று விரும்பினான் என்னும் செய்தியையும் தெரிவித்துத் தமிழின் பால் தாம் கொண்டிருந்த ஆராக் காதலையும் சேக்கிழார் வெளிப்படுத்தி நிற்கின்றார்.

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    பாம்புப் படகேறி மாம்பழ வாயனவன்
    தாம்புக் கயிறாய் திரித்திட, -தேம்பி,
    அழுதபடி காளியன் அய்யா சரணம்,
    பழுதானேன் பாம்பென் பழுது’’….கிரேசி மோகன்….

    Share
  • அன்பின் தாரை

    இசைக்கவி ரமணன்



    ஒவ்வோர் இலையும் ஒவ்வொரு துளியையும்images
    உணர்ந்து உணர்ந்து ரசிக்கிறது
    ஒவ்வொரு முறையும் ஒரேவிதமாய்த்தான்
    உயிர்முழு தாக நனைகிறது
    செவ்விய மழையின் சேதியை வாங்கிச்
    செடியும் கொடியும் படிக்கிறது
    செகம் முழுதுமே அகம் குளிருமொரு
    சிந்தனைக் கோட்டம் விரிகிறது

    மண்ணின் ஒவ்வொரு சின்னத் துகளும்
    மழையைப் பருகிக் கரைகிறது
    மலையில் அருவிகள் சிலிர்க்கும் குருவிகள்
    காட்சியில் முரணே கவர்கிறது
    தண்ணீர் என்னும் அமிழ்தம் பண்ணாய்
    தரையில் இசைத்து நடிக்கிறது, அதன்
    தாள லயத்தில் ஸ்வரத்தில் கிறங்கித்
    தரையே கரவொலி செய்கிறது

    மண்ணின் காதலும் விண்ணின் கருணையும்
    மழையாய்த் தொடர்ந்து வருகிறது
    மகா சக்தியின் மண்டும் தயையை
    மழையே எனக்குச் சொல்கிறது
    கண்ணாய் வாழ்வைக் காக்கும் அன்புக்
    கடவுளின் பொழிவைக் காணீர், ஒரு
    காதல் போதையில் காளி இசைக்கும்
    கவிதையைக் கேட்போம் வாரீர்!

    03.11.2014 / திங்கள் / 10.42

    Share
  • உன் கன்னங்களில்!

     

    கே.ரவி

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8%E0%AE%99%E0%AE%95/[/mixcloud]

     

    நங்கையுன் கன்னங்களில்South Indian Beautiful Girls Wallpaper7

    பொன்னந்தி வண்ணங்களில்

    நாணவில்லை வரைந்த பின்னே

    வானவில்லைக் காணவில்லையடி ஹோ!

    தங்கத் தடாகத்தில் தாமரைபோல் என்

    நெஞ்சத் தடாகத்தில் அழகு முகம்

    பேரொளியாக மலர்ந்த பின்னே

    வேறொளி இங்கே தேவையில்லையடி ஹோ!

    (நங்கை உன் கன்னங்களில்)

     

     

    கங்கையைப் போலுன் அங்கமெலாம் ஒரு

    காதல் நதிபுரள – என்

    கண்ணசைவில் ஒரு மின்விசையாய் உன்

    சின்ன இடைதுவள – உன்

    தோள்களிலே ஒரு தூளியமைத்துத்

    தூங்கட்டுமா அழகே – உன்

    வேல்விழிகள் என் மேல்படும் போதின்ப

    வேதனைதான் உயிரே

    (நங்கை உன் கன்னங்களில்)

    Share
  • முக்தி தலம் சுப்பிரமண்யா – 3

    விசாலம்.

    Kukhi Subramanya

     

     

    அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில் (தொடர்ச்சி…)

    தலபுராணத்தில் இந்தக்கோயிலின் சிறப்பைப் படித்தேன். ஒரு சமயம் வாசுகியை மஹாவிஷ்ணுவின் வாகனமான கருடன் பார்த்துவிட்டு துரத்த ஆரம்பித்தது. வாசுகி பயந்தபடி குமார பர்வதத்தினுள் இருக்கும் ஒரு குகையில் போய் ஒளிந்து கொண்டு சிவபெருமானைக்குறித்து தவம் இருந்தது. பரமேஸ்வரனும் வாசுகி முன் தோன்றி “நீ இங்கேயே இரு. சுப்பிரமண்யன் உன்னை அருள் பாலிப்பான். அவனருளால் உனக்கு கருடனிடமிருந்து ஒரு ஆபத்தும் இருக்காது நீ இங்கு குமரனுடன் இருக்க பக்தர்கள் உன்னையும் சேர்த்து பூஜிப்பார்கள் ” என்றார். முருகனும் அதை ஆமோதித்து “வாசுகியுடன் கூடியிருக்கும் என்னை வணங்குபவர்கள் சகல சௌபாக்கியங்களும் பெறுவர்” என்றார்.   இதையே வேறு ஒரு புராணக்கதையாக அங்கு இருந்த பக்தர் சொன்னார்.

    தாராகாசுரனை வதம் செய்த இடம் ஒரு மலையின் சிகரமாம். அந்த இடத்திற்கு குமராத்ரி மலை என்று பெயர் வந்தது. தாராகாசுரனை வதைத்த முருகன் மேல் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு அதிக அன்பும், பாசமும் ஏற்பட்டு மனம் நெகிழ்ந்து, தன் மகள் தேவசேனையைத் திருமணம் செய்து கொடுத்தான். பின் பட்டாபிஷேகமும் செய்து முடித்தான். அந்த அபிஷேக நீர்தான் குமரதாரா நதியானதாம். அங்கு தங்கிய குமரன் ஒருநாள் மலைப்பகுதியில் நடக்க, அங்கு ஒரு குகையினுள் வாசுகி தவம் செய்வதைக் கண்டார். வாசுகியின் தவக்கோலமும் முகத்தின் அழகும் அவரை மிகவும் கவர்ந்தது. அதனால் வாசுகியைத்தன் தோழனாக ஏற்று அவனுக்குத்துணையாக கூட அங்கு தங்குவதாக வாக்கு கொடுத்தாராம். கருடனையும் குமராத்ரி எல்லைக்குள் வரக்கூடாது என்றார். ஆனால் கருடன் தான் வருடம் ஒருமுறையாவது குமரனை வலம் செய்ய விருப்பப்பட்டார். அதன்படியே வருடத்தில் ஒருமுறை கருடன் அங்கு வருகிறார். சபரிமலை ஜோதி தெரியும் முன் கருடன் வந்து சுற்றுவது போல் இங்கும் மார்கழி மாதம் நடக்கும் உற்சவத்தில் தேர் ஊர்வலம் முன் கருடன் வந்து மும்முறை வலம் வந்தப்பின் தான் தேர் கிளம்பும். இது காணக்கிடைக்காத காட்சி தான்.

    இந்த ஆலயத்தில் பல தூண்களில் நாகம் வடிக்கப்பட்டிருக்கிறது. அந்த நாகத்தின் எல்லா முகங்களிலும் வைணவ சம்பிரதாயம் போன்று திருமண் குறி இடப்பட்டிருகிறது. தவிர கருவறைக்குள் ஆதிசேஷன் இருப்பதும், எதிரில் கருட ஸ்தம்பம் இருப்பதும் வைணவ சம்பிரதாயமாக இருக்கிறது. அத்துடன் அருள்மிகு சுப்பிரமண்யாவும் இருப்பதும், சைவமும் வைணமும் கைக்கோர்த்துக்கொண்டு அருள் புரிவதும் என் மனதுக்கு மிகவும் பிடித்திருந்தது.

    அங்கு இன்னொரு சடங்கு மிகவும் புதிதாகவும் முக்கியமாகவும் எனக்குப்பட்டது. அதுதான் அக்ஷய பாத்திரம் கொண்டு வரும் சடங்கு. பூஜை முடிந்தபின் அர்ச்சகர் கருவறையினுள் இருக்கும் ஒரு கரண்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். பின் நேராக மடப்பள்ளி சென்றார். அவர் கையில் இருந்த கரண்டியில் கர்ப்பகிரகத்தில் நைவேத்தியம் செய்த பிரசாதம் இருந்தது. அதை அவர் மடப்பள்ளியில் இருக்கும் மொத்த அன்னத்தில் கலந்து விடுவாராம். பின் அன்னதானம் நடக்குமாம். அங்கு போஜனத்திற்கு எத்தனைப்பேர் வந்தாலும் அன்னம் வளர்ந்து கொண்டே இருக்கும் என நினைக்கிறேன். அதனால் தான் அந்தக்கரண்டி அட்சயப்பாத்திரமாக இருக்குமோ என எனக்குத் தோன்றியது. எத்தனைக்கூட்டம் வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் அன்னதானம் நடப்பது மிகவும் பாராட்டுக்குரியதுதான்.

    இங்கு நடக்கும் அங்கப்பிரதக்ஷிணம் சற்று வித்தியாசமாக இருக்கிறது. பிரார்த்தனை செய்பவர், வேண்டிக்கொண்டவர் எல்லோரும் சாப்பிட்ட எச்சில் இலைகளின் மேல் அங்கப்பிரதக்ஷிணம் செய்வார்களாம். இதனால் அவரது தீராத நோயும் மறைந்து போய் விடுகிறதாம்.

    கோயிலைச் சுற்றி வர, பின்புறம் மேற்கே பார்த்து ஒரு சன்னிதியில் ஒரு அழகிய சிவலிங்கம் இருக்கிறது. இதை “குக்கே லிங்கம்” என்கின்றனர். குக்கே என்றால் என்ன அர்த்தம் என்று கேட்க ‘குக்கே” என்றால் கூடை என்ற விடை கிடைத்தது. கூடை சிவலிங்கம் என்றால் என்னவாயிருக்கும் என்று என் மண்டைக்குடைய அங்கிருக்கும் ஒருவர் அதற்கும் விடையளித்தார். முன் காலத்தில் இங்கு ஒரு கூடை நிறைய சிவலிங்கங்கள் இருந்தவனவாம். அதனால் இந்த ஊருக்கே “குக்கே சுப்பிரமண்யா” என்ற பெயர் அமைந்ததாம்.

    மேற்கு பிரகாரத்தில் ஸ்ரீ மாருதி ராயரும் இருக்கிறார். அவரையும் பார்த்து விட்டு வெளியில் வந்தேன். அங்கு ஒருவர் “உள்ளே ஒரு திண்னையில் நின்றுகொண்டிருக்கும் பல்லாள ராயர் சிலையைப்பார்த்து வந்தீர்களா? அது ரொம்ப முக்கியமாயிற்றே” என்றார்.

    “அது என்ன சிலை? நாங்கள் பார்க்கவில்லையே”என்று அசடு வழிந்தபடி சொன்னேன.

    “அந்தச்சிலை முன் பலர் முழு பூஷிணிக்காய், பருத்தி போன்றவற்றை வைத்து காணிக்கை செலுத்துகிறார்கள். அதைப்பார்க்கவில்லையா? இந்தச்சிலையை முக்கியமாக பார்த்துவிட்டு வருவது வழக்கம். போய் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள் “

    “இதோ போகிறோம். அதற்கு முன்னால் அந்த பல்லாளராயர் யார் ? அவருக்கு ஏன் அங்கு சிலை இருக்கிறது? என்பதைச் சுருக்கமாக சொல்லுங்களேன்”

    “சொன்னால் போச்சு” என்று கதையை ஆரம்பித்தார்.

    “இந்தக்கோயிலுள்ளே சுப்பிரமண்யா மடம் என்று ஒன்று இருக்கிறது. இந்த மடத்தை நிறுவியர் ஸ்ரீ விஷ்ணுதீர்த்தர். இவர் ஸ்ரீ மத்வாசாரியாரின் தம்பி. இவர் தினந்தோறும் குமார பர்வதம் சென்று தியானம் செய்வார். அவரிடம் சாளக்கிராமம் வைத்த ஒரு பெட்டி ஒன்று எப்போதும் இருக்கும். அதை சம்புடம் என்பார்கள். ஸ்ரீ விஷ்ணுதீர்த்தரின் சீடர்கள் தங்களுக்கும் சாளக்கிராம சம்புடம் ஒன்று வேண்டும் என்று கேட்டார்கள். அவரும் “அது குமாரதாரா நதியில் வரும், அப்போது எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

    அதேபோல் அந்த நதியில் ஒரு சம்புடம் அடித்துக்கொண்டு வர சீடர்கள் மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக்கொண்டனர். ஸ்ரீவிஷ்ணு தீர்த்தரின் முக்கிய சீடரான ஸ்ரீ அனிருத்த தீர்த்தர் அதைத்திறக்க முயற்சி செய்தார், ஆனால் முடியவில்லை. ஆகையால் அதை அப்படியே வைத்துக்கொண்டு பூஜை செய்தார்.

    அந்த ஊர் பல்லாளராயர் இதைக்கேள்விப்பட்டு ஒரு கொல்லனை அனுப்பி அதைத் திறக்கச்சொன்னார். அவன் முயற்சி செய்தும் முடியவில்லை. ஆனால் அவன் உடல் முழுவதும் ஒரு எரிச்சல் கிளம்பி, உடல் நலம் குன்றி இறந்து போனான். பின் யானை மூலம் அதைத் திறக்க முயன்றார். அந்த யானையும் சம்புடத்தை தன் காலின் கீழ் போட்டு மிதித்தும் அது திறக்கவில்லை. ஆனால் அதன் உடலும் எரிய ஆரம்பித்து அது பைத்தியம் பிடித்தாற்போல் ஓடி ஒரு நதியில் இறங்கி செத்தது.

    மறுநாள் அரசனுக்கும் உடல் எரிய ஆரம்பித்தது. அவன் அழுதபடி அனிருத்தத்தீர்த்தரிடம் சென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டான். அதைக்கேட்ட சுவாமிகள் ஒரு பரிகாரம் செய்யச்சொன்னார். அதுதான் ஆலயத்தினுள் இருக்கும் அவனது சிலை. அவனைப்போல் ஒரு சிலை வைக்கப்படவேண்டும் என்றும் அதற்கு பக்தர்கள் பூஷிணிக்காய், பருத்தி போன்றவைகளைக் காணிக்கையாக செலுத்தினால் அவனுக்கு இந்த பாபத்திலிருந்து விடுபட ஒரு நல்ல பிராயசித்தம் ஆகும் என்றார்.

    இன்றும் அந்தச்சிலை முன் இரவு பூஜையில் காட்டும் தீபாராதனை முடிந்த பின்னர் அந்த தீபக்காலை இந்தச்சிலைக்கு அருகில் கொண்டு வைக்கிறார்கள். இந்தக்கோயிலில் வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகள் எல்லாம் நடந்து விடுவதால் என்றுமே கூட்டத்தைக் காணமுடிகிறது

    ஓம் சரவணபவ.

     

     

     

    படங்கள் உதவிக்கு நன்றி: http://temple.dinamalar.com/en/new_en.php?id=99

    Share