Blog

  • போர்! போர்!! போர்!!!

    போர்! போர்!! போர்!!!

    சி. ஜெயபாரதன், கனடா

    போர் வந்திருச்சி! போர் வந்திருச்சி!
    அக்கப் போர் வந்திருச்சி!
    மக்களுக்கு
    துக்கப் போர் வந்திருச்சி!
    உக்ரேனுக்கும் ரஷ்ய புட்டினுக்கும்
    சிக்கல் போர் வந்திருச்சி!
    வீடிழந்து, நாடிழந்து, எல்லாம் இழந்து
    கால் நடையில்,
    கட்டிய துணியுடன்,
    பெண்டு, பிள்ளையுடன்,
    ஆயிரக் கணக்கான
    மாந்தர்
    அந்தோ புலப் பெயர்ச்சி!
    அண்டை நாடுகளின் நலிந்த
    எக்கானமி நாசமாச்சி!
    காரணம் யார்?
    பேராசை பிடித்த பேயாட்சி
    வல்லரசும்,
    வலிமை யற்று
    ஆயுதம் கடன் வாங்கும்
    மெல்லரசும்.
    ஓராண் டுக்கும் மேலாய்
    கொரோனா தொத்து நோயில்
    திக்கு முக்காடிச் செத்தவர்
    கோடி, கோடி!
    சூறாவளி யிலும், பேய் மழையிலும்
    காட்டுத் தீ எரிப்பிலும்
    எல்லாம் இழந்து தவிக்கும்
    இல்லற மக்கள்
    பல்லாயிரம்!  பல்லாயிரம்!
    ஓர் நாட்டில்
    போர் நிகழ்ந்தால்
    உலக நாடுகளில் எல்லாம்
    எதிரொலிக்கும்!
    உணவுப் பண்டங்கள்
    விலை ஏறுது!
    பெட்ரோல் விலை  ஏறுது!
    வீட்டு வாடகை,
    காய் கறி, பால் தயிர், பீட்ஸா
    விலை ஏறுது!
    போர் நின்றாலும், வெடிப் புகை
    ஆறினாலும்
    ஏறிய விலை ஒருபோதும்
    இறங்கா!
    சரித்திரம் மீளுது தரணியில்!
    மரிப்பான்,
    ஹிட்லர் ஆன புட்டின்
    விட்டில் போல்!

    Share
  • சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?

    சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?

    கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய, மிகுபுகழ் பெற்ற, ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?’ இந்த இனிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். தில்லைக் கூத்தனை வணங்கி, எல்லை இல்லா அருளைப் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குலதெய்வ வழிபாடும் சிவராத்திரியும்

    குலதெய்வ வழிபாடும் சிவராத்திரியும்

    பேராசிரியர். முனைவர் நா. அருணாசலம்,
    அழகப்பா பல்கலைக்கழகம்   

    ஒவ்வொரு நொடியும் பல கிரகங்கள் மற்றும் கோடானகோடி அண்ட நட்சத்திரங்களின் கதிர்வீச்சுக்கள் நம்மை இந்தப் பிரபஞ்சத்தில்  கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில் அண்ட இரகசியங்களையும்,  உலகத்தை உருவாக்கிய இயற்கையின் ஆதித் தலைவனையும், நாம் உணர்ந்தும் உணராமலும்,  வாழ்வியல் பரிணாமத்தின் ஒரு அங்கமாக  இயங்கிக் கொண்டிருக்கிறோம்.  நம்முள் அர்த்தம் கவனிக்கப்படும் பொழுது, நமக்குள் தத்துவம் புரிந்தால், காரணம் அறிந்த தேடலின் விடை ஒரு வேளைப் புரியப்படலாம்.

    உலகில் ஆண் பெண் என்று பாலின வேறுபாடு இருந்தாலும் நமக்கு உயிர் என்பது ஒன்றுதான். இறை என்றால் மங்களம் என்றும்  உயிர் என்றும் பொருள்.  உயிர் வாழ உணவும், இருப்பிடமும் மற்றும்  ஆரோக்கியமும்  தேவை . இவை அனைத்தும் நம் உடலை மட்டுமே வளர்க்கும். உடலை பாதுகாத்து நன்றாக வளர்க்கும் நாம், உயிரை வளர்க்க, அதை மேம்படுத்த என்ன செய்கிறோம்.  அவரவர்கள் நம்பிக்கையின் அடைப்படியிலும், கலாச்சாரத்தின் தாக்கத்தினாலும், நாம் இறை என்கிற ஒரு மூலம் உள்ளது என்று நம்புகிறோம் அல்லது அது இறை இல்லை, அதுவே இயற்கை என்கிற சித்தாந்தத்தைக் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிடுகிறோம்.

    மனிதன் தன் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் அவன் வெளிமுகமாகவும், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் உள்முகமாகவும் செயல்படுகிறான்.  மனிதன் சமநிலை தவறாதவண்ணம் அவனை உள்முகமாக இயங்கச் செய்து, பின்னர் ஒருமுகமான சமநிலைப்பாட்டில்வைத்திருக்க இறை சார்  செல்பாடுகள் தேவைப்படுகிறது . அதை அவன் உணர்ந்து,  உண்டாக்கி அதில்  நம்பிக்கையோடு பயணிக்கிறான்.  இதில் மனிதனை முழுமையாக ஈடுபடுத்த நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது தான் வழிபாடுகள் என்கிற இந்தக் கொண்டாட்டங்கள் மற்றும் விழாக்கள் ஆகும்.

    மனம் போக்கில் போனபடி அலையாமல், புலன்களைக் கட்டுபடுத்துவற்கே வழிபாடு தேவைப்படுகிறது. இறைவனைத் தேடி  ஒருவர் போகிறார்  என்றால் அவர் தன் உயிரின் முலத்தைத் தேடிப் போகிறார் என்று அர்த்தம்.  நமது அண்டவெளியில் பூமியானது சூரியனை நீள் வட்ட பாதையில் சுற்றுகிறது. இவை  சிறிய நீள்வட்ட பாதை,பெரிய நீள்வட்ட பாதை என இரண்டு வகையாக உள்ளன. பூமியானது பெரிய நீள்வட்ட பாதையில் இருந்து சிறிய நீள்வட்ட பாதைக்கு மாறுகின்ற நிகழ்வே நாம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். நம் விண்வெளியில் லூமினிபெரஸ் ஈதர் என்ற ஓர் அற்புத ஆற்றல் வாய்ந்த சக்தி அலைகள் நிரம்பி இருக்கிறது. இந்த சக்தி நம் மகாசிவராத்திரி அன்றுதான் பூமிக்கு முழுமையாக கிடைக்கிறது. இந்த ஈதர் சக்திக்கு இரு தன்மைகள் உள்ளன. ஒன்று ஸ்பிரிங் தன்மை, மற்றொன்று ஃபால்தன்மை என்பதாகும். இதில் ஸ்பிரிங் தன்மைக்கு ஆற்றல் அதிகம். ஃபால்தன்மைக்கு ஆற்றல் குறைவு. மகாசிவராத்திரியன்று மட்டுமே இந்த ஈதர் சக்தி ஸ்பிரிங் தன்மையில் ஒரு விண்கலன் வேகத்தோடு நேரடியாக பூமியை வந்தடைகிறது. எனவே இந்த மகா சிவராத்திரி அன்று இரவு முழுதும் தூங்காமலும் முதுகை நேராக நிமிர்ந்து அமர்ந்து இருப்பதன் மூலம் அளப்பரிய ஆற்றலையும் நன்மைகளையும் அனைவரும் பெற முடியும் என ஆன்மீக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

    மேலும், மகா சிவ ராத்திரி அன்று, வழக்கமான  குணத்தில் இருந்து விடுபட்டு விழிப்பு நிலை அடைந்து அதன் மூலம் நாம்,  இறை நிலையை உணர முயற்சிக்கிறோம். அன்று நாம் உணர முற்பட வேண்டியது மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலை மூலம் நம் ஆன்மாவில் உள்ள இறையை உணருதலே  என்பது ஆகும்.

    குலத்தை காப்பது குல தெய்வம். குலதெய்வ வழிபாடு தமிழர்களின் முக்கியமான வழிபாட்டு முறையாகும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினைச் சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக்காக்கும் வல்லமை படைத்தவை. நமக்கு ஒன்று என்றால் நம்மை காக்க முயல்வது குலதெய்வமே ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். குல தெய்வ வழிபாடுதான் முதலில் மற்ற தெய்வ வழிபாடுகள் எல்லாம் பிறகுதான் என்ற பொதுவான கருத்து உள்ளது. எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் முதல் வழிபாடு குல தெய்வத்திற்குத்தான் நடைபெறும். அதன் பிறகு தான் மற்ற நிகழ்ச்சிகளைத் தொடங்கவேண்டும். குல தெய்வ வழிபாடு பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. மணிமேகலை எனும் குலதெய்வம் பற்றி இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகிறார். கோவலன் நடுக்கடலில் தன் கலன் தடுமாறி உயிருக்கு தவிக்க, மணிமேகலை எனும்  குலதெய்வம் தோன்றி கோவலனைக் காப்பாறியதாகவும், தன் குலம் வாழ தன்னை மீட்ட தன் குலதெய்வத்தின் பெயரை, தன்  வாரிசுக்கு, மணிமேகலை என பெயர் சூட்டினான் கோவலன் என்று சொல்கிறார் இளங்கோவடிகள். நாள் செய்யாததைக் கோள் செய்யும். கோள் செய்யாததைக் குலதெய்வம் செய்யும் என்பார்கள்.

    அப்படி குலம் தழைத்தோங்க அனைவரும் சிவராத்திரி நாளில் குல தெய்வ வழிபாடு செய்வார்கள். மகா சிவராத்திரியை குல தெய்வ வழிபாட்டுக்கான நாளாக கொண்டாடுகின்றனர். மகா சிவராத்திரி திருநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலும் சிவராத்திரி திருநாள் கொண்டாடப்பட்டாலும், அதிகம் மக்கள் சென்று கொண்டாடுவது தங்கள் குலதெய்வத்தைத்தான். தமிழகத்தின் வட மாவட்டங்களில் அன்றைய தினத்தில் பாரி வேட்டை நிகழ்ச்சியும், மயானக் கொல்லை நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெறும். தென் தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் குல தெய்வத்தை வழிபடச் செல்கிறார்கள்.

    தமிழகத்தில் பெரும்பாலவரின் குலதெய்வமாக அய்யனார் மற்றும் அவரின் பரிவார தெய்வங்கள் இருந்து வருகிறது. அய்யனார் வழிபாட்டைக் குலதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு. பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிளும் அய்யனாரை காவல் தெய்வம் ஆக வழி படுகின்றனர். அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம்.  இந்த அய்யனார் தமிழர்களின் மூதாதையராக இருந்திருக்கலாம். இவர் மதம் சார்ந்து அறியப்படும் கடவுள் இல்லை. அய்யனார் கண்மாய்க்கரையில் தெய்வமாகப் பரமேசுவரன் மோகினியால் தோற்றுவிக்கப் பெற்றவர் என்கிற நம்பிக்கையும் மக்களிடையே நிலவி வருகிறது.

    அய்யனாரின் பரிவார தெய்வங்களாக  கருப்பணசாமி, வீரபத்திரர், இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன், பொன்னன், சேனையன், முன்னோடி, சுடலைமாடன்,  பட்டாணி, கருத்தாக்கலியான், அடைக்கலம்காத்தான், மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும், செல்லியாய், காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, இசக்கி, திரௌபதி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, காத்தாயி, காடேறி,  ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த கன்னியர்கள் முதலிய பெண்தெய்வங்களும் உள்ளனர். சிவராத்திரி அன்று அய்யனார் பிறந்தவர் என்பதால் அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றைய தினம், அய்யனாரைக் குலதெய்வமாகக் கும்பிடுவோர் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் மற்றும் உறவினர், பங்காளிகளுடன்  ஒன்றாகக் கூடிவந்து வழிபடுகின்றனர். ஐயனாரின் பரிவாரத் தெய்வங்களில் ஒன்றான கருப்பர் காவல் தெய்வமாவார். இவரையும் அனைவரும் சேர்ந்து வழிபடுவது குறிப்பிடத்தக்கது.

    அண்டத்தின் நேர்மறை கதிர் வீச்சு அதிகமாக உள்ள மகா சிவராத்திரி அன்று காலையிலிருந்து மறுநாள் காலை வரை உள்ள நேரத்தில், சில மணித்துளிகளாவது நம் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு பிடித்த பலகாரங்களையும் உணவு வகைகளையும் வைத்து வழிபட்டு, பின் குலதெய்வக்கோவிலுக்கும், சிவன் கோயிலுக்கும் சென்று பிரார்த்தனை செய்ய அனைவருக்கும் நற்கதிர் வீச்சால் பேராற்றல் ஏற்பட்டு தன்னம்பிக்கையும், வாழ்வியல் சூழலை எதிர் கொள்ளும் திறனும் அதிகரிக்கும் என்பதில் ஐயம் இல்லை.

    எனவே நாமும் இப்புனித மகா சிவராத்திரி தினத்தில் எல்லாம் வல்ல பிரபஞ்சப் பேரியக்க ஆற்றலை அடைய நம் முன்னோர்களையும், குல தெய்வத்தையும்  மற்றும் ஆதி சிவ வழிபாட்டையும், அனைவரும் சேர்ந்து மனம் ஒன்றிய பிரார்த்தனை மூலம் கடைபிடித்தும், அந்தந்த கோவில்களுக்கு சென்றும் அருள் பெற்று  மகிழ்வுடன் வாழ்வோமாக.

    Share
  • மந்திரமாவது நீறு | திருஞானசம்பந்தர்

    மந்திரமாவது நீறு | திருஞானசம்பந்தர்

    தீராத நோயெல்லாம் தீர்க்கும், நீங்காத இடரெல்லாம் நீக்கும். திருநீற்றின் அருமை, பெருமைகளைத் திருஞானசம்பந்தர் உரைக்கக் கேளுங்கள். இரண்டாம் திருமுறையிலிருந்து ‘மந்திரமாவது நீறு’ இதோ. ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். சிவபெருமானை வணங்கி, மஹா சிவராத்திரியைக் கொண்டாடுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பொன்னார் மேனியனே | சுந்தரர் தேவாரம்

    பொன்னார் மேனியனே | சுந்தரர் தேவாரம்

    தித்திக்கும் தேவாரப் பாடல், ஏழாம் திருமுறையின் எழுச்சிக் கீதம், சுந்தரர் இயற்றிய ‘பொன்னார் மேனியனே’ இதோ. ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். மஹா சிவராத்திரியைக் கொண்டாடுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மகாசிவராத்திரி மகத்துவம்!

    மகாசிவராத்திரி மகத்துவம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்” என்று நம்பிக்கை ஊட்டினார் ஞானசம்பந்தப் பெருமான். அவரால் அப்பரே என்று அழைக்கப்பட்டவர், “நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா” என்று அழைத்து கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் – நற்றுணையாவது நமச் சிவாயவே” என்று உபதேசம் செய்தார். அவர்களின் பின்னர் வந்தவர் “மீளா அடிமை உமக்கே ஆளாய்” என்று இறைவனிடம் இயம்பி நிற்கின்றார். “ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி – உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரியும் செல்வமாகிய சிவனை”, “நமச்சிவாய வாழ்கநாதன் தாள் வாழ்கஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்று பணிந்து நின்று அதன் வழியில் எம்மையும் ஆற்றுப்படுத்துவராக மணிவா சகப் பெருமான் வந்து நிற்கிறார். இவர்கள் யாவருமே இறை நினைப்பினை மனமிருத்தி வாழ்நா ளெல்லாம் வாழ்ந்தவர்கள். இவர் கள் சமயநெறியின் வழியில் கால்பதித்து நின்றவர்கள் எனலாம். இவர்களை முன்னிறுத்தியே “நால்வர் வழியில் நடப்பது நன்று” என்றும், “நாலு பேர் சொல்லுவதைக் கேள்” என்றும் மரபாக வந்திருக்குமோ என்பதும் கருத்திருத்த வேண்டியதே. இவர்களின் சிந்தனைசெயற்பாடு, வாழ்வியல் முறைகள் அத்தனையுமே கோவிலாகவே இருந்திருக்கிறது என்பதுதான் முக்கியமாகும். கோவிலை மையமாகக் கொண்ட இவர்களின் செயற்பாடுகளிற் கிடைத்த அனுபவங்கள் எங்கள் சமய நெறியில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. முழுமுதற் கடவுளாய் எம்பிரான் சிவனையே இவர்கள் யாவரும் பணிந்து போற்றிதங்களின் மனத்தைப் பக்தியால் பிணைத்துஉருக்கமாய் பல தெய்வத் திருமுறைகளாக ஆக்கி எமக்கெல்லாம் அளித்திருக்கிறார்கள். அவர்களின் அகத்தில் அமர்ந்திட்ட அந்த ஆதியும் அந்தமு மில்லா அரும்பெருஞ் சோதியான சிவனைக் குறித்து பல விரதங்கள் அனுடிக்கப்பட்டு வருவதை யாவரும் அறிவோம். அப்படி அமையும் அந்த அருட் சோதியான சிவனின் விரதங்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரிய தாகவும்ஆன்மீக. அறிவியல் கருத்துகள் நிறைந்ததாகவும் அமைகின்ற விரதம்தான் வருடந் தோறும் வரு கின்ற “மகா சிவராத்திரி” விரதமாகும்.

    மகிமை வாய்ந்த சிவராத்திரி என்பது  ஐந்துவகையினதாக இருக்கிறது  என்பது நோக்கத்தக்கத்தாகும். திங்கட்கிழமையோடு இணைந்து வருவது “யோக சிவராத்திரி”. வருடத்தின் பனிரெண்டு மாதங்களில் வருகின்ற தேய்பிறைவளர் பிறைகளில் வரும் சதிர்த்தசி திதியில் வருகின்ற இருபத்து நான்கு நாட்களையும் “யோக சிவராத்திரி” என்னும் பெயரினால் அழைக்கின்றனர். தை மாதம் தேய்பிறை பிரதமை தொடங்கி பதிமூன்று நாட்கள் தினமும் ஒரு வேளை மட்டும் உணவு உண்டுபதினான்காம் நாள் வருகின்ற சதிர்த்தசி திதியன்று முறையாக விரதம் இருப்பதுதான் “பட்ச சிவராத்திரி” என்று அழைக்கப்படுகிறது. சிவராத்திரி என்பது பெரும்பாலும் அமாவாசை அல்லது சதிர்த்தசி திதியை அண்டியே வரும். ஆனால் “மாத சிவராத்திரி” மாதத்தின் மற்றைய திதிகளிலும் வருகிறது என்பது நோக்கத்தக்கதாகும். இப்படிச் சிவராத்திரிகள் இடம் பெற்றாலும் மாசி மாதத்து தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் வருகின்ற சிவராத்திரியே “மகா சிவராத்திரி” என்று ஏற்றிப் போற்றி அனுட்டிக்கப்படுகிறது. ஐந்து சிவராத்திரிகள் என்னும் நிலையில் அவற்றுள் ஒன்றான சிவராத்திரிக்கு மட்டும் “மகா” என்று அடைமொழி கொடுத்து அதனை உயர்வாக எண்ணுவது ஏன் என்னும் எண்ணம் எம்முள் எழுகிறதல்லவாஅப்படி அந்த நாளில் சிவராத்திரி அமைவதற்கு ஆன்மீகம் முக்கியமா அல்லது அதனுடன் அறிவியல் முக்கியத்துவப்படுத்தப்படுகிறதா என் னும் சிந்தனைகள் எழுகின்றன அல்லவா!

    எங்களின் சமயம் வாழ்வியல் நெறிகளை முழுவதுமாய் உள்ளடக்கிய சமயமாகும். உணவு சம்பத்தப்படுகிறது. உடை சம்பத்தப்படுகிறது. உடற் சுத்தம் சம்பத்தப்படுகிறது. பரம்பொருளைப் பாடிப்பரவுதற்கு நல்லு டலும்நல்லாரோக்கியமும் அடிப்படையாகும். உடலின் ஆரோக்கியத்துக்கு உணவு என்றுமே இன்றியமை யாததாகும். இவை அனைத்தையும் தாங்கி நிற்பதாகவே எங்கள் சமயம் விரதம்” என்னும் நிலையினை ஏற்படுத்தி இருக்கிறது எனலாம். அது கூடத் திட்டமிடப்பட்டே இருக்கிறது என்பது நோக்க த்தக்கதாகும். விரதம் என்று சொல்லும் வேளை அங்கே கோள்கள் சம்பந்தப்படுகின்றன. திதிகள் சம்பந்தப்படுகின்றன. கோள்களினால் நாள்கள் அமைகின்றன. நாட்களும்திதிகளும் ஆன்மீக மார்க்கத்தில் தத்துவத்தை, அறிவியலைக் குறித்திடும் நுட்பமான  சொற்கள் என்பதை யாவரும் கருத்திருத்தல் அவசியமேயாகும். இதன் அடிப் படையில்த்தான் நாம் “மகா சிவராத்திரியை ” பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

    சமயத்தின் நுட்பமான கருத்துக்களை யாவரும் விளங்க வேண்டும் என்ப தற்காகவேதான் கதைகள் வந்தன. கதைகளின் இன்னுமொரு நிலைதான் புராணங்கள் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் சிவராத்திரி எப்படி ஏற்பட்டது என்பதற்கு பல கதைகள் வழக்கில் வழங்கி வருவது  அனைவரும் அறிந்ததேயாகும். கதைகளை வைத்துக் கொண்டு சமயத்தையோ அல்லது அதன் தத்துவத்தையோ விமர் சிப்பதோ அல்லது கேலியாகப் பேசுவதோ ஏற்புடையதல்ல. இனிப்புத் தடவி அதனுள் மருந்தினை வைத்துக் கொடுப்பது போலத்தான்புராணக் கதைகள் சமய உண்மைகளை எடுத்து உரைக்கின்றன என்பதுதான் உண்மை நிலையாகும்.

    திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது எழுந்த ஆலகால விஷத்தை எம்பெருமான் ஏற்று – தானே உண்டாரென்பதும்பிரம்மாவும்விஷ்ணுவும் ஆணவத்தால் முரண்பட்டு யார் பெரியவர் என்று நின்ற நிலையில் எம் பெருமான் ஜோதிப் பிளம்பாகத் தோன்றினார் என்றும் அவர்கள் அந்த ஜோதியின் அடியையும் முடியையும் தேடியும் காணொணா நிலையில் எம் பெருமான் அவர்களுக்கு உண்மையினை உணர்த்தினார் என்பதும், கண்ணப்பருக்கு எம்பெருமான் காட்சி கொடுத்தரென்றும்பஞ்சபாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனனுக்கு பாசுபாஸ்திரம் கிடைக்கச் செய்தாரென்றும்யமனிடமிருந்து மார்க்கண்டேயரை எம்பெருமான் காத்த தினமென்றும்பல கதைகள் வழக்கில் இருந்து வருகின்றன என்பது நோக்கத்த த்தக்கது. இவைதான் சிவராத்திரி என்றால் இதற்கு அப்பாலும் சிவராத்திரியின் சிறப்பு இருக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியமாகும். அதுதான் – மகாசிவராத்திரி என்று மாசியில் ஏன் சிறப்பாக்கினார்கள் எங்கள் முன்னோர்கள் என்னும் அறிவியல் அணுகு முறையாகும்.

    நாங்கள் அனைவருமே பூமியிலேயே இருக்கிறோம். பிறப்பும், இறப்பும் யாவருக்கும் இந்தப் புவியிலே தான். உலகம் என்பது நாம் வாழுகின்ற இடம். இந்த உலகம் இயங்குவதற்கு ஒரு சக்தி கட்டாயம் தேவையானதுதானே. அந்தச் சக்தியைத்தான் “ஈத்தர்” என்று அறிவியல் சொல்லுகிறது.ஈத்தர் என்னும் சக்தியானது அண்டம் முழுவதுமே நிறைந்தே இருக்கிறது என்று அறிவியல் பகர்கிறது,

    பூமியானது சூரியனை சிறிய நீள்வட்டப் பாதையிலும் பெரிய நீள்வட்டப் பதையிலுமாக இரண்டு பாதையில் சுற்றி வருகிறது என்பது வானியல் அறிவாகும். இவ்வாறு பூமி சுற்றி வரும்பொழுது பெரிய நீள்வட்டப் பாதையில் இருந்து சிறிய நீள்வட்டப் பாதைக் கு மாறுகின்ற நேரமாகத்தான் எங்களின்   “மகாசிவராத்திரி” வரும் நேரம் அமைகிறது என்பதும் நோக்கத்தக்கதாகும். ஈத்தர் சக்தியானது எப்பொழுதுமே பூமியை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரியில் மட்டுமே ஈத்தர் சக்தியின் அளவு அபரிதமாக இருக்கும். இப்படி அபரிதமாக இம்மாதத்தில் வருடத்துக்கு ஒரு முறை அமைவதால் இக்காலத்து வருகின்ற சிவராத்திரியைமகாசிவராத்திரி”  என்று உயர்வுடன் போற்றும் நிலை ஏற்பட்டது என்பதை யாவரும் கருத்திருத்தல் அவசியமானதாகும் .  

    மாசிமாதத்தில் வருகின்ற ஈத்தருக்கு அதிக சக்தி காணப்படுகிறது. ஈத்தர் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகரும். பூமியானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுற்றிக் கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழுச்சக்தியும் கிடைக்கும் நிலை இந்த மகா சிவராத்திரிக்கே வாய்க்கிறது.

    மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து கண்விழித்து முதுகை நேராக வைத்து தியானம் செய்யும் பொழுது ஈத்தர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட்  என்ற ஆனந்த சுரப்பி   மூளையை அடைந்து பல வித நல்ல ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது. இந்த நேரத்தில் நமக்கு நாமே ஆசீர்வாதம் (Self Blessing) செய்து கொள்ளும் பொழுது இது நமது டி என் ஏ (DNA) ல் கெட்ட பதிவுகளை (கர்மா) அழிக்கும் வல்லமையை உருவாக்குகிறது.

    ஈத்தர் சக்தி என்பது பகலிலும் உண்டு. இரவிலும் உண்டு. பகலில் சூரிய வெளிச்சம் காரணமாக சற்று க்குறைவாகவே காணப்படும். ஆனால் இரவில் சூரிய வெளிச்சம் காணப்படாமையினால் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். இரவு ஒன்பது மணி தொடக்கம் அதிகாலை இரண்டு மணிவரை உடலின் இயக்கமும் வித்தியாசமாய் இருக்கும். இவ்வேளை ஈத்தர் சக்தியின் அளவும் கூடதலாகவே அமையும் நிலை காணப்படுவதால் இவ்வேளையிலே கட்டாயம் விழித்திருப்பது அவசியமாகிறது. எனவேதான் மகாசிவராத் திரியின் முக்கிய சாமமாக இந்த நேரம் எமது சமயரீதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

    ஆன்மீகத்துடன் அறிவியலைச் சித்தர்கள் இணைத்தே விட்டார்கள். சித்தர்களின் நோக்கில் சிவராத்திரி என்பது மிகவும் முக்கிய தினமேயாகும். அதுவும் மகாசிவராத்திரி உடலையும், உள்ளத்தையும், நல்ல நிலையில் வைப்பதற்கு மிகவும் உகந்த தினம் என்பதே அவர்களின் தீர்க்கமான முடிவாகும். சித்தர்களின் சிந்தனை பலருக்கும் விளங்க மாட்டாது. ஆனால் அவர்கள் உண்மைநிலையினையே உரைத்து நிற்பார்கள்.

    பசித்திருத்தல் என்பதும் தத்துவார்த்தமானது. அதாவது இறையுணர்வினைப் பெறுவதற்கு பசித்திருக்க வேண்டும். தனித்திருத்தல் என்பது தனிமையாக இருப்பதன்று. மனத்தினை அலையவிடாமல்ஒரு நிலையில் வைத்திருப்பதாகும். விழித்திருத்தல் என்றால் நித்திரை செய்யாது இருப்பதல்ல. மனத்தை எங்குமே செல்ல விடாது இறை நினைப்பை நாடி விழித்திருக்கும் நிலையினையே குறிப்பதாகும். இம்மூன்றையும் மகாசிவராத்திரியின் முக்கிய நிலையாக நாம் அனைவரும் கொள்ளுதல் வேண்டும்.

    விரதம் என்றாலே கட்டுப்பாடு என்றுதானே அர்த்தப்படும். கட்டுப்பாடு என்பது உடலுக்கு மட்டுமல்ல. உள்ளத்துக்குந்தான் என்பதை உணர்த்துவதே விரதத்தின் உயர் நிலையாகும். மகாசிவராத்திரியில் உடல் கட்டுப்படுகிறது. உள்ளமும் கட்டுப்படுகிறது. எம்முள்ளே அபரிதமான ஒரு சக்தியும் உள்நுழைகிறது. அந்தச் சக்தியினை உள்வாங்கும் பக்குவத்தை நாம்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    “தேடிக் கண்டு கொண்டேன் – திரு மாலொடு நான் முகனும்
    தேடிக் தேடொணத் தேவனை யென்னுளே தேடிக்
    கண்டு கொண்டேன் “

    இதுதான் உண்மையான நிலையாகும். அந்தத் தேவனை நாங்கள் அனைவருமே காணலாம். அதற்காகத் தான் யாவரும் – பசித்து, தனித்து, விழித்து, இருத்தல் அவசியமாகிறது.

    சிவனே முழுமுதற் கடவுள். சிவனே அனைத்துக்கும் காரணமாய் இருக்கிறார். அவரின்றி ஓர் அணுவுமே அசையாது. ஆதியும் அவரே. அந்தமும் அவரே. இருளும் அவரே. அதையகற்றும் பேரொளியும் அவரே. அவரை முன்னிலைப்படுத்தும் பெருவிரதமாக எங்கள் சமய நெறி கைகாட்டி நிற்பதுதான் “மகாசிவராத்திரி” ஆகும். அந்தப் புனிதமான தினத்திலே “தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி – அல்லல் அறுத்து ஆனந்தம்” தரும் வண்ணம், எல்லையில்லா அன்புடன் யாவரும் அந்தச் சிவப்பரம்பொருளை இறைஞ்சி நிற்போம்.

    இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலரும் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே

    Share
  • கோளறு பதிகம்

    கோளறு பதிகம்

    திருஞானசம்பந்தர் இயற்றிய ‘கோளறு பதிகம்’, மிகச் சக்தி வாய்ந்தது. நவகிரகங்களால் நமக்கு நேரக்கூடிய தீமைகளை விலக்கக்கூடியது. இதை ஓதும் அடியார்களுக்கு நாளும் கோளும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது என்று சம்பந்தர் ஆணையிட்டுச் சொல்கிறார். இந்த அற்புதப் பதிகத்தை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்த மஹா சிவராத்திரியில் சிவபெருமானின் அளவற்ற கருணையைப் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நிலவு மேவிய கழுகு

    நிலவு மேவிய கழுகு

    கலிபோர்னியாவில் வாழும் நண்பர் கார்கில் ஜெய், சிறந்த நிழற்படக் கலைஞர். நிலவு மேவிய கழுகைப் படம் பிடித்துள்ளார். பின்னணியில் நிலவு ஒளிவட்டம் போல் இருக்க, ஞானியைப் போல் இந்தக் கழுகு வீற்றிருக்கிறது. படம் பிடித்த அனுபவத்தை, நுணுக்கத்தை நாம் நேரடியாக உணரும் வகையில் விளக்கியுள்ளார். இந்த அரிய காட்சியைக் கண்டு மகிழுங்கள்.

    Russels Hawk. 600mm, F5.6, with moon in background. California.
    Photo & video by Jayakumar Rajagopal (Kargil Jay).

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பீம புஷ்டி தரும் பீட்ரூட் பொரியல்

    பீம புஷ்டி தரும் பீட்ரூட் பொரியல்

    நல்ல ரத்தம் சேர்த்து, நாடி நரம்புக்கு வலுவேற்றி, புஜ பலத்துடன் பீம புஷ்டி தரும் பீட்ரூட் பொரியல் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் (24 & 25)

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் (24 & 25)

    ஆங்கில மூலம்: எமிலி டிக்கின்ஸன்
    தமிழாக்கம்:  சி. ஜெயபாரதன், கனடா

    தின்று விழுங்கினான் முக்கிய சொற்களை -24

    தின்று விழுங்கினான் முக்கிய சொற்களை
    ஆயின் மனக் கிளர்ச்சி வலுத்து உயர்ந்தது,
    ஏழை என்பதை அவன் அறியான், அடுத்து
    பாழடைந்து போய் விட்டது  உடற் கட்டு.

    He ate and drank the precious words,
    His spirit grew robust;
    He knew no more that he was poor,
    Nor that his frame was dust.

    நடனம் ஆடுவான் வேலை யற்ற நாட்களில்
    கற்பனை  அவனது இறக்கைகள், வெறும்
    ஒரு புத்தகம் தரும், எத்தகை விடுதலை
    கிடைக்கும் அவிழ்ந்த மனக் கிளர்ச்சிக்கு !

    He danced along the dingy days,
    And this bequest of wings
    Was but a book. What liberty
    A loosened spirit brings!

    **************************************

    புகழ்ச்சி ஒரு தேனீ – 24

    ஓங்கும் புகழ் தேன் திரட்டும் ஒரு தேனீ
    ரீங்காரக் கானம் ஒன்றுளது அறிவிக்க,
    கொட்டும் கொடுக்குளது நெருங்கின்
    நீங்கிச் செல்ல உள்ளது இறக்கை

    Share
  • தீயேறு

    தீயேறு

    ஏறன் சிவா 

    சருகாய் மண்ணில் புரளாதே — மனச்
    சத்தை இழந்து மிரளாதே!
    பருந்தாய் நீயும் மாறிவிடு — வான்
    பரப்பின் மீதே ஏறிவிடு!

    துளியாய் இலைமேல் தூங்காதே — படும்
    துயர்கள் கண்டே வீங்காதே!
    உளியாய் நீயும் மாறிவிடு — இவ்
    உலகம் எனக்கெனக் கூறியெடு!

    இருளின் வலையில் சிக்காதே — என்னால்
    இயலா தென்றே நிற்காதே! — ஒளிப்
    பொருளைக் கையில் ஏந்திவிடு — அட
    போடா தடைக்கல் தாண்டிவிடு!

    கல்லைப் போலே கிடக்காதே — தக்கைக்
    கழிபோல் வீணாய் மிதக்காதே!
    எல்லை கிழித்து நீகடப்பாய் — உன்
    இலக்கை வென்றும் நீநடப்பாய்!

    பனியில் நடுங்கி உறையாதே! — இழிப்
    பகைவர்க் கடங்கி மறையாதே!
    மனதால் இன்னும் மெருகேறு — இம்
    மண்ணை அடக்கும் செருக்கேறு!

    எதைக்கேட் டாலும் இருமாதே — உன்னில்
    இருக்கும் துணிவை மறவாதே!
    பதராய் வாழ்ந்தாய் போதுமது — இடர்ப்
    பாதை தகர்க்க மோதிவிடு!

    எரியும் நெருப்பில் வெந்தழிந்து — நீ
    இங்கே கரியாய் போவதுவோ?
    புரியும் புரியும் நீமாறு — இப்
    புவியை வெல்லத் தீயேறு!

    காற்றைப் போலே நீபரவு — ஆழ்
    கடல்போல் கொள்வாய் உள்தெளிவு!
    வீற்றி ருப்பாய் உயரத்தில் — ஒரு
    வெற்பின் மீதோர் வெற்பெனவே!

    Share
  • குறளின் கதிர்களாய்…(391)

    குறளின் கதிர்களாய்…(391)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(391)

    பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
    பிற்பகல் தாமே வரும்.

    – திருக்குறள் – 319 (இன்னா செய்யாமை)

    புதுக் கவிதையில்

    மற்றவர்களுக்குத் துன்பம்
    முற்பகலில் செய்தால்
    முடிவல்ல அது,
    பிற்பகலில் அவனைத் தேடி
    தாமே வந்திடும்
    பலவாய்த் துன்பங்களே…!

    குறும்பாவில்

    அடுத்தவர்க்குத் தீமைசெய்தால் காலையில்,
    அன்று மாலையே அவனைத்தேடி தாமேவரும்
    அளவே யில்லாத் தீமைகளே…!

    மரபுக் கவிதையில்

    அடுத்தவர் அல்லல் பட்டிடவே
    அளவிலாத் துன்பம் அளித்திட்டால்,
    கொடுத்தவர் தமக்கே வாழ்வினிலே
    கூடவே கிடைக்கா திருப்பதில்லை,
    கெடுதலைக் காலை செய்தாலே
    கேடது பலவாய் அவனிடமே
    அடுத்திடும் அன்றே மாலையிலே
    அதிகமாய் இடரைக் கொடுத்திடவே…!

    லிமரைக்கூ

    பிறர்க்குத் தீமைசெய்தால் காலையிலே,
    தீங்கதுதான் செய்தவனைத் தாமே தேடிவந்தே
    தாக்கிடும் அன்றே மாலையிலே…!

    கிராமிய பாணியில்

    செய்யாத செய்யாத
    கெடுதல் செய்யாத,
    அடுத்தவருக்கு ஒருநாளும்
    கெடுதல் செய்யாத..

    காலையில
    அடுத்தவனுக்கு நீயும்
    கெடுதல் செய்தா,
    அந்தக் கெடுதல் ஒன்னச்
    சும்மா உடாது,
    அதுவே தானாத்
    தேடிவந்து ஒனக்குத்
    தந்திடுமே பெருந்துன்பம்
    அண்ணைக்கி மாலையிலயே..

    அதால
    செய்யாத செய்யாத
    கெடுதல் செய்யாத,
    அடுத்தவருக்கு ஒருநாளும்
    கெடுதல் செய்யாத…!

    Share
  • தேவ கானம்

    தேவ கானம்

    ஜன்னலுக்கு வெளியே அந்த இசை கேட்டதும் ‘தேவ கானமாய் இருக்கிறதே’ என்றேன். சிரித்துக்கொண்டே, ‘நீங்க மிகைப்படுத்திச் சொல்றீங்க’ என்றார் மனைவி. நீங்களே கேட்டுவிட்டுச் சொல்லுங்கள். நான் சொல்வது சரியா? இல்லையா?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 27

    சௌந்தர்ய லஹரி – 27

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபத்து ஏழாவது ஸ்லோகம். அன்னையை மானசீகமாக ஆராதித்து, நமது சொல், செயல், எண்ணம் யாவற்றையும் அவருக்கே அர்ப்பணிப்பதை இப்பாடல் அழகுறச் சொல்கிறது. இதை எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோவைப் பழத்தை உண்ணும் கிளி

    கோவைப் பழத்தை உண்ணும் கிளி

    ஒரு கிளியைப் படம் பிடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆவல், இன்று நிறைவேறியது. நம் ஜன்னலோர வேப்பங்கிளையில் அமர்ந்து கோவைப் பழத்தைச் சுவைக்கிறார் கிளியார். கோவைப் பழம் நீயானால், கொஞ்சும் கிளி நானாவேன்!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share