திருஞானசம்பந்தர் இயற்றிய ‘கோளறு பதிகம்’, மிகச் சக்தி வாய்ந்தது. நவகிரகங்களால் நமக்கு நேரக்கூடிய தீமைகளை விலக்கக்கூடியது. இதை ஓதும் அடியார்களுக்கு நாளும் கோளும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது என்று சம்பந்தர் ஆணையிட்டுச் சொல்கிறார். இந்த அற்புதப் பதிகத்தை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்த மஹா சிவராத்திரியில் சிவபெருமானின் அளவற்ற கருணையைப் பெறுங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.