Blog

  • Ethiraj Kalyana Mandapam – Ayurveda hospital for free COVID treatment

    Ethiraj Kalyana Mandapam – Ayurveda hospital for free COVID treatment

    Seshadri Baskar

    When Ethiraj Kalyana mandapam was converted as a covid hospital i thought it would be only an allopathy hospital. But it’s not to be and it’s now an Ayurveda hospital with fifty beds. People generally show interest to go for allopathy and in this medical Unit started almost a week back it had got filled with sixteen patients against the capacity of fifty bedded centre.

    People who test positive can directly show the Mobile message and Aadhar card Xerox copy to get admitted. The medication and all the food is totally free for the patients .The facility has got clean bathroom facility and other day to day needed amenities.

    They will provide all the assistance and in case of information and if anybody wish to get admitted (I wish not honestly) can contact Mr. Sivasankar over there at 9444358891. 

    Please refer this service to the needy and in case of assistance I can be reached at 98410 33888 so that I can guide and assist my bit.

    The venue is Ethiraj Kalyana Mandapam on TTK Road Opposite the Hindustan Petroleum Pump near Rajkamals Film office.

    Share
  • Let the Predation issue stop allover in schools

    Let the Predation issue stop allover in schools

    Seshadri Baskar

    When the said victims expressed that they could not travel during the lockdown on any grounds, they are still being compelled to come in person. Many old students told they are ready for a video conference but the management is adamant on the personal Visits. In such case of a meeting I would like these following to be followed.

    1 Two women police officers of high rank to be present

    2 The whole process has to be videographed and the digital document should be with police

    3 All the victims should be allowed to cover their faces and then be enquired

    4 A Lawyer especially a women lawyer has to be present during the investigation

    5 All expenses for the said complainant should be borne by the said school including the travel

    6 No information of the investigation be let out to press and it’s the onus of the Police and Legal Personalities

    7 Mother of the said student should be allowed to accompany especially sister if Possible else mother is the only choice.

    Besides when the complaints had already been sent to the concerned departments there is no point in making an enquiry in the school level without representation from the Government.

    This should be applicable to all schools which are connected with the Predation issue.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 69

    பழகத் தெரிய வேணும் – 69

    நிர்மலா ராகவன்

    உடல்மொழியும் நம்பிக்கையும்

    மனிதன் தனி மரமல்ல. ஏதோ ஒரு விதத்தில் பிறருடன் தொடர்பு வைத்திருக்க நேர்கிறது.

    நாம் கூறுவது பிறருக்குப் போய்ச்சேர வேண்டுமானால், கேட்பவர்களுக்கு நம்மீது நம்பிக்கை எழச் செய்யவேண்டும். நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவது அவசியம்.

    மிகக் குண்டாக இருந்த ஒரு மாது சிறப்புரை ஆற்ற ஒரு கல்லூரிக்கு வந்தாள்.

    அதை ஒட்டி, ஆங்கில தினசரியில் வந்த ஒரு கண்டனக் கடிதம்: “தங்கள் உடலையே தகுந்தபடி பார்த்துக்கொள்ளத் தெரியாதவர்கள் பிறருக்கு அறிவுரை கூற வருகிறார்கள்! முதலில் அவர்கள் தங்களைக் கவனித்துக்கொள்ளக் கற்கட்டும்”.

    ஆசிரியப் பயிற்சியின்போது எங்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டது: “அழகாக உடுத்து வருகின்ற ஆசிரியை மாணவ மாணவிகளின் கவனத்தை ஈர்க்கிறாள்”.

    சூழ்நிலைக்குப் பொருத்தமான ஆடை அணிவது தன்னம்பிக்கைக்கான முதல் படி. சுருங்கச் சொன்னால், கல்யாணத்திற்கு அணிவதை துக்கம் விசாரிக்கப் போகும்போதோ, கடைகண்ணிகளுக்கோ அணிவது மடமை.

    நான் பள்ளியில் பயிலும்போது, ஆசிரியை ஒருவர் பக்கவாட்டில் அசைந்தபடியே பாடம் கற்பிப்பார். சற்றுப் பருமனான இருந்த இன்னொருவர் கரும்பலகைமீது சாய்ந்துதான் பேசுவார். எங்களுக்குள் பேசி, கேலி செய்வோம்.

    குரல், தொனி

    “குரல் உரக்கவோ, அல்லது அதிகாரமாகவோ இருப்பதுதான் ஒரு தலைவருக்கு ஏற்றது”. பலரும் இப்படித்தான் எண்ணுகிறார்கள்.

    கீழ்ப்படியாதவர்களை வேண்டுமானால் இவ்வாறு அச்சுறுத்தலாம்.

    கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் பெரும்பாலும் வசதிகுறைந்த இல்லங்களிலிருந்து வருபவர்கள்.  பாடம் நடக்கும்போதே உரக்கப் பேசுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, வாங்கும் சம்பளத்திற்கு ஆசிரியைகள் உயிரைக் கொடுக்கவேண்டும்.

    முதல் வருடம், என்னால் மாணவர்களை அடக்க முடியவில்லை.

    “Your voice is not commanding, Teacher!” என்று விளக்கினான் ஒருவன்.

    நான் வேண்டுமென்றே குரலைக் குறைத்து, “உங்களுக்காக நான் சாகப்போவதில்லை. அக்கறை இருந்தால், கவனியுங்கள்!” என்றேன்.

    `நான் உங்களைவிட உயர்ந்த நிலையில் இருக்கிறேன்!’ என்பதுபோல் மாணவர்களை மிரட்டி, அதிகாரமாக நடத்தும் ஆசிரியர்கள் அவர்களிடம் தோழமையை எதிர்பார்க்க முடியாது.

    ஆசிரியையுடன் தோழமையா! நடக்கிற காரியமா?

    தம் வகுப்பிலிருந்த மாணவர்கள் பிற ஆசிரியைகளுக்கு வைத்திருந்த கேலிப்பெயர்களைக்கூட என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள் மாணவிகள். இது நம்பிக்கையுடன் நட்பையும் குறிக்கிறது.

    உருவத்துடன், நடை, உடை இதெல்லாம் சரியாக இருந்தால் போதுமா?

    முகபாவம், கையசைவு, கண்ணால் தொடர்பு கொள்வது ஆகியவையும் உடல் மொழிதான்.

    ஒரு பேச்சுப்போட்டியில், மனப்பாடம் செய்துவைத்திருந்தது மறந்துவிடுமோ என்ற பதைப்புடன், தூரத்தில் ஒரே இடத்தில் பார்வையைப் பதித்து, சொல்லி முடித்தேன்.

    நீதிபதி கூறிய அறிவுரை: “பிறருடன் பேசும்போது, அவரைப் பார்த்துத்தான் பேசுகிறோம். ஒரே நிலையில் பார்வை எங்கோ பதிந்திருந்தால், நீங்கள் கூறுவது நம்பும்படியாக இருக்காது”.

    தன்னம்பிக்கை உடையவர்களின் அடையாளம்

    தம் திறமை என்னவென்று புரிந்து, பழைய சாதனைகளை அலசுவது, ஏதாவதொரு இலக்கு மற்றும் அமைதியோடு பயனும் அளிக்கும் பொழுதுபோக்கு என்று நாட்களைக் கழிப்பார்கள்.

    “தன்னைத்தானே அறிகிறவனே எதிலும் வெற்றி பெறுவான்” (தத்துவஞானி SUN TZU).

    மற்றவர்கள் என்ன குறை சொன்னாலும், நான் இருக்கிறபடியேதான் இருக்கமுடியும். எதற்கு மாற வேண்டும்?

    இவ்வாறு நமக்கு நாமே தைரியம் அளித்துக்கொண்டால், தன்னம்பிக்கை தானே வரும்.

    இது கர்வமில்லை. பிறர் புகழும்போது ஏற்படுவதுதான் கர்வம்.

    ஏன் பயம்?

    ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்குமுன், `பிறர் என்ன சொல்வார்கள்?’ `தோற்றுவிடுவோமோ?’ என்று பல எதிர்மறை எண்ணங்கள் எழுவதால்தான் அச்சம் எழுகிறது.

    பிறர் நினைப்பதைப் பற்றி என்ன யோசனை? அவர்களும் மற்றவர்களைப் பற்றித்தான் கவலைப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்!

    `பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம்?” என்று நமக்கு எழும் குழப்பத்தை ஆக்ககரமாக மாற்றிக்கொள்ளலாமே!

    நம் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது நல்ல பயிற்சி.

    எனக்குள் ஒவ்வொரு உணர்வு எழும்போதும், `ஏன் இப்படி?’ என்று அலசுவேன், எட்டு வயதிலிருந்தே.

    `ஏன் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன்?’

    `எப்போதும் திட்டும் ஆசிரியை இன்று புகழ்ந்தார்’.

    இவ்வாறு யோசிக்க யோசிக்க, என் உணர்ச்சிகள் பிறரைச் சார்ந்திருக்கிறதென்று புரிந்தது.

    நாளடைவில், `நான் என்ன, அவர்கள் கைப்பாவையா, அவர்களுக்கேற்ப ஆட?’ என்ற எரிச்சலெழ, மாறிப்போனேன். பிறரது கூற்று என்னை அதிகமாகப் பாதிக்கவிடாது பார்த்துக்கொண்டேன்.

    அதன்பின், வெற்றியோ, தோல்வியோ, எது கிடைத்தாலும், வேடிக்கையாகத்தான் இருக்கும். மிகுந்த மகிழ்ச்சியோ, வருத்தமோ எழுவதில்லை.

    ஒருவர் தன்னம்பிக்கையோடு நடந்தால், பிறரும் வெற்றி பெறத் தூண்டுகோலாக அமைகிறார்.

    கதை

    எங்கள் வருடாந்திர விளையாட்டுத் தினத்தன்று மற்றொரு பள்ளி ஆசிரியைகளுடன் இழு-பறி (TUG OF WAR) போட்டி.

    “போட்டியில் பங்கு கொள்வது வெற்றி பெறத்தான். அதற்கேற்ப உடை அணிந்து வாருங்கள்,” என்று எங்கள் குழுவிலிருந்த ஒவ்வொருவரிடமும் தனித்தனியே வலியுறுத்தினேன்.

    வேடிக்கையாகச் சொல்கிறேன் என்றெண்ணி முதலில் சிரித்தாலும், எல்லாரும் சம்பவத்தன்று விளையாட்டு வீராங்கனைகளாக வந்தார்கள்.

    அடுத்த பள்ளி தலைமை ஆசிரியை கவலைதோய்ந்த முகத்துடன், எங்கள் உடைகளையும், காலணிகளையும் பார்த்தபடி குறுக்கும் நெடுக்கும் நடந்தாள். அப்போதே எங்களது தைரியம் கூடியது.

    தங்கள் பள்ளி வெற்றி பெற்றதில் எங்கள் மாணவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி, பெருமை.

    பரிசாக, ஆளுக்கொரு ஒரு சிறு குடை கிடைத்தது.

    “நன்றாக இழுத்தீர்கள், டீச்சர்!” என்று என்னைத் தனியாகப் பாராட்டினான் ஒரு மாணவன்.

    அதன்பின், இடுப்பு வலியால் துடிதுடித்து, மருத்துவ விடுப்பு எடுத்தது வேறு கதை!

    கலாசார வேறுபாடு

    `நிமிர்ந்து நில். நேராகப் பிறர் கண்களைப் பார்த்துப் பேசு! அப்போதுதான் நீ சொல்வதில் நம்பகத்தன்மை இருக்கும்’.

    எல்லா கலாசாரத்திற்கும் இந்த அறிவுரை பொருந்தாது.

    மாணவன் ஒருவன் மலாய் ஆசிரியரின் கண்களையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தால், அது மரியாதைக்குறைவு எனக் கருதப்படுகிறது.

    அவர் கூறுவது விளங்காமல் தமிழ் மாணவன் விழிப்பான். அவரோ, `என்ன முறைக்கிறே?’ என்று தண்டிப்பார்.

    சில நாடுகளில், ஒருவரையொருவர் சந்திக்கும்போதும், விடை பெறும்போதும் கை குலுக்குவார்கள். முன்பு இந்த கலாசாரம் நம்மிடையே இருக்கவில்லை.

    இந்திய இளைஞன் ஒருவன் என்னிடம் கூறினான்: “சற்று வயது முதிர்ந்த பெண்களின் கையைக் குலுக்கலாமா, இல்லை, தவறாக எண்ணிவிடுவார்களோ என்று தயக்கமாக இருக்கிறது!”

    நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, என்னிடமிருந்து விடை பெறும்போது, “அணைத்து, முத்தம் கொடுக்கலாமா, இல்லை கைகுலுக்குவதா என்று எனக்குத் தெரிவதில்லை,” என்று என் மகளின் நண்பன் குழம்ப, “கை குலுக்கு. போதும்,” என்று அலறினேன்.

    மேற்பயிற்சியின்போது

    `எங்கள் மதம்தான் மிக உயர்வானது!’ என்று பெருமையுடன் கூறினாள் விரிவுரையாளர், ரோஸ்னா. தொடர்ந்து, “நிர்மலா! கவலைப்படாதீர்கள்,” என்றும் குரலெழுப்பினாள், கேலியாக.

    அப்போதுதான் புரிந்தது, என் கையை மோவாய்க்குக் கீழே பதித்திருந்தேன் என்று.

    மற்றவர் சொல்வதை ஏற்கவில்லை என்றால், நம்மையுமறியாது அப்படிச் செய்துவிடுகிறோம்.

    நிமிர்ந்த நடைகொண்ட பெண்களையே தன்னம்பிக்கை கொண்டவர்கள் என்கிறோம்.

    ஆனால், தலையை அதிகமாக நிமிர்த்தினால், `உன்னை மீறுகிறேன். நீ சொல்வதைக் கேட்கமாட்டேன்,’ என்கிற எதிர்ப்பு வெளிப்படுகிறது. இந்த உடல் மொழி இருபாலருக்கும் பொதுவானது.

    பெண்களின் உடல் மொழி

    எல்லாருடனும் இணக்கமாக நடக்கவேண்டும் என்று சிறுவயது முதலே பெண்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. தொட்டுத் தொட்டுப் பேசுவார்கள்.

    நிறையச் சிரிப்பார்கள், இல்லையேல் முறுவலிப்பார்கள். முகபாவம் அதிகம் காட்டுவார்கள்.

    பெண்களின் குரல் உயரும், கோபத்தை வெளிப்படுத்த. (`இதை நீங்கள் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா? எவ்வளவு தமிழ் சீரியல் பார்க்கிறோம்!’ என்கிறீர்களா?)

    பெண்களின் மூளையில் 14-லிலிருந்து 16 பாகங்கள்வரை மற்றவர்களின் நடத்தையை அலசுகின்றனவாம். அதனால், பிறரது நடத்தை அவர்களுக்கு எளிதாகப் புரியும்.

    ஆண்களோ!

    இயற்கையில், ஆண்களுக்குப் புன்சிரிப்பு, முகபாவம் இரண்டுமே குறைவு.

    மூன்று முறை தலையை மேலும் கீழும் அசைத்தால், `கவனித்துக் கேட்கிறேன். மேலே பேசு,’ என்று அர்த்தம்.

    ஓர் ஆணின் பார்வை எதிரிலிருக்கும் பெண்ணின் கண்ணிலிருந்து வாய்வரை மட்டுமே இருந்தால், அவள் அவனை நம்பலாம்.

    ஆண்குரல் அவ்வளவாக மாறுவதில்லை – அதிகாரம் தன் கையில்தானே என்ற மதர்ப்புடன். அடிக்கடி உயர்ந்தால், சுயக்கட்டுப்பாடு குறைவு.

    பிறரது நடத்தையைப் புரிந்துகொள்ளும் முயற்சியில், ஆண்களின் மூளையில் நான்கிலிருந்து ஆறு பகுதிவரைதான் வேலை செய்கின்றன.

    இதனால்தான், `இந்தப் பெண்களைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை!’ என்று அயர்கிறார்களோ?

    புரிந்துவிட்டால், அப்புறம் என்ன கவர்ச்சி!

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள் – 6

    புதிய பிள்ளைப்பருவங்கள் – 6

    மீனாட்சி பாலகணேஷ்

    வில், வாள், ஆயுதம் பயிலல் (புதிய பருவங்கள்- இருபால் பிள்ளைத்தமிழ்)

    1.பெண்பால்

    புதியதாகச் சேர்த்துக்கொள்ளக் கூடிய பிள்ளைத்தமிழ்ப் பருவங்களுள் ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவான ஒரு பருவத்தைப் பார்க்கலாம்.   அரசுகட்டில் ஏறும் ஆண்மகனுக்கு உரியது ‘கச்சினொடு சுரிகை காமுறப் புனைதல்’ எனும் பருவம். இதனை நாம் முன்பே கண்டோம். வில், வாள் ஆகிய ஆயுதப் பயிற்சி, குதிரை, யானையேற்றம் ஆகியனவும் ஆண்மகனுக்கே, சிறுவயதிலிருந்தே (ஏழெட்டு ஆண்டுகளிலிருந்தே) பயிற்றுவிக்கப்படும். பெண்களுக்கு உரியதாக இதனை முதலில் காணலாமா?

    தடாதகை போலும் இளம் சிறுமிகளுக்கும் போர்க்கலைகளான இவை பயிற்றுவிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அவள் பாண்டிய அரசியல்லவா? பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணத்தில், மதுரைக் காண்டத்தில், தடாதகை வளரும் பருவத்தில் போர்க்கலைகள் பயில்வது பற்றி ஏதும் கூறப்படவில்லை. ஆனால் அன்னை கயிலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் போர்புரியும்போது அவளது போர்த்திறத்தை நன்கு விவரிக்கிறார் புலவர்பெருமான்.

    மூன்று பாடல்கள் அம்மையின் போர்த்திறத்தை அழகுறப்பாடுகின்றன.

    சிவகணங்களின் தலைவர் நந்தியெம்பெருமான். அவருடைய படைவீரர்கள் தத்தம் கைகளில் ஏந்தியிருந்த படைகளைத் தடாதகைப் பிராட்டியார் தமது கொடிய கணைகளினின்றும் பாம்புபோன்ற அம்புமழையினைச் சொரிந்து பொடிப்பொடியாக்கினார். (‘கட்புற்றரவில் கணைமாரிகள் தூற்றி நின்றாள்’).

                        கொட்புற் றமரா டுமிக்கொள்கையர் தம்மி னந்தி
                       நட்புற் றவர்கைப் படைதூட்பட ஞானமூர்த்தி
                       பெட்புற் றருள வருமெங்கள்பி ராட்டி வெய்ய
                       கட்புற் றரவிற் கணைமாரிக டூற்றி நின்றாள்1.

    கையிலுள்ள ஆயுதங்கள் அழிக்கப்பட்டதும் அச்சிவகணங்கள் கற்களை எடுத்து தடாதகையின் உடலில் படும்வண்ணம் வீசினர். அவை தன்மீது படும்முன்பே ‘பொய்ம்மை மனத்தினர் செய்யும் தவம் அழிவது போல’ தனது நெய்பூசிய வச்சிரப்படைகொண்டு  அம்மை அவற்றை அழித்தனள்.

                        கையிற் படையற் றனர்கற்படை தொட்டு வீரர்
                       மெய்யிற் படுகென் றுவிடுக்குமுன் வீரக் கன்னி
                       பொய்யிற் படுநெஞ் சுடையார் தவம்போல மாய
                       நெய்யிற் படுவச் சிரவேலைநி மிர்ந்து வீசி2.

    பின் அவ்வீரர்களின் படைகளைத் துண்டம்துண்டமாகத் துணித்தாள் அன்னை. தனது தண்டப்படையால் அவைகளைத் தாக்கினாள். அவர்கள் புறம்காட்டி ஓடினர். ‘அண்டங்களையும் சராசரங்களையும் தானே படைத்துக் காக்கும் பராசக்தியின் வலிமையைக் கூறவும் நம்மால் இயலுமோ?’ என்கிறார் பரஞ்சோதி முனிவர்.

                        துண்டம் படவே துணித்தக்கண வீரர் தம்மைத்
                       தண்டங் கொடுதாக் கினள்சாய்ந்தவர் சாம்பிப் போனார்
                       அண்டங் கள்சரா சரம்யாவையுந் தானே யாக்கிக்
                       கொண்டெங் குநின்றாள் வலிகூற வரம்பிற் றாமோ3.

                                       *****

    இனி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் பலவிடங்களில் காணப்படும் அம்மையின் போர்த்திறன் பற்றிய செய்திகளைக் காணலாமா?

    குழந்தையை உறங்கவைக்கப் பாடும் பாடலில் தாய்மாரும் செவிலியரும் அம்பிகையின் சேனை செய்த போரை ஒரு தாலப்பருவப்பாடலில்  விவரிக்கின்றனர். அவர்களுக்குப் பெரும் உற்சாகம். தடாதகை நந்திதேவனின் அப்படைகளை ஓட ஓட விரட்டினாள் எனப்பாடி மகிழ்கின்றனர்.

    தடாதகை திக்விஜயம் சென்றபோது அவள் வயது பதினைந்தோ பதினாறோ தான். இளங்குமரியான அரசகுமாரி சிவகணங்களை எதிர்த்தகாலை, நந்திதேவர் அலட்சியமாக அவளை நோக்கி, “மயிர்ச்சாந்து அணிந்த கருமையான கூந்தலையுடைய சிறிய பெண்ணான நீதானோ எம் தலைவனாகிய சிவபிரான் வாழும் கயிலைமலையை முற்றுகை இடுபவள்?” எனச் சீறுகிறார். அவர்கள் அனைவரையும் தனது போர்த்திறத்தால் தோற்றோடச் செய்த வீரம் படைத்தவள் தடாதகை என்கிறார் புலவனார்.

                            ‘தகரக் கரிய குழற்சிறுபெண்பிளை
                                நீயோ தூயோன்வாழ்
                      சயிலத் தெயிலை வளைப்பவளென்றெதிர்
                                         சீறா வீறோதா
                       நிகரிட் டமர்செய் கணத்தவர்நந்திபி
                                      ரானோ டேயோடா4…’

    போரைத் தொடர்பவள் கயிலைமலைத் தலைவனைப் போருக்கு அழைக்கிறாள். அவர் தன்முன்பு வந்ததும் உடனே உள்ளப்புணர்ச்சி காரணமாக இவரே தன் மணாளன் எனத் தெளிகிறாள். நாணேற்ற உயர்த்திய வில்லைத் தழைத்துப் பிடித்தபடி, அதன் நாணினை விரல்களால் தழுவியபடி உயிர்ச்சித்திரம்போல் உண்மையாகவே வந்த நாணத்துடன் நிற்கிறாள்.

                            மெய்வந்த நாணினொடு நுதல்வந்தெழுங்குறு
                                          வெயர்ப்பினொ டுயிர்ப்புவீங்கும்
                        விம்மிதமு மாய்நின்றஉயிரோவம் எனவூன்று
                                          விற்கடை விரற்கடைதழீஇத்
                       தைவந்த நாணினொடு தவழ்தந்தசெங்கைகொடு
                                          சப்பாணி கொட்டியருளே5

    இங்கு போருக்கெடுத்த வில் பயனின்றிக் கையில் தவழ்கின்றது!! அன்னையின் போர்க்கோலமே அவளுக்குத் திருமணக் கோலமும் ஆகின்றது. இருப்பினும் கண்களால் காதற்கணைகளைத் தொடுத்தபடி நிற்கிறாள் தடாதகை!

                            கட்கணைதுரக்கும் கரும்புருவ வில்லொடொரு
                                         கைவிற்குனித்துநின்ற
                       போர்க்கோலமேதிரு மணக்கோல மானபெண்
                                பொன்னூசல்ஆடியருளே6!

    ஆக, யாம் கண்ட வரையிலும் அருமையான பல பாடல்களிலும் அன்னையின் போர்த்திறமையைப் பெரிதாகப் பேசுபவர்  குமரகுருபரனார் ஒருவரே!

    மேலும் மங்கையர்க்கரசியார் எனும் அரசமகளுக்கும் பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது. (கோவை கவியரசு கு. நடேச கவுண்டரால் இயற்றப்பெற்றது). இவர் சோழர்குல இளவரசியாகப் பிறந்து பின் திருமண உறவால் கூன்பாண்டின் எனப்பட்ட நின்றசீர் நெடுமாறப் பாண்டியற்கு மனைவியானார். இவர்மீதான பிள்ளைத்தமிழிலும் இவர் சைவத்திற்கு சம்பந்தப் பெருமானுடன் சேர்ந்து செய்த தொண்டுதான் பலவாறு சுட்டப்படுகின்றதேயன்றி, இவரது போராற்றலும் திறமையும் கூறப்படவில்லை. சோழ இளவரசியாக இருந்தபோது ‘மானி’ எனும் பெயரால் அழைக்கப்பட்டார்.

                            ‘மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
                                வரிவளைக் கைம்மட மானி
                       பங்கயச் செல்வி பாண்டிமாதேவி7,’ என்பது சம்பந்தப்பெருமான் வாக்கு (தேவாரம்).

    தற்சமயம் சக்தி விகடனில் ‘சிவமகுடம்’ எனும் பெயரில் ஒரு தொடர் வெளிவந்துகொண்டுள்ளது. அதில் இவருடைய போர்த்திறமை நன்கு நயமாக மிகவும் உயர்வாக விவரிக்கப்பட்டுள்ளது. வேறெங்கும் எவ்விலக்கியத்திலும் (பெரியபுராணத்திலும் கூட) இவருடைய போர்த்திறமை கூறப்படவில்லை; பாடப்படவில்லை! இது வியப்பிற்குரிய செய்தியாகும்.

                                                               *****

    இனி, எமது கற்பனையில் உதித்த, எட்டு அல்லது ஒன்பது வயதுச் சிறுமியான தடாதகை எனும் மீனாட்சியம்மை போர்க்கலை பயிலும் நிகழ்ச்சிகளைக் காண்போம்.

                                                               *****

    போர்க்கலை ஆசான் வாளைச் சுழற்றி வீசப் பயிற்றுவிக்கிறார். வெகு அலட்சியமாக தனது வாளைச் சுழற்றி, அவருடைய வாள் வீச்சைத் தடுக்கிறாள் தடைசெய்யவியலாத ஆற்றல் படைத்த மங்கை தடாதகை எனும் மீனாட்சி! அடுத்து அவர் வேல்வீசக் கற்றுக் கொடுக்கிறார். அவளோ அதனை நொடியில் பயின்று, தன் கண்களெனும் வேலை வீசவும் பழகியிருந்தனள். குமரிப் பெண்ணல்லவா?அவள் தனது தாள்களே கதி எனப்பணியும் தவத்தோர்க்கு அவருடைய இருவினைகளையும் தீர்த்து வைப்பவள். எமக்கும் அவ்வினைகளைத் தீர்த்து தனது பால்போலும் பளிங்குமுகத்தில் புன்னகை காட்டி அருளுகிறாள் அந்த மீனாட்சி!

                            வாள்வீச்சி னையாசான் வகுத்துணர்த் துவிக்கவவ்
                                வாள்வீச்சி னைத்தனதுவா ளாற்றடுத்தாள்
                       வேல்வீச்சி னையடுத்து வேண்டிப்ப யிற்றுவிக்க
                                வேல்வீச்சி னைத்தன்விழி களாற்பயின்றாள்
                       தாள்நோக்கி யன்பர்க தித்துத்துதித் திடத்தன்
                                தாளவர் தலைபதித் துவினையெ லாங்களைந்தெம்
                       பால்நோக்கி பவரோகம் பழவினையு மழிந்திடப்
                                பால்போன்ற நகைமுகம் காட்டியருளினாள்8. (1) 

                                                               *****

    திக்விஜயத்திற்குத் தயாராகும் அரசி மீனாட்சியை அடுத்துக் காண்கிறோம். கூந்தலை இறுகக் கொண்டையிட்டு நறுநெய்பூசி வாரிமுடிந்து கட்டியுள்ளாள். போர்க்கவசம் கச்சணிந்த மும்முலைகளையும் அணைத்துக் காக்கிறது. மருதோன்றியணிந்த கரங்கள் வாளின் தந்தப்பிடியை இறுகப் பற்றியுள்ளன. சிலம்பும் சதங்கையும் கொஞ்சும் பஞ்சுப்பாதங்கள் இப்போது தண்டை எனும் வீரக்கழல்களை அணிந்துள்ளன. இடையிலணிந்துள்ள மேகலை, உடைவாளின் உறையுடன் உரசி ஒருவிதமான தாளலயத்தை உண்டாக்கி அவளுடைய நடைக்குக் கட்டியம் கூறுகிறது! பிடியைப்போல் மென்னடை பயில வேண்டிய இளநங்கை இப்போது ‘தம்,தம்,’ எனக் கூடமே அதிர தன் அன்னையைக்கண்டு ஆசிபெற வந்துகொண்டிருக்கிறாள்! பாண்டிய வம்சத்திற்குரிய வேப்பமாலை, மருக்கொழுந்து, முல்லை மலர்களுடன் கூடிய ஒரு ஆரமெனத் திருமார்பில் புரளுகிறது! கயல்விழிகள் அன்பு, வீரம், அருள், கொடை, இளமைக்கே உரிய அச்சமின்மை, சிறிது ஆணவம் (சிவனையும் வென்றுவிடலாமென்ற எண்ணத்தில் கயிலை செல்லுபவளல்லவா இம்மங்கை?) ஆகிய உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலும் பிரதிபலிக்கின்றன. பாண்டியரின் கயற்கொடி ஒளிவீசிப்பறக்க அவள் திக்குவிசயத்திற்குப் புறப்பட்டு விட்டாள்!

                            வஞ்சிய வள்நங்கை பாண்டியன் குலமங்கை
                                வில்லேந்தி வீரநடை பயின்றனளே!
                           வானவருந் தானவரும் வடவரு மேங்கிநிற்க
                                வேப்பமாலை தவழவெஞ் சமருக்கே!
                       அஞ்சன மெழுதிய அங்கயற் கண்ணழகி
                                அங்கையில் வாளேந்தி ஆரவாரமாக
                           அன்னை காஞ்சனையி னாசிகளைப் பெற்று
                                அன்புமற முங்குணமு மொருங்கமைய
                       குஞ்சரப் படையுங் குதிரைகற் றம்படையுங்
                                கொண்டுவிண் ணுமண்ணும திரக்கோமகள்
                           கொடியிடை யாளன்னை வாழ்த்தக் கொடுஞ்சமருக்
                                குப்படைதி ரட்டிப்புறப் பட்டனளே!
                       கொஞ்சுமொ ழிப்பாவை கூடலுறை பொற்பூவை
                                கையிலொரு வாளுங்கூர் வேலுமேந்தி
                           கன்னிநாட் டின்கயற் கொடியை யுயர்த்தி
                                திக்குவிசய மெனப்புறப் பட்டனளே9!  (2)

    இவ்வாறு திக்குவிசயத்திற்குப் புறப்பட்ட தடாதகை, எல்லா அரசர்களையும் தனக்குத் திறை செலுத்த வைத்தோ, அல்லது போரில் வென்று சிறைப்பிடித்தோ வைத்தபடி சென்று பின் கயிலைமலையை அடைகிறாள். வியர்க்க, விறுவிறுக்கச் சிவகணங்களுடன் போர் செய்தவள், வில்லிலிருந்து கணைகளைத் தொடுத்தும், ஆயுதங்களால் அடித்தும் நந்திதேவரையே கலங்க வைக்கிறாள்.

    தவஞ்செய்யும் முனிவர்கள் வாழும் கயிலைமலை மீதேறி, ஆண்டவனாம் சிவபெருமானை சமருக்கு அழைக்கிறாள். அவர் தன்முன்பாக வந்து தோன்றியதும், தனது பழைய நினைவுகள் திரும்ப வந்ததும், அவரே தன் மணாளனென உணர்ந்து மலைத்து வியர்க்கிறாள்.

    அண்ணல்மீது காதற்கணைகளைக் கண்களால் தொடுக்கிறாள். தண்ணிலவின் கிரணங்கள் வெந்தணலாய்ப் பொழிய (காதல் வயப்பட்டோருக்கு, நிலவும் சுடும்!), போர்க்கோலமொழிந்து காதலில் தன்னையிழந்து நிற்கிறாள் தடாதகை!

                        மூண்டதொரு சமரிலவள் முகமெல்லாம் வியர்த்தாள்
                       மூண்டெழுஞ் சினத்தில்சிவ கணங்களையு மொறுத்தாள்
                       மூண்டெழும் வேகத்தில்விற் கணைகளைத் தொடுத்தாள்
                       மூண்டெழுந் திறத்தில்நந் திதேவனை யுமடித்தாள்.

                       யாண்டவர் தவஞ்செய் யுங்கயிலை மலைமீதேறி
                       யாண்டவன் றன்னையும் வெஞ்சமருக் கழைத்தா
                       ளாண்டவ னாங்கந்த அணங்கவள் முன்தோன்றவவ்
                       வாண்டகை தனைக்கண் டயர்வியர் வெய்தினாள்.

                        அண்ணலின்மீ தெண்ணிலாக் கட்கணைகள் தொடுத்தாள்
                       தண்ணிலவும் வெந்தணலாய் தண்கலை கள்பொழிய
                       பெண்ணவள் தன்போர்க்கோ லமழிந்திட் டுநின்றாள்
                       விண்ணவரு மண்ணவரு மலர்மாரி பொழிந்தார்10. (3)

    இப்பாடல்கள் அன்னையின் இப்பருவத்தைப் போற்றச் செய்த எனது சிறுமுயற்சி. அவள் திருவடிகளுக்கே அர்ப்பணம்.

    (புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)

                                       ————————–

    பார்வை நூல்கள்:

    1, 2, 3 – பரஞ்சோதி முனிவர்- திருவிளையாடற் புராணம்.

    4, 5, 6 – குமரகுருபரர்- மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

    7. திருஞானசம்பந்தர்- தேவாரம்

    8, 9, 10 – பாடல்கள்- மீனாட்சி பாலகணேஷ்.

    Share
  • லலிதா நவரத்தின மாலை

    லலிதா நவரத்தின மாலை

    லலிதா நவரத்தின மாலை, அகத்திய மாமுனிவர் அருளியது. இதில் அகத்தியர், அம்பாளை நவரத்தினங்களாக வர்ணித்துப் போற்றுகின்றார். இந்த எளிய தமிழ்ப் பாடல், பக்திச் செறிவும் அருட்பிழிவும் மிக்கது. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்துக்கு இணையாகக் கருதப் பெறுகின்றது. சக்தி வாய்ந்த இந்தப் பாடலைப் பாடுவோருக்கும் கேட்போருக்கும் சகல நன்மைகளும் கிட்டும். இந்தப் பேரிடர் காலத்தில் இதைப் பாடியும் கேட்டும் பயன் பெறுங்கள்.

    பாடியோர்: கிருஷ்ணகுமார் & ஷ்ரேயா குமார்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பேரலகுத் தேன்சிட்டின் குரல்

    பேரலகுத் தேன்சிட்டின் குரல்

    பேரலகுத் தேன்சிட்டின் (Loten’s Sunbird) குரலைக் கேட்டிருக்கிறீர்களா?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நம்ம வீட்டு மாங்காய் அறுவடை!

    நம்ம வீட்டு மாங்காய் அறுவடை!

    நம்ம வீட்டுத் தோட்டத்தில் இன்று மாங்காய் அறுவடை!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • The Swan Sculpture of Lake Mirror

    The Swan Sculpture of Lake Mirror

    -Niveditha Raman

          Lakeland is one of the cities of Florida and is famous for numerous lakes and museums, which are provided as spectacular tourist attractions for people to visit. Of those lakes, Lake Mirror is most recognized for its various sculptures that portray different themes of art. The beautiful swan sculpture, shown in this article, is a representation of the state of Florida, which is indeed home to thousands of swans. Sculptors generally intend to incorporate certain human aspects within their designs, and the formation of the swan in this region focuses on values of nature that humans need to understand. I believe that people neglect the sculpture’s beauty as details are incorporated. This piece of art symbolizes a source of purity, gracefulness, elegance, and good luck. In addition, the artworks painted on the swan’s front side show the cityscape of downtown Lakeland along with multiple colors used for the wings. Consequently, human purposes are being considered as a “role of art” with the presence of this sculpture.

    I believe that this swan sculpture is located in the category of creativity along with other forms of visual arts, explained clearly in art textbooks. Typically, the creativity factor is inspired by observing natural phenomena or man-made architecture. Within this artwork, the sculptor had been inspired to produce a depiction of a real-life swan to entertain people and convey the accuracy within the shape of the wings, head, and body. One notable element of the sculpture is the upward position of its wings as if taking flight from the ground. The assorted pigmentations utilized to make new designs that are exhibited in specific portions of the sculpture give it a more unique appearance.

    Even though the sculptor of this artistic creation is unknown, it is a fact that the city of Lakeland had been awarded several swan sculptures by the Queen of England in 1957.  After it had been offered to the area as a gift, city officials decided to place one of the sculptures on a platform at Lake Mirror. Since this era, thousands of renovations have occurred to maintain the physical presence of the swan including original styles, new construction, and appealing features. On a day-to-day basis, hundreds of people come to view this masterpiece, demonstrating the audience that is being entertained. Americans from all over the county typically come to this particular location due to the number of modern art themes that are revealed within the sculptures, paintings, and crafts.

    Furthermore, the theme of art that is applicable to the swan sculpture is “The Natural World” because the artwork is definitely depicting an organism that is found in the environment. In my perspective, the sculptor may have deeply observed and interpreted the subject matter of an actual swan to organize lots of sketches in order to build a realistic statue based on specific characteristics. When artists pursue this theme within their creations, they illustrate creatures, landscapes, and plant life to educate people about the importance of the Earth and the necessity of protecting wildlife. Similar to The Oxbow painting, the swan shows that nature could be appreciated by analyzing each component such as the bright sky, lush trees, and lovely river down below. In this circumstance, imagination also plays a key role in the process of sculpting.

     

    Share
  • காப்புரிமைத் தகவலியல் (Patinformatics)

    காப்புரிமைத் தகவலியல் (Patinformatics)

    நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்

    கடந்த முப்பது வருடங்களாக மென்பொருள் தொழில், மிகவும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறையாகும். இந்திய தொழில்நுட்பத் துறையில் ஐந்து தகவல் கூறுகள் உள்ளன.

    1. மென்பொருள் தயாரிப்புகள்
    2. தகவல்நுட்பச் சேவைகள்
    3. பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சேவைகள்
    4. தகவல் நுட்பம் இயக்கப்பட்ட சேவைகள் அதாவது வணிகச் செயல்முறை அவுட்சோர்சிங்
    5. வன்பொருள் ஏற்றுமதி வருவாய்

    மென்பொருள் என்பது இயந்திர வழிமுறைகளின் பட்டியலைக் குறிக்கின்றது. மென்பொருள் பொறியியல் என்பது மென்பொருள் அமைப்பு உருவாக்கும் போது நேர்த்தியான, ஒழுக்கமான அணுகுமுறைகள் மற்றும் சட்டவிதிகளை பயன்படுத்துவதாகும்.

    காப்புரிமைத் தகவலியல் என்பது காப்புரிமைத் தகவல் மற்றும் பகுப்பாய்வு தொடர்பான சிக்கல்களுக்குத்  தீர்வை வழங்கவதற்கான தகவல் முறைகளின் பயன்பாடு ஆகும்.  மேலும், இது வளர்ந்து வரும் தரவு அறிவியலின் ஒழுக்கமாகும்.

    இந்தியாவில் பல பல்கலைக்கழகங்களில்  மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் (Master of Computer Application)  முதுகலை பட்டப் படிப்பு  1980களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் நோக்கம், தொழில்நுடபம் மற்றும் மேலாண்மைத் துறைகளின் ஒருங்கிணைந்த கல்வியைப் போதிப்பதாகும்.

    மென்பொருள் என்பது, இரு வகை. ஒன்று லாஜிக்வேர். மற்றொன்று டேட்டாவேர்.

    லாஜிக்வேர் என்பது தர்க்கத்தை அடிப்படையாக வைத்து எழுதும் கூறுகளாகும்.

    டேட்டாவேர் என்பது தரவுகளின் மென்பொருளை அடிப்படையாக வைத்து எழுதும் கூறுகளாகும்.

    காப்புரிமை என்பது புதிய கண்டுபிடிப்புகளுக்கு அல்லது படைப்புகளுக்கு  ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (இந்தியாவில் 20 ஆண்டுகள்) அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு பிரத்தியேக,  ஏகபோக உரிமையாகும்.

    நாட்டின் காப்புரிமைச் சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட படிவங்களில், காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்துக் காப்புரிமையைப் பெறலாம்.

    காப்புரிமைகள் ஒரு சமூக ஒப்பந்தம் என்று பேராசிரியர் ராஜ் ஹிர்வானி கூறுகிறார். (Unit for Research and Development, (URDIP-CSIR), Pune.

    வழங்கப்பட்ட காப்புரிமைகளின் தொழில்நுட்பமானது, பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். உதாரணம் (ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் ,  R, Python).

    வழங்கப்பட்ட காப்புரிமைகளைப் பயன்படுத்தவதற்குக் காப்புரிமைதாரரிடமிருந்து அனுமதி பெற வேண்டும். காப்புரிமைதாரர் கேட்கும் தொகையையும் பயன்படுத்துபவர் கொடுக்க வேண்டும். (உதாரணம் மைக்ரோசாப்ட், அடோப்).

    கண்டுபிடிப்பு தொடர்பான தகவல்கள் பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும்.

    காலாவதியான காப்புரிமையை எந்த ஒரு பயன்பாட்டிற்கும் பொதுமக்கள் பயன்படுத்திக்  கொள்ளலாம்.

    கண்டுபிடிப்பாளர் தனது கண்டுபிடிப்பு, தயாரிப்பு மீதான காப்புரிமைகளைப் பெறாவிட்டால் அவரது கண்டுபிடிப்பு நகலெடுக்கப்பட்டு,  வணிகரீதியாகச்  சுரண்டப்படும்.

    Patinformatics (காப்புரிமைத் தகவலியல்) என்ற சொற்றொடர் ஜே டிரிப்பியால் 2002ஆம் ஆண்டு எழுதப்பட்டது.

    காப்புரிமைத் தகவலியல் என்பது அறிவியலின் தொழில்நுட்பத்தின் மூலம் காப்புரிமை ஆவணங்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தகவல்களுக்குள் இருக்கும் தொடர்புகளை அலசி பகுப்பாய்வு செய்யும் அறிவியலாகும்.

    Patinformatics ஐ ஒரு மேக்ரோ-லெவல் அறிவியல் என்றும் கருதலாம்.

    அதாவது அதிக அளவு காப்புரிமைத் தகவல்களை அறிவியலின் தொழில்நுட்பம் மூலம் பகுப்பாய்வு செய்வது.

    காப்புரிமைத் தகவலியல் ஆராய்ச்சி நிர்வாகத்தின் பயன்பாடு மற்றும் மேம்பாட்டை நிர்வாகிப்பதில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது.

    போட்டியாளர்களின் கண்காணிப்பு, தொழில்நுட்ப மதிப்பீடு, புதிய தொழில் மதிப்பீடு, உரிம உத்திக்கான உள்ளீடு, மனித இணைப்புகள், கையகப்படுத்தல்களை மறுசீரமைப்பு செய்யும் மேலாண்மைக் கருவியாகவும் காப்புரிமைத் தகவலியல் திகழ்கின்றது.

    பேராசிரியர் கௌரி கார்கேட் ,  RGIP, IIT Kharagpur கருத்தாக்கத் தகவலியலை மூன்று வகையாகப் பிரிக்கின்றார்.

    1. காப்புரிமைத் தேடல் மற்றும் பகுப்பாய்வு
    2. காப்புரிமை வரைவு மற்றும் வழக்கு
    3. காப்புரிமை வழக்கு

    காப்புரிமைத் தேடல் மற்றும் பகுப்பாய்வு என்பது காப்புரிமை ஆய்வாளர்கள் அதிக எண்ணிக்கையிலான காப்புரிமை ஆவணங்களிலிருந்து தொடர்புடைய காப்புரிமைகளைத் தோண்டி எடுத்து, அதன் செயல்பாட்டின் நோக்கத்தின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்கிறார்கள். காப்புரிமை வரைவு மற்றும் வழக்குக் காப்புரிமை வரைவு மற்றும் வழக்கு விசாரணை என்பது காப்புரிமை வழக்கறிஞர் அல்லது காப்புரிமை முகவர், காப்புரிமை ஆவணத்தை வரைவு செய்வதோடு வழக்கு தொடரப்படுவதையும் கவனித்துக்கொள்வதாகும்.

    எனவே வழக்கு தொடுப்பது வரையறைக்கு உட்பட்ட நேரத்தில், அதாவது குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் இருக்கும்.

    காப்புரிமை வழக்கு

    காப்புரிமை முகவர்கள் மற்றும் வக்கீல்கள், காப்புரிமை வழக்கின் பல்வேறு கட்டங்களில் காப்புரிமை வழக்குகளில் தொடர்புகொள்கிறார்கள் .

    இதில் முதலில் விண்ணப்பம் செய்தது அல்லது காப்புரிமை தாக்கல், பின்னர் முதல் தேர்வு அறிக்கை,  விசாரணை போன்றவற்றுக்குப் பதிலளிப்பது.

    காப்புரிமை வழக்கு என்பது பரந்த  பகுதி. வழக்கறிஞர்கள்,  காப்புரிமை உரிமையாளர்களுக்கு உரிமைகளைப் பெற அல்லது அவர்களின் உரிமைகளைச் செயல்படுத்த உதவுகிறார்கள்.

    காப்புரிமைத் தேடல் மற்றும் பகுப்பாய்வு எவ்வாறு செயல்படுகிறது என்பதை இப்போது நாம் காணலாம். காப்புரிமைத் தேடல் மற்றும் பகுப்பாய்வு என்பது நம்பகத்தன்மை மிகுந்த மிகவும் திறமையான பணியாகும். மிகவும் பொருத்தமான காப்புரிமை ஆவணங்களைத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வேலை, வைக்கோல் போரில் ஓர் ஊசியைத் தேடுவது போன்றது என்று பேராசிரியர் கெளரி கார்கேட், RGIP law, IIT Kharagpur கூறுகிறார். இது மிகையாகாது. காப்புரிமைப் பகுப்பாய்வு ஒரே ஒரு காப்புரிமையாகவும் இருக்கலாம் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட காப்புரிமையின் தொகுப்பு 3000 ஆகவும் இருக்கலாம். இது, செயல்பாட்டின் நோக்கத்தைப் பொறுத்து அமையும். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் பார்ப்பது போல நோக்கத்திற்கு ஒரே ஒரு பொருத்தமான காப்புரிமையைத் தேர்ந்து எடுத்து பரிசீலனையில் உள்ள காப்புரிமையைச் செல்லாததாக ஆக்கிவிடலாம். பகுப்பாய்வு வரைபடம், தொழில்நுட்ப வரைபடம், அவுர்கா மேப்பிங் தொழில்நுட்பப் போக்கு ஆகியவற்றின் வடிவத்தில் இருக்கலாம். எந்தவொரு விஷயமும் நீங்கள் பயன்படுத்தும் காப்புரிமைத் தரவுத் தளத்தைப் பொறுத்தது அல்லது நீங்கள் அறிக்கையைக் கைமுறையாக உருவாக்கியதைப் பொறுத்து அமையும்.

    காப்புரிமைத் தேடல் மற்றும் பகுப்பாய்வு உங்களிடம்  சேமித்து வைத்த காப்புரிமை எக்செல் தரவுத் தாளோ அல்லது தரவுகள் எந்த வடிவத்திலோ அதாவது சி.எஸ்.வி. தரவுத்தளங்கள், உங்களிடம் இருக்குமானால்  பகுப்பாய்வுச் செயல்முறையைத் தொடங்கலாம். பகுப்பாய்வை யார்? ஏன்? எவ்வாறு? எங்கே?  எப்பொழுது என்ற கேள்விகளுக்கு விடையைக் காணலாம். காப்புரிமை ஆவணத்தில் கண்டுபிடிப்பாளரின் பெயர்கள், முகவரிகள், மேற்கோள் காட்டும் ஆவணங்களைப் பற்றிய விவரங்களை அறியலாம். காப்புரிமை ஆவணத்தில் யார் உங்களுக்கு உதவுவார்கள். இந்தத் தகவல், மனிதவளப் பார்வையில் பயனுள்ளதாக இருக்கும். இது கூட்டு அல்லது தொழில்நுட்பப் பரிமாற்றச் செயல்பாட்டைத் தீர்மானிக்கப் பயனுள்ளதாக இருக்கும். எப்பொழுது ?

    (குறிப்பிட்ட விஷயம் நிகழும்போது) காப்புரிமை ஆவணத்தில் உள்ள தகவல்கள் கண்டுபிடிப்பு போக்குகள், ஒருங்கிணைப்பு,  வரலாறு போன்றவற்றை அறியப் பயன்படுத்தலாம். ஏதேனும் தகராறு இருந்தால், வெளியீடு தொடர்பான தகவல்களைப் பின்பற்றுவது, தொடர்பான காலவரிசை நடவடிக்கைகள், ஆராய்ச்சி தொடர்பான உருவாக்கத்தை ஆராய்வது. எங்கே, காப்புரிமை பெற்றவரின் இருப்பிடம் மற்றும் (அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற புவியியல் பகுதி) கண்டுபிடிப்பாளரின், இது குறிப்பிட்ட தொழில்நுட்பத்தைப் பொறுத்து புவியியல் அல்லது பிராந்திய விரிவாக்கத்தைப் பற்றிய தகவல்களை அறியலாம். நிறுவனங்கள், மேற்சொன்ன தகவல்களைச் சரியான தருணத்தில் சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஜியோ மேப்பிங் மூலமும் செய்யலாம்.  எப்படி?

    குறிப்பிட்ட சோதனைகளில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு அணுகுமுறைகள் அல்லது வழிகள். அந்த அணுகுமுறையின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்று பார்க்க வேண்டும். சிக்கலைத் தீர்ப்பதற்கான நமது அணுகுமுறையைத் தீர்மானிக்க இந்தத் தகவல் உதவக்கூடும். ஏன்? காப்புரிமைத் தேடலும் பகுப்பாய்வும் தொழில்நுட்பத்திற்கான பல்வேறு பயன்பாடுகளை ஆராய்வதற்கு ஊக்கமளிக்க நமக்கு உதவக்கூடும். ஆராய்ச்சி முடிவுகளை மேம்படுத்த இது நமக்கு உதவக்கூடும். காப்புரிமை ஆவணத்தில் உள்ள விவரங்களையும் புதிய வாய்ப்புகளையும் அறிந்துகொள்வதன் மூலம் நமது சிந்தனை விரிவடையக்கூடும், ஆராய்வதற்கு இது முன்மாதிரியாக இருக்கும். காப்புரிமைத் தேடல் மற்றும் பகுப்பாய்வின் தகவல்கள் பயனுள்ள முடிவை எடுக்க  நமக்கு உதவக்கூடும்.

    மென்பொருள் காப்புரிமைகளின் முன்-கலை-தேடல்  (Shahib Ahmed Shaik, Alok Khode, Nishad Despande, Prior Art Searchcers in software patents –IssuesFaced, Journal of Intellectual Property Rights, Vol.3, November 2018, pp 243-249) முன்-கலை-தேடல் என்பது அறிவுசார் சொத்து நிபுணர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு முக்கியமான செயலாகும். இது சொல்லப்பட்ட கண்டுபிடிப்பில் புதுமையை அறிய, பொதுவாக அறியப்பட்ட இலக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. காப்புரிமையை செல்லாததாக்குவதற்கும், காப்புரிமையின் நிலையை அறிந்து கொள்வதற்கும் முன்-கலை-தேடல் மேற்கொள்ளப்படுகிறது.   முன் கலைத் தேடல், வேதியியல், மெக்கானிக்கல் போன்ற பல தொழில்நுட்பக் களங்களில் ஒப்பிடப்படுவது போல் மென்பொருள்  களங்களிலும் ஒப்பிடப்படுகிறது. மென்பொருள் களத்தில், காப்புரிமை ஆவணங்களை விட காப்புரிமை இல்லாத ஆவணங்களிலும் முன் கலைத் தேடல் செயல்பட்டு வருகிறது.

    காப்புரிமைக்கான அடிப்படைத் தேவைகளில் புதுமையும் ஒன்றாகும். எனவே காப்புரிமை வழக்கு விசாரணையின் போது தொடர்புடைய முன் கலையைக் கண்டுபிடிப்பது முக்கியமான கட்டமாகும். (Bekkers R.N.Geneva, 2016],(Gaff B.M.,2014). முன்கூட்டிய கலைக்கான தகவலின் முக்கிய ஆதாரம் என்னவென்றால் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இலக்கியங்களுடன் காப்புரிமை அலுவலகங்களிலிருந்து ஆன்லைன் தரவுத்தளங்கள், முந்தைய கலைக்கான தகவல்களின் முக்கிய மூலத்திலிருந்து வெளியிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் கட்டுரைகள்.

    கலைத் தேடலின் நிலைபொது மதிப்பாய்வின் நோக்கத்திற்காக காப்புரிமையை அடையாளம் காணுதல். புதுமை ஒரு யோசனை / கண்டுபிடிப்பின் காப்புரிமையைப் பாதிக்கக்கூடிய காப்புரிமைகள் மற்றும் காப்புரிமையற்றவர்களை அடையாளம் காணுதல். (காப்புரிமை விண்ணப்பத்தை எழுதுவதற்கு முன்பு நிகழ்த்தப்பட்டது). காப்புரிமை வழங்கப்பட்டால், புதுமையை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.   மீறல் முன்மொழியப்பட்ட தயாரிப்புகள் அல்லது செயல்முறையை உள்ளடக்கும் அமல்படுத்தக்கூடிய காப்புரிமையை அடையாளம் காணுதல். எதிர்ப்பு வழங்கப்பட்ட காப்புரிமை  அல்லது கண்டுபிடிப்பு நிகழ்வுகளில்  புதுமை இல்லை என்று தெரிந்தால் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தல். விடாமுயற்சி அறிவுசார் சொத்துரிமைகளின் பலங்கள், பலவீனம் மற்றும் நோக்கம் ஆகியவற்றை விடாமுயற்சியுடன் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

    மென்பொருளுக்கான முந்தைய கலைத் தேடல்களில் முக்கியமானது காப்புரிமை ஆவணத்திற்குப் பதிலாக, பெரும்பாலும் காப்புரிமை இல்லாத ஆவணங்களில் தேடுவது. மென்பொருள் காப்புரிமைகளின் உள்ளார்ந்த பண்புகள் மற்றும் அவை உள்ளடக்கிய தொழில்நுட்பங்கள், காப்புரிமை நிபுணர்களை முழுமையான தேடல்களை நடத்தக் கட்டுப்படுத்துகின்றன.

    மென்பொருள் காப்புரிமைகள் வெவ்வேறு அதிகார வரம்புகளில் வெவ்வேறு விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இது அந்த வகை மென்பொருளில் தெளிவற்ற தன்மைக்கு வழிவகுக்கிறது. மென்பொருளுக்கான முந்தைய கலைத் தேடல்கள், குறுகிய கால அளவு, தேடல்களுக்கு கிடைக்கக்கூடிய ஆதாரங்கள் மற்றும் முதலில் காப்புரிமை தாக்கல் செய்தல் ஆகியவற்றை பொறுத்தது. மேலும் சிறப்புத் தரவுத்தளங்கள் மற்றும் கருவிகள் கிடைக்காதது தேடல்களின் முயற்சியை மேலும் கட்டுப்படுத்துகிறது. எனவே, அதிநவீன மென்பொருள் டொமைன் குறிப்பிட்ட தரவுத் தளங்கள் / டூல்ஸ்கள் மற்றும் / அல்லது மென்பொருள் காப்புரிமை வரைவுக்கான தரம், உருவாகி வரும் வரை மனித தலையீடு மற்றும் நிபுணத்துவத்தின் சார்பின் பங்களிப்பும் முக்கியமானதாகும்.  Patents applications field in Indian Patents offices for the year 1989 to 2014 [IP, Intellectual Property of India, Annual Reports, 2018,2017,2016,2015 O/O CGPDTM]

    Sl. Year No. of  Indian No. of  Foreign Total % of  Indian % of Foreign
    No. Patens field Patents field Patents field Patents filed
    1 1989-1990 1039 2622 3661 28.38022398 71.61977602
    2 1990-1991 1080 2584 3664 29.475983 70.52401747
    3 1991-1992 1293 2259 3552 36.40202703 63.59797297
    4 1992-1993 1228 2239 3467 35.419671 64.58032881
    5 1993-1994 1266 2603 3869 32.721633 67.2783665
    6 1994-1995 1741 3589 5330 32.664165 67.3358349
    7 1995-1996 1606 5430 7036 22.825469 77.17453098
    8 1996-1997 1661 6901 8562 19.399673 80.60032703
    9 1997-1998 1926 8229 10155 18.966027 81.03397341
    10 1998-1999 2247 6707 8954 25.094930 74.905070
    11 1999-2000 2206 2618 4824 45.729685 54.270315
    12 2000-2001 2179 6324 8503 25.626250 74.373750
    13 2001-2002 2371 8221 10592 22.384819 77.615181
    14 2002-2003 2693 8773 11466 23.486831 76.513169
    15 2003-2004 3218 9395 12613 25.513359 74.486641
    16 2004-2005 3630 13836 17466 20.783236 79.216764
    17 2005-2006 4521 19984 24505 18.449296 81.550704
    18 2006-2007 5314 24430 29744 17.865788 82.134212
    19 2007-2008 6040 29178 35218 17.150321 82.849679
    20 2008-2009 6161 30651 36812 16.736390 83.263610
    21 2009-2010 7044 27243 34287 20.544230 79.455770
    22 2010-2011 8312 31088 39400 21.096447 78.903553
    23 2011-2012 8921 34276 43197 20.651897 79.348103
    24 2012-2013 9911 33763 43674 22.693136 77.306864
    25 2013-2014 10941 32010 42951 25.473214 74.526786
    26 2014-2015 12701 30692 42763 29.700910 71.772327
    27 2015-2016 13066 33838 46904 27.856899 72.143101
    28 2016-2017 13219 32225 45444 29.088549 70.911451
    29 2017-2018 15550 32304 47854 32.494671 67.505329
    Total 153085 484012 636467 24.052308 76.046676

    மேலே உள்ள விளக்கப்படம், இந்திய காப்புரிமை அலுவலகங்களில் வெளிநாட்டு விண்ணப்பங்கள்,  இந்தியா காப்புரிமைக்கான தாக்கல் செய்த விண்ணப்பங்களின் சதவிகிதத்தைக் காட்டுகிறது.

    இந்தியக் காப்புரிமை அலுவலகத்தில் 1999-2000ஆம் வருடம் 45 சதவிகித காப்புரிமை விண்ணப்பங்களை விண்ணப்பித்திருந்தது. ஏனைய வருடங்களில் வெளிநாட்டினர் தான் அதிக அளவில் காப்புரிமை கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள்.

    இந்திய மற்றும் வெளிநாட்டுக் காப்புரிமை விண்ணப்பங்களுக்கு இடையிலான விகிதம் 24.052308: 76.046676.

    1999-2000ஆம் ஆண்டில் Y2k சிக்கல்கள் நிகழ்ந்தன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது ஆண்டிற்கான இலக்கம் இரண்டு தான். உதாரணம் 31.12.99.  இரண்டாயிரமாம் ஆண்டின் தொடக்கத்தில்  தான் ஆண்டிற்கான இலக்கம் நான்காக நடைமுறைக்கு  வந்தது. 01.01.2000.

    ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தின்படி, உலகில் தற்போது 100 மில்லியனுக்கும் அதிகமான காப்புரிமைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு நாளும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. (Shabib Ahamed Shaik and others, 2018). மற்ற தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது மென்பொருள் காப்புரிமை தாக்கல் செய்வது அதிகமாக உள்ளது.

    பொதுவாக, காப்புரிமை விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே வெளியிடப்படாது. மேலும் 18 மாதங்களுக்குப் பிறகு வெளியிடப்படலாம்.

    அமெரிக்காவில் காப்புரிமை விண்ணப்ப விதிவிலக்கு விதிகள் (WIPO, மே 2018) அமெரிக்கா தகவல் தொழில்நுட்பத்தின் பிறப்பிடமாக இருப்பதால் கணினி மற்றும் மென்பொருள் காப்புரிமைகளுக்கும் முன்னிலையில் உள்ளது.  உலகில் இருந்து பெரும்பாலான நிறுவனங்கள் முதலில் அமெரிக்காவில் உள்ள காப்புரிமை அலுவலகத்தில் தான் மென்பொருளுக்கான காப்புரிமையைத் தாக்கல் செய்கின்றன. அமெரிக்காவின் மொத்தக் காப்புரிமை விண்ணப்பங்களில் 30% க்கும் அதிகமானவை மென்பொருள் காப்புரிமைகளுக்கானவை என்பதைக் காட்டுகிறது. யுஎஸ்பிடிஓ (USPTO) காப்புரிமைத் தரவு மென்பொருள் காப்புரிமைகளுக்கான தரவுகளின் முக்கிய ஆதாரமாக இருப்பதால், நம்பத் தகுந்தவகையில் இருப்பதால் , இணையத்தில் மென்பொருள் காப்புரிமைத் தகவல்களைத் தேடும் போது  USPTO  URL (https://www.uspto.gov/)  இல் தான் தேடுகின்றார்கள்.

    Reference: 

    1) Patinformatics – An Emerging Data Science Discipline,  NIC Webinar, August 2020, Scientist E/Technical Director, National Informatics Centre, Tamil Nadu State Centre , Chennai, Government of India, Ministry of  Electronics and Informatics Technology

    2) Prof. Gouri Gargate, NPTEL, Rajiv Gandhi School of Intellectual Property Law, IIT Karagpur (2020)

    3) Shabib Ahamed Shaiak, Alok Khode, Nishad Despande, Prior Art Searches in software patents – Issues faced, Journal of Intellectual Property Rights, Vol3., November 2018, pp 243-249

    4) URL : http://www.ipindia.gov.in, Annual Reports  of the Controller and General of Patents, Designs, Trade Marks and Geographical for the year 2011-2018, Government of India, Ministry of Commerce and Industry, Department of Industrial Policy and promotion, 2011-2018

    5)  https://www.uspto.gov/

    6) https://patentscope.wipo.int/search/en/search.jsf

    7) https://www.wipo.int/portal/en/index.html

    Share
  • நிலவின் துணைச் சுற்று இல்லாமல் பூமியிலே நீடிக்குமா உயிரினம்?

    நிலவின் துணைச் சுற்று இல்லாமல் பூமியிலே நீடிக்குமா உயிரினம்?

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    பொங்கிவரும் பெருநிலவு
    இங்கில்லை என்றால்
    பூமி பரிதிக்கு அப்பால்
    தங்கி விடும் !
    தட்ப, வெப்பம் மாறிவிடும் !
    உயிரின மெல்லாம்
    மங்கி விடும் !
    நிலவில்லை யென்றால்
    கடல் வீக்கம் ஏது ?
    முடங்கிய
    கடல் வெள்ளத்தைக்
    குலுக்கிட அலை
    ஏற்ற மில்லை ! இறக்க மில்லை !
    காற்றின் இறக்கை
    முறிந்து விடும் !
    கடல் நீர் சுற்றியக்கம்
    தடைப்படும் !
    கடல் நீட்சியும் மீட்சியும்
    நடைபெறா !
    கடல் வெப்பம் சீர்ப்படாது
    முடங்கும் !
    காலநிலை மாறுபடும் !
    சூழ்வெளி வேறுபடும் !
    பயிரினம் பரிதவிக்கும் !
    உயிரினம் பாதிக்கப் படும் !
    பூமியின் சுயச்சுற்று தடைப்பட்டு
    நாள் மணிக் கணக்கு
    நீளமாகும் !
    கருநிலவு பூமியை விட்டு
    வருடந் தோறும்
    அங்குலக் கணக்கில்
    அப்பால் நகரும் !

    “காலநிலை, காற்று, காரிகை, எதிர்பாராத செல்வீகம் (Fortune) – இவை யாவும் நிலவைப் போல் மாறிப் போய் விடுபவை !

    பிரெஞ்ச் பழமொழி

    நம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.

    டெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)

    fig-1-relative-sizes-of-earth-moon

    பூகோளம் முதன்முதலில் தோன்றிய போது !

    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய போது பூர்வ பூமியானது எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்வது கடினம் !  திரண்டு உருவான பூமியின் கனல்கட்டி எந்த வடிவத்தில் காணப் பட்டது என்பது யாருக்கும் தெரியாது !  கண்டங்கள் குளிர்ந்து எப்போது உண்டாயின, கடல் வெள்ளம் எப்போது குழியில் நிரம்பியது என்று எவரும்  அறியமாட்டார் !  படிப்படியாகப் படிந்த வாயு மண்டலம் எப்போது பூமிக்குக் குடை பிடிக்கத் தொடங்கியது என்பதை யார் கணிக்க முடியும் ?  புத்தம் புதியக் குழந்தை பூமியை செவ்வாய்க் கோள் அளவுள்ள ஓரண்டம் தாக்கிச் சிதைத்து முதன்முதல் 6 மணி அளவு நாளாய்த் (6 Hour Day) தன்னச்சில் வெகு வேகமாய்ச் சுற்ற வைத்தது !  சிதைந்த சதைப் பிண்டம் உருகிப் போய் ஒன்றாய்த் திரண்டு துணைக்கோள் நிலவு ஆனது.  சக்தி குன்றிய, நிறை குன்றிய, ஈர்ப்பாற்றல் குறைந்த நிலவு தன்னச்சில் சுழாது ஒருமுகம் காட்டிப் பூமியை வலம்வர ஆரம்பித்தது !  ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் கடந்து பூமி குளிர்ந்து உருகிய தளத்துடன், ஆவி பறக்கும் சூழ்வெளியில் உருண்டு திரண்டு ஒரு கோளானது.  700 மில்லியன் ஆண்டுகள் கழிந்து அதாவது சுமார் 3.8 பில்லியன் வருடத்துக்கு முன்பு முதன்முதல் உயிரினம் தோன்ற ஆரம்பித்தது.

    fig-2-life-without-the-moon2
    4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய முதலே நீர்மயம் பூமியில் உண்டாகி விட்டது என்று ஒரு சில விஞ்ஞானிகள் கருதுகிறார்.  நிலவானது பூமியிலிருந்து சிதைக்கப்பட்டு அப்பால் தனியே சுற்ற ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட பெருங்குழியில் நீர் நிரம்பி கடல் உண்டாக ஏதுவானது.  ஆயினும் அப்போது பூமி வெட்ட வெளியாகத்தான் கிடந்தது.  நிலவு முதலில் 7300 மைல் தூரத்தில் சுற்ற ஆரம்பித்தது.  பிறகு நகர்ந்து இப்போதுள்ள தூரத்தில் பாதி அளவு (120,000 மைல்) தொலைவில் இருந்தது.  பூமியில் கடல் அலைகள் அதனால் பேரளவு உயரத்திலும், கொந்தளிப்பிலும் அடித்து வந்திருக்கின்றன.  கடல் நீட்சியால் (Tidal Bulge) பூமியின் “கோண முடுக்கம்” (Angular Momentum) தொடர்ந்து நிலவை ஆண்டுக்கு சுமார் 1.5 அங்குலம் (3.8 செ.மீ) அப்பால் நகர்த்தி வருகிறது !  பூமியின் நாட் கணக்கு நூறாண்டுக்குச் சுமார் 0.002 செகண்ட் நீள்கிறது !  தற்போதைய நிலவின் சராசரித் தூரம் பூமியிலிருந்து 235,000 மைல் (380,000 கி.மீ.).  பூமியின் வேகம் படிப்படியாகக் குறைந்து 6 மணி நாள் நீண்டு 24 மணி நாளாக மாறியது !

    fig-5-sea-tides-in-12-hours1
    பூமி இழக்கிறது ! நிலவு பெறுகிறது ! பூமி மெதுவாகிறது ! நிலவு விரைகிறது !

    பூமியின் ஈர்ப்பியல் வல்லமை நிலவின் ஈர்ப்பியல் வலுவை விட 3000 மடங்கு மிகையானது.  மேலும் பூமியின் திணிவு நிறை நிலவைப் போல் 80 மடங்கு பெரியது.  பூமி சக்தியை இழக்கிறது. நிலவு சக்தியைப் பெறுகிறது !  பூமி கடல் நீட்சியோடு (Tidal Bulge) சுற்றும் போது அந்த வெள்ளம் கண்டங்களின் கரைத் தளம், நதிச் சங்கமம், வளைகுடாக்கள் ஆகியவற்றைச் சூடாக்கும் .  எதிர்ப்படும் இடையூறுகளை தகர்க்கும் !  அத்தகைய கடல் நீட்சியும், மீட்சியும் (Tidal Swelling & Ebbing) சக்தியை இழக்கும் போது பூமியில் “கடல் நீர் உராய்வு” (Tidal Friction) உண்டாகிறது.  அந்தப் பேரளவு நீர் மண்டலம் நீட்சி உண்டாக்கும் போது பூமியின் சுழற்சி சக்திக்குத் தடையாக முட்டுக் கட்டை (Applies Brake to Earth’s Rotational Energy) போடுகிறது !  அதாவது பூமியின் வேகத்தைத் தணிக்கிறது !  அதாவது பூமி ஒரு முறை தன்னச்சில் சுழல அதிக நேரத்தை எடுக்கிறது !  4 பில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமி தோன்றிய காலத்தில் அதன் நாள் மணிக் கணக்கு 6 மணி நேரமாக இருந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள் !  அப்போது நிலவு பூமிக்கு மிக அருகில் சுமார் 7300 மைல் தூரத்தில் இருந்ததாகவும் அறியப் படுகிறது !  இந்தக் குன்றிய தூரத்துக்கும் குறைவாக நிலவு பூமியை நெருங்கி இருக்க முடியாது.  அவ்விதம் தூரம் குன்றினால் பூமி நிலவைத் தன்வசம் இழுத்துத் தகர்த்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் !

    fig-1a-earth-tides
    படிப்படியாக பூமியின் ஈர்ப்புச் சக்தி குறைந்து தன்னச்சில் சுற்றும் அதன் வேகம் தணிகிறது.  பூமியின் ஆறு மணி நேர நாள் 4 பில்லியன் ஆண்டுகளில் நீண்டு இப்போது 24 மணி நேரமாக நீடித்துள்ளது !  இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிதி ஆண்டுக்கு 800 நாட்கள் என்று இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார் !  பூமி தன்னைத் தானே சுற்று வீதம் ஒரு நிலை இலக்கமில்லை !  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த சூரிய கிரகணங்களை வானியல் நிபுணர்கள் துல்லியமாகச் சொல்லி இருப்பது வியப்பான கணிப்பே !  2.5 பில்லியன் ஆண்டுகட்கும் 650 மில்லியன் ஆண்டுகட்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவின் நகர்ச்சி ஆண்டுக்கு அரை அங்குலம் (1.27 செ.மீ.) வீதம் இருந்ததாகக் கணிக்கிடப் படுகிறது.  அந்த யுகங்களில் பூமிக்கு மிக அருகில் இருந்த நிலவு படிப்படியாகத் தள்ளப்பட்டு இதுவரை 235,000 மைல் தூரத்தில் நகர்ந்து பூமியைச் சுற்றி வருகிறது.  1970 ஆண்டுகளில் நாசாவின் அபொல்லோ விண்வெளித் தீரர்கள் நிலவிலே விட்டு வைத்த “மூன்று கோண மூலைக் கண்ணாடிகள்” மீது (Three-Cornered Mirrors Left on the Moon By the Apollo Astronauts) இப்போது லேஸர் ஒளிக்கதிரை அனுப்பித் துல்லியமாகச் சந்திரனின் நகர்ச்சியை [1.5 Inch per Year (3.8 cm per Year)] அளந்து வருகிறார் !

    fig-1b-tidal-movements-on-earth

    நிலவின் ஈர்ப்புக் கவர்ச்சி பூமியில் என்ன செய்கிறது ?

    நிலவால் கடலில் ஏற்படும் நீர் மட்ட உயர்ச்சி தாழ்ச்சி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் அனுதினமும் இயற்கையாக நேரும் கடல் வெள்ளத்தின் நீட்சி மீட்சி இயக்கங்கள் ஆகும் !  கடலின் நீட்சி பூமியின் ஒருபுறமும் கடலின் மீட்சி அல்லது தாழ்ச்சி பூமியின் எதிர்ப்புறமும் நிகழ்பவை.  அவை ரப்பர் பந்து போல் இழுப்புத் தன்மை உடையவை.  சந்திரனின் ஈர்ப்பு விசை இல்லை யென்றால் பூமியின் கடல் வெள்ளம் சுழற்சி அடையாமல் முடமாகி வெறும் பூமியோடு சுற்றி வரும்.  ஆனால் நிலவின் ஈர்ப்பு விசை கடலின் நீர் மண்டலத்தைத் தன்வசம் கவர்ந்துப் பிடித்து வைக்கிறது !  அவ்விதக் கடல் வெள்ள நீட்சி அடையும் போது ஒருவித “முறிப்பு நெம்புதலை” (Torque or Twisting Force) பூமி நிலவின் மீது உண்டாக்குகிறது !

    பரிதி, நிலவு, பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் உள்ள போது அவை நேர்முக நோக்கு ஈர்ப்பு விசையை மிகையாக்குகின்றன.  வசந்த காலத்தில் வரும் கடல் நீட்சி (Spring Tides) எல்லாப் பருவக் காலத்தையும் விட மிகையாக இருந்து வருகிறது !  நீள்வட்டத்தில் சுற்றும் நிலவு சிற்றாரத்தில் (Perigee) பூமிக்கு அருகில் உள்ள போது கடல் நீட்சி அதிகம்.  பிறகு பூமிக்கு அப்பால் நீளாரத்தில் (Apogee) நிலவு உள்ள போது கடல் நீட்சி குறைவு.

    fig-1c-spring-tides

    மேலும் சந்திரனின் ஈர்ப்பு விசை பூகோளத்தின் வாயுச் சூழ்வெளியைப் பாதிக்கிறது.  அது பூமியின் அடித்தட்டு நகற்சி (Plate Tectonics) இணைந்த மேற்தளக் கோளத்தையும் (Lithosphere – Topmost Layer of Earth along with the Crust) மாற்றுகிறது.  நமது பூகோளத்தின் அடித்தட்டு (crust) நிலவை நோக்கி அதன் ஈர்ப்பு விசையால் 12 அங்குலம் (30 செ.மீ) நீட்சி அடைகிறது

    துணைக்கோள் நிலவால் பூமிக்கு ஏற்படும் பலாபலன்கள்

    நிலவில்லாது போனால் கடலில் நீரோட்டம் முடக்கமாகி கடலியக்கம் தடைப்படும்.  அப்போது பேரளவு ஆக்ஸிஜன் வெளியாக்கும் ஆல்கே (Algae – Seaweeds) போன்ற கடற்களைகள் அழிந்து போகும்.  அதாவது சந்திரன் இல்லாவிட்டால் நாம் உண்ணும் உணவு சங்கிலி (Food Chain) பாதிக்கப்படும்.  நிலவின் அமைப்பு மனிதரைப் போன்ற பூமியின் உயிரினச் செம்மை விருத்திக்குப் பல்வேறு செழிப்பு முறைகளில் பாதிப்பு செய்தற்கே.  அவற்றில் முக்கியமானவை :

    fig-1f-the-structure-of-earth

    1.  4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் அதிர்ஷ்ட வசமாக செவ்வாய்க் கோள் அளவில் பூமியைத் தாக்கிய ஓரண்டம் சிதைத்து 99% திணிவு மிக்க இயற்கையான உயிரினத் தடை உண்டாக்கும் சூழ்வெளியை (Natural Primordial Life-Prohibiting Dense Atmosphere) அகற்றியது !  அதன் பின்னர் மிக மெல்லிய தெளிவான உயிரின வளர்ச்சிச் சூழ்வெளி (Relatively Thin Translucent-Clear Life-Permitting Atmosphere) தோன்றியது.  அதே சமயத்தில்தான் முதன்முதல் சந்திரன் துணைக்கோளும் பூமிக்கு உண்டானதாகக் கருதப்படுகிறது !

    2.  அதே கொந்தளிப்புக் காலத்தில்தான் மிகையான மேற்பட்ட கதிர் வெப்பம் வீசும் யுரேனியம், தோரியம் மூலகங்கள் தோன்றி பூகோள உட்கரு செழிப்பாகத் துவங்கியது !  கதிரியக்க வெப்பம் அடித்தட்டுக் கண்ட நகர்ச்சியால் எழுந்த வாயுத் திடப் பொருட்களை சுற்றியக்கத்தால் (Recycling of Continents due to Plate Tectonics) பூமியிலிருந்து வெளியேற வழி வகுத்தது !  அதாவது அடித்தட்டு நகர்ச்சியில் ஒன்றின் மீது ஒன்று குதிரை ஏறிக் கரி கலந்த பொருட்கள் (Subduction of Carbonacious Materials) வெளியாகிக் காலம் செல்லச் செல்ல “சுக்கிரன் விளைவு” மாதிரி (Venus Effect of Global Warming over Time) பூகோளச் சூடேற்றத்தைப் படிப்படியாகத் தவிர்ப்பது.

    fig-1e-earths-lithosphere1
    3.  கடல் நீர்மட்டம் ஏறி இறங்கி கடல் வெள்ளத்தின் சுற்றோட்டத்தை அனுதினமும் நிகழ்த்தி கடல்நீர் முடமாவதைத் தடுப்பது.  அதன் விளைவு : மேலான மனித உயிர் வளர்ச்சிக்குத் தடையானவற்றை நீக்குவது.

    4.  நிலவின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் கடல் நீட்சி தடை செய்வதால் (Tidal Braking) பூமியின் சுயச் சுழற்சி வேகம் தணிகிறது !  அதனால் பூகோளத்தில் உயிரினம் செம்மையாக விருத்தியாகச் சூழ்வெளி மிதமாகிறது. பூமியின் சுழற்சி வேகம் மிகையானால் உயிரினம் பாதிக்கப்படும் பயங்கரச் சூழ்வெளி உருவாக வழி ஏற்படும்.

    5.  மேலும் பூமியின் சுற்றச்சு 23.4 டிகிரி பரிதிக்கு ஒப்பாகச் சரிந்திருக்க நிலவே நிலைப்பாடு செய்ய உதவுகிறது.  அதே சமயத்தில் யுரேனஸ் கோளின் அச்சு கட்டுப்பாடு இல்லாமல் சுற்றச்சு சுமார் 98 டிகிரி சாய்ந்து போய் உள்ளது.  அதாவது மிதமான பருவ நிலைக் காலம் பூமத்திய ரேகைப் பகுதிக்கு மேலும் கீழும் சுற்றியக்கம் பெற உயிரினங்களுக்கு வசதி உண்டாக்குகிறது.

    fig-4-spring-tide-neap-tide

    6.  உலகம் முழுவதிலும் நிலவின் அமைப்பே கடல் நீட்சிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.  நிலவு இல்லாவிட்டால் அலை ஏற்ற இறக்கங்கள் பேரளவில் மெலிந்து போய்விடும் !  நிலவில்லா விட்டால் பூமியின் சுழலச்சு தாறுமாறாக ஊஞ்சல் ஆடும் !  அந்த ஆட்டம் உஷ்ணக் கொந்தளிப்பையும் பெருத்த கால நிலை மாறுதல்களையும் உண்டாக்கும் !  பூமியில் சுமுகமாக வசித்த மனித இனங்கள் வசதியற்ற தட்ப வெப்பச் சூழ்வெளியில் தவிக்க நேரிடும் !

    சூரிய மண்டலத்தில் நூதனப் படைப்புக் கோள் பூகோளம்

    பிரபஞ்சக் காலாக்ஸிகளில் நாமறிந்த பால்மய வீதியின் பரிதி மண்டலத்தில் நாம் வசிக்கும் ஒரே ஒரு கோளில்தான் நூதனமாகப் பேரளவில் நீர்மயம் திரவ வடிவிலும், திடவ உருவிலும், ஆவியாகவும் (Liquid, Solid & Vapour) பல கோடி ஆண்டுகள் நீடித்து வருகிறது.  அதிலும் விந்தையாகப் பூமியின் பிரம்மாண்டன கடற்குழி எப்படி நீர்மயமாக நிரம்பியது என்பது புதிர்களில் ஒரு புதிராக உள்ளது !  அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது !  பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது !  ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது !  பூமிக்கு ஒரே முகத்தை மட்டும் மில்லியன் ஆண்டுகளாய்க் காட்டிச் சுற்றிவரும் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது என்பது உறுதியாக அறியப் பாடாமல் இன்னும் புதிரான ஒரு சிந்தனைக் கோட்பாடாகத்தான் உள்ளது.

    fig-6-solar-eclipse-on-the-moon

    [தொடரும்]

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 On the Moon By : Patrick Moore (January 2001)
    12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40802271&format=html (நிலவு எப்படித் தோன்றியது ?)
    13 Wikipedia – Inner Structure of the Moon [January 31, 2008]
    14 Astronomical Society of the Pacific – Whait if the Moon Did not Exist ? By : Neil F. Comins, University of Maine (1996)
    15 AstronomyCafe.net What Would Have Happened if the Earth Did not Have the Moon ?
    16 Home Page. Natural World . Com – Formation of the Earth & The Moon, Tides & Gravity
    17 Earth-Moon Dynamics Page – Would We have Had Evolution Without the Moon ? By : Dan Green B.Sc. (Hons).
    18 Tides on Earth – The Recession of the Moon By : Tim Thompson (Matt Rosenberg http://geography.about.com/ )
    19 Scientific American – Without the Moon, Would There Be Life on Earth ? By : Bruce Dorminey (April 21, 2009)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 131 (பொன்தட)

    சேக்கிழார் பாடல் நயம் – 131 (பொன்தட)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பொன்தட   வரையில்  பாங்கர்ப்  புரிவு  உறு  கடன்கள்  முற்றி
    வில் தொழில்   காலத்தில்  நண்ணி, விதிமுறை  வணங்கி, மேவும்
    அற்றைநாள்   தொடங்கி, நாளும்  அடல்சிலை  ஆண்மை  முற்றக்
    கற்றனர்  என்னை ஆளும்  கானவர்க்கு  அரிய  சிங்கம்

    வரலாறு

    திண்ணன்  தம் ஐந்தாம் வயதில் சிறு சிறு விலங்குகளை வேட்டையாடி வீட்டில்  கட்டினார்.  பின்னர் வில்லாற்றல் உடைய முதியோர்  இவருக்கு வில்வித்தை கற்பித்தனர். அதனை ஒரு விழாவாகவே கொண்டாடினர். திண்ணன்  வில்லை வணங்கி அவ்வித்தை பயின்றார். ஊரவரும் உதவி புரிந்தனர். விற்பயிற்சிக் களத்தை அடைந்த திண்ணன் மிகவும் பணிவுடன் அதனைக் கற்றான். இதனைச் சேக்கிழார் பாடுகிறார்;

    பொன்தட   வரையில்  பாங்கர்ப்  புரிவு  உறு  கடன்கள்  முற்றி
    வில் தொழில்   காலத்தில்  நண்ணி, விதிமுறை  வணங்கி, மேவும்
    அற்றைநாள்   தொடங்கி, நாளும்  அடல்சிலை  ஆண்மை  முற்றக்
    கற்றனர்  என்னை ஆளும்  கானவர்க்கு  அரிய  சிங்கம்!

    இப்பாடலின் பொருள்

    அழகிய பெரிய மலையின் சாரலில் விருப்ப மிக்க (விற்றொழிலின்) கடன்களை யெல்லாம் முன்னர்ச் செய்துவைத்த விற்றொழிற் களத்திலே சேர்ந்து விதிப்படி முறையாக வணங்கிப் பொருந்திய அன்றைய நாளிலே தொடங்கி, ஒவ்வொருநாளும் வலியவில்லை ஆளுந்தொழிலினை முற்றுப் பெறுமாறு, என்னை ஆளுகின்ற கானவர்குலத்தில் அரியராய் அவதரித்த சிங்க வேறுபோன்ற திண்ணார்.முழுவதும் கற்றுத்  தேறினார்.

    நயம்

    பொன்தட வரையின் பாங்கர் – இது விற்றொழில் பயிற்றும் பயிற்சிக் களமிருந்த மலைச்சாரல் குறித்தது.

    புரிவுறு கடன்முன் செய்த – செய்யத் தக்கனவாகிய கடன்களை முன்னமே செய்து வைத்திருந்த. அவை, தொழிற் பயிற்சிக் களத்தில் முன்னர்ச் செய்து வைக்கத்தக்க கடவுட்பராவுதல் முதலிய கடமைகள். வில்லினையும் மாணவனையும் காப்பணிவித்தலும், சிலையைச் சூழ்ந்து ஏழு நாள் குறிச்சியை வலங்கொள்ளுதலும், விற்பிடிப்பித்தலும், முதலிய கடன்கள் குறிச்சியிற் செய்யப்படுவன.

    விற்றொழிற் பயிற்சிக்களம் குறிச்சிக்குப் புறம்பாய் அடுத்த மலைச்சாரலில் அமைவதாம். சிலைபிடிப்பிக்கு நன்னாளின்முன்னர் அவ்விடத்திலும் இதுபோலவே செய்கடன்களை முன்னரே செய்துவைத்தல் மரபு. சிலை பிடிப்பித்த பின்னர்க் குறிச்சியினின்று மாணாக்கனை ஆசிரியன் அக்களத்துக்கு அழைத்துச் சென்று விற்றொழில் பயிற்றுவிக்கத் தொடங்குவான். அச்சிறப்பு இங்குக் கூறப்பட்டது.

    விற்றொழிற் களம் – விற்றொழில் கற்றற்குரிய களம். முற்காலத்தில் கலைபயில் இடங்கள் நகர முதலிய குடியிருப்பு இடங்களை அடுத்துப் புறம்பே அமைப்பது ஊர் அமைப்பாகும். விற்றொழிற் பயிற்சி யிடமாகிய களமும் இவ்வாறே குன்றவர் வாழும் ஊராகிய குறிச்சிக்குப் புறம்பே அதனை அடுத்த மலைச்சாரலில் அமைவதாம். இவ்வமைப்பு இக்கலைப் பயிற்சிக்கு இன்றியமையாததுமாம். என்னை? அம்புகளைக் குறிவைத்து எய்யும் கலையாதலின் அதற்குரிய அகன்ற வெளியும், மரங்கள் முதலிய பிறவும் வேண்டப்படும்; தனியிடமல்லாது குடியிருப்புக்கு அணிமையாயின் அங்கு வாழ்வாருக்கு இப்பயிற்சியால் இடையூறு நேரும்; இவை முதலிய காரணம் பற்றி விற்றொழிற்களம் பொன்  தடவரையின் பாங்கர் அமைக்கப்பட்ட தென்க. ஊர்ப்புறம்பே ஒதுகிடைகளும் யாக சாலைகளும் அமைந்த அமைப்பினைச் சண்டீசநாயனார் புராணத்தில்  கூறியதும்காண்க.

    விதிமுறை வணங்கி – வில்லின் தொழிற்கலை பயிலத் தொடங்கும் மாணாக்கன் முதலில் வில்லினையும், ஆசிரியனையும் அதற்குரிய கடவுளையும் வேலன் முதலியவர்களையும் பெரியோரையும் வணங்குதல் மரபு. அம்மரபாலே வணங்கி.

    மேவும் அற்றை நாள் –   வில்விழா முடிவுறுகின்ற ஏழாம் நாளாகிய அன்று.

    நாளும் – ஒவ்வொருநாளும், கல்விப்பயிற்சி முற்றும்வரை அதனை நாடோறும் பயிலவேண்டும் என்பது முறை. அடற்சிலை – சிலைக்கு வலிமையாவது அதனை ஏந்தியோன் எண்ணியாங்கு வினைமுடிக்கத் தக்கதாகி உதவுதல்.

    முற்றக் கற்றனன் – முற்ற – நிறைவெய்த. கலையின் முற்றுதலாவது அதனாலாகிய முடிந்த பயனைத் தருதல்.

    “கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்,
    நற்றாள்   தொழாஅர்  எனின்” என்பது திருக்குறள்.

    முற்றக்கற்றதனால் இது இறைவர்க்குப் பகலிற் கானவூ னமுதமாக்குதற்கும், இரவிற் காவல்புரிவதற்கும் பயன்பட்டதென்பதும்  புலப்படும்.

    ‘’என்னை ஆளும்’’  – இது கவிக்கூற்று. சிலைக்கலை முற்றும் கற்று நிரம்பிய இவ்விடத்தில் ஆசிரியர் நாயனாருக்கு ஒரு வணக்கம்செய்து மேற்செல்கின்றார். நாயனாரது சரிதத்தை உலகச்சார்பு பற்றியதும் சிவச்சார்பு பற்றியதும் என இருபகுதியாகப் பிரிப்போமாயின் உலகச்சார்பின் பகுதி நிரம்புகின்றநிலை இது. இனி இது முற்றியபின் நாயனார் வேட்டையிற் புக்குச் சென்றவாறே சிவச்சார்பு பெறப்போக உள்ள பகுதி தொடங்குகின்றது.

    “ஐம்புலவேடரின் அயர்ந்தனை வளர்ந்தென” (சிவஞானபோதம் – 8ம் சூத்திரம்) என்றபடி உண்மையில் வேடர் சேரியில் வளர்கின்ற மன்னவ குமாரராகிய திண்ணனாரது; அந்தச் சேரியில் வளரும் வளர்ச்சித்திறங் கூறும் பகுதி இங்கு முற்றுப்பெறுகின்றது.

    இனித் “தவத்தினி லுணர்த்த விட்டு….அரன்கழல்செல்” வதாகிய பகுதி தொடங்குகின்றது என்ற உண்மையுங் காண்க. சிவவழிபாட்டுக் கிரியைகளுட் புகுமுன் நியாசங்கள் முதலியவற்றாற் சுத்திசெய்துகொண்டு புகும் ஆகமவிதிபோல இங்குச் சிவச்சார்பு பெறப்புகும் நாயனார்க்கு வணக்கம்செய்து ஆசிரியர் மேற்பகுதி தொடங்குகின்றார். இஃது ஆசிரியரது மரபு.   ‘’என்னை ஆளும்  கானவர்க்கு  அரிய  சிங்கம்’’  என்றது  அத்தகைய மரியாதையைக்  குறித்தது.

    கானவர்க்கு அரிய –  வேடர் குலத்துக்குக் கிடைத்தற்கரிய பேறாகக் கிடைத்தவர் என்பது கருத்து. சிங்கம் – சிங்கம் போன்றார். உவமையாகு பெயர்.  இதனுடன்

    ‘’ஏரார்ந்த  கண்ணி   யசோதை இளஞ்சிங்கம் ‘’ என்ற ஆண்டாளின்  திருப்பாவையும் கம்பரின்,

    பரதனும் இளவலும்  ஒருநொடி பகிராது
    இரத்தமும் இவுளியும் இவரினும், மறைநூல்
    உரைதரு  பொழுதினும் ஒழிகிலர் எனைஆள்
    வரதனும்  இளவலும்  எனமரு   வினரே!

    என்ற பாடலும்  இங்கே ஒப்பு நோக்கத்தக்கன.

    இப்பாடலில், திண்ணன், பின்னர் கண்ணப்ப நாயனாராக விளங்கப் போகிறார் என்ற பக்தியுணர்வு மேம்பட்டமையால், அவரை வழிபட்டு, ‘’என்னை ஆளும்  கானவர்க்கரிய  சிங்கம்’’ என்று  சேக்கிழார் கூறுவது எண்ணியெண்ணி  உருகத்தக்கது!

    Share
  • குட்டி குட்டி பசி எடுத்தால் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 15

    குட்டி குட்டி பசி எடுத்தால் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 15

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    நம்மில் பலருக்கும் அவ்வப்போது குட்டி குட்டி பசி எடுக்கும். சிலருக்குக் காலையில் எழுந்தவுடனே பசி, வயிற்றைக் கிள்ளும். சிலருக்குக் குளித்தவுடன் வயிறு பரபரக்கும். சிலருக்குச் சாப்பிட்ட உடனே மீண்டும் பசிக்கும். சிலருக்கு வேலை செய்தால் கபகபவெனப் பசிக்கும். சிலருக்கு ஓய்வெடுத்தாலே பசிக்கும். இந்த ஊரடங்கில் இஷ்டத்திற்கு வெளியில் சென்று, வாங்கிச் சாப்பிட முடியாது. இந்நிலையில் வீட்டில் இருக்கும் பண்டங்களைக் கொண்டே சுவையான, ஆரோக்கியமான உணவை எளிதில் தயாரிப்பது எப்படி? இதோ ஏராளமான குறிப்புகளை அள்ளித் தருகிறார், ஓவியர் ஸ்யாம். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்கள் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 17

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 17

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள் – 3

    முன்னுரை

    கவிச்சக்கரவர்த்திகள் என்னும் பெருமைக்குரியவர் மூவராயினும் கம்பனைத் தனித்துச் சுட்டுவது போலப், ‘பாரதி’ என்பார் பலராயினும் சுப்பிரமணியபாரதியையே சுட்டுமாறு போல இலக்கண இலக்கிய உரையாசிரியர் பலராயினும் அச்சொல் ஒருவரையே சுட்டுமாறு அமைந்திருக்கிறது. அந்தச் சிறப்பினைப் பெற்றவர் ஆசிரியர் இளம்பூரணர். தொல்காப்பிய அடவிக்குள் செல்லத் தடம் காட்டிய தண்டமிழ்ச் சான்றோர். கரையில்லாத் தமது தமிழ்ப்புலமையைக் கறையில்லா உரைசெய்து காலத்தால் அழிக்க முடியாத பெரும்புகழ் கொண்டவர். சேனாவரையம், நச்சினார்க்கினியம் மற்றும் பேராசிரியம் ஆகியவை தனித்தன்மை மிக்க உரைகளாகக் கருதப்படினும் அவற்றின் தனித்தன்மைக்கு மூலமாக இருந்தது இளம்பூரணரின் உரையே என்பதைக் கற்றார் அறிவர். ‘இளம்பூரண அடிகள்’ என அடியார்க்கு நல்லாரால் போற்றப்படும் அன்னார் எழுதிய தொல்காப்பியம் முழுமைக்குமான உரையில் ஆங்காங்கே இலக்கண விளக்கத்திற்காக அவர் பயன்படுத்தியிருக்கும் உவமங்களைப் பற்றிய சுருக்க ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.

    குலமகளும் கோபுரமும்

    அனைத்துவகைச் சிறப்புக்களை உடையதாயிருப்பினும் ஒரு நூலுக்குப் பாயிரம் என்பது இன்றியமையா ஒன்று. அது அறிமுகம். தோரணவாயில். முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை என்றெல்லாம் ஆயிரம் திருநாமங்களைக் கொண்டு அது அமையும். பொதுப்பாயிரம் எனவும் சிறப்புப் பாயிரம் எனவும் அது பகுக்கப்படுவதும் உண்டு. தொல்காப்பியத்திற்கும் அந்தப் பாயிரம் உண்டு. அதனை எழுதியவர் பனம்பாரனார் என்னும் சான்றோர். அந்தப் பாயிரம் தொல்காப்பியத்திற்கு அமைந்துள்ள பாங்கினை இளம்பூரணர் உவமம் கூறி விளக்குகிறார். ‘புகழ் புரிந்த இல் இல்லோரக்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடுநடை’ என்னும் குறட்பாவால் ‘கணவனுக்கு மனைவியே அணிந்துரை’ என்பதைக் குறிப்பிடுவார் திருவள்ளுவர். சிலப்பதிகாரக் காப்பியத்தில் தலைமகள் கண்ணகியைக் கோவலனினும் முற்படுத்தி அறிமுகம் செய்ததும் இது பற்றி என்க. இந்தக் கருத்தினை உள்வாங்கிய அல்லது மனத்தில் எண்ணிய இளம்பூரணர்,

    “பாயிரம் என்பது புறவுரை. அது நூற்குப் புறவுரையேல் அதுகேட்டு என்னை பயனெனின், கற்றுவல்ல கணவற்குக் கற்புடையாள்போல  இன்றியமையாச் சிறப்பிற்று”

    என்று எழுதுகிறார். எண்ணிப்பார்க்க இயலாத உவமங்களைக் கவிதைகளில் பிணைத்துக் காட்டியவர் சுரதா. அவருக்கு இளம்பூரணர் வழிகாட்டியாக இருக்கலாம். பாயிரத்தை நோக்கினால் நூலின் தகுதி தெரிந்துவிடும். மனைவியின் பெருமை நோக்கினால் கணவனின் பெருமை புலப்பட்டுவிடும் என்பது கருத்து. இங்கே ஒரு நுட்பத்தை இளம்பூரணர் பதிவு செய்கிறார்.  மனைவியில்லையேல் கணவன் இல்லையென்பதை ‘இன்றியமையாச் சிறப்பிற்று’ என்னும் தொடரால் புலப்படுத்துகிறார்.

    கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

    அக்காலத்தில் நகரங்கள் ஆலயங்களுக்குள் வடிவமைக்கப்பட்டன. மதுரை, திருவானைக்காவல், திருவரங்கம் முதலிய நகரங்கள் ஆலயத்திற்குள் அடக்கம். விமானம் என்பது கருவறைக்கு மேல் நிற்பது. கோபுரம் என்பது கோயிலுக்கு நுழைவாயிலாக அமைவது. நகரம் கோயிலுக்குள் அமைந்ததால் கோயிலுக்குக் கோபுரம் என்பதும் நகரத்திற்கு நுழைவாயிலாக அமைந்தது. இதனைச் சிந்திக்கும் இளம்பூரணர், ஒரு நூலுக்கும் அதன் பாயிரத்திற்குமான தொடர்பைத்,

    “திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்த வாயில் மாடம் போல அலங்காரமாதற் சிறப்பிற்றாயும் வருதலான்”

    என்று எழுதுகிறார். மனைவி இன்றிக் கணவன் அமையமாட்டான் என்பதை முன்னுவமத்தால் பெறவைத்த இளம்பூரணர், இந்த உவமத்தால் அத்தகைய அறிவுடைய மனைவி அழகுபொலி நங்கையாகவும் இருக்க வேண்டும் என்பதை ‘அலங்காரமாதற் சிறப்பு’ என்னும் தொடரால் பெறவைக்கிறார்.

    இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடும் குருடன்

    ‘பார்த்து நடந்தால் பாதை தெரியும்’ என்பார் கண்ணதாசன். பார்த்து நடப்பதற்குக் கைகாட்டி இன்றியமையாதது. அந்த கைகாட்டித்தான் பாயிரம். இப்பாயிரம் அமையாத அல்லது படிக்காத நிலையில் நேரடியாக நூலுக்குள் நுழைந்தால் என்ன ஆகும்? என்பது பற்றி அடிகள் சிந்திக்கிறார். அதற்கு ஓர் உவமத்தைப் பயன்படுத்துகிறார்.

    “பாயிரம் கேளாதே நூல் கேட்குமேயெனின் குறிச்சி புக்க மான்போல மாணாக்கன் இடர்ப்படுமாகலானும்”

    என்று எழுதுகிறார். உள்ளடக்கத்தின் அறிமுகம் பாயிரம். தடங்காட்டி  வழிநடத்தும் பொறுப்பு அதற்குண்டு. அப்பாயிரம் இன்றேல் உள்ளடக்கத்தை அறியா மாணவன் தடமறியாக் காட்டுக்குள் சென்ற மானாக இடர்ப்படுவான் என்னும் உவமத்தை இளம்பூரணர் எடுத்துக்காட்டுகிறார்.

    நாலுழக்கு கொண்டதே நாழி

    ‘நாழி’ என்றால் ‘படி’ என்பது பலருக்கும் தெரியும். ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ என்பது சங்க இலக்கியம். ‘ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி’ என்பது மூதுரை. ஆனால் ‘நாழி’ என்னும் அளவு எப்படி வந்தது என்பது பெரும்பாலோருக்குத் தெரியாது. நுட்பமான இந்த அளவைக்கு மூலம் கிடையாது என்பதுதான் கருத்து. இதனை இளம்பூரணர் தக்க இடத்தில் உவமமாக்குகிறார். எழுத்துக்களை உச்சரிப்பதற்குரிய கால அளவுக்கு மாத்திரை என்று பெயர். அம்மாத்திரை அளவை எப்படி நிர்ணயிப்பது என்று,

    “கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
    நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே”

    என்ற நூற்பாவில் தொல்காப்பியம் சிந்தித்திருக்கிறது. இந்த நூற்பாவில் கண்ணிமையின் அசைவும், கைந்நொடியின் ஒலியளவும் ஒரு மாத்திரைக்கான கால அளவு என்பதை உணர்த்தியிருக்கிறார். இளம்பூரணருக்கு என்ன ஐயம் வந்தது? இதனை ஒரு மாத்திரை என்று கொள்வது எப்படி? என்பதுதான். அதற்கு அவர் எழுதுகிறார்,

    “நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறு என்றதனான், நாலுழக்கு கொண்டது நாழி என்றாற்போல அவ்வளவைக்கு அளவை பெறாமை அறிக”

    அடிகள் உவமத்தால், நாழி என்பது எல்லாருக்கும் தெரியும். அது நாலுழக்கு கொண்டது என்பது பலருக்கும் தெரியாது. நுண்ணறிவு கொண்டார்க்கே அது புலனாம். அதுபோலக் கண்ணிமையும் நொடியும் மாத்திரை என்பது நுண்ணுணர்வுடையோர்க்கே புலனாம் என்று உவமம் கொண்டு விளக்குகிறார்.

    சந்தனக்கோல் குறுகினும் பிரப்பங்கோல் ஆகாது

    முதலெழுத்து, சார்பெழுத்து என்னும் பகுப்பில் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் மூன்றும் இடம்பெறுவது தொல்காப்பிய வழக்கு.

    “குற்றியலிகரம் குற்றியலுகரம்
    ஆய்தம் என்ற
    முப்பாற்புள்ளியும் எழுத்தோரன்ன”

    என்பது தொல்காப்பியம். முதல் எழுத்துக்களை முன்னர்ச் சுட்டி சார்பெழுத்துக்களை இந்த நூற்பாவில் சுட்டுகிறார் தொல்காப்பியர். முதலெழுத்தும் சார்பெழுத்தும் தனித்தனியாக விதந்தோதப்படுதலின் பின்னவை எழுத்தாகுமோ என்னும் ஐயத்தைக் களைய வேண்டிய கடப்பாடு உரையாசிரியருக்கு வருகிறது. இளம்பூரணர் இந்த ஐயத்தை ஓர் உவமத்தால் களைகிறார்.

    “சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங்கோல் ஆகாது அதுபோல இகர உகரங்கள் குறுகினவிடத்தும் அவை உயிர் ஆகற்பாலன”

    என்று எழுதிக் காட்டுகிறார். காட்டி, சார்ந்துவரல் மரபின் மூன்றெழுத்துக்களைத் தனியாக ஓதியது என்னையோவெனின் அவை பொருள் வேற்றுமையும் புணர்ச்சி வேற்றுமையும் கருதி வேறொரு தனியெழுத்தாகக் கூறினார் என்றும் காரணம் கூறுகிறார்.

    உயிர்மெய்யில் முன்னிற்பது எது? உயிரா? மெய்யா?

    அங்காந்த வாயினின்றும் வரும் ஆதியொலி அகரமெனின், உயிர்மெய்யை உச்சரிப்பது எவ்வாறு? அவ்வாறு உச்சரிக்குங்கால் முதலில் வருவது உயிரா மெய்யா? என்னும் அறிவுப்பூர்வமான ஐயம் வருவது இயல்பே. எழுத்துக்களின் தோற்றங்களை நிரலாகக் கூறிவரும் தொல்காப்பியம்,

    “மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே”

    என்னும் நூற்பாவில் உயிர்மெய்யின் தோற்றத்தைப் பற்றி ஆராய்கிறது. முன்னர்க் கூறியவண்ணம் உயிர்மெய்யில் முதலில் தோன்றும் ஒலி உயிரா மெய்யா என்னும் ஐயத்தைத் தொல்காப்பியம் இந்த நூற்பாவால் களைகிறது. ‘உயிர்மெய்யுள் உயிரும் மெய்யும் நிற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று எனப் பதசாரம் எழுதிய இளம்பூரணர்,

    “மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெற நிற்கும் என்றமையான் அக்கூட்டம் பாலும் நீரும் போல  உடன்கலந்ததன்றி விரல் நுனிகள்  தலைப்பெய்தாற்போல வேறு நின்று கலந்தனவல்ல என்பது பெறுதும்”

    என்னும் இரண்டு உவமங்களால் விளக்குகிறார். இப்படி இருக்கிறது என்பதற்கோர் உவமமும் இவ்வாறு நிற்பதாகக் கருதிவிடக்கூடாது என்பதற்கு மற்றொரு உவமத்தையும் பதிவு செய்து உயிர்மெய்யுள் எது முன்னது என்று தெரியாத வண்ணம் ஒலி வெளிப்படும் என்னும் நுட்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    கலத்தலும் மயங்குதலும்

    ‘மயக்கமா? கலக்கமா?’ எனத் தொடங்கும் கண்ணதாசன் எழுதிய திரையிசைப் பாடல் பெருவழக்கு. ‘கலங்கி நிற்றல்’ என்பது வேறு. ‘கலந்து நிற்றல்’ என்பது வேறு. கண்ணதாசன் இப்படி எழுதுவதற்கு முன்னால் தொல்காப்பியர் கலத்தலா? மயங்குதலா? என்பது பற்றிச் சிந்தித்திருக்கிறார். தமிழில் சில சொற்கள் ஒரே பொருளைத் தருவதாகத் தோன்றினாலும் அவற்றிடையே நுட்பமான வேற்றுமை நிலவுவதை உரையாசியர்களின் துணைகொண்டு அறிந்து கொள்ள முடிகிறது. சான்றாகக் கலத்தல், மயங்குதல் என்பன ஒரே பொருள்  தருவது போலத் தோன்றும் இரு சொற்கள். இவ்விரண்டு சொற்களையும் பிணைத்து,

    “நிலம்தீ நீர்வளி விசும்பொடு ஐந்தும்
    கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”

    என்பது தொல்காப்பிய மரபியலில் காணப்படும் நூற்பா பகுதியாகும். ‘கலந்த மயக்கம்’ என்னும் தொடரில் ஒரே பொருளைத் தரும் இரண்டு சொற்களை  நோக்கிய இளம்பூரணர் அவற்றுக்கிடையே நிலவும் பொருள் வேறுபாட்டை நேரடியாக விளக்குவதைவிட உவமையால் விளக்குவதே ஏற்றது எனக் கருதியவராய்க்,

    “கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவினாற் போறல். மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செப்பும் உருக்கி ஒன்றாதல் போறல். ‘உலகம்’ என்றது உலகினையும் உலகினுட் பொருளையும். ‘உலகம்’ என்றது முத்தும் மணியும் கலந்தாற்போல நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என விரவி நிற்கும். ‘உலகினுட் பொருள்’ பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற்போல வேற்றுமைப்படாது நிற்கும். அவ்விரண்டையும் உலகம் உடைத்தாதலின் ‘கலந்த மயக்கம்’ என்றார்”

    என விளக்கியிருப்பதை அறியமுடிகிறது. இவ்வுவமைகளால் தன்னிலை மாறாமல் இணைவது ‘கலத்தல்’ எனவும், தன்னிலை இழந்து இணைவது ‘மயங்குதல்’ எனவும் அவற்றின் பொருள் விளக்கமாவதைத் தெளியலாம்.

    நிறைவுரை

    ‘இலக்கண விளக்கத்திற்கும் உவமப்பயன்பாடு ஏற்றதே’ என்னும் கொள்கையில் உறுதியாயிருக்கும் இளம்பூரணர் உரையில், பாலும் நீரும் என்னும் உலகியல், ‘எல்லா விரலும் ஒன்றல்ல’ என்னும் வழக்கியல், தோற்றம் இயல்பைக் குறைக்காது என்பது பட நின்ற ‘சந்தனக்கோல் குறுகினும் பிரப்பங்கோல் ஆகாது’ என்னும் தத்துவம் முதலியன உவமங்களாக வந்துள்ளன. கோபுரமும் குறிச்சியும் உவமமாக வந்துள்ளன. ‘கலத்தல், மயங்குதல்’ என்னும் சொற்பொருள் விளக்கத்திற்கும் உவமங்கள் பயன்பட்டுள்ளன. எடுத்துக்காட்டப்படும் இவை மட்டுமே இளம்பூரணரின் உவமங்கள் அல்ல இன்னும் இருக்கின்றன என ஆற்றுப்படுத்துகிறது இக்கட்டுரை.

    (தொடரும்…)

    Share
  • நெருங்கிய உறவுத் திருமணத்தால் விளையும் கேடுகள்

    நெருங்கிய உறவுத் திருமணத்தால் விளையும் கேடுகள்

    ஜோதிர்லதா கிரிஜா

    நெருங்கிய இரத்த பந்தம் உள்ள உறவினர்க்கிடையே திருமணம் செய்யும் வழக்கம் அனைத்துலக நாடுகளிலும் நெடுங்காலமாக இருந்து வருகிறதாம். நம் நாட்டை எடுத்துக்கொண்டால், இத்தகைய திருமணங்களில் அருணாசலப் பிரதேசம் முதலிடமும், தமிழ்நாடு இரண்டாம் இடமும் வகிப்பதாய் அரசின் ஆய்வறிக்கை கூறுகிறது.

    அனைத்துலக நாடுகளில் சிலவற்றில் இந்த வழக்கம் இருந்து வந்தாலும், அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள், ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இது இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. தெற்காசியப் பகுதியில் உள்ள நாடுகளிலும், அரேபியத் தீவு நாடுகளிலும் இந்த வழக்கம் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதாய்ச் சொல்லப்படுகிறது.

    இப்படி ஒரு வழக்கம் ஏற்பட்டமைக்கான காரணங்கள் மிக வெளிப்படையானவை. உறவில் திருமணம் செய்யும் போது மணப்பெண்ணின் குடும்பமும் மணமகனின் குடும்பமும் ஏற்கெனவே ஒன்றுக்கொன்று தெரிந்தவையாக இருக்கும் பின்னணியில், மணமுறிவு போன்ற அபாயங்கள் குறைவு. குடும்பம் சார்ந்த சிக்கல்களும், சண்டை சச்சரவுகளும் பிற வகைத் திருமணங்களில் உள்ளவற்றைவிடவும் குறைவாகவே இருக்கும் வாய்ப்பு உள்ளது. மணமக்களின் குடும்பங்களும் – ஏன்? மணமக்களும் கூடத்தான் – ஏற்கெனவே பழக்கம் உள்ள காரணத்தால்,  ஒரு வகை நிம்மதி மணமகளின் பெற்றோர்க்குச் சற்று அதிகமாகவே இருக்கும். இந்தியாவைப் பொறுத்த வரையில் பெண்ணைக் கொடுத்தவர்கள்தானே வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்க நேர்கிறது?

    தாய்-தந்தையர், உடன்பிறந்தோர்கள், தந்தையின் உடன்பிறப்புகள், தாயின் உடன்பிறப்புகள் ஆகிய உறவுகள் இரத்த பந்த உறவுகளாம்.  தாய் மாமனின் மகன் அல்லது மகள், அத்தையின் மகன் அல்லது மகள் ஆகியோரை முறையே மணமுடிக்கும் பெண்ணுக்கும் ஆணுக்கும் பிறக்கும் குழந்தைகள் பிறவிக்குறைகளுடன் தோன்றும் அபாயம் கணிசமாய் உள்ளதென்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றனவாம். அதிலும், சொந்தத் தாய் மாமனை மணக்கும் பெண்ணுக்கு இத்தகைய குறைபாடுடைய குழந்தைகளப் பெறும் அபாயம் அதிகமாகவே உள்ளதென்றும் கண்டறியப்பட்டுள்ளது. தாய்மாமனை “அம்மான்” என்றே நாம் சொல்லுகிறோம். அம்மான் என்றால் கிட்டத்தட்ட ஓர் அம்மாவை ஒத்தவன் என்பதுதானே பொருள்? எனவே, பிற இரத்த பந்தங்களை விடவும் தாய்மாமன் அதிக நெருக்கமானவன் என்றாகிறது. இதனால், பிற இரத்த பந்தங்களை மணப்பதில் உள்ள அபாயத்தைக் காட்டிலும் தாய்மாமனை மணப்பதில் அதிக அபாயம் இருக்குமென்பது தெளிவாகிறது.

    சில நேரங்களில் தாய்மாமனை மணப்பவர்க்குத் தாய்மைப்பேறே கிடைப்பதில்லை. கிடைத்தாலும் பெருமளவு குறைபாடுள்ள குழந்தைகள் தான் இவர்களுக்குப் பிறக்கின்றன. இதில் இன்னொரு தீங்கு என்னவென்றால், இந்தத் தலைமுறைக் குழந்தைகள் குறைகள் அற்றுப் பிறந்தாலும், அடுத்து வரும் தலைமுறைச் சந்ததிகள் குறைகளற்றுப் பிறப்பார்கள் என்று அறுதியிட்டுக் கூற இயலாதாம்.

    இரத்த பந்தம் உள்ளவர்களின் மரபணுக்கள் ஒரே மாதிரியானவையாகவே பெரும்பாலும் இருப்பதே இதற்குக் காரணம் என்கிறார்கள். மரபணுக்கள் வேறுபட்டவையாக இருந்தால்தான் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்குமாம். ஆணுடையவையும் பெண்ணுடையவையும் ஒரே இனமாக இருப்பின், குழந்தைகள் பிறக்க வாய்ப்பில்லை என்பதோடு, பிறந்தாலும் அவை குறைகளற்றவையாய் இருப்பதில்லை என்பதே மருத்துவ ஆய்வின் வெளிப்பாடு.

    குடும்பச்சொத்துகள் சொந்தங்களைவிட்டு அகலமாட்டா என்பதும், வரதட்சிணை, படுத்தல்கள் போன்ற கொடுமைகள் இராவென்பதும் இந்தியாவைப் பொறுத்தவரையில் உறவுத் திருமணங்களுக்குக் காரணங்களாம். ஒரு பெண் குழந்தை பிறந்ததுமே, “அடேய், பயலே! உனக்குப் பெண்டாட்டி பிறந்திருக்கிறாள்” என்று சொல்லும் வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. அல்லது, சின்னஞ்சிறு வயதிலிருந்தே வரப்போகும் உறவு பற்றிப் பேசிப் பேசியே குடும்பத்துப் பெரியவர்கள் சின்னஞ்சிறிசுகளின் மனங்களில் ஓர் எதிர்பார்ப்பை விதைத்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறாகும். ஆணோ பெண்ணோ பின்னர் வளர்ந்து பெரியவர்களாகும் போது, இருவரில் ஒருவரது மனம் மாற நேரிட்டாலும் சிக்கல் ஏற்படுகிறது. பெரியவர்கள் சொல்லிச் சொல்லி விதைத்ததால் விளைந்தது வெறும் சிறுபிள்ளைத்தனமான – மன முதிர்ச்சியல்லாத _ பிணைப்பே என்பதை இருவரில் ஒருவர் புரிந்துகொண்டாலும் விரிசல்கள் ஏற்படுகின்றன. எனவே நம் பெரியவர்கள், “அடேய்! உனக்குப் பெண்டாட்டி பிறந்திருக்கிறாள்!” போன்ற உளறல்களை நிறுத்த வேண்டும்.

    உறவுத் திருமணங்களின் கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே தொலைக்காட்சி, வானொலி, பிற ஊடகங்கள் வாயிலாகப் பரப்புரை செய்ய வேண்டும். விஷயம் தெரியாமல் நாம் இதுகாறும் செய்துவந்துள்ள பிழை போதுமே. இனிமேலும் காது கேளாமை, வாய் பேசாமை, திக்குவாய்க்குறை, கைகால்கள் சூம்பியிருத்தல், மூளைக்கோளாறு, படு குள்ளமான உருவம், இதயக்கோளாறுகள், ஆடிசம் எனும் குறைபாடு, இடுப்பிலிருந்து கால்கள் வரை செயலற்ற தன்மை, கண்பார்வையின்மை, உடம்பின் அளவுக்குப் பொருந்தாத மிகப் பெரிய தலை, தெறிக்கும் விழிகள் இன்னோரன்ன குறைகள் உள்ள குழந்தைகளை நாம் மேலும் உற்பத்தி செய்து அந்தக் குழந்தைகளையும் வதைக்க வேண்டுமா?

    நெருங்கிய உறவுத் திருமணம் சார்ந்த தீமைகள் பற்றித் தெரியாமையால், நம் எழுத்தாளர்கள் (இந்த எழுத்தாளர் உள்பட) உறவுக்காதல் கதைகளை எழுதி வந்துள்ளனர். திரைப்படங்களைப் பற்றியோ சொல்லவே வேண்டியதில்லை. இனியாகிலும், இதற்கு நாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாமே.

    Share
  • பூகோளச் சூடேற்ற உஷ்ண எச்சரிக்கை வரம்பு அடுத்து வரும் ஐந்தாண்டில் நேரலாம்

    பூகோளச் சூடேற்ற உஷ்ண எச்சரிக்கை வரம்பு அடுத்து வரும் ஐந்தாண்டில் நேரலாம்

    சி. ஜெயபாரதன், B. Eng [Hons], P. Eng [Nuclear]

    https://www.activesustainability.com/climate-change/debunking-climate-change-myths/

    1. https://youtu.be/-D_Np-3dVBQ
    2. https://youtu.be/q0VRB-PltrE

    It’s becoming more likely that a key global temperature limit will be reached in one of the next five years.

    Arctic sea ice reached its annual summer minimum extent on Sept. 15, the second lowest minimum on record. Credit: NASA’s Goddard Space Flight Center

    2025 ஆண்டுக்குள் சூடேற்றம் தொழிற்துறை நிலைப்புக்கும் 1.5 C டிகிரி மிஞ்சி நிகழ்ந்து விடலாம் !

    பாரிஸ் உடன்படிக்கைப்படிப் பூகோள சூடேற்ற உஷ்ண வரம்பு [2 டிகிரி C] எல்லையைத் தாண்டி விடலாம், என்று ஓர் பேராய்வு அறிக்கை கூறுகிறது. இந்த எதிர்பார்ப்பு வாய்ப்பு இப்போது 20% கணிப்பி லிருந்து, 40% ஆக உயர்ந்து விட்டது. ஆயினும் அந்த நிலைக்கு உஷ்ணம் ஏறி விடாது வரம்பு 1.5 C எல்லை கடக்காது கண்காணிப்பு புரிய வேண்டும் என்பது தற்போதைய உடன் படிக்கை. ஆனால் இப்போதைய கோர விளைவுகளைப் பார்த்தால் உச்ச வரம்பு 3 C ஆகி விடுமோ என்று ஓர் அச்சம் உண்டாகிறது.

    In the Arctic Ocean, sea ice reached its minimum extent of 1.44 million square miles (3.74 million square kilometers) on Sept. 15 – the second lowest extent since modern record-keeping began. Credit: NASA’s Scientific Visualization Studio

    GAS VOLUME(A)
    NAME FORMULA IN PPMV(B) IN %
    Nitrogen N2 780,840 78.084
    Oxygen O2 209,460 20.946
    Argon Ar 9,340 0.9340
    Carbon dioxide
    (December, 2020)(C)[13]
    CO
    2
    415.00 0.041500
    Neon Ne 18.18 0.001818
    Helium He 5.24 0.000524
    Methane CH4 1.87 0.000187
    Krypton Kr 1.14 0.000114
    NOT INCLUDED IN ABOVE DRY ATMOSPHERE:
    Water vapor(D) H2O 0–30,000(D) 0–3%(E)

     

    NOTES:
    (A) VOLUME FRACTION IS EQUAL TO MOLE FRACTION FOR IDEAL GAS ONLY,
        ALSO SEE VOLUME (THERMODYNAMICS)
    (B) PPMV: PARTS PER MILLION BY VOLUME
    (C) THE CONCENTRATION OF CO
    2 HAS BEEN INCREASING IN RECENT DECADES
    (D) WATER VAPOR IS ABOUT 0.25% BY MASS OVER FULL ATMOSPHERE
    (E) WATER VAPOR VARIES SIGNIFICANTLY LOCALLY[11]

    The average molecular weight of dry air, which can be used to calculate densities or to convert between mole fraction and mass fraction, is about 28.946[14] or 28.96[15][16] g/mol. This is decreased when the air is humid.

    The relative concentration of gases remains constant until about 10,000 m (33,000 ft).

    Reference

    1. Arctic sea ice reached its annual summer minimum extent on Sept. 15, the second lowest minimum on record. Credit: NASA’s Goddard Space Flight Center.
    2. https://climate.nasa.gov/news/3023/2020-arctic-sea-ice-minimum-at-second-lowest-on-record/
    3. https://www.bbc.com/news/science-environment-24021772
    4. https://climate.nasa.gov/news/3086/satellites-show-how-earths-water-cycle-is-ramping-up-as-climate-warms/
    5. https://en.wikipedia.org/wiki/Atmosphere_of_Earth
    6. https://www.nasa.gov/audience/forstudents/k-4/stories/nasa-knows/what-is-climate-change-k4.html
    7. https://www.activesustainability.com/climate-change/debunking-climate-change-myths/
    Share