Blog

  • இறங்கத் தெரியாத பூனை

    இறங்கத் தெரியாத பூனை

    இன்று மதியம் எங்கள் வீட்டுக் கிறிஸ்துமஸ் மரத்தில் ஒரு பூனை விறுவிறுவென ஏறியது. அதைத் துரத்தி வந்த இன்னொரு பூனை, இறங்கிச் சென்றது. இந்த மரத்தில் கூடு கட்டி வசிக்கும் காக்கைகள், மேலே ஏறிய பூனையைச் சுற்றிச் சுற்றி வந்து கரைந்தன. பூனையோ இறங்கத் தெரியாமல் அல்லது இறங்க விரும்பாமல் மரத்திலேயே சுற்றிச் சுற்றி வந்தது. இதர பறவைகள் பரபரவென்று பறந்தன. இந்த நவரச நாடகத்தைப் பாருங்கள் (என் பழைய கேமரா, இன்று மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டது).

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பூர் கிருஷ்ணன் மகன் அரவிந்த் கிருஷ்ணன் மறைவு

    திருப்பூர் கிருஷ்ணன் மகன் அரவிந்த் கிருஷ்ணன் மறைவு

    அண்ணாகண்ணன்

    அரவிந்தத் தத்துவத்தில் தோய்ந்து, அரவிந்த அமுதம் என்ற நூலை எழுதிய திருப்பூர் கிருஷ்ணன், தன் ஒரே மகனுக்கு அரவிந்தன் என்று பெயர் சூட்டினார். நா.பார்த்தசாரதியின் புனைபெயர்களுள் ஒன்று, அரவிந்தன். நா.பா.வின் குறிஞ்சி மலர் புதினத்தின் நாயகன் பெயரும் அரவிந்தன். நா.பா.வின் சீடரான திருப்பூர் கிருஷ்ணன். அந்த வகையிலும் தன் மகனுக்கு இப்பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்தார்.

    சமூக சேவையில் (MSW – Master of Social Work) முதுகலைப் பட்டம் பெற்ற அரவிந்த் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகத்தில் பதிப்பாசிரியராகப் பணியாற்றி வந்தார். ஏராளமான இலக்கிய நிகழ்ச்சிகளுக்குத் தம் தந்தையாருடன் கூடவே வந்து, அவருக்கு உதவியாக இருந்தார். எப்போதும் சிரித்த முகத்துடன் நட்பும் பணிவும் உதவும் குணமும் ஒருசேர அமைந்தவர். திருப்பூர் கிருஷ்ணன், எப்போதும் நண்பராகவே பழகுபவர். என்னிடமும் தோளில் கைபோட்டு, காதைத் திருகி அன்பு பாராட்டுபவர். மகனை எப்படிச் சீராட்டி, பாராட்டுவார் எனச் சொல்லவே வேண்டாம்.

    அரவிந்த் கிருஷ்ணன் பெருந்தொற்றால் மறைந்தார் என்ற செய்தி, அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் திருப்பூர் கிருஷ்ணன் – ஜானகி தம்பதியருக்கு ஆழ்ந்த இரங்கல். காலம்தான் இந்தத் துயரத்தை ஆற்ற வேண்டும்.

    (இந்தப் படம், 1998இல் சென்னை மயிலையில் ஓர் இலக்கிய நிகழ்வில் எடுத்தது. உடன் நண்பர் ஹாஜா கனி)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 16

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 16

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள்- 2

    முன்னுரை

    இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் பொருள் புலப்பாட்டுக் கருவியாக விளங்கும் உவமம், பல நேர்வுகளில் இலக்கண விளக்கத்திற்கும் பயன்பட்டுள்ளது. இலக்கியத்தின் அழகியல் கூறாக விளங்கும் உவமம், இலக்கணத்துள்ளும் இலக்கண உரைகளுக்குள்ளும் இலக்கணத் தெளிவுக்கான கருவியாக அமைந்திருக்கிறது. உவமத்தின் தலையாய பணி, பொருள் புலப்பாடே. அப்புலப்பாட்டுப்பணி இலக்கியத்திலும் இலக்கணத்திலும் முறையே அழகியல் உணர்வு, அறிவுத் தெளிவு என்னும் இருவேறு நோக்கங்களை நிறைவு செய்வதாக அமைந்திருக்கிறது. படைப்பின் பெருமையை அளந்துப் புலப்படுத்தும் கருவி உவமமே. இத்தகைய சிறப்பினைக் கொண்ட உவமம் மேற்கூறிய வண்ணம் இலக்கியத்தின் அழகியல் பகுதியை நிறைவு செய்வதோடு அதன் நிலைப்பேற்றுக்கும் பெருங்காரணமாக அமைகிறது. ஆனால் இலக்கணத்துள் அதன் பணி வேறாக அமைகிறது. இலக்கண நுட்பங்களை விளக்கிக் காட்டுவதற்கும் அளவையியல் அடிப்படையில் இலக்கண உரை அமைவதற்கும் பெருந்துணையாக அமைந்திருக்கின்றது. இந்த அடிப்படையில் நன்னூல் உரையாசிரியர் சங்கரநமச்சிவாயரின் உவமங்கள் இலக்கண விளக்கத்தின் மேல் செலுத்தும் ஆளுமையை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

    உறவுகளும் உவமமாகலாம்.

    நூலின் வகைகளைக் கூறவந்த பவணந்தியார் ‘மும்மையின் ஒன்றாய்’ என அடையாளப்படுத்துகிறார். முதல் நூல், வழிநூல், சார்பு நூல் என்பன நூலின் மூன்று வகையாகும். அவற்றுள் ஒன்றின் திறன் மற்றொன்றில் காண்பது அரிது. ஒரு நூல் தனக்கு வழிநூலை நோக்கி முதனூலாகவும் முதனூலை நோக்க வழி நூலாகவும் அயல்நூலை நோக்க சார்பு நூலாகவும் அமையும். தொல்காப்பியத்திற்கு நன்னூல் வழிநூல். தொல்காப்பியத்திற்கு வழிநூலான நன்னூல் அகத்தியத்தை நோக்கச் சார்புநூலாம் என்க. எனவே இவை ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை என்பது பெறப்படும். “முதல் நூல் வழிநூல் என்னும் இருதிறத்து நூல்களுக்கும் பொருள்முடிபு ஒருபுடைத்து ஒத்து, ஒழிந்தன எல்லாம் ஒவ்வாமையை உடையது சார்பு நூலாகும்” என்னும் சங்கர நமச்சிவாயரின் விளக்கம் இதனை உறுதி செய்யும். சார்பு நூல் என்பது தொல்காப்பியக் கொள்கைக்கு மாறுபட்டதாயினும் நன்னூலார் காட்டும் உவமத்திற்காக ஈண்டுச் சுட்டப்படுகிறது.

    “முதல்நூற்கு, வழிநூலும் சார்புநூலும் ஒருவற்கு மைந்தனும் மருமானும் போலும் என்க.”

    என்று எழுதுகிறார். தந்தைக்கும் மகனுக்கும் தொடர்பு உண்டு. ஆனால் தந்தைக்கும் மருமகனுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. இருப்பினும் அவனும் ஓர் உறவே. இலக்கண நூற்பாவிற்கு விளக்கம் கூறும்போது உவமத்தைக் கையாண்டு விளக்கம் கூறுவதும் அவ்வுவமங்களும் மானுட உறவுகளைப் பெருமைப்படுத்துவதுபோல் அமைந்திருப்பதும் தமிழியலின் உவமக்கோட்பாட்டைத் தெளிவாக வரையறுத்துக் காட்டுகின்றன எனலாம். ‘தந்தையை நோக்க மகன்’ என்னும் உவமத்தால் முதுனூலின் சாரம் வழிநூலில் அமைந்திருப்பது தவிர்க்க இயலாதது என்பது பெறப்படும்.

    சிந்தை கவரும் ‘சினை உவமங்கள்’

    வழிநூலின் வகைகளைக் கூறும் நன்னூலார் ‘தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்ப்பு எனத்தகு நூல்யாப்பு ஈரிரண்டென்ப” (51) என்னும் நு{ற்பாவில் நான்காகப் பகுத்துரைக்கின்றார். ‘தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழியெர்த்து அதர்ப்பட யாத்தலோடு அனைமரபினவே’ என்று தொல்காப்பியம் கூறும். நன்னூல் சிறப்புப்பாயிரத்துள் இது பற்றி ஆராயும் சங்கர நமச்சிவாயர், ‘தொகைவிரி யாப்பு’ என ஒன்றிருக்க, தொகை, வகை, விரி எனப் பிரித்தோதுவது ஏன்? என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு அதற்கு விடை காண்கிறார்.

    “வழியின் வகையாகிய யாப்பினுள் ‘தொகைவிரி’ என ஒன்று போந்ததன்றித் தொகை, வகை, விரி எனப் போந்தது இல்லையாலோ எனின் நடுநின்ற வகை பின் நின்ற விரியை நோக்கின் தொகையாகவும் முன் நின்ற தொகையை நோக்கின் விரியாகவும் அடங்குதலின் இது தொகைவிரி யாப்பு என்றதன்பாற்படும் என்க. எனவே தொகை, விரி என இரண்டாய் வரினும் மரத்தினது பராரையினின்றும் கவடு, கோடு, கொம்பு, வளார் பலவாய ஒன்றோடொன்று தொடர்பட்டு எழுந்து நிற்றல்போல் தொகையினின்றும் ஒன்றோடு ஒன்று தொடர்படப் பகுக்கப்பட்டுப் பலவாய் வரினும் தொகைவிரி யாப்பேயாம் என்க” (சிறப்புப்பாயிரம்)

    என்று விளக்கமளிக்கிறார். இந்த விளக்கத்திற்கு மரத்தின் பராரை முதலிய பகுதிகள் உவமமாக்கப்பட்டுப் பொருள் புலப்பாட்டுக்கு உதவுவதைக் காணலாம்.

    வினைச்சொல்லில் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்னும் ஆறுறுப்புக்களும் அடங்கும். எனினும் பகுதி, விகுதி என்பவையே கண்ணுக்குப் புலப்படுமாறு அமையும். ஏனைய நுண்ணிய பார்வைக்கும் புலமைக்கும் உரியவை.  பவணந்தியார் இந்தப் பார்வையை,

    “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலிற்
    பகுதி விகுதி பகுத்திடை நின்றதை”

    எனக் கூறுவதன் மூலம் அவ்விரண்டையுமே விதந்தோதுகிறார். தொடர்ந்து இடைநிலையைக் கூறும் அவர் ஏனைய உறுப்புக்களைக் கூறாது விடுகிறார். இதற்கான காரணத்தை ஆராய்ந்த சங்கர நமச்சிவாயர், இன்றியமையாதவற்றை முதலில் கூறி மற்றவற்றைப் பின்னர் கூறுவதாகத் தாம் எண்ணியதை ஓர் உவமத்தின் வழி விளக்குகிறார்.

    “மா பலா முதலியன பராரை முதலிய சினையோடு நின்றன எனக் கண்டது கூறுவார் போல”ப்  (146)  பகுபதம் பகுதி முதலிய உறுப்போடு நின்றது எனக் கண்டது கூறி, அப்பதம் தந்த தோலா நாவின் மேலோர் ஆணையின் நிற்றலின் ‘கண்டதற்கு’ என்றும் கூறினார்”

    என உவம விளக்கம் தருவதைக் காண முடிகிறது. கண்ணில் படுவதை முன்னர்க்கூறிப் பிறவற்றைப் பின்னர்க் கூறுவதற்கு உரையாசிரியர் மரங்களையும் அவற்றின் சினைப்பகுதியையும் உவமமாக்கியிருப்பது நோக்கத்தக்கது.

    கமுகந்தோட்டம் என்றாற்போல

    நன்னூலில் மூன்றாவது இயலாக அமைந்திருப்பது உயிரீற்றுப் புணரியல். பல்வகைப் புணர்ச்சிகளும் இவ்வியலுள் ஆராயப்பட்டுள்ளன. பல்வகைப் புணர்ச்சிகளும் ஆராயப்பட்டிருக்கும் ஓர் இயலுக்குக் குறிப்பிட்டதோர் புணர்ச்சியை மட்டும் பெயராக்கியதற்கு ஓர் உவமம் கூறி விளக்குகிறார் சங்கர நமச்சிவாயர். கமுகு என்றால் பாக்கு. கமுகந்தோட்டம் என்றால் பாக்குத் தோப்பு என்பதாகும். அதனுள் தென்னை, பலா, தேக்கு, மா எனப் பல்வகை மரங்களும் வளர்ந்து நிற்கும். எனினும் பெரும்பான்மை பற்றி அதற்குக் ‘கமுகந்தோட்டம்’ என்பது வழக்கு. அதுபோலப் பல்வகைப் புணர்ச்சிகளும் ஆராயப்படினும் பெரும்பான்மை உயிரீறு பற்றிய புணர்ச்சியே ஆதலின் இவ்வியலுக்கு இப்பெயர் அமைந்ததாக உவம விளக்கம் செய்கிறார் உரையாசிரியர்.

    முடவன் கோலூன்றி வந்தாற்போல

    ஙகர மெய் (ங்) அகர உயிர் ஒன்றுடன் கூடியே சொல்லுக்கு முதலில் வரும் அவ்வாறு சொல்லுக்கு முதலாகும் போதும், அ, இ, உ என்னும் சுட்டுக்களையும், எ, யா என்னும் வினாக்களையும் முதலாகக் கொண்டு வரும். தனித்து வராது. இதனைச்,

    “சுட்டு யா எகர வினாவழி அவ்வை
    ஒட்டி ஙவ்வும் முதலா கும்மே” (106)

    என்னும் நூற்பாவில் இலக்கணம் கூறுகிறார். இதற்கு உரைவிளக்கம் கண்ட சங்கர நமச்சிவாயர்,

    “ஙனம் என்பது இடத்தினையும் தன்மையினையும் உணர்த்தும் பலபொருள் ஒரு சொல்லாய் வரினும் தனித்து வரும் தன்மையதன்றி முடவன் கோலூன்றி வந்தாற்போலச் சுட்டு, வினாவாகிய இடைச்சொற்களை முன்னிட்டு வருதலான்”

    என்றெழுதுகிறார். இலக்கணத்திற்கு உரையெழுதும் உரையாசிரியர் பார்வையில் சுட்டும் வினாவும் முடவனாகிய ஙகரத்திற்கு உதவும் கோலாகத் தோன்றியிருக்கின்றன என்பதே இவ்வுவமப்பார்வையின் சிறப்பாகலாம்.

    நச்சினார்க்கினியரை வழிமொழியும் நமச்சிவாயர்

    உயிரும் மெய்யும் கலந்து வரும் எழுத்து உயிர்மெய் எழுத்து. ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ என்பதால் மெய்க்கும் மூலம் அகரம் என்பது பெறப்படும். அதாவது மெய்களின் இயக்கமும் அகரமின்றி அமையாது. இறைவன் எல்லா உயிர்களோடும் கலந்து நிற்பதை உவமமாக்கி நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் (தொல். மொழிமரபு. 46) உரைவிளக்க உச்சம். எனினும் ‘உயிர்மெய்’ என்றவிடத்து முதலில் பிறக்கும் ஒலி மெய்யா உயிரா என்பது பற்றி ஆழமான சிந்தனை உரையாசியர்களிடம் இருந்து வந்திருக்கிறது. ‘நெடுநல்வாடை’ இலக்கியத் தலைப்பில் நச்சினார்க்கினியர் காட்டிய பேரார்வம் ‘உயிர்மெய்’ என்னும் சொல்லாட்சி பற்றிய ஆய்விலும் நிகழ்ந்திருக்கிறது என்பதை,

    “மெய் முன்னர் நிற்ப உயிர் பின்வந்து ஏறுமென்றார். அம்முறையே  ஓசையும் பிறக்கும் என்றார். இதனானே மாத்திரை கொள்ளுங்கால் ‘உப்பும் நீரும் போல்’ ஒன்றேயாய் நிற்றலும், வேறுபடுத்திக் காணுங்கால் விரலும் விரலும் சேர நின்றாற்போல’ வேறாய் நிற்றலும் பெற்றாம். நீர் உப்பின் குணமே ஆயவாறுபோல உயிரும் மெய்யின் குணமேயாய் வன்மை மென்மை இடைமை எய்தி நிற்றல் கொள்க” (தொல். நூ.ம.18 உரை)

    என்னும் அவருடைய விளக்கத்தால் அறிய முடியும். இந்தக் கருத்தினை உள்வாங்கிய நமச்சிவாயர் ‘நின்ற நெறியே உயிர்மெய் முதல் ஈறே’ (நன்.109) என்னும் நூற்பாவின் விளக்கத்தில்,

    “எண்ணதிகாரத்துள் உயிர்மெய்யை ஓர் எழுத்தாக (நன்.60)  எண்ணினார் ஈண்டு இரண்டாக வைத்து இலக்கணம் கூறுவது என்னை எனின் “அப்பொடு பெய்த உப்பே போல’ உயிரொடு புணர்த்திய மெய் தன் அளவு தோன்றாது ஒன்றாய் நிற்றலின் ஒன்றுமாய், ஒற்று முன்னும் உயிர் பின்னுமாய் ஒலித்து நின்ற நெறியான் இரண்டுமாய் நிற்றலின் என்று உணர்க’

    என்று எழுதுகிறார். இதனால் இலக்கணக் கருத்துக்களை வழிமொழியும் வழி நூலில் அந்நூலின் உரையாசிரியர் முதனூலின் உரைப்பகுதியையும் வழிமொழிவதை அறிய முடிகிறது.

    நிறைவுரை

    ஒரு நூலுக்குப் பலர் உரைகாணும் உரை மரபு தமிழுக்குப் புதியதன்று, முதனூல் நூற்பாக்களை ஆசிரிய வசனங்களாக வழிநூலாசிரியர் பயன்படுத்தியிருப்பது போலவே முதனூல் உரையாசிரியர்களின் உவமங்களையும் வழிநூல் உரையாசிரியர்கள் வழிமொழிந்திருக்கிறார்கள் அல்லது மறுத்திருக்கிறார்கள். மானுட உறவுகளும், மாற்றுத் திறனாளிகளும் இடம்பெறும் இந்த உரைகளில் இயற்கையைப் பற்றிய விரிந்த பார்வையும் அறிவும் தொட்ட இடமெல்லாம் தட்டுப்படுகின்றன. சமுதாய விஞ்ஞானிகளாகவும் இயற்கையின் ரசிகர்களாகவும் அவர்கள் விளங்கியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

    (தொடரும்…)

    Share
  • சைனா அனுப்பிய முதல் செவ்வாய்த் தளவூர்தி வெற்றிகரமாக இறங்கிப் படம் அனுப்பியது

    சைனா அனுப்பிய முதல் செவ்வாய்த் தளவூர்தி வெற்றிகரமாக இறங்கிப் படம் அனுப்பியது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    தியான்வென் விண்சிமிழில் தளநிலவி, தளவூர்தி கட்டமைப்பு

    https://www.cbsnews.com/news/china-zhurong-rover-on-mars/

    China successfully lands a rover on Mars

    China has successfully landed a rover on Mars, joining the U.S. and the former Soviet Union as the only other countries to land on the red planet. CBSN contributor Isaac Stone Fish, the founder of Strategy Risks, spoke with Lana Zak about what this means for the future of space exploration.

    Mars landing boost for China's space programme - The Hindu

    China's First Mars Lander is Going to be Called

    China reports successful spacecraft landing on Mars with rover

    Becoming the third country to land a spacecraft on Mars, China’s Zhurong rover has made history where attempts by other countries have failed.

    China Lands on Mars in Crowning Moment for Space Program - WSJThe success of the Tianwen-1 mission makes China the third nation after the U.S. and Soviet Union to land on the red planet

    சைனாவின் இரண்டாம்
    விண்ணுளவி
    சந்திரனைச் சுற்றியது !
    மூன்றாம் விண்கப்பல்
    முதலாக நிலவில் இறக்கிய
    தளவுளவி பின்புறம் சோதிக்கிறது !
    நகர்ந்த தளவூர்தி தகவல் அனுப்புது.
    புதிய விண்வெளி நிலையம் கட்டுது.
    சைனாவின் இரு தீரர்
    அண்டவெளிப் பயணம் செய்தார்.
    முதன்முதலாய் செவ்வாய்க் கோளில்
    விண்சிமிழ் இறக்கி
    தளவூர்தி தவழ்ந்து தகவல் அனுப்பும்
    தரைப்படம் எடுத்து !
    அமெரிக்காவின்
    விண்வெளி வீரர்கள் போல்
    விண்சிமிழில் ஏறி
    வெண்ணிலவில் தடம் வைக்க
    பயிற்சிகள் நடக்கும் !
    நிலவைச் சுற்றி வந்து
    மனிதரில்லா விண்சிமிழ் ஒன்று
    புவிக்கு மீண்டது .
    இன்னும்
    ஐந்தாறு ஆண்டுகளில்
    சாதனை யாகச் சைனத் தீரர்
    பாதம் பதிப்பர்
    நிலவின் களத்திலே
    நீல் ஆர்ம்ஸ் டிராங் போல !

    ++++++++++++++++++++

    இரண்டு வாரத்தில் சைனா வெற்றிகரமாய்ச் செய்து காட்டிய விண்வெளி வரலாற்றுச் சாதனைகள்

    2021 பிப்ரவரி மாதத்தில் செவ்வாய்க் கோள் ஈர்ப்புவலையில் சிக்கி, மே 14 இல் சைனாவின் முதல் தியான்வென் -1 விண்வெளிச்சிமிழ்ச் சுற்றி,[Tianwhen -1 Orbiter] பாதுகாப்பாகத் தளவூர்தி சுராங்கை [Zhurong Rover] இறக்கி இப்போது தகவல் படங்கள் அனுப்பியுள்ளது. இந்தச் சிமிழை சைனா 2020 ஜூலை 23 இல் ஏவியது. இந்த அரிய சாதனை புரிந்து, உலக வரலாற்றில் செவ்வாயில் தவழ்ந்த மூன்றாம் நாடாகச் சைனா பெயர் பெற்றது. ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளே முதன்முதலாக இந்தச் சாதனைகளைக் செய்து காட்டியுள்ளன. சமீபத்தில் அமெரிக்க நாசா தனது செவ்வாய் 2020 “விடாமுயற்சி” [Perseverence] தளவூர்தி ஒன்றை செவ்வாய்க் கோளுக்கு அனுப்பி, அதிலிருந்த சிறு காற்றாடி ஊர்தி பறந்து காட்டியது. சைனாவின் நிலவுத் தளவுளவி [Lunar Rover] ஏற்கனவே இறங்கி வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது. சைன விண்வெளிப் பயண முயற்சிகளில் ரஷ்யாவின் தொழில் நுணுக்க உதவி காணப் படுகிறது.

    செவ்வாய்க் கோளில் சைனாவின் தியாவென் தளவூர்தித் திட்டங்கள்

    1. செவ்வாய்க் கோள் தளவியல், சூழ்வெளி அமைப்பு ஆய்வது
    2. செவ்வாய்க் கோள் எரிமலை, பனிமேடு, துருவ ஆராய்ச்சி
    3. செவ்வாய்க் கீழ்தள நீர்ப்பனி, நீரோட்ட நிலை அறிவது.
    4. செவ்வாய் தனிம, உலோகவியல் இருப்புநிலை தெரிவது.
    5. செவ்வாய்ப் பருவ நிலை, கால நிலை, சூழ்வாயு நிலை அறிதல்.
    6. 2030 ஆண்டுக்குள் செவ்வாய் மண் மாதிரி எடுத்து பூமிக்குக் கொண்டு வந்து சோதிப்பு.

    Cover Image: Illustration of China’s Tianwen-1 lander and accompanying Zhurong rover on the surface of Mars.

    Credit: Xinhua News Agency Getty Images

    Share
  • குறளின் கதிர்களாய்…(351)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(351)

    குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு
    னென்ன பயத்தவோ கண்.

    – திருக்குறள் – 705 (குறிப்பறிதல்)

    புதுக் கவிதையில்...

    முகம் கண் போன்றவற்றின்
    குறிப்பால்
    மற்றொருவனின்
    மனக் குறிப்பை
    அறிய முடியவில்லையெனில்,
    ஒருவனின்
    உறுப்புகளுள் சிறந்தனவாம்
    கண்களால்
    என்ன பயன்…!

    குறும்பாவில்...

    முகக் குறிப்பால் ஒருவனின்
    அகக் குறிப்பை அறியமுடியவில்லையெனில், உறுப்புகளுள்
    சிறந்த கண்களால் பயனில்லை…!

    மரபுக் கவிதையில்...

    முகமொடு கண்கள் போன்றவற்றில்
    முகிழ்க்கும் குறிப்பின் அடிப்படையில்
    அகத்தி லொருவன் கொண்டுள்ள
    அத்தனை உள்ளக் குறிப்பினையும்
    புகுந்து சென்றே அறிந்ததனைப்
    புரிந்திட இயலா நிலையதனில்,
    முகத்தி லிருக்கும் உயருறுப்பாய்
    முதலுள கண்களால் பயனிலையே…!

    லிமரைக்கூ...

    ஒருவன் கொண்டதை அகத்தில்
    முகக்குறிப்பில் அறிந்திட இயலாதபோது, உயருறுப்பாம்
    கண்களால் பயனிலை முகத்தில்…!

    கிராமிய பாணியில்

    அறியணும் அறியணும்
    குறிப்பால அறியணும்,
    அதுதான் கண்ணுக்கழகு..

    ஒருத்தன் மனசுல உள்ளத
    அவன் பார்வயவச்சி
    மொகக் குறிப்பவச்சி
    கண்டுபுடிக்க முடியாத
    நெலமயில,
    ஒடம்புலவுள்ள உறுப்புகளுல
    ஒசந்த உறுப்பான
    கண்களால பயன்
    ஒண்ணுமில்ல..

    தெரிஞ்சிக்கோ
    அறியணும் அறியணும்
    குறிப்பால அறியணும்,
    அதுதான் கண்ணுக்கழகு…!

    Share
  • நம்மவீட்டுச் சரக்கொன்றை

    நம்மவீட்டுச் சரக்கொன்றை

    நம்மவீட்டுச் சரக்கொன்றை பொன்னாரங்களாகப் பூத்துக் குலுங்கும் காட்சியைக் கண்ணாரக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • நாமக்கல் பாலமூர்த்தியின் வீட்டுத் தோட்டம் – 3

    நாமக்கல் பாலமூர்த்தியின் வீட்டுத் தோட்டம் – 3

    நம்மாழ்வாரின் மாணவர் நாமக்கல் பாலமூர்த்தி, தம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மூலிகைச் செடிகளையும் அவற்றின் பயன்களையும் நமக்கு விளக்குகிறார். இதோ, மூன்றாவது பகுதி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Remembering Rajiv Gandhi

    Remembering Rajiv Gandhi

    Baskar Seshadri

    May 21st, marks the death of Rajiv Gandhi and thirty years had gone by now. I was in my early thirties when this assassination had happened and the news shook me early in the morning through the radio bulletin. It was the news of Indira Gandhi one morning when i was in my office in 1984. Both Shook me a lot in my life and later it was MGR in I987. All with a gap of around three years plus.

    India lost a charming Leader at his Prime age and I feel the shape of India could have been better had he had been alive. Of course am aware of Bofors and other Corruption cases that bogged down him and in spite of it i feel it’s an act of cowardice by the Sikh men and The team of LTTE.

    As a follower of Cho I literally opposed Congress and at some point of time after their Ghory Death I felt it was an injustice to both Indira and Rajiv in our Own Land .The mystery which shrouded their death had still not come out with the brazen facts to its root. One day that will surely happen – One day .

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 31

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 31

    -மேகலா இராமமூர்த்தி

    விண்ணவரும் கண்டு மருளும் வண்ணம் வாலிக்கும் அவன் சோதரன் சுக்கிரீவனுக்கும் நிகழ்ந்த கடும்போரில் ஒருகட்டத்தில் வாலியின் கை ஓங்கியது. யானையை அரி தாக்கி அழிப்பதுபோல், தன்னுடைய நகங்களாலும் கரங்களாலும் சுக்கிரீவனைத் தாக்கிக் கீழே வீழ்த்தினான் அந்தச் சூரன்!

    ”வாலியை நீ தாக்கும் வேளையில் நான் அவனை அம்புவிட்டுக் கொல்கின்றேன்” என்று சுக்கிரீவனுக்கு உறுதியளித்திருந்த இராமன் அவ்வாறு செய்யவில்லை. இனியும் வாலியோடு மோதினால் அவனால் தான் உயிரிழப்பது உறுதி என்பதை உணர்ந்த சுக்கிரீவன், அங்கிருந்து தப்பித்து இராமனின் மறைவிடம் வந்தடைந்தான். 

    நொந்த சிந்தையோடு அவன் இராமனை நோக்கியபோது, “வருந்தாதே சுக்கிரீவா! நீங்கள் இருவரும் ஒத்த தோற்றத்தினராய் இருப்பதனால் சண்டையிடும்போது உங்களில் யார் சுக்கிரீவன், யார் வாலி எனும் வேறுபாடு எனக்குத் தெரியவில்லை; அதனால்தான் நான் அம்பு விடவில்லை” என்று தான் அம்பு எய்யாத காரணத்தை விளக்கிய இராமன், ”இம்முறை நீ கொடிப் பூச்சூடிப் போருக்குப் போ! மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றுரைக்க, அச்சொற்களால் ஊக்கம்பெற்ற சூரியன் மைந்தனாகிய சுக்கிரீவன், கொடிப்பூக் கண்ணியைத் தலையிலணிந்து மீண்டும் போருக்குச் சென்று வாலியைக் கடுமையாய்த் தாக்கத் தொடங்கினான்.

    ”தோற்றோடியவன் அதற்குள் மீண்டு வந்ததெப்படி?” எனும் சிந்தனையுடன் போரிடத் தொடங்கிய வாலி, சுக்கிரீவனைப் பலமாய் அடித்தான்; நையப் புடைத்தான். அதனால் கடுந்துன்பத்துக்கு ஆளான சுக்கிரீவன் இராமன் மறைந்திருந்த திக்கை எதிர்பார்ப்போடு நோக்கினான்.

    போரின் உச்சகட்டமாகச் சுக்கிரீவனைத் தரையில்மோதிக் கொல்வதற்காகத் தன் ஒரு கையைச் சுக்கிரீவனின் இடையிலும், மற்றொரு கையை அவன் கழுத்திலும் கொடுத்து வாலி மேலே தூக்கிய வேளையில், இராகவன் தன்னுடைய வில்லில் கணைதொடுத்து அதனை வாலியை நோக்கிப் போக்கினான்.

    எடுத்துப் பாரிடை எற்றுவேன்
          பற்றி என்று இளவல்
    கடித்தலத்தினும் கழுத்தினும் தன்
          இரு கரங்கள்
    மடுத்து மீக் கொண்ட வாலிமேல்
          கோல் ஒன்று வாங்கி
    தொடுத்து நாணொடு தோள்
          உறுத்து இராகவன் துரந்தான். (கம்ப: வாலிவதைப் படலம் – 4102)

    அக் கணையானது, நீர், நெருப்பு, நிலம், காற்று எனும் நாற்பெரும் பூதங்களின் ஆற்றலை ஒன்றாய்ப் பெற்றவனான வாலியின் மார்பை, கனிந்த வாழைப் பழத்தைத் தைத்துச் செல்லும் ஊசிபோல் தைத்து நின்றது என்று உவமை நயந்தோன்ற, இராமன் செலுத்திய கணையின் வேகத்தையும் ஆற்றலையும் விளக்குகின்றார் கவிச் சக்கரவர்த்தி. ஐம்பெரும்பூதங்களில் வானத்திற்கு வடிவம் இன்மையால் அதனைக் கூறவில்லை அவர்.

    தன்மீது படைக்கலமொன்று பாய்ந்ததை உணர்ந்து சீற்றங்கொண்ட வாலி, ”இதனை என்மீது துணிச்சலோடு செலுத்தியவன் யார்?” என்று சிந்தித்தான். தேவரோ என்று முதலில் ஐயுற்றவன், ”வாய்ப்பில்லை! என்னை எதிர்க்கும் ஆற்றல் அவர்க்கேது?” என்ற தீர்மானத்துக்கு வந்தான். ”வேறு யாராக இருக்கக்கூடும்?” என்று மீண்டும் சிந்தித்து இகழ்ச்சி தோன்றச் சிரித்தவன், கடவுளர் மூவரோடும் ஒப்பவன் ஒருவனுடைய செயலாகவே இஃது இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்தான்.     

    தேவரோ என அயிர்க்கும் அத்
          தேவர் இச் செயலுக்கு
    ஆவரோ அவர்க்கு ஆற்றல்
          உண்டோ எனும் அயலோர்
    யாவரோ என நகைசெயும்
          ஒருவனே இறைவர்
    மூவரோடும் ஒப்பான் செயல்
          ஆம் என மொழியும். (கம்ப: வாலிவதைப் படலம் – 4109)

    தன் மார்பில் பாய்ந்திருக்கும் படைக்கலத்தை அசைத்துப் பார்த்து அஃதோர் அம்பு என்பதையறிந்த ஆளி போல்வானாகிய வாலி, அவ் வாளியைத் தன் வாலினாலும், காலினாலும் பலங்கொண்ட மட்டும் இழுத்துப் பிடுங்கினான். இராமபாணத்தைப் பிடுங்கியெடுத்த அவ்வீரனின் திறல்கண்டு விண்ணோரும் வியந்தனர் எனும் கம்பர், ”வீரரை யார் வியவாதார்?” என்று வாலியின் வீரத்தைத் தாமும் விதந்தோதுகின்றார்.

    அம்பினைப் பிடுங்கியதும் அவன் மார்பினின்று குருதிவெள்ளம் கொப்பளித்தது. அதனை எய்தவன் யார் என்றறிய அந்த அம்பினை உற்றுநோக்கினான் வாலி. அப்போது, பூவுலகம் வானுலகம் பாதாளம் எனும் மூவுலகங்களுக்கும் ஆதார மந்திரமானதும், தம்மை வழிபடும் அடியார்க்கு ஒப்பற்ற சிறப்பை அளிக்கக்கூடியதும், இப்பிறப்பிலேயே பின் வரவிருக்கும் எழுபிறப்பென்னும் பிணியையும் அறுக்கும் அருமருந்தாய்த் திகழக்கூடியதுமான ’இராமன்’ எனும் சீர்மிகு திருநாமத்தை அந்த அம்பில் கண்டான் வாலி. 

    மும்மை சால் உலகுக்கு எல்லாம்
          மூல மந்திரத்தை முற்றும்
    தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்
          பெரும் பதத்தை தானே
    இம்மையே எழுமை நோய்க்கும்
          மருந்தினை இராமன் என்னும்
    செம்மை சேர் நாமம்தன்னைக்
          கண்களின் தெரியக் கண்டான். (கம்ப: வாலிவதைப் படலம் – 4117)

    வைணவர்கள் எட்டெழுத்து மந்திரத்தை உயர்வாய்ச் சொல்வார்கள்; இங்கே கம்பர் அந்த எட்டெழுத்தின் பெருமையையும் சிறப்பையும் இராம நாமத்துக்கு உரித்தாக்குகின்றார்.  

    அப் பெயரைக் கண்டதும், மனைவியோடு இணைந்து நடத்தும் இல்லறத்தைத் துறந்து கானகம் வந்தமையால் தங்கள் குலத்துக்குரிய வில்லறத்தையும் துறந்த வீரனான(!) இந்த இராமன் பிறந்ததனால், தருமநெறி வழுவாத சூரிய குலமும் தன் நெறியின்று வழுவியதே என்றெண்ணி நகைத்து, இராமனின் செயலுக்காகத் தான் நாணமுற்றான் வாலி.

    ”இராமன் அறத்தின் நாயகன்; ஆண்மை நிறைந்தவன்! அவனுக்குப் புன்மை குணங்கொண்ட குரக்கினத்தாரோடு கேண்மை எதற்கு?” என்று தன் மனைவி தாரையிடம் இராமன் குறித்து உயர்வாகப் பேசியவன் அல்லவா இந்த வாலி? இப்போது இராமனின் அறம்பிறழ்ந்த செயல் அவனை வெட்கித் தலைகுனியவும் வேதனைப்படவும் வைத்தது!

    பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
    உறைபதி என்னும் உலகு.
    (1015) எனும் வள்ளுவத்தை நினைவுபடுத்துகின்றது வாலியின் செய்கை.

    இவ்வாறு வாலி இராமனின் தகாத செயலுக்காக வருந்தியிருந்த வேளையில், நீலநிறக் கார்மேகம் தன்னிடமுள்ள பல தாமரை மலர்களும் மலரப்பெற்று, வரிவில் ஏந்தி வருவதுபோல் அவன் எதிரில் வந்துநின்றான், அதுவரை மறைந்திருந்த, இராமன். அவனைக் கண்டதும் வாலியின் சீற்றம் ஓங்கிற்று. இராமனின் இழிசெயலைப் பழிக்கத் தொடங்கினான் அந்தக் குரக்கரசன்.

    ”அரசர்களுக்குரிய அறநெறி உம் குலத்துளோர்க்கெலாம் உடைமை ஆயிற்றே! அவ்வாறிருக்க, சனகன் பெற்ற அன்னத்தை, அமுதத்தையொத்த நின் தேவியைப் பிரிந்தபின் செயலில் தடுமாற்றம் அடைந்துவிட்டாயோ?!

    ஏனப்பா…! அரக்கர் உனக்கொரு தீங்கு செய்துவிட்டுப் போனால் அதற்குத் தண்டனையாகக் குரக்கினத்து அரசனைக் கொல்லச் சொல்லி உன்னுடைய மனுநெறி கூறிற்றோ? கருணை எனும் பண்பை எங்கே உகுத்தாய்? என்னிடத்தில் குற்றமென்ன கண்டாய்? இத்தகு பெரும்பழியை நீ ஏற்றுக்கொண்டால் உலகில் புகழைத் தாங்கிப் பெருமைகொள்வார் யார்?” என்று கேட்டான் வாலி.

     அரக்கர் ஒர் அழிவு செய்து
          கழிவரேல் அதற்கு வேறு ஓர்
    குரக்கு இனத்து அரசைக் கொல்ல
         மனு நெறி கூறிற்று உண்டோ
    இரக்கம் எங்கு உகுத்தாய் என்பால்
          எப் பிழை கண்டாய் அப்பா
    பரக்கழி இது நீ பூண்டால்
          புகழை யார் பரிக்கற்பாலார். (கம்ப: வாலிவதைப் படலம் – 4125)

    ”இராவணனை அழித்தற்கு உனக்குத் துணை தேவையாயின் யானையைப் பற்றியழிக்கும் ஆற்றல்மிகு அரிமாவென நானிருக்க, முயல்போன்ற என் தம்பியைத் துணைக்கொள்ளும் உன் முயற்சியை என்னவென்பது?

    வானூர் மதிக்கு ஒரு களங்கம் இருப்பதுபோல் இரவிக் குலத்துக்கும் ஒரு களங்கம் தேவை என்று கருதி அதனை உண்டாக்கிவிட்டாய் போலும்!” 

    இவ்வாறு, ஒரு தேர்ந்த வழக்கறிஞனைப்போல் வில்வலானான இராமனைப் பார்த்துச் சொல்வலானான வாலி குற்றச்சாட்டுகளை அடுக்கினான்! 

    இவற்றைக் கேட்ட இராமன் வாலிக்கு மறுமொழி பகரலானான்…

    பிலம் புகுந்த நீ நெடுநாள் மீளாமையின் அரசியல் சுற்றத்தார் வற்புறுத்தலின்பேரில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான் உன்தம்பி சுக்கிரீவன். நீ மீண்டு(ம்) வந்தவுடன் நிலைமையை விளக்கி அவன் உன்னிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தபோதும், நீ அவனை நம்பால் கொல்லத் துணிந்தாய். அதனால் அவன் உருசியமுக மலையடைந்து மறைந்து வாழலானான்.

    உன்தம்பி பேரில் உனக்கு ஒருசிறிதும் அன்போ அருளோ இல்லை. உருசியமுக மலைக்கு வந்து நீ சுக்கிரீவனைக் கொல்லாமைக்குக்கூட உனக்கு வாய்த்திருந்த சாபமே காரணம்.

    ஒரு வீரனுக்கு எது அழகு? மாற்றான் மனைவியை மதித்து நடப்பது! ஆனால் நீ என்ன செய்தாய்? உன் தம்பி மனைவியை நயந்து அவளை உனக்குரியவளாக்கிக் கொண்டாய்.

    இத்தகு பெரும்பிழைகளை நீ புரிந்தமையால் என்னுயிர் நண்பன் சுக்கிரீவனுக்கு உதவும்பொருட்டு உன்னை நான் தண்டிக்க நேர்ந்தது என்றான் இராமன்.

    ”என்பால் எப்பிழை கண்டாய் அப்பா?” என்ற வாலியின் வினாவுக்கான மறுமொழிகளாக இவை அமைந்திருப்பதைக் காண்கின்றோம்.

    தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை வாலி ஏற்றுக்கொண்டானா?

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • செந்தோசா இசை நீரூற்று நடனம்

    செந்தோசா இசை நீரூற்று நடனம்

    சிங்கப்பூரின் செந்தோசாத் தீவில் நடைபெற்ற இசை நீரூற்று நடனத்தையும் லேசர் ஒளிக்கற்றைக் காட்சிகளையும் இந்தப் பதிவில் கண்டுகளியுங்கள். 25 ஆண்டுகளாக நடைபெற்ற இந்தக் கண்கவர் வண்ண நிகழ்ச்சி, 2007இல் நிறுத்தப்பட்டது. ஆயினும் இப்போதும் இது நம்மைத் தொடர்ந்து வசீகரிக்கிறது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 67

    பழகத் தெரிய வேணும் – 67

    நிர்மலா ராகவன்

    சொல்லும் செயலும்

    நாம் சொல்வதை ஒருவர் ஏற்க வேண்டுமென்றால், அவருக்கு நம்மேல் நம்பிக்கை எழுவது முக்கியம். ஏதாவது ஒற்றுமை இருந்தால்தான் இது சாத்தியம். அது வயதாக இருக்கலாம். அல்லது உத்தியோக நிலையிலோ அல்லது பொருளாதாரத்திலோ இருக்கலாம்.

    சொல்லும் விதம்

    நாம் சொல்லும் பாணி கேட்பவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்றவிதத்தில் அமைய வேண்டும்.

    `ஏதோ, எனக்குத் தெரிந்ததை, என்னால் முடிந்த முறையில் சொல்லிவிட்டுப் போகிறேன்!’ என்ற அலட்சியத்துடன் ஒருவர் தன் கடமையை ஆற்றினால், யார் அவர் சொல்வதைப் பின்பற்றுவார்கள்?

    சிலருக்குப் பிறருடன் எப்படிப் பேசினால் பலன் கிடைக்கும் என்று இயல்பாகவே தெரியும். அப்படி அமையாவிட்டால், இதைக் கற்கவும் முடியும்.

    தூண்டுதல்

    நாம் பிறருடன் பேசும்போது, நம்மையுமறியாது, அவரை நம் வழியைப் பின்பற்றச் சொல்லிவிடுகிறோம்.

    `நீ என்னுடன் வா!’ என்பதற்கும், `நீயும் வருவாயா?’ என்று எதிர்பார்ப்புடன் கேட்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்!

    முதலாவதில், அதிகாரம்.

    `வருவாயா?’ என்று கேட்கும்போது, முடிவை மற்றவருக்கு விட்டுவிடுகிறோம். அவருக்கு மரியாதை கொடுப்பதுபோலவும் ஆயிற்று.

    இன்னொரு உதாரணம்: `இன்று என்ன சமைக்கப்போகிறாய்?’ என்று கேட்டுவிட்டு, `முருங்கைக்காயை சாம்பாரில் போட்டால்தான் ருசி!’ என்று மெல்லக் கூறுவோம்.

    `சாம்பாரில் போடேன்!’ என்பது சமைப்பவருக்கு மரியாதை கொடுத்துப் பேசுவது.

    `ருசி அதிகமாகும்,’ என்றால், நம் விருப்பத்திற்கு அவரை இணங்கச் செய்வது.

    தொனி

    பேசுகிறவர்களின் தொனி முக்கியம்.

    இயந்திரத்தைப்போல் உணர்ச்சியற்ற குரலில் பேசாது, தகுந்த ஏற்ற இறக்கங்களுடன் பேசினால் பலன் கிடைக்கும். அதற்கேற்ற உடல் மொழியையும் சேர்த்து மேற்கோள் காட்டுவதுடன், நடு நடுவே கதை சொன்னால், கேட்பவர்களின் உற்சாகம் குன்றாது இருக்கும்.

    தற்போது, கூந்தலை நீளமாக எப்படி வளர்ப்பது என்று பல வழிகளைப் பெண்கள் காட்டுகிறார்கள், இணையத்தில்.

    எல்லாருக்கும் ஒரு ஒற்றுமை – முழங்காலுக்குக்கீழ் தொங்குகிறது அவர்கள் தலைமயிர். நம்பத்தான் தோன்றுகிறது. ஆனால், ஒரே வாரத்தில் இப்படி வளரும் என்றும் சிலர் அளக்கிறார்கள்.

    இதனால்தான், சொல்கிறவருக்கு என்ன தகுதி, அவர் கூறுவதில் எத்தனை உண்மை என்று ஆரம்பத்திலேயே யோசிக்க வேண்டுவது அவசியம்.

    குழந்தையே பெறாதவர் குழந்தை வளர்ப்பைப் பற்றிப் பேசினால், அது அனுபவத்தால் இருக்காது. படித்ததை வைத்துக்கொண்டு அவர் ஏதாவது கருத்தைத் தெரிவிக்கலாம். ஆனால், நடைமுறைக்கு அது ஒத்துவராது.

    கதை

    ஏதோ ஒரு துறையில் பெரிய, பெரிய பட்டங்கள் பெற்றவள் சியாமளா. அதற்கேற்ற உத்தியோகத்திலும் இருந்தாள்.

    அதனாலேயே, தனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல், பிறர் வீட்டுக்குப் போனால், அந்த வீட்டுக்கார அம்மாளிடம், `நீ சமைப்பது சரியாக இல்லை. இப்படிச் செய்திருக்க வேண்டும்,’ என்று குற்றம் கண்டுபிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

    எல்லாருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்க முடியாது என்பது அவளுக்குப் புரியவில்லை.

    ஒருவரது வீட்டுக்கு விருந்தினராகப் போகும்போது, அவர்கள் மனதை நோகடிக்கலாமா என்று அவள் யோசிக்கவில்லை. புத்தகப் படிப்பு குணத்தை வளர்க்கவில்லை.

    புத்திசாலித்தனம் இருந்தும் வெற்றி பெறாதவர்

    சிறு பிராயத்தில் புத்திசாலிகளாகத் திகழ்ந்த சிலர், `பெரிதாக எதுவும் சாதிக்காமல் போய்விட்டோமே!’ என்று வருந்துவது உண்டு.

    கதை

    காந்தனின் புத்திகூர்மையைப் பற்றி அவனுடைய பெற்றோருக்கு அளவுகடந்த பெருமை.

    `எத்தனை விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறான்!’ என்று பிறர் பாராட்ட, அவன் தவறே செய்யக்கூடாது, அப்படிச் செய்தால் பிறர் மதிக்க மாட்டார்கள் என்று எண்ணத் தலைப்பட்டார்கள்.

    சிறுவனாக இருந்தபோது, பிறர் ஏற்கமாட்டார்கள் என்று அவர்களுக்குத் தோன்றிய எதையாவது அவன் செய்தால், பல பேர் முன்னிலையில் திட்டு விழும்.

    “அது என்ன, மூக்கிற்குள் விரலை விடுவது? அசிங்கம்! குளிக்கும்போது இதையெல்லாம் செய்யவேண்டும்,” என்று அவன் தாய் கத்தியபோது, அந்த பத்துவயதுப் பையனைக் கவனிக்காதவர்கள்கூட இப்போது ஆர்வத்துடன் பார்த்தார்கள்.

    அவனைத் திருத்துவதாக எண்ணி அவள் செய்த காரியத்தால் பையனின் முகம் அவமானத்தால் சுண்டிப்போயிற்று.

    அவளைப்போன்ற பெற்றோர் அறியவேண்டிய ஒன்று: பாராட்டும்போது பிறர் முன்னிலையில் செய்யலாம். அதுவும் அளவோடுதான். குறை கூறுவதோ, தனிமையில்தான் இருக்கவேண்டும். சிறு குறையைப் பெரிதுபடுத்தினால், குழந்தைகளுக்கு ஆத்திரம் வரும். ஆனால், திருந்தமாட்டார்கள். வேண்டுமென்றே அதிகமாகச் செய்வார்கள்.

    புதிதாகக் கல்யாணமான டெய்ஸி அலுத்தபடி கூறினாள், “என் கணவர் சாப்பிடும்போது எல்லா விரல்களையும் வாய்க்குள் போட்டுக்கொள்வார். `என்னது இது!’ என்று நான் கண்டித்தபோது, நிலைமை இன்னும் மோசமாகிற்று. ஒரேயடியாக உறிஞ்சுவார். அதனால், நான் இப்போது எதுவும் சொல்வதில்லை!”

    அவளுடைய கணவனைச் சிறுவயதில் ஓயாது கண்டித்திருப்பார்கள். மனைவியும் தாயைப்போல நடக்க முற்பட்டபோது, அவனால் பொறுக்க முடியவில்லை.

    எட்டு வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவன் தவறு செய்யும்போது ஓயாது கண்டிப்பது பெரியவர்களின் நிம்மதியைத்தான் கெடுக்கும். மாறாக, நகைச்சுவையாக ஏதாவது கூறினாலோ, அல்லது அவன் செய்வதுபோல் செய்து காட்டினாலோ, சிரித்துவிடுவான்.

    பதின்ம வயதுச் சிறுவர்களிடம் மிரட்டலாகச் சொன்னால் மேலும் முரண்டு பண்ணுவார்கள். அவர்களுடைய செய்கைகளின் விளைவுகளை, அவற்றால் ஆபத்து இருந்தால், தகுந்த உதாரணங்களோடு விளக்கிச் சொன்னால் புரிந்துகொள்வார்கள். கெஞ்சலாகச் சொன்னால் இன்னும் பலனளிக்கும்.

    கதை

    அவளுடைய சீனத்தோழிகள் அணிந்ததைப் பார்த்து, மேகலாவுக்கும் ஷார்ட்ஸ் அணியவேண்டும் என்ற ஆசை கிளர்ந்தது.

    அவளுடைய தாய், “அவர்களுடைய கால்கள் தந்தம் மாதிரி இருக்கின்றன. நாமோ, கறுப்பு. நன்றாகவா இருக்கும்?” என்றாள் நைச்சியமாக. இருந்தாலும், வாங்கிக் கொடுத்தாள்.

    ஒரு சிறிய ஆசையைத் தீர்த்துவிட்டால், அது ஓயாது நம்மை அலைக்கழைக்காது என்று புரிந்திருந்தாள் அந்த தாய்.

    அந்த ஒரே ஆடையில் மேகலாவின் ஆசை தணிந்துபோயிற்று. `கால்களை இறுக்க, எப்படித்தான் போட்டுக்கொள்கிறார்களோ!’ என்று தோன்றிப்போயிற்று.

    என் தோழிகள் கூறுவார்கள், “வேலை முடிந்து வீட்டுப் போனதும், நான் செய்யும் முதல் காரியம் ஷார்ட்ஸூக்கு மாறுவதுதான்!”

    (சில தலைமுறைகளுக்குமுன் மலேசியா வந்திருந்தாலும், சீனர்களுக்கு வெயில் தாங்காது. எந்த வயதுப் பெண்டிராக இருந்தாலும், வீட்டுக்கு அந்த ஆடைதான். அவர்கள் வெளியில் அப்படி வந்தாலும், யாரும் உற்றுப் பார்ப்பது கிடையாது).

    பள்ளியில் பண்பு

    மாணவர்களுக்கு ஒரு பாடம் பிடிக்க வேண்டுமென்றால், முதலில் அதைப் போதிக்கும் ஆசிரியரைப் பிடிக்கவேண்டும்.

    தனது அதிகாரத்தைத் தவறான வகையில் பயன்படுத்தி, மட்டம் தட்டிப்பேசினால், யார்தான் அவரை மதிப்பார்கள்?

    கதை

    `முட்டாள்’ என்று அவர் கருதிய ஒரு மாணவியிடம் தன் முதல் கேள்வியைத் தொடுப்பார் எங்கள் பள்ளி விஞ்ஞான ஆசிரியை, மிஸஸ் ஜெயலட்சுமி.

    கேள்வி முடிவதற்குள், `ரமாமணி!’ என்று அதிகாரமாக அவளுடைய பெயர் ஒலிக்கும்.

    அந்தப் பெண்ணோ, பதில் சொல்லத் தெரியாமல், ஆசிரியை வகுப்பைவிட்டு வெளியேறும்வரை, தண்டனையாக, கால்கடுக்க நின்றுகொண்டிருப்பாள். வருடம் முழுவதும் இதே கதைதான்.

    மற்ற மாணவிகளுக்கு ஆசிரியையின் போக்கு வேடிக்கையாகப் போயிற்று. அந்த ஆசிரியைப்போலவே அவளை அழைத்துக் கேலி செய்தனர்.

    ஒவ்வொரு முறையும், அவர்களைப்போன்ற ஒரு மாணவியின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று புரியவில்லை.

    கதை

    பல வருடங்களுக்குப்பின் நானே ஆசிரியையாக ஆனபோது, மாணவ மாணவிகள் ஒருவரையொருவர் இப்படி நடத்துவதை அனுமதிக்கக்கூடாது என்று தீர்மானித்தேன்.

    ஒரு வகுப்பில், மலாய் மற்றும் சீன மாணவிகள் மட்டும் இருந்தார்கள். ஆரம்பப்பள்ளியில் சீனமொழி கற்றிருந்த சீனர்களுக்குக் கோபம், ஏன் இடைநிலைப்பள்ளியில் மலாய் மொழியில் விஞ்ஞானம் கற்க வேண்டும் என்று.

    அந்தக் கோபம், இயலாமை, தம்மிடமிருந்து வித்தியாசமாக இருந்த அப்பாவி மாணவிகள்மேல் திரும்பியது. அவர்களில் ஒருத்தி தவறான விடை அளித்தால், இளக்காரமாகச் சிரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

    `உங்களில் ஒருவர் தவறாக விடையளித்தால், அதைக் கேலி செய்யக்கூடாது!’ என்று உத்தரவு பிறப்பித்தால் எந்தப் பலனும் இருக்காது என்று புரிந்தது.

    நான் கடினமான கேள்வி கேட்டால்தானே ஏளனச் சிரிப்பு?

    அதைத் தவிர்க்க எண்ணி, மலாய் மாணவிகளைக் கேள்வியே கேட்கமாட்டேன்.

    அவர்களுக்கு என் திட்டம் புரிந்ததோ, என்னவோ, அவர்களுடைய நன்றியையும், மதிப்பையும் பெற்றேன்.

    Share
  • நாசாவின் இரட்டை வாயேஜர் விண்கப்பல்கள்

    நாசாவின் இரட்டை வாயேஜர் விண்கப்பல்கள்

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

    https://www.pnas.org/content/118/17/e2106371118

    நாற்பதாண்டுகள் பயணம் செய்து
    நாசாவின் இரண்டு வாயேஜர்
    விண்வெளிச் சிமிழ்கள்
    சூரிய மண்ட லத்தின்
    வேலி தாண்டி
    அண்டைப் பரிதி மண்டலத்தில் நீல்ஸ்
    ஆர்ம்ஸ்டிராங் போல
    பாதம் வைக்கும் !
    நேர்கோட்டமைப்பில் வந்த
    சூரியனின்
    வெளிப்புறக் கோள்களை
    விண்கப்பல்கள்
    உளவுகள் செய்யும் !
    நெப்டியூனின் நிலவை,
    கருந்தேமலை,
    பெரும் புயலைக் காணும் !
    நாலாண்டுப் பயணம்
    நீள்கிறது
    நாற்பது ஆண்டுகளாய் !
    அடுத்த பரிதி மண்டலத்தில்,
    அலை ஓசைகள் எழுப்பும்
    ஓங்கார ஒலி கேட்கும்.
    ஊர்திகள், அன்னியப் பிறவி கட்கு
    எடுத்துச் செல்லும் நமது
    ஞாலக் கதை சொல்லும்
    கார்ல் சேகன்
    காலச் சின்னத்தை !

    *****************************

    Launch

    Voyager 2 launched on August 20, 1977, from Cape Canaveral, Florida aboard a Titan-Centaur rocket. On September 5, Voyager 1 launched, also from Cape Canaveral aboard a Titan-Centaur rocket.

    Planetary Tour

    Between them, Voyager 1 and 2 explored all the giant planets of our outer solar system, Jupiter, Saturn, Uranus and Neptune; 48 of their moons; and the unique system of rings and magnetic fields those planets possess.

    Closest approach to Jupiter occurred on March 5, 1979 for Voyager 1; July 9, 1979 for Voyager 2.

    Closest approach to Saturn occurred on November 12, 1980 for Voyager 1; August 25, 1981 for Voyager 2.

    Closest approach to Uranus occurred on January 24, 1986 by Voyager 2.

    Closest approach to Neptune occurred on August 25, 1989 by Voyager 2.

    Most Distant Spacecraft

    The Voyager spacecraft are the third and fourth human spacecraft to fly beyond all the planets in our solar system. Pioneers 10 and 11 preceded Voyager in outstripping the gravitational attraction of the Sun but on February 17, 1998, Voyager 1 passed Pioneer 10 to become the most distant human-made object in space.

    The Golden Record

    Both Voyager spacecrafts carry a greeting to any form of life, should that be encountered. The message is carried by a phonograph record – -a 12-inch gold-plated copper disk containing sounds and images selected to portray the diversity of life and culture on Earth. The contents of the record were selected for NASA by a committee chaired by Carl Sagan of Cornell University. Dr. Sagan and his associates assembled 115 images and a variety of natural sounds. To this they added musical selections from different cultures and eras, and spoken greetings from Earth-people in fifty-five languages.

    Present Status

    As of April 2020, Voyager 1 is at a distance of 22.3 billion kilometers (149.0 AU) from the Sun.

    Voyager 2 was at a distance of 18.5 billion kilometers (123.6 AU).

    Voyager 1 is escaping the solar system at a speed of about 3.6 AU per year.
    Voyager 2 is escaping the solar system at a speed of about 3.3 AU per year.

    There are currently five science investigation teams participating in the Interstellar Mission. They are:

    1. Magnetic field investigation
    2. Low energy charged particle investigation
    3. Cosmic ray investigation
    4. Plasma Investigation (Voyager 2 only)
    5. Plasma wave investigation

    Five instruments onboard the Voyagers directly support the five science investigations. The five instruments are:

    1. Magnetic field instrument (MAG)
    2. Low energy charged particle instrument (LECP)
    3. Cosmic ray instrument (CRS)
    4. Plasma instrument (PLS)
    5. Plasma wave instrument (PWS)

    One other instrument is collecting data but does not have official science investigation associated with it:

    6. Ultraviolet spectrometer subsystem (UVS), Voyager 1 only

    Termination Shock

    Voyager 1 crossed the termination shock in December 2004 at about 94 AU from the Sun while Voyager 2 crossed it in August 2007 at about 84 AU. Both spacecraft are now exploring the Heliosheath.

    The Heliosphere

    The heliosphere is a bubble around the sun created by the outward flow of the solar wind from the sun and the opposing inward flow of the interstellar wind. That heliosphere is the region influenced by the dynamic properties of the sun that are carried in the solar wind–such as magnetic fields, energetic particles and solar wind plasma. The heliopause marks the end of the heliosphere and the beginning of interstellar space. Voyager 1, which is traveling up away from the plane of the planets, entered interstellar space on Aug. 25, 2012. Voyager 2, which is headed away from the sun beneath the plane of the planets, reached interstellar space on Nov. 5, 2018.

    ***************************************

    “வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 33 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது !  ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.”

    எட்வேர்டு ஸ்டோன் (வாயேஜர் திட்ட விஞ்ஞானி) (C.I.T. Pasadena)

    “பரிதி மண்டலத்தின் வெளிப்புறத்தில் என்ன இருக்கிறது என்று காண நமது கண்களை விழிக்கச் செய்தது வாயேஜர் விண்கப்பல் !  அதைத் தொடர்ந்துதான் கலிலியோ, காஸ்ஸினி விண்கப்பல் பயணத் திட்டங்கள் உருவாக அழுத்தமான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன.”

    ஜான் கஸானி, (வாயேஜர் விண்கப்பல் திட்ட ஆளுநர்) (1975-1977)




    “வாயேஜர் திட்டத்தின் வியப்பான விளைவுகளில் குறிப்பிடத் தக்கது அது பயணம் செய்த காலமே !  175 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி மண்டலத்தில் நிகழும் புறக்கோள்களின் நேரமைப்பு (Planetary Alignment of Jupiter, Saturn, Uranus & Neptune) விண்கப்பலை ஏவி அனுப்பும் ஆண்டு களில் ஏற்பட்டது.  தொலைத் தொடர்பு, மின்னியல், மின்னாற்றல், விண்கப்பல் நகர்ச்சிக் கட்டுப்பாடுக்கு ஏற்ற கருவிகளின் பொறி நுணுக்கங்கள் அப்போது விருத்தியாகி இருந்தன.

    ஹாரிஸ் சூர்மையர் (Harris Schurmeier, Voyager Project Manager) (1970 -1976)

    “வாயேஜர் விண்கப்பல் பயணம் எத்தகைய மகத்துவம் பெற்ற திட்டம் !  நமது பரிதி மண்டலத்தின் விரிவான அறிவைப் பெற வழிவகுத்த வாயேஜரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் நான் பெருமிதம் அடைகிறேன்.  ஆழ்ந்த விண்வெளித் தொடர்புக்கும் வாயேஜர் விண்கப்பலுக்கும் உள்ள நீடித்த இணைப்பை வியந்து அந்தக் குழுவினரில் ஒருவராய் இருப்பதில் பூரிப்படைகிறேன்.”

    டாக்டர் பீடர் பூன் (தொலைத் தொடர்பு & திட்ட ஏற்பாடு ஆளுநர்) (2004-2010)

    நாசாவின் வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களில் நமது வரலாற்றை, கலாச்சாரத்தைப் படங்களாய், பாடல்களாய்க் கூறும் காலச் சின்னத்தைப் (Time Capsule) பதித்து அனுப்பியுள்ளார்கள்.  அது 12 அங்குல வட்டத்தில், தங்க முலாம் பூசப்பட்ட ஒரு தாமிரத் தட்டு.  அண்டை விண்மீன் மண்டலத்தினர் (Aliens) விண்கப்பலைக் கைப்பற்றினால் அவருக்கு ஒரு நினைவுப் பரிசாய் அளிக்க வைக்கப்பட்டுள்ளது.

    நாசா வெளியிட்ட அறிக்கை

    நாசா கண்காணித்து வரும் வாயேஜர் விண்வெளிப் பயணம்

    2010 மே மாதம் 17 ஆம் தேதி நாசா ஜெட் உந்துகணை ஏவகத்தின் (NASA’s Jet Propulsion Lab) பொறியியல் நிபுணர்கள் 8.6 பில்லியன் மைல் தூரத்தில் பரிதி மண்டலத்தின் விளிம்பைத் தாண்டிப் பயணம் செய்யும் வாயேஜர் 2 இன் உட்புறக் கணினியை முடுக்கி அதன் பணியை மாற்றம் செய்தார்.  அதனால் விண்கப்பலின் நலம் மற்றும் நிலைமைத் தகவல் மட்டுமே பூமிக்கு அனுப்பப்படும்.  மே முதல் தேதி வந்த தகவலில் விண்கப்பல் நலமோடு பயணத்தைத் தொடர்வதாக அறியப் பட்டது.


    ஏப்ரல் 22 இல் வாயேஜர் -2 இலக்கத் தகவலில் (Data Packets) மாறுதலைக் கண்டார்.  திட்ட நிபுணர் விஞ்ஞானத் தகவல் அனுப்புதலைச் செம்மைப் படுத்த உளவு செய்தார்.  ஏப்ரல் 30 இல் பூமியிலிருந்து வாயேஜருக்கு அனுப்பும் தொடர்பு சீராக்கப் பட்டது.  பூமியிலிருந்து வாயேஜருக்குத் தகவல் போக 13 மணி நேரமும், மறுபடிப் பதில் பூமியில் உள்ள நாசாவின் ஆழ்வெளித் தொலைத் தொடர்பு வலைக்கு (NASA’s Deep Space Network on Earth) வந்து சேர 13 மணி நேரமும் ஆயின.

    வாயேஜர் 2 விண்கப்பல் முதலாக 1977 ஆகஸ்டு 20 ஆம் தேதி பூதக்கோள் வியாழன், வளையக்கோள் சனி ஆகிய இரண்டையும் துருவி உளவாய்வு செய்ய நான்கு ஆண்டுகள் பயணம் செய்ய ஏவப் பட்டது. அதன் இரட்டை விண்கப்பல் வாயேஜர் 1 இரண்டு வாரங்கள் கடந்து அனுப்பப்பட்டது.

    இப்போது அவை இரண்டும் பரிதியின் புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் உளவிப் பரிதியின் விளிம்புக் குமிழியைத் (Heliosphere) தாண்டி அப்பால் அகில விண்மீன் மந்தை வெளி வாசலில் (Interstellar Space) தடம் வைத்து விட்டன !

    “வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 33 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது !  ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.” என்று வாயேஜர் திட்ட விஞ்ஞானி எட்வேர்டு ஸ்டோன் கூறுகிறார்.

    வாயேஜர் விண்கப்பல் ஏவப்பட்ட பொன்னான காலம் சிறப்பானது,  175 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் புறக்கோள்கள் நான்கும் நேர் கோட்டமைப்பில் வருகின்றன.  அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாயேஜர் விண்கப்பல்கள் நேர் போக்கில் நான்கு பெரும் புறக்கோள்களையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் ஆராய வசதியானது.

    புறக்கோள்களை ஆராய்ந்த வாயேஜர் விண்கப்பல்கள்

    1986 இல் வாயேஜர் 2 யுரேனஸ் கோளையும், 1989 இல் நெப்டியூன் கோளையும் கடந்து சென்றது.  அப்போது சிறப்பாக விண்கப்பல் நெப்டியுனில் இருக்கும் மிகப் பெரிய கரு வடுவையும் (Great Dark Spot) மணிக்குப் ஆயிரம் மைல் வேகத்தில் அடிக்கும் சூறாவளியையும் எடுத்துக் கட்டியது. செந்நிற நைட்ரஜன் பனிக்கட்டியி லிருந்து பீறிட்டெழும் ஊற்றுகளையும் (Geysers from Pinkish Nitrogen Ice) அவை நெப்டியூன் துணைகோள் டிரைடான் துருவங்களில் (Polar Cap on Triton) பனியாய்ப் படிவதையும் படம் பிடித்து அனுப்பியது.  வாயேஜர் 1 பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” வில் (Jupiter’s Satellite Lo) தீவிரமாய் எழும்பும் எரிமலை களைப் படமெடுத்தது !  மேலும் சனிக்கோளின் அழகு வளையங்களில் உள்ள நெளிவு, சுழிவுகளையும், மேடு பள்ளங்களையும் காட்டியது !  2010 மே மாதத்தில் வாயேஜர் 2 பூமியிலிருந்து 8.6 பில்லியன் மைல் (13.8 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் வாயேஜர் 1 பூமியிலிருந்து 10.5 பில்லியன் மைல் (16.9 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் பயணம் செய்கின்றன !

    வாயேஜர் திட்டங்கள் அண்டைக் கோள் ஈர்ப்புச் சுற்று வீச்சு உந்து முறையால் (Flyby Gravity Swing Assist) விரைவாக்கப் பட்டு சிக்கனச் செலவில் (Two Third Cost Reduction) செய்து காட்ட உருவாயின.  வாயேஜரின் மகத்தான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த முதல் 12 ஆண்டுகளில் நாசாவுக்கு நிதிச் செலவு 865 மில்லியன் டாலர்.  அந்த உன்னத வெற்றியால் அவற்றின் ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கப்பட்டு மேற்கொண்டு 30 மில்லியன் டாலரே நிதிச் செலவு கூடியது !

    பரிதி மண்டலத்தின் எல்லைக் குமிழியைக் கடக்கும் விண்கப்பல்கள் !

    வாயேஜரின் அகில விண்மீன் விண்வெளித் திட்டப் பயணம் (Intersteller Mission) துவங்கிய போது பரிதியிலிருந்து வாயேஜர் 1 சுமார் 40 AU தூரத்திலும் (AU -Astronomical Unit) (AU = Distance Between Earth & Sun), வாயேஜர் 2 சுமார் 31 AU தூரத்திலும் இருந்தன.  பரிதியை விட்டு நீங்கும் வாயேஜர் 1 இன் வேகம் : ஆண்டுக்கு 3.5 AU தூரம்.  வாயேஜர் 2 இன் வேகம் : ஆண்டுக்கு 3.1 AU தூரம்.  இரண்டு விண்கப்பல்களும் இன்னும் பரிதி மண்டலத்தின் எல்லை அதிர்ச்சி அரங்கில்தான் (Termination Shock Phase) நகர்ந்து செல்கின்றன !  அந்த வேலி அரங்கில் பரிதியின் காந்த மண்டலச் சூழ்வெளிக் கட்டுப்பாடுக்குள் இயங்கி வருகின்றன.  அதி சீக்கிரம் வாயேஜர் -1 எல்லை அதிர்ச்சியில் ஈடுபட்டு பரிதிக் கவசத்தை (Heliosheath) உளவி ஆராயத் துவங்கும்.  எல்லை அதிர்ச்சி அரங்கிற்கும், பரிதித் தடுப்பு அரணுக்கும் இடையே இருப்பதுதான் (Between Termination Shock Phase and Heliopause) பரிதிக் கவசம்.  வாயேஜர் பரிதிக் குமிழியை (Heliosphere) நீங்கும் போதுதான் அகில விண்மீன் வெளி வாசலைத் தொடத் துவங்கும் !

    வாயேஜர் விண்வெளித் தேடலின் உன்னதம் என்ன வென்றால் 33 ஆண்டுகள் கடந்த பின்னும் அதன் மின்சக்தி ஆற்றல் சிக்கனமாகச் செலவாகி, நகர்ச்சிக் கட்டுப்பாடு செய்யும் உந்து சாதனம் (Use of Available Electric Power & Attitude Control Propellant) செம்மையாக இயங்கி வருகிறது !  ஏவும் போது வாயேஜர் விண் கப்பலுக்கு மின்சக்தி அளித்தது : கதிரியக்க ஏகமூல வெப்ப-மின்சக்தி ஜனனி (Radioisotope Thermo-electric Generators – RTG).  முதலில் அது பரிமாறிய ஆற்றல் : 470 வாட்ஸ்.  1997 ஆரம்பத்தில் புளுடோனியத்தின் கதிர்வீச்சுத் தேய்வால் ஆற்றல் 335 வாட்ஸ் ஆகக் குறைந்தது.  2001 இல் ஆற்றல் 315 வாட்ஸ்,  மின்சக்தி ஆற்றல் இழப்பைக் குறைக்கச் சில சாதனங்கள் நிறுத்தப் பட்டன.  இந்த ஆற்றல் இழப்பு நிலையில் நகர்ந்தால் வாயேஜர் 2020 ஆண்டுக்கு மேல் இயங்கிச் செல்ல முடியாது முடங்கிப் போகும் !

    கார்ல் சேகன் தயாரித்து வாயேஜரில் அனுப்பிய தங்க வில்லை

    இன்னும் சில மாதங்களில் நாசா வாயேஜர் 1 & 2 ஏவிய முப்பதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும்.  2010 மே 15 ஆம் தேதிப்படி இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் புறக் கோள்களில் ஒன்றாக ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோவின் சுற்று வீதியைக் கடந்து அண்டையில் உள்ள புதிய பரிதி மண்டலத்தின் வாசலுக்கு வந்து விட்டன. மேலும் வாயேஜர் விண்கப்பல்கள் நமது உலக மாந்தரின் வரலாற்றைப் பதித்த காலச் சின்னம் (Time Capsule) ஒன்றைத் தூக்கிச் செல்கின்றன.  உலக வரலாற்றுப் பதிவுக்காக அற்புதப் படங்கள், மனிதர் பெயர்கள், இசைப் பாடல்கள் ஆகியவற்றை கார்ல் சேகன் ஆறு மாதங்களாகத் தகவலைச் சேகரித்தார்.  படங்களில் ஐக்கிய நாடுகளின் தலைமையகம் பற்றியும், இந்தியாவில் கிரீன் ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு பற்றியும். ஜார்ஜ் புஷ்ஷின் படமும் இடம் பெற்றுள்ளன.  நமது வரலாற்றைக் கூறும் ‘காலச் சின்னம்’ அண்டைக் கோளப் பிறவிகட்கு நமது இளவச நன்கொடையாக இருக்கும்.

    ———————–

    *************************

    படங்கள்:  BBC News, National Geographic News, NASA

    தகவல்:

    a)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206171&format=html (Jupiter)
    b)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html (Saturn)
    c)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206231&format=html  (Uranus & Neptune)

    1.  National Geographic News – Voyager 1 at Solar System Edge By : Stefan Lovgren (June 2, 205)
    2.  National Geographic News – Voyager Probes Send Surprises from Solar System Edge By : Richard A. Lovett (September 26, 2006)
    3.  NASA’s Golden Gift to the Aliens : 30 Years Later Voyager 1 & 2 By : Kevin Friedl (May 15, 2010)
    4.  NASA’s Voyager 2 Spaceship “Hijacked By Aliens’ By : Stephanie Dearing (May 15, 2010)
    5.  From Wikipedia – Voyager 2 (May 16, 2010)
    6.  Voyager 2 Journey By NASA (Updated on May 17, 2009)
    7.  Space Travel : Mankind’s Messenger (Voyager 1 & 2) at the Final Frontier (September 5, 2012)
    8. https://youtu.be/xZIB8vauWSI
    9.  https://www.pnas.org/content/118/17/e2106371118
    10.  https://voyager.jpl.nasa.gov/frequently-asked-questions/fact-sheet/
    11. https://youtu.be/xZIB8vauWSI

     

    Share
  • சேக்கிழார் பாடல்  நயம் – 129

    சேக்கிழார் பாடல் நயம் – 129

    திருச்சி புலவர்  இராமமூர்த்தி

    வரலாறு

    திருத்தொண்டர் புராணத்தின்  பதினோராம்  அடியார்  கண்ணப்ப நாயனார்  ஆவார். அவர் வாழ்ந்த நாடு கண்ணப்பர் திருநாடு எனப்போற்றப்பெறும்  பொத்தப்பி நாடாகும். அங்கே உடுப்பூர் என்ற பழமையான  ஊரில் கண்ணப்பர் பிறந்து வளர்ந்தார்.  அவ்வூரில் யானைத்தத்தங்களை ஊன்றி வேலியிட்டு அரண் அமைத்தனர். அங்கே கொன்றவர் எனப்பட்ட வேடுவர் வாழ்ந்தனர். அவ்விடத்தில் நாய் விளா மரநிழலில் உறங்கும். கொடிய விலங்குகளைக் கவரும் பார்வை விலங்குகளுடன் , ஐவன நெல் காயும்.

    அங்கே புலிக்குட்டி, யானைக்கன்று இவற்றுடன் சிறுவர்   விளையாடுவர்;வந்தணையும் மான்களைத்  தழுவி வேட்டுவ மகளிர்  விளையாடுவர். அங்கே இசைக்கருவிகளின் பேரோசையும், வேடர்களின் கொல் , எறி ,  குத்து ஓசையுடன் அருவியின் ‘கல்’ என்ற ஓசையும் கேட்கும். கரிய நிறத்துடன் , அச்சமும் கருணையும் அற்றவராய், ஊன் தசை உணவும் உண்ணும் வேடர் தலைவனாக   நாகன் என்பான் இருந்தான; முன்பு தவம் செய்திருந்தாலும் இப்போது குற்றத்தையே குணமாகக் கொண்டான். அவன் சிங்கம் போன்ற ஆற்றல் பெற்றவன். அவன் மனைவி தத்தை.

    மறவர் குலக்கொடியாகிய  தத்தை, புலிப்பல்ளுடன் சங்கினைக் கோத்து அணிந்து, பெண்சிங்கம் போல் இருந்தாள்.  அவளுக்கு குழந்தைப்பேறு இல்லை என்று பலரும் கூற, முருகப்பெருமான் திருவருள் வேண்டி வழிபாடுகள் செய்தாள். கோயிலுக்கு கோழி,மயில் ஆகியவற்றை நேர்த்திக் கடனாக விட்டு, பெரிய திருவிழா நடத்தினாள். அதனால் மலையை வேலால் பொடித்த வேலேந்திய முருகன் திருவருளால் ஆண்குழந்தை பிறந்தது. அதனைச் சேக்கிழார்,

    ‘’கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீட
    ஊனம் இல் பலிகள் போக்கி உறு கடன் வெறி ஆட்டோடும்
    ஆன அத் திங்கள் செல்ல, அளவு இல் செய் தவத்தினாலே
    பால் மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது’’

    என்று பாடினார். இப்பாடலின் பொருள்:

    வேடர்களது குலம் விளங்கும்படி தத்தையின் வயிற்றிலே கருப்பம் தரித்ததாக, ஊனமில் பலிகளைக் கொடுத்துக் கடமையாயுற்ற வெறியாட்டுடனே, ஒவ்வொன்றாய் ஆயின அந்த மாதங்கள் சென்றனவாக, முன்னே அளவில்லாது செய்த தவத்தினாலே நற்பான்மையுடைய நிறைமதியை உவர்க்கடல் பெற்றது போலத் தத்தை மகவினைப் பெற்றெடுத்தபோது, என்பதாகும். அந்தக் கண்ணப்பர் பிறந்ததால் வேடுவர் குலம், சிவபாத விருதயரால் கவுணியர் குலமும் , சேக்கிழாரால் பெற்றோர்  குலமும் விளக்கம் பெற்றது போல்  உயர்ந்தது!ஒரு பெரியார் ஒரு குலத்தில் அவதரித்தாராயின் அவரால் அக்குலமுழுவதும் விளக்கமடைந்து உய்யும் என்பது ஆன்றோர் துணிபு. திருவண்ணாமலைக் கார்த்திகைச் சோதி தரிசித்தவரின் “கோத்திரத்தி லிருபத்தோர் தலைமுறைக்கு முத்திவரங் கொடுப்போ மென்றார்” என்ற அருணாசலபுராணமுங் காண்க.

    குழந்தை கருவில் வளரும்போது மாதந்தோறும் வரும் ஊனங்களை நீக்க பலிகள் இட்டனர்.  இம்மாதங்களின் வரும் ஊனங்களைத் திருவாசகத்தில் (போற்றித் திருவகவல்).

    “மானுடப் பிறப்பினுண் மாதா வுதரத்,
    தீனமில் கிருமிச்செருவினிற் பிழைத்தும்
    ஒருமதித் தான்றியி னிருமையிற் பிழைத்தும் ,
    இருமதி விளைவி னொருமையிற் பிழைத்தும்,
    மும்மதிதன்னுளம் மதம்பிழைத்தும்,
    ஈரிருதிங்களிற் பேரிருள்பிழைத்தும்,
    அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும் ,
    ஆறு திங்களி னூறலர்  பிழைத்தும்,
    ஏழு திங்களிற் றாழ்புவி பிழைத்தும்,
    மெட்டுத்  திங்களிற் கட்டமும் பிழைத்தும் ,
    ஒன்பதில் வருதரு துன்பமும்பிழைத்தும்,
    தக்க தசமதி தாயொடு தான்படும்,
    துக்க சாகரத் துயரிடைப்பிழைத்தும்…..”

    என்று, மணிவாசகப் பெருமான் அருளியனவற்றை இங்கு நினைவு கூர்க.

    ஆன அத்திங்கள் செல்ல  என்ற தொடர் ,  கருப்பம் தரித்தபின்,

    “கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை கருநரம்பும்
    வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி, யுருவாகிப் புறப்பட்டு”

    என்றபடி வளர்ச்சி முற்றுவதான பத்துத்திங்களும் நிரம்பிச் செல்ல.

    “முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்” என்பது திருமந்திரம்.

    இதனை 280 நாட்களுக்குமேல் முந்நூறு நாட்களுக்குள் என்பர் நவீன சாத்திரிகள்.

    செய் அளவில் தவத்தினாலே  என மாற்றுக  தத்தையும்நரகனும் செய்தவம் – கானவர்குலஞ் செய்தவம் – மாதவஞ் செய்த தென்றிசை செய்தவம் – அன்புநிலை உணராது ஆணவத்தி னழுந்தி உழலும் உயிரெல்லாஞ் செய்தவம் என்று பலவாறு கூட்டி யுரைக்க நின்ற அழகுங் காண்க.

    “முந்தை யெம்பெருந் தவத்தினாலென்கோ
    முனிவ ரிங்கெழுந் தருளியது” என்பதற்கேற்ப

    ‘’உவரிசெய் தவத்தினால் பால்மதி யீன்றாலென’’ என்று கூட்டி யுரைக்க. பாற்கடலைத் தேவர்  கடைய அதிற் பிறந்தது மதி என்பர். அதுபோலத் தானும் ஒரு மதியினையீனும் பொருட்டு உவரியாகிய கருங்கடலும் தவஞ் செய்து பெற்றதுபோல என்பதாம். கடல் தவஞ்செய்தல் எதற்காக எனின் தனது கருமை, உவர்ப்பு மண்ணீருமாகாத தன்மை, கழிநாற்றம் முதலிய இழிபுகளைப் போக்கும்படிக்கும், பாற்கடல் பெற்ற அந்த மதிக் குழவியின் மேம்பட்ட குழவிமதியாகிய  கண்ணப்பரை ஈன்றெடுக்கவும் ஆம் என்க.

    அக்குழவியின் மேம்படுதலாவது அது வெண்மதியாய்க், கலைகள் வளர்வதும் தேய்வதும் உடையதாய்த், தேவரில் ஒன்றாய், இறப்பும் பிறப்பும் உடையதாய், இறைவனாற் காக்கப்பட்டுள்ளதாய் நிற்பது; தான் பெறும் இக்குழவி அவ்வாறன்றிக் கருங்கதிர் விரிக்குமேனிக் காமர் பெற்றுடையதாய், பதினாறாண்டில்  கலைவளர்வதாய்ப், பின்னர் என்றும் குறைவில்லாததாய், இறப்பும் பிறப்பு மில்லாததாய், இறைவன் பக்கத்திருந்து அகலாது அவருக்குக் காவல் புரிவதாய் உள்ளது என்பதைக்  குறித்தது.

    உவரி – தத்தைக்கும், பான்மதி – நாயனாராகிய மகவுக்கும் உவமை, உருவும் தொழிலும் பற்றி வந்தது. பான்மதி – நற்பான்மையும் நிறைவும் பெற்ற மதி என்க. முழுமதி தோன்றும்போது சிவந்து காட்டும். அன்றியும் இம்மகவு பின்னர்க் “கருங்கதிர் விரிக்குமேனி” யுடையதாம். குழவிகள் பின்னர் எந்நிறமுடையனவாக ஆயினும், தாய் வயிற்றினின்றும் பிறக்கும்போது புதிய இரத்தஊற்றத்தினால் எல்லாக் குழவிகளும் செம்மை நிறமே தந்நிறத்தின் மிக்குக்காட்டும். இங்குத் தத்தையீன்றபோது உவரியின் தோன்றும் பான்மதி போன்றிருந்த  இம்மகவு, தாதை எடுக்கும்போது “காளமேகம்”  ஒப்பாயினதென் றுரைத்தலும் காண்க.

    இனி, இறைவனது நெற்றிக் கண்ணாகிய கனற் கண்ணினின்றும் அவதரித்தவர் முருகப்பெருமான். அவர் “பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு” என்றபடி “வெம்புந்திய கதிரோனொளி” யென விளங்குபவர். இம்மகவு அவரது தண்ணருளாலே போந்தது ஆதலின் இது மதி போன்றது என்றார் என்றலுமாம்.

    ஞாயிற்றின் ஒளி, “வெம்புஉந்திய” தாகலின் வெப்பமுடையது; அதனைப் பல உயிர்களும் தரித்தாற்றலாகாதாம்; ஆயினும் அந்த ஞாயிற்றின் ஒளிபெற்று விளங்கும் மதி அமுதமாக்குவது;

    “தோற்று மன்னுயிர் கட்கெலாம்  தூய்மையே
    சாற்று மின்பமுந் தண்மையுந் தந்துபோய்,
    ஆற்ற அண்டமெ லாம்பரந் தண்ணல் வெண்,
    நீற்றின் பேரொளி” (308) போன்றது;

    அது ஞாயிற்றின் கதிரொளியைத் தான் பெற்று அதனால் தண்ணிதாய் விளங்குவது என்பது பௌதிக சாத்திர உண்மை. அதுபோல இந்தப் பான்மதியும் முருகனாகிய ஞாயிற்றின் அருளொளியால் விளங்கி உலவி உலகுக்கு அன்பாகிய தண்ணொளி பரப்பி உய்விப்பதாயிற்று என்றதொரு குறிப்பினாற் பயனுவமையாயிற்று.

    மகப் பயந்த  போது – தத்தை மகவை ஈன்றபோது. தத்தை என்பது வருவிக்க. பயந்தபோது – பொழிந்தது – ஆர்த்த என வரும் பாட்டுடன் கூட்டிமுடிக்க.

    இப்பாடலால்  வேட்டுவக்குடியிலும் சிறந்த சான்றோர் பிறப்பர் என்பதும், பால் மதி உப்புக்கடலில் தோன்றியது போல் கண்ணப்பர் பிறந்தார் என்பதும்,

    இவற்றுக்கெல்லாம்  காரணம் முருகப்பெருமானின் திருவருளே என்பதும், புலனாகின்றது!

    Share
  • வசந்த பவனில் ரோபோ சர்வர்

    வசந்த பவனில் ரோபோ சர்வர்

    அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள நம்மவீடு வசந்த பவன் உணவகத்தில் ரோபோ சர்வரை அறிமுகம் செய்துள்ளார்கள். அது எப்படி உணவு கொண்டு வருகிறது, பாருங்கள்.

    படப்பதிவு – ராஜேஷ் கர்கா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 15

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 15

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள்- 1

    முன்னுரை

    ‘இலக்கியத்தில் உவமம்’ என்பது அனைவரும் அறிந்த உண்மை. இலக்கிய உரைகளில் உவமம் என்பதும் அத்தகையதே. இலக்கண விளக்கத்தில் உவமம் என்பது சிலரால் அறியப்பட்ட உண்மை. இலக்கண உரைகளில் உவமம் என்பது அச்சிலருள்ளும் சிலரால் அறியப்பட்ட உண்மையாகும். கணிதத்தையொத்த இலக்கணத்தில் உவமப் பயன்பாடு பற்றிய சிந்தனையோ எதிர்பார்ப்போ அவ்வளவாக எழாது. அதற்கான சூழல் அங்கே இல்லை. ஆனால் தமிழிலக்கண உரைகள் இந்தக் கருத்தியலைப் புறந்தள்ளியிருக்கிறது. கல்வி அறிவு நோக்கியது. அதனால் அறிவு தெளிவு நோக்கியது என்பது பெறப்படும். ‘தெளிவு பெற்ற மதியினாய்’ என்பது பாரதி கருத்து. இந்த அடிப்படையில் யாப்பருங்கலக்காரிகை என்னும் செய்யுளிலக்கண நூலுக்குக் குணசாகரர் எழுதிய உரையில் வரும் ஓர் உவமம் பற்றிய ஆய்வாய் இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    வெண்பாக்களுள் நேரிசை வெண்பா

    பாக்கள் தனி. அவற்றின் கிளைகளான வகைகள் தனி. ஒவ்வொரு பாவாற்றுக்கான கால்வாய்கள் தனி. அவை இனம் என அழைக்கப்படும். சான்றாக வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பது நால்வகைப் பாக்களாகும். மருட்பா பொருட்பற்றிய பிரிவாதலின் யாப்புப் பற்றிய பாகுபாடுடைய முன்னவற்றோடு இயையாது. இணையாது. நான்கென்றலே மரபு. வெண்பாவில் குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா என ஆறு வகைகள் உண்டு. ஆனால் இந்த ஆறுவகைகளும் புறக்கட்டுமானத்தில் கவிஞர் ஏற்படுத்திக் கொள்ளும் சில மாற்றங்களால் உண்டாகும் பெயர் மாற்றங்களே தவிர குறள் வெண்பாவைப்போலத் தனித்தன்மை உடையன அல்ல. அதாவது வெண்பாவின் வகைகள் ஆறாகக் கருதப்படினும் அவ்வளவும் குறள் வெண்பாவின் நீட்டியாகவே கருதப்படும் அளவிற்கே அமைந்துள்ளது. குறள் வெண்பாவின் அடுத்த நிலை நேரிசை வெண்பா. அது பற்றிய விளக்கத்தை அடுத்த பத்தி ஆராய்கிறது.

    இரு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா

    ‘ஈரடி வெண்பா குறள்’ என்பதற்குக் குறள் வெண்பா ஈரடியால் அமையும் என்பது பொருள். அத்தகைய குறள் வெண்பாக்கள் சில மாற்றங்களைப் பெற்று இணைய நான்கடியாய் உருமாற்றம் அடைந்தால் அது நேரிசை வெண்பா எனப்படும். தனித்தன்மையுடைய இரண்டு குறள்வெண்பாக்களே செயற்கையான நேரிசை வெண்பாவை உருவாக்கும் காரணிகளாக அமைகின்றன. காரிகை இலக்கணம் அப்படித்தான் சொல்கிறது. அது மட்டுமன்று வெண்பாக்களை அது அடிகளால்தான் அடையாளப்படுத்துகிறது. வெண்பாக்களினிடையில் படைப்பாளரால் கொண்டுவரப்படும் புறமாற்றங்களும் பெயர் வேற்றுமைக்குக் காரணமாகின்றன. இரண்டடியால் அமைவது குறள் வெண்பா. நான்கடியால் அமைவது நேரிசை வெண்பா. மூன்றடியால் அமைவது சிந்தியல் வெண்பா. பல அடிகளால் அமைவது பஃறொடை வெண்பா. மூன்றடியால் அமைகிற சிந்தியல் வெண்பா தனிச்சொல் பெற்றுவந்தால் அது நேரிசைச் சிந்தியல் வெண்பா. தனிச்சொல்லின்றி மூன்றடியால் வந்தால் அது இன்னிசைச் சிந்தியல் வெண்பா.  எனவே வெண்பாவின வகைகள் என்பன பொருட்பாகுபாட்டைச் சுட்டுவதன்று. வடிவ மாற்றத்தை மட்டுமே அதுவும் பெரும்பாலும் அடிகளால் உண்டாகும் மாற்றத்தையே சுட்டும் என்பது பெறப்படும்.

    பொற்கொல்லரும் பொடியும்

    ‘பொற்றுகள், மண்துகள், பற்பொடி, மிளகாய்த்தூள் என்னும் வழக்குகளைக் கேட்டிருக்கலாம். இவற்றுள் ‘பொற்றுகள்’ என்பது பொன்னின் தூளைப் பொதுவாகக் குறித்தாலும் அணிசெய்யும் பொற்கொல்லரின் இணைப்புத் தொழிலுக்குப் பயன்படும் ஓர் கருவிப் பொருளாகும். ஒரே தரமுடைய இரண்டு பொற்கம்பிகளை இணைக்க வேண்டுமாயின் அதே தரமுடைய கம்பியைக் கொண்டு இணைக்க இயலாது. பொற்கொல்லரின் ஆற்றலுக்குத் தங்கம் உருகாது. அதனால் சற்றுத் தரம் குறைந்த பொன்னைத் தூளாக்கி அதனை அவற்றிடை வைத்து ஊதினால் அது உருகித் தரமுடைய இரண்டு கம்பிகளையும் இணைக்கும். இவ்வாறு ஊதுவதற்குப் ‘பொடிவைத்து ஊதுதல்’ என்று பெயர். ஒரு நகையின் தரம் இத்தகைய பொடியின் அளவுக்குக் கூடவோ குறையவோ செய்யும்.  நுட்பமான வேலைப்பாடுடைய நகைகளைப் பொடிவைத்த நகைகள் என்று அழைக்கிற வழக்கும் உண்டு. இங்கு இது பற்றிய ஆய்வைவிட ஒற்றுமைப்படாத உலோகங்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான பொற்கொல்லரின் செயலும் அதற்கு அவருக்குப் பயன்படும் பொடியுமே கருத்திருத்த வேண்டியது ஆகும்.

    நேரிசை வெண்பா உருவான கதை 

    யாப்பருங்கலக்காரிகைக்கு முன்னும் பின்னும் நேரிசை வெண்பா ஓரலகாகப் படைக்கப்பட்ட வரலாறு உண்மை என்பதைப் பல்வேறு நேரிசை வெண்பாக்களால் அறிந்து கொள்ள இயலும். ஆனால் காரிகைக் காலத்தில் இரண்டு குறள்வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பாவாகத் தோற்றம் பெற்றிருக்கிறது.

    “உன்நலத்தை நாடாதே! ஊர்நலத்தை நாடுகநீ!
    பன்னலமும் வந்தெய்தும் பார்”

    என்பது ஒரு குறள் வெண்பா.

    “தேக்கம் உணர்ந்திடுக! தேயா வளர்பிறையாய்
    ஊக்கம் பெறுவாய் உணர்ந்து”

    என்பது மற்றொரு குறள் வெண்பா. இந்தத் தனித்தனிக் குறள் வெண்பாக்களைக் கவிஞர் சில மாற்றங்களால் ஒரு நேரிசை வெண்பாவாக மாற்றிவிடுகிறார்.

    “உன்நலத்தை நாடாதே! ஊர்நலத்தை நாடுகநீ!
    பன்னலமும் வந்தெய்தும் பார்போற்றும் – இன்றுள்ள
    தேக்கம் உணர்ந்திடுக! தேயா வளர்பிறையாய்
    ஊக்கம் பெறுவாய் உணர்ந்து”

    செய்திருக்கும் மாற்றங்கள்:

    1. முதல் குறட்பாவில் நேரசையில் முடிந்திருக்கும் ஈற்றுச்சீரைத் தளைதட்டாது மூவசைச் சீராக்கியிருக்கிறார்.
    2. முதலடியின் முதற்சீருக்கு ஏற்ப இரண்டாம் அடியின் இறுதியில் அதாவது நான்காவது சீரை ஏழாவது சீருக்கும் எட்டாவது தனிச்சீருக்கும் தளைதட்டாத வகையில் தனிச்சொல்லை அமைத்திருக்கிறார்.

    இந்த மாற்றங்களைத்தான் ‘பாட்டில் ஒட்டுவேலை’ என்கிறோம் நாம். இந்த ஒட்டுவேலையைப் பொற்கொல்லரின் பொடிவைத்து ஊதும் வேலைக்கு ஒப்பிட்டு காரிகைக்கு உரையெழுதுகிறார் குணசாகரர். எப்படி? இப்படி,

    “‘சீரியவான் தனிச் சொல் அடி மூய்’ என்று சிறப்பித்த அதனால் முதற் குறட்பாவினோடு தனிச்சொல் இடைவேறுபட்டு விட்டிசைப்பின் ஒற்றுமைப்படாத உலோகங்களை, ஒற்றுமைப்படப் பற்றாசிட்டு விளக்கினாற்போல முதற் குறட்பாவின் இறுதிக்கண் ஒன்றும், இரண்டும் அசைகூட்டி உச்சரிக்கப்பட்டு இரண்டு விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வருவனவுமுள. அவை ஒருசார் ஆசிடை நேரிசை வெண்பா எனக் கொள்க.”

    குணசாகரரின் இந்த உரையால் நேரிசை வெண்பாவைப் பற்றிய பல உண்மைகள் வெளிப்படுகின்றன. காரிகையில் பயின்றுவரும் அடைச்சொற்களைக் கொண்டு இவற்றை அவர் தருகிறார்.

    1. நேரிசை வெண்பா என்பது தனியான ஓர் அலகன்று.
    2. இரண்டு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா ஆகும்.
    3. முதல் குறள் வெண்பாவில் ஈற்றுப் பகுதியில் செய்யப்படும் மாற்றங்களே நேரிசை வெண்பாவிற்கான வடிவமாற்றமாகக் கருதப்படுகிறது.
    4. இந்த மாற்றத்தினை இரண்டு உலோகங்களை இணைப்பதற்குப் பொடி வைத்து ஊதும் பொற்கொல்லரின் செயலை உவமமாக்கிப் ‘பற்றாசிட்டு விளக்கினாற்போல’’ என விளக்கியிருக்கிறார்.

    நேரிசை வெண்பா –  வடிவப் பயன்பாடு

    ஆராய்ந்து நோக்கினால் இரண்டு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா என்பது நடப்பியலுக்கு முரணாகவும் படைப்பாளர்தம் சிந்தனை வெளிப்பாட்டுக்குப் பொருந்தாத எதிராகவுமே அமைந்துள்ளதாகத் தெரிகிறது. கவிதை என்பது கருத்தியலின் உணர்ச்சி வெளிப்பாடாதலின் அங்கே வடிவக்கட்டுமானத்தைத் திட்டமிடுவதற்கு நேரமிருக்காது. இருந்தால் அது கவிதையாக பரிணமிக்காது. யாப்பென்னும் கலத்துள் கவிதை நிரம்ப வேண்டும் என்பதுதான் தமிழ் மரபுக் கவிதைகளின் வடிவக் கோட்பாடு. காரிகைக்கு முன்னவையான சிலப்பதிகாரத்திலும் பத்துப்பாட்டிலும் உள்ள நேரிசை வெண்பாக்கள் தனித்தன்மையான ஒரே அலகுகளாகவே அமைந்துள்ளன. காரிகைக்குப்பின் வந்த சோமேசர் முதுமொழி வெண்பா, மணிமேகலை வேண்பா, பாரத வெண்பா, பாரதியின் பல வெண்பாக்கள், வைரமுத்து, கடவூர் மணிமாறன், கரூவூர் கவிஞர் குழந்தை முதலியோர்தம் வெண்பாக்கள் எல்லாம் தனித்தனி அலகுகளாகவே அமைந்திருக்கின்றன. இரண்டு குறள் வெண்பாக்களின் கூட்டணியாக அவை இல்லை. இது வளர்சிந்தனைக்குரிய யாப்பியல் கருத்தாகக் கருதப்படலாம்.

    நிறைவுரை

    எதனையும் உவமம் காட்டி விளக்குவதும் உரைநெறியே என்பதைக் குணசாகரர் உணர்ந்து உரையெழுதியிருக்கிறார். இலக்கண விளக்கங்களுக்காக உவமங்கள் பயன்படுத்தப்படுவது கோட்பாடு எனின், உலகியல் சார்ந்த ஒரு தொழில் நிகழ்வை உவமமாக்குவதைப் பயன்பாடு என்று கருதலாம். ‘பொன்னார் மேனியனே’ என்பது தேவாரம். ‘பொன்மேனி’ என்று உவமம் கண்ட தமிழ்க்கவிதை உலகில், ‘பொற்பொடி’ பற்றிய இந்த உவமம் உவமப்பயன்பாட்டில் தனியிடம் பெறுகிறது.

    (தொடரும்…)

    Share