Blog

  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 15

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 15

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண உரைகளில் உவமங்கள்- 1

    முன்னுரை

    ‘இலக்கியத்தில் உவமம்’ என்பது அனைவரும் அறிந்த உண்மை. இலக்கிய உரைகளில் உவமம் என்பதும் அத்தகையதே. இலக்கண விளக்கத்தில் உவமம் என்பது சிலரால் அறியப்பட்ட உண்மை. இலக்கண உரைகளில் உவமம் என்பது அச்சிலருள்ளும் சிலரால் அறியப்பட்ட உண்மையாகும். கணிதத்தையொத்த இலக்கணத்தில் உவமப் பயன்பாடு பற்றிய சிந்தனையோ எதிர்பார்ப்போ அவ்வளவாக எழாது. அதற்கான சூழல் அங்கே இல்லை. ஆனால் தமிழிலக்கண உரைகள் இந்தக் கருத்தியலைப் புறந்தள்ளியிருக்கிறது. கல்வி அறிவு நோக்கியது. அதனால் அறிவு தெளிவு நோக்கியது என்பது பெறப்படும். ‘தெளிவு பெற்ற மதியினாய்’ என்பது பாரதி கருத்து. இந்த அடிப்படையில் யாப்பருங்கலக்காரிகை என்னும் செய்யுளிலக்கண நூலுக்குக் குணசாகரர் எழுதிய உரையில் வரும் ஓர் உவமம் பற்றிய ஆய்வாய் இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    வெண்பாக்களுள் நேரிசை வெண்பா

    பாக்கள் தனி. அவற்றின் கிளைகளான வகைகள் தனி. ஒவ்வொரு பாவாற்றுக்கான கால்வாய்கள் தனி. அவை இனம் என அழைக்கப்படும். சான்றாக வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பது நால்வகைப் பாக்களாகும். மருட்பா பொருட்பற்றிய பிரிவாதலின் யாப்புப் பற்றிய பாகுபாடுடைய முன்னவற்றோடு இயையாது. இணையாது. நான்கென்றலே மரபு. வெண்பாவில் குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா என ஆறு வகைகள் உண்டு. ஆனால் இந்த ஆறுவகைகளும் புறக்கட்டுமானத்தில் கவிஞர் ஏற்படுத்திக் கொள்ளும் சில மாற்றங்களால் உண்டாகும் பெயர் மாற்றங்களே தவிர குறள் வெண்பாவைப்போலத் தனித்தன்மை உடையன அல்ல. அதாவது வெண்பாவின் வகைகள் ஆறாகக் கருதப்படினும் அவ்வளவும் குறள் வெண்பாவின் நீட்டியாகவே கருதப்படும் அளவிற்கே அமைந்துள்ளது. குறள் வெண்பாவின் அடுத்த நிலை நேரிசை வெண்பா. அது பற்றிய விளக்கத்தை அடுத்த பத்தி ஆராய்கிறது.

    இரு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா

    ‘ஈரடி வெண்பா குறள்’ என்பதற்குக் குறள் வெண்பா ஈரடியால் அமையும் என்பது பொருள். அத்தகைய குறள் வெண்பாக்கள் சில மாற்றங்களைப் பெற்று இணைய நான்கடியாய் உருமாற்றம் அடைந்தால் அது நேரிசை வெண்பா எனப்படும். தனித்தன்மையுடைய இரண்டு குறள்வெண்பாக்களே செயற்கையான நேரிசை வெண்பாவை உருவாக்கும் காரணிகளாக அமைகின்றன. காரிகை இலக்கணம் அப்படித்தான் சொல்கிறது. அது மட்டுமன்று வெண்பாக்களை அது அடிகளால்தான் அடையாளப்படுத்துகிறது. வெண்பாக்களினிடையில் படைப்பாளரால் கொண்டுவரப்படும் புறமாற்றங்களும் பெயர் வேற்றுமைக்குக் காரணமாகின்றன. இரண்டடியால் அமைவது குறள் வெண்பா. நான்கடியால் அமைவது நேரிசை வெண்பா. மூன்றடியால் அமைவது சிந்தியல் வெண்பா. பல அடிகளால் அமைவது பஃறொடை வெண்பா. மூன்றடியால் அமைகிற சிந்தியல் வெண்பா தனிச்சொல் பெற்றுவந்தால் அது நேரிசைச் சிந்தியல் வெண்பா. தனிச்சொல்லின்றி மூன்றடியால் வந்தால் அது இன்னிசைச் சிந்தியல் வெண்பா.  எனவே வெண்பாவின வகைகள் என்பன பொருட்பாகுபாட்டைச் சுட்டுவதன்று. வடிவ மாற்றத்தை மட்டுமே அதுவும் பெரும்பாலும் அடிகளால் உண்டாகும் மாற்றத்தையே சுட்டும் என்பது பெறப்படும்.

    பொற்கொல்லரும் பொடியும்

    ‘பொற்றுகள், மண்துகள், பற்பொடி, மிளகாய்த்தூள் என்னும் வழக்குகளைக் கேட்டிருக்கலாம். இவற்றுள் ‘பொற்றுகள்’ என்பது பொன்னின் தூளைப் பொதுவாகக் குறித்தாலும் அணிசெய்யும் பொற்கொல்லரின் இணைப்புத் தொழிலுக்குப் பயன்படும் ஓர் கருவிப் பொருளாகும். ஒரே தரமுடைய இரண்டு பொற்கம்பிகளை இணைக்க வேண்டுமாயின் அதே தரமுடைய கம்பியைக் கொண்டு இணைக்க இயலாது. பொற்கொல்லரின் ஆற்றலுக்குத் தங்கம் உருகாது. அதனால் சற்றுத் தரம் குறைந்த பொன்னைத் தூளாக்கி அதனை அவற்றிடை வைத்து ஊதினால் அது உருகித் தரமுடைய இரண்டு கம்பிகளையும் இணைக்கும். இவ்வாறு ஊதுவதற்குப் ‘பொடிவைத்து ஊதுதல்’ என்று பெயர். ஒரு நகையின் தரம் இத்தகைய பொடியின் அளவுக்குக் கூடவோ குறையவோ செய்யும்.  நுட்பமான வேலைப்பாடுடைய நகைகளைப் பொடிவைத்த நகைகள் என்று அழைக்கிற வழக்கும் உண்டு. இங்கு இது பற்றிய ஆய்வைவிட ஒற்றுமைப்படாத உலோகங்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான பொற்கொல்லரின் செயலும் அதற்கு அவருக்குப் பயன்படும் பொடியுமே கருத்திருத்த வேண்டியது ஆகும்.

    நேரிசை வெண்பா உருவான கதை 

    யாப்பருங்கலக்காரிகைக்கு முன்னும் பின்னும் நேரிசை வெண்பா ஓரலகாகப் படைக்கப்பட்ட வரலாறு உண்மை என்பதைப் பல்வேறு நேரிசை வெண்பாக்களால் அறிந்து கொள்ள இயலும். ஆனால் காரிகைக் காலத்தில் இரண்டு குறள்வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பாவாகத் தோற்றம் பெற்றிருக்கிறது.

    “உன்நலத்தை நாடாதே! ஊர்நலத்தை நாடுகநீ!
    பன்னலமும் வந்தெய்தும் பார்”

    என்பது ஒரு குறள் வெண்பா.

    “தேக்கம் உணர்ந்திடுக! தேயா வளர்பிறையாய்
    ஊக்கம் பெறுவாய் உணர்ந்து”

    என்பது மற்றொரு குறள் வெண்பா. இந்தத் தனித்தனிக் குறள் வெண்பாக்களைக் கவிஞர் சில மாற்றங்களால் ஒரு நேரிசை வெண்பாவாக மாற்றிவிடுகிறார்.

    “உன்நலத்தை நாடாதே! ஊர்நலத்தை நாடுகநீ!
    பன்னலமும் வந்தெய்தும் பார்போற்றும் – இன்றுள்ள
    தேக்கம் உணர்ந்திடுக! தேயா வளர்பிறையாய்
    ஊக்கம் பெறுவாய் உணர்ந்து”

    செய்திருக்கும் மாற்றங்கள்:

    1. முதல் குறட்பாவில் நேரசையில் முடிந்திருக்கும் ஈற்றுச்சீரைத் தளைதட்டாது மூவசைச் சீராக்கியிருக்கிறார்.
    2. முதலடியின் முதற்சீருக்கு ஏற்ப இரண்டாம் அடியின் இறுதியில் அதாவது நான்காவது சீரை ஏழாவது சீருக்கும் எட்டாவது தனிச்சீருக்கும் தளைதட்டாத வகையில் தனிச்சொல்லை அமைத்திருக்கிறார்.

    இந்த மாற்றங்களைத்தான் ‘பாட்டில் ஒட்டுவேலை’ என்கிறோம் நாம். இந்த ஒட்டுவேலையைப் பொற்கொல்லரின் பொடிவைத்து ஊதும் வேலைக்கு ஒப்பிட்டு காரிகைக்கு உரையெழுதுகிறார் குணசாகரர். எப்படி? இப்படி,

    “‘சீரியவான் தனிச் சொல் அடி மூய்’ என்று சிறப்பித்த அதனால் முதற் குறட்பாவினோடு தனிச்சொல் இடைவேறுபட்டு விட்டிசைப்பின் ஒற்றுமைப்படாத உலோகங்களை, ஒற்றுமைப்படப் பற்றாசிட்டு விளக்கினாற்போல முதற் குறட்பாவின் இறுதிக்கண் ஒன்றும், இரண்டும் அசைகூட்டி உச்சரிக்கப்பட்டு இரண்டு விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வருவனவுமுள. அவை ஒருசார் ஆசிடை நேரிசை வெண்பா எனக் கொள்க.”

    குணசாகரரின் இந்த உரையால் நேரிசை வெண்பாவைப் பற்றிய பல உண்மைகள் வெளிப்படுகின்றன. காரிகையில் பயின்றுவரும் அடைச்சொற்களைக் கொண்டு இவற்றை அவர் தருகிறார்.

    1. நேரிசை வெண்பா என்பது தனியான ஓர் அலகன்று.
    2. இரண்டு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா ஆகும்.
    3. முதல் குறள் வெண்பாவில் ஈற்றுப் பகுதியில் செய்யப்படும் மாற்றங்களே நேரிசை வெண்பாவிற்கான வடிவமாற்றமாகக் கருதப்படுகிறது.
    4. இந்த மாற்றத்தினை இரண்டு உலோகங்களை இணைப்பதற்குப் பொடி வைத்து ஊதும் பொற்கொல்லரின் செயலை உவமமாக்கிப் ‘பற்றாசிட்டு விளக்கினாற்போல’’ என விளக்கியிருக்கிறார்.

    நேரிசை வெண்பா –  வடிவப் பயன்பாடு

    ஆராய்ந்து நோக்கினால் இரண்டு குறள் வெண்பாக்களின் இணைப்பே ஒரு நேரிசை வெண்பா என்பது நடப்பியலுக்கு முரணாகவும் படைப்பாளர்தம் சிந்தனை வெளிப்பாட்டுக்குப் பொருந்தாத எதிராகவுமே அமைந்துள்ளதாகத் தெரிகிறது. கவிதை என்பது கருத்தியலின் உணர்ச்சி வெளிப்பாடாதலின் அங்கே வடிவக்கட்டுமானத்தைத் திட்டமிடுவதற்கு நேரமிருக்காது. இருந்தால் அது கவிதையாக பரிணமிக்காது. யாப்பென்னும் கலத்துள் கவிதை நிரம்ப வேண்டும் என்பதுதான் தமிழ் மரபுக் கவிதைகளின் வடிவக் கோட்பாடு. காரிகைக்கு முன்னவையான சிலப்பதிகாரத்திலும் பத்துப்பாட்டிலும் உள்ள நேரிசை வெண்பாக்கள் தனித்தன்மையான ஒரே அலகுகளாகவே அமைந்துள்ளன. காரிகைக்குப்பின் வந்த சோமேசர் முதுமொழி வெண்பா, மணிமேகலை வேண்பா, பாரத வெண்பா, பாரதியின் பல வெண்பாக்கள், வைரமுத்து, கடவூர் மணிமாறன், கரூவூர் கவிஞர் குழந்தை முதலியோர்தம் வெண்பாக்கள் எல்லாம் தனித்தனி அலகுகளாகவே அமைந்திருக்கின்றன. இரண்டு குறள் வெண்பாக்களின் கூட்டணியாக அவை இல்லை. இது வளர்சிந்தனைக்குரிய யாப்பியல் கருத்தாகக் கருதப்படலாம்.

    நிறைவுரை

    எதனையும் உவமம் காட்டி விளக்குவதும் உரைநெறியே என்பதைக் குணசாகரர் உணர்ந்து உரையெழுதியிருக்கிறார். இலக்கண விளக்கங்களுக்காக உவமங்கள் பயன்படுத்தப்படுவது கோட்பாடு எனின், உலகியல் சார்ந்த ஒரு தொழில் நிகழ்வை உவமமாக்குவதைப் பயன்பாடு என்று கருதலாம். ‘பொன்னார் மேனியனே’ என்பது தேவாரம். ‘பொன்மேனி’ என்று உவமம் கண்ட தமிழ்க்கவிதை உலகில், ‘பொற்பொடி’ பற்றிய இந்த உவமம் உவமப்பயன்பாட்டில் தனியிடம் பெறுகிறது.

    (தொடரும்…)

    Share
  • ஸ்ரீ ஞானானந்த கிரி நவரத்தின மாலை

    ஸ்ரீ ஞானானந்த கிரி நவரத்தின மாலை

    அமரர் கோபால் ஐயா இயற்றிய ‘ஸ்ரீ ஞானானந்த கிரி நவரத்தின மாலை’, இதோ கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில். இதைப் பாடிடுவோர், சிவரத்தினமாய் வாழ்ந்திடுவார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(350)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(350)

    கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு
    முகாஅமை வல்லதே யொற்று.

    – திருக்குறள் – 585 (ஒற்றாடல்)

    புதுக் கவிதையில்...

    பிறருக்கு ஐயம்வரா
    வேடத்தில் சென்று,
    ஐயுற்று யாரேனும்
    சினந்து நோக்கையில்
    அதற்கு அஞ்சாமல் நின்று,
    எது செய்து
    எவ்விதம் கேட்டாலும்
    மனதிலுள்ள செய்தியை
    வெளிப்படுத்தாமல் இருக்க
    வல்லவனே
    நல்ல ஒற்றனாவான்…!

    குறும்பாவில்...

    ஐயுறா வேடத்தில் சென்று,
    ஐயுற்று நோக்கில் அஞ்சாமல், அறிந்ததை
    வெளியிடாத வல்லவனே ஒற்றன்…!

    மரபுக் கவிதையில்...

    மற்றவர் யாரும் அறிந்திடாதே
    மாறு வேடம் புனைந்துகொண்டு,
    சற்றும் எவரும் சந்தேகத்தில்
    சண்டை பிடிக்க வருதல்போல்
    உற்று நோக்கினும் எதிர்நோக்கி,
    உண்மையில் கண்டே அறிந்தவற்றைப்
    பற்றிப் பலவிதம் கேட்டாலும்
    பயந்து சொலான்நல் ஒற்றாமே…!

    லிமரைக்கூ..

    மாறு வேடத்தில் மறைந்து,
    ஐயுறுவோர்க் கஞ்சாதே, உண்மையை வெளியிடாதவனே
    உயர்வான் ஒற்றிலே சிறந்து…!

    கிராமிய பாணியில்...

    மத்தவங்களுக்குச்
    சந்தேகம் வராம
    மாறுவேசத்தில போயி,
    யாரும் சந்தேகப்பட்டுப்
    பாத்தாலும்
    பயமில்லாமப் பாத்து,
    எப்புடிப் புடிச்சிக் கேட்டாலும்
    அறிஞ்சத வெளியசொல்லாத
    தெறமசாலியே
    ஒத்து வேலக்கிச்
    சரியான ஆளு..

    அப்புடிப்பட்டவந்தான்
    ராசாவுக்கு ஏத்த ஆளு…!

    Share
  • 12ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    12ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    2021 மே 16ஆம் தேதி, வல்லமை மின்னிதழ், 11 ஆண்டுகளை நிறைவுசெய்து 12ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பதினோர் ஆண்டுகளில் வல்லமை, 17,574 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,788 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் ஆயிரம் ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் நன்கொடையாளர்களையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.

    முக்கியமான தொடர்கள், கட்டுரைகள், படைப்புகள், தொடர்ந்து வெளிவருகின்றன. ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றோம். வாரந்தோறும் வெளியான படக்கவிதைப் போட்டியை 300ஆவது வாரத்துடன் நிறைவுசெய்துள்ளோம்.

    2021 ஜனவரியில் DDoS தாக்குதலால் வல்லமை, சில நாள்கள் முடங்கியது. முன்னர் நடந்தது போல், இது நச்சுநிரல் தாக்குதல் இல்லை. நமது தளத்திற்கு மிக மிக அதிகப்படியான வருகைகளைச் செயற்கையாக உருவாக்கி அதன் மூலம் சர்வரை வேலை செய்யவிடாமல் செய்வதே DDoS தாக்குதல் எனப்படுகிறது. சில நாள்கள், மிக மிக அதிக வருகைகள் இருந்ததால், நமக்கு சர்வர் சேவையை வழங்கும் நிறுவனமே வல்லமைத் தளத்தை முடக்கியது. அவர்களுடன் கலந்தாலோசித்து, இதைச் சரி செய்துள்ளோம். நம் தள மேலாளர் எல்.கார்த்திக், இதைக் கவனித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு வல்லமையின் தள மேலாளர் கட்டணம், தளப்பெயர்ப் புதுப்பிப்புக் கட்டணங்களுக்காக, கவிஞர் வித்யாசாகர் (குவைத்) அவர்களிடம் ரூ.13,000 (பதின்மூன்றாயிரம்) நன்கொடை கோரினோம். அவரும் கனிவுடன் வழங்கி உதவினார். வழங்கிக் கட்டணத்தை முதலிலேயே மூன்றாண்டுகளுக்கு (2019-22 ஆகஸ்டு வரை) கட்டியுள்ளதால், அதுவரை சிக்கல் இல்லை.

    அடுத்த மூன்று மாதங்களில் இந்த ஆண்டுக்கான தள மேலாளர் கட்டணம், தளப்பெயர்ப் புதுப்பிப்புக் கட்டணங்களுக்கு மீண்டும் ரூ.13,000 (பதின்மூன்றாயிரம்) தேவைப்படும். அன்பர்களின் நன்கொடையை வரவேற்கிறோம்.

    வல்லமைக்கு வரும் படைப்புகளை வெளியிடுவதில், முனைவர் சுரேஷ் ரங்கநாதன் பேருதவி புரிந்து வருகிறார். அவருக்கு நனி நன்றி.

    வல்லமையின் ஆசிரியர் குழுவைப் புதுப்பிக்கவும் விரிவுபடுத்தவும் விரும்புகிறோம். பிழை திருத்துவோர், துணை ஆசிரியர்கள், பொறுப்பாசிரியர் ஆகிய பொறுப்புகளுக்குத் தன்னார்வலர்கள் தேவை. இதற்கு ஊதியம் வழங்க இயலாது. சேவையாகக் கருதிச் செய்ய முன்வருவோரை வரவேற்கிறோம். ஆர்வம் உள்ளவர்கள், உங்கள் சுயவிவரக் குறிப்பையும் விண்ணப்பத்தையும் vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

    வல்லமை மின்னிதழை மேம்படுத்த, முயன்று வருகிறோம். உங்கள் வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிருங்கள்.

    Share
  • இனிய பாலா

    இனிய பாலா

    பாஸ்கர்

    இப்போது தான் பாலாவைப் பார்த்துவிட்டு வந்தது போல இருக்கிறது. அன்பால் அவர் நட்பின் கைகளைப் பற்றும் விதம் தனி வகை. இணைப்புப் பாலம் போல விரல்கள் ரீதியாக அவர் கைகளைப் பற்றுவார். அது நெகிழ்ச்சியின் உச்சம். பற்றும் கைகளுக்குத் தான் தெரியும்.

    காவேரி மருத்துவமனையில் அவரைப் பார்த்தபோது மெலிதான குரலில் பாஸ்கரா என்றார். ஆமாம் சார் எனச் சொல்லி அவர் கைகளைப் பிடித்து கொண்டேன். நிறைய எழுதியாச்சு. ஆனாலும் இன்னும் பாக்கி உண்டு என்றார். போதுமே என்றேன். அவர் கேட்கவில்லை. எழுதாமல் இருப்பதும் ஒரு கட்டத்தில் சந்தோஷம் தானே எனச் சொல்ல நினைத்தேன். அதற்குள் மருந்து கொடுக்கச் சிப்பந்தி வர, பேச்சு தடைப்பட்டது. அவரைப் போல யாரும் ஆழ்ந்து பார்க்க முடியாது. நின்றபடி வணங்கினேன், கிட்டத்தட்ட அவரை என் கண்ணுக்குள் போட்டபடி.

    இதோ இன்றோடு அவர் அமரராகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அவர் எங்கே போனார்? என்ன ஆனார்? அவர் குரல், அந்த தீர்க்கமான கண்கள் எங்கே? நிலையாமை ஓர் ஆனந்த வலி. அதை விடவும் முடியாது. பிடிக்கவும் முடியாது. உண்டு, கண்டு, பிணைந்து, புனைந்து எல்லாக் குரூரமும் தாண்டி ஒட்டிக்கொண்டுள்ள மிச்ச அன்பை இப்படிக் கொட்டும்போதே வாழ்வின் பிரமிப்பு தட்டுகிறதே, பொய்மையைத் தொலைத்து உள்மன நிஜ தரிசனம் செய்தால் எவ்வளவு பெரிய பேரின்பம்? அந்த இன்பத்தைத் தான் பாலா தொடச் சொன்னார் .

    திடீர் எனக் கைபேசி அழைப்பு வரும் போது அவர் கேட்கும் முதல் கேள்வி, என்ன ஒய் தூங்குறீரா? என்பது தான் இல்லை எனச் சொன்னாலும் உண்மையில் நான் விழித்துகொள்ளவில்லை என்றுதான் பொருள். உம்மை மறக்க முடியுமா ஸ்வாமி?

    ஏதோ பேச்சுவாக்கில் ஒரு நாள் அவர் கேட்டார். ஒய், எத்தனை வருஷமாய் என்னைத் தெரியும்? – கிட்டத்தட்ட எனக்கு உங்களுடன் சுமார் முப்பத்து அஞ்சு வருடத் தொடர்பு என்றேன். அப்போது கௌரிக்கு சுமார் மூன்று வயது இருக்கும். கெளரியிடம் திரும்பி உங்கள் பழைய வீட்டு போன் நம்பர் தெரியுமா எனக் கேட்டேன். பட்டெனச் சொன்னாள்.

    அடேங்கப்பா என்றார் அவர் பாணியில். அவர் நினைவு வரும்போதெல்லாம் அந்த வார்த்தையைத் தான் நான் மனத்துக்குள் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் .

    Share
  • தொகை இலக்கியங்களில் வானியல் குறிப்புகள் பெறும் இடம்

    தொகை இலக்கியங்களில் வானியல் குறிப்புகள் பெறும் இடம்

    ச. கண்மணி கணேசன் (ஓய்வு),
    முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி

    0.0   முன்னுரை

    0.1   செவ்விலக்கியங்களுள் காலத்தால் முற்பட்டனவாகிய தொகை நூல்களில் வானியல் குறிப்புகள் பெறும் இடம் பற்றிக் காண்பது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

    0.2   வானியல் குறிப்புகளைப் பாடும் சூழல், கையாளும் முறை; அவற்றால் பெறும் பயன் ஆகியவற்றைத் தொகுத்து வகுத்து விளக்கும் போக்கில் இக்கட்டுரை அமைகிறது.

    1.0   இடம்பெறும்  சூழல்

    1.1   மழை பொழிவதற்கு வெள்ளிக்கோளின் நிலைமை காரணம் என்று பண்டைத் தமிழர் எண்ணினர் ஆதலால்; மழை பற்றிப் பேசத் தொடங்கும் போதே வானியல் குறிப்புகளைச் சேர்த்துப் பேசும் போக்கு காணப்படுகிறது.

    “வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி
    பயங்கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப” (பதி.24)

    எனும் பாடலடிகள் வெள்ளிக்கோள் வடதிசையில் சிறிதே சாய்ந்து; பயன் பொருந்திய ஏனை மீன்களுடன் தனக்குரிய நாளிலே நின்றதால் மழை பொழிந்தது என்கிறது. பிற பல பாடல்களிலும் இதே கருத்து இடம் பெற்றுள்ளது (பதி.13, 69).

    வெள்ளிக்கோள் வடதிசையில் சாய்ந்து இராமல் தெற்கே சாய்ந்து காணப்பட்டால் மழை பொய்க்கும் என்ற கொள்கை நிலவியது (புறம்.35, 384, 385; மதுரைக்காஞ்சி- 108; பட்டி.1- 6). சனிக்கோள் சிம்மராசியிலிருந்து புகையினும்; தூமம் என்ற வால்நட்சத்திரம் தோன்றினும் மழை பொழியாது (புறம்.117).

    1.2   கற்பொழுக்கம் பற்றிப் பேசத் தொடங்கினால் வடமீன் என்னும் சாலியைக் குறிப்பிடுகின்றனர். பெண்மைக்குப் பெருமை சேர்ப்பது கற்பு என்றும்; அருந்ததி கற்பிற் சிறந்தவள் என்றும் அழுத்தமான கொள்கை நிலவியமை;

    “வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினள்”

    (கலி.2) என்ற மேற்கோளால் புலனாகிறது. பெண்ணோடு அருந்ததியின் அம்சமாகிய விண்மீனைத் தொடர்புபடுத்திப் பேசும் போக்கு பல பாடல்களில் உள்ளது (புறம்.122; பரி.5; பெரும்பாணாற்றுப்படை-302; ஐங்குறுநூறு 442).

    1.3   கார்த்திகைப் பெண்கள் முருகனைப் பெற்றவர் என்ற கொள்கை காரணமாக முருகனையும் அவனுக்குரிய விழாவையும்  பற்றிப் பேசும்  போதெல்லாம்;

    “குறுமுயல் மறுநிறங் கிளர மதிநிறைந்து
    அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்” (அகம்.141)

    என கார்த்திகை குறித்துப்பேசும் போக்குளது (நற்.202; பரி.9).

    1.4   வானியல் நிகழ்வுகளும் நடப்பு அரசியலும் தொடர்பு

    உடையவை என்ற கொள்கை  நிலவியது. இதனால் அரசியல் நிகழ்வு பற்றிப் பேசும் போது வானியல் செய்தி இடம் பெறுகிறது. யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல்  இரும்பொறை இறந்தபோது; கூடலூர் கிழார் பாடிய பாடல் அரசுக்கு ஆபத்து நேரப்போகிறது எனத் தான் முன்னரே ஐயுற்று இருந்தமையைக் கூறுகிறது. ஐயத்தின் காரணம்;

    “ஆடியல் அழற்குட்டத்து
    ஆரிருள் அரையிரவில்
    முடப்பனையத்து வேர் முதலாக
    கடைக்குளத்துக் கயம் காயப்
    பங்குனி உயர் அழுவத்துத்
    தலை நாள்மீன் நிலை திரிய
    நிலை நாள்மீன் அதனெதிர் ஏர்தரத்
    தொன் நாள்மீன் துறை படியப்
    பாசிச் செல்லாது ஊசி முன்னாது
    அளக்கர்த் திணை விளக்காகக்
    கனையெரி பரப்பிக் காலெதிர்பு பொங்கி”

    (புறம்.229). என விரித்துப் பேசப்படுகிறது. ‘பங்குனி மாதத்து முதல் பாதியுள்; மேஷராசியிலிருந்த கார்த்திகையின் முதல் பாதத்தில் நள்ளிரவில் திருவாதிரை முதல் கேட்டை வரை பதின்மூன்று நாள்மீன்கள் வானில் தெரிந்தன. உச்சத்தில்  இருந்த தலைநாள்மீனாகிய உத்தரம் சாய்ந்தது. அதற்குப்பின் எட்டாவதாக இருந்த மிருகசீரிடம் மேற்கே அஸ்தமித்த போது வடகிழக்கில் ஒரு கொள்ளி வீழ்ந்தது. ஏழாம்  நாள் சேரன் இயற்கை எய்தினான்’ என்பதால் மன்னன் மறைவு வானியலோடு தொடர்புறுவது வெளிப்படை (பெனிட்டா- வானியல் குறித்த தெளிவான பார்வை- ப.42-43 a reservoir of Indian theses @ INFLIBNET).

    1.5   திருமண நிகழ்ச்சிக்குரிய நல்லநேரம் பற்றிய கொள்கை ஈராயிரம் ஆண்டுப்பழமை வாய்ந்தது.

    “அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள்
    சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்
    கடிநகர் புனைந்து கடவுள் பேணி” (அகம்.- 136)

    முழவு முழங்க; முரசு ஒலிக்க ஏற்பாடு செய்தனர். திங்கள் ரோகிணியுடன் கூடிய நாள் திருமணத்திற்கு உகந்ததென்ற கொள்கை நிலவியது. கணவன் மனைவி கூடி நடத்தும் இன்பவாழ்விற்கு உரிய வானியல் நிலவரமாக அது கருதப்பட்டதால் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது (நெடு.- அடி.- 161- 163& பட்டி.- அடி- 35)

    2.0   எடுத்தாளும் முறை

    2.1 “வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்ப” (புறம்.- 385) என்பது போல் விண்மீனின் பெயர்க் குறிப்பு மட்டும் இடம்பெறுவது உண்டு.

    2.2   முழுமையான ராசிச் சக்கரத்தை விளக்குவதும் உண்டு. சைய மலையில் மழை பொழிந்த கோள்நிலை பற்றிய விளக்கத்தைக் கூறுகிறது பரி.11. அதற்கேற்ற வானியல் நிலை என்ன என்று விவரிக்கும் போது முழு ராசிச்சக்கரம் விளக்கமுறுகிறது. அத்தோடு வானியலின் அடிப்படைக் கொள்கைகளும் இடம்பெறுகின்றன.

    ராசிமண்டிலத்தில் மூன்று வீதிகள்; அவற்றுள் பன்னிரண்டு வீடுகள்; அவை நான்கு நான்காகப் பிரிந்து ஒன்பதொன்பது நாள்மீன்களைத் தம்முள் கொண்டவை; ஆக மொத்தம் இருபத்தேழு நாள்மீன்கள் என்ற விளக்கம்;

    “…கீழிருந்து
    தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று
    இருக்கையுள்” (மேற்.)

    என்ற அடியில் ரத்தினச் சுருக்கமாக இடம் பெற்றுள்ளது.

    குறிப்பிட்ட பாடலில் இடம்பெறும் ராசிகளைச் சேர்ந்த கோள்கள் பற்றிய விபரம்:

    வெள்ளி                     இடபத்தில்
    செவ்வாய்                மேஷத்தில்
    புதன்                          மிதுனத்தில்
    சூரியன்                     சிம்மத்தில்
    குரு                              மீனத்தில்

    திங்களும், சனியும், ராகுவும்    மகரத்தில்

    கேது                          கடகத்தில்

    சூரியன் சிம்மத்தில் செல்வதை நேரடியாகக் கூறவில்லை. விடியலில் கார்த்திகை உச்சம் பெற்று இருந்தது என்பதால் அக்கருத்தைப் பெற்றோம். அதுபோல் ஆவணி மாதத்து மதி நிறைநாள் என்றதால் அவிட்டம் என்பது பெற்றோம். திங்கள் ராகுவுடன் மகத்தில் செல்வதால் அதற்கு ஏழாம்  இடமான கடகத்தில் கேது செல்கிறதென்பதும் கூறாமலே தெரிகிறது. ஆக ஆவணிமாதத்து அவிட்டநாளில் திங்களை ராகு தீண்டுகின்ற சந்திர கிரகணம்; பெருமழை பொழிந்து வையை வெள்ளம் பெருக்கெடுத்தது (பெனிட்டா- மேற்.ப.26).        .

    3.0   பெறும் பயன்

         வானியல் உவமைகள் கவிச்சுவை கூட்டுகின்றன.

    3.1 பெரும்பாணாற்றுப்படை சித்தரிக்கும் ஊரெல்லையில் ஒரு காட்சி; மகளிர் நீர்த்துறையில் விட்டுப்போன பொலங்  குழையைச் சிச்சிலிப் பறவை இரை என்று எடுத்து வேள்வித்  தூணில் தங்கியது. அக்குழை  வானத்தில் வைகறையில் தோன்றும் வெள்ளிமீன் போல ஒளி வீசியது.

    “புனலாடு மகளிர் இட்ட பொலங்குழை…
    வைகுறு மீனின் பைபயத் தோன்றும்” (அ.312-318)
    வைகுறு மீன் என்பது வெள்ளியைக் குறிக்கும். இதே போல்
    தோற்ற அடிப்படையிலமைந்த பல உள (நற். 128, கலி.15, 104)

    3.2 வையை ஆறு வற்றினாலும் எட்டாம் நாள் நிலவின் அளவு சுருங்குமே அன்றி; அமாவாசை நிலவு முற்றிலும் தோன்றாதது போல முழுதும் வற்றுவது இல்லை.

    “எண்மதி நிறை உவா இருண்மதி போல
    நாள் குறைபடுதல் காணுநர் யாரே” (பரி.11 அ.37-38)

    என்பது வினை அடிப்படையில் தோன்றிய உவமை ஆகும்.

    3.3 வானத்தில் கார்த்திகை மீன் தோன்றுவது போல வெண்மையாக மலர்ந்த முசுட்டை பற்றி அமையும் வண்ணப்புல உருக்காட்சியை;

    “அகலிரு விசும்பின் ஆஅல் போல
    வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை” (மலை. அ.100-101) என்ற பாடலடிகளில் காண்க.

    3.4 தலைவி ஒருத்தி தன் பின்னலில் ஈரிதழ் கொண்ட அரளிப்பூவைச் சூடியிருக்கிறாள்; கரும்பாம்போடு முரண்பட்டுத் தோன்றும் மணியை ஒத்த அப்பூக்கள் கார்த்திகை மீனின் அழகை ஒத்துக் காணப்பட்டன.

    “அரவுக்கண் அணியுறழ் ஆரல்மீன் தகைப்ப” (கலி.64)

    என்னும் உவமையில் இடம்பெறுவது வண்ண முரணழகு. இதுபோல் உருஅடிப்படையில்  அமைந்த உவமைகள் இன்னும் உள (நற்.231).

    3.5 “நாள்மீன் வாய்சூழ்ந்த மதிபோல்” (கலி.104)

    ஆயம் தலைவியைச் சூழ்ந்து இருந்தது என்பது பயன் அடிப்படையாக அமையும் உவமையாகும்.

    3.6 மன்னனின் அரண்மனையில் புதுமையாகச் செய்த  நிலையும் கைப்பிடியுடன் கூடிய கதவும் ‘உத்தரக் கற்கவி’ என்றழைக்கப்பட்டது. அதைப் புனைந்துரைக்கும் நக்கீரர்;

    “நாளொடு பெயரிய கோளமை விழுமரத்து”

    (நெடு.82) என்கிறார். உத்தரம் எனும் நாள்மீனின் பெயரைச் சொல்லாமல் சொல்லும் திறன் கவிதைக்கு அழகூட்டுகிறது.

    முடிவுரை

    வானியல் பற்றிய புனைந்துரைகளும் உவமைகளும் தொகைநூற் பாடல்களின் இனிமையைக்  கூட்டுகின்றன. பாடல்களில் விண்மீனின் பெயர்க்குறிப்பு மட்டும் இடம்பெறுவதும் உண்டு; முழுமையான ராசிச்சக்கரத்தை  விளக்குவதும் உண்டு. மழை பொழிய வெள்ளிக்கோளின் நிலைமை காரணம் என்று பண்டைத் தமிழர் எண்ணினர் ஆதலால்; மழை பற்றிப் பேசும் போதெல்லாம் வானியல் குறிப்புகளைச் சேர்த்துப் பேசியுள்ளனர். பெண்மைக்குப் பெருமை சேர்ப்பது கற்பு என்றும்; அருந்ததி கற்பிற் சிறந்தவள் என்றும் அழுத்தமான கொள்கை நிலவியதால் பெண்ணைப் பற்றிப் பேசத் தொடங்கும் போதெல்லாம்; அருந்ததியின் அம்சமாகிய வடமீனைத் தொடர்புபடுத்திப் பேசுகின்றனர். முருகனையும் அவனுக்குரிய விழாவையும் பேசும்போதெல்லாம்; கார்த்திகை மீனைக் குறித்துப்பேசும் போக்குளது. வானியலும் அரசியலும் தொடர்புடையவை என்ற கொள்கை நிலவியதால்; அரசியல் நிகழ்வு பற்றிப் பேசும்போதும் வானியல்செய்தி இடம்பெறுகிறது. மண வினைக்குரிய நல்லநேரம் பற்றிய கொள்கை ஈராயிரம் ஆண்டுப் பழமையானது. திங்கள் ரோகிணியுடன் கூடிய நாள் திருமணத்திற்கு உகந்ததென்ற கொள்கை நிலவியது.

    துணைநூற்பட்டியல்

    1. சங்க இலக்கியம்- 1&2ம் பகுதி- S.வையாபுரிப் பிள்ளை(ப.ஆ.)- 2ம் பதிப்பு- 1974
    2. பெனிட்டா- Ph.D.- Final.pdf a reservoir of Indian theses @ INFLIBNET

    சுருக்கக் குறியீட்டு விளக்கம்

    அகம். – அகநானூறு;            கலி. – கலித்தொகை
    நற். – நற்றிணை;                   நெடு. – நெடுநல்வாடை
    பட்டி.- பட்டினப்பாலை;     பதி. – பதிற்றுப்பத்து
    பரி. – பரிபாடல்;                     மலை. – மலைபடுகடாம்

    Share
  • பழகத் தெரிய வேணும் – 67

    பழகத் தெரிய வேணும் – 67

    நிர்மலா ராகவன்

    சிறுபிள்ளைத்தனம் எதுவரை?

    சிறு குழந்தைகளின் கண்களைப் பாருங்கள்.  கள்ளம் கபடமே காணப்படாது.

    கதை

    என் சக ஆசிரியை மேரி, “நேற்று என் மகள் தன் விளையாட்டுக் காரை என் தலையில் எறிந்துவிட்டாள். தலைவலி பிளக்கிறது!” என்று முனகினாள்.

    உடனே, “அவளை அடித்தாயா?” என்றொரு கண்டிப்பான குரல் ஒலித்தது.

    “அவளுக்கு ஒரு வயதுதான்!” என்றாள் மேரி. `இந்த வயதில் அடித்துத் திருத்துவதா!’ என்பதுபோல் ஆயாசத்துடன் ஒலித்தது அவள் குரல்.

    “அதனால் என்ன!” என்றாள் மிஸஸ் லோ (Loh), பிடிவாதமாக. தவறு செய்தது எந்த வயதினராக இருந்தாலும், உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டும் என்பது அவள் போன்றவர்களுடைய நம்பிக்கை.

    ஒருவருக்குத் தான் செய்யும் காரியத்தின் விளைவு நன்மையா, தீமையா என்று புரியாத நிலையை அப்பாவித்தனம் (innocence) என்கிறோம். இது குழந்தைகளின் இயற்கையான தன்மை.

    இரண்டு வயதான குழந்தை கைதவறி தான் குடிக்க வைத்திருந்த பாலைக் கொட்டிவிட்டு அழும்.

    `போனால் போகட்டும்,’ என்று சமாதானப்படுத்தினால், அடுத்த முறை வேண்டுமென்றே தம்ளரைக் கவிழ்த்துவிட்டு, `போனால் போகட்டும்,’ என்று நமக்கே புத்தி சொல்லும்!

    “இன்னொரு தடவை இப்படிச் செய்தால் அடி!’ என்று மிரட்டுவோம்.

    தாய் சொல்வதை உடனே கேட்டுவிட்டால், எப்படி!

    செய்த தவற்றையே மீண்டும் செய்யும்.

    அப்போது தண்டிக்க வேண்டியதுதான். முதுகில் ஒரு தட்டு.

    இன்னொரு முறை அதே தவறு நிகழாது.

    இவ்வாறு, `கூடாது’ என்று தாய் கூறும் ஒவ்வொன்றையும் செய்துபார்த்துத்தான் தன் எல்லை எதுவரை என்று புரிந்துகொள்கிறார்கள் குழந்தைகள்.

    அனுபவமின்மை

    வளர்ந்தபின்னரும் சிலர் குழந்தைத்தனமாக இருப்பார்கள். யார் எது சொன்னாலும் நம்பி, ஏமாந்துவிடுவார்கள். போதிய அனுபவம் இல்லாததால் வரும் விளைவு இது. சிலவற்றைப் பற்றி படித்திருந்தாலும், நடைமுறைக்கு உதவாது.

    கதை

    எனக்கு எட்டு வயதாக இருந்தபோது, என்னைவிட சற்றே மூத்தவளான ஒன்றுவிட்ட அக்காள் வேற்றூரிலிருந்து வந்திருந்தாள். அவள் இருந்த இடத்தில் கடல் கிடையாது.

    மெரீனா கடற்கரைப் பார்த்து, “எவ்வளவு தண்ணீர்!” என்று அவள் பிரமிக்க, “தித்திப்பா, ஜோரா இருக்கும். குடிச்சுப் பாரேன்!” என்று ஊக்கினேன்.

    உடன் இருந்தவர்கள் சிரிப்பை அடக்கிக்கொண்டார்கள்.

    அவள் நம்புவாள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

    தன் இரண்டு கைகளாலும் அள்ளிக் குடித்தவள், `தூ, தூ!’ என்று துப்பியது எங்கள் இருவர் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்ச்சி.

    என்றென்றும் அப்பாவித்தனமா?

    குழந்தைகளுக்கு எதிர்காலத்தைப் பற்றிய பிரக்ஞை இருக்காது. கடந்த காலத்தை அவர்கள் அதிகம் நினைத்துப் பார்ப்பதும் கிடையாது.

    `எதிர்காலத்தில் என்ன நடக்குமோ!’ என்ற கவலைக்குள்ளாகும்போதுதான் ஒருவர் தன் அப்பாவித்தனத்தை இழந்துவிடுகிறார்.

    குழந்தைகளை அந்தந்த வயதுக்கேற்ப நடத்தாமல், `இன்னும் குழந்தையாவே இருக்கா!’ என்று பருவ வயதிலும் ஒரு பெண்ணைக் கொஞ்சி வளர்ப்பது பெற்றோருக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம்.

    ஆனால், வயதுக்கேற்ற அறிவு முதிர்ச்சியோ, அனுபவமோ அவர்களிடம் இருக்காது. பிறருக்கு இது சாதகமாக முடிந்துவிடும்.

    கதை

    பத்து குழந்தைகளில் கடைசியான மாலதி, குடும்பத்தில் அனைவருக்கும் செல்லமாக வளர்ந்தாள்.

    `நான் எப்பவுமே குழந்தைதான்!’ என்று மகிழ்ச்சியும் பெருமையும் பொங்க கூறிக்கொள்வாள். அளவுக்கு அதிகமான அன்பைக் குடும்பத்தினர் பொழிந்ததால், உலகில் எல்லாருமே அப்படித்தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வளர்ந்தாள்.

    தாய்மாமன், `குழந்தை!’ என்று அருமையாக அவளைக் குறிப்பிட்டு, முறை தவறி நடத்தியபோது, அதையும் `கொஞ்சல்’ என்றே எடுத்துக்கொண்டாள்.

    சற்று பெரியவளானதும், தான் இழந்தது என்னவென்று புரிய, மாலதிக்குத் தன்மேலேயே ஆத்திரம் ஏற்பட்டது. ஒரே இடத்தில் படுத்து, சுவற்றையே வெறிச்சிடுவாள். பிறகு, தன் மன நிலையை மாற்றிக்கொள்ள முயற்சிப்பவளாக, நிறைய வீட்டுவேலை செய்வாள்.

    `பைத்தியம்’ என்று முடிவுகட்டினார்கள். எங்கே தவறு நிகழ்ந்தது என்று யாருக்கும் புரியவில்லை.

    வாழ்வில் தீயவை, துன்பம் ஆகியவற்றைச் சந்திக்கும்போது, அப்பாவித்தனம் பறிபோய்விடும். அது சிலருக்கு மன அழுத்தத்தில் கொண்டுவிடும்.

    `பைத்தியம் தெளிய ஒரே வழி கல்யாணம்தான்!’ என்று யாரோ சொல்ல, கல்யாணம் செய்துவைத்தார்கள்.

    சிறிது காலம் மகிழ்ச்சியாக இருந்தவளிடம் அவ்வப்போது. குற்ற உணர்ச்சி தலைதூக்கும். கலக்கத்தை அடியோடு ஒழிக்க முடியாவிட்டாலும், சிறு விஷயங்களுக்காகக் குழம்பாது, மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருந்தால், ஓரளவு நிம்மதி கிடைக்கிறது என்று புரிந்துகொண்டாள்.

    தான் பெற்ற குழந்தைகளாலும் சற்றுத் தெளிவு ஏற்பட்டது.

    `தான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம்!’ என்று தன்மேலும், தன்னை அப்படி வளர்த்துவிட்ட குடும்பத்தினர்மீதும் கொண்ட ஆத்திரம் சிறிது சிறிதாகக் குறைந்தது.

    அருமை மகள் என்றும் சிரித்தபடி, மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் குழந்தையாகவே அவளை நடத்தியது வினையாக முடிந்தது என்று புரிந்துகொண்டாள்.

    “பெரியவர்கள் கதை. நீ இதையெல்லாம் படிக்கக்கூடாது,” என்று தாய் தடுத்திருந்தது ஏனென்று மாலதிக்குச் சிறுவயதில் புரியவில்லை.

    சிறுவர்களுக்கான கதைகளில் அவர்களை மிரளவைக்கும்படியான, அல்லது வயதுக்கு மீறிய காட்சிகள் இருக்காது. அப்படி இருந்தால், காரணமில்லாமல் மகிழ்ந்து சிரிக்கும் அப்பாவித்தனமான குணத்தை இழந்துவிடுவார்கள்.

    (தற்காலத்தில், தொலைகாட்சி, இணையம் இரண்டுமே குழந்தைகள் குழந்தைகளாகவே வளர முடியாது செய்கின்றன).

    பிறர் வீட்டிலோ, தொழிற்சாலைகளிலோ வேலைபார்க்க நேரிடும் சிறுவர்கள் இளம் வயதிலேயே முதிர்ச்சி அடைந்துவிடுகிறார்கள். பலருடன் பழக வேண்டிய நிலை.

    `யாரையும் நம்ப முடியாது. எல்லாருமே சுயநலவாதிகள்தாம்!’ என்று தோன்றிப்போகிறது அவர்களுக்கு. அதனால் மகிழ்ச்சி குன்றிவிடும். கற்பனைத்திறனோ – கேட்கவே வேண்டாம்!

    பள்ளிக்கூடத்திலும் சிலருக்கு இந்த நிலைதான். குடும்பத்தினர் ஆதரவாக இருந்தால், நொந்துபோய்விட மாட்டார்கள்.

    அப்பாவித்தனத்தைப் பறிகொடுத்தவரின் கதை

    திருமணமானதும், தன்னைவிட அழகில் சிறந்தவளான மனைவியைப் பெற்றுவிட்டோமே என்று அகமகிழ்ந்தான் அப்பாவியான வேலப்பன்.

    மனைவி ஒரு முறை அவனுக்குத் துரோகம் இழைத்தபோது உண்டான அதிர்ச்சியில், அவளை எப்படிப் பழி வாங்குவது என்று யோசிக்க ஆரம்பித்தான். (விவாகரத்து அவமானகரமானது என்று எண்ணிய காலம் அது. அத்துடன், தன்னிடம் ஏதோ குறைபாடு இருக்கிறது என்று ஒத்துக்கொள்வதுபோல் ஆகிவிடுமே!).

    மனைவியைப்போல் இல்லாது, ஆண்-பெண் உறவைப் பற்றி அறிந்திராத பதின்ம வயதுப் பெண்களின் சகவாசத்தை நாடினான்.

    `எப்படி, குழந்தையாகவே இருக்கிறாய்!’ என்று அவன் அடிக்கடி பாராட்டியது அவர்களுக்குப் புரியவில்லை. பெருமைதான் ஏற்பட்டது.

    அவனுடைய சாகசப் பேச்சில் மயங்கி, அப்பாவிப் பெண்கள் பலர் அவன் விரித்த வலையில் வீழ்ந்தார்கள்.

    இழந்த பலத்தைப் பெற்றுவிட்டதுபோல் பெருமிதம் உண்டாக, வேலப்பனுடைய காம லீலை வியாதியாகவே தொடர்ந்தது.

    வயது முதிர்ந்த காலத்தில், யாருமே அவனைச் சந்திக்க விரும்பவில்லை. உறவினர் வீட்டுக்குப் போனாலும், எவரும் முகம்கொடுத்துப் பேசவில்லை.

    வருத்தம் ஏற்பட்டாலும், அவனுக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படவில்லை.

    குற்ற உணர்ச்சி

    யோசியாமல் ஏதாவது தவறு செய்துவிட்டு, அதையே எண்ணி குற்ற உணர்ச்சியோடு போராடுகிறவர்களும் இருக்கிறார்கள்.

    கதை

    எனக்குத் தெரிந்த ஒருவர், “என்னை வைத்து ஒரு கதை எழுதுங்களேன்!” என்று கேட்க, “சரி. உங்கள் மனைவியிடம் நீங்கள் சொல்ல முடியாத ஒன்றைப் பற்றிக் கூறுங்கள்,” என்றேன்.

    கோபத்துடன், “அதையெல்லாம் உங்களிடம் சொல்வேன் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?” என்று இரைந்தார்.

    “உங்களைப் பற்றி எழுதச் சொன்னீர்கள். ஆனால் எனக்கு அதிகம் தெரியாதே! அதுதான்,” என்றேன், சமாதானமாக.

    மிகவும் தயங்கியபடி, தான் மனைவிக்குச் துரோகம் செய்துவிட்டதாகக் கூறினார் – ஒரே வரியில்.

    நான் முகம் மாறாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.

    தவறிழைத்துவிட்டு, குற்ற உணர்ச்சியால் தன்னையே வருத்திக்கொள்கிறவர்கள் நம்பகமான ஒருவருடன் அதைப் பகிர்ந்துகொண்டால் அப்போது கிடைக்கும் புரிந்துணர்வு இழந்த நிம்மதியை மீட்டுக் கொடுக்கும்.

    உலகில் எல்லாருமே தீயவர்கள் இல்லை, சிலரை நம்பலாம் என்ற உண்மை புரியும்.

    Share
  • எனக்குக் கிடைத்த முதல் வேலை

    எனக்குக் கிடைத்த முதல் வேலை

    பாஸ்கர் சேஷாத்ரி

    அது வருஷம் எண்பத்து நாலு. ஏதோ படித்துவிட்டு இலக்கியம், கூட்டம் என்று சுற்றிக் கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டில் உள்ள பெரிய மனிதரிடம் என்னைக் கூட்டிச் சென்றார் அந்த அம்மையார்.

    அவர் பெயர் கோபால்சுவாமி. பெரிய வரித்துறை நிபுணர். வாசலில் எப்போதும் அவரைக் காண ஒரு கூட்டம் இருக்கும். எனக்கான ஆறுதல், அவரது பக்கத்து வீட்டில் நான் குடியிருந்தது தான்.

    உன் அப்ளிகேஷன் எங்கே? எனக் கேட்டார்.

    இதோ

    தட்டெழுத்தில் அடித்த ஒரு விண்ணப்பம் அது.

    சொன்ன வேலையைச் செய்வியா?

    செய்வேன் சார்.

    நான் சொன்னேன் எனச் சொல்லு என ஒரு ஒரு விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். அவங்களைப் போய்ப் பார் எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

    இரண்டு நாளில் பார்த்துவிட்டு, சம்பளம் பேசி (மாசம் இருநூற்று எழுபத்து ஐந்து ரூபாய்), பணியில் சேர்ந்துவிட்டேன்.

    முதல் நாளில் சேர்ந்தவுடன் கணக்காளர்,  “உனக்கு இங்கே சேர் எல்லாம் கிடையாது. தோ, அங்கே போய் உக்கார் என்றார். அவர் மணி அய்யர்.

    ஒரு மணி நேரத்தில் கூப்பிட்டு, கையில் பிளாஸ்க் ஒன்றைக் கொடுத்துவிட்டு, சுப்ரபாத்தில் காப்பி வாங்கிக்கொண்டு வா. இந்தா சைக்கிள் சாவி என்றார்.

    அந்த வயதில் வலிக்காமல் வலித்த வலி. சந்தோஷமாக வாங்கி வந்தேன்.

    டம்ப்ளரில் எல்லோருக்கும் கொடுத்துவிட்டு நீயும் எடுத்துக்கோ என்றார்.

    அலுவலகத்தில் குடித்த முதல் காப்பி, நின்றுகொண்டுதான்.

    அவர்கள் சொன்னதை எல்லாம் செய்தேன்.

    பொது மேலாளர் ஒரு நாள் கூப்பிட்டு, நீ விற்பனைப் பிரிவில் சேர்ந்துகொள் எனச் சொன்னார்.

    ஒரு நாளில் அதிகாரி போல ஆனேன். சுமார் ஏழு வருடங்கள் அங்கு உழைத்த உழைப்பு, இன்னொரு நிறுவனத்திற்கு இட்டுச் சென்றது.

    அதற்கு அடித்தளம் அமைத்த அந்தப் பெண்மணி, என் தாயார்.  இன்று அந்த நிறுவனம், காசாளர், மேலதிகாரி யாரும் இல்லை. ஆனால், என் நினைவில் நிறைந்து நிற்கின்றார்கள்.

    Share
  • மெல்போர்ன் பூங்காவில் ஒரு மென்னடை

    மெல்போர்ன் பூங்காவில் ஒரு மென்னடை

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மாநகரில் அமைந்துள்ள கர்ட்டன் ஸ்கொயர் பூங்காவில் காலார ஒரு நடை போய்வரலாம் வாருங்கள்.

    படப்பதிவு – பாகேஸ்வரி

    Curtain Square is a green space parkland in city of Melbourne. It is usual sight to see children play and young adults sitting and roaming around the park. It occupies 1.46 hectares and was established for recreational space in 1876. Earlier, between 1853 a 1866, this park was used as a quarry worked by convicts . This park is situated near Carlton Street, which is famous for its wide range of Italian restaurants. The park is also closer to Melbourne University.

    Video by Bageswari

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மே 12 – புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாள் – தாதியர் தினம்

    மே 12 – புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாள் – தாதியர் தினம்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    பொறுமையென்னும் நகையணிந்துபுன்னகை என்னும் நன்னகை அணிந்துஅன்பாய்அரவணைப்பாய், ஆறுதலாய்பக்குவமாய் ஆத்மார்த்தமாய், தொழிலென்று எண்ணாமல் தூய பணியினை ஆற்றுகின்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஆற்றும் பணி தாதியர்‘ பணி. அது ஒரு தொழில்  இல்லை, உன்னத சேவை. 

    மே எட்டாம் நாள் உதவிக்கரம் கொடுக்கும் உன்னத நாளாய் (செஞ்சிலுவை சங்க நிறுவனர் நாள்) அமைந்தது. மே பன்னிரண்டாம் நாள், அரவணைத்து ஆறுதல் நல்கும் “தாதியர் தினமாய்” மலர்கிறது. மே ஒன்று உழைக்கும் கைகளின் ஒற்றுமையினை வெளிப்படுத்தும் நாளாய் ஒளிர்ந்தது. மே மாதம் என்றாலே சமூதாயச் சிந்தனை நிறைந்த மாதமாக அமைகிறது என்பதைக் கருத்திருத்துவது நன்றெனக் கருதுகிறேன்.

    தாதியர் சேவை தரமற்ற சேவை. தாதியர் சேவை வறியவர்க்கும் எளியவர்க்கும் உரிய சேவை . தாதியர் சேவை என்றாலே அருவருப்பு நிறைந்த அசிங்கமான சேவை என்றெல்லாம் பல கருத்துகள் இருந்த காலக்கட்டத்தில் – தாதியர் சேவையினைத் தனது வாழ்வின் குறிக்கோளாய் ஒருவர் தேர்ந்தெடுத்தார். அவர்தான் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த, இத்தாலியில் பிறந்த “புளோரன்ஸ் நைட்டிங்கேல்” அதாவது “கைவிளக்கேந்திய காரிகை”.

    மே மாதம் பன்னிரண்டாம் திகதி, ஆயிரத்து எண்ணூற்று இருபதில் இப்பெருமாட்டி – சேவை செய்ய வேண்டும் என்னும் இறைவனின் விருப்பினால் இம்மண்ணுலகில் கால் பதிக்கின்றார். நல்ல நோக்கத்தைக் கருவில் சுமந்து அவர் மண்ணில் கால் பதித்த தினமே ” உலக தாதியர் தினமாய் ” கெளரவமாய் கொண்டாடிப் போற்றப்பட்டு வருகிறது என்பதை யாவரும் மனத்தில் இருத்தல் வேண்டும்.

    செல்வமிக்க குடும்பத்தில் பிறந்தாலும் – செல்வத்தில் சிக்கித் தவிக்க விருப்பமின்றி வேதனைப்படுவோர் பக்கமே சென்று அவர்களுக்குப் பணி செய்யும் மகத்தான “தாதியர் பணியினை” மனத்தில் பதித்து அதன் வழியில் பயணப்படத் தொடங்கினார். தேர்ந்தெடுத்த பணி பல சிரமங்கள் நிறைந்த பணி. இவரின் ஆசையினை, பெற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஆனாலும் “இறைவன் தனக்கு இப்படித்தான் நட என்று  விதித்தார்” என அவர் உணர்வு உணர்த்திய நிலையில் அவர் தாதியர் சேவையினைத் தலையாய சேவையாய் ஏற்று, தன்னால் இயன்ற வரை பணியாற்றி நின்றார்.

    பெண்கள் நிலையில் இவரின் இந்தச் சிந்தனையும் செயற்பாடும் புரட்சி மிக்கது எனலாம். யாருக்கும் அஞ்சாது துணிவுடன் தாதியராய் பெண்கள் களத்தில் இறங்கிட “விளக்கேந்திய சீமாட்டியாய்” இவரே முதலில் வந்து நிற்கிறார். இதுதான் இவரை இன்றும் நினைப்பதற்கும் கொண்டாடிப் போற்றி மகிழ்வதற்கும் காரணமாய் இருக்கிறது என்பது வெள்ளிடை மலையாகும்.

    இவர் கண்ணால் பார்த்த காட்சிகள்இவர் மனத்தில் பதிந்த சம்பவங்கள் யாவும் இவரைப் பல வகைகளில் சிந்திக்கச் செய்தன. அந்தச் சிந்தனைகளினால் இவரின் தாதியர் சேவை உயர்ந்து விளங்கியது. ரஷ்சியப் பேரரசுபிரான்ஸ்ஐக்கிய ராஜ்ஜியம்ஒட்டோமன் ஆகிய பேரரசுகளுக்கு இடையே 1854 தொடக்கம் 1856 ஆம் ஆண்டு வரை “கிரிமியன் போர்” நடைபெற்றது. இப்போரினால் தாக்கமுற்று, சரியான கவனிப்பார் அற்ற நிலையில் இருந்த படைவீரர்களுக்குத் தாமாகவே முன்வந்து – தாம் பயிற்றுவித்த முப்பத்து எட்டுத் தாதியருடன் தம் சிறிய தாயாரையும் இணைத்துக் களத்தில் சென்று துணிவுடன் தன்னுடைய பணியினை ஆற்றினார். இப்பணியினால் “விளக்கேந்திய சீமாட்டி”யின் புகழ் பிரகாசிக்கத் தொடங்கியது. கிரிமியன் போர், இவரின் வாழ்க்கைப் பாதையில் ஒரு முக்கிய நிலை.

    வறியவர்கள்தான் தாதியர் ஆக வேண்டும். தாதியர்கள் சமையல் ஆட்களாகவும் வேலை செய்ய வேண்டும் என்னும் கருத்தையெல்லாம் இவர் உடைத்தெறிந்தார். வறியவர்களிடத்து இவர் மிகவும் கருணை காட்டினார். அவர்களின் நலனில் பெரிதும் அக்கறையும் செலுத்தினார். வறியவர் வாழ்வினுக்கு வலக்கரமாயும் விளங்கினார். இலண்டன் மாநகரில் இயங்கிய ஆதரவற்றோர் விடுதியில் இவர் கேள்வியுற்ற சம்பவம்,  இவருக்குப் பல சிந்தனைகளைத் தோற்றுவித்தது. வறியவர் ஒருவர் இறந்துவிடுகிறார். இதனால் அங்கு பெருஞ்சிக்கலே உருவாகி விடுகிறது. இந்த நிலையில் இவ்வம்மையாரின் கவனம் அங்கு செல்கிறது. மருத்துவ வசதி சிறப்பாய் அமையாமையே காரணம் என்பதை உணர்ந்த அவர் – ஆதரவற்றவருக்கு உரிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் – வறியவருக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    தாதியர்கள் அலட்சியமாய்பொறுப்பற்று இருப்பதை அவர் வெறுத்தார். மருத்துவர்களுக்கு வலது கையாகவும்நோயாளர்களுக்கு அன்பானவர்களாகவும்பல கோணங்களில் உதவும் நிலையில் தாதியர்கள் இருக்க வேண்டும். பொறுமையும் சகிப்புத்தன்மையுமே இச்சேவையில் ஈடுபடுவோருக்கு மிக மிக அவசியமாய் இருக்க வேண்டும் என்றும் அவர் கருதினார். அதன் அடிப்படையிலே தான் அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்திருந்தன.

    நோய்கள் பரவுவதற்குக் காரணம் சூழல் தூய்மை இன்மையே என்று அவர் கருதினார். மருத்துவமனைகள்அங்கிருக்கும் மருத்துவக் கருவிகள் அனைத்தும் சுத்தமாய் இருக்கவேண்டும் என்பது இவரின் கட்டாயமான நிலையாக இருந்தது. அதன் வழியில் இவரின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.

    புளோரன்ஸ் அம்மையார் அவர்கள் சிறந்த எழுத்தாளராகவும் புள்ளிவிபரவியல்  ஆளுமை உடையவராகவும் விளங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் கிராமப்புறச் சுகாதாரம் பற்றியும் சிந்தித்திருந்தார் என்பது கருத்திருத்த வேண்டிய விஷயம். தாதியர் சேவை என்பது இனம் கடந்துமொழி கடந்துநிறம் கடந்துசாதியம் தவிர்த்துமதம் கடந்துதராதரம் கடந்து மனித நேயத்தை மட்டுமே முக்கியத்துவப்படுத்தி நிற்பது என்பதை இது   உணர்த்துகிறது, இல்லையா!

    மருத்துவ வசதிகளுக்கும் சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புகள் “, “தாதியர் பற்றிய குறிப்புகள்” என்னும் நூல் அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச் சிறந்த நூலாய்க் கருதப்பட்டது. “உடல்நலத்தைப் பாதிக்கும் விடயங்கள்” , பிரித்தானிய இராணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும் செயல்திறனும்” என்பவை இவரால் எழுதப்பட்ட நூல்களில் குறிப்பிடத்தக்க நூல்கள் எனலாம்.

    இவரால் எழுதப்பட்ட “தாதியற் குறிப்புகள்” என்னும் புத்தகம் தாதியர் பயிற்சிக் கூடங்களின் பாடத்திட்டத்தில் முக்கிய பகுதியாய் இடம் பெற்றிருக்கிறது. அதுமாத்திரமன்றி தாதியியலுக்கான நல்ல ஒரு அறிமுக நூலாகவும் இது விளங்குகிறது. மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரின் கருத்துகள் முன்னோடியாய் இருக்கின்றன.

    தாதியருக்கென்று முதன்முதலாகப் பயிற்சிப் பாடசாலையினைத் தோற்றுவித்த பெருமையும் இவருக்கே உரியது. இவரின் சேவையினைப் பாராட்டிக் கெளரவிக்கும் வகையில் நடந்த கூட்டத்தில் தாதியர் பயிற்சிக்காக “புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம்”  நிறுவப்பட்டது. இந்த நிதியத்துக்குக் கிடைத்த நிதியினைக் கொண்டு ” நைட்டிங்கேல் பயிற்சிப் பாடசாலை “, 1860 ஜூலை  ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.

    விக்டோரியா அரசியினால் இவருக்கு “அரச செஞ்சிலுவைச் சங்க விருது” 1883 இல் வழங்கப்பட்டது. “ஓர்டர் ஒவ் மெரிட்” விருதினை 1907 இல் பெற்றுக்கொண்டார். இவ்விருதினைப் பெற்ற முதல் பெண் மணியாயும் இவரே விளங்குகின்றார். விக்டோரியா மகாராணியாருக்கு அடுத்த நிலையில் பேசப்படும் பெண்ணாக “புளோரன்ஸ் நைட்டிங்கேல்” சமூகத்தில் உயர்ந்த நிலையில் கவனிக்கப்பட்டார்.

    நவீன தாதியியல் முறையினை உருவாக்கியவர் என்னும் பெருமையினை புளோரன்ஸ் அம்மையார் பெறுகிறார். இலண்டனில் வெஸ்மினிஸ்டர் அபேயில் இருக்கின்ற தாதியர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அங்குள்ள மாளிகையில் உள்ள விளக்குகள் ஏற்றப்பட்டு – வருகை தருகின்ற தாதியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு அங்கிருக்கும் உயர்வான பீடத்தில் வைக்கப்படும். இவ்வாறு செய்வதன் அர்த்தம் “ஒரு தாதியிடமிருந்து மற்ற தாதியருக்கு தமது அறிவினைப் பரிமாறுவதாகக் கருதும் குறுயீடு” எனலாம். இந்த நாள், கைவிளக்கேந்திய காரிகை, விளக்கேந்திய சீமாட்டி என அழைக்கப்படும்  “புளோரன்ஸ் நைட்டிங்கேல்” அம்மையார் பிறந்த மே பன்னிரண்டாம் நாளே. 

    Share
  • பேரளவு மீள்புதிப்புச் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள்

    பேரளவு மீள்புதிப்புச் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    Renewable Solar Power Energy in Vietnam

    https://en.wikipedia.org/wiki/Renewable_energy_in_Vietnam

    https://en.wikipedia.org/wiki/Renewable_energy_in_Vietnam

    Solar Rooftop Plates in Vietnam 2021

    Here’s how a renewables-led pathway outperforms Vietnam’s current energy plan

    • Cheaper. Vietnam would save 10 percent in overall power costs through 2030.
    • Cleaner. A renewables-led pathway would yield 1.1 gigatons fewer greenhouse gas emissions and 0.6 megatons fewer particulate emissions through 2030. It would also significantly lower sulphur-dioxide and nitrogen-oxide emissions. In the current power plan, the significant increase in emissions would have a serious impact on Vietnam’s air quality, which is already among the worst in Southeast Asia.
    • Fuel security. With a renewables-led plan, Vietnam would rely on 28 percent less total fuel and 60 percent fewer imports than in the current plan—reducing the country’s dependency on fuel imports and fossil fuels, more broadly.
    • Job creation. Renewable investment will create an additional 465,000 jobs through 2030, approximately twice as many jobs for the same level of investment as in the current plan.

    Vietnam’s solar success story and why its solar M&A landscape is about to heat up

    Credit: Trungnam Group. 450 MW Trung Nam Thuan Nam Solar Plant, in Vietnam’s southeastern province of Ninh Thuan. [2021]

    https://www.mckinsey.com/business-functions/sustainability/our-insights/sustainability-blog/vietnams-renewable-energy-future?cid=soc-web#

    Vietnam’s Renewables-Led Pathway meets electricity demand differently.

    Solar radiation in Vietnam[33]RegionAverage number of sunshine hoursSolar radiation intensity

    Solar radiation in Vietnam[33]RegionAverage number of sunshine hoursSolar radiation intensity

    RE TYPE TECHNOLOGY PRICE TYPE ELECTRICITY PRICE
    Small hydroelectricy Power generation Avoided cost is published annually 598-663 VND/kWh (by time, region, season)302-320 VND/kWh (excess electricity compared to the contract)2158 VND/kW (capacity price)
    Wind power Power generation FIT price 20 years 8.5 US¢/kWh (on shore) and 9.8 US¢/kWh (off shore)
    Solar power Power generation FIT price 20 years 9.35 US¢/kWh, before 30/6/2019 for projects that achieve COD – commercial operation date. New FIT has been proposed and discussed
    Biomass energy CogenerationPower generation Avoided cost is published annually 5.8 US¢/kWh (for cogeneration)7.5551 US¢/kWh (North)7.3458 US¢/kWh (Central)7.4846 US¢/kWh (South)
    Waste to energy Direct burningBurning of gases from landfills FIT price 20 yearsFIT price 20 years 10.5 US¢/kWh7.28 US¢/kWh
    REGION AVERAGE NUMBER OF SUNSHINE HOURS SOLAR RADIATION INTENSITY(KWH/M2/DAY) EVALUATE
    Northeast 1,600 – 1,750 3.3 – 4.1 Medium
    Northwest 1,750 – 1,800 4.1 – 4.9 Medium
    North Central 1,700 – 2,000 4.6 – 5.2 Good
    Central Highlands and South Central 2,000 – 2,600 4.9 – 5.7 Very good
    Southern 2,200 – 2,500 4.3 – 4.9 Very good
    Average country 1,700 – 2,500 4.6 Good

    According to the prime minister’s 2016 energy plan, solar power was expected to reach 850 MW (0.5%) by 2020, about 4,000 MW (1.6%) in 2025 and about 12,000 MW (3.3%) by 2030.[9]

    Vietnam Maps & Facts - World Atlas

    அங்கிங்கு எனாதபடி எங்கும் சூரியக் கனல் மின்சக்தி பேரளவில் விருத்தி அடைகிறது

    RE TYPE TECHNOLOGY PRICE TYPE ELECTRICITY PRICE
    Small hydroelectricy Power generation Avoided cost is published annually 598-663 VND/kWh (by time, region, season)302-320 VND/kWh (excess electricity compared to the contract)2158 VND/kW (capacity price)
    Wind power Power generation FIT price 20 years 8.5 US¢/kWh (on shore) and 9.8 US¢/kWh (off shore)
    Solar power Power generation FIT price 20 years 9.35 US¢/kWh, before 30/6/2019 for projects that achieve COD – commercial operation date. New FIT has been proposed and discussed
    Biomass energy CogenerationPower generation Avoided cost is published annually 5.8 US¢/kWh (for cogeneration)7.5551 US¢/kWh (North)7.3458 US¢/kWh (Central)7.4846 US¢/kWh (South)
    Waste to energy Direct burningBurning of gases from landfills FIT price 20 yearsFIT price 20 years 10.5 US¢/kWh7.28 US¢/kWh

    பூமத்திய ரேகைக்கு அருகியுள்ள தெற்காசிய நாடுகள், இந்தியா, சைனா, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் 2020 ஆண்டுகளில் சூரியக் கனல் மீள்புதிப்பு எரிசக்தியைப் [ Renewable Energy] பேரளவு விருத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளன. சிறப்பாக வியட்நாம் நாடு, குறைந்த செலவில் பேரளவு மெகாவாட் சூரியக் கனல் மின்சக்தி நிலையங்களைக் கட்டுமானம் செய்து வருகிறது. தற்போது வியட்நாம் நாட்டில் 5000 மெகாவாட் பி.வி. சூரிய எரிசக்தித் திட்டங்கள் [P.V. Photovoltaic Projects] கட்டுமான நிலையில் உள்ளன. மேலும் அடுத்த 20 ஆண்டுகளில் 123.8 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி, வியட்நாம் தேசிய மின்வடத்தில் [National Grid] 98 புதிய நிலையங் களை நிறுவி, மொத்தம் 59,444 மெகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்யப் போகிறது. அவற்றுள் 48 நிலையங்கள் 33,245 மெகாவாட் திறமுள்ளவை 39.6 பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும். அந்தப் பெருநிதியை அளிக்க உலக வங்கி [World Bank] முன்வந்துள்ளது. 2020 ஆண்டுகளில் முதல் முன்னோடி 500 மெகா வாட் நிலைய வயல் பூங்கா சூரியக்கனல் மாடல் [Ground – Mounted Solar Parks ] கட்டுமானம் ஆகும். இப்பணி வியட்நாம் நாட்டில் சுமார் 25,000 புதிய கட்டுமான வேலை வாய்ப்புகளை 2030 ஆண்டுவரை உண்டாக்க உதவும். நிலையக் கட்டுமானச் செலவு : US $ 93.5 / MWH [2019 நாணய மதிப்பு] . சராசரி சூரிய ஒளிக்கதிர்ப் பயன்பாடு [Sun-Shine hours] : 1500 -1700 [hours per year]

    https://en.wikipedia.org/wiki/List_of_power_stations_in_Vietnam#Solar_power_plants

    SunSource said the deal will help it expand it solar portfolio to more than 550MWp by 2023. Image: SunSource Energy.

    SHV Energy, a Netherlands-based liquified petroleum gas (LPG) distributor, has acquired a majority stake in Indian solar developer SunSource Energy.

    India is aiming for 280GW of installed solar by 2030. Image: ReNew Power.

    Solar manufacturers that plan on setting up integrated, higher capacity plants in India will be given preference in the country’s new production-linked incentive (PLI) programme.

    The Ministry of New and Renewable Energy (MNRE) yesterday (Thursday 29 April 2021) released guidelines for the scheme, which forms part of government efforts to reduce the country’s reliance on foreign solar imports by supporting domestic manufacturers.

    Some INR45 billion (US$603 million) will be allocated over five years to back the domestic development of high-efficiency PV modules, with preference given to manufacturers that plan on setting up fully integrated solar PV manufacturing plants using silicon-based technology, fully integrated thin-film technology or “any other technology”. MNRE said technologies that result in better module performance will be incentivised.

    Applicant manufacturers will have to set up a plant with a minimum capacity of 1GW, while the maximum capacity that can be awarded to one recipient is 50% of their bid capacity or 2GW, whichever is less. PLIs will be given on the production and sales of high-efficiency modules by the selected units.

    Modules produced by the PLI beneficiaries must have a minimum efficiency of 19.5% with temperature coefficient of Pmax better than -0.30%/°C, or an efficiency of 20% with temperature coefficient of Pmax equal to or better than -0.4%/°C.

    அசூரச் சூரியச் சக்தி உற்பத்தி நிறுவகம் இந்திய மாநில எரிசக்தி வாரியத்துக்கு 2000 மெகாவாட் சூரியக்கனல் மின்சக்தி நிலையங்கள் அமைக்கத் திட்டம்.

    2019 டிசம்பர் 16  ஆம் தேதி இந்தியாவில் சூரியக்கனல் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவகம் [Azure Solar Power Company] 2000 MW சூரியக்கனல் மின்சக்தி நிலையங்களை இந்தியாவின் பல இடங்களில் கட்டப் போவதான திட்டங்களை அறிவித்துள்ளது.  25 வருடங்கள் நீடிக்கும் ஒரு 500 MW நிலையம் யூனிட் 4.1 அமெரிக்க சென்ட் [2.92 INR] விலைக்கு ஒரு KWh விற்பனை செய்யத் தகுதி பெறும்.  அந்த சூரியக்கனல் மின்சார நிலையங்கள் 2022 இல் இயங்கத் துவங்கும் என்றும் 2025 ஆண்டுக்குள் முழுத்திறன் பெறும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

    Freedom Solar signs contract for major solar power installation at Lost Pines Toyota in Bastrop

    New material points toward highly efficient solar cells

    A new type of material for next-generation solar cells eliminates the need to use lead, which has been a major roadblock for this technology.

    Trina Solar Company achieves new efficiency record

    JinkoSolar Supplies 300MW of High-Efficiency Tiger Modules for China Ultra-High Voltage Demonstration Plant

    Analytical results and method for organic solar cell after 100 h light irradiation

    Energy Materials Corporation to help scale-up production of perovskite solar PV panels

    Silver improves the efficiency of monograin layer solar cells

    World’s Largest Lithium Ion Battery Banks

    மிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.

    2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார்.  2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும்  மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார்.  2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது  100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார்.  அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.

    Image result for Lithium Ion ResearchImage result for Solar Power Fuel Cell

    இப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும்.  அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது.  மீள்சுழற்சி  கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை.  2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும்.  நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும்.  மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.

    Image result for Lithium Ion Technology

    Image result for Solar Power Fuel Cell

    மின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது.  2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன.  அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது.  2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய்  ஏறிவிடும்  என்று ஊகிக்கப் படுகிறது.

    மின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும்.  எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது.  லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட  20% கனல்சக்தி  திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு.  நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும்.  2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for large size 100 mw batteryImage result for Solar Power Fuel Cell

    மின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன.  சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது.  மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.

    Image result for Solar Power Fuel CellSolar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    ++++++++++++++++++

    Image result for Lithium Ion Research

    தகவல்:

    Picture Credits : Swiss Solar Impulse Design & Other Web Sites

    1.  BBC News : Solar-powered Plane Lands Safely After 26 Hour Flight (July 8, 2010)
    2.  Swiss Solar Plane Makes History with Round-the-clock (Manned) Flight (July 8, 2010)
    3.  Aerospace – Solar Impulse Plane Packed with Technology (July 8, 2010)
    4.  BBC News – Science & Environment – Zephyr Solar Plane Set for Record Endurance Flight By: Jonathan Amos (July 14, 2010)
    5.  Wikipedia – Electric Aircraft – electric aircraft is an aircraft that runs on electric motors rather than internal combustion engines with electricity  coming from fuel cells, solar cells, ultracapacitors, power beaming and/or batteries.
    6. http://www.bbc.com/news/world-australia-40527784  [July 7, 2017]
    7. http://www.onenewspage.com/video/20170707/8359018/Tesla-to-Build-World-Biggest-Battery-in.htm
    8.  http://solarpv.tv/index.php/2016/08/10/solarstorage-in-india-seci-publishes-tender-for-100-mw-grid-connected-solar-pv-projects-along-with-large-scale-battery-energy-storage-system-at-kadapa-solar-park-andhra-pradesh/ [August 10, 2016]
    9.  http://www.cnbc.com/2017/07/07/tesla-largest-battery-system-in-the-world-elon-musk-says.html [July 7, 2017]
    10.http://www.solardaily.com/reports/Silver_improves_the_efficiency_of_monograin_layer_solar_cells_999.html
    11.http://www.solardaily.com/reports/Energy_Materials_Corporation_to_help_scale_up_production_of_perovskite_solar_PV_panels_999.html
    12.http://www.solardaily.com/reports/Daylight_damage_saving_time_999.html
    13.http://www.solardaily.com/reports/Clear_conductive_coating_could_protect_advanced_solar_cells_touch_screens_999.html
    14.http://www.solardaily.com/reports/Trina_Solar_achieves_new_efficiency_record_999.html
    15.http://www.solardaily.com/reports/JinkoSolar_Supplies_300MW_of_High_Efficiency_Tiger_Modules_for_China_Ultra_High_Voltage_Demonstration_Plant_999.html
    16.http://www.solardaily.com/reports/New_material_points_toward_highly_efficient_solar_cells_999.html
    17.olardaily.com/reports/Freedom_Solar_signs_contract_for_major_solar_power_installation_at_Lost_Pines_Toyota_in_Bastrop_999.html

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 128 (அந்நின்ற)

    சேக்கிழார் பாடல் நயம் – 128 (அந்நின்ற)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார்?
    முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான்;
    இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள
    மின் நின்ற செஞ் சடையார் தாமே வெளி நின்றார்.

    வரலாறு

    போர் புரியும் இடத்தில்  தமக்கு நேரே நின்ற அதிசூரனைத்   தன்  முன்னே தானுண்ணும்  புலால் உணவைக்  கண்ட  சிங்கம் போல ஏனாதி நாதர் நின்றார். அவரை இப்புராணத்தில்  சேக்கிழார் புலி என்று குறிப்பின் சிங்கம் என்றதன்  நயம் உணரவேண்டும்.  அவர் முன் தன்  முகத்தைக்  கேடகத்தால் மறைத்துக்   கொண்டு கைவாளுடன்  அதிசூரன் போர்செய்ய முயன்றான். அவன் முன்னே தாள்  பெயர்த்து  நெருங்கினார் ஏனாதி நாதர். அப்போது அதிசூரனும் நகர்ந்தான். அப்போது அதிசூரன் நெற்றியில் வெண்மையான திருநீற்றை நாயனார் கண்டார்.உடனே  அதிசூரனைச் சிவனடியார் என்றே கருதினார் ஏனாதி நாதர். ‘’இவர் கருத்தின் வண்ணமே நான் நடந்து கொள்வேன்’’ என்று அதிசூரனின் கைவாளை  நீக்காமல் படையேந்தாத சிவனடியாரைக் கொல்லும் அபவாதம் ஏற்படாத படி இணங்கிநின்றார்!

    பொருள்

    அப்படிப்  போரிடுவது போல் நின்ற ஏனாதி நாதர்  திருவுள்ளத்தை இறைவனே அறிவார்; மற்றவர்  அறியார். அப்போதே  அதிசூரன் வஞ்சித்துக் கொல்லும்  தன்  கருத்தை நிறைவேற்றினான். அவர் நின்ற தன்மையை அறிந்த மின்னுகின்ற  சிவந்த சடையை உடைய சிவபெருமான், அவருக்கு அருள் புரிந்து சிவபதம் வழங்க  வந்தார்!

    விளக்கம்

    ஏனாதி நாதர்  திருவுள்ளம் திருநீற்றைப்  பெரிதும் போற்றியதாகும். சிவசின்னமாகிய விபூதியை மெய்யன்போடு தரிப்பவர் சிவபதம் அடைவர். அது

    “கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
    மங்காமற் பூசி மகிழ்வாரே யாமாகின்
    தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
    சிங்காரமான சிவனடி சேர்வரே”

    என்னும் திருமந்திரத்தால் உணர்க. இவ்விபூதியிலே மிகுந்த பத்தியுடையோர் இவ்விபூதியைத் தரித்த அடியார்களைக் காணின், அவர்களுக்கும் சிவனுக்கும் பேதம் நோக்காமல் அவர்களை வழிபடுவர்.

    இத்தகைய  திருநீற்றின்மேல் மிக்க பற்றுக் கொண்ட ஏனாதிநாதர் , தம் முயற்சியால் பெற்ற  அனைத்தையும்  நீறு பூசிய அடியாருக்கே கொடுத்தார். அவ்வகையில்  அதிசூரனைக்  கொல்லும்  ஆற்றல்  இருந்தும்  திருநீறு பூசிய அவன் கரத்தால் கொல்லும்படி, பெருந்தன்மை  காட்டினார்!  காக்க  வேண்டிய  தம்முடம்பைக்   காவாது  நிற்றல்,  சிவத்தொண்டு புரிவதற்கே  யாகும்!

    பொய்யாகச் சிவவேடம்  புனைந்த  அதிசூரனை அவ்வேடமுங்  காவாதது இயல்பே!   இவர் காத்த  உடம்பை   சிவத் தொண்டுக்காகவே   இழந்த  செயலால்  இவருயிர்    இறைவனடிக்  கீழ் இன்புற்றது என்பது  இப்பாடலின் கருத்து என்பார்  ஆறுமுகநாவலர்!

    நயம்

    முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான்  என்ற  தொடரில் அங்கே   நின்ற  சிவாபராதியாகிய அதிசூரன்,  ஏனாதி நாதராகிய சிவனடியாரைக்  கொன்றான் என்று கூற உள்ளம் கூசியமையால்,  அதனைக் கூறாமல்   கருணையே உருவான சேக்கிழார் பெருந்தகை, ‘’தன்  கருத்தே  முற்றுவித்தான்’’  என்று கூறினார்!

    இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள
    மின் நின்ற செஞ் சடையார் தாமே வெளி நின்றார்.

    என்ற  பகுதி,   சிவபெருமானும் அதைத் தாங்கிகொள்ளாமல் விரைந்து, உடனே ஓடோடி வந்து வெளிப்பட்டார்  என்ற அவர்தம்  கருணைத்  திறத்தைக் காட்டுகிறது! அடியார் சொல்லக்   கூசினார்; இறைவன் கூசாமல்  சென்றார்! என்ற நயம்  எண்ணி  நெகிழத்  தக்கது!

    Share
  • என் அம்மா சத்தியபாமா – ஓவியர் ஸ்யாம் உருக்கமான உரையாடல் – 14

    என் அம்மா சத்தியபாமா – ஓவியர் ஸ்யாம் உருக்கமான உரையாடல் – 14

    அன்னையர் தினத்து அன்று ஓவியர் ஸ்யாம் அவர்களுடன் அவர் அம்மாவைப் பற்றி உரையாடினோம். ஸ்யாம், தம் அம்மாவைப் பற்றிய நினைவுகளையும் அவரைக் காப்பாற்ற நிகழ்த்திய போராட்டங்களையும் நம்முடன் உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். உடல்நலம் பெற ஜெபிக்க வந்த கிறித்தவர்களால், அவர் அம்மா கிறித்தவராக மாறியது, ஞானஸ்நானம் செய்துகொண்டது, தம் நகைகளை எல்லாம் கழற்றி உண்டியலில் இட்டது, கர்த்தர் காப்பாற்றுவார் என்று மருத்துவத்தை மறுத்தது… எனப் பலவும் நம்மை அதிர வைக்கக்கூடியவை. மனத்தை உலுக்கக்கூடிய இந்தச் சம்பவங்களை ஸ்யாம் சொல்லக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆஸ்திரேலியக் கிளி ரெயின்போ லாரிகீட்

    ஆஸ்திரேலியக் கிளி ரெயின்போ லாரிகீட்

    ஆஸ்திரேலியக் கிளியான ரெயின்போ லாரிகீட், வானவில்லைப் போல் வண்ணங்களைக் கொண்டது. கண்ணைக் கவரும் இந்த வானவில் கிளி, மரத்தில் தலைகீழாக நின்றபடி, தன் அலகால் இரையைக் கொத்தி உண்ணும் அழகிய காட்சி இதோ.

    படப்பதிவு – பாகேஸ்வரி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 14

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 14

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    நன்னூலில் உவமங்கள் – 3

    முன்னுரை

    நல்லாசிரியர, அல்லாசிரியர் முதலியோருக்கு இருக்க வேண்டிய பண்புகளை நேரடியாகக் கூறிக் கூடுதல் சிறப்பியல்புகளை உவம அளவையால் எடுத்துரைத்த பவணந்தியார் மாணாக்கரை அவ்வாறு தகுதி நோக்கிப் பிரித்தாரல்லர். காரணம் கற்பித்தலுக்குத் தகுதி தேவை. கேட்பதற்கு அது தேவையில்லை. எல்லாரும் ஆசிரியர் ஆகிவிட இயலாது. ஆயின் அனைவரும் மாணவர் ஆகலாம். கற்பித்தல் பணியின் அருமையை உணர்ந்து கல்வியை உள்வாங்கிச் செரிக்கும் அளவில் மாணவர்களின் இயல்பு நிலை வரையறுக்கப்படுகிறது. இயல்பால் மாணாக்கர் முதல், இடை, கடை என மூவகைப்படுவர். பொதுவாக மாணவர்தம் சிறப்பியல்புகளைத் தொகுத்துக் கூறி முதல், இடை, கடை மாணாக்கார்தம் இயல்புகளை உவம அளவையால் எடுத்துரைக்கிறார்.

    கற்பித்தலும் கற்றலும்

    ‘கற்பித்தல்’ ஈதல் என்றால் ‘கற்றல்’ ‘கொள்வது’ அல்லவா? எப்படிக் கற்பிக்க வேண்டும் என்பதனை,

    “ஈதல் இயல்பே இயம்பும் காலை
    காலமும் இடனும் வாலிதின் நோக்கி
    சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி
    உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து
    வரையான், வெகுளான், விரும்பி, முகமலர்ந்து
    கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொளக்
    கோட்டமில் மனத்தில் நூல் கொடுத்தல் என்ப”

    என்னும் நூற்பாவில் நிரல்படுத்தியிருக்கிறார். இந்த நிரலில் ‘நோக்கி, வாழ்த்தி, அமைத்து, மலர்ந்து, அறிந்து’ என்னும் வினையெச்சங்கள் எச்சங்களாக நில்லாமல் ஆசிரியரின் பண்புகளாக விளங்குகின்றன என்பதைக் கருத்திருத்துதல் வேண்டும். இனி, எப்படிக் கொள்ளுதல் வேண்டும் என்பதையும் நன்னூல் தெளிவாக கூறுகிறது. ஆசிரியன் இருப்பிடம் தேடிக் காலத்தோடு செல்லவேண்டும். அவரை வழிபடலில் தயக்கம் கூடாது. (‘பிற்றைநிலை முனியாது’ என்றதும் அது.) சினங்கொள்ளுதல் கூடாது. ஆசிரியரது பண்போடு உறவாடுதல் வேண்டும். அன்னாருடைய குறிப்பறிதல் வேண்டும். ‘இரு’ என்றால் இருக்கவும் ‘சொல்’ என்றால் சொல்லவுமான ஆணைக்குக் கட்டுப்படும் அடக்கம் இருத்தல் வேண்டும். ‘கோடையில் நீர் தேடும் தாகமுற்றவனின் மனநிலையைப் பெறுதல் வேண்டும். செவி வாயாக வேண்டும். அக்கேள்விச் செல்வத்தைக் கொள்ளும் இடமாக மனமும் இருத்தல் வேண்டும்.  ‘மனநிறைவாகக் கொடுத்திருக்கிறோம்’ என நிறைவடைந்த ஆசிரியன் அனுமதித்த பிறகே இல்லம் திரும்புதல் வேண்டும். இந்தக் கருத்துக்களைத் தொகுத்துக் கூறும் பவணந்தியார் பாடம் கேட்கும் புறச்சூழலில் மாணவனின் நிலையைச்,

    “சித்திரப்பாவையின் அத்தகவு அடங்கி”

    என்னும் உவமத்தால் விளக்குகிறார் பவணந்தியார். சித்திரம் போல் இருத்தல் வேண்டும் என்னும் சிந்தனை அகநானூற்றில் வரும் சித்திரத்தலைவியை நினைவுபடுத்துவதாக அமைகிறது. தலைவன் பிரிவால் தான் பட இருக்கும் துன்பத்தைக் கருதாது, தலைவன் செல்லும் வழியருமை எண்ணி மருகும் தலைவி சித்திரம் போல் நின்றாள் என்பதை,

    “முன்னம் காட்டி, முகத்தில் உரையா
    ஓவச்செய்தியின் ஒன்று நினைத்து ஒற்றி”

    என்னும் வரிகள் உணர்த்தும். பாடம் கேட்கும் மாணவர்கள் சித்திரத்தைப் போல அமைதிகாக்க வேண்டும் என்பது கருத்து. உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத் தன்மைக்குச் சித்திரநிலை உவமமாவது தமிழ் மரபு. ‘மெய்திருப்பதம் மேவு என்ற போதிலும் இத்திரு துறந்து ஏகு என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை’ என இராமன் முகப்பொலிவைக் கம்பர் வண்ணனை செய்வார். இந்த உவமத்திலிருந்து பாடம் கேட்கும் நிலையில் மாணவனுக்கு இருக்க வேண்டிய ஒரே பண்பு அமைதி என்பது பெறப்படும்.

    அன்னப் பறவையும் அசைபோடும் பசுவும்

    தலை, இடை, கடை என மாணாக்கர்களைப் பிரித்த பவணந்தியார் தலை மாணாக்கருக்கு அன்னப்பறவையையும் பசுவையும் உவமமாக்கியிருக்கிறார். மானுடத்தின் வாழ்நாள் மிகக்குறைவானதாகையால் அக்குறிப்பிட்ட காலத்திற்குள் கற்க வேண்டியனவற்றையே கற்றல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் நாலடியார்,

    “கல்வி கரையில கற்பவர் நாள்சில
    மெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதின்
    ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
    பாலுண் குருகின் தெரிந்து”

    என உவமத்தால் விளக்கும். கருத்தளவிலும் மாணவர் இயல்பாகவும் பவணந்தியார் இதனை வலியுறுத்துகிறார். அடுத்து சூழ்நிலைக்கேற்ப இரையெடுக்கும் பசு, பிறகு அமைதியாகப் படுத்து உண்டவற்றை மீண்டும் வாய்க்குக் கொணர்ந்து அசைபோடும். பயனுள்ளவற்றைப் பிரித்துக் கற்கும்  மாணவன் அவற்றின் முழுப்பயன் அடைய மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து சிந்திக்க வேண்டும். தற்காலத்திலும் பயனுள்ளவற்றைக் கற்கவேண்டும் என்பதும் கற்றவற்றைப் பற்றிய சிந்தனை தொடர வேண்டும் என்பதும் ஒரு கல்விக் கொள்கையாக இருந்துவருகிறது என்பதை அறிதல் வேண்டும். பயனுள்ளவற்றைப் பகுத்தறியும் அன்னத்தையும் உண்ட இரையை நன்கு செரித்துக் கொள்வதற்காக அசைபோடும் ஆவையும் தலைமாணாக்கர்க்கு உவமமாக்கினார் பவணந்தியார்.

    நிலமும் கிளியும்

    ‘நிலத்திற்குரிமையாளன் நாளும் தன்னுடைய நிலத்திற்குச் சென்று அதனை நலம் விசாரிக்காவிடின், அந்நிலம் இல்லாளைப்போல ஊடிவிடும்” என்பது திருக்குறள் கருத்து. ‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்திச் சோம்பலில்லாம ஏர்நடத்தி, கம்மா கரைய ஒசத்திக்கட்டி கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி, சம்பாப் பயிரைப் பறிச்சி நட்டு, தகுந்த முறையில் தண்ணீர் விட்டு”  வளர்த்தால்தான் நிலம் பயன் தரும் என்பதை விளக்கிக் காட்டுவார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவ்விரு கருத்துக்களால் நிலத்தைப் பாதுகாத்து முறைப்படிப் பயிர் செய்துவரும் உழவனுக்கே அதன் பலன் கிட்டும் என்பது பெறப்படும். ஆசிரியனையும் அவனுடைய காரியமாகிய நூலையும் நாளும் ஓதி ஓதி சிந்தித்து உழைத்து மெய்ப்பொருள் காணும் இயல்புடைய மாணவனுக்கே கற்றலின் பயன் முழுமையாகக் கிட்டும். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்பர். கிளிக்குத் தானாகப் பேச வராது. ஆசிரியன் செய்கின்ற முயற்சியின் அடிப்படையில் தன்னறிவைப் பெருக்காது அவர் சொல்வதை மட்டுமே உள்வாங்கிக் கொள்பவன் கிளியையொப்பான். இவ்வாறு உழைத்தாலன்றிப் பயன்பெற இயலாத நிலத்தையும் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையையும்  இடை மாணாக்கர்க்கு உவமமாக்கினார் பவணந்தியார்.

    கடைமாணாக்கரும் நான்கு உவமங்களும்

    தலைமாணாக்கர்க்கும் இடைமாணாக்கர்க்கும் இரண்டிரண்டு உவமங்களைக் காட்டிய பவணந்தியார் கடை மாணாக்கார்க்கு நான்கு உவமப்பண்புகளை ஏற்றியுரைக்கிறார். ‘இல்லிக்குடம்’ என்பதற்குப் பலரும் ‘ஓட்டைக்குடம்’ என்று பொருள் சொல்வர். ‘ஒழுகும் விரைவு’ கருத்தானால் அவ்வுரை நேரியதே. ‘பசுமட்கலம்’ என்றும் கருதமுடியும். அது தன்னுள் வாங்குகிற நீரை வைத்துக் கொள்ள இயலாது புறத்தே கசியவிடும்.  மாணாக்கருள் சிலர் ஆசிரியர் கூறும் கருத்துக்களை உள்வாங்கிப் பொதிந்து வைக்க இயலாமல் புறத்தே விட்டுவிடுவர். தொடர்ந்து, மேய்கின்ற ஆட்டினை உவமமாக்குகிறார். ஆடு தன் வயிறு நிரம்பும் அளவிற்கு மேயாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயுமேயன்றி எதனையும் உருப்படியாக மேய்ந்து பசியாற்றிக் கொள்ளத் தெரியாது. மேலெழுந்தவாரியாகக் சிலவற்றைக் கற்கும் இடை மாணாக்கர் இத்தகையவர். கல்வி குழப்பத்திலிருந்து தெளிவு நோக்கியது. தெளிவிலிருந்து குழப்பத்தை நோக்கியது அன்று, எருமை தெளிவான நீரைக் கலங்கலாக்கும். மாணவர்களிலும் சிலர் அவ்வாறு இருப்பர். இறுதியாக மெய்ப்பொருள் கொண்டு பொய்ப்பொருள் தள்ளிவிடுவதே அறிவின் நோக்கம். மாறாக அல்லனவற்றைக் கொண்டு நல்லனவற்றைத் தள்ளிவிடும் மாணாக்கரும் உளர். அவர்க்கு உவமமாகச் சொல்லப்பட்டதுதான் நெய்யரி (பன்னாடை போன்றது).

    “அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
    இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி
    அன்னர் தலையிடைகடை மாணாக்கர்”

    என்னும் நூற்பாவில் தலை, இடை, கடை மாணாக்கர்க்கான பண்புகளை உவமங்கள் வாயிலாகவும் விளக்கிக் காட்டியிருக்கிறார் பவணந்தியடிகள்.

    நிறைவுரை

    நல்லாசிரியர்களின் பண்புகள் சுட்டப்படுகின்றன. கூடுதல் பண்புகள் உவமங்களாலும் அடையாளப்படுத்தப்படுகின்றன. அல்லாசிரியர்களின் பண்புகள் சுட்டப்படுகின்றன. கூடுதலாக உவமங்களாலும் அடையாளப்படுத்தப்படுகின்றன. மாணவர்களை அவ்வாறு பாகுபடுத்தாத பவணந்தியார் அவர்களின் தரத்தை மட்டுமே வேறுபடுத்திக் காட்டுகிறார். தற்காலத்தில் மதிப்பெண்களால் அல்லது குறியீடுகளால் வரையறுக்கப்படும் நிலைக்கு இது ஒப்பாகலாம். சுருக்கமாகச்  சொன்னால் கற்பிக்கின்றவருக்குத் தகுதி நிர்ணயம் செய்வதற்கும் கற்பாருக்குத் தர நிர்ணயம் செய்வதற்கும் பவணந்தியாருக்கு உவமங்கள் கைகொடுத்திருக்கின்றன எனலாம்.

    (தொடரும்…)

    Share