குட்டி குட்டி பசி எடுத்தால் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 15

சந்திப்பு: அண்ணாகண்ணன்
நம்மில் பலருக்கும் அவ்வப்போது குட்டி குட்டி பசி எடுக்கும். சிலருக்குக் காலையில் எழுந்தவுடனே பசி, வயிற்றைக் கிள்ளும். சிலருக்குக் குளித்தவுடன் வயிறு பரபரக்கும். சிலருக்குச் சாப்பிட்ட உடனே மீண்டும் பசிக்கும். சிலருக்கு வேலை செய்தால் கபகபவெனப் பசிக்கும். சிலருக்கு ஓய்வெடுத்தாலே பசிக்கும். இந்த ஊரடங்கில் இஷ்டத்திற்கு வெளியில் சென்று, வாங்கிச் சாப்பிட முடியாது. இந்நிலையில் வீட்டில் இருக்கும் பண்டங்களைக் கொண்டே சுவையான, ஆரோக்கியமான உணவை எளிதில் தயாரிப்பது எப்படி? இதோ ஏராளமான குறிப்புகளை அள்ளித் தருகிறார், ஓவியர் ஸ்யாம். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்கள் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)