Blog

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…..(56)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய மடல் மூலம் எனது அன்பான வாழ்த்துக்கள்.

    புரியாத பல புதிர்கள், புதிதான பல வினாக்கள் புலர்ந்து மனதில் அபல அசைவுகளை நிகழ்த்துவதுண்டு.

    நான் எனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது எனது காரில் உள்ள வானொலியில் நடந்த கருத்தாடலைச் செவிமடுத்தேன்.

    அதன் சாரம் என் உள்ளத்தில் பல விடையறா வினாக்களை விதைத்தன. நாம் இலகில் எந்த நாட்டில் வாழ்கிறோம் என்பது அல்ல எங்கு வாழ்ந்தாலும் எம் வாழ்வை எம்முறையில் வாழ்கிறோம் என்பதுவே முக்கியம்.

    குழந்தைகள் எந்த நாட்டிலும் சரி, எந்த சமூகத்திலும் சரி ஒரே மதிரியான உணர்வுகளுக்குள்ளாக்கப் படுகிறார்கள் .தமது குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்ளாத பெற்றோர் இருப்பது அபூர்வம்..

    ஒரு குழந்தையின் எதிர்காலத்தை சரியான வகையில் வழிநடத்துவதற்கு அந்தக் குழந்தைக்கான கல்வியறிவே முக்கியமானது. அக்கல்வியறுவைப் புகட்டுவதர்குக் காரணமான ஆசிரியர்கள் அக்குழந்தையின் எதிர்காலத்தை வகுப்பதில் முக்கிய பங்காற்றுகிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

    அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் எத்தகைய மதிப்பைக் கொடுக்கிறார்கள் ? இது ஒரு ஆழமான கேள்வியே !

    சரி, இனி நான் வானொலியில் செவிமடுத்த அந்தக் கருத்தாடலுக்கு வருவோம். அதன் சாரம் இதுதான்,

    இங்கிலாந்திலே உள்ள பாடசாலை மாணவை ஒருவரின் தாயர் அவருக்கு அம்மாணவியின் தலைமை ஆசிரியரால் கொடுத்தனுப்பப்பட்ட கடிதத்தைப் பற்றிக் கொண்ட ஆவேசத்தைப் பற்றியதுவே !

    சரி எதற்காக அந்தக் கடிதம் அனுப்பப்பட்டது என்று நினைக்கிறீர்கள்?

    அம்மாணவியின் வயது 11 வயது. இங்கிலாந்திலிலுள்ள பாடசாலைகளில் மாண்வர்களின் கல்வித் தராதரத்தை நிர்ணயிப்பதற்காக “கல்வித் தராதர நிர்ணயிப்புப் பரீட்சை (Scholastic Assessment Test – SAT) @ என்றழைக்கப்படும் பரீட்சை 11 வயது மாணவர்களுக்கும் நடத்தப்படும்.

    இப்ப்ரீட்சையில் அதி சித்தி எய்தும் மாணவர்களின் விகிதாசாரப்படி பாடசாலைகளும் வரிசைப் படுத்தப்பட்டு அட்டவணைப்படுத்தப்படும்.

    இப்படியான பரீட்சையொன்றில் தோன்றப்போகும் 11 வயது மாணவியின் மூத்த சகோதரிக்காக ஒரு பிறந்தநாள் விழாவைத் தாயார் ஏற்பாடு செய்திருந்தார். இவ்விழா ஒழுங்கு செய்யப்பட்ட நாள் அப்பரீட்சைக்கு முந்திய மாலையாகும்.

    சரி இதர்கும் அம்மாணவியின் தலைமை ஆசிரியருக்கும் என்ன சம்மந்தம் ? உங்கள் கேள்வி புரிகிறது.

    அவ்விழாவிற்கு இம்மாணவியின் சில நண்பர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்தச் செய்தி அத் தலைமை ஆசிரியரின் காதுக்கு எட்டியதும் அவர் அம்மாணவியின் தாயாருக்கு ஒரு கடிதம் னௌப்பியிருக்கிறார்.

    “உங்களுடைய மகளின் பரீட்சைக்கு முந்திய மாலை இப்படியான ஒரு விழாவை ஏற்படு செய்து உங்கள் மகளையும் அவர்களது நண்பர்களையும் அழைத்திருப்பது வேதனைக்குரியது.இதைத் தாங்கள் ரத்துச் செய்ய வேண்டும்” எனும் வேண்டுகோளை இக்கடிதத்தின் வாயிலாக விடுத்திருந்தார்.

    இம்மாணவியின் தாயாருக்கோ பொத்துக் கொண்டு வந்து விட்டது கோபம்.

    என்னுடைய மகளின் பிறந்தநாள் வாழ்த்தை இஅரத்துச் செய்யச் சொல்லிக் கேட்பதற்கு இவர் யார்? என்னை என்ன கையாலாகாத தாயார் என்று எண்ணி விட்டாரா? என்று கோபம் கொண்டு ரகளை செய்திருக்கிறார்.

    இவ்விடயத்தில் அத் தலைமை ஆசிரியர் நடந்து கொண்ட முறையா ? அன்றி அத் தாயார் நடந்து கொண்ட முறை சரியா என்பதுவே அவ்வானோலியிக் கருத்தாடலின் கரு..

    குழந்தைகளின் மாணவப் பருவம் என்பது பொன்னான பருவமாகும். இப்பருவத்திலே இவர்களின் மனங்களிலே ஏற்படும் நிகழ்வுகளின் தாக்கம் அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் முக்கியமானதாகி விடுகிறது.

    இப்பருவத்திலே பிள்ளைகள் தமது இல்லங்களிலே பெற்றோர்களுடன் கழிக்கும் நேரத்தோடு ஒப்பிடும் வகையில் அதிக நேரத்தை பாடசாலிகளில் மற்றைய மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் செலவிடுகிறார்கள்.

    ஆசிரியர்களும் இம்மாணவர்களின் நலன்களிலே பெற்றோர்களுக்கு இணையான வகையில் அக்கறை கொள்வது அவசியம்.

    அப்படிப் பார்க்கையில் இத் தலைமை ஆசிரியர் அம்மாணவியின் நலன் குறித்து அம்மாணவியின் தாயாருக்கு வலியுறுத்தியது எப்படித் தவறாக முடியும் என்பது ஒரு சாராருடைய கருத்து.

    தன் குழந்தையின் நலனில் ஒரு தாய்க்கு இருக்கக் கூடிய அக்கறையை விட ஒரு தலைமை ஆசிரியருக்கு அதிக அளவில் எப்படி அக்கறை இருக்க முடியும் ? தன்னுடைய பாடசாலை தர அட்டவணையில் மேலிடத்தைப் பெற வேண்டும் எனும் அக்கறையினால் அத்தாய்ய்ய்ய்யைக் கட்டுப்படுத்த முயல்கிறார் என்கிறார்கள் ஒரு சாரார்.

    சரி எது எபடியாக ஆவது இருந்து விட்டு போகட்டும்.

    தன்னுடைய பாடசாலை உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு அதிக அளவிலான மாணவர்கள் அதிக புள்ளிகள் எடுத்துச் சித்தியெய்த வேண்டும் என்று அத்தலைமையாசிரியர் அம்மாண்வியை அதிக புள்ளிகள் எடுக்கும் வகையில் தூண்டுவாராக இருந்தால் அத்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹு அம்மாணவிக்கும், அம்மாணவியின் தாயாருக்கும் நன்மையாகத் தானே முடியும் ?

    மாணவர்களுக்கு நாமளிக்ககூடிய செல்வங்களில் அதியுயர்வானது கல்விச் செல்வம் ஒன்றேதான். ஏனேனில் அதை யாராலும் எப்போதும் அவர்களிடமிருந்து பறித்து விட முடியாது .

    பெற்றோர்களும், ஆசிரியர்களும் இணைந்தால் தான் மாணவர்களின் வாழ்க்கை ஒளிமயமானதாகும். பெற்றோர்கள் ஆசிரியர்களை இடையூறாக நோக்குவதோ அன்றி ஆசிரியர்கள் பெற்றோர்களை இடையூறாக நோக்குவதோ ஒரு மாணவ பருவக் குழதைக்க்கு ஆரோக்கியமாக அமையாது.

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • ஆழிப்பேரலை அமைதி!!!

     

    -பன்னீர்செல்வம் மகேந்திரன்

    அமைதியான ஆழ்கடல்
    ஆழிப்பேரலை கண்டதுபோல்
    அவதானித்து விழித்தேன்!
    அமைதியின் தன்மையது
    ஆர்ப்பரிப்பு கொண்டது ஏன்?!!

    விடையற்றுப் போன
    வினாக்கணை ஒன்றினை
    வீதிவழி எடுத்துச்சென்றேன்!
    விதிவழி கடந்துசென்ற
    விந்தைமிகு காட்சி காண!!

    ஈர மணற்தடம் நோக்கி
    ஈருருளி வேகம் கொண்டேன்!
    ஈவுகள் தேடியவன்
    ஈடற்ற விடைகள் கண்டு
    ஈர்க்கப்பட்டு நின்றேன்!!

    மகரந்தத்தேன் குடித்த
    மதுவுண்ட வண்டது போல்
    மயங்கிப்போய் நின்றேன்!
    மடக்கைகள் பலகொண்ட
    மண்டிநிறை அஞ்ஞானங்களால்!!

    அகப்பட்ட தூண்டிலதை
    ஆலிங்கனம் செய்வித்து
    அகத்தினில் கறைபடிந்த
    அரூபப் பொழுதுகளை
    அகழ்ந்து நோக்கினேன்!!

    தூளியின் வெப்பம் கடந்து
    துள்ளி எழுந்த காலம் முதல்
    தூற்றிவிட்டுப் போன பருவங்களை
    தூர்த்து துளாவினேன்
    துர்குணங்களின் ஆதிக்கமே!!

    தனக்கான தகுதியை
    தரணி புகழ்கையில்
    தகுதியாகு பெற்றவனென
    தற்பெருமை கொண்டிருந்தேன்
    தகைவாய் இன்றுவரை!!

    செம்மாந்த உறைவிடத்தில்
    செருக்கின் சுவடுகளால்
    செதுக்கிய சிலையான பின்னே
    செயப்படு பொருளுக்கெல்லாம்
    செந்தீமை விளைவித்தேன்!!

    பெரும்பணம் சேர்த்து
    பெட்டக கொட்டிலிலே
    பெட்டியில் பூட்டி வைத்து – உடல்
    பெருக்கம் கொண்ட நான்
    பெறுமதி ஈதலை மறந்திருந்தேன்!!

    குடல்கொண்ட மேனியெல்லாம்
    குருதி நிறம் ஒன்றல்லவென
    குடையுறை வேந்தன்போல்
    குணத்தில் சாதி கொண்டு
    குற்றம் புரிந்திருந்தேன்!!

    நிறைகர்வம் கொண்டிருந்தேன்
    நிகரில்லா அகங்காரத்தால்
    நிகழ்காலப் புகழுக்காக – பிறரை
    நிந்தை செய்வித்து
    நிதானம் இழந்திருந்தேன்!!

    இவனா அவன்?
    இங்ஙனம் வளர்ந்திட்டானா?
    இவனிலும் குறைந்தவனா – நானென
    இதனினும் மேற்படியடைய
    இதயத்தை இற்றுப் போகச் செய்தேன்!!

    சோலையான ஆழ்மனம்
    சோகையாய் மாறியதேன்?
    சோடனையாய் நான்கொண்ட
    சோடை போன குணங்கள் தானோ
    சோதித்துப் பார்க்கிறது??!!!

    அமைதியான எனதுளத்தில்
    ஆழ கல் பாய்ந்ததால்
    அகச்சுழற்சி விட்டுப்போன
    ஆழிப்பேரலை ஆர்ப்பரிப்பு
    அமைதி கொள்வதெப்போது??!!!

    Share
  • விஞ்ஞான,கணித மேதைகள்-Fibonacci

    சு.ரவி

    LEONARDO FIBONACCI (1170-1230)

    இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கணித மேதை ஃபிபோனாக்கி தந்த கணக்கு இது:

    ” உன்னிடம் ஒரு ஜோடி முயல்கள் ( ஓர் ஆண், ஒரு பெண்) உள்ளன.

    இவை ஒவ்வொரு மாதமும் ஒரு ஜோடி ( 1ஆண், 1 பெண்) முயல்குட்டிகளை ஈனும்.
    பிறந்த குட்டிகள் ஒரு மாதத்தில் இனப்பெருக்கத்துக்குத் தயாராகும். இவையும் 1ஆண்,1பெண் குட்டிகளை
    ஈனுமெனில், வருடமுடிவில் உன்னிடம் எத்தனை ஜோடி முயல்கள் இருக்கும்?
    ( முயல்களின் இனப்பெருக்கத்துக்கு, உறவுமுறைத் தடைகளெதும் கிடையாது; மற்றும், இந்த ஒரு வருடத்தில்
    எந்த முயலும் இறக்கவில்லை என்றும் கொள்க).

    மேற்படி கணக்கைப் போட்டுப் பார்க்கலாம்:

    வருட முடிவில் 144 ஜோடி முயல்கள் இருக்கும்.

    ஒவ்வொரு மாத இறுதியிலும் இருக்கும் எண்ணிக்கையின் வரிசையே “ஃபிபோனாக்கி நிரல்” எனப்படும்;இந்த நிரலில் அமைந்த எண்கள் ‘ஃபிபோனாக்கி எண்கள்” எனப் படும்.

    “1,1,2,3,5,8,13,21,34,55,89,144….”

    பெரிய ஆச்சரியம், இயற்கை, ஃபிபோனாக்கி வரிசைப்படி பல அமைப்புகளைக் கொண்டிருப்பது- ஒரு கிளையைச் சுற்றிப் படர்ந்து துளிர்விடும்
    இலைகளின் எண்ணிக்கை. சூரியகாந்திப் பூவின் அல்லிவட்டத்தில் விதைகள் பரவியிருக்கும் அமைப்பு, பைன் மரத்தின் செதில்கள்- இவை யாவும்
    ஃபிபோனாக்கி நிரல் சார்ந்தவை. Cumulative Growth என்பதே ஃபிபோனாக்கி வரிசைப்படிதான் நிகழும்.

    அரேபிய எண்களை உலகமயமாக்கியதிலும் ஃபிபோனாக்கிக்குப் பெரும் பங்கு உண்டு.

    என் காலை நேரக் கைவண்ணத்தில் இதோ ஃபிபோனாக்கியின் ஓவியம்.

    (இதை வரைய ‘முயல்’ வது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது!)

    Share
  • உலக சுழற்சியும், தமிழ் வளர்ந்த தன்மையும்

    எஸ்.எஸ்.எம். சுப்பிரமணியம்
    தலைவர், சத்தியத்தின் சக்தி நிலைச் சங்கம், பவானி
    5வது உலக தமிழ் மாநாட்டில் ஆற்றிய உரை


    இன்று நாம் மொழி வளர்ந்த உண்மை அறிய பழங்கால கல்வெட்டுக்களையும், ஓலைச்சுவடிகளையும், புதைப்பொருள் நிலையிலிருந்தும், மொழி உருவான விதத்தையும் அதன் பழமையைக் கொண்டு வருடக் கணக்குகளையும், மாறி வந்த காலங்களின் நிலையிலிருந்து மொழி வடிவம் மாற்றம் கொண்டதை இன்று அறியக்கூடிய நிலையில் உள்ளோம்.

    தமிழ் மொழியும் பண்பாட்டு வாழ்க்கை வழித்தொடரும் எப்படி உருவானது? தமிழ் மொழி உருவான உண்மைத் தன்மை என்ன? இவ்வுலகில் இந்த இந்திய பூமியில் உருவான பலகோடி ஞானிகளும், சப்த ரிஷிகளும் இம் மொழி உருவாக செயல்பட்ட முறை எப்படி?

    ஆரம்பத்தில் இம் மொழி எப்படி எழுத்துருவம் கொண்டது? இன்றுள்ள இம் மனித உணர்வின் ஞானசக்தி, இயற்கை ஒலி அலையுடன் ஒளி அலைப்பெற்று ஜெபமெடுக்கும் முறை கொண்டால், இப் பூமி உருவான நிலையும், உயிரணுத் தோன்றி உருக்கொண்டு, ஒலியின் பாஷை அறிந்த நிலை யாவையுமே, இஜ் ஜீவ பிம்ப உடல் ஆத்ம சக்தியினால் ஒலியை ஒளியாக்கி, இன்றுள்ள வளர் தொடர் உண்மை நிலைகள் யாவையும் உணர முடியும். உணரும் நிலை எப்படி?

    இப்பூமியில், தமிழ்மொழி உச்சரிப்பு ஒலித்தன்மை ஏற்பட்டு பத்தாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்பூமிக்கு ஒலியில் சொல் வடிவம் தந்த முதல் மொழி, தமிழ்மொழிதான். இம்மொழித் தொடர் எப்படி உருவானது?

    பண்பாட்டு பழக்க வழக்கங்கள் எப்படி ஏற்பட்டது? என்றால் இப்பூமி தோன்றி, வளாந்து பல பிரளய மாற்றங்களுக்குப் பிறகு ஆரம்ப உயிரணு தோன்றி, தலை சிறுத்தும் வால் போன்ற உடல் அமைப்புக் கொண்ட, நீரில் மிதந்த உருவம் தோன்றி, பல அவதார மாற்றங்களுக்குப் பிறகு, பல உரு நிலை மாற்றம் கொண்டு, பலவில் உருவாகி உருவாகி, மோதுண்டு மோதுண்டு ஒலிக் கொண்டு ஒளியாகி, ஜீவபிம்ப உடலின் அங்க அவையங்களினால் செயலாற்றும் தன்மை கொண்ட பிறகு, பிரிதொரு மாற்றம் கொண்டு எடுத்த உடலில் கண் ஒளி பாய்ச்சி, ஒலி ஈர்க்கும் மாற்றத்திற்குப் பிறகு ஒலி பாய்ச்சி ஒலி கேட்கும் வளர்ப்பு நிலைக் கூடிய பிறகு, ஒலி வெளிப்படுத்தும் ஒலி ஆற்றல் மனிதனுக்கு கிடைத்தது.

    ஒலியின் வளர்ப்பு நிலையிலேயே, சொல் வடிவாற்றல் மனிதனுக்கு ஏற்பட்ட நிலையிலிருந்தே, எழுத்து வடிவம் உருக்கொள்ளும் காலத்திற்கு முன்னே, இப்பூமியில் உருவான மனிதனுக்கு சொல்லாற்றும் திறமை ஏற்பட்டவுடன். இப்பூமிக்கு வியாழன் மண்டலத்தில் பலக்கோடி ஆண்டுகளாய் வாழ்ந்த மனித ஞான வழித் தொடர் கொண்ட, வளர்ச்சியுற்ற வழித்தொடர் அலை சப்த ரிஷிகள் வியாழனில் வாழ்ந்து, உயர்ஞானம் கொண்டு, அவர்கள் வாழந்த எம் மண்டலத்திற்கும் சென்று வாழக்கூடிய நிலை பெற்றவர்கள் வியாழனில் மனிதன் வாழ முடியா நிலை ஏற்பட்டவுடன் இப்பூமியில் மனித கரு வளர்ந்தவுடன் ஒலி அலையின் ஒளிப் பாய்ச்சி, இப்பூமியில் பல மகான்கள் தோன்றி மொழி வடிவம் தோன்றுவதற்கு முதலிலேயே சொல்லாற்றலும், செயலாற்றலும்; மனித சக்திக்கு கூடிய நிலையில் அன்றைய மகான்களில் ஒளி அலையைப் பாய்ச்சி, மனிதனின் சொல்லாற்றலுக்கு வித்திட்டு, அச்சொல் தொடர் முதல் மொழியாய் அன்று தமிழ் மொழி தோன்றியது.

    இவ்வொலி அலைத் தொடர்பிலிருந்து எழுத்து வடிவம் பெற பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கு பிறகு உருவாகிய தமிழ்மொழி எழுத்து வடிவம், இன்று எழுதப்படும் இந்நூற்றாண்டின் தமிழ் மொழி மரபு ஏழாவது மாற்றமாகும்.

    அன்று ஆண்ட அரசர்கள், அரசர்களின் செயலுக்கொப்ப இம்மொழியை மாற்றிவிட்டார்கள். மொழியின் தன்மை இதுவென்றால், தமிழரின் பண்பு முறை எப்படி வழிவந்தது? ஞான சக்தியை எடுத்த சக்தியும், வளர்ந்த ரிஷித் தன்மை கொண்டவர்களும் இவ் அலைத்தொடர் வழியில்தான் முதலில் உருப்பெற்றது. இராமாயண, மகாபாரத காவியங்களில் அன்று எழுதிய முனிவர்களினால் காவியக் கதையில் விழித்துள்ள யாவையுமே மனித சக்தியினால் பெறக்கூடிய சக்தி முறையை கதாப்பாத்திர நாமங்களில் அந்தந்த குண நிலையில் வடிவமைத்து எழுதிவிட்டார்கள்.

    தமிழ் மொழியில் எழுதப்பட்ட பலகோடி உண்மைத் தன்மைகள் இம்மனித சக்தியினால் பெறவல்ல ஆற்றல் நிலையை அன்றே உணர்த்தி, இப்பிம்ப உடலை அழியாத் தன்மை கொள்ளக்கூடிய நிலைக்கு, பல மூலிகைகளை எழுத்தில் பதியச் செய்தும், இம் மனித பிம்பத்திலிருந்து செயலாற்றக்கூடிய சக்தி அனைத்தையும், ஞானத்தால் ஒலியுடன், இவ் ஒளி பாய்ச்சி எந்த நிலையையும் அறியவல்ல ஆற்றல் கொண்ட, படைப்பின் படைப்பையே படைக்கவல்ல, தெய்வ சக்தி கொண்ட நிலைக்கு, மனித சக்திக்கு செயலாற்றும் தன்மை எல்லாவற்றையும் ஏட்டு உருவிலும், காவிய வழித் தொடர்களிலும், மறைக்கப்பட்ட நிலையில் உணர்த்திச் சென்றார்கள் அச் சப்த ரிஷிகள். இன்று மற்ற இடங்களைக் காட்டிலும் இப் பூமியில், இந்திய கண்டத்தில் சுழற்சி முறை வாழ்க்கைத் தொடரில் தமிழ் குடும்ப வாழ்க்கையில் பக்தியும், பண்பும் கூடி வருவது பிறப்பில், குடும்ப வழித்தொடரில், வழி வழியாய் வந்த வழித்தொடர் வாழ்க்கையில் இருந்து மட்டும் வரவில்லை. இப்பூமியில் ஞானம் பெற வழிப்படுத்திய ஞானிகளின் அலைத் தொடர்பு சக்தி இன்றளவும் இப்பூமியின் வெட்கையிலும், காற்று மண்டல சுழற்சியிலும், தமிழ் கடவுள் முருகன் என்றுணர்த்திய தெய்வ வழிபாட்டு முறையிலும் சுழன்று கொண்டுள்ளதினால், இப்பிம்ப உடலில் ஆரம்ப கலவை எத்தொடரில் இவ் உயிரணுத் தோன்றி உயிராத்மா உருப்பெற்றதோ, அவ் அமிலத் தொடர் கொண்ட ஜீவ பிம்பங்களுடன் வாழ்பவர்களும், பிம்பமற்ற ஆவி உலக ஆத்மாக்களும் அவ்வமிலத் தொடர் கொண்டு உருப்பெற்று, உருவாகி வளர்ந்த ஒவ்வொரு நொடிக்கும் எவ் அமிலக் கூட்டின் மேல் மோதுண்டு காற்று சுவாசம் வெளிப்படுகின்றதோ, அவ் அலைத் தொடர் சக்தி மாறி மாறி உருவாகும் உருவகங்களின் மாற்றங்கள் பல கொண்டாலும் தன்மையின் குணம் வழிப்பெற்றுக் கொண்டே உள்ளது.

    இப்பூமியில் மட்டும்தான் மனித இனம் உண்டா? மற்ற கோளங்களில் மனித இனங்கள் உள்ளனவா? என்ற வினா பலருக்கு உண்டு, இப்பூமியைச் சார்ந்த சூரியக் குடும்பத்தின் இந் நாற்பத்தி எட்டு மண்டலங்களிலும், இந் நாற்பத்தி எட்டு வளர்ந்த மண்டலங்கள் வளர்க்கும் சனிக்கோளத்தின் பன்னிரெண்டு நட்சத்திர மண்டலங்களிலும், ஆக இவ் அறுபது கோளத்திலும் இப் பூமியில் மட்டும்தான் மனித இனம் உண்டு. வியாழனில் இருந்து மனித கரு வித்து நம் பூமிக்கு வந்தது. அதன் வழித்தொடர் மொழி நம் தமிழ்மொழி. ஆனால் வளர்ந்த சக்தி கொண்ட சுழற்சி ஈர்ப்பு விகிதத்தன்மை கூடிய வியாழன் மண்டலத்தில் இன்று மனித கரு உரு நிலை இல்லை அதன் தொடர்ச்சி கருவும், சொல், மொழி, வடிவம் இப்பூமியில் இன்று வேர் ஊன்றி உள்ளது.

    இந் நாற்பத்தி எட்டு மண்டலங்களிலும் இல்லாதத் தன்மை கொண்ட மனித கரு இப் பூமியில்தான் உண்டு. இப்பூமியின் ஞானத்தில் இம் மனித பிம்ப செயலாற்றும் சக்தியை விஞ்ஞான ரூபத்தில் செலுத்தி விட்டான் மனிதன். விஞ்ஞானம் கொண்டு இப்பூமியின் கனி வளங்களை பல பக்குவங்களுக்கு பயன்படுத்துகின்றான். இப்பூமியில் பொக்கிஷ திரவங்களை இக்குறுகிய நூற்றாண்டில் எடுத்து பல செயல்களுக்கு உபயோகப்படுத்துகின்றான். சூரியனின் சக்தி கொண்டு ஒவ்வொரு மண்டலங்களில் இருந்தும் சூரியன் எடுத்து வெளிக்கக்கி, நம் பூமி அதன் சுழற்சியில் சூரியனின் ஒளி அலை எடுத்து வளர்க்கும் உயர் காந்த மின் சக்தியினால் இப்பூமி சுழன்று ஓடி வளர்ந்த ஞான ஆத்மாக்கள் வளரும் வாழ்க்கையில் மனித சக்திக்கும், ஜீவசக்திகளுக்கும் உயிர் வாழ இன்றியமையா சக்தியான உயர் காந்த மின் அலையின் துடிப்பு சக்தியையே மின்சாரம் காண மனித விஞ்ஞானம் காண இயற்கை மின் காந்தத்தையே செயல்படுத்துகின்றது இன்று.

    பிற மண்டலங்களுக்குச் சென்று அங்குள்ள உண்மையறிய பலகோடி உலோக சக்திகளையும், திரவ சக்திகளையும், காந்த மின் அலையின் சக்தியையும், மனித ஞான சக்தியையும் விரையப்படுத்துகின்றனர். இம்மனித உடல் பிம்பத்தில் உயிர்; காந்த சக்தியைக் கொண்டு உயர காந்த மின் அலைத் தொடர்பை சூரியனின் அலைத் தொடருடன் இவ்வுணர்வின் எண்ணத்தைச் செலுத்தி நேராக எடுக்கும் சுவாசத்தினால், இப்பூமியின் ஈர்ப்பு பிடியில் சிக்கி, உண்டு, உறங்கிக்கழித்து உழன்றுள்ள வாழ்க்கையில் இருந்து இதே பிடிப்பில் ஜீவன் பிரிந்தாலும் இவ்ஈர்ப்பலையிலேயே பிறந்து இச்சுழற்சியில் சிக்குண்டுள்ள வாழ்க்கையில் இருந்தும் இஜ் ஜீவ பிம்ப உடலுக்குள்ளே நாமெடுக்கும் சுவாசத்தினால் வளர்த்துக் கொண்டோமானால், இம்மனித எண்ணத்தால் பெறவல்ல சக்தி ஞான வளர்ச்சி தொடர் உணர்வால் இப்பூமியில் மட்டுமல்ல, சூரிய குடும்பத்தின் நாற்பத்தி எட்டு மண்டலங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு மண்டலங்களின் தன்மையும், மற்றெல்லா மண்டலங்களின் தொடர்புகளையும், உருதோன்றி உரு வளரும் செயல் முறைகளையும், ஒலியாகவும் ஒளிக்காட்சிகளாகவும் இவ்வுணர்வின் எண்ணத் தொடர் அலையை எந்நிலைக்கெல்லாம் காண விரும்புகின்றோமோ, அவை அனைத்தையுமே இம் மனித ஞான சக்தியினால் மட்டும்தான் பெற முடியும்.

    விஞ்ஞானத்தில் வளரும் மனித ஆத்மா, எவ் விஞ்ஞானத் தொடர் அலையில் வளர்ந்து, விஞ்ஞானம் பெற்று செயல்புரிந்திருந்தாலும், அவனின் ஆத்ம பிம்பம் ஜீவன் பிரிந்த பிறகு, மீண்டும் இவ்ஈர்ப்பின் பிடியில்தான் சிக்குண்டு சுழல முடியுமே தவிர, உயர் ஞான சக்தி பூண்ட, தன் ஞானம் பெற்ற ஞானிகளின் ஜீவ பிம்ப சக்தி என்றுமே அழியா வண்ணம், தான் வளர்ந்த சக்தியைக் கொண்டு எம்மண்டலத்திலும் வாழக்கூடிய தன்மையும், இம்மண்டலத்தில் மனித உரு ஞானம் மாறினாலும் இஞ்ஞானத்தால் பெற்ற சக்தியைக் கொண்டு ஞான கரு வித்து மனிதனை உருவாக்கும் சக்தி இம் மனித பிம்ப ஆத்ம எண்ண ஞானத்திற்கு உண்டு.

    இந்நாற்பத்தி எட்டு மண்டலங்களில், இச்சூரிய குடும்பத்தில், எப்படி இப்பூமியில் மட்டும் மனித ஞானம் வளர்ச்சி கொண்ட ஜீவ பிம்ப வாழ்க்கைமுறை உள்ளதோ, அதைபோன்று மற்ற சூரிய குடும்பங்களில் நம்மைக் காட்டிலும் அறிவும், ஞானமும் முதிர்ந்த மனித பிம்ப உடல்கள் இரண்டாயிரம் மண்டலங்களில் உண்டு. நாம் இன்று உள்ள நிலை உள்ளதைக் கொண்டு, நமக்கு முதலில் வாழ்ந்தவர்களையும், வாழ்ந்த முறைகளையும், ஆராயும் நிலையும், செயற்கை விஞ்ஞான இன்ப வாழ்க்கையின் பிடியிலும்தான் இன்றுள்ளோமே தவிர, மனித சக்திக்குகந்த உண்மை சக்தியை அன்றே உணர்த்திச் சென்ற சப்த ரிஷிகளின் நிலை மறந்து இன்றளவும் செயற்கை பிடியில்தான் சிக்கியுள்ளோம்.

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முதலிலேயே திருக்குறள் தந்த திருவள்ளுவரின் குறட்பாக்களை ஆராயும் தன்மையிலும் அதற்கு தெளிவுரையும், விளக்க உரையும் தருவதில்தான் நம் எண்ணச் செயல் உள்ளதேயன்றி குறள் வடிவாய், குறளின் உண்மை உணா;ந்து, குறள் வழியில் நாம் வளர வழிகொண்டோமா? திருக்குறள் எழுதிய அம்முனிவரின் சக்தி என்ன? அவர் எழுதிய குறள் வடிவம் அனைத்தும் வெளிப்பட்டதா, பொருட்பால், அறத்துப்பால், இன்பத்துப்பால் இவற்றைத்தான் தந்தார் என்கிறார்கள். அவர் எழுதிய ஞானத்துப்பால் அன்று ஆண்ட அரசர்களினால் மறைக்கப்பட்டுவிட்டது. ஞானத்தின் பால் அறத்துப்பாலும், பொருட்பாலும், இன்பத்துப்பாலும் வெளிப்பட்டதேயன்றி, அவர் எழுதிய முதல் பாலே ஞானத்துப்பால்தான். ஞானப்பாலில் ஆத்ம உயர் ஞான வளர்ச்சி முறையும், ஞானத்தின் வளர்ப்பால் வளரக்கூடிய வழித்தொடர் அனைத்துமே, அன்றாண்ட அரசர்களால், தன் சாதனைக்கு இவர் தரும் போதனையால், தன்னை மீறிய நிலை மனித ஆத்மாக்கள் பெற்றவிடுவர் என்ற அச்ச உணர்வால் மறைக்கப்பட்டுவிட்டது ஞானப்பால்.

    திருவள்ளுவரின் உண்மை ஞான சக்தி எப்படிக் கூடியது? திருவள்ளுவருக்கே சக்தி தந்தவா; வாசுகி அம்மையார்தான். அவ்வம்மையின் ஞானத்திற்கு பொருள் தந்தவர்தான் திருவள்ளுவர் இதன் தொடர்நிலை எந்நிலையென்றால் உருவாகும் சக்திக்கே சக்தி குணம் பெண்மையில் இருந்து வருகின்றது.

    ஆண், பெண் என்ற இரு நிலைக்கொண்ட தொடாநிலையில் வளர்ப்பு நிலைதான் உருவாகும் உரு நிலை அனைத்துமே. சிவசக்தி, வினாயகன், முருகன், வள்ளி, தெய்வயானை என்று மட்டும்தான் நம் புராண இதிகாசநூல்களில் தெய்வ சக்தியை உணர்த்துகின்றார்களே அன்றி, முருகனுக்கு குழந்தையை காட்டவில்லை. வினாயகனுக்கு மனைவியை காட்டவில்லை. அப்படியென்றால் என் அர்த்தம்?

    ஆதி சக்தி என்ற சக்தியின் பொருள் என்ன? கோலமாமகாரிஷி வணங்கிய தெய்வம் முகாம்பிகை தேவி. ஆதி சங்கரர் வணங்கியது சாரதாம்பிகை, போகர் வணங்கியது புவனேஸ்வரியை, கொங்கணவர் வணங்கியது அஷ்டலட்சுமியை.

    நம் சப்த ரிஷிகளினால் வணங்கப்பட்ட தெய்வ சக்தி யாவையுமே பெண்மை சக்தி. இதன் உண்மை என்ன? காளியையும், மகாலட்சுமியையும், பத்ரகாளியையும் வணங்கும் முறையெல்லாம் எவை?

    ஆவியான சுழற்சிவட்டத்தில் இப்பால்வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள அமில சக்திக்கு அப் படர் அமில ஆவி நிலை திடம் கொண்டு எச்சுவைக் கொண்டு திடப்பட்டதோ அவ்வமிலம்தான் சிவபிம்பம், திடம் கொண்டு சிவபிம்பம் கனமாகி தங்க இடம் கொள்ளாது ஈர்ப்பின் சுழற்சி கொள்வது சக்தி ஈர்ப்பு. ஆவியான ஆதி சக்தி, திடமான சிவ உருவாகி, சக்தியான ஈர்ப்பு கொண்டு சிவ சக்தியாகி ஈர்ப்பின் சுழற்சியில் உருவாகும் ஒலி, ஒளி, நீரான முதலாம் வளர்ச்சி வினாயக செயலாகி, வளரும் வளர்ப்புத்தன்மை முருக குணமாகி, முருக குணத்திற்கு தேவைக் கொண்ட வளர் உணவு சக்தி தெய்வானையாகி, தேவைக்கு மேல் உணரும் சக்தி வள்ளியாகி உள்ள சக்திதான் இன்றளவும் உருவாகி உள்ள ஒவ்வொரு சக்தியுமே.

    உயிர் துடிப்பு உயிரணு வளர்ச்சி நிலை ஒவ்வொன்றுமே சிவசக்தி, வினாயக, முருக, வள்ளி, தெய்வானை வடிவமாய்தான் வழிந்துள்ளது இன்று பெண்மையின் சக்திக்கும், ஆண்மையின் சக்திக்கும் உள்ள குண மாற்றம் யாவை? ஆண் எடுக்கும் சுவாசத்தால் அமிலப் படைப்பை படைக்கத்தான் முடியும்.

    பெண்மையின் சுவாசத்தால் கரு வளர்க்கும் செயல்தான் முடியும். ஆண் விடும் சுவாசத்தால் ஆணின் அமில வர்க்கம் தாவரங்கள், கனிவளங்கள், மண், மரம் போன்றவைதான் வளர்க்க முழயும். பெண் இன சுவாச அமில குணத்தால் ஆண் இன அமிலத்திற்கே ஜீவ துடிப்புக் கொண்ட, ஜீவ சக்தி வளரக் கூடிய புழு, பூச்சிகள், வண்டின உயிர்கள் யாவையுமே வளர்க்க முடியும். ஒன்றின் தொடர்பு ஒன்று வளர முடியுமே தவிர ஒன்றான சக்தி எவையுமேயில்லை.

    இரண்டு ஒன்றாகி, ஒன்று பிறந்து, அப்பிரிதொன்று சேர்ந்து ஒன்று வளருமே தவிர, ஒன்றான சக்தி எவையுமே இல்லை. சக்தியில்லையேல் சிவனில்லை, சிவனில்லையேல் சக்தியில்லை என்ற வாதம்தான் சுழல்கின்றதே தவிர ஒன்றில்லாமல் ஒன்றில்லை என்பதை உணர்ந்து அமிலப்படைப்பு அனைத்திற்குமே ஜீவ சக்தி வளர்க்கும் பெண்மை ஈர்ப்பு சக்தி குணம் வளர வேண்டும் என்பதனை உணர்ந்துதான் பெண்மை குணத்தை பூஜித்து வணங்கினர் சப்தகள் ரிஷி அனைவருமே.

    இதன் தொடர் வழி முறையில் சக்தி கொண்டவர்தான் வாசுகி அம்மையாரும், திருவள்ளுவ முனிவரும். அஞ்ஞானம் பேசி இஞ்ஞானம் வளர்ந்தது. அன்னையின் ஞானத்திற்கு இம்முனிவரின் ஞானம் உருவம் தந்த உருவகம்தான் காலப்போக்கில் மாறுபட்டாலும் இன்றளவும் பேசப்படும் உயர் ஞானக் குறட்பாக்கள். நம் வாழ்க்கை காலத்திலேயே சாரதா தேவியின் துணையுடன் ராமகிருஷ்ண பரமஹம்சரும், கஸ்தூரிபாய் அம்மை தந்த பக்தி வலுவில் மகாத்மா காந்தியடிகள் தோன்றியதைபோல் ஒவ்வொரு ஆத்மாக்களும் வாழ்க்கை என்ற வழித் தொடரில் இல்லறம் என்ற இனிய வாழ்க்கையுடன் ஆணிற்கு பெண் துணையில் சக்தியும், பெண்ணிற்கு ஆண் துணையின் படைப்பையும் கொண்டு வாழ்க்கை என்ற வழிமுறையிலிருந்தே அன்பு, பண்பு, ஆசை, வீரம், ஞானம், சாந்தம்; இந்நற்குணங்களை பெற்று தீய குணங்களான சலிப்பு, சோர்வு, கோபம், குரோதம், வஞ்சனை, வெறி இவற்றின் குணத்தைவிட்டு இவ்வுணர்வின் உந்தலுக்கு உகந்த நிலையில் ஆசை உணர்வை பேராசைக்குச் செல்லாமல் ஆகையுடன் வாழ்க்கை முறையை உணர்வால் உந்தப்படுமு; எவ் இச்சையையும், தூக்கம், பசி, காமம் இவற்றை உணர்வின் உந்தலின் பிடிக்கொப்ப நாம் செல்லாமல் உணர்வுடன் எண்ணத்தை பக்குவம் கொண்டு வழிமுறைப்படுத்தி வாழ்க்கை முறையின் தேவைக்கு ஜீவாதார வழிக்குகந்த இன்பமுடன் வாழ்க்கை நெறியை அமைதிப்படுத்தி வாழ்க்கையில் பொருள் சக்தியை எப்படி நடைமுறைக்கு சேமிக்கின்றோமோ அதைப்போன்று இவ்வுயிராத்மாவிற்கு என்றுமே அழியா சக்தியான ஞான சக்தி வலுவைக் கூட்டிக்கொண்டால் இவ்வுடல் பிம்பக்கூட்டிற்குள் பல ஜென்மத்தில் சேமித்த குண அமில சக்தியையும், இஜ் ஜென்ம வாழ்க்கையில் நாமெடுக்கும், உணா;வின் உந்தலுக்கு உகந்த சுவாசத்தால் சேமித்த சக்தியைக் கொண்டு மனிதனின் உயா;ந்த ஞான குண சக்தியை எடுக்கும் முறையாய் மாற்றி உள்ள நிலையை நல்ல குணமுடன் கூடிய ஜெபமுறையால் ஞானத்தால் பெற்ற, ஞான சக்தி பூண்டு இன்றைய மருத்துவத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் பல வழிமுறைகளை உணர்த்திச் சென்ற சப்த ரிஷிகளின் நிலைக்கு நாமும் செல்லலாம்.

    இன்று இயற்கை தாவரங்களின் வளர்ப்பு முறையில் வீரிய சக்தி கொண்ட இரசாயன உரங்களை இட்டு ஒன்றுடன் பிரிதொன்றின் இனச் சேர்க்கையை சேமித்து, இன வளர்ச்சியின் மாற்ற குணத்தையே, விஞ்ஞான ஆராய்ச்சி தாவர இயல் உள்ளதுவோ, அதைப்போன்று இம்மனித ஜீவ பிம்ப உடலில் நற்குணங்களை வளர்த்து, தீய குணங்களை விட்டு, உடல் உணர்வின் வழியை நல்வழிப்படுத்தி நாமெடுக்கும்; சுவாச ஜெபத்தால் நமக்கு இப்பிறப்பெடுக்க, பிறப்புத்தந்த முதல் தெய்வங்களை வணங்கி, ஞானத்திற்கு வழித் தந்த குருவையும், தெய்வசக்தி கொண்ட அலைத் தொடர் குணங்களை வணங்கி “ஓம்” என்ற நாத ஒலியில் இயங்கும் இப்பூமியின் சுழற்சி ஒலியில், “ஓம்” க்குள் ஓமாய் நாம் அமர்ந்து, சூரிய சக்தியிலிருந்து உயர் காந்த மின் அலையின் தொடர்பை நாம் பெற்று, வளர்ப்பின் வளர்ப்பாய் தமிழ் வளர்ந்து பிறதையும் வளர்த்து, தமிழ் கொண்ட பண்பு சுடரொளியை இப்பூமியின் சுழற்சியிலிருந்து எப்பூமியிலும் இத்தொடர்த் தமிழ் சொல் ஒலி வளர்க்கும் இத் தமிழ் பண்பு குண தெய்வ வளர்ப்பை, நாம் வளா;க்க, நம்மை வளா;த்த தமிழ் குணசக்திகளின் வளர்ப்பிற்கே வளம் பெறும் இத்தமிழை என்றுமே இஞ்ஞானத்தால் நாமும் வளர்ப்போம்.

    தாய், தந்தையின் ஈர்ப்பில் பிறப்பிற்கு வந்த நாம், நம் தாய் தந்தையரை முதல் தெய்வமாக வணங்குகின்றோம். நம் பிறப்பின் உண்மையும் மற்றெல்லா ஜீவராசிகள், தாவரங்கள், கனி வளங்கள், நம் பூமி எல்லாமே எப்படி பிறப்பெடுத்தன? ஆவியான அமில பிம்பம் ஜீவன் கொண்டு அஜ் ஜீவ ஈர்ப்பலையின் உணர்வுடன், அவ்வுணர்வின் உந்தலில் எண்ணம் கொண்டு வழி வந்த ஒவ்வொரு பிம்ப ஜீவனும் மீண்டும் ஆவியாகிறது. இப் பிரபஞ்சமும் ஆவிதான், நாமும் ஆவிதான், பிரபஞ்சத்தையும், மற்றெல்லா ஜீவ ராசிகளைப் படைத்த படைப்பாண்டவனே ஆவிதான். இப் பிரபஞ்சத்தில், பால் வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள ஆவியின் ஈர்ப்பு சக்திக் கொண்டு உணர்வலையில் ஜீவன் கொண்ட நாம், முற்பிறப்பையும், இப்பிறப்பையும், வரும் நிலையையும் உணர்ந்து இப் பிம்பமான உடலைவிட்டு ஆவி பிரிந்து, ஆவியாய் சுழலும் நிலைக்கு முதலே இப்பிம்ப உடலில் நம் உயிராத்மாவை சகல சத்து நிலைகளையும் உணரும் ஈர்ப்புடன் நம் எண்ணத்தை செலுத்தி வாழ்ந்து இவ் ஈர்ப்பின் உணர்வைக் கொண்டு நாம் தீய எண்ணங்களையும், தீய சொற்களையும், தீய செயலையும் நாம் எண்ணி, சொல்லி, செய்யும் நிலையில் நம்மை அறியாமலே நம் உடல் பிம்ப கூட்டிலுள்ள ஆவி அமிலமும், அத் தீய உணர்வின் அலையையே அதிகமாக ஈர்தது நம் உடலைவிட்டு நம் ஆவி பிரிந்த பிறகும், நம் ஆவியின் குண அமிலம் தீய குண அமிலமாய், காற்றாய் படரவிட்டு மேன்மேலும் அசுத்த நிலையை நாம் ஏற்படுத்தாமல் ஒவ்வொரு ஆத்மாவும் தான் எண்ணும் எண்ணத்தையும், சொல், செயல் எல்லாவற்றையும் நல் உணர்வுடன் வாழ்ந்தால், நாம் வாழ்ந்து நம் ஆத்மா பிரிந்த பிறகும், நல்ல உணர்வின் ஈர்ப்பு ஆவியாய் சுழன்று மீண்டும் நற்கதியின் பிம்பத்தின் வழித்தொடரை நாம் அடையலாம்.

    Share
  • வங்கக் கவிமணி

    சு. ரவி

    “சங்க இலக்கியம்போல் வங்க இலக்கியத்தைத்
    தங்க மலராக்கித் தரணியிலே- எங்கும்
    மணம்வீச வைத்தாய் மாமுனியே வாழ்க
    கணந்தோறும் உந்தன் கவி”.

    ” பண்ணொழுகு பாடலைப் பாடென்றனக்கருள்
    பாலிக்கும் வேளை யிந்த…

    எனத்தொடங்கி,

    நண்ணுதற் கான வழி வேறெதும் கண்டிலேன்
    நானுமென் களிமயக்கால்
    நண்பனென் றேஅழைக் கின்றனன் என்னையாள்
    நாதனே ஞானபரனே”

    என்று இறைவனோடு தோழமை யோகம் பாராட்டிய அன்னாரின் கீதாஞ்சலியை அருமையான இரட்டைஆசிரிய விருத்தத்தில்
    மொழிபெயர்த்த எங்கள் கவிமணியும் நினைவினில் நிழலாடினர்.

    உயிர்நாடிகளை மீட்டும் உன்னத எழுத்துக்குச் சொந்தக்காரரை வரையும் ஆவல் உந்தியதின் விளைவு…
    கீழ்க்காணும்  ஓவியங்கள்…

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 10

    சு. கோதண்டராமன்

    தேன் வந்து பாயுது காதினிலே

    பாரதியின் பிரபலமான பாட்டு, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்பது. நாவால் சுவைக்க வேண்டிய தேன் காதிலே பாய்ந்தால் அதன் இனிமையை அனுபவிக்கமுடியுமா என்று எண்ணுகிறோம்.

    ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்’ என்று ஒரு பாடல். வாக்கு காதினால் உணரப்படுவது. இதில் கண்ணால் காணக் கூடிய ஒளி எங்கிருந்து வந்தது என்று நமக்குச் சந்தேகம் வருகிறது.

    குழந்தைக் கதை என்ற தலைப்பில் ஒரு கதை- பாரதி எழுதியது. பெயர் தான் குழந்தைக் கதை. விஷயம் என்னவோ கனமானது தான், முதல் உலகப் போரைப் பற்றியது. அதில் ஒரு வரி, மேலே பருந்துகளும் கருட பக்ஷிகளும் வட்டமிட்டு வெயிலைத் தின்று கொண்டுலாவின, என்று வருகிறது. வெயிலையாவது தின்பதாவது.

    இப்படிப் பொறிகளையும் அதன் வேலைகளையும் மாற்றி மாற்றிச் சொல்வது, ஒரு கவித்வ உத்தி மட்டுமல்ல. அதன் பின்னணியில் ஒரு பெரிய தத்துவம் உள்ளது.

    பாரதியின் பதஞ்சலி யோக சூத்திர விளக்கத்தைப் பார்ப்போம். யோக சாஸ்திரப்படி, வெளியில் தெரியும் கண் காது முதலான பொறிகளால் நாம் காட்சி கேள்வி முதலான அனுபவம் பெறுவதில்லை. மாறாக, சித்தமே காண்கிறது, கேட்கிறது, வாசனை, தொடு உணர்ச்சி, சுவை ஆகியவற்றை அறிகிறது. சித்தம் செயல் படாமல் இருக்கும் போது பொறிகள் தம் வேலையைச் செய்தாலும் அது நம் அறிவுக்கு எட்டுவதில்லை. மாறாக, சித்தம் ஆனந்த நிலையில் இருக்கும் போது இந்த எல்லா அனுபவங்களும் பொறிகள் இல்லாமலே கூட நிகழும்.

    இதை விளக்குவது அவருடைய ஞானரதம் என்னும் கட்டுரை. கந்தர்வ லோகத்தில் பாரதி சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அனுபவத்தை அவருடைய வார்த்தைகளிலேயே கேட்போம்.

    கந்தர்வ லோகத்திற்குப் போய்ச் சேர்ந்தவுடனே என்னை அறியாமல் ஓர் ஆனந்தம் உண்டாயிற்று. அதி ரமணீயமான ஸங்கீதத் தொனி கேட்டது. அவ்வொலி பொன்னாற் செய்யப்பட்ட தொண்டையினை உடைய பெண் வண்டுகளின் ரீங்காரம் போலிருந்தது. அன்று, அது சரியான உவமை ஆகமாட்டாது. உயிருக்குள்ளே இன்னிசை மழையை வீசிக் கொண்டேயிருந்தது போலத் தோன்றிய அவ்வொலிக்கு இன்ன உவமை சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இது என்ன ஒலி, எங்கிருந்து வருகிறது என்று யோசித்தேன். எனது அறிவிற்குப் புலப்படவில்லை.

    இந்த இனிய ஒலி என்னைப் பரவசப்படுத்துகிறதே, அது எங்கிருந்து வருகிறது என்றேன். மேலே பார் என்றனள். நீல வானத்தில் சந்திரன் தாரகைகளிடையே கொலு வீற்றிருக்கக் கண்டேன்.

    அவருடைய கிரணங்கள் என்றாள்.

    சந்திர கிரணங்களா, சந்திர கிரணங்களுக்கும் இந்த மனோகரமான தொனிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன்.

    சந்திர கிரணங்களுக்கு இந்த இனிய ஓசை இயற்கை. அது இந்த உலகத்தில் நன்றாகக் காதில் விழுகிறது. உங்கள் மண்ணுலகத்திலே ஜனங்களுடைய செவியில் விழுவது கிடையாது. ஆனால் அங்கே கூட அருமையான கவிகளின் செவியில் இந்த ஓசை படும் என்றாள்.

    இவ்வாறு பொறிகளையும் அதன் வேலைகளையும் மாற்றிச் சொல்வதற்கு வேத ஆதாரம் உண்டா? உண்டு. யஜுர் வேதம் 1.1.5.11 ‘ஒளியுள்ள சொற்களைச் சொல்லுக’ என்கிறது. நம்மைப் போன்ற சாமானியர்கள் சொல்லின் ஒலியை மட்டுமே அறிவோம். ரிஷிகள் அதன் ஒளியையும் அறிந்திருந்தார்கள். மருத்துகள் (புயற் காற்று) சூரியனைப் போலப் பிரகாசிக்கிறது என்கிறது ரிக் வேதம் 1.64.2. இன்னும் நிறைய உண்டு.

    வேத ரிஷிகளைப் போல் பாரதியின் சித்தமும் எப்பொழுதும் பரம்பொருளின் நினைவிலேயே, ஆனந்த நிலையில் தோய்ந்திருந்தது. அதனால் அவருக்குப் புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் சாத்தியமாயிற்று. தீக்குள் விரலை வைத்த போது நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் கிடைத்தது. காற்றுத் தேவனின் உடல் வயிர ஊசி போல ஒளி வடிவமாகக் காட்சி தந்தது.

    Share
  • ஆராதனா

    -ஷைலஜா

     சின்னக்கடிதம்தான் ஆனால் அது மிகப்பெரிய விஷயத்தை தெரிவித்துவிட்டது. என்றாவது ஒருநாள் இப்படி ஒரு சம்பவம் நேரிடலாம் என நினைத்து அச்சப்பட்டுக்கொண் டிருந்த அகிலாவிற்கு கடிதத்தைப்படித்ததும் கண்கலங்கித்தான் போனது. அலுவலகம் சென்றிருந்த மகனுக்கு உடனே டெலிபோனில் விஷயத்தை தெரிவித்தாள்

    அடுத்த சில நிமிடங்களில் மூச்சிறைக்க வீடுவந்த திவாகரிடம் கடிதத்தைக்காட்டினாள்.”எட்டுவருஷ உறவை வெட்டிக்கொண்டு போய்விட்டாள் ஆராதனா!.எப்படிடா அவளுக்கு நம்மைப்பிரிய மனசுவந்தது? என்னைவிட அவளுக்கு உன்மேல் எத்தனை பாசம் நேசம் அன்பு எப்படிவேண்டுமானாலும் வைத்துக்கொள் அதையெல்லாம் மறந்து போனமாதிரி தெரியலை திவா எல்லாத்தியும் துறந்துபோன மாதிரி ஒரே வாக்கியத்தில் எழுதிவிட்டாளே, இந்தப்பிரிவை நாம் எப்படியடா தாங்கப்போகிறோம்?”

    அகிலாவின் நா தழுதழுக்கும் வார்த்தைகளில் நிலைகுலைந்துபோனான் திவாகர்.

    மௌனம் மட்டும் சிலக்கணங்கள் பேசிக்கொண்டிருந்ததை டீபாய் மீதிருந்த தொலைபேசி ஒலி எழுப்பிக் கலைத்தது.

    “சீக்கிரம் ரிசீவரை எடு திவா நம்ம ஆராதனாவாகத்தான் இருக்கும்…பஸ் ஸ்டாண்டுபோய் மனசு மாறி இருக்கும் அவளால் நம்மைவிட்டெல்லாம் இருக்கமுடியாதுடா…வந்துடுவா பாரேன்..போனை எடு சீக்கிரம்”

    திவாகரும் ஆர்வத்துடன் ரிசீவரை எடுத்தான்.”ஹலோ’ என்பதற்குபதிலாக,”ஆராதனா?” என்று பரபரப்பாய் கேட்டான்.

    “ஆராதனாவும் இல்ல அவரோஹனாவும் இல்ல..நான் பூஜா ,உங்க தர்ம பத்தினி” என்று கிண்டலாய் எதிர்முனையில்குரல்வரவும் திவாகர் ஏமாற்றமுடன்,”நீயா?” என்றுகேட்டுவிட்டு,”என்ன அதிசியம் செல் போன்லதான் எனக்குப்பேசுவாய் இன்னிக்கு என்ன வீட்டுபோனுக்கு செய்கிறாய்?” என்றான் சற்று எரிச்சலுடன்.

    ”வாயும் வயிறுமாய் இருக்கிறவளை வையாதடா திவா” அகிலா மெல்லியகுரலில் அவன் அருகில் வந்து சொன்னாள்.

    “என்ன சாருக்கு மூட் அவுட் போலிருக்கு? ஏன் அங்கே அந்தத் திருநங்கை அருகில் இல்லையோ?” என்று நக்கலாய்க்கேட்கவும் திவாகருக்குக்கோபம் தலைக்கேறிவிட்டது. கல்யாணமாகிவந்த இந்த ஒருவருஷத்தில் ஆராதனாவை பூஜா அவமதிக்காத நாளே இல்லை.

    “உன் புருஷன் உயிரைக்காப்பாத்தின தெய்வம்! அவள் மட்டும் இல்லையென்றால் அன்னிக்கு சாலைவிபத்தில் திவாகர் போய்ச்சேர்ந்திருக்கணும், செல்போனில் பேசிக்கொண்டே ரோடைக்கடந்து கொண்டிருந்தவன் கண்ணில் எதிரில் தலை தெறிக்க வந்துகொண்டிருந்த லாரி, மோதித்தள்ள இருந்ததை எங்கிருந்தோ ஓடி வந்து கையைப்பிடிச்சி இழுத்துக்கோண்டு சாலைஓரம் கொண்டுபோய் காப்பாத்தின மனித தெய்வம்! அன்றிலிருந்து அவள் எங்க குடும்ப உறுப்பினர் ஆகிவிட்டாள்.அவளைக்கரிச்சிக்கொட்டாதே பூஜா…உன்னைவிட ஓரிரு வருஷம்தான் அவள் மூத்தவள்!” என்று அகிலா ஒருமுறை பூஜாவிடம் சொன்னபோது,” இன்னொண்ணும் கேள்விப்பட்டேனே ஆராதனா உங்க மகன் மேல காதல் பைத்தியமா இருந்ததாக? எல்லாத்தியும் மறைச்சி என்னைக்கல்யாணம் செய்துகிட்டீங்க இல்ல? நல்ல படிப்பு நல்ல வேலை பார்க்கவும் அம்சமா இருக்கார் மாப்பிள்ளைன்னு எங்கப்பா ஏமாந்துபோயிட்டார். “ என்று சீறினாள்.

    “என்னம்மா உன்னை நாங்க ஏமாத்திட்டோம்? ஆராதனா எங்க வீட்டோடு இருக்கற விஷயத்தை சொல்லவில்லைதான் அது மகா குத்தமா என்ன? ஆனா ஆராதனா என் மகன் மேல காதல் பைத்தியமா இருந்ததை பக்குவமா சொல்லி அவள் மனதை மாத்தித்தான் எங்களோட தங்க வச்சிருக்கோம்.யாருமில்லாத அனாதைக்கு அடைக்கலம் தந்து ஆதரிப்பதை கேவலமாய் பேசாதே பூஜா ! ஆராதனா படித்தவள் புத்திசாலி சமுக சேவகியும் கூட. அவள் உன் வாழ்க்கையில் குறுக்கே வரமாட்டாள்”

    ஆனாலும் பூஜாவின் அலட்சியமும் ஆராதனா மீது அவள்கொண்ட அருவெறுப்பும்தான் இன்றைக்கு அவளை வீட்டைவிட்டு வெளியேறச்செய்துவிட்டது என்பதை திவாகரும் அகிலாவும் அறியாமல் இல்லை.

    ஆராதனா, ஆறுமுகமாயிருந்து பிறகு மாறிய ஒரு திருநங்கைதான். அதனால் வீட்டாரால் புறக்கணிக்கப்பட்டு பல அல்லல்களிடையே சில நல்ல உள்ளங்களின் உதவியால் படித்துமுன்னேறியவள். திருநங்கைளைப் பற்றி சமுதாயத்தில் சரியானவிழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அவர்களைக்கேலியாகவும் அருவெறுக்கும் ஜீவன்களாகவும் நோக்கும் மனிதர்களிடையே அகிலா முற்றிலும் மாறுபட்டவளாய் இருந்தாள். ஏற்கனவே இறந்துபோன கணவன் விட்டுப்போயிருந்த வள்ளல்குணமும் இயற்கையாக அமைந்த இரக்க குணமும் சேர்ந்து ஆராதனாவை நிரந்தரமாய் தன்னோடு வைத்துக்கொள்ள எண்ணம் எழுந்தது. தாய் சொல்லை என்றுமே திவாகர் தட்டியதில்லை .ஆராதனா அகிலாவின் வீட்டில் அடைக்கலமானாள். ஆரம்பத்தில் மனதளவில் பெண்ணாக ஆகிவிட்டதாலும் உடலும் அந்த மாற்றத்திற்குத் தயாராகிவிட்டதாலும் திவாகரின் மீது ஆராதனாவிற்குக்காதல் பிறந்துவிட்டது.
    ஏச்சும் எள்ளலும் நிறைந்த சமுதாயத்தில் அன்பையும் பாசத்தையும் அளவுக்கு அதிகமாகவே காட்டும் குடும்பத்தில் மனம் ஒன்றித்தான் போனது.

    அகிலா ஆராதனாவிடம் பக்குவமாய் சொல்லிப்புரியவைத்தாள், திவாகரை மணக்க இயலாதென்பதைப்புரிந்து் கொண்டாள் ஆராதனாவும். அதற்குப்பின் அவள் திவாகரைக் காதல்கண்ணோட்டத்தில் பார்க்கவே இல்லை . திவாகரின் திருமண ஏற்பாட்டில் மனமுவந்து பல வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தாள். உற்றுப்பார்த்தாலே ஒழிய அல்லது பேச்சுக்கொடுத்தாலே தவிர ஆராதனா திருநங்கை என்கிற விவரம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.அந்த வனப்பும் உடல் நிறமும் பெண்மையின் நளினமும் அவளை நங்கையாகவே அடையாலம் காட்டின.

    இந்த சமுதாயம் ஏன் இன்னும் திருநங்கைகளை சரியாகப்புரிந்துகொள்ள மறுக்கிறது? ஆராதிக்க வேண்டியவர்களை ஏன் அலட்சியப்படுத்துகிறது?

    திருநங்கைகள் யானைபலம் மிக்கவர்கள்!

    யானை பலம் என்று பலத்திற்கு உண்மையான உதாரணமாக திகழும் யானைக்குத் தனது பலம் பற்றிய தெளிவானதொரு அறிவு இருந்தால், பாகனின் கட்டளைக்குப் பணியுமா? அல்லது தனது உணவுக்காக மனிதனிடம் பிச்சை எடுக்குமா?

    அதுபோலவேதான் திருநங்கைகளுக்கும் தனது பலம் என்ன என்பது தெரியாமல் போய், பலவீனம் என்ன என்பது மட்டுமே மிகவும் தெளிவாக தெரிந்திருக்கிறது. அதனால்தான் ஆராதனா இன்று ஒற்றை வாக்கியத்தில்”உங்களை எல்லாம் விட்டு நீண்டதூரம் விலகிச்செல்கிறேன்” என்று எழுதிவைத்துவிட்டுப்போய்விட்டாள்! கோழை! தன் பலம் தெரியாத கோழை!
    அகிலா சேலைத்தலைப்பில் கண்ணைத்துடைத்துக்கொண்டாள்.

    திவாகர் பெருமூச்சுவிட்டபடி ரிசீவரை கீழே வைத்தான்.

    “அம்மா! இவளால்தான் ஆராதனா இப்படி நம்மைவிட்டு விலகிப்போவதாய் கடிதம் எழுதிவச்சிட்டுப் போயிட்டா..பாவம்மா எங்கபோயி எப்படி திண்டாடுகிறாளோ? இன்னமும் நம் சமூகத்தில் திருநங்கைகளை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு ஆதரிக்க பலருக்கு மனம் இல்லை அம்மா ..கேலியும் கிண்டலும் தான் அவர்கள் பார்வையில்..திருநங்கைகள் என்றால், கை தட்டி, பாலியல் தொழில் செய்து பிழைப்பவர்கள் மட்டுமே என்றிருந்த சமூக அவலநிலையை மதிப்புமிக்கதொரு நிலையாக மாற்றி அவர்களுக்கும் -சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சம நிலையை உருவாக்கி தர வேண்டும் என்ற எண்ணத்தை பரவலாய் செயல்படுத்த நாம் திட்டமிட்டிருந்தோம்.. அதற்கு ஆராதனாவை முன் மாதிரியாய் நிறுத்த நினைத்திருந்தோம் எல்லாவற்றையும் பூஜா சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டாள்.

    “ஆமாம்ப்பா திவா…உனக்குக்குழந்தைபிறந்ததும் முதல்ல ஆராதனாவைத்தான் ஆசிர்வாதம் செய்ய சொல்லணும்னு நினைத்தேன் அதைப்போல உன்னதம் ஏதுமில்லை…உனக்குக்கொடுத்துவைக்கலை திவா…ஆனாலும் நாம விடாம அவளைத்தேடிக் கண்டுபிடிக்கணும் …இந்தவீட்டில் நீ பூஜாவோட வாழ்ந்துகொள்ளப்பா ஆனா வேற வீட்டில் அவளோட நான் வாழத்தான் போறேன்”

    “என்னம்மா நீங்க? சின்ன வயசுலேயே அப்பா நிரந்தரமா போயிட்டார். இப்ப நீங்களும் என்னைவிட்டுப்பிரியப்போறேன்னு கனவிலும் சொல்லாதீங்கம்மா…வாழ்க்கையில் பிடிப்பு இருப்பதே மனசுக்கு அணுக்கமான சில மனி்தர்களாலும் நினைவில் நிற்கும் சில நல்ல விஷயங்களாலும்தான்,,”

    பூஜாவின் சீமந்தம் முடிந்து பிறந்தவீடுபோகும்போது வழக்கத்தைவிட பூரிப்பான முகமுடன் சென்றாள்.ஆராதனாவைத் துரத்திவிட்ட மகிழ்ச்சிதான் அது என்பதை அகிலாவும் திவாகரும் புரிந்துகொண்டு உள்ளுக்குள் வெந்துபோனார்கள்.

    இடைக்காலத்தில் இருவரும் ஆராதனாவைத்தேட எடுத்த முயற்சிகள் ஒன்றும் பலனளிக்கவில்லை.

    திவாகரை அச்சில்வார்த்தாற்போலிருந்த மகன் கௌதமுடன் பூஜா மீண்டும் வீடுவந்தவள் கைக்குழந்தையை அகிலாவிடம் விட்டு வேலைக்குப்போக ஆரம்பித்தாள்…அகிலாவால் தனி ஒருத்தியாய் குழந்தையைப்பார்த்துக்கொள்ள சிரமமாக இருக்கவே “பூஜா! நீ வேலைக்குபோயாகவேண்டிய கட்டாயம் இல்லை .குழந்தைபிறக்கிறவரை பொழுதுபோக்குக்கா போனது சரி இப்போ குழந்தையை பார்த்துக்கொள்ளணும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தையை பிரிஞ்சி எட்டுமணி நேரம் வேலைக்குப்போயே ஆகணுமா?”
    எ்ன்று கேட்டதும்தான் தாமதம் குழந்தையைத்தூக்கிக்கொண்டுபோய் அடுத்த தெருவில் இருக்கும் தூரத்து உறவினர் வீட்டில் விட்டுவிட்டாள்.

    “ எனக்கு அவங்க அக்கா மாதிரி பாவம் அவங்களுக்கு மூணும் பொண்ணு ..என் பையனை ராஜா மாதிரி பாத்துக்கறேன்ன்னு சொல்லிட்டாங்க…“

    கௌதமை ஐந்துவயது வரை அங்கேயே விட்டுவிட்டு அலுவலகம் போக ஆரம்பித்தாள் பூஜா.. எப்போதாவதுதான் வீட்டிற்கே அழைத்துக்கொண்டுவருவாள்.திவாகருக்கே தன் மகன் முகம் மறந்துவிடும் போலாகிவிட்டது.

    ஒருநாள் கூச்சலிட்டான்,” இனிமேலும் கௌதமைக்கொண்டு அங்கே விட்டாயானால் நான் பொல்லாதவனாகிவிடுவேன்…சாது மிரண்டால் என்னாகும் தெரியுமா?”

    திவாகரின் குரலில் சற்று வெலவெலத்துத்தான் போனாள் பூஜா.

    ஆயிற்று, கௌதம் வீடு வந்து நிரந்தரமாக தங்க ஆரம்பித்து ஒருவாரமாகிவிட்டது.

    “ஏன்மா இனிமே பிரியா வர்ஷா அதிதி கூட நான் விளையாட முடியாதாம்மா?” கௌதம் கேட்டபோது,”ஆமாண்டா அங்கேருந்து உன் துணிமணி பொம்மை எல்லாம் கொண்டு வந்திடு..உங்கப்பா
    கூச்சல்போடறாரே?” என்று முணுமுணுத்தாள் பூஜா
    –ஆயிற்று, கௌதம் வீடு வந்து நிரந்தரமாக தங்க ஆரம்பித்து ஒருவாரமாகிவிட்டது. ஐந்து வருட மாக அந்த மூன்று பெண் குழந்தைகளிடம் அதிகம் பழகியதாலோ என்னவோ கௌதம் பூஜாவைப்போல அதிர்ந்து பேசாமல் மிகவும் மென்மையாக நடந்துகொண்டான் பழகும் விதத்தில் ஒரு வித்தியாசம் தெரிந்தது

    அன்று அவனுக்குப்பள்ளி விடுமுறை. பூஜா அலுவலகம் போய்விட்டாள்.திவாகர் தலைவலி என வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான்.

    அகிலா பேரனுக்குப்பிடித்த சேமியா பாயசம் செய்துவிட்டு கௌதமை அழைக்க அவன் அறைக்குப்போனாள்.
    கதவு சற்று ஒருக்களித்து மூடப்பட்டிருந்தது. தூங்குகிறானோ என்ற தயக்கமுடன் மெல்ல கதவைத்தள்ளியபடி உள்ளே சென்றாள் அகிலா.

    அங்கே அவள் கண்ட காட்சி தூக்கிவாரிப்போட சட்டென திரும்பி ஹாலிற்குவந்தாள்.அங்கே சோபாவில் சாய்ந்திருந்த மகனைத்தட்டி எழுப்பி தன்னோடு வரும்படி சைகை காட்டினாள். திவாகரும் குழப்பமாய் தொடர்ந்தான்.

    இருவரும் ஓசைப்படாமல் கௌதமின் அறைக்குள் போனபோது கண்ணாடிமுன் நின்று தன்கண்ணுக்கு மை வைத்துக்கொண்டிருந்தான் கௌதம். பெண்குழந்தைகளின் கவுனை அணிந்திருந்தான். தலையில் பூவினை செருகி இருந்தான். லேசான வெட்கம் முகத்தில் தவழ தன்னைக்கண்ணாடியில் ரசித்துக் கொண்டிருந்தான்.

    அகிலாவும் திவாகரும் அதிர்ச்சியும் குழப்புமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

    Share
  • நாராய ணாவென்னா நாவென்ன நாவே?

    நாராய ணாவென்னா நாவென்ன நாவே?

    நாமந்தான் சொல்லா நாவென்ன நாவே? ()

    கன்றினத்தைத் தன்வசமாய் அமுதூட்டும் நாமம்
    குன்றினத்தைக் குடையாக்கி அடைகாக்கும் நாமம்
    கொண்டை மயிற்சிறகை அணியாக்கும் நாமம்
    தண்டை மணிசிணுங்க அரவடக்கும் நாமம் ()

    குழலூதி மெய்மறக்கச் செய்கின்ற நாமம்
    அழலேகா வண்ணமே அருளூற்றும் நாமம்
    உறியிருந்த மனம்திருடிச் சுவைக்கின்ற நாமம்
    அறியாமல் செய்யவைத்து அறிகின்ற நாமம்()

    தேனுக்கும் மேலாகத் தெவிட்டாத நாமம்
    வானுக்கும் மண்ணுக்கும் வளங்கூட்டும் நாமம்
    கோவிந்தா எனும்போது குழைகின்ற நாமம்
    கோபாலா என்றாலோ குடியேறும் நாமம்()

    Share
  • பிக்கோலிம் புளுகு – 3

    தேமொழி

    (தொடர்ச்சி)

    முன் குறிப்பு:
    இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.

     

    இப்ரம்பூர் மோதல்:

    தங்கள் பேரரசின் தெற்கு எல்லையைப் பாதுகாக்க விரும்பிய மராட்டியர்கள் அது குறித்து கோவாவின் ஆட்சி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்பினர். ஆனால் அவ்வதிகாரிகள் அதற்கு உடன்பட மறுத்தனர் [9] [10]. அத்துடன் ஒரு கால கட்டத்தில் போர்சுக்கீசியர்கள் தங்களது கடற்படையை வடக்கு நோக்கி நகர்த்தி, கோலாப்பூர் பகுதியினை ஊடுருவி நோவா கான்கியுஸ்டாஸ் பகுதியில் உள்ள மராடியர்களை விரட்டியடிக்கவும் எண்ணினர். ஆனால் இந்த எண்ணத்தை அவர்கள் நிறைவேற்றத் தயங்கியதற்கு இருந்த ஒரே காரணம், இது மராட்டியர்களுக்கு வெறுப்பை ஏற்றி அவர்களை டச்சுக்காரர்களுடன் கூட்டணி அமைக்கச் செய்து, அந்தக் கூட்டணி போர்ச்க்கீசியர்களுக்கெதிராக மாறி அவர்களுக்கேப் பாதகம் ஏற்படுத்தக் கூடும் என்ற எச்சரிக்கை உணர்வினால்தான் [12].

    மோதலின் முதல் துவக்கம் ஏற்பட்டது பேர்நேம் பகுதியில் உள்ள சிறிய ஊரான இப்ரம்பூரில். இப்ரம்பூர் முக்கிய சாலை வழித்தடங்களுக்கும் சப்போரா (Chapora River) ஆற்றுப் பகுதியிலும் அமைந்திருந்தது. போர்ச்சுக்கீசியப் படைகள் இப்ரம்பூரில் குவிக்கப்படுவதாக பிக்கோலிம் பகுதியில் இருந்த மராட்டியர்களுக்குத் தவறான தகவல் கிடைக்கிறது [9]. ஆனால் உண்மையில் அந்த சமயத்தில் போர்ச்சுக்கீசியப் படைகள் எல்லையில் இருந்து வெகு தொலைவில் இருந்த ‘அலோர்னா’ (Alorna Fort) கோட்டைப் பகுதியில்தான் இருந்தது [13].

    மராட்டியர்கள் தங்கள் நாட்டின் எல்லையைக் கடந்து குதிரைப்படையை இப்ரம்பூருக்கு உளவு பார்க்க அனுப்பி வைத்தனர் [9]. ஆனால் போர்சுக்கீசியப் படை அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி அங்கு இல்லாது போனாலும், போர்ச்சுக்கீசியர்கள் படை அவ்விடத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கக்கூடும், எனவே இப்ரம்பூரை கண்காணிப்பது அவசியம் என்று மராட்டியப் படைத் தளபதி கருதினார். பிக்கோலிம் மற்றும் பேர்நேம் பகுதியின் போர்சுக்கீசியப் படைகள் ‘மேனுவல் டி எலாமினோஸ்’ (Manuel de Elaminos) தலைமையின் கீழ் வழிநடத்தப் பட்டது. இப்டைத் தளபதிக்கு மராட்டியர்கள் இப்ரம்பூரில் நுழைந்து விட்ட தகவல் கிடைத்தது. மராட்ரடியர்களின் ஊடுருவல் தகவல் கோவாவில் உள்ள வாஸ் கோட காமா நகருக்கும் அறிவிக்கப்பட்டது [13]. இத்தகவல் அறிந்ததும் போர்ச்சுக்கீசியர்கள் அலோர்னா கோட்டையினை பாதுகாப்பில்லாத நிலையில் விட்டு விட்டு இப்ரம்பூருக்கு படையை நகர்த்தி அங்கிருக்கும் மராட்டியர்களைத் தாக்க முடிவு செய்தனர் [13].

    ஆகஸ்ட் 1640 ஆம் ஆண்டு நடந்த போர்ச்க்கீசியத் தாக்குதல் விரைவாகவும் திறம்படவும் நடத்தப்பட்டது. இப்ரம்பூருக்குச் செல்லும் மேற்கிலும் வடக்கிலும் இருந்த இரு முக்கிய வழித்தடங்களும் சூழ்ந்து கொள்ளப்பட்டது. நகருக்கு அதிக சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் பொருட்டு காலாட்படைகளையே அடுத்தடுத்து அனுப்பி போர்ச்சுக்கீசியர்கள் போரை நடத்தினர். காலாட்படையினறுக்குச் சிறிய சேதம் ஏற்பட்ட நிலையில், மராட்டியர்கள் குவித்திருந்த சேனையின் அளவைக் கண்டதும் போர்சுக்கீசியர்கள் பின்வாங்கத் தொடங்கினர் [9]. போரில் தங்கள் கை மேலோங்கியிருப்பதை உணர்ந்த மராட்டியர்கள் போர்சுக்கீசியர்களை அலோர்னா கோட்டைக்கு செல்லும் வழியில் விரட்டியடிக்க முடிவெடுத்தனர் [9]. மராட்டியர்களின் குதிரைப்படை பின்வாங்கிய போர்ச்சுக்கீசியர்களின் காலாட்படையை மேலும் எல்லையையிலிருந்து துரத்தியது. தொடர்ந்த போரின் காரணமாக இப்ரம்பூரின் வடதிசைப் பாதுகாப்பில் இருந்த போர்ச்சுக்கீசியப் படைகள் மேற்குப் பகுதியில் நடைபெறும் போரில் உதவி புரிய வரவழைக்கப் பட்டனர் [9].

    ஆனால் ஒப்பிடும்பொழுது அளவில் மிகக்குறைவாக இருந்த வடதிசையின் போர்ச்சுக்கீசியப் படை, இப்ரம்பூரில் இருந்து முன்னேறிய மராட்டியக் காலாட்படைகளினால் தடை செய்யப் பட்டது [9]. அதனால் முதல் நாள் போரின் இறுதியில் இரு துருப்புகள் மட்டுமே எஞ்சின, இழப்புகளும் குறைவாகவே இருந்தது. அத்துடன் மேற்குப் பகுதியின் போர்சுக்கீசியப் படை கையாண்ட புத்திசாலித்தனமான போர் நடவடிக்கைகளினால் ஒரு ஒழுங்கு முறையில் கட்டுப்பாட்டுடன் அவர்களால் பின்வாங்க முடிந்தது [9]. ஆயினும், போரின் தீவிரமும், மராட்டியச் சேனையின் பெரும்பான்மை பலமும் போர்சுக்கீசியர்களால் உடனடியாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அத்துடன், இம்ரம்பூர் மக்கள் மராட்டியப் படைகளை ஆதரித்ததுடன் அவர்களது படைகளையும் பலப்படுத்திக் கொள்ள உதவியுள்ளனர் என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளும் நிலைக்குப் போர்சுகீசியர்கள் தள்ளப் பட்டனர். இந்துக்கள் பெரும்பானையாக வசிக்கும் இப்ரம்பூர் போன்ற மற்ற பிற எல்லைப்புற ஊர்களுக்கும் இம்பரம்பூர் ஒரு தவறான முன்மாதிரியாக இருந்திருக்கும் என்றும் அவர்கள் நம்பத் தொடங்கினர் [14].

    தொடர்ந்து இரண்டு நாட்களாக அலோர்னா கோட்டையினை நோக்கி மராட்டியர்கள் விரட்டிய பின்பு கோவாவின் வாஸ் கோடா காமா பகுதியிலிருந்த போர்ச்சுக்கீசியப் படை போர்ச்சுக்கீசியர்களின் உதவிக்கு வந்து சேர்ந்தது [9]. இதனால் ஏற்பட்ட சமஅளவுள்ள படை பலத்தினால் போர்ச்சுக்கீசியர்களுக்கு மராட்டியர்களை எதிர்த்து நிற்கும் திறன் ஏற்பட்டது. அடுத்த நாள் மேற்கொண்ட திறமையான நடவடிக்கைகளினால் இருபடைகளும் ஒன்றை ஒன்று முன்னேறவிடாதவாறு முடக்கப் பட்ட நிலை ஏற்பட்டது. அடுத்து தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இந்த நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் நிகழவில்லை. இருதரப்பினரும் தேவையற்ற, ஆபத்து நிறைந்த வழிகளை மேற்கொண்டு இழப்புகளை அதிகப்படுத்தும் நிலையினைத் தவிர்க்க விரும்பினர் [9]. இருதரப்பினரும் தற்காப்பிற்காக மட்டுமே தாக்குதலை நடத்த முயன்றனர். போரின் முதல் இரு துவக்க நாட்களில் மராட்டியப் படை ஏற்படுத்திய சேதங்கள் போர்ச்சுக்கீசியர்களை அலோர்னா கோட்டையினை நோக்கி பின் வாங்க வைத்திருந்தது. ஆனால் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டு பின்வாங்குதல் நிறுத்துப் பட்டிருந்தது. தனது திறமையான குதிரைப்படையினை கையாண்ட விதத்தின் மூலம் போர்ச்சுக்கீசியர்களைத் தாக்காமல் அவர்களின் முன்னேற்றத்தை மட்டுமே மராட்டியப் படை தடை செய்தது [9].

    ஜூலை மாதத்தின் துவக்கத்தில், இம்பர்ம்பூரில் இருந்து வெகு தொலைவிற்கு நகர்த்தப் பட்டு விட்ட காரணத்தினால், போர்ச்சுக்கீசியர்கள் பீரங்கிகளை போரில் உபயோகப் படுத்த தங்கள் மேலிடத்தின் அனுமதியைப் பெற்றனர். பீரங்கித் தாக்குதல் மராட்டியக் காலாட்படையினை செயலிழக்கச் செய்ய உதவியது, ஆயினும் இத்தாக்குதலினால் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறைவே. தொடர்ந்த பீரங்கித் தாக்குதல் மராட்டியக் குதிரைப் படைகளைக் குறிவைத்தது. இதனால் சுடப்படக்கூடிய தாக்குதல் எல்லையிலிருந்து மராட்டியப் படைகள் பின்னடைந்தன [9].

    மராட்டியர்கள், அலோர்னா கோட்டையின் அருகாமையை விட்டு விலகி, மீண்டும் ஒருங்கிணைத்து, சாலையின் தென்திசையில் இருந்து வேகமாக முன்னேறித் தாக்கி எதிரியின் பீரங்கிப் படையைச் சிதறடித்து அவர்களுக்கு பேரிழப்பை உருவாக்கத் திட்டமிட்டனர் [9]. போர்ச்சுக்கீசியர்களின் கைவசம் இருந்த உயர் தொழில்நுட்ப போர்க்கருவிகளுக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் தங்களது போர்த் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு மராட்டியப் படைகள் தள்ளப்பட்டன.

    மராட்டியர்களின் போர்த்திட்டத்தைப் புரிந்து கொண்ட போர்ச்சுகீசியர்கள் விரைவில் தங்களது படைகளைப் பல பிரிவுகளாக்கி புதிய வேகத்துடன் முன்னேறிய மராட்டியப் படையினை எதிர்த்துத் தாக்கினர். இத்தாக்குதல் முறையினை சற்றும் எதிர்பாராத மராட்டியப் படை, எதிர் தாக்குதலில் நிலைகுலைந்து மேலும் தென் திசையை நோக்கி, சப்போரா ஆற்றினை நோக்கி நகர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது [9].

    சப்போரா ஆற்றினை அடைந்த மராட்டியக் குதிரைப் படை, மராட்டிய எல்லைக்குள் பின்வாங்கி தந்திரமாக போர்ச்சுக்கீசியப் படையினை அவர்களது பாதுகாப்பான கோவா பகுதியில் இருந்து நகரச் செய்து தங்களது மராட்டிய எல்லைக்குள் இழுக்க நினைத்தனர். ஆனால் போர்ச்சுகீசியப் படையோ சப்போரா ஆற்றினை நோக்கி முன்னேறுவதைத் தவிர்த்தனர் [9]. ஜூலை மாதத்தின் முடிவில் மராட்டியப் படைகள் தங்கள் எல்லைக்குள் ஒருங்கிணைந்தன. அலோர்னா கோட்டையினைப் பலப்படுத்திய பிறகு, ஆல்பெர்ட்டோ பின்ட்டோவின் தலைமையின் கீழ் போர்ச்சுக்கீசியப் படைகள் சப்போரா ஆற்றின் வடக்கில் பரவலாக நிலைகொண்டு தங்களது நிலையினை நன்கு பலப்படுத்திக் கொண்டனர் [11].

    (தொடரும்)

    படம் உதவி:
    அலோர்னா கோட்டை – http://www.portugal-india.com/en/sites/default/files/alorna4.jpg

    ______________________________________

    References:
    [1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
    [2] Thompson op cit. p 208.
    [3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
    [4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
    [5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
    [6] Thompson op cit. p 199.
    [7] Thompson op cit. p 200.
    [8] Thompson op cit. p 201.
    [9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
    [10] Thompson op cit. p 203.
    [11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
    [12] Thompson op cit. p 211.
    [13] Thompson op cit. p 212.
    [14] Thompson op cit. p 206.
    [15] Kansarpal (http://www.hindubooks.org/templesofindia/sarvam_sakti_mayam/goa/kansarpal.htm) Hindu religious and cultural locations
    [16] Thompson op cit. p 215.
    [17] Thompson op cit. p 219.

    Further reading
    Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868
    Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996
    Sakshena, R.N, Goa: Into the Mainstream, Abhinav Publications, 2003

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
    சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து

    திருவாசகத்து சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் இந்தக் கடைசி நான்கு வரிகளில் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்’ என்பதை மிகவும் ஊன்றிப்பார்த்தால் புரியும், நாம் பாடும் பாடலின் பொருளை நாம் சரியாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதில் எத்தனை முனைப்பாக இருக்கிறார் என்பதும் தெரியவரும்.

    வடமொழியில் பாடப்படும் வேதத்தின் சாரமாகவே தமிழில் கொடுக்கப்பட்டதுதான் தேவார திருவாசகமும், திவ்வியப்பிரபந்தங்களும் என்பதை நம் முன்னோர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் சொல்லி வந்தனர்தாம். வடமொழி வேதங்கள் அவ்வளவு சுலபமாக அறியப்படுபவை அல்ல. அப்படியே வேதங்களை நாம் செவிவழியாகப் பயின்று அதை சரியானபடி படித்தாலும் பாடினாலும் அதன் பொருள் நிச்சயமாக நாம் அறிந்ததுதானா என்ற கேள்வி கூட வரும். இதனால் எல்லாம் வேதங்களுக்கும் வேதப் படிப்புக்கும், வேத ஞானத்துக்கும் நாம் எதிர்மறையாகப் பேசப்போவதில்லை. வேதங்களின் நாயகன் இறைவன் என்பதும் அந்த வேதமானது நம் சனாதன தர்மத்தின் ஆணிவேர் என்பதும் பாரத ஆன்மீக வரலாற்றில் பன்னெடுங்காலமாகவே போற்றப்பட்டு வந்ததுதான். இங்கு நாம் சொல்ல வந்த கருத்து கூட கையிலே வெண்ணெயிருக்க நெய்க்கலைவானேன், என்பது மட்டுமே

    ஈழத்தைச் சேர்ந்தவரும், வடமொழியில் தேர்ந்து, பைபிளையும் பயின்றவருமான தமிழ்ப் புலவர் சாமிநாதசர்மா, தேவாரத்தை பல்வேறு வகையில் வேதங்களின் மூலக் கருத்தோடு இணைத்து நூறாண்டுகளுக்கு முன்பாகவே நூல் படைத்திருக்கிறார். மானிடராய பிறந்த ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல் தேவாரம் என்று எழுதுவதோடு வேதத்தின் பொருளை அறிந்து கொள்ள தேவாரம் பாடல்களைப் பொருளுணர்ந்து படித்தால் போதுமானது என்பார்

    பொருளுணர்ந்து பாடவேண்டும் என்கிறபோது, அதுவும் தேவாரப் பாடல்களை ஆழமாக உள்வாங்கி, உணர்ந்து பாடும்போதே அந்தப் பாட்டில் பொருள் நமக்கு சாதாரணமாகவேப் புரியும். சில சமயங்களில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமான பொருள் தரும் கட்டங்களும் வரும். அதில் ஒன்றுதான் அப்பர் சுவாமிகள் பாடிய ’நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்’ என்ற ஒரு அருமையான தேவாரப் பாடல். இதன் ஆழமான பொருளை திரு லோகநாதன் அவர்கள் சமீபத்தில் ஒரு மடலில் தந்துள்ளார். அந்தப் பாடலின் விளக்கத்தை அவர் மொழியில் கீழே தந்துள்ளோம்.

    வேதங்களிலிருந்து ஒரு சுலோகமும் அறியாதவனும் பல நாடுகளின் நல்ல ஞானியாக எழுந்துள்ளான். இவ்வாறு கோயில்களே இல்லாத பண்பாடுகளிலும் நல்ல ஞானிகள் உண்டு ஆக அனைவருக்கும் பொதுவாகிய ஓர் சாதனம் தான் யாது?
    இங்குதான் நம் அப்பர் பெருமான் உதவுகின்றார்.

    இறைவன் தான் யார்க்கும் குடி அல்லாதவன் அவனை நெருங்கினால்தான் அகத்தே ஞனபிரகாசம் தானே மலர்ந்திடும் ஞான அந்தகாரத்தைத் தரும் ஆணவ இருளும் உயிரை நெருங்காது.

    தான் யார்க்கும் குடியல்லாத சங்கரனின் நெருக்கத்தை, தான் யார்க்கும் குடியலாத் தனமையே வளர்க்கும், ஒவ்வொரு ஆன்மாவின் சுயத்தை மீட்கும் அதன் சுதந்திரத்தை வளர்க்கும் ஓர் போதனாமுறையே ஈட்டித் தரும்.

    அடிமைத் தனத்தை வளர்க்கும் எந்த சமய சாதனமும் பயனின்றி விழும், பண்பாட்டின் சிதைவுக்கும் அழிவுக்கும் வித்திடும்.

    அதுதானே இப்பொழுது தமிழ் மக்களிடையே நடந்து கொண்டிருக்கிறது?

    காவி உடுத்தி சாமியாராகத் திரியும் பெரும்பாலோர், அடியார்கள் அனைவரும் தனக்கே அடங்கி அடிமையாகி இருக்க வேண்டும் தன்னையே இறைவனாக நினைத்து தனக்கே உடல் பொருள் ஆவி அனைத்தையும அர்ப்பணிக்க வேண்டும் என்றல்லவா நினைக்கின்றார்கள்?

    இவரகட்கு ஏற்ப பெரும்பாலான மக்களும் இவ்வாறு ஒருவனுக்கு அடிமைப் பட்டு கிடத்தலையே விரும்பி அதுவே தக்க வழி என்று நினைத்து தன் சுயத்தை வளர்க்காது இப்பேற்ப்பட்ட சாமியாரகட்கும் இழக்கின்றார்கள்.

    அடிமை படுத்துபவன் உள்ளத்திலும் அடிமைப் படுகின்றவன் உள்ளத்திலும் ஆண்டவன் இருக்க மாட்டான் என்பதோடு அங்கே ஆணவ மலத்தை விரட்டும் ஞானப்பிரகாசமும் சுடராது.

    பண்பாட்டு வீழ்ச்சியின் முதன் படியே இப்படிப்பட்ட சுயத்தின் இழப்புதான். இன்றையத் தமிழர்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். இதனை நினைக்க மிகவும் வேதனையாகவும் இருக்கின்றது.. இதனால்தான் போலும் உலகிலேயே முதன் முதலில் மனித சுயத்தைப்பற்றி மிக ஆழமாக சிந்தித்து முழங்கிய அப்பர் பெருமானின் “நாம் யாருக்கும் குடி அல்லோம்” எனும் பாடல் போற்றுவாரின்றி வாளே கிடக்கின்றது. இளமை காலத்திலேயே எனை ஈர்த்து எனை சைவன் ஆக்கிய அந்தப் பாடலை இங்கு தருகின்றேன்– அனைவர் உள்ளதிலும் அது ஆழப் பதிய.

    961.

    நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
    நரகத்தில் இடர்படோம் நடலை யில்லோம்
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
    இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
    தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
    சங்கரன் சங்கவெண் குழையோர் காதிற்
    கோமாற்கே நாமென்று மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர் சேவடி இணையே குறுகி னோமே

    ஓர் சிறிய நாட்டின் தலைவனாக இருக்கும் யாருக்கும் அடிபணிந்து அந்நாட்டின் குடியாக இருக்கமாட்டோம், அவ்வாறுசெய்யுங்கால் தண்டித்து கொலை நோக்கோடு வந்தாலும் நமனை அஞ்சோம்; பலவித தண்டனைகள் கொடுத்து வாழ்க்கையைநரகமாக்கினாலும் இடர்படோம் , நடுங்கவுஞ் செய்யோம்; எச்சூழ்நிலையிலும் மனங்குழையாது ஏமாப்புடனேயே இருப்போம்,எவ்வகையான பிணியும் அறியோம் என்பதின் பணிவோம் அல்லோம்; யாது நடந்தாலும் அது இன்பமே எந்நாளும் துன்பமில்லை. இவ்வாறு நாம் இருப்பதற்கு காரணம் தாம் யார்க்கும் குடியல்லாத சர்வ சுதந்திரத் தன்மையான அர்த்தநாரீ வடிவத்துவெண்குழையோர் காதில் அணிந்திருக்கும் சங்கரனை நம் தலைவராய்க் கொண்டு, அவனுக்கே மீளா ஆளாய் நின்று அவனது மலர்களைப் போன்ற சேவடிகளைத் தொழுவதற்கே நாம் குறுகினோம் என்பதால் என்றறிக

    தேவாரப்பாடல்கள் இப்போது முழுமையான பொருளில் தேவாரம் தளத்தில் கிடைக்கின்றன என்பது சிவன் அவன் திருவருள்தான். அதனுடன் திரு லோகநாதன் போன்றோர் இப்படிப்பட்ட ஆழமான பொருளையும் சேர்ந்து நமக்குத் தருவது என்பதும் நமக்கு கூடுதலான இன்பம்தானே.

    இந்தவாரத்தில் ஒரு இனிய பாடலுக்கு விளக்கமளித்த திரு லோகநாதன் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழு தேர்ந்தெடுக்கின்றது. அவருக்கு நம் வாழ்த்துகள்.

    http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-01-20-30-58/2008-12-01-20-31-36/2008-12-01-21-38-40 வல்லமையாளர் திரு லோகநாதன் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த தளத்திற்குச் செல்லுங்கள். நன்றி.

    கடைசி பாரா: சாந்தியின் ‘காகிதக் குறிப்புகள்’ லிருந்து

    அற்புதமானதாகவோ சாதாரணமாகவோ
    ஏதேனும் ஒரு
    கிறுக்கலையாவது பரிசளிப்பது மிக நன்று.
    அதை
    வெறுமையாகவே விட்டுச்செல்வதை விட.

    Share
  • “வரலாற்றின் மறுபக்கம்.”

    செல்வரகு

    (திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு)

    “வரலாற்றின் மறுபக்கம்.”

     

    சத்தியம் தொலைக்காட்சி வழங்கி வரும் உலகத்தரம் வாய்ந்த பிரமாண்ட படைப்பின் தமிழ் வடிவம் “வரலாற்றின் மறுபக்கம்.”

    இது வரைக்கும் பார்க்காத உலகத்தைப் பார்த்து வியக்க வைக்கும் ஆணவக் களஞ்சியமாக , திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் வரலாற்றின் மறுபக்கம் ஒளிபரப்பாகி வருகிறது .

    ஒவ்வொரு முறையும் உலகத்தில் நடக்கும் ஒரு புதிய நிகழ்வைப் பதிவு செய்து வரும் வரலாற்றின் மறுபக்கத்தில் , வருகின்ற வாரத்தில் ஒளிபரப்பாக இருக்கும் ஆவணத் தொடர்கள் :

    06.05.2013 . உலகத்தில் – இரண்டு முறை வாழலாம் .

    கற்பனைக்கு எப்போதும் தடையில்லை . இன்று இருக்கும் தொழில் நுட்ப வெளியில் மனிதர்கள் கம்யூட்டரின் மூலம் எல்லை கடந்து வாழலாம் -என்ற அறிவின் தேடலைப் பற்றிய ஒர் ஆவணமே “உலகத்தில் இரண்டு முறை வாழலாம்”

    07.05.2013 . பூட்டான் – மகிழ்ச்சியின் உச்சம் .

    தெரியாத மனிதர்களைத் தெரிந்து கொள்ளலாம் . பூட்டான் நாட்டில் தொழில் நுட்ப வளர்ச்சிகள் அவ்வளவாக இல்லையென்றாலும்,  உலகத்தின் மகிழ்ச்சியான மனிதர்கள் அங்கு வாழ்வதாகச் சொல்கிறார்கள். பூட்டான் மக்களின் கலாச்சாரத்தையும் , அவர்களின் புத்த மதக் கொள்கைகளையும் தெரிந்து கொள்ளுங்கள் .

    08.05.2013 . புதைந்த – இந்திய சுற்றுச் சூழல் .

    இந்தியா முழுக்க பரந்த ஒர் பார்வையில் சுற்றுச் சூழல் மாசுபாடுகளைத் தத்ரூவமாக ஆவணமாக்கியுள்ளார்கள் .

    09.05.2013 . ஆப்கானிஸ்தான் – ‘காபூல்’ கால்பந்து மன்றம் .

    33 வருடங்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் – பாக்கிஸ்தானுடன் உலக கால்பந்தாட்டத்தில் களம் இறங்கி , தகுதிச் சுற்றுக்குத் தயாராகிய நிகழ்வை இப்போது நீங்கள் காண இது ஒரு நல்லவாய்ப்பாக இருக்கும்.

    10.05.2013 . சௌத்ஆப்பிக்காவின் – முக்கிய நாசக்காரன் .

    சௌத்ஆப்பிக்காவில் , யூஜின் அலெக்சான்டர் எனும் கொடுமைக்காரனைப் பற்றிய சுயசரிதை பார்வையாளர்களை நிச்சயம் அதிர்ச்சியடையச் செய்யும் .

    வாரத்தின் 5 நாட்களும் தவறாமல் வரலாற்றின் மறுபக்கத்தைப் பாருங்கள். உலக நிகழ்வின் உருவாக்கத்தை உணருங்கள் .

    Share
  • பேரா. இ. அண்ணாமலையின் பதில்கள் – 48

    இன்றைய எழுத்துத் தமிழும்  பேச்சுத் தமிழும் வேறுவேறு மொழிகளா?

    -இணையக் குழுக்களில்  விவாதிக்கப்படும் கேள்வி

    வல்லமையில் என்  முப்பத்தைந்தாம் கேள்வி-பதிலில்  இன்றைய எழுத்துத் தமிழுக்கும்  பேச்சுத் தமிழுக்கும் உள்ள சில இலக்கண வேறுபாடுகளை  எழுதினேன். மேலே உள்ள கேள்வி அந்த மாதிரியான இலக்கண வேறுபாடுகள்  இரண்டு தமிழையும் வேறு மொழிகள்  ஆக்குகின்றனவா என்று கேட்கிறது. அதாவது, வேறுபாடு நடை அல்லது வெளிப்பாட்டு வேறுபாடா, அல்லது மொழி வேறுபாடா என்பதே கேள்வி.

    இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு முன் சில விளக்கங்கள் தேவை. எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்ற பெயர்கள் பெரும்பான்மை வழக்கு பற்றித் தரப்பட்ட பெயர்கள். மேடைப் பேச்சும் எழுத்துத் தமிழில் அடங்கும்; எழுதப்படும் கதைகளின் பாத்திரங்களின் உரையாடல்களும் சிரிப்புத் துணுக்குகளும் பேச்சுத் தமிழில் அடங்கும். எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்னும் வேறுபாடு, மொழி வெளிப்படும் ஊடக வேறுபாட்டைக் காட்டுவது மட்டுமல்ல; அது தமிழை வழங்குவோர்களிடையே உள்ள உறவின் தூரத்தையும் நெருக்கத்தையும் பொறுத்து வேறுபடுவது. இந்த வேறுபாடு மொழியின் இலக்கணத்தில் அல்லாமல் நடையிலும் பிரதிபலிக்கலாம். ஆனால், தமிழில் இலக்கணமும் இந்த வேறுபாட்டைப் பிரதிபலிக்கிறது. ஆகவே, இந்த இலக்கண வேறுபாடு மொழியை இரண்டாக்குகிறதா என்பதே கேள்வி.

    கொச்சைத் தமிழும்  கலப்புத் தமிழும் மட்டுமே  பேச்சுத் தமிழ் அல்ல. எல்லாரும்  பொதுவாகப் பொது இடங்களில்  பேசும் தமிழ் ஒன்று உண்டு. அதுவே எழுத்துத் தமிழோடு ஒப்பிடப்படுகிறது. இதைப் போலவே, பண்டிதர்கள், அறிவியல், சட்டம், ஆட்சியை நடைமுறைப்படுத்துவர்கள் எழுதும் தமிழ் மட்டுமே எழுத்துத் தமிழ் அல்ல. சிறப்புத் துறை சாராமல் பொதுக்கல்வி உடையவர்கள் எழுதும் தமிழே இங்கே பேச்சுத் தமிழோடு ஒப்பிடப்படுகிறது.

    ஒரு மொழிக் குழுவின் (linguistic community) மொழி வழக்கில் பல்வேறு மொழிகள் இருக்கலாம்; இதைப் பன்மொழியம் (multilingualism) என்பார்கள். ஒருவருடைய மொழி வழக்கில் பல வட்டார மொழிகளும் பல நடைகளும் இருக்கும். இது இயல்பு. இதைப் பன்மொழியம் என்பதில்லை; இதைப் பல்வழக்கியம் எனலாம். தமிழைப் பள்ளிகளில் கற்றவர்களிடம் உள்ள எழுத்து மொழி சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட மொழி வழக்கு, இருமொழியியமா, இருவழக்கியமா என்பதே கேள்வி.

    ஒரு மொழி இலக்கணத்தின் கட்டுமானம். இந்த இலக்கணம் மொழியின் கட்டை ஒரு கணித வாய்பாடு போல விளக்கும் வரையறை; மொழிக்குச் சட்டம் போலக் கட்டுப்பாடு விதிக்கும் குற்றக் கையேடு அல்ல. மொழி கலாச்சாரத்தின் கட்டுமானமும்கூட. அதன் கலாச்சாரத்தின் கட்டுமானத்தில் மொழிக்குழுவின் வரலாறும் அரசியலும் பெரும் பங்கு பெறும். தன்னை இனங்காட்டுவதாக வரித்துக்கொண்ட மரபுச் செல்வமும் வரலாற்றில் அடங்கும். மரபுச் செல்வத்தில் இலக்கியமும் தொன்மங்களும் பெரும் இடம் பெறும். எழுத்துத் தமிழை அறியாத தமிழர்களும் அதில் உள்ள இலக்கியம் தங்கள் மரபுச் செல்வம் என்ற உணர்வை உடையவர்கள். எழுத்துத் தமிழை அறிந்தவர்களும் காலந்தோறும் மாறிவரும் தமிழ் இலக்கியத்தின் வழிவருவதே இன்று பேச்சு மொழி கலந்து எழுதப்படும் தமிழ் இலக்கியம் என்று பார்ப்பவர்கள். தமிழகத்தின் பேச்சுத் தமிழுக்கு இலங்கையின் பேச்சுத் தமிழோடும் மலையாளத்தோடும் உள்ள தூரம் ஒப்பிடக் கூடியது என்றாலும், இலங்கைத் தமிழ் தனி மொழி அல்ல என்று தமிழின் மொழிக்குழு நினைப்பதற்கு இரண்டையும் பேசுபவர்கள் இலக்கியத்தை இருவருக்கும் பொதுவான கலாச்சாரப் பாரம்பரியமாகக் கொள்வது முக்கியமான காரணம். இதற்கு மேல் அரசியல் காரணமும் இருக்கிறது. இரண்டையும் வேறாகப் பார்ப்பதை விட ஒன்றாகப் பார்ப்பதில் அரசியல் நன்மை இருக்கிறது. மலையாளத்தைப் பொறுத்தவரை இந்த நன்மை தலைகீழானது. கலாச்சாரக் கட்டுமானம் என்னும் வகையில் எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் ஒரு மொழியே. இது சமூக மொழியியலாளர்களின் பார்வை.

    இலக்கண மொழியிலாளரின்  பார்வையில், இரண்டு வழக்குகள் அவற்றைப் பேசுபவர்கள் பயிற்சி இல்லாமலே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் அளவீடு முக்கியமானது. ஒரு வழக்கில் மற்றவருக்குப் புரியாத பகுதி பத்து அல்லது இருபது சதவிகிதத்திற்குள் இருந்தால், அந்த வழக்குகள் ஒரே மொழி என்று சொல்ல அவர்களுக்குத் தடை இல்லை. ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் பகுதி இலக்கண ஒற்றுமையாலும் அகராதி ஒற்றுமயாலும் அமையும். ஒரு மொழியைப் புரிந்துகொள்வது என்பது துல்லியமாகக் கணிக்க முடியாத ஒன்று; மேலும் நபருக்கு நபர் அவருடைய பின்னணியைப் பொறுத்து மாறும் ஒன்று. ஒரே மொழி என்றால் பயிற்சி இல்லாமல் புரிந்துகொள்ளக் கூடியது என்ற கருத்துக்கும் ஒரே மொழி எனபது கலாச்சாரத்தால் கட்டப்படுவது என்ற கருத்துக்கும் முரண்பாடு இருந்தால், பின்னைய கருத்தின் முடிவையே மொழிக்குழு ஏற்றுக்கொள்ளும். பேச்சில் இந்தி பேசுபவர்கள் உருதுவையும் உருது பேசுபவர்கள் இந்தியையும் புரிந்துகொள்ள முடியும் என்றாலும், அவர்களுக்கு இரண்டும் வேறு மொழிகள். இந்த எண்ணம் எழுத்துமுறை முதலாக அரசியல் ஈறாக உள்ள வரலாற்று விளைவினை ஒட்டி எழுவது. இந்தியர்கள் பேசும் ஆங்கிலத்திற்கும் ஆங்கிலேயர்கள் பேசும் ஆங்கிலத்திற்கும் புரிந்துகொள்வதில் அதிகமாகவே இடைவெளி இருந்தாலும் இரண்டும் ஆங்கில மொழியே என்று கருதுவது  வரலாற்றின் பிரதிபலிப்பு.

    நேரடியாக இலக்கண இடைவெளியை  வைத்து ஒரு மொழி, இரு மொழி என்று வேறுபடுத்தலாம் என்பது வரலாற்று மொழியியலாளரின் கொள்கை. அதாவது, இலக்கண மாற்றங்கள் ஒரு அளவிற்கு மேல் அதிகமானால், ஒரு மொழி பிரிந்து இரண்டாகும் என்பதே இந்தக் கொள்கையின் அடிப்படை. ‘எந்த அளவிற்கு’ என்பதற்குப் புரிதலோடு தொடர்பில்லாத ஒரு துல்லியமான கணக்கு இல்லை. எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் உள்ள வேறுபாடு அவற்றின் இலக்கண விதிகளுக்கு (அதாவது வாய்பாடுகளுக்கு) இடையே உள்ள வேறுபாடு; அது அளவில் அதிகம்; அதனால் அவை இரு வேறு மொழிகள் என்பது ஒரு வாதம். வேறு சிலர், அது இலக்கண விதிகளின் வேறுபாடு அல்ல; இலக்கண விதிகளை மீறுவதால் வரும் வேறுபாடு என்பார்கள், இவர்கள் இலக்கணத்தைக் காலத்தால் மாறாத சட்டப்பெட்டகமாகப் பார்ப்பவர்கள்; இந்தப் பார்வையில் புதிய விதிகள் தோன்றுவது பேசுபவர்களின் சோம்பேறித்-தனத்தாலோ கெட்ட புத்தியாலோ நடக்கும் செயல்; அதனால் மொழி விவாதத்தில், இது –தமிழ் பேசும் எல்லாரும் செய்யும் செயலாக இருந்தாலும்- ஒரங்கட்ட வேண்டிய செயல் என்று வாதிடுபவர்கள். இது ஒரு கற்பனையான நிலையை மொழி வழக்கில் பார்த்து, தமிழ் ஒன்றா, இரண்டா என்னும் கேள்விக்கே இடம் இல்லாமல் செய்ய முயலும் செயல்.

    பேச்சுத் தமிழுக்கென்று  ஒரு இலக்கணம் உண்டு என்று ஒப்புக்கொள்பவர்களில் சிலர் சில எளிய விதிகளின் மூலம் எழுத்துத் தமிழைப் பேச்சுத் தமிழோடு இணைக்கலாம். இரண்டுக்கும் உள்ள இலக்கண இடைவெளி பொருட்படுத்தத் தக்கது அல்ல என்று வாதிடுவார்கள். ஆனால். இதை மறுக்கும் தரவுகள் உண்டு. தமிழ்க் குழந்தை பேச்சு மொழிக் கலப்பில்லாத எழுத்துத் தமிழைப் பள்ளியில் கற்க நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எழுத்துத் தமிழ்மட்டும் படித்துவிட்டுப் பேச்சுத் தமிழைப் படிக்கும் வெளிநாட்டவருக்கு அதைப் படிக்கத் தனி மொழி படிக்கும் அளவிற்கு நேரம் எடுக்கிறது. அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் பேச்சுத் தமிழ் பத்துச் சதவிகித அளவுதான் புரிகிறது. (தமிழர்கள் தமிழை வேகமாகப் பேசுவதும் இதற்கு ஒரு காரணம் என்பார்கள்!). தமிழ் பேச மட்டும் தெரிந்தவர்கள் மேடைப் பேச்சை அமர்ந்து கேட்கிறார்கள் என்றால், அவர்களுடைய புரிதல் நூறு சதவிகிதம் என்று அர்த்தமல்ல. இன்னொரு மொழியில் இசைக் கச்சேரி கேட்பதைப் போல, ஒலியின் இனிமைக்கும் பேச்சாளரின் தமிழ்த் திறனுக்கும் மயங்கி இவர்கள் பேச்சைக் கேட்பதும் உண்மை. இதற்குப் புரிதல் முக்கியமல்ல.

    எழுத்துத் தமிழுக்கும்  பேச்சுத் தமிழுக்கும் இடைவெளி  எப்படி இருந்தாலும், பல சமூகக் காரணங்களால் இருபதாம் நூற்றண்டிலிருந்து இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. பேச்சு மொழியின் புதிய தொடரிலக்கணக் கூறுகளும் சொற்பொருளின் கூறுகளும் எழுத்து மொழியில் இடம் பெறுகின்றன. அதில் எழுத்து மொழிக்கே உரிய கூறுகளும் பேச்சு மொழியிலிருந்து வந்துசேர்ந்த கூறுகளும் சேர்ந்து உள்ளன. இதனால் எழுத்து மொழியில் ஒன்றைக் கூற ஒன்றிற்கு மேற்பட்ட அமைப்பு முறைகள் உள்ளன. சொல்லின் உள்ளமைப்புக் கூறுகளும் இப்படியே. இரண்டும் அதிகமாக வித்தியாசமாக இருப்பது சொல்லின் ஒலியமைப்பில் மட்டுமே. சொல்லிலக்கணத்தில் காணப்படும் பெரும்பான்மை வேறுபாடுகள் ஒலியமைப்பால் வருவன. இதற்கான சான்றுகளை என்னுடைய Social Dimensions of Modern Tamil என்ற நூலில் (க்ரியா வெளியீடு) காணலாம்.

    மொழிப் பயன்பாட்டிலும் இடைவெளி குறைந்துவருகிறது. மேடைத் தமிழில் நகைச்-சுவைக்கும், வகுப்பறையில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே நடக்கும் கலந்துரையாடலிலும், செய்தித் தாள்களின் செய்தித் தலைப்பிலும், பேட்டிக் கட்டுரையிலும், திரைப்படத்தின் தலைப்பிலும் பாடலிலும் பேச்சுத் தமிழ் இடம் பெறுகிறது. பேச்சில் புதிதாக உருவாக்கப்பட்ட எழுத்து மொழிக் கலைச்சொற்கள் இடம் பெறுகின்றன.

    இயல்பாக நடக்கும் இந்த மாதிரியான  இடைவெளிக் குறைப்பை ஊக்குவிப்பதே தமிழ் ஒன்றா, இரண்டா என்ற கேள்வியின் தேவையைக் குறைக்கும். இடைவெளிக் குறைப்பில் எழுத்து மொழியில் பேச்சு மொழியின் தாக்கமே அதிகப் பங்கு வகிக்கிறது. இதற்கு மாறாக, தூய தமிழ் –அதாவது பழைய தமிழ்- வேண்டும் என்று பின்னோக்கிப் போய்ப் பழைய இலக்கண நூல்கள் சொல்லுவதைப் போல எழுத விரும்புவது இடைவெளியைக் கூட்டும். அப்படி எழுதுவதைப் போல் பேசி இடைவெளியைக் குறைக்கலாம் என்று சொல்வது எந்த மொழி வரலாற்றிலும் காணாத ஒன்று. தமிழை உன் தாயிடம் படிக்காதே, பழங்கால ஆசானிடம் மட்டுமே படி என்று சொல்வதைப் போன்ற நடக்க முடியாத செயல். இது சூடிதார் போடும் மகளைப் புடவைதான் கட்ட வேண்டும் என்று கட்டளையிடும் மனப்பாங்கின் வெளிப்பாடு. இதைச் செய்ய முடிந்தாலும், அது சர்வாதிகாரத்தினால்தான் முடியும். தமிழின் இயல்பான வளர்ச்சிக்குக் கடிவாளம் போடுவது தமிழை –தமிழ் பேசுபவர்களை- அடக்கியாளும் செயல். தமிழ் அதன் வரலாற்றில் என்றும் அடக்கியாளப் பட்டதில்லை; அதனாலேயே தமிழ் வழங்கு மொழியாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்கிறது.

    Share
  • காகிதக்குறிப்புகள்..

     

    சாந்தி மாரியப்பன்

     

    காற்தடம் பதியாப்பாதையெனவும்,
    எழுதப்படாத வெற்றுக்காகிதமெனவும்
    முன் நீண்டு கிடக்கிறது
    இன்றைய தினம்.

    புட்களின் அதட்டலுக்குப் பயந்த
    விடிகாலைச்சூரியன்
    மேகப்போர்வை விலக்கி
    மெல்ல முகம் காட்டவும்
    தலையசைத்துப் பூமழை சொரிந்து
    பச்சையம் சுமந்த பயிர்களெலாம்.
    வரவேற்பு அளிக்கவுமென
    நன்றாகத்தான் ஆரம்பிக்கின்றன
    ஒவ்வொரு தினமும்,
    வெற்றுக்காகிதமென. (more…)

    Share
  • இந்த வார ராசி பலன் – (6 – 5 – 2013 – 12 – 5 – 2013)

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: கலைஞர்கள் உங்கள் திறமையால் விசேஷ சலுகைகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால், தடைகளை எளிதில் தாண்டி விடலாம். பெண்கள் சிறு பூசல்களை பெரிதாக்காமல் இருப்பது புத்திசாலித்தனம். பெற்றோர்கள் பிள்ளைகளின் பற்களின் பராமரிப்பில் கவனமாய் இருந்தால், மருத்துவச் செலவுகளை குறைத்து விடலாம். பொது வாழ்வில் உள்ளவர்கள் சில நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமலிருந்தால், உங்கள் நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்வது கடினமாய் இராது. இந்த வாரம் வீடு மனை வாங்க எடுக்கும் முயற்சிகளில் மும்மரமாக ஈடுபடுவீர்கள்.

    ரிஷபம்: வியாபாரிகளுக்கு கிடப்பில் கிடந்த நல்ல திட்டங்களை மீண்டும் செயலாற்றும் வாய்ப்பு கிட்டும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணி பளுவால், மன இறுக்கம் தோன்றி மறையும்.கலைஞர்கள் தேவையற்ற விமர்சனங்களைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம். மாணவர்கள் காரியங்கள் முடியும் வரை கவனச்சிதறலுக்கு இடம் தராமலிருப்பது நல்லது. பெண்கள் உறவுகளை அனுசரித்து நடந்து கொண்டால், அதிக ஆதாயம் இருக்கும். அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் பயணங்களில் கவனமாக இருப்பது அவசியம். பெற்றோர்கள்பிள்ளைகள் தொடர்பான நல்ல விஷயங்களை உடன் முடித்து விடுவது நல்லது.

    மிதுனம்: சுய தொழில் புரிபவர்கள் சிறந்த திட்டங்களைத் தீட்டி அதன் படி நடந்தால், அதிக லாபம் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் லட்சியங்களை நிறைவேற்ற அயராமல் பாடுபடுவர். குடும்ப அமைதிக்கு பங்கம் வராமலிருக்க, பெண்கள் முக்கிய விஷயங்களை குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையுடன் செயல் படுத் துவது அவசியம். இந்த வாரம் கை வேலைகளில் ஈடுபடுபவர்களின் பொருளுக்கு நல்ல லாபம் கிட்டும். பெற்றோர்கள் பிள்ளைகளின் கையில் அதிக பணம் தருவதைத் தவிர்த்தல் நலம். மாணவர்கள் தீய பழக்கங்களின் பக்கம் திரும்பாமலிருந்தால், நல்லோரின் ஆதரவு நிலையாக இருக்கும்.

    கடகம்: சேமிக்க வேண்டும் என்று நினைத்தாலும், பெண்கள் இந்த வாரம், பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள், பணி நிமித்தமாக வெளி இடங்களில் தங்க வேண்டிய நிலை ஏற்படலாம். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு, உடன் இருப்பவர்களால், தேவையற்ற கவலை வந்து நீங்கும். பொறுப்பில் இருப்பவர்களுக்கு கூடுதல் உழைப்பு இருக்கும். கடன் விவகாரம் கட்டுக்குள் இருக்க, வியாபாரிகள் தேவையான முயற்சிகளை அவ்வப்போது .எடுக்கவும். கலைஞர்கள் வெளியிடங்களில், தங்களின் மதிப்பு, மரியாதை கெடாமல் கவனமாக பேசுவது நல்லது. மாணவர்கள் போடும் உழைப்பிற்கு நல்ல பலன் கிட்டும்.

    சிம்மம்: பொது சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் , உங்களைத் தேடி வருபவர்களுக்கு உதவும் குணம் இருந்தாலும், மற்றவர்கள் உங்களை ஏமாற்ற இடம் கொடாதீர்கள். இந்த வாரம் மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புக்கள் கிட்டும். வியாபாரிகள் தேவையான இடங்களில் கனிவையும், பணிவையும் பயன்படுத்தினால், அதிக லாபம் பெறலாம். பெண்கள் இழுபறியான காரியங்களை கையில் எடுக்கும் முன் தேவையான செய்திகளையும், பலத்தையும் திரட்டிக் கொண்டு செயல் படுவது நல்லது. ஏற்ற இறக்கமுள்ள பங்குச் சந்தையில் அகலக் கால் வைக்க வேண்டாம்.

    கன்னி: அதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு அனுகூலமாக அமைவதால், உங்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, நினைத்த காரியத்தை முடிப்பதில் குறியாய் இருப்பீர்கள் இந்த வாரம் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பெண்கள் பொது இடங்களில் பிறரின் நிறை குறைகளை அலசாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் வீண் செலவுகளுக்கு வழி வகுக்கும் இடங்களுக்கு செல்லாமலிருப்பதே புத்திசாலித்தனமாகும். கலைஞர்கள் மன வருத்தங்களை வெளிப்படுத்த முடியாத சூழல் இருக்கும்.. நெருங்கிப் பழகிய பங்குதாரர்கள் சிறு பிணக்குகள் காரணமாகப் பிரிந்து போக நேரலாம்.

    துலாம்: .மாணவர்கள் தங்கள் ஒப்பனை, உடை அலங்காரம் ஆகியவை கண்ணியமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நலம். சக கலைஞர்களின் ஆலோசனையால் கலைஞர்கள் தங்கள் திறமைகளை மெருகேற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். கடன் தொல்லைகளினால் பெண்களுக்கு சிறிது மன சஞ்சலம் ஏற்பட்டாலும், செலவுகளைச் சமாளிக்க சேமிப்பு கை கொடுக்கும். மாணவர்கள் பாடங்களை கவனமாக பயில்வதன் மூலம் கடைசி நேர பதற்றத்தை குறைத்துக் கொள்ளலாம். நிர்வாகத்தில் உள்ளவர்கள் சோம்பலையும், பணிகளை தள்ளிப் போடுதலையும் தவிர்த்தால், நல்ல வாய்ப்புக்களைப் பெறலாம்.

    விருச்சிகம்: இதமான அணுகுமுறை மூலம் வியாபாரிகள் பாக்கிகளை எளிதில் வசூலிக்கலாம். இந்த வாரம் உறவுகள் பாராமுகமாய் இருந்த போதிலும், அவர்களின் சுப நிகழ்ச்சிகளுக்கென்று பணமும், நேரமும் செலவு செய்யும் நிர்ப்பந்தமிருக்கும். முதியவர்கள் கண் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனிப்பது நல்லது. வீட்டை விரிவுபடுத்துவதில் அதிக பணம் முடங்கும். பெண்கள் இதமாகப் பேசினால் உறவுகள் தொடர்கதையாகும் என்பதை அவ்வப்போது நினவில் கொள்வது நல்லது. விலை உயர்ந்த ஆடைவகைகள், நவீன பொருட்கள் ஆகியவை மாணவர்கள் வசமாகும்.

    தனுசு: வேலை செய்யும் இடங்களில் மன உறுதியுடன் செயல்பட்டு வாருங்கள். குறை சொல்பவர்களின் எண்ணிக்கை தானே குறைந்து விடும். இந்த வாரம் சரளமான பண வரவு இருந்தாலும், வீண் செலவுக்கு ஆசைப்பட வேண்டாம். வியாபாரிகள் ,யோசனை செய்த பின் பிறர்க்கு வாக்குறுதிகளை அளியுங்கள். பணியில் உள்ளவர்கள் அதிகார எல்லையைக் குறைத்துக் கொண்டால், அன்பு வட்டம் தானே விரியும். செய்தொழிலில் சில பிரச்னைகள் இருந்தாலும், உங்கள் வளர்ச்சி சீராக இருக்கும். நன்மைகள் பல கலைஞர்களை நாடி வர, வீண் கௌரவத்திற்கும், ஆணவத்திற்கும் இடம் தராமலிருப்பது நல்லது.

    மகரம்: மாணவர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். இந்த வாரம் சொந்த பந்தங்கள் கேளாமலேயே உதவி செய்து உங்களை மகிழ்விப்பார்கள். பெண்கள் குடும்ப விவகாரத்தில் அடுத்தவர் தலையீட்டிற்கு இடம்கொடாமலிருந்தாலே கருத்து வேற்றுமைகள் தானாய் விலகி விடும். மேலும் அறிமுகமில்லாத இடங்களில் உரையாடல்கள் அளவாக இருப்பது அவசியம். உயர் படிப்பிற்காக வெளியிடம் செல்பவர்கள் எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நன்மை தரும். கலைஞர்கள் சேமிப்பைக் கரைக்கும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுதல் மூலம், மன உளைச்சலைத் தவிர்க்கலாம்.

    கும்பம்: வியாபாரிகள் பணியாளர்கள் கொடுத்த பொறுப்புக்களை சரிவர செய்கிறார்களா என்று கவனித்துக் கொண்டால், பணமும், பொருளும் வீணாவதைத் தவிர்த்து விடலாம். கலைஞர்கள் தங்கள் பேச்சாற்றலை நல்ல முறையில் பயன்படுத்தினால், பல ஒப்பந்தங்கள் உங்கள் பக்கமே! பணியில் உள்ளவர்கள் நிதி நிலவரத்தை அனுமானித்தபின் காசோலைகளை பிறர்க்கு வழங்குவது நல்லது. பெண்கள் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால், வேண்டிய காரியங்களை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளலாம். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையாமல் பார்த்துக் கொண்டால் வேலைகள் சீராக நடக்கும்.

    மீனம்:இந்த வாரம், பெண்கள் பண விஷயத்தில், தகுந்த முடிவுகள் எடுக்கமுடியாத சூழலுக்குத் தள்ளப்படலாம். மாணவர்கள் செலவுகளில், கவனமாக இருந்தால், வாகனங்களால் உண்டாகும் வீண் செலவுகள் குறையும். தடுமாற்றத்தைத் தரும் விவகாரங்களிலிருந்து, கலைஞர்கள் ஒதுங்கியிருப்பதே புத்திசாலித்தனம். பணத்தேவையால், .வியாபாரிகளுக்கு நெருக்கடி தோன்றி மறையும். பொது வாழ்வில் உள்ளவர்கள், எதிலும், நல்ல பெயர் வாங்குவார்கள். பணியில் இருப்பவர்கள், சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது மூலம், வேலைகள் தேங்காமல் பார்த்துக் கொள்ளலாம். சுய தொழிலில் இருப்பவர்கள், புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது கவனத்துடன் செயல்படுவது அவசியம்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 70

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    **
    *(43)*
    **
    *”சாயல் வரி”
    “மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் அல்லது ஆற்றுவிக்கும் பொருட்டுத் தோழி
    இயற்பழிக்க, தலைமகள் இயற்பட மொழிதல்”*

    தாழையை வேலியாகக் கொண்ட
    இக்கழியில்
    முன்னர் ஒருவர் வந்திருந்தார்;
    நாம் விளையாடிய
    பொய்தல் விளையாட்டை
    மறக்க வைத்துச் சென்ற அவர்
    நம் மையல் கொண்ட
    மனத்தைவிட்டு நீங்கி அகல்வாரல்லர்.

    *(44)*

    கடற்கரைச் சோலையை
    வேலியாகக் கொண்ட
    இக்கழியில்
    முன்னர் ஒருவர் வந்திருந்தார்;
    ‘நீ அருள்செய்வாய்” என்று
    வேண்டி நின்றிருந்த அவர்
    நம் மான் ஒத்த பார்வையை
    மறப்பாரல்லர்.

    *(45)*

    நேற்றைய நாளில்
    அன்னம் தன் துணையுடன்
    விளையாடக் கண்டிருந்தார் ஒருவர்.
    அதனையே நோக்கி நின்றிருந்த அவர்,
    பொன்னிறத்தில் நம் மேனிமீது
    படர்ந்திட்ட பசலை போல
    நம்மை விட்டு நீங்குவாரல்லர்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html<http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html>
    படத்துக்கு நன்றி:
    http://www.gunathamizh.com/2011_06_06_archive.html

    Share