எஸ்.எஸ்.எம். சுப்பிரமணியம்
தலைவர், சத்தியத்தின் சக்தி நிலைச் சங்கம், பவானி
5வது உலக தமிழ் மாநாட்டில் ஆற்றிய உரை


இன்று நாம் மொழி வளர்ந்த உண்மை அறிய பழங்கால கல்வெட்டுக்களையும், ஓலைச்சுவடிகளையும், புதைப்பொருள் நிலையிலிருந்தும், மொழி உருவான விதத்தையும் அதன் பழமையைக் கொண்டு வருடக் கணக்குகளையும், மாறி வந்த காலங்களின் நிலையிலிருந்து மொழி வடிவம் மாற்றம் கொண்டதை இன்று அறியக்கூடிய நிலையில் உள்ளோம்.

தமிழ் மொழியும் பண்பாட்டு வாழ்க்கை வழித்தொடரும் எப்படி உருவானது? தமிழ் மொழி உருவான உண்மைத் தன்மை என்ன? இவ்வுலகில் இந்த இந்திய பூமியில் உருவான பலகோடி ஞானிகளும், சப்த ரிஷிகளும் இம் மொழி உருவாக செயல்பட்ட முறை எப்படி?

ஆரம்பத்தில் இம் மொழி எப்படி எழுத்துருவம் கொண்டது? இன்றுள்ள இம் மனித உணர்வின் ஞானசக்தி, இயற்கை ஒலி அலையுடன் ஒளி அலைப்பெற்று ஜெபமெடுக்கும் முறை கொண்டால், இப் பூமி உருவான நிலையும், உயிரணுத் தோன்றி உருக்கொண்டு, ஒலியின் பாஷை அறிந்த நிலை யாவையுமே, இஜ் ஜீவ பிம்ப உடல் ஆத்ம சக்தியினால் ஒலியை ஒளியாக்கி, இன்றுள்ள வளர் தொடர் உண்மை நிலைகள் யாவையும் உணர முடியும். உணரும் நிலை எப்படி?

இப்பூமியில், தமிழ்மொழி உச்சரிப்பு ஒலித்தன்மை ஏற்பட்டு பத்தாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்பூமிக்கு ஒலியில் சொல் வடிவம் தந்த முதல் மொழி, தமிழ்மொழிதான். இம்மொழித் தொடர் எப்படி உருவானது?

பண்பாட்டு பழக்க வழக்கங்கள் எப்படி ஏற்பட்டது? என்றால் இப்பூமி தோன்றி, வளாந்து பல பிரளய மாற்றங்களுக்குப் பிறகு ஆரம்ப உயிரணு தோன்றி, தலை சிறுத்தும் வால் போன்ற உடல் அமைப்புக் கொண்ட, நீரில் மிதந்த உருவம் தோன்றி, பல அவதார மாற்றங்களுக்குப் பிறகு, பல உரு நிலை மாற்றம் கொண்டு, பலவில் உருவாகி உருவாகி, மோதுண்டு மோதுண்டு ஒலிக் கொண்டு ஒளியாகி, ஜீவபிம்ப உடலின் அங்க அவையங்களினால் செயலாற்றும் தன்மை கொண்ட பிறகு, பிரிதொரு மாற்றம் கொண்டு எடுத்த உடலில் கண் ஒளி பாய்ச்சி, ஒலி ஈர்க்கும் மாற்றத்திற்குப் பிறகு ஒலி பாய்ச்சி ஒலி கேட்கும் வளர்ப்பு நிலைக் கூடிய பிறகு, ஒலி வெளிப்படுத்தும் ஒலி ஆற்றல் மனிதனுக்கு கிடைத்தது.

ஒலியின் வளர்ப்பு நிலையிலேயே, சொல் வடிவாற்றல் மனிதனுக்கு ஏற்பட்ட நிலையிலிருந்தே, எழுத்து வடிவம் உருக்கொள்ளும் காலத்திற்கு முன்னே, இப்பூமியில் உருவான மனிதனுக்கு சொல்லாற்றும் திறமை ஏற்பட்டவுடன். இப்பூமிக்கு வியாழன் மண்டலத்தில் பலக்கோடி ஆண்டுகளாய் வாழ்ந்த மனித ஞான வழித் தொடர் கொண்ட, வளர்ச்சியுற்ற வழித்தொடர் அலை சப்த ரிஷிகள் வியாழனில் வாழ்ந்து, உயர்ஞானம் கொண்டு, அவர்கள் வாழந்த எம் மண்டலத்திற்கும் சென்று வாழக்கூடிய நிலை பெற்றவர்கள் வியாழனில் மனிதன் வாழ முடியா நிலை ஏற்பட்டவுடன் இப்பூமியில் மனித கரு வளர்ந்தவுடன் ஒலி அலையின் ஒளிப் பாய்ச்சி, இப்பூமியில் பல மகான்கள் தோன்றி மொழி வடிவம் தோன்றுவதற்கு முதலிலேயே சொல்லாற்றலும், செயலாற்றலும்; மனித சக்திக்கு கூடிய நிலையில் அன்றைய மகான்களில் ஒளி அலையைப் பாய்ச்சி, மனிதனின் சொல்லாற்றலுக்கு வித்திட்டு, அச்சொல் தொடர் முதல் மொழியாய் அன்று தமிழ் மொழி தோன்றியது.

இவ்வொலி அலைத் தொடர்பிலிருந்து எழுத்து வடிவம் பெற பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கு பிறகு உருவாகிய தமிழ்மொழி எழுத்து வடிவம், இன்று எழுதப்படும் இந்நூற்றாண்டின் தமிழ் மொழி மரபு ஏழாவது மாற்றமாகும்.

அன்று ஆண்ட அரசர்கள், அரசர்களின் செயலுக்கொப்ப இம்மொழியை மாற்றிவிட்டார்கள். மொழியின் தன்மை இதுவென்றால், தமிழரின் பண்பு முறை எப்படி வழிவந்தது? ஞான சக்தியை எடுத்த சக்தியும், வளர்ந்த ரிஷித் தன்மை கொண்டவர்களும் இவ் அலைத்தொடர் வழியில்தான் முதலில் உருப்பெற்றது. இராமாயண, மகாபாரத காவியங்களில் அன்று எழுதிய முனிவர்களினால் காவியக் கதையில் விழித்துள்ள யாவையுமே மனித சக்தியினால் பெறக்கூடிய சக்தி முறையை கதாப்பாத்திர நாமங்களில் அந்தந்த குண நிலையில் வடிவமைத்து எழுதிவிட்டார்கள்.

தமிழ் மொழியில் எழுதப்பட்ட பலகோடி உண்மைத் தன்மைகள் இம்மனித சக்தியினால் பெறவல்ல ஆற்றல் நிலையை அன்றே உணர்த்தி, இப்பிம்ப உடலை அழியாத் தன்மை கொள்ளக்கூடிய நிலைக்கு, பல மூலிகைகளை எழுத்தில் பதியச் செய்தும், இம் மனித பிம்பத்திலிருந்து செயலாற்றக்கூடிய சக்தி அனைத்தையும், ஞானத்தால் ஒலியுடன், இவ் ஒளி பாய்ச்சி எந்த நிலையையும் அறியவல்ல ஆற்றல் கொண்ட, படைப்பின் படைப்பையே படைக்கவல்ல, தெய்வ சக்தி கொண்ட நிலைக்கு, மனித சக்திக்கு செயலாற்றும் தன்மை எல்லாவற்றையும் ஏட்டு உருவிலும், காவிய வழித் தொடர்களிலும், மறைக்கப்பட்ட நிலையில் உணர்த்திச் சென்றார்கள் அச் சப்த ரிஷிகள். இன்று மற்ற இடங்களைக் காட்டிலும் இப் பூமியில், இந்திய கண்டத்தில் சுழற்சி முறை வாழ்க்கைத் தொடரில் தமிழ் குடும்ப வாழ்க்கையில் பக்தியும், பண்பும் கூடி வருவது பிறப்பில், குடும்ப வழித்தொடரில், வழி வழியாய் வந்த வழித்தொடர் வாழ்க்கையில் இருந்து மட்டும் வரவில்லை. இப்பூமியில் ஞானம் பெற வழிப்படுத்திய ஞானிகளின் அலைத் தொடர்பு சக்தி இன்றளவும் இப்பூமியின் வெட்கையிலும், காற்று மண்டல சுழற்சியிலும், தமிழ் கடவுள் முருகன் என்றுணர்த்திய தெய்வ வழிபாட்டு முறையிலும் சுழன்று கொண்டுள்ளதினால், இப்பிம்ப உடலில் ஆரம்ப கலவை எத்தொடரில் இவ் உயிரணுத் தோன்றி உயிராத்மா உருப்பெற்றதோ, அவ் அமிலத் தொடர் கொண்ட ஜீவ பிம்பங்களுடன் வாழ்பவர்களும், பிம்பமற்ற ஆவி உலக ஆத்மாக்களும் அவ்வமிலத் தொடர் கொண்டு உருப்பெற்று, உருவாகி வளர்ந்த ஒவ்வொரு நொடிக்கும் எவ் அமிலக் கூட்டின் மேல் மோதுண்டு காற்று சுவாசம் வெளிப்படுகின்றதோ, அவ் அலைத் தொடர் சக்தி மாறி மாறி உருவாகும் உருவகங்களின் மாற்றங்கள் பல கொண்டாலும் தன்மையின் குணம் வழிப்பெற்றுக் கொண்டே உள்ளது.

இப்பூமியில் மட்டும்தான் மனித இனம் உண்டா? மற்ற கோளங்களில் மனித இனங்கள் உள்ளனவா? என்ற வினா பலருக்கு உண்டு, இப்பூமியைச் சார்ந்த சூரியக் குடும்பத்தின் இந் நாற்பத்தி எட்டு மண்டலங்களிலும், இந் நாற்பத்தி எட்டு வளர்ந்த மண்டலங்கள் வளர்க்கும் சனிக்கோளத்தின் பன்னிரெண்டு நட்சத்திர மண்டலங்களிலும், ஆக இவ் அறுபது கோளத்திலும் இப் பூமியில் மட்டும்தான் மனித இனம் உண்டு. வியாழனில் இருந்து மனித கரு வித்து நம் பூமிக்கு வந்தது. அதன் வழித்தொடர் மொழி நம் தமிழ்மொழி. ஆனால் வளர்ந்த சக்தி கொண்ட சுழற்சி ஈர்ப்பு விகிதத்தன்மை கூடிய வியாழன் மண்டலத்தில் இன்று மனித கரு உரு நிலை இல்லை அதன் தொடர்ச்சி கருவும், சொல், மொழி, வடிவம் இப்பூமியில் இன்று வேர் ஊன்றி உள்ளது.

இந் நாற்பத்தி எட்டு மண்டலங்களிலும் இல்லாதத் தன்மை கொண்ட மனித கரு இப் பூமியில்தான் உண்டு. இப்பூமியின் ஞானத்தில் இம் மனித பிம்ப செயலாற்றும் சக்தியை விஞ்ஞான ரூபத்தில் செலுத்தி விட்டான் மனிதன். விஞ்ஞானம் கொண்டு இப்பூமியின் கனி வளங்களை பல பக்குவங்களுக்கு பயன்படுத்துகின்றான். இப்பூமியில் பொக்கிஷ திரவங்களை இக்குறுகிய நூற்றாண்டில் எடுத்து பல செயல்களுக்கு உபயோகப்படுத்துகின்றான். சூரியனின் சக்தி கொண்டு ஒவ்வொரு மண்டலங்களில் இருந்தும் சூரியன் எடுத்து வெளிக்கக்கி, நம் பூமி அதன் சுழற்சியில் சூரியனின் ஒளி அலை எடுத்து வளர்க்கும் உயர் காந்த மின் சக்தியினால் இப்பூமி சுழன்று ஓடி வளர்ந்த ஞான ஆத்மாக்கள் வளரும் வாழ்க்கையில் மனித சக்திக்கும், ஜீவசக்திகளுக்கும் உயிர் வாழ இன்றியமையா சக்தியான உயர் காந்த மின் அலையின் துடிப்பு சக்தியையே மின்சாரம் காண மனித விஞ்ஞானம் காண இயற்கை மின் காந்தத்தையே செயல்படுத்துகின்றது இன்று.

பிற மண்டலங்களுக்குச் சென்று அங்குள்ள உண்மையறிய பலகோடி உலோக சக்திகளையும், திரவ சக்திகளையும், காந்த மின் அலையின் சக்தியையும், மனித ஞான சக்தியையும் விரையப்படுத்துகின்றனர். இம்மனித உடல் பிம்பத்தில் உயிர்; காந்த சக்தியைக் கொண்டு உயர காந்த மின் அலைத் தொடர்பை சூரியனின் அலைத் தொடருடன் இவ்வுணர்வின் எண்ணத்தைச் செலுத்தி நேராக எடுக்கும் சுவாசத்தினால், இப்பூமியின் ஈர்ப்பு பிடியில் சிக்கி, உண்டு, உறங்கிக்கழித்து உழன்றுள்ள வாழ்க்கையில் இருந்து இதே பிடிப்பில் ஜீவன் பிரிந்தாலும் இவ்ஈர்ப்பலையிலேயே பிறந்து இச்சுழற்சியில் சிக்குண்டுள்ள வாழ்க்கையில் இருந்தும் இஜ் ஜீவ பிம்ப உடலுக்குள்ளே நாமெடுக்கும் சுவாசத்தினால் வளர்த்துக் கொண்டோமானால், இம்மனித எண்ணத்தால் பெறவல்ல சக்தி ஞான வளர்ச்சி தொடர் உணர்வால் இப்பூமியில் மட்டுமல்ல, சூரிய குடும்பத்தின் நாற்பத்தி எட்டு மண்டலங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு மண்டலங்களின் தன்மையும், மற்றெல்லா மண்டலங்களின் தொடர்புகளையும், உருதோன்றி உரு வளரும் செயல் முறைகளையும், ஒலியாகவும் ஒளிக்காட்சிகளாகவும் இவ்வுணர்வின் எண்ணத் தொடர் அலையை எந்நிலைக்கெல்லாம் காண விரும்புகின்றோமோ, அவை அனைத்தையுமே இம் மனித ஞான சக்தியினால் மட்டும்தான் பெற முடியும்.

விஞ்ஞானத்தில் வளரும் மனித ஆத்மா, எவ் விஞ்ஞானத் தொடர் அலையில் வளர்ந்து, விஞ்ஞானம் பெற்று செயல்புரிந்திருந்தாலும், அவனின் ஆத்ம பிம்பம் ஜீவன் பிரிந்த பிறகு, மீண்டும் இவ்ஈர்ப்பின் பிடியில்தான் சிக்குண்டு சுழல முடியுமே தவிர, உயர் ஞான சக்தி பூண்ட, தன் ஞானம் பெற்ற ஞானிகளின் ஜீவ பிம்ப சக்தி என்றுமே அழியா வண்ணம், தான் வளர்ந்த சக்தியைக் கொண்டு எம்மண்டலத்திலும் வாழக்கூடிய தன்மையும், இம்மண்டலத்தில் மனித உரு ஞானம் மாறினாலும் இஞ்ஞானத்தால் பெற்ற சக்தியைக் கொண்டு ஞான கரு வித்து மனிதனை உருவாக்கும் சக்தி இம் மனித பிம்ப ஆத்ம எண்ண ஞானத்திற்கு உண்டு.

இந்நாற்பத்தி எட்டு மண்டலங்களில், இச்சூரிய குடும்பத்தில், எப்படி இப்பூமியில் மட்டும் மனித ஞானம் வளர்ச்சி கொண்ட ஜீவ பிம்ப வாழ்க்கைமுறை உள்ளதோ, அதைபோன்று மற்ற சூரிய குடும்பங்களில் நம்மைக் காட்டிலும் அறிவும், ஞானமும் முதிர்ந்த மனித பிம்ப உடல்கள் இரண்டாயிரம் மண்டலங்களில் உண்டு. நாம் இன்று உள்ள நிலை உள்ளதைக் கொண்டு, நமக்கு முதலில் வாழ்ந்தவர்களையும், வாழ்ந்த முறைகளையும், ஆராயும் நிலையும், செயற்கை விஞ்ஞான இன்ப வாழ்க்கையின் பிடியிலும்தான் இன்றுள்ளோமே தவிர, மனித சக்திக்குகந்த உண்மை சக்தியை அன்றே உணர்த்திச் சென்ற சப்த ரிஷிகளின் நிலை மறந்து இன்றளவும் செயற்கை பிடியில்தான் சிக்கியுள்ளோம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முதலிலேயே திருக்குறள் தந்த திருவள்ளுவரின் குறட்பாக்களை ஆராயும் தன்மையிலும் அதற்கு தெளிவுரையும், விளக்க உரையும் தருவதில்தான் நம் எண்ணச் செயல் உள்ளதேயன்றி குறள் வடிவாய், குறளின் உண்மை உணா;ந்து, குறள் வழியில் நாம் வளர வழிகொண்டோமா? திருக்குறள் எழுதிய அம்முனிவரின் சக்தி என்ன? அவர் எழுதிய குறள் வடிவம் அனைத்தும் வெளிப்பட்டதா, பொருட்பால், அறத்துப்பால், இன்பத்துப்பால் இவற்றைத்தான் தந்தார் என்கிறார்கள். அவர் எழுதிய ஞானத்துப்பால் அன்று ஆண்ட அரசர்களினால் மறைக்கப்பட்டுவிட்டது. ஞானத்தின் பால் அறத்துப்பாலும், பொருட்பாலும், இன்பத்துப்பாலும் வெளிப்பட்டதேயன்றி, அவர் எழுதிய முதல் பாலே ஞானத்துப்பால்தான். ஞானப்பாலில் ஆத்ம உயர் ஞான வளர்ச்சி முறையும், ஞானத்தின் வளர்ப்பால் வளரக்கூடிய வழித்தொடர் அனைத்துமே, அன்றாண்ட அரசர்களால், தன் சாதனைக்கு இவர் தரும் போதனையால், தன்னை மீறிய நிலை மனித ஆத்மாக்கள் பெற்றவிடுவர் என்ற அச்ச உணர்வால் மறைக்கப்பட்டுவிட்டது ஞானப்பால்.

திருவள்ளுவரின் உண்மை ஞான சக்தி எப்படிக் கூடியது? திருவள்ளுவருக்கே சக்தி தந்தவா; வாசுகி அம்மையார்தான். அவ்வம்மையின் ஞானத்திற்கு பொருள் தந்தவர்தான் திருவள்ளுவர் இதன் தொடர்நிலை எந்நிலையென்றால் உருவாகும் சக்திக்கே சக்தி குணம் பெண்மையில் இருந்து வருகின்றது.

ஆண், பெண் என்ற இரு நிலைக்கொண்ட தொடாநிலையில் வளர்ப்பு நிலைதான் உருவாகும் உரு நிலை அனைத்துமே. சிவசக்தி, வினாயகன், முருகன், வள்ளி, தெய்வயானை என்று மட்டும்தான் நம் புராண இதிகாசநூல்களில் தெய்வ சக்தியை உணர்த்துகின்றார்களே அன்றி, முருகனுக்கு குழந்தையை காட்டவில்லை. வினாயகனுக்கு மனைவியை காட்டவில்லை. அப்படியென்றால் என் அர்த்தம்?

ஆதி சக்தி என்ற சக்தியின் பொருள் என்ன? கோலமாமகாரிஷி வணங்கிய தெய்வம் முகாம்பிகை தேவி. ஆதி சங்கரர் வணங்கியது சாரதாம்பிகை, போகர் வணங்கியது புவனேஸ்வரியை, கொங்கணவர் வணங்கியது அஷ்டலட்சுமியை.

நம் சப்த ரிஷிகளினால் வணங்கப்பட்ட தெய்வ சக்தி யாவையுமே பெண்மை சக்தி. இதன் உண்மை என்ன? காளியையும், மகாலட்சுமியையும், பத்ரகாளியையும் வணங்கும் முறையெல்லாம் எவை?

ஆவியான சுழற்சிவட்டத்தில் இப்பால்வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள அமில சக்திக்கு அப் படர் அமில ஆவி நிலை திடம் கொண்டு எச்சுவைக் கொண்டு திடப்பட்டதோ அவ்வமிலம்தான் சிவபிம்பம், திடம் கொண்டு சிவபிம்பம் கனமாகி தங்க இடம் கொள்ளாது ஈர்ப்பின் சுழற்சி கொள்வது சக்தி ஈர்ப்பு. ஆவியான ஆதி சக்தி, திடமான சிவ உருவாகி, சக்தியான ஈர்ப்பு கொண்டு சிவ சக்தியாகி ஈர்ப்பின் சுழற்சியில் உருவாகும் ஒலி, ஒளி, நீரான முதலாம் வளர்ச்சி வினாயக செயலாகி, வளரும் வளர்ப்புத்தன்மை முருக குணமாகி, முருக குணத்திற்கு தேவைக் கொண்ட வளர் உணவு சக்தி தெய்வானையாகி, தேவைக்கு மேல் உணரும் சக்தி வள்ளியாகி உள்ள சக்திதான் இன்றளவும் உருவாகி உள்ள ஒவ்வொரு சக்தியுமே.

உயிர் துடிப்பு உயிரணு வளர்ச்சி நிலை ஒவ்வொன்றுமே சிவசக்தி, வினாயக, முருக, வள்ளி, தெய்வானை வடிவமாய்தான் வழிந்துள்ளது இன்று பெண்மையின் சக்திக்கும், ஆண்மையின் சக்திக்கும் உள்ள குண மாற்றம் யாவை? ஆண் எடுக்கும் சுவாசத்தால் அமிலப் படைப்பை படைக்கத்தான் முடியும்.

பெண்மையின் சுவாசத்தால் கரு வளர்க்கும் செயல்தான் முடியும். ஆண் விடும் சுவாசத்தால் ஆணின் அமில வர்க்கம் தாவரங்கள், கனிவளங்கள், மண், மரம் போன்றவைதான் வளர்க்க முழயும். பெண் இன சுவாச அமில குணத்தால் ஆண் இன அமிலத்திற்கே ஜீவ துடிப்புக் கொண்ட, ஜீவ சக்தி வளரக் கூடிய புழு, பூச்சிகள், வண்டின உயிர்கள் யாவையுமே வளர்க்க முடியும். ஒன்றின் தொடர்பு ஒன்று வளர முடியுமே தவிர ஒன்றான சக்தி எவையுமேயில்லை.

இரண்டு ஒன்றாகி, ஒன்று பிறந்து, அப்பிரிதொன்று சேர்ந்து ஒன்று வளருமே தவிர, ஒன்றான சக்தி எவையுமே இல்லை. சக்தியில்லையேல் சிவனில்லை, சிவனில்லையேல் சக்தியில்லை என்ற வாதம்தான் சுழல்கின்றதே தவிர ஒன்றில்லாமல் ஒன்றில்லை என்பதை உணர்ந்து அமிலப்படைப்பு அனைத்திற்குமே ஜீவ சக்தி வளர்க்கும் பெண்மை ஈர்ப்பு சக்தி குணம் வளர வேண்டும் என்பதனை உணர்ந்துதான் பெண்மை குணத்தை பூஜித்து வணங்கினர் சப்தகள் ரிஷி அனைவருமே.

இதன் தொடர் வழி முறையில் சக்தி கொண்டவர்தான் வாசுகி அம்மையாரும், திருவள்ளுவ முனிவரும். அஞ்ஞானம் பேசி இஞ்ஞானம் வளர்ந்தது. அன்னையின் ஞானத்திற்கு இம்முனிவரின் ஞானம் உருவம் தந்த உருவகம்தான் காலப்போக்கில் மாறுபட்டாலும் இன்றளவும் பேசப்படும் உயர் ஞானக் குறட்பாக்கள். நம் வாழ்க்கை காலத்திலேயே சாரதா தேவியின் துணையுடன் ராமகிருஷ்ண பரமஹம்சரும், கஸ்தூரிபாய் அம்மை தந்த பக்தி வலுவில் மகாத்மா காந்தியடிகள் தோன்றியதைபோல் ஒவ்வொரு ஆத்மாக்களும் வாழ்க்கை என்ற வழித் தொடரில் இல்லறம் என்ற இனிய வாழ்க்கையுடன் ஆணிற்கு பெண் துணையில் சக்தியும், பெண்ணிற்கு ஆண் துணையின் படைப்பையும் கொண்டு வாழ்க்கை என்ற வழிமுறையிலிருந்தே அன்பு, பண்பு, ஆசை, வீரம், ஞானம், சாந்தம்; இந்நற்குணங்களை பெற்று தீய குணங்களான சலிப்பு, சோர்வு, கோபம், குரோதம், வஞ்சனை, வெறி இவற்றின் குணத்தைவிட்டு இவ்வுணர்வின் உந்தலுக்கு உகந்த நிலையில் ஆசை உணர்வை பேராசைக்குச் செல்லாமல் ஆகையுடன் வாழ்க்கை முறையை உணர்வால் உந்தப்படுமு; எவ் இச்சையையும், தூக்கம், பசி, காமம் இவற்றை உணர்வின் உந்தலின் பிடிக்கொப்ப நாம் செல்லாமல் உணர்வுடன் எண்ணத்தை பக்குவம் கொண்டு வழிமுறைப்படுத்தி வாழ்க்கை முறையின் தேவைக்கு ஜீவாதார வழிக்குகந்த இன்பமுடன் வாழ்க்கை நெறியை அமைதிப்படுத்தி வாழ்க்கையில் பொருள் சக்தியை எப்படி நடைமுறைக்கு சேமிக்கின்றோமோ அதைப்போன்று இவ்வுயிராத்மாவிற்கு என்றுமே அழியா சக்தியான ஞான சக்தி வலுவைக் கூட்டிக்கொண்டால் இவ்வுடல் பிம்பக்கூட்டிற்குள் பல ஜென்மத்தில் சேமித்த குண அமில சக்தியையும், இஜ் ஜென்ம வாழ்க்கையில் நாமெடுக்கும், உணா;வின் உந்தலுக்கு உகந்த சுவாசத்தால் சேமித்த சக்தியைக் கொண்டு மனிதனின் உயா;ந்த ஞான குண சக்தியை எடுக்கும் முறையாய் மாற்றி உள்ள நிலையை நல்ல குணமுடன் கூடிய ஜெபமுறையால் ஞானத்தால் பெற்ற, ஞான சக்தி பூண்டு இன்றைய மருத்துவத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் பல வழிமுறைகளை உணர்த்திச் சென்ற சப்த ரிஷிகளின் நிலைக்கு நாமும் செல்லலாம்.

இன்று இயற்கை தாவரங்களின் வளர்ப்பு முறையில் வீரிய சக்தி கொண்ட இரசாயன உரங்களை இட்டு ஒன்றுடன் பிரிதொன்றின் இனச் சேர்க்கையை சேமித்து, இன வளர்ச்சியின் மாற்ற குணத்தையே, விஞ்ஞான ஆராய்ச்சி தாவர இயல் உள்ளதுவோ, அதைப்போன்று இம்மனித ஜீவ பிம்ப உடலில் நற்குணங்களை வளர்த்து, தீய குணங்களை விட்டு, உடல் உணர்வின் வழியை நல்வழிப்படுத்தி நாமெடுக்கும்; சுவாச ஜெபத்தால் நமக்கு இப்பிறப்பெடுக்க, பிறப்புத்தந்த முதல் தெய்வங்களை வணங்கி, ஞானத்திற்கு வழித் தந்த குருவையும், தெய்வசக்தி கொண்ட அலைத் தொடர் குணங்களை வணங்கி “ஓம்” என்ற நாத ஒலியில் இயங்கும் இப்பூமியின் சுழற்சி ஒலியில், “ஓம்” க்குள் ஓமாய் நாம் அமர்ந்து, சூரிய சக்தியிலிருந்து உயர் காந்த மின் அலையின் தொடர்பை நாம் பெற்று, வளர்ப்பின் வளர்ப்பாய் தமிழ் வளர்ந்து பிறதையும் வளர்த்து, தமிழ் கொண்ட பண்பு சுடரொளியை இப்பூமியின் சுழற்சியிலிருந்து எப்பூமியிலும் இத்தொடர்த் தமிழ் சொல் ஒலி வளர்க்கும் இத் தமிழ் பண்பு குண தெய்வ வளர்ப்பை, நாம் வளா;க்க, நம்மை வளா;த்த தமிழ் குணசக்திகளின் வளர்ப்பிற்கே வளம் பெறும் இத்தமிழை என்றுமே இஞ்ஞானத்தால் நாமும் வளர்ப்போம்.

தாய், தந்தையின் ஈர்ப்பில் பிறப்பிற்கு வந்த நாம், நம் தாய் தந்தையரை முதல் தெய்வமாக வணங்குகின்றோம். நம் பிறப்பின் உண்மையும் மற்றெல்லா ஜீவராசிகள், தாவரங்கள், கனி வளங்கள், நம் பூமி எல்லாமே எப்படி பிறப்பெடுத்தன? ஆவியான அமில பிம்பம் ஜீவன் கொண்டு அஜ் ஜீவ ஈர்ப்பலையின் உணர்வுடன், அவ்வுணர்வின் உந்தலில் எண்ணம் கொண்டு வழி வந்த ஒவ்வொரு பிம்ப ஜீவனும் மீண்டும் ஆவியாகிறது. இப் பிரபஞ்சமும் ஆவிதான், நாமும் ஆவிதான், பிரபஞ்சத்தையும், மற்றெல்லா ஜீவ ராசிகளைப் படைத்த படைப்பாண்டவனே ஆவிதான். இப் பிரபஞ்சத்தில், பால் வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள ஆவியின் ஈர்ப்பு சக்திக் கொண்டு உணர்வலையில் ஜீவன் கொண்ட நாம், முற்பிறப்பையும், இப்பிறப்பையும், வரும் நிலையையும் உணர்ந்து இப் பிம்பமான உடலைவிட்டு ஆவி பிரிந்து, ஆவியாய் சுழலும் நிலைக்கு முதலே இப்பிம்ப உடலில் நம் உயிராத்மாவை சகல சத்து நிலைகளையும் உணரும் ஈர்ப்புடன் நம் எண்ணத்தை செலுத்தி வாழ்ந்து இவ் ஈர்ப்பின் உணர்வைக் கொண்டு நாம் தீய எண்ணங்களையும், தீய சொற்களையும், தீய செயலையும் நாம் எண்ணி, சொல்லி, செய்யும் நிலையில் நம்மை அறியாமலே நம் உடல் பிம்ப கூட்டிலுள்ள ஆவி அமிலமும், அத் தீய உணர்வின் அலையையே அதிகமாக ஈர்தது நம் உடலைவிட்டு நம் ஆவி பிரிந்த பிறகும், நம் ஆவியின் குண அமிலம் தீய குண அமிலமாய், காற்றாய் படரவிட்டு மேன்மேலும் அசுத்த நிலையை நாம் ஏற்படுத்தாமல் ஒவ்வொரு ஆத்மாவும் தான் எண்ணும் எண்ணத்தையும், சொல், செயல் எல்லாவற்றையும் நல் உணர்வுடன் வாழ்ந்தால், நாம் வாழ்ந்து நம் ஆத்மா பிரிந்த பிறகும், நல்ல உணர்வின் ஈர்ப்பு ஆவியாய் சுழன்று மீண்டும் நற்கதியின் பிம்பத்தின் வழித்தொடரை நாம் அடையலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.