வங்கக் கவிமணி
சு. ரவி
“சங்க இலக்கியம்போல் வங்க இலக்கியத்தைத்
தங்க மலராக்கித் தரணியிலே- எங்கும்
மணம்வீச வைத்தாய் மாமுனியே வாழ்க
கணந்தோறும் உந்தன் கவி”.
” பண்ணொழுகு பாடலைப் பாடென்றனக்கருள்
பாலிக்கும் வேளை யிந்த…
எனத்தொடங்கி,
நண்ணுதற் கான வழி வேறெதும் கண்டிலேன்
நானுமென் களிமயக்கால்
நண்பனென் றேஅழைக் கின்றனன் என்னையாள்
நாதனே ஞானபரனே”
என்று இறைவனோடு தோழமை யோகம் பாராட்டிய அன்னாரின் கீதாஞ்சலியை அருமையான இரட்டைஆசிரிய விருத்தத்தில்
மொழிபெயர்த்த எங்கள் கவிமணியும் நினைவினில் நிழலாடினர்.
உயிர்நாடிகளை மீட்டும் உன்னத எழுத்துக்குச் சொந்தக்காரரை வரையும் ஆவல் உந்தியதின் விளைவு…
கீழ்க்காணும் ஓவியங்கள்…
ஓவியங்களைப் புகழ வார்த்தைகளில்லை. குறிப்பாக, பேசும் விழிகள்!!!. சித்திர அற்புதம்… மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
வங்கத்தின் சிங்கத்தை வரைந்த ரவிக்கு பாராட்டுகள். தத்ருபமாக இருந்தது.
ஓவியங்கள் மிகவும் அருமைதிரு.ரவி அவர்களே! வாழ்த்துக்கள்.
திரு.ரவி, தங்கள் ஓவியங்கள் அருமை.
ஏற்கனவே, தங்களின் ‘ஊழிக்கூத்தனின் ஊர்த்துவ தாண்டவ’ ஓவியத்தை அப்படி ரசித்தேன்.
அந்த ஓவியத்தை ரசித்துவிட்டு, எனது தந்தையின் நண்பர் இவ்வாறு எனக்கு எழுதியிருந்தார்:
//ஓவியம் உள்ளங்கவர்ந்தது ! கவிதையும் உவகை தந்தது!
ஓ கலைஞனே! தொடர் முயற்சியால் தொட்டுவிடு வானை!//
வாழ்த்துகள்!!!
மனத்தைக் கவரும் ஓவியங்கள்..
வாழ்த்துக்கள்.