சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

இனிய மடல் மூலம் எனது அன்பான வாழ்த்துக்கள்.

புரியாத பல புதிர்கள், புதிதான பல வினாக்கள் புலர்ந்து மனதில் அபல அசைவுகளை நிகழ்த்துவதுண்டு.

நான் எனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது எனது காரில் உள்ள வானொலியில் நடந்த கருத்தாடலைச் செவிமடுத்தேன்.

அதன் சாரம் என் உள்ளத்தில் பல விடையறா வினாக்களை விதைத்தன. நாம் இலகில் எந்த நாட்டில் வாழ்கிறோம் என்பது அல்ல எங்கு வாழ்ந்தாலும் எம் வாழ்வை எம்முறையில் வாழ்கிறோம் என்பதுவே முக்கியம்.

குழந்தைகள் எந்த நாட்டிலும் சரி, எந்த சமூகத்திலும் சரி ஒரே மதிரியான உணர்வுகளுக்குள்ளாக்கப் படுகிறார்கள் .தமது குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்ளாத பெற்றோர் இருப்பது அபூர்வம்..

ஒரு குழந்தையின் எதிர்காலத்தை சரியான வகையில் வழிநடத்துவதற்கு அந்தக் குழந்தைக்கான கல்வியறிவே முக்கியமானது. அக்கல்வியறுவைப் புகட்டுவதர்குக் காரணமான ஆசிரியர்கள் அக்குழந்தையின் எதிர்காலத்தை வகுப்பதில் முக்கிய பங்காற்றுகிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் எத்தகைய மதிப்பைக் கொடுக்கிறார்கள் ? இது ஒரு ஆழமான கேள்வியே !

சரி, இனி நான் வானொலியில் செவிமடுத்த அந்தக் கருத்தாடலுக்கு வருவோம். அதன் சாரம் இதுதான்,

இங்கிலாந்திலே உள்ள பாடசாலை மாணவை ஒருவரின் தாயர் அவருக்கு அம்மாணவியின் தலைமை ஆசிரியரால் கொடுத்தனுப்பப்பட்ட கடிதத்தைப் பற்றிக் கொண்ட ஆவேசத்தைப் பற்றியதுவே !

சரி எதற்காக அந்தக் கடிதம் அனுப்பப்பட்டது என்று நினைக்கிறீர்கள்?

அம்மாணவியின் வயது 11 வயது. இங்கிலாந்திலிலுள்ள பாடசாலைகளில் மாண்வர்களின் கல்வித் தராதரத்தை நிர்ணயிப்பதற்காக “கல்வித் தராதர நிர்ணயிப்புப் பரீட்சை (Scholastic Assessment Test – SAT) @ என்றழைக்கப்படும் பரீட்சை 11 வயது மாணவர்களுக்கும் நடத்தப்படும்.

இப்ப்ரீட்சையில் அதி சித்தி எய்தும் மாணவர்களின் விகிதாசாரப்படி பாடசாலைகளும் வரிசைப் படுத்தப்பட்டு அட்டவணைப்படுத்தப்படும்.

இப்படியான பரீட்சையொன்றில் தோன்றப்போகும் 11 வயது மாணவியின் மூத்த சகோதரிக்காக ஒரு பிறந்தநாள் விழாவைத் தாயார் ஏற்பாடு செய்திருந்தார். இவ்விழா ஒழுங்கு செய்யப்பட்ட நாள் அப்பரீட்சைக்கு முந்திய மாலையாகும்.

சரி இதர்கும் அம்மாணவியின் தலைமை ஆசிரியருக்கும் என்ன சம்மந்தம் ? உங்கள் கேள்வி புரிகிறது.

அவ்விழாவிற்கு இம்மாணவியின் சில நண்பர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்தச் செய்தி அத் தலைமை ஆசிரியரின் காதுக்கு எட்டியதும் அவர் அம்மாணவியின் தாயாருக்கு ஒரு கடிதம் னௌப்பியிருக்கிறார்.

“உங்களுடைய மகளின் பரீட்சைக்கு முந்திய மாலை இப்படியான ஒரு விழாவை ஏற்படு செய்து உங்கள் மகளையும் அவர்களது நண்பர்களையும் அழைத்திருப்பது வேதனைக்குரியது.இதைத் தாங்கள் ரத்துச் செய்ய வேண்டும்” எனும் வேண்டுகோளை இக்கடிதத்தின் வாயிலாக விடுத்திருந்தார்.

இம்மாணவியின் தாயாருக்கோ பொத்துக் கொண்டு வந்து விட்டது கோபம்.

என்னுடைய மகளின் பிறந்தநாள் வாழ்த்தை இஅரத்துச் செய்யச் சொல்லிக் கேட்பதற்கு இவர் யார்? என்னை என்ன கையாலாகாத தாயார் என்று எண்ணி விட்டாரா? என்று கோபம் கொண்டு ரகளை செய்திருக்கிறார்.

இவ்விடயத்தில் அத் தலைமை ஆசிரியர் நடந்து கொண்ட முறையா ? அன்றி அத் தாயார் நடந்து கொண்ட முறை சரியா என்பதுவே அவ்வானோலியிக் கருத்தாடலின் கரு..

குழந்தைகளின் மாணவப் பருவம் என்பது பொன்னான பருவமாகும். இப்பருவத்திலே இவர்களின் மனங்களிலே ஏற்படும் நிகழ்வுகளின் தாக்கம் அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் முக்கியமானதாகி விடுகிறது.

இப்பருவத்திலே பிள்ளைகள் தமது இல்லங்களிலே பெற்றோர்களுடன் கழிக்கும் நேரத்தோடு ஒப்பிடும் வகையில் அதிக நேரத்தை பாடசாலிகளில் மற்றைய மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் செலவிடுகிறார்கள்.

ஆசிரியர்களும் இம்மாணவர்களின் நலன்களிலே பெற்றோர்களுக்கு இணையான வகையில் அக்கறை கொள்வது அவசியம்.

அப்படிப் பார்க்கையில் இத் தலைமை ஆசிரியர் அம்மாணவியின் நலன் குறித்து அம்மாணவியின் தாயாருக்கு வலியுறுத்தியது எப்படித் தவறாக முடியும் என்பது ஒரு சாராருடைய கருத்து.

தன் குழந்தையின் நலனில் ஒரு தாய்க்கு இருக்கக் கூடிய அக்கறையை விட ஒரு தலைமை ஆசிரியருக்கு அதிக அளவில் எப்படி அக்கறை இருக்க முடியும் ? தன்னுடைய பாடசாலை தர அட்டவணையில் மேலிடத்தைப் பெற வேண்டும் எனும் அக்கறையினால் அத்தாய்ய்ய்ய்யைக் கட்டுப்படுத்த முயல்கிறார் என்கிறார்கள் ஒரு சாரார்.

சரி எது எபடியாக ஆவது இருந்து விட்டு போகட்டும்.

தன்னுடைய பாடசாலை உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு அதிக அளவிலான மாணவர்கள் அதிக புள்ளிகள் எடுத்துச் சித்தியெய்த வேண்டும் என்று அத்தலைமையாசிரியர் அம்மாண்வியை அதிக புள்ளிகள் எடுக்கும் வகையில் தூண்டுவாராக இருந்தால் அத்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹு அம்மாணவிக்கும், அம்மாணவியின் தாயாருக்கும் நன்மையாகத் தானே முடியும் ?

மாணவர்களுக்கு நாமளிக்ககூடிய செல்வங்களில் அதியுயர்வானது கல்விச் செல்வம் ஒன்றேதான். ஏனேனில் அதை யாராலும் எப்போதும் அவர்களிடமிருந்து பறித்து விட முடியாது .

பெற்றோர்களும், ஆசிரியர்களும் இணைந்தால் தான் மாணவர்களின் வாழ்க்கை ஒளிமயமானதாகும். பெற்றோர்கள் ஆசிரியர்களை இடையூறாக நோக்குவதோ அன்றி ஆசிரியர்கள் பெற்றோர்களை இடையூறாக நோக்குவதோ ஒரு மாணவ பருவக் குழதைக்க்கு ஆரோக்கியமாக அமையாது.

அடுத்த மடலில் சந்திக்கும் வரை

அன்புடன்

சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com

http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…..(56)

  1. வல்லமையில் தனது  100 ஆவது பதிவினை வெளியிட்டுள்ள திரு. சக்தி சக்திதாசன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும்  தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ….. தேமொழி 

  2. சதமடித்த சாதனையாளருக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் வெற்றிப் பயணம்!

  3. பத்து பதிவுகளுக்கே நாக்கு தள்ளுகிறது. நூறு பதிவுகளா? 

    உண்மையாகவே சாதனைதான்! 

    வல்லமையில் இருநூறாம் பதிவை நோக்கிப் பயணிக்கும்  திரு.சக்திதாசன் அவர்களுக்கு, வாழ்த்துகளும், வணக்கமும்!!! 

  4. அன்பினியவ உள்ளங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கும், ஊக்கத்திற்கும் எனது அன்பான நன்றிகள் . கவிஞர் வாலி ஜயாவுடன் ஒருமுறை பேசிக் கொண்டிருந்த போது தான் சிறு வயதில் எழுதிய கவிதை ஒன்றை நினைவு கூர்ந்தார். அது.                        ” ஊக்குவிக்க ஆளிருந்தால்                                                                                                                          ஈக்கு விற்கும் ஆள் கூடத்                                                                                                                           தேக்கு விற்பான் ” என்பதுவே . அந்த வகையில் ஒரு படைபாளியின் படைப்பாக்கம் தொடர அதை வரவேற்று ஆதரிக்கும் உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் ஊக்கமே தரமிக்க சேவையாகும் எனக்கூறி . அனைத்து வாசகர்களுக்கும் , வல்லமை நிர்வாகத்தினருக்கும் எனது பணிவன்புடன் கூடிய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.                                                                                  அன்புடன்                                                                                                                                                      சக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.