Blog

  • பாரதியும் ஓர் புத்தனே!

    பவள சங்கரி

    bha

    லட்சியமே சுவாசமாகimages (3)
    கொண்ட
    கொள்கையே வேதமாக
    விடுதலைப்புள்ளின் விவேகத்தோடு

    பாவலரின் உள்ளச் சிம்மாசனத்தில்
    சம்மனமிட்டு
    வெற்றிமுரசை பாரெங்கும் பரவவிட்டு
    பித்தம் கொள்ளச்செய்யும் புத்தனவன்!

    நதி வெள்ளப் பிரவாகத்தின்
    மதிவெல்ல
    மாதவம் மனதிலேகி விதிவெள்ளம்images (5)
    சூரையாடும் சூதைவென்ற சித்தனவன்!

    காக்கை குருவி எங்கள் சாதியென
    இனமறியா
    இன்பவூற்றை இயல்பாய்ச்சொல்லி
    களியாட்டம் போடச்செய்த ஞானியவன்!

    மனிதநேயமெனும் தூரிகையால்
    வண்ணங்கொண்டு
    வானளாவத் தீட்டியவவைகள்
    தீதின்றி திண்ணமாய் இன்றும்

    உச்சிமீது வானிடிந்து வீழந்தபோதும்
    அச்சமின்றி
    துச்சமென சுடரையேந்தி வலிமையை
    ஏழ்மையிலும் ஒளிரச்செய்த மாவீரன்!

    அமரப்பொழுதிலும் அரியணையைத்
    துறக்காதimages (4)
    ஒளிக்கனலாய் மின்னும் கண்ணோடு
    புவியனைத்தையும் மண்டியிடவைத்தவன்!

    பரிதிக் கிரணங்களாய் பாரினை
    ஒளியூட்டி
    அடிமைத்தளையை சுட்டெரித்து
    சோதிவடிவாய் சுடர்வோனே!!

     

    Share
  • மஹாகவிக்கு ஓர் ஓவிய அஞ்சலி.

    வணக்கம்,வாழியநலம்

    செப்டம்பர் 11 : மஹாகவிக்கு என் ஓவிய அஞ்சலி

    சு.ரவி

     

    Bharathy

     

    Share
  • காலங்களைக் கடந்து ஒலிக்கும் குரல்………….

    எஸ் வி வேணுகோபாலன்

    bhara

    ‘எட்டயபுரத்தானுக்கு இணையான புலவனை எங்காச்சும் பாத்தியா மாடத்தி…’ என்று கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவர்களது குரலில் ஓர் அழகு இசைப் பாடலை எண்பதுகளில்தான் முதன்முதல் கேட்டு கிறுகிறுத்துப் போனேன். பாரதி குறித்து யார் எழுதினாலும், பேசினாலும், பகிர்ந்து கொண்டாலும் எப்போதும் மெய் சிலிர்க்கும்வண்ணம் அவரில் தோய்ந்து இன்புறும் கணக்கற்ற இதயங்களில் இதை வாசிக்கும் உங்களுடையதும் ஒன்றாக இருக்கக் கூடும்.

    தேடல் மிகுந்த இளமையின் வேகம், சமூகத்தில் ஏதோ ஒழுங்கு தவறி இருக்கிறது என்பதான அவஸ்தை, எதையும் அர்ப்பணித்தாவது சக மனிதர்களது விடுதலைக்கு உழைக்கத் தயாரான நெஞ்சுரம், அறிவுக்கும் அனுபவத்துக்கும் எளிமைக்குமன்றி அதிகாரத்திற்குத் தலை வணங்காத தீச்சுடர் துணிச்சல்….இந்த வண்ணங்களைக் குழைத்துத் தீட்டினால் நமக்கு கிடைக்கும் ஓவியத்தில் பாரதியை தரிசிக்க முடியும். இல்லை, இல்லை, இவற்றுக்கும் அப்பால் விரிந்த சித்திரம் அவரது.

    அடிமை தேசத்தில், பெரிய தொழில் நுட்பம் வளர்ந்திராத ஒரு காலத்தில், இந்து சனாதன பிராம்மண குடும்பத்தில் பிறந்த ஒருவர் சீர்திருத்தவாதியாக மலர்வதும், போராளியாக உருவெடுப்பதும், மறுமலர்ச்சிக் கவியாகத் திகழ்வதும் காலத்தின் கொடை ! சிந்தனை வீச்சும், சொல்லின் தேர்ச்சியும், மொழி வளமும் கால காலத்திற்குமான அமுதமாகச் சுவைக்கும்வண்ணம் அவரது படைப்பாற்றல் மிளிர்ந்தது. ஏழ்மையின் மடியில் விளைந்த கனிகள் அவரது கவிதைகள். ஆனால் கம்பீரம் குலையாத முகம் இருக்கிறது அவற்றுக்கு. காலனிய அரசின் ஏவல் படைகளால் துரத்தப்பட்ட வாழ்க்கை அவரது. ஆனால் தீர்மானமான குரல் ஒலித்தது அவரது எழுத்துக்களில்.

    அழகியலை விட்டுவிடாத அரசியலை முழங்கின அவரது தேசிய கவிதைகள். பிற்போக்குத் தனத்தோடு சமரசம் செய்து கொள்ளாத ஜய பேரிகை கொட்டியது அவரது சமூகப் பார்வை. அனுபவத்தின் வடுவும், அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தின் தீக்காயமும் மட்டுமல்ல, குழந்தைகளைக் கொண்டாடும் துள்ளாட்டமும், இயற்கையைக் காதலிக்கும் கொண்டாட்டமும் கொஞ்சுகின்றன அவரது கவிதையுலகில்! பாரதி மிக மிக அரிய – வித்தியாசமான – காலத்தே வந்து வாய்த்த வரவு தமிழ் இலக்கியத்திற்கு.

    ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல்…’ என்று ஓர் அட்டவணை இருந்தது பாரதியின் அன்றாட வாழ்வுக்கு. இதில், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்பது இன்றைக்கும் பொருந்தத் தக்க பிரகடனம். அதுவும் இளைஞர்களுக்கு !

    நம்பிக்கை அற்ற பெருவெளியில் மனிதர்கள் சோர்வுறுகின்றனர். தாக்குதல் அதிகரிக்கும்போது நம்பிக்கையைக் கை நழுவ விடுகின்றனர் மக்கள். எதிர்ப்புணர்ச்சி குறைவான உயிர்கள் எளிதில் வீழ்ச்சியைச் சந்திக்கின்றன அல்லது ஆதிக்கத்தின் வன்மைத்தின்முன் சரண் அடைந்து தவிக்கின்றன. இந்திய இராணுவத்தில் இருந்தாலும், மக்களுக்கான அரசியலைக் கை விட முடியாது என்று குரல் கொடுத்த மேஜர் ஜெய்பால் சிங் “நாடு அழைத்தது” என்று பின்னர் தமது சுய சரிதைக்குத் தலைப்பிட்டார்.

    நாடு அழைக்கும் இப்படியான குரலைக் கேட்கும் தகுதியும், உள்ளுணர்வும், ஆர்வமும் மிக்கவர்கள் அந்தக் குரலின்வழி அடியெடுத்து வைக்கின்றனர். தங்களது அனைத்தையும் அந்தக் குரலுக்கு ஒப்புக் கொடுக்கின்றனர். அந்தச் செம்மாந்த உணர்வில் அடுத்தடுத்து கடமைகளை முன்னெடுப்பதில் நம்பிக்கையை வளர்த்தெடுக்கின்றனர். மகாகவி பாரதியின் செயல்பாடு, படைப்பூக்கம், சமூக வெளிப்பாடு இவற்றின் பின்புலத்தில் அவருக்கும் அப்படியான குரலுக்குச் செவிமடுக்கும் தன்மை இருந்ததை உணரமுடியும்.

    பாரதியின் அரசியல் குரல், தேசத்தின் விடுதலைக்கானது. சமூகக் குரல், பெண்ணடிமை-தீண்டாமை-தனியுடைமைக்கு எதிரானது. எல்லா அறங்களையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லும் அவரது கவிதைகள் அவரது தொலைநோக்குப் பார்வையை உணர்த்துகின்றன. அவரது கட்டுரைகள், கேலி சித்திரங்கள் அனைத்திலும் அவரது நோக்கம் வெளிப்படையாக இருந்தது. தேர்ச்சியான பத்திரிகையாளர் அவர். பள்ளி ஆசிரியராகவும் சில காலம் மதுரையில் பணியாற்றியவர்!

    நமது இன்றைய சமூகம் தாராளமய தத்துவத்தின் ஆட்சிக்குள் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மாற்றத்திற்கான சாத்தியங்களை அவரது படைப்புலகம் அள்ளி அள்ளி வழங்கிச் சென்றிருக்கிறது. மக்களுக்கு எதிரான விஷயங்களின்மீது ஆவேசமும், கோபமும் எழும் கவியாக மட்டும் பாடிவிட்டுச் சென்றுவிடவில்லை பாரதி. அதிலிருந்து மீளும் திசை வழி குறித்தும். அவரது தீப்பொறிகள் பறக்கவே செய்கின்றன அவரது தொகுப்பு நெடுக பார்த்துச் செல்ல முடியும்.

    பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது என்றும், அவரை மோதி மிதிக்கவும், முகத்தில் உமிழ்ந்துவிடவும் குழந்தைகளுக்குக் கற்பித்த முதல் ஆசான் பாரதி. ஒடுங்கிப் போகாது எதிர்த்து நிற்கவேண்டும் எனும் வாழ்க்கைப் பாடம் அது. அச்சம் தவிர் என்பது அவரது முதலாவது ஆத்திச் சூடி.

    விளையாட்டுக்கள் மறுக்கப்படும், மறக்கப்படும் இளமைப் பருவமாக இன்று சமூகம் குழந்தைமையைத் தொலைக்கச் சொல்கிறது. படிப்பு போட்டிப் பந்தயமாக மாற்றப் பட்டிருக்கிறது. பணத்தின்வழி சிந்தனை செலுத்தப் படுகிறது. அது எல்லா அன்பையும், அறத்தையும், உறவுகளையும் அறுத்துப் போடுகிறது. ஆனால், குழந்தைகளுக்கான பாரதியின் கவிதை மொழி இன்றைக்கு உயர்த்திப் பிடிக்க வேண்டியது. அதுதான் அவர்களுக்கு அவர்களது குழந்தைப் பருவ இன்பங்களை மீட்டுத் தரவல்லது.

    சின்னஞ்சிறு குருவி போலே – நீ
    திரிந்து பறந்து வா பாப்பா
    வன்னப் பறவைகளைக் கண்டு – நீ
    மனத்தில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

    என்பது இயற்கையை நேசிக்கவும், இயற்கையோடு இயைந்து வாழவும் போதிக்கிறது அல்லவா! காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு என்பதை வழக்கப் படுத்தப் போராட வேண்டாமா நாம்?

    தாய்மொழி வழிக் கல்வி அறவே கீழ்மைப் படுத்தப்படும் இந்த நேரத்தில், வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ, வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ என்ற அவரது அசாத்திய கோபம் நமது கடமையை எத்தனை நேர்த்தியாக நினைவூட்டுகிறது !

    சாதியத்திற்கு எதிரான போர்க்குரலை அவர் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். ‘எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரு தரம் அன்றோ, இந்த நிறம் சிறிதென்றும் இது ஏற்றம் என்றும் கொள்ளலாமோ, சாதிப் பிரிவினைகள் வேண்டாம் அன்பு தன்னில் தழைக்கும் இவ்வையம்’ என்பது எத்தனை அழுத்தம் திருத்தமான பிரகடனம்! மத வேறுபாடுகளை மீறிய நல்லிணக்க சமுதாயம் அவரது வேட்கை. அவரது வாழ்க்கை நடைமுறையாகவும் இருந்தது.

    பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறை, குழந்தைகளைக் கூட பாலியல் வன்செயலுக்கு உட்படுத்தும் வக்கிரங்கள் கவலை தரத் தக்க அளவில் அதிகரித்துவரும் இந்த நேரத்தில், ‘பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா’ என்ற அவரது குரலை, அவர் வாழ்ந்த நூற்றாண்டின் சமூக தளத்தில் வைத்துக் கேட்கும்போது சமூகம் கற்க வேண்டிய பாடங்கள் எத்தனை எத்தனை! ஆணும் பெண்ணும் சமமெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம் என்ற அவரது தெளிவு, இன்றைக்கும் ஏற்க மறுக்கும் ஆணாதிக்க உள்ளங்களுக்கு எதிரான சவுக்கு சொடுக்குதல் என்றே பார்க்கவேண்டும். பலியாகும் பக்கமே பழியும் போடத் துடிக்கும் பொது புத்திக்கு எதிரான கலகக் குரல்களை பாரதியின் சமூக விமர்சனத்தில் கேட்க முடியும்.

    தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் நாள் முழுக்க உட்கார்ந்து காதலைப் பார்க்கும் கூட்டம் இன்னொரு புறம், தங்கள் பகுதியில் காதல் என்றால், கௌரவக் கொலை செய்யவும் துணிகிறது.

    நாடகத்தில் காவியத்தில் காத லென்றால்
    நாட்டி னர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
    ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
    ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்;
    பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;
    பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
    மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
    முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே

    என்ற அவரது வெஞ்சினச் சொற்களில் இந்த அவலங்களுக்கு பதிலும் கிடைக்கும். அதற்கு எதிராகக் கிளர்ந்தெழும் தூண்டுதலையும் பெற முடியும்.

    ‘மண்ணில் இன்பங்களைப் பெற வேண்டி சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ’ என்ற ஒற்றை வரி, நிதி மூலதனத்தின்முன் தேசத்தின் இறையாண்மையை காவு கொடுக்கத் தயாராகும் ஆட்சியாளர்கள் குறித்த கேள்விகளை நமக்குள் எழுப்புகிறதுதானே ? ‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போவதோ நாங்கள் சாவதோ’ என்ற சாட்டை வரி இன்று எழுதப்பட்டது போல ஒலிக்கவில்லையா? ‘நல்ல விலை கொண்டு நாயை விற்போர் அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ’ என்ற அவரது கனல் வாக்கியம் நாட்டு நடப்பின் கார விமர்சனம் அல்லவா?

    மாயா வாதம், அத்வைதம் என்று மனித வாழ்க்கையில் படும் இன்னல்களையும், சுரண்டலையும் நியாயப்படுத்திய தத்துவக் கூட்டிலிருந்து பிறந்து வந்து அதற்கு எதிராக சிந்தித்த மகாகவி அவர். இயற்கையை ஒவ்வொன்றாய்த் துணைக்கு அழைத்து, ‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ பல தோற்ற மயக்கங்களோ, கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்கள் எல்லாம் அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ’ என்று அவர் எழுப்பிய கேள்வி பிரபஞ்சம் குறித்த விழிப்புணர்வோடு எழுதப் பட்டது.

    குயில் பாட்டு உழைப்பின் மேன்மையை, இயற்கையின் அழகியலை, வாழ்க்கையின் உன்னதங்களைக் கொண்டாடும் படைப்பு. அவரது சுயசரிதை ஒரு நீள்கவிதை – ஏராளமான செய்திகளையும், விவாதங்களையும் கொண்டிருப்பது. கண்ணன் பாட்டு கவிதை இன்பம் ஊட்டுவது.

    பாரதியின் படைப்புலகம் ஒரு பல்கலைக் கழகம் போன்றது. அதன் துறைகள் பரந்து விரிந்தவை. நிகழ்த்துக் கலை போல் இயங்கிக் கொண்டே இருக்கின்றன அவரது ஆழ்ந்த பொருளடக்கம் கொண்டிருக்கும் சமூக சிந்தனைகள்.

    அவர் வாழ்ந்த காலம், அவரது சூழல், அவர் எதிர்கொண்ட சவால்கள்-இவற்றின் பின்புலத்தில் மின்னும் அவரது ஆளுமை மகத்தானது. அதுதான் எட்டயபுரத்தானுக்கு இணையான புலவனை எங்காச்சும் பாத்தியா மாடத்தி என்று கேட்கவைப்பது. எல்லா புறச் சூழலின் சோதனைகளையும் விஞ்சி முன்னெழுந்து திரண்டு வருமாறு அதுதான் அடுத்தடுத்த இளைய தலைமுறைக்கு அறைகூவல் விடுத்துக் கொண்டிருப்பது. மாற்றங்களுக்குப் போராடத் தூண்டுவது. நம்பிக்கைச் சுடரை அடைகாத்து வைத்திருப்பது.

    பாரதி டிசம்பர் 11, 1882ல் பிறந்தார் என்றோ, செப்டம்பர் 11, 1921ல் மறைந்தார் என்றோ குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்வது வரலாற்றுச் செய்திக்கு மட்டுமே. அவர் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவர். என்றென்றும் வழங்கிக் கொண்டிருப்பவர். எங்கெங்கும் கொண்டாடப்படுபவர். எல்லோருக்கும் சொந்தமாகிவிட்டவர்.

    **********

    நன்றி : இளைஞர் முழக்கம்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    karpagam
    ‘’ஆனைத்தோல் பூண்ட அரன்கபாலி அங்கமாம்,
    தூணைத் தழுவும் திருமயிலை, -ஞானக்,
    கொழுந்தேவுன் ஈற்றடியில் காலன்போல் அஞ்சி,
    விழுந்தேனே நான்வெண்பா வாய்’’….கிரேசி மோகன்….

    Share
  • கவிஞர் அ.வெண்ணிலாவுக்கு சான்றோர் இலக்கிய விருது

    avennila

    வந்தவாசி.செப்.10. வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் அ.வெண்ணிலாவின் இலக்கியப் பணியைப் பாராட்டி, முன்னாள் தமிழக அமைச்சரும் சென்னை கம்பன் கழகத் தலைவருமான ஆர்.எம்.வீரப்பனின் 89-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையிலுள்ள இராணி சீதை மன்றத்தில் ஆழ்வார்கள் ஆய்வு மையம் நடத்திய இலக்கிய விழாவில் ‘சான்றோர் இலக்கிய விருது’ வழங்கப்பட்டது.
         இவ்விழாவிற்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் தலைமையேற்றார்.முன்னாள் மத்திய அமைச்சரும் ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் செயலாளருமான டாக்டர் சா.ஜெகத்ரட்சகன் வரவேற்புரையாற்றினார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அவ்வை நடராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
      இலக்கியத் துறையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவரும் கவிஞர் அ.வெண்ணிலாவுக்கு ரூபாய்.பத்தாயிரம் பரிசுத் தொகையும், ‘சான்றோர் இலக்கிய விருதினையும்’  ஆர்.எம்.வீரப்பன் வழங்கி, பாராட்டிப் பேசினார்.
       கவிஞர் அ.வெண்ணிலா இதுவரை ஆறு கவிதை நூல்களையும்,  இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும், கட்டுரைகள், கடித நூலொன்றும் எழுதியுள்ளார்.சாகித்திய அகாதெமிக்காக உலகமெங்குமுள்ள தமிழ்ப் பெண் கவிஞர்களின் கவிதைகளையும், என்.சி.பி.ஹெச். பதிப்பகம் வெளியிட்டுள்ள 75 ஆண்டுகால பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் தொகுத்துள்ளார். மத்திய அரசின் அழைப்பின் பேரில்,சார்க் நாடுகளைச் சேர்ந்த கவிஞர்களின் மாநாட்டிலும், காமன்வெல்த் எழுத்தாளர்கள் மாநாட்டிலும் தமிழகப் பிரதிநிதியாக பங்கேற்றுள்ளார்.
        இவரது படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழக பாடத் திட்டத்திலும் பாடநூல்களாக இடம் பெற்றுள்ளன.
    Share
  • என்னதான் சொன்னாய் அப்படி?

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (47)

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F/[/mixcloud]

    என்னதான் சொன்னாய் அப்படி?

    10460321_685391018219040_5872195989517013130_n

    சாற்றிய மாலைகளில், தேனீக்களின்
    சங்கீதச் சுற்றுகள் போல்,
    சாலையில் நடக்கும்போது
    முகவாய் தடவி,
    நாசியைக் கடந்துசெல்லும் மூலிகை வாசம் போல்,
    நேற்றைய கனவில் எனக்கே எனக்காய்
    நீ ஒரு கவிதையைச் சொன்னாய்..
    நினைவை மறித்து…கனவைப் பறித்து…
    நெஞ்சை அறவே நிறுத்திச் சிரித்தபடி…..

    தூங்கிக் கிடந்த சொர்க்கங்கள், நீ
    பொட்டு வைத்ததும் பதறின
    உயிரில்..
    தூர்ந்தே போன துவாரங்களில்
    தேவ கீதங்கள் விளைந்தன
    ஏங்கித் தவித்த புல்லின் நுனிகள்
    எட்டிப் பார்த்தபடி எழுந்தன
    எங்கே எங்கே என்றுதான் எல்லாம்
    உன்திசை நோக்கி ஒசிந்தன

    உருகி, உருகியபடி, எல்லாம் இங்கே
    உனக்காகத்தான் காத்திருக்கிறது
    ஒயிலான நிதானமாய், நீ
    ஒவ்வோர் அடியாய்..ஒவ்வோர் அடியாய்..
    உயிரெலாம் தவிக்க எடுத்து வைப்பதும்……….
    உயிரை இழந்து இழந்து பிழைப்பதும் கூட
    உவப்பாகி விட்டது

    இத்தனைக்கும் இறுதியில், உன்
    சுவாச சாமரத்தின் கதகதப்பில்
    தழுதழுக்க வைக்கும்போது
    நீ
    அப்போதுதான்
    திடீரென வந்ததுபோல் பேதலிக்கிறது புத்தி.
    வருவதே தெரியாமல் வந்து நிற்பது
    திறமையோ? கருணையோ?

    வந்தாயே!

    அதிருக்கட்டும்
    பொன்னை உருக்கித் தேனில் குழைத்து
    என்ன சொல்லிப் போனாய் நீ?

    காலை…விழிப்பு….என்னும்
    கரடு முரடான அவமானங்களில் வெட்கியபடி
    கனவை நினைவுகூர்தல்
    சாத்தியமில்லையே சகி!

    இதயத்தின் இழைகளை
    சின்ன இழைகூட மிச்சமின்றி மீட்டி
    இனி
    அடுத்துச் சொல்ல ஏதுமில்லாமல்
    உன்னை முழுதாக
    எடுத்துச் சொன்னவள்தான் நீ

    இருந்தாலும்
    நேற்றைய கனவில்
    என்ன சொல்லியிருப்பாய்
    என்பதைத் தவிர வேறேதும்
    சிந்திக்க விடாமல்
    சிரிக்கிறாய் நீ

    ஒன்று செய்யேன்..
    நிம்மதியின் சுனையான உன் மடியில்,
    நேர்ந்துகொண்ட என்னைச் சாய்த்து,

    மானாய் மீனாய் என்னுயிரை
    மாறி மாறி விழுங்கும் கண்களை
    மலர்த்தி மலர்த்தி என்னைப் பார்த்து,

    மாலைச் சிவப்பு மாறும் தருணமாய்க்
    கோலம் செய்யும் உதட்டைக் குவித்து,

    மறந்ததெல்லாம் நினைக்கவைத்து
    நினைத்ததெல்லாம் மறக்கவைக்கும்
    மாய விரல்களால், என்றன்
    மலிந்த தலைகோதி,

    மலையுச்சி குகைக்கோயிலில்
    மறைந்து ஒலிக்கும்
    சுருதியைப்போல் சுண்டும் உன்
    சுவாசத்தை கீதமாக்கி,

    மொட்டை மாடியிலிருந்து
    காற்றின் படிகளில் இறங்கி வந்து
    தோளைத் தொட்டுச் செல்லும் புறாவின் சிறகைப் போல

    மெல்ல…மிக மெல்ல….
    என்னைத் தூங்கவை

    கனவில் வா
    கவிதை சொல்
    கதவைச் சாத்திவிடு

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “யாரோ ! இவர்யாரோ! யாதவர்தான் , ஈஜிப்டின்,
    PHARAOHவாய் ஆன பராபரமே, – வாரே!வாவ்!,
    சிங்காரக் கண்ணனை , சிங்கா யினத்தின்முன்,
    KINGகாக் கினான்கேசவ் காண்” ….கிரேசி மோகன்….

    Share
  • ருத்ராவின் குறும்பாக்கள்!

    -ருத்ரா

    காதல்

    இதைக்
    கீறாத நிப்புமுனைகள்
    எழுத்துலக அனாதைகள்.
    மயில் இறகு

    சவப்பெட்டியின் மேல் கூட‌                            peackcock-with-eye-feather
    இது இருக்கலாம்.
    காதலின் சாவுக்கு அடையாளமாய்.

    சன்னல்

    போதும் நிலவை எட்டிப்பார்த்தது.
    வாங்கு உடனே ஒரு
    விண்டோ 8 வெர்ஷனை.

    தூது

    கணினியுக தமயந்திக்கு
    விரல்வழியே டெக்ஸிட‌
    இருபத்தாறு அன்னங்கள்.

    ஈசிஆர் சாலை

    ஜல்லியும் தாரும் போட்டாலும்
    வளையல்களும் மதுக்கிண்ணங்களுமே
    நொறுங்கிக்கிடக்கும் சாலை இது.

    டைட்டல் பார்க்

    கூவத்தின் கரையெல்லாம்
    கரன்சிகளில் கட்டிய‌
    “ப்ளாஸா”க்கள்.

    Share
  • தற்கொலை தீர்வாகுமா ?

    ஆர். அபுல் ஹாசன் ராஜா

    செப்டம்பர் 10, உலக தற்கொலை தடுப்பு தினமாக உலகம் முழுவதிலும் அனுசரிக்கப்படுகின்றது. சமீப காலங்களில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதாவது ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கின்றார். தற்கொலையில் இறப்பவர்களின் எண்ணிக்கை, கொலைகள் மற்றும் போர்களின் மூலம் உயிரிழப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

    உலகில் வாழும் 5 சதவிகிதம் பேர் தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். பால், வயது, நாடுகள் பேதமின்றி தற்கொலை எண்ணம் வேகமாகப் பரவி வருகின்றது. குறிப்பாக இளைய சமுதாயத்தினர் (15 – 19 வயதிற்குட்பட்டவர்கள்) ஒரு இலட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்து கொள்கின்றனர். மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் தற்கொலை நடைபெறுகின்றது. ஆய்வறிக்கையின்படி கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் தான் தன்னைத்தானே மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    இந்தியாவிலும் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் போகின்றது. கடந்த இருபது வருடங்களில் தற்கொலை சம்பவங்கள் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக 15 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்கின்றனர். தமிழகத்திலும் தற்கொலைகள் அதிக அளவில் நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    large
    தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் யாருக்கு தோன்றுகிறது என்று சிந்திக்கும் பொழுது மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், மது மற்றும் போதை மருந்துகளுக்கு அடிமையானவர்கள், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளின் காரணமாக மன அழுதத்திற்கு ஆளானவர்கள், பொருளாதார பிரச்சனைகள் மற்றும் வேலை வாய்ப்பின்மையால் விரக்தி அடைந்தவர்கள், எய்ட்ஸ்,ஆஸ்துமா போன்ற கடுமையான நோய் பீடித்தவர்கள், மிக முக்கியமாக தனிமையில் வாடுபவர்கள் இவர்களிடமே தற்கொலை செய்யும் எண்ணம் மேலோங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பெரும்பாலான தற்கொலைகள் அற்பக் காரணங்களுக்காகவே நடைபெறுகின்றன. கணவன் – மனைவி சண்டை, ஆங்கில வழி படிப்பில் தோல்வி, தேர்வில் தோல்வி, காதல், கடன் என்று சிறிய சிறிய பிரச்சனைகளைக் கூட எதிர்கொள்ள முடியாமல் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

    அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுப்பதற்குரிய வழிவகைகளை ஆராய வேண்டும். ஆண் – பெண், இரவு – பகல், இன்பம் – துன்பம், வாழ்வு – மரணம் என்று அனைத்தையும் இரண்டிரண்டாக படைத்துள்ள இறைவன் பிரச்சனைகளுடன் அதற்கான தீர்வுகளையும் சேர்த்தே படைத்துள்ளான். ஆதலால் எந்த ஒரு பிரச்சனையானாலும் உரியவர்களிடம் கலந்தாலோசித்து அதற்கான தீர்வு காண முயல வேண்டும். பிரச்சனைகள்,துன்பங்களை எதிர்கொண்டு வாழப் பழகினால்தான் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் வெற்றி காண முடியும்.

    இறைவன் வானம் – பூமி, இவற்றிற்கிடையே உள்ள எண்ணற்ற வாழ்வாதாரங்கள் இவற்றை எதற்காக படைத்துள்ளான்? நாம் இவ்வுலகில் எதற்காக படைக்கப்பட்டுள்ளோம்? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை காண முயல வேண்டும். அப்போதுதான் தற்கொலை போன்ற கோழைத்தனமான முடிவுகள் நம்முன் ஏற்படாது.

    பிள்ளை வளர்ப்பு என்பது மிக முக்கியமான ஒரு கடமையாகும். குழந்தைப் பருவத்திலிருந்தே சூழ்நிலைகளிக்கேற்ப வாழுதல், தன்னம்பிக்கை, பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல், தேவை ஏற்படின் பிறருடைய உதவியை நாடுதல் போன்ற பண்புகளை குழந்தைகளிடம் விதைக்க வேண்டும்.

    ஆன்மீக விஷயங்களில் நாட்டம், சமூகத்தில் உள்ளவர்களுடன் நெருங்கிப் பழகுதல், சரியான முறையில் உடல்நலத்தைப் பேணுதல், புகை, மது போன்ற தீய பழக்கங்களில் இருந்து விலகியிருத்தல் போன்றவை மூலமும் தற்கொலை மனப்பான்மையை களையெடுக்க முடியும்.

    தற்கொலை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம், அதற்கான காரணம் மற்றும் தவிர்க்கும் காரணிகள் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும். குறிப்பாக குழந்தைப் பருவம் முதல் வாலிபப் பருவம் வரை உள்ளவர்களுக்கு தற்கொலை ஒரு சமூகக் குற்றம் என்று உணர்த்த வேண்டும்.

    தற்கொலை முயற்சி செய்பவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்குரிய மையங்களை அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும்.தற்கொலை எண்ணத்தை தூண்டக்கூடிய சமூக, கலாச்சார (சினிமா, நாடகங்கள்,etc..,) காரணிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசுகள் தற்கொலைகளை தடுக்க தனிப்பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும்.
    இறைவன் படைத்த உயிரை மாய்த்துக் கொள்வதற்கு இவ்வுலகில் யாருக்கும் உரிமை கிடையாது. இந்த வாழ்வு இறைவன் நமக்கு அளித்த அருட்கொடையாகும். இங்கு நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடிக்கும், நாளை படைத்த இறைவன் முன் பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம். கவலைகள், தோல்விகளுக்கு அஞ்சி உயிரை மாய்த்துக் கொள்வதென்றால் இவ்வுலகில் யாரும் உயிருடன் வாழ முடியாது.

    இறைநம்பிக்கை, கடின உழைப்பு, பொறுப்பை உணர்ந்து செயல்படுதல், ஒழுக்கம் இவையே இன்றைய உலகில் வாழ்வதற்கு தகுதியான உபகரணங்கள் ஆகும். இவற்றை ஒரு மனிதன் பெற்றிருந்தால் எத்தகைய அசாதாரண சூழ்நிலையையும் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெற முடியும்.

    ஆதலால் தற்கொலையை மக்கள் கருத்தாக மாற்றி, அதன் அதனைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டால் இந்தக் கொடிய நோயை சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஒழித்து விட முடியும்.

    Share
  • பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்!

    -எம். ஜெயராம சர்மாமெல்பேண்

    இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை
    கருணையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்           muruga
    காட்சிதர மறுப்பதுமில்லை!

    ஆணவத்தை அகற்றிப்பாருங்கள் – அவன்
    அரவணைக்கக் கரத்தைநீட்டுவான்
    நாணயமாய் நடந்துபாருங்கள் – அவன்
    நாளுமெங்கள் அருகில்வந்திடுவான்!

    உணர்வுகொண்டு பாடிப்பாருங்கள் – அவன்
    உள்ளமதில் வந்துநின்றிடுவான்
    தெளிவுடனே தினமும்தேடுங்கள்  – அவன்
    சீக்கிரமாய் உதவவந்திடுவான்!

    ஏழ்மைதனை இரங்கிப்பாருங்கள் – அவன்
    எங்களுடன் இணைந்துநின்றிடுவான்
    தோழமையாய் இருந்துபாருங்கள் – அவன்
    துயர்துடைக்க வந்துநின்றுடுவான்!

    கண்மணியே என்றுபாடுங்கள் – அவன்
    கருணைமழை பொழிந்துநின்றிடுவான்
    கண்ணீரால் நனைத்துப்பாருங்கள் – அவன்
    காலமெலாம் உதவிநின்றிடுவான்!

    சினமதனை அகற்றிப்பாருங்கள் – அவன்
    தனைமறந்து பக்கம்வந்திடுவான்
    தனிமையிலே இருந்துபாருங்கள் – அவன்
    இனிமையெலாம் தந்துநின்றிடுவான்!

    காதலுடன் பாடிப்பாருங்கள் – அவன்
    கணப்பொழுதில் வந்துநின்றிடுவான்
    சோதியென நினைத்துப்பாடுங்கள் – அவன்
    சுகமனைத்தும் தந்துநின்றிடுவான்!

    நெறியுடனே நின்றுபாடுங்கள் – அவன்
    நீதிதர மறுப்பதுமில்லை
    பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்
    பூரணமாய்த் தந்துநின்றிடுவான்!

    Share
  • நீயும் நானுமா கண்ணா, நீயும் நானுமா?

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    கௌரவம்

    தமிழகத்தின் பெயர்விளங்கும் சாதனைகள் படைத்தவர்கள் வரிசையில் திரு.கஸ்தூரி ரங்கன் அவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. ஆம்.. தி ஹிந்து என்னும் ஆங்கிலநாளிதழ் மூலம் பத்திரிக்கைத்துறையில் பன்னெடுங்காலம் வியாபித்து பெரும்புகழுடன் விளங்கிவருவதுடன்.. அவர் ஸ்தாபித்த நிறுவனத்தின் மூலம் ஆங்கிலம் அறிந்தவர்களின் எண்ணிக்கை.. ஆங்கில மொழியை மேம்படுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது. அவர்தம் வழித்தோன்றலாய்.. தி ஹிந்து குழும நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் திரு. ரங்கராஜன் அவர்களை மெல்லிசை மன்னரோடு இணைந்து நானும் சந்திக்கச் சென்ற நாள் 01.12.1994 இனியதொரு திருநாள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

    hindu rangarajanமுன்கூட்டியே சந்திப்பிற்கான அனுமதி பெற்றிருந்தோம் என்பதால், திரு.ரங்கராஜன் அவர்களும் எங்களை வரவேற்கக் காத்திருந்தார்.  மெல்லிசை மன்னரோடு எத்தனை சினேகம் என்பதை அவர்களின் வழக்குமொழிச் சொற்கள் அடையாளம் காட்டின! அதை சினேகம் என்பதைவிட அந்நியோன்யம் என்று கூறலாம்! கட்டித்தழுவி தங்கள் அன்பை பரிமாறியபின் இருக்கைகளில் அமர்ந்தனர். இதையெல்லாம் கண்கொள்ளாக் காட்சியாகக் காண எனக்கு கண்ணதாசன் கருணை புரிந்திருந்தார். உபசரிப்புகள் பலமாக ஒருபக்கம் நடந்திருக்க.. சென்ற விஷயத்தை மெல்லிசை மன்னர் அவரிடம் எடுத்துரைத்தார். கேட்டமாத்திரத்தில்.. பொல்லாத கோபம் கொண்டார்..திரு.ரங்கராஜன் அவர்கள்! ஏண்டா.. நீ மட்டும்தான் கண்ணதாசனுக்கு என்று நினைத்துக் கொண்டாயா? ஏன் நாங்கள் எல்லாம் இல்லையா? ஏன் இத்தனை நாள் வரவில்லை.. இதையெல்லாம் ஒப்புக் கொள்ளவே முடியாது என்று பொங்கியெழுந்தபின் சரி..சரியென்று மெல்லிசை மன்னர் கேட்டுக்கொள்ள.. இப்போது என்ன வேண்டும் கேள்.. இதோ வெற்றுக் காசோலை.. வேண்டியதை எழுதிக் கொள் என்றார். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.. உருவாக்கியிருக்கும் சிலையை தமிழக அரசு ஏற்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைக்கிறார்கள்.  அதையடுத்து முழுநாள் விழாவாக கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கும் கண்ணதாசன் விழா பற்றிய விளம்பரத்தை ஹிந்து நாளிதழில் வெளியிட வேண்டும் என்றார்.  அது சரி.. முழுப்பக்கத்திற்கும் விளம்பரம் கொடுத்துவிடுவோம்.. என்றார் திரு.ரங்கராஜன்.  அதற்கான கட்டணம் என்ன என்று மெல்லிசைமன்னர் கேட்டார். அது எவ்வளவாக இருந்தால்  என்ன?  மேட்டரைக் கொடு.. மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார் ரங்கராஜன். முழுபக்கம் எல்லாம் வேண்டாம்.. சும்மா ஒரு கால் பக்கம் அளவில் கொடுத்தால் போதும் என்றார். அதெல்லாம் கிடையாது என்று சமர்புரிந்த ரங்கராஜன் இறுதியாக அரைப்பக்க அளவில் போட்டே தீருவேன் என்று முடிவு செய்தார்.  அன்றைய நாளில் அந்த விளம்பரம் கட்டணம் செலுத்தியிருந்தால் ரூ.2 லட்சம் என்பது நான் திடுக்கிட்ட செய்தி.. அதையே வண்ணத்தில் கொடுத்தால் இன்னும் இருமடங்கு என்றார்கள்.  கறுப்பு வெள்ளையில் வெளியான அந்த அரைப்பக்க விளம்பரத்திற்கு அவர் ஒரு காசு கூட வாங்கவில்லை என்பதுடன்.. தி ஹிந்து அன்பளிப்பு என்று கூட போட்டுக்கொள்ளவில்லை.. இது நாங்கள் சென்ற விஷயம்.. நம்ம விஷயத்திற்கு வருவோம்.  ஆம்.. அவரிடம் என்ன செய்தி கிடைத்தது.. அறிய ஆவல்தானே?

    கவியரசு கண்ணதாசனும், மெல்லிசை மன்னரும் ஹிந்து ரங்கராஜன் ஆகியோரும் அடிக்கடி சந்தித்து மகிழும் நண்பர்கள்.. அவர்களிடையே அந்தரங்க விஷயம் முதல் அன்றாட அரசியல் வரை எல்லாமே இருந்தன. அப்படி ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது.. கவிஞரிடம் வழக்கமான கேள்வி .. கடைசியாக என்ன பாட்டு எழுதினாய்.. சொல் என்று சொல்ல.. அங்கே சொல்லருவி கொட்ட.. தமிழ் மணக்கும் அந்த இடத்தில் மனம் திளைக்க இன்பம் பருகியவர் ரங்கராஜன்.  அப்போது.. தற்செயலாக ரங்கராஜன் அவர்கள் கவிஞரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார்.. ஏன்.. கவிஞரே யாருக்கெல்லாம் பாட்டு எழுதித்தரீங்களே.. எனக்கு ஒரு பாட்டு எழுதக் கூடாதா என்று!  நான் என்ன எழுத மாட்டேன்னா சொல்றேன்.. படம் எடு.. நான் பாடல் எழுதுகிறேன்.. என்று இயல்பாக கவிஞர் சொல்ல.. உடனடியாக மெல்லிசை மன்னரை அழைத்து.. ஒருநல்ல கதை கிடைக்குமா.. உடனே நான்ஒரு படம் எடுக்க வேண்டும்.. கவிஞரைப் பாட்டெழுதச் செய்ய வேண்டும் என்கிறார்.

    அந்த நாளில் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த படம் வியட்நாம் வீடு.. அதன் கதைவசனகர்த்தா.. வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள். அவரிடம் கேட்டுப் பார்ப்போம் என்று கூறி உருவான கதைதான் கெளரவம்.. திரு.ரங்கராஜன் அவர்கள் தயாரிப்பில்.. உருவான திரைக்காவியம்.. கண்ணதாசன் பாட்டெழுத வருகிறார்.  தனது நெடுநாள் ஆசை நிறைவேறும் தருணத்திற்காகக் காத்திருக்கிறார் ரங்கராஜன்.. மறக்க முடியாத திருநாளாக அது மாறுகிறது.

    kannadasan2vietnamveedu sundaramTamil Film Playback Legend T.M.Soundararajan
    நடிகர் திலகத்தின் திரையுலகச் சரித்திரத்தில் பொன்னாய் மின்னும் பல படங்களில் முன்னணியில் சில உண்டு. தங்கப்பதக்கம், கெளரவம் என்பவையும் அதில அடங்கும். வியட்நாம் வீடு என்கிற தரமான படத்தை உருவாக்கிய சிருஷ்டி..இயக்குனர் பி.மாதவன் ஆவார். அப்படத்தின் கதைவசனகர்த்தா வியட்நாம் வீடு சுந்தரம். நீ முந்திண்டா நேக்கு.. நான் முந்திண்டா நோக்கு என்கிற வசனம் அவரைப்பற்றிப் பேச வைத்தது. அவரே இயக்கிய படம் கெளவரம்.

    தன்னிலை தாழாமையும் – தாழ்வுறின்
    தாழும்கால் உயிர்வாழாமையும் மானம் எனப்படும்..
    என்கிற கருத்தைச் சுமந்த கதையோட்டம்.. உயிரோட்டம் தந்தவர் நடிகர் திலகம்..இரு வேறு வேடங்களில் தந்தை – மகன் பாத்திரமேற்க.. தோளிலே போட்டு வளர்த்த மகனும் சட்டம் பயில வைத்த பின்பு தன்னுடனே மோதுகிறான் கச்சேரியல் (கச்சேரி என்பதற்கு நீதிமன்றம் என்கிற பொருளும் உண்டு). பாலூட்டி வளர்த்த கிளி..பழம் கொடுத்து பார்த்த கிளி என்கிற உணர்வுப் போராட்டப் பாடலும் இதே திரைப்படத்தில்!

    தந்தையும் மகனும் மோதுகின்ற நீதிமன்றக் காட்சிகள் திரைப்படத்தின் உச்சம்.. வீட்டிலே அப்பாவுடன் மகன் ஒப்பனையில் நடிக்கும் காட்சிகளும்.. கச்சிதம்.  தன்னோடு மோதுகின்ற மகனை.. எப்போதும் வெற்றியையே சந்திக்கும் தந்தை.. கச்சேரியில் மோதவிருக்கும் சூழ்நிலையில்.. சுவரில் மாட்டிவைத்த புகைப்படத்தில் மகன் குழந்தையாக இருந்தபோது மார்பிலே உதைப்பது போன்ற காட்சி.. பாசத்திற்கு சாட்சி சொல்ல.. பரிதவிப்பிற்கு.. கண்ணதாசன் பாடல் வருகிறது..

    கவிஞர் அங்கே வந்தார். காட்சி விளக்கம் வியட்நாம் வீடு சுந்தரம் தந்தார். கதையின் அமைப்பு கேட்டார். மளமளவென பல்லவிகள்.. சரம் சரமாய்.. சரணங்கள்.. எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அந்த ஜீவகவிஞனைப் பற்றி எவ்வளவோ பேசலாம்.

    மூன்றடி மண்கேட்டான்.. வாமனன் உலகிலே..
    மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே..
    வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே..
    மாறும்அவதாரமே.. இதுதான் உலகிலே..
     
    மன்னனின் கெளரவம் சதுரங்கம் நடுவிலே
    மறிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே
    ஆகட்டும் பார்க்கலாம்.. ஆட்டத்தின் முடிவிலே
    அறுபதை இருபது வெல்லுமா.. உலகிலே..

    உணர்ச்சிக் கொந்தளிப்பை முகத்தில் காட்டி உயர்ந்த நடிகனாய் முத்திரை பதித்த நடிகர்திலகம் .. கண்ணதாசன்..விஸ்வநாதன்..ரங்கராஜன் கூட்டணியில் கெளரவம் திரைப்படம் மறக்க முடியாதது.  புராணத்தின் மறுபதிவு நடக்கிறது என்கிற கற்பனை யுக்தி.. கண்ணதாசனுக்கே கைவரும் போல்!!


    காணொளி:  http://www.youtube.com/watch?v=Io_-zCzX81E

    படம்: கௌரவம்
    பாடல்: கண்ணதாசன்
    இசை: எம் எஸ் விஸ்வநாதன்
    குரல்: டி எம் சவுந்தரராஜன்
    கண்ணா……
    நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
    நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
    காலம் மாறினால் கௌரவம் மாறுமா
    காலம் மாறினால் கௌரவம் மாறுமா… NEVER
    நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா

    அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம்
    அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம்
    அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கௌரவம்
    நடந்தது அந்த நாள்
    முடிந்ததா பாரதம்
    நாளைய பாரதம் யாரதன் காரணம்
    ஹே… நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா

    மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே
    மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே
    மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே
    வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
    வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
    மாறும் அவதாரமே இதுதான் உலகிலே
    ஹ ஹா… நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா

    மன்னனின் கௌரவம் சதுரங்கம் நடுவிலே
    மறிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே
    ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே
    அருபதை இருபது வெல்லுமா உலகிலே
    ஹே நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா

    காலம் மாறினால் கௌரவம் மாறுமா
    காலம் மாரினால் கௌரவம் மாறுமா… NEVER

    Share
  • All are Invitied for the special Homam on the day of 23rd sep 2014

    ksushmaanda homam on 23rd.september 2014. at danvantri peedam
    Sushmaanda homam for Purattaasi Ammavasai

     

     

    image
    A special Sushmaanda homam (Poosanikaai homam) will be held at Sri Danvantri Arogya Peedam, Walajapet, on September 23, 2014, on account of Purattaasi Ammavasai, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has announced.
    The homam will be performed at 10 a.m., on September 23.
    The performance of homam has not been directly specified in the Vedas, except in the case of Sushmaanda homam. The Yajur vedam specifies Sushmaanda homam. The conduct of homam and the message regarding the other homams had merely been passed on to the devotees by saints from time to time. Sushmaanda homam alone has a specific reference.
    The conduct of Sushmaanda homam will rid one of various doshas including big sins, says Sri Muralidhara Swamigal. Sengalipuram

    Anantharaman Diskshitar had pointed out that performing Sushmaanda homam a day before upanayam or marriage and other such functions would confer benefits. Also, the homam could be done any time a person feels he or she has committed a big sin.
    This homam can be done in a simple way without spending much money. For instance, one or two priests would suffice. The wealthy can spend more money on dhiravyams and other necessities.
    Performance of this homam would rid one of evil effects, enable blessings of parents, prevent indulgence in sinful acts again, and bring about mental peace. In the case of other homams, priests can carry out the functions on behalf of the devotee. In this homam, one has to carry out the homam directly as per the directive of the priest.
    Sri Muralidhara Swamigal has urged devotees to take part in the homam in large numbers on September 23 and derive benefits

     

    Share
  • உனக்கே உனக்கே உனக்காக!

    இசைக்கவி ரமணன்

    உனக்கே உனக்காக   (46)

    உனக்கே உனக்கே உனக்காக!
    (பாடல்)

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95%E0%AE%95/[/mixcloud]

    10451142_525203130945923_8197705392472800775_n

     

    உனக்கே உனக்கே உனக்காக! இந்த
    உடலும் அந்த உயிரும், அந்த
    உயிரில் மலரும் ஒவ்வொரு உணர்வும்
    உனக்கே உனக்காக!
    உனக்கே உனக்கே உனக்காக!

    வெண்ணிலவோ பொன்னிலவோ, அது
    வாழ்வதும் மறைவதும் வானத்திலே
    வீணைதரும் ராகமெல்லாம், வந்து
    மேவும் மெல்லிய விரல்களிலே
    கண்முழுதும் கனவுகளாய், உன்
    கால்படும் படாத பாதையிலே, நான்
    நின்றிருப்பேன் நீ சென்றிருப்பாய், என்
    கண்ணீர்த் துளிகளின் சாலையிலே! (உனக்கே)

    நள்ளிரவில் ரகசியமாய் என்மனதில் ஒரு மலர்விரியும்
    என்னுயிரே தேன் துளியாய் நீவருவாயென இனித்திருக்கும்
    நீவரலாம் பருகிடலாம் நிழலும் படாமல் விலகிடலாம்
    தேன் துளியே கண்ணீர்த்துளியாய் தெருவினிலெங்கோ உதிர்ந்திடலாம்
    மறுபடியும் இரவுவரும் மலர்விரியும் அதில் தேன் துளிர்க்கும் (உனக்கே)

    உறவும் பிரிவும் இல்லாமல் உரிமை ஒன்றும் கோராமல்
    இரவும்பகலும் நில்லாமல் இடைவிடாமல் நலம்பாடி
    இன்பம் துன்பம் இல்லாமல் இடையில் எங்கோ ஆடுகிறேன்
    உன்னில் என்னைத் தேடுகிறேன் ஒருகணம் கண்டால் வாழ்ந்திடுவேன்
    எனக்குள் இருக்கும் வனத்தில் சிரிக்கும்
    உனக்கே உனக்காய் வாழுகிறேன்! என்
    உயிரால் உன்னை வாழ்த்துகிறேன்! (உனக்கே)

     

    படத்திற்கு நன்றி

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    unnamed
    ’’பச்சைமா மேனியர்க்கு, இச்சை நவநீதம்,
    உச்சி மயிற்பீலி, உத்யோகம், -இச்சக
    பாரம் குறைப்பது, பாரதம் செய்வது:
    நேரம் திருவோண நாள்’’….கிரேசி மோகன்….

    Share
  • உலக எழுத்தறிவு தினம்

    -ரா.பார்த்தசாரதி

    International-Literacy-Day1எண்ணும்  எழுத்தும்  கண்னெனத் தகும்
    எழுத்தறிவித்தவன்  இறைவன் ஆகும்
    கல்வி மூலமே தீர்ப்பது சிறந்த வழியாகும்
    கற்றோருக்குச்  சென்ற இடமெல்லாம் சிறப்பாகும்!

    மனிதனாய்ப்  பிறந்த யாவரும் எழுத்தறிவு பெற்றிட வேண்டும்
    நாட்டில்  எழுத்தறிவுபெற அரசாங்கமும் பொறுப்பு ஏற்கவேண்டும்
    பட்டி தொட்டிகளிலும், கிராமங்களிலும் கல்வியை மேம்படுத்த வேண்டும்
    இதனைக் கல்வி மூலமே நிலைபெறச் செய்ய வேண்டும்!

    பின்தங்கிய  இனத்தவரும், பாட்டாளிகளும்  எழுத்தறிவு பெறவேண்டும்
    நாட்டில் உள்ளோர் எழுத்தறிவு பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும்
    அதற்கான ஊடகங்களைக் கிராமங்கள்தோறும் ஏற்பட்டுத்த வேண்டும்
    தாய்மொழியில் பயின்று கையொப்பம் இட அறியவேண்டும்!

    எழுத்தறிவினைப் புகட்டி அறியாமை, மூட நம்பிக்கைகளை ஒழிப்போம்
    இரவு நேரப் பள்ளிகள் மூலம் முதியோர்க்கும் எழுத்தறிவிப்போம்
    எழுத்தறிவின்மையை  ஒழிக்க என்றும் நாம் பாடுபடுவோம் என
    நாட்டில் உள்ளோர் சபதம் எடுப்போம் உலக எழுத்தறிவு தினத்தில்!   

    (செப்டம்பர்  8-ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாகக் கொண்டாடப்படுகிறது.)
     

     

    Share