Blog

  • காற்று வாங்க போனேன் (33)

     

    கே. ரவி

    ஓசை எழுப்ப முடியவில்லை என்று ஏன் வருத்தப் படுகிறாய்? ஓசையெல்லாம் அடங்கி மோனநிலை அடையத்தானே யோகிகள் முனைகிறார்கள். இப்படிக் கேட்கலாம். ஆனால், ஓசையே என் கவிதைகளின் உயிர்நாடி. அதை நான் எப்படி இழக்க முடியும். 1980-ஆம் ஆண்டில் எழுதிய ஒரு கவிதையை இங்கே சொல்லியாக வேண்டும். அந்தக் கவிதைக்கு ஒரு சிறிய முன்னுரை தேவைப்படுகிறது.

    a6பத்மாக்கா என்று நாங்கள் அன்புடன் அழைக்கும் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்குக் கவிதை ஈடுபாடு அதிகம். இருக்காதா பின்னே. எப்படிப்பட்ட கலைப் பாரம்பரியத்தில் வந்தவர் அவர்! அவரிடம் கலைமகளின் எல்லா அம்சங்களும் நிறைந்திருக்கக் காண்கிறேன். அவருக்கு எங்கள் கவிதைச் சுற்றத்தின் மீது, அதாவது, இசைக்கவி ரமணன், வ.வே.சு., நான், இன்னும் பல கவிதை நண்பர்கள் உள்ளிட்ட கவிதைச் சுற்றத்தின் மீது அளவு கடந்த அன்பு. தம் மனத்துக்கு நெருக்கமான எந்த நிகழ்ச்சி நடத்தினாலும், அவர் எங்களை அழைத்துக் கவிதைகள் சொல்ல வைப்பார். அப்படித்தான் 1980-ஆம் ஆண்டு, அவர் வீட்டில் விஜய தசமி பூஜையில் ஒரு கவியரங்கம் ஏற்பாடு செய்து எங்களை அழைத்திருந்தார். அந்தக் கவியரங்கத்தில்தான் என்னுடைய அந்தக் கவிதை அரங்கேறியது. அதுதான் ஓசைக் கவிதை. அந்தக் கவிதைக்கு இன்னொரு சிறப்புப் பெருமை உண்டு. ஆம், ரமணனின் பராசக்தி கவிதையோடு அதுவும் அரங்கேறியது என்பதே அதன் பெருமை. நடிகர் திலகம் சிவாஜியுடன் சேர்ந்து நடித்த ‘தேவர் மகன்’ திரைப்படத்தை எப்படிக் கமல்ஹாஸன் மறக்கவே முடியாதோ,  அப்படி இசைக்கவி ரமணன் சொன்ன பராசக்தி கவிதையுடன் சேர்ந்து என் கவிதை ஒன்று அரங்கேறிய பெருமையை நான் மறக்கவே முடியாது. என்னைப் பொறுத்தவரை, மிக உயர்ந்த, என்னை மிகவும் பாதித்த கவிதைகளில் ஒன்றாகவே ரமணனுடைய பராசக்தி கவிதையைக் கருதுகிறேன்.‘

    கட்டறுந்த காட்டாற்று வெள்ளமாக – மெத்தக்10530681_820952731257554_5883851054705537964_n

    கற்றவர்க்கும் கால்தடுக்கும் பள்ளமாக – புத்தி

    முட்டமுட்ட முளைக்கின்ற பாறையாக – எங்கோ

    முணுமுணுத்துக் கொல்லுகின்ற தேரையாக

    ஓடஓடச் சரியும் தொடுவானாக

    உந்த உந்த விலகும் நிலவாகப்

    பாடப் பாடப் பணிய மறுக்கும்

    பரவசம் அதிசயம் பொய் எங்கள் பராசக்தி

    இப்படி ஒரு மடை திறந்த வெள்ளமாகப் பாய்ந்து வந்த பராசக்தி கவிதையை ரமணனே சொல்லிக் கேட்க வேண்டும்.

    அதற்கு இந்தச் சுட்டியைச் சொடுக்கலாமே —-

    அந்தக் கவிதையுடன் அரங்கேறிய பெருமை என் ஓசைக் கவிதைக்கு உண்டென்றேன் இல்லையா? அந்த ஓசைக் கவிதை இதோ:

    நான் எழுப்பும் ஓசைதான் – இந்த

    மாநிலம் எங்கும் மோதிச் சிதறி

    வானம் பூமியென வையம் பிளந்து

    இடைப்பட்ட வெளியெங்கும் இடிமின்னல் மழையாகிக்

    காற்றைச் சொடுக்கிக் காதல் நினவுகளை

    ஆற்றங் கரையில் அழகு மலர்களாய்

    அடுக்கி வைத்துப் பச்சைப் பசேலென்ற

    புன்னகையின் ஊடே புகுந்து விளையாடி

    உங்களுக் கென்றோர் உலகம் படைத்துப்பின்

    உங்கள் மனத்துக்குள் ஊழிக் கனலெழுப்பி

    உங்கள் உணர்வுகளை ஊதிக் கலைத்தபடித்

    திங்கள் பகலென்று தேகம் எடுத்தபடி

    எங்கும் பரவி எக்காளம் இடுவதெல்லாம்

    நான் எழுப்பும் ஓசைதான்

    ஓசை எழுப்பும் உத்வேகம்தான் – என்

    ஆசைக் கடையாளம் ஏக்கத்துக் காதாரம் – அந்த

    ஆதார சக்திக்கே ஆளாகி விட்டவனை

    நாதப் பொருளையே நம்பிக் கிடப்பவனைக்

    காது குளிரக் கேளுங்கள்

    ஓசைப் பெருவெளியில் உட்கார்ந்த படியங்கே

    உதயக் கதிரழகை உற்றுக் கவனியுங்கள்

    இதயம் வெடித்துச் சிதறுண்டு போனாலும்

    உதயக் கதிரழகை உற்றுக் கவனியுங்கள்

    உலகப் பரப்பே உதிர்ந்து போனாலும்

    புலனழிய வாருங்கள் புலனழிந்து போனாலும்

    புதிய வடிவங்கள் பூண்டு மகிழுங்கள்

    சிந்தை அழிந்தாலும் செவிமலர்ந்து நில்லுங்கள் – வாழ்க்கைப்

    புயலென்ன செய்யுமப் போது

    ஓசையைக் கவிஞர்கள் எப்படியெல்லாம் போற்றிப் பாடியிருக்கிறார்கள்! இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு பாடலே சான்று:

    உழவர் ஓதை மதகோதை உடைநீர் ஓதை தண்பதம்கொள்

    விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி

    ஆர்க்கும் ஓசைகளை எப்படி அடுக்கிச் சொல்கிறார் இளங்கோவடிகள்!

    ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே

    இது அப்பர் பெருமான் வாக்கு.

    ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!

    இது பாரதியின் தீர்ப்பு.

    இயற்கையின் ஓசைகளில் மனம் பறிகொடுத்து என்னை இழக்கிறேன். அப்படி என்னை இழப்பதில் ஒரு பெரிய லாபம் இருக்கிறது. இசையில், இயற்கையின் ஓசைகளில் மெய்மறந்து, இந்த உடலெல்லைக்கு உட்பட்ட மிகச்சிறிய அகங்காரமான என்னை இழக்கிறேன்; அப்படி என் சிறிய நானை நான் இழக்கும் போதே, இந்த உடலைக் கடந்து, எல்லையற்ற பிரபஞ்சமாகவே விரிந்திருக்கும் என் மிகப் பெரிய நானை மெல்ல மெல்லக் கண்டுபிடித்து, என் விரிவை உணரத் தலைப்படுகிறேன். சின்ன முதல் போட்டு, பெரிய லாபம் ஈட்டும் செட்டியார் கதை! வெங்காயத்தைக் கொடுத்துச் சீரகம் வாங்கும் மளிகை வியாபாரம்! திருவேரகத்து முருகப் பெருமானைச் செட்டியாரே என்று அழைத்துச் சீர் அகமாகிய முக்திநிலை கேட்கும் சொக்கநாதப் புலவரின் ஒரு தனிப்பாடல் நினைவுக்கு வருகிறது:

    வெங்காயம் சுக்கானால் வெந்(து)அயத்தால் ஆவதென்ன

    இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை – மங்காத

    சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்

    ஏரகத்துச் செட்டியா ரே

    இயற்கையின் ஓசைகள் இனியவை. அவற்றில் இதயம் பறிகொடுத்து, இறைவனையே நாதப் பிரும்மமாய்க் கண்டு துய்த்த மஹாகவிகளும், மஹான்களும் நமக்கு வழிகாட்டிகள்.

    ஆனால், நமக்குள் ஓயாமல் ஓசை எழுப்பிக் கொண்டிருக்கும் மனச்சலனங்கள் அமைதி செய்யப்பட வேண்டியவை. அவற்றைச் சிந்தாகுலம் என்றே பெரியவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ‘ஆகுலம்’ என்பது ஆரவாரத்தைக் குறிக்கும் சொல்.

    மனச்சலனங்களை நிலைக்குக் கொண்டு வந்து, சலனமற்ற மோன லயத்தில் மூழ்குவதும், புறத்தே இயற்கையில் எழும் சலனங்கள் அனைத்திலும் இறைமையைக் கண்டு பரவசத்தில் ஆழ்வதும், ஆகிய இரண்டுமே உயர் அனுபூதி நிலைகளே! முதல் சாதகத்தை யோகியும், அடுத்த சாதகத்தைக் மஹாகவியும், இசைஞானியும் மேற்கொள்வார்கள். இந்த இரண்டு முறைகளின் இறுதி முனைகளும் சந்தித்துக் கொள்ளும் ஒரு வட்டத்தில் நான் சுழன்று கொண்டிருக்கிறேனோ?

    மிகச் சமீபத்தில் உதித்த ஒரு பாடலைச் சொல்ல இதுதான் சரியான இடம். தினமும் காலை 5 மணிக்கு யோகாசனப் பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கும் ஆசான் என் வீட்டுக்கு வருவார். நான் 4.30 மணிக்கு எழுந்து, தயாராக வேண்டும். அதற்காக மேஜைக் கடிகாரத்தில் அலாரம் வைத்துக் கொண்டு படுப்பேன். சில மாதங்களுக்கு முன் ஏனோ தெரியவில்லை, அலாரம் அலறவில்லை. ஆனால், அந்த அலறல் ஓசை இல்லாவிட்டாலும், 4.45-மணிக்கெல்லாம், பொழுது புலரும் அலர் ஓசையோடு, பலவிதமான பறவைகளின் கீச்சுக் கீச்சுக் குரலில், இயற்கையாய் விரிந்திருக்கும் பராசக்தியே என்னைத் துயில் எழுப்பினாள்! நான் கண்மலர்ந்தேன்; ஒரு பாடல் என் நெஞ்சில் மலர்ந்தது.

    (பாடல் கேட்டு மகிழச் சொடுக்கலாம் சுட்டியை —–)

    எத்தனை ஓசைகளோடு தினம் என்னை

    எழுப்புகிறாய் தாயே

    எத்தனை வண்ணங்கள் காட்டி என்னை நீ

    இயக்குகிறாய் தாயே

    சத்தமெல்லாம் ஒரு கணத்தில் இழந்து

    வெட்ட வெளியில் வடிவின்றிக் கலந்து

    போவதற்கா இந்தப் பகல் வேஷம் – வெறும்

    பொம்மைக ளோடென்ன சகவாசம்

    எப்பொழுதும் உன் சன்னிதியில்

    என்குரல் ஓசை கேட்கட்டுமே

    ஒவ்வொரு சொல்லுமுன் கார்குழலில்

    ஒவ்வொரு மலராய்ப் பூக்கட்டுமே

    கேட்பதெல்லாம் தரும் தாய்மனமே – என்

    கவிதையில் வந்தமர்வாய் தினமே.

    இந்தப் பாடலைப் பாடிக் கொண்டே என் வீட்டுத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தேன். பாடி முடித்ததும் எந்தச் சத்தமும் இல்லாத ஒரு பேரமைதியின் நடுவே நான் நிற்பதை உணர்ந்தேன். பறவை ஒலி, மரங்களின் சலசலப்பு, பூச்சிகளின் ரீங்காரம், ஏன், என் இருதயத்தின் லப்டப் துடிப்பு, ஹூம்ஹூம், எந்தச் சத்தமும் இல்லை. இல்லையா, எதுவும் எனக்குக் கேட்கவில்லையா? அரைநிமிடம் அப்படியோர் அமைதி! என்னுள் இருந்து புறப்பட்டு வெளிவந்த கவிதையை வரவேற்க இயற்கை ஆடாமல் அசையாமல் நின்றதுபோல் உணர்ந்தேன்.

    (தொடரும்)

    Share
  • 34. அருங்காட்சி​யகம் ஓர் அறிவுக் கருவூலம்!

     யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம், வைல் டெர் ஸ்டாட், ஜெர்மனி

    சுபாஷிணி ட்ரெம்மல்​

    நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வின்கலங்களில் ஒன்றின் பெயர் கெப்லர்-22பி. வின்வெளி ஆராய்ச்சியில் புதிய தடம் பதித்து புதிய பாதையை வகுத்த ஜெர்மானியரான யோஹான்னஸ் கெப்லரின் ஞாபகார்த்தமாகவும், அவரது ஆய்வுகளைச் சிறப்பிப்பதற்காகவும் பூமியைப் போல ஏனைய வின்மீண்களைச் சுற்றி வரும் ஒரு வின்கலனுக்குக் கெப்லரின் பெயர் வழங்கப்பட்டது.

     k5

    யோஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகத்தில் அவரது உருவச் சித்திரத்துடன் (ஜூலை 2014)​

    இத்தகைய சிறப்பு பெறும்  கெப்லர் யார் என்பதை அறிய நமக்கு ஆர்வம் இருக்கும் அல்லவா? அதனை அறிந்து கொள்ள இன்றைய அருங்காட்சியகப் பதிவில் உங்களுக்கு  நான் அறிமுகப்படுத்தவிருப்பது ஜெர்மனியின் பாடன் உர்ட்டென்பெர்க் மாநிலத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமமான வைல் டெர் ஸ்டாட் மாநிலத்தில் இருக்கும் யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகமே. இந்த அருங்காட்சியகம் வார நாட்களில் சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பார்வையாளர்களுக்காகத் திறக்கபப்ட்டிருக்கும். ஆகையால் அருங்காட்சியக வலைப்பக்கத்தில் திறக்கும் நேரத்தை அறிந்து இங்கு சென்று வருவது நல்லது.

    கணித மேதை, வின்வெளி ஆய்வாளர் என்ற சிறப்புக்களுக்கு மட்டும் உரியவரல்ல கெப்லர். வானியல் ஆய்வில் மிக முக்கிய திருப்பு முனையை வழங்கிய மூன்று கோட்பாடுகளைத் தனது ஆய்வின் தெளிவாகக் கண்டு உலகுக்கு வழங்கிய பெருமை இவருக்கு உண்டு. 1609 லிருந்து 1619 வரையிலான காலகட்டங்களில் இவர் வெளியிட்ட மூன்று வானவியல் ஆய்வுக் கோட்பாடுகள் இத்துறை ஆய்வுகளுக்குப் புதிய பாதையை அமைத்துக் கொடுத்தன. இது மட்டுமல்லாது. கணிதத்துறையிலும் வெவ்வேறு பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க முத்திரைப் பதித்த ஒரு பன்முக ஆளுமை யொஹான்னஸ் கெப்லர்.

     k4

    ​யோஹான்னஸ் கெப்லரின் கண்டுபிடிப்பு – டெலிஸ்கோப் (ஜூலை 2014)

    யோஹான்னஸ் கெப்லர் பிறந்து வளர்ந்த கால கட்டத்தில் அறிவியல் உலக ஆய்வாளர்கள், ஏனைய கோள்கள் அனைத்தும் பூமியைச் சுற்றி வருவன என்ற சிந்தனையைக் கொண்டிருந்தனர். சூரியனை மையமாக கொண்டு  இயங்குவது இந்த வான்வெளி என்ற சிந்தனை அப்போது பிறக்காத காலம். இந்த காலகட்டத்தில் தான் கெப்லர் தன் ஆய்வின் வழி, பூமியோடு ஏனைய கோள்களும் சூரியனைத் தான் சுற்றி வருகின்றன என்ற விஞ்ஞான உண்மையைக் கண்டுபிடித்து உலகுக்கு கொடுத்தவர் என்பதை நிச்சயம் நாம் நினைவு கூற வேண்டும்.

    இந்தச் சிந்தனையை முன்வைத்து அறிவியல் ஆய்வு உலகத்தை ஏற்க வைப்பது என்பது மிகச் சாதாரண விஷயம் அல்ல.. அதிலும் அந்த 17ம் நூற்றாண்டில்! ஆயினும் தனது விடா முயற்சியாலும் கடுமையான தொடர் ஆய்வுகளின் வழியாகவும் நிறைந்த சான்றுகளின் வழியும் இந்த உண்மையை உலகுக்குப் புலப்படுத்தினார் கெப்லர்.  இது மட்டுமன்று. கோள்கள் சூரியனைச் சுற்றி பயணித்துச் செல்லும் பாதை  முழுமையான வட்ட வடிவ பாதையல்ல என்ற உண்மையையும் தன் ஆய்வுகளின் வழி கண்டறிந்து நிறுவிய பெருமையும் கெப்லரையே சாரும்.

    k3

    கெப்லரின் ஆய்வுக் குறிப்புக்கள் அடங்கிய நூல் 17ம் நூற்றாண்டு வெளியீடு

    வைல் டெர் ஸ்டாட் ஒரு பசுமை அழகு நிறைந்த ஒரு  சிறு கிராமம். இக்கிராமத்தில் 1571ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் நாள் யொஹான்னஸ் கெப்லர் பிறந்தார். வருமையான குடும்ப சூழலில் வளர்ந்தவர் திரு.கெப்லர். இளம் வயதிலே கல்வியில் நல்ல ஆர்வம் உள்ளவர் இவர். அருகாமையில் இருக்கும் ட்யூபிங்கன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க இவருக்கு  உபகாரச் சம்பளம் கிடைத்தது. இந்தப் பல்கலைக்கழக வாழ்க்கையின் போது நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ் அவர்களின் ஆய்வுக் குறிப்புக்களையெல்லாம் ஆர்வத்தோடு படித்து கோள்களைப் பற்றிய ஆய்வுகளில் தம்மை தீவிரமாக இவர் ஈடுபடுத்திக் கொண்டார்.

    ​1596ம் ஆண்டில் கெப்லர் தனது மு​தல்  ஆய்வுப் படைப்பை முன் வைத்தார். இது காப்பர் நிக்கஸ் கட்டளை தொடர்பான ஒரு ஆய்வு. இது ஜெர்மனியில் மட்டுமன்று, ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளிலும் மார்ட்டின் லூதர் ஏற்படுத்தி விட்டிருந்த பயங்கர கருத்தலைக ​ள்​ எழுந்து கொந்தளித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. 1539ம் ஆண்டில் தான்  மார்ட்டின் லூதர் கத்தோலிக்க மதத்திதிற்கு எதிரான தனது கருத்துக்களை வெளியிட்டார். அக்கால கட்டத்தில் லூதருக்கு ஆதரவாக டேனீஷ் அரசு செயல்பட்டத்து. லூதரின் கருத்துக்கள் பரவ குழுக்கள் ஆங்காங்கே உருவாகி முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.  மார்ட்டின் லூதரின் புதிய கருத்தாக்கம் உருவாக்கிய சிந்தனை மாற்றத்தை ஏற்றுக் கொள்ள இயலாது தத்தளித்துக் கொண்டிருந்த கத்தோலிக்க மத ஆதிக்க சக்திகள் கெப்லர் அடுத்தடுத்து ​வெளியிட்ட கண்டுபிடிப்புக்களை ஏற்றுக்கொள்வதில் ​த​டைகளை முன் வைத்தன என்ற போதிலும் ஆய்வுத் திறமையினால் ஏனைய ஆய்வாளர்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமானவராகத் திகழ்ந்தார் கெப்லர்​.

    k2

    ​ட்யூபிங்கன் கிராமம் – கோப்பர்னிக்கஸ் உருவச் சித்திரம்

    இந்தக் காலகட்டத்தில் தான் மூலிகை மருத்துவத்தில் ஈடுபட்டு மக்களுக்கு நோய் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட உழைத்த அறிவார்ந்த முறையில் செயல்பட்ட பெண்களை  Witches  என்று சொல்லி அவர்களை உயிரோடு எரிக்கும் கொடூரமான ஒரு பழக்கமும் ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்தது. கெப்லரின் தாயாரும் இப்படி ஒரு விட்ச் என்று அடையாளம் காணப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படும் சூழ்னிலை எழுந்தது என்பதும் ஆச்சரியமான ஒரு உண்மை. அவருக்கு என்ன நேர்ந்தது.. கெப்லரின் கண்டுபிடிப்புக்கள் .. அவரது குடும்ப வாழ்க்கை, பயணங்கள் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

    தொடரும்…

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

     

    crazy

    “ஆடுறான் பார்பள்ளு, பாடுறான் பார்நமது,

      நாடு சுதந்திர நாளயெண்ணி;-வீடு,

      பெறகாந் திமதியண்ணன், பாகவதம் பாடு,

      தரயேந் திநிற்பான் தல(விடுதல)”….கிரேசி மோகன்….

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(119)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    தினமும் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான திட்டங்களும் வழிமுறைகளில் பலவழிகளில் சலிப்படைய வைப்பது இயற்கை.

    வீட்டுக்கு வீடு வாசற்படி இருப்பது போல மனிதராய்ப் பிறந்த எம் அனைவருக்கும் ஏதாவது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் வாழ்க்கை முழுவதும் வந்து கொண்டேயிருக்கின்றன.

    வரும் பிரச்சனைகளின் வடிவங்களும் அவற்றின் தாக்கங்களும் வேண்டுமானல் வேறுபடலாம் ஆனால் பிரச்சனைகள் எதுவும் இல்லாதோர் என்பது எண்ணிப்பார்க்க இயலாத ஒன்று.

    என்னடா இது ? ஆரம்பிக்கும் போதே பிரச்சனை, பிரச்சனை என்று கொண்டு வருகிறானே ! என்று சிறிது கலக்கமடைவது புரிகிறது. விசாரம் வேண்டாம் விடயத்திற்கு வருகிறேன்.

    பிரச்சனைகளைப் பிரஸ்தாபித்து நான் ஆரம்பித்த காரணம் இப்பிரச்சனைகளிலிருந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத் தேவையை வலியுறுத்த வேண்டியதாலேயே !

    ஆமாம் கொஞ்ச நேரம் எம்மை மறந்து நாம் இருக்க வேண்டி தொலைக்காட்சி அல்லது சினிமா என்று எமது மனதை அவற்றில் லயிக்க விடுவது அனைவருக்கும் பொதுவான செயலாகிறது.

    இத்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ அன்றி சினிமாக்களிலோ நாம் எம்மை மறந்து சிரிப்பது அதிலே இடம்பெறும் நடைச்சுவை நிகழ்ச்சிகளிலோ அன்றி நகைச்சுவைக் காட்சிகளிலோ எமது மனம் எம்மையறியாமலே லயிப்பதினாலேயாகும்.

    எந்த அளவிற்கு இந்நகைச்சுவைக்காட்சிகளில் எமது மனம் லயிக்கிறது என்பது அக்காட்சியில் நடிப்பவர்ளின் தத்ரூபமான நடிப்பைப் பொறுத்தே இருக்கும்.

    அப்படியாக எம்மை லயிக்க வைக்கும்படியான நகைச்சுவை நடிகர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம்.

    சரி எதற்காக இத்தனை விளக்கம் என்று எண்ணுகிறீர்களா ?

    நேற்று அமெரிக்க திரையுலகமான ஹாலிவுட்டில் நடந்த ஒரு துயரகரமான நிகழ்வே எனது மனதில் இச்சிந்தனைக் குதிரையைத் தட்டி விட்டது.

    எமது துயரங்களை மறந்து எம்மைச் சிரிக்க வைப்பதற்காக பலமணிநேரம் மேடையிலோ அன்றித் தொலைக்காட்சியிலோ அன்றி திரையரங்குகளிலோ பாத்திரமேற்று பணிபுரியும் அந்நடிகர்கள் தமது பிரத்தியேக வாழ்வினில் கவலைகளை மறந்து வாழ்கிறார்களா ?

    ஹாலிவூட்டின் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரும் ஆஸ்கார் விருது பெற்றவருமான “ராபின் வில்லியம்ஸ்” ( Robin Williams ) அவர்களை அறியாதவர்கள் மிகச்சிலரே.

    cold-and-dieகடந்த திங்கட்கிழை தனது வீட்டில் தூக்குக் கயிற்றை மாட்டி தனது உயிரைத் தானே எடுத்துக் கொண்டார் எனும் செய்தியை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.

    1951ம் ஆண்டு சிக்காகோ நகரில் “ராபர்ட் விட்ஸெரால்ட் வில்லியம்ஸ்” என்பவருக்கும் “லாரின் மக்லாரின்” என்பவருக்கும் மகனாக ராபின் மக்லாரின் வில்லியம்ஸ் பிறந்தார்.

    இளவயதிலே தனது தந்தையிடம் மிகுந்த பயம் கொண்டவராகவே வளர்ந்த இவரின் தாயாரும் பணிபுரிந்தமையால் தாதிமார்களிடமே வளர்ந்தவர் இவர்.

    பின் ஒருமுறை குறிப்பிடுகையில் “அன்புக்காக ஏங்கியவன் நான் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

    பள்ளியில் சக மாணவர்களால் “அதி சிறந்த நகைச்சுவையாளர்” என்று கெளரவிக்கப்பட்ட அதே நேரம் “வாழ்க்கையில் வெற்றியடையும் வாய்ப்பே இல்லாதவர் ” எனும் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் பிரசித்தி பெற்றது அந்நாளில் அமெரிக்கத் தொலைக்கட்ச்சியில் பிரபலமான நகைச்சுவைத் தொடரான “ஹாப்பி டேஸ்” ( Happy days ) எனும் தொடரில் பாத்திரமேற்று நடித்த பின்னரே.

    மூன்றுமுறை மணமுடித்த இவருக்கு முதலாவது மனைவியின் மூலம் ஒரு மகனும், இரண்டாவது மனைவியின் மூலம் ஒரு மகள் , மகன் என இரு குழ்ந்தைகளும் பிறந்தனர்.

    இவர் நதித்த படங்களில் “Good morning vietnam “, “ Mrs. Doubtfire”, “The dead poets society “ என்பன மிகவும் பிரசித்தி பெற்ற திரைப்படங்களாகும்.

    இவ்வாறு மேடையிலும், திரையிலும் மக்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த இவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இவர் போதை வஸ்துகள் மது என்பனவற்றிற்கு அடிமையாக மாறினார். தனது இந்த பழக்கங்களை இல்லாதொழிப்பதற்காக பலமுறை இதற்கான சிகிச்சை நிலையங்களில் தானாகவே போய்ச் சரணடைந்துள்ளார்.

    இவர் சமீபகாலத்தில் பல பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளாகியிருந்தார் என்று ஒரு செய்தி பத்திரிகைகளில் அடிபடுகிறது.

    இவர் சமீபத்தில் பலத்த மன அழுத்தத்திற்கும் உள்ளாகியிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது..

    தன்னுடைய வாழ்வுநிலை கொடுத்த மனபாதிப்பைத் தாங்கமுடியாமல் தனது உயிரைத் தானே மாய்த்துக் கொண்டார்.

    இவரது மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா தொடங்கி பல நாட்டைச் சேர்ந்த அரசியல், கலைத்துறைப் பிரமுகர்கள் தமது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்கள்.

    அடுத்தவரின் துயரைப் போக்க சிரிப்பு அதிர்வலைகளை உருவாக்கும் இவரைப் போன்றவர்களின் சொந்தவாழ்க்கை கொடுக்கும் மன அழுத்தத்தைப் பற்றி  இவர்களது நகைச்சுவைகளை ரசிக்கும் நாம் எப்போது கூட எண்ணியிருந்திருக்க மாட்டோம்.

    கவியரசரின்,

    சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான்
    சிரித்துக் கொண்டே அழுகின்றேன்
    எனும் பாடலின் அர்த்தம் இவர்களை மையப்படுத்தி எழுந்ததோ ?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • என்ன செய்வது?

    இசைக்கவி ரமணன்

    உனக்கே உனக்காக   (23)

    என்ன செய்வது?

    {கேட்டு மகிழ}

    ht1971

    உன்

    நிழலைக்கூடத் தழுவிடாமல் விலகி நிற்பதா? ஓர்

    இழையும்கூட விலகிடாமல் தழுவிநிற்பதா? என்னைக்

    கழுவிலேற்றும் கண்களைநான் கண்டு வாழ்வதா? அதில்

    விழுந்து கலந்து புரண்டு விளிம்பில் கரைந்து போவதா?

     

    வாழ்க்கை என்னும் யாழ்நரம்பில் ராகம் மாறலாம், ஒரு

    வசந்தகால மாலைகூட சோகமாகலாம்

    மீட்டும்விரல்கள் மீட்டியபின் மீள முடியுமா? ஒரு

    மின்னல்சன்னல் ஏறிவந்தால் தாள முடியுமா?

     

    மண்ணில் போட்ட கோலம் சற்று மாறுவதுண்மை, ஒரு

    மழைவிழுந்தால் மண்ணிலெங்கோ மறைவதும் உண்மை

    எண்ணி வைத்த புள்ளிகளா என்ன சொல்வது? அவை

    இஷ்டம்போல இணையும்போது என்ன செய்வது?

     

    வானில் புள்ளிவைத்துப் போன விரல்கள் என்னவோ? அவை

    வைத்தபடி வைத்துச் சென்ற விவரம் என்னவோ?

    மோனவிழிகள் காண்பதெல்லாம் கோலமாகுமா? அதில்

    மூண்டுவரும் கனவையெல்லாம் வானம் ஏற்குமா?

     

    அந்தப் புள்ளி இந்தப் புள்ளி இணைவதும் இல்லை, யுகம்

    ஆயிரங்கள் போனாலும் பிரிவதும் இல்லை

    சொந்தங்கள் சொல்லிச்சொல்லிப் புரிவதும் இல்லை, ஏதும்

    சொல்லாமல் இருப்பதாலே குறைவதும் இல்லை

     

    அன்பு என்றும் தியாகமின்றி வாழ முடியுமா? தன்னை

    அர்ப்பணிக்காமல் திரியும் தீபமாகுமா?

    ஒன்றிலொன்று உயிரைப்பெய்து ஒன்றுபட்டபின், அங்கு

    உறவுமேது பிரிவுமேது ஒன்றுமில்லையே!

     

    புள்ளியென்றும் கோலமென்றும் விரல்கள் எண்ணுமா? இரவுப்

    பொழுதில் மறைவில் கண்பனிக்கும் கதையை அறியுமா?

    வெள்ளிமுளைக்க ஏதுமில்லை வெட்ட வெளியிலே, மாலை

    விழுந்தபின்பு மீதமில்லை நீல வானிலே

     

    இரவும் பகலும் ஒன்று நீங்க ஒன்று வாழலாம், அந்தி

    இடையில் மட்டும் ஒன்றையொன்று நின்று காணலாம்

    ஒருமுறைதான் உயிரில்தோன்றும் உறவு என்பது, அதை

    ஓயாமல் உறுதிசெய்யும் பிரிவு என்பது……….

     

    படத்திற்கு நன்றி : இளையராஜா

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

    crazy

    “SIXPACKகில் கண்ணனவன் சிக்கென்(று) இருக்கின்ற,

      LOOKSபாக்க ராதைமேல்  LOVEவாலா, -VEXசான

      WARLAND அருச்சுனருக்கு வீரம் விளைவிக்க

      ARNOLDஆ னானோ அவன்!”….கிரேசி மோகன் ….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

     

     

    ப்ரம்ம மோகனம்….

    ————————–

    “மோகன ப்ரம்மத்தில் மூழ்த்தி மறைத்தனன்

      கோகுலத்தை நான்முகன்; கார்முகில் -தேகன்

      ஜெராக்ஸ்ஒண்(று) எடுத்து சகலோகம் செய்த

      பராக்ரமம்  கேசவ் படைப்பு”….கிரேசி மோகன்….

     

    acr

     

    Brahma Mohanam:
    (watercolor, 2004)
    Brahma happens to see Krishna sharing food with his friends and grazing cows; grabbing food from his friend’s hands if he liked something and other playful things which he did. Brahma doesn’t believe the cowherd Krishna as the Supreme one.
    One day, Brahma hides all the cowherds and cattle. Krishna knowing Brahma’s trick, takes the form of each and every one of those cowherds, cattle etc., and goes back to their respective homes. As if nothing happened.
    The impersonation was so perfect that no one noticed it. This routine keeps repeating for a year. Then Brahma surrenders, accepts Krishna as the Supreme, and releases the hidden cowherds etc.,
    Brahma’s vahana is the swan. When he falls to surrender, he falls like a dry leaf. Note the leaf dries up as he falls. Krishna is shown with a handful of curd rice in his hand which he shares with his friends, with five different pickles in between his fingers. (As described in the Dashama Skandam, Srimad Bhagavata)

     

    Share
  • என்மனம் ரொம்பப் பாவமே

    இசைக்கவி ரமணன்

    உனக்கே உனக்காக  (22)

    என்மனம் ரொம்பப் பாவமே

    (பாடல்)

    10011167_254221321415791_728106104_n

    என்மனம் ரொம்பப் பாவமே

    உன்மேல் தீராத காதலே!

    எந்த நாளும் மாற்றமின்றி

    நீளும் இந்த போதையே

    உந்தன் எதிரில் வண்ணக் கனவுகள்

    கண்ட ஊமை ஆனதே! நீ

    வந்து சென்றபின் நொந்த நெஞ்சினில்

    நூறு மின்னல்கள் தாக்குதே! கொடும்

    நாணமே உயிரானதே! (என் மனம்)

     

     

    கவிஞன் நானெனில் கவிதை நீயெனில்

    வாழவைப்பது நீ

    காதல் நீயெனில் கனவு நானெனில்

    வீழவைப்பதும் நீ

    தவிப்பு நானெனில் தவம் நீயெனில்

    தகிக்க வைப்பது நீ, நான்

    தவிடுபொடியாய்ச் சிதறும்போது

    தாவி அணைப்பது நீ! உயிர்

    தழுவித் தருவதும் நீ!

    பாறை நான், அதில் ஈரம் நீ, அதில்

    புல் நான், அதில் பூவும் நீ!

    மெளனம் நான், எழும் வார்த்தை நீ, அதன்

    பொருள் நான், அதன் உருவம் நீ

    எதையும் மீறும் அதிசயம் நீ

    வீதி ஏழை நான்! நீ

    இதையும் மீறி என்னை ஏற்றால்

    புலரும் இன்னொரு வான்! அதிலும்

    குலவும் நிலவே நீ! அதில்

    குழையும் மலரே நான்!

     

    Share
  • One Quiet Night

     

    AJITHSUBRAMANIAN

    a2

     

    I sit outside and stare into the sky,

    Oblivious to the time racing by.

    The innumerous bright stars,

    and a million deep scars.

    I sit outside and feel the gentle breeze,

    Solace of loneliness and the uncomfortable eaze.

    The infinite vastness of jet black space,

    The heart healing at its own pace.

    The real world, and the fantastic fantasy,

    The absolute truth, and that which makes me free!

    Stretched apart between them, I am.

    A million minutes, the soul has swam.

    I laugh today, I would cry another

    The endless cycle Ive got used to, brother!

    The tears of joy, and the weeps in pain,

    I found today are one and the same!

    A sudden chill and the drizzling starts,

    Reminds me of those broken hearts.

    Out of nowhere, the heavy feeling,

    The silent smile, and kept concealing

    A bit of light here and there,

    The sound of thunder heard everywhere.

    I sit outside and stare into the sky,

    Gearing up again, to give another try.

    AJITH

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(35)

    -செண்பக ஜெகதீசன்

    காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
    வேலாள் முகத்த களிறு. (திருக்குறள்:500 – இடனறிதல்)

    புதுக் கவிதையில்…

    இடமறிந்து செயல்படாதபோது
    இடர்தான் வாழ்விலே…
    களத்திலே வீரர்களை அழித்திடும்
    அஞ்சிடாப் போர்யானையும்
    அற்ப நரியால் அழியும்,
    களர்நிலத்தில் மாட்டிக்கொண்டால்…!

    குறும்பாவில்…

    இடமறிந்து செயல்படு,
    போரில் வென்றிடும் யானையும்
    பலியாகும் நரிக்கு, புதைநிலத்தில்…!

    மரபுக் கவிதையில்…

    வீரரைப் போரினில் வென்றழிக்கும்
         வெற்றி முகத்து யானையுமே
    நீருடன் சேறும் நிறைந்திருக்கும்
         நிலமாம் களரில் விழுந்திட்டால்,
    வீரமும் வலிமையு மில்லாத
         வனத்து நரிக்குப் பலியாகும்,
    பாரிதைப் பார்த்துத் தெரிந்திட்டே
         பணிகளைச் செய்திடு இடமறிந்தே…!

    லிமரைக்கூ…

    வீரமிகு போர்யானையையும் வென்றிடும் நரி
    புதைநிலத்திலது வீழ்ந்தால்,
    இடமறிந்து செயல்பட்டால் இடரில்லை தெரி…!

    கிராமிய பாணியில்…

    யான யான போர்யான
    யாருக்கு மஞ்சாப் போர்யான,
    எப்பவும் செயிக்கும் போர்யான…

    போர்க்களத்த வுட்டுவந்து
    பொதகுழில மாட்டிக்கிட்டா
    பெலமில்லா நரிகிட்டத்
    தோத்திடுமே போர்யான..

    கதயிதுதான் தெரிஞ்சிக்க
    எடமறிஞ்சி நடந்துக்க
    எடஞ்சலத்தான் தடுத்துக்க…! 

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் (32)

    கே.ரவி

    arvதிடீரென்று போன பகுதியில் நண்பன் கண்ணன் என்றொரு புதுமுகத்தைச் சந்தடி சாக்கில் நுழைத்து விட்டேனே. அவனைப் பற்றிச் சொல்ல வேண்டாமா? சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் நான் பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, அதே பள்ளியில் எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த என் ஜூனியர்தான் கண்ணன். அவனுக்கும் உள்ளுக்குள் கவிதையார்வம் இருந்ததைக் காலப் போக்கில் நான் தெரிந்து கொண்டேன். நானும், நண்பர்களும் சிந்தனைக் கோட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, அவன் தான் எழுதிய “சொர்க்கச் சுழல்” என்ற கவிதைக் குறுங்காவியத்தை என்னிடம் காட்டினான். அதில் நல்ல கவிதையோட்டம் தென்பட்டது. அதை அச்சடிக்கப் போதிய பணம் இல்லாத நிலையில், 50 பிரதிகள் சுழற்பதிவு (ஸைக்லோஸ்டைல்) செய்து சென்னை, மத்திய நூலக அரங்கில் அதற்கு ஒரு வெளியீட்டு விழாவும் நடத்தினோம்.

    அந்த விழாவில் எங்கள் ஆசான் தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன் கண்ணனுக்கு எழுதிய வாழ்த்து வெண்பா இப்பொழுது கிடைத்தது:

    கவிகண்ணன் வாழ்வில் கவிக்கண்ண னாகச்

    செவிக்கினிய செம்பாடல் சேர்த்தான் – புவிப்புகழைப்

    பற்றுகவே இன்றமிழில் இத்தொண்டு கற்கண்டு

    சுற்றுகவே சொர்க்கச் சுழல்

    A_perfect_sunrise_by_jchanders

    அதன் பிறகு, பல ஆண்டுகள் கழித்து, நான் ஐ.ஏ.எஸ்., அதாவது இந்திய அரசுப் பணிக்கான தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த போது எனக்கு அவன் பொருளாதாரப் பாடம் சொல்லிக் கொடுத்துத் நான் தேர்ச்சிபெறத் துணை செய்தான்.
    1980-ஆம் ஆண்டு ஒருநாள் மந்தைவெளி நார்ட்டன் தெருவில் இருந்த வீட்டின் மொட்டை மாடியில் விடியற்காலைப் போதில் நான் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தேன். மெல்லச் சூரியன் தலைக்காட்டத் தொடங்கியதும், கண்ணை மூடிக் கொண்டு கதிரவன் உதயக் காட்சியில் மனத்தைப் பறிகொடுத்து, ஏறக்குறைய ஒரு தியான நிலையில் அமர்ந்திருந்தேன். என்னைச் சுற்றி யாரும் இல்லை. எனக்குள் இருந்து ஒரு கவிதை பீறிட்டுக் கொண்டு வந்தது. அது வந்த வேகத்திலேயே, பித்துப் பிடித்தவன் போல், அந்தக் கவிதை வரவர, அதைச் சத்தமாக சொன்னேன்.

    இதுதான் சமயம் இதயம் திறக்க

    இருவிழி களிலும் தீப்பொறி பறக்கப்

    பாடிக் கொண்டே ஓசை இழக்க

    உதயம் என்ற பெயரில் இங்கே

    பிடறி சிலிர்த்தொரு சிங்கப் பறவை

    பிறந்து விட்டது பார்

    சிதறிக் கிடந்த சிறுவிண் மீன்கள்

    ஓடி ஒளிந்தன பார்

    புதுமை வெள்ளம் புனலா வதுபார்

    புதைந்து கிடக்கும் நினைவுக் குள்ளே

    தங்கச் சூலம் தைப்பத னாலே

    தகதக வெனவொரு கனலா வதுபார்

    புதுமை வெள்ளம் புனலா வதுபார்

    உற்றுப் பாரொரு கணமே போதும்

    வெட்ட வெளியும் பற்றி எரியும்

    புரண்டு படுக்கும் பூமித் தாய்க்குப்

    புதிய கனவுகள் தோன்றும் நேரம்

    உற்றுப் பாரொரு கணமே போதும்

    வெட்ட வெளியும் பற்றி எரியும்

    புலரப் போகும் பொழுதுக் குள்ளே

    புகுந்து பார்த்துவிடு – நீ

    சுமந்தி ருக்கும் ஜோதியை அங்கே

    கொண்டு சேர்த்துவிடு – முடிந்தால்

    நீயே இங்கொரு காலைப் பொழுதாய்

    நீண்டு படுத்துவிடு

    நீயே இங்கு நிரந்தர மாகி

    இருட்டைத் தடுத்துவிடு

    இதுதான் சமயம் இதயம் திறக்க

    இருவிழி களிலும் தீப்பொறி பறக்கப்

    பாடிக் கொண்டே … பாடிக் கொண்டே …

    பாடிக் கொண்டே … ஓசை யிழக்க

    முடிக்கும் போது எனக்கு வியர்த்து விட்டிருந்தது, ஒரு மைல் தொலைவு ஓடிவிட்டு வந்ததுபோல். சற்று நேரம் நான் கண் மூடியபடியே உட்கார்ந்திருந்தேன். கண்திறந்ததும், என் பின்னால் யாரோ நிற்பது போல் நிழலாடியது. திரும்பிப் பார்த்தேன். கண்ணன் நின்று கொண்டிருந்தான். அவன் எப்பொழுது வந்தான் என்று கேட்டேன். “நீ வெறி பிடித்தவன் போல் கவிதை சொல்லிக் கொண்டிருந்த போதே வந்து விட்டேன்” என்றான்.

    இந்த நிகழ்ச்சியை நான் இங்குக் குறிப்பிடக் காரணம் உண்டு. ஒரு கவிதைப் பிரசவம் நிகழும் போதே, அதை அருகில் இருந்து பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எல்லாருக்கும் அந்தப் பேறு கிட்டாது. கண்ணனுக்கு அன்று அது வாய்த்தது. எனக்கு அந்த வாய்ப்பைப் பலமுறை வழங்கியவன் ரமணன். அவனுடைய பல கவிதைகள் உதயம் ஆகி வெளிப்பட்ட தருணத்தில் நான் அருகில் இருந்து பார்த்துக், கேட்டுப் பரவசப் பட்டிருக்கிறேன்.

    மேலே உள்ள கவிதை என் கவிதை வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம். அதற்கு முன்பு நான் நிறைய கவிதை எழுதியிருக்கிறேன். ஆனால் முதன் முதலாக அந்தக் கவிதையைத்தான், அது வரும் போதே, வரவர எழுதாமல் அப்படியே சுடச்சுட வாய்விட்டுச் சொன்னேன். கவிதை எப்படி அறிவின் பெருமுயற்சியின்றிக் கவிஞனை மீறி வெளிப்படுகிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன். புத்தி சிகாமணி கனைத்துக் கொள்ளும் சத்தம் கேட்கிறது.

    மேலே குறிப்பிட்ட கவிதையைச் சில நாட்களுக்குப் பிறகே தாளில் எழுதி வைத்தேன். எழுதிய போது எழுதிய நாளைக் குறிப்பிடாமல், அந்தக் கவிதை உதித்த நாளை மறக்காமல் குறிப்பிட்டேன். இந்த வழக்கமே பிறகு தொடர்ந்தது. அதற்குப் பிறகு நிறைய கவிதைகள் உதித்து வெகுநாட்களுக்குப் பிறகே தாளேற்றம் கண்டன. ஆனால் மேற்சொன்ன கவிதையைப் போல் வரும் பொழுதே உரக்கச் சொல்லப்பட்ட கவிதை அது மட்டுமே. அதற்குச் சாட்சியான கண்ணன் இந்தக் கவிதை வரலாற்றில் இடம்பிடித்தது நியாயம்தானே!

    “நீயே இங்கொரு காலைப் பொழுதாய் நீண்டு படுத்துவிடு” என்ற வரி என்னை அவ்வப்போது உலுக்கிக் கொண்டிருந்தது. அது சாத்தியமா? நடக்க முடியாத ஒன்றைக் கவிதையில் உயர்வு நவிற்சியாகச் சொல்லி விட்டேனோ? ஒன்று புரியத் தொடங்கியது. அறிவு நிலையில் நம்ப மறுக்கும் விஷயங்கள், நடக்கவே முடியாது என்று தோன்றும் விஷயங்கள் கவிதை நிலையில் அனாயசமாகச் சொற்களில் வந்து விழக்கூடும் என்பதைப் புரிந்து கொண்டேன். கை, கால், தசை, எலும்பு, குருதி, நரம்புகளால் ஆன இந்த உடல்தான் நான் என்ற நினைப்பின் ஆணி வேரை அசைக்கும் கவிதைகள் வரத் தொடங்கின. நான் வெறும் உடற்கூடு இல்லை. அதையும் கடந்து எங்கும் பரவ முடிந்த ஆன்மசக்தி. நானே இந்தப் பிரபஞ்சம். நானே அனைத்தும். காலங்களில் நான் மார்கழியாகவும், பொழுதுகளில் நான் உஷஸ் எனப்படும் வைகறையாகவும் இருக்கிறேன் என்று கீதாச்சாரியன் சொன்னதுபோல் என்னாலும், ஏன், எல்லாராலும் சொல்ல முடியும். ஒவ்வொரு துளியுமே எல்லையற்ற கடல் என்ற உணர்வு பெருகி வரலாயிற்று. தாகூரின் கீதாஞ்சலியின் வரிகளில் பொதிந்திருந்த மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கின. பூமண்டலத்தில் அன்பும் பொறையும் வளர்ந்து, புல், பூண்டு, பூச்சி, மரம், செடிகொடிகள், விலங்குகள் என எல்லா உயிர்களும் இன்புற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திட, ஞான ஆகாசத்தின் நடுவே நின்று தான் வாழ்த்த வேண்டும் என்று பாரதி விரும்பினானே, அந்தப் பேசாப் பொருளைப் பேசும் துணிச்சல் வந்தது.

    ஒருபுறம், இந்த உடம்பின் உபாதைகளையும், அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டே, இந்த வாழ்க்கையின் இழுபறிகளுக்கு ஆளாகி அத்தனை இடர்ப்பாடுகளையும் முக்கல், முனகல்களோடும், அம்மா, அப்பா என்று அரற்றிக் கொண்டே, தாங்கிக் கொண்டு வாழும் என் அகங்கார வாழ்க்கை!

    மறுபுறம், இதில் எதிலும் பட்டுக் கொள்ளாமல், தொலைவில் இருந்து வேடிக்கை பார்த்தபடி உலகம் முழுவதையும், அதன் ஒவ்வோர் அணுவையும், அதில் நிகழும் ஒவ்வோர் ஆச்சரியத்தையும் வியந்து, ரசித்துக் கொண்டு எனக்குள் பாடல்களாகப் பாடிக் கொண்டே இருக்கும் கவிதை வாழ்க்கை. இப்படி இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது புரியத் தொடங்கியது.

    பல துன்பங்களுக்கு நடுவிலும், “எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்” என்று பாரதியால் எப்படிப் பாட முடிந்தது என்று புரிந்தது. “வையத் தலைமை கொள்” என்ற பாரதி மஹாவாக்கியம் அரசியல் தலைமை பற்றியில்லை என்பதும், தானே இந்தப் பிரபஞ்ச சக்தி என்ற தெளிவு பெறுதலே அத்தலைமையின் சாரம் என்பதும் புரியத் தொடங்கியது.

    இதெல்லாம் புரிந்து விட்டதாலேயே, உடல் வாழ்க்கை, உலக வாழ்க்கை மாறிவிடுவதில்லை. அதில் உழல்வதும், அதன் மேடு பள்ளங்களில் விழுந்தெழுந்து சுழல்வதும், சின்ன சின்ன இழப்புகளை எண்ணி உள்ளுக்குள் அழுவதும், அற்ப சந்தோஷங்களில் ஆழ்ந்து மகிழ்வதும், எதுவும் மாறவில்லை. இவற்றை மாற்றுவது கவிதையின் பணி இல்லை. ஆனால், இவற்றிலிருந்து அவ்வப்போது விடுபட வைத்தும், சிறகு தந்து பறக்க வைத்தும், தான் பறந்து திரிவதற்காகவே விரிந்து கிடக்கும் வானம் தானே என்ற விரிவை உணர வைத்தும் கவிதை ஏதோ ஒரு வழியில் நம் ஆன்மப் பயணத்தின் இலக்கோடு ஒரு தொடர்பை உருவாக்கித் தருகிறது என்று தெரிந்து கொண்டேன்.

    மேலே நான் குறிப்பிட்ட ‘இதுதான் சமயம்’ கவிதையைப் பற்றி இரண்டு குறிப்புகள் சொல்ல வேண்டும்.

    வானவில் பண்பாட்டு மையம் பாரதி விழா நடத்தத் தொடங்கிய கதையை முன்பே சொல்லிவிட்டேன். முதல் ஆறு வருடங்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்திலும், நாரத கான சபாவிலும், ம்யூஸிக் அகாடமியிலும் பாரதி விழா நடத்திக் கொண்டிருந்த வானவில் பண்பாட்டு மையம் 2000-ஆம் ஆண்டிலிருந்து திருவல்லிக்கேணியில், துளசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் பாரதி தன் இறுதி மூச்சை விட்ட பாரதி நினைவு இல்லத்தில் அதைக் கொண்டாட முன்வந்தது. இதற்குக் காரணம் கவிமாமணி குமரிச் செழியன். அவர்தான் அந்த யோசனையைச் சொன்னார். அந்த யோசனைப்படி அந்த ஆண்டிலிருந்து பாரதி விழாவை பாரதி நினைவு இல்லத்திலேயே ஆண்டுதோறும் மூன்று அல்லது நாலு நாட்கள் கொண்டாடி வருகிறோம். எட்டையபுர ஜமீந்தாருக்கு பாரதி எழுதிய சீட்டுக் கவியில், “சொற்புதிது பொருள்புதிது சுவைபுதிது ஜோதிமிகு நவகவிதை எந்நாளும் அழியாத மாக்கவிதை” தந்த தன்னை ஜமீந்தார் ஊரெல்லையில் எதிர்கொண்டழைத்துத் தனக்குச் சாலுவை, பொற்பை, வயப்பரிவாரங்கள் தந்து ஜதிபல்லக்கில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மிகவும் கம்பீரமாகக் கேட்டிருந்தான். அவன் வாழ்நாளில் அது நடக்கவில்லை. அதனால், அவன் தனக்கென்று கண்ட அந்த ஒரே கனவை அவனுக்குப் பிறகாவது நிறைவேற்றி வைக்க, அவனுடைய பிறந்தநாளான டிசம்பர் 11-ஐக் கவிஞர் திருநாளாகக் கொண்டாடி, அன்று அவனுடைய உருவச் சிலையைப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து, அதற்குச் சால்வை போர்த்தி, பொன்முடிப்புக் காணிக்கை வைத்துச் சிறுவர், சிறுமிகள் ஜதிசொல்லிக் கொண்டு நடனமாடிவர, கவிஞர் கூட்டம் புடைசூழ, அவனை யானை மிதித்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இருந்து பாரதி இல்லத்திற்குக் கொண்டுவரும் ஜதிபல்லக்கு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம்.

    as

    உவமைக் கவிஞர் சுரதா உயிருடன் இருந்த வரைக்கும் ஆண்டுதோறும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஜதிபல்லக்கைத் தம் தோளில் சுமந்த காட்சியையும், சில ஆண்டுகள் ஒருபுறம் இலக்கியச் செல்வர் குமரி அனந்தனும், மறுபுறம் என் உடன்பிறவாச் சோதரர் திரு.இல.கணேசனும் ஆக நாட்டின் இருப்பெறும் தேசிய இயக்கங்களின் தலைவர்கள் ஜதிபல்லக்கைச் சுமந்து வந்த காட்சியையும் என்னால் மறக்கவே முடியாது.

    இசைக்கவி ரமணன் பாடியது போல, “இதுபோதும் அம்மா இதுபோதும் ஈரேழு ஜென்மத்துக் கிதுபோதும்” என்று பாடிக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது.

    ஜதிபல்லக்கு முடிந்ததும் பாரதி இல்லத்தில் முழுநாள் கவிப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். சுமார் 200 கவிஞர்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாமல், உணவு இடைவேளை கூட இல்லாமல், கவிதை சொல்லும் நிகழ்ச்சி அது. இந்தக் கவிப்பொழிவு நிகழ்ச்சியைக் கவிமாமணி குமரிச்செழியனும், ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தின் செயலாளராக நாற்பதாண்டுகளுக்கு மேல் நற்பணியாற்றி வரும் திரு.கெ.பக்தவத்சலம் அவர்களும் ஒருங்கிணப்பாளர்களாக இருந்து ஆண்டுதோறும் நல்ல முறையில் நடத்தித் தருகிறார்கள்.

    a1

    ஒவ்வோர் ஆண்டும் கவிப்பொழிவில் நான் கலந்து கொண்டு கவிதை சொல்வேன். அந்த அரங்கின் ஓர் ஓரத்தில் எங்கிருந்தோ “பலே பாண்டியா” என்று பாரதி குரல் கொடுத்துப் பாராட்டுவதாக அவ்வப்போது உணர்ந்திருக்கிறேன். 2000-ஆம் ஆண்டுக் கவிப்பொழிவில், “இதுதான் சமயம்” என்ற கவிதையைச் சொன்னேன். சொல்லி முடித்துவிட்டு வந்ததும், அரங்கில் அமர்ந்திருந்த ஒளவை நடராஜன் அவர்கள் என்னைப் பாராட்டிவிட்டு சொன்னார்: “அது சரி ராஜா, நீ கவிதை படித்த போது ‘சிங்கப் பறவை’ என்ற சொல் காதில் விழுந்தது. தமிழில் சிம்புட் பறவை என்று சொல்வதுண்டு. அப்படி நீ எழுதியிருக்கலாமோ?” அவருடைய அந்தக் கேள்விக்கு நான் எதுவும் பதில் சொல்லவில்லை. ஆனால், பிடறி சிலிர்த்துக் கொண்டு ஒரு சிங்கம் பறக்கத் தொடங்கினால் எப்படியிருக்குமோ, அப்படிச் சூரியன் தன் கிரணங்களை விரித்துக் கொண்டு எழுந்த பிரும்மாண்டமான காட்சிச் சிறப்பைச் சிம்புட் பறவை என்ற சொற்சிமிழுக்குள் அடக்கிவிட முடியுமா என்ற பதில் கேள்வி என் மனத்தில் எதிரொலித்தது. அறிவைக் கடந்த மேற்பரப்புகளில் கவிதை சஞ்சாரம் செய்யும் நுட்பம் தெளிவாகியது. கவிதையை வெறும் அறிவுத் துலாக்கோல் வைத்து அளக்க முடியாது என்பது புரிந்தது. அறிவுக்கு முரணாகக் கவிதை அமையக் கூடாது என்று பாடம் சொன்ன ஒளவை நடராஜன் அவர்களுக்கு, அறிவே கவிதைக்கு எல்லையாகிவிடக் கூடாது என்று நான் பதில் பாடம் நடத்த முடியுமா? அவருக்குத் தெரியாதா என்ன? என் சிந்தனையைத் தூண்டுவதற்காகவே அவர் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கிறார் என்று எனக்குத் தெரியும்.

    “இதுதான் சமயம்” கவிதை பற்றிய இன்னொரு குறிப்பைச் சொல்ல இதுதான் சமயம்.

    கடந்த சில மாதங்களாகக் குரல் எழுப்பிப் பேசவும் சிரமப்படும் நிலை எனக்கு உண்டானது. கணீர் என்ற குரலில் சத்தமாகப் பேசியும், பாடியும் வந்த எனக்கு இது ஒரு பெரிய சோதனையாகியது. நீதிமன்றத்தில் வாதாடுவதிலும் மிகுந்த சிரமம் உண்டானது. நாலைந்து நாட்களுக்கு முன்பு என் முதல் மகளின் கணவன் ஷெளகத் என் வீட்டிற்கு வந்த போது ‘உன்னோடுநான்’ என்ற என் கவிதை நூலைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ‘அங்கிள், இந்த புக் எப்போ எழுதினீங்க?’ என்று கேட்டான். ஏறக்குறைய பதினந்து ஆண்டுகளுக்கு முன் என்று பதில் சொன்னேன். ஓ, சமீபத்தில் எழுதினீர்களோ என்று நினைத்தேன் என்றான். ஏன் அப்படி நினைத்தாய் என்று கேட்டேன். “பாடிக் கொண்டே ஓசை இழக்க” என்ற வரியால், எனக்குக் குரல் போனபின் அப்படி எழுதியிருப்பேனோ என்று நினைத்ததாகச் சொன்னான். தன்னால் பாட முடியவில்லயே என்று மனமுருகி நண்பன் சு.ரவி முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வரிகள் நெஞ்சில் அலைமோதுகின்றன:

    என் குரல் நாண்களிலே இசையே நீயேன்

    குலவ மறுக்கின்றாய் – இதமாய்க்

    குழைய மறுக்கின்றாய்

    (தொடரும்)

    Share
  • தஞ்சையில் களிமேடு பகுதிக்கு அந்தப் பெயர்வரக் காரணம்

    -தஞ்சை வெ. கோபாலன்

    தஞ்சை நகரத்தினுள்ளும், சுற்றுப்புறத்திலும் ஏராளமான ஆலயங்கள் உள்ளன. தஞ்சை நகரத்துக்குப் பெருமை சேர்ப்பது ’ராஜராஜேச்சுரம்’ எனும் பெரிய கோயில்தான் என்றாலும் இங்கிருக்கும் மற்ற பல சிறு ஆலயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். தஞ்சை நகரத்தில் மட்டும் சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட சக்தி ஆலயங்கள் இருப்பதாகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள “தஞ்சை சக்தி ஆலயங்கள்” எனும் நூல் மூலம் தெரியவருகிறது.

    தஞ்சையின் கீழ்ப்புற கோட்டைவாசல் அருகில் வெள்ளைப் பிள்ளையார் என்றொரு ஆலயம் உண்டு. இந்த ஆலயம் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களில் கடைசி மன்னரான விஜயராகவ நாயக்கர் காலத்தில் ஒரு குறவஞ்சி இந்த வெள்ளைப் பிள்ளையார் மீது பாடப்பட்டிருக்கிறது. சிதலமடைந்த ஓலைச் சுவடிகளிலிருந்து படியெடுத்து அதனை சரஸ்வதி மகால் நூலகத்தார் வெளியிட்டிருந்தார்கள். புலவர் வீ. சொக்கலிங்கம் என்பார் இதன் பதிப்பாசிரியர் ஆவார். இந்த நூலில் அந்தக் குறவஞ்சியில் குறிப்பிடப்படும் பல சிவாலயங்கள், வைணவ ஆலயங்கள், மற்ற பல ஆலயங்களைப் பற்றியெல்லாம் சிறு குறிப்பினை பதிப்பாசிரியர் கொடுத்திருக்கிறார். அவற்றில் சில குறிப்புகள் சுவையானவை, குறிப்பாகத் தஞ்சையைச் சேர்ந்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் அவை.

    இங்கு சில ஆலயங்களைப் பற்றிய குறிப்புகளை முதலில் பார்ப்போம். ஆனைமுகன் என்று பொதுவாக விநாயகப் பெருமானை வணங்கி பெருவுடையார் என்று பெரிய கோயிலின் நாயகனைக் குறிப்பிட்டுவிட்டு மற்ற பல ஆலயங்களைக் குறிப்பிடுகிறார்.

    தஞ்சை நாயகர் ஆனந்தவல்லி: இது தஞ்சைக்கு அருகில் விண்ணாற்றங்கரை (வெண்ணாறு என்று இப்போது அறியப்படுகிறது) தெற்கில் அமைந்துள்ள ஆனந்தவல்லி உடனாய தஞ்சேசர் (தஞ்சபுரீஸ்வரர்) ஆலயம்.

    சொக்கநாயகர்: தஞ்சை கருந்திட்டைக்குடி (இப்போது கரந்தை) ராஜவீதியில் கோயில் கொண்ட மீனாம்பிகை சமேதரான சோமசுந்தரக் கடவுள். இதே பெயரில் தஞ்சை மேலவீதி ஐயன்குளக் கரையிலும் ஒரு ஆலயம் உண்டு என்கிறார்.

    வைத்தீசர்: தஞ்சை பெரியகோயிலுக்கும் முன்னதாகக் கட்டப்பட்ட கோயிலில் எழுந்தருளியிருக்கும் கருந்திட்டைக்குடி கருணாமூர்த்தி. இந்த மூர்த்தி கருங்குஷ்டம் தீர்த்ததால் “கருங்குட்டம் தீர்த்த இறைவன்” என்று குறிப்பிடப்படுகிறார், ஆகவே இந்த குறவஞ்சியில் குறிப்பிடப்படும் வைத்தீசர் இவராகத்தான் இருக்கவேண்டுமென்பது ஆசிரியர் கருத்து.

    தொப்பாரங்கட்டி பிள்ளையார்: இந்த விநாயகப் பெருமான் தஞ்சை நாணயக்காரச் செட்டித் தெருவின் கீழ்புறத்தில் மிக உயரமாக எழுப்பப்பட்ட மேடையில் அமைந்த “தொப்பைக்கு ஆரம் கேட்ட பிள்ளையார்” என்று பெயர் பெற்றவர்.

    இனி சில வைணவக் கடவுளர்களின் பெயர்களைக் காண்போம்.

    கோபாலப் பெருமாள்: தஞ்சை வடக்கு வீதியும் ஐயன் கடைத்தெருவுக்கு இணையாக உள்ள ராஜகோபாலசுவாமி கோயில் தெருவும் சந்திக்கும் இடத்தருகே இருக்கும் கோயில். இப்போதும் ராஜகோபாலசுவாமி கோயில் என வழங்கப்படுகிறது.

    சிங்கப் பெருமாள்: தஞ்சையை அடுத்த விண்ணாற்றங்கரை அடுத்தடுத்து சில வைணவ ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இதற்கு முன்பாக பழைய சோழர்கால தலைநகராக இருந்த இடத்தில் இருந்தவை என்றும், நகரம் அழிக்கப்பட்டபோது இந்த ஆலயங்கள் இங்கு கொண்டு வந்து நிறுவப் பட்டதாகவும் கூறுவர். இதற்கு ஆதாரமாக சீனிவாசபுரத்திலிருந்து ரெட்டிபாளையம் செல்லும் பாதையில் சிங்கப்பெருமாள் குளம் என்று ஒன்று இருக்கிறது. அந்தப் பகுதிதான் பழைய சோழர் தலைநகராக இருந்த இடம். அந்தக் குளம்தான் இந்தச் சிங்கப்பெருமாளின் புஷ்கரணியாக இருந்தது, அதன் கரையில்தான் இந்த ஆலயமும் இருந்தது என்று கூறுவாரும் உளர்.

    மணிகண்டப் பெருமாள்: மேற்சொன்ன சிங்கப் பெருமாள் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ளது இந்தக் கோயில். இதே பெயரில் தஞ்சைக் கீழவீதி ‘சர்ச்சா வாசல்’ என்று அழைக்கப்படும் சிறப்பு வாயிலுக்கு எதிரே அமைந்துள்ள ஆலயமெனவும், அங்குள்ள பெருமாளுக்கு ‘நீலமிடற்றான்’ எனப் பெயர் எனவும் தெரிகிறது.

    நீலமேகப் பெருமாள்: இவரும் விண்ணாற்றங்கரையில் வரிசையாக அமைந்துள்ள ஆலயங்களில் ஒன்றான நீலமேகப் பெருமாள் ஆலயத்தில் கோயில்கொண்ட பெருமாள்.

    மின்மலை வெங்கடேசர்: தஞ்சை ஐயன்கடைத் தெருவுக்கு அருகில், முன்சொன்ன ராஜகோபாலசுவாமி கோயில் தெருவுக்கு அருகில், காசுக்கடைத் தெரு முடிந்து தெற்கில் திரும்பினால் அங்கு இந்த ஆலயத்தை மிக உயர்ந்த படிகளைக் கொண்ட மேடையில் காணலாம். இங்குள்ள வெங்கடேசப் பெருமாள் உயரமான உருவமுடையவர். இவ்வாலயத்தின் முன்பாக அமைந்துள்ள நாலுகால் மண்டபம் எனுமிடத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் பிரசித்தமானவர். ஒவ்வோராண்டும் இந்த நாலுகால் மண்டப ஆஞ்சநேயருக்கு பத்து நாட்களுக்கு இசைவிழா மிகச் சிறப்பாக நடந்து வருவதை அனைவரும் அறிவர்.

    ஆதிகேசவப் பெருமாள்: இந்தப் பெருமாள் மேற்சொன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தின் தெற்குத் திருச்சுற்றில் எழுந்தருளியுள்ள பெருமாள்.

    ரகுநாதப் பெருமாள்: தஞ்சைக் கீழவாசல் பகுதியிலுள்ள கீழ அலங்கம் எனும் பகுதியில் கோட்டை வாயிலுக்கு மேற்கே உள்ள கொண்டிராஜாபாளையத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள ராமசுவாமி ஆலயம்தான் ரகுநாதப் பெருமாள் ஆலயம். இதன் மிகஅருகில் இப்போதும் கோட்டை மேட்டில் பழைய கால பீரங்கியொன்றை மக்கள் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். கீழ அலங்கம் சாலையிலிருந்து படிகள் மூலம் மேலே ஏறிச்சென்று அந்தப் பீரங்கியைச் சுற்றுலா வரும் மாணவர்கள் கண்டு களிக்கிறார்கள்.

    முப்பிலாறுமுகப் பெருமான்: தஞ்சை வடக்கு வாசலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி. அந்தக் காலத்தில் தஞ்சைக் கோட்டைக்கு இரண்டே வாயில்தான், ஒன்று கிழக்கு வாசல் மற்றது வடக்கு வாசல். கிழக்கில் வெள்ளைப் பிள்ளையாரையும், வடக்கில் இந்த முப்பிலாறுமுகனையும் நிறுவியதாகச் சொல்லப்படுகிறது.

    மேல கோதண்டராமப் பெருமாள்: தஞ்சை ஐயன் கடைத்தெருவில் அமைந்துள்ள கோயிலில் குடிகொண்டுள்ள பெருமாள்.

    தாழியான்: தஞ்சை மேலவீதியில் மிகப் பிரசித்தமான பங்காரு காமாட்சி அம்மன் ஆலயத்தையொட்டி வடக்கில் அமைந்த ஸ்ரீகிருஷ்ணன் கோயில் என அழைக்கப்படும் கோயிலில் இருக்கும் பெருமான். இவர் வெண்ணைத் தாழியைக் கைக்கொண்டிருப்பதால் தாழியான் என அழைக்கப்பட்டிருக்கிறார்.

    நரசிங்கப் பெருமாள்: தஞ்சை கொண்டிராஜாபாளையத்திலுள்ள ரகுநாதப் பெருமாள் சந்நிதிக்கு எதிர்ப்புறமாக அமைந்துள்ள கோயிலில் எழுந்தருளியிருக்கிறார். இந்தப் பெருமாளைப் பற்றிய ஒரு சுவாரசியமான வரலாறு அல்லது கதை வழக்கில் இருக்கிறது. அந்தக் கதையை வெள்ளைப்பிள்ளையார் குறவஞ்சியின் பதிப்பாசிரியர் தன் நூலில் குறிப்பிடுகிறார். அந்தக் கதை என்னவென்பதையும் பார்ப்போமே.

    மேற்சொன்ன நரசிங்கப் பெருமாள் ஆலயத்தின் வாசலில் கடைவைத்திருந்தார் ஒருவர். அவர் பெயர் பெத்ததாசர் என்பவர். தீவிர வைணவர். அவருக்கு இந்த நரசிங்கப் பெருமாள்தான் எல்லாம். அவரை வழிபடாமல் எந்தக் காரியமும் செய்வதில்லை அவர். தன் கடைக்கு திருமண் பூசிய வைணவர் யாரும் வந்துவிட்டால் இவர் எழுந்து அவர்களை வலம் வந்து நமஸ்கரித்துவிட்டுதான் மற்ற காரியங்களைப் பார்ப்பாராம். அப்போது தஞ்சையை ஆண்ட மன்னர் ஒருவர் இவரது செயலைப் பரிகசிக்க எண்ணித் தன் அவைக்கு இரண்டு கழுதைகளைக் கொண்டுவந்து நிறுத்தி, ஒரு கழுதைக்கு நெற்றியில் திருமண் அணிவித்து, மற்றொரு கழுதையை வெறும் நெற்றியோடு நிறுத்திவைத்துவிட்டு பெத்ததாசரை அழைத்துவரச் செய்து பார்க்கச் சொன்னாராம். பெத்ததாசர் திருமண் இட்ட கழுதையை வலம் வந்து நமஸ்கரித்து எழுந்தாராம்.

    அப்போது மன்னர் பெத்ததாசரைப் பார்த்து மற்றொரு கழுதையை ஏன் வணங்கவில்லை என்று வினவினாராம். அதற்கு அவர் இது திருமண் தரிக்காத கழுதை, உன்னைப் போன்ற கழுதை, திருமண் தரித்த கழுதை என்னைப் போன்ற கழுதை என்றாராம். இந்தப் பதிலைக் கேட்டு மன்னன் கோபம் கொண்டு இவரைக் கழுவில் ஏற்ற உத்தரவு இட்டாராம்.

    தஞ்சை நகருக்கு மேற்கே சுமார் மூன்று கல் தூரத்தில் உள்ள ஒரு மேடான பகுதியில் அமைந்த கழுமரம் அமைந்த கொலைக்களத்துக்கு இவர் கொண்டு செல்லப்பட்டாராம். பெத்ததாசர் வழிநெடுகிலும் தன் இஷ்ட தெய்வமான நரசிம்மப் பெருமாளை நினைந்து “நரசிம்மா” “நரசிம்மா” என்று உச்சரித்துக் கொண்டே வந்தாராம். கழுமரத்தை அணுகியதும் அந்தக் கழுமரம் தீப்பற்றி எரிந்துபோனது. இந்தச் செய்தி அரசனுக்கு அறிவிக்கப்பட, மன்னனுக்குத் தான் செய்த தவறு புரிந்து அந்த பக்தரிடம் “ஐயனே! உங்களுக்கு நான் கொடுத்த தண்டனைக்காக என்மீது கோபப்படாமல், கழுமரத்தை எரிந்திடச் செய்தது என்மீதான தங்கள் இரக்க குணத்தினால்தான்; தங்கள் கருணைக்குத் தங்களை பணிகிறேன்” என்று சொல்லி அவர் பாதங்களில் வீழ்ந்து பணிந்தானாம். பிரகலாதனைக் காத்த நரசிம்மப் பெருமாள் எங்களையும் காத்தார் என்று மற்றவர்களும் அந்த அடியாரை விழுந்து வணங்கினார்களாம்.

    இந்த பக்தருக்கு அந்தக் கழுமரம் இருந்த பகுதியைத் தானமாக வழங்கினானாம் மன்னன். இவரைக் கழுவேற்றுவதற்காக அமைந்த அந்த மேடுதான் கழுமேடு என்றாயிற்று, பின்னர் மருவி “களிமேடு” என வழங்கியதாகச் சொல்லப்படுகிறது. கழுதை காரணமாகக் கொடுக்கப்பட்ட இடம் என்பதால் இது கழுதைமேடு என்று வழங்கி பின்னர் களிமேடாயிற்று என்றும் சொல்வர்.

    இப்படி மக்களின் விசனத்தைப் போக்கிய பெருமாள் இந்தக் குறவஞ்சியில் “விதனமே போக்கும் தஞ்சை நரசிங்கப் பெருமாள்” என்று அடைமொழியோடு புகழப்படுகிறார்.

    மேற்கண்ட ஆலயங்கள் தவிர மற்ற ஆலயங்களையெல்லாம் ஒன்றாக்கி ஏனையோர் என்று பொதுவில் அழைத்து வணங்கியிருக்கிறார் இந்தப் பாடலில். இந்த ‘ஏனையோர்’ எனும் சொல்லினுள் பங்காரு காமாட்சி, கொங்கணேஸ்வரர், காசி விசுவநாதர் ஆகிய கோயில்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

    அந்தப் பாடலை இங்கே பார்ப்போம்.

    பாடல் 1.

    ஆனைமுகன் அருள்பொழியும் ஆனந்தவல்லியுமை பிறைநாறு சீரடிக்கைம்
    மானையுள பெருவுடையார் சொக்கநாயகரும் வயித்தீசரும் தஞ்சை நாயகரும்
    சோனைமலைக் கைலாயக் கனியீன்ற தொப்பாரங்கட்டிப் பிள்ளையாரும்
    மீன்வெல் கோழிக்கொடியோனும் மகிழ வெள்ளைப் பிள்ளை குறமெனக்கு
    முன்னடக்க வேணும்.

    பாடல் 2.

    கோபாலப்பெருமாள் சிங்கப்பெருமாள் மணிகண்டப் பெருமாள்
    மின்மலை வெங்கடேசர் ரகுநாதப் பெருமாள் ஆதிகேசவப் பெருமாள்
    முகப்பிலாறுமுகப் பெருமாள் *கருடங்கோட்டை மேல் கோதண்டப் பெருமாள்
    தாழியான் நீலமேகன் விதனமேபோக்கும் தஞ்சை நரசிங்கப் பெருமாள்
    ஏனையோரும் தஞ்சை வெள்ளைபிள்ளையார் குறுவஞ்சிக்கு முன்னடக்க வேணும்.

    *தஞ்சைக் கோட்டை கருடன் வடிவில் இருப்பதால் இதற்கு கருடங்கோட்டை எனப் பெயர். சத்ரபதி சிவாஜி மகாராஜ் தன் சகோதரர் ஏகோஜி தஞ்சையை ஆண்டபோது அவருக்குத் தெரியாமல் இராமேஸ்வரம் போய்த் திரும்பும் வழியில் தஞ்சைக்கு வந்து கோட்டையைச் சுற்றிப் பார்த்ததாகவும், பின்னர் ஊர் திரும்பித் தம்பிக்கு எழுதிய கடிதத்தில் இந்தக் கோட்டை கருடன் வடிவில் இருக்கிறது; ஒரு பகுதியை மட்டும் வலுப்படுத்தினால் இந்தக்கோட்டை மிக உறுதியானதாக இருக்கும் என்று குறிப்பிடுவதாக, சரபோஜி எழுதித் தஞ்சைக் கோயிலில் கல்வெட்டில் பதிக்கப்பட்ட “போன்ஸ்லே வம்ச வரலாற்றில்” குறிப்பிடப்படுகிறது.

    Share
  • அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

    ayirathil oruvan

    கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

    அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்… மக்கள் திலகத்திற்கு மகுடம் சூட்டிய படங்களில் மகோன்னத படைப்பு – ஆயிரத்தில் ஒருவன்.  விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் இணைந்து வழங்கிய இசைச் சரித்திரத்தில் கடைசிப்பதிவு என்றும் இப்படம் அறியப்பட்டது.  திரு. பி.ஆர். பந்துலு அவர்களின் இயக்கத்தில் மாபெரும் சரித்திரப் படமாக எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் பாடல்கள் Record Break! இன்றுவரை மட்டும் அல்ல.. என்றைக்கும் கேட்டு இன்புறத்தக்கவை!!  பாடல்களை பெரும்பாலும் கவிஞர் வாலி வழங்கியிருக்க மூன்று பாடல்களை கவிஞர் கண்ணதாசன் அவர்களும் இயற்றியதாக அறிகிறோம்.

    KANNADHASAN - VISWANATHAN - RAMAMOORTHYTMS

    இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் உருவான கதை ருசிகரமானது.  அதுவும் முக்கியமான ஒரு கட்டத்தில் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக.. கடலில் சென்று கொண்டிருக்கும் கப்பலின் மேல்தளத்திலிருந்தபடி கதாநாயகன் தோழர்களுடன் கூடி உற்சாகமாய் பாடுவதாக அமைய வேண்டும் என்ற இயக்குனரின் தேவைக்கேற்ப .. அந்த உற்சாக அலைகளை பிரதிபலிக்கும் வரிகளாய் பாடல் அமையாமல்.. கவிஞர் கண்ணதாசனிடம் தொலைபேசி வாயிலாக.. சூழலை விளக்கி.. அதற்கு அவர் உடனடியாக.. தொலைபேசியிலேயே வழங்கிய பாடல் இது என்பது இனிய செய்தியாகும்.

    பாடலைப் பெற்று இசையமைப்பாளர்களிடம் கொடுத்த பின் கவிஞரிடம் கேட்ட கேள்வி ஒன்று – எப்படி இப்படி சட்டென்று ஒரு பொருத்தமான பல்லவி கருவானது?  கவிஞர் சொன்ன பதிலில் எத்தனை எதார்த்தங்கள்? எத்தனை இயல்பான வார்த்தைகள்?

    ஆம்.. கதாநாயகன் எம்.ஜி.ஆர். அவர்கள் .. கடலில் பயணம்.. உற்சாகம் எழவேண்டும்.  கதாநாயகன் என்ன செய்வார்.. மேலே ஒரு கையைக் காட்டுவார்.. கீழே ஒரு கையைக் காட்டுவார்..

    http://www.youtube.com/watch?v=12W01YmPf7I

    காணொளி: http://www.youtube.com/watch?v=12W01YmPf7I

    வரிகள்: கண்ணதாசன்
    படம்: ஆயிரத்தில் ஒருவன்
    இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
    பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்

    அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
    இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
    ஒரே வானிலே ஒரே மண்ணிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
    (அதோ..)

    காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
    கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
    காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
    காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
    ஒரே வானிலே ஒரே மண்ணிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
    (அதோ..)

    தோன்றூம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
    சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
    வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
    போகும்போது வேறுபாதை போவதில்லையே
    ஒரே வானிலே ஒரே மன்னிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
    (அதோ..)

    கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
    கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
    அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
    அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
    ஒரே வானிலே ஒரே மண்ணிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
    (அதோ..)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    crazy

    “விஸ்வரூபக் கண்ணன் விரல்களில் மாடணில்,
    கொஸ்வரூப மாய்க்குந்தி கோடுபெறல், -இஷ்வாகு,
    அண்ணல்போய் கண்ணன், அணிலாச்சு மாடுஅது,
    தொன்னைநெய் வாத்சல்யம் டோய்”….கிரேசி மோகன்….

     

    Share
  • அவையும் மலர்கள்தான்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (21)

    அவையும் மலர்கள்தான்

    {பாடல் கேட்டு மகிழ}

    Paintings of rural indian women - Oil painting (9)

    வினையாலணையும் பெயர் என்றார்

    துயிலாலணையும் இமைகளோடு போராடிக் கொண்டிருந்தேன்

    ”இலக்கியமும் இலக்கணமும் இரண்டு கண்கள் என்றார்”

    இரண்டுமே செருகிவிட்டன

    ”அன்புதான் பாசம் அதுதான் நேசம் அதுவேதான் நட்பு

    அதனால்தான் காதல் அதன்முகமே தேசபக்தி…”

    கனவில் கேட்ட வாசகங்களின் விழிப்பில்

    கைகளை விலக்கிக் கழுத்தைத் திருப்பினேன்

    சன்னல் வழியே மைதானத்தில்……….

     

    அழகான மரம் அது

    ஒருக்களித்துப் படுத்திருக்கும் ஒய்யார தேவதைகள் போல்

    பெருத்தும் சிறுத்தும் விடலை மனங்களைப்

    பின்னி எடுத்தபடிப்

    புரண்ட கோலத்தில் கிளைகள்

     

    ரீதி மாறாத காதல் மனம்போல்

    ஒரேவிதமாய் ஆயிரம் மலர்கள்

    ஒரே குடும்பம்தான் என்றாலும்

    குழுக்களாய்ப் பிரிந்து வம்பளந்து

    கூடும்போது குலாவிக் கொள்ளும்

     

    விடியும் முன்னேயே ஈரத் தலையை

    முடிந்தபடி வந்துநிற்கும் மூக்குத்திப் பெண்ணின்

    மூக்கை உரசும் மலர்கள்

    பூக்குடலையில் மூச்சுவிட்டுப்

    பூசைக்குப் போய்ச்சேரும்

     

    பள்ளிக்கூடக் காலை நேரம்

    பாரத மாதா புகழ்பாடி

    கொடியேற்றி விறைக்கும்போது

    நம்பற்குரியோர் சூழ்ந்திருக்கும்

    கம்பத்திருந்து கொட்டும் சில

     

    கூந்தல் கருமையைக் கூட்டிக்காட்டும் சில

    ஏந்தி மண்டியிட்டு

    இதயத்தைக் கொடுப்பதற்காகச் சில

     

    அம்மாவுக்கும் அக்காவுக்கும்

    ஆசை ஆசையாகச் சில

    சும்மாவேனும் பறித்துப் பார்க்க்ச் சில

    இம்மியும் விலகாமல் மரத்தோடு சில

    இறந்தவரின் வெந்த நெஞ்சில் சில

     

    ஒரே மரம். ஆயிரம் பூக்கள்

    உள்ளுக்குள்ளே நூறு குழுக்கள்

    ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பயன்கள்

     

    சில மலர்கள் மட்டும்

    காயாமலும் கனியாமலும்

    யார்கையிலும் சேராமலும்

    யாரும் பார்க்காமலும்

    அடிமரத்தின் நிழலிருட்டில்

    உதிர்கின்றன,

    உன் கண்ணில் இன்னும் படாத

    என் காதலைப் போல்

     

    அவையும் மலர்கள்தான்

    அதே மனதைச் சேர்ந்தவைதான்

    என்று நீ உணர்கின்ற நேரம்

    உதிர்ந்த மலர்கள் உரமாகி

    ஒவ்வொரு கிளையிலும் முகங்காட்டி

     

    எவ்வழியேனும் உன்

    மென்விரல் தீண்ட

    எப்படியேனும் உன்

    வன்னக் கால்களை வருடிப் பார்க்க

     

    எழுந்த கண்ணீரைத் தேனாய் இறுக்கி

    ஏங்கிச் சிரித்திருக்கும்…………

     

    படத்திற்கு நன்றி

     

    Share