
பாஞ்சாலி கூப்பிட்டது கண்ணனை….வந்தது மூவர்….!
”முயலகன் எங்கே! மால்நட ராஜா
கயலாமை பன்றியாய் கோரசீயப் -பயலாய் (பயல் -வாமனர்)
மூணுராம கண்ணனாய் முந்திவந்தோய், த்ரோபதைக்கு
தாணுமால யன் (மும்மூர்த்திகள்) கை துகில்’’
.…கிரேசி மோகன்….!
ஆகண்ணன், ஆஹா அசோதை வளர்கண்ணன்
’ஆ’அடி மேய்ந்திடும் ஆனந்த – சேய்க்கண்ணன்
கட்டிப் பிடிடாக்டர் காதல் கசிந்திட
கட்டிப் பிடிகண்ணன் காப்பு.’’
….கிரேசி மோகன்….!

’’காளியன் குட்டையில் கற்புக் கரசிகூறி
னாள்கண்ணன் கோபமது, நீர்தாண்டா(ஜலம் தாண்டா) -நீலமவள்(பத்தினி),
ஆசியென்றே, காளியன் நாசி(பாம்புக்கு ஏது செவி)க்(கு)உரைக்க, துப்பறியும்
தேசிகர்(கண்ணன்) கேட்டாரி தை’’….கிரேசி மோகன்….!
பாற்கடல் பத்தினியார், பூபாரம் போக்கவேண்ட
ஏற்கின்றார் எட்டாய்(கண்ணனாய்) யசோதையார், – தோற்கடல் (மேனி)
உந்தி(வயிறு) விளங்க(தாய்க்குடல் விளக்கம்செய் தாமோதரர்) உத்தமர் சேயாகித்
தந்தியாய் ஏற்றுகீ தை.
…கிரேசி மோகன்….!
‘‘தாமரையி லைத்தண்ணீர் தாமோதர் ,தூங்குகிறார்,
நாமறை நாயகர் நாபியின்றி – வாமறை
கீதையே கண்ணனின் காதில் மெலிதாக
ஓதுநீ பார்த்தனுக்காய் ஓம்’’
….கிரேசி மோகன்…!
முதலைவாய் சிக்கி மதகளிறு ஆதி
முதலைவா வென்றைக்க மூன்றில் -முதலாக
மோட்சம் கொடுத்தனர் முதலைவாய் யானைக்கு
காட்சியிதைக் கேசவ் கொடுப்பு”
….கிரேசி மோகன்….!
–கிரேசி மோகன்
வென்றது கார்திக், விராட்கோலி தோற்றதால்
ஒன்றுதான் வெல்லும் உலகிலே: -நன்றிதைக்கேள்
நின்றுகொல்லும் தெய்வம்,நடனமா டியும்கொள்ளும்
(ஐபிஎல் ஆடியும் கொள்ளும் கேப்டனாய்)
மன்றில் அபஸ்மாரன்(முயலகன் -தாருகா வனத்தில் ரிஷிகள் சிவபெருமான் மீது ஏவியவன்) மீது….

கண்ணன் ஆடியதால் இந்த ஆட்டத்தின் பெயர் ‘’கண்ணாம்மூச்சி’’….!
—————————————————————————————————————————-
”கோபியர் கோர்த்திடும் கைபிருந்தா காட்டுக்குள்(பிருந்தா வனத்துள்….!)
பேபியாய்க் கண்ணமால் பூந்துவந்து -ஹாபியாய்
ஆடுறார் ஐபிஎல் அதோனி நவாபாக(ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனம் கட்ட இடமளித்தவர்)
பாடுறார்உம் மாச்சிவெண் பா’’….கிரேசி மோகன்….!