Author: கிரேசி மோகன்

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181123_Lotus leaf – DWA Canson 200gsm A4 icam wm

    இல்லாத ஒன்றை இருப்பதாய்க் காட்டிடும்
    பொல்லாத நெஞ்சமொரு போக்கிரி -வில்லாளி
    அஞ்சின் அலைகளற்ற நெஞ்சிருக்க, வைக்கலாம்
    பஞ்சுக்(கு) அருகில் பிழம்பு(நெருப்பு)….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181122 -DWA indian ink wcol- Canson A4 200gsm 100 dpi – (the tortoise /horse indicates the withdrawing of the senses) – lr
    ஆமையாச்சு அசுவம்,சதுரங்கம்(CHESS) ஆச்சு புதிர் ரங்கன் பாரதம்….!
    ‘’பூபாரம் போக்கவன்று பாரதப் போர்முடித்த
     கோபாலக் கண்ணனே
     ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….!
    ‘’கடல்கடைந்த போதன்று வடவரையை வழுவிடாது
     உடல்சுமந்த ஆமையே
     ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….!
    ”வாட்டிடும் இன்பத்தைக், கூட்டிடும் பேதத்தை,
     போட்டிட நெஞ்சத் தராசினில், -காட்டிடும்,
     வேண்டியதைப் பார்த்திடும், வீரன் அவனழியான்
     காண்டீபம் தானுன் களிப்பு”….கிரேசி மோகன்….!
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    181121 -DWA -wcol Indian ink wm
    Canson A4 200 gsm 72dpi
    “Divyam dadami thaey Chakshuh” BG 11:8

    ‘’ஸ்ரீ பகவான் உவாச:….
    ——————————————-

    ஞானக்கண் தந்தேன்நான் நாற்புரமும் பார்பார்த்தா
    வானத்தில் ருத்திர(அனுமன் ருத்திராம்ஸம்) வானரம் -சேணத்தில்
    நானுள்ளேன்,கீதையாம் நூலினைத் தந்துவிட்டேன்
    வானுள்ள வெற்றியை வாங்கு….!

    ”ஆரத் தழுவி அருச்சுன காமத்தை(பேதத்தை-அதுவும் காமத்தில் சேர்த்தி)
    வேரறுத்துச் சொன்னார் , விஜயரே! , -பாருச்சி,
    தேருச் சியில்காக்கும் தேவன் அனுமனுள்ளார்,
    நூறைச் சிதைக்க நிமிர்’’….!

    ”நூறைநீ வென்றிட ஈரே(ழு) உலகாள்வாய்
    மாரில் கணைதைத்து மாளுங்கால் -வீராநீ
    சொர்கம் புகுவாய் சுதாரித்(து) எழுசேயே
    தர்கம் புரிதல் தவிர்”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181120 -DWA wcol- Canson A4 200gsm 100dpi
    (the Panchajanya has already sucked the life out of your opponents. All you have to do is hit the target – Pazhaveri Rajagopalachariar ref.) Lr

    டார்கெட்டைப் பார்த்தர்க்கு தார்வண்ணர் காட்டினார்
    போர்மு டியபாரம்(பூ பாரம்) போக்கணும்-யார்வில்லும்
    கொல்வதும் இல்லை கொலையுண் பவனுமில்லை
    வெல்வதுன் வேள்விவிஜ யா”…கிரேசி மோகன்…..!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181119 DWA Parthasarathy -wcol – A4 Canson 200 gsm 300 dpi (After the Vishwaroopa darshan at Parthasarathy temple on 181118. lr

    பார்த்தன் பார்த்திட பார்த்தனின் சாரதி
    வேர்த்தல் விலக்கிடும் விஸ்வரூபம், -தீர்த்தம்
    குளக்கரை அல்லியூரில்(திருவல்லிக்கேணி) கோவிந்தர், நெஞ்ச
    உளைச்சலை நீக்கும் உரு(உருவம்)…..கிரேசி மோகன்….!

    திருவல்லிக் கேணி வேதவல்லித் தாயார் சன்னிதியில்….
    ———————————————————————-
    வேதவல்லித் தாயே வினைதீர்க்கும் செங்கமலப்
    பாதவல்லி பார்த்தன்தன் சாரதியின் -கீதவல்லி
    ஏதமில்லா ஞானத்தை ஏதுமில்லா மோனத்தை
    சாதகனென் சிந்தையில் சேர்….!

    அப்பாவின் 85வது பிறந்த நாளில் எழுதியது
    ——————————————————-
    பார்த்த சாரதி பெருமாள் கோயிலில்
    ———————————————-
    மீசைக்கு பாரதி, ஆசைக்கு ருக்மணி
    ஓசைக்கு வெண்சங்கின் ஓங்காரம் -பூசைக்கு
    ஆழ்வார்கள் பாசுரம்,அல்லிக் குளக்கரையில்
    வாழ்வோனை நெஞ்சே வணங்கு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181118 -DWA wcol- Canson A4 100gsm 300dpi lr
    ”தென்பாண்டி சீமையில் தேரோடும் வீதியிலே
    என்பாண்டு மைந்தனை யரடிச்சார் -விண்பார்த்த
    வைகுண்ட வாசலின் மைவண்ணன் வாத்சல்யக்
    கைகொண்டு பார்த்தனுக்கு காப்பு’’…..கிரேசி மோகன்…..!
    Share
  • “சிறுவா புரி சதகம்”

     

    ————————-
    காப்புச் செய்யுள்
    ———————-
    “உரைபா ரதத்தை ஒருகொம் பொசித்து
    தரைசே ரவடித் தருள்வே ழவரே
    சிறுவா புரியார் சதகம் எழுதத்
    தருவாய் எனக்குத் தமிழும் திறனும்”….

    சிறுவாபுரி சதகம்….கந்தரனுபூதி பாதிப்பில்….

    “தனியா னைசகோ தரனார் துணையால்
    வனமா துடல்மே விடவே டுவனாய்
    தனியாய் வருவேல் தணிகா சலனே
    வினைதீர்த் திடவா சிறுவா புரியே”….(1)

    “அடடா எனவூர் அனுதா பமுற
    சுடுகா டுடலே கிடுநாள் துணையாய்
    உடனே வருவாய் உமைபா லகனே
    இடுவாய் பிறவா இடமே விடநான்”….(2)

    “புதனோ டொளிசேர் பொலிவாய் உமையாள்
    சுதனே சிவனார் சிறுவா புரிவாழ்
    மதலாய் பெருமாள் மருகா வருவாய்
    அதுவாய் இதுவாய் எதுவா கிலுமாய்”…(3)

    “உனைநா னறிவேன் உமையாள் சுதனா
    திணைமா துடன்சேர் தணிகா சலனே
    எனைநா னறியேன் எழுவாய் பயனாய்
    சினைநான் உயிர்நீ சிறுவா புரியே”….(4)

    “பணநா கவணை பெருமாள் மருகா
    வானமா துடன்வா னவரா னையுடன்
    மனவே கமுடன் மயிலே றிடவே
    ஷணமே வருவாய் சிறுவா புரியே”….(5)

    “ஆசா பாச மதனால் உலகில்
    காசும் புகழும் குறியாய் உழலும்
    நீசன் எனையுன் நிலைசேர்த் திடவே
    வாஷண் முகனே வழிகாட் டிடவே”….(6)

    “நமச்சி வாயன் நுதல்வாய் புதல்வ
    உமைச்சி வேலை உடையோய் படையாய்
    சுமக்கத் தாயார் ,சிறுவா புரியே
    நமர்க்கை சேரா நிலைநாட் டிடுவாய்”….(7)

    “தீயாய் வளியாய் திசைமண் ஜலமாய்
    காயாய் மலராய் கனியாய் மரமாய்
    வாயாய் ருசியாய் வயிறாய் பசியாய்
    நீயாய் மறைவாய் நிருவா கனனே”…(8)

    “அய்யோ யெனயென் கிளைகூ டியழும்
    அய்யோ மணவா ளரவர் வரவால்
    அய்யா அதனால் அனுபூ தியுறச்
    செய்யாய் முருகா சிறுவா புரியே”….(9)

    “அண்ணா மலையும் அவன்பா திபடர்
    உண்ணா முலையும் சிறுவா புரியில்
    முன்னால் இருக்க முகநா ணமுறும்
    பெண்ணா லோலப் பிடிமால் மருகா”….(10)

    “மரணா கதியில் மனிதா செலுமுன்
    சரணா கதிசெய் சிவனார் செவியில்
    மறையோ தியவன் திருவே ரகனை
    சுரர்நா யகனை சிறுவா புரியை….(11)

    “அத்திக் கிறைவா அமரா வதியின்
    வெற்றிக் குதவும் விசுவேஸ் வரரின்
    நெற்றிக் கனலே நெடுமால் மருகா
    சுற்றத் துடன்வாழ் சிறுவா புரியே”….(12)

    “எதிரா ஜனரின் எஜமா னவனை
    பதிநூ றுடன்எண் படர்மால் புகழை
    துதிசெய் அருணை கிரிபோல் எழுத
    உதவத் தமிழே உடனே வருவாய்”….(13)

    “அயனார் அரியார் அறியா நுதல்வாய்
    நயனார் புதல்வா நரையும் திரையும்
    மயமாய் இவனா குமுனே வருவாய்
    பயனாய் சிறுவா புரிவாழ் பொருளே”….(14)

    “ஓரா றுமுகம் ஒளிரும் இருதாள்
    ஈரா றுபுயம் இறைவா மறவேன்
    சேறாம் உலகில் செந்தா மரையாய்
    போரா டஅருள் பஞ்சா மிருதா”….(15)

    “பாதிக் கொருபெண் பரமேஸ் வரியின்
    ஆதிக் கமுறும் அரனார் நுதற்க்கண்
    ஜோதிக் கருவே சிறுவா புரியில்
    சாதித் தருள்வோய் சரணா கதியை”….(17)

    “கிரௌஞ்ச மலையைக் கூழா கிடவேல்
    எறிஞ்ச முருகா என்றும் இளையோய்
    குறிஞ்சி மலைவாழ் கிழவா தமிழைத்
    தருஞ்சி வைமுலை திகழ்வோய் சரணம் ….(18)

    “கூறும் அருணை கிரியின் புகழில்
    ஏறும் மயிலோ டெழில்சே வலுடன்
    சூரன் பதுமன் சிரம்வாங் கியவா
    சேரும் தமிழே சிறுவா புரியே”….(19)

    “கல்லா லமர்வோன் காதில் ப்ரணவச்
    சொல்லாழ் பொருளை ஸ்லாகித் தவனே
    எல்லாம் அறிந்தும் எனைநான் அறியேன்
    வல்லான் ரமணர் வழிசேர்த் திடுவாய்”….(20)

    “தள்ளா டிவுடல் தடுமா றிடவாய்ப்
    பல்லா டிடமண் புதையப் படரும்
    புல்லா டிடநான் போகா வகையென்
    உள்ளா டிடவா உமையாள் சுதனே”….(21)

    “வடமா லையுடன் வனமா லையணி
    திடமா ருதிதோ ழனவன் மருகா
    கடலா டிடுவாய் குடிபோ கியவா
    உடனே வருவாய் உயிர்மெய்ப் பொருளாய்”….(22

    “வேதா கமநூல் வழிபோ னதிலை
    ஏதா கிலும்செய் துனைஏத் தவிலை
    சாதா ரணநென் சகமா யையற
    நீதான் வரணும் நிகமான் தகனாய்”….(23)

    “இம்மா மடையன் இறைவாழ் வதனில்
    எம்மா திரியும் இசையான் எனவே
    சிம்மா சனமுன் சீர்பா தமுற
    சும்மா இருயென் றொருசொல் அருளேன்”….(24)

    “கண்மாய் தனில்கார்த் திகைமங் கையரால்
    ஒண்ணா னவனே ஓமா றுமுகா
    என்னா வியுடல் பொருள்யா வையும்நீ
    நன்நாள் இதுவே நலம்சேர்த் திடவா….(OR )
    அண்ணா சிறுவை அழகா வருக”….(31)

    “மயில்வா கனனே அயில்வே லவனே
    கயிலா யசிவன் குருவா னவனே
    பயிலா தழின்தேன் பரஞா னமதை
    மயல்தீர்த் தருள்வாய் முருகா சரணம்”….(32)

    “பிடிவா தமுடன் பிழைசெய் திடுமென்
    கடிவா ளமிலாக் குதிரைப் புலனை
    அடிபோ ட்டதைஆண் டருளச் சிறுவை
    வடிவே லவரே வருவீர் குருவாய்”….(33)

    “வனபாக் கியமாய் வள்ளி இருக்க
    தனபாக் கியமாய் தாரிணி சுரக்க
    சினம்போக் கியவா செந்திற்க் கடலில்
    மனபாக் கியமாய் வழிகாட் டிடவா”….(34)

    “கிழவே டமுடன் குறமா தணையும்
    மழுமான் சிவனார் விழிபா லகனே
    அழவேண் டிவரும் அடியார் வினையை
    விழத்தீண் டிடுவேல் விடுநா யகனே”….(35)

    “வானாய் நிலநீர் வளியாய்க் கனலாய்
    ஆணாய் அலியாய் அவளாய் அருவாய்
    ஆனாய் ஜடமாய் அறிவாய், ரமணர் (OR )அகந்தை
    நானாய்ன் துனைநா டிடவா முருகா”….(36)

    “எப்படி வருவான் எமனென் றறியேன்
    அப்படி வருமுன் அனுபூ தியினை
    இப்படித் தானென் றிரவுக் கனவில்
    செப்பிட வாராய் சிறுவை முருகா”….(37)

    “முற்றம் வரையில் மனையாள் வருவாள்
    சுற்றமும் பெற்றதும் சுடுகா டுவரை
    கற்றதும் கொண்டதும் கால்தூ சிபெறா
    நற்றமி ழேவா நமனார் வருமுன்”….(38)

    “மாவாய் பிளந்த மதுசூ தனர்க்கு
    ஆவாய் மருமான் அவன்சோ தரியால்
    வாவா எனகா டழைக்கும் தருணம்
    போபோ எனவீ டுபுகுத் திடவா”….(39)

    “தந்தைக் கொருமந் திரம்தந் தவரின்
    சிந்தைக் கபிமா னசிரோன் மணியே
    கந்தக் கனலே குருவாய் அருள்வாய்
    மந்தப் பயலென் மதம்மாற் றிடவே”….(40)

    “வாயிட் டயென்பின் வடித லென்றே
    நாயிட் டமொடு நறுக்கும் நாவை
    ஆயிற் றதுபோல் அடியேன் வாழ்வு
    பாயுற் றுடும்முன் பிணியோட் டிடவா….(41)

    “தப்பா னவாழ்க்கை தவறா னசேர்க்கை
    இப்பா வியுற்றான் இதனா லெமன்கை
    ஒப்பா ரிவைத்தூர் அழுமுன் செவியில்
    செப்பாய் முருகா சிவஞா னபோதம்”….(42)

    “திருவோ டணையும் திருமால் மருகா
    திருவோ டணையும் திருவா திரையான்
    பிறைவான் நுதற்கண் புதல்வா ,கருணை
    சிறுவா புரிவாழ் சிறுவா புரிவாய்”…(43)

    “வாசத் துழாய்மால் வயிற்றுப் புதல்வி
    நேசக் குறத்தி நினைவோய், திருத்தைப்
    பூசத் திறைவா ப்ரணவப் பொருளை
    ஈசர்க் குபதே சிகனே இறைவா….(44)

    “வருந்தாய் மனமே வருவான் முருகன்
    பிருந்தா வனமாய் பொழிவான் அருளை
    கருந்தா மரைக்கண் குறத்தி மணாளன்
    திருந்தா தவர்க்கும் மருந்தா கிடுவான்”….(45)

    “எலிவா கனரின் இளையோய், சபரிப்
    புலிவா கனர்முன் பிறந்து வளர்ந்த,
    கிலிநா கமுறக் கிளம்பும் அகவல்
    ஒலிவா கனரே உடனே வருக”….(46)

    “கீரன் துதிசெய் ஆற்றுப் படையை
    பேரன் புடனே ஏற்றக் குகையுள்
    சேரும் புலவர் சிறைமீட் டிடவே
    கூர்வேல் எரிந்து கிரிசாய் குகனே”….(47)

    “சிறுபா லனென மதியா துசெலும்
    மறைநான் முகனார் மிகுகர் வமற
    சிறைசே றயிடும் சிவதே சிகனே
    கரைசேர்த் திடுவாய் கடலா டுகுகா”….(48)

    “கன்றா டிடவேய்ங் குழலோன் மருகா
    மன்றா டிடுவோன் மகனே புவியில்
    குன்றா டிடுவோய் குருவாய் வருவாய்
    மன்றா டுகிறேன் மனம்வைத் தருள்வாய்”….(49)

    “ஆகா இவனே அதிமே தையென
    பாகாய் உருகும் பொருளுள் ளவரை
    மோகா சனத்தில் முனியாய் இருக்க
    ஏகாக் ரமதை எளிதாக் கிடுவாய்”….(50)

    “மாலா டிடும்யவ் வனம்சொப் பனமே
    கோலா டிடும்மூப் பதுநிச் சயமே
    வாலா டிடும்வாழ்க் கையைவிட் டுவடி
    வேலா யுதன்தாள் தலைவைத் திடுவாய்….(OR )
    வேலா யுதன்தாள் வனசம் தொழுவாய்”….(51)

    “நூறோ டிடவே தேரோ டியமால்
    சீரா டிடுமூர் சிறுவை மருகன்
    ஈறா றுபுயன் பேரா றுமுகன்
    நீறா டநுதல் நினைவாய் மனமே”….(52)

    “கள்ளப் புலனைந்த் துறவா லகந்தை
    மெல்லப் புகுந்து மமதை மனமாய்
    உள்ளத் தறையில் உனைபூட் டிடுவான்
    வள்ளிக் கணவன் வாஞ்சைக் கிலைதாள்”….(53)

    “புதிராம் புவியில் பொழுதோட் டிடவே
    சதிரா டியபின் சலியும் மனமே
    எதிரா ளியெமன் எதிரே கிடுமுன்
    கதிர்வே லவனே கதியென் றிடுவாய்”….(54)

    “மமகா ரமதை மனிதா விடுவாய்
    எமனே கிடுமோர் எழிற்கா லையிலே(one fine morning )
    சுமையா கிடுவாய் சுடுகா டுவரை;
    சமபா வமுற சிறுவா புரிசேர்”….(55)

    “பரங்குன் றலைவாய் பழம்வீழ் பொழில்,கோல்
    கரங்கொள் பழனி ,குமிழ்வாய் சிவனார்
    கரங்கொள் கிரியே ரகமும் தணிகை
    வரங்கொள் அடியார் வரவீ டுடையோய்”….(56)

    “முத்தாய் அருணை முனிநா எழுதிக்
    கொத்தாய் அடைந்தாய் கவிசந் தமதை
    அத்தா அதுபோல் அடியேன் அளிப்பு
    கத்தா ழையெனின் கமல மெனக்கொள்”….(57)

    “கிரியார் கந்த ரனுபூ தியின்மேல்….(OR )
    அருணை கிரியார் அனுபூ தியின்மேல்
    வெறியால் விளைந்த வடிகா லிதுவே
    சரியா தவறா சதகம் அறியேன்
    விரிஆர் வமிதை வளர்பக் தியென”….(58)

    “பாக்கள் வருதல் பனிமா மலையோன்
    தீக்கண் மகனுன் தயவென் றெண்ணி
    ஊக்க மடைந்தேன், ஓங்கும் தமிழின்
    தாக்க மெனநீ திரைபோ டாதே”….(59)

    “அம்பாள் மகனே அரிமால் மருகா
    உன்பால் உருகி உனைநான் அடைய
    வெண்பா சதகம் வடித்தேன் ,புகழின்
    சம்பாத் தியமாய் சொல்லி விடாதே”….(60)

    “எமாதி கணமே கிடுநாள் ரமண
    சமாதி நிலையில் ஸ்திரமாய் இருக்க
    ரமாதி மாலர் ரமிக்கும் மருகா
    உமாதி ஈசர்க் குகந்தோய் அருள்வாய்”….(61)

    “உள்ளக் கனகல் லையுடைத் தெறிய
    மெல்லத் தலைநீட் டிடு(ம்)ஆன் மவொளி
    புல்லைப் புலியாக் கிடுமிக் கலையை
    தெள்ளத் தெளிவாக் கிடுதே சிகனே”….(62)

    “அலையும் மயிலை, அயில்வேல் அணிசே
    வலையும், வனவான் வளையார் தமையும்,
    மலையும், மலையே றிவளர் உனையும்,
    முளையும் சதகம் மதிலா டிடவை”….(63)

    “தாரா சுரன்தன் தவவாழ் வதனால்
    பேரா சையுறப், பலிவாங் கிடவே
    வீரா சனத்தோன் விழிவாய் பிறந்த
    ஆரா அமுதே அமரர் துணையே”….(65)

    “கெட்டாள் திருந்தி குருவாய் அழைக்க
    சிட்டாய் வருவான் சும்மா இருக்கத்
    தொட்டோ திடுவான் திருவா சகத்தை
    முட்டாள் மனமே முனியச் சிறுவன்”….(66)

    “பந்தத் தைவிடு பாசத் தைவிடு
    சொந்தத் தைவிடு சோகத் தைவிடு
    சிந்தித் துவிடு சிறுவா புரிவாழ்
    கந்தத் தனைநீ கயிலா யமுற”….(67)

    “சம்பந் தாண்டான் ஸ்தம்பித் திடவே
    நம்பும் கிரியார் நவிலச் சந்தம்
    கம்பம் தனிலா டியெழும் இளையோய்
    உம்பர் துணைக்கு உருவா கியவா”….(68)

    “கனிகை கிடைக்க ககனம் சுற்ற
    புனிதர் கணேச பிள்ளைக் களிக்க
    தணியா சினத்தில் தண்டா யுதனாய்
    முனியாய் பழனி மலையே றியவா”….(69)

    “அமரா வதியின் அணிகா வலனாய்
    சமரால் கொடுசூ ரனுடல் கெடவே
    உமையாள் கொடுவேல் உதிர்த்து அலைவாய்
    குமரா சுரர்பெண் கரங்கொள் முருகா”….(70)

    “எதிர்பார்த் திருந்த எமனே ளுகையில்
    சதுர்வே தனைவெஞ்ச் சிறைவைத் திடுவோய்
    கதிர்கா மமதில் கனிந்து பழமாய்
    உதிர்சோ லைமலை உறவே வருக”….(71)

    “பழுதூ றியவாழ் வினில்போக் கிரியாய்
    பொழுதோட் டினைஐம் புலனார் வமதால்
    தொழுதேத் திடுவாய் கழுகா சலனை
    முழுதாட் கொளவான் மயிலே றிடுவான்”….(72)

    “அயலார் சிரிக்க அருகார் வெறுக்க
    மயலா டிமகா மடுவீழ் கையிலே
    செயலா கிடுசிந்தை தையில்சீர் மிகவே
    வயலூர் வளர்வாழ் வதன்தாள் விழுங்கோள்”….(73)

    “பதினா றுபெரும் பெருவாழ் வுபெற
    அதிகா ரவிடை அமர்வோன் நுதல்நீ
    றதுகா யவுதித் தனலாய்ப் பிறந்த
    பதியா றுடையோன் பதம்மே விடுவாய்”….(74)

    “சேதா ரமிலா செய்கூ லியிலா
    ஆதா ரமருள் அயில்வே லவனின்
    பாதாம் புயமே பரமார்த் திகமாம்,
    பேதாய் மனமே பணிந்தேத் திடுவாய்”….(75)

    “மனமா ஸனமாய் மயில்வா கனமாய்
    குணம்கோ ழியெழுப் பதிகா லையுமாய்
    முனைவேல் மதியாய் மனையுன் மலையாய்
    தினமாண் டிடவா திணைமா தணைவோய்”….(76)

    “திகழா பரணம் திடமார் பசைய
    நகைபூட் டிடநா டகமே டைதனில்
    நகைப்பூட் டிடவா நடுநா யகமாய்
    நகைபூத் திடுவாய் நதிபா லகனே”….(77)

    “அதிகா ரமவா அழுக்கா றவச்சொல்
    குதிகோ பமிலா குணம்வாய்த் திடவே
    சுதிவள் ளுவனார் சொலும்வார்த் தையினை
    மதியேற் றிடவை மருதா சலனே”….(78)

    “மிகவாட் டமுறும் மனிதா ,ரமண
    அகநாட் டமுற அங்குஷ் டமென
    குகநாட் டியம்காண் குகையாழ் மனதில்
    சுகசாட் சியமாய் சும்மா இருநீ”….(79)

    “குசனார் லவணார் அசுவ மதைத்தம்
    வசமா கயிரா கவன்வா ளியெதிர்
    அசலம் சிறுவா புரிவாழ் அழகா
    வசன முரைக்க வருவாய் குருவாய்”….(80)

    “சோணை ரமணே சரைப்போல் சதமாய்
    ஞானம் பெறநா டிடுசெந் தமிழின்
    மோனை எதுகை யெனவள் ளியும்தே
    வானை தழுவும் வடிவே லவனை”….(81)

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    060303 -Pharoah Krishna 02 -with Vijayaraghavan (mythu friend) A4 papyrus. watercolour.
    (The illustrations below the blue line were by default -this was a letter pad. lr

    ”எங்கிருந்(து) ஆரம்பம் எங்கெதில் சங்கமம்
    இங்கணம் இவ்வுயிரை நன்குணர்ந்தோர் -இங்கிலர்
    ஆதலால் ஆண்ட்டனி வேதனை வேண்டாம்வல்
    சூதினைக்கொல் ,கண்ணசீ ஸர்’’….கிரேசி மோகன்….கேசவ் ஓகேயா….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181117 -DWA wcol- Canson A4 200gsm 300dpi wm

    குந்திசேயே கேளாய்,குதிரைக்கோ பொய்க்கால்காண்,
    வந்திருப்போர் பீஷ்மகர்ண வீரர்கள் -சிந்தித்து,
    காண்டீபம் கொள்வாய்நீ, கைவல்ய கீதைகேள்
    பாண்டவா பாரதப் போர்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    070131 Ananda -graphite – A4-cam 300dpi

     

    “நேற்றைய கண்ணர்க்கும், நாளைய கண்ணர்க்கும்
    வேற்றுமை கேசவ் வரைவதிலே -தோற்றம்
    மறைவிலா மாலனோ மானஸசஞ் சாரன்
    நிரைநேர் தளைசீர் நமக்கு”….கிரேசி மோகன்….!

    Share
  • முன்னுரை சாம்பியன்ஸ் சென்னை….!

     

    குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்….!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    060709 -Rang de Krishna – oil on canvas 2006 18×24” ? wm

    வறுமை சிவப்புநிறமே, வர்ணத்தார் கண்ணன்
    கருமைரங் கீலாவில் காட்சி: -வறுமை
    சுதாமர்க்கன் றேவளம் சேர்த்தவரை நெஞ்சே
    கதாநா யகனாய்க் கருது….கிரேசி மோகன்….!

    Share
  • கிரேசி மோகனின் குழந்தைகள் தினப்பாடல்!

     

    கிரேசி மோகன் & குருகல்யாணின் – குழந்தைகள் தின பாடல்

    குழந்தைகளின் மனம்கவர்ந்த கலைமாமணி கிரேசி மோகன் அவர்களின் வரிகளில் இசை அமைப்பாளர் குரு கல்யாண், குழந்தைகள் தினத்தை ஒட்டி (Nov 14 2018) ஒரு தனி பாடல் இசை அமைத்து வெளியிட உள்ளார். இப்பாடல் குழந்தைகளை கவரும் வண்ணம், துள்ளல் இசையாக வந்துள்ளது, இதில் தனித்துவம் மிக்க திரு கிரேசி மோகன் அவர்களுடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த காணொளியில் அணைகட்டுச்சேரி குழந்தைகள் திறன் மேம்பாட்டு அமைப்பான “வெற்றியாளர் பட்டறை”யை சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றுள்ளனர் என்று குரு கல்யாண் தெரிவித்தார்.

    பையன் மண்ணைத் தின்றால்
    வையாதே….
    வாய்க்குள் பார்….
    வையம் தெரியாவிட்டால்
    ஐயமே இல்லை நீ
    அசோதை அல்ல….!

    மதர் தெரேஸாவா
    எம்.எஸ்ஸா
    முனியம்மாவா….
    வியப்பில் நாய் வால் நிமிர்ந்தது
    குப்பைத் தொட்டியில் பெண்
    குழந்தை….!கிரேசி மோகன்…..!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181019- DWA mural -acrylic on wall-wm

    கொஞ்சம் இருந்தது, கேசவ் கொடுத்தனர்
    விஞ்சிடும் ஓவியமாய், விற்பன்னர்: -அஞ்சிடும்
    அர்ஜுன் அடிபணிய ஆண்டவர் கண்ணபிரான்
    கர்ஜனை கீதைக் குரல்(ள்)…..கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181112 Goverdhan -A4 acidfree —archival paper 160gsm- ink -72 dpi lr

    ”ஆனை(ஐராவதம்) அடிவருட அண்டர்கோன்(இந்திரன்) சார்பாக
    மோனைப் பசுஎதுகால்(எதுகை) மேய்ந்திட , -ஓணம்
    பிறந்தவன் வானைப் பிளக்கின்ற மின்னல்(வித்யுத்)
    திறந்திடும் ஆமனத் தோன்’’….கிரேசி மோகன்….!

    வாமனன் கோகுல ஆமனன்….!
    கண்ணன் எதுகையென்றால் பின்செல்லும் பசு மோனை….!

    Share