கிரேசி மோகன் & குருகல்யாணின் – குழந்தைகள் தின பாடல்

குழந்தைகளின் மனம்கவர்ந்த கலைமாமணி கிரேசி மோகன் அவர்களின் வரிகளில் இசை அமைப்பாளர் குரு கல்யாண், குழந்தைகள் தினத்தை ஒட்டி (Nov 14 2018) ஒரு தனி பாடல் இசை அமைத்து வெளியிட உள்ளார். இப்பாடல் குழந்தைகளை கவரும் வண்ணம், துள்ளல் இசையாக வந்துள்ளது, இதில் தனித்துவம் மிக்க திரு கிரேசி மோகன் அவர்களுடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த காணொளியில் அணைகட்டுச்சேரி குழந்தைகள் திறன் மேம்பாட்டு அமைப்பான “வெற்றியாளர் பட்டறை”யை சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றுள்ளனர் என்று குரு கல்யாண் தெரிவித்தார்.

பையன் மண்ணைத் தின்றால்
வையாதே….
வாய்க்குள் பார்….
வையம் தெரியாவிட்டால்
ஐயமே இல்லை நீ
அசோதை அல்ல….!

மதர் தெரேஸாவா
எம்.எஸ்ஸா
முனியம்மாவா….
வியப்பில் நாய் வால் நிமிர்ந்தது
குப்பைத் தொட்டியில் பெண்
குழந்தை….!கிரேசி மோகன்…..!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *