Year: 2015

  • படக்கவிதைப் போட்டி 44-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி 

    ’வல்லமை’ வாசகர்கள், படைப்பாளர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பசியும் பிணியும் பகையும் நீங்கி
    அன்பும் அருளும் அறனும் ஓங்குக!

    ***

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்திருப்பவர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. இப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமையின் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும் உரியதாகுக!

    smiling baby

    முறுவலிக்கும் முகத்தோடு சிறுவிரலால் தாளமிடும் சின்னஞ்சிறு கிளியே! உனைக் காணும்போது என் உள்ளத்தில் எழுகின்றது ஆனந்தக் களியே!

    இனி, நம் கவிஞர்கள் கோத்திருக்கும் கவிதை மலர்ச்சரத்தின் சுகந்தத்தைச் சுவாசித்து வருவோம்… புறப்படுங்கள்!

    ***

    ’ஆவாரம் பூவாய்ச் சிரித்துக்கொண்டு, இந்தப் பாப்பா நாவாரப் பாடும் பாடல் காதில் தேன்பாய்ச்சுதே!’ என்று உளம்பூரிக்கிறார் திருமிகு. சியாமளா ராஜசேகர்.

    பாவாடைச் சட்டை போட்ட
    ****
    பாப்பாவும் பார்க்குது !
    ஆவாரம் பூவைப் போல
    ****
    அழகாகச் சிரிக்குது !
    நாவாரத் தானும் பாடும்
    ****
    நாடகமும் நடத்துது !
    நோவாமல் தாளம் போட்டு
    ****
    நுள்ளியுள்ளம் இழுக்குது !!

    கால்கொலுசின் சலங்கைச் சத்தம்
    ****
    காதில்தேன் பாய்ச்சுது !
    பால்வடியும் பிள்ளை முகமும்
    ****
    பாங்குடனே இருக்குது !
    மேல்மாடி வீட்டிற் குள்ளே
    ****
    மெய்சொக்க வைக்குது !
    வேல்முருகன் அருளி னாலே
    ****
    விளையாடி மகிழுது !

    *** 

    ’குட்டிக் கவிதையே! உன் நகங்களில் பிறைநிலாக்கள் முகங்காட்டும்; உறக்கத்திலும் குறுஞ்சிரிப்பு சிந்தும் மென்மலரே! இப்போதைய பெருஞ்சிரிப்புக்கு யாது காரணம்?’ என்று வினயமாய் வினவுகின்றார் திருமிகு. கார்த்திகா.

    …மழலையின் மொழி
    குறுஞ் சிரிப்பென்று
    உறக்கத்திலும் புன்னகை வீசும் நீ
    உரக்கச் சிரிப்பது எதைக் கண்டோ

    செல்லச் சிட்டுக்கு
    பட்டு வண்ணப் பூச்சி
    கண்ணில் பட்டதோ
    […]

    தலை கொள்ளா
    உன் கேசம்
    தென்றலின் நேசமடி

    நீ சிணுங்கிச் சிரிக்கையில்
    கொலுசொலிகள் தோற்குமடி
    வெட்கத்தில் பூக்கும்
    விரலோடு பிறை நிலாக்கள்

    வளை குலுங்கும்
    உன் பிஞ்சுக் கரங்கள்
    பூக்கள் தொடச் சிவக்குதே
    பூவிதழ்கள் மோட்சமடையுதடி

    சங்குக் கழுத்தில் தொங்க
    என்ன தவம் செய்துவிட்டது
    இந்த மின்னும் பொன் சங்கிலி

    குட்டிக் கவி நீ
    சிரிக்க ஹைக்கூக்கள்
    சிதறுமடி என் செல்லமே!

     *** 

    இரண்டே சொற்களில் இந்த மழலையின் மணிச்சிரிப்பை வருணித்திருக்கின்றார் திரு. கவிஜி. 

    சித்திரம்
    சிரிக்குதடி…!

    ***

    ’மழலையே…இந்தப் புன்னகை இருக்கப் பொன்னகை எதற்கு? தேங்குரல் இருக்கப் பூங்குழல் இசைதான் எதற்கு?’ என்று அருமையாய் வினவுகின்றார் திரு. ஜெயபாரதன்.

    புன்னகை உள்ள போது
    பொன்னகை வேறெதற்கு ?
    தேங்குரல் கேட்கும் போது
    பூங்குழல் இசை எதற்கு ?
    கொஞ்சும் சிசு ஆடும் போது
    தஞ்சாவூர் பொம்மை எதற்கு ?
    பிள்ளைச் செல்வம் உள்ள போது
    பேரின்பம் வேறெதற்கு ?

    ***

    மழலைச் செல்வத்தின் மனங்கவரும் அழகுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாய்ச் சொல்லி வியக்கின்றார் திரு. இளவல் ஹரிஹரன். 

    சின்னக் குழந்தை சிரிக்கும் அழகு
    தெய்வம் காட்டும் பேரழகு…..அதன்
    கன்னக் குழியில் கனியும் அழகு
    கவிதை காட்டும் ஓரழகு.
    முன்னஞ் செய்யும் குறும்பு களாலே
    முற்றம் பெறுமே சீரழகு…..மெல்ல
    வண்ண மாகத் தத்தித் தவழ்ந்து
    வரும்போது தோற்கும் தேரழகு.

    முத்தா யுதிர்க்கும் ம்மா வென்னும்
    மொழியில் தோன்றும் தமிழழகு

    […]

    எண்ணத் தொலையா ஏட்டில் விளையா
    மழலைச் சொல்லின் மொழியழகு ….நலம்
    பண்ணும் குறும்பில் தெரியும் அரும்பின்
    பட்டுத் தெறிக்கும் விழியழகு.
    மண்ணும் விண்ணும் மறுக்க வியலா
    மாபெரும் படைப்பின் ஒளியழகு….தெய்வப்
    பண்ணும் கொடுக்கா பலவிசைப் பாட்டில்
    கேட்கும் இன்பக் களிப்பழகே.

    *** 

    ’உன் சிரிப்பே பூபாளம்; தட்டு நீ மிருதுவாய்த் தாளம்!’ என்று சின்னக் கண்மணியைப் பார்த்துப் பண்ணிசைக்கின்றார் திரு. மெய்யன் நடராஜ்.

    தட்டு மிருதுவாய்த் தாளம்
    தரலாம் இசைக்கருவி ஓசை வேதாளம்
    தத்தை உன் மிருது வாய் சிரிப்போ
    தந்திடுமே எப்போதும் ஆசை பூபாளம் 

    *** 

    தன் பாடலுக்குத் தானே தாளம்போட்டு நாட்டியமும் ஆடும் இந்தக் கவின்மழலையைக் கண்டு மலைக்கின்றார் திருமிகு. பி. தமிழ்முகில்.

    கொஞ்சும் கொலுசொலியும்
    மழலை மொழியும் இசையாக
    கேட்போர் மனதை மயக்கி
    சுற்றம் அனைத்தையும்
    தன்வயப் படுத்திக் கொண்ட
    அழகுக் கிள்ளையே !
    உந்தன் இனிய பாடலுக்கு
    நீயே தாளமும் போட்டு
    காலை உதைத்து
    நாட்டியமும் ஆடுகிறாயே !
    உந்தன் புன்னகையில்
    சொக்கிப் போய்
    கண்கொட்ட மறந்து
    கட்டியணைத்து உச்சி முகர
    ஓடிவரும் அன்னையைக் கண்டு
    உந்தன் விழியிரண்டும் விரிகிறதோ ?
    கள்ளமறியா சிறு கிள்ளையே !

    ***

    ’இசைபாடிப் புன்னகைக்கும் இந்தப் பூவின் இன்சொற்கள், மலரும் புத்தாண்டில் நல்ல மாறுதல்களைக் கொணரும்!’ என்று நம்பிக்கை விதைக்கின்றார் திரு. கொ. வை. அரங்கநாதன்.

    பூவொன்று
    இசைப்பாடி
    புன்னகைக்கிறது
    புத்தாண்டை வரவேற்று
    கண்ணசைக்கிறது

    […]

    கற்பத்தில் விளைந்த
    கவிதையொன்று
    முரசு கொட்டி
    கலாமின் கனவுகள்
    நனவாகப் போகுதென்று
    கட்டியம் கூறுகிறது

    மழலையிவள் சொற்கள்
    மலருகின்றப் புத்தாண்டில்
    மாற்றத்தை உண்டாக்கும்
    மகேசனின் மந்திரமட்டுமல்ல
    கனவுகளை நிஜமாக்கும்
    காலதேவனின்
    கட்டளைகளுமாகும்!

     ***

    ’பொக்கைவாய்ச் சிரிப்புடன் ஞானச்சுடரேற்றும் இக்குழந்தை இறைவனின் அருட்கொடையே!’ என்று இன்மொழி பகர்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    பொக்கை வாய் சிரிப்புடன்
    புதுக்கவிதையாய் புறப்பட்டு
    கள்ளங் கபடமின்றி என் செல்லம்
    தப்புத்தாளங்களில் வாசித்தாலும்
    ஏதோ ஞானச்சுடரென்றோ
    என்முன் விரிந்து தெரிகிறது
    நல்ல பண்புகள் ஓடி விட்ட காலத்தில்
    தீமைகள் ஆட்டம் போடும் உலகத்தில்
    மெல்ல தமிழ் ஊட்டி உன்
    அருளால் அறிவை ஊட்டி
    நாவும் கையும் நல்லனவற்றில்
    துலங்கச் செய்த இறைவா நீ
    ஈந்த இந்த அருட்கொடைக்கோ
    இனிதாய் சொன்னேன் நன்றியடா

    *** 

    மழலையின் மந்தகாச அழகில் மனங்கனிந்து, கவிமலர்களை அள்ளியிறைத்திருக்கும் கவிஞர் பெருமக்களுக்கு நன்றியும், பாராட்டும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை இனிச் சந்தித்து வருவோம்!

    குழந்தையின் குதலை மொழிகளும், துறுதுறு விழிகளும் மாந்தர்தம் உள்ளங்களை அள்ளுபவை; கொள்ளை கொள்ளுபவை. அதன் மெய்தீண்டலால் உண்டாகும் பேரின்பமோ வார்த்தைகளில் வடிக்கற்பாலதன்று! கள்ளமில்லா குழந்தையின் உள்ளமே இறைவன் குடிகொள்ளும் ஆலயமாகும். சின்னஞ்சிறு கிளிகளாய், பேசும் பொற்சித்திரங்களாய் இல்லங்களில் உலாவரும் குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்!

    அவ்வகையில், பேசுந்தெய்வமான இந்தச் சிறுகுழந்தை தன் செங்கனிவாய் திறந்து பாடுகையில், அதன் தளிர்க்கரங்கள் போடும் தாளங்கள் சுருதி பிசகினாலும் அவை சுந்தரத் தாளங்களே! வஞ்சமற்ற அதன் பிஞ்சுக் குரலோசையில் விளையும் தேவகானத்திற்குமுன் பக்திப் பாசுரங்களும் பலனின்றிப் போகின்றன!’ என்று குழந்தையைக் கொண்டாடும் ஓர் கவிதை மனவயலில் மகிழ்ச்சியை நட்டது!

    அக்கவிதை…

    பேசும் தெய்வமொன்று
    பாட ஆரம்பித்தது,
    தாளம் போட்டிடும்
    தளிர்க் கரங்கள்..

    இதில்
    பொய் வேடமில்லை
    போலிப் புனைவுகளில்லை..

    தப்புத் தாளங்கள்
    இலக்கணப் பிழைகள்,
    தலைமறைவாயின
    மழலையின் ஆட்சியில்

    நெஞ்சில் வஞ்சமின்றி
    கொஞ்சும் மொழியில்வரும்
    பிஞ்சுக் குரலிசையின்முன்,
    பக்திப் பாசுரங்கள்
    பலனின்றிப் போகின்றன..

    இதோ,
    இதைரசிக்க வந்துவிட்டான்
    இறைவனும் நம்முடன்…!

    இக்கவிதையில், இறைவனையும் குழந்தையின் ரசிகனாக்கியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.

    ***

    குழந்தாய்! நீ ’ஆ’ காட்டும் அழகில் நான் அப்படியே விழுந்தேன்; உன் ’பா’ கேட்டுக் கைதட்ட ஓடிவந்தேன்! பொக்கைவாய்ச் சிரிப்பில் சொக்கவைக்கும் சொக்கத் தங்கம் நீயடி! என்று இந்தப் பெண்மகவைத் தொழுதுபோற்றும் இனிய கவிதை ஒன்று…

    பட்டுப் பாவாடைச் சட்டை மீனாட்சியே!
    குட்டிக்   கொலுசும் கட்டுதடி என்னையே!
    கெட்ட  திருஷ்டியை  வெட்டக் கறுப்பாய்
    பொட்டிட்ட  குட்டிச் சுட்டி ராணியே!
    எடுப்பாய் அமர்ந்த எழிலான தேவதையாய்
    அடுக்கடுக்காய் தாளமிட துடுக்காய்த் தயாரானாய்.
    காட்டுமழகில் அப்படியே விழுந்தேன்.
    பாகேட்டுக் கைதட்டி ஊக்கிட வந்தேன்.

    பொக்கைவாய்ச் சிரிப்பு சொக்கு வித்தையடி!
    சொக்கத் தங்கமே! பெண் பிள்ளையென்றடி
    பொசுக்கவில்லை உலகமுன்னை பெரிய நன்றியடி!
    பெண் பெருமையையேற்று பண்ணிசை ராணியே!
    குழலினும் இனியது குழந்தை மொழி
    மழலையின் மயக்கமது இன்ப வழி
    தொழ வேண்டும்! மழலையின் அரங்கேற்றம்!
    தழலாய் உயரட்டும் தரணியில் புகழுடன்!
     

    பெண் குழந்தையைக் குடும்பச் சுமையாய் நினைக்கும் மனப்போக்கு, நம் சமூகத்தில் இன்னமும் முற்றாய் மாறிவிடவில்லை. இச்சூழ்நிலையில், பெண்குழந்தையைப் போற்றுவதோடு, அதனைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் தன் கவிதையில் நினைவுறுத்திச் சென்றிருக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விழைகின்றேன்.

    மீண்டும் சந்திப்போம்!

     

     

    Share
  • சுனாமி நினைவுதின அஞ்சலிக் கவிதை!

    –முனைவர். து. சந்தானலெட்சுமி

    டிசம்பர் 26.2004 ஞாயிற்று கிழமை
    ஞாயிறு உதயம்!
    வாரம் முழுவதும் உழைத்துக் களைத்தவர்கள் உறக்கத்தில்…
    ஓய்வே இல்லாதவர்கள் தம்கடமையில்…
    பெண்டிர் தத்தம் பணியில்…
    சுற்றுல்லாப் பயணிகள் உல்லாசத்தில்…
    இப்படி ஆயிரமாயிர மனிதர்கள் ஆயிரமாயிரம் சிந்தனைகளோடு
    தத்தம் பணிகளைத்தொடர
    இயற்கையோ தம் நீண்டநாள் பசியைத்தீர்க்க எண்ணியது.

    யாருக்குத்தெரியும்… இயற்கையின் கோரப்பசி?
    பசியைத்தீர்க்கப்
    பேரலையாக உருவெடுத்தது…
    ஆழிப்பேரலையாக!

    அள்ளிச்சென்றது அனைத்துஉயிர்களையும்
    துள்ளிவிளையாடிய விளையாடியச்சிறுவர்களை
    மண்ணுக்குள் புதைத்தது
    கொஞ்சுமொழிபேசும் மனிதர்களைக் கொன்றுகுவித்தது!

    இங்குமட்டுமா? உலகெங்கும்
    ஆம்!
    “சாறுகொண்டு கரும்பின் கோதுவீசுவார்போல”
    சாதிமதம்மொழிகடந்து
    உயிர்களை உறிஞ்சிவிட்டு
    உடல்களை வீசிஎறி்ந்தது!

    ஆங்காங்கே ஓலங்கள்…
    நினைத்தாலே மனம்நடுங்கும் அந்நாளில்
    விலைமதிப்பில்லா உயிர்களை
    அலைகளின் பசிக்கு
    உணவாய் அளித்த அனைவருக்கும் அஞ்சலி!
    எங்கள் கண்ணீர் அஞ்சலி!

     

     

    Share
  • மனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் !

    – எம்.ரிஷான் ஷெரீப்

          சூழப்பல தேசங்களிலும் என் தேசத்திலும் மழை விடாமல் பொழிவதாயும், வீடுகள்,வீதிகள், மரங்கள் அனைத்துமென வெள்ளம் வழிவதாயும் செய்தித்தாள் சொல்லிற்று. தடவிப் பார்த்தேன். ஈரத்தின் சுவடுகள் விரல்களில் பொசிந்தன. காலம் காலமாக என் வானில் பெய்த மழை இன்று நான் வாழும் இப் பாலைவன தேசத்தில் பொய்த்தது. சூழலை இருட்டாக்கி, தேகங்களை வெம்பச் செய்து, மேகக் கூட்டங்கள் கருக்கட்டி, வான நடை போட்டுப் பார்த்துப் பல காலமாயிற்று.

            மழையின் துளிகளை முகத்தில் வாங்கி , அன்னை கூப்பிட்டலுத்து அன்பால் திட்டித் திட்டித் தலை துவட்டி விடும் சிறுபராயம் நினைவுகளில் இடறுகிறது. தலையின் பின்புறம் கட்டாயம் துடைக்கவேண்டும். ஈரத்தின் சாயல் கண்டு தடிமன் வரும். பின்னர் காய்ச்சல் வரும். நீர் தேங்கி நிற்கும் குட்டைகள் தோறும் விஷக்கிருமிகள் பெருகித்தொற்றி விதவிதமான நோய்கள் வரும் என்றெல்லாம் தந்தை மடியிலிருத்தி மழை குறித்த கதைகள் சொன்னதும் ஞாபக அடுக்குகளிலிருந்து மீளெழும்பிக் கிளர்த்துகிறது.

            பல காலமாக மழையற்ற எனது சிறுவயதின் காலமொன்று நினைவுக்கு வருகிறது. ஊரின் குறுக்கே ஓடும் பேராற்றில் நீர் வரண்டு நிறைந்திருந்த மணல்மேட்டில் ஊரின் இளைஞர்கள் கிரிக்கெட்டும் கால்பந்தும் விளையாடினர். சிறுவர்கள் பட்டம் விட்டனர். மரங்கள், செடி கொடிகள் வாடிய அக்காலத்தில் பட்டாம்பூச்சிகளும், மழைக்குருவிகளும் கூட வேறெங்கோ பறந்திருக்கவேண்டும். தண்ணீருக்குக் கடும்பஞ்சம்.  எங்கும் கடும்வெயில். சொன்னது கேட்காப்பிள்ளையை பிசாசுகளை நினைவுருத்தி வெருட்டுவது போலச் சூடும் வெயிலும்  எல்லாவற்றையும், எல்லோரையும் மிரட்டியபடி அலைந்தது.

            அக் கோடையில் அத்தியவசியத் தேவைகளுக்கே நீரற்றுப் போனதனால் விவசாயங்கள் பொய்த்துப் போயிற்று. வளர்ப்புப் பிராணிகள் மெலிந்து கொண்டு வந்தன. நீரோடி வற்றிய ஆற்றில் ஆழக்குழி தோண்டி உள்ளே ஊறித் தெரிந்த நீரை அகப்பையிலள்ளிக் குடங்களுக்கு சேலைத் திரையிட்டு அதனூடாக வடிகட்டி நீரைச் சேகரித்ததையும் கண்டிருக்கிறேன். தெளிந்த நீர்க் கிணறு உள்ளதென அறிந்து வெகுதூரம் நடந்தும், சைக்கிள்களிலும் தேடிப் போய்த் தண்ணீர் காவி வந்தனர் ஊரார். நாடு முழுதும் இதே நிலைமை. எல்லா நீர்த் தேக்கங்களிலும் தண்ணீரின் மட்டம் குறைந்ததனால் மின்சாரம் வழங்குவது கூட அரசுக்குச் சிக்கலாயிற்று. நாளொன்றின் பெரும்பகுதிகள் மின்சாரமற்றுப் போக விதிக்கப்பட்டன. நாட்டின் பெரும் பாகங்கள் இருளுக்குள் மூழ்கின.

            கடல் எங்களூரிலிருந்து மிகத் தொலைவில் அலையடித்தபடி இருக்கிறது. நேரில் கண்டதில்லை. கடல் பற்றிய பிம்பங்களை போத்தலில் அடைக்கப்பட்ட பூதமொன்று அலையில் மிதந்து வந்து சிறுவனொருவனுக்கு எட்டிய கதையூடாக சிறுவயதில் அறிந்திருக்கிறேன். ஆழக் கடலெனில் அது நிறைய என்றும் வற்றா நீரிருக்கும் என்ற தந்தையிடம் நீர் எப்படி வற்றுமெனக் கேட்டுத் தெரிந்த பின்னர் , கடல் பிரதேசங்களில் சூரியன் அலையாதா எனக் கேட்டுத் திண்டாடச் செய்திருக்கிறேன்.

            பள்ளிக்கூடச் சுற்றுலா போய் கடல் பார்த்து வந்த பின்னர், வெயில் வராத தெருக்களோடு, எல்லா ஊர்களிலும் என்றுமே வற்றாத கடல்கள் இருப்பின் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமெனக் கூட்டாளிகளுடன் கூடிக் கதைத்த கதைகளும், கடற்கரை இரவுகளின் மணல் நடையும் நிலாச் சோறுண்ணும் ஆசையும் சில வருடங்களுக்கு முன் வந்து சென்ற சுனாமியுடனும், பின் வந்த அடைமழையுடனும், அது கொண்டு வந்த வெள்ளத்துடனும் வடிந்து போயிற்று.

             இலங்கையில் விடிந்தும் விடியாப்பொழுதுகளிலிருந்து புதுத்திரையிசைப் பாடல்களோடு கும்மாளமிடும், மொழிக் கொலையுடன் அரட்டையடிக்கும் பல வானொலிகள் 26-12-2004 அன்று சுனாமி குறித்தான நேரடி அறிவிப்பினைத் தொடர்ந்தும் தந்துகொண்டிருந்தன. வீட்டுக்குத் தேவையான சில பொருட்களை வாங்க கடைவீதிக்குச் சென்றிருந்த எனக்குள்ளும், பலரிடமும் ஆழிப்பேரலை குறித்து வானொலிகள் அலறியது பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. வழமையாகக் காலைவேளையில் மகளிருக்கான நிகழ்ச்சிகளை அள்ளிவழங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள் கூட அன்று பேரலைத்தாக்கத்தை நேரடியாகக் காட்சிப்படுத்தின. இந்நேரத்தில் நேரடிக்காட்சிப்பதிவுக்காக கடற்கரை சென்ற ஒரு தொலைக்காட்சி ஊடகவியலாளரையும் படப்பிடிப்பாளரையும் அலைவிழுங்கியதை வருத்தத்துடனும், இன்னும் இலங்கையின் மற்ற ஊடகங்களை நன்றியுடனும் நினைவுகூறுகிறேன்.

            அந்த ஞாயிறன்று பல தொலைக்காட்சிகளும் கடலனர்த்தம் குறித்துச் சொல்லிக் கொண்டிருக்கையில்தான் அப் பாய் வியாபாரி வந்தார். இவ் அசம்பாவிதங்கள் குறித்து ஏதும் அறியா அவரிடம் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காட்டி ஊரை விசாரித்ததில் கடலுக்கு அண்மையிலுள்ள ‘காத்தான்குடி’ என்றார். சமையலறைக் கழிவு நீரைக் கடலுக்குள் வீசியெறியும் தூரத்தில்தான் அவர் வீடிருப்பதாகச் சொல்லி இரு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டு செய்வதறியாது நிலத்தில் அமர்ந்து விசித்து விசித்தழத் தொடங்கினார். வாழ்வில் முதல்முறையாக கடலலைகளின் சீற்றம் குறித்து அறியக்கிடைத்தது அவருக்கும் எங்களுக்கும். எப்பாடுபட்டாவது இப்பொழுது ஊருக்குப் புறப்படவேண்டும். கர்ப்பிணி மனைவியும், இரு சிறுகுழந்தைகளும், பாரிசவாத நோய் தாக்கிப் பாயோடு முடங்கிய வயோதிபத்தாயும் குடிசையில் தனித்திருப்பதாகச் சொல்லி அவர் உடனே ஊருக்குப் புறப்பட்டார். வானம் இருட்டியிருந்தது. சூரியன் வெட்கி எங்கோ ஒளிந்திருந்தது.

            ஊடகங்களின் தொடர்ந்த அறிவிப்புக்கள் எனது ஊர்மக்களின் மனதினை பெருமளவில் இளகச் செய்திருந்தன. ஊர்ப் பள்ளிவாயிலிலிருந்து அறிவிப்புக்களோடு பல வாகனங்கள் ஊர்த்தெரு முழுதும் உலா வந்தது. வீடுகளிலிருந்த அரிசி, பருப்பு, கோதுமை மா முதல் கடைகளிலிருந்த பால் மா, சீனி,பாண், நூடுல்ஸ்,பிஸ்கட்டுகள் எனப் பல உணவுப் பொருட்களையும் மக்கள் தாமாகவே அள்ளியள்ளிக் கொடுத்துதவினர். பல தாய்மார்கள் ஒன்று கூடி கோதுமை மாவை , ரொட்டிகளாக சுட்டுத்தந்தனர். இப்படியாக உணவுப்பொருட்களாலும் சடலங்களைப் போர்த்தவென வெள்ளைத்துணிகளாலும் பாண்டங்களாலும் இரு பஸ்கள் நிறைந்தன. மாலைத்தொழுகை வரை சேர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்கள் நோக்கி நகர்ந்த பஸ்ஸொன்றுக்குள் நானும் இருந்தேன்.

            வெகுநேரம் பயணித்து , விடிகாலையில் அம்பாறை எனும் நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். சாய்ந்தமருது, சம்மாந்துறை, நிந்தவூர் எனப் பல பிரதேசங்களுக்கும் நிவாரணப்பணிக்கென வந்திருந்த நாம் மனம் முழுதும் வியாபித்திருந்த துயரச் சலனத்தோடு பிரித்தனுப்பப்பட்டோம். பள்ளிவாயல்களுக்கு இரவிரவாகத் தட்டுவண்டிகள் சடலங்களை அள்ளிக்கொண்டு வந்துசேர்ந்தன. ஒவ்வொன்றாகத் திண்ணையில் கிடத்தி (அனேகமான சடலங்களில் ஆடையிருக்கவில்லையாதலால் )  துணியால் போர்த்திப் பின்னர் தூய நீரால் குளிப்பாட்டினோம். குளிப்பாட்டி , வெண்துணியால் போர்த்தப்பட்டவைகளை ஏற்றியபடி தட்டு வண்டிகள் மயானம் நோக்கிச் சென்றன. ஒரு கட்டத்தில் சடலங்களின் மீட்பும் , வருகையும் அதிகரிக்க எல்லாவற்றையும் திண்ணையில் வரிசையில் கிடத்தி அவசரமாகக் குளிப்பாட்டி, அவசரமாக எடுத்துச் சென்று ஒரு பெரிய குழியில் பிரார்த்தனைகளோடு ஒன்றாகப் புதைக்கவேண்டியேற்பட்டது. அவ்வளவு சடலங்கள். நீர் குடித்து, ஊதிப் பெருத்த சடலங்கள். தலைமயிர்களில் கடல்வேர்கள் சிக்குண்டிருந்தன. ஹஜ் பெருநாளும், கிறிஸ்மஸும் அண்மித்த தினமாகையில் அனேகமான பெண் சடலங்களின் கரங்களில் மருதாணி விரல்கள். சிறு குழந்தைகள் பொம்மைகளைப் போலத் துயில் கொண்டிருந்தன.

            விடிந்து பார்க்கையில் எல்லா இடங்களிலும் அழுது சோர்ந்த விழிகளுடன், எல்லா மதத்தவர்களுமான ஊர் மக்கள் பரவிக்கிடந்தனர். நிந்தவூரின் கடற்கரைப்பள்ளிக்கூடம் அலையால் மூழ்கடிக்கப்பட்டதில் அதில் கல்விக்காகச் சென்றிருந்த ஊர்ச் சிறுவர், சிறுமியர்கள் அருகிலிருந்த மயானத்தில் தாமாகவே சடலங்களாக மூடப்பட்டிருந்தனர். கொண்டு போயிருந்த உணவும் , மற்றையவும் பள்ளிவாயில் தலைமைப் பொறுப்பிடம் ஒப்படைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இலங்கையில் மாவனல்லை மக்கள் சேர்த்தளித்த பொருட்கள்தான் முதன்முதலாக பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச்சேர்ந்தனவென்று ஊடகங்கள் செய்தியறிக்கைகளில் சொன்னதும் பல ஊர்களிலிருந்தும் நிவாரணப்பொருட்கள் குவியத் தொடங்கின.

            இந் நிலையில் ஆழிப் பேரலையின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய சில பிரதேசங்களில் திருட்டுக்களும் நிகழ்ந்திருக்கின்றன. கடற்கரையோரமாகப் பயணித்த ஒரு ரயில் வண்டியும் அதன் தண்டவாளங்களும் காட்டேறியொன்றின் கோர நகங்களையொத்த வளைவு நெளிவுகளுக்காளாகியிருந்தபோது அதில் பயணித்தவர்கள் அனைவரும் மரணித்துப் போயினர். உலா வந்த கொள்ளையர்கள் ஊதிப் பருத்திருந்த அச் சடலங்களின் காதுச் சோனைகளை வெட்டித் தோடுகளையும், விரல்களை வெட்டி மோதிரங்களையும், கைகளை வெட்டி வளையல்களையும் சங்கிலிகளையும் திருடிப் போயிருந்தனர். நகைகளின் பிரகாசம், அனர்த்தம் குறித்தான அவர்களது அனுதாபங்களை முழுவதுமாக மனதிலிருந்து அகற்றியிருக்க வேண்டும்.

            இலங்கை, காலியில் நடந்த சம்பவமொன்று இன்னும் நினைவிலிருந்து அகற்ற முடியாதுள்ளது. சுனாமி தினத்தன்று தற்செயலாகத் தொலைக்காட்சிச் செய்தியில் காட்சிப்படுத்தப்பட்ட சில நிமிடக் காட்சிகளைக் கூர்ந்து கவனித்த ஒருவர் , அதிலொரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து வழக்குப் பதிவு செய்தார். சில மாதங்கள் கழித்து வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது அவ் வீடியோக் காட்சிகள் பெரும் சாட்சியொன்றை அளித்தன. காலி நகரத்தை முழுதாக பேரலை தாக்கிய பொழுதில் தப்பி நீந்திவந்த ஒரு இளம்பெண்ணின் கழுத்துச் சங்கிலியைக் கழட்டியெடுத்து அவரைத் தண்ணீருக்குள் மூழ்கடித்து கொல்கிறான் ஒருவன். அக் கொலைகாரனைக் கண்டுபிடித்து மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

            இது போலப் பல கோரங்கள் சுனாமியினால் இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா இன்னும் சில நாடுகளில் கடலலை அனர்த்தத்தோடு நிகழ்ந்து கொண்டேயிருந்தன. வைத்தியசாலைகளும், பிரதேச சபைகளும் அடையாளம் தெரியாச் சடலங்களால் நிறைந்தன. இந் நிகழ்வுகளின் போதும் நிவாரணப் பணிகளின் போதும் ஊடகங்கள் பெரிதும் உதவின. பல நாடுகளும் தம் உதவிக்கரங்களை நீட்டின. இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு வீடுகளும், தொழில் இழந்தவர்களுக்கு தொழிலும் மற்றும் இழப்புகளுக்கும் தாம் உதவுவதாகச் சொல்லின. சில நிறைவேறின.

            அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குச் சென்று அவர்களுக்குக் கைகொடுத்து உரையாடி வந்ததை உலகின் பேரதிசயம் போல ஊடகங்கள் எண்ணிப்பலவாறாக விளம்பரப்படுத்தி வந்தன. பிறகு வந்த காலங்களில் ஊடகங்களுக்கு எழுதத்தெரிந்த அனேகர் ஆழிப்பேரலை குறித்துக் கவிதை, கட்டுரை, கதைகளெனக் கிறுக்கத் தொடங்கினர். அது சுனாமியை விடவும் மோசமாக இருந்தது.

              ” சுனாமியை விடக் கொடுமையானவை அதையொட்டி எழுதப்பட்ட பல கவிதைகள். இவற்றை எழுதிய கவிஞர்கள் பலரையும் டிசம்பர் 26, 2004 காலை 8.20 மணிக்கு மீன் வாங்கி வரும்படி கடற்கரைக்கு அனுப்பாதது நாம் விட்ட மகா வரலாற்றுப்பிழை. ‘ஆடை களவாடும் சுனாமி நீதானோ?’ எனக் காதலியின் விரகக்குரலுக்குப் பாடல்வரிகள் எழுதிய வைரமுத்துவையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்” எனத் தன் பத்தியொன்றில் கூறும் எழுத்தாளர் திரு.உமா வரதராஜனின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளும்படியாகப் பல கவிதைகள் அலைகளின்றி ஆர்ப்பாட்டமின்றி ஆட்களைக் கொன்றன.

            அது போலவே அக் காலத்தில் மிகைத்திருந்த ஆழிப்பேரலை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்துதருவதாகச் சொன்ன அரசியல்வாதிகளின், நடிகர்களின் வாக்குறுதிகள் அனேகமானவை நிறைவேற்றப்படாமல் போன இடம் குறித்துத்தகவல்கள் இல்லை.

            இலட்சக்கணக்கான மக்களைக் காவுகொண்ட சுனாமியைப் போலவே தான் பேய்மழைகள் பெரும் இடர்களைக் கொண்டுவருவனவென்றும் அவை மரணத்தின் தூதுவனுக்கு உதவுபவையென்றுமான எண்ணங்கள் எல்லோர் மனதிலும் வலுப்பெற்று நிற்கும்படி பின் வந்த மழைநாட்கள் நாட்டின் பெரும்பாகங்களை வெள்ளத்துக்குள் மூழ்கடித்தன. எங்கு பார்க்கிலும் வெள்ள நீர் மட்டம். அனேக குடியிருப்புக்களின் கூரைகள் மட்டும் தமதிருப்பை உணர்த்தியபடி நீருக்குள் மிதந்தன. ஆட்களேற்றிய வள்ளங்கள் இடமற்ற காரணத்தால் விட்டுச் சென்ற செல்லப்பிராணிகள் சடலங்களாக மிதந்து காகங்களினதும் ,அனைத்துமுண்ணிப் பறவைகளினதும் வயிற்றினை நிரப்பின.

            பல இடங்களில் மண்சரிவினாலும், மழை, வெள்ளத்தாலும் மனிதர்களும் கூடத் தமது இருப்பிடங்களோடு மீளப்பெற முடியாச் சடலங்களாக மண்ணுக்குள் புதையுண்டனர். பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வெள்ளத்துக்காக விட்டுச் சென்ற வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்து திரவியங்களைத் தேடினர். எல்லாம் பார்த்திருந்த மழை, தொடர்ந்தும் வருடங்கள் தோறும் சில காலங்களுக்கொரு முறை அமோகமாக வந்து மேலும் மேலும் இன்னல்களைத்தான் சேகரித்துத் தந்துவிட்டுச் செல்கின்றது.

            காலநிலை மாற்றங்கள், யாராலும் நிறுத்த முடியா மழை, புயலின் பாதிப்புக்கள், திசைகள் நோக்கி நகரும் சூறாவளியின் தாக்கங்கள் எனப் பல சொல்லும் வானிலை அறிக்கைகளைக் கூடச் சில சமயங்களில் மழை ஏமாற்றிவிடுகிறது. எதிர்பாராத் தருணங்களில் ஒரு திருட்டுப் பூனையைப் போல வந்துவிடுகிறது. அடைமழை வரலாம் என அறிவிக்கப்பட்ட நாட்களில் தபால்காரனின் கரத்திலிருந்து தொலைந்து போன கடிதமாய் மழை வராமலே போய்விடுகிறது.

            கடந்த இருமாதங்களாக இலங்கையின் பல பிரதேசங்களிலும், இந்தியாவின் தமிழ்நாடு, இன்னும் சில பிரதேசங்களிலும் புயலுடனான மழை கோரத்தாண்டவமாடிச் சென்று நகரங்கள் ஈரலித்துக் கிடந்தமையையும், மனிதர்கள் ஏற்றத்தாழ்வு பாராமல் வெள்ளம் தீண்டாத ஊர்ப்பொது இடங்களில் கூடிக் கதைத்தபடியிருந்ததையும் காணும் வாய்ப்புக்கள் புகைப்படங்கள் மூலம் கிட்டியது. நகரங்களில் நேர காலமற்ற பணி நெருக்கடி, அயலவரைக் கூட அறிமுகமற்றவர்களாக ஆக்கியிருக்கிறது. பெற்ற பிள்ளைகளிடம் பல விடயங்களை பேசுதல், அவர்களது கல்வி, வாழ்வியல் முறைகள், நடவடிக்கைகள் எனக் கலந்தாலோசித்தல் போன்றவைக்கும் துணைகளிடம் மனம் விட்டுப் பேசுவதற்கும் நேரம் இடமளிக்கா வீடுகளில் உள்ளவர்களையெல்லாம் கூட வெள்ளம் ஒன்றாக்கி ஓரிடத்துக்குக் கூட்டி வந்து கலந்துரையாட விட்டது.

            வெள்ளங்களும், பல இயற்கை அனர்த்தங்களும் சமூகத்தின் கீழ்நிலை மற்றும் நடுத்தர மக்களையே அதிகம் பாதிக்கிறது. அன்றாட வாழ்க்கைக்காக அன்றாடம் உழைப்பவர்களும், மாத வருவாய் போதா மக்களுமே அதிகளவில் இன்னல்களுக்குள்ளாகின்றனர். வசதிப்பட்டவர்களின் மாளிகைகளுக்கு வெள்ளம் வராது. வரினும் அவர்கள் மாடிகளிலிருந்து வேடிக்கை பார்ப்பர். அவர்களுக்கான உணவுகள் குளிரூட்டப்பட்ட இயந்திரங்களுக்குள்ளும் சூடான சமையல் உபகரணங்களுக்குள்ளும் அடைபட்டுக்கிடக்க, மாடிகளிலிருந்து வெள்ளநீரையும், மழையையும் வேடிக்கை பார்ப்பர். சினிமா நாயகிகள் நீரில் அழியா முக ஒப்பனைகளுடன் மழையில் குதித்தாடுவதை தொலைக்காட்சிகளில் வேடிக்கை பார்த்தும் பொழுதைக் கடத்தலாம் அவர்கள்.

            இன்னும்,  இலேசான மழை தூறும் நாட்களில் கூட சுகமான போர்வைக்குள் பலத்த நித்திரையிலிருக்கும் பலர் நனைந்த தரையில், குளிரெடுக்கும் இரவில் வீதியோரங்களிலும், வெளிப்புறக்கடைத் திண்ணைகளிலும், புனிதஸ்தல வாயில்களிலும் ஒண்டிக் கிடக்கும் யாசக மனிதர்கள் குறித்து சிந்திப்பதேயில்லை. மழை நாட்களில் அவர்களது பண வரவுகள், ஊண், உறையுள், உறக்கம் எதுபற்றியும் யோசித்துப்பார்ப்பதில்லை. மேற்கூறிய இடங்களில் அடைக்கலமாகி இரவுறக்கம் பெறும்  சகமனிதர்களின் நிலை குறித்தும், மழை வந்தால் அவர்களது போக்கிடம், இருப்பு குறித்தும் உரையாடுவதுவும், நினைவுபடுத்துவதும் இங்கு அவசியமாகிறது.

            இன்றைய காலகட்டத்தில் அரசு வழிநடத்தும் ஊடகங்கள் மற்றும் தனியார் ஊடகங்கள் பலவும் இது போன்ற அனர்த்தங்களுக்காக, அதற்கான நிவாரணங்களுக்காக ஒன்றுகூடுவதென்பது குறைவாகவே உள்ளது. குடும்பமே கூடிப் பார்த்துக் களிக்கும் தொலைக்காட்சித் திரைகள் கூடத் திரைநாயகிகளின் அங்க அசைவுகளையும், அதி பல சூரக் கதாநாயகர்களின் அடிதடிகளையும் , பொய் சொல்லும் விளம்பரங்களையும் காட்சிப்படுத்திக் காட்சிப்படுத்தியே மக்களின் நேரங்களை வீணடிப்பதோடு அவர்கள் மனதில் வக்கிரத்தையும் வன்முறைகளையும் விதைத்தபடியிருக்கிறது.

            எழுத்து ஊடகங்கள் கூட அனேகமாக நடிகைகளின் நாய்க்குட்டிகளுக்கும், நடிகர்களின் புதுப்படங்கள், அரசியல் பொய் வாக்குறுதிகளுக்கும்  கொடுக்கும் முக்கியத்துவம் கூட இதுபோன்ற அனர்த்தங்கள் பற்றிய செய்திகளுக்கும், அதற்கான நிவாரணத்துக்காக ஒன்றுதிரள ஊக்கப்படுத்துவதற்கும் கொடுப்பதாயில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், இயலாதவர்களுக்காகவும் எவ்வளவோ செய்யமுடியுமானவை மக்களுடன் நேரடித் தொடர்பிலிருக்கும் ஊடகங்கள்தான். சில ஊடகங்கள் உள்ளனதான். மறுப்பதற்கில்லை. எனினும் அவையும் காலத்தின் இடர்நிலைக்குச் சிலகாலம் தம்மைக்கொடுத்துவிட்டுப் பின்னர் திரும்பவும் தமது இன்னிசைகளிலும், ஆட்டம்பாட்டங்களிலும், நடிகைகளின் இடைகளிலும், அரசியல் வீரப்பிரதாபங்களுக்குள்ளும் தம்மை ஒளித்துக்கொள்கின்றன.

            காலநிலை மாற்றங்களால் இது போன்ற இயற்கை அழிவுகள் தொடரும் சாத்தியக்கூறுகள் அனேகமிருப்பதால் பாதிக்கப்படும் மக்களின் அரசினை இது போன்ற இன்னல்கள் ஏற்படுமிடத்து உடனடியாகச் செய்யவேண்டியவை குறித்துப் பல நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டிய கடமையில் நாம் இருக்கிறோம். ஆறுகளில் நீர் நிரம்பி ஊருக்குள் திரும்பும் வெள்ளங்களைக் கட்டுப்படுத்த தேவையான அணைகளைக் கட்டி, வேற்று வழிகளினால் நீர் வழிந்தோடச் செய்யவேண்டும். அழுக்குகளும், கழிவுகளும் தேங்கி, நீர் வழிந்து நிரம்பும் வாய்க்கால்கள் அடைக்கப்பட்டு, குப்பைகளால் நகர வீடுகள் நீருள் மூழ்குவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அதைத் தடுக்கத் தேவையான வழிவகைகளையும் செய்யவேண்டும்.

            இவையெல்லாவற்றுக்கும் ஊடகங்கள் தான் பேருதவி செய்யவேண்டும். மக்களின் காலடிக்கு தினமும் போய்வருகின்றன ஊடக அலைகள். உலகில் சுனாமி எச்சரிக்கை விடுக்கும் நல்ல சேவை செய்யும் ஆராய்ச்சி மையங்கள் பல இப்பொழுது தோன்றிவிட்டன. அது போலவே  இயற்கை அனர்த்தங்கள் குறித்தும், அதன் போதான முதலுதவிகள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கல்விகள், பிரச்சாரங்கள் போன்றவற்றை ஊடகங்கள் தினமும் முன்னின்று செய்துவரின் பல பேரிழப்புக்கள் தடுக்கப்படலாம்.  அறிந்த மக்கள், அறியாதவர்களிடமும், பாமரர்களிடமும் எடுத்துச் சொல்லாவிடின், சுனாமிக் கொள்ளையருக்கும் நமக்குமென்ன வித்தியாசம் இருக்கப் போகிறது ? நீருக்குத் தாகமெடுத்து உயிர்களைப் பருகித் துப்பவிடுவது இன்னும் எத்தனை நாளைக்கு ?

    – எம்.ரிஷான் ஷெரீப்,

    மாவனல்லை,

    இலங்கை.

    mrishanshareef@gmail.com

    Share
  • மார்கழி மணாளன்  11 ஸ்ரீ வில்லிபுத்தூர்   ஆண்டாள் – வடபத்ரசாயி   

    க. பாலசுப்பிரமணியன்

    47_big

    மலர்வனத்தில் மலர்ந்த மழலை

    மாலனைத்தேடி மண்வந்த மங்கை

    மாதர் மனம் கவர்ந்த கோதை

    மார்கழிப் பாவை மாதருக்கு கீதை !‘

     

    விஷ்ணுசித்தன் அறியாத மாயை

    விஷ்ணுவின் சித்தம் அறிந்த ராதை !

    விடியலிலே கண்ணனைக் காணும் போதை

    வேங்கடனை நாடிச் சென்றாள் இந்த சீதை !

     

    கோகுலனுக்குக்  கோர்த்து வைத்த மாலை

    கோதை அணிந்தே கேட்டாள் நித்தம் காலை

    “குறையோ? கண்ணா !! உனக்கிணை இது சரியோ?

    இறையே ! உயிரே ! இதயத்தில் இடம் உளதோ ?”

     

    சூடிக்கொடுத்த சுடர்க்கொடி கண்டு

    சொல்லிழந்து உணர்விழந்து சித்தனுமே

    செயலிழந்து நிலையிழந்து நின்றான்

    சோதனையோ? மாதவனேயென வியந்தான் !

     

    ஆண்டவளின் அன்பில் வளர்ந்த அரங்கனும்

    ஆதவனின் ஒளிபோல் அவளை அணைத்தான்

    ஆயிரம் பாசுரங்கள் அண்டங்களில் ஒலிக்க

    அரங்கனின் அருளாட்சி ஆண்டாளின் சந்நிதியில் !!

     

    கோவிந்தனிடம் கோதை கொண்ட காதல்

    குவலயமே வியந்திடும் உறவின் தேடல் !

    பாவையவள்  பாசமுடன் பாடிட்ட பாவை

    பாரினிலே பாவையர்க்குக்  காதல் பாதை !

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 29

    புலவர் இரா. இராமமூர்த்தி.

    அவா என்பதை ஆசை என்றும் கூறுவர். அவா என்ற சொல்லைத் திருவள்ளுவர் ஆரா இயற்கை என்கிறார்!

    ஆசை என்பதும் அதையே குறிக்கும்! தமிழில் ‘அவா’ என்று கூறிப்பாருங்கள்! உங்கள் விரியும்வாய் மேலும் மேலும் அகன்று கொண்டே இருக்கும் இதனையே ஆரா இயற்கை – அதாவது நிறைவடையாத இயல்பு என்கிறார் திருவள்ளுவர். மனிதமனம் எதிலும் நிறைவை அடையாது! மனித மனம் மட்டுமன்று, இயற்கையே என்றும் நிறைவடையாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது!

    இந்தப் பிரபஞ்சம் ஐம்பூதங்களால் ஆனது, என்பார்கள்!
    ஐம்பெரும் பூதங்கள், நிலம், நீர்,நெருப்பு, காற்று, வெளி ஆகிய ஐந்துமேயாகும்!
    இவற்றுள் நிலத்தினை நமக்கு அண்மையில் உள்ள பூதம் என்பர்.
    நீர் நிலத்துடன் சேர்ந்திருக்கும், அவ்வப்போது வானில் சென்று மழையாகும், மீண்டும் நிலத்தையே அடையும்! காற்று பூமியைச் சூழ்ந்தே இயங்கும்.
    நெருப்பு வானைநோக்கிச்சென்று பரவும்.
    வானமோ விரிந்து விரிந்து சென்றுகொண்டே இருக்கும்.
    இவை ஐந்தும் நிறைவடையாமல் இயங்கிக்கொண்டே இருக்கும்.

    நிலம் செறிவடைந்து இறுகிக் கொண்டே இருக்கும்; பூமியின் சுழற்சியால், நிலப் படிவங்கள் நகர்ந்து இடத்தை நிரப்பிக் கொள்ளும்.ஆகவே, அதன் ஆசை அடங்காது!
    அவ்வாறே நீரும் பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து, இடத்தை நிரப்பும்; அப்போதும் ஆவியாகி வானில் மேகமாகிக் கீழ் நோக்கி, மழையாய்ப் பாய்ந்து,அருவியாகி வழிந்து, ஆறாகி நடந்து கடலை நிரப்பும்!ஆனாலும் அதன் ஆசை நிறைவை அடையாது!
    நெருப்போ, தான் பற்றிக்கொண்ட இடத்தை அடுத்து மெல்லப் பரவி,விரிந்து அனைத்தையும் விழுங்கும்! அதன் ஆசையும் அடங்குவதில்லை!
    காற்றும், வெற்றிடத்தை நோக்கிப் பரவி, அந்த இடத்தை நிரப்பும்! அந்தக் காற்றின் திசைகளால் உலகில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும்; அதற்கும் என்றும் நிறைவே இல்லை!
    வானின் விரிவைத் திருவாசகம் மிகவும் சிறப்பாகக் கூறுகிறது!

    “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
    அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
    ஒன்றனக் கொன்று நின்றெழில் பகரின்
    நூற்றொரு கொடியின் மேற்பட விரிந்தன!”

    என்பது அத்திருவாசகப் பகுதியாகும்! இந்த வானின் விரிவுக்கும் எல்லை அல்லது நிறைவு இல்லை! இவ்வாறு, ஐம்பெரும் பூதங்களும் நிறைவு பெறாத நிலையில், அனைத்தையும் கவர்ந்து, மேலும் மேலும், ஆரா இயற்கையாகிய அவாவுடன் விளங்குகின்றன! இவை யாவும் நிரம்பிய இயற்கையை உடைய பேரண்ட ஆற்றலுள் ஒடுங்கும்! அவ்வாற்றல் அழிவற்றது; அதனையே திருவள்ளுவர் ”பேரா இயற்கை” என அழைத்தார்!

    நம் உடல், வானம், தீ, நீர், காற்று, மண் என்ற ஐம்பூதங்களின் சேர்க்கையே யாகும்! என்றும் நிரம்பாத ஆசைகொண்ட ஐம்பெரும் பூதங்களின் கூட்டுப்பொருள் ஆதலால், நம் உடலும் ஆறாத இயற்கையாகிய அவா மிக்கதாக விளங்குகிறது! நிலையற்ற இந்த உடலுக்குள், நிலைத்த உயிராற்றலை மனமே இணைத்து வைக்கிறது! இந்த உடல், உயிருடன் இணைந்து, நன்மை, தீமை ஆகிய இருவகை வினைகளுடன் இயங்குகின்றது!இதனை வள்ளுவர் ,

    “இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற் றுலகு!”(23)

    என்று கூறுகிறார்! இவ்வுயிர் அருள், தவம், துறவு, மெய்யுணர்தல் ஆகியவற்றில் பழகிப் படிப்படியாகப் பக்குவம் பெற்று, மூல ஆற்றலுடன் ஒன்றி விடுவதுதான் ”பேரா இயற்கை”யை அடைவதாகும். இந்நிலையில், அவா நீங்கப் பெற்ற உயிர், மீண்டும் பிறவாத விடு தலையாகிய ”பேரா இயற்கை” நிலையை அடைகிறது!

    இவ்வாறே இந்த ஐந்து பூதங்களின் கூட்டுப் பொருளாகிய நம் உடல், மெய் ஆசையாகிய காம இன்பத்தில் மிகவும் ஈடுபடுகிறது. இந்த ஆசை எளிதில் குறைவதில்லை; நீங்குவதும் இல்லை; மனம் அதற்குக் கட்டுப்பட்டு விடுகிறது! நம் வாய் உணவுப் பொருள்களின் சுவைக்கு ஆசைப்படுவதை நிறுத்திக் கொள்வதில்லை; மனம் அதன்வழியே சென்று, கழி பேரிரை உண்ணவே விரும்பி விடுகிறது! கண் இப்போதெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டியிலேயே தன் பார்வையைத் தொலைத்து விடுகிறது! வேண்டாத பொருளின் மேல் பார்வை செல்லும்போது காமம் தூண்டப் பெறுகிறது! மனம் அதனடிமை ஆகிறது! மூக்கு சுவைப் பண்டத்தின் வாசனையை அவாவி, மனத்தை அங்கே செலுத்தி விடுகிறது! செவியோ அளவின்றி இசை கேட்கிறது; இசையின் ஓசை அதிகமாகும்போது, மனம், மிகுந்த ஆசையுடன் செவிப்புலனைக் கெடுத்துக் கொள்கிறது! அவ்வகையில் மனம், இசைக்கு அடிமையாகிறது! இந்த ஆசை அளவின்றிப் பெருகுவதால், உயர்ந்த நோக்கமாகிய ஆன்ம விடுதலையைப் பற்றிச் சற்றும் கவலைப் படாமல் மீண்டும் மீண்டும் பிறப் பதை வழக்கமாக்கிக் கொண்டு துன்பத்தில் வீழ்கிறது! இதையே திரு வள்ளுவர் ”ஆரா இயற்கை அவா” என்கிறார்!

    ஆகவே ஐம்பெரும் பூதங்களும்,நம் உயிரும் ‘பேரா இயற்கையை’ அடைந்து நிறைவு பெறத் தடையாக இருப்பது ‘ஆரா இயற்கை’ யாகிய அவாவே , என்ற புதிய விரிவான பொருளை நாம் உணர்கிறோம்!இனிக் குறட்பாவைப் பயில்வோம்!

    “ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
    பேரா இயற்கை தரும்!” (370).

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ஆண்டாள் -10
    ———————————-

    298398a0-1728-4f97-bff7-94874cbfb6f1

    சோற்றுச் சுவர்கத்தில் சோம்பித் திரிந்திடுவீர்,
    கூற்றன் வரக்கையைக் கூப்பிடுவீர்: -நூற்றிடுவீர்
    நாச்சியார் சொன்னவண்ணம், நோன்பு திருப்பாவை
    சேச்சியவள்(சகோதரி) வாக்கே சிறப்பு ….கிரேசி மோகன்….

    Share
  • மார்கழி மணாளன் 10 ஆயர்பாடி -ஸ்ரீ நவமோகன கிருஷ்ணன்

     க. பாலசுப்பிரமணியன்

    271f5fd3-6b56-4fa8-aedb-d3459ea3b314

    இளநீல மயில்பீலி இனிதே தலைசூடி

    இளம்பச்சை பட்டொன்று இடுப்பில் கட்டி

    இளவேனில் மாலையிலே இனிய குழலூதி

    இளமைக்குப் பொலிவூட்டி இடையன் நடந்தான் !

     

    இளஞ்சிவப்புப் பொட்டங்கே எழுகின்ற கதிரவனோ?

    இமையிரண்டும் ஓங்கி உயர்ந்த மாமலையோ?

    இதமான கீதங்கள் இதழசைவில் இறங்கிவர

    இவையனைத்தும் அவன் கருவிழிகள் தேடிவிடும்!

     

    ஊதாப்பூ சேலையுடுத்தி ரோஜாப்பூ ராதை

    கொத்தாகப் பூக்களைத் தலையில் சூட்டி

    மத்தாப்பூ சிரிப்புடனே கண்ணனைத் தேடி

    தப்பாமல் நடந்தாள் கால்தடங்கள் மேலேறி.!

     

    கோலிரண்டைக் கையேந்திப் பாவைகள் ஆட

    கோலமயில் ராதையுடன் கோகுலனும் ஆட

    கைவண்ணம் கால்வண்ணம் கண்வண்ணம்

    வான்மின்னும் தாரகைகள் நிழல் வண்ணம் !

     

    சல் சல்லென்று சலங்கைச் சத்தம் ஒலிக்க

    சில்லென்ற காற்றும் சற்றே மயங்கியே நிற்க

    கோகுலத்தில் கொண்டாட்டம் என்றென்றும்

    கண்டாயோ கண்டாயோ ராசலீலை என்னுயிரே !

     

    தோளினிலே துவளும் ஒரு துளசிமாலை

    தோதாக ஆடிவர பிருந்தாவனப் பாதை !

    குழலிலிருந்து பிறக்கின்ற அவன் நாதம்

    கோகுலமென்ன, கூடிநின்று மூவுலகும் ஆடும் !

     

    கோகுலமோ கோவர்தனமோ இது வைகுந்தமோ,?

    கோவினங்கள் யாதவனைத் தேடிவந்த தேவர்குலமோ ?

    கோவிந்தன் கால்பட்டால் கோகுலமும் வான்வளமோ?

    கோலாட்ட வாழ்க்கையிது ! கோகுலனோடு ஆடிவிடு !

    Share
  • இணையத்தில் தொற்றுநோய் – 1

    — தேமொழி

    சமூக வலைத்தளங்களை சில நேரங்களில் கலக்கும் செய்திகள் வரும்.

    தொற்றுநோய் போல பரவுவதால் இதனை ‘It went viral’ அல்லது ‘gone viral’ என்று சொல்லிச் சொல்லி தங்களைக் கவர்ந்த செய்தியை அனைவருக்கும் பலசமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பிக் கொண்டிருப்பது நமது வழக்கம். அதாவது…இப்பொழுது இங்கு நான் பரப்புவது போல என்று வைத்துக் கொள்ளலாம்.

    கால்நூற்றாண்டிற்கு முன்னர் இணையம் பரவலாக பயனில் இல்லாதக் காலத்தில் gone viral என்றால் மருத்துவத் தொடர்பான செய்தியாக இருந்திருக்கக் கூடும். ஏதேனும் தீயநோய்க்கு அறிகுறியாக இருந்து, ஆளைப்பிடித்து தனிமைப்படுத்திப் பரவவிடாமல் செய்திருப்பார்கள். இணையச் செய்திகளில் இதெல்லாம் நடக்காது. செய்தி பரவிப் பரவி டிவிட்டர் மூலம் எகிப்து, ஈரான், மால்டோவா போன்ற சில நாடுகளின் புரட்சியாளர்கள் ஒருங்கிணைத்து அவர்கள் நாட்டின் அரசுக்கு எதிராகப் புரட்சிகள் செய்தனர், அவை அந்த நாடுகளின் ஆட்சியை அசைத்துப் பார்த்தன.

    ஒசாமா பின் லேடனனைப் பிடிப்பதற்காக அமெரிக்க ராணுவம் பாகிஸ்தானில் அதிரடித் தாக்குதலில் இறங்கிய பொழுது வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவுடன், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சியுடன் அதை நேரடி ஒளிபரப்பாக பார்த்துக் கொண்டிருந்த பொழுது … உலகில் யாருக்குமே அந்தச் செய்தி தெரியாது.

    அபூத்தபாத் (Abbottabad) என்ற அந்த நகரில், ஒசாமா தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் வசித்த, தொலைத்தொடர்பு ஆலோசகராகப் பணிபுரியும் ‘சோஹேப் அத்தர்’ (Sohaib Athar), என்ற 33 வயது இளைஞர், வீட்டிற்கு மேல் பறந்த இராணுவ ஹெலிகாப்டர் ஏற்படுத்திய ஓசை, தொடர்ந்த அதிரடித் தாக்குதல் ஆகியவை வழக்கத்திற்கு மாறாகத் தூங்கவிடாமல் தொல்லை செய்ததால் அதனை டிவிட்டர் வலைத்தளத்தில் நேரடிப் பதிவு செய்து கொண்டிருந்தார் (Sohaib Athar, @ReallyVirtual, https://twitter.com/ReallyVirtual).

    “Helicopter hovering above Abbottabad at 1AM (is a rare event).”

    “Go away helicopter – before I take out my giant swatter.”

    “A huge window shaking bang here in Abbottabad.”

    “I hope its not the start of something nasty.”

    என்ற செய்திகளாக, நடந்தது என்னவென்றே தெரியாமல் அவர் செய்த பதிவுகளின் முக்கியத்துவம் பின்னர் உணரப்பட்டு ஒரே நாளில் உலகின் புகழ் உச்சிக்குச் சென்றார். டிவிட்டர் வலைத்தளத்தில் அவரைப் பலர் தொடரத் தொடங்கினர். இது போன்று பல செய்திகள் பரவுவதும், நாம் பரப்புவதும் வாடிக்கை.

    சமீபத்தில் இணையத்தைக் கலக்குவது ஒரு படம். “பாண்டாவைக் கண்டுபிடிக்க முடிகிறதா?” என்ற கேள்வியுடன் ஸ்னோமேன் கூட்டத்தில் மறைந்திருக்கும் பாண்டாக் கரடியை அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ‘டாடல்ஃப்’ (Dudolf) என்ற புனைப்பெயர் கொண்ட ஓவியர் ‘ஜெர்ஜிலி டூடஸ்‘ (Gergely Dudás), தனது ஃபேஸ்புக் தளத்தில் (https://www.facebook.com/thedudolf/) வரைந்து பதிவிட்ட படம் தொற்றுநோய் போலப் பரவிக் கொண்டிருக்கிறது.

    ஸ்னோமேன் கூட்டத்தில் பாண்டாவைக் கண்டுபிடிக்க முடிகிறதா?” என்பது போல “ஆந்தையின் கூட்டத்தில் பூனையைக் கண்டுபிடிக்க முடிகிறதா?” என்ற மற்றொரு படமும் வரைந்து வெளியிட்டுள்ளார் தனது எதிர்பாராத புகழைக் கண்டு மகிழ்ந்த ஓவியர் டாடல்ஃப் அவர்கள்.

    விடுமுறை நாட்களில் பொழுதை ஓட்ட இது போன்ற விளையாட்டுகள் மக்களுக்கு உதவுகிறது. அனைவரும் பார்த்து மகிழப் படங்கள் கீழே …

    Gergely Dudás

    Gergely Dudás2

    Picture Courtesy:  https://en.wikipedia.org/wiki/Situation_Room  &  https://www.facebook.com/thedudolf/

    Share
  • பூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறுதல் பூமியின் சூடேற்ற நிலையைப் பேரளவு பாதிக்கிறது

    Earth's Axial Tilt

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++

    https://youtu.be/fHS042a-Nb0

    https://youtu.be/WLRA87TKXLM

    https://youtu.be/hvjTicipAwo

    https://youtu.be/xQSHxY5ZR6w

    https://youtu.be/dfiT3Zh5q3c

    https://youtu.be/ZD8THEz18gc

    https://youtu.be/OqsRD4HPtH0

    https://youtu.be/xVQnPytgwQ0

    https://youtu.be/B4Q271UaNPo

    https://youtu.be/3Uua_OEW2QY

    +++++++++

    Milankovitch cycles

    பூகோளம் மின்வலை யுகத்தில்
    பொரி உருண்டை ஆனது !
    ஓகோ வென்றிருந்த உலக மின்று
    உருமாறிப் போனது !
    பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை
    பூச்சரித்துக் கந்தை ஆனது !
    மூச்சடைத்து விழி பிதுக்க
    சூட்டு யுக வெடிப் போர் மூளுது !
    தொத்து நோய் குணமாக்க
    தூயநீர் வளம், காற்று வளம் தேவை !
    காலநிலை மாறுத லுக்குக்
    காரணிகள் வேறு வேறு !
    கரங் கோத்து பூமி காக்க, அனைவரும்
    வருவீ ர் எனக் கூறு கூறு !
    ஓரிடத்தில் எரிமலை வெடித்து
    உலகெலாம் பரவும்
    கரும்புகை மூட்டம் !
    துருவப் பனிக்குன்று வேனிற்காலம்
    உருகி, உருகி
    உப்பு  நீர்க்கடல் மட்டம் உயரும் !
    உஷ்ணம் மெதுவாய் ஏறும் !
    தாளம் தடுமாறி
    வேளை தவறிப் பருவக் காலம் மாறி,
    கோடை காலம் நீடிக்கும்,
    குளிர் காலம் குறுகிப் போகும்,
    பனி மலைகள் வளராமல்
    குள்ள மாகும்
    நில வளம் செழிப்பிழக்கும் !
    நிலப் பகுதி நீர்மய மாகும் !
    நீர்ப் பகுதி நிலமாகிப் போகும் !
    உணவுப் பயிர்கள் சேத மாகும் !
    மனித நாகரீகம் நாசமாகி
    புனித வாழ்வு மோசமாகி
    வெறிபிடித் தாளும்
    வெப்ப யுகப் பிரளயம் !

    +++++++++++++++++++++++++

    கடந்த 282,000 ஆண்டு கணிப்புத் தகவல் இலக்கங்களை [Data] ஆராய்ந்ததில், முதன் முறையாக பூகோள அச்சின் சாய்வுக்கும், பூமியின் பேரளவு நீர்மை, உஷ்ணப் பாதிப்புக்கும் பூமத்திய ரேகை உட்புறத் தளங்களில் [Inter-tropical Convergence Zone -ITCZ] ஓர் தொடர்பு உள்ளதைக் கண்டுபிடித்தோம்.  தகவல் இலக்கங்களை நாங்கள் கணித முப்பட்டை [Mathematical Prism] வழியாக அணித்துவத்தைப் [Pattern] பார்த்ததில் 41,000 ஆண்டு சுழற்சியில் மாறும் பூகோளச் சுற்று அச்சின் சாய்வுக்குத் தொடர்பு உள்ளதை அறிந்தோம்.

    கிரிஸ்டீன் திலாங், பூதளக் காலநிலை விஞ்ஞானி [University of Science & Technology of China & National Taiwan University Research Collaborators]

    ajay

    பூகோளச் சுற்று அச்சின் சாய்வுக்கும், பூமியின் நீர்மை / உஷ்ணப் பாதிப்புக்கும் தொடர்பு உள்ளது.

    பூகோளச் சுற்று அச்சின் சாய்வு 41,000 ஆண்டுச் சுழற்சி மீட்சியில் மாறி வருகிறது. உச்ச அளவுச் சாய்வு : 24.5 டிகிரி. அதம அளவு : 21.5 டிகிரி. தற்போதைய அளவு : 23.5 டிகிரி. பூமியின் சுற்றச்சு சாய்வுத் திரிபு 23,000 ஆண்டு சுழற்சியில் பூமியில் பனித்தட்டு உருவாக்கத்தைப் பாதிக்கிறது. சுமார் 100,000 ஆண்டுக்கு ஒருமுறை சுற்று வீதி மாறும் அந்த நிகழ்ச்சி “சுற்றச்சுத் திரிபாட்டம்” [Precession] என்று குறிப்பிடப் படுகிறது. அதனால் பூமத்தியப் பகுதிகளும் [Tropics] பரிதியைப் பூமி சுற்றும் சுற்று வீதியும் [Earth’s Orbit] பாதிப்படைகின்றன. பூமியின் சுற்று வீதி மாறுதல் பூகோளத்தில் காலநிலைப் பாதிப்பை உண்டாக்கும். அந்த பூகோள சுழற்சி நிகழ்ச்சி “மிலன்கோவிச் சுழற்சி” [Milankovitch Cycle] என்று குறிப்பிடப் படுகிறது.

    சமீபத்தில் இந்த ஆய்வு முடிவை வெளியிட்ட குழுவினர் சைனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பூதளவியல் காலநிலை விஞ்ஞானி கிரிஸ்டீன் திலாங்க் [Kristine DeLong] தலைமையில் பணியாற்றியவர். அவர்கள் கடந்த 282,000 ஆண்டுகளாய்க் கிடைத்த தகவல் இலக்கத்தை வைத்து ஆய்வுகள் செய்து, முதன்முறையாக பூமியின் சுற்றச்சு சாய்வு திரிபுக்கும், பூமத்தியப் பகுதி நீர்மை, உஷ்ண மாறுதலுக்கும் தொடர்பு உள்ளதென அறிவித்தார்.  அந்த முடிவறிக்கை 2015 நவம்பர் 25 தேதி “இயற்கை வெளியீட்டு” [Nature Communications] இதழில் வெளி வந்துள்ளது.       

    Seasonal variations

    பூதளவியல் சீர்குலைப்பு, பருவச் சுழற்சி, காலநிலைப் பாதிப்புகளை  விளைவிப்பதால்,  அது அனைத்துப் பூகோள மாந்தரின் பிரச்சனையாக ஆகிவிட்டது.   அதைத் தீர்வு செய்ய முற்படும் போது, மனித இனத்தில் சில பிரிவினர் நிச்சயம் பாதிக்கப் படுவதைத் தவிர்க்க முடியாது.   உலக சமூக மாந்தர் முன்வந்து, பூதள மாந்தர் உரிமை, தேவைகளை நோக்கி,  அதைப் பயின்று ஆய்வு செய்து, முழுக் கவனமுடன் சீர்ப்படுத்த இப்போது எடுத்து நடத்த முற்பட வேண்டும்.

    ஜான்  கார்ல்சன் [சட்டப் பேராசிரியர், ஐயோவா பல்கலைக் கழகம்]

    Global ocean mean temperature

    2013 மே மாதம் நவீன வரலாற்றில் முதன்முறையாக கரியமில வாயுத் திரட்சி 400 ppm [parts per million]  என்று ஹவாயியில் உள்ள மௌனா லோவா நோக்ககக் கருவிகள் [Mauna Loa Observatory] காட்டி ஓர் எச்சரிக்கை அறிவிப்பாக நிபுணர் வெளியிட்டுள்ளார்கள். சென்ற முறை பூதளவியல் நிபுணர் இம்மாதிரி 400 ppm அளவு கரியமில வாயுத் திரட்சி [Concentration] இருந்தது முன்பு மூன்று – ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு இடையே “பிளியோசீன்” காலத்தில் [Pliocene Epoch] இருந்ததாக தற்போது நம்புகிறார்கள்.   அப்போது பூகோளத்தின் உஷ்ணம் : 3.5 முதல் 9 டிகிரி F [ 2 to 5 டிகிரி C ] இப்போது உள்ளதை விட மிகையாக இருந்திருக்கிறது.  அந்தப் பிளியோசீன் யுகத்தில் மரங்கள் ஆர்க்டிக் கடல் வரை [Arctic Tundra] வளர்ந்திருந்தன.   கடல் மட்டம் உயர்ந்து 65 அடி முதல் 80 அடி வரை பொங்கி எழுதிருந்தது !

    ஜேம்ஸ் ஒயிட் [Director, CU-Boulder’s Institute of Arctic and Alpine Research]  

    அடிப்படை விதிப்படி ஆர்க்டிக் பனித் தளங்கள் உருகும் போது, ஆர்க்டிக் கடல் ஒரு பெரும் நீர்மை ஆவிப் போர்வை, முகிலை [Blanket of water vapour and clouds]  உண்டாக்கி, ஆர்க்டிக் துருவப் பகுதியைச் சூடாக வைத்துக் கொண்டு வருகிறது.

    ஜேம்ஸ் ஒயிட்.

    World sharing of gas emiissions

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

    Arctic Ice Retreat

    Antarctica

    “கடந்த பனியுகத்துக்கும் முன்பு உலகெங்கும் கடல் மட்டம் இன்றைக்கு உள்ளதை விட 20 அடி உயரத்தில் இருந்தது.  சூடேறும் பூகோளம் மெல்ல மெல்லச் சூடேறி 129,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அந்தக் கடல் மட்ட நிலைக்கு அடுத்த நூற்றாண்டிலே மீண்டும் கொண்டு வந்துவிடும்.”

    ரிச்சேர்டு ஹாரிஸ் [Richard Harris National Public Radio (March 26, 2006)]

    “கிரீன்லாந்தின் பனிமலைகள் உருகிச் சரிந்தால் சில சமயம் பூகம்பங்களை உண்டாக்கிவிடும்.  கடந்த 5 ஆண்டுகளாக பூகம்ப எண்ணிக்கை உலகில் இரட்டித்திருக்கிறது.  அவ்விதம் விரைவாக ஆர்க்டிக் பகுதிகள் சேமித்து வைத்துள்ள நீர் வெள்ளம் வெளியேறுவது பூகோளச் சூடேற்றத்தைக் காட்டும் மற்றுமோர் அடையாளம் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார் !  எதிர்பார்த்தை விட பனிமலைகள் உருகி வேகமாக நகர்ந்து வருகின்றன.”

    கிரிஸ்டொஃபர் ஜாய்ஸ் [Christopher Joyce, National Public Radio (March 24, 2006)]

    Pollution groups

    “55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தில் தீவிரச் சூடேற்றம் உண்டாகி மீதேன் வாயு பேரளவில் வெளியேறி பல ஆழ்கடல் உயிரினம் அழிந்து போயின என்றும், அதே சமயத்தில் தளவியல் விலங்கினங்கள் பெருகி வளர்ச்சி அடைந்தன என்றும் இன்றைய (நவம்பர் 19, 1999) விஞ்ஞான இதழ் ஒன்று கூறுகிறது.  அந்த மாதிரி வெப்ப யுகம் “சமீபத்திய பாலியோசீன் உச்ச வெப்பம்” (Latest Paleocene Thermal Maximum) என்று குறிக்கப்படுகிறது.  அது 10,000 – 20,000 ஆண்டுகளுக்கு இடையே ஒருமுறை வருகிறது.”

    ஜான் ரோச் [John Roach, Environmental News Network (Nov 19, 1999)]

    “மீதேன் வாயு வெளியேற்றத்துக்கும், வெப்பச் சூடு ஏற்றத்துக்கும் உள்ள உறவு கடற்தளப் படிகைகளை [Ocean Floor Sediments] ஆராய்ந்து கண்ட விளைவுகளை வைத்துத் தீர்மானிக்கப் பட்டது.  அதுவே வெப்ப ஏற்ற விதிக்கு முதல்தர ஆதாரச் சான்று.  வெப்ப ஏற்றம் கடற்படிகையைச் சூடாக்கி திட மீதேனை நீர்த்திடச் செய்து [Hydrated Soild Methane (CH4)] வாயுக் குமிழ்களாய்க் கொப்பளிக்க வைக்கிறது.  மீதேன் வாயு நீரில் கலந்துள்ள ஆக்ஸிஜெனுடன் சேர்ந்து ஏரிகளில் கரிமம் [Carbon] பிரிந்து கரிமச் சுற்றியக்கம் [ Global Exogenic Carbon Cycle] தொடர்கிறது.”

    டோரோதி பாக், ஆய்வாளர், கலி·போர்னியா பல்கலைக் கழகம்

    Global Warming Effects

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் [Al Gore, American Former Vice President (June 5, 2005)]

    Impacts of Global Warming

    What Global Warming does

    பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

    சூடேறும் பூகோளம் பற்றி அல் கோர்

    Global warming family tree

    பூகோளம் சூடேறும் என்றால் எதைக் குறிப்பிடுகிறோம் ?

    பூகோளம் என்று நாம் சொல்லும் போது, மண் தளத்துடன் பூமியைச் சுற்றி ஐந்து அல்லது பத்துமைல் உயரத்தில் வாயுக்கோளக் குடையாக நிலவி பூமியின் தட்ப, வெப்பம் நிலையாகப் பருவ காலங்களில் குறிப்பிட்ட உஷ்ண நீட்சியில் [Temperature Range] வைத்துக் கொள்ளும் வாயு மண்டலத்தையும் சேர்த்துக் கொள்கிறோம்.  அந்த மெல்லிய வாயு மண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலந்து நாசமாக்கினாலும், ஓஸோன் துளைகள் ஏற்பட்டுக் கந்தையானாலும், பூமியின் ஈர்ப்பாற்றல் மாறி வாயுக்கள் மறைந்து போனாலும் பூமியின் காலநிலை மாறி சூட்டுப் பிரளயம் நேர்ந்துவிடும்.  வாயு மண்டலம் மறைந்து போனால் நீர்வளம், நிலவளம், உயிர்வளம் யாவும் சிதைந்து, சீர்குலைந்து பூகோளம் செவ்வாய்க் கோள்போல் நீர்மை, ஆக்ஸிஜென், ஹைடிரஜன் இல்லாமல் பாலைவனமாய் வரண்டு போய்விடும் !  சூழ்வெளியில் சேமிப்பாகும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (கார்பன் டையாக்ஸைடு, மீதேன் போன்ற வாயுக்கள்) பரிதியின் வெப்பத்தை விழுங்கிப் பூகோளத்தின் உஷ்ணத்தை மிகையாக்குகின்றன.  ஓரளவு வெப்ப ஏற்றம் உயிரன வளர்ச்சிக்குத் தேவையே.  ஆயினும் நிலக்கரி, இயற்கை வாயு, ஆயில் போன்ற “புதைவு எருக்கள்” [Fossil Fuel] வன மரங்கள் எரிப்புகளால் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பேரளவில் சேமிப்பாகிப் பூகோள உஷ்ணம் விரைவாக ஏறுகிறது.

    Deaths due to Natural Disasters

    Fig 3 Gore's Presentation

    சமீபத்தில் வெளியான ஒரு விஞ்ஞான அறிக்கையில் மண்ணிலிருந்தும், 40,000 ஆண்டுகளாய்ச் சேமிப்பான பனிக்குவிப்பிலிருந்தும் மீதேன் வாயு பேரளவுக் கொள்ளளவில் வெளியேறுவதாகச் சூடேறும் பூகோள எச்சரிப்பாளர் எடுத்துக் கூறியுள்ளார்.  மீதேன் வாயுக் கசிவுகள் நிலக்கரி எரிசக்திப் புகைகளை விட 100 மடங்கு மிகையானவை என்று அறியப்படுகிறது.  பூகோளச் சூடேற்ற விளைவுகளை ஒப்பிட்டால் மீதேன் வாயுவின் தீமை கார்பன் டையாக்ஸைடை விட 23 மடங்கு பெரியது.  உலகில் பெரும்பான்மையான விஞ்ஞானிகள் சூடேறும் பூகோளத்தை மெய்யாகக் கருதி ஏற்றுக் கொண்டாலும், அம்மாறுதலை ஒப்புக்கொள்ளாத அறிஞரும், நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.  ஆனால் சூடேறிய பூகோளத்தால் மாறிப் போகும் காலநிலைகளும், அதனால் ஏற்படும் திடீர் விளைவுகளும் மெய்யாக உலக மக்களைப் பாதித்துக் கொண்டு வருவதை நாம் அடிக்கடிக் கேட்டு வருகிறோம்.

    Earth's Orbit change

    சூடேறும் பூகோள எச்சரிக்கைகள், மாறுதல்கள், இன்னல்கள் !

    பூகோளம் சூடேறுவதால் ஒவ்வோர் ஆண்டும் காலநிலைக் கோர விளைவுகள் மாறி மாறி விளைந்து வியப்புக்குள் நம்மை ஆழ்த்துகின்றன.  துருவப் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் ஏறுவதைக் காண்கிறோம்.  கடல் வெள்ளம் சூடேறி சூறாவளிகளும், சைக்குலோன்களும், ஹரிக்கேன்களும் எண்ணிக்கையில் அதிகமாகி, பலத்தில் அசுரத்தன மாகிக் கோடான கோடி உலக மக்களுக்குப் பேரின்னல்களை விளைவித்து வருகின்றன.  நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வரட்சியாகிப் பாலையாகிப் போய்விடுமா என்னும் பயம் வந்துவிட்டது.  மேலும் கீழ்க்காணும் நூதனக் காலநிலைக் கோர விளைவுகள் உலக மக்களைத் துன்புறுத்தி வருகின்றன !

    1.  கடந்த 30 ஆண்டுகளாய் உச்சக் கணிப்பு நிலை 4 & 5 ஹரிக்கேன்களின் [Hurricane Category: 4 & 5]   எண்ணிக்கை இரட்டித்துள்ளது.

    2.  கடந்த 10 ஆண்டுகளில் கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகிச் சரியும் நிகழ்ச்சிகள் இரட்டிப்பாக மாறி இருக்கின்றன.

    3.  குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.

    4.  7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.

    Fig 2 Milankovitch Cycles

    3.  குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.

    4.  7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.

    மேலும் தொடர்ந்து சூடேற்றம் மிகையாகச் ஏறிச் சென்றால், கீழ்க்காணும் பெருங் கேடுகள் பரவ வாய்ப்புகள் உண்டாகும்.

    1.  அடுத்த 25 ஆண்டுகளில் பூகோளச் சூடேற்றத்தால் விளையும் மக்களின் மரண எண்ணிக்கை இரட்டிப்பாகி ஆண்டுக்கு 300,000 நபராக விரிவடையும்.

    2.  கிரீன்லாந்து, அண்டார்க்டிகாவின் பனிக்குன்றுகள் உருகி பூகோளக் கடல் மட்டம் 20 அடிக்கும் மேலாக உயர்ந்து, கடற்கரை நிலப்பகுதிகள் உலகெங்கும் பேரளவில் பாதகம் அடையலாம்.

    3.  2050 ஆண்டு வேனிற் காலத்தில் வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் பனித்தளம் இல்லாமல் நீர்த்தளமாகி விடலாம்.

    Earth'a Axis wobbles

    Earth’s Axis Wobbles

    4.  2050 ஆண்டுக்குள் உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான உயிர் ஜீவிகள் [Species] பரம்பரையின்றி முற்றிலும் மரித்துப் போய்விடலாம்.

    5.  வெப்பக்கனற் புயலடிப்புகள் [Intensive Heat Waves] உக்கிரமுடன் மிக்க அளவில் அடிக்கடித் தாக்கலாம்.

    6.  நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, நிலவளம் சீர்குலைந்து வரட்சிகளும், காட்டுத் தீக்களும் அடிக்கடி உண்டாகலாம்.

    சூடேறும் பூகோளத்தில் எழுகின்ற இந்த பிரச்சனைகளை ஐயமின்றி நாம் ஒன்று கூடித் தீர்க்க முடியும்.  அவற்றைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கோர் கடமை நெறியாக உள்ளது.  நாம் தடுத்திடச் செய்யும் தனிப் பணிகள் சிறிதாயினும், மொத்தமாக ஒத்துழைத்து முடிக்கும் சாதனைகள் முடிவில் மிகப் பெரும் ஆக்க வினைகள் ஆகும்.  அவ்விதம் அனைவரும் ஒருங்கு கூடிப் பூகோளச் சூடேற்றத்தைத் தடுக்க முனையும் தருணம் எப்போது என்று நினைக்கிறீர்கள் ? இப்போதுதான் !

    Impacts

    (தொடரும்)

    தகவல்:

    1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]  (April 9, 2007)

    2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it”   By Al Core (2006)

    2(a)  The Assault on Reason  By Al Gore  (July 2007)

    3.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

    4.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

    5.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

    6.  The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)
    7.  Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)

    8. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)

    9. http://www.terradaily.com/reports/Ice_free_Arctic_winters_could_explain_amplified_warming_during_Pliocene_999.html  [July 31, 2013]

    10.  http://www.livescience.com/topics/global-warming/  [August 6, 2013]

    11. http://www.nrdc.org/globalwarming/  [August 14, 2013]

    12.  http://en.wikipedia.org/wiki/Global_warming  [August 15, 2013]

    13.  http://www.answers.com/topic/global-warming

    14.   http://en.wikipedia.org/wiki/Effects_of_global_warming   [August 9, 2013]

    15. http://www.terradaily.com/reports/Seasonal_CO2_range_expanding_as_more_is_added_to_Earths_atmosphere_999.html [August 14, 2013]

    16. http://www.terradaily.com/reports/Greenland_ice_is_melting_also_from_below_999.html  [August 14, 2013]

    17. http://www.planetseed.com/relatedarticle/sun-and-earth-and-temperature-change

    18. https://en.wikipedia.org/wiki/Solar_activity_and_climate  [October 1, 2015]

    19. http://www.bgs.ac.uk/discoveringGeology/climateChange/general/causes.html?src=topNav

    20. http://www.spacedaily.com/reports/New_research_shows_Earths_tilt_influences_climate_change_999.html  [December 16, 2015]

    ++++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (December 24, 2015)

    https://jayabarathan.wordpress.com/

    Earth HAS shiften on it’s Axis – PROOF!!! (Edited)

    Preview YouTube video Mechanism of The Seasons

    Mechanism of The Seasons

    Preview YouTube video Effect of Earth’s Tilt on Weather

    Effect of Earth’s Tilt on Weather

    Preview YouTube video 5 – 4 Milankovitch Cycle

    5 – 4 Milankovitch Cycle

    Preview YouTube video FIDO BOXING WEEK Preroll 15s ENG

    FIDO BOXING WEEK Preroll 15s ENG

    Preview YouTube video Milankovitch Cycles Precession and Obliquity

    Milankovitch Cycles Precession and Obliquity

    Preview YouTube video Global Warming or a New Ice Age: Documentary Film

    Global Warming or a New Ice Age: Documentary Film

    Preview YouTube video PBS Global Warming The Signs and the Science

    PBS Global Warming The Signs and the Science

    Preview YouTube video The Scientific Case for Urgent Action to Limit Climate Change

    The Scientific Case for Urgent Action to Limit Climate Change

    Preview YouTube video Climate Change Politics and the Economy: Rhetoric v. Reality

    Climate Change Politics and the Economy: Rhetoric v. Reality
    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (179)

    — சக்திதாசன்.

    christmas

    அன்பினிய தமிழ் நெஞ்சங்களே!

    உங்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்.

    “அன்பு” எனும் மூன்றெழுத்துக்கு இருக்கும் சக்தி உலகில் வேறு எதற்கும் இருக்க முடியாது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

    அந்த அன்பின் ஆழத்தை எமக்கு உணர வைத்தவர்கள் ஆயிரமாயிரம். அன்பின் அடித்தளத்தில் நடத்தும் வாழ்க்கையில் தோல்வி இல்லை என்பதைப் பலவகைகளில் பலவழிகளில் பலர் உணர்த்திச் சென்றுள்ளார்கள்.

    மனிதரை, மனிதர் மனிதராக மதித்து மனிதாபிமானத்தின் அடிப்படையில் செயற்படுவதே அன்பின் சாரமாகும். இனம், மதம், மொழி எனும் பாகுபாட்டை மறந்து இப்பூமிப் பந்தின் மீது உருண்டு கொண்டிருக்கும் ஜீவராசிகளில் ஒரு அங்கமாக இருக்கும் நாம் அனைவரும் ஒருதாய் மக்கள் எனும் உணர்வே அன்பினை எமக்கு வலியுறுத்தி நிற்கும் உணர்வாகும்.

    இவ்வுலகில் நாம் விரும்பியோ விரும்பாமலோ மதம், மொழி என்பன எம்முள் புகுந்து எம்மில் பலரை வழிநடத்துவதே உண்மை.

    மனிதருக்கு வாழ்வின் நன்னெறிகளைப் புகட்டி அவர்களை நல்வழி நடக்கப் பண்ணுவதே இம்மதங்களின் நோக்கமாகவிருந்தது. இம்மதங்களின் மீது மக்களுக்குண்டான மதிப்பினை உபயோகித்து தமது நலன்களைப் பெருக்கிக் கொள்ளும் முறையற்றோரின் செய்கைகளுக்கு இம்மதங்களோ அவற்றின் வழி நடக்கும் நன்மக்களோ பொறுப்பாக மாட்டார்.

    இம்மதங்களின் ஆதிக்கத்தைத் தவிர்த்து வாழ்வது இக்கட்டான ஒரு செயல் எனும்போது அனைத்து மதமும் இயைந்து செல்வது எப்படி சாத்தியம் ? எனும் கேள்வி எழுவது இயற்கையே !

    அதற்காகத்தான் அனைவரும் தம்மதத்தினைப் போலவே அடுத்தவரும் தமது மதங்களை மதிக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவற்றிற்குரிய கெளரவங்களைக் கொடுத்து வாழ்வதே அமைதியான வாழ்விற்கு வழிவகுக்கும்.

    எதற்காக இந்த விளக்கங்கள்? வியாக்கியானங்கள்? என்கிறீர்களா!

    வேறொன்றுமில்லை. இது கிறிஸ்துமஸ் வாரமில்லையா? கிறிஸ்தவ மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட இங்கிலாந்து நாட்டில் நாற்பது வருடங்களைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எனது வாழ்விலும் கிறிஸ்துமஸ் கொடுக்கும் தாக்கங்கள் உண்டு.

    நான் இந்த நாட்டிற்கு வந்த ஆரம்பக் காலங்களில் மாணவனாக பகுதிநேரப் பணிகள் ஆற்றிக் கொண்டிருந்த நேரம். ஒரு இந்துவான எனக்கு இக்கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தை ஆவலோடு எதிர்பார்ப்பதற்கு வேறொரு காரணம் உண்டு. அதாவது இக்கிறிஸ்துமஸ் தினமும் அதற்கு அடுத்த நாளான பாக்ஸிங் டே என அழைக்கப்படும் நாளும் விடுமுறை தினங்களாகும். பகுதிநேரப் பணிபுரியும் எமக்கு இத்தினங்களில் பணிபுரிந்தால் இரட்டிப்பு ஊதியம் கிடைக்கும்.

    எதிர்பார்ப்பு? என்ன !

    ஆனால் இக்கிறிஸ்துமஸ் தேவகுமாரன் இயேசுநாதரின் பிறப்பினைக் கொண்டாடும் நாள் என்பதே இப்பண்டிகையின் முக்கியத்துவமாகிறது. அன்பின் மறு உருவம் இயேசுநாதர். உலக மக்களின் இரட்சிப்புக்காகத் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்து உலக நன்மைக்கு முன்னால் தம்முடைய வாழ்வு பெரிதல்ல எனும் செயலினைப் புரிந்து தியாகத் தீபமானார்.

    இக்கிறிஸ்துமஸ் பண்டிகையை இங்கிலாந்தில் வாழும் பல புலம்பெயர்ந்த இந்துக்களும், குறிப்பாகத் தமிழர்களும் கோலாகலமாகக் கொண்டாடுவது மதங்களுக்கிடையில் உள்ள புரிந்துணர்வை வலியுறுத்தி நிற்கிறது.

    இவ்வன்பின் அடையாளமாகவே ஒருவருக்கொருவர் பரிசுகளைக் கொடுத்து மகிழும் ஒரு வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக வீடுகளில் கிறிஸ்துமஸ் மரமொன்றை வைத்து அதனை அழகு படுத்தி அலங்கரிக்கிறார்கள். அவரவருக்குத் தரப்படும் பரிசுகளை இம்மரத்தின் கீழ் அடுக்கி வைத்து கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ம் திகதியே இப்பரிசினைத் திறந்து பார்க்கிறார்கள். இப்பரிசுகள் அன்பின் அடையாளமாகத்தான் கொடுக்கப்படுவது. ஆனால், இப்போது மிக விலையுயர்ந்த பரிசுப்பொருட்களில் அனைவரின் நாட்டமும் செல்வது போல் தென்படுகிறது. இது ஒரு காலக்கட்டாய நிகழ்வாகக் கூட இருக்கலாம்.

    தெருவெல்லாம் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது, இரண்டு நாட்களுக்கு முன்னால் நானும் எனது மனைவியும் டவுன் செண்ட்டருக்குச் சென்றிருந்தோம். அப்பப்பா ! திருவிழா போன்றிருந்தது. தெருவில் செல்லும் அனைவரின் கைகளிலும் பைகள் தொங்கிக் கொண்டிருந்தன. கடைகளில் கல்லாப்பெட்டிகள் கொழுத்துச் சிரித்துக் கொண்டிருந்தன.

    அது மட்டுமின்றி கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஆஃபிஸ்களில் பணிபுரிவோர் தத்தமது சகஊழியர்களுடன் விருந்துபசார விடுதிகளில் விருந்து, நடனங்கள் என்று பல நிகழ்வுகளில் கலந்து கொள்வதும், புலம்பெயர் சமூகத்தினரால் நடாத்தப்படும் அவர்கள் கல்லூரி பழைய மாணவர் சங்கங்களினால் நடத்தப்படும் டின்னர் & டான்ஸ் எனும் நிகழ்வுகள் ஒருபுறம்.

    அதுதவிர இப்பண்டிகையின் போது உறவினர்கள் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் விருந்துக்குச் செல்வதும் வழக்கமாகி விட்டது. கடந்த சனிக்கிழமையே கிறிஸ்துமஸ் நாளுக்கு முன்னதாக வரும் கடைசிச் சனிக்கிழமை அன்றுதான் இவ்வருடத்திலேயே கடைகளில் நடந்த வியாபார வசூலில் அதிகூடிய வசூலை ஈட்டிய நாள் என்று கணிக்கப்படுகிறது,

    வழமையாகக் காலையிலும், மாலையிலும் பள்ளிச் சிறார்களினால் நிறைந்து காணப்படும் தெருக்கள் பாடசாலை விடுமுறையினால் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

    இயேசு கிறிஸ்துவினால் அன்பிற்குக் கொடுக்கப்பட்ட மகத்துவம் இப்பண்டிகையின் போது முக்கியத்துவம் பெறுகிறதா? இல்லை வெறும் கேளிக்கைகளுக்காகவே இந்நாள் முக்கியத்துவம் பெறுகிறதா? எனும் கேள்வி எழாமல் இல்லை.

    அன்பு வாசக நெஞ்சங்கள் அனைத்திற்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

    அன்பெனும் மூன்றெழுத்துடன்
    இயேசு எனும் மூன்றெழுத்து
    இணைந்து ஒளிர்ந்திடும்
    இன்பத் திருநாள் கிறிஸ்துமஸ்

    இல்லாதோர் இல்லங்களிலும்
    இல்லையெனால் நிறைந்திருப்பது
    இகத்தினில் அன்பு ஒன்றேதான்

    அடுத்தவர் நலத்திற்காய் தலையில்
    முட்கிரீடம் சுமந்தவர் இயேசுபிரான்
    இறவாக் காவியம் எனக் கவியரசர்
    இயேசு காவியம் வடித்துத் தந்தார்

    மானிடர் பாவத்தைச் சுமக்கவே மேரியின்
    மைந்தர் சுமந்தார் சிலுவையைத் தோளில்
    மனித உலகின் சுயநலம் தன்னை
    மரித்திடவே மடிந்தான் தேவகுமாரன்

    கிறிஸ்து காட்டிய கருணை வழியில்
    சுரந்திடும் அன்பெனும் இன்ப நதியில்
    இனிய அன்பர்கள் அனைவரும் மகிழ்வாக
    வாழ்ந்திட இனிய நத்தார் வாழ்த்துக்கள்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இலக்கியப் பணிகள் – 3

    — முனைவர்   துரை. குணசேகரன்.

     

    மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

    கடியேறு மலரோனைக் கடுஞ்சிறையில் வைத்துப்
    படியாதி எவ்வுலகும் படைத்தருளும் பிரானை
    முடியாத முதலோனை மூவர் பெருமானை
    வடிவேலன் தனைப்பேசா வாயென்ன வாயே
    வள்ளி மணாளனைப்பேசா, வாயென்ன வாயே…

    மகாவித்துவானின் 200ஆம் பிறந்த நாளை முன்னிட்டு அண்மையில் மயிலாடுதுறை மன்னன்பந்தல் ஏ.வி.சி.கல்லூரி தமிழாய்வுத்துறை இக்கட்டுரையாளரின் பதிப்பில் ‘மாண்புகள் மிகுந்த மயிலாடுதுறை’, என்னும் நூல், கல்லூரி முதல்வர் ‘முத்தமிழ்வித்தகர்’ முனைவர் முத்து.வரதராசன் அவர்களின் ‘பெண்ணியம் போற்றுவோம்’, என்னும் கவிதை நூல், எங்கள் துறைப்பேராசிரியர்கள் முனைவர் இரா.மஞ்சளா, முனைவர் ந.சரவணன் ஆகியோரின் ‘அ.வ.அ.கல்லூரித்தமிழாய்வுத்துறையை வளர்த்தெடுத்த சான்றோர்கள்’ என்னும் நுல் ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது. இம்மூன்றுநூல்களும் மகாவித்துவானை ஆதரித்த திருவாவடுதுறை ஆதீனத்திற்குப்பெருமைசேர்க்கும் வகையில், தற்போதைய திருக்கையிலாய பரம்பரை 24ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளின் திருக்கரங்களால் வெளியிடப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    மகாவித்துவானின் மகிமை:-
    கண்டதேவிப்புராண அரங்கேற்றத்திற்காக பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள தேவிக்கோட்டை (தற்போது தேவக்கோட்டை) நகரவைசியர் பெருமக்கள் மகாவித்துவான் அவர்களை மாணவர்கள், வேலைக்காரர்களோடு திருவாவடுதுறையிலிருந்து அழைத்துச்சென்றனர். பட்டுக்கோட்டைக்கு அருகில் சென்றபோது இருள்சூழ்ந்ததால் அங்கிருந்த ஒரு குடிசைவீட்டில் சென்று விசாரிக்கின்றனர். அவ்வில்லத்தில் திண்ணையில் படுத்திருந்த ஒரு பார்ப்பனப்பெண் ஆடவர்கள் பலரையும் பார்த்தவுடன் உள்ளே சென்று இல்லத்தைத்தாழிட்டுக்கொண்டார். நீண்ட நேரம் கழித்து அவளின் கணவன் உணவுப்பொருள்முடிந்த ஒரு மூட்டையுடன் வந்து கதவைத்தட்டினான். வெளியில் படுத்திருந்த மகாவித்துவானின் மாணவர்கள் அவரை அழைக்கவே, மறுத்து கதவைத்திறந்து தாழிட்டுப்படுத்துக்கொண்டார். படுத்தவர் தமக்கு இரண்டு நாட்களுக்கு உணவுக்குப்பஞ்சமில்லை என்னும் மகிழ்வில் ஒரு பாடலை உரக்கப் பாடிக்கொண்டே படுத்துக்கொண்டார்.

    தமிழ்ப்பாடலைக் கேட்ட மகாவித்துவான் அவரை அழைத்து தம் எதிரே பாடச்செய்தார். அப்போது அவர் தந்தை ஒரு வித்துவான் என்றும் அவர் வைத்திருந்த நூல்களை எல்லாம் வாங்கிச்சென்றவர்கள் மீண்டும் தரவில்லை என்றும் வருத்தப்படார். தமக்கு உண்மையாகப்பாடஞ்சொல்ல எவருமிலர். வறுமையும் அதற்கு இடந்தரவில்லை. மனைவியுடன், மக்களும் பிறந்துவிட்டனர் என்று ஆதங்கப்பட்டவர்,

    “மாயூரத்தில் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் என்று ஒரு சிறந்த தமிழ்வித்துவான் இருக்கிறாராம். ஏழைகளாயுள்ளவர்களுக்கு அன்னமும் வஸ்திரமும் அளித்து அவர்களை நன்றாகப்படிப்பித்து அனுப்புவது அந்தமகானுக்கு வழக்கமாம். அவரிடத்தில் சிலமாதம் படித்தாலும் படிப்பவர்கள் கல்விப்பெருக்கத்தை அடைவார்கள் என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட மகோபகாரியைப்போல் இக்கலிகாலத்தில் யார் இருக்கிறார்? அந்தப்புண்ணியவானிடத்தில் போய்ப்பழக அவா இருக்கிறது, அதற்கும் முடியவில்லை”
    என்று பலவாறாகப்புலம்புகிறார். மகாவித்துவானின் மாணவர்களில் ஒருவர் அருகில்வந்து முதுகைத்தட்டி, ‘இங்கே படுத்திருக்கும் இவர்கள்தாம் நீங்கள் குறிப்பிடும் அந்த மாமனிதர்’ என்று சொன்னதுதான் தாமதம், அவர் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியால் ஆடிப்பாடியதற்கு அளவே இல்லை. விருந்துக்கு ஏற்பாடு செய்ய ஓடினார். தடுத்து அனைத்தையும் கொடுத்து உணவுக்கு ஏற்பாடு செய்யச்சொன்னார்கள்.

    காலை எழுந்தும் உணவுஉண்டுவிட்டு இல்லத்திற்குத் தேவையான பொருட்களைத்தந்துவிட்டு, பிராமணரின் விருப்பப்படி அவரையும் கண்டதேவிப்புராண அரங்கேற்றத்திற்கு அழைத்துச்சென்ற நிகழ்வினை உ.வே.சா. அழகுறப்பதிவு செய்கிறார். இதன்வழி மகாவித்துவான், ‘கொள்வோன் கொள்வகை அறிந்து கொடுக்கும்’ ஆசானாக மட்டுமன்றி, அவர்களின் உடல்நிலை, உளநிலை, இல்லநிலைகளையும் அறிந்து அவற்றிற்கேற்ப அளிக்கும் மாமனிதராகவும் விளங்கினார் என்பதும் தெளிவு.

    மாணவர் படை:-
    மகாவித்துவானிடம் பாடங்கேட்ட மாணவர்களில் குறிப்பிடத்தகுந்தோர் பலர் உள்ளனர். சாதி, சமயம் பாராது அனைவரையும் தம்முடைய பிள்ளைகளாக எண்ணிப்பாடம் நடத்தியவர். பூவாளூர் தியாகராச செட்டியார், அரண்வாயில் வேங்கடசுப்புப்பிள்ளை, திருவீழிமிழலை சாமிநாதக்கவிராயர், சுந்தரம்பிள்ளை, களத்தூர் வேதகிரியார், பங்களூர்த்தேவராசபிள்ளை, குலாம்காதர் நாவலர், சவராயலு நாயகர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ஆரியங்காவற்பிள்ளை, அழகிரிராஜு, வல்லம் கந்தசாமிப்பிள்ளை, மாயூரம் தெற்குவீதி முத்துப்பிள்ளை, சித்தர்காடு நமசிவாயபிள்ளை, சிவலிங்கவாத்தியார் சிங்கவனம் சுப்புபாரதி, திருப்பாம்புரம் சாமிநாதபிள்ளை, கர்ணம் வைத்தியலிங்கம்பிள்ளை, கூறைநாடு முத்துகுமாரபிள்ளை முத்தாள்புரம் கோபாலபிள்ளை, சுந்தரபெருமாள் கோவில் அண்ணாசாமி ஐயர், திருமங்கலக்குடி சேஷயங்கார், திருவாவடுதுறை வெங்குவையர், தர்மதானபுரம் கண்ணுவையர், மாயூரம்பட்டமங்கலம் சபாபதிஐயா, கூறைநாட்டுச் சாமிநாதவாத்தியார், கோபாலகிருஷ்ணபாரதி, சாத்தனூர் பஞ்சுவையர், திருத்தருப்பூண்டிபாகவதர், பெரியராமசாமி ஐயர், சின்ன ராமசாமி ஐயர், காரைக்கால் சவேரிநாதபிள்ளை, உ.வே. சாமிநாத ஐயர் உள்ளிட்ட பலருக்கும் ஆசிரியராக விளங்கியவர். இந்த மாணவர் படையினர் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கும் ஆற்றாலர்களாக விளங்கியவர்கள்.

    “ஊர்வந்து சேர்ந்தேன், என்றன் உளம்வந்து சேரக்காணேன்
    ஆர்வந்து சொலினும் கேளேன்: அதனை இங்கு அனுப்புவாயே”

    என்று திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தேசிகருக்கு மடல் எழுதியவர் கிறித்தவ அறிஞர் மாயூரம் வேதநாயகம்பிள்ளை. இவர் மகாவித்துவானின் மாணவர் மட்டுமன்றி அவருக்கு பலநேரங்களில் உதவியும்புரிந்த நண்பருமாவார். இவர்மீது குளத்தூர்க்கோவை பாடுமளவிற்கு மகாவித்துவானின் நட்பு இருந்தது. சீர்காழிக் கோவை பாடுதற்கும் அரங்கேற்றத்திற்கும் வழிவகுத்தவர்.

    எண்ணற்ற மாணவர்கள் பயின்றாலும் சிலர் அவருடைய நூல்களைப்பதிப்பு செய்துள்ளனர். அவருடைய முழுவரலாற்றையும் உலகமறிமச்செய்த மாணவர் தமிழ்தாத்தா உ.வே.சா.ஆவார். ஐந்தாண்டுகள் மகாவித்துவானிடம் பாடம் பயின்றவர். தொடக்கத்தில் சிற்றிலக்கியத்துறையில் இருந்தாலும், சேலம் இராமசாமி முதலியாரின் தொடர்பால் தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்கள் பலவற்றைப்பதிப்பு செய்யும் அளவிற்கு சிறந்தபதிப்பாசியராக விளங்கினார்.

    அதுவரை, ‘இறைச்சி’பற்றியும் ‘கள்’ குறித்தும் பாடப்பெற்ற இலக்கியங்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சங்கஇலக்கியம், காப்பியஇலக்கியங்களைத்தேடிக்கண்டு, பதிப்பித்ததுடன், தமிழைச்செவ்வியல்மொழி என்று அறிவிக்கவும் காரணமாக விளங்கியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் உ.வே.சாமிநாத ஐயராவார். இவர் மகாவித்துவான் பட்டறையில் பட்டைதீட்டப் பெற்ற தமிழ்வைரம்.

    புராணம் பாடும் புலவர்:-
    மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் படைப்புகளை, பலவகைகளில் பாகுபடுத்தலாம். அவர் படைப்புகளில் மிகுதியானவை தலபுராணங்களே.

    1. அம்பர்ப்புராணம்
    2. ஆற்றூர்ப்புராணம்
    3. உறையூர்ப்புராணம்
    4. கண்டதேவிப்புராணம்
    5. ஸ்ரீகாசிரகசியம்
    6. குறுக்கைப்புராணம்
    7. கோயிலூர்ப்புராணம்
    8. சூரை மாநகர்ப்புராணம்
    9. தணியூர்ப்புராணம்
    10. தியாகராசலீலை
    11. திருக்குடந்தைப்புராணம்
    12. திருத்துருத்திப்புராணம்
    13. திருநாகைக்காரோணப்புராணம்
    14. திருப்பெருந்துறைப்புராணம்
    15. திருமயிலைப்புராணம்
    16. திருவரன்குளப்புராணம்
    17. பட்டீச்சுரப்புராணம்
    18. மண்ணிப்படிக்கரைப்புராணம்
    19 .மாயூரப்புராணம்
    20. வானொளிபுற்றூப்புராணம்
    21. விளத்தொட்டிப்புராணம்
    22. வீரவனப்புராணம்
    என்று 22 புராணங்களைப்படைத்து ‘புராணம்பாடும்புலவர்’ என்னும் பெயர்பெற்றவர். இதுகுறித்து திருவாவடுதுறை ஆதீனகர்த்தாவாக விளங்கிய அருள்மிகு சுப்பிரமணிய தேசிகருக்கு, திருச்சிராப்பள்ளி ராவ்பகதூர் தி.பட்டாபிராமபிள்ளை,
    “சற்றொப்ப 30 ஆண்டுகளுக்கு முன்பு நானும் என் தம்பியும் நண்பர்கள் சிலருடன் திருஎவ்வூரிலிருந்து திருவெண்பாக்கம் என்னும் சிவதலத்திற்கு வழிபாட்டிற்காகச் சென்றுகொண்டிருந்தோம். அப்போது எதிரேவந்த எழுபது வயது மதிக்கத்தக்க வேளாளர் ஒருவரிடம் திருவெண்பாக்கம் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். பின்பு, ‘இத்தலத்திற்கு புராணம் உண்டா’? என்று வினவினேன். ‘புராணம் பாடுதற்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களா இருக்கிறார்கள்? அந்தமகான் இருந்தால் இதற்கும் ஒருபுராணம் பாடியிருப்பார்” என்றார். அந்தச்சொற்கள் என் அகக்கண்ணின்முன் பிள்ளையர்களுடைய திருவுருவத்தையும் செயல்களையும் தோற்றச்செய்தன; நெஞ்சம் உருகியது. வந்த அன்பர்களிடம், “ஜன சஞ்சாரமற்ற இந்தக்காட்டிலேகூடபிள்ளையவர்களுடையபுகழ் பரவியிருக்கிறது பார்த்தீர்களா! என்று சொன்னேன்” என்று குறிப்பிடுகின்றார்.

    இது மகாவித்துவானின் ‘புராணம்பாடும்’ புலமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. மகாவித்துவான் தாம் கண்டு, கேட்டு அறிந்த செய்திகளை தம்முடைய படைப்பில் உரியவிடங்களில் சேர்ப்பார். திருவாவடுதுறை மடத்தையும் அதன் குருமூர்த்தியையும் உரியவிடங்களில் பாராட்டத்தயங்கமாட்டார்.

    ஒன்றைப்படிக்குங்காலத்தில் ஊன்றிப்படித்தலும் உருகவைத்தலும் மகாவித்துவானுக்கு கைவந்தகலை. ஒருமுறை காஞ்சிபுராணத்தின் இரண்டாம் கண்டத்திலுள்ள ஒரு பகுதியைப்படித்து, அதன்பாலுள்ள சொற்சுவை பொருட்சுவைகளை நுகர்ந்து இன்புற்றார். படைத்த கச்சியப்ப முனிவரின் அருமை பெருமைகளை நினைந்து கண்ணீர்விட்டும் அதனை ஆடையால் துடைத்தும் படித்துக்கொண்டேயிருந்தாராம். இந்நிகழ்வு நடந்தது மாணவர் சிதம்பரம்பிள்ளையின் இல்லத்தில் மாணவர்களுக்கு பாடம்சொல்லி முடித்தபின் நள்ளிரவில் நடந்தது. இதனை, அயலித்தே உறங்கிக்கொண்டிருந்த பிரபு ஒருவர் சாளரம் வழியாகப்பார்த்துவிட்டு, எழுந்து வந்து அவர் கையிலிருந்த புத்தகத்தை வெடுக்கென்று பிடிங்கி எறிந்துவிட்டு, ‘ஐயா நீங்கள் வாசித்ததுபோதும் நிறுத்துங்கள். கவலைகள் ஏதுமிருந்தால் சொல்லிவிடுங்கள். சிதம்பரம்பிள்ளை போன்றவர்கள் இருக்கும்பொழுது எதற்காகக்கவலைப்படுகிறீர்கள்?’ என்று வருந்திக்கேட்டாராம் இந்த அழுகை ஊன்றிப்படிப்பதனால் வந்தது என்றோ, படிப்பதால் அவ்வாறு அழுகைவரும் என்றோ அறியாதவர் அவர்.

    தங்கள் ஊர் குறித்து, தலபுராணங்கள் பாடப்படுவதை மக்கள் பெருமையாக நினைப்பர். தலபுராணம் பாடுவதற்கு அவ்வூர்,
    1. பாடல்பெற்ற இடமாக இருத்தல்
    2. அற்புதங்கள் நிகழ்த்தப்பெற்றவையாக இருத்தல்
    3. முக்தி பெறும் தலங்களில் ஒன்றாக இருத்தல்
    4. தேவர்கள் வழிபட்ட இடம் என்னும் நம்பிக்கை
    5. சித்தர்கள் வாழ்ந்த தலம்
    6. புராணக்கதைகளில் இடம் பெற்றிருத்தல்
    என்பனவற்றில் பெரும்பான்மையைக்கொண்ட இடமாக இருத்தல் வேண்டும்.

    படித்தல், பாடம் சொல்லல், நூல்கள் யாத்தல், சிறப்புப்பாயிரம் அளித்தல், நூல்களைப்பதிப்பித்தல், நூல்களுக்கு உரைவழங்கல் என்பனவற்றை தம்வாழ்வியல் பணிகளாகக்கொண்டவர் மகாவித்துவான் அவர்கள். தாம் வாழும் காலம்வரை தலபுராணங்கள் பாடப்பெறாத, அல்லது வடமொழியில் பாடப்பட்டும் தமிழில் இல்லாத தலத்தில் வாழுவோர், மகாவித்துவானை அழைத்துச்சென்று பாடச்சொல்லி மகிழ்ந்தோர் பல்லோர். அவ்வகையில் தமிழில் மிகுதியான தலபுராணம் பாடிய பெருமைக்குறியவராக அவர் கருதப்பட்டார்.

    மகாவித்துவான்பாடிய தலபுராணங்களில் மாயூரப்புராணமும், திருநாகைக் காரோணப்புராணமும் பெருங்காப்பியங்களாக எண்ணத்தக்கவை. மயிலாடுதுறை அமைந்திருக்கும் சோழநாட்டின் பெருமைகுறித்துக்கூறவந்த மகாவித்துவான்,

    “பூவினூர் பதுமம் போலும் புருடருள் திருமால் போலும்
    காவினுள் கற்பம் போலும் கலைகளுள் ஞானம் போலும்
    ஆவினுள் காரான் போலும் அறத்தினுள் அறமே போலும்
    நாவிலுண் மெய்நாப் போலும் நாட்டினுள் சோழநாடு”

    என்று மயூரப்புராணத்தின்வழி உணர்த்துகின்றார். அவ்வாறு விளங்கும் சோழநாட்டில்,

    “பாங்கு சேர்தவ முடையரே வசித்திடு பண்பால்
    தாங்கு வார்சடைப் பிரானுமை யொடுமமர் தகவால்
    வீங்கு பேரொளி யாவழியா தமர் விறலால்
    ஓங்கு வான்சிவ லோகமே கௌரி மாயூரம்”

    என்று சிவலோகத்திற்குச் சமமாக மயிலாடுதுறை விளங்குகின்றது என்கிறார்.

    மகாவித்துவான் படித்தவாரே, படைப்புகளைப்படைக்கவும் தெரிந்தவர். உறையூர்ப்புராண அரங்கேற்றம் தொடங்கியது. நாட்டுச்சிறப்பு, நகரச்சிறப்பு என்று அவரவர்களுக்குப்பிடித்த இடங்களைமனம் உருகிக்கேட்கின்றனர். நகரப்படத்தின் ஓரிடத்தில் கூறப்பட்டுள்ள வருணணையை நெஞ்சுருகி கேட்டுவந்த அந்தக்கோவிலின் தருமகர்த்தா கண்ணீர்விட்டுக்கொண்டே கேட்டாராம். இதுபோன்று மகாவித்துவானின் புராணங்களில் பல உள்ளன.

    அந்தாதி:-
    மகாவித்துவான் பாடிய படைப்புகளில் எண்ணிக்கையில் இரண்டாமிடத்தில் இருக்கும் இலக்கியம் அந்தாதியாகும். இதில் நான்கு வகை அந்தாதிகளைப் பாடியுள்ளார்.

    1) பதிற்றுப்பத்தந்தாதி (6)
    அ. தண்டபாணி பதிற்றுப்பத்தந்தாதி
    ஆ. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பதிற்றுப்பத்தந்தாதி
    இ. திருவூறைப் பதிற்றுப்பத்தந்தாதி
    ஈ. பழசைப்பதிற்றுப்பத்தந்தாதி (பட்டீசுவரம்)
    உ. பாலைவனப்பதிற்றுப்பத்தந்தாதி
    ஊ. பூவானூற்றுப் பதிற்றுப்பதந்தாதி
    என்னும் ஆறு பதிற்றுப்பத்து அந்தாதிகளைப்பாடியவர்.

    2) திரிபந்தாதி (4)
    அ. குடந்தைத்திரிபந்தாதி
    ஆ. திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி
    இ. திருவானைக்காத்திரிபந்தாதி
    ஈ. திருவிடைமருதூர் திரிபந்தாதி
    என்று நான்கு திரிபு அந்தாதிகளைப் பாடியுள்ளார்.

    3) யமகவந்தாதி (4)
    அ. திருச்சிராப்பள்ளி யமவஅந்தாதி
    ஆ. திருவாவடுதுறை யமவஅந்தாதி
    இ. தில்லையமகவந்தாதி
    ஈ. துறைசை யமக அந்தாதி
    என்று நான்கு யமக அந்தாதிகளைப் பாடியுள்ளார்.

    4)வெண்பாவந்தாதி (1)
    (அ) எறும்பீச்சரம் வெண்பாவந்தாதி
    என்று ஓர் அந்தாதியை வெண்பா வடிவில் பாடியுள்ளார். இவ்வகையில் 15 அந்தாதிகளைப் பாடியிருப்பன தெளிவாகிறது.

    இவற்றுள் திருவானைக்காத்திரிபந்தாதி 26ஆம் வயதில் எழுதியது. திரிபந்தாதிக்குப்பின் யமகவந்தாதிகளைப் படைக்கத்தொடங்கினார். முதலில் தாம் வாழ்ந்துவந்த திரிசிராமலை குறித்த அந்தாதியினை விநாயகக்கடவுள் தொடங்கி, சேக்கிழார் வரை பதினொருவரை வாழ்த்தி, அவையடக்கமாக ஒரு செய்யுளையும் என பன்னிரு செய்யுட்களையும் புதுமையான முறையில் படைத்திருப்பார். இது வேறு அந்தாதிகளில் இல்லாதமுறை. ‘திருவ10றைப்பதிற்றுப்பந்தாதியில்’ படைப்புப் பயணத்தைத்தொடங்கிய பிள்ளையவர்கள், ஹதிருவிடைமருதூர் திரிபந்தாதியில் நிறைவு செய்கிறார்.

    பிள்ளைத்தமிழ்:-
    புராணங்கள் அந்தாதிகளுக்கு, அடுத்தநிலையில் பிள்ளைத்தமிழில் பாடியவர் மகாவித்துவான்.
    1. அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ்
    2. காந்திமதியம்மைப்பிள்ளைத்தமிழ்
    3. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
    4. திருவிடைக்கழி முருகர்பிள்ளைத்தமிழ்
    5. திருவெண்ணீற்றுமைபிள்ளைத்தமிழ்
    6. பாகம்பிரியாள்பிள்ளைத்தமிழ்
    7. பிரமவித்தியாநாயகிபிள்ளைத்தமிழ்
    8. பெருந்திருப்பிராட்டிபிள்ளைத்தமிழ்
    9. மங்களாம்பிகைபிள்ளைத்தமிழ்
    10. அம்பலவாணதேசிகர்பிள்ளைத்தமிழ்
    என்பன அவை.
    பிள்ளைத்தமிழ் பத்தில் ஏழு அம்பிகை மீது பாடப்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இலக்குமணப்பிள்ளை என்பாரின் வேண்டுகோளுக்கிணங்க இயற்றிய முதல் பிள்ளைத்தமிழ் அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழாகும். ‘தாங்கற்ற நூலளவேயாகுமாம் நுண்ணறிவு’ என்பதற்கேற்ப மகாவித்துவான் கற்ற பலநூல்களின் கருத்துகள், கற்பனைகள் மலிந்துள்ள நூல். இந்நூலினால் இவருக்கு உண்டான புகழுக்கு எல்லையே இல்லை என்பார்கள். இதுகுறித்து உ.வே.சாமிநாதய்யர், “திரிபந்தாதிகளில் தளிர்த்து, திரிசிரபுர யமகவந்தாதியில் அரும்பி, அகிலாண்ட நாயகி மாலையிற் போதாகி, இப்புலவர்சிகாமணியின் கவித்திறனும் புகழும் அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழில் மலர்ந்து நின்றன” என்று குறிப்பிடுவதன்வழி இப்பிள்ளைத்தமிழின் பெருமையை உணர்ந்துகொள்ளலாம்.

    தொடக்கத்தில் இந்நூலைப்பதிப்பிக்க இயலாமல் அம்முயற்சியைக்கைவிட்டார் மகாவித்துவான். பிறகு 1842இல் திரிசிரபுரம் இலக்குணப்பிள்ளையின் பொருளுதவியுடன் பொன்னம்பல முதலியார், மகாலிங்கையர் உள்ளிட்ட பதினைந்து அறிஞர்களின் சிறப்புப்பாயிரங்களுடன் வெளிவந்தது.

    மகாவித்துவானின் அறுபதாண்டு நிறைவில் பாடியது சேக்கிழார் பிள்ளைத்தமிழாகும். முதல் பிள்ளைத்தமிழுக்குக்கிடைத்த மதிப்பும் மரியாதையும் கடந்து இப்பிள்ளைத் தமிழுக்குக் கிடைத்தது. அனைவரின் பாராட்டையும் பெற்ற நூல்.

    ‘பரவுசீர் உலகலொம் விரவு சேவையர் பிரான்’ என்றும்
    ‘சகலகலா பண்டித தெய்வச் சைவா’, என்றும்
    ‘சைவப் பயிர் தழையத்தழையும் புயல்’, என்றும்
    “பக்திச்சுவை நனி சொட்டச்சொட்டப் பாடிய கவிவலவ”என்றும்
    பெரியபுராணம் பாடிய சேக்கிழாரைப் பலவாறாகப் பாராட்டும் மகாவித்துவானின் பாராட்டு, அவருக்கும் பொருந்தும்.

    கோவை:-
    ‘பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’
    என்னும் தொடர் மாணிக்கவாசகர் வாழ்வில் நடந்தது. மகாவித்துவான் படைப்புகளில் சிறப்பிடம் பெறுவன கோவைகளாகும். இவ்வகையில் மூன்று கோவைகளைப்படைத்துள்ளார் அவர்.
    1. சீர்காழிக்கோவை
    2. குளர்த்தூர்க்கோவை
    3. வியாசைக்கோவை
    என்பன அவை.

    திருவாளர் சபாபதி முதலியாரின் வேண்டுகோளுக்கேற்ப இயற்றப்பட்டதுதான் வியாசைக்கோவை. மாயூரம் வேதநாயகம் பிள்ளைமீது இயற்றப்பட்ட குளத்தூர்க்கோவையின் சில செய்யுட்களைக் கேட்ட அவர், விநாயக முதலியார் மீதும் ஐந்திணைக் கோவையொன்று செய்யவேண்டும் என்று வற்புறுத்தினாராம். அதற்கேற்ப நூறு செய்யுட்களைப்பாடினார். எஞ்சியவற்றை திரிசிரபுரம்போய் முடித்தனுப்புவதாக உறுதி கூறினார். ஆனால் அவற்றை அவரின் கட்டளைப்படி சி.தியாகராச செட்டியாரால் செய்யப்பெற்றதாம். இது தொடர்பான ஒரு நிகழ்வை உ.வே.சா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்;

    தியாகராச செட்டியாரின் உபகாரச்சம்பளம் பெற்றுக்கொண்டு உறையூலிருந்தபோது அவரைப்பார்க்கச்சென்றேன். அப்போது, ‘ஐயா அவர்களும் நீங்களும் இயற்றிய வியாசைக்கோவையைப் பார்த்ததில்லை; தங்களிடம் உண்டோ, எனக் கேட்க, ‘என்னிடம் ஓர் அச்சுப்படியே உள்ளது. அதனைத்தர மனம் இடந்தரவில்லை’ என்றாராம். ‘அதனைக்கொடுத்தால் படித்துவிட்டுத்தந்துவிடுவேன்’ என்று கூற, அதனைக் கொண்டு வந்து கொடுத்தாராம். ஒருநாள் காலை தொடங்கி அதனைப்படித்துப்பொருள் கேட்டு வருகையில், 100 பாடல்கள் வந்தவுடன், ‘இனி வாசிக்கவேண்டாம்; நிறுத்திவிட வேண்டும்’ என்றாராம். ஏன் என்று கேட்டபோது, “உங்களுக்கு என்னிடத்தும் என்பாட்டினிடத்தும் மிக்க மதிப்புண்டு. இதுகாறும் உள்ளவை ஐயா பாடியவை. அதற்கு மேல் உள்ளவை ஐயாவின் கட்டளையால் நான் பாடியவை. அவரின் இனிய பாடல்களைப்படித்தபின் என்னுடைய பாடல்களைப் படித்தால் என் யோக்கியதை வெட்டவெளியாய்விடும். அமிர்தத்தை உண்டவன் பிண்ணாக்கை உண்டதுபோல் இருக்கும்’’ என்று வருந்தினாராம். அப்போது அவர் கண்களில் நீர் பெருகிற்று என்று குறிப்பிடுகின்றார் தமிழ்தாத்தா உ.வே.சா மகாவித்துவானின் கவிச்சுவை அறிந்தோரில் முதன்மையானவர் தியாராசச் செட்டியார் என்பதும், அவரின் பெருந்தன்மையும் இதன் வழிப்புலனாகும்.

    மாயூரம் வேதநாயகம்பிள்ளையும் சிலசைவ அன்பர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க சீர்காழியில் எழுந்தருளியுள்ள பிரமபுரீசுவரர் மீது பாடப்பட்டதுதான் சீர்காழிக்கோவையாகும். கோவிலின் வலம்புரி மண்டபத்தில் அரங்கேற்றம் நடைபெற்றது. நாளும் வேதநாயகம்பிள்ளையும் உடன் இருந்து கேட்டுள்ளார்.

    சீர்காழிக்கோவை அரங்கேற்றத்தில் கிடைத்த தொகையில் தன்னுடைய மாணவர் ஒருவருக்குத்திருமணம் செய்துவைத்ததுடன், வீடு கட்டிக்கொடுத்தும் செலவுக்குப்பணம் கொடுத்துமுள்ளார். எஞ்சிய தொகையை, திரிசிரபுரத்தில் செலுத்தவேண்டிய கடனுக்காக அனுப்பியுமுள்ளார் என்பது வியக்கத்தக்க செய்தியாகும்.

    பிற சிற்றிலக்கியங்கள்:-
    மகாவித்துவான் கலம்பகம், உலா, குறவஞ்சி, சிலேடை வெண்பா உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களையும் படைத்துள்ளார்.

    கலம்பகம் (2)
    1. வாட்போக்கிக்கலம்பகம்
    2. அம்பலவாண தேசிகர் கலம்பகம்

    உலா (1)
    1. திருவிடைமருதூர் உலா

    தூது (2)
    1. சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடுதூது
    2. தானப்பா ஆசாரியார் தசவிடு தூது

    குறவஞ்சி (1)
    1. திருவிடைக்கழி குறவஞ்சி

    சிலேடைவெண்பா (1)
    1. திருவாவடுதுறை சிலேடை வெண்பா
    என்பன அவை.

    தவிர, பதிகம், அகவல், சரித்திரம், தனிப்பாடல்கள், விருத்தம், கதை, ஆனந்தக் களிப்பு போன்ற பலவற்றையும் படைத்துள்ளார்.

    பதிகம் (3)
    1. திருத்துருத்திக் கச்சி விநாயகப்பதிகம்
    2. திருத்துருத்திச்சுப்பிரமணிய சுவாமி பதிகம்
    3. திருவிடைமருதூர் தோத்திரப்பதிகம்

    அகவல் (1),
    1. திருவாவடுதுறை ஆதீனத்துக்குருபரம்பரை அகவல்

    சரித்திரம் (2)
    1. திருப்பனந்தாள் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் சரித்திரம்.
    2. திருவாவடுதுறை ஸ்ரீ சிவஞான யோகிகள் சரித்திரம்

    தனிப்பாடல் (1)
    1. திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகர் மீது பாடப்பெற்ற தனிப்பாடல்.

    விருத்தம் (1)
    1. திருமயிலைச் சித்திரச் சரித்திரப் புகழ்ச்சி மாலையைச் சார்ந்த தனிவிருத்தங்கள்

    கதை (1)
    1. மயிலிராவணன் கதை

    ஆனந்தக் களிப்பு (1)
    1. மதுரை திருஞானசம்பந்த சுவாமிகள் ஆனந்தக்களிப்பு

    இதுவரை, என்னுடைய உரையின்வழி குறிப்பிடப் பெற்ற படைப்புகள் 73. இவற்றுள் இன்று கிடைப்பவை, பதிப்பித்தும் கிடைக்காதவை, பதிப்பு செய்யாதவை என்னும் பல தரப்பட்ட வகையில் மகாவித்துவானின் படைப்புகள் உள்ளன. உரையில் இடம்பெறாத படைப்புகளும் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அனைத்தையும் ஒருமித்துப்பதிப்பித்து வெளியிட்டால் மகாவித்துவானினி பெருமை புலனாகும்.

    மேற்கூறிய படைப்புகள் அன்றி,
    1. கப்பற்பாட்டு
    2. குருபரம்பரை அகவல்
    3. பொன்னூசல்
    4. மங்களம்
    5. லாலி
    6. வாழ்த்து
    போன்றவற்றையும் குறிப்பிடும் உ.வே.சா. அவர்கள், தம்முடைய குருநாதராம் மகாவித்துவான் வேறு சில படைப்புகளையும் எழுதவேண்டும் என்று எண்ணியிருந்தார் என்று சுட்டுகின்றார். அவற்றுள் ஒன்று குறிஞ்சித்திணை வளங்கொழிக்கும் குற்றாலத்திற்கு ஒரு கோவை எழுதவேண்டும் என்பதாகும். அது என்ன காரணத்தினாலோ நிறைவேறவில்லை வருந்தி எழுதுகின்றார்.

    விரைந்து செய்யுளியற்றும் வல்லாளர்:-
    மகாவித்துவானின் மாணவர் கோபாலப்பிள்ளை என்பவர் விரைந்து எழுதுவதில் வல்லவர். இதனால் செருக்குற்றிருந்தார். மயிலாடுதுறையில் மயூரநாதர் தெற்குவீதியில் ஆசிரியர் இல்லத்தில் தங்கியிருந்தபோது, ஐயா, ‘என்கை வலிக்குமாறு செய்யுள் செய்வதில்லையே’ என்று உடன்படிக்கும் மாணவர்களிடத்துச்சொல்ல, மகாவித்துவான் காதில் விழுந்து விட்டது.

    சில நாள் கழித்து சாய்வு நாற்காலியில் அமர்ந்து தாம்பாடி வந்த காரோணப் புராணத்தில் சுந்தரவிடங்கப்படலத்தில் கற்பனை நிறைந்த பாடல்களைச்சொல்லத் தொடங்கினார். அப்பாடல்களை, கோபாலப்பிள்ளை காலை ஏழு மணி தொடங்கி இடைவேளையின்றி நண்பகல் 12 மணி வரை எழுதிக் கொண்டே இருந்தார். திடீரென எழுந்து ஏடுகளைச்சேர்த்துக் கட்டி எழுத்தாணியை உறையிலிட்டு, மகாவித்துவான் காலடியில் வைத்துவிட்டு அவர் காலடியில் வீழ்ந்து எழாமல் கிடந்தார்.

    ‘என்ன நடந்தது? ஏன் இப்படி? எழுந்திரு’ என்றார் ஆசிரியர். ‘ஐயா, என் வலக்கைச்சுண்டுவிரலின் பின்புறமும் இடக்கை கட்டைவிரல் முனையிலும் குருதி கசிகிறது. இனி என்னால் எழுதமுடியாது. என்அகம்பாவம் அழிந்தது தாங்கள் கவிசொல்லும் வேகத்திற்கு என்னால் மட்டுமன்று எவராலும் எழுதமுடியாது’ என்று தோல்வியை ஒப்புக்கொண்டார்.

    இது போன்ற நிகழ்வுகள் எத்தனையோ …

    பரந்துபட்ட அறிவு:-
    பொருள் சொல்வதில் மகாவித்துவானுக்கு நிகர் அவரே. தன்னைவிடப் பெரியவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று தற்பெருமை கொண்ட ஒருவர், மகாவித்துவான் அறிந்திராத பாடல் ஒன்றைச்சொல்லி, பொருள் கூறுக என்றார். இதோ அந்தப் பாடல்;

    காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுங்காற்
    காணியுங் காணியுங் காணியுங் காணிமுக்காற்
    காணியுங் காணியுங் காணியுங் காணியுநாற்
    காணியுங் காணியுங் காணியுங் காட்டுங்கழுகுன்றே

    உடனே, அதிலே உள்ள காணிகளைக்கூட்டி காலைக்காட்டு என்பது இதன் பொருள். கழுகுன்றத்தை அடைந்தால் அத்தலம் சிவன் திருவடியைக்காணச் செய்யுமென்பது இதன் கருத்து. இது பிணக்கில்லாத பெருந்துறைப்பித்தனே… என்வினை ஒத்தபின் கணக்கில்லாத்திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே என்பதை நினைத்து பாடப்பெற்றது என்று விடையளித்தாராம்.

    வினா தொடுத்தவர் உடனே, இதுவரையிலும் யாரும் இதற்குச்சரியாகப் பொருள் சொல்லவில்லை. கடினமான செய்யுளையே பொறுக்கி எல்லோரையும் கேட்டுக் கலங்கச்செய்து கொண்டுவந்த நானே, இதன் உண்மைப்பொருளைத் தெரிந்துகொள்ளவில்லை. யாதொரு கவலையின்றி இதற்குப்பொருள் கூறிய தாங்கள், தெய்வப்பிறவி என்று பாராட்டினாராம். இப்படிப்பலப்பல நிகழ்வுகள் மகாவித்துவான் வாழ்வில் பலமுறை நடந்துள்ளன.

    மகாவித்துவானின் இலக்கியப்பணிகளில் பாடம் நடத்துதல், படைப்புகளைப் படைத்தல் இரண்டு மட்டுமே சிறப்பிடம் பெறுகின்றன. இவற்றைத் தவிர்த்து பதிப்புப் பணியில் ஈடுபட்டு ஒருசில படைப்புகளைப்பதிப்பித்துள்ளார். சாற்றுக்கவி அளித்தல், சிறப்புப்பாயிரம் நல்கல், சில படைப்புகளுக்கு உரை வழங்கல், வடமொழி படைப்புகளைத் தமிழில் வசனநடையாக மொழிபெயர்த்து, அதன்பின் செய்யுளாக்கல், உள்ளிட்ட இலக்கியப்பணிகளிலும் ஈடுபட்டவர்.

    நகையுணர்வு:-
    மகாவித்துவான் அவர்கள் இயல்பாக நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். மற்றவர்களின் செயலில் தவறு இருக்குமாயின் நயமாகச்சுட்டிக்காட்டி வெளிப்படுத்தக்கூடிய பண்பாளர்.

    இவர் மயிலாடுதுறையில் 1860 ஆம் ஆண்டில் இருந்து வசிக்கத்தொடங்கினார். பல்லவராயன் பேட்டையிலிருந்து சடையப்பப்பிள்ளை என்பவர் இவருக்கு நெல் அனுப்பினார். அந்நெல் மகாவித்துவானுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அந்த நெல்லின் பெயர் ‘தில்லைநாயகம்’. உடனே ஒரு மடல் எழுதுகிறார், ‘தில்லை நாயகன் பித்தனென்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன் அந்தச் செய்தி உண்மை என்பதை இப்பொழுது அறிந்து கொண்டேன். என்று. இதை உணர்ந்துகொண்ட சடையப்பப் பிள்ளை, மாற்றாக ஈர்க்கு சம்பா நெல்லை அனுப்பினார்.

    பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க ஒருவர் வந்தாராம். ‘என்ன படிக்க வேண்டும்’ என்று கேட்டதற்கு, ‘இலக்கியம் படிக்கவேண்டும்’ என்று பதிலளிக்க, இலக்கணம் படிக்க வேண்டாமா ? என்று கேட்டாராம் பிள்ளை. ‘நன்றாகப் படித்திருக்கிறேன்’ என்று சொன்னதும், ஒரு பாடலைச்சொல்லி இதில் ‘எழுவாய்’, ‘பயனிலை’ என்ன என்று கேட்கிறார். வந்தவர் நீண்ட நேரம் யோசித்துக்கொண்டேயிருக்க, பிள்ளை வந்தவரைப்பார்த்து, ‘எழுவாய்… பயனிலை’ என்று சொல்ல, புரியாமல் விழிக்கிறார். இதற்கு ‘எழுந்திருப்பாய்’ இனி அமர்ந்திருப்பதில் ‘பயனில்லை’ என்னும் பொருள் என்று அருகில் இருப்போர் குறிப்பால் சொன்னதாகக்குறிப்பிடுவர்.

    இவ்வுரையின்வழி மகாவித்துவானின் புலமை வெளிப்படும். 200ஆம் பிறந்த நாள் காணும் மகாவித்துவானின் படைப்புகள் அனைத்தையும் அச்சிட்டு நூலாக்கி மக்களுக்கு எளிதில் கிடைக்கச்செய்தல் நாம் அவருக்குச்செய்யும் தொண்டுகளுள் ஒன்று. தமிழுக்கு மிகப்பெரிய அளவில் தொண்டாற்றிய மகாவித்துவானுக்கு அவர் வாழ்ந்த மயிலாடுதுறையிலோ, ஆதீனைப் புலவராயிருந்த திருவாவடுதுறையிலோ மணிமண்டபம் எழுப்பி அவர் சிலையைத்தமிழர்கண்டு வழிபட வழிசெய்தல் அவருக்குச்செய்யும் மற்றொரு தொண்டாகும்.

    நவீன அறிவியல் வளர்ந்துள்ள இக்காலத்தில் ஒருவரின் நிழற்படங்களைக் கோடிக்கணக்கில் உருவாக்கமுடியும். ஆனால் அறிஞர்களின் படங்கள் வெளிவந்த காலத்தில் வாழ்ந்தாலும் மகாவித்துவானின் உண்மையான படத்தினை இணையத்திலும் காண்பது அரிது. எனவே, அவரின் திருவுருத்தினை இந்தியமக்கள் அறியும் வகையில் அவருக்கு அஞ்சல்தலை வெளியிடல் அவருக்குச் செய்யும் பிறிதொரு தொண்டாகும். ‘மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, இந்தியா’ என்று எழுதினாலே மடல் அவரை வந்து சேர்ந்துவிடும் பெருமைமிக்க அவருக்கு, மேற்காணும் செயல்களைச் செய்ய ஒருமித்து அரசுகளுக்குக்குரல்கொடுப்போம்.

    (நிறைவுற்றது)

    குறிப்பு:-
    இவ்வுரையின் ஒருபகுதி, காரைக்கால் பண்பலை 100.3இல் 08.05.2015 இரவு 08.30க்கு இலக்கியச்சோலை பகுதியில் ஒலிபரப்பானது.

    முனைவர் துரை. குணசேகரன்
    தலைவர் தமிழாய்வுத்துறை
    அ.வ.அ.கல்லூரி (தன்னாட்சி)
    மன்னன்பந்தல், மயிலாடுதுறை

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 42

    சி. ஜெயபாரதன்.

     

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    ஆடிய பல்லுக்கு அருகே தோண்டிய குழியில் மருத்துவர் தூய தங்கத்தால் நிரப்பிப் பெருமிதமோடு கூறினார் : “ஆடிய பல் இப்போது உமது மற்ற பற்களை விட உறுதியாக இருக்கும்.” அதை நான் நம்பிக் கொண்டு பணத்தைக் கொடுத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். ஆனால் அந்த வார முடிவதற்குள் சபிக்கப்பட்ட அந்தப் பல் எனக்கு மறுபடியும் வலி கொடுக்கத் தொடங்கி என் ஆத்மாவின் இனிய கீதங்களை வேதனை அலறலாக மாற்றியது !
    – கிப்ரான் (Decayed Teeth)
    ___________________

    முதல் முத்தம்
    ___________________

    உதடுகள் நான்கு ஒன்று கூடி
    உறுதி செய்யும் போது
    வைத்திடும்
    முத்தத்தின் மொழி
    இதயத் துக்கு ஓர்
    ஆசனம் அளிப்பது !
    நேச மன்னனை அமர்த்துவது !
    கிரீடம் சூட்டுவது !
    தென்றல் இதழ்களைத்
    ரோஜா மலர் தடவுதல் போல்
    மென்மை விரல்கள்
    மிருதுவாய்த் தொடுதல் அது !
    அப்போது
    நீண்ட பெரு மூச்சு
    விடுவிப்பும்
    இனிய முணங்கலும்
    எழுந்திடும் !
    ___________________

    அதுவே ஆரம்பத் தருணம்
    உள்ளத்தின் மாயத் துடிப்புகள்
    கள்ளக் காதலரை
    கழித்தல் கூட்டல், கணக்கிலிருந்து
    கனவு உலகுக்குத்
    தூக்கிச் செல்லும் ! முத்தம்
    இரு நறுமண மலர்களின்
    ஐக்கியப் பாடு !
    மூன்றாம் ஆத்மா ஒன்றைத்
    தோன்ற வைப்பதே
    நறுமணக்
    கூட்டுறவின் நியதி !
    ___________________

    இளங் காதலரின்
    முதல் கண்ணோக்கு
    தேவதை விதைக்கும் வித்து
    மானிட
    இதய பூமியில் !
    வாழ்க்கை மரக் கிளையின்
    முனையில் பூக்கும்
    முதல் மலரே
    காதலர்
    முதல் முத்தம் !
    ___________________

    Share
  • விடிவிளக்காய் இருக்குதன்றோ!

     -எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா 

    கண்ணபிரான் யேசுபிரான்
    கஷ்டமதில் அவதரித்தார்
    எண்ணரிய சிந்தனைகள்
    எமக்களித்து நின்றார்கள்
    மண்ணுலகில் உள்ளவர்கள்
    மனந்திருந்த வேண்டுமென்று
    உண்மைநிறை சேதிகளை
    உவந்தளித்து நின்றாரே!

    ஆடுமாடு கொட்டிலவர்
    அண்டிநின்ற இடமாகும்
    அன்னையது நிழலிருந்து
    அனைத்துமவர் ஆற்றினரே
    அன்புநிறை உள்ளமொடு
    அவர்தொண்டு அமைந்ததுவே
    அண்டிவந்தோர் அனைவருக்கும்
    அடைக்கலமும் ஆகினரே!

    உலகுய்ய வந்தஅந்த
    உத்தமரை மனங்கொண்டு
    உலகத்தார் உன்மத்தம்
    உடைந்துவிடல் வேண்டாமோ?
    மலம்நிறைய மனங்களிலே
    வைத்திருக்கும் மாந்தரெலாம்
    புலன்சிறந்து விளங்குதற்குப்
    புனிதரெமக் குதவிடுவார்!

    நாத்திகம் பேசிநின்ற
    நம்கவிஞர் கண்ணதாசன்
    ஆத்திக வழிசெல்ல
    அவர்துணையாய் அமைந்தாரே
    கீதைக்கு உரைசெய்த
    கீர்த்தியுடைக் கண்ணதாசன்
    யேசுபிரான் காவியத்தை
    நேயமுடன் அளித்துநின்றார்!

    மதமென்னும் வெறிவந்தால்
    மனமெல்லாம் மாசாகும்
    விதம்விதமாய்க் கற்பனைகள்
    விளைத்துவிடும் விவரீதம்
    வதம்செய்யும் அரக்ககுணம்
    மனதைவிட்டு மறைந்துவிட
    வையமதில் உதித்தவரே
    மாண்புநிறை மாபுருஷர்!

    மதவெறியை  ஊட்டுவதை
    வையகத்தில் ஒழித்திடுவோம்
    விதம்விதமாய் நற்பணிகள்
    விரும்பிநின்று செய்திடுவோம்
    உளம்முழுக்க சமதர்மம்
    ஓங்கிவிடச் செய்துநிற்போம்
    ஒற்றுமையே உயர்வுதரும்
    எனவுரத்துச் சொல்லிடுவோம்!

    கீதைபைபிள் இரண்டிலுமே
    நல்பாதைபற்றி  அறிந்திடலாம்
    போதைகொண்டு பார்ப்பதைநாம்
    புறந்தள்ளி விட்டிடலாம்
    சோதனைகள் விளைவாக
    வந்தஇந்த கீதைபைபிள்
    வேதனைகள் போவதற்கு
    விடிவிளக்காய் இருக்குதன்றோ!

    மதநூல்கள் என்றுநாம்
    மறுபெயரை வைக்காமல்
    வாழ்வுக்கு உகந்ததென
    மனங்களிலே வைத்திடுவோம்
    உதவாத குணத்தையெலாம்
    உடைத்தெறிய வந்ததனால்
    உயர்நிலையில் நிற்கின்றார்
    எனவுணர்ந்து போற்றிடுவோம்!

     

    Share
  • “அவன், அது, ஆத்மா” (41)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 41

    “நாரணதுரைகண்ணன்”

    9f199cb4-9dfd-4933-8a38-a141976b5baa

    அவனுக்கு மாமாவின் குடும்பத்தினர் 1974ம் வருடம் சூளைமேடு, கிருஷ்ணாபுரத்தில் வாடகை வீட்டிற்கு மாறி வந்த பொழுது அவனும் வந்தான். அந்த வீட்டிற்கு அருகிலேயே “ஸ்ரீரமணர் பஜனை மண்டலி” என்ற அமைப்பு இருந்தது. அவர்கள் அங்கே பக்தி, இலக்கியக் கூட்டங்களை நடத்தி வந்தனர்.

    ஒருமுறை பாரதி இளைஞர் சங்கத்தின் செயலாளர் பாரதி அடிப்பொடி வி.எஸ்.மணி அவர்களின் தலைமையில் கம்பராமாயணப் பட்டிமண்டபம் நடைபெற்றது. கூட்டம் அந்த மண்டலியின் பெரிய அறைமுழுவதும் நிறைத்திருந்தது. இரு அணித்தலைவர்களின் தொகுப்புரை முடிந்தவுடன் நடுவர் வி.எஸ்.மணி அவர்கள், “அலைகடலெனத் திரண்டிருக்கும் தமிழார்வலர்களே முதலின் உங்களுக்கு வணக்கம்” என்று தனது உரையைத் துவங்கியதும், கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, ” அமாம்…இந்த மக்கள் கூட்டத்தால் வெளியே போக்குவரத்தே தடைபட்டு நிற்கிறது” என்று நடுவரைப் பார்த்துச் சொன்னார். ” ஓ…அப்படியா” என்று அப்பாவியாக நடுவர் கேட்க, எதிர்த்துக் கேட்டவர் கோபமாக ஏதோ சொல்ல, அந்தப் பட்டிமண்டபம் தீர்ப்பை அறிவிக்காமலேயே முடிந்தது.

    எதிர்த்துக் கேட்டவர் அந்தப் பகுதியில் குடியிருக்கும் ஒருவர். அவருக்கு அந்தக் கூட்டத்தில் பேச வேண்டும் என்ற ஆர்வம். கூட்டம் துவங்கிய பொழுது தனது எண்ணத்தை நடுவரிடம் கூற, நடுவர் அடுத்த முறை உங்களுக்கு சந்தர்ப்பம் தருகிறேன், இன்று ஏற்கனவே பேச்சாளர்களை இறுதி செய்து விட்டோம் என்று தெரிவித்திருக்கிறார். கோபமாகச் சென்று அமர்ந்து விட்ட அந்த நபர்தான் நடுவர் தீர்ப்பின் பொழுது கூச்சலிட்டு நிறுத்தி விட்டார். அப்பொழுது அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த திரு. நாரணதுரைக்கண்ணன் அவர்கள்தான் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தார்.

    அதன் பின்பு பாரதி அடிப்பொடி வி.எஸ்.மணி அவர்களும், சில நண்பர்களும் நாரணதுரைக்கண்ணனின் இல்லத்திற்குச் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவனும் அங்கிருந்தான். நாரணதுரைக்கண்ணன் கங்கையம்மன் கோவில் தெருவில் குடியிருந்தார். அவரது வீட்டிற்கு மிக அருகிலேயேதான் கிருஷ்ணாபுரம் தெருவில் அவனுக்கு மாமாவின் வீடும் இருந்தது. அன்று இரவில் எல்லோரும் விடைபெற்றுச் செல்லும் பொழுது நாரணதுரைக்கண்ணன் அவனிடம்,” தம்பி … நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? ” என்று கேட்டார். அவன் “இங்கே பக்கத்தில் இருக்கும் கிருஷ்ணாபுரத்தில் இருக்கிறேன்” என்றான். “அப்படியா..உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது எங்கள் வீட்டிற்கு வாருங்கள்…உங்கள் கவிதைகளையும் கொண்டு வாருங்கள்” என்றார்.

    இரண்டு தினங்கள் சென்று ஒரு மாலை நேரத்தில் தான் எழுதி வைத்திருந்த கவிதைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அவன் நாரணதுரைக்கண்ணன் வீட்டிற்குச் சென்றான். அவர் அவனை அவருடைய அறையில் அமரச் சொல்லி விட்டு, சிறிது நேரத்தில் வந்தார். அவன் மிகுந்த மரியாதையுடன் தான் எழுதி வைத்திருந்த கவிதைப் புத்தகத்தை அவரிடம் நீட்டினான். அதை அவர் வாங்கிக் கொண்டு, ஒவ்வொரு கவிதையாகப் படித்து, திருத்தங்கள் செய்து விட்டு ,” உங்கள் பெயர் கண்ணனா?” என்றார். “மீ.விஸ்வநாதன் என்னுடைய பெயர். வீட்டில் என்னைக் கண்ணன் என்று கூப்பிடுவார்கள். அதனால் கண்ணன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுகிறேன்” என்றான். “நீங்கள் மீ.விசுவநாதன் என்ற பெயரிலேயே எழுதலாமே. “பாரதி கலைக்கழகம்” என்ற அமைப்பைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? என்றார். “இல்லை..பாரதி இளைஞர் சங்கம்” பற்றிதான் தெரிந்து கொண்டேன். அதனால் அவர்கள் நடத்தும் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்று வருகிறேன்” என்றான். உடனே,” பாரதி கலைக்கழகம்” சைதாப்பேட்டையில் இருக்கிறது. அவர்கள் மாதாமாதம் கவியரங்கம் நடத்துகிறார்கள். உங்கள் கவிதைகளை நீங்கள் அங்கே படிக்கலாம். அடுத்தமுறை நான் அங்கு செல்லும் பொழுது சொல்லுகிறேன், என்னுடன் வாருங்கள் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் மறக்காமல் ஒரு ஞாயிறு அன்று காலையில் அவனையும் அழைத்துச் சென்றார்.

    அன்று அவன் கவிதை வாசிக்கவில்லை. மற்றவர்களின் கவிதைகளையும், அவர்கள் சொல்லும் முறையையும் நன்கு கவனித்துக் கொண்டிருந்தான். அன்று அந்தக் கவியரங்கத் தலைவர் கவிஞர்களை அவர்களின் திறமையைச் சொல்லி அழைப்பதும், வாசித்த கவிஞரின் கவிதையைப் பற்றி கவிதையிலேயே பாராட்டுவதும் அவனுக்கு மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது. அன்றைய கவியரங்கத் தலைவர் கவிமாமணி நா.சீ.வரதராஜன் என்ற “நா.சீ.வ.” அரங்கம் முடிந்ததும் அவன் நா.சீ.வ. அவர்களை வணங்கினான். அவரிடம் நாரணதுரைக்கண்ணன் அவனை அறிமுகம் செய்து வைத்தார். நா.சீ.வ. அவனை நோக்கி,”.ஒனக்கு எந்த ஊர்?” என்றார். “திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி” என்றான். “அட..நம்ம நெல்லைச் சீமையா….பலே..பலே…” என்று அவனைத் தட்டிக் கொடுத்தார். “உன் விலாசத்தை இங்க கொடுத்திவிட்டுப் போ…அழைப்பு வரும்..மாதாமாதம் கவியரங்கில் கலந்து கொள்ளலாம்” என்றார்.

    அவன் மாதாமாதம் எண். 50, மசூதித் தெரு, சைதாப்பேட்டையில் நடக்கும் கவியரங்கங்களுக்குச் செல்லத் துவங்கினான். அது “பாரதி கலைக்கழகம்” அல்ல “பாரதி பல்கலைக்கழகம்” என்றுதான் அழைக்க வேண்டும். அத்தனை அறிஞர்கள், கவிஞர்கள் பெருமக்களைக் கொண்ட அருமையான அமைப்பு. அதன் தலைவர் திரு. இரா. சுராஜ். பாரதியாரின் மீதுள்ள பக்தியினால் “பாரதி. இரா. சுராஜ்” என்று அழைக்கப் படுகிறார். ஒவ்வொரு கவியரங்கத்திற்கும் அவர் கைப்பட எழுதிய தபால் அட்டை அழிப்பிதழ் வரும். அவர் கடிதம் மூலம் அழைக்கும் அழகே கவித்துவமாக இருக்கும். நேர்மையான மனிதர். அவரது தொடர்பும் அவனுக்கொரு பொக்கிஷமானது. அவர்களைப் பற்றியெல்லாம் அவன் வரும் பகுதிகளில் பதிவு செய்வான்.

    அவனுக்கு “பாரதி கலைக்கழகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்த நாரணதுரைகண்ணன் சிறந்த அறிஞர், எழுத்தாளர், “பிரசண்ட விகடன்” இதழுக்கு முப்பத்திரண்டு வருடங்கள் ஆசிரியராக இருந்தவர். மகாகவி பாரதியாரின் படைப்புகளை அரசுடைமையாக்க வேண்டும் என்ற குழுவின் தலைவராக இருந்தவர். காந்தியவாதி. இறை நம்பிக்கை உள்ளவர். மிகவும் எளிமையானவர். நிறைய இலக்கியக் கூட்டங்களுக்கு அவருடன் சென்றிருக்கிறான். அவனுக்குத் திருமண வரவேற்பு சென்னையில் இராயப்பேட்டை”சுவாகத் ஹோட்டலில்” நடைபெற்றது. அன்று நடந்த “திருமணவாழ்த்துக் கவியரங்கத்திற்கு” நேரில் வந்து வாழ்த்திய பெருந்தகை.

    அவரை இப்பொழுதும் நன்றியோடு அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான்.

    24.12.2015

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • “அன்புள்ள அம்மா” – (9)

    மாதா அமிர்தானந்த மயி 

    ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி சரிதம் – பகுதி: ஒன்பது 

    மீ.விசுவநாதன்

    கிருஷ்ண பாவம்

    பாகவதக் கதாமணி கண்ணனை
    எண்ணி எண்ணியே
    சுதாமணி சத்குருவாய் உயர்ந்தாள்!
    உலகோர் இதுபற்றி
    உரைக்கவேண்டிப் பணிந்தார்!

    “சிறுவயது முதலே
    சிந்தித்தேன் கண்ணனை
    மறுபொழுது அறியாமல்
    மனமொன்றிப் போனதால்
    சந்தித்தேன் அந்தக்
    கார்முகில் வண்ணனை!

    அப்பொழுது முதலே இந்தக்
    கார்முகில் நிறப்பெண்ணை
    ஊக்கினான்பக்திக்கிரை
    ஆக்கினான்! உலகோர்க்கு
    அவளாலே உண்டாக்கினான்
    ஆன்மிகப் பெரும்பண்ணை!

    விடாது நாமும் நினைத்தால்
    விடாது இறையின் அன்பு!
    கெடாது வாழ்வில் பண்பு!”
    என்று சொன்னாள்
    சுதாமணி என்ற
    இறைவாக்குப் பொன்னாள்!

    1975ம் ஆண்டு செப்டம்பர் மாதம்
    வீட்டில் உள்ள பசுக்களுக்குப்
    புல்லெடுக்கச் சென்றாள்
    இந்த
    நல்லொழுக்கப் பெண்ணாள்!

    தலையில் புல்லுக்கட்டும்
    தலைக்குள்ளே கண்ணனின்
    புகழ்பாடும்
    சொல்லுக்கட்டும் கொண்ட பண்ணாள்!
    வரும் வழியில்
    ஒருவீட்டில் பாகவதம்
    பாராயணம் செய்யும் ஒலிகேட்டாள்!
    நாராயணன் கண்ணணின்
    பிறப்பின் நேர
    தாய் தேவகியின் வலிகேட்டாள்!

    தன்னை மறந்து
    தன்னிலையை பலிபோட்டாள்!
    அந்த வீட்டில் நுழைந்து
    பாகவத மழையில் நின்றாள்!
    கண்ணனின் மகிமை
    கேட்கக் கேட்கக்
    கண்கள் குளமானாள்!
    கண்ணன் குலமானாள்!

    அவனே ஆனாள் அவள்!
    அது அந்த இறையின்
    அன்பில் தெளித்த துகள்!

    அவள்
    அகத்தின் ஒளியும்
    முகத்தின் அழகும்
    கண்ட
    அங்கிருக்கும்
    அனைவர் மனத்திலும்
    உள்ள அழுக்கெலாம் ஒளியும்!

    அது
    கிருஷ்ணபாவ நேரம்
    அவளை அந்த நேரம்
    வணங்கினால்
    வந்த பாபம் போகும்!

    ஊரே அந்த வீட்டில்
    உடன்கூடி
    நேரே பார்த்தது!
    ஆத்திகம் நாத்திகம்
    அதிசயித்து வேர்த்தது!

    “சும்மா” என்றது நாத்திகம்!
    “அம்மா” என்றது ஆத்திகம்!

    சித்து செய்தால் நம்புவோம்
    இல்லையேல்
    பித்தென்று தள்ளுவோம்
    என்றனர் நாத்திகர்!
    எங்கள் ஆன்மீகச்
    சொத்தென்று கொள்ளுவோம்
    என்றனர் ஆத்திகர்!

    அடுத்த மாதம் இதே நாளில்
    பார்க்கலாம் வாருங்கள்
    என்று சுதாமணி
    தொடுத்த பாணத்தை
    எடுத்துச் சென்றனர்
    அங்கிருந்த இரண்டு மனத்தினர்!

    தன்னிலை திரும்பிட
    தன்வீடு புறப்பட்டாள்!
    அவள்
    முன்னிலை வந்து
    வணங்கினர் ஊர்ப்பட்டார்!

    (நம்மோடு இன்னும் தொடர்வாள் அம்மா)

     

    Share