சுனாமி நினைவுதின அஞ்சலிக் கவிதை!
–முனைவர். து. சந்தானலெட்சுமி
டிசம்பர் 26.2004 ஞாயிற்று கிழமை
ஞாயிறு உதயம்!
வாரம் முழுவதும் உழைத்துக் களைத்தவர்கள் உறக்கத்தில்…
ஓய்வே இல்லாதவர்கள் தம்கடமையில்…
பெண்டிர் தத்தம் பணியில்…
சுற்றுல்லாப் பயணிகள் உல்லாசத்தில்…
இப்படி ஆயிரமாயிர மனிதர்கள் ஆயிரமாயிரம் சிந்தனைகளோடு
தத்தம் பணிகளைத்தொடர
இயற்கையோ தம் நீண்டநாள் பசியைத்தீர்க்க எண்ணியது.
யாருக்குத்தெரியும்… இயற்கையின் கோரப்பசி?
பசியைத்தீர்க்கப்
பேரலையாக உருவெடுத்தது…
ஆழிப்பேரலையாக!
அள்ளிச்சென்றது அனைத்துஉயிர்களையும்
துள்ளிவிளையாடிய விளையாடியச்சிறுவர்களை
மண்ணுக்குள் புதைத்தது
கொஞ்சுமொழிபேசும் மனிதர்களைக் கொன்றுகுவித்தது!
இங்குமட்டுமா? உலகெங்கும்
ஆம்!
“சாறுகொண்டு கரும்பின் கோதுவீசுவார்போல”
சாதிமதம்மொழிகடந்து
உயிர்களை உறிஞ்சிவிட்டு
உடல்களை வீசிஎறி்ந்தது!
ஆங்காங்கே ஓலங்கள்…
நினைத்தாலே மனம்நடுங்கும் அந்நாளில்
விலைமதிப்பில்லா உயிர்களை
அலைகளின் பசிக்கு
உணவாய் அளித்த அனைவருக்கும் அஞ்சலி!
எங்கள் கண்ணீர் அஞ்சலி!
அருமையான வரிகள்.. வலிகளுடன்