Tag: படக்கவிதைப் போட்டி

  • படக்கவிதைப் போட்டி .. (81)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    14556050_1108520385868826_1718628947_n

    112795645n05_rஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 08.10.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (80)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    14454513_1100461043341427_1026080646_n

    23112939n06_rராமச்சந்திரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 0110.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி (79)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    14249039_1086706751383523_1011865516_n

    112795645@N05_rஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (10.09.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி (78)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    14194241_1081118968608968_1196525621_n

    santhy-mariappan5சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை என் விருப்பத்திற்கிணங்க நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தன் படங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். அவருக்கு என் நன்றி.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (03.09.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    பி.கு. நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் அவர்கள் பயணத்தில் இருந்ததால் திங்களன்று வரவேண்டிய இந்த அறிவிப்பு சற்று கால தாமதமாக இன்று வந்துள்ளது. நண்பர்கள் வழமைபோல் தங்கள் சிறந்த படைப்புகளை பின்னூட்டமாக உள்ளிட்டு உற்சாகமளிக்க வேண்டுகிறோம். நன்றி.

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (77)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    14054805_1073254236062108_614667592_n

    27182698@N05_rராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.08.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டியின் முடிவுகள் – 75

    13867107_1059936447393887_1383995798_n

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    இந்த வாரப் படக் கவிதைக்கான புகைப்படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திரு முபாரக் அலி. இதனை நம் வல்லமை ப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த வாரப் புகைப்படத்தில் நம் கருத்திற்கு விருந்தாக துணையோடு கொஞ்சும் புறாக்கள் இடம் பெற்றுள்ளன. இப் புகைப்படத்திற்கு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம். இனி,

    காடுகள், மரங்கள் அழிக்கப்படுவதால், மழையின்றி நீர்நிலைகள் அற்று, மண் வளம் பாதிக்கப்படுவதை புறாக்கள் வழி எடுத்துக் காட்டியுள்ள ராதா விஸ்வநாதனுக்குப் பாராட்டுகள்.

    அஃறிணை உயிர்களிடத்துக் காணப்படும் பேதமற்ற அன்பைச் சுட்டிக் காட்டி, பிறப்பால் வருவதல்ல அஃறிணை, உயர்திணை வேறுபாடு, அது வாழ்ந்துக் காட்டும் வாழ்க்கையில் தான் இருக்கிறது என்று வாழ்க்கைப் பாடத்தை அறிவுறுத்தியுள்ள  முத்துலட்சுமிக்குப் பாராட்டுகள்.

    மரங்கள் அழிக்கப் படுவதால் மனித இனத்திற்கு வரும் கேட்டினை எடுத்துக் கூறியுள்ளார் செண்பக ஜெகதீசன்.

    இன்றைய சூழலில் காதல் படும் பாடு, காதலர்களின் நிலை, காதல் என்ற பெயரால் நடக்கும் வன்முறை என நிறம் மாறிப்போன காதலையும், நிலை தடுமாறும் இளைய தலைமுறையையும் எடுத்துக் காட்டுகின்றது இக்கவிதை,

    ஆதலால் காதல் செய்வோம்

    கரும்புறா எனை

    வெண்இறகுள் பொத்தி வைத்த பிரியசகியே!

    கலப்பினக் காதலை

    இணைந்தே இசைப்போம்

    இல்லற மேன்மையை

    மரங்கொத்தி வகையினோம்

    மனங்கொத்தியது இல்லை

    மனங்கொத்தி வகையினரோ

    பணங்கொத்திகளாய்

    ஆதாளும் ஏவாளும்

    ஆரமித்த காதல் கதை

    ஆதாரமில்லாமல் அலைபாயும் காலமிது

    “ஆதலால் காதல் செய்வீர்”

    பாவலன் மொழி பாழடைந்து நிற்கிறது

    காதல் விற்பனை

    கல்லூரி சாலைகளில்

    கடைவிரித்து சிரிக்கின்றது,

    காதல்விளையாட்டு

    கடற்கரை ஓரங்களில்

    கரைமீறத் துடிக்கின்றது

    காதல் வன்முறை

    ஒருதலைக் கொள்ளியாய்

    ஆயுதம் ஏந்தி

    ஆயுள் முடிக்கின்றது

    காதல் பரத்தை

    வேசி மகளாய்

    வீதி வழி அலைகிறது,

    காதல் கொசு

    காதுக்குள் இரைச்சலாய்

    ஓங்கியே ஒலித்தலும்

    அடித்தவுடன் விழுந்துவிடும்

    பரிதாபம் அந்தோ!

    காதல் கன்னி

    உண்மைக்காதல் தேடி

    முதிர்கன்னியாய்

    காதல் தொடரோட்டம்

    ஆள்மாறி ஆள்மாறி

    போலிமுகமாய்

    புறாத்தூதுக் காலத்தில்

    புத்துயிர்த்த காதல்

    வாட்ஸ்அப் பேஸ்புக்கால்

    வைரஸ் தொற்றில்

    ஆயுள் முடிக்கின்றது

    களவுகால காதல் சின்னம்

    கற்பறன் பேணிய திறன்

    வருங்கால தலைமுறைக்கு

    சொல்லத் தவறினோமே

    காதல் மெய்

    காதலர்கள் பொய்

    உண்மை மறந்தோமே

    மனந்தொட்டு

    உடல் தொடும் கலாச்சாரத்தினை

    மறந்திட்டு

    மாயும் இனத்திற்கு

    மீண்டும் புரியவைப்போம்

    ஆதலால் காதல் செய்வோம்.

    காதல் குறித்தப் புரிதலை இளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டும் என்ற கருத்தாக்கத்தைக் கொண்டு சமூக நோக்கோடு கவிதைப் படைத்துள்ள மா. பத்ம ப்ரியாவின் கவிதையை இந்த வாரச் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கின்றேன். கவிஞருக்குப் பாராட்டுகள்.

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (76)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13874994_1059936904060508_1239459592_n

    32535581@N07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.08.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 74 – இன் முடிவுகள்

     

    13819697_1055298904524308_2074905093_n

     

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திரு பிரேம்நாத் திருமலைசாமி. இதனைப் போட்டிக்குத் தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    இந்த வார புகைப்படத்தில் இ டம்பெற்றிருப்பவர் தன்னிடம் அடைக்கலம்  நாடி வந்த ஆட்டுக்குட்டிக்கு ஆதரவுக் கரம் நீட்டும் மூதாட்டி. இம் மூதாட்டிக்கு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம். இனி,

    கருணையின் வடிவமாக, தன்னைத் தோண்டுபவரையும் தாங்கிக் கொள்ளும் மண்ணிற்கும், கைம்மாறு கருதாமல் பொழியும் மழைக்கும் தாயின் கருணையை ஒப்பிட்டுக் கூறியிருக்கும் ராதா விஸ்வநாதனுக்குப் பாராட்டுகள்.

    உயிர் வதைக் குறித்த கருத்தினை வெளியிட்டிருக்கிறார் சுவாதினி பரத்வாஜ்.

    கவனிக்க ஆளின்றித் தவிக்கும் மூதாட்டிக்கு நல்ல துணையென்று இருப்பது ஆட்டுக்குட்டி தான் என்று புதுமைப் பொலிவில் பழமைகள் கண் மறைக்கப் படுவதைச்  சுட்டுகின்றார் செண்பக ஜெகதீசன்.

    வேண்டாம் ஐந்தறிவு, என்ற ஒரு பக்க கவிதையில் விசுவின் குடும்பச் சித்திரம் போன்ற கதைப் பின்னலுடன் அழகிய கவிதை. உன் அன்பு மட்டுமே என் உயிர்துணையாய் இருக்கிறது, முதுமையின் எதிர்பார்ப்பைக் காட்டும் வரிகள். கவிதைப் படைத்துள்ள கொ.வை. அரங்கநாதனுக்குப் பாராட்டுகள்.

    மூதாட்டியின் மனித நேயத்தை எடுத்துக் கூறுகின்றார் பா. பொன்னி.

    பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டியை, விதியை நொந்து சாபம் விடும் தாயாக அல்லாமல் , ஊன்று கோலாய் கிடைத்த ஆட்டுக்குட்டியோடு வாழ்க்கைப் பயணத்தைத் தொடரக்கூடிய , எதையும் எதிர்கொள்ளும் தாயாக வெளிக்காட்டியுள்ள  சரஸ்வதி ராசேந்திரனுக்குப் பாராட்டுகள்.

    பொதுவாக வெளிவந்துள்ள கவிதைகள் மதுவினால், பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டியை எடுத்துக் காட்டுகின்றன. நகர மயம், நாகரிக வளர்ச்சி, ஓட்டப் பந்தய வாழ்க்கை இதற்கிடையில் சிக்கித் தவிக்கும் குடும்ப உறவில் புறந்தள்ளப்படும் முதுமையை எடுத்துக் காட்டியுள்ளது  இக்கவிதை,

    முதுமை போற்றுவோம்

    வீட்டின் கொல்லைப்புறத்தில்

    விலக்கப்பட்ட ஆட்டுஉரலோடு

    விடுவிக்கப்பட்ட உறவும்

    கவனிப்பாரற்றுத்தான் கிடக்கின்றது

    கருணை விழிகளுக்கு கதையாட உறவில்லை

    கரம் கோர்த்தாட கண்மணிகள் இல்லை

    புறக்கணிக்கப்பட்ட முதுமைக்கு

    புழக்கடையில் புத்துயிர் தருவது

    தொப்புள்கொடி உறவல்ல

    உணவுப் பதார்த்தங்களைப் பரிமாற

    காத்திருக்கும் கரங்களுக்கு

    அங்காந்து வாய்திறக்க

    அஃறிணை தவிர ஆளில்லை

    பாரம்பரிய நீரோட்டத்தில்

    குழுவாழ்க்கை சிதைந்து

    கூட்டுக்குடும்பமாய் கரைஒதுங்கினோம்

    தனிக்குடும்ப கொடிபிடித்து

    தனித்தீவாய்

    தனிமரமாய்…………..

    பேரன் பேத்திகளோடு குழாவிய பழங்கதைகள்

    நூற்றாண்டு பயணத்தில் கற்பனைகளாய்

    சுருங்கியது தசைகள் மட்டும் தான்

    இதயம் அல்ல எனும் பாவனையில்

    ஈரம் காட்டிய தாய்மை

    கருகிய மனங்களில் தாய்ப்பாலை வார்க்கட்டும்

    வருங்காலத்திலாவது

    முதுமை போற்றுவோம்

    சமூக மாற்றத்தால் குடும்பப் பாரம்பரியம் நலிவடைந்து வரும் இன்றைய சூழலைச் சுட்டிக்காட்டியுள்ள மா. பத்ம ப்ரியாவின் கவிதையை இந்த வாரச் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கின்றேன். கவிஞருக்குப் பாராட்டுகள்.

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (75)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    13867107_1059936447393887_1383995798_n

    138821911@N05_rமுபாரக் அலி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (06.08.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

    Share
  • படக்கவிதைப் போட்டி 73 – இன் முடிவுகள்

    காயத்ரி பூபதி

    13734582_1050429538344578_1049135032_n

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் ஷாமினி. இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    இந்த ஒளி படத்தில் இடம் பெற்றிருப்பவர் பறை கொட்டி இசைக்கும் தொழிலாளி. இவர் கொட்டும் பறைக்கு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம் இனி,

    பறையின் பயன்பாடு ஆதிகாலம் தொட்டு இருந்துவந்துள்ளதை சங்க இலக்கியத்தால் அறிய முடிகின்றது. பறை நிலத்தைக் குறிக்கும் குறியீடாக சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. பறை கொட்டி முரசறைவிக்கும் வழக்கமும், விலங்கை விரட்டும் வழக்கமும் இருந்து வந்துள்ளதை சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

    ஆதி காலம் தொட்டு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழரின் பறை, இன்று ஏழை எளிய மக்கள் விரும்பும் பறையாகவே உள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார் ராதா விஸ்வநாதன்.

    செந்தமிழ் நாட்டுக் கலையாகவும், இந்த நாட்டு இசையாகவும் விளங்கிய பறையின் ஓசை நயத்தை நடையழகுடன் சொல்லியிருக்கின்றார் செண்பக ஜெகதீசன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    பறையின் தொன்மை வரலாற்றையும், பறை இசையின் பயன்பாட்டையும் இசை கருவியிலிருந்து எழும் ஒசை பற்றியும் எடுத்து கூறும் சரஸ்வதி ராசேந்திரன், இசைக்குள் புகுந்து விட்ட சாதிய பார்வையையும் சுட்டிக் காட்டியுள்ளார். கவிஞருக்கு பாராட்டுகள்.

    தமிழின அடையாளம்

    ஆதித்தமிழன் ஆரம்பித்த இசைமொழி

    அச்சம் மகிழ்வென கொண்டாடிய குலத்திற்கு

    விலங்கின அச்சத்தை விலக்கிட்ட பறை

    கலங்கின நெஞ்சத்தை கரம் உயர்த்திய பறை

    காலவெள்ளத்திலும் நிலைத்த இசைக்கலை

    பறையாட்டமே தப்பாட்டமாய்………

    இறவாப் புகழ்தரும் அஃறிணையின் தோல்

    இளைஞா்களுக்கு எழுச்சியூட்டும்

    இறந்தும் பாடம் சொல்லும்

    இசைக்க எத்தனையோ கருவியிருக்க

    இன்றளவும் பறை மனச்சிம்மாசனத்தில்

    படித்தவனோ பாமரனோ

    பாட்டாலே புரியவைப்பான்

    தேங்கிய உணர்வுகள் வெடித்தெழ

    வாங்கிய கரங்களில்

    ஓங்கியே ஒலிக்கும்

    ஒங்கிய இசையால் உலகளக்கும்

    தன்னை உருமாற்றி

    நாகரிகக் கரங்களில் இசைத்தாலும்

    பறைமொழி தான் இன்றளவும்

    புதுமொழியாய்………..

    பட்டிதொட்டியெல்லாம் பரவிய பறையாட்டம்

    தமிழர் கலையென தப்பாமல் முழக்கமிடும் தப்பாட்டம்

    சங்க இலக்கியத்தில் இடம் பெற்ற பறையை எடுத்துக் கூறி, அதன் தொன்மை தன்மையையும், கால வெள்ளத்தில் நிலைத்து, இன்றுவரை நம் வாழ்வியல் கூறுகளில்  இடம் பெற்றுவரும் தன்மையையும், நாகரிக வளர்ச்சியில் உரு மாற்றத்துடன் பல்வேறு பெயரில் வழங்கப்பட்டுவந்தாலும், தமிழர் கலையான பறை தான் அடிப்படையான இசையாக அமைந்துள்ளதை எளிமையாகவும், நடையழகோடும் எடுத்துக் காட்டியுள்ள மா. பத்ம ப்ரியாவின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக தேர்ந்தேடுக்கின்றேன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 72 – இன் முடிவுகள்

    காயத்ரி பூபதி

    13652649_1046331315421067_1817652577_n

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் பிரபு வெங்கட்ராமன். இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    இந்த ஒளிப்படத்தில் இடம்பெற்றிருப்பவர் உடன்பிறப்பை தூக்கிச்சுமந்து நிற்கும் சிறுமி. சுமையல்ல சுகம் என்று புன்னகையுடன் இச்சிறுமி எதிர்கொள்ளும் வாழ்க்கைப் பயணம் குறித்து, கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம். இனி,

    வறுமை ஒருபுறம், வறுமையில் காணும் இன்பமாய் குழந்தைகள் ஒருபுறம் என்று அவதியுறும் மக்களின் நிலைக்கு தீர்வாய் குழந்தை தொழிலாளிகள் உருவாவதை தம் கவிதையில் எடுத்துக்காட்டியுள்ளார் மா. பத்மப்ரியா. கவிஞருக்கு பாராட்டுகள்.

    தாய் தந்தை இல்லாமல் தவிக்கும் குழந்தைகள், இளைய உடன்பிறப்பை தாய்மை உணர்வோடு தூக்கிச் சுமக்கும் மூத்தவளான இச்சிறுமி நாளை சமுதாயத்தின் ஏளனப் பார்வைக்கு ஆளாகி விடக்கூடாது என்று சமுக பார்வை கொண்டு எடுத்துரைத்துள்ளார் செண்பக ஜெகதீசன்.

    கிராம வாழ்க்கை வயலுக்கு வேலைக்குச் செல்லும் தாய், இளையவனை சுமக்கும் மூத்தப்பிள்ளை , மூத்தவள் உழைக்க, இளையவன் கல்வி கற்க என வறுமையிலும் செம்மையாக வாழும் குடும்ப நிலையை எடுத்துக்காட்டும் சரஸ்வதி இராசேந்திரன், நகர மக்களை போல் மனிதநேயத்தினை மறந்து விடக்கூடாது என்றும் அறிவுறுத்துகின்றார்.

    பல தடைகளைத் தாண்டி, ஏற்ற இறக்கங்களுக்கு ஈடு கொடுத்து விழித்தெழுந்த பெண் கல்வி குறித்து பேசுகின்றது  இக்கவிதை ,

    காலன் இட்ட பிச்சையா இல்லை

    கள்ளிப்பாலில் கூட கலப்படமா

    கடவுளின் கருணை மனுவில்

    கருச்சிதையை எழூச்சியுடன்

    காலால் எட்டி உதைத்த வெற்றிச் சிரிப்பு

    கால் வயிற்றிற்காக‌

    கடுமையாக உழைக்க அச்சமில்லை

    கஞ்சியோ கூழோ கிடைத்தால் போதும்

    காற்று மழை வெய்யில் கண்டு பயமில்லை

    கல்வி கற்க வழி செய்வீர்களா

    கன்னியாக நான் வளர்வதற்குள்

    கழுத்தில் தாலி ஏற்றி விடாதீர்கள்

    கண்களில் ஆயிரமாயிரம்

    கனவுகளோடு காத்திருக்கிறேன்

    கல்வி கற்க வழி செய்வீர்களா

    கலுடைக்க மட்டும் அனுப்பிடாதீர்கள்

    கையில் என்னுடன் பிறந்தவருடன்

    கனவுகளையும் சுமந்து நிற்கிறேன்

    கல்வி கற்க வழி செய்யுங்கள் இல்லை

    கனவு காண மட்டும் வழி செய்யுங்கள்

    (ராதா விஸ்வநாதன்)

    கள்ளிப்பாலாலும், கருச்சிதைவாலும், குழந்தை மணத்தாலும் சிதைவுற்ற பெண்ணின் வாழ்வு கல்வியால் மட்டுமே ஏற்றமடைய முடியும்  என்று அறிஞர்கள் வலியுறுத்திய பெண் கல்வி குறித்த கருத்தினை வெளியிட்டுள்ள ராதா விஸ்வநாதனின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக  தேர்ந்தெடுக்கின்றேன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    Share
  • படக்கவிதைப் போட்டி (73)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    13734582_1050429538344578_1049135032_n

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    112795645@N05_rஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

    Share
  • படக்கவிதைப் போட்டி 71 – இன் முடிவுகள்

    காயத்ரி பூபதி

    13599462_1042198989167633_571495808_n

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் சாந்தி வீ ஜே. இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    இந்த வார படக்கவிதைக்கான ஒளிப்படத்தில்  நம் கருத்திற்கு விருந்தாக காக்கையோடு ஒன்றாக கூடி உண்ணும் பசுவும், கன்றும் இடம் பெற்றுள்ளன. இவ் வொளிப்படத்திற்கு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம். இனி,

    இங்கு இடம் பெற்றுள்ள கவிதைகள் பொதுவாக பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை வலியுறுத்துவனவாக அமைந்துள்ளன.

                    சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்

                     பெற்றத்தாற் பெற்ற பயன்.

    என்ற குறள் கருத்தினை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது செண்பக ஜெகதீசனின் கவிதை.  மனிதன் உயர்வு பெற விலங்குகளிடமிருந்தாவது சுற்றம் பேணுதலை கற்க வேண்டும் என்று கூறுகின்றார் கவிஞர்.

    பாலைக் கொடுத்தாலும் பசுக்கள் பராமரிப்பு இல்லாமல் உணவிற்காக வீதியில் அலையும்  நிலையையும், பகுத்துண்டு உயிர் ஒம்பும் நிலை மற்ந்த மனித மனத்தின் அவல நிலையையும் எடுத்துக்காட்டுகின்றார் சரஸ்வதி இராசேந்திரன்.

    ஐந்தறிவுடைய  உயிரினங்கள் கூட ஒற்றுமையுடன் ஒன்று கூடி உண்டு, எந்த வித பேதமின்றி, எங்கு சென்றாலும் தன்னிலை மாறாமல் இருக்கின்றன. அவ்வாறிருக்க மனிதன் பேதம் கொண்டு வாழ்ந்தால் ஆறறிவு இருந்தும் என்ன பயன்  என்கின்றார் ராதா விஸ்வநாதன்.

    கோமாதாவாகவும், குலமாதாவாகவும் போற்றப்படும் பசுக்களின் இன்றைய நிலையை எடுத்துக்காட்டுகின்றது இக்கவிதை,

    பசுக்கள் உணவிற்காக வீதியையும், குப்பை தொட்டியையும் நாடும் நிலையையும், ஊசி போட்டு பால் கரந்தும், அடிமாடாகவும் வதைக்கப்படும் நிலையையும்  எடுத்துக்காட்டி, பசுக்களுக்கு  எதிராக நடக்கும் உயிர் வதைச் சட்டப்படி குற்றம் என்பதை அறிவுறுத்தியுள்ளார்  கவிஞர். உயிரோம்பல் குறித்த கருத்தினை எளிமையான வரிகளில் வெளியிட்டுள்ள  ரா.  பார்த்தசாரதியின்  கவிதையை இந்த வாரச் சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கின்றேன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    Share
  • படக்கவிதைப் போட்டி (72)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    13652649_1046331315421067_1817652577_n

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    100914400@N08_rபிரபு வெங்கட்ராமன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

    Share
  • படக்கவிதைப் போட்டி 70 – இன் முடிவுகள்

    காயத்ரி பூபதி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் கோகுல்நாத். இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    13563176_1038235166230682_1340979644_n

    இந்த வார  படக் கவிதைப் போட்டிக்கான  ஒளிபடத்தில் கிராம தேவதையும், அதை வணங்கும் பெண்மணியும் இடம் பெற்றுள்ளனர். இவ் வொளிப்படத்திற்கு கவிஞர்கள் வரைந்த கவிதைகளைப் பார்ப்போம். இனி,

    கிராம தேவதைகள் கிராமத்தின் குறியீடாகும். கிராமம் என்ற உடனே நம் நினைவுக்கு வருபவை  சிறு தெய்வ வழிபாடும், மக்கள் கூட்டமாக கூட்டமாக சேர்ந்து கொண்டாடும் திருவிழாக்களும் தான். இன்றும் கூட பலர் நகரங்களில் வாழ்ந்தாலும் தன் சொந்த கிராமங்களுக்குச் செல்வதற்கு கூட இது போன்ற திருவிழாக்களே காரணமாக  இருக்கின்றன.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூடி மகிழ்ந்து கொண்டாடும்  திருவிழாவை கண்முன் கொண்டு வந்து காட்டுகின்றது ராதா விசுவநாதனின் கவிதை. இவ் வுலகம் அனைத்தையும் காசுக்கு  விலை பேசும். அதற்கு கோயில்களும் கூட விதிவிலக்கல்ல என்று கோயில்களின் இன்றைய நிலை குறித்து வருந்தியுள்ளார்  கவிஞர்.

    எல்லைச்சாமி, காவல் தெய்வம் என்று தெய்வங்கள் பல இருந்தாலும், நாட்டில் கொலையும், கொள்ளையும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் நடந்த வண்ணம் உள்ளனவே. காவல் தெய்வமே கடமை மறந்து நீயும் லஞ்சம் வாங்கி விட்டாயோ? என்று நாட்டின் உண்மை நிலை குறித்த கருத்தினை எடுத்துக் கூறியுள்ளார் சரஸ்வதி இராசேந்திரன்.

    உழவுத் தொழில் நிலை குன்ற கிராமத்தை விடுத்து நகரத்தை நாடும் மக்களின் நிலையையும், உலகம் செழிப்பதற்கு கிராமம் செழிப்படைய வேண்டும் என்பதையும் மக்கள் உணர வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளார் செண்பக ஜெகதீசன். சிதைந்து வரும் கிராமமும், சிறு தெய்வ வழிபாடும் மீட்டெடுக்கும் சூழலில் உள்ளதை அறிவுறுத்தியுள்ள கவிஞருக்கு பாராட்டுகள்.

    குலசாமி எல்லைச் சாமி

    காக்க வேணும் மண்ணுயிர

    சொல்லவேணும் உண்மைகள

    புறம்போக்கு இடமெங்கும்

    நீ

    சுயம்புவாய் தோன்றினாயா – சிலர்

    சுயநலத்தால் தோன்றினாயா

    உண்மை சொல்ல வேணும் – இந்த

    உழைப்பாளி ஜனங்களுக்கு,

    வானம் பார்த்த பூமியாக

    பாவிமக நிக்கிறேன்

    பட்டா போட்ட வீடு

    வெறும் கனவா

    உன்னைக் கேட்கிறேன்

    புறம்போக்கு நிலத்த

    பட்டா போட நினைச்சு

    படுபாவிக் கூட்டம்

    கோயில் கட்டி வைக்குது,

    ரோட்டோர இடத்தை

    அபகரிச்சு நிக்குது…………..

    மூடநம்பிக்கை சாயம் பூசி

    முதலாளி வா்க்கத்தின் நிலஅபகரிப்பு

    ஒய்யாரமாய் இருக்குது

    சாயம் வெளுக்க வேணும்

    சாமியே! துணை இருக்க வேணும் ……

    கிராமத்தின் குறியீடாக விளங்கும் சிறு தெய்வ வழிபாடு மக்களின் மூட நம்பிக்கைகள் அரங்கேறுவதற்கும் இடம் தருகின்றது. புறம்போக்கு நிலத்தை அபகரிக்கவும், ரோட்டோர இடத்தை அபகரிக்கவும் நினைப்போர் மக்களின் தெய்வ வழிபாட்டையும், மூட நம்பிக்கையையும் தனக்கு சாதகமாக பயன் படுத்தும் சமூக அவலத்தை எடுத்துக் காட்டியுள்ள முனைவர் மா பத்ம ப்ரியாவின் கவிதையை இந்த வார சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கிறேன். கவிஞருக்கு பாராட்டுகள்.

    Share