Tag: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(141)

    சக்தி சக்திதாசன்.

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    எழுத்துக்களின் மூலம் நடக்கும் எண்ணப் பரிமாற்றங்கள் அளப்பரியன, அரியன, உள்ளத்திற்கு இதம் தருவன.

    உலகில் பல்வேறு நாடுகள் உள்ளன, அவையனைத்தும் தலைவர்களால் வழிநடத்தப் படவேண்டியது கட்டாயமாகிறது.

    தனியொரு மனிதன், தான் வைத்ததே சட்டம் என்றும் அதற்குக் கீழ்ப்படியாதவர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனும் வகையில் சில தலைவர்களுள்ள நாடுகளும்; நாட்டில் ஒரேயொரு கட்சிதான் உண்டு, அது அடக்குமுறையின் மூலம் தனது ஆட்ச்சியை மக்கள் மீது திணிக்கும் வகையில் என வேறு நாடுகளும், எனப் பலவகையான முறைகளில் நாடுகள் வழிநடத்தப்படுகின்றன.

    ஒருவருக்கு ஒரு வாக்கு எனும் சுதந்திரத்தைக் கொடுத்து, அவர்கள் முன்னால் வைக்கப்படும் கட்சிகளின் கொள்கைகள் பிரகாரம் மக்கள் தமது விருப்புகளுக்கு ஏற்ப வாக்களித்து பதவிக்குக் கொண்டுவரும் அரசாங்கங்கள், பொதுவாக அம்மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையிலமைந்த அரசாங்கம் “ஜனநாயகம்” எனும் கட்டமைப்பில் அழைக்கப்பட்டு இயங்குகிறது.

    ஜனநாயக ஆட்சி என்று கூறி ஆட்சிநடக்கும் நாடுகளில் உண்மையான ஜனநாயகம் நிலவுகிறதா ? எனும் கேள்விக்கு விடையளிக்கும் வகையில் அமைந்ததல்ல இம்மடல்.

    இங்கிலாந்திலே கடந்த வாரம் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கும் ஒரு சூடான அரசியல் விவகாரம், தவறு செய்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் தட்டிக் கேட்கப்படவேண்டும் எனும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாட்டை நினைவுக்குக் கொண்டு வந்ததினால் இந்நாட்டில் 40 வருடங்கள் வாழ்ந்த ஒரு புலம்பெயர் தமிழன் எனும் வகையில் அதைப் பகிர்ந்து கொள்வதே இம்மடலின் நோக்கம்.

    அப்படி என்னதான் நடந்தது ? எனும் கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கும்.

    malcolm and Jackகன்சர்வேடிவ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் நீண்டகால அரசியல் சேவைக்காக இங்கிலாந்து மகாராணியாரால் “சர்” பட்டம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர் சர் மல்கம் ரிவ்கிண்ட் ( Sir Malcolm Rifkind). முன்னால் பிரித்தானியா பிரதமர் மார்கிரெட் தாச்சர் அவர்களினால் அமைச்சராக்கப்பட்டவர் . பின்னர் ஜான் மேஜர் அவர்களின் அமைச்சரவையிலும் அமைச்சராகப் பணியாற்றியவர்.

    தற்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இங்கிலாந்தின் இரகசிய உளவுத்துறையின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் தெரிவுக்குழுவின் தலைவராகப் பங்காற்றியவர்.

    சரி, இனி அடுத்தவரைப் பார்ப்போம். இவர் தற்போதைய இங்கிலாந்தின் எதிர்க்கட்சியாக விளங்கும் லேபர் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ” ஜக் ஸ்ட்ரோ” ஆவார்.

    முன்னால் பிரதமர் டோனி பிளேயர் அவர்களின் அமைச்சரையிலும் அதன் பின்னால் கோர்டன் பிரவுன் அவர்களின் அமைச்சரவையிலும் அமைச்சராகவும் பிரதான அமைச்சுகளுக்கு பொறுப்பாக இருந்தவர்.

    என்ன இது ? ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரைப் பற்றியும், எதிர்கட்சியான லேபர் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரைப் பற்றியும் ஒரு வியாபனம்.

    எங்கே போகிறது இம்மடல் ? ஆத்திரப்படாதீர்கள், அவசரப்படாதீர்கள் இந்த இரண்டுபேரையும் இணைக்கப்போகிறது ஒரு விடயம்.

    DTG

    “தி டெய்லி டெலிகிராப் ” என்றொரு பத்திரிகையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கிலாந்தின் பாரளுமன்ற அங்கத்தினர்கள் தமது உத்தியோகப்பூர்வ செலவுகள் எனும் பட்டியலில் செய்யும் குளறுபடிகளை அம்பலத்துக்குக் கொண்டு வந்து உண்டு இல்லை என்று பண்ணிய பத்திரிகை.

    அப்பத்திரிகை விரித்தது ஒரு வலை . அதிலே வசமாகச் சிக்கிக் கொண்டனர் இவர்கள் இருவரும்.

    ஒரு சீனக் கம்பெனி எனும் பெயரில் ஒரு போலி நாடகமாடி, இவர்கள் இருவரும் தமது பராளுமன்றச் சலுகைகளின் அடிப்படையில் அரசியலில் பெற்ற செல்வாக்கின் மூலம் பணம் சம்பாதிக்கத் தலைப்பட்டதை வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்து விட்டது இப்பத்திரிகை.

    பாராளுமன்ற அங்கத்தினர்கள் தாம் பாரளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் போது வேறு கம்பெனிகளில் பணியாற்றக் கூடாது என்றோ, அன்றி வேறு கூட்டங்களில் பணத்துக்காகச் சம்மதித்துப் பேசக்கூடாது என்றோ சட்டம் இல்லை.

    ஆனால், அவர்கள் தாம் மக்களின் பிரதிநிதிகளாகப் பங்காற்றும் போது வேறுவழிகளில் சம்பாதிக்கும் பணத்தை பாராளுமன்ற ஒழுக்க நடவடிக்கைக் குழுவிற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

    தாம் புரிந்தது சட்டத்திற்கு முரணான செயலன்றால், அது தவறென்று கருதும் பட்சத்தில் அதற்கு எதிரான சட்டமூலங்களை உருவாக்குங்கள் என்கிறார்கள் இவர்கள் இருவரும்.

    தன்னுடைய திறமையின் மூலம் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தான் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் முயன்றது குற்றமாகாது என வாதாடுகிறார் மால்கம் ரிவ்கிண்ட்.

    மறுபுறம் ஜக் ஸ்ட்ரோ என்பவரோ தான் ஏற்கனவே வரும் மே மாத பாரளுமன்றத் தேர்தலில் பங்கு கொள்ளப் போவதில்லை, அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன் என்று ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில் தனது எதிர்கால வாழ்க்கையின் ஆதாரத்திற்காக தான் உழைக்க முயன்றது எப்படித் தவறாகும் என்கிறார்.

    எது எப்படி இருந்தாலும் வருடமொன்றுக்கு 67,000 பவுண்ட்ஸ் உழைக்கும் பாராளுமன்ற அங்கத்தினர்கள், பேராசையால் தமது பதவியின் அடிப்படையில் பணமீட்ட முயல்வது பொருளாதாரச் சிக்கல்களினால் தவிக்கும் சாதாரண மக்களின் மனதில் அரசியல்வாதிகளைப் பற்றிய கண்ணோட்டத்தை எப்படிப் பாதிக்கும் என்பதை அறியாமலா மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் இப்படி நடந்தார்கள் என்று வினவுகிறார்கள் அரசியல் அவதானிகள்.

    Tony and Maggieஏற்கனவே அரசியல் மீதும், அரசியல்வாதிகள் மீதும் அவநம்பிக்கை கொள்வோர்கள் பெருகிவரும் வேளையில் இத்தகைய மூத்த அரசியல் தலைவர்களின் தன்னலத்தின் அடிப்படையிலான செய்கைகள் இளையோர் மனதில் அரசியலை வெறுக்கப்பண்ணும் என்பது பலரது அபிப்பிராயம்.

    இவர்கள் இருவருமே அடுத்த தேர்தலில் இருந்து தாம் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்கள். இருவரும் அவரவர் கட்சிகளின் உறுப்பினர் அந்தஸ்திலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.

    இவருக்கும் உள்ள மற்றொரு ஒற்றுமை என்ன தெரியுமா? இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் அதிககாலம் பிரதமராக பதவி வகித்தவர்களாகிய மர்கிரெட் தச்சரினாலும் , டோனி பிளேயரினாலும் அமைசராக்கப்பட்டவர்கள் என்பதே !

    “ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் ” என்றொரு எம்.ஜி.ஆர் பாடல் கூறும்.

    அவர் மேலிருந்து பார்த்து புன்னகைப்பாரோ ?

     

     

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(140)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    உங்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்.

    இந்த இனிய மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். வாழ்க்கை என்பது மிகவும் விசித்திரமானது. ஒரே சூழலில் ஒரே வகை வசதிகளுடன் ஒரே வாழ்க்கை முறையில் வாழும் இருவரின் வாழ்க்கை முன்னுக்குப் பின்னாக அமைந்து விடுவதும், வெவ்வேறு சூழலில் வெவ்வேறு வசதிகளுடன் வந்தவர்களின் வாழ்க்கை ஒரே மாதிரியாக அமைந்து விடுவதும் நான் இயற்கையாக… கண்கூடாகக் காணும் நிகழ்வுகள்.

    மிகவும் அழகான திட்டத்துடன் தாம் போகும் பாதையைத் தீர்க்கமாக தீர்மானித்துக் கொண்டு அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்குவோர் எத்தனையோ பேர் தாம் கனவில் கூட எண்ணியிராத ஒரு வாழ்க்கையை அடைந்து விடுவதை நான் பல இடங்களில் கண்டுள்ளேன்.

    அதேசமயம் எந்த வித இலக்குகளும், திட்டமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்போரைப் பார்த்து இவர்களது வாழ்க்கை இப்படித்தான் இருக்கப் போகிறது என்று எண்ணி விட்டு பல வருடங்களின் பின்னால் அவர்களைச் சந்திக்கும் போது நாம் முற்றிலும் எண்ணியிராத ஒருவகை வாழ்க்கையில் அவர்களைச் சந்திக்கும் நிலமைகளும் உண்டு.

    அதற்காக வாழ்வில் எதுவித இலக்குகளுமின்றி, லட்ச்சியங்களுமின்றி வாழ்வதுதான் முறை என்பதல்ல எனது வாதம். வாழ்க்கைச் சக்கரத்தின் சுழலில் சிக்கும் போது எங்கே எப்படி வெளிவருகிறோம் என்பது சிலசமயங்களில் எமது கைகளில் தங்கியிருப்பதில்லை.

    இங்கே நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போவது ஒரு இளம் தாய் நம்பிக்கையோடு தனது வாழ்க்கைப் பயணத்தை தான் திட்டமிட்ட திசையில் செலுத்தி அதி வெற்றி கண்ட ஒரு சம்பவமே !

    எதற்காக இது என்கிறீர்களா?

    நம்மில் பலர் தாயானதும், முதிய வயதினை அடைந்ததும் நாம் ஏதோ செல்லாக்காசு என எண்ணி நம்மை நாமே ஒதுக்கி வைத்து விடும் மனநிலையை அடைகிறோம்.

    உலகில் பிறந்த அனைவருமே இவ்வுலகில் ஏதோ ஒரு வகையில் மிகவும் திறமையுள்ளவர்களாகவே இருக்கிறோம். வாழ்வின் மத்திய பருவத்தை அடைந்து விட்டோம் என்பதற்காக நமது உபயோகமான பருவம் முடிந்து விட்டது என்று எண்ணக் கூடாது.

    rclarke2ரிபெக்கா கிளார்க் (Rebecca Clarke) எனும் ஒரு இளம் தாய் தன்னுடைய மகள் பள்ளிக்குச் சேர்ந்ததும், வெறுமனே தன்னுடைய மகளை பள்ளிக்குக் கூட்டிச் செல்வதும், பள்ளியிலிருந்து திரும்பக் கூட்டி வருவதும் தான் தன்னுடைய பணி என்று இருந்து விடவில்லை.

    தன்னுடைய மகள் படிக்கும் அந்தப் பள்ளியிலே தானும் ஏதாவது வகையில் ஒத்தாசையாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்.

    அதே பள்ளியில் சம்பளம் வாங்காமல், மதிய இடைவேளையின் போது சிறு குழந்தைகள் தமது உணவை உண்ணும் போது மேற்பார்வை செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.

    திருமணம் ஆகி குழந்தை பெறும் முன்னர் ஒரு கணணி நிறுவனத்தில் பணிபுரிந்த அவர் குழந்தை பிறந்ததும் அந்தப் பணியை விட்டிருந்தார்.

    குழந்தைகளோடு பழகும் போதும், அவர்கள் புத்தகங்களை வாசிக்கும் போது அதனால் அவர்கள் அடையும் திருப்தியைக் கண்ட அவர் தான் தனது எதிர்காலத்தை இக்குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக செலவு செய்ய வேண்டும் என்று எண்ணினார்.

    விளைவு !

    rclarkeசும்மா இருக்கவில்லை குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கும் பயிற்சியை பிரத்தியேகமாகப் பயின்றார்.

    நாளைய தலைமுறைக்கு சிறந்த முறையில் அடிப்படை அமைத்துக் கொடுக்கும் பணியில் தன்னை அமர்த்திக் கொள்ள வேண்டும் என்று இலட்சியத்தை வகுத்துக் கொண்டார்.

    என்னே ஆச்சரியம் அடுத்த வருடத்தில் அதே பாடசாலையில் 5 அல்லது 6 வயதுக் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் பணியிலமர்ந்தார்.

    வெறுமனே ஊதியத்திற்காக மட்டும் உழைக்கும் ஒரு வாத்தியாரம்மாவாக இருக்காமல் தனது மனத்திருப்திக்காக குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை சீராக கொடுக்க முனைந்ததால் அவரது முன்னேற்றம் துரித வேகத்தில் இருந்தது.

    சாதாரண ஆரம்பக்கல்வி ஆசிரியராக பணியிலமர்ந்த ரிபெக்கா கிளார்க் அற்புதமான ஆசிரியராக நிர்வாகத்தினரால் அடையாளம் காணப்பட்டார்.

    rclarke1விளைவாக, மதிய உணவுவேளை மேற்பார்வையாளராக தனது லட்சியப்பயணத்தை ஆரம்பித்தவர் அப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

    உண்மை. உன்னத உயர்ந்த லட்ச்சியம், அயராத உழைப்பு, சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை இவைகளை தமது அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டவர்கள் தமது இலட்சியப் பயணத்தில் நிச்சயம் வெற்றி அடைவார்கள் என்பது அசைக்க முடியாத உண்மை என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணம் வேண்டுமா ?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

     

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(139)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    xx20150120_135655அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் இணைவதில் பெருமகிழ்வடைகிறேன்.

    ஒரு மாத கால இடைவெளியின் பின்னால் இம்மடலை வரைந்து கொண்டிருக்கிறேன். இந்த ஒரு மாத காலமும் என்ன செய்து கொண்டிருந்தேன் ?

    ஓடி ஓடி இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தப் புலம்பெயர் வாழ்வில் சில நேரங்களில் காட்சி மாற்றம் தேவைப்படுகிறது.

    தேவைப்படும் அனைத்தையும் இலகுவாக அதிக சிரமமின்றி (பெரும்பான்மையாக) பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிலையிலிருந்து சற்றே மாறுபட்டு நம்பிக்கையை மூலாதாரமாக வைத்து அன்றைய வாழ்விற்கான தேவைகளின் தேடலில் ஈடுபடுவோரின் மத்தியில் இருக்கும் போதுதான் வாழ்வின் யதார்த்தம் புரிகிறது.

    ஏறத்தாழ நான்குவார விடுமுறையில் தமிழின் பிறப்பிடமான தமிழகத்திற்கு எனது வருடாந்தர விஜயத்தை மேற்கொண்டிருந்தேன்.

    சென்னைப் புத்தகத் திருவிழா ! அப்பப்பா… இத்தனை பெரிய அலைமோதும் வாசகர் கூட்டத்தைக் கண்டதும்தான் என்னதான் இணையத்தின் தாக்கம் இருந்தாலும் நூல்களை கையில் வைத்துப் படிக்கும் எமது வாசகர்களின் ரசனை குறையவில்லை என்பது புரிந்தது.

    தமிழின் தலைநகரமல்லவா ? அங்கே தமிழை ரசித்துப் படிக்கும் உள்ளங்களுக்கு பஞ்சம் இருக்குமா, என்ன ?

    x20150120_144342ஜனவரி 18ம் நாள் சென்னைப்புத்தக விழா வெளியீட்டரங்கிலே எனது நூல்களின் பதிப்பு நிறுவனமும் எனது நண்பர்களான ரவி, லேனா தமிழ்வாணன் அவர்களின் நிறுவனமுமான மணிமேகலைப் பிரசுரத்தாரின் வெளியீட்டு விழா.

    வழமையாக வருடம் ஒரு நூல் வெளியிடும் எனக்கு இவ்வருடம் சிறிது ஓய்வு. கடந்த ஜூலை மாதம் நடந்தேறிய எனது மகனின் திருமண வைபவத்தின் ஏற்பாடுகளில் மூழ்க வேண்டி இருந்ததால் இவ்வருடம் எனது நூல் தயாராகவில்லை.

    இருப்பினும் எனது நண்பர்களின் அன்பு அழைப்பின் பெயரால் நானும் எனது மனைவியும் சிறப்பு விருந்தினராக அவ்விழாவில் கலந்து கொண்டோம்.

    பெருந்திரளான வாசகர்கள். அரங்கத்தில் அமர்ந்திருந்த அறிஞர்கள், அவர்களோடு அரங்கத்தில் பெருமையுடன் வீற்றிருந்த 38 நூல்களின் 38 நூலாசிரியர்கள்.

    ஆமாம் 38வது புத்தக விழாவில் மணிமேகலைப்பிரசுரம் 38 நூல்களை வெளியிட்டிருந்தது.

    விழாத்தலைவராக பிரதம நீதியரசர் திரு. தமிழ்வாணன்; சிறப்பு விருந்தினர்களாக வேலூர் VIT நிறுவனத்தின் அதிபர் ஆ.ப.விஸ்வநாதன், முன்னனி திரை நட்சத்திரம் திருமதி. வடிவுக்கரசி எனப் பலர் மேடையிலே வீற்றிருந்தார்கள்.

    நண்பர் திரு ரவி தமிழ்வாணன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நண்பர் திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் வரவேற்புரையோடு சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துரைகளோடு நூலாசிரியர்கள் அனைவரும் கெளரவிக்கப்பட்டார்கள்.

    அருமையானதொரு நிகழ்வில் பங்கு பற்றிய அற்புத உணர்வோடு நானும் மனைவியும் வீடு திரும்பினோம்.

    அது மட்டுமா ?

    xxx20150120_135603நண்பர்கள் காந்தி கண்ணதாசன், எஸ்.வி சேகர், பாண்டியராஜன், ஆன்மீக உணர்வாளர் பி.என்.பரசுராமன் எனப் பலரோடும் அன்பான சம்பாஷணைகள். அவ்வாற்றல் மிகுந்தவர்களின் அனுபவ ஆற்றில் ஒரு சிறிய நீச்சல்.

    செட்டிநாடு தந்த இளவல் அருமைக்குமரன், காமெடி கிங், அசத்தல் மன்னன் ஆன்மீகப் பேச்சாளர், நகைச்சுவைப்புயல் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் என்னினிய தம்பி தேவகோட்டை இராமநாதனின் இனிய சந்திப்பு.

    அப்பப்பா ! தம்பியின் அன்பை என்ன கூறுவேன் ? காலை 4 மணிக்கு செட்டிநாட்டிலிருந்து புறப்பட்டு மதியம் மூன்று மணிக்கு என்னை அண்ணாநகரில் சந்தித்து விட்டு மீண்டும் மாலை இரயிலில் செட்டிநாட்டுக்குப் புறப்பட்ட என் தம்பியின் அன்பிற்கு ஈடாக எதைக் கொடுத்துவிட முடியும் ?

    இத்தகைய அன்பானவர்களின் உறவைக் கொடுத்து எனது உள்ளத்தைச் செழிப்பாக வைத்திருக்கும் அந்த அண்ணாமலையானின் பாதங்களை வணங்குவதே நான் செய்யக்கூடியது.

    தமிழகத்தில் நான் காணும் அன்றாட ஆட்டோ சாரதிகள், கார்ச் சாரதிகள் என்பவர்கள் அனைவரிடமிருந்தும் நான் கற்றுக்கொள்பவை ஏராளம்.

    நம்பிக்கையின் ஆதாரத்தில் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஆரம்பம் அலாதியானது. வாழ்க்கையின் மூலத்தின் யதார்த்தம் எமக்குப் புரியும் வகையில் பல நிகழ்வுகளின் பின்னனி எமக்குப் பாடமாக அமைகிறது.

    மாடமாளிகைகள் ஒருபுறம், மண்குடிசைகள் மறுபுறம். விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் ஒருபுறம், செருப்பு அணிய வழியில்லாத ஏழை மக்கள் மறுபுறம் என சென்னையின் வாழ்க்கை போதிக்கும் பாடங்கள் ஆயிரமாயிரம்.

    இந்த அரிய அனுபவச் செழிப்புகள் என் இதயத்தின் அனுபவப் புத்தகத்தில் ஆழமாய்ப் பதிந்திருக்கும்.

    என் மனதின் இனிய உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்திற்காக என் அன்பான நன்றிகள்.

    மீன்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திருந்து ஒரு மடல் . . . . . (136)

    சக்தி சக்திதாசன்

    அன்பினிய உள்ளங்களே !

    அன்பிற்கோர் திருநாளாம் நத்தார் தினத்திலே இம்மடலின் வாயிலாக கனத்த இதயத்துடன் உங்களுடன் மனம் திறக்கிறேன்.

    இப்புனித நாளிலே கனத்த உள்ளத்துடன் மறைந்த இயக்குனர் சிகரம் கே.பி அவர்களின் மறைவுக்கான இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சினிமா என்பது வெறும் ஆடம்பரப் பொழுது போக்குக்கான ஒரு ஊடகம் அல்ல அது வாழ்க்கையின் யதார்த்தங்களை எமக்குப் புலப்படுத்தும் ஒரு ஜனரஞ்சகமான ஊடகம் எனும் உண்மையை ஆழமாகப் புரிய வைத்தவர் இயக்குனர் சிகரம் கே.பி.

    2010ம் ஆண்டு என எண்ணுகிறேன் எனது நூலான “தீஞ்சுவைத் திருக்குறள் கதைகள் ” நூலை சென்னைப் புத்தக விழாவில் வெளியிட்டு வைத்தவர் ஜயா கே.பி அவர்கள்.

    எனது சார்பில் அவ்விழாவில் எனக்காக கலந்து கொண்ட எனது மாமனார்(மனைவியின் தந்தை) அவர்களை கெளரவித்து பூந்துவாலை போர்த்தினார் இவ்வுயர்ந்த மனிதர்.

    அவ்விழாவில் துரதிருஷ்ட வசமாகக் கலந்து கொள்ள முடியாததினால் மறுமுறை சென்னை வந்த போது அவரைச் சந்தித்து எனது அன்பான நன்றிகளைத் தெரிவித்து அவரது ஆசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அவரைச் சந்தித்த போதுதான் நான் அவரை முதன்முறையாகச் சந்தித்தேன்.

    மிகவும் எளிமையான ஒரு மனிதர் தான் ஒரு இயக்குனர் சிகரம் என்று எவ்விதமான பெருமையும் கொள்ளாது விலாசமேயற்ற ஒரு எளிய எழுத்தாளனை அன்புடன் வரவேற்று உபசரித்த ஓர் உயர்ந்த உள்ளத்தின் சொந்தக்காரர்.

    kb and me

    எனது மனைவியின் ஆர்வ மிகுந்த பல கேள்விகளுக்கு பொறுமையுடன் ஆழமிக்க கருத்துக்களை பதிலாகத் தந்த ஒரு பண்பாளர் ஜயா கே.பி அவர்கள்.

    ஒரு மனிதன் எத்தனை செல்வம் சேமித்தான் என்பது பெருமையல்ல அவனால் எத்தனை பேருடைய வாழ்வில் நேர்மறையான மார்றங்கள் நிகழ்ந்தன என்பதுவே முக்கியம்.

    இவ்வரிய உயர்ந்த அற்புத கலைஞனினால் திரைவானில் உதித்து இன்றும் மிளிர்ந்து கொண்டிருக்கும் கலை நட்சத்திரங்கள் எத்தனை, எத்தனை ?

    அன்னாரின் மறைவுக்காக அவரது குடும்பத்தினருக்கும், அவ்ரை இழந்து தவிக்கும் தமிழக திரையுலக உறவுகளுக்கும், அவ்ரால் பண்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட உன்னதக் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அவர் ஆத்மசாந்திக்காக அனவர்க்கும் பொதுவான இறையின் பாதம் பணிந்து வேண்டுகிறேன்

    திரையுலக வானில் ஒரு விடிவெள்ளி

    திரும்பப் பெறமுடியாத நவரத்தினம்

    இயக்குனர்களின் சிகரமாய்த் திகழ்ந்த

    இனிய எம் கே.பி ஜயா மறைந்தாரா ?

    மலையொன்று சரிந்ததினால் இன்று

    மனங்கள் பல புதைந்தன துயரச் சேற்றினுள்

    விலையென்ன கொடுத்தாலும் பெறமுடியா

    வியத்தகு வித்தகரை நாமின்று இழந்தோமே

    திரையுலகம் தனில் விரிந்த வானத்தில்

    திறமை மிக்க நட்சத்திரங்களின்

    ஒளிர்விற்கு காரணமாயிருந்த

    ஓருயர்ந்த சிற்பியின் மறைவு

    மனம் விட்டகலா பல திரைப்படங்கள்

    மிளிரக் காரணமான இயக்குனர் சிகரம்

    மறைந்து விட்டாரென அறிந்ததும்

    மனமெங்கும் ஏதோ இனம் புரியா வேதனை

    பிறப்பதும் அவர்கள் பின் இறப்பதும்

    மானிட வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள்

    இருப்பினும் சிலரே மக்கள் மனதில் நீங்கா

    இருப்பிடம் வரைந்து செல்வார் என்பதே உண்மை

    அன்றொரு நாள அவர்தம் இல்லத்தில்

    அடியேனைச் சந்தித்து மனம் மகிழ அளவளாவி

    இதயம் அகலா கணங்களை பரிசளித்து

    இயக்குனர் சிகரமும் ஒரு மனிதனே

    எனும் உண்மை உணர்த்திய உயர்ந்தவர்

    என்று இனி அவர் போல யார் வருவார் ?

    கனக்குது இதயம் கலைஞனின் மறைவறிந்து

    துடிக்குது விரல்கள் சிதறுது கவிதை வரிகள்

    அண்ணாமலையான் பாதம் பணிகிறேன்

    அன்னார் ஆத்மசாந்திக்காயும் அவர்தம்

    குடும்பம் நண்பர் உறவினர் மனங்களில்

    கூடட்டும் சாந்தி என்பதற்காகவும்.

    மீண்டும் அடுத்த மடலில்

    துயரத்துடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . . (135)

    சக்தி சக்திதாசன்

    அன்புமிக்க வல்லமை வாசக நெஞ்சங்களே!

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு வாரத்திலே உங்களுடன் இம்மடல் மூலமாக மனம் திறக்க விழைகிறேன்.

    மிகவும் இளம் வயதிலேயே எனது தாய்மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்த என்னை தத்துப்பிள்ளையாக ஏற்றுக்கொண்ட இவ்விங்கிலாந்து மண்ணிலிருந்து வாரமொரு மடல் நாம் பார்க்க விழைவது நிகழ்வுகள், நினைவுகள், அனுபவங்கள் என்பவையே.

    2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி இங்கிலாந்தில் நான் கால் பதித்து நாற்பது வருடங்கள் பூர்த்தியாகின்றன.

    18 வயது இளைஞனாக வாலிபக் கனவுகளோடு இங்கிலாந்து எனும் இந்தப் பரந்த தேசத்தினுள் இலங்கை எனும் புள்ளியிலிருந்து தூக்கி வீசப்பட்டவன் நான்.

    சராசரி அறிவும், சராசரிக் கல்வித் தகமைகளும் மட்டுமே கொண்ட எனக்கு வாழ்வில் பல அனுபவங்களைக் கொடுத்ததோடு வாழ்வாதாரத்திற்கான சகல சந்தர்ப்பங்களையும் வேற்றுமை காட்டாது நல்கிய ஒரு நன்னிலம் இங்கிலாந்து தேசம்.

    அதற்காக இந்நாட்டில் வெளிநாட்டிலிருந்து வந்த குடியேற்றவாசிகளான எம்மை நோக்கிய துவேஷம் நிறைந்த நிகழ்வுகள் எதுவுமே நிகழவில்லை என்று சொன்னால் என்னைப் போன்ற முட்டாள் இருக்க முடியாது.

    ஆனால் நான் பிறந்த தாய்மண்ணிலேயே ஒரே மண்ணின் மைந்தர்களுக்குள்ளேயே பலவிதமான வேறுபாடுகளினூடாக உருவான முரண்பாடுகள் காணப்படுகின்றவேளையில் வேற்றுநிற மனிதர்கள் தம் நாட்டில் வந்தேறு குடிகளாய் லட்சணக்கணக்கில் வந்திறங்கும் போது ஒரு சிலர் துவேஷத்தைக் காட்ட முற்படுவது இயற்கைதானே.

    அதை ஏற்றுக்கொண்டு அதற்கு ஈடு கொடுத்து நாம் முன்னேறும் பாதைதான் எமக்குப் பல அனுபவப்பாடங்களை அளிக்கும் பள்ளியாக அமைகிறது..

    இங்கிலாந்திலே பொதுத்தேர்தல் 2015ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறவிருக்கிறது. அரசியல்களம் மிகவும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

    இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற இங்கிலாந்துப் பிரஜை எனும் வகையில் இந்நாட்டின் அரசியலோடு எமது வாழ்க்கை பின்னிப் பிணைந்துள்ளது.

    பல புலம்பெயர் தமிழர்கள் உட்பட்ட ஆசிய இனத்தவர் இங்கிலாந்து அரசியல் கட்சிகளுக்குள் அங்கத்துவம் பெற்று தமது பங்களிப்புகளைச் செய்யத் தொடங்கியுள்ளார்கள்:

    இவ்வரசியல் களத்தின் மாற்றங்கள், அம்மாற்றங்கள் எமது வாழ்வினில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்களைப் பற்றி நாம் பாராமுகமாக இருந்து விட முடியாது.

    இங்கிலாந்தில் குடியுரிமை பெற்று வாழ்கின்ற முதலாவது தமிழர் தலைமுறையின் சந்ததியினர் இத்தளங்களில் தான் தமது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராட வேண்டியுள்ளது.

    சரி இன்றைய அரசியல்களத்தை நோக்கி ஒரு மேலோட்டமான பார்வையை வீசுவோம்,

    2015.3

    நாம் இதனைச் சாதித்தோம் அதனைச் சாதித்தோம் எனப் பதவியிலிருக்கும் கூட்டரசாங்காத்தின் பிரதான கட்சியான கன்சர்வேடிவ் கட்சி கூப்பாடு போடத் தொடங்கியுள்ளது.

    அட போங்கப்பா, நாம் உங்களோடு கூட்டுச் சேர்ந்து அரசமைத்துக் கொண்டிருந்திருக்காவிட்டால் நீங்க எதைப் பெரிசாச் சாதித்திருக்க முடியும்? என்கிற பாணியில் பதிலுக்கு இரைகிறார்கள் இக்கூட்டரசாங்கத்தின் சிறுபான்மைக் கட்சியான லிபரல் டெமகிரட்ஸ் கட்சி.

    அடிப்படைக் கொள்கையிலே எதிருக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட இரு கட்சிகள் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்தது இங்கிலாந்தின் அரசியல் வரலாற்றிலே இதுதான் முதலாவது தடவையாகும்.

    2015.2

    உலகம் முழுவதுமே பொருளாதாரச் சிக்கல்களின் மத்தியில் உழன்று கொண்டிருக்கும்போது இங்கிலாந்து என்ற தள்ளாடிக் கொண்டிருக்கும் கப்பலை நேர் செய்து கரையை நோக்கிச் செலுத்தும் பணியில் தமது கொள்கைகளை விட்டுக்கொடுத்து நாட்டின் நன்மையை முதன்மைப்படுத்தினார்கள் என்று இக்கூட்டராசாங்க ஆரம்பத்தில் அவர்களுக்கு செல்வாக்கு இருந்தது உண்மையே.

    ஆனால் நாட்பட, நாட்பட அவர்களுக்கு இடையில் இருந்த கொள்கை வேறுபாடு அங்காங்கே தலைவிரித்தாடியது.

    சர்வகலாசாலை மாணவர்களின் கட்டணத்தை அறவே ஒழிக்கப்பாவதாகக் கூறி தேர்தலில் கணிசமான அளவு வாக்குகளைப் பெற்ற லிபரல் டெமகிரட்ஸ் கட்சி இக்கொள்கையை கைவிட்டதன் பிரதிபலிப்பு அவர்களின் செல்வாக்கு பாதளத்தை நோக்கிப் பாய்ந்தோடியது.

    இடையிடையே அரசாங்கம் கொண்டுவந்த வரிவிலக்குச் சட்டங்கள் தமது ஆதிக்கத்தினாலேயே கிடைத்தது என்று லிபரல் டெமகிரட்ஸ் கட்சி தம்பட்டம் அடித்தும் இறங்கிய அவர்களது செல்வாக்கு உயரவில்லை.

    அரசாங்கக் கதிரையில் இருந்து மக்களால் பதவியிறக்கப்பட்ட லேபர் கட்சி இத்தேர்தல் தோல்வியினால் சரியான பாடத்தைக் கற்றுக் கொண்டதா? என்பது சந்தேகமே!

    பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்காக பல மூர்க்கமான செலவுக் கட்டுப்பாட்டுகளை விதித்ததினால் மக்களின் வாழ்க்கைத்தரம் குன்றியிருந்தும் அதனால் அவர்களுக்குக் கிடைத்த ஆதரவின் முழு அனுகூலத்தையும் பெற முடியாமல் லேபர் கட்சி அல்லாடுகிறது.

    காரணம் என்ன ?

    ஒரே காரணம் அக்கட்சியின் தலைவர் “எட் மில்லிபாண்ட்” என்கிறார்கள் ஒரு சாரார். தமது கட்சியின் நிலைப்பாட்டை மக்களின் முன்னால் சரிவர எடுத்துச் செல்லும் திறமை இவருக்கில்லை என்பதுவே பலரினது குற்றச்சாட்டு.

    வரும் தேர்தலில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போவது “யூகிப் (UKIP)” என்றழைக்கப்படும் ஜக்கிய இராச்சிய விடுதலை முன்னணி கட்சியாகும்.

    அட அப்படி என்ன இக்கட்சியின் மகத்துவம் என்கிறீர்களா ?

    அப்படி மகத்துவம் ஒண்ணும் இல்லீங்க ! எல்லாத்துக்கும் நாமதான் காரணம்.

    என்ன சக்தி “நாம” என்கிறீங்களே அப்படி நீங்க என்னதான் செஞ்சிட்டீங்க ?”என்னு கேட்காதீங்க . இக்கட்சியோட அடிப்படைக் கொள்கையே “வெளிநாட்டுக் குடியேற்றக்காரரை” கட்டுப்படுத்துவதே. அத்துடன் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜக்கிய இராச்சியம் வெளியேற வேண்டுமென்பது இவர்களுடைய அடுத்த கொள்கை.

    2015.4

    “வேலையில்லாத் திண்டாட்டம்” “வீடில்லாத் திண்டாட்டம்” “தம் குழந்தைகளுக்குத் தாம் விரும்பிய பள்ளியில் இடம் கிடைக்காமை” எனப் பல்வேறு அங்கலாய்ப்புகளின் மத்தியில் வாழும் இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு இதற்கெல்லாம் காரணம் இந்நாட்டின் கட்டுப்பாடற்ற “வெளிநாட்டுக்காரரின் வருகை” எனும் கோஷம் மிகவும் இலகுவாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வாதமாகிறது.

    பிரதான கட்சிகளான “கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சி” என்பன இவ்வெளிநாட்டுக் கட்டுப்பாடு எனும் வாதம் இனத்துவேஷ அடிப்படியில் எழுந்தது என்பது போன்ற பாணியில் இது போன்ற விவாதங்களைத் தவிர்த்து வந்தது மக்களின் ஆர்வத்தை “யூகிப்” போன்ற கட்சியின் பால் திருப்பி விட்டது என்றே கூறலாம்..

    இங்கிலாந்து அளவில் சிறிய நாடு. தொடர்ந்தும் அளவு கணக்கற்ற முறையில் வெளிநாட்டிலிருந்து அதுவும் குறிப்பாக ஜரோப்பிய யூனியனின் புது வருகைகளான கிழக்கு ஜரோப்பிய நாட்டிலிருந்து மக்கள் இங்கே வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.

    தமது நாடுகளில் வறுமையின் எல்லைக்கோட்டில் வாழ்ந்த இவர்கள் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு பணிபுரிய சித்தமாகவிருக்கிறார்கள். இதனால் இங்கிலாந்து நாட்டு மக்களை பணிக்கு அமர்த்துவதை விட இவர்களை பணிக்கு அமர்த்துவதன் மூலம் வியாபார முதலாளிகள் தமது இலாபத்தை பெருக்கிக் கொள்வதால் இங்கிலாந்து நாட்டு மக்கள் வேலையில்லா பட்டியலை நோக்கி அதிவிரைவாகத் தள்ளப்படுகிறார்கள்.

    இது ஒரு சாராரின் வாதம்.

    எது எப்படி இருப்பினும் வரும் பொதுத்தேர்தலில் இப்பிரச்சனையே முதலிடம் வகிக்கப் போகிறது. தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி”யூகிப்” எனும் கட்சி கூட்டரசாங்கத்தில் இடம்பெறும் வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.

    2015.1

    எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் புலம் பெயர் தமிழன் எனும் ரீதியில் இந்தத் தேர்தல் இதுவரையிலுமான தேர்தல்களை விட அதிமுக்கியமானதொன்றாகிறது எனலாம்.

    “போகப் போகத் தெரியும் இப்பூவின் வாசம் புரியும்” எனும் பாடல் வரிகளுக்கெற்ப வரும் 2015 பொதுத்தேர்தல் எனும் பூவின் வாசத்தை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உணரலாம்.

    அடுத்தொரு மடலில் மேலும் பார்ப்போம்

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (134)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    வாரமொன்று ஓடியதால், காலைங்கு கரைந்ததினால் விரைந்து நானும் இங்கே வரைகின்றேன் இம்மடலை.

    barathi41882ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் திகதி அரும்பாகி 1921ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மண்ணில் உதிர்ந்த தமிழன்னையின் தவப்புதல்வன் எமதினிய புரட்சிக் கவிஞன் பாரதியின் 132 வது பிறந்தநாளில் இம்மடலை இங்கிலாந்திலிருந்து வரைந்து கொண்டிருக்கிறேன்.

    நான் ஈழத்தில் பள்ளி மாணவனாக பதின்ம வயதுகளில் வலம் வந்து கொண்டிருந்தபோது தமிழ் என் இதயத்தில் ஒரு பெரும் இடத்தை பிடித்திருந்தாலும் அதன் உண்மையான தாக்கத்தின் விளைவை அறியா முடியாமல் வாலிபக் கனவுகளில் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

    பாரதியின் பெருமைகளை என் தந்தை பட்டியலிட்டுக் கூறும்போது அதற்குரிய கனத்துடன் அவற்றைச் செவிமடுத்திருப்பேனா என்பது சந்தேகமே !

    அவ்வயதுக்கேயுரிய காதல் உணர்வுகளில் அழுந்தி அவற்றை வரிகளாக்கித் தந்த கவிஞர்களின் பாடல்களை வாய் முணுமுணுக்கும் போதும் அக்கவிஞர்களின் கைகளில் விளையாடிய தமிழின் நர்த்தனத்தைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு எனது சிந்தனை விரிவடைந்திருக்கவில்லை.

    காதலென்று கண்டதை கணக்கிட்டு கொண்டு மனதுக்குள் சிறகடித்துப் பறந்து விட்டு பின்பு அது காதலல்ல வெறும் கானலேயென்று உணர்ந்து கொண்டதும் அவ்வுணர்களின் வலி கொடுக்கும் சுகமான சுமைகளை சுவைக்கத் தொடங்கும் உள்ளத்தில் உறையத் தொடங்கின.

    புலம்பெயர் தேசத்தில் தனிமையான வாழ்க்கை அதனுள் எமது வாழ்க்கையை ஒட்டிச் செல்ல வேண்டிய காலத்தின் கட்டாயம் இப்படியான சூழல்களில். பலரின் சந்திப்புகளும் அச்சந்திப்புகளின் வழி நான் எடுத்து வைத்த அடிகளும் எனக்குக் கொடுத்த அனுபவச் சவுக்கடிகள் தமிழின் ஆழத்தை அதன் அழகின் வரைவிலக்கணத்தை எனக்கு புரியவைக்கத் தொடங்கியது.

    தமிழை நேசித்தேன், நேசிக்கிறேன். ஆனால் அந்நேசிப்புகளுக்காக நான் கொடுத்த விலைகள் ஏராளம். அத்தகைய ஒரு சூழலில் தான் என் தந்தை வழி என் சிந்தையில் ஏற்றப்பட்ட மகாகவி பாரதியின் பெருமைகளை ஏறெடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.

    பாரதியார் எனும் மகாகவியின் உடலானது மறைந்து போயிருக்கலாம் ஆனால் அவரால் ஏற்படுத்தப்பட்ட கவிதைவழி உணர்ச்சிப்பேரூற்று என்றுமே காயாமல் வீழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நீர்வீழ்ச்சியாகத் திகழ்கிறது .

    barathi3

    குற்றால அருவியில் வாழ்வின் சகல மட்டத்தில் வாழும் மனிதர்களும் நீராடி மகிழ்வது போல தமிழென்னும் அளவுகோலில் எத்தகைய அளவு அறிவுபடைத்தவர்களும் பாரதியின் படைப்புகள் எனும் அந்த தமிழ் ஊற்றில் நீராடி மகிழ்கிறார்கள்.

    அன்னைத்தமிழ் அவருக்களித்த மாபெரும் ஆற்றலை தான் வாழ்ந்த அக்கால சமுதாய மேம்பாட்டுக்காக ஓர் அஹிம்சா ஆயுதமாக உபயோகித்த மகாகவி தன் சொந்த வாழ்வில் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் அளித்தது வறுமை எனும் மாறாத சோகமே !

    தனது கருத்துக்கள் தனது சமூகத்தினரிடையே தனக்கு மாபெரும் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்று அறிந்திருந்திருந்தும் மனிதாபிமானமே மனிதனுக்குத் தேவையான முக்கியமான செல்வம் என்பதை வாழ்ந்து காட்டிய மகா மனிதராக மாறியவர் பாரதியார்

    தமிழ்ப்பா எனும் ஆயுதம் கொண்டு

    தரணியிலே தனித்தன்மை கொண்டு

    பாரதி எனும் எம் தமிழ்ப்பாட்டன்

    பாரதிர புதுயுகம் காணத்த துடித்தான்

    பெண் என்றும் பேதையரல்லர் அவர்

    புதுமைகள் புரிந்திடும் பூவையர் என்றே

    புரட்சிக் கருத்துக்கள் சொல்லி பாரதி

    பொங்கியதால் விழித்தது சமூகம்

    ஏற்புடை கருத்துக்கள் கூறாததினால்

    ஏற்றிட மறுத்திட்ட மூடர் நிறைந்ததினால்

    சித்தம் இழந்தவன் என்றெம் பாரதியை

    சிறுமதியர் விளித்ததும் அன்றேயன்றோ

    தமிழை நேசித்தான் மகாகவி பாரதி

    தமிழைச் சுவாசித்தான் எம் கவி

    தனினும் என்றும் மொழிமேல்

    தணியாத வெறி கொள்ளவில்லை

    யாமறிந்த மொழிகள் என்றே அவனும்

    அடுத்தவர் மொழியை அறிந்ததினால்

    தாய்மொழியின் பெருமைகளை அழகாய்

    தத்ரூபமாய் எடுத்தியம்பி கவிசொன்னான்

    அரும்பெரும் புலவனவன் பெருமைகளை

    அவந்தன் பிறந்தநாள் தனிலே

    நினைந்திட்டு சிலவரிகள் வரைந்து

    வணங்கிட்டேன் அவன் பாதங்களை

    பெண்களை பேதையர் என்றே எம் சமுதாயம் அடுக்களையில் பூட்டிவைத்து அழகு பார்ப்பதை துணிச்சலுடன் தூளாக்கும் கவிதைகள் தந்தான்.

    ஜாதி எனும் பெயரால் மனிதனை மனிதன் இழிவு செய்யும் நிலை மாற வேண்டும் என்று தான் பிறந்த சமூகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டினான் எம் தனிக்கவி.

    வாழ்க்கை வறுமை எனும் பெயரால் அவன் மீது வீசிய சவால்களைத் தமிழ் எனும் தன் தாய்மொழியின் துணை கொண்டே தகர்த்தெறிந்தான்.

    அவனுடைய கவிதைகள் ஒவ்வொன்றும் எம்மை நாமே புடம்போட்டுக் கொள்ள உதவும் என்பதே உண்மையாகும். பிறந்தோம், வாழ்ந்தோம்,மடிந்தோம் என்பது மட்டுமா எமது சரித்திரமாக வேண்டும்? எனும் கேள்விக்கணைகளினால் எம்மைத் துளைத்தெடுத்து சிந்திக்கத் தூண்டியவன்.

    220px-Subramanya_Bharathi

    இதோ,

    தேடிச் சோறுநிதந் தின்று – பல
    சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
    வாடித் துன்பமிக உழன்று – பிறர்
    வாடப் பலசெயல்கள் செய்து – நரை
    கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
    கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
    வேடிக்கை மனிதரைப் போலே – நான்
    வீழ்வே னென்று நினைத் தாயோ?

    ஈழத்தில் பிறந்து இங்கிலாந்தில் உழன்று கொண்டிருக்கும் என் மனதில் எண்ண அலைகளில் உற்பத்தியாகி அவற்றின் வழி என் தாய்மொழியாம் தமிழை சுவாசிக்கப் பண்ணிய அற்புதத் தமிழ்த் தலைமைந்தன் பாரதியாரின் பிறந்தாளில் உங்களோடு இணைந்து அவனை நினைந்து கொள்கிறேன்.

    மலரட்டும் மகாகவியின் நினைவுகள்

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (133)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள் !

    வாரங்களா ? நொடிகளா ? என்றே எண்ணமுடியாத வகையில் காலம் காற்றாகப் பறந்தோடிக் கொண்டிருக்கிறது.

    டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வந்து நிற்கிறோம்.

    சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் அபிமானம் கொண்டுள்ள எனது அன்பு நண்பர் ” அண்ணன் ” என்று நான் அழைக்கும் ஒருவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நற்செய்தி ஒன்றைத் தந்தார்.

    அவ்வண்ணனை எனக்கு அநேக வருடங்களாகத் தெரியும் நான் லண்டன் வந்த காலங்களில் அறிந்து பழகிய பின்னர் இடையில் சிறிது காலம் நாம் இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணித்ததினால் தொடர்பிழந்திருந்தோம்.

    சில வருடங்களின் முன்னால் நாம் மீண்டும் பழகுவதற்கான சந்தர்ப்பம் ஏகியது. அவரின் மீது நான் கொண்ட அபிமானம் உயர்ந்ததின் காரணம் அவர் ஈழத்தின் பிரச்சனைகள் காரணமாக அநாதரவாக விடப்பட்ட அனைத்து இனத்தைச் சேர்ந்த சிறுவர்களில் நூறுபேரை அவர்களது ஆரம்பக் கல்வியிலிருந்து பட்டப்படிப்பு முடியும் வரையிலான கல்வி மற்றும் பராமரிப்பை ஏற்றுக்கொள்வதோடு அவர்கள் தங்குவதற்கான அனைத்து வசதி கொண்ட விடுதி நிர்மானிப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதுவேயாகும்.

    அவரது ஆர்வம், அயராத உழைப்பு, அனாதரவான குழந்தைகளின் மீதான கருணை, ஜாதி, இன, மத பேதங்களைக் கடந்த அன்பு என்பவையேயாகும்.

    சரி இனி அவர் சொன்ன நற்செய்திக்கு வருவோம்.

    “ தம்பி, தேவகோட்டை ராமநாதன் லண்டன் வருகிறார் , இன்று காலையில் தான் தொடர்பு கொண்டார். அவர் எனது முயற்சிகளுக்கு ஆதரவாக ஒரு நிகழ்ச்சியை நடத்தித் தருவதாகக் கூறியுள்ளார் ” என்பதுவே.

    தேவகோட்டை ராமநாதன், அசத்தல் மன்னர்களில் முன்னனியில் நிற்பவர், “அசத்தல் மன்னர்” காமெடி கிங்” என பல பட்டப் பெயர்களை தனதாக்கிக் கொண்டவர். மிகவும் இளைய வயதினிலேயே கலைஞர் கருணாநிதியின் கையினால் பரிசு பெற்றவர். “தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு ” என்னும் நிகழ்ச்சியில் பரிசு பெற்றவர்.

    asak

    ஆமாம் அற்புதமான நகைச்சுவை, ஆன்மீகம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் கொடி கட்டிப் பறப்பவர். இருபதுகளின் மத்தியில் வாழ்ந்து கொண்டு ஜம்பதுகளுக்கேயுரித்தான அனுபவ முதிர்ச்சி கொண்டோருடன் கலந்துரையாடும் அனுபவத்தைத் தரும் அற்புத ஆற்றல் மிக்க இளம் தலைமுறைக் கலைஞர். சட்ட வல்லுனர்.

    செட்டிநாடு கலைத்தாயின் கருவறை. என் மானசீகக்குரு கவியரசர் கண்ணதாசனை ஈன்றெடுத்த அரும்பெரும் மண். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” எனும் அற்புத கருத்தை எமக்களித்த கவிஞர் “கணியன் பூங்குன்றன்” அவர்களை ஈன்றெடுத்த அரும்பெரும் மண். அத்தகைய அரும்பெரும் மண்ணில் உதித்த எம் இளங்கலைஞரே ” தேவகோட்டை ராமநாதன்”.

    அதுமட்டுமன்றி என் இனிய நண்பர்களாம் “ரவி தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன் ” ஆகியோரை ஈன்றெடுத்த அற்புத மண்ணில் பிறந்தவர் என் இனிய தம்பி “தேவகோட்டை இராமநாதன்”.

    இவரை நான் முதன் முதலில் சந்தித்தது 2012ம் ஆண்டேயாகும். இதே ” அண்ணன்” இதே நிதிசேகரிப்புக்காக வைத்த ஒரு நிகழ்விற்காக என் அருமைத்தம்பி சின்னத்திரை புகழ் ” ஷியாம் கணேஷ்” அவர்கள் மூலமாக ப்ரு நகைச்சுவை மாலைக்காக ஏற்பாடு செய்த குழுவில் “ரோபோ சங்கர்” “வடிவேலு பாலாஜி” ஆகியோருக்குத் தலைவராக தம்பி “தேவகோட்டை இராமநாதன்” வந்திருந்த போதே.

    இலண்டன் வந்த தேவகோட்டை இராமநாதன் அவர்களை இங்கு அழைத்திருந்த செட்டிநாட்டைச் சேர்ந்த இரு தம்பிகள் அண்ணாமலை , செந்தில் தியாகராஜன்” ஆகியோர் கடந்த 29ம் திகதி மாலை இலண்டன் சிவன் கோவில் மண்டபத்தில் இலண்டன் ” நகரத்தார் சங்கம்” சார்பில் ஒரு நகைச்சுவை மாலை நடத்தியிருந்தார்கள்.

    செட்டிநாடு தந்த ஒரு இனிய மாது “வள்ளி” என்பவர் இந்நிகழ்ச்சியை மிகவும் அழகாகத் தொகுத்து வழங்கினார். தேவகோட்டை இராமநாதன் அவர்களை அறிமுகம் செய்வதற்காக இலண்டனின் பிரபல்யம் மிக்க “சென்னைத்தோசை” உரிமையாளரும் முன்னால் இலண்டன் தமிழ்ச்சங்க தலைவருமான அசோகன் சின்னப்பன் அவர்கள் மிகவும் நகைச்சுவையாக நகைச்சுவைத் தென்றல் தேவகோட்டை இராமநாதன் அவர்களை அறிமுகப்படுத்தினார்.

    தொடர்ந்து பேசிய தேவகோட்டை இராமநாதன் அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துவிட்டார். அப்பப்பா ! ஒரு இளம் கலைஞருக்குள் இத்தனை சிரிப்பு வெடிகளா ?

    மிகவும் இளம் சிறுமிகள் தொடங்கி பருவக்குமரிகள் வரை அற்புதமான பரதநாட்டியத்தில் எம்மைத் திளைக்க வைத்து விட்டார்கள்.

    இடைவேளை வந்தது. அருமையான உணவு அதுவரை நடந்த நிகழ்ச்சிகள் மனதை நிறைத்ததைப் போல எமது வயிறை நிரப்பியது.

    அதைத்தொடர்ந்து நகைச்சுவைத் தென்றல் தேவகோட்டை இராமநாதன் தலைமையில் மனித வாழ்வை மேம்படுத்துவது பணமா ? குணமா ?எனும் பட்டி மன்றம். ஒரு நகைச்சுவைத் தென்றலின் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றம் என்றால் சிரிப்புக்கும், சிலேடைக்கும் கேட்கவா வேண்டும் ?

    ஒரு இனிய மாலைப்பொழுதை கழித்த மனநிறைவோடு அடுத்தொரு நகைச்சுவைத் திருவிழாவைக் கண்டுகளிக்கப்போகிறோம் எனும் எதிர்பார்ப்புடன் வீடு திரும்பினோம்.

    ஆமாம் டிசம்பர் 5ம் திகதி இரவு எனது ” அண்ணனின்” ஏற்பாட்டில் அருமைத் தம்பி “தேவகோட்டை இராமநாதன்” அவர்களின் நகைச்சுவைத் திருவிழா நிகழப் போகிறது.

    மீண்டும் வயிறு புண்ணாகப் போகிறதோ ? (சிரிப்பினால்)

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (133)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள் !

    வாரங்களா? நொடிகளா? என்றே எண்ணமுடியாத வகையில் காலம் காற்றாகப் பறந்தோடிக் கொண்டிருக்கிறது.

    டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வந்து நிற்கிறோம்.

    சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் அபிமானம் கொண்டுள்ள எனது அன்பு நண்பர், “அண்ணன்” என்று நான் அழைக்கும் ஒருவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நற்செய்தி ஒன்றைத் தந்தார்.

    20141129_221216அவ்வண்ணனை எனக்கு அநேக வருடங்களாகத் தெரியும் நான் லண்டன் வந்த காலங்களில் அறிந்து பழகிய பின்னர் இடையில் சிறிது காலம் நாம் இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணித்ததினால் தொடர்பிழந்திருந்தோம்.

    சில வருடங்களின் முன்னால் நாம் மீண்டும் பழகுவதற்கான சந்தர்ப்பம் ஏகியது. அவரின் மீது நான் கொண்ட அபிமானம் உயர்ந்ததின் காரணம் அவர் ஈழத்தின் பிரச்சனைகள் காரணமாக அநாதரவாக விடப்பட்ட அனைத்து இனத்தைச் சேர்ந்த சிறுவர்களில் நூறுபேரை அவர்களது ஆரம்பக் கல்வியிலிருந்து பட்டப்படிப்பு முடியும் வரையிலான கல்வி மற்றும் பராமரிப்பை ஏற்ருக்கொள்வதோடு அவர்கள் தங்குவதற்கான அனைத்து வசதி கொண்ட விடுதி நிர்மானிப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதுவேயாகும்.

    அவராது ஆர்வம், அயராத உழைப்பு, அனாதரவான குழந்தைகளின் மீதான கருணை, ஜாதி, இன, மத பேதங்களைக் கடந்த அன்பு என்பவையேயாகும்.

    சரி இனி அவர் சொன்ன நற்செய்திக்கு வருவோம்.

    “தம்பி, தேவகோட்டை ராமநாதன் லண்டன் வருகிறார் , இன்று காலையில் தான் தொடர்பு கொண்டார். அவர் எனது முயற்சிகளுக்கு ஆதரவாக ஒரு நிகழ்ச்சியை நடத்தித் தருவதாகக் கூறியுள்ளார் ” என்பதுவே.

    தேவகோட்டை ராமநாதன், அசத்தல் மன்னர்களில் முன்னனியில் நிற்பவர், “அசத்தல் மன்னர்” “காமெடி கிங்” என பல பட்டப் பெயர்களை தனதாக்கிக் கொண்டவர். மிகவும் இளைய வயதினிலேயே கலைஞர் கருணாநிதியின் கையினால் பரிசு பெற்றவர். “தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு” என்னும் நிகழ்ச்சியில் பரிசு பெற்றவர்.

    20141129_195119

    ஆமாம் அற்புதமான நகைச்சுவை, ஆன்மீகம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் கொடி கட்டிப் பறப்பவர். இருபதுகளின் மத்தியில் வாழ்ந்து கொண்டு ஜம்பதுகளுக்கேயுரித்தான அனுபவ முதிர்ச்சி கொண்டோருடன் கலந்துரையாடும் அனுபவத்தைத் தரும் அற்புத ஆற்றல் மிக்க இளம் தலைமுறைக் கலைஞர். சட்ட வல்லுனர்.

    செட்டிநாடு கலைத்தாயின் கருவறை. என் மானசீகக்குரு கலியரசர் கண்ணதாசனை ஈன்றெடுத்த அரும்பெரும் மண். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” எனும் அற்புத கருத்தை எமக்களித்த கவிஞர் “கணியன் பூங்குன்றன்”அவர்களை ஈன்றெடுத்த அரும்பெரும் மண். அத்தகைய அஎஉம்பெரும் மண்ணில் உதித்த எம் இளங்லைஞரே ” தேவகோட்டை ராமநாதன்”.

    அதுமட்டுமன்றி என் இனிய நண்பர்களாம் “ரவி தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன் ” ஆகியோரை ஈன்றெடுத்த அற்புத மண்ணில் பிறந்தவர் என் இனிய தம்பி “தேவகோட்டை இராமநாதன்”.

    இவரை நான் முதன் முதலில் சந்தித்தது 2012ம் ஆண்டேயாகும். இதே “அண்ணன்” இதே நிதிசேகரிப்புக்காக வைத்த ஒரு நிகழ்விற்காக என் அருமைத்தம்பி சின்னத்திரை புகழ் ” ஷியாம் கணேஷ்” அவர்கள் மூலமாக ப்ரு நகைச்சுவை மாலைக்காக ஏற்பாடு செய்த குழுவில் “ரோபோ சங்கர்” “வடிவேலு பாலாஜி” ஆகியோருக்கு தலைவராக தம்பி “தேவகோட்டை இராமநாதன்” வந்திருந்த போதே.

    20141127_195127இலண்டன் வந்த தேவகோட்டை இராமநாதன் அவர்4களை இங்கு அழைத்திருந்த செட்டிநாட்டைச் செநெர்ந்த இரு தம்பிகள் அண்ணாமலை ,செந்தில் தியாகராஜன்” ஆகொயோர் கடந்த 29ம் திகதி மாலை இலண்டன் சிவன் கோவில் மண்டபத்தில் இலண்டன் ” நகரத்தார் சங்கம்” சார்பில் ஒரு நகைச்சுவை மாலை நடத்தியிருந்தார்கள்.

    செட்டிநாடு தந்த ஒரு இனிய மாது “வள்ளி” என்பவர் இந்நிகழ்ச்சியை மிகவும் அழகாகத் தொகுத்து வழங்கினார். தேவகோட்டை இராமநாதன் அவர்களை அறிமுகம் செய்வதற்காக இலண்டனின் பிரபல்யம் மிக்க”சென்னைத்தோசை” உரிமையாளரும் முன்னால் இலண்டன் தமிழ்ச்சங்க தலைவருமான அசோகன் சின்னப்பன் அவர்கள் மிகவும் நகைச்சுவையாக நகைச்சுவைத் தென்றல் தேவகோட்டை இராமநாதன் அவர்களை அறிமுகப்படுத்தினார்.

    தொடர்ந்து பேசிய தேவகோட்டை இராமநாதன் அனைவரையும் வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்துவிட்டார். அப்பப்பா! ஒரு இளம் கலைஞருக்குள் இத்தனை சிரிப்பு வெடிகளா?

    20141129_201441_1

    மிகவும் இளம் சிறுமிகள் தொடங்கி பருவக்குமரிகள் வரை அற்புதமான பரதநாட்டியத்தில் எம்மைத் திளைக்க வைத்து விட்டார்கள்.

    இடைவேளை வந்தது. அருமையான உணவு அதுவரை நடந்த நிகழ்ச்சிகள் மனதை நிறைத்ததைப் போல எமது வயிறை நிரப்பியது.

    அதைத்தொடர்ந்து நகைச்சுவைத் தென்றல் தேவகோட்டை இராமநாதன் தலைமையில் மனித வாழ்வை மேம்படுத்துவது பணமா ? குணமா ?எனும் பட்டி மன்றம். ஒரு நகைச்சுவைத் தென்றலின் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றம் என்றால் சிரிப்புக்கும், சிலேடைக்கும் கேட்கவா வேண்டும் ?

    ஒரு இனிய மாலைப்பொழுதை கழித்த மனநிறைவோடு அடுத்தொரு நகைச்சுவைத் திருவிழாவைக் கண்டுகளிக்கப்போகிறோம் எனும் எதிர்பார்ப்புடன் வீடு திரும்பினோம்.

    ஆமாம் டிசம்பர் 5ம் திகதி இரவு எனது “அண்ணனின்” ஏற்பாட்டில் அருமைத் தம்பி “தேவகோட்டை இராமநாதன்” அவர்களின் நகைச்சுவைத் திருவிழா நிகழப் போகிறது.

    மீண்டும் வயிறு புண்ணாகப் போகிறதோ ? (சிரிப்பினால்)

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(132)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள்.

    எத்தியோப்பியா நாட்டிலே ஒரு சமநிலப் பிரதேசத்திலே தோன்றிய மனித சமுதாயம் இன்று உலகைப் பல கண்டங்களாகப் பிரித்து வெவ்வேறு கலாச்சாராப் பின்னணிகளுடன் தமது வாழ்க்கையை நிலை நிறுத்தியுள்ளார்கள்.

    மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் அவர்களின் வாழ்க்கை விரிவடைந்த விகிதாச்சாரமும் உலகின் காலநிலை மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நடந்தேறியுள்ளது என்பதே விஞ்ஞான உலகின் தீர்ப்பு.

    இன்று உலகின் பல பாகங்களிலும் வாழும் மனிதர்கள் தமது முன்னோர்களின் ஆதிகால வாழ்க்கை முறையையும், தாம் இன்று வாழும் நிலைக்கு வந்தடைந்த பாதையின் நெளிவு சுளிவுகளையும் ஆய்ந்தறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    அதன் வழி உலகின் பல பாகங்களில் வாழும் பல சமுதாயங்கள் பலவகையிலான அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவ்வகையிலான அகழ்வாராய்ச்சிகளின் மூலமாகவும், பெரிய கட்டிடங்களின் அத்திவாரங்களுக்காக நிலங்களை வெட்டும் போது, தற்செயலான கண்டு பிடிப்புகளின் மூலம் மறைந்து போன பல சமுதாயங்களிற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

    என்ன, எங்கே இழுத்துச் செல்கிறது சக்தியின் இந்தப் பீடிகை என்று எண்ணத் தோன்றுகிறது இல்லையா ?

    சில வருடங்களுக்கு முன்னால் என் மனைவி பணிபுரியும் நிறுவனத்தின் கிளை மூடப்பட்டு பலருக்கு வேலை பறிபோனது. தெய்வாதினமாக அக்கிளையில் பணிபுரிந்தவர்களில் மிஞ்சிய இருவரில் என் மனைவியும் ஒருவரானார். ஆனால் அவரின் அலுவலகம் நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து 120 மைல்கள் தள்ளியுள்ள “ரஹ்பி (Rugby) “ எனும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

    ப்ராஜெக்ட் மனேஜர் பதைவியிலிருக்கும் என் மனைவிக்கு இரண்டு நாட்கள் அலுவலகத்திலும் மீதமாயிருக்கும் மூன்று நாட்கள் இல்லத்திலிருந்து ( வாடிக்கையாளர்களை சந்திக்காத போது) பணிபுரியும் சலுகை அளிக்கப்பட்டது. ஆக என் மனைவு வாரத்தில் ஒருநாள் காலை 6 மணிக்கு கிளம்பி தனது அலுவலகம் செல்வார் அன்றைய இரவு அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கி அடுத்தநாள் காலை மறுபடி அலுவலகம் சென்று மாலையில் திரும்பி எமது இல்லம் வருவார்.

    rugbyஅப்படி அவர் அங்கு செல்லும் வேளைகளில் எனக்கு அலுவலகத்தில் விடுமுறை எடுக்க வசதி இருந்தால் நானும் அவருடன் ரஹ்பி செல்வது உண்டு. அப்படி நேற்றைய முந்தினம் காலை அவர் தனது அலுவலகம் செல்லும் போது நானும் சென்றேன்.

    பகலில் அவர் அலுவலகம் போனதும் நான் ஹோட்டல் அறையில் தங்கி ஓய்வெடுப்பேன். இல்லையானால் அங்குள்ள சில இடங்களைச் சென்று பார்ப்பது வழக்கம். அப்படி இம்முறை நான் சென்று பார்க்க விழைந்த இடம் ரஹ்பி நகரத்தின் நூதனசாலையாகும். அவர்களின் பொதுஜன நூலகத்துடன் சேர்ந்த வகையில் நூதனசாலையும், படக் கண்காட்சி நிலையமும் அமைந்துள்ளது.

    20141125_131343[1]இந்நூதனசாலையில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் மிகவும் விசித்திரமானவை. பண்டைய காலத்தில் ஒருவருடைய நிலத்தினுள் மற்றொருவர் அனுமதியின்றி நிழைவது மிகவும் அதீதமான குற்றமாகக் கணிக்கப்பட்ட காலமது. “உத்தரவின்றி உட்பிரவேசியாதீர் ” என்னும் பாதகையத் தாங்கியிருப்பன போலும். அப்படி நுழைந்த யாரும் பிடிக்கப்பட்டால் தண்டனையாக அவர்களைப் பிணைப்பதற்கான இருப்புச் சட்டம் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

    மேலும் பலவகையான காட்சிப் பொருட்கள் அதாவது 1930ம் ஆண்டு தொடங்கி 1990கள் வரை “ரஹ்பி” எனும் அந்த இடத்தில் வாழ்ந்தவர்கள் உபயோகப்படுத்திய சில பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்நூதனசாலையில் அவர்கள் சேகரிக்கிம் பொருட்கள் அப்பகுதியில் வாழ்வோரிடமிருந்தே பெறப்படுகிறது. அப்படியே அக்கண்காட்சியைப் பார்த்துக் கொண்டே வலம் வந்து கொண்டிருந்தேன். அப்போது கண்களில் ” ரால்ஸ் ராய்ஸ் ( Rolls Royce) “ எனும் பிரசித்தி பெற்ற கம்பெனியின் இயந்திரம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

    640px-Tripontium_bathouse_remainsஅப்பகுதியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டு பிடிக்கப்பட்ட ரோமானிய காலச் சமுதாயத்தின் அடையாளங்கள் பல அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மிகவும் அதிசயமான முறையில் அந்நாளைய ரோமானியச் சமூகம் வெப்பௌ அறைய எப்படி நிர்மாணித்திருந்தார்கள் என்பதும் விளக்கப்பட்டிருந்தன. இந்த இடம் அன்றைய ரோமன் இங்கிலாந்தில் “ட்ரப்பொண்டியம் (Tripontium)“ என்று அழைக்கப்பட்டது.

    20141125_131727[1]அது மட்டுமின்றி அன்றைய ரோமன் சமூகத்தினரின் ஆபரணங்கள், உடையமைப்புகள் என்பன பற்றியும் விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அன்றைய ரோமன் மக்களினது இறை நம்பிக்கை பற்றியும் குறிக்கப்பட்டுள்ளது. மனிதரின் அன்றாட வாழ்க்கையில் தெய்வங்களின் ஈடுபாட்டால் மற்ரங்கள் நிகழ்கின்றன என்று அன்றைய ரோமானிய சமூகம் நம்பியது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட சமூகத்தினரினது புராதனச் சின்னங்களின் கண்டுபிடிப்பு அவர்களின் வாழ்க்கை முறைகளை பற்றிய ஒரு சிறுகுறிப்பு உள்ளடங்கிய வீடியோ கண்காட்சி ஒன்று ஏறத்தாழ 4 நிமிட நேர வரையிலானது அங்கே காட்சிக்காக நிறுவப்பட்டுள்ளது.

    தமது முன்னோர்கள் நாம் வாழும் இன்றைய நிலைக்கு வரும் பாதையில் சந்தித்தவைகள் எவை என்பதை தம்மால் முடிந்த அளவிற்கு பாதுகாத்து அதை அனைவரின் கண்காட்சிக்காக இலவசமாகக் கட்டணமின்றி அனுமதிலும் இந்நாட்டவரின் இக்குணாதிசயம் மிகவும் போற்றப்படக்கூடிய ஒன்று.

    இப்படியான ஒரு மனப்பான்மை கொண்டவர்களால் தான் தமது நாட்டைப் பற்றிய பெருமையைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. அப்படி எம் நாட்டின் மீது நாம் பெருமை கொண்டால்தான் அதனைச் சுத்தமாக வைத்திருப்பது கொண்டு அதற்கான காரியங்களை எதுவித ஊழலுமின்றி புரியக்கூடிய மனோநிலை கிடைக்கிறது.

    அப்படியாயின் நாம் எமது புராதானச் சினக்களையும், முன்னோர்களிம் சரித்திரத்தையும் எப்படிப் பேணுகிறோம் ? சிந்திக்க வைக்கும் கேள்வி இல்லையா ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இனியதோர் ஈழத்து எழுத்தாளர் இறை உலகெய்தினார்

    சக்தி சக்திதாசன்

    ஈழத்து எழுத்தாளரும் “மித்ரா” அச்சக உரிமையாளருமான அன்பு ஐயா எஸ்.பொ அவர்கள் நேற்றைய தினம் இறைஉலகெய்தினார் எனும் துயரச் செய்தியின் பின்னனியில் அவருடனான என் நினைவுகளை இங்கு பதிவிடுகிறேன்.

    ass

    2005ம் ஆண்டு என்று நினைக்கிறேன். நிலாச்சாரல் இணைய இதழை நடத்தி வருபவரும். கண்னி மென்பொருள் வல்லுனரும், என் இனிய தோழியுமான நிலா என்றழைக்கப்படும் நிர்மலா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பிர்பலங்கள் பலரை நிலாச்சாரல் இணைய இதழுக்காக பேட்டி கண்ட நேரம்.

    அப்போது என் அதிர்ஷடவசமாக சென்னையிலே தங்கியிருந்தார் நேற்றுக் அவ்ய்ஸ்திரேலியாவில் காலமான அன்பு ஜயா ம் ஈழத்து எழுத்தாளர் திரு. எஸ்.பொ அவர்கள்.

    சந்திப்பாரோ ? மாட்டாரோ ? எனும் ஒரு சந்தேகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

    மிகுந்த மகிழ்ச்சியுடன் ” சக்தி சக்திதாசனா? ஆமாம் உனது எழுத்துக்களை படித்திருக்கிறேன், அச்சகத்திற்கு வா ? சிற்றுண்டி அருந்திக் கொண்டே பேசலாம் ” என்றார் அந்த அன்பு எழுத்தாளர்.

    ஈழத்து இலக்கியச் சிற்பி ஒருவரை இந்தக் கற்றுக்குட்டி என்ன நேர்காணல் காணுவது ? ,அமதுக்குள் ஒரு ஆதங்கம் இருப்பினும் இத்தகைய புகழ் மிக்க என் அன்னை நாட்டு எழுத்தாளரை தமிழக மண்ணில் சந்திப்பதையிட்டு பெரு மகிழ்வோடு அவரைக் காணச்சென்றேன்.

    இனிவருவது ஏற்கனவே நிலாச்சாரலில் வெளிவந்த என்னுடனான அவரது நேர்காணல். நிலாச்சாரலுக்கு என் மனமார்ந்த நன்றியறிதல்களைச் செலுத்திக் கொண்டு அதை இங்கே சந்தர்ப்பம் கருதி மீள்பிரசுரிக்கிறேன்.

    இந்த நேர்காணலைத் தவிர்த்து அவர் எனக்கு தனது அனுபவம் சார்ந்த பல அறிவுரைகளைத் தந்தார். அவை என்றும் என் மனப்பெட்டகத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டேயிருக்கும்..

    காலையில் 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் வாருங்கள், காலைச் சிற்றுண்டி அருந்தியபடியே பேசலாம் ” என அன்பான, நட்பு மிளிர்ந்த அதிகாரமிக்க அழைப்பு. அதுவரை நான் சந்தித்திராத, சந்திக்கத் துடித்துக் கொண்டிருந்த அந்த ஈழத்து உதாரண எழுத்தாளர் அவர்களோடு நடந்த முதல் தொலைபேசி உரையாடலின்போது அவரின் வெளிப்படையான பேச்சும் அந்த நட்புணர்வும் அவர்மீது கொண்டிருந்த மதிப்பை இன்னும் பெருக்கியது.

    திரு எஸ். பொன்னுத்துரை எனும் எஸ்.பொ. அவர்கள் பலவருடங்களுக்கு முன்னால் ஈழத்தை விட்டுப் புலம் பெயர்ந்திருந்தாலும் ஈழத்து இலக்கியத்தில் பிகப்பெரிய பங்கு வகிக்கிறார். சென்னையில் கோடம்பாக்கத்தில் “மித்திரா” என்னும் பதிப்பகத்தை நிறுவி, அதை இயக்கி வரும் இவர், ஆஸ்திரேலியாவை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டவர்.

    மனந்திறந்து அவர் நிலாச்சாரல் வாசகர்களுக்காக அளித்த பேட்டி இதோ !

    உங்களுடைய இலக்கிய ஆர்வத்தின் பின்னணி என்ன ?

    என்னுடைய இலக்கிய ஆர்வம் மிகச் சிறுவயதிலேயே உருவானது. எனது முதலாவது கவிதை 14 வயதில் அச்சில் வந்தது. இதற்குக் குடும்பப் பின்னணி காரணமல்ல.மாணவர் சமுதாய இலக்கிய அரங்கில் இணைந்து , இலக்கியம் சமுதாய முன்னேற்றத்திற்கு ஓர் சரியான சாசனம் எனும் எண்ணம் கொண்டு, இளம் வயதிலேயே ஈடுபாடு வந்தது.

    உங்கள் எழுத்துக்கு முன்னோடிகளாக யாரைக் கருதுகிறீர்கள் ?

    என்மீது தாக்கம் ஏற்படுத்தியவர்களுள் பாரதியாரே முக்கியமானவர். அவரின் தாக்கமே என்னை முதலில் கவிதை எழுதத் தூண்டியது. தமிழினால் சமுதாயத்தை எந்தெந்த வகையிலெல்லாம் விழிக்கப்பண்ண முடியுமோ , அவ்வழிகளிலெல்லாம் அவரது கவிதையின் வீச்சுச் சென்றது. மாகாகவியே என்மீது தனது கவிவீச்சுத் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

    இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கிய நிலை உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக உள்ளதா
    இல்லை கவலையாக உள்ளதா ?

    துணிவாகச் சொல்லுவேன் ஈழத்துத் தமிழ் இலக்கியப் படைப்புக்கள் , இலக்கியப் படைப்புக்களாக இல்லை. அதற்காக இலக்கியம் தற்காலப் போர் சார்ந்ததாகவோ அன்றி அதனைத் தவிர்த்ததாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் தற்கால நடைமுறை பதிவுசெய்யப்படவில்லை. ஈழத்துத் தமிழ்ப் பகுதிகள் தவிர்ந்த கொழும்பு போன்ற இடங்களில் இருந்து கொண்டு வெளிவரும் ஆக்கங்கள் , அரசாங்கக் கண்காணிப்பின் கீழ், தணிக்கைக்கு உட்படுத்தப்படும்போது , எவ்வாறு மக்களின் உண்மை நிலையை உணர்த்த முடியும்? இந்த இடைவெளியைப் பயன்படுத்திச் சிலர் , வெற்றிடத்தை நிரப்புவதற்காக மட்டுமே எழுதுவது போன்றும் தென்படுகிறது .

    நீங்கள் ஈழத்தை விட்டுப் புலம்பெயர வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டபோது, உங்கள்
    மனதினில் விளைந்த உணர்ச்சிகள் என்ன ?

    நான் ஈழத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் புலம் பெயர்ந்தவனல்ல. அரசியல் காரணங்களினால் எனக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய பதவியுயர்வுகள் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டதாலும் மற்றும் பல அரசியல் காரணங்களினாலும் நான் ஈழத்தை விட்டுப் புலம்பெயர்ந்தேன் என்பதுவே உண்மை. 1983ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரங்களின் பின்னால் இனக்கலவரத்தின் பாதிப்பு கூர்மைப்படுத்தப்பட்டது. எமது பழைய தமிழ்த்தலைவர்கள் என்றுமே தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கவில்லை. 1959ம் ஆண்டு திரு.செல்வநாயகம் செய்த ஒப்பந்தத்தின் போதுதான் ஈழத்தில் தமிழ்த்தேசியம் முன்னெடுக்கப்பட்டது. தமிழகத்தில் தமிழ் மறைந்து கொண்டிருக்கிறது , ஈழத்தமிழர்
    தமிழை முதன்மைப்படுத்துகிறார்கள் என்று கேட்கும் போது மகிழ்வாக இருந்தாலும், ஈழத்தில் நடக்கும் இந்தப் போராட்டத்தின் விளைவாகவே ஈழத்தமிழர் தமிழ்த் தேசியத்தில் தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்பதுவே உண்மை. இன்று உலகமெங்கும் தமிழ்த்தேசியம் உலகத்தமிழரால் முன்வைக்கப்படும்போது , நானும் அந்த உலகத்தமிழர்களில் ஒருவன் எனும் நிலையால் பெருமையான உணர்ச்சியே மேலோங்கியுள்ளது.

    நீங்கள் தமிழ்நாட்டோடு அதிகம் தொடர்புடையவர் என்னும் நிலையில் , ஈழத்தமிழர்கள் மீதான, தமிழக மக்களின் தற்போதைய கணிப்பு என்ன என்று எண்ணுகிறீர்கள் ?

    ஈழத் தமிழ் மக்கள் மீது தமிழக மக்கள் கொண்டிருந்த அனுதாபம் குறைந்து கொண்டே போகிறது. இதற்கு ராஜீவ் காந்தியின் கொலை, மற்றும் சில ஈழத்தமிழர்களின் பிழையான நடவடிக்கைகள் பத்திரிகைகளினால் பெரிது படுத்தப்படுவது போன்ற பல காரணங்கள் உண்டு.

    ஈழத்தமிழ் இலக்கியங்கள் அந்தநாட்டுப் போரைச் சார்ந்ததாக இருக்கவேண்டும்
    என்றொரு எதிர்பார்ப்பு இருக்கிறதா? அப்படி இருந்தால் அது சரியானதா?

    இலக்கியங்களை எழுதுபவர்கள் கோபுரங்களில் இருந்து கொண்டு எழுதுவதில்லை. அவர்கள் அந்த மண்ணின் மக்களோடு வாழ்ந்து கொண்டுதான் இலக்கியம் படைக்கிறார்கள். ஆனால் அதற்காகப் படைக்கப்படும் அனைத்தும் போரைப்பற்றித்தான் இருக்கவேண்டும் என்பதல்ல.சமகால நிகழ்வுகளும் பதிவு செய்யப்படவேண்டும். மனதிலே தமிழ்த்தேசியத்தையும், ஈழத்தமிழிலக்கிய மரபுகளையும் சுமந்து கொண்டு புலம்பெயர்ந்த மக்கள் , அதை இலக்கிய நாற்றாக்கி, போராட்டத்தின் பின் ஈழத் தமிழிலக்கிய மண்ணிலே நாட்டி இலக்கியத்தைப் பேணவேண்டும் என்பதிலே நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.

    ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தில் எப்படியான வரவேற்பு இருக்கிறது?

    அந்தக் காலந்தொட்டு இன்றுவரை தமிழ் இலக்கியத்தின் பிறப்பிடம் தமிழகம் என்றும், அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படவேண்டும் என்றும் எண்ணும் மனோபாவம் வணிக ரீதியாக உண்டு. ஈழத்துத் தமிழெழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு ஓர் தனி அகராதி வேண்டும் எனும் கருத்தும் உண்டு.

    ஆனால் இந்த மனோபாவம் இன்று மாறிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் தமிழகம் இன்று தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, இன்குலாப் போன்றவர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை ரசிக்கிறார்கள், வாசிக்கிறார்கள். வணிகரீதியில் மட்டுமே நாம் பிரச்சனையை எதிர் கொள்கிறோம். இது முற்றிலுமாக மாறவேண்டும் என்பதே எனது விருப்பம்.

    புலம்பெயர்ந்த படைப்புக்கள் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

    சென்னையிலே ஒரு புத்தக வெளியீட்டு விழாவிலே, பல முன்னணி எழுத்தாளர்களின் மத்தியில் 21ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தைப் புலம்பெயர்ந்த தமிழர்களே தலைமைப்படுத்திச் செல்வார்கள் என உரக்கச் சொன்னவன் நான். ஆனால் தற்போது புலம்பெயர் நாடுகளிலே தமிழ் இலக்கியத்திற்கு மத முலாம் பூசப்பட்டு, பின்னிலைப் படுத்தப்படுகிறதோ என அஞ்சவேண்டியுள்ளது. இந்த நிலை மாறவேண்டும் என எண்ணுகிறேன்.

    புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் தாம் வாழும் நாடுகளின் சூழல்களை மையப்படுத்தி
    இலக்கியம் படைப்பது தமிழை முன்னேற்றும் என எண்ணுகிறீர்களா?

    நிச்சயமாக ! அப்படியான ஒரு அணுகுமுறைதான் “குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடிக்கொண்டிருக்கும்” எம்மை ஒரு உலகளாவிய ரீதிக்குக் கொண்டு வரும். மற்றைய நாட்டு மொழியைப் படித்துத்தான் அவர்களது கலச்சாரங்களை ஒரு கண்னாடியால் பார்ப்பதுபோல் இல்லாமல் எமது எழுத்தாளர்கள் தமிழிலேயே அதை வெளிக்கொணரவேண்டும். அது மட்டுமன்றி அந்தந்த நாட்டு மொழிகளில் கூடப் புலம்பெயர்ந்தவர்கள் கவிதை,கட்டுரை வரைந்து தமிழிலக்கியச் சிந்தைகளை விசாலப்படுத்த வேண்டும்.

    கணணியில் தமிழ் பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன ?

    இது ஒரு மிகவும் நல்ல முன்னேற்றமே ! தமிழ்நாட்டு முயற்சிகள் அதிகம் இருந்தாலும் மென்பொருளாக்கம் முதலியவற்றில் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழரின் பங்களிப்பு இன்றியமையாததாகிறது. கணன்¢யின் தேவையைக் கூட்டி வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தது உலகத்தமிழன் என்று சொன்னால் மிகையாகாது. கணணியில் தமிழ் கண்ட வளர்ச்சி வாசிக்கும் பழக்கத்தைக் கூட்டுமேயன்றிக் குறைக்காது என்பது எனது கருத்து.

    புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளுக்கு உங்கள் அறிவுரை என்ன?

    யாருக்கும் அறிவுரை சொல்லும் தகுதி எனக்குக் கிடையாது. ஆனால் வேண்டுகோள் விடுக்கிறேன். எங்கள் யாழ்ப்பாணத்துக் காணிச்சண்டை, வேலிச்சண்டை, ஜாதிச்சண்டை அனைத்தையும் விடுத்துத் தமிழைச் சிந்தியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்பியுங்கள். உங்களுக்குத் தமிழ் மீது நேசம் இருக்குமானால் தயவுசெய்து ஏதாவது வகையில் தமிழ்ப்பணி செய்யுங்கள். தமிழ் நூல்களை வாங்கிப் படியுங்கள்.

    அன்பு மிகுந்த வாசகப் பெருமக்கள் இந்தப் பேட்டி 2005ம் ஆண்டு இடம்பெற்றது என்பதனையும் எனது கேள்விகளும், அவரது பதில்களும் அன்றைய காலச் சூழலின் பின்னனியில் இருந்தன என்பதையும் படிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டுகிறேன்..

    அன்பு ஜயா எஸ்.பொ அவர்களின் ஆத்மசாந்திக்காக அனைவர்க்கும் பொதுவான அந்த இறையின் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(131)

    சக்தி சக்திதாசன்.

     

     

    LOECD1

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    மற்றொரு வாரத்தில் உங்களுடன் இணைவதில் பெரு மகிழ்வடைகிறேன்.

    இலண்டன் பி.பி.ஸி தொலைக்காட்சியில் சமீபத்தில் ” உலகில் உயிரினங்கள் ( Life on Earth ) “ எனும் ஒரு தொடர் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.

    அந்நிகழ்ச்சியை பார்வையுற்ற போது என் மனதில் பல நினைவலைகள் அதிர்ந்து எழுந்தன.

    இப்பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் எத்தனையோ வகையானவை. அவை ஒவ்வொன்று வாழும் வகைகள் வேறுபட்டவை.

    இப்பூமி உருவானதாகச் சொல்லப்பட்ட காலத்திலிருந்து வாழ்ந்த உயிரினங்கள் பல அக, புற சூழல்களின் காரணத்தினால் முற்றாக அழிந்து போயின.

    வேறு பல வாழ்க்கையின் சவால்களை சந்திப்பதற்காக மாறும் சூழல்களினால் தம்மை மாற்றியமைத்துக் கொண்டுள்ளன.

    ஏன் குரங்கு வடிவிலிருந்து மனித வடிவிற்கு மாற்றம் காணக் காரணம் கூட காலநிலை மாற்றங்களினால் ஏற்பட்ட சவால்கள் என்றுகூடக் கூறப்படுகின்றன..

    இந்நிகழ்ச்சியில் உயிரினங்கள் சிலவற்றின் வாழ்க்கை அணுகுமுறைகளை அவை பிறந்தது முதல் அவைகளின் பருவமாற்றங்களினூடக நிகழும் மாற்றங்களைக் கையாளும் வகையில் ஆராய்ந்திருக்கிறார்கள்.

    இவற்றில் சிலவற்றை ஒரு பேச்சுக்காக எடுத்துப் பார்ப்போம்.

    monkeysபால பருவத்திலிருந்து வாலிபப் பருவத்தையடைந்த “சிம்பன்ஸி” எனும் வகையைச் சேர்ந்த குரங்கு ஒன்றைப் பார்க்கிறார்கள். பால பருவ குரங்குகளுடன் இணைந்து விளையாடுவதைத் தவிர்த்த இக்குரங்கு அக்குரங்குக் கூட்டத்தின் முன்னனித் தலைமைக் குரங்குகளுடன் தன்னை இணைத்துக் கொள்வதற்காக முயன்று தோல்வியடைந்து பின் வாங்குகிறது.

    இதனுடைய இம்முயற்சி எதற்காக? அக்குரங்குக் கூட்டத்தில் தன்னுடைய அந்தஸ்தை முன்னேற்றிக் கொள்வதற்காகன முயற்சி என்கிறார்கள்.

    அந்தஸ்தை முன்னேற்றிக் கொள்வது ஒன்றே உணவு பெறுவதில் முக்கியத்துவதையும், பெண் குரங்குகளுடனான உறவுகளில் முக்கியத்துவம் பெறுவதற்காகவும் என்று சொல்லப்படுகிறது.

    antஅடுத்து அமெரிக்காவில் அரிசோனா எனும் மாநிலத்தில் உள்ள ஒரு எறும்புச் சமுதாயத்தைக் காட்டுகிறார்கள். மழை பெய்தவுடன் ஈரமான நிலத்தில் தனக்கு ஒரு புற்று ஏற்படுத்துவதற்காக இராணி எறும்பு தரையைக் கிண்டத் தொடங்குகிறது. அதனுடன் சேர்ந்து இன்னும் ஓர் ஏழு இராணி எறும்புகள் அக்குழியைத் தோண்டுகின்றன.

    அமைக்கப்பட்ட புற்றினுள் இந்த எட்டு இராணி எறும்புகளும் முட்டையிட்டு பல தொழிலாளி எறும்புகளைத் தோற்றுவிக்கின்றன.

    அதன் பின்பு நடப்பதுதான் விசித்திரம்! அரசியலோ?

    அப்புற்றினுள் ஒரேயொரு இராணி எறும்புதான் அதிகாரம் செய்ய முடியும் விளைவு ஏழு இராணி எறும்புகள் அவைகளால் உருவாக்கப்பட்ட தொழிலாளி எறும்புகளினாலேயே அக்குவேறு ஆணிவேறாகப் பிரிக்கப்பட்டு வளரும் தலைமுறைக்கு உணவாக்கப்படுகின்றன.

    மிஞ்சிய அந்த ஒரு இராணி அவ்வெறும்புக் குழு அனைத்துக்கும் அதிகாரம் செய்யும் தலைமைத்துவத்தைப் பெறுகிறது .

    தண்ணீரிலே நீந்தும் ஒருவகை மீன் தனக்குத் தேவையான உணவை தன் வாயிலிருந்து சீறியடிக்கும் நீர்க்கற்றையின் மூலம் இலைகளில் ஒளிந்திருக்கும் பூச்சியை அடித்து நீரினுள் வீழ்த்தி அதனை உட்கொள்கின்றது.

    அதனைப் பார்த்துத் தானும் பழகிக் கொள்ளும் மீன்குஞ்சு கஷ்டப்பட்டு அடித்து வீழ்த்திய பூச்சியை அருகிலிருந்த பெரிய மீன் பாய்ந்து லபக்கென்று விழுங்க்கிக் கொள்கிறது. அந்தோ பாவம் அச்சிறிய மீன்!

    evolutionஇத்தகைய நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனதில் அவைகளுக்கும் மனிதர்களாகிய நமக்கும் என்ன வேறுபாடு எனும் எண்ணம் தலைதூக்கியது.

    பகுத்தறிவு !

    ஆமாம்… அதன் மூலம் மட்டுமே நாம் நம்மை நாகரீகமாக வளர்த்துக் கொண்டு மனிதர்கள் என்று கூறித் தம்பட்டம் அடித்து அலைகின்றோம்.

    ஆனால் பகுத்தறிவற்ற இவ்வுயிரினங்களுக்கும் நமக்கும் அப்படி பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

    உடைகள் அணிவதிலும், நம்மை அறிவாளிகளாகக் காட்டிக் கொள்வதிலும் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம் … ஆனால் அடிப்படையான தேவைகளின் உணர்வுகள் மாறுபடவில்லை.

    மனிதர்களும் அதே தேவைகளுக்குகாகத்தான் அன்றாடம் ஓடிக் கொண்டிருக்கிறோம்..

    ஆனால் தமது வயிற்றுப்பசியை போக்கிக் கொள்ளவும், தமது சந்ததியைப் பெருக்கவுமே தமது உழைப்பை ஈந்திடும் விலங்குகள் அத்தோடு தமது இலக்குகளை நிறுத்திக் கொண்டு விடுகின்றன.

    ஆனால் மனிதர்களாகிய நாமோ நமது தேவைகளுக்கு மீறி சேர்க்கத் தலைப்பட்டு பேராசையினால் உந்தப்பட்டு அல்லல்படுகின்றோம்.

    மதம், இனம், மொழி, நிறம் எனப் பல்வேறு வேறுபாடுகளுக்கு முதலிடம் கொடுத்து நம்மைப் போன்ற அடுத்த மனிதர்களை அழித்துக் கொண்டிருக்கிறோம்.

    நாமும் வாழ்ந்து அடுத்தவரும் வாழ்தற்கான ஆதாரங்கள் பலவிருந்தும், அந்த அடுத்தவருக்குக் கிடைக்க வேண்டியதையும் நாமே அமுக்கிக் கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தினால் நமது மனவளர்ச்சியை நாமே குந்தகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

    ஓ ….இந்தச் குட்டைக்குள் ஊறும் ஒரு மட்டைதான் நானுமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    படம் உதவிக்கு நன்றி: http://www.trunkrecords.com/turntable/life_on_earth.shtml & BBC

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . 130

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    இதோ அடுத்தொரு மடல், அடுத்தொரு வாரம், அடுத்தொரு உறவாடல்.

    கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் 9ம் திகதி இங்கிலாந்தில் போர்களில் மடிந்த வீரர்களை நினைவு கூறும் “நினைவு கூறும் ஞாயிறு” (Remembrance Sunday).

    கடந்த இரண்டு மூன்று வாரங்களாகவே எனது மனைவி இலண்டன் டவர் ஹில் எனும் இடத்தில் முதலாவது உலக மகாயுத்தத்தின் ஆரம்பத்தின் நூறாவது ஆண்டையொட்டி அமைத்திருந்த “பொப்பி” என்றழைக்கப்படும் செந்நிறத்திலமைந்த செயற்கை மலர்களால் அமைக்கப்பட்ட ஒரு அலங்காரத்தைப் பார்வையிட வேண்டுமென்ற தன் விருப்பத்தை அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள்.

    சரி! 9ம் திகது ஞாயிற்றுக்கிழமை செல்வோமே என்று ஒரு திட்டம் மனதிலிருந்தது. ஆனாலும் லண்டன் காலநிலை தான் நம் எண்ணப்படி நடப்பதில்லையே! எனவே ஒருவேளை அன்று இயற்கை அவ்வீரர்களை எண்ணித் தாரை தாரையாக கண்ணீர் வடிக்க எண்ணி மழையாகப் பொழியாரம்பித்தால் எமது திட்டம் தவிடு பொடி என்றே நினைத்திருந்தோம்.

    லண்டனில் எங்கு செல்வதானாலும் வசதியின் நிமித்தம் காரில் ஏறி உட்கார்ந்து சென்று விடுவதே வழக்கம். எனவே ஞாயிற்றுக்கிழமை லண்டனுக்கு செல்வதானால் பேரூந்திலேயே செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தோம்.

    சரி ஒருபடியாக ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. என்னே ஆச்சரியம் இயற்கை எம்மேல் கருணை கூர்ந்தது போலும்! மழை வருவதற்கான அறிகுறி இல்லை.

    அவசரம் அவசரமாக கிளம்பினோம் சரியாக 8.25 க்கு பேரூந்தில் ஏறி குறிய்டன் நோக்கிச் சென்றோம். அங்கு சென்ற பின்னர் தான் அங்கிருந்து எந்த எண் பேரூந்தைப் பிடித்து எப்படி ” டவர் ஹில் ” செல்வது என்று திட்டம் தீட்ட வேண்டும்.

    பேரூந்தின் வருகை நேரத்தை இணையத்தில் அறிந்து கொண்டதால் அதனைத் தவற விட்டு விடக்கூடாது என்று ஓட்டமும் நடையுமாகச் சென்றதில் பேருந்தில் ஏறி உட்கார்ந்து சில நிமிடங்கள் வரை பேசக்கூட முடியாத வகையில் மூச்சிறைத்தது.

    ஓ! ஜம்பதின் கடைசிப் படியிலல்லவா நிற்கிறோம்! மறந்து விட்டேனே! அட! ஞாபகமறதி வேறா?

    ஒருவாரு குறோய்டன் ஷாப்பிங் செண்டரில் இறங்கி அடுத்த பேருந்தைப் பிடிக்க எண்ணும் போது மனைவியின் கையிலிருந்த முன் அனுமதிச் சீட்டில் மேலதிக பணம் போட்டால் தானடுத்த பேரூந்தில் ஏறலாம் எனும் நிலை.மேலதிகப் பணம் போடுவதற்கான இயந்திரத்தை தேடி நடக்க ஆரம்பித்தோம்.

    நீண்ட நாட்களாக பேரூந்தில் பயணம் செய்யாததினால் மேற்கு குறொய்டன் பஸ் தரிப்பு நிலையம் அடைக்கப்பட்டு அதனுள் வேலை நடைபெற்று வருவது எமக்குத் தெரியவில்லை.

    அதனைக் கடப்பதற்கான சிறிய ஓடை போன்ற பாதையில் கால் வைத்ததும் நாற்றம் வயிற்றைக் குமட்டியது. அப்பாதை வழிப்பறி செய்பவர்களுக்காக ஏற்படுத்தப் பட்டதோ !

    poppy1ஒருவாறு அப்பிரச்சனையை முடித்துக் கொண்டு எமது பயணத்தின் அடுத்த அலகாக அடுத்தொரு பேரூந்தில் ஏறினோம். அது இரட்டைத்தட்டு பேரூந்தாகையால் மிகவும் மகிழ்ச்சியாக மேல்தட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டோம்.

    அடுத்தொரு தரிப்பில் ஒரு நடுத்தர வயதான ஆபிரிக்க பெண்மணி அம்மேல்தட்டில் ஏறி நாமிருந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் வரும்போது ஏதோ பேசிக் கொண்டே வந்தாள் சரி காதில் கருவியைப் பொருத்தி மொபைல் தொலைபேசியில் தான் பேசுகிறாள் என்று எண்ணினால் .. . . .

    இல்லையே! தனக்குத் தானே அல்லவா பேசிக் கொண்டு வருகிறாள் என்றாள் என் மனைவி.

    போச்சுடா! ஒரு லூசுப் பெண்மணியிடம் போய் மாட்டிக் கொள்ளப் போகிறோமா ?

    வந்தவள் எமக்குப் பினால் இரண்டு இருக்கைகள் தள்ளி உட்கார்ந்து கொண்டாள். அது மட்டுமல்ல தனக்குத்தானெ சம்பாஷணை வேறு!

    ஆஸ்கார் விருது கொடுப்பவர்கள் கண்டிருந்தால் சிறந்த நடிகைக்கான பரிசு அவளுக்குத்தான் போங்கள் . . . .

    இடையிடையே அவளின் குரல் உயரவும் அட எமக்கும் அவளுக்கும் இடையில் இருக்கும் இருக்கைகளில் யாராவது அமர மாட்டார்களா ? எனும் ஒரு நப்பாசை.

    ஏதோ தெரியவில்லை அனைவருமே அதனைத் தவிர்த்து விட்டார்கள். அப்பெண்ணின் சம்பாஷணையை வி.ஐ.பிகள் போல நாம் தான் ரசித்துக் கொண்டோம்.

    poppy2ஒருவாறு அப்பயண முடிவில் லண்டனில் உள்ள “எலிபண்ட் அண்ட் காசில் (Elephant and Castle)” எனும் இடத்தை அடைந்தோம். இனி அங்கிருந்து மற்றொரு பேருந்தில் நாம் செல்ல வேண்டிய “டவர் ஹில்” எனும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

    அதற்கு முன்னால் அங்குள்ள ஷாப்பிங் செண்டரினுள் சென்றோம், கழிவறைகள் இருக்கின்றனவா என்று தேடியவாறு.

    இருந்தது ஆனால் அது கட்டணக் கழிவறை. உள்ளெ சென்றால் அப்பப்பா! தாங்க முடியவில்லை. மேற்குலக நாடுகளின் தலைநகரங்களில் பிரசித்தி பெற்ற லண்டன் நகரிலா இப்படி ?

    அது முடிந்து வெளியே வந்தால் அங்கிருந்த படிகளில் உட்கார்ந்தபடி கையில் போதை மருந்து ஏற்றிக் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டோம்.

    போதுமடா சாமி ! ஆளை விட்டால் காணும் என்று விழுந்தடித்து வந்த ஒரு பேரூந்தில் ஏறிக் கொண்டோம், அதிர்ஷ்டவசமாக அப்பேரூந்தின் சாரதி ஒரு ஆசிரியர்.

    அவரிடம் நாம் செல்ல வேண்டிய இடத்தைக் கூறியதும் அவர் நீங்கள் சரியான பேரூந்தில் தான் இருக்கிறீர்கள் என்று கூறி நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு அருகாமையில் இறக்கி விட்டார்.

    அது லண்டனில் பிரசித்தி பெற்ற “டவர் பிரிட்ஜ்” க்கு அருகாமையில். அட்ஹன் வழியாகச் சென்றால் நாம் பார்க்க வேண்டிய அந்த செயற்கை மலர்களின் அலங்காரத்தை உள்ளடக்கிய “டவர் ஹில்” சென்று விடலாம்,

    அப்பப்பா! தேர்த்திருவிழா போன்ற கூட்டம். வரிசை வரிசையாக மக்கள் தம் வாழ்வை மேன்மையாக்க உயிரை நீத்த தம் முன்னோர்களை நினைவுகூறும் வகையில் அமைந்திருந்த செயற்கை மலர்களை பார்த்து அஞ்சலி செலுத்துவதற்காக ஆர்வத்துடன் சென்று கொண்டிருந்தார்கள்.

    poppy3அவ்வரிசையோடு நாமும் இணைந்து கொண்டு சென்றோம். அங்கு நிலவிய ஒருவிதமான சகோதர உணர்வை உணரக்கூடியதாக இருந்தது..

    இங்கிலாந்து நாட்டின் பலபாகங்களில் ஒருந்து வந்தவர்களை விட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் நிறைந்து காணப்பட்டார்கள். அங்கு கண்ட ஒரு ஒற்றுமையான் உணர்வு உலகில் இன்னும் மனிதத்துவம் சாதி,மத, இன, மொழி , நிற எல்லைகளைக் கடந்து ஒளிர்ந்து கொண்டுதானிருக்கிறது எனும் எண்ணத்தை மேலோங்கச் செய்தது.

    ஆங்காங்கே கிடைத்த இடைவெளிக்குள் நுழைந்து கொண்டு அம்மலர்களின் அலங்காரத்தைப் பார்வையிட்டோம்.

    ஒவ்வொரு மலரும் முதலாவது உலக மகாயுத்தத்தில் உயிரிழந்த ஒரு வீரரைக் குறிப்பதாகவிருந்தது. இங்கிலாந்து நாட்டு வீரர்கள், மட்டுமல்ல பொதுநல்வாய நாடுகளின் வீரர்களையும் அது உள்ளடக்கியிருந்தது.

    மொத்தம் 888,246 கைகளினால் வெய்யப்பட்ட போர்சலின் மலர்கள் அங்கே அலங்கார ரூபத்தில் நாட்டப்பட்டிருந்தன.

    அன்றைய வீரர்கள் தம் உயிரைக் கொடுத்து நாட்டிய விதையின் விருட்சத்தில் நிழல் காய்ந்து கொண்டிருக்கும் நாம் அவ்வழகிய நாளின் நினைவுகள் மீட்டுத்தந்த உயருய நினைவுகளை நெஞ்சில் தாங்கிக் கொண்டு மீண்டும் எமது இல்லம் ஏகினோம்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி

      

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(128)

    சக்தி சக்திதாசன்.

     

    RDAY3

     

     

    அன்பினியவர்களே!
    இனிய வணக்கங்களுடன் உங்களை இம்மடல் வாயிலாகச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன்.

    “அரிது, அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்றாள் எம் மூதாதைப் பாட்டி. ஆனால் மனிதராய்ப் பிறந்த நாம் இம்மானிடப் பிறவியின் அருமையைச் சரிவரப் புரிந்து கொண்டிருகிறோமா? என்பது மிகவும் சந்தேகத்திற்கிடமான விடயமே!

    காலரா, அம்மை, பிளேக் என்று பலவகையான கொடிய வியாதிகள் மனித குலத்தைத் தாக்கி அழித்தது ஒருபுறம்.

    சுனாமி, சூறாவளி, பூகம்பம், பெருவெள்ளம் என்று நம்மால் கட்டுப்படுத்த முடியாத நமக்கு அப்பாற்பட்ட காரணிகளினால் அழியும் மனிதர்கள் ஒருபுறம்.

    தற்போதைய “இபோலா” என்றழைக்கப்படும் விஷக் கிருமிகளின் வழி சியரா லியோன், பாப்பாவே நியூகினீ, லைபீரியா எனும் ஆப்பிரிக்க நாடுகளில் அழிந்தொழியும் மனிதர்களின் எண்ணிக்கை ஒருபுறம்.

    நமக்கு அப்பாற்பட்ட காரணிகளால் கிடைப்பதற்கரிய மனிதப்பிறவி கிடைத்தும் அதை இழந்து விடும் பரிதாப நிலையைப் பற்றி நம்மால் அதிக அளவில் எதுவுமே செய்து விட முடியாது.

    ஆனால் மனிதனை மனிதன் அழிக்கும் கொடிய போரினைத் தவிர்ப்பதன் மூலம் மட்டுமே இம்மனிதப்பிறவியின் அரிய தன்மையை நாம் உணர்ந்து கொண்டதை உறுதிப்படுத்த முடிகிறது.

    ஆதி அறியாத இப்பிரபஞ்சத்தில், யாரோ இருவரின் இன்பத்தின் மூலம் மனிதப்பிறவியாக ஜனனித்த நமக்கு இருப்பது எல்லாம்நமது சொந்தம் என்னும் எண்ணம் தலைதூக்கும் போதே போருக்கான அவசியமும் ஏற்படுகிறது.

    காரணம் எதுவாயினும், அது மொழியாகவோ, மதமாகவோ அன்றி இனமாகவோ இருப்பினும் அதற்காக மற்றுமொரு மனித உயிரை அழிப்பது எதுவிதத்திலு,ம் நியாயப்படுத்த முடியா ஒரு செயல்.

    RDAY1இதுவெல்லாம் ஏனின்று சக்தியின் மடல் வாயிலாக வந்து விழுகிறது எனும் கேள்வி உங்களுக்கு எழுவது இயற்கை. ஆமாம் இத்தகையானதொரு சூழலிலேயே முதலாவது உலக மகாயுத்தம் ஆரம்பித்தது. இவ்வுலக மகாயுத்தம் ஆரம்பித்தது நூறு வருடங்களுக்கு முன்னதாக ஆகும். 1914ம் ஆண்டு ஜூலை மாதம் 28ம் திகதி ஆகும். இவ்யுத்தம் நான்கு வருடங்களுக்கு மேலாக நீடித்தது. இப்போர் ஏறத்தாழ உலகளாவிய ரீதியில் 9 கோடிக்கு மேலான யுத்த வீரர்களையும், 7 கோடிக்கு மேலான பொது மக்களையும் காவு கொண்டது.

    உலக வரலாற்றிலே மிக அதிக அளவிலான மனித உயிர்களைப் பறித்தது இப்போர் எனப்படுகிறது. “அரிது, அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது” இக்கூற்றின் அர்த்தம் இப்போது புதுமாதிரியாகத் தொனிக்கிறது இல்லையா? இப்போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி ஆகும். இப்போரின் முடிவுத் தினத்தை நினைவு கூறுவது இப்போர்களின் அனர்த்தத்தை மனிதருக்கு நினைவூட்டி இத்தகைய போர்கள் தவிர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் எனும் காரணத்திற்காக மேற்குலக நாடுகளில் இத்தினம் “நினைவுதினமாக” அனுட்டிக்கப்படுகிறது.

    RDAY4இதை ஆங்கிலத்தில் “Rememberance Day” என்பார்கள். இத்தினத்தில் அனைவரும் சரியாக காலை 11 மணிக்கு … அதாவது 11ம் மாதமாகிய நவம்பர் மாதம் 11ம் திகதி 11 மணிக்கு இரண்டு நிமிட மெள்ன அஞ்சலிகள் மறைந்து போன மனித உயிர்களுக்காக அனுட்டிக்கிறார்கள். இங்கிலாந்தில் இத்தினம் நவம்பர் மாதம் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, அதாவது 11ம் திகதிகு மிகவும் அண்மையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அனுட்டிக்கப்படுவது வழக்கம்.

    poppyஇதன் முக்கியத்துவம் என்னவென்றால் முதலாவது உலக மகாயுத்தத்தில் மடிந்தவர்கள் மட்டுமின்றி இரண்டாவது மகாயுத்தம் அடங்கலாக இன்றுவரை நடந்த அனைத்துப் போர்களிலும் உயிர்துறந்தவர்களுக்காக இந்நினைவு தினம் அனுட்டிக்கப்படுவதே. இத்தினம் அனுட்டிக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்னதாகவே “பாப்பி” (Poppy) என்றழைக்கப்படும் ஒரு சிவப்பு நிறத்திலான மலரையொத்த ஞாபகச் சின்னம் ஒன்றை தம்மாலான நிதியையளித்து பெற்றுத் தத்தமது சட்டைகளில் பொருத்திக் கொள்வார்கள். இதன் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியானது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் நிதி நிலையத்திடம் கையளிக்கப்படுகிறது.

    இம்முறை, உலகமகாயுத்த ஆரம்பத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு இங்கிலாந்தில் “டவர் ஹில்” (Tower Hill) என்றழைக்கப்படும் சரித்திரப் பிரசித்திப் பெற்ற கோட்டையைச் சுற்றிய பாதையில் ஆழி போல் நிறைந்து காணப்படும் வகையில் இப்போரில் மறைந்த ஒவ்வொருவரையும் நினைவுபடுத்தும் வகையில் இப் பொப்பி மலர்கள் நாட்டப்பட்டு இப்பாதை இம்மலர்கள் நிறைந்த ஆழியாய்க் காட்சியளிக்கிறது. இதை மக்கள் திரளாகக் குவிந்து பார்வையிடுகிறார்கள்.

    RDAY2இத்தனை ஏற்பாடுகளும், இத்தனை ஆரவாரங்களும் எதற்காக? போரின் அகோரத்தை மனித இனம் உணர்ந்து மனிதாபிமானத்தை விட பெரியது இவ்வுலகில் எதுவுமே இல்லை எனும் உண்மையை உணர்ந்து கொள்வதற்காகத்தானே! இனியாவது “அரிது, அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது” எனும் வாக்கியத்தின் உண்மைப்பொருளை உணர்ந்து கொள்வோமா?

    காலமே இதற்கு விடை பகரும் ஆசான்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(127)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்வடைகிறேன்.

    இங்கிலாந்துக் கலண்டரிலே இருக்கும் முக்கியமான அம்சங்களில் ஒன்று இந்தச் சனிக்கிழமையன்று நள்ளிரவு நடைபெற இருக்கிறது.

    அது என்ன நிகழ்வு என்று எண்ணத் தோன்றுகிறதா ?

    Daylight Saving Time endsவருடா வருடம் இங்கிலாந்தில் “சம்மர்” (Summer) என்றழைக்கப்படும் கோடை காலத்தில் நேரத்தை ஒரு மணி நேரம் முன்னதாகவும் அதே போல ” விண்டர்” (Winter) என்றழைக்கப்படும் மாரி காலத்தில் ஒரு மணி நேரம் பின்னதாகவும் முடுக்கி விடுவது வழக்கம்.

    அதன் அடிப்படையில் வரும் சனிக்கிழமை அதாவது நள்ளிரவு இந்நேரமாற்றம் நிகழவிருக்கிறது.

    இந்நிகழ்வுகளின் போது கோடைகால மாற்றத்தில் இரவு நேர தூக்கத்தில் ஒருமணி நேரத்தை இழப்பதுவும் மாரிகால மாற்றத்தில் இழந்த அந்த ஒரு மணிநேரத்தை மீண்டும் பெறுவதும் சகஜம்.

    இம்மாற்றம் எப்போதும் சனிக்கிழமை நள்ளிரவு நேரம் தான் நடைபெறும். ஏனென்கிறீர்களா ?

    பெரும்பான்மையானவர்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாதலால் இம்மாற்றத்தின் தாக்கத்தை ஞாயிற்றுக்கிழமை சரி செய்து விடலாம் என்பதுவே இதற்கு முக்கிய காரணமாகிறது.

    நான் இங்கிலாந்துக்குள் நுழைந்தது மாணவனாக அப்போது எனது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக வார விடுமுறை நாட்களில் பகுதிநேரப் பணிபுரிவது வழக்கம்..

    அப்போது நான் மட்டுமல்ல என்னைப் போலவே ஈழத்திலிருந்து மாணவர்களாக வந்த அனைவருமே அத்தகைய ஒரு நிலையில் தான் இருந்தார்கள்.

    அப்போது எனக்கும் என்னைபோன்ற ஒத்த நிலையிருந்தவர்களுக்கும் இந்த நேர மாற்றம் எரிச்சலை ஊட்டுவதாகவே இருந்தது.

    எப்படி ?

    clock 1சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் பகலில் பணிபுரிகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், கோடைகால நேர மாற்றத்தில் எமது ஓய்வு நேரத்தில் ஒரு மணி நேரத்தை இழக்கிறோம். ஆனால் மாரிகால மாற்றத்தின் போது தூங்க ஒரு மணிநேரம் அதிகமாகக் கிடைக்கிறது.

    சரி சனி, ஞாயிறுகளில் இரவு நேர பணி என்று வைத்துக் கொண்டால் கோடை கால மாற்றத்தின் போது ஒரு மணிநேரத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்வதும் மாரிகால மாற்றத்தின் போது ஒருமணி நேரத்தை ஊதியமில்லாமல் பணிபுரிவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

    நான் இங்கிலாந்துக்கு வந்து சுமார் ஒரு வருடத்தின் பின்னால் இரவு நேரக் காவலாளியாகப் பகுதிநேரப் பணிபுரிந்து வந்தேன். அப்போது சனிக்கிழமை இரவும், ஞாயிற்றுக்கிழமை இரவும் பணிபுரிவது வழக்கம்.

    clock 2கோடைகால நேரமாற்றத்தை எவ்வித தாக்கமுமின்றி ஏற்றுக் கொண்ட நான் (ஒரு மணி நேரம் குறைவாக அதே சம்பளத்திற்கு பணிபுரிவதானால் யாருக்குக் கசக்கும் ?) மாரிகால மாற்றத்தின் போது எனது கட்டுப்பாட்டு அதிகாரியிடம் ஒருமணிநேரம் அதிகமாகப் பணிபுரிந்திருக்கிறேனே அதற்கு ஒருமணி நேரம் அதிகமான ஊதியம் தர வேண்டாமோ ? என்று கேட்டேன்.

    பலமாகச் சிரித்த அவர் ” கோடைகால மாற்றத்தின் போது ஒரு மணி நேரம் குறைவாகப் பணிபுரிந்த போது ஒரு மணி நேர ஊதியத்தைப் பிடித்துக் கொண்டேனா ?” என்று கேட்டார்.

    புன்னகையோடு மெளனிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ?
    சரி இப்படியாக இங்கிலாந்திலும் அநேகமான மேற்கு ஜரோப்பிய நாடுகளில் இடம்பெறும் நேரமாற்றத்திற்கான காரணம் தான் என்ன ?

    இந்நேர மாற்றம் முதன்முதலாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜி.வி.கட்சன் (G.V.Hudson) என்பவரால் 1895ம் ஆண்டு முதன் முதலில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

    Hudsonபூச்சிகளைப் பிடித்து அவற்றை ஆரய்ச்சி செய்யும் இவர் கோடைகாலங்களில் வெளிச்சமுள்ள நேரம் ஒருமணிநேரம் கூடுதலாக இருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ந்து அதைப்பற்றி ஓர் ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பித்தார்.

    இங்கிலாந்தில் ஒரு கட்டிட ஊழியரான வில்லியம் விலெட்ஸ் (William Willets) என்பவரால் இது பிரஸ்தாபிக்கப்பட்டது.

    கோடை காலத்தில் ஒரு நாளின் அளவு கூடுதலாக இருந்தும் அதிகமானவர்கள் கூடுதலான நேரத்தைத் தூக்கத்தில் கழிப்பதகாகக் கருதிய இவர் கோடைகால நேரத்தை இருமணி நேரம் முன்னொக்கித் தள்ளி வைக்க வேண்டும் என்று பிரஸ்தாபித்தார்.

    இவரது இந்தப்பிரேரணையை ரோபெர்ட் பியர்சன் எனும் லிபரல் கட்சியைச் சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினர் 1908ம் ஆண்டு சட்டமாக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.

    ஆனால் அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதைத் தொடர்ந்து பலமுறை இக்கோரிக்கை பாரளுமன்ற முன்றலுக்கு கொண்டுவரப்பட்டும் நிறைவேறவில்லை.

    முதன் முதலில் மேற்கு ஜரோப்பாவில் இந்நேரமாற்றம் 1916ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 திகதி ஜெர்மனியாலும் அதன் நேச நாடான ஆஸ்ட்ரியாவாலும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

    இதைப்பற்றி அமராகிவிட்ட எனது தந்தை அவர் வாழும் காலத்தில் குறிப்பிடும் போது தான் பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக நிகழ்ந்த நிகழ்வு என்று குறிப்பிடுவதுண்டு.

    அதைத் தொடர்ந்து இங்கிலாந்தாலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளினாலும் இது கடைப்பிடிக்கப்பட்டது.

    ஆனால் இந்நேரமாற்றம் ஒருமணிநேரத்தை மட்டும் உள்ளடக்கியதாக இருந்தது.

    ஒவ்வொரு வருடமும் ஏப்பிரல் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01:59 முன்னொக்கி 03:00 மனிக்கு தள்ளப்படும். அக்டோபர் மாதம் மூன்றாவது வார விடுமுறைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01:59 பின்னோக்கி 01:00 ஆக மாற்றப்படும்.

    இதுவே நடைமுறை வழக்கத்திலிருந்து வருக்கிறது. ஓ …இவ்வாரம் சனிக்கிழமை தூங்கி ஞாயிற்றுக்கிழமை எழுந்திருக்கும் போது ஒரு மணிநேரம் அதிகமாக தூங்க முடியுமோ ?

    இதே நேர மாற்றம் தான் அன்றைய மாணவ வாழ்வில் பிரச்சனை கொடுத்ததோ ?

    மீண்டும் அடுத்த மடலில் …
    அன்புடன்
    சக்தி

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

     

    படங்கள்: இணையத்திலிருந்து

    Share
  • உன் எழுத்துக்கள் உண்மையின் உரைகல்!

    -சக்தி சக்திதாசன்

    Rajam_Krishnan_spl

     

     

     

     

     

     

     

     

     

     

    குனிந்து நின்ற
    பெண்ணியத்தைச்
    சமுதாய வரம்புக்குள்
    தலைநிமிர வைத்தன
    உன்
    அற்புத எழுத்துக்கள்!

    சறுக்கி விழுந்தவர்களையும்
    சிக்கித் தவிப்பவர்களையும்
    அன்றாட உணவுக்கு
    அல்லல் படுவோரையும்
    உன்
    நாவல்களின்
    நாயகர்களாக்கி
    இலக்கியத்தில் நீ புது
    இலக்கணங்களை வகுத்தாயே!

    செப்பிடும் வகையும் தனி
    செந்தமிழ்ச் சுவையும் தனி
    தீந்தமிழ் எழுத்துக்களால்
    சிந்தையைப் புதுப்பித்தவள் நீ!

    அம்மா
    ராஜன் கிருஷ்ணனே!
    எழுத்துலகின் மேதையுனக்கு
    எழுதுகிறான் இக்கற்றுக்குட்டி
    கவிதையொன்று…
    அஞ்சலியில்லையம்மா
    ஆண்டவன் அடிகளில் ஏகிய
    உனக்கு நான் செய்வது
    பாமாலை அர்ச்சனையே!

    உன்
    எண்ணங்கள் மறைந்தால் தானே
    நீ
    மறைந்து விட்டாய் என்றாகும்
    எப்போதும் ஒளிவிடும்
    எழுத்துத் தீபம் நீ
    மறையாமல் ஒளிர்ந்திடுவாய்!!

    Share