உன் எழுத்துக்கள் உண்மையின் உரைகல்!

0

-சக்தி சக்திதாசன்

Rajam_Krishnan_spl

 

 

 

 

 

 

 

 

 

 

குனிந்து நின்ற
பெண்ணியத்தைச்
சமுதாய வரம்புக்குள்
தலைநிமிர வைத்தன
உன்
அற்புத எழுத்துக்கள்!

சறுக்கி விழுந்தவர்களையும்
சிக்கித் தவிப்பவர்களையும்
அன்றாட உணவுக்கு
அல்லல் படுவோரையும்
உன்
நாவல்களின்
நாயகர்களாக்கி
இலக்கியத்தில் நீ புது
இலக்கணங்களை வகுத்தாயே!

செப்பிடும் வகையும் தனி
செந்தமிழ்ச் சுவையும் தனி
தீந்தமிழ் எழுத்துக்களால்
சிந்தையைப் புதுப்பித்தவள் நீ!

அம்மா
ராஜன் கிருஷ்ணனே!
எழுத்துலகின் மேதையுனக்கு
எழுதுகிறான் இக்கற்றுக்குட்டி
கவிதையொன்று…
அஞ்சலியில்லையம்மா
ஆண்டவன் அடிகளில் ஏகிய
உனக்கு நான் செய்வது
பாமாலை அர்ச்சனையே!

உன்
எண்ணங்கள் மறைந்தால் தானே
நீ
மறைந்து விட்டாய் என்றாகும்
எப்போதும் ஒளிவிடும்
எழுத்துத் தீபம் நீ
மறையாமல் ஒளிர்ந்திடுவாய்!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.