Tag: பவள சங்கரி திருநாவுக்கரசு

  • நகைச்சுவை நாயகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    அன்பினிய சகோதரர் திரு கிரேசி மோகன் அவர்களுக்கு,
    மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வாழ்க! பல்லாண்டு பல்லாண்டு!! சீரும் சிறப்புமாக!!
    ஆசுகவி ஓவியர் திரு கேசவ் அவர்களின் கைவண்ணத்தில்​பிறந்தநாள் குழந்தையின் வண்ணக்காவியம்! வாழ்த்துகள் ஒவியர் பெருமானாரே!

    crazy

    சிரிப்பூட்டி, பாட்டுச் சிலிர்ப்பூட்டி, பக்தி
    விருப்பூட்டி, வாழ்வில் உயிர்ப்பூட்டி, நெஞ்சகப்
    பூட்டைத் திறக்கும் புதுக்கிரேசி மோகனின்
    பேட்டையில் என்றும் லூட்டியே.என்றும் அன்புடன்
    அண்ணாகண்ணன்

     

     

    பொன்நகை ஆயிரம் தந்தாலும் வேண்டேன்crazy1
    புன்னகை வேண்டியே தவமிருப்பேன்
    போற்றிப்பாட வார்த்தைகள் தேடினேன்
    வசப்படவில்லையேதும் திருமால் திருப்புகழும்
    வெண்பாக்களும் அள்ளிச்சென்றன அனைத்தையும்
    வரைய முனைந்தேன் உன் வரைவிலக்கணத்தை
    கபடமற்ற நகையாய் கலகலவென கொட்டித்தீர்ந்தது
    கிரேசியாய் இல்லாமல் கிலுகிலுப்பையாய் (சாக்லேட்)
    கிருஷ்ணாவுக்கே கிச்சுகிச்சு மூட்டும் மோகனமாய்
    பாசத்தைப் பனித்துளிக்குள் மறைத்து வைத்தாலும்
    பதறாமல் அதை பதவிசாய்ப் படைக்கும் ஆற்றலும்
    கள்ளமில்லாச் சிரிப்பும் கலகலப்பான பேச்சும்
    உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமையும்
    உனக்கு மட்டுமே சாத்தியம் நீவிர் வாழிய வாழியவே!

    அன்புடன்
    பவளா திருநாவுக்கரசு​

     

     

    Share
  • மேக் இன் இந்தியா!

    பவள சங்கரி

    தலையங்கம்

    நம் இந்தியப் பிரதமர் திரு மோடி அவர்களின் பொருளாதார வளர்ச்சித் திட்டம் வாழ்த்தி வரவேற்கப்படவேண்டிய ஒன்று. அகில உலக மதிப்பீட்டாளர்கள், எஸ் & பி எதிர்மறை மதிப்பீட்டிலிருந்து நிலையான பொருளாதாரம் என்ற மதிப்பீட்டை அளித்திருப்பது, இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மேக் இன் இந்தியா என்று பெருமையுடன் தலை நிமிர்ந்து சொல்லும்போது நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, ஜெர்மனி என்றால், ‘Work excellence’, ஜப்பான் என்றால் தொழில்நுட்பங்களும், பிரித்தானியர் என்றால் கடுமையான தரக்கட்டுப்பாடுகளும், ஜப்பான், கொரியா என்றால், புதிய பரிமாணங்களும் (Innovation) கொண்டது என்று ஒவ்வொரு நாட்டு தயாரிப்புகளுக்கும் ஒரு பொதுக்கருத்து இருப்பதுபோல, மேக் இன் இந்தியா என்றால் மிகுந்த தரக்கட்டுப்பாட்டுடன், புதுமையும், புத்தாங்கங்களும் கொண்டதாகவும், அற்புத நேர்த்திகளுடன், நம் தயாரிப்புகள் இருக்க வேண்டும். இவையனைத்துடனும், சந்தைப்படுத்தும்போது, அதன் விலை நிர்ணயங்கள் மற்ற நாட்டுத் தயாரிப்புகளுடன் போட்டியிடத்தக்கவையாக இருத்தல் அவசியம். அப்படி இருந்தால் நம்முடைய மேக் இன் இந்தியா என்ற புதிய பொருளாதாரக் கோட்பாடு வெற்றியடையும் வாய்ப்பு அதிகரிக்கும்.

    இதற்கு நாம் செய்ய வேண்டியவைகள் கற்பனையான விளம்பரங்களை விடுத்து, உண்மையான அக்கறையுடன் ஒவ்வொரு இந்தியரும் தன்னை இதில் அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்றால் தரம் மிகுந்தது, மலிவானது, செயல் திறனுடையது என்று உலக மக்களை உணர வைத்தால் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஒரு வல்லரசாகும் என்பதில் ஐயமில்லை. மேலே குறிப்பிட்ட எஸ் & பி பொருளாதார நிலைப்பாட்டில், நாமும் ++ அடையும் காலம் வெகு தொலைவில் இல்லை. இறக்குமதி செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும், தரக்கட்டுப்பாட்டை வலியுறுத்த வேண்டியதும் அவசியம். தரத்தில் சிறு விலகல் ஏற்பட்டாலும், அப்பொருட்கள் முழுவதுமாக நிராகரிக்கப்படவேண்டும்.

    நம் உரூபாயின் மதிப்பை அதிகப்படுத்துதல் மிகவும் அவசியம். இதற்காக, நமது நாட்டில் கிடைக்கக்கூடிய எண்ணெய் எரிவாயு வளங்களை முழுமையாகப் பயன்படுத்துதலும், நிலம் மற்றும் கட்டுமானத் துறைகளில் அரசு போதிய கவனம் செலுத்தி, குதிரை பேரங்களைத் தவிர்த்து, சரியான இடம் மற்றும் கட்டிட மதிப்பீடுகளையும் வெளியிட வேண்டியதும் அவசியம். சமீபத்திய செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியுள்ளது போல, அரசு ஒவ்வொரு நகரங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும் விலை நிர்ணயம் செய்து, அதை வங்கிகள் மூலமாக உறுதிப்படுத்தினால் நம்முடைய பொருளாதாரம் சீரடையும். உரிய சேவைக்கு, உரிய கூலி என்ற கோட்பாடை அரசு கடைப்பிடிப்பது நலம். சரியான முறையில் அரிய இக்கோட்பாடு வழிநடத்தப்பெறுமாயின், நம் கனவு நனவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அந்நிய நாடுகளின் முதலீடுகளை நாம் எவ்வாறு வரவேற்கிறோமோ அது போல நாமும் அந்நிய நாடுகளில் முதலீடு செய்வதையும் ஊக்கப்படுத்த வேண்டும். இந்த வகையில் சில முதலீட்டாளர்கள் தற்போது வெளிநாடுகளில் முதலீடு செய்ய ஆரம்பித்திருப்பதும் நம்பிக்கையூட்டுவதாகவே உள்ளது.

    வெல்க பாரதம்!

    Share
  • கற்பகவல்லியே! காமாட்சியே!

     

    பவள சங்கரி

    8

    நவ்வி போலுமே விழியுடையாள் – ஐயன்
    கவ்வி கடுந்தவம் கலைத்துமகிழ செல்வி
    நஞ்சுண்டகண்டனவன் பாதம் பணிந்தே
    பாவவினை களையும் வரமளிப்பவளே!!

    கனிவளச் சோலையில் கற்பகத்தருவாய் படர்ந்து
    கசிந்துருகும் பக்தரின் பரிதவிப்பில் சொற்பதமாய்
    விரிந்துவிரிந்து விசித்திரமாய் விந்தையானாய்
    விரைந்துவந்து உந்தன் மகவைக் காத்தருளே!

    சிந்திய முத்துக்களின் புத்தொளியில் சீவனின்
    சிந்தை மலர்களின் சிலிர்ப்பில் சித்தாந்தம்
    பேசும் சின்னக் கிளியின் கொஞ்சுமொழியில்
    சித்தம் கலங்காமல் இறுமாப்பு கொண்டாயோ?

    ஒங்காரரூபினி என்றால் ஓயாமல் ஓசைஎழுப்பி
    ரீங்காரம் செய்யும் தேனீயாய் சுற்றிவரும்
    பாங்கான பக்தருக்கு வரமருளும் நித்தமும்
    நீங்காத நாயகியே! காத்தருளும் காமாட்சியே!!

    Share
  • அம்மையும் நீயே!

    பவள சங்கரி

    10461319_599716563472336_3628801855800448289_n

    அம்மையும் நீயோ இப்புவியும் உன்னதோ
    உன்னைநினைந்தே தமிழை ஓதினேன் – என்னை
    கனிந்தேற்றுக் கொள்ளாத நாயகியுண்டோ உண்டோ
    செருக்கேற்றுக் கொள்ளாத கவிஞனும்!

    Devi_Kanya_Kumari

    தேவி பிறந்தவூர் அலைகடல் சூழுமூர்
    சிற்றாடையும் சிந்தூரமும் மாணிக்கமும் சூடியவள்
    புன்னகையும் புதுப்பொலிவும் பூமணமும் நித்தம்
    நிறைதலம் நீள்கடல் நாயகியே!

    Share
  • அந்தாதியும், அபிராமிப்பட்டரும்!

    பவள சங்கரி

    thirukaiyur

    அர்த்தநாரியாய் ஆருத்ரனாய் ஆதவனாய்
    இடுகாட்டு நாயகனாய் இகம்பர அதிபதியாய்
    ஈரேழுலகின் ஈடில்லா ஈசனின் இடப்பாகம்
    உரையும் ஊழிமுதல்வனின் நாயகியே! அபிராமி அன்னையே!!

    பழமைக்கோலம் பரிதியின் தவம்
    புதுமையில் புகுந்தால் புவிநாசம்
    பழமையும் புதுமையும் பரிதிக்கேது
    சுட்டெரிக்கும் சூதையும் சூழ்வினையையும்!!

    பரிதிக்கே ஒளியாய் ஓங்கிய உத்தமியே
    பங்கயத் தேரில் பதவிசாய் பவனிவரும்
    மங்கையர்கரசியே மாதவச் செல்வியே
    அங்கையர்கண்ணி அம்மையே! ஆனந்தமே!!

    தஞ்சமென்று சரண் புகுந்தோர் நெஞ்சமெலாம்
    பஞ்சமில்லா பேரருள் புகுத்தி வஞ்சமெல்லாம்
    நீக்கியருள் மழைமேகமாய் புவியனைத்தையும்
    காத்தருள் அகிலாண்ட நாயகியே! அபிராமியே!

    அம்பிகையின் மலர்பாதங்களை சரணடைந்தோர் என்றும் துன்பக்கடலில் துவண்டுவிடுவதில்லை. இன்பமும், துன்பமும் இல்லா இன்னமுதம் அவள் பாத கமலம். எத்தனை எத்தனை அவதாரங்கள்.. எழில்மிகு வண்ணக்கோலங்கள் அவள் தோற்றம். அபிராமி அந்தாதி அருளிய அபிராமிப்பட்டரின் வாழ்க்கைச் சரிதமே அதற்கு ஆதாரம். அன்னையைச் சரணடைந்து, பித்தராய்த் திரிந்த பட்டர், காணும் பெண்களனைவரையும், அபிராமி அன்னையின் அவதார உருவமாகவேக் கண்டின்புற்றார்.

    about-temple-banner

    அபிராமி அந்தாதி பாடலை உள்ளம் உருகப் பாடிப்பரவச் செய்தவர், அபிராமிப்பட்டர். இவர் பிறந்த ஊர் அன்னை பராசக்தி அபிராமவல்லியாக அடியவர்க்கு அருள்பாலிக்கும் திருக்கடையூர். சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களின் சிறப்பானதொன்றுதான் திருக்கடையூர். என்றும் பதினாறு என்ற வரம் பெற்ற மார்கண்டேயரை அன்னை பராசக்தி, எமதர்மனிடமிருந்து காப்பாற்றிய வரலாறு சுவையானது. எமதர்மன், மார்கண்டேயர் மீது பாசக்கயிற்றை வீசிய அத்தருணத்தில், அப்பாலகன் ஓடிச்சென்று சிவலிங்கத்தைக் கட்டிக்கொண்டான். எமன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்திருமேனியின் மேல்வந்து வீழ்ந்தது. கடுங்கோபம் கொண்ட சிவபெருமானாரின் சகதர்மினி அன்னை பராசக்தி சிவலிங்கத்தில் தோன்றினாள். ஈசனின் இடப்பாகம் உறையும் சக்திதேவி சிவலிங்கமாக வீற்றிருக்கும் தம் கணவர் மீது விழுந்த பாசக் கயிறு, தம் மீது விழுந்ததாகவேக் கருதி கோபமுற்றார் அம்பிகை. அதனால் எமனைத்தம் இடது காலால் எட்டி உதைத்தார் பெருமானார். ஆம், தன் மனைவியின் மனதை வேதனை அடையச் செய்த எமனை, அன்னைக்கேயுரிய தனது இடது பகுதியின் காலால் எமனை எட்டி உதைத்தார் இறைவன். இப்படி மார்கண்டேயனை காப்பாற்றிய அன்னை அபிராமவல்லி, என்றென்றும் பக்தர்களை காக்கவும் காத்திருக்கிறாள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையே அன்னையை வழிபடுவோரை வழிநடத்திச்செல்கிறது என்பதே நிதர்சனம்!

    images (5)

    இதுபோன்று பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய அன்னை அபிராமவல்லிமீது பித்தரான ஒருவரை ‘பைத்தியக்காரன்’ என்று அவ்வூர் மக்கள் பேசினார்கள். அபிராமிபட்டர் என்ற அந்த மகான் சிறந்த தேவி உபாசகர். தாம் பார்க்கும் அனைத்துப் பெண்களையும் அபிராமியின் அம்சமாகவே கருதுவார். எப்போதும் அபிராமி அன்னையையே தியானித்துக் கொண்டும் இருப்பார். இவரின் பக்தியை சோதிக்கவும், இவரின் கீர்த்தியை உலகுக்கு உணர்த்தவும் விரும்பினார் இறைவன், ஒருநாள் சரபோஜி மன்னர், திருக்கடையூர் அமிர்த கடேசுவரரை தரிசிக்கும்பொருட்டு திருக்கடையூர் கோயிலுக்குத் தன் பரிவாரங்களுடன் வந்தார். அரசர் வந்தது கூட தெரியாமல், அம்பாள் சன்னதியில் அபிராமி பட்டர் தியானத்தில் அமர்ந்திருந்தார். யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை, கிரியை என்ற நிலையைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் யாமளை எனும் திருக்கோலத்தையும் தம் கண்ணாரக் கண்டு இன்புற்றதோடு, இடைப்பட்ட ஏனைய கிரந்திகளனைத்தையும் கடந்து, சகஸ்ராரத்தில் ஒளிமயமாகத் திகழும் லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆனந்த வெள்ளத்தில் திளைத்திருந்தார். ஆனால் இதன் மகத்துவம் அறியாத சாதாரணர்கள், இவர் ஏதோ துர்தேவதையை ஆராதனை செய்து வந்த காரணத்தினாலேயே இப்படி பித்தராகி, ஆசாரங்கள் அனைத்தையும் கைவிட்டு, தீய வழியில் சென்றுவிட்டார் என்று சொல்லித் தூற்ற ஆரம்பித்தனர்.

    ஒரு நாள் தஞ்சை அரசர், ராஜா சரபோஜி தை அமாவாசை தினத்தன்று, பூம்புகார் சென்று முகத்துவாரத்தில் நீராடிவிட்டு, திருக்கடவூருக்குத் தரிசனம் பெற வேண்டி வந்தார். அவ்வேளையில், அபிராமி அம்மன் சந்நிதியில் சுப்ரமணிய ஐயர் நின்று கொண்டு அம்பிகையைப் பார்ப்பதும், தொழுவதும், கண்ணீர் பெருக்குவதும் என்று வித்தியாசமாக செய்துகொண்டிருந்தார். சுற்றி இருந்தவர்களோ தங்களுக்குள்ளாக, ‘மன்னர் வந்திருப்பதுகூட அறியாமல், மன்னரை வணங்கவும் செய்யாமல் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும், சிரித்துக் கொள்ளுவதும், அழுவதுமாய் இருக்கிறாரே’ என கூறிக்கொண்டிருந்தார்கள். மன்னர் இவர் யாரெனக் கேட்டதும், ‘இவர் ஒரு பித்தர். தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு பரிவார சக்தியான ஏதோ ஓர் தேவதையை வழிபடுபவர்’ என்றனர். மன்னரும் இதைச் சோதிக்க எண்ணியதால், சுப்ரமணிய ஐயரிடம், ‘இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை உள்ளது?’ என்று கேட்டார்.

    அன்னையின் காட்சியின் பேரானந்தத்தை உள்ளூரக் கண்டு களித்துக்கொண்டிருந்த பட்டரின் செவியில், அமாவாசை என்ற சொல் மட்டும் விழ, அவரும், ‘இன்று பௌர்ணமி அல்லவோ?’ என்று சொல்லிவிட்டார். அனைவரும், ஏளனத்துடன் கைகொட்டி சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். மன்னரும் மக்கள் சொன்னதும் சரிதான் என்று நினைத்தவாறு சென்றுவிட்டார். ஆனாலும் அரண்மனை திரும்பிய மன்னருக்கு, அவருடைய தோற்றமே, திரும்பத் திரும்ப கண்ணெதிரே வந்தது. அன்று பெளர்ணமி என்று சுப்பிரமணிய ஐயர் கூறிய வார்த்தைகளும் காதிலே ஒலித்த வண்ணம் இருந்தன. முன் மாலைப் பொழுது. சற்றே களைப்புடன் அமர்ந்திருந்த மன்னர் தன்னையறியாமல் கண்ணயர, கருவறையின் அபிராமி அன்னை அவர் கண்ணெதிரே தோன்றியதோடு, தன் காதுத் தோட்டைக் கழற்றி வீச, அது விண்ணிலே சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டு சென்று நிலவாக அமர்ந்ததைக் கண்டார் மன்னர். ‘ஆகா, இது பூரண நிலவன்றோ! முழுமதி சுடர் விட்டு பிரகாசிக்கின்றது பாருங்கள்’ என்று சுப்ரமணிய ஐயரின் குரலும் கேட்டது. மன்னன் கண்விழித்தபோது, அவர் உடல் அச்சத்தில் நடுங்கியது. பெருந்தவறு செய்துவிட்டோம் என உணர்ந்தார் மன்னர்.

    இந்தப் புராணக் கதையை மற்றொரு விதமாகவும் கூறுவர். மன்னர் அன்றைய திதியைக் கேட்டதும், சரியாகக் கூறாதவர் அன்றிரவுக்குள்ளாக பட்டர் பெளர்ணமியைக் காட்டவேண்டும் எனவும், இயலாவிட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பு சொன்னதாகச் சிலரும், வேறு சிலர் மன்னரிடம் சரியான திதியைக் கூறாமல் தடுமாறிய பட்டர் அவமானத்தால் மனம் வருந்தி அரிகண்டம் பாடத் தொடங்கியதாகவும், அப்போது அபிராமியின் சந்நிதியில் ஒரு குழி வெட்டி அதில் தீயை மூட்டி அதன் மேல் ஒரு விட்டத்தில் இருந்து நூறு கயிறுகளால் ஆன ஓர் உறியைத் தொங்க விட்டு அதன் மேல் ஏறி, ‘அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்’ என்று சூலுரைத்து அபிராமி அந்தாதியைப் பாடத் தொடங்கியதாகவும் கூறுவார்கள். ‘உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்’ என்று துவங்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒவ்வொரு உறியின் கயிறாக பட்டர் அரிந்து கொண்டு வந்ததாகவும், பேராச்சரியமாக, ‘விழிக்கே அருளுண்டு’ என்ற 79-வது பாடலின் போது மங்கிய அம்மாலைப் பொழுதில் அபிராமி அன்னை பட்டருக்கு மட்டுமின்றி அவ்வூரில் உள்ள அனைவருக்கும் காட்சி கொடுத்து, தன் காதுத் தோட்டைக் கழற்றி வீசி எறிந்து பெளர்ணமியை வரவழைத்ததாகவும் கூறப்படுகிறது. அன்னையின் அருளால் பட்டரும் மனம் தெளிவுற்று, அன்னையின் அருளைப் போற்றி, துதிப்பாடல்கள் இயற்றலாயினார். அந்தாதி முறையில் இயற்றப் பட்ட இப்பாடல்கள் அன்னையின் சிறப்பைப் புகழ்ந்தும், பட்டரை உலகத்தோர் இகழ்ந்து கூறியும், அன்னையின் அருளால் அவர் பெற்று வரும் நல் அனுபவச் சிறப்பையும் வர்ணிக்கும் விதத்தில் பாடல்கள் அற்புதமாக பொழிய ஆரம்பித்தது. மன்னரும் பட்டரின் வீடு சென்று அவரை வணங்கித் தாம் கண்ட கனவைக் கூறி பட்டரின் மன்னிப்பையும் கோரினார். பட்டரும் இது அன்னையின் திருவருள் என எண்ணி மகிழ்ந்தார். மன்னரால் அபிராமி பட்டர் என அழைக்கப் பட்டதோடு அல்லாமல், அவருக்கு மானியமாகச் சில விளை நிலங்களையும் மன்னர் பரிசளித்தார்.

    abhirami

    விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
    வழிக்கே வழிபட நெஞ்சுண்டே எமக்கவ்வழி கிடக்கப்
    பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
    குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடென்ன கூட்டினியே!

    தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
    மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
    இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
    கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

    கூட்டியவா, என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
    ஓட்டியவா, என் கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
    காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
    ஆட்டிய வா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே!

    (அபிராமி அந்தாதி)

     

    அபிராமி அந்தாதி 108 முத்தான பாடல்கள் கொண்டது. அன்னையை வழிபடுபவர் வாழ்வின் சகல செல்வங்களையும் பெற்று இன்பமாக வாழ்வர் என்பது ஐதிகம்.

    Share
  • வாழ்வது ஒரு முறை, வாழ்த்தட்டும் தலைமுறை!

    பவள சங்கரி

    தலையங்கம்

     உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
    எழுவாரை எல்லாம் பொறுத்து.  குறள் 1032

    பொருள்
    உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர். 

    இயற்கைச் சீற்றங்கள், நீராதாரம் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகள் இயல்பானது. இதற்காக அரசாங்கமும் உடனடியாக கடன்களையோ, வட்டியையோ ரத்து செய்தோ அல்லது இலவசமாக உரங்களை அளித்தும், மானிய விலையில் விதைகளை அளித்தும் விவசாயத்தைப் பாதுகாக்க ஆவண செய்ய முற்படுகின்றனர்.விளைச்சல், அறுவடை, அதனால் வரக்கூடிய இலாபம், இவைகளை மட்டுமே கருத்தில் கொண்டு தங்களுடைய தொழிலை நடத்துவது என்பது ஏனைய தயாரிப்பாளர்கள் போன்று விவசாயம் செய்பவர்களுக்கும் பொருந்தும் என்றாலும், விவசாயம் என்பது மற்ற தொழில்களைப் போன்றது அல்ல. இது நம் வாழ்வாதாரம். அதனாலேயே மற்ற அனைத்துத் தொழில்களைக்காட்டிலும் விவசாயம் உன்னதமானது என்று தெய்வப் புலவர்களும் அறுதியிட்டு கூறிச்சென்றுள்ளனர். அந்த உன்னத நிலையைத் தக்க வைத்துக்கொள்வதும் அவரவர் கைகளில்தான் உள்ளது.

    ஆனால் பெரும்பாலான விவசாயிகள் சமுதாய அக்கறையின்றி, அதிக இலாபம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு விளைச்சல் பார்ப்பது வருத்தத்திற்குரிய விசயம். உதாரணமாக, தக்காளிப் பழத்திற்கு எடை கூடவேண்டும் என்று சில யுக்திகளை கையாளுகின்றனர். தண்ணீர் தாகத்திற்காக சாப்பிடக்கூடிய கோசாப் பழத்திற்கு (தர்பூசணி) சாராயம் ஊற்றி விளைவிப்பதாகக் கூறுகின்றனர். நம்முடைய முக்கிய உணவுப் பொருளான நெல்லை விளைவிக்க தரமற்ற பொருட்களை பயன்படுத்தியும், தேவையறியாமலே அவ்வப்போது உயிர்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. இப்பொழுதெல்லாம், முதல் நாள் தயாரித்த சாதத்தை பழைய சாதமாக அடுத்த நாள் சாப்பிடும் சுகம், பெரும்பாலான வகை அரிசியில், அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருப்பினும் கிடைப்பதில்லை. பொதுவாக பழைய சாதமென்றால் தேவாமிர்தமாக இருந்த நிலை மாறிவிட்டது.

    அநேகமாக, இந்த பத்தாண்டுகளில்தான், முன்பு பயன்படுத்திய பசுந்தளை இயற்கை உரம் மற்றும் மறு சுழற்சி விவசாய முறைகள் போன்றவற்றில் அதிகமாக கவனம் செலுத்தப்படுவதில்லை. இதனால் விவசாயப்பெருமக்களின் பொருளாதார நிலை வேண்டுமானால் உயரலாம். ஆனால் இதை உண்ணும் மக்களின் நிலை பற்றி சிந்திப்பார் இல்லை. தற்போது கிடைத்துள்ள சில புள்ளி விவரங்களின் படி இது போன்ற வேதிப் பொருட்கள் பயன்படுத்துவதால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், இதைவிட அதிர்ச்சிகரமான மற்றொரு தகவல் வாழையடி, வாழையாக நம் சந்ததிகள் தளைப்பதற்கான வாய்ப்பே அற்றுப் போவதற்கான சூழ்நிலை உருவாகி வருகின்றன என்பதும் வல்லுநர்களின் கவலையாக உள்ளது. சக்கரை நோய்களின் தலையிடமாகவும், நம் இந்தியா, உலக அரங்கில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமாராக ஏழு கோடி மக்கள் சக்கரை வியாதி பாதிக்கப்பட்டவர்களாகவும், 14 கோடி மக்கள் சக்கரை நோய் வருவதற்கான விளிம்பில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெருவாரியான வழக்குகள் ஆண்மை குறைபாடு உள்ள காரணத்தினால் விவாகரத்து நாடி நீதி மன்றம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வு அறிக்கைகள் வெளியிடுகின்றன. விலை பொருட்கள் அனைத்தும் விலைக்காக மட்டுமல்லாமல் மக்கள் நோய் நொடியின்றி வாழும் வகையில் விவசாய உத்திகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகிறது. நன்கு ஆய்வு செய்து தேவையென்றால் மட்டுமே பூச்சுக்கொல்லி மருந்து அடிக்க வேண்டும்.

    சமீபத்தில் ஈரோடு அருகில், சித்தோடு எனும் இடத்தில், நாட்டுச் சக்கரை, வெல்லச் சந்தையில் நடந்த நிகழ்வு இது. வெல்ல உருண்டைகள் வெளிர் மஞ்சளில் இருந்தால் நல்ல விலை கிடைக்கும் என்பதால், ஏதோ இரசாயணப் பொருட்களைப் பயன்படுத்தி பழுப்பு நிறத்தை நீக்கிவிட முயன்றிருக்கின்றனர். இதனை அறிந்த, கொள்முதல் பண்ணுவதற்காக வந்திருந்த அனைவரும் 15 டன் பொருட்களையும் வாங்க மறுத்துவிட்டனர். இது அடிக்கடி தொடரும் நிலையாகவே உள்ளது. அதேபோல் ஆலைக் கரும்பின் எடை கூடுவதற்காக பயன்படுத்தும் பொருட்களையும் தவிர்க்க வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

    இது போன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு, நம் அரசு ஆய்வகங்களின் மூலமாக ஆய்வு செய்து, அதன் பின் விளைவுகளை கணக்கில்கொண்டு எந்த விதமான உரங்களை, எவ்வளவு அளவிற்கு பயன்படுத்தலாம் என்பதற்கான அறிக்கைகளை வெளியிட்டால். விவசாய பெருமக்களுக்கும் பேருதவியாக இருக்கலாம். அறியாமையால் செய்யப்படும் தவறுகளும் திருத்தம் பெறலாம். நம் வருங்காலச் சந்ததியினர் நோயற்ற வாழ்வை வாழ முடியும் என்ற உத்திரவாதமும் இருக்கும் என்பதே நிதர்சனம்.

    Share
  • பாரதியும் ஓர் புத்தனே!

    பவள சங்கரி

    bha

    லட்சியமே சுவாசமாகimages (3)
    கொண்ட
    கொள்கையே வேதமாக
    விடுதலைப்புள்ளின் விவேகத்தோடு

    பாவலரின் உள்ளச் சிம்மாசனத்தில்
    சம்மனமிட்டு
    வெற்றிமுரசை பாரெங்கும் பரவவிட்டு
    பித்தம் கொள்ளச்செய்யும் புத்தனவன்!

    நதி வெள்ளப் பிரவாகத்தின்
    மதிவெல்ல
    மாதவம் மனதிலேகி விதிவெள்ளம்images (5)
    சூரையாடும் சூதைவென்ற சித்தனவன்!

    காக்கை குருவி எங்கள் சாதியென
    இனமறியா
    இன்பவூற்றை இயல்பாய்ச்சொல்லி
    களியாட்டம் போடச்செய்த ஞானியவன்!

    மனிதநேயமெனும் தூரிகையால்
    வண்ணங்கொண்டு
    வானளாவத் தீட்டியவவைகள்
    தீதின்றி திண்ணமாய் இன்றும்

    உச்சிமீது வானிடிந்து வீழந்தபோதும்
    அச்சமின்றி
    துச்சமென சுடரையேந்தி வலிமையை
    ஏழ்மையிலும் ஒளிரச்செய்த மாவீரன்!

    அமரப்பொழுதிலும் அரியணையைத்
    துறக்காதimages (4)
    ஒளிக்கனலாய் மின்னும் கண்ணோடு
    புவியனைத்தையும் மண்டியிடவைத்தவன்!

    பரிதிக் கிரணங்களாய் பாரினை
    ஒளியூட்டி
    அடிமைத்தளையை சுட்டெரித்து
    சோதிவடிவாய் சுடர்வோனே!!

     

    Share
  • முந்திரிக்கொட்டை ……

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஒரு காலத்தில் முந்திரி பேர ஊழல் பிரசித்தி பெற்றது. அது போல நம் சமையலிலும் முந்திரி பருப்பு முக்கியமான இடம் பிடித்துள்ளது. துடுக்குத் தனமாகவோ அல்லது முந்திக் கொண்டோ, எதையேனும் செய்பவர்களை முந்திரிக் கொட்டை என்று விளையாட்டாகச் சொல்வார்கள். காரணம், பெரும்பாலான பழங்களில் பழத்திற்குள்ளே இருக்கும் கொட்டை, முந்திரிப்பழத்தில் மட்டும் பழத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

    பிரேசில் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டதாக இருந்தாலும், உலகளவில் முந்திரி அதிக பரப்பளவில் பயிரிடப்படுவது நம் இந்தியாவில்தான். நம் இந்தியாவில், ஒரு ஆண்டிற்கு சராசரியாக 60,000 டன் முந்திரி விளைவிக்கப்படுகிறது. வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனேசியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் இது அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் முந்திரி பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேரள மாநிலம்தான் முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. அவை தரம் வாரியாகப் பிரிக்கப்பட்டு உள் நாட்டுச் சந்தைக்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    images (1)ஆரம்பத்தில் பச்சை நிறமாகத் தோன்றி, பின் பழுக்கும்போது மஞ்சள் அல்லது சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தை அடையும் இதன் பழங்கள் உண்ணப்படக் கூடியதாகவும், இனிப்பான சுவையுடன் இனிய மணமும் உடையதாக இருப்பதுடன், சிறந்த மருத்துவ குணமும் உடையதாக இருக்கிறது. மிக மெல்லிய தோலுடையதாகவும், சதைப்பகுதி மிகவும் சாறு நிறைந்ததாகவும் இருக்கும் இவைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதில் சற்று சிரமம் இருக்கலாம். இதிலிருந்து தயாரிக்கப்படும் சாறு பல வகையில் பயனுள்ளது. போலிப் பழம் என்று சொல்லக்கூடிய இந்த முந்திரிப் பழத்திற்கு வெளியே, சிறுநீரக வடிவில் காணப்படும் கடினமான ஒரு வெளி ஓட்டுப்பகுதியும், அதனுள்ளே ஒரு விதையையும் கொண்டிருக்கும். அந்த விதையே முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகிறது. இந்த முந்திரிக்கொட்டையின் மேலுள்ள கடினமான இரட்டை ஓட்டில் ஒவ்வாமையால், தோலில் நமைச்சலை ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்டது. அதனால் இதை மிகுந்த கவனத்துடன் சரியான முறையில் வறுத்து பதப்படுத்தப்படுத்த வேண்டியதும் அவசியம்.

    இந்த முந்திரிப்பழங்களை நம் நாட்டில் பெரும்பாலும் சரியான முறையில் பயன்படுத்துவது இல்லை. முந்திரி பருப்புகளை விரும்பி சாப்பிடும் அளவுக்கு முந்திரிப் பழங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. வைட்டமின் சி செறிந்துள்ள இப்பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப்பொருளின் தன்மையால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்புத் தன்மை ஏற்படுகிறது. இதனைப் போக்க பழத்தை ஒரு பத்து நிமிடங்கள் நீராவியில் வேகவைத்தோ அல்லது உப்புநீரில் ஊறவைத்தோ உண்ணலாம். ஆரஞ்சுப் பழத்தை விட, முந்திரிப்பழத்தில் வைட்டமின் ‘சி’ சத்து ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதோடு, பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு நோயைக்கூட குணமாக்கும் தன்மை கொண்டுள்ளது என்றும், ‘ஸ்கர்வி’ என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்குவதோடு, கிருமி நாசினியாகவும் செயல்பட்டு தொற்று நோய்களை குணமாக்கவும் பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளதோடு, டானின் எனும் வேதிப் பொருளும் உள்ளதால் அவை ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படவும் செய்கிறது என்கின்றனர் வல்லுநர்கள். கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வை துலங்கும்.

    இத்துனைச் சிறப்புமிக்க பழத்திலிருந்து பழச்சாறு, சிரப், பழக்கூழ், மிட்டாய் போன்ற பல வகையான மதிப்புக் கூட்டிய பொருட்களை தயாரித்துப் பயன்படுத்த முடியும் என்றாலும், நம் நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரிப் பழங்களில் 10 சதவிகிதம்கூட பயன்படுத்துவதில்லை என்பதுதான் நாம் இப்போது முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டிய விசயம்.

    இப்பழங்களிலிருந்து பழ ரசம் எடுக்கப்பட்டு சந்தைப்படுத்தினால், பல ஆயிரம் கோடி ரூபாய்கள் விவசாயப் பெருமக்களுக்கு ஊடு பணமாகக் கிடைக்கக் கூடும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை செழிப்பாக்கக் கூடிய ஒரு வரப்பிரசாதம் எனலாம். இதன் மூலமாக வரியாக அரசாங்கத்திற்கு பல நூறு கோடி ரூபாய்களும், நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கக்கூடும். முந்திரிக்கொட்டையின் மேல்புறம் உள்ள நிலக்கடலை தொப்பி போன்ற ஓட்டுப்பகுதியையும் நாம் சரிவர பயன்படுத்துவதில்லை. இதன் பயன்கள் குறித்து நம் அரசு ஆய்வுத் (R&D) துறை ஆய்வு செய்து அதையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால், விவாசாயிகளின் வாழ்வாதாரம் மேலும் சிறப்படையும். சமீபத்தில் பெப்சி கம்பெனியின் மேலதிகாரி ஒருவர் இப்பழத்தைச் சுவைத்துவிட்டு, இதனை அவர்களின் கம்பெனி சார்பாக சந்தைப்படுத்த எண்ணுகின்றனர். நாம் விழிப்படைய வேண்டிய அவசரத் தருணமிது!

    இப்படி நமது தமிழ்நாட்டில் பல வகையான இயற்கை வளங்கள் அனைத்துப் பகுதியிலும் நிரம்பியிருக்கின்றன. அவைகளை சரியான முறையில் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தால் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும், நம் இந்தியா உலக அரங்கில் பொருளாதாரத்தில் தலை சிறந்த நாடாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு, வரட்சி மிகுந்த தென் மாவட்டங்களில், சுவை மிகுந்த பதநீர் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டன. அந்தப் பதநீரோ, சுவை மிகுந்தது. வயிற்றுப் புண்ணை ஆற்றுவிக்கக் கூடியது. கரிசல் மண்ணில் , கண்ணீருடன் வாழக்கூடிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடியது. விளம்பர யுகமாகிய இக்காலங்களில், அங்கு கிடைக்கக்கூடிய, பனை வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, போன்றவைகளை அரசாங்கம் மூலமாக சிறந்த முறையில் விளம்பரப்படுத்தி, சந்தைப்படுத்தினால் சிறப்பாகும். மருத்துவக் குணம் கொண்ட இவைகளை அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நம் வருமானமும் கனிசமாகக் கூடும்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், மாவட்டங்களில் 10, 15 தறிகளே வைத்திருப்பவரும் துணி தயாரிப்பது போல, கடலையே நம்பி வாழக்கூடிய கடற்கரை மாவட்ட மக்களுக்கு அங்குள்ள உப்பளங்கள் வழியாக உப்பு மற்றும் இரசாயண உரங்களையும், உப்பையும், நவீனமான எளிய முறையில், தயாரித்து சந்தைப்படுத்தினால், விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் கிடைக்கும். கண்ணீரில் வாழும் மீனவ மக்களுக்கு வளமான வாழ்வும் கிடைக்கும். ஒரு காலத்தில் பிரசித்தமாக இருந்த இறால் வளர்ப்புப் பண்ணைகள் நாளடைவில் அழிந்துவிட்டன. ஆர் & டி துறையினரின் வழிகாட்டுதலின் பேரில், இந்தப் பண்ணைகளை அமைத்து, மீண்டும் இறால்களைப் பதப்படுத்தி, ஏற்றுமதி செய்தால் அவர்களுடைய பொருளாதாரமும் வளர்ச்சியடையும் வாய்ப்பு கூடும். இப்படி ஒவ்வொரு பகுதியிலும் மலிந்துள்ள எண்ணற்ற வளங்களை சரியான முறையில் நெறிப்படுத்தினால், நம் இந்தியப் பொருளாதாரம் சீரடைவதோடு, நம் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்பது சத்தியம்.

    Share
  • ஸ்ரீ ஹரி ஓம் அம்மா!

    பவள சங்கரி

    “துறவியரில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் காமத்தையும் செல்வத்தையும் துறந்துவிட்ட பிறகும்கூட, பெயர், புகழ் ஆசையால் விலங்கிடப்படுகிறார்கள். மாபெரும் உள்ளங்களுக்கும் கடைசியாக உள்ள பலவீனம் புகழில் உள்ள ஆசை”
    சுவாமி விவேகானந்தர்

    நம் இந்தியத் திருநாடே ஆன்மீகம் என்னும் அடித்தளத்தின்மீது கட்டப்பட்ட ஒரு மாபெரும் கோட்டை என்பதே உலகறிந்த உண்மை. நம் நாட்டில் மட்டுமே பல மதங்கள், பல இனங்கள், பல தெய்வங்கள், ஒவ்வொன்றிற்கும் ஒருவிதமான தத்துவங்கள், எண்ணற்ற வழிபாட்டு முறைகள் என்று திரும்பிய புறமெல்லாம் ஏதோவொரு ஆன்மீகச் சின்னம் நம் கண்ணில் பட்டவாறே இருக்கும். அந்த வகையில் துறவறம் பூண்டு, நாட்டை விட்டு காட்டில் சென்று தவம் புரிந்த சங்க காலத்தின் சக்கரவர்த்திகளாகட்டும், சகல செல்வங்களும் கொட்டிக்கிடக்க, எந்தச் சுகமும் தேவையில்லை என்று துறந்து தெருவில் இறங்கிச் செல்லும், செல்வந்தராகட்டும், நாகரீக உலகில் பிறந்து, வளர்ந்தாலும் இளமை முதல் எதிலும் எதுவித நாட்டமும் இன்றி, இறைமையை அல்லும், பகலும் மனதிலேற்றி மெல்ல, மெல்ல துறவை நாடியோராகட்டும், அனைவரின் இலக்கும் இறைவனை அடைவது என்பதோடு, உள்ளத் தூய்மையும், அதனால் பெறக்கூடிய மன நிம்மதியும்தான். அந்த வகையில், இறைவனின் படைப்பில் ஒவ்வொரு மலரும் ஒரு தனிப்பட்ட குணமும், மணமும், நிறமும் கொண்டிருப்பது ஆச்சரியப்படத்தக்கது. இயல்பாகவே பெண்கள் இளம் வயதிலிருந்தே, தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் தனி விருப்பம் கொண்டவர்களாக இருப்பவர்கள். ஒரு இளம் பெண் மனதில் ஆசா, பாசங்கள் அனைத்தும் மறைந்து, அன்பும், அமைதியும், பேரானந்தமும் நிலைத்து நிற்கும் வண்ணம் துறவு நிலையை தேர்ந்தெடுப்பது என்பது சாமான்ய காரியம் அல்ல. பிறவியிலேயே அப்படி ஒரு எண்ணம் வாய்க்கப் பெற்றவர்களுக்கே இது சாத்தியம் என்பதே நிதர்சனம்.

    வண்ண வண்ணச் சிற்றாடையுடன், சிங்காரம் செய்து, இன்பமாய் வலம் வரும் காலத்தில், பாண்டியும், பல்லாங்குழியும் விளையாடும் பருவத்தில், தூய வெண்ணாடையை உடுத்தி, அதே தூய்மையை உள்ளத்திலும் புகுத்தி, மங்கையரில் தாம் ஒரு தனி ரகம் என்பதை ஆச்சரியமாகக் காணச் செய்துள்ளவர் ஸ்ரீ ஹரிஓம் அம்மையார் அவர்கள். தம் இளம் பருவத்திலேயே இறைவனின் மீது நாட்டம் கொண்டு, இயற்கையாய் ஒரு இளம் பெண்ணிற்கு உள்ள எந்த உணர்வினாலும் ஆட்படாமல், அறிவும், இறைமையும் தம் இரு கண்களாக எண்ணி தம் வாழ்நாளைத் தவமாக கழித்துக் கொண்டிருப்பவர். அதற்கு இணையான ஆசிரியப் பணியில் தம் கடமையைச் செவ்வனே நிறைவேற்றி, எண்ணிலடங்கா பெண் குழந்தைகளை ஒழுக்கச் சீலர்களாக உருவாக்கியுள்ள பெருமை அம்மையாரையேச் சேரும். தாம் புனிதமாகக் கருதியத் தம் ஆசிரியப் பணியிலும், மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர், 72 வயது நிரம்பிய ஸ்ரீஹரிஓம் அம்மையார் அவர்கள்.

    ஒரு மனிதரின் தனிப்பட்ட அடையாளத்தை அவருக்கே புரிய வைப்பவரே நல்லாசிரியர் என்பவர். இளம் சிறார்கள், ஊக்கம், தன்னம்பிக்கை , விடா முயற்சி ஆகிய நற்பண்புகளைக் கொண்டு ஒரு நாட்டின் சிறந்த குடிமகனாக உருவாகுவதற்கு ஆசிரியத் தொழில் பெரும்பங்கு வகிப்பதை எவரும் மறுக்க இயலாது. அந்த வகையில் சுயநலம் மட்டுமே கருத்தில் கொண்டு, தம் ஆன்மா கடைத்தேற வழிவகுக்கும் எண்ணம் மட்டுமேயன்றி, சமுதாயத்திற்கும் தம்மால் ஆன சேவையைச் செய்துள்ள மன நிறைவையும் பெற்று ஈரோடை மாநகரின், அவல் பூந்துறை கிராமத்தில், பெரியமணியம்பாளையம் என்னும் புனிதமான இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூர்ண வித்யா குருகுலத்தில் தம் தவ வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும், அம்மையாரைச் சந்தித்து உரையாடினோம்.

     paval

    வினா : துள்ளி விளையாடும் பருவத்திலேயே, தூய வாழ்வைப் பற்றிய சிந்தை தோன்றியதன் பிண்ணனி குறித்து அறியத் தாருங்கள் அம்மா.

    அம்மா: ஆம். இளம் வயதிலேயே எனக்கு ஆழ்ந்த வாசிப்பின்பாற் ஈடுபாடு ஏற்பட்டது. அதுவே எனக்குக் கிடைத்த வரமாக எண்ணுகிறேன். பத்து, பன்னிரெண்டு வயதிலேயே, மு.வரதராசனார் புத்தகங்களும், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ எனும் புதினமும் என்னை அதிகமாகவேக் கவர்ந்தன. ஆன்மீகமும், சரித்திரமும், தேச பக்தியும் என்னை ஆட்கொண்டது என்றே சொல்ல வேண்டும். நல்ல வாசிப்பு, ஒரு நல்ல மனிதனை உருவாக்குகிறது என்பதற்கு ஆதாரமே என் வாழ்க்கை. வளர் இளம் பருவத்திலேயே மற்ற குழந்தைகள் போல இயல்பான இச்சைகள் எதுவுமே எனக்கு இல்லாமலே போனது. வெள்ளை ஆடை உடுத்துவது மட்டுமே என் விருப்பமாக இருந்தது. உடன் பயின்ற மாணவர்களுக்கும் நான் ஒரு வித்தியாசமான பிறவியாகவே காட்சியளித்திருக்க வேண்டும் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.

    pavala2

    வினா : ஆன்மீகப் பாதையில் தங்களின் வளர்ச்சி பற்றி சொல்லுங்களேன்

    pavala1அம்மா: நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக, என் பள்ளிக் கல்வியுடன், பற்றில்லாத ஒரு நிலையும் என்னையறியாமல் என்னுடன் வளர்ந்து வந்தது என்றே சொல்ல வேண்டும். பெற்றோர் (இவர் தந்தை பிரபலமான ஒரு மருத்துவராக இருந்தவர்) சகோதரிகள் என அனைவரும் என்னுடன் இருந்தபோதும், தனிமை மட்டுமே என் உள்ளொளியை பெருகச் செய்தது என்றே சொல்ல வேண்டும். அதன் காரணமாகவே என் முதுகலை கல்லூரிப் படிப்பை முடித்தவுடனே, வினோபாஜியின் மடத்தில் சென்று இரண்டு ஆண்டுகள் தங்கிவிட்டேன். அங்குதான் தேசபக்தியும், என் ஆன்மீகமும் இணைந்த பயணம் தலை தூக்கியது. வினோபாஜியின் உரைகள் என்னை மென்மேலும் பண்படுத்தியதோடு, என் ஆன்மீகத் தேடலுக்கும் நிறைய நூல்கள் களம் அமைத்துக் கொடுத்தன. கட்டுப்பாடான வாழ்க்கைக்கும் தயாராக முடிந்தது.

    வினா : தேச பக்தியும், துறவும் ஒன்றிணைந்து பயணிக்க இயலுமா?

    அம்மா: இல்லை. என்னைப் பொருத்தவரை தேசப்பற்றும், என்னுள் இருந்த கலைப்பற்றும் என் ஆன்மீக வாழ்க்கைக்குத் தடையாகவே இருந்தது. நாட்டியம், பாடல், கவிதை எழுதுவது போன்ற கலைகள் நான் கற்றிருந்தேன். ஆனாலும் அதைச் சுமக்க விரும்பாமல் விட்டுவிட்ட பின்புதான் என் துறவு வாழ்க்கை சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதாவது எதுவுமற்ற வெறுமையே வழிபாடு என்ற நிலை அரும்பியது. எந்தத் தேவையும் இருக்கவில்லை. தம் தொண்ணூறு வயதுகளில் இருந்த வினோபாஜியின் அறிவுரைகளும், வாழ்க்கை முறைமைகளும் எனக்குள் பெரும் மாற்றத்தையே ஏற்படுத்தியது. அதன் பின் ஆசிரியத் தொழிலைத் தேர்ந்தெடுத்து, மாணவச் செல்வங்களுக்கும் நல்ல ஆன்மீக ஒழுக்க நெறியுடன் இயைந்த கல்வியைப் புகட்ட முடிந்தது. என்னுடைய இந்த எழுபத்தி இரண்டு வயதிலும், இன்று திருமணம் ஆகி நல்ல நிலையில் வாழும் பெண்கள் பலர் தங்கள் அமைதியான வாழ்வின் ஆதாரமாக என் பயிற்சி முறைகள் இருந்துள்ளது என்று மகிழ்வுடன் சொல்வதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

    வினா: துறவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்த ஒருவர் நாட்டிற்கான சேவை ஏதும் செய்யத் தேவையில்லையா? குறிப்பாக அரசியலில் அவர்கள் ஈடுபடலாமா?

    அம்மா : தேவையில்லை. சும்மா இருத்தலே துறவறம். (உண்மையான துறவிகளுக்கு). அவர்களின் இருப்பே நன்மை. ஏதும் செய்ய வேண்டிய தேவையே இல்லை.

    வினா: புரியவில்லை அம்மா. சும்மா இருப்பதில் யாருக்கு என்ன நன்மை விளையப் போகிறது. நாட்டிற்கும், வீட்டிற்கும் நம் சக மனிதர்களுக்கும் கூட எந்த சேவையும் செய்யாமல் சும்மாயிருப்பதில் தன்சுகம் காண்பதன்றி வேறு என்ன நன்மை விளையப்போகிறது.

    அம்மா: ஆம். உண்மையான துறவு நிலையை மேற்கொண்டிருப்பவர்களின் இருப்பே நாட்டிற்கு நலம் விளைவிப்பவை. ஒரு தீபச் சுடர் போல ஒளி பரவும். அந்த ஒளியில் எண்ணற்ற நலம் பெருகும்.

    வினா: அப்படி ஒரு நல்ல அலை பரவும் என்ற நம்பிக்கையில் வாழ்நாள் முழுவதும் ஏதும் செய்யாமலே காத்திருப்பது சரியா? அப்படி ஒரு நிலை வந்துவிட்டது என்பதை ஒருவரால் உணர முடியுமா?

    அம்மா: நிச்சயம் உணர முடியும். உண்மையான துறவு நிலையில் இருப்பவர்களுக்கு அந்த பேருண்மையை உணர முடியும். உள்ளத்தில் ஒரு நிரந்தர மகிழ்ச்சியும், அமைதியும் குடிகொண்டிருக்கும். தன்னைச் சுற்றி இருக்கும் சகல சீவன்களும் அதன் பலனை அனுபவிக்கவும் முடியும்.

    வினா: அம்மா, தவறாக எண்ண வேண்டாம். என் ஐயம் தீர வேண்டியே இப்படி ஒரு வினா. துறவு நிலையில் இருப்பவர்கள் ஏதும் செய்யாமல் சும்மா இருப்பதே நலம் என்ற தங்களின் வாதம் உண்மையென்றால், சுவாமி விவேகானந்தர் நாடு முழுவதும் சுற்றி மக்களுக்கு நாட்டுப் பற்றை ஏற்படுத்தியதோடு, பல வெளிநாடுகளுக்கும் சென்று நம் நாட்டின் பெருமையை பரவச் செய்தாரே அந்த துறவறமும் சரிதானே?

    அம்மா: நிச்சயமாக ஆம். சுவாமிஜி, நாட்டின் அப்போதையத் தேவையைக் கருத்தில்கொண்டு, மக்களுக்கு தேசப்பற்றுpavala4 வளரவேண்டும், சுதந்திரப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கில் தம் செயல்களை மேற்கொண்டிருந்தார். அதனால் நாட்டில் பெரும் நன்மைகளும் விளைந்தது. இந்து மதத்தை எப்படியும் உயர்வான நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒரு விதத்தில் அது அவருடைய மறைமுகமான ஒரு சுதந்திரப் போராட்டம் என்றே சொல்ல வேண்டும். நம் இந்தியாவில் சமஸ்கிருதம், வேதங்கள், உபநிசத்துகள் போன்ற பல அற்புதமான வளங்கள் இருக்கின்றன என்பதை உலக அரங்கில் எடுத்துச் சென்றார். அவருடைய உள்நோக்கம் துறவறம் என்பதைக்காட்டிலும், நாட்டுப் பற்று என்பதிலேயே இருந்தது. ஆனாலும் அவரும் தனக்குள் ஏதும் இல்லாமலேதான் இருந்தார். துயரப்படுவோருக்காக அவர் மனம் அழுதாலும், அவருக்குள் தனிப்பட்ட எந்தவிதப் பற்றும் இல்லாத வெறுமையே இருந்தது. அதுவே அவருக்கு வெற்றியையும் தந்தது.

    வினா: அப்படியானால் துறவு நிலையிலும் வேறுபாடுகள் உள்ளது என்கிறீர்களா?

    அம்மா : ஆம். அவரவர் சூழலுக்கேற்ப மாற்றங்கள் உண்டு. வாழ்க்கையில் படாத துன்பங்களெல்லாம் பட்ட பின்பு, துறவு நிலையைத்
    தேர்ந்தெடுத்தவர் பலர் மிகவும் மனம் ஒன்றிய நிலை துறவில் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

    வினா : காலம் குறித்து தங்களுடைய கருத்து என்ன? எதிர்காலம் பற்றி தங்களால் சொல்ல முடியுமா?

    அம்மா: காலம் என்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை. இறந்த காலம் முடிந்துபோன ஒன்று. எதிர்காலம் நம் கையில் இல்லை. நிகழ் காலமென்றாலும் அடுத்த நொடி என்றாலே அது முடிந்துபோன காலம். ஆக காலம் என்பது இல்லாத ஒன்று. இருப்பில் இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பது…

    வினா : உங்கள் குடும்பம் பற்றி?

    அம்மா: ஒரு சன்யாசிக்கு இந்த உலகமே குடும்பம்தான். அவர்களுக்கென்று தனிப்பட்ட குடும்பம் இல்லை என்றாலும், தாய் தந்தை இல்லாமல் எவரும் பிறக்க முடியாது. என் தந்தை ஒரு பிரபல மருத்துவராக இருந்தவர். தாய் மிக நல்லதொரு ஆத்மா..

    வினா: குடும்பம் எனும் சாகரத்தில் நீந்தி இன்ப துன்பங்கள் அனைத்தும் கடந்த நிலையில் பிற்காலங்களில் சன்னியாசம் பெறுவது நல்லதா? அது தேவையா?

    அம்மா: நம் இந்து மதம் இதை வானப்பிரஸ்தம் என்று முழுமையாக ஆதரிக்கிறது. நம் முன்னோர்கள், அரசர் முதல் ஆண்டி வரை எண்ணற்றோர் அப்படி வானப்பிரஸ்தம் சென்றுள்ளார்கள். இன்றும் வயதான காலத்தில் பெற்றோர் பிள்ளைகளை விட்டு விலகி இருத்தலே நலம். அதற்காக காவி உடுத்தி காட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதல்ல. மனதில் எந்த எதிர்பார்ப்பும், ஆசைகளும் இன்றி தனிமையில் அமைதியான நிலையை மேற்கொள்வதே தவம். வாழ்ந்து முடித்தவர்கள் வாழ வேண்டியவர்களுக்கு வழி விட்டு விலகி இருத்தலே சிறந்த தவம்.

    வினா: அப்படியாயின் கூட்டுக் குடும்பம் என்ற ஒரு விசயமே தேவையில்லையா? தாத்தா, பாட்டி என்ற உறவு குழந்தைகளுக்கு அத்தியாவசியம் இல்லையா?

    அம்மா: எல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டு இருந்தாலே அமைதியான வாழ்க்கை கிடைக்கும். குடும்பத்தில் உழன்று கொண்டே இருப்பதால், தன் மன அமைதி, இறை நிலை ஆகிய அனைத்தும் இழக்க வேண்டியும் வந்துவிடுகிறது. மின் கட்டணமும், பால் அட்டையும், காய்காரி பிரச்சனையிலேயே வாழ்க்கையை ஓட்டிவிட்டு ஆன்மா கடைத்தேறும் வழியறியாது திகைத்து நிற்பதே முடிவாகிவிடும். அவரவர் கடமையை அவரவர் காலமறிந்து செய்வதே சிறந்த தவம். அதுவே மன அமைதிக்கும் வழி.

    வினா: புனிதப் பயணங்கள் செல்வது தேவையா?

    அம்மா: புனிதப் பயணங்கள் செல்வதன் மூலம் மனம் தூய்மை அடைகிறது. நம் முன்னோர்கள், புண்ணிய ஆத்மாக்கள் பாதம் பதிந்த மண்ணையும், ஆதிசங்கரர் போன்ற மகான்கள் கண்ணுற்ற தெய்வங்களை நாமும் தரிசிக்கும் போது நல்ல அலைகள் பரவும் வாய்ப்பு அதிகமாகிறது.
    ஆனால் ஒரு துறவிக்கு அதுவும் தேவையில்லை. தானே இறைவனுமாய் இருப்போரே உண்மையான துறவிகள். காட்டில் சென்று அமைதியாக தனிமையில் வாழுவதே சிறந்த தவம்.

    வினா: வினோபாஜியின் ஆசிரமத்தில் இருந்தபோது நீங்கள் கற்றுக்கொண்டவைகள் எவை?

    booksஅம்மா: ‘கேதாரேஷ்வர் தாம்’ நதிக்கரையில் உள்ள அந்த ஆசிரமத்தில், வாழ்க்கையின் நெறி முறைகள் அனைத்தும் அங்குதான் கற்றேன். வினோபாஜியின் ஆசிரமத்தில் என்னுடைய இரண்டாண்டு வாழ்க்கையில் நான் தவ வலிமையும், யோகமும், வேத சாத்திரங்கள் மற்றும் உபநிசங்களும் ஞானமாய் பெற்றேன். ஒரு வேளை உணவு மட்டுமே உயிர் வாழப் போதுமானது என்று அங்கு பழகி வந்ததை கடந்த ஐம்பது ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறேன். அதனால்தானோ என்னவோ இந்த 72 வயதிலும் பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். அவரவர் உழைப்பிற்கேற்ற உணவு எடுத்துக்கொள்வதே சிறந்தது. சத்தான உணவு எடுத்துக்கொள்வது அவசியம் என்றாலும், கூலித் தொழிலாளி தன்னுடைய கடிமான வேலைக்குப் பிறகு சாப்பிடும் அதே அளவு உணவை உடலுழைப்பு அதிகம் இல்லாத அலுவலக அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்க்குத் தேவையில்லை. அந்த வகையில் துறவு நிலையில் சும்மா இருப்பவர்கள் இன்னும் கட்டுப்பாடான உணவுப் பழக்கம் கொள்வதே சரியாகும்.

    வினா: தியானம் யாருக்கெல்லாம் அவசியம்?

    அம்மா: தியானம் அனைவருக்கும் அவசியமான ஒன்று. குறிப்பாக குடும்பத்தில் உள்ளவர்கள் அன்றாடம் இருபது நிமிடங்களேனும் செய்ய வேண்டியது அவசியம். நான் தியானம் பயின்றது, தம்மகிரியில் கோயங்காவிடம். அதன் பிறகு தயானந்த சரசுவதி சுவாமிகளிடம் தியானம் பயின்றேன். நான் மிக அதிகமாகக் கற்றுக்கொண்டது என்றால் அது நுவரேலியாவில், காயத்ரி பீடத்தின், காயத்ரி சுவாமிகளிடம்தான். “கடைசி காலத்தில் நீ ஸ்ரீலங்காவில்தான் வந்து சேருவாய்” என்றும் சொல்லியிருக்கிறார் சுவாமிகள். தியானம் அன்றாடம் பயிற்சி செய்வதன் மூலமாக ஒரு மணி நேரத்தில் செய்யும் வேலையை அரை மணியில் முடிக்க முடியும்.

    வினா : இன்றைய பெண்களின் நிலை பற்றி?

    அம்மா: என் கருத்து சற்று மாறுபட்டும் இருக்கலாம். பாரதி சொல்வான், ‘பெண்ணை வீட்டிற்குள் பூட்டி வைத்த விந்தை மனிதர் தலை சாய்ந்துவிட்டார்’ என்று. ஆனால் அன்று பெண்களை அப்படி வீட்டில் பொத்தி வைத்திருந்ததாலேயே நம் இந்தியக் கலாச்சாரம் காப்பாற்றப்பட்டிருந்தது என்றே சொல்லலாம். அன்றைய காலகட்டத்தில் அது மிகவும் அவசியமானதாகவே இருந்தது. பல ஆயிரம் வருடங்களாக அந்நியர் பூந்துவிட்ட நாடு இது. நம்நாட்டில் திலகவதியார், மைத்ரேயி, மங்கையர்கரசியார் போன்ற எத்துனை மாதரசிகள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அவர்களெல்லாம் கட்டுப்படுத்தப்பட்டவர்கள் அல்ல. அவர்களுக்குரிய சுதந்திரமும் இருக்கத்தான் செய்தது.

    இன்றைய நிலையில் ஒரு பெண் அநாவசியமாக, இரவு நேரங்களில், பாதுகாப்பற்ற சாலைகளில் அச்சத்துடன் செல்வதைக் காட்டிலும், வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பதே முழுமையான சுதந்திரம் என்றே கூற முடிகிறது. பெண்கள் என்றுமே தங்களுக்கென ஒரு கட்டுப்பாடு வைத்துக்கொண்டு அதற்குள் வாழ்வது மட்டுமே சிறந்ததொரு வாழ்க்கை. சுதந்திரம் என்ற பெயரில் தேவையற்ற செயல்களைச் செய்து மாட்டிக்கொள்வதில் அல்ல சுதந்திரம். இன்று பெண்கள் கட்டாயமாக பணிக்குச் செல்ல வேண்டிய நிலையில், ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் துணிவு, அதாவது, அச்சமின்றி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பக்குவம் உள்ளவர்கள் மட்டுமே அதற்குத் தகுதியுடைவராகிறார். அதுமட்டுமல்லாமல், பெண்கள் பணிக்குச் செல்வதால், குழந்தை வளர்ப்பு பெரும் சவாலாகிவிடுகிறது. குழந்தைகளிடம் சில மணி நேரங்கள் செலவிடுவது கூட பெற்றோருக்கு இயலாமல் போகிறது. இதனால் இன்று குழந்தைகளின் மன நிலைகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சம நிலை என்பதிலெல்லாம் பெரும் அர்த்தம் இல்லை. அவரவர் கடமையை அவரவர் சரிவர செய்வதே சிறந்த சமத்துவம். இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே இனிமையான வாழ்க்கை. அதை உணர்ந்து வாழவேண்டியதே இன்றைய தேவை.

    மெய்ஞ்ஞான உணவை ஊட்டியது போதாது என்று நினைத்த அன்னை எங்களுக்கு அரிசிச் சாதமும், கொத்தமல்லித் துகையலும், தேங்காய் எண்ணெயும் கலந்து, தம் கைகளால் பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொடுத்து வயிரையும் நிறையச் செய்தார்கள். மதிய நேரமான அந்த பகல் வேளையிலும், திறந்த வெளித் திண்ணையில், நல்ல நினைவலைகளின் பகிர்வுகளோடு, நிலாச்சோறு உண்ட மன நிறைவையும் ஏற்படுத்திய அன்னையை நெஞ்சில் சுமந்தபடி, அமைதியாக அவர் சிந்தைகளை அசை போட்டபடியும் வந்து சேர்ந்தோம், எங்கள் கடமைகளைத் தொடர….

    Share
  • நம் இந்தியாவில் அந்நிய முதலீடுகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    இந்தியாவில் அந்நிய முதலீட்டை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், இன்றைய தேசிய முற்போக்குக் கூட்டணியும் சிவப்புக் கம்பளம் விரித்து, வரவேற்கின்றன. இது சரியான அணுகுமுறையா? அந்நிய முதலீடுகளை எந்தெந்தத் துறையில் அனுமதிக்கலாம் மற்றும் அதன் எல்லை எதுவரை என்பதை வரையறுக்கவேண்டியது அவசியம். அந்நிய முதலீடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்திய சந்தையில் விற்கப்படும் அளவு மற்றும் வெளிநாட்டுச் சந்தைக்கு ஏற்றுமதியாகும் அளவையும் வரையறுக்கவேண்டும். இதன் மூலம் ஏற்படும் பரிவர்த்தனைகள் முழுதும் இந்திய ரூபாயில் இருந்தால் நன்மை பயக்கும். இதற்கு மாறான நிலையில் அந்நிய முதலீடுகளை வரவேற்கும் பட்சத்தில் பின்னாளில் நம்முடைய பொருளாதாரம் கேள்விக்குறியாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

    காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு எந்த வகையில் பயனுள்ள வகையில் இருக்கும் என்பதும் சிந்திக்கத்தக்கவை. உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் 1000 கோடி டாலருடன் இந்தியாவிற்குள் நுழைவதாக வைத்துக்கொண்டால், அந்தத் தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் அப்படியே இருக்கும். காப்பீடு செய்பவர்களின் தொகையும் அவர்களுடைய கணக்கில்தான் ஏற்றம் பெறும். பின்னொரு நாளில் காப்பீடு செய்தவருக்கு இழப்பு ஏற்பட்டால் அவரால் காப்பீடு செய்யப்பட்ட தொகையிலிருந்தே அதைக் கொடுக்க முடியும். அப்படியிருக்க காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு நமக்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும்? 57 ஆண்டுகள் கடந்துள்ள பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் சொத்து மதிப்பு, இன்றைய தேதியில் பல லட்சம் கோடிகளைத் தாண்டிவிட்டது என்பது நிதர்சனம் இப்படியிருக்க காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை வரவேற்பது எந்த வகையில் பயனுடையதாக இருக்கும் என்பதைக் குறித்துக் ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியமாகிறது.

    அடுத்து, பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டின் தலையீடு பற்றி பார்த்தோமானால், அனு ஆயுத ஆய்விலிருந்து விமான உதிரிப்பாகங்கள் வரை அந்நிய முதலீட்டைக் கொண்டுவந்தால் அது இந்திய இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாகவல்லவா அமையும்? நம்முடைய நாட்டின் பாதுகாப்பு வேற்று நாட்டவரின் கைகளில் செல்வது சரியானதாக இருக்குமா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. முதலீடு செய்தவர்கள் வருமானம் போதவில்லை என்ற காரணமோ. அல்லது வேறு ஏதோ காரணமோ காட்டி திடீரென்று ஒரு நாள் தங்கள் தொகையைத் திருப்பி எடுத்தால் நம் நாட்டின் பாதுக்காப்புத் துறை உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்படலாம். அதோடு மிக முக்கியமான ஒன்று நம்முடைய இராணுவ இரகசியங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படலாம். பாதுகாப்புத் துறை உற்பத்திகள் எதிர்பாராத சூழலில் நிறுத்தப்படும் அபாயமும் ஏற்படலாம்.

    உலகிலேயே மிக நீண்ட இரயில் பாதைகளையும், அதிகமான பயனீட்டாளர்களையும் கொண்டுள்ள ஒரே நாடு நம் இந்தியா மட்டும்தான் என்கிற நிலையில், இத்துறையில் அந்நிய முதலீடு தேவையா என்பதையும் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. புல்லட் ரயில் என்று சொல்லக் கூடிய அதிவேக ரயிலுக்காக சுமாராக 40,000 கோடி ரூபாய் ஒதுக்குவதும் அவசியமற்றது. சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில், அவர்கள் தங்கள் சொந்த பொருளாதாரத்தைக்கொண்டே இதனை செயல்படுத்தினார்கள். ஒரு நாளில் ஆயிரம் பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய இரயில்களுக்கு இவ்வளவு பெரிய தொகை செலவு செய்வது தேவையற்றது. அவ்வளவு விரைவாக செல்ல வேண்டியவர்கள் விமானத்தில் பயணம் செய்யலாம். இரயில்வேத் துறையை சரியான முறையில் நிர்வாகம் செய்தால் இன்னும் இலாபகரமாக இயக்க முடியும் என்பதே வல்லுநர்களின் கருத்து.

    அந்நிய முதலீட்டை உற்பத்தித் துறையில் அனுமதித்தும், ஏற்றுமதியை ஊக்கப்படுத்தியும், இறக்குமதிக்கான பரிவர்த்தனை இந்திய ரூபாயிலும், இருந்தால் சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவைப் போன்று நம் இந்திய பொருளாதாரமும் தலை நிமிர்ந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை!

    Share
  • பிரதமரின் மனிதாபிமானமிக்க புதிய நிதித் திட்டம்!!

    பவள சங்கரி

    தலையங்கம்

     ‘ஜன் தன் யோஜனா’ என்கிற அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற திட்டம் மூலமாக நம் இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் தம் சுதந்திர தினச் செய்தியை நடைமுறைப்படுத்தியுள்ளார். புதிய சேமிப்புத் திட்டங்களின் மூலமாக எளிமையான முறையில் சேமிப்பு வங்கிக் கணக்குகள் துவக்கப்படும் என்றும் முதல் நாளிலேயே சுமாராக ஒரு கோடி வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைப்பற்றி மிகப்பெரிய அளவில் விளம்பரங்களும் செய்யப்பட்டுள்ளன. நம் நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு வங்கிக் கணக்கு என்பதே சிம்ம சொப்பனமாக இருந்து வந்திருக்கிறது. அதனாலேயே மக்கள் தங்கள் சேமிப்புப் பணத்தை நகைச் சீட்டுத் திட்டங்கள், பொய்யான விளம்பரங்கள் மூலமாக அதிக வட்டி தருவதாகக் கூறி கொள்ளையடிக்கப்படும் பல்வேறு திட்டங்கள், தேக்கு மரத் திட்டம், ஈமு கோழி வளர்ப்புத் திட்டம் போன்ற பல திட்டங்கள் மூலமாக ஏமாந்து வருவது வாடிக்கையாக நடந்து கொண்டிருப்பதை நாமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். விவசாயிகளின் தற்கொலை, கந்துவட்டிக்காரர்களின் அராஜகம் இப்படி பல கொடுமைகளுக்கு நம் பிரதமரின், மனிதாபிமானம் நிறைந்த இத்திட்டம் தீர்வு சொல்லியிருக்கிறது என்றே கொள்ளலாம். ஆனாலும் நடைமுறையில் இதனை அமல்படுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்படலாம். வங்கிப் பணியாளர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்த்தப்பட வேண்டியதும் அவசியமாகிறது.

    தற்போது சி.பி.ஐ. விசாரணையில் இருக்கும், சாரதா சிட்பண்ட் நிறுவனம். கவர்ச்சிகரமான சேமிப்புத் திட்டங்களை அறிவித்து, மக்களிடையே கோடிக்கணக்கில் நிதி திரட்டி பின் முறைகேடுகளில் ஈடுபட்டதை அடுத்து, அந்நிறுவனம் மூடப்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதுதான் கண்ட பலன். உழைத்து சம்பாதித்த பணம் கொள்ளையடிக்கப்படுவதும் பின்னாட்களில் மக்கள் அலறுவதும் வாடிக்கையாகிவிட்ட சமயத்தில் பிரதமரின் இத்திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதற்கு, ஒரு சில திட்டங்கள் அறிவித்த கொஞ்ச நாட்களிலேயே நீர்த்துப் போனதை மனதில் கொண்டு செயல்பட வேண்டுமென்றால், மக்கள் வங்கிகளில் சேமிப்பதை தங்கள் வழக்கமாகக் கொள்ள வேண்டும். இத்திட்டம் நன்முறையில் வெற்றி பெற வேண்டுமென்றால் சேமிப்புக் கணக்குகளுடன் ஆதர்ச அட்டையை இணைக்க வேண்டியது அவசியமாகிறது. கல்விக்கடன் திட்டங்கள், விவசாய மானியங்கள் போன்ற அனைத்து அரசு மானியங்களும், இந்த சேமிப்பு கணக்குகளுடன் இணைக்கப்பட வேண்டியதும் அவசியமாகிறது. உயிரில்லாத கணக்குடையவர்களின் அனைத்து மானியங்களும், அரசு சலுகைகளும் நிறுத்தப்பட அறிவிக்க வேண்டும். சற்று சிரமமான காரியம் என்றாலும் இதைச் சரியான முறையில் செயல்படுத்துவதன் மூலம் காலப்போக்கில் இத்திட்டம் செயலிழந்துவிடாமல் காக்கவும் முடியும். இந்தச் சேமிப்புகள் மூலமாக குறைந்தபட்சம் ரூ. 10,000 கோடி சேமிப்பாக வங்கிகளுக்குக் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களை மேலும் சற்று கூட்டி அறிவிப்பதன் மூலமாக அதிக வட்டிக்காக ஏமாறுபவர்களின் எண்ணிக்கையும் குறையும் என்பதும் நிதர்சனம்.

    Share
  • நம் இந்தியப் பொருளாதாரமும் தலை நிமிர்ந்து நிற்குமா?

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டின் போக்குவரத்து, தொழில் வளம், தொழிலாளர் வளம், தொழில்நுட்ப தொழிலாளர்களின் எண்ணிக்கை, தங்கம், மற்றும் மக்களின் வாங்கும் சக்தி, இவைகளைக் கொண்டுதான் நிர்ணயம் செய்யப்படுகிறது. நாட்டின் எந்த ஒரு வளர்ச்சிக்கும், அடிப்படை, பிரச்சனை இல்லாத சிறந்த போக்குவரத்து வசதிகள். ஆனால் பொது மக்களுக்கு சுமையைக் கூட்டும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், பயணம் செய்வதற்கான கட்டணங்கள் எந்த முன்னறிவிப்புமின்றி 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்கச் சாவடிகள் பெரும்பாலும் தனி நபர்களால் நடத்தப்படுகின்றன. இப்போது இந்தச் சுங்கச் சாவடிகளில் திடீரென்று இவ்வளவு அதிகமாகக் கட்டண உயர்விற்கான காரணம் என்ன என்பதே விளங்கவில்லை. நாட்டின் ஏதோ ஒரு மூலையில் தயாரிக்கப்படும் பொருள் அந்நிய செலாவணி ஈட்டித் தருவதாகவோ அல்லது மக்களின் பயன்பாட்டில் இருப்பதாக இருந்தாலும் இந்தச் சுமை விதிக்கப்படுகிறது. இது பொது மக்களையோ அல்லது உற்பத்தியாளர்களையோ சென்று அடைவதை நாமறிவோம். எப்பொழுதோ போட்ட சாலைக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் கப்பம் கட்ட வேண்டும்.. இன்னும் எவ்வளவு முறை இது உயர்த்தப்படும் என்றும் தெரியவில்லை. சில காலம் முன்பு மராட்டிய மாநிலத்தில் நடந்தது நினைவிருக்கும். நவநிர்மான் சமிதியைச் சார்ந்தவர்கள் திடீரென்று ஒரு நாள் ‘சுங்க வரி இனி ஒருவரும் செலுத்தப் போவதில்லை’ என்று கூறி சுங்கச் சாவடிகளை உடைத்து எறிந்தார்கள். உடனே மராட்டிய மாநில அரசு பேச்சு வார்த்தை நடத்தி, சுங்கச் சாவடிக் கட்டணங்களை பெருவாரியாகக் குறைத்தது. அப்படியிருக்க இப்பொழுது மீண்டும் இந்தியா முழுவதும் சுங்கக் கட்டணங்களை எதற்காக அதிகப்படுத்த வேண்டும்? ஒரு சில தனி நபர்கள் மட்டுமே இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் பயன் பெறப்போகிறார்களே தவிர, இதனால் நாட்டிற்கு வேறு என்ன நன்மை விளையப்போகிறது?

    போக்குவரத்திற்கும், நாட்டிற்கும் முதுகெலும்பாக இருக்கக்கூடிய பெட்ரோலியப் பொருட்களுக்களின் விலைகள், சந்தை விலைக்கும், ரூபாயின் மதிப்பிற்கும் ஏற்றவாறு லிட்டருக்கு குறைந்தபட்சம் 15 ரூபாய் குறைக்கப்பட வேண்டும். ஆனால் அது குறைக்கப்படவில்லை. வெறும் 2 அல்லது 3 ரூபாய்தான் குறைக்கப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயுவைப் பிரபலப்படுத்தாததன் காரணத்தினால் அந்நிய செலாவணியைக் குறைக்க முடியாமல் போகிறது. ரிலையன்சு நிறுவனத்தினர் மற்ற எரிவாயு கிணறுகளிலிருந்து உற்பத்தியை எப்போது அதிகப்படுத்துவார்கள்? உற்பத்தியை அதிகப்படுத்துவதைவிட்டு ஆண்டிற்கு ஆண்டு உற்பத்தி அளவு குறைந்துகொண்டே வருவதற்கான காரணமும் விளங்கவில்லை. இதற்கான புள்ளிவிவரங்கள் மிகக் குறைவான உற்பத்தியையே காட்டுவதும் வருத்தத்திற்குரிய விசயம். இயற்கை எரிவாயுவின் உற்பத்தியை இந்திய நவரத்தின குழுமங்களின் ஒன்றான எண்ணெய் உற்பத்திக் கழகமே உற்பத்தி செய்தால் பலன் கூடும் என்பதே வல்லுநர்களின் கருத்து.

    நாள்தோறும் தங்கம் பெருமளவில் சுங்க வரி செலுத்தப்டாமலே நாட்டிற்குள் கள்ளத்தனமாக வருவதை அரசு முறைப்படுத்தினால் நலம். நகை உற்பத்தியாளர்கள் தங்கள் தேவைக்காக வாங்கக்கூடிய தங்கத்தின் அளவில் 50 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்வதோடு, தங்கள் தேவைக்கு வேண்டியதை கட்டுப்பாடின்றி இறக்குமதி செய்ய அனுமதிப்பதன் மூலமாக நமக்கு அந்நிய செலாவணி அதிகமாகக் கிடைப்பதோடு சுங்க வரியும் பெற முடியும். மறைமுகமாகத்  தங்கம் வாங்கி விற்கக்கூடிய தவறுகளையும் கட்டுப்படுத்த இயலும்.

    இந்திய ரூபாயின் மதிப்பை அதிகப்படுத்துவதற்கான குறிப்பிட்ட எந்த நடவடிக்கையும் இதுவரை அரசினால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. விவசாய விலை பொருட்களாகட்டும், உற்பத்திப் பொருள்களாகட்டும், இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகரித்தால் மட்டுமே இந்திய பொருளாதாரம் தலை நிமிர முடியும். மூலப் பொருட்களின் ஏற்றுமதியைக் குறைத்து, உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகப்படுத்துவதை ஊக்குவித்தால் நாட்டின் பொருளாதாரம் சீரடைவதோடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கூடும் வாய்ப்பும் அதிகரிக்கலாம்.

    அதிக வட்டிச் சுமையினால் கல்விக் கடன் வாங்குவோரின் எண்ணிக்கை சதவிகிதம் இன்று வெகுவாகக் குறைந்துள்ளது. கல்விக் கடன் முதலில் வாங்கியவர்களின் சதவிகிதத்தைவிட இன்று 25 % குறைந்து 9 சதவிகிதமாக உள்ளது. இது நாட்டின் வளர்ச்சியை மிகவும் பாதிக்கக்கூடிய ஒரு விசயம். இது போல வீட்டு கட்டுமானத்திற்கு கடன் பெறுவோர் மற்றும் அதற்கான தொகையும் கனிசமாகக் குறைந்துள்ளது. அதே சமயம், consumer durables என்று கூறக்கூடிய மக்கள் பயன்பாட்டிற்கு வாங்கக்கூடிய பொருட்களின் சதவிகிதமும், தொகையும் அதிகரித்துள்ளது. கடன் அட்டைகளுக்கான வாராத கடன் தொகையின் சதவிகிதமும் அதிகமாக உள்ளது. இவையனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தை கேள்விகுறியாக்கிக் கொண்டிருக்கிறது. அரசு, கல்விக் கடனை ஊக்குவித்து பொருளாதாரத்தை சீர் தூக்கினால் நாடே நலமடையும் என்பது உறுதி.

    Share
  • சுதந்திரம் என்பது….

     

    பவள சங்கரி

    தலையங்கம்

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

    10551014_706107949437000_8473909052027307686_nசுதந்திரம் என்பது அடிமைத் தளைகளிலிருந்து விடுபடுவது என்று பொதுவாகக் கூறுகிறோம். பசித்தவனுக்கு உணவு கிடைத்தால் அது சுதந்திரம் அவனுக்கு. துரத்தி வரும் புலிகளிடமிருந்து தப்பிக்கும்  மான்களுக்கு அதுதான் சுதந்திரம், வயல்வெளிகளிலும், காடுகளிலும்,  கூவித்திரியும் குயில்களுக்கு அந்த கானமே சுதந்திரம். நமக்கு எது சுதந்திரம்?  எந்த நாடாக இருந்தாலும், பொருளாதாரத்தில் விடுதலை பெற்றாலே அது உண்மையான சுதந்திரமாகக் கருதப்படும். 67 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15இல்  கொடியேற்றிவிட்டு சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று, மகிழ்ச்சியுடன்  ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று பாடியும்விட்டு,  பின் அவரவர்  கடமைகளுக்குச் சென்றுவிடுகிறோம்.  சிந்திக்க வேண்டிய நேரம் இது. நம் இந்திய நாடு பொருளாதாரத்தில் சீர்பட மிகப் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  முந்தைய ஆட்சிக்கும்  இன்றைய ஆட்சிக்கும் சீர்திருத்த செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் ஏதும் காணமுடியவில்லை.  ரிசர்வ் வங்கி ஆளுநரின் கருத்துப்படி கடன் வாங்குவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பினும் கடன் பெற்று தொழில்களையும், தொழிற்சாலைகளையும் விரிவுபடுத்தத் தயங்கக்கூடிய நிலையே இன்று உள்ளது. தொழில் வளர்ச்சியும், மேம்படுத்தப்பட்ட பொருளாதாரமுமே தனி மனித சுதந்திரத்தை அளிக்க இயலும். 67 ஆண்டுகளுக்குப் பின்பும், மத்திய தொகுப்பு மற்றும் மாநில தொகுப்பிலிருந்தும் நுகர்வுப் பொருட்களை அதாவது உணவுப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் முண்டியடித்துச் செல்லும் நிலை இருக்கும் போது நாம் எப்படி சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் நிறைவு பெற்றன என்று பெருமைப்பட முடியும்.. உலக வங்கியின் அறிக்கை மற்றும் ஐ. நா. சபையின் அறிக்கையின்படியும், உலக மக்கள் தொகையில் 33 சதவிகிதத்தினர், இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்னும் தெளிவாகச் சொன்னால் இந்திய மக்கள் தொகையில் 66 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இதனை கவனத்தில்கொண்டு செயல்பட்டாலொழிய நாம் பூரண சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று பெருமைப்பட முடியாது!

    Share
  • வெகுமதிகள் தேவைதான்…..

    பவள சங்கரி

    தலையங்கம்

    மும்பை மாநகரில் இணையத் தொடர்பு அனைத்துப் பகுதிகளிலும் இலவசமாக கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது நல்ல செய்தி என்றால் அதைவிட நல்ல செய்தி அனைத்துக் கட்சியினரும் இணைந்து இந்த நல்லதொரு பணியை செய்திருப்பதுதான். வாக்குகளுக்காக இலவசங்களும், வெகுமதிகளும் வழங்குவதைக்காட்டிலும் இது போன்று ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவது வரவேற்புக்குரியது. இந்தியாவிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் இது போன்ற மாற்றம் ஏற்பட்டால் அதுதான் நம் நாட்டின் பொன்னான காலம். . நாடும் வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடும் என்பதும் உறுதி..

    பத்தாண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் ஏற்பட்ட சோக நிகழ்விற்கு இப்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காலங்கடந்த தீர்ப்பு.. இனிமேலும் இது போன்ற அவலங்கள் தொடராமல் இருக்க வேண்டும் என்ற உண்மையான நல்லெண்ணம் கொண்டவர்களாக இருப்பின், பொதுப்பணியில் இருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் சேர்ந்தோ அல்லது தனித்தோ அந்தப் பள்ளி மற்றும் இது போன்ற மோசமான நிலைகளில் இருக்கும் மற்ற கல்வி நிலையங்களையும் தத்து எடுத்துக்கொண்டு நிலையான கட்டிடங்களைக் கட்டிக்கொடுத்தால் எவ்வளவு சிறந்த செயலாக அது இருக்கும். ”தேர்தலுக்கு முன்பே நாங்கள் செய்து காட்டிவிட்டோம் தேர்தலில் எங்களைத் தேர்ந்தெடுத்தால் நாங்கள் இன்னும் உற்சாகமாகப் பணியாற்றுவோம்” என்று இப்படி ஆதாரப்பூர்வமாகக் கூறினால் மக்கள் அவர்களை தேர்ந்தெடுக்காமல் விடுவார்களா என்ன?

    மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் ஒரு கிராமமே மண்ணில் புதையுண்டு உள்ள, மனதை உலுக்கும் சோக சம்பவம் நடந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 82 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இன்னும் எத்தனை சடலங்கள் கிடைக்குமோ தெரியவில்லை. ஒரு நாளில் மாற்றம் ஏற்பட்டு சரிவை ஏற்படுத்தக்கூடிய தன்மையுடைய மண் அல்ல அது. இலகுவான தன்மை கொண்ட மண் என்பதால் எப்போதும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியிருக்கும்போது மழைக் காலம் வருவதற்கு முன்பே அந்தப் பகுதியைச் சார்ந்த அரசியல் கட்சிகள் அந்த கிராமத்தின் மீது தங்கள் முழு கவனத்தையும் செலுத்தி, நிலையான கட்டுமானப் பணிகளைச் செய்திருந்தால் இந்த கோரச் சம்பவம் நிகழாமல் தடுத்திருக்கலாம். எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இந்த கோரச் சம்பவத்தால் உயிர் சேதம் ஏற்பட்டதை தவிர்த்திருக்கலாம்.

    kosi_PTI_2036476hஇந்த நிகழ்வுகளின் சோகம் மறைவதற்கு முன்பே அடுத்த நிகழ்வும் தயாராகிவிட்டது. கோசி நதியின் வெள்ளப் பெருக்கால் பீகாரில் 6 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு 1 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேபாள நாட்டில் உற்பத்தியாகும் கோசி நதியில், அங்கு பெய்யும் தொடர் மழை காரணமாக திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது கோசி ஆற்றில் 12 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் வந்து கொண்டு இருக்கிறது. கோசி நதி, பீகார் மாநிலத்தின் 6 மாவட்டங்கள் வழியாக மேற்கு வங்காளத்தில் சென்று வங்கக் கடலில் கலக்கிறது. கோசி நதியின் குறுக்கே உள்ள பிர்பூர் அணையில் இருந்து இப்போது வினாடிக்கு 2½ லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    கோசி நதியின் வெள்ளப்பெருக்கும், இதே போன்ற நிலச் சரிவும் நேபாளத்தையும், நமது பீகார் மாநிலத்தையும் பெரிதும் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 13 கரையோர மாவட்டங்களைச் சார்ந்த ஒரு இலட்சத்து முப்பதினாயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேரிடர் களையும் குழுக்கள் நேபாளத்திற்கு ஒன்றும், பீகாருக்கு ஆறு குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன. கங்கைக்கு 2500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது போன்று இந்த மாவட்டங்களின் புனரமைப்பிற்கும் அந்த நதியை சீரமைப்பதற்கும் சில கோடிகள் ஒதுக்கினால் வருமுன் காக்க முடியும். கடந்த 2008–ம் ஆண்டு நேபாளத்தில் பெய்த மழையால் கோசி நதியில் இதே போல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பீகாரில் பேரழிவும் ஏற்பட்டது. அதில் நூற்றுக் கணக்கானோர் பலியானதும், 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதோடு, 8 லட்சம் ஏக்கரில் பயிர்கள் சேதம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

    மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லக்கூடிய மலைப்பாதையும் இது போன்ற இலகுவான மண் அமைப்பைக் கொண்டதே. மழைக் காலம் என்றால் பாதையில் சரிவு ஏற்படுவதும், மரங்கள் வேரோடு சாய்வதும், ஆண்டுதோறும் ஏற்படக்கூடிய நிகழ்வுகள் தான் என்று அனைவருக்கும் தெரியும். இருப்பினும் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட்ட பின்புதான் நாம் அதைப்பற்றி கவனம் கொள்கிறோம். இது போன்ற மண் அமைப்புதான் மூணாறிலும் உள்ளது. மக்களுக்காகச் சேவை செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும், தொண்டர்களும் சிந்திக்க வேண்டிய விசயம் இது. மக்களுக்கான இது போன்ற பாதுகாப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை வெகுமதியாகத் தருபவர்களுக்கு வாக்களிக்க மக்களுக்கு என்ன தடை இருக்கப் போகிறது. எந்தக் கட்சியாக இருந்தால் என்ன.. உண்மையான சேவை செய்யும் கட்சி மட்டுமே மக்களைக் கவர முடியும் என்பதே சத்தியம். வருமுன் காக்க வாருங்கள் நல்லுள்ளங்களே!

    Share
  • சிம்ம சொப்பனம்

    பவள சங்கரி

    தீரன் சின்னமலை

    images (1)

    நம் பாரத நாட்டில் கி.பி.17ஆம் நூற்றாண்டிலிருந்து அந்நியரின் தலையீடு துவங்கியது. தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்க வந்தவர்கள் நம் நாட்டின் இயற்கை வளங்கள் கண்ணை உறுத்த, அன்றிருந்த குறுநில மன்னர்களின் ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட  குழப்ப நிலையை சாதகமாக்கிக்கொண்டு ஆட்சியமைக்க எத்தனித்தனர். விடுதலை வேட்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட வீரமறவர்கள் பலர். இவர்களுள் முன்னோடியாகத் திகழ்ந்தவன் கொங்கு நாட்டு மாவீரன் தீரன் சின்னமலை. தன்னைப் போன்ற  சுதந்திர வேட்கை கொண்டோரை ஒன்று திரட்டி, மும்முறை படையை வழிநடத்தி எதிரிகளை நடுநடுங்கச் செய்தவன். எவரையும் வியக்கவைக்கும் வீர வரலாறு.  தம்பாக் கவுண்டர், தீர்த்தகிரி சின்னமலை என்ற பெயர்கள் கொண்ட இவர் பிறந்தது, 07.04.1756. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குக் கோவை, ஈரோடு மாவட்டப் பகுதியில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தான் மாவீரன் தீரன் சின்னமலை (1756-1805). வட தமிழ்நாட்டின் சுதந்திர வேள்வியின் நாயகனாகத் தலைநிமிர்ந்து நின்று கிழக்கிந்தியக் கம்பெனியாரின் அட்டூழியமான வீரப்போரில் கலந்து கொண்ட மாவீரன் கொங்கு நாட்டு தீரன் சின்னமலை.

     18-ஆம் நூற்றாண்டு இறுதியில்  கொங்கு நாட்டில்,காவிரியின் மேற்கே உள்ள கொங்குப் பகுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தைத்  தடுத்து நிறுத்துவதற்காக கடும்போர் புரிந்து அதனால் வெள்ளையரால் தூக்குக்கயிற்றை முத்தமிட்டவன் மாவீரன் தீரன் சின்னமலை.

     images

    போர்வீரர்கட்குப் பயிற்சி கொடுக்கவும், போர் ஆயுதங்கள் செய்யவும் சிவன்மலை காட்டுப் பகுதியில் போர்ப் பாசறை அமைத்தார். சிவன்மலையின் வடமேற்குப்புறம் அடிவாரத்தில் அடர்ந்த காட்டிற்குள் சின்னமலை அமைத்த அனுமந்தராயன் கோயிலின் வடபுறம் போர்ப்பாசறை அமைத்திருந்த இடம் இன்றும் அடையாளச் சின்னங்களுடன் காணமுடிகிறது.

     சின்னமலையின் இளம்பருவத்திலேயே, சிலம்பப் பயிற்சி, தடிவீச்சு, வாள்வீச்சு, புலிப்பாய்ச்சு, மற்போர் முதலிய கலைகளைக் கற்று, வீரத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கினான். கொங்குநாடு மைசூர் உடையார்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. மைசூர் மன்னருக்கு உட்பட்ட திண்டுக்கல்லில் குதிரைப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த மாவீரன் ஐதர் அலி. தம் அறிவுக் கூர்மை மற்றும் ஆற்றலால், மைசூர் உடையார் மரபு அரசரிடம் ஆளும் உரிமையைப் பெற்றான். கொங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரி வசூல் செய்யப்படும் பணம் அனைத்தும் சங்ககிரிக் கோட்டைக்கு வந்து, அங்கிருந்து சீரங்கப்பட்டணம் ஐதர் கருவூலத்திற்குச் சென்று சேரும். சின்னமலை வேட்டைக்குச் சென்று திரும்பும் வழியில் ஐதர் அலியின் ஆட்கள் வரிப்பணம் வசூல் செய்து கொண்டு போவதைக் கண்டு வெகுண்டு, ’மைசூரார் நம்மை ஏன் ஆள வேண்டும்’ என்ற கேள்வியை எழுப்பி அந்தப் பணத்தைப் பெற்று வந்து ஏழை எளியோருக்குப் பிரித்துக்கொடுத்துவிடுகிறான். இப்படி பலமுறை நடந்தது. சங்ககிரி திவான் மீரா சாகிப் சின்னமலையை கைது செய்து கொண்டுவருவதற்காக 100 குதிரை வீரர்களை அனுப்பினான். ஊர் பொது மக்கள் மற்றும் சிலம்பக்கூட வீரர்கள் சண்டையிட்டு அவர்களை விரட்டியடித்தனர்.

    தீரன்07.12.1782ல் ஐதர் அலியின் மரணத்திற்குப் பின் திப்பு சுல்தான் கர்நாடகத்தின் தலைமைப் பொறுப்பேற்று  கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான போரை  தீவிரப்படுத்தினார். கொங்குநாடு அப்போது  மைசூர் உடையார்களின் ஆட்சிக்குட்பட்ட திப்புவின் வசத்தில் இருந்தது. திப்புவின் படையில் சேர கொங்கு வீரர்கள் அழைக்கப்பட்டனர். சின்னமலையின் ஆற்றல் மற்றும் வீரம் மைசூர் முழுதும் பரவியிருந்தது. திவான் கிரிமிரே சாயபுவிடமிருந்து சின்னமலைக்கு உதவி வேண்டி ஓலை வந்தது அதனால் சின்னமலையின்  ஊக்குவிப்பினால் கொங்கு வீரர்கள் பலரும் சீரங்கப்பட்டணம் சென்று திப்புவின் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றனர்.  1799 இல் நடந்த நான்காம் மைசூர் போரின்போது,  சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் ஆகிய போர் முனைகளில் சின்னமலையின் கொங்குப்படை திப்புவிற்காகச் சிறப்பாக போரிட்டது. குறிப்பாக மழவல்லிப் போரில் 40000 வீரர்களுடன் போரிட்டு, ஆங்கிலேயருக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது இந்த கொங்குப்படை.

    ’கன்னட நாட்டின் போர்வாள்’ திப்பு, 04.05.1799ல் போர் முனையில் வீரமரணமடைந்ததால்,  அந்த பேரிழப்பினால் வேதனை கொண்ட சின்னமலையும் அவர் தம் கொங்குப்படையும் ஊர் திரும்பியது. திப்புவின் மைசூர் ஆங்கிலேயரின் உடமையானது.   அதற்குப் பின்னர் ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் வலிமையான கோட்டை ஒன்றைக் கட்டி அதில் சின்னமலை படை பலத்தைப் பெருக்கியபோது, திப்புவின் படைவீரர் சிலரும் வந்து ஓடாநிலையில் தங்கிவிட்டனர். திப்புவின் வீழ்ச்சிக்குப் பின்னர் கோவை மண்டலம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்ததாக சீரங்கப்பட்டணம் உடன்படிக்கை அறிவித்தது. அதன்படி  கொங்கு நாடு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்டாலும், கோவைக்கும், சங்ககிரிக்கும் இடைப்பட்ட பகுதி அவர்கள்  வசப்படவில்லை. சின்னமலையின் கண்காணிப்பிலும் அவருடைய ஆதரவாளர்களின் ஆதிக்கத்திலுமே  இருந்தது. ஆனால்  ஆங்கிலேயர் அதைத் தன்வசமாக்க விரும்பினர்.

    திப்பு சுல்தானின் வீரத்தளபதி மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக் ஆங்கிலேயரின்  எதிர்ப்பாளர்களுக்கிடையே பெரும் ஆற்றல்  மிக்கவராக விளங்கினார். காவிரிக்கு மேற்கில் சின்னமலையும் காவிரிக்குக் கிழக்கே ஓசூர் கானி ஜாகானையும் தலைவராக ஏற்றுக் கொள்ளுமாறு தூண்டாஜி வாக் பணித்ததை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.கோலாப்பூரில் தங்கியிருந்த தமிழக விடுதலைக்குழு ஆங்கிலேயே எதிர்ப்புக்காரர்களை ஒன்று சேர்ந்து எதிர்க்க உதவி பெற விரும்பியது. திப்புவின் எஞ்சிய படைத் தலைவர்கள் உதவியைக் கொங்குப் போராளிகள் பெற விரும்பினர்.  சிலர் ஆதரவளிக்க முற்பட்டனர்.  சிலர் தேவைப்படும் போது படையுடன் வருவதாகக் கூறினர். மருது சகோதரர்கட்கும், கொங்குத் தலைவர்கட்கும் தொடர்பை ஏற்படுத்த விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால் நாயக்கர் விரும்பினார். இவர்கள் சேர்ந்து சின்னமலையின் தலைமையில் போராட முயற்சி செய்ததே ‘கோவைப்புரட்சி” என்று அழைக்கப்படுகிறது.

    கோவைக் கோட்டை ஆங்கிலேயர் வசம் இருப்பது தங்களுக்கு ஆபத்து என்பதனை விடுதலைப் போராளிகள் உணர்ந்ததால்,  கோவைக் கோட்டையை மீட்டாக வேண்டும் என்று முடிவு செய்தனர்.  திண்டுக்கல் கூட்டமைப்பினர் அதற்கான  பணியைச் செய்வதெனவும், கோட்டைமீட்பு முயற்சிக்குத் தீரன் சின்னமலை தலைமை தாங்குவது எனவும் தீர்மானம் செய்யப்பட்டது. கோவைப் புரட்சி,  ஜூன் 3.1800 அன்று நடத்துவது என்று உறுதி செய்யப்பட்டது. கோவைக் கோட்டையில் ஆங்கிலேயர் படையில் முஸ்லீம் வீரர்கள் கனிசமான அளவு இருந்தனர். அதே நாளில் மொகரம்  நோன்பும் வந்ததால், முதிய முஸ்லீம் வீரர்கள் தொழுகைக்குச் சென்றுவிடுவர். இளைய முஸ்லீம் வீரர்கள் விருந்திற்கும், கேளிக்கைகளுக்கும் சென்றுவிடுவர். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டால் எளிதாக கோட்டையை மீட்டு விடலாம்  என்று கருதினர்.  விடுதலை  வீரர்கள் பலர் சில நாட்களுக்கு முன்னரே கோவை  சென்று மக்களின் ஆதரவுடன், மக்களோடு மக்களாகக் கலந்தனர். மக்களிடமிருந்து எல்லாவகையான உதவிகளையும் பெற முடிந்தது.

    ஆனால் சின்னமலை தலைமை தாங்கித் திட்டமிட்டு நடத்திய கோவைப்புரட்சி சிலரின் தவறான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களால், நடைபெறாமலே தோல்வி அடைந்தது. இரண்டு மாத்திற்கு மேல் செய்த முயற்சிகள் வீணாயின. விடுதலை வீரர்கள் பின்வாங்கினர். பலர் தத்தம் பகுதிகட்குத் திரும்பிச் சென்றனர். ஒரு வேளை இப்புரட்சி வெற்றி பெற்று இருந்தால் அது ஆங்கிலேயேரை எதிர்த்து நடத்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின்  ஒரு  திருப்புமுனையாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. கோவைப்புரட்சிக்குப் பின்னரும் அந்த மாவீரன் சின்னமலை சோர்ந்துவிடவில்லை. தன்னுடைய ஓடாநிலைக் கோட்டையைப் பலப்படுத்தினான். இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மூன்று பெரும் போர்கள் நடைபெற்றுள்ளன. பலம் வாய்ந்த கிழக்கிந்தியப் படையை சின்னமலை சிறுபடை கொண்டும், தன்னந்தனியனாகவும் போரிட்டு வெற்றி பெற்றது வரலாறு. காவிரிப் போர் – 1801, ஓடாநிலைப் போர் – 1802, அறச்சலூர்ப் போர் – 1804, ஆகியன. இப்படி மூன்று முறை ஆங்கிலேயர் சின்னமலையிடம் படுதோல்வியுற்ற அவமானம் தாங்கமுடியாமல், அவனை எப்படியும் வீழ்த்தவேண்டும் என்று உறுதிபூண்டு, படைபலத்தை மேலும் அதிகரித்தனர். ஐதர், திப்புவை வெற்றி பெற்று, நிஜாமைப் பணியவைத்ததைக் காட்டிலும், ஆர்க்காடு, தஞ்சை அரசர்களை அடிமைகளாக்கியும், தீரன் சின்னமலை மட்டும் சவாலாகவே இருந்து வந்தான். தமிழ்நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறவனாகவேக் கருதப்பட்டான்.

    1805ம் ஆண்டில் ஒரு நாள் சின்னமலையில் ரகசிய உளவாளியான, ஆங்கிலேயப் படையில் பணிபுரிந்த வேலப்பனிடமிருந்து வந்த இரகசியத் தகவல் மூலமாக, 2 பெரும் பீரங்கிகளுடன் ஓடாநிலை கோட்டையை தகர்க்க ஆங்கிலேயப் படை புறப்பட இருப்பதாகவும், அதை எதிர்ப்பது சாத்தியமற்றது என்று கிடைத்த தகவலால், ஓடாநிலையை விட்டு வெளியேறி, பழனிமலை தொடரில் உள்ள கருமலையில், சமையல் செய்ய நல்லப்பன் என்பவனை உடன் அழைத்துக்கொண்டு மறைந்து வாழ முடிவு செய்தார். குறிப்பிட்ட நாளில் கள்ளிக்கோட்டையிலிருந்து ஆங்கிலேயேரின் பீரங்கிகள் ஓடாநிலைக்கு மூன்று கிலோ மீட்டர் மேற்கேயுள்ள ஓலவலசு கிராமத்தில் வந்து காத்திருந்தபோது,  சின்னமலை தப்பிய செய்தி அறிந்து கோட்டைக்குள் தேடல் நடத்தியபோது, ஆங்கிலேயர்களின் கைகளில் வேலப்பன் எழுதிய கடிதம் கிடைத்தது. கோட்டை வாயிலில் வேலப்பன் சுடப்பட்டதோடு,  பீரங்கிகள் ஓடாநிலை கோட்டையை மண் மேடாகும் அளவிற்குத் தகர்த்தெரிந்தன.  செய்தி அறிந்த , கருமலையில் தங்கியிருந்த சின்னமலை துடி துடித்துப்போனார். வேலப்பனின் இழப்பு பெரும் வேதனையானாலும், அங்கேயே தங்கி , கள்ளிவலசு, விருப்பாட்சி, பழனியில் இருந்து பாளைய ஆட்கள் உதவியுடன் பீரங்கிகள் செய்ய ஆயத்தமானார்.

    தனது கவலையை மறைக்க சின்னமலை விவசாயப் பணிகளிலும் ஈடுபட்டிருந்த சின்னமலையின் வீர வரலாற்றில் விதி விளையாடியது. ஆம், பணத்தாசையால் சமையல்காரன் நல்லப்பன் காட்டிக்கொடுத்துவிட்டான்.  கொங்கு நாடே கதறியழ, முன்னும், பின்னும் பீரங்கி வண்டிகள் புடைசூழ,  சின்னமலையும் அவரது சகோதரர்களும் கைது செய்யப்பட்டு சங்ககிரி கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தங்கள் படையுடன் சேர்ந்து கொண்டால் விடுதலை செய்வதாக,  ஆங்கிலேயே தளபதி மார்ஷல் கூறிய ஆசை வார்த்தையை துச்சமென மதித்து , காரித்துப்பி கடுமையாக மறுத்தான்.

    ஆடிப் பதினெட்டுப் பண்டிகை நாளான ஜூலை மாதம் 31ம் நாள் 1805ம் ஆண்டு கொங்கு நாட்டு வரலாற்றின் மோசமான நாள் என்பது போல, சங்ககிரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பத்து வாயில்களும் மூடப்பட்டு, தமிழ் வீரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.  சங்ககிரி மலையின் உச்சியில், பொழுதுகாண்பாழிக்குக் கிழக்கில், ஆலமரத்தின் வடக்கே தயாராக இருந்த நான்கு தூக்கு மரங்கள், சின்னமலை, பெரியதம்பி, கிலேதார், கறுப்பசேர்வை ஆகிய நால்வருக்காகக் காத்திருந்தது. அங்கு மேடையேற்றப்பட்டனர். சின்னமலையின் கண் சைகையை உணர்ந்து விலகினர் தூக்கிலிடும் ஆட்கள்.  வீரமறவர்கள் நால்வரும் தங்கள் கழுத்தில் தாங்களே  தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்டனர். கொங்கு நாட்டு சுதந்திரச் சுடர் அந்த வினாடி அழிந்தது.

     நன்றி : புதிய தலைமுறை

    Share