Tag: செண்பக ஜெகதீசன்

  • ரேகை

    செண்பக ஜெகதீசன்

     

    போடும் ஒரு நெல்லுக்காக

    கிளி எடுத்த

    பொய்யான சீட்டை வைத்துப்

    புளுகுவதை நம்பாமல்,

    கைரேகைக்

    கதைகளையும் நம்பாமல்,

    கைரேகை தேயக்

    கடும் உழைப்பு உழைத்தால்

    உன்ரேகை(அடையாளம்) தெரியும்

    உயர்வாக…!

     

    படத்துக்கு நன்றி: http://suite101.com/article/palm-reading-describes-four-personality-types-a91142

     

    Share
  • தாய்மை

    செண்பக ஜெகதீசன்

     

    கன்றை நினைத்து கொட்டில்பசு

    கண்ணீர் விட்டே அழைப்பதுவும்,

    குன்றில் யானை ஏறிநின்று

    குரலை உயர்த்திப் பிளிறுவதும்,

    தின்று விடாமல் தாய்ப்பறவை

    திசைக்கும் திரும்பிக் கூவுவதும்,

    என்றும் காணும் உண்மைதானே

    ஏற்றம் மிக்கது தாய்மைதானே…!

     

    படத்துக்கு நன்றி: http://designbeep.com/2010/05/09/25-emotional-mother-and-baby-animal-photos-from-wildlife/

     

     

    Share
  • வந்தது புத்தாண்டு…

    செண்பக ஜெகதீசன்…

     

    வந்தது புதிதாய் ஆண்டு

    வாழ்க்கை சிறந்திட வேண்டு,

    சிந்தையில் மேன்மை கொண்டால்

    சிறப்புதான் என்றும் உண்டு,

    முந்தைய ஆண்டின் தடைகள்

    முன்னே செல்ல நடைக்கல்,

    நொந்திடத் தேவை யில்லை

    நாளை நீயே வெல்வாய்…!

     

    படத்திற்கு நன்றி: http://www.ladcblog.org/2012/01/the-7-ups-of-life/thumbs-up/

    Share
  • எந்த முகம்…

    செண்பக ஜெகதீசன்    

    கடவுள் கொடுத்த முகத்தைக்

    கழற்றி வைத்துவிட்டு,

    கைவசம் தயாராய் உள்ள

    கபட முகங்களை

    கணத்துக்கொன்றாய் மாட்டிக்கொண்டு

    காட்சியளிக்கிறான்

    காசினியில் மனிதன்..

     

    இங்கு வந்து பார்க்கும் இறைவனும்,

    இவர்கள் எழுப்பிய கோவில்களில்

    இருப்பதாய்ச்சொல்லும் இறைவனும்

    ஏமாந்து விழிக்கிறான்-

    எந்தமுகம் இவர்களுக்கு நாம்

    தந்தமுகம் என்பதை அறியாமல்…!

     

    படத்துக்கு நன்றி

      http://saniyaartblog.wordpress.com/category/grade-7/ 

    Share
  • அவர்தான்…

      செண்பக ஜெகதீசன்

    கடவுளைக் காத்திட
    மதமென்ற பேரில்
    கத்தி எடுத்து,
    அவர் படைத்த
    மனிதனைத் தாக்கிடும்
    மனிதனைப் பார்த்து
    மனவேதனையில்
    மனம்விட்டு அழுகிறார்
    மார்க்கம் தெரியாமல் கடவுள்…!

       படத்துக்கு நன்றி

    http://www.ebharat.in/gallery/ramchaura-mandir-rambhadra-hajipur/footage-marks-god-shree-ram

    Share
  • உதிர்வது….

     

       

      செண்பக ஜெகதீசன்

    கல்யாணச் சந்தையில்

    கரும்பு தின்னக்

    கூலி உயர்வு காரணமாக,

    கண்ணீர் உரத்தில் வளர்ந்த

    வாழ்க்கைச் செடியில் பூக்கும்

    கன்னி மலர்களெல்லாம்

    கருகி உதிர்கின்றன-

    முதிர்கன்னிகளாய்…!

     

    படத்துக்கு நன்றி

      http://www.pseewald.com/2009/05/too-much-rain.html      

    Share
  • தெரியாதது…

     

      செண்பக ஜெகதீசன்

    தென்றலின் வரவு

    தெரிகிறது

    தலைசாய்க்கும் இலை அசைவில்..

     

    கதிரவன் வரவுக்குக்

    கட்டியம் கூறும்

    கதிர்க் கரங்கள்..

     

    பருந்தின் வரவைப்

    பார்த்திடலாம்

    பறக்கும் தாய்க்கோழியின்

    பாசக் கண்களில்..

     

    மழை வரவின்

    முன்னோடியாய்

    மின்னலும் இடியும்..

     

    இறக்கும் மனிதனைக் காட்டிடும்

    இதயத் துடிப்பு..

     

    இருக்கும் மனிதனின்

    இதயத்தில்

    இருப்பதைத் தெரியத்தான்

    எதனாலும் முடியவில்லையே…!

    படத்துக்கு நன்றி

     http://www.reneedmd.com/american-heart-month/

         

    Share
  • இவனுக்கு மட்டும்…

    செண்பக ஜெகதீசன்

    கடவுள் எழுதிய கவிதை,
    கையும் காலும் முளைத்து
    கவினுறு மரமாய்க்
    காட்சி தருகிறது..

    மண்ணில் அதன் நிழலோவியம்
    மனதைக் கவர்கிறது,
    கண்ணைப் பறிக்கிறது..

    கண்ணை உறுத்துகிறது அது
    மனிதனுக்கு-
    வெட்டி விறகாக்கிவிட்டு
    வேறுவேலை பார்க்கிறானே…!

    படத்துக்கு நன்றி

    http://www.123rf.com/photo_3556527_bundle-of-logs-stack-up-in-the-forest.html

                  

    Share
  • அதே கதையாய்…

     

     செண்பக ஜெகதீசன்

    காத்திருக்கிறானாம் காதலன்-

    மலைசொன்ன சேதி

    மனதுக்குப் பிடித்துவிட்டது,

    மலையில் தவழ்ந்த சிற்றாறுக்கு..

     

    ஆடி அசைந்து

    அமைதியாய் வந்த ஆறு,

    ஆர்வம் அதிகமாகிக் குதித்தது

    அருவியாக..

    காயம் ஏதும் படவில்லை-

    காதல் என்றாலே

    கடுகுதானே மலைகூட…

     

    தரைக்கு வந்ததும்

    தானாக வந்தது பாட்டு..

    வரப்புக்களின் அணைப்பிலே

    வழிநடைப் பயணம்-

    சல சல சத்தத்துடன்,

    வளம்சேர்க்கும் நதியாக..

     

    துள்ளிக் குதித்தும்,

    தள்ளிக்கொடுத்தும் தடுக்கிவிழுந்தும்,

    சுழித்தும் சுழன்றும்,

    தடைகளைத் தகர்த்தும்

    துடிக்கும் இளமையாய்..

     

    கரையோர மரமெல்லாம்

    வாழ்த்துச் சொல்ல,

    கைமாறாய்த் தாகம் தணித்து

    தாவிச் செல்கிறது

    இலக்கை எட்டிப்பிடிக்க..

     

    மலையரசன் சொன்னது சரிதான்-

    அலைக்கரங்கள் நீட்டிக்

    கடற்காதலன் காத்திருக்கிறான்..

    கண்டுகொண்டது நதி-

    கட்டுப்பாடுகள் கட்டறுந்து

    தாவி விழுந்தது

    தலைவன் கரங்களில்…!

     

    மீண்டும் தொடங்குகிறது

    காதல்கதை,

    அதுவே தொடர்கதையாய்-

    மலைமேலே…!

     படத்துக்கு நன்றி

    http://www.zastavki.com/eng/Widescreen/wallpaper-5159.htm          

    Share
  • பிழைத்திட…

     

     செண்பக ஜெகதீசன்

    பேருந்து ஓட்டை அடைக்கக்கூட
    பலி கேட்கிறது சட்டம்,
    பள்ளிச்சிறுமியின் உயிரை..

    சட்டத்தின் ஓட்டை அடைத்திட
    முயன்றால்,
    சாவு எத்தனையோ..

    அட,
    அதுமட்டும் நடக்காது-
    அதை வைத்துத்தானே
    ஆட்சியாளர்கள் மற்றும்
    பலரது பிழைப்பே…!

    படத்துக்கு நன்றி

    http://www.thehindu.com/news/cities/chennai/article3682688.ece

               

    Share
  • சந்தேகம்…

    செண்பக ஜெகதீசன்

    ஏகப்பட்ட மனைவிக்கார தந்தை
    எந்த நிலையிலும்
    சந்கேப்படாதபோது,
    அவன் மகன்
    ஏகபத்தினிக்காரன்
    ஏன்
    சந்கேப்பட்டான் சீதைமீது…!

     படத்துக்கு நன்றி       

    http://religion-faith.com/hindu-and-hinduism/hindu-gods-goddesses/goddess-sita.html

    Share
  • கலைதரும் தலைவி…

               

     செண்பக ஜெகதீசன்

    குறையிலாக் கல்விக் குருகுலமே

         குமர குருபரர் கலாவல்லியே,

    உறைவது வெள்ளைத் தாமரையிலே

         உரைத்திடும் பாவலர் நாவினிலே,

    நிறைவுடன் புகழது தருபவளே

         நினைத்ததும் அருள்தர வருபவளே,

    மறைகளில் நிறைந்திடும் தலைமகளே

         மனதுடன் பணிந்தோம் கலைமகளே…!

     

     http://srilalithatripurasundari.wordpress.com/lalita-sahasranama/impact-of-chanting-lalitha-sahasranama/sri-lalitha-tripura-sundari-an-overview/meanings-of-lalitha-sahasranamam/nitya-buddha/         

    Share
  • பாடமாய்…

     
    செண்பக ஜெகதீசன்

    நல்ல பாடங்கள்
    நமக்குக் கிடைப்பது மோசமான
    நேரங்களில்தான்..

    அடிமேல் அடிபடும் தங்கம்தான்
    ஆபரணமாகிறது
    அழகாய்ப் பெண்ணுக்கு..

    சிதைக்கும் சிற்றுளியால்தான்
    உதிக்கிறது
    உயர்ந்த சிற்பம்…!

    எத்தனை அடிவாங்கினாலும்
    ஏன் திருந்தவில்லை
    மனிதன் மட்டும்…!

               
    படத்துக்கு நன்றி

    http://www.colourbox.com/image/a-hammer-and-a-pencil-laying-on-plywood-image-2871064

    Share
  • வருவானா..

     

    செண்பக ஜெகதீசன்

    இனம்பிரித்துப் படைக்கவில்லை
    இறைவன்..

    மனிதன்தான்
    முகமூடிகள் பலவாய்
    மாட்டிக்கொண்டே
    மாற்றிவிட்டான் தன்னைத்தானே-
    மதமாய்..சாதியாய்..
    மனிதரில் உயர்வு தாழ்வாய்..

    சுயநலம்தான்,
    சுயமாய்ச் சிந்திக்கவிடாமல்
    சீரழிக்கிறது இவனை..

    சமப்படுத்துதல் என்பது
    சாத்தியமா…!

    ஏப்போதும் சந்தேகம் மனிதனுக்கு,
    இருக்கிறானா
    இறைவன் என்று..

    இப்போது,
    சரிப்படுத்த அவன்தான்
    வரவேண்டும்..
    வருவானா அவன்தான்…!    

    படத்துக்கு நன்றி

                 

    http://www.dreamstime.com/royalty-free-stock-image-dark-face-mask-image5516246 

    Share