கடவுள் எழுதிய கவிதை,
கையும் காலும் முளைத்து
கவினுறு மரமாய்க்
காட்சி தருகிறது..
மண்ணில் அதன் நிழலோவியம்
மனதைக் கவர்கிறது,
கண்ணைப் பறிக்கிறது..
கண்ணை உறுத்துகிறது அது
மனிதனுக்கு-
வெட்டி விறகாக்கிவிட்டு
வேறுவேலை பார்க்கிறானே…!
படத்துக்கு நன்றி
http://www.123rf.com/photo_3556527_bundle-of-logs-stack-up-in-the-forest.html


Leave a Reply