செண்பக ஜெகதீசன்
பேருந்து ஓட்டை அடைக்கக்கூட
பலி கேட்கிறது சட்டம்,
பள்ளிச்சிறுமியின் உயிரை..
சட்டத்தின் ஓட்டை அடைத்திட
முயன்றால்,
சாவு எத்தனையோ..
அட,
அதுமட்டும் நடக்காது-
அதை வைத்துத்தானே
ஆட்சியாளர்கள் மற்றும்
பலரது பிழைப்பே…!
படத்துக்கு நன்றி
http://www.thehindu.com/news/cities/chennai/article3682688.ece
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…
நல்ல விளாசல்
அருமையான கவிதை.
தேமொழி, மனோகரன்..
தங்கள் கருத்துரைகளுக்கு நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…