Tag: ரா. பார்த்தசாரதி

  • இப்படியும் ஏமாற்றுவாளா !

    ரா. பார்த்தசாரதி.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    நளினி எப்பொழுதும் எந்தக் கலர் புடவையில்சென்றாளோ அதே கலர் புடவையுடன் திரும்புவாள். எல்லா சேல்ஸ் மேனும் அவள் கையாள். வரும்போது சலவை புடவையுடன் வருவாள் …புதுப் புடவையை எடுப்பாள். அலங்கார அறைக்குள் சென்று உடுத்திய புடவையை அழகாக மடிப்பாள், விலை லேபிளை ஒட்டிவிட்டு, புதுப் புடவையை உடுத்துவாள். அக்கடை ஆட்களை வைத்தே உடுத்தியதை கலைக்கப்பட்ட புடவை குவியலில் கலந்திடுவாள்.. காமேராக்களும் பார்த்துக்கொண்டு இருந்தன.

    Share
  • ராமன் எத்தனை ராமனடி!

    -ரா.பார்த்தசாரதி

    ராமன் பிறந்ததும்  நவமியிலே
    கிருஷ்ணன் பிறந்ததும் அஷ்டமியிலே       Rama
    இரண்டும் கடவுளின் அவதாரங்களே
    இராமாயணம், மகாபாரதத்தின் நடுநிலை  நாயகர்களே!

    ராமாயணயத்தின் காவியத் தலைவன் ராமனே
    பிறன்மனை நோக்குபவனைத் தண்டித்தவனும் ராமனே
    நட்புக்கு இலக்கணமாய்  இருந்தவனும்  ராமனே
    ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தவனும் ராமனே!

    ராம நாமமே  நலம் தரும் நாமமே
    அனுதினம் சொன்னாலே நன்மை அடைவதும் திண்ணமே!
    யாவருக்கும்  நன்மை அளிக்கும்  நாமமே
    ஈசன் வாயுரைத்த சிறப்புமிக்க நாமமே!

    பங்குனி உத்திரத்து  வரும்  ராம நவமியே
    பானகமும், பருப்பும், மோரும் நிவேதனமே
    ராமன் எத்தனை  ராமனாய்  இருந்தாலும்
    அவரது  கல்யாணகுணங்கள் சிறப்புடையதே!

     

    Share
  • நினைக்கத் தெரியாத மனமே

    – ரா.பார்த்தசாரதி.

     

    ராகவன் மும்பையில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தின் பொது மேலாளர். அவருக்கும் அவர் பிள்ளைக்கும் வலது கையில் ஆறு விரல்கள். அவருக்கு அதிர்ஷ்டமாகவே எல்லாம் நடந்தது. அவர் பிள்ளை முரளி இவருக்கு நேர்மாறாக ஓர் ஊதாரி. ஒரே பிள்ளையாக இருந்ததால் அவன் அம்மா நிர்மலா அவனுக்குச் செல்லம் கொடுத்து, கணவனுக்குத் தெரியாமல் பணம் கொடுத்து அவனைக் கெடுத்தாள். ஒரு நாள் ராகவன் கோபமாக பேசிவிட, முரளி யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தான். ஒரு கம்பெனியில் காப்பி, டீ சப்பிளையராக மூன்று வருடங்களாக வேலை செய்து அவனால் மும்பையில் கைவிடப்பட்ட வடநாட்டுப் பெண்ணிற்கும், தனது மகனிற்கும் மாதம் ஒரு சிறுதொகை அனுப்புவான். அவனுக்கு அவன் அம்மாவிடம் ரொம்ப பாசம். அவளை நினைக்காத நாள் இல்லை. ஆனாலும் வீட்டிற்கு நாள் கிழமையில் கூட செல்வதில்லை. வருடா வருடம் ஐய்யப்பன் கோவிலுக்கு மட்டும் போய்வருவான்.

    ஒரு நாள் ராகவன் சென்னையில் உள்ள தன் கம்பெனியின் இன்ஸ்பெக்க்ஷனுக்கு வந்தார். அவரது மேனேஜரும் அவருக்கு காப்பி வரவழைத்தார். காப்பியுடன் வந்தவன் முரளி. தாடியுடன் வந்த முரளியை ராகவனுக்கு அடையாளம் தெரியவில்லை. முரளி ராகவனுக்கு காப்பி கொடுக்கும் போது கை நடுங்கி அவரது காலில் கொட்டிவிட்டான். உடனே தனது கைகுட்டையால் அதைத்  துடைக்கும் போது ராகவன் அவனது கையில் இருந்த  ஆறாவது விரலை பார்த்துவிட்டார். உடன் இருந்த மேனேஜர் முரளியை முட்டாள் என்று திட்டி அன்றைக்கே வேலையை விட்டுப் போகச் சொன்னார்.

    தாடி இருந்ததால் முரளியை ராகவனுக்கு அடையாளம் தெரியாவிட்டாலும் மேனேஜர் முரளி என்று அவன் பெயரைச் சொல்லி திட்டியதால்அவனை தனது மகன் எனத் தீர்மானித்தார். ராகவன் மேனேஜரிடம் நல்ல டெஷிஷன் எடுத்திங்க அன்றார். பிறகு முரளியை தனிமையில் அழைத்து கம்பெனிக்கு வெளியே நிற்கச் சொன்னார். அவனை தனது காரில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். ரூமிற்குச் சென்றதும் முரளி அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். அப்பா உங்களுக்கு காப்பி கொடுக்கும் போதே உங்க விரலை பார்த்தேன். ராகவனும் தானும் முரளி அவரது காலை துடைக்கும்போதே பார்த்துவிட்டதாகச் சொன்னார்.

    அன்று இரவே அவனை மும்பைக்கு அழைத்துச் சென்றார். முரளி அம்மா எப்படி இருக்கிறார்கள் என்று அவரிடம் கேட்டான். நீயே வந்து பார் என்றார் ராகவன் தனது மனதின் துக்கத்தை வெளிக்காட்டாமல். மும்பை சென்றதும் அம்மா என்று ஆசையுடன் அழைத்தவாறு உள்ளே நுழைந்த முரளி அதிர்ச்சி அடைந்தான். அவனது அம்மாவின் படத்திற்கு மாலை போடப்பட்டு இருந்தது. மிகவும் கண்கலங்கினான். கடைசி காலத்தில் என்னையும், உங்க அம்மாவையும் மதுமிதாதான் கவனித்தாள். நானும் என் மகளைப் போல அவளைப் பார்த்துக் கொள்கிறேன். மதுமிதாவின் பையனும் நல்லா படிக்கின்றான். அவன் நம்ம வீட்டில் சின்ன, சின்ன வேலை செய்கின்றான் என்றார். மது காப்பி கொண்டுவா என்று உள்நோக்கி குரல் கொடுத்தார். முரளி காபியுடன் வந்தவளைப் பார்த்ததும் அவன் மனைவியே அங்கிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். ராகவனிடம் அப்பா மன்னித்து விடுங்க, இவள் உங்க மகள் இல்ல, மருமகள் என்றான். அத்துடன், இவளை என் மனம் ஒரு நாள் கூட நினைக்கத் தெரியாமல் இருந்து விட்டதே. எல்லாம் ஐய்யப்பன் அருள் என்று மனதில் நினைத்து கொண்டான்.

    Share
  • அந்தமானைக் காண வாருங்கள்!

    -ரா. பார்த்தசாரதி

    அந்தமானின்  அழகே  அழகு அதன் இயற்கை அழகைப் பருகு
    தென்னையும், கமுகும் ஒன்றோடுஒன்று கைகோர்த்து நிற்கும்
    கடலின் நடுவே நிற்கும் தீவாய்  நமக்குக் காட்சி  அளிக்கும்
    மனிதனின்   மனஅமைதிக்கு ஓர் உறைவிடமாய் இருக்கும்!   andaman

    வெள்ளி அலை மேலே  துள்ளி விளையாடும் கயல்கள்
    கடல் அடியில் சென்று  கடல் இனங்களைக் காணும் மக்கள்
    நீச்சல் தெரியாதவன் கூடக் கடல் அடியில் நடை போடுகிறான்
    அங்கே தன்னைச் சுற்றி வரும் மீன்களைக் கண்டு களிக்கின்றான்!

    சிறு படகும் இயந்திரப் படகும் பயணிக்கும் மக்கள்  கூட்டம்
    மனிதனுக்கு இயற்கை அழகை  மகிழ்வுடன் காண ஓர்  நாட்டம்
    கடலோரக் கவிதைகள் எழுத  மனிதனுக்கோர்  கண்ணோட்டம்
    காண்பதைக் கவிதை ஆக்குவதே  கவிஞனுக்குக் கொண்டாட்டம்!

    அந்தமான்  சிறையில் நமது தியாகிகள் பட்ட துன்பம்
    இதனைப் பொருட்காட்சியாக அமைத்த  விதம்
    சுதந்திரத்திற்காக அவர்கள்  சிந்திய ரத்தமும், தியாகமும்
    இன்று அதனை நினைக்காவிட்டால் நம் மனம் கலக்கமுறும்!

    சுற்றுலாப்  பயணிகள் கடற்கரையினைக் கண்டு களிக்கும் தீவு
    இரு தீவானாலும் ஒன்றில் பழங்குடியினர் வாழும் தீவு
    தேசத் தியாகிகள் பட்ட துன்பங்களைச் சித்தரிக்கும் தீவு
    நாட்டைவிட்டுத் தள்ளி இருப்பினும் தனித்தன்மை கொண்ட தீவு!

     

    Share
  • எதிர்பார்க்கும் நட்பு!

    ரா. பார்த்தசாரதி

    குறையில்லாத  மனிதன்  இவ்வுலகில்  உண்டா?
    குறையினைச் சுட்டிக் காண்பிக்காத மனிதர்கள் உண்டா?
    குறையினைக் களைய நல்வார்த்தைகளை  எடுத்துரைப்பதுண்டா?
    இனிய சொல்கொண்டுதான்  அதனைத் தீர்ப்பதுண்டா?

    உலகமே  என்னை  ஒதுக்கி  வைத்தாலும்
    என்னைப்  பாதுகாத்து   நிழல் கொடுப்பாயா?
    நாளுக்கு நாள்  கணக்குப்  பார்க்கும் மனிதர்கள் இடையே
    தன்மையுடன் பழகும் உன் நட்பை எதிர்பார்க்கலாமா?

    நான் வெல்லும்போது  வாழ்த்துவதைவிட,
    நான் வீழும்போது  என்னைத் தாங்குவாயா?
    எதிர்பார்ப்பினால் ஏமாற்றம் அடைவது தெரிந்திருந்தும்
    எதிர்பார்ப்பு இல்லாத உன் நட்பை அளிப்பாயா?

    Share
  • பெண்ணே நீதான்!

    -ரா.பார்த்தசாரதி

    ஒரு உயிரைப்  படைத்த  கடவுளும்  நீதான்
    பாலூட்டி, சீராட்டி  வளர்த்தவளும் நீதான்
    என்னோடு விளையாடி அன்புகாட்டியவளும் நீதான்
    திருமணப் பந்தலில் கைபிடித்த மனைவியாய் இருப்பவளும் நீதான்
    நான் வாழ்வில் கலக்கம் அடைந்தால்  ஆலோசனை கூறுபவளும் நீதான்
    நான் மூப்பு அடைந்தால் என்னை மடியில் சுமப்பவளும் நீதான்
    மானிட சக்தியின் மறு அவதாரமாய்ப் பராசக்தியாய்  இருப்பவளும் நீதான்
    குடும்பத்தில்  மந்திரி தாய் மனைவி ஆகிய பல பதவிகளும் நீதான்
    குடும்பத்தின் பல்கலைக்கழகமாய்த் திகழ்பவளும்  நீதான்
    பாரதிகண்ட  புதுமைப்பெண்ணும்  நீதான்!

    Share
  • இமெயில் காதல் …

    –ரா. பார்த்தசாரதி.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    Love-Emailசுமதியும், சுரேஷும் ஒரே தெருவில் வசிப்பவர்கள். இருவரும் வெவ்வேறு கல்லூரி. அவர்களின் சந்திப்பே பஸ்சில்தான்.

    தினம் இருவரும் இமெயில் மூலமே தொடர்பு கொண்டு அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வர். நாளடைவில் இமெயில் நட்பு காதலில் முடிந்தது.

    சுரேஷ் படிப்பை முடித்து அயல்நாட்டு வங்கியில் பணியில் சேர்ந்தான். சுமதியின் சம்மதம் பெற அன்புடன் அவன் அனுப்பிய வார்த்தைகள்.

    Ennodu-Mattum Anbudan Iniya Life-ல் இணைவாயா !

    Share
  • திருமலை தெய்வம்!

    -ரா.பார்த்தசாரதி

    திருவருள்  தரும்  தெய்வம்  திருமலை தெய்வம் !
    தீராத  வினை எல்லாம் தீர்த்திடும்  தெய்வம் !

    வரும்துயர் பகையையும் போக்கிடும் தெய்வம்!         balaji
    வாய்திறந்து கேட்டாலே வழங்கிடும் தெய்வம் !

    தாயாரைத்  தரிசித்து  வேங்கடவனைத் தரிசிப்போம் !
    தரணியில்  யாவரும் நலம்பெற  யாசிப்போம் !

    மனிதனைப்  புனிதம்  ஆக்குவது தெய்வ தரிசனம் !
    மனதில்  சலனம்  போக்குவது தெய்வ தரிசனம் !

    திருமலைவாசா  என்று அழைத்தாலே  குறைதீர்க்கும் தெய்வம் !
    தினமும்  நினைத்தாலே நல்வழி காட்டும் தெய்வம் !

    கோவிந்தா கோவிந்தா என்றாலே பரவசம் !
    கோவிந்தன்  அருளும் கிடைத்திடுமே  நம்வசம் !

    என்றும் நினைப்போம் பணிவோம் அவன்தாள் !
    எல்லார்க்கும் உகந்த தெய்வம்  திருமலை தெய்வம் !

     

    Share
  • சற்றே நினைத்துப்பாருங்கள் !

    –ரா. பார்த்தசாரதி.

     

    சற்றே  நினைத்துப்பாருங்கள்  !

    why_you_must_think_positive

     

    ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்
    அது சக்தியின் பிறப்பிடமாகும் !

    கடவுளின் அருளை வேண்டுங்கள்
    அது பக்தியின் இருப்பிடமாகும் !

    தியானம் செய்ய விரும்புங்கள்
    அது மனஅமைதியின் உறைவிடமாகும் !

    யோகாசனங்களை செய்ய பழகுங்கள்
    அது உணர்சிகளை நிலைநிறுத்தும் இடமாகும் !

    நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்
    அது அறிவு எனும் ஊற்று தோன்றும் இடமாகும் !

    உடற்பயிற்சியும், நடை பயிற்ச்சியும் தினமும் கடைபிடியுங்கள்
    அது இளமையென்னும் ரகசியத்தை ரசிக்கும் இடமாகும் !

    பிறருக்கு நல்லதை செய்ய நினையுங்கள்
    அது உங்கள் புகழினை பரப்பும் இடமாகும் !

    நாணயமாக இருக்க முயற்சி செய்யுங்கள் ,
    அது உங்கள் நேர்மைக்கு இடமாகும் !

    வாழ்வில் சேமிப்பை கற்றுக்கொள்ளுங்கள்
    அது எதிர்காலத்தில் நம்மை தாங்கும் தூணாகும் !

    சிரித்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள்
    அது நோயினை நீக்கும் மருந்தாகும் !

    ஆம்,
    வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் !
    சிரிக்க தெரிந்தவனே, சிந்திக்க தெரிந்தவனாவான் !!

     
     
     
     
     
     

    படம் உதவி:
    http://idiva.com/opinion-relationships/why-smart-people-practice-positive-thinking/28852

    Share
  • இருபத்துநான்கு மணி நேரம்

    — ரா.பார்த்தசாரதி.

     

     

    berkeley parkingஇருபத்துநான்கு மணி நேர ஆஸ்பத்திரி, ஏ டிஎம், மெடிக்கல் ஷாப், இவை எல்லாம் பெரிய அதிசயம் இல்லை. ஆனால் அமெரிக்காவில் பார்க்கிங் என்பதே ரொம்ப கஷ்டம்.

    ஒரு முறை பீட்டர் என்கிற 83 வயது முதியவர் தனது காரில் இரண்டு புள்ளி நான்கு மணி நேரம் பார்கிங் செய்வதற்காகச் சுற்றியலைந்து, கடைசியில் தனது காரை பார்க் செய்தார். செக்யூரிட்டியிடம் போய் தான் கஷ்டபட்டதைச் சொன்னார். தப்பாக புரிந்து கொண்ட அவர் தலைமை அதிகாரியிடம் சொல்ல, உடனே அவர் CNN TV க்குப் போன் செய்ததும், அவர்கள் உடனே பீட்டரை பேட்டி காண வந்தனர்.

    டிவி ரிபோர்ட்டர் அவரிடம், எப்படி நீங்க 24 மணி நேரம் பார்க் செய்வதற்காகச் சுற்றினீர்கள்? இது பெரிய சாதனை… இதை கின்னஸ் ரெக்கார்டில் போடபோகிறோம் என்றார். பீட்டருக்கு ஒன்றும் புரியவில்லை. டிவி ரிபோர்ட்டரிடம், சார் இரண்டு புள்ளி நான்கு மணிநேரம் சுற்றிய பின் பார்க்கிங் செய்தேன். நீங்கள் தவறுதலாக இருபத்துநான்கு மணி நேரம் என்று புரிந்து கொண்டது என் தவறில்லை என்றார். ரிப்போர்ட்டரும், தலைமை அதிகாரியும் அசடு வழிந்தார்கள்.

     

     

     

     

     
    பெர்க்லி நகர ஊர்திகள் நிறுத்துமிடம் படம் எடுத்தவர்: தேமொழி

    Share
  • அந்தரங்கம்

     ரா. பார்த்தசாரதி.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    photo albumதிருமணம் முடிந்து ஒரு வருடம் நெருங்கிற்று. சுரேஷுக்கு அவசரம்.

    அன்று இரவு சுமதியிடம், “இன்னிக்காவது காட்டுவாயா, இல்லையா?”

    “என்னஅவசரம்? பொறு சுரேஷ் ”

    “ஏமாற்றாதே சுமதி என்றான்” அருகில் சென்று ஒரு முத்தம்.

    “இன்னிக்கு இது போதும், நாளை காட்றேன்”

    மறுநாள் …..

    இரவு சுமதி கதவை மூடினாள். மிக நெருக்கமாக அமர்ந்தாள், திறந்து காட்டினாள் அவர்களின் திருமண புகைப்படங்களை.

    அன்று அவர்களின் திருமணநாள்..

     

     

     

     

     

     

    படம் உதவி: http://imgarcade.com/1/south-indian-wedding-photo-album-design/

    Share
  • சந்தேகம்

    ரா. பார்த்தசாரதி.

    காலை ஆறு மணி. டேப் ரெகார்டரில் சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது. விஜயா சுடச் சுட காப்பியை கொண்டுவந்து நீட்டினாள்.

    “டீப்பா மேலே வச்சிட்டு போ” என்றான் சிவா.

    சிவா எப்பொழுதும் காலையில் எழுந்த உடனே அன்றைய வேலைகளை டைரியில் மார்க் பண்ணி ஒரு முறை பார்த்துக்கொள்வான். ஆபீசில் அவனுக்கு ஆல்ரௌண்டெர் என்று பெயர். பொது சேவையிலும் அவனுக்கு ஈடுபாடு உண்டு. சாலைகளில் மர நடு விழா, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு
    மருந்து, ஓபன் ஹார்ட் சர்ஜெரிக்காக ப்ளட் ஏற்பாடு … மற்றும் பல. வீட்டை விட அவன் வெளியில் சுற்றுவதே அதிகம்.

    விஜயாவிற்கு அவனிடம் பிடித்தது அவனது பொறுமை. எந்த விஷயத்திலும் நியாயத்தை எடுத்துச் சொல்பவன். அப்படி பட்டவன் சிலவற்றை ஏன் மறைக்கின்றான். ஒரு பெண், ஒரு மகன் என்ற நிறைவான குடும்பம். சனி, ஞாயிறில் அவளையும் குழந்தைகளையும் வெளியே கூட்டிச் செல்வது வழக்கம். அவனுக்கு நாற்பது வயதானாலும், நரைக்காத தலைமயிர் முப்பதாகவே மதிப்பிட தோன்றும். அந்த அளவிற்கு உணவு கட்டுப்பாடு யோகா செய்தும் உடம்பை கட்டுடன் வைத்திருந்தான். எந்த பெண்ணும் அவன் பேச்சிற்கு வயப்படலாம். அதனால் சிலர் சில சமயம் பொறமை படுவார்கள். இதை விஜயாவின் காதுபட சொன்னவர்களும் உண்டு.

    விஜயாதான் அவனது துணிகளையும், குழந்தைகள் டிரெஸ்ஸையும் வாஷின் மெஷினில் போட்டு துவைப்பாள். போடும் முன் பேண்ட் பாக்கெட்டில், எதாவது இருகிறதா என்று செக் பண்ணிவிட்டுதான் போடுவாள்.

    அன்று ஞாயிற்று கிழமை. எல்லோர்க்கும் ஒரு சோம்பேறித்தனம் வரும் நாள். சிவா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் செல்லில் இருந்து ஒரு வாய்ஸ் மெயில். பல தடவை சிவாவே செல்லை எடுக்கச் சொல்வான். ஏதாவது அவசர காலாக இருக்கலாம் என நினைத்து கொண்டு எடுத்தாள். “நீங்க இல்லை என்றால் நான் இல்லை. நான்தான் உஷா. இன்று ஈவினிங்க் நான்கு மணிக்கு நீங்க என்னை கண்டிப்பாக மீட் பண்ணனும்…” என்று வாய்ஸ் மெயிலில் ரெகார்ட் ஆகி இருந்தது.

    சிவா எழுந்தவுடன் நிதானமாகத் தனது செல்லில் உள்ள ரிசிவிங் நெம்பர்களை செக் பண்ணும் போது உஷா அனுப்பிய வாய்ஸ் மெய்லைப் பார்த்ததும் விஜயாவிடம், “இன்னைக்கு எனக்கு இரண்டு மூன்று ப்ரோக்ராம் இருக்கு. எப்படியும் ஈவினிங்க் வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன்,” என்று சொல்லி அவளது பதிலுக்குக் கூடக் காத்திராமல் கிளம்பினான்.

    ஈவினிங் லேட்டாக வந்தான். ஆறு மணிக்கு வந்தவன் எல்லோரையும் அவசரப் படுத்தி உட்லண்ட் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்தான். விஜயா வேண்டா வெறுப்பாக அவனிடம் நடந்து கொண்டாள். சிவாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அன்று இரவு அவளை செல்லமாக கட்டியணைக்க முற்பட்டான். என்றும் விலக்காதவள், “சீ …கையை கொண்டு வராதிங்க. நீங்களும் சராசரி ஆம்பளை என்பதை நிரூபிக்கிறிங்க,” என்றாள்.

    washingசிவாவும் இன்று அம்மாவிற்கு மூடு சரியில்லை என நினைத்துத் தூங்கலானான். அவனுக்குத் தெரியாது அவள் உஷாவை நினைத்து பழிவாங்குகிறாள் என்று. மறுநாள், விஜயா அவன் துணிகளை வாஷின் மெஷினில் போடும்போது அவன் பேண்ட்டில் இருந்து ஒரு வண்டி டோக்கன், கூடவே ஒரு பேப்பர் ஆகியவறைக் கண்டாள். அவன் ஆபீஸ்ஸுக்குப் போன பின்னர் பிரித்துப் படித்துப் பார்த்தாள். அதில், ஜீவன் ப்ளட் பேங்க்… உஷா, அப்போலோ ஹாஸ்பிட்டல் இருதய மாற்று அறுவை சிக்கிச்சை, ப்ளட் அரெஞ்சமென்ட் அண்ட் பை சிவா என்று எழுதியிருந்தது.

    அன்று மாலை வந்ததும், “என்னங்க, உங்களுக்குப் பிடித்த பூரி மசாலா செய்து வச்சி இருக்கேன். குழந்தைகள் சாப்பிடாச்சு. நீங்க வாங்க,” என்று பக்கத்தில் இருந்து கனிவுடன் அவனை பார்த்துக் கொண்டே பரிமாறினாள். விஜயா நான் சொல்ல மறந்தேன். நேற்று உஷா என்ற முப்பது வயது பெண்ணிற்கு ஓபன் ஹார்ட் சர்ஜெரிக்காக நான் பிளட் ஏற்பாடு செய்தேன். அவளுக்கும் நம்ப மாதிரி இரண்டு குழந்தைகள். பணக்கார வீட்டுப் பெண். என்னைப் பாராட்டி அவள் தந்தைக்கும், கணவருக்கும் அறிமுகம் செய்தாள். அவள் கணவன் உடனே எனக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார். அதை அவரிடம் கொடுத்துவிட்டு, சார்… இதை நான் ஒரு சேவையாகச் செய்கின்றேன். இது எல்லாம் வேண்டாம் என்று சொல்லி கொடுத்து விட்டேன். இதோபார் விஜயா, நாம் செய்ற நல்லது எல்லாம் நம் பிள்ளைகளுக்கு நன்மை கொடுக்கும் என்றான்”.

    சிவாவின் செயலால் அவள் மனதில் அவன் உயர்ந்தான், அவள் பெருமை அடைந்தாள். அன்று இரவு சிவாவின் … நேற்றுதான் முரண்டு பண்ணின, இன்னிகாவது, என்ற கெஞ்சும் பார்வையை புரிந்துகொண்டு… உங்க இஷ்டம் என்றாள். சிவாவும் ஆனந்தமாக அவளை கட்டியணைத்தான்.

     

     

    படம் உதவி: http://www.token.uk.com/images/tips/img_washing_tips-5.png

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பிப்ரவரி 16, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள்

    Parthasarathy Ra

     

    வல்லமை மின்னிதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர் எழுத்தாளர் திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள். வல்லமை வாசகர்களுக்கு இவர் தனது கவிதைகள் பலவற்றையும், சிறுகதைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார். குறிப்பாக சென்ற வாரம் “எண்ணமும், சிந்தனையும்!” என்ற எழுச்சிக் கவிதையையும், காதலர் தின சிறப்புப் பதிவாக “காதல் என்றால். . . ?!”  என்ற கவிதை என இரு கவிதைகளை வழங்கியுள்ளார். அத்துடன் “மாறிய ஜென்மங்கள்”  என்ற இன்றைய உலகில் மூத்த குடிமக்களின்  யதார்த்த வாழ்க்கையையும், பந்தபாசத்தின் மேன்மையையும் உணர்த்தும் சிறுகதையையும் வழங்கியுள்ளார்.

    தற்பொழுது சென்னையில் வசிக்கும் திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள், பாலா, இனியவன் என்ற புனைப்பெயர்களிலும் எழுதி வருபவர். தனியார் நிறுவனம் ஒன்றின் மேலதிகாரியாகப் பணிநிறைவு பெற்ற இவர் தமிழ் மற்றும் பொருளியியலில் முதுநிலை பட்டங்கள் பெற்றவர். பணிநிறைவிற்குப் பின்னும் கவிதைகள் சிறுகதைகள் எழுதும் தனது பொழுதுபோக்கைத் தொடர்கிறார். கவிதை உறவு, தமிழ்ப்பணி ஆகியவற்றில் இவரது கவிதைகளும், குமுதம், தினமலர் பத்திரிக்கைகளில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. தனது “கவிதைப்பூகள்”  என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறார். சிந்தனை தரும் மேன்மையை உணர்த்தும் அவரது இரு கவிதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    எண்ணமும், சிந்தனையும்!
    ______________________________________

    எண்ணமும் செயலும் ஒன்றுபட வேண்டும்
    வாழ்வினில் உயர்ந்தநிலை பெறவேண்டும்!
    நாம் சிந்திப்போம்! கடலின் வீரியத்தை
    எழும்பியடங்கும் அலைகளே உணர்த்தும்!

    மரத்தை எண்ணிச் சிந்தித்தால் அதில் துளிர்க்கும்
    இலைகளே அதன் பசுமையே நமக்கு உணர்த்தும்!
    நெருப்பினைச் சிந்தித்தால் உமிழப்படும்
    வெப்பமும் வெளிச்சமும் ஆற்றலை உணர்த்தும்!

    சித்திரங்கள் என்பது வண்ணங்கள் அன்றி வேறில்லை
    நாம் என்பது நம் எண்ணங்கள் அன்றி வேறில்லை
    நமக்குள் தோன்றி மறைந்தாலும் நம்மை நிழலாக்கி விட்டுத்
    தம்மை நிஜமாக்கி கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!

    நம் எண்ணங்களே உணர்த்துகின்றன நம்மை நமக்கும் பிறர்க்கும்
    துணிந்தபின் மனமும் எண்ணமும் துயரம் கொள்ளாது என்றும்!
    துயரமடைந்த எண்ணங்களுக்கு அதற்குமாறாக உயரத்திற்கு
    அழைத்துச் செல்லத் தெரிந்தவை நம் உத்வேக எண்ணங்கள்!

    நமக்குள் தோன்றும் எண்ணங்கள் ஆயிரம் இருந்தாலும்
    நல்லெண்ணம் தீயஎண்ணம் என மறைந்திருந்தாலும்
    தம்மை நிஜமாக்கிக் கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!
    நல்லெண்ணமும், நற்செயலும் வாழ்வின் வழிகாட்டி என நினையுங்கள் !
    ***

    மனிதனே சற்றே நினைத்துப்பார்
    ______________________________________

    எல்லாவற்றிற்கும் காரணம் ஆசை என்று அறிந்தே
    நம் கைவிட்டு போகும் நாணயமில்லாத நாணயங்கள் !

    பேராசையால் கைதவறிய வாய்ப்புக்கள்
    நம்மை பார்த்து தொலைவில் இருந்தபடி நகைக்கின்றது !

    மனதை கல்லாக்கி கைக்கு எட்டியதை
    வாய்க்கு எட்டாததைக் கண்டு ஏமாந்த போது
    வறட்டுக் கவுரத்திற்காக விலக்கி வைத்தால்
    புரிந்ததும், புரியாததும் சேர்ந்து
    தொலைந்துபோன காலகட்டத்தில் !

    பெருமைக்காக நட்புகொண்டு, கைகுலுக்கி,
    அவசியங்களுடன், அத்தியாவசியங்களும்
    இழக்கம் பொழுது ,ஏற்பட்ட இழப்பின் வலிகள் !

    மூட நம்பிக்கையுடன் ஜாதி, மத விழுதுகளை நம்பி,
    பகுத்தறிவு வேர்களை புறந்தள்ளியதால்
    அவனியில் சிக்கித் தவிக்கும் மனிதம்!

    கிடைத்ததை கொண்டு திருப்தி கொள்ளாமல்
    கடந்ததை எண்ணி வருந்துவதால் எக்ககாரணம்மின்றி
    கரைந்துபோகும் மனிதம்.!

    எண்ணுபவர் – விழிப்பர்
    விழிப்பவர் – உழைப்பர்
    உழைப்பவர் – உயர்வர்
    உயர்வோர்க்கே இவ்வுலகம்!

    இவையாவும் உய்வோர்க்கு
    புரிதல் எப்போது;
    மனிதமும், மனிதநேயமும் உயர்வதெப்போது?

     

    வல்லமையாளர் திரு. ரா. பார்த்தசாரதி அவர்களைப் பாராட்டி அவர் தனது இலகியப் பயணத்தில் வெற்றிகள் பல பெற வல்லமை நண்பர்கள் வாழ்த்துகிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    தொடர்புக்கு:
    https://plus.google.com/113104518638625010842/

    Share
  • நல்லவனாய் இரு!

        -ரா. பார்த்தசாரதி 

         அன்பில் அன்னையாய்  இரு
          புன்னகையில் சிறு குழந்தையாய்  இரு
          நடையினில் ஓர்  வீரனாய் இரு
          சொல் செயலில் கொஞ்சம் உத்தமனாய் இரு

          ஆழ்மனதில் அதிகத் தூய்மையாய் இரு
          உன் நலனில் என்றும் அக்கறை காட்டுபவனாய் இரு
          பிறர் நலனில் கடுகு அளவாது  இரக்கம் காட்டுபவனாய் இரு
          மறுபிறப்பிலே கொஞ்சம் நம்பிக்கையாய்  இரு

          இப்பிறவியிலே கர்ம வினைகளைப் போக்குபவனாய் இரு
          ஊரறிய மகானாய்  வாழ்வதைவிட
          இறைவன் மனம்குளிர மனதில் நல்லவனாய் வாழ்வதே போதும்
          உலகில் மாற்றங்கள் நிகழும் அன்புப்  பூக்கள்  பூக்கும்!

     

    Share
  • மாறிய ஜென்மங்கள்

    — ரா.பார்த்தசாரதி.

    கமலாவும், சாரதியும் அந்த முதியோர் இல்லத்திற்கு வந்து இரு வருடங்கள் ஓடிவிட்டது. இருவரும் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். சாரதி ஓய்வு பெற்று, கிராமபுரத்தில் இருந்த ஒரு கிரௌண்டை விற்று, அந்தப் பணத்தை வங்கியில் போட்டு, அதில் வரும் வட்டியில் அந்த முதியோர் இல்லத்திற்கு மாத வாடகை கொடுத்துவிட்டு காலம் தள்ளினர். சிட்கோ நகரில் உள்ள சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு அந்தப் பணத்தை இதர செலவிற்கு வைத்து கொண்டார்.

    சாரதிக்கும், கமலாவிற்கும் ஒரு மகள், ஒரு மகன். இருவருக்கும் வெளிநாட்டில் வேலை. தூர இருந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி, பக்கத்தில் இருந்தால் செடியும் பகை. இது யாவரும் அறிந்ததே. சில வருடங்களுக்கு முன் தான் செய்ததை நினைத்து பார்த்தார் சாரதி. இரு பிள்ளைகளிடத்திலும் மாறாத அன்பும்… சனி, ஞாயிறு அவர்களை பீச், பார்க் என்றும்; பெண்ணை பாட்டு கிளாஸ் என்றும், பையனை ஓவிய வகுப்பு என்றும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படிக்க வைத்தார். பெண்ணிற்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்தது, அவளுக்கு ஓர் ஆண் குழந்தை மூன்று வயதில் … பேரன் பெயர் கேஷவ். மகன் கார்த்திக்கிற்கு பெண் குழந்தை அனுஷா, இரண்டு வயதில் .

    இவ்வளவு தூரம் படிக்கவைத்து பிள்ளைகளிடமிருந்து ஒதுங்கி வாழக் காரணம் என்ன?

    வருடத்திற்கு ஒரு முறையாவது போய் அவர்களைப் பார்த்து வந்தனர் கமலாவும், சாரதியும். அவர்களுக்கு மகன் கார்த்திக், மகள் பிரியா இருவருமே இரு கண்கள். அதிலும் கமலா பாசத்திற்கு அடிமையானவள். சாரதியோ என்றும் தாமரை இலை தண்ணீர் மாதிரி. மகனுக்கு வரன் பார்க்கும்போது ஏற்பட்ட சண்டை அவர்களை நிரந்தரமாக விலக்கியே வைத்து விட்டது.

    தனக்கு நல்ல மருமகள் வரவேண்டும் என்று எந்த தாயும் விரும்புவாள். கார்த்திக் பாரத் மேற்றிமோனியில் பதிவு செய்து வரன்களை தானே முடிவு செய்வதாகவும், அப்பா, அம்மா இருவரையும் புகைப்படத்தையும், ஜாதகத்தையும் பார்க்க அனுமதித்தாலும் தானே பதில் அனுப்ப முடிவு கொண்டான் கார்த்திக். ஒரு நாள் மகனுக்குத் தெரியாமல் ஒரு வரனுக்கு புகைப்படமும், ஜாதகமும், அனுப்பச் சொல்லி பதில் அனுப்பினார் சாரதி. இதைக் கம்ப்யூட்டரில் பார்த்து அறிந்து மிகுந்த கோபத்துடன் தந்தை என்றும் பாராமல் அவமரியாதை செய்தான் மகன். உன் அப்பாவை நீ பேசியது தவறு, மன்னிப்பு கேள் என்று கூறிய தாயையும் கேட்க கூடாத கேள்விகளை கேட்டான். கடைசி வரை அவன் தவற்றை உணரவில்லை, மன்னிக்கவும் இல்லை.

    பிறகு பெற்றோர்கள் மகள் பிரியா வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கிவிட்டு இந்தியாவிற்குத் திரும்பினார்கள். இதற்கிடையில் பிரியாவும் மற்றவர்களும் அறிவுரை கூற நிதானமாக சிந்தித்துத் தன் தவறை உணர்ந்தான் கார்த்திக். அவன் நிச்சியதார்த்தம் அமெரிக்காவிலே அப்பா அம்மா வருகை இல்லாமல் நடந்து, திருமணம் மட்டும் சென்னையில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவன் கைபிடித்த சுமதி மிக அழகாக இருந்தாள், பண்பாடு, கலாச்சாரம் அறிந்து அமெரிக்க வரும்படி அழைத்தாள். திருமணத்திற்கு முன் நடந்தவை ஒன்றும் அவளுக்குத் தெரியாது.

    இரண்டு வருடங்கள் சென்றன. சுமதி கருவுற்றாள். வளைகாப்பு, சீமந்தம் எதற்குமே தன் மாமியார், மாமனார் கூப்பிட்டும் வராததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். அவள் அப்பா, அம்மா, உத்தியோகத்திற்குச் செல்வதால், ஏதோ ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் தான் அவளுடன் இருக்கமுடியும். நாத்தனருக்கும் இதே நிலைமைதான். அவளது குழந்தையை சீசேரியன் செய்து எடுத்தார்கள். அம்மா, அக்கா, நாத்தனார் ஒரு மாதத்திற்கு அருகில் இருந்து உதவினர்.

    பிரியாவை ஏர்போர்ட்டில் காரில் கொண்டு விடும்போது அவள் கார்த்திக்கிடம், “எனக்கு அம்மா, அப்பா பிரசவத்தின் போது ஆறு மாதம் கூட இருந்தா.
    உனக்கு என்றால் ஓடி வந்து செய்வா” என்றாள்.

    “எனக்கு செய்ய மாட்டா. நான் பணம் அனுப்புவதற்குதான் பிள்ளை.”

    “அப்படி எல்லாம் பேசாதே. நீ அனுப்பிய பணத்தை உன் மகள் மேல் டெப்பாசிட் செய்ய சொல்லி என்னிடமே அனுப்பிட்டா. நான்தான் ஒரு மாதம் விட்டு ஒரு முறை அவர்கள் பேங்க்குக்கு பணம் அனுப்புகின்றேன். உன் குழந்தயை கிரீச் அனுப்பி கஷ்டபடுகிறாய் !” என்றவள், தொடர்ந்தாள் …

    “அப்பா இப்போது ஒரு சீனியர் சிடிசன் ஆஷ்ரமத்தில் வேலை செய்துகொண்டே, அங்கேயே தங்க ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். அம்மாவும் பக்கத்தில் உள்ள குழந்தை காப்பகத்தில் வேலை செய்கிறாள். நீ செய்த தப்பை என்றைகாவது உணர்ந்தாயா ! இல்லை உனக்கு மன்னிக்கும் குணம்தான் இருக்கா?”

    இவர்களது உரையாடலை பின்னால் அமர்ந்திருந்த சுமதி கேட்டு கொண்டு இருந்தாள்.

    “நம்ம அப்பா, அம்மா மாதிரி யாருக்கும் கிடைக்காது! அப்பா நமக்கு ஸ்கூல் போகும் டிரெஸ்ஸை அயர்ன் பண்ணி, வண்டி வரவில்லை என்றால் நம்மை கொண்டுவிட்டு, என் படிப்பிற்காக தன் தம்பிகளிடம் பணம் கேட்டு, பாட்டு கிளாஸ், உன்னை கிரிக்கெட், டிராயிங் கிளாஸ் எல்லாம் கொண்டுவிட்டு அழைத்து வந்து, பள்ளிகூடத்தில் விண்ணப்பதிற்காக விடியற்காலையில் நின்று இவ்வளவும் பண்ணின அப்பாவை உன்னால் எப்படி ஏத்துக்க முடியவில்லை. அவருக்கு உரிய மரியாதையை நீ கொடுக்கவில்லை. அதனால்தான் இருவருமே உனக்கு செய்வதற்குத் தயங்குகிறார்கள். நீ இங்கு வருவதற்கு காரணமே அப்பாதான். பாங்கில் கடன்வாங்கி உன்னை முதலில் இங்கு அனுப்பி படிக்கவச்சி இன்று நீ சம்பாதித்து கடனை நீயே அடைத்தாலும், பிள்ளையார் சுழி போட்டது அப்பாதானே ! இன்னிக்கி நாம் நன்னா இருக்கோம் என்றால் அதற்கு அப்பா அம்மா தான் காரணம். The integrity of man is to be measured by the conduct and character and not by their profession. இந்த வார்த்தயை அப்பா அடிக்கடிசொல்வா.” என்றாள் பிரியா.

    சுமதி, “பிரியா அக்கா அடுத்த மாதம் என் அத்தை மகன் கல்யாணத்திற்கு இன்வைட் பண்ணிருக்கா நான் இவரையும் அழைச்சுண்டு போகப்போறேன்” என்றாள். திருமணம் தேதி, இடம், அத்தைமகன் பெயர், வேலை போன்றவற்றை விவரித்தாள். அவர்கள் என் கல்யாணத்திற்கு வரமுடியாதவங்க என்னை கூப்பிட்டால் போய்விட்டு வருவேன் என்றாள்.

    மறுநாள் பிரியா சுமதிக்கு போன் பண்ணி தான் பத்திரமாக வந்து சேர்ந்ததை சொன்னாள். “சுமதி உன் அத்தை பெயர் கொண்ட திருமண பத்திரிகை எங்களுக்கும் வந்திருக்கு. மணமகள் என் கணவனின் மாமா பெண்தான் நல்லதா போச்சு. நானும் இவரும் உடனே சென்னை வருவதற்கு ஏற்பாடு செய்கிறோம், உங்களுக்கும் டிக்கெட் புக் செய்யவா? இதை கார்த்திக்கை கேட்டு எனக்கு சொல்லு” என்றாள்.

    பிரியாவிற்கு தனது அம்மா அப்பாவை பார்க்க ஆசை. தன் மூன்று வயது கேஷவ்வை அவர்களிடம் காண்பிக்க ஆசைப் பட்டாள். அவள் அம்மா ஒரு வயது வரைக்கும் அவளது மகனை வளர்த்தாள்.

    இருபது நாட்கள் கடந்தன. சென்னைக்கு பேக்கிங் செய்த சுமதிக்கு கார்த்திக்கும் உதவி செய்தான். தன்னுடையதையும் எடுத்து வைத்தான். கார்த்திக்கும் பிரியாவும் ஏர்போர்ட்டில் சந்தித்து கொண்டார்கள்.

    “பிரியா எனக்கு எப்படியாவது இவருடைய அப்பா அம்மாவை அழைதுவரவெண்டும். என்ன செய்யலாம். நேற்று இரவே அவரிடம் கேட்டேன்.”

    “அது முடியாத காரியம் சுமதி. அவர்கள் வரமாட்டார்கள்” என்றாள் பிரியா.

    குழந்தை இருப்பதால் விமானத்தில் பிரியாவுக்கும், சுமதிக்கும் பக்கத்து பக்கத்து சீட். மறுநாள் விமானம் சென்னையை காலை ஐந்து மணிக்கு அடைந்தது. மூன்று நாள் ஜெட்லாக், நான்கு நாள் ரெஸ்ட் , மூன்று நாட்களுக்கு,நண்பர்கள் உறவினர்கள் விருந்து, ஆக பத்து நாட்கள் முடிந்தது.

    கடைசி நாள் அப்பா, அம்மாவைப் பார்பதற்கு சுமதியும், பிரியாவும் காலையில் கால் டாக்ஸி பிடித்து குடும்பத்துடன் ஆஷ்ராமத்தை அடைந்தார்கள். சாரதிக்கு ஒரு பக்கம் கோபம், மறுபக்கம் எரிச்சல். செகரட்டரிக்கு போன் செய்து அவர்களை பார்க்க விருப்பும் இல்லை என்று சொல்லி அனுப்பிவிடு என்றார்.

    கமலாவைப் பார்த்து, “உனக்கு வேண்டுமானால் பிள்ளை, பேரன் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்றால் நீ போய் பார்த்து வா. என்னைக் கூப்பிடாதே” என்றார்.

    கமலாவும், அரை மனதுடன் கேட்டை நெருங்கினாள். அம்மா என்று பிரியாவும் சுமதியும் ஓடிவந்தார்கள்.

    “அப்பா எங்கே? என்றாள் பிரியா.

    “அவர் இங்கு வர மறுத்துவிட்டார்”

    “அப்பாவைப் பார்க்காமல் நானும் சுமதியும் இங்கிருந்து நகர மாட்டோம்!”

    செக்கியூரிட்டியும் மூன்று தடவை சாரதிக்கு போன் செய்து, “சார், உங்க மகளும் மருமகளும் போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாங்க தயவு செய்து வந்து எட்டி பார்த்துவிட்டு போங்க சார்” என்றார்.

    grandparentsதலை எழுத்தே என்று சாரதி கேட்டிற்கு வந்தார். உடனே பேரன் கேஷவ், தாத்தா, தாத்தா என்று ஓடி வந்ததும், பின்னாடியே பேத்தி ஓடி வந்து காலை கட்டிக்கொண்டு, குழந்தைகள் இரண்டும் தூக்கு, தூக்கு என்று கையை உயர்த்தியது.

    கமலாவும் பேத்தியை எடுத்துக் கொஞ்சினாள். இருவருமே குழந்தயை கொஞ்சிவதிலேயே இருந்தார்களே தவிர, பெண்ணையும், மருமகளையும் கவனிக்கவே இல்லை.

    அவர் மாப்பிளை, “அப்பா, நானும் உங்க மகனும் இரண்டு மணி நேரம் ஹாலில் வெயிட் பண்றோம், எங்களை நீங்க இருவருமே கண்டுகொள்ளவே இல்லை.” என்றார்.

    சுமதி பிரியாவிடம், “பார்த்தியா பிரியா, என் பொண்ணும் உன் பையனும் அவர்களிடம் எப்படி ஒட்டுகிறார்கள். இதுதான் ‘ப்ளட் இஸ் திக்கர் தான் வாட்டர்’ என்பது,” என்றாள்.

    கார்த்திக், “அப்பா, என்னை நீங்க மன்னிக்கணும். எப்போ இரண்டு பேரும் யு.எஸ் வருவிங்க. நான் டிக்கெட் வாங்கட்டுமா?” என்றான். சுமதியும், “அம்மா உங்க பேத்திக்காகவாவது எங்ககூட வந்து இருங்கள்” என்றாள்.

    “எல்லாம் அவரைக் கேளு” என்றாள் கமலா.

    சாரதி, “தூரத்துப் பச்சை கண்ணனுக்குக் குளிர்ச்சி. எங்களுக்கு இங்கேயே வசதியாய் இருக்கிறது. நாங்க இங்கேயே இருந்துவிடுகிறோம்” என்றார்.

    பிரியா அழுது விட்டாள். “அப்பா, தம்பி பண்ணின தப்பிற்கு என்னை தண்டிகின்றாய். அம்மா நீ இல்லாமல் நகரமாட்டாள்” என்றாள்.

    சாரதி கமலாவின் மீது பார்வையை செலுத்தினார். அவள் முகம் பேரன், பேத்தியின் பக்கமே இருந்தது.

    “நான் வரவில்லை. உன் அம்மா வந்தா அழைச்சிண்டு போ”

    கமலாவிடம் அவர்கள் போகலாமா என்று கேட்க, அவள் கணவரிடம் நாம் வேண்டுமென்றால்பேரன், பேத்தியை விமான நிலையம் வரை வழி அனுப்ப செல்வோமே என்றாள்.

    விடுதியில் பெர்மிஷன் சொல்லிவிட்டு அவர்கள் காரிலேயே கிளம்பினார்கள். வழி நெடுக பேரன், பேத்தி பற்றிதான் பேச்சு. இவ்வளவு ஆசை வச்சிண்டு வர மறுக்க காரணம் என்ன என்று தெரிந்தும் சுமதி காரணத்தைக் கேட்டாள்.

    “பட்டமரம் ஒட்டுவதில்லை, சுட்ட மண் ஒட்டுவதில்லை. இது தெரியாதாம்மா !” என்றாள் கமலா.

    அந்த அளவிற்கு கார்த்திக் அவர்கள் மனதை புண்படுத்தி இருந்தான். இவர்களிடம் பேரனையும், பேத்தியையும் விட்டுவிட்டு பிரியாவும், சுமதியும் குழந்தைகளுக்கு பால் வாங்கச் சென்றார்கள். சாரதியும் கமலாவும் குழந்தைகளின் மழலை பேச்சில் மயங்கினார்கள். பேத்தியின் சிரிப்பிலும், பேரனின் ஆங்கிலத்திலும் தன்னையே மறந்தார்கள். ஆயிரம் துக்கங்கள் குழந்தை பேச்சில் அமிழும் என்பது உண்மைதான்.

    பால் வாங்கிய பின் பிரியாவும், சுமதியும் குழந்தைகளை இவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் போது, “தாதா, கம்பா பாட்டி” என்ற பேரனின் அலறலும், பேத்தியின் அழுகையும், அவர்களை அழுத்தியது. வைத்தகண் வாங்காமல் பார்த்துகொண்டு இருந்தார்கள்.

    மாப்பிளையும், மகனும் இம்மிக்கிரேஷன் முடித்து விடை பெற வந்தார்கள். கார்த்திக் “அப்பா நான் வரட்டுமா, வரடுமாம்மா” என்றான்.

    “டேய் , கார்த்திக் எனக்கும் உங்க அம்மாவிற்கும் விசாவும், டிக்கெட்டும் ஏற்பாடு செய்” என்றார் சாரதி.

    கார்த்திக் அப்பா அம்மாவையும் கட்டிக்கொண்டு அழுதான்.

    “நீங்க இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? ரொம்ப தேங்க்ஸ் அப்பா.”

    வாழ்க்கையின் உண்மையான சந்தோஷம் எது?

    தாய் தந்தையிடம் பார்த்த பாசமா? மகனிடமும், மகளிடமும் உணர்ந்த அன்பா? அண்ணன், தம்பி, தங்கைகள் இடையே உள்ள பந்த பாசமா?

    இது எந்த ரகம் என்று புரிந்துகொள்ள முடியாமல் நம்மை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்கும் நமது பேரன்,பேத்திகளின் கள்ளமற்ற சிரிப்பா? பேரக்குழந்தைகளுக்காக மற்றவர்கள் செய்யும் தவறினை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனித நேயமா? பாசத்திற்காக நாம் எல்லோரையும் அரவணைத்துத்துதான் செல்லவேண்டுமா?

    உணர்தவர்கள் பதில் கூறட்டும்.

    Picture Source: http://daycare.sulekha.com/care-corner_all-about-the-grandchild-grandparent-bonding_blog_6158

    Share