ரா. பார்த்தசாரதி.

காலை ஆறு மணி. டேப் ரெகார்டரில் சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது. விஜயா சுடச் சுட காப்பியை கொண்டுவந்து நீட்டினாள்.

“டீப்பா மேலே வச்சிட்டு போ” என்றான் சிவா.

சிவா எப்பொழுதும் காலையில் எழுந்த உடனே அன்றைய வேலைகளை டைரியில் மார்க் பண்ணி ஒரு முறை பார்த்துக்கொள்வான். ஆபீசில் அவனுக்கு ஆல்ரௌண்டெர் என்று பெயர். பொது சேவையிலும் அவனுக்கு ஈடுபாடு உண்டு. சாலைகளில் மர நடு விழா, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு
மருந்து, ஓபன் ஹார்ட் சர்ஜெரிக்காக ப்ளட் ஏற்பாடு … மற்றும் பல. வீட்டை விட அவன் வெளியில் சுற்றுவதே அதிகம்.

விஜயாவிற்கு அவனிடம் பிடித்தது அவனது பொறுமை. எந்த விஷயத்திலும் நியாயத்தை எடுத்துச் சொல்பவன். அப்படி பட்டவன் சிலவற்றை ஏன் மறைக்கின்றான். ஒரு பெண், ஒரு மகன் என்ற நிறைவான குடும்பம். சனி, ஞாயிறில் அவளையும் குழந்தைகளையும் வெளியே கூட்டிச் செல்வது வழக்கம். அவனுக்கு நாற்பது வயதானாலும், நரைக்காத தலைமயிர் முப்பதாகவே மதிப்பிட தோன்றும். அந்த அளவிற்கு உணவு கட்டுப்பாடு யோகா செய்தும் உடம்பை கட்டுடன் வைத்திருந்தான். எந்த பெண்ணும் அவன் பேச்சிற்கு வயப்படலாம். அதனால் சிலர் சில சமயம் பொறமை படுவார்கள். இதை விஜயாவின் காதுபட சொன்னவர்களும் உண்டு.

விஜயாதான் அவனது துணிகளையும், குழந்தைகள் டிரெஸ்ஸையும் வாஷின் மெஷினில் போட்டு துவைப்பாள். போடும் முன் பேண்ட் பாக்கெட்டில், எதாவது இருகிறதா என்று செக் பண்ணிவிட்டுதான் போடுவாள்.

அன்று ஞாயிற்று கிழமை. எல்லோர்க்கும் ஒரு சோம்பேறித்தனம் வரும் நாள். சிவா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் செல்லில் இருந்து ஒரு வாய்ஸ் மெயில். பல தடவை சிவாவே செல்லை எடுக்கச் சொல்வான். ஏதாவது அவசர காலாக இருக்கலாம் என நினைத்து கொண்டு எடுத்தாள். “நீங்க இல்லை என்றால் நான் இல்லை. நான்தான் உஷா. இன்று ஈவினிங்க் நான்கு மணிக்கு நீங்க என்னை கண்டிப்பாக மீட் பண்ணனும்…” என்று வாய்ஸ் மெயிலில் ரெகார்ட் ஆகி இருந்தது.

சிவா எழுந்தவுடன் நிதானமாகத் தனது செல்லில் உள்ள ரிசிவிங் நெம்பர்களை செக் பண்ணும் போது உஷா அனுப்பிய வாய்ஸ் மெய்லைப் பார்த்ததும் விஜயாவிடம், “இன்னைக்கு எனக்கு இரண்டு மூன்று ப்ரோக்ராம் இருக்கு. எப்படியும் ஈவினிங்க் வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன்,” என்று சொல்லி அவளது பதிலுக்குக் கூடக் காத்திராமல் கிளம்பினான்.

ஈவினிங் லேட்டாக வந்தான். ஆறு மணிக்கு வந்தவன் எல்லோரையும் அவசரப் படுத்தி உட்லண்ட் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்தான். விஜயா வேண்டா வெறுப்பாக அவனிடம் நடந்து கொண்டாள். சிவாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அன்று இரவு அவளை செல்லமாக கட்டியணைக்க முற்பட்டான். என்றும் விலக்காதவள், “சீ …கையை கொண்டு வராதிங்க. நீங்களும் சராசரி ஆம்பளை என்பதை நிரூபிக்கிறிங்க,” என்றாள்.

washingசிவாவும் இன்று அம்மாவிற்கு மூடு சரியில்லை என நினைத்துத் தூங்கலானான். அவனுக்குத் தெரியாது அவள் உஷாவை நினைத்து பழிவாங்குகிறாள் என்று. மறுநாள், விஜயா அவன் துணிகளை வாஷின் மெஷினில் போடும்போது அவன் பேண்ட்டில் இருந்து ஒரு வண்டி டோக்கன், கூடவே ஒரு பேப்பர் ஆகியவறைக் கண்டாள். அவன் ஆபீஸ்ஸுக்குப் போன பின்னர் பிரித்துப் படித்துப் பார்த்தாள். அதில், ஜீவன் ப்ளட் பேங்க்… உஷா, அப்போலோ ஹாஸ்பிட்டல் இருதய மாற்று அறுவை சிக்கிச்சை, ப்ளட் அரெஞ்சமென்ட் அண்ட் பை சிவா என்று எழுதியிருந்தது.

அன்று மாலை வந்ததும், “என்னங்க, உங்களுக்குப் பிடித்த பூரி மசாலா செய்து வச்சி இருக்கேன். குழந்தைகள் சாப்பிடாச்சு. நீங்க வாங்க,” என்று பக்கத்தில் இருந்து கனிவுடன் அவனை பார்த்துக் கொண்டே பரிமாறினாள். விஜயா நான் சொல்ல மறந்தேன். நேற்று உஷா என்ற முப்பது வயது பெண்ணிற்கு ஓபன் ஹார்ட் சர்ஜெரிக்காக நான் பிளட் ஏற்பாடு செய்தேன். அவளுக்கும் நம்ப மாதிரி இரண்டு குழந்தைகள். பணக்கார வீட்டுப் பெண். என்னைப் பாராட்டி அவள் தந்தைக்கும், கணவருக்கும் அறிமுகம் செய்தாள். அவள் கணவன் உடனே எனக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார். அதை அவரிடம் கொடுத்துவிட்டு, சார்… இதை நான் ஒரு சேவையாகச் செய்கின்றேன். இது எல்லாம் வேண்டாம் என்று சொல்லி கொடுத்து விட்டேன். இதோபார் விஜயா, நாம் செய்ற நல்லது எல்லாம் நம் பிள்ளைகளுக்கு நன்மை கொடுக்கும் என்றான்”.

சிவாவின் செயலால் அவள் மனதில் அவன் உயர்ந்தான், அவள் பெருமை அடைந்தாள். அன்று இரவு சிவாவின் … நேற்றுதான் முரண்டு பண்ணின, இன்னிகாவது, என்ற கெஞ்சும் பார்வையை புரிந்துகொண்டு… உங்க இஷ்டம் என்றாள். சிவாவும் ஆனந்தமாக அவளை கட்டியணைத்தான்.

 

 

படம் உதவி: http://www.token.uk.com/images/tips/img_washing_tips-5.png

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.