— ரா.பார்த்தசாரதி.

கமலாவும், சாரதியும் அந்த முதியோர் இல்லத்திற்கு வந்து இரு வருடங்கள் ஓடிவிட்டது. இருவரும் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். சாரதி ஓய்வு பெற்று, கிராமபுரத்தில் இருந்த ஒரு கிரௌண்டை விற்று, அந்தப் பணத்தை வங்கியில் போட்டு, அதில் வரும் வட்டியில் அந்த முதியோர் இல்லத்திற்கு மாத வாடகை கொடுத்துவிட்டு காலம் தள்ளினர். சிட்கோ நகரில் உள்ள சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு அந்தப் பணத்தை இதர செலவிற்கு வைத்து கொண்டார்.

சாரதிக்கும், கமலாவிற்கும் ஒரு மகள், ஒரு மகன். இருவருக்கும் வெளிநாட்டில் வேலை. தூர இருந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி, பக்கத்தில் இருந்தால் செடியும் பகை. இது யாவரும் அறிந்ததே. சில வருடங்களுக்கு முன் தான் செய்ததை நினைத்து பார்த்தார் சாரதி. இரு பிள்ளைகளிடத்திலும் மாறாத அன்பும்… சனி, ஞாயிறு அவர்களை பீச், பார்க் என்றும்; பெண்ணை பாட்டு கிளாஸ் என்றும், பையனை ஓவிய வகுப்பு என்றும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படிக்க வைத்தார். பெண்ணிற்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்தது, அவளுக்கு ஓர் ஆண் குழந்தை மூன்று வயதில் … பேரன் பெயர் கேஷவ். மகன் கார்த்திக்கிற்கு பெண் குழந்தை அனுஷா, இரண்டு வயதில் .

இவ்வளவு தூரம் படிக்கவைத்து பிள்ளைகளிடமிருந்து ஒதுங்கி வாழக் காரணம் என்ன?

வருடத்திற்கு ஒரு முறையாவது போய் அவர்களைப் பார்த்து வந்தனர் கமலாவும், சாரதியும். அவர்களுக்கு மகன் கார்த்திக், மகள் பிரியா இருவருமே இரு கண்கள். அதிலும் கமலா பாசத்திற்கு அடிமையானவள். சாரதியோ என்றும் தாமரை இலை தண்ணீர் மாதிரி. மகனுக்கு வரன் பார்க்கும்போது ஏற்பட்ட சண்டை அவர்களை நிரந்தரமாக விலக்கியே வைத்து விட்டது.

தனக்கு நல்ல மருமகள் வரவேண்டும் என்று எந்த தாயும் விரும்புவாள். கார்த்திக் பாரத் மேற்றிமோனியில் பதிவு செய்து வரன்களை தானே முடிவு செய்வதாகவும், அப்பா, அம்மா இருவரையும் புகைப்படத்தையும், ஜாதகத்தையும் பார்க்க அனுமதித்தாலும் தானே பதில் அனுப்ப முடிவு கொண்டான் கார்த்திக். ஒரு நாள் மகனுக்குத் தெரியாமல் ஒரு வரனுக்கு புகைப்படமும், ஜாதகமும், அனுப்பச் சொல்லி பதில் அனுப்பினார் சாரதி. இதைக் கம்ப்யூட்டரில் பார்த்து அறிந்து மிகுந்த கோபத்துடன் தந்தை என்றும் பாராமல் அவமரியாதை செய்தான் மகன். உன் அப்பாவை நீ பேசியது தவறு, மன்னிப்பு கேள் என்று கூறிய தாயையும் கேட்க கூடாத கேள்விகளை கேட்டான். கடைசி வரை அவன் தவற்றை உணரவில்லை, மன்னிக்கவும் இல்லை.

பிறகு பெற்றோர்கள் மகள் பிரியா வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கிவிட்டு இந்தியாவிற்குத் திரும்பினார்கள். இதற்கிடையில் பிரியாவும் மற்றவர்களும் அறிவுரை கூற நிதானமாக சிந்தித்துத் தன் தவறை உணர்ந்தான் கார்த்திக். அவன் நிச்சியதார்த்தம் அமெரிக்காவிலே அப்பா அம்மா வருகை இல்லாமல் நடந்து, திருமணம் மட்டும் சென்னையில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவன் கைபிடித்த சுமதி மிக அழகாக இருந்தாள், பண்பாடு, கலாச்சாரம் அறிந்து அமெரிக்க வரும்படி அழைத்தாள். திருமணத்திற்கு முன் நடந்தவை ஒன்றும் அவளுக்குத் தெரியாது.

இரண்டு வருடங்கள் சென்றன. சுமதி கருவுற்றாள். வளைகாப்பு, சீமந்தம் எதற்குமே தன் மாமியார், மாமனார் கூப்பிட்டும் வராததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். அவள் அப்பா, அம்மா, உத்தியோகத்திற்குச் செல்வதால், ஏதோ ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் தான் அவளுடன் இருக்கமுடியும். நாத்தனருக்கும் இதே நிலைமைதான். அவளது குழந்தையை சீசேரியன் செய்து எடுத்தார்கள். அம்மா, அக்கா, நாத்தனார் ஒரு மாதத்திற்கு அருகில் இருந்து உதவினர்.

பிரியாவை ஏர்போர்ட்டில் காரில் கொண்டு விடும்போது அவள் கார்த்திக்கிடம், “எனக்கு அம்மா, அப்பா பிரசவத்தின் போது ஆறு மாதம் கூட இருந்தா.
உனக்கு என்றால் ஓடி வந்து செய்வா” என்றாள்.

“எனக்கு செய்ய மாட்டா. நான் பணம் அனுப்புவதற்குதான் பிள்ளை.”

“அப்படி எல்லாம் பேசாதே. நீ அனுப்பிய பணத்தை உன் மகள் மேல் டெப்பாசிட் செய்ய சொல்லி என்னிடமே அனுப்பிட்டா. நான்தான் ஒரு மாதம் விட்டு ஒரு முறை அவர்கள் பேங்க்குக்கு பணம் அனுப்புகின்றேன். உன் குழந்தயை கிரீச் அனுப்பி கஷ்டபடுகிறாய் !” என்றவள், தொடர்ந்தாள் …

“அப்பா இப்போது ஒரு சீனியர் சிடிசன் ஆஷ்ரமத்தில் வேலை செய்துகொண்டே, அங்கேயே தங்க ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். அம்மாவும் பக்கத்தில் உள்ள குழந்தை காப்பகத்தில் வேலை செய்கிறாள். நீ செய்த தப்பை என்றைகாவது உணர்ந்தாயா ! இல்லை உனக்கு மன்னிக்கும் குணம்தான் இருக்கா?”

இவர்களது உரையாடலை பின்னால் அமர்ந்திருந்த சுமதி கேட்டு கொண்டு இருந்தாள்.

“நம்ம அப்பா, அம்மா மாதிரி யாருக்கும் கிடைக்காது! அப்பா நமக்கு ஸ்கூல் போகும் டிரெஸ்ஸை அயர்ன் பண்ணி, வண்டி வரவில்லை என்றால் நம்மை கொண்டுவிட்டு, என் படிப்பிற்காக தன் தம்பிகளிடம் பணம் கேட்டு, பாட்டு கிளாஸ், உன்னை கிரிக்கெட், டிராயிங் கிளாஸ் எல்லாம் கொண்டுவிட்டு அழைத்து வந்து, பள்ளிகூடத்தில் விண்ணப்பதிற்காக விடியற்காலையில் நின்று இவ்வளவும் பண்ணின அப்பாவை உன்னால் எப்படி ஏத்துக்க முடியவில்லை. அவருக்கு உரிய மரியாதையை நீ கொடுக்கவில்லை. அதனால்தான் இருவருமே உனக்கு செய்வதற்குத் தயங்குகிறார்கள். நீ இங்கு வருவதற்கு காரணமே அப்பாதான். பாங்கில் கடன்வாங்கி உன்னை முதலில் இங்கு அனுப்பி படிக்கவச்சி இன்று நீ சம்பாதித்து கடனை நீயே அடைத்தாலும், பிள்ளையார் சுழி போட்டது அப்பாதானே ! இன்னிக்கி நாம் நன்னா இருக்கோம் என்றால் அதற்கு அப்பா அம்மா தான் காரணம். The integrity of man is to be measured by the conduct and character and not by their profession. இந்த வார்த்தயை அப்பா அடிக்கடிசொல்வா.” என்றாள் பிரியா.

சுமதி, “பிரியா அக்கா அடுத்த மாதம் என் அத்தை மகன் கல்யாணத்திற்கு இன்வைட் பண்ணிருக்கா நான் இவரையும் அழைச்சுண்டு போகப்போறேன்” என்றாள். திருமணம் தேதி, இடம், அத்தைமகன் பெயர், வேலை போன்றவற்றை விவரித்தாள். அவர்கள் என் கல்யாணத்திற்கு வரமுடியாதவங்க என்னை கூப்பிட்டால் போய்விட்டு வருவேன் என்றாள்.

மறுநாள் பிரியா சுமதிக்கு போன் பண்ணி தான் பத்திரமாக வந்து சேர்ந்ததை சொன்னாள். “சுமதி உன் அத்தை பெயர் கொண்ட திருமண பத்திரிகை எங்களுக்கும் வந்திருக்கு. மணமகள் என் கணவனின் மாமா பெண்தான் நல்லதா போச்சு. நானும் இவரும் உடனே சென்னை வருவதற்கு ஏற்பாடு செய்கிறோம், உங்களுக்கும் டிக்கெட் புக் செய்யவா? இதை கார்த்திக்கை கேட்டு எனக்கு சொல்லு” என்றாள்.

பிரியாவிற்கு தனது அம்மா அப்பாவை பார்க்க ஆசை. தன் மூன்று வயது கேஷவ்வை அவர்களிடம் காண்பிக்க ஆசைப் பட்டாள். அவள் அம்மா ஒரு வயது வரைக்கும் அவளது மகனை வளர்த்தாள்.

இருபது நாட்கள் கடந்தன. சென்னைக்கு பேக்கிங் செய்த சுமதிக்கு கார்த்திக்கும் உதவி செய்தான். தன்னுடையதையும் எடுத்து வைத்தான். கார்த்திக்கும் பிரியாவும் ஏர்போர்ட்டில் சந்தித்து கொண்டார்கள்.

“பிரியா எனக்கு எப்படியாவது இவருடைய அப்பா அம்மாவை அழைதுவரவெண்டும். என்ன செய்யலாம். நேற்று இரவே அவரிடம் கேட்டேன்.”

“அது முடியாத காரியம் சுமதி. அவர்கள் வரமாட்டார்கள்” என்றாள் பிரியா.

குழந்தை இருப்பதால் விமானத்தில் பிரியாவுக்கும், சுமதிக்கும் பக்கத்து பக்கத்து சீட். மறுநாள் விமானம் சென்னையை காலை ஐந்து மணிக்கு அடைந்தது. மூன்று நாள் ஜெட்லாக், நான்கு நாள் ரெஸ்ட் , மூன்று நாட்களுக்கு,நண்பர்கள் உறவினர்கள் விருந்து, ஆக பத்து நாட்கள் முடிந்தது.

கடைசி நாள் அப்பா, அம்மாவைப் பார்பதற்கு சுமதியும், பிரியாவும் காலையில் கால் டாக்ஸி பிடித்து குடும்பத்துடன் ஆஷ்ராமத்தை அடைந்தார்கள். சாரதிக்கு ஒரு பக்கம் கோபம், மறுபக்கம் எரிச்சல். செகரட்டரிக்கு போன் செய்து அவர்களை பார்க்க விருப்பும் இல்லை என்று சொல்லி அனுப்பிவிடு என்றார்.

கமலாவைப் பார்த்து, “உனக்கு வேண்டுமானால் பிள்ளை, பேரன் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்றால் நீ போய் பார்த்து வா. என்னைக் கூப்பிடாதே” என்றார்.

கமலாவும், அரை மனதுடன் கேட்டை நெருங்கினாள். அம்மா என்று பிரியாவும் சுமதியும் ஓடிவந்தார்கள்.

“அப்பா எங்கே? என்றாள் பிரியா.

“அவர் இங்கு வர மறுத்துவிட்டார்”

“அப்பாவைப் பார்க்காமல் நானும் சுமதியும் இங்கிருந்து நகர மாட்டோம்!”

செக்கியூரிட்டியும் மூன்று தடவை சாரதிக்கு போன் செய்து, “சார், உங்க மகளும் மருமகளும் போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாங்க தயவு செய்து வந்து எட்டி பார்த்துவிட்டு போங்க சார்” என்றார்.

grandparentsதலை எழுத்தே என்று சாரதி கேட்டிற்கு வந்தார். உடனே பேரன் கேஷவ், தாத்தா, தாத்தா என்று ஓடி வந்ததும், பின்னாடியே பேத்தி ஓடி வந்து காலை கட்டிக்கொண்டு, குழந்தைகள் இரண்டும் தூக்கு, தூக்கு என்று கையை உயர்த்தியது.

கமலாவும் பேத்தியை எடுத்துக் கொஞ்சினாள். இருவருமே குழந்தயை கொஞ்சிவதிலேயே இருந்தார்களே தவிர, பெண்ணையும், மருமகளையும் கவனிக்கவே இல்லை.

அவர் மாப்பிளை, “அப்பா, நானும் உங்க மகனும் இரண்டு மணி நேரம் ஹாலில் வெயிட் பண்றோம், எங்களை நீங்க இருவருமே கண்டுகொள்ளவே இல்லை.” என்றார்.

சுமதி பிரியாவிடம், “பார்த்தியா பிரியா, என் பொண்ணும் உன் பையனும் அவர்களிடம் எப்படி ஒட்டுகிறார்கள். இதுதான் ‘ப்ளட் இஸ் திக்கர் தான் வாட்டர்’ என்பது,” என்றாள்.

கார்த்திக், “அப்பா, என்னை நீங்க மன்னிக்கணும். எப்போ இரண்டு பேரும் யு.எஸ் வருவிங்க. நான் டிக்கெட் வாங்கட்டுமா?” என்றான். சுமதியும், “அம்மா உங்க பேத்திக்காகவாவது எங்ககூட வந்து இருங்கள்” என்றாள்.

“எல்லாம் அவரைக் கேளு” என்றாள் கமலா.

சாரதி, “தூரத்துப் பச்சை கண்ணனுக்குக் குளிர்ச்சி. எங்களுக்கு இங்கேயே வசதியாய் இருக்கிறது. நாங்க இங்கேயே இருந்துவிடுகிறோம்” என்றார்.

பிரியா அழுது விட்டாள். “அப்பா, தம்பி பண்ணின தப்பிற்கு என்னை தண்டிகின்றாய். அம்மா நீ இல்லாமல் நகரமாட்டாள்” என்றாள்.

சாரதி கமலாவின் மீது பார்வையை செலுத்தினார். அவள் முகம் பேரன், பேத்தியின் பக்கமே இருந்தது.

“நான் வரவில்லை. உன் அம்மா வந்தா அழைச்சிண்டு போ”

கமலாவிடம் அவர்கள் போகலாமா என்று கேட்க, அவள் கணவரிடம் நாம் வேண்டுமென்றால்பேரன், பேத்தியை விமான நிலையம் வரை வழி அனுப்ப செல்வோமே என்றாள்.

விடுதியில் பெர்மிஷன் சொல்லிவிட்டு அவர்கள் காரிலேயே கிளம்பினார்கள். வழி நெடுக பேரன், பேத்தி பற்றிதான் பேச்சு. இவ்வளவு ஆசை வச்சிண்டு வர மறுக்க காரணம் என்ன என்று தெரிந்தும் சுமதி காரணத்தைக் கேட்டாள்.

“பட்டமரம் ஒட்டுவதில்லை, சுட்ட மண் ஒட்டுவதில்லை. இது தெரியாதாம்மா !” என்றாள் கமலா.

அந்த அளவிற்கு கார்த்திக் அவர்கள் மனதை புண்படுத்தி இருந்தான். இவர்களிடம் பேரனையும், பேத்தியையும் விட்டுவிட்டு பிரியாவும், சுமதியும் குழந்தைகளுக்கு பால் வாங்கச் சென்றார்கள். சாரதியும் கமலாவும் குழந்தைகளின் மழலை பேச்சில் மயங்கினார்கள். பேத்தியின் சிரிப்பிலும், பேரனின் ஆங்கிலத்திலும் தன்னையே மறந்தார்கள். ஆயிரம் துக்கங்கள் குழந்தை பேச்சில் அமிழும் என்பது உண்மைதான்.

பால் வாங்கிய பின் பிரியாவும், சுமதியும் குழந்தைகளை இவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் போது, “தாதா, கம்பா பாட்டி” என்ற பேரனின் அலறலும், பேத்தியின் அழுகையும், அவர்களை அழுத்தியது. வைத்தகண் வாங்காமல் பார்த்துகொண்டு இருந்தார்கள்.

மாப்பிளையும், மகனும் இம்மிக்கிரேஷன் முடித்து விடை பெற வந்தார்கள். கார்த்திக் “அப்பா நான் வரட்டுமா, வரடுமாம்மா” என்றான்.

“டேய் , கார்த்திக் எனக்கும் உங்க அம்மாவிற்கும் விசாவும், டிக்கெட்டும் ஏற்பாடு செய்” என்றார் சாரதி.

கார்த்திக் அப்பா அம்மாவையும் கட்டிக்கொண்டு அழுதான்.

“நீங்க இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? ரொம்ப தேங்க்ஸ் அப்பா.”

வாழ்க்கையின் உண்மையான சந்தோஷம் எது?

தாய் தந்தையிடம் பார்த்த பாசமா? மகனிடமும், மகளிடமும் உணர்ந்த அன்பா? அண்ணன், தம்பி, தங்கைகள் இடையே உள்ள பந்த பாசமா?

இது எந்த ரகம் என்று புரிந்துகொள்ள முடியாமல் நம்மை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்கும் நமது பேரன்,பேத்திகளின் கள்ளமற்ற சிரிப்பா? பேரக்குழந்தைகளுக்காக மற்றவர்கள் செய்யும் தவறினை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனித நேயமா? பாசத்திற்காக நாம் எல்லோரையும் அரவணைத்துத்துதான் செல்லவேண்டுமா?

உணர்தவர்கள் பதில் கூறட்டும்.

Picture Source: http://daycare.sulekha.com/care-corner_all-about-the-grandchild-grandparent-bonding_blog_6158

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *