நல்லவனாய் இரு!
-ரா. பார்த்தசாரதி
அன்பில் அன்னையாய் இரு
புன்னகையில் சிறு குழந்தையாய் இரு
நடையினில் ஓர் வீரனாய் இரு
சொல் செயலில் கொஞ்சம் உத்தமனாய் இரு
ஆழ்மனதில் அதிகத் தூய்மையாய் இரு
உன் நலனில் என்றும் அக்கறை காட்டுபவனாய் இரு
பிறர் நலனில் கடுகு அளவாது இரக்கம் காட்டுபவனாய் இரு
மறுபிறப்பிலே கொஞ்சம் நம்பிக்கையாய் இரு
இப்பிறவியிலே கர்ம வினைகளைப் போக்குபவனாய் இரு
ஊரறிய மகானாய் வாழ்வதைவிட
இறைவன் மனம்குளிர மனதில் நல்லவனாய் வாழ்வதே போதும்
உலகில் மாற்றங்கள் நிகழும் அன்புப் பூக்கள் பூக்கும்!