Tag: மலர் சபா

  • நான் அறிந்த சிலம்பு – 105

     

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை


    திருவரங்கத்தில் சாரணர் தோன்றுதல்

    அப்போது ஒரு நாள்
    ஆற்றின் நடுவே அமைந்திருந்த அரங்கத்தில்
    வேறெங்கும் காணப்படாத தன்மையுடனும் அழகுடனும்
    தனித்தனியாக வளைந்த
    மூங்கில் வேலிகளால் அடைக்கப்பட்ட
    பூஞ்சோலை ஒன்று இருந்தது.
    தேவர்களும் வந்து உறைவதற்கு விரும்பும்
    மலர்களின் மணம் வீசும் ஓர் இடத்தில்
    சாரணர்கள் வருகை புரிவதற்காகவென
    உலக நோன்பிகள் ஒருங்குகூடி அமைத்திட்ட
    ஒளிபொருந்திய சிலாதலம் ஒன்று இருந்தது.

    அதன் மீது
    அருகதேவன் அருளைப் பெற்ற
    அதிசயங்கள் மூன்றும் தப்பாத உண்மையுடைய
    தருமம் கூறும் சாரணர் சிலர்
    பட்டினப்பாக்கத்தை விட்டு வந்து
    இவர்கள் முன்னிலையில்
    அச்சிலாதலத்தின் மேல் தோன்றினர்.

    மூவரும் சாரணரை வழிபடுதலும், அச்சாரணர் அறிவுரை பகர்தலும்

    சாரணரைக் கணடதும் அம்மூவரும்,
    “யாம் முன்செய்த பழவினைகள் முற்றும் கெட்டழிவதாக”
    என்று மனத்துள் வேண்டியபடி
    சாரணரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர்.

    அம்மூவரும் அங்கே வருவதற்குக்
    காரணமாய் அமைந்த பழவினையையும்
    அவ்வினைப்பயனால் அவர்களுக்கு
    மேலும் நேரவிருக்கும் துன்பங்களையும்
    உடனே உணர்ந்தான் சாரணத்தலைவன்
    முக்காலும் உணரும் தன் ஞானத்தால்..

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 156 – 167
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 104

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    மறையோர் இருக்கையும் உழவர் இருக்கையும் ஆகிய
    ஊர்கள் இடையிட்ட நாட்டின் வழியாகச் செல்லுதல்

     

    புலிச்சின்னம் பொருந்திய கொடியை
    உயர்த்தித் தாங்கிய தேரையுடைய
    வலிமைவாய்ந்த சோழமன்னனின் வெற்றிக்காகவும்,
    மழை பொழியும் சூழலை உருவாக்குவதற்காகவும்
    தேவர்களுக்கு உணவு சமைக்கும் மடைப்பள்ளியில்
    வேதியர்கள் தீ வளர்த்தனர்.

     

    அந்த வேள்வித்தீயில் எழுந்த நறும்புகை
    வானுயர்ந்த மாடமாளிகையைச் சூழ்ந்து நிற்க
    அவை மேகங்கள் சூழப்பட்ட மலையைப் போல்
    மிகச் சிறப்பாய்க் காட்சியளித்தன.

     

    இத்தகைய மங்கலச்சிறப்பு பொருந்திய
    மறையோர் வாழும் இல்லங்கள் பல நிறைந்த நல்ல ஊர்.

    இரந்து கேட்பவர்களின் சுற்றத்தையும்
    புரந்து காக்கும் அரசரின் வெற்றியையும்
    தம் உழவுத்தொழில் மூலம்
    காத்து நிற்பவர்கள்
    பரந்த நீருடைய காவிரிப்பெண்ணின்
    புதல்வர்களான உழவர்கள்.

     

    அவர்கள் வாழும் பழஞ்சிறப்பு வாய்ந்த ஊர்களில்
    கரும்பாலைகளில் கரும்புச்சாறு காய்ச்சும்போது
    எழுகின்ற புகையானது
    தூற்றப்படாத நெற்குவியல்களைச் சூழ்ந்து நிற்கும்.

    அந்தத் தோற்றம்
    மேகம் சூழ்ந்த மலைபோலக் காட்சியளிக்கும்.

     

    அதுபோன்ற உழவர்கள் பலரும்
    வாழ்கின்ற இடங்கள் நிறைந்த பல ஊர்கள்;

     

    இதுபோன்ற ஊர்கள் இடையில் கொண்ட
    நாடுகளை எல்லாம் கண்டு,
    ஒரு நாளில் ஒரு காத தூரத்துக்கு மேல்
    நடக்க முடியாதவர்களாய்,
    ஆங்காங்கே இடையிடையே தங்கி
    நாட்கள் பலவாய் நடந்துதான் சென்றனர்.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  142 – 155

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 103

    மலர் சபா

    *புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை*

    அறுகம் புல்லையும் குவளை மலர்களையும்
    ஒருங்கே சேர்த்து
    பொன்னிறமான செந்நெற்கதிர்களுடன் கோர்த்து
    ஏரிலே சூட்டி
    போற்றுவோர் வணங்கி நிற்க
    நிலத்தையே பிளக்கும் வண்ணம்
    உழவர் இசைத்த ஏர்மங்கலப்
    பாடலின் ஒலி
    ஒருபுறம் ஒலிக்கும்.

    நெல்லை அறுத்து
    ஓரிடத்தில் குவித்து
    அதனைக் கடாவிட்டு மிதித்து
    உதிர்ந்த நெல்லை
    முறத்தில் எடுத்துத் தூற்றும்போது
    இசைக்கின்ற முகவைப் பாட்டின் ஒலி
    ஒருபுறம் ஒலிக்கும்.

    தெளிந்த ஓசையுடைய
    தடாரியைக் கையில் கொண்டு
    கள்ளுண்டு செருக்கில் பொருநர்கள்
    கரிய சாந்து பூசப்பட்ட
    திர்ண்ட முழவிலே தோற்றுவித்த
    இனிய ஆரவார ஒலி
    ஒருபுறம் ஒலிக்கும்.

    இவ்வாறு மருதநிலத்தில்
    பல்வேறு ஓசைகளைக் கேட்டு
    வருத்தம் கொள்ளாதவராய்
    மகிழ்ச்சி கொண்டவராய்
    இன்னும் மேலும் ஒலிகள் கேட்கின்ற
    ஆர்வமுடையவராய் ஆற்றின் கரையில்
    நடந்து சென்றனர் அம்மூவரும்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 102

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

    உழவரின் ஒலியும் பாட்டும்

     

    உழப்படாத நுண்ணிய சேற்றில் புரண்டதால்

    உடலில் பூசியுள்ள சேறு;
    கழுவப்படாத முடியினையுடைய உடல் மற்றும்
    சிவந்த கண்களுடன் இருந்தன எருமைகள்.
    அவைதாமும் தம்

    தினவைப் போக்கிக் கொள்வதற்காக

    களத்து மேட்டில் உழவர்கள்
    வைக்கோற் புரியால்
    கட்டிவைத்த நெற்கூடுகளில்
    முதுகை உராய்ந்தன.

    வலிமையான கைகளையுடைய
    கூலியாட்களும் நில உரிமையாளரும்

    அவற்றை விரட்ட
    ஒருங்கே எழுப்பும்  ஒலி

    ஒருபுறம் ஒலிக்கும்.

     

     

    மணமிக்க ஆம்பல் முதலிய
    மலர்களையும் களைகளையும் பறித்தெறிந்து
    களைத்து நின்ற உழத்தியர்
    நாற்று முடிகளைப் பிரித்து அழுத்தி நட்டனர்.
    அப்போது,
    வளைந்த வளையணிந்த அவர்தம்

    தோளிலும் மார்பிலும்
    சேறு பூசிய கோலம் அழகு செய்தது.
    இதே கோலத்தில் அந்த உழத்தியர்
    கள்ளுண்டு களித்தனர்.
    அதனால் செக்கச்சிவந்த கண்களுடன்

    அவர்கள் தாமும்
    கொச்சை மொழியில்

    புதுப்பாடல்கள் பாடிக்களித்த ஒலி

    ஒருபுறம் ஒலிக்கும்.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 120 – 131

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 101

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

    இந்த ஒலிகள் மட்டுமன்றி
    இசைக்கருவிகளான
    ஆம்பி, கிழார்,

    உரத்து ஒலிக்கும் ஏற்றம்,
    நீர் இறைக்கும் கூடை

    இவற்றின் ஒலியும் கேட்டபடி இருந்தது.

     

    வயல்களில் கரும்பும் நெல்லும்
    செழித்து வளர்ந்துள்ள
    மருதநிலத்தின் நீர் நிலைகளில்
    பசுமையுடனும் பொலிவுடனும்
    தாமரைகள் பூத்து நிற்கும்.

     

    சம்பக்கோழியும்
    உரத்து ஒலிக்கும் நாரையும்
    செங்கால் அன்னப்பறவையும்
    பசிய கால்களைக் கொண்ட கொக்கும்,
    கானாங்கோழியும், நீர்க்காக்கையும்
    உள்ளானும், குளுவையும்,
    கணத்துப்பறவையும், பெருநாரையும் ஆகிய
    நீர்நிலைப்பறவைகள் ஒன்றுகூடி
    உரத்த பலவகைக் குரல்களை எழுப்பின.

     

    இருபெரு வேந்தர்கள்
    போரிடும் போர்க்கள ஓசையைப் போலவே
    அப்பறவைகள் எழுப்பிய ஒலிகள்
    இடையறாது எங்கும் ஒலித்தபடி இருந்தது.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 110 – 119

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 100

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    மூவரும் வழிக்கொள்ளல்

     

    குற்றமற்ற பிச்சைப் பாத்திரத்தையும்
    தோளில் இடுகின்ற உறியையும்
    மயிற்தோகையையும் எடுத்துக் கொண்டு
    ஐந்து எழுத்து மந்திரத்துக்குப்
    பொருளாக விளங்கும் தெய்வம்
    யாம் செல்லும் வழிக்கண்
    துணையாக நின்றிடட்டும்”
    என்று கூறிய கவுந்தியடிகள்
    பழியில்லாத சிறப்புடைய
    அந்தப் பயணத்தை மேற்கொண்டார்
    கண்ணகியுடனும் கோவலனுடனும்.

     

    காவிரி ஆற்றின் ஒலியும் பறவைகளின் ஓசையும்

     

    மழையது பொய்த்திடும்
    பஞ்ச காலத்தை விளக்கும் முகமாய்,
    சனி எனும் கோள் புகைந்தாலும்
    தூமகேது வானில் தோன்றினாலும்
    விரிந்த கதிரினையுடை சுக்கிரன்
    தென் திசைதான் சென்றிட்டாலும்

    அக்காலத்திலும் கூட
    காற்றுவந்து மோதும் குடகுமலை உச்சியில்
    கடுமையான இடிமுழக்கத்துடன்
    கருமுகில் மழையைப் பொய்க்காது பெய்திடும்.

     

    அதனால் பெருகிய வெள்ளத்துடன்
    பாய்ந்து வரும் காவிரியாறு
    குடகு மலையில் விளைந்திடும்
    அகில் சந்தனம் முதலியவற்றை
    அடித்துக் கொண்டுவந்து
    முத்து பவளம் முதலான
    கடலின் வளப்பொருட்களை எதிர்கொண்டு
    கரையைக் குத்திநின்று கடல்தனில் கலக்கும்.

     

    இங்ஙனம் சத்தத்துடன் பெருக்கெடுத்து
    காவிரிநீர் ஓடி வருகையில்
    மதகுகளின் மீதுள்ள
    நீர்ப்பலகைகளை அடித்துக் கடந்து பாய்ந்தது;
    அப்போது உண்டான பெருத்த ஒலி
    எங்கும் கேட்டபடி இருந்தது.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 98 – 109

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 99

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    வயல்களில் களை பறிப்பவர்கள்

    குவளை மலர்ச்செடிகளைக்

    களைகளெனப் பறித்து

    வரப்பு வழிகளில் போட்டிருப்பர்.

     

    அப்பூகளின் தேனை உண்டு

    சோர்வுற்று மயங்கி

    அப்பூகளுக்குள்ளேயே கிடக்கும் வண்டுகள்

    நாம் நடக்கையில் நம் பாதங்களில் மிதிபட்டு

    இறக்கவும் நேரிடும்.

     

    ஓங்கி அலை வீசும்

    வாய்க்கால் வழியாகச் செல்லலாம் என்றாலோ

    ஆங்கே

    அழகாய் மேனியில் புள்ளிகள் உடைய

    நண்டுகளும் நத்தைகளும்

    சிக்கிச் சிதைய நேரிடும்.

     

    நாம் கால்களில் மிதிபட்டு இறக்கவும் நேரிடும்.

    அதனால் நமக்குக் கொலைப்பாவம் நேரிடும்.

    அப்பாவத்தைத் தாங்குவது

    நமக்கு மிகவும் அரிதாகும்.

     

    வயல்வழி, சோலைவழி தவிர

    மதுரை செல்வதற்கு வேறு வழியே இல்லை.

    நெளிந்த கரிய தலைமுடியை உடைய கோவலனே!

    நீ உன்னை விரும்பிய அன்பு மனைவியுடன்

    செல்லும் போது

    எதிர்ப்படும் இடர்களைக்

    குறிப்பால் உணர்ந்து

    அக்குற்றங்கள் நேராத வண்ணம்

    அவளைப் பாதுகாப்பாயாக!

    என்று கவுந்தியடிகள் கூறினார்.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 86- 97
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு! – 98

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

    வயல் வழி

     

    கயல் போன்ற கண்ணையுடைய
    கண்ணகியின் காதலனே!
    வயல் வழியே நாம் செல்லலாம்;
    என்றாலோ..

    அந்த இடங்களில்
    குளங்களில் எல்லாம் நறுமணப் பூக்கள்…
    நீண்ட முதுகையுடைய வாளை மீன்கள்
    கயல் மீன்களைத் துரத்தும்;
    அவ்வாளை மீன்களை
    நீர்நாய்கள் வாயில் கவ்விப் பிடிக்கும்.

    தப்பிய வாளைமீன்கள்
    விலாங்குமீன்கள் உழல்கின்ற
    சேற்றினில் துள்ளிப் பாயும்.

    இக்காட்சியைக் காணும் கண்ணகி
    அஞ்சவும் நேரிடும்.

     

    கரும்புவயல்களில் காணப்படும்
    தேனடைகள் சிதைந்து
    அவற்றினின்று வழிகின்ற தேன்
    அருகிருக்கும் வயல்களில்
    வண்டுகள் சூழ்ந்திருக்கும்
    பொய்கை நீரில் கலந்திருக்கும்.

     

    அடங்காத தாகத்தால் நாம்
    அறிவு மயங்கி விதிகள் மறந்து
    உட்கை குவித்து
    அத்தண்ணீரை அள்ளிப் பருகவும் கூடும்.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 76- 85
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு! – 97

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    மதுரை செல்லும் வழியின் அருமை பற்றிக் கவுந்தி கூறல்
    சோலையும் தோட்டமும் ஆகிய கரை வழி

    கவுந்தியடிகள் கூறலானார்:
    “கோவலனே!
    நாம் செல்ல எண்ணியிருக்கும் வழியில்
    துனபங்கள் பல நேரக்கூடும்;
    அது பற்றிக் கேட்பாயாக!

    வெயிலைக்கூடப் பொறுக்காத
    மெல்லியல் கண்ணகி இவள்;
    இவளுடன் பூஞ்சோலை வழியில் செல்லலாம்..
    என்றாலோ..
    அங்கே நிலம் பெருக்கும்படி
    பெரியதாய் இருந்த வள்ளிக் கிழங்குகளைத்
    தோண்டி எடுத்த குழிகள் தென்படும்;
    அக்குழிகளை மூடுவதற்கென்று
    செண்பகத் தாதுகளைக் கொண்டு
    நிரப்பி வைத்திருப்பர்
    வழிப்போக்கர்கள் அறிந்திடாவண்ணம்.

     

    அதையறியாமல் நாம் அவற்றின்மீது
    கால்வைக்க நேர்ந்தால்
    குழிகளில் இடறி விழ நேரிடும்.
    உதிர்ந்த பூக்களால் மூடிய குழிகளைவிட்டு
    ஒதுங்கிச் சென்றாலோ
    தேனொழுகத் தொங்குகின்ற
    முதிர்ந்து பழுத்த பலாப்பழங்கள்
    தலையில் வந்து முட்டும்.

     

    மஞ்சள் செடியும் இஞ்சிச் செடியும்
    பின்னிப்பிணைந்து கிடக்கின்ற
    தோட்டத்துப் பாத்திகளில்
    பரந்துகிடக்கும் பலாச்சுளையின் கொட்டைகள்
    பரல்கற்கள் போல் காணப்படும்;
    நாம் நடக்கையில்
    அவை கால்களில் உறுத்தித் துன்பப்படவைக்கும்.”

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 64- 65
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 95

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    கவுந்திஅடிகள் வாழும் பள்ளியை அடைதல்

     

    காத தூரம் கடந்து சென்று
    பூக்கும் மரங்கள் இருந்த சோலையில்
    கவுந்தியடிகள் எழுந்தருளிய
    தவச்சாலையைக் அடைந்து

    அங்கிருந்த பூஞ்சோலையில்

    இருவரும் தங்கினர்.

     

    கண்ணகியின் வினாவும், கோவலன் உரைத்த விடையும்

    இற்றுவிடுமோ என்று ஐயப்படும்படி
    கொடி போன்ற இடையையும்
    நடந்து வந்த களைப்பால்
    மிகவும் வருந்திய பாதங்களையும் கொண்ட
    கருங்கூந்தல் கண்ணகி பெருமூச்செறிந்தனள்.

    தன் கூரிய பற்கள் வெளியே தெரியும்படி
    முற்றாத தன் மழலைச் சொல்லாலே

    கோவலனை வினவினள்:
    “மதுரை மூதூர் இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளது?”

    கண்ணகியின் அறியாமையும் துயரும் கண்டு
    வருந்திய கோவலன் தானும் வருந்தி,
    “நறுங்கூந்தல் உடையவளே!
    மதுரை மாநகர் இன்னும்
    முப்பது காத தூரத்தில் உள்ளது” என்றனன்.

     

    கோவலனும் கண்ணகியும் அறப்பள்ளியில் இருந்த கவுந்திஅடிகளைத் தொழுதல்

    அதன் பின்னர்,
    தேன் போன்ற மொழியுடைய கண்ணகியோடு
    தவச்சாலைக்குச் சென்று
    கவுந்தியடிகளின் திருவடிகளில்
    வீழ்ந்து வணங்கினன் கோவலன்.

     

    கவுந்தி அடிகளின் வினாவும் கோவலனது மறுமொழியும்

     

    “அழகும் உயர்குடிப் பிறப்பும்
    பெருமை தரும் ஒழுக்கமும்
    அருக தேவனின் ஆகமவிதிகள்
    பிறழாமல் கடைப்பிடிக்கும் நீங்கள்
    தீவினை செய்தவர்களைப்போல்
    உங்கள் நாட்டை விட்டு நீங்கி
    இங்கே வருவதற்குக் காரணம் யாது?” எனக்
    கவுந்தியடிகள் கேட்க,
    கோவலனும்,
    “அருந்தவத்தை உடையீர்!
    மதுரை நகர் சென்று
    வாணிகம் செய்து
    பொருளீட்ட விரும்புகிறேன்
    என்பதைத் தவிர
    வேறொன்றும் சொல்லும்

    நிலையில் நான் இல்லை…”
    என மறுமொழி பகர்ந்தனன்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 94 (21.10.13)

     

    மலர் சபா

     

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

    புகார்நகரின் வாயிலைக் கடத்தல்

    அதன் பின்
    மலையிலிருந்து புறப்பட்டுப்
    பாய்ந்து வரும் பேராறு போல
    உலகோர் வந்து போவதற்கு ஏற்ப
    மிகவும் அகலமாக அமைக்கப்பட்டிருந்த
    புகார் நகர வாயிலைக்
    கடந்து சென்றனர்
    கோவலனும் கண்ணகியும்.

    இலவந்திகைப் பள்ளியின் எயிலின் பின்புறத்தே போதல்

    உருவம் இல்லாத காமன் எனும்
    குறுநில மன்னன்
    சோழமன்னனுக்குத் திறையாக
    இளவேனிலையும் தென்றலையும்
    வழங்கியது போலவே
    பலவகை மலர்களை அடுக்கிய
    நல்லதொரு மரநிழலை உடைய
    இலவந்திகை எனும்
    எழில்மிகு சோலையின்
    மதிற்புறத்தைக் கடந்தனர்.

    “காவிரியின் கடைமுகம் கழிந்து, வடகரையின் வழியாக மேற்கு நோக்கி வழிக்கொள்ளல்”

    தாழ்ந்து படர்ந்த சோலை
    இருமருங்கிலும் சூழ்ந்து நிற்கும்
    காவிரிப் பெருங்கரையில்
    புனலாடச் செல்வதற்கென்று
    அமைக்கப் பட்டிருந்த பெருவழியில் சென்று
    நீராடும் துறையைக் கடந்து,
    வளம் சார்ந்த காவிரியின்
    வடகரையில் அமைந்திருந்த
    சோலையின்வழியே
    காலைப்பொழுதில் நீராடிச்செல்பவர்
    மறைந்து மறைந்து போவதைப்போல்
    கடந்து சென்றனர்.
    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 26 – 35

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 92

    மலர் சபா

    p31

    புகார்க் காண்டம் – 10.

    நாடுகாண் காதை

    “கோவலனும் கண்ணகியும் வீட்டின் நெடு வாயிலைக் கடந்து செல்லுதல்”

    உலகின் சிறந்த கண்ணாகிய

    கதிரவன் ​தோன்றிடாத

    அந்த

    ​வைக​றை யாமப் ​பொழுததனில்

    விண்மீன்கள் மின்னிடும் வானிலிருந்து

    ​வெண்மதி நீங்கிLடும் ​பொழுததனில்

    கரிய இUருள் இறுதி வ​ரை வியாபித்திருக்கும்

    இராப் ​பொழுததனில்…

    முன்னர் ​செய்த தீவி​னையானது

    உண்ணம் தன்​னைத் துரத்திச் ​செலுத்த

     

    ஆட்டுக் கிடாயும் கவரிமானும்

    தூயசிறகு​டைய அன்னமும்

    இ​வைதாம் ஓரினம் இல்​லை​யென்றாலும்

    ஓர் இனம்​போல ஒன்றுகூடித் திரியும்

    அடிவ​ரை கு​டைந்த ​வே​லைப்பாட​மைந்த

    ​பெரு​மையான சிறப்பி​னையு​டைய

     

    நீண்ட ​நெடிய கதவு​டைய

    இ​டைக்கழி​யை அ​டைந்து

    அ​​தைக் கடந்து

    அப்​பொழு​தே

     

    “மணிவண்ணன் ​கோயி​லை வலம்​செய்து ​போதல்”

    அழகு​ பொருந்திய பாம்ப​ணையின்மீது

    பள்ளி ​கொண்ட

    நீலமணி ​போன்ற நிறமு​டைய

    திருமாலின் ​கோயில்

    வலம் வந்து அ​தை விட்டு நீங்கினர்

    ​கோவலனும் கண்ணகியும்…

     

    அடிப்ப​டையாய் அ​மைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்​கே: 01-10

    http://www.chennailibrary.com/iyumperumkappiangal/silapathikaram5.html

     

    படத்திற்கு நன்றி: http://nagapattinam.nic.in/thestory.html

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு!…91

    மலர் சபா

     

    rising sun

     

     

     

     

     

     

     

     

     

     

    புகார்க்காண்டம்- 09.

    கனாத்திறம் உரைத்த காதை

     

    கோவலன் மதுரை சென்று பொருள் ஈட்ட எண்ணியுள்ள தனது கருத்தை வெளியிட்டு, விடியுமுன் கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்பட்டுச் செல்லுதல்

    கோவலன் கண்ணகியிடம் கூறினன்:

    சேயிழையே! நான் சொல்வது கேள்;

    நீ குறிப்பிட்ட இச்சிலம்புதனை

    முதல் எனக் கொண்டு

    மிக்க புகழுடைய

    மாடமதுரைக்குச் சென்று

    வணிகம் செய்து

    முன்பு நான் இழந்திட்ட பொருட்களையும்

    தொலைத்திட்ட அணிகலன்களையும்

    மீட்டெடுக்க முடிவு செய்துள்ளேன்.

     

    இதழ்விரிந்த மலர்களையுடைய

    மாலையணிந்தவளே..

    நீயும் என்னுடம் புறப்படுவாயாக!

     

    முற்பிறவியில் செய்திட்ட

    ஊழ்வினை உருத்து வந்து

    மதுரைக்குப் போகும்படி தூண்ட

    அவ்வினையதன் ஏவல் மேற்கொண்டு

    மறுதினம், காலைக் கதிரவன் உதித்து

    வைகறை இருளை ஓட்டும் முன்பே

    அவ்விருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

     

    வெண்பா

    மாதவி வசந்தமாலையிடம் கூறிய

    “மாலை வாராராயின் காலை காண்போம்”

    என்ற மொழியைக்

    கண்ணகி கண்ட கனவது

    பயனற்றதாக்கிவிட்டது.

    ஊழ்வினை உருத்து வந்து

    நெஞ்சைத் தூண்டி நிற்க

    காலைக் கதிரவன் வைகறை இருளை விரட்டுமுன்னே

    கண்ணகியுடன் புறப்பட்டுச் சென்றான் கோவலன்.

    கனாத்திறம் உரைத்த காதை முற்றிற்று.

     

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 74 – 83

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    படத்துக்கு நன்றி:

    http://www.hindustantimes.com/photos-news/Photos-World/venustransit/Article4-866678.aspx

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 90!…

    மலர் சபா 

    silambu (1)

     

     

     

     

     

     

    “புகார்க்காண்டம்- 09. கனாத்திறம் உரைத்த காதை”

     

    கோவலன் வருகையும், அவன் நிகழ்ந்ததற்கு இரங்கிக் கூறுதலும்*

    அப்போது அங்கே ஓடி வந்த

    ஒரு பணிப்பெண் கூறினள்:

    “நங்கையே!

    பெருமையுடைய அரசன் போன்ற ஒருவர்

    நம் வாயிலிடத்தே வந்து கொண்டிருக்கிறார்;

    அவர் நம் கோவலன் தான்…”

     

    விரைந்து வந்த கோவலனும்

    கண்ணகியின் பெருமைவாய்ந்த

    பள்ளியறையில் நுழைந்தான்.

    தன் காதலியின் வருத்தமுற்ற முகமும்

    வாட்டமுற்ற மேனியும் கண்டான்.

     

    “வஞ்சமுடைய கொள்கையுடன்

    பொய்மை பேசுபவளோடு

    கூடி உறவாடியதால்

    நம் குலத்தில் உள்ளோர் தேடித்தந்த

    மலை போன்ற பெரிய

    செல்வக்குவியலை எல்லாம் இழந்தேன்.

    வறுமையுடையவன் ஆகிவிட்டேன்.

    இச்செயல் யாவும் என்னை

    நாண வைக்கிறதே”

    எனக் கூறி வருந்தினான்.

     

    *கண்ணகியின் விடை*

    (மாதவிக்குக் கொடுக்கப் பொருள் *

    *ஏதும் இல்லாததால்

    வருந்துகிறான் கோவலன் என்றெண்ணிய)*

    கண்ணகி,

    தன் அழகிய ஒளி பொருந்திய முகத்தில்

    புன்முறுவல் காட்டி,

    “இன்னும் இரண்டு சிலம்புகள் உள்ளன;

    அவற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள்”

    எனக் கூறினாள்.

     

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 64 – 73

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    படத்துக்கு நன்றி:

    Kannagi’s Last Resort, Siruvachur

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 89 (16.09.13)

    மலர் சபாthalavi thozhi

    *புகார்க்காண்டம்- 09. கனாத்திறம் உரைத்த காதை*
    **
    *தேவந்தி கூறிய தேறுதல் உரை*
    **
    கண்ணகி மொழி கேட்ட
    தேவந்தி கூறினாள்:

    “பொன்னாலான வளையணிந்தவளே!
    நீ உன் கணவனால்
    வெறுக்கப்பட்டவள் அல்லள்;
    நின் முற்பிறப்பில் நின் கணவனுக்காய்க்
    காத்து நின்றிருக்க வேண்டிய
    நோன்பு ஒன்றினைச்
    செய்யத் தவறிவிட்டாய்!

    அதன் காரணமாய்
    இன்று அவனைப் பிரிந்திருக்கின்றாய்;
    அக்குற்றம் இன்றே நீங்கி விடட்டும்;
    காவிரி கடலுடன் கலக்கும்
    சங்கமத் துறையில்
    பூக்கள் மடலவிழ்க்கும்
    நெய்தல் நிலக் கானலிடத்துச்
    சோமகுண்டம் சூரியகுண்டம் என
    இரு பொய்கைகள் உள்ளன.

    அவற்றின் துறைகளில் மூழ்கியெழுந்து
    மன்மதக்கோட்டம் சென்று காமதேவனை
    வழிபடும் மகளிர்
    இப்பிறவியில் தம் கணவனைப் பிரியாது
    கூடி வாழ்ந்து இன்புற்று,
    மறு பிறவியிலும் இன்பம் தரும் பூமியில் பிறந்து
    கணவனுடன் இன்புற்று மகிழ்வர்.
    எனவே நாம் இருவரும்
    அங்கு ஒரு நாள் சென்று
    நீராடி வருவோம்” என்றாள்.

    *கண்ணகியின் மறுமொழி*

    அது கேட்ட கண்ணகி,
    “அத்தகைய செயல்
    எமக்குப் பெருமை தருவதன்று”
    எனக்கூறி மறுத்துவிட்டாள்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 55 – 63
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share