நான் அறிந்த சிலம்பு – 94 (21.10.13)
மலர் சபா
புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை
புகார்நகரின் வாயிலைக் கடத்தல்
அதன் பின்
மலையிலிருந்து புறப்பட்டுப்
பாய்ந்து வரும் பேராறு போல
உலகோர் வந்து போவதற்கு ஏற்ப
மிகவும் அகலமாக அமைக்கப்பட்டிருந்த
புகார் நகர வாயிலைக்
கடந்து சென்றனர்
கோவலனும் கண்ணகியும்.
இலவந்திகைப் பள்ளியின் எயிலின் பின்புறத்தே போதல்
உருவம் இல்லாத காமன் எனும்
குறுநில மன்னன்
சோழமன்னனுக்குத் திறையாக
இளவேனிலையும் தென்றலையும்
வழங்கியது போலவே
பலவகை மலர்களை அடுக்கிய
நல்லதொரு மரநிழலை உடைய
இலவந்திகை எனும்
எழில்மிகு சோலையின்
மதிற்புறத்தைக் கடந்தனர்.
“காவிரியின் கடைமுகம் கழிந்து, வடகரையின் வழியாக மேற்கு நோக்கி வழிக்கொள்ளல்”
தாழ்ந்து படர்ந்த சோலை
இருமருங்கிலும் சூழ்ந்து நிற்கும்
காவிரிப் பெருங்கரையில்
புனலாடச் செல்வதற்கென்று
அமைக்கப் பட்டிருந்த பெருவழியில் சென்று
நீராடும் துறையைக் கடந்து,
வளம் சார்ந்த காவிரியின்
வடகரையில் அமைந்திருந்த
சோலையின்வழியே
காலைப்பொழுதில் நீராடிச்செல்பவர்
மறைந்து மறைந்து போவதைப்போல்
கடந்து சென்றனர்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 26 – 35
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html